தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைக் குடியிருப்புப் பகுதியிலேயே எரிக்கிறார்கள். அப்போது ஒரு பாட்டில் வெடித்தது. அதிலிருந்து தெறித்த பாட்டில் துண்டு, என் கையில் பட்டு, ரத்தக் காயம் ஏற்பட்டது. குப்பைகளைக் கண்டபடி எரிப்பதால் சுகாதாரக் கேடுகளுடன் சுற்றுச்சூழலும் கெடுகிறது. தாம்பரம் மாநகராட்சி, பொறுப்பாக நடந்துகொள்ளுமா?
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.