தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைக் குடியிருப்புப் பகுதியிலேயே எரிக்கிறார்கள். அப்போது ஒரு பாட்டில் வெடித்தது. அதிலிருந்து தெறித்த பாட்டில் துண்டு, என் கையில் பட்டு, ரத்தக் காயம் ஏற்பட்டது. குப்பைகளைக் கண்டபடி எரிப்பதால் சுகாதாரக் கேடுகளுடன் சுற்றுச்சூழலும் கெடுகிறது. தாம்பரம் மாநகராட்சி, பொறுப்பாக நடந்துகொள்ளுமா?
தாம்பரம் கடைத்தெருவில் உற்சாகமான பூ விற்பனையாளர் ஒருவரைக் கண்டேன். பொருள் சிறப்பாக இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படிக் கூவி விற்க வேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
அடையாறு நதி உடைப்பு சரி செய்யப்பட்டதால், நிலைமை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்து வருகிறது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.
அடையாறு நதியில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேரளவு நீர், ஊருக்குள் பாய்கின்றது. தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாள் முழுவதும் தண்ணீர் வடியவில்லை. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.
அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு, கரை உடைப்பு, கனமழை என ஒரே நேரத்தில் பலமுனைத் தாக்குதலால் தாம்பரம் தத்தளிக்கிறது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். சாதாரணப் பயணமே சாகசப் பயணமாய் ஆகிவிட்டது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.
தாம்பரம் அருகில் அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் தற்காலிகமாக அடைத்துள்ளனர். ஆனாலும், அபாயம் முழுமையாக நீங்கியதாகக் கொள்ள முடியாது. இதற்கு வலிமையான கரையமைத்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசர அவசியம். மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
ஒரு வார அவதிக்குப் பிறகு தாம்பரம் மீண்டு வருகிறது. இன்று வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கிறது. இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.
வெள்ளத்தில் பொதுவாகத் தண்ணீர் மட்டும் வருவதில்லை. ஊரில் உள்ள குப்பை கூளங்களும் மீன்கள், தவளைகள், வண்டுகள், பூச்சிகள் எனப் பலவும் கூடவே வரும். இன்று தாம்பரம் பாப்பான் கால்வாயில் பெருகி ஓடும் வெள்ளத்தில் ஒரு பாம்பினைப் பார்த்தேன். இதோ அந்தக் காட்சிகள்.
சென்னை அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரத்திற்கு அருகில் அதன் கரையின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறாகத் தண்ணீர் ஓடுகிறது. பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.
தாம்பரம், முடிச்சூர் சாலையின் அவல நிலையைப் பாருங்கள். மழைக் காலத்தில் சாலையைத் தோண்டிப் போட்டு மூடாமல் செல்வது பேராபத்து. இதனால், சாலையின் ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. அந்தச் சாலையே கொழகொழவெனக் கூழாக மாறிவிட்டது. நடந்து செல்வோரும் வழுக்கி விழுகின்றனர். தாம்பரம் மாநகராட்சி, சாலையை உடனடியாகச் செப்பனிட வேண்டும். இந்தச் சாலையைக் கடந்து செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாம்பரம் சுற்று வட்டார நண்பர்களுக்கு இதைப் பகிருங்கள்.