முடிச்சூர் சாலையின் அவல நிலை

தாம்பரம், முடிச்சூர் சாலையின் அவல நிலையைப் பாருங்கள். மழைக் காலத்தில் சாலையைத் தோண்டிப் போட்டு மூடாமல் செல்வது பேராபத்து. இதனால், சாலையின் ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. அந்தச் சாலையே கொழகொழவெனக் கூழாக மாறிவிட்டது. நடந்து செல்வோரும் வழுக்கி விழுகின்றனர். தாம்பரம் மாநகராட்சி, சாலையை உடனடியாகச் செப்பனிட வேண்டும். இந்தச் சாலையைக் கடந்து செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாம்பரம் சுற்று வட்டார நண்பர்களுக்கு இதைப் பகிருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *