பாஸ்கர் சேஷாத்ரி

நான் அந்த பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்த போது ஒரு சின்ன கார் வந்து நின்றது. உள்ளிருந்து வெளியே வந்தவர் பக்கத்தில் பாதை ஓரம் படுத்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் சென்றார். அப்போது ஒரு பழைய முகம் நிழலாடியது.

நடராஜனா அது? உடனே, ‘நட்டு’ எனக் குரல் கொடுத்தேன்.

அவன் செவியில் கேட்டதோ இல்லையோ திரும்பி பார்க்காமல் பாட்டியிடம் என்ன வேண்டும் எனக் கேட்டான். இருப்பினும், அருகே சென்று நீங்கள் நடராஜனா என வினவினேன்.

‘ஆமாம்’ நீங்க… என்றார்.

‘டேய் .. நான் பாஸ்கர் ’. உடனே, ‘பாச்சு’ என்றேன்,

‘டேய் கடன்காரா. எப்படிடா இருக்கே?

ம்…. என்றேன்.

நீ எங்கே இங்கு வந்த?

‘சேத்பட்’ போறேன். பஸ்சுக்கு நிக்கிறேன்.

‘பாட்டி… எதனா சாப்பிடறயா?’ அவள் வாயை திறந்து பல் இல்லை என்றாள். அழகாய் இருந்தது அந்த சிரிப்பு.

‘அப்ப பால் குடிக்கறயா?’

வேண்டாம்…. ‘ஒரு பால் கோவா வாங்கி தா’ என்றாள்.ஆனால் சுற்றிலும் கடை ஏதும் இல்லை.

‘சாரிடா. உங்க கிட்ட பேசணும்’

என்னோடு வரயா?

எங்கே?

என் வீட்டுக்கு. சிம்ப்சன் பின்னாடி.

நட்டுவின் காரில் அமர்ந்தேன் .வண்டி மிக மெதுவாக சென்றது.

‘என்ன நட்டு’. இந்த அமைதி கொஞ்சம் கலவரமா இருக்கே?

ஒன்னுமில்லை. அந்த பாட்டிக்கு வண்டிய நிறுத்தி பால்கோவா வாங்கிக் கொண்டான்.
‘உனக்கு’ எனக் கேட்டான்.

‘வேண்டாம்’ என்றேன்.

‘எப்படிடா இருக்கே? பார்த்து நாப்பது வருஷம் இருக்குமா?’

‘கிட்டத்தட்ட.’

‘நீ என்ன பண்ற?’

‘ஹிக்கின்பாதம்ஸ்ல’ இருந்தேன். இருபது வருஷம். அப்புறம் வெளிய வந்துட்டேன்
ஏன்?

அனுப்பிட்டாங்க. இனி கம்ப்யூட்டர் தான் எல்லாம் என்றார்கள். அம்பது வயசை தாண்டியாச்சு.         சீ ஆர் எஸ்

‘இப்ப லாரி கம்பனில எல்லார் போடறேன்.’

என் கல்லூரி படிப்பு, பேச்சு திறமை எதுவும் உதவலை .

குழந்தைங்க?

இரண்டு பொண்ணு. ‘ரெண்டும் லவ் மாரேஜ்.’

அப்பாவுக்கு மறைமுக உதவி. ‘என் பணத்துல ஒரு மண்ணும் செய்ய முடியாது.’ தங்கமான மாப்பிள்ளை. ஆனால் பெரிசா படிக்கல.

சட்டென வண்டி நின்றது .

என்னடா….

ஒண்ணுமில்லை. ‘போலாம்’ என்றான்

வீடு வந்தது. பெரிய வீடு

‘என்ன பிசினஸ் பண்ற?’

‘ஃபினான்ஸ்’ என்றான்.

யாரும் இல்லை? வீட்டில்.

‘எங்கடா உன் ஒய்ப்.’

‘போய் நாலு மாசம் ஆச்சு.’  படத்தைக் காட்டினான்.

‘டேய் இவ ரேணு இல்லை!’

ஆமா. உனக்கு ஞாபகம் இருக்கா?

‘லேசா இருக்கு.’

அறைக்கு சென்று கதவை மூடி ஏசி-யை போட்டு என்னிடம் வந்தான் .

‘நட்டு’ – என சொல்லும்போதே கண்கள் கலங்கின .

‘டேய் பீ ரிலாக்ஸ்ட்.’

சொல்லும் போதே என்னை கட்டி பிடித்து அழத் தொடங்கினான் .

என்ன நட்டு? குழந்தை மாதிரி. ‘வாட்ஸ் ராங்’ என்றேன்.

‘ரொம்ப நாள் துக்கம்டா . நீங்களெல்லாம் காலேஜுக்கு போய் படிச்சீங்க. என்னால எஸ் எஸ் எல் சியை கூட தாண்ட முடியல. நாலு முறை எழுதினேன் …பெயில்.’

அழுதான்.

டேய். நீ இப்ப வெற்றிகரமான முதலாளி ‘அத பார்ரா.’

அட போடா. என் கஷ்டம் உனக்கு புரியாது. ‘படிக்கலைன்ற குறை எனக்கு கொஞ்சம் கூட போலட. தூங்கி எழுந்தவுடன் அந்த பழைய காலிகோ எஸ் எஸ் எல் சீ புஸ்தகம் தான் நினைவுக்கு வருது.’

‘டேய் . அது உன் காம்ளெக்ஸ்.’

உன் வசதி வாழ்க்கையைப் பார்.

‘ரெண்டையும் என்னால ஒண்ணா பாக்க முடியல டா.’ ஒரு குற்ற உணர்ச்சி என்று கண்களைத் துடைத்துக் கொண்டான்.

‘சாரிடா. ஏதோ ஒரு அழுத்தம் . உன்னை பார்த்து வெளிய வந்துட்டுது.’

‘இட்ஸ் ஒகே’ என்றேன்.

‘உன்னை எங்கே இறக்கி விடனும்’

‘ஹௌசிங் போர்டு’ என்றேன்.

‘போகும் போது ஒரு காபி குடித்து விட்டு பாட்டியிடம் பால் கோவா கொடுத்தோம்
வர்ற சண்டே என்னை கூப்பிடு . ஒரு செல் வாங்கிக்கோ’ என உபாயம் சொன்னான் .

‘சரி’ என்றேன்.

கண்ணாடி கதவை மூடும்போது ‘ டேய் அந்த விஷயத்தை அடியோடு விட்டுடு.’

படிப்புக்கும் ஒரு எல்லை உண்டு. நீ ரொம்ப கலங்காதே என்றேன்.

‘போடா.. இது நாப்பது வருஷ வலி. உனக்கு இது புரியாது.’

என்ன சொல்ல வர்ற?

‘டேய். இது வடு. சுட்ட வடு. புத்தியில்லாதவனின் அவஸ்தை. எங்க போனாலும் தள்ளியே வக்கிறான். தீண்டாமை போல.’

அப்ப உன் வசதி எல்லாம்?

‘அப்பன் சொத்து.’

‘நீ என்ன பண்ண?’

‘ஒரு பையனை பெத்தேன்.’

‘அவ்வளவுதான்.’ இது இனி அவர்கள் உலகம். அவன் உன்னை ‘தாண்டுவாண்டா பாரு’ என்றேன்.

‘நிறுத்துடா?’

‘ஏண்டா நட்டு, இப்படி கத்தறே?’

‘அவனும் என்னை போலவே படிக்கல.’ அது தான் சொன்னேன் ‘வலின்னு’ .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *