Tag: அண்ணாகண்ணன்

  • அறிவியல் & தொழில்நுட்பத்தில் எழுத்துக் கலை | அண்ணாகண்ணன் உரை

    அறிவியல் & தொழில்நுட்பத்தில் எழுத்துக் கலை | அண்ணாகண்ணன் உரை

    அறிவியல், பொறியியல், தொழில்நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் என்ற தலைப்பிலான பயிலரங்கு, 19.09.2022 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொறியியல், தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையமும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியும் இணைந்து இதை நடத்தின. இதில், அறிவியல் & தொழில்நுட்பத்தில் எழுத்துக் கலை என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வா வா வா (இசைப் பாடல்) | அண்ணாகண்ணன்

    வா வா வா (இசைப் பாடல்) | அண்ணாகண்ணன்

    அண்ணாகண்ணன் இயற்றிய பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார். உடன் பாடியுள்ளவர், ஷ்ரேயா கிருஷ்ணகுமார். பவழ விழாக் காணும் சுதந்திர இந்தியாவின் புகழ், பாரெங்கும் ஓங்குக. விடுதலைத் திருநாள் வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அப்பாவின் பிரிவை எதிர்கொள்வது எப்படி? | நிர்மலா ராகவன் பதில்

    அப்பாவின் பிரிவை எதிர்கொள்வது எப்படி? | நிர்மலா ராகவன் பதில்

    பல காரணங்களுக்காக, பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து அப்பாக்கள் வெளியூரில், வெளிநாடுகளில் வசிக்க நேர்கிறது. இதனால் தவிக்கும் மகள் ஒருவர், தம் மனம் திறந்து கேட்டுள்ளார். அப்பாவின் பிரிவை எதிர்கொள்வது எப்படி? என நம் வாசகி எழுப்பிய கேள்விக்கு நிர்மலா ராகவன் பதில் அளித்துள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி? – கண்டியூர் கே.எஸ்.இராமன்

    நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி? – கண்டியூர் கே.எஸ்.இராமன்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    என் சித்தப்பா கண்டியூர் கே.எஸ்.இராமன், தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே வசிப்பவர்.

    ஆழ்வார், நாயன்மார்களால் ஒருசேரப் பாடப்பெற்ற தலம், கண்டியூர். இங்குள்ள ஹரசாப விமோசனர் கோவிலைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோவிலைத் திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த ஊரில் வசிக்கும் கண்டியூர் கே.எஸ்.இராமன், ஊரின் பெருமைகளைச் சொல்கிறார். அனுமனுக்குக் கோவில் எழுப்பியுள்ள இவர், அந்தக் கோவிலில் தினசரி பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார். கம்பராமாயணப் பாடல்களை வாயாரப் பாடும் இவர், திருமகள் எங்கெல்லாம் இருப்பாள் என்பதற்கு ஓர் அரிய பாடலைச் சொல்கிறார்.

    விவசாயத்திலும் வணிகத்திலும் வெற்றிக் கொடி கட்டியவர். தமிழ் இலக்கியப் பாடல்கள் பலவற்றை அழகுறச் சொல்லக் கூடியவர். நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று விளக்குகிறார். அவருடன் ஒரு நேர்காணல். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விழித்தெழுந்த இந்தியா

    விழித்தெழுந்த இந்தியா

    அண்ணாகண்ணன் இயற்றிய ‘விழித்தெழுந்த இந்தியா’ என்ற புதிய பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், நார்வே நாட்டில் வாழும் திருமதி வாசுகி ஜெயபாலன். இசை ஆசிரியராகப் பணியாற்றும் இவர், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களின் மனைவி. இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்குமா?

    தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்குமா?

    தமிழ் அநிதம் அமைப்பும் திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து, 27.01.2022 அன்று கல்வி 4.0 என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்தின. அதில் நான் வழங்கிய சிறப்புரை இங்கே. இந்த அமர்வில், தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால்தான், பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவார்கள். அப்போதுதான் தமிழ்வழிக் கல்வி வளரும் என்ற கருத்துக்குப் பதில் அளித்துள்ளேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விழித்தெழுந்த இந்தியா

    விழித்தெழுந்த இந்தியா

    அண்ணாகண்ணன்

    தகதகக்கும் அகமுகத்து நகைநமக்குச் சித்திரம்
    சகலருக்கும் சகலமென்ற இதுநமக்குத் தத்துவம்
    நிகரிலாத நெறியறங்கள் நிதம்நமக்குச் சத்தியம்
    பகைவருக்கும் அருளுகின்ற அருள்நமக்கு நித்தியம்

    மனிதனென்ற பெருமிதத்தை வழியவிட்ட நம்முகம்
    கனிவுமிக்க மனம்பனிக்கப் பளபளக்கும் நம்விழி
    இனிமைமிக்க மதுரகாதல் இசைததும்பும் நம்குரல்
    இனிதுவக்கும் பெரிதுவக்கும் இளகிநிற்கும் நம்முயிர்

    யுகயுகத்துக் கருச்சுமந்து விழித்தெழுந்த இந்தியா
    ஜெகஜெகத்தை வழிநடத்தும் தேசம்இந்த இந்தியா
    வகுவகுத்து இடரனைத்தும் சிதறடிக்கும் இந்தியா
    பகுபகுத்து முனைகுவித்துப் பணிமுடிக்கும் இந்தியா

    செயல்சிறந்து இயல்சிறந்து பெயல்சிறந்து வாழ்கவே
    பயில்சிறந்து எயில்சிறந்து ஒயில்சிறந்து வாழ்கவே
    பயிர்சிறந்து உயிர்சிறந்து உயர்சிறந்து வாழ்கவே
    நயம்சிறந்து லயம்சிறந்து சுயம்சிறந்து வாழ்கவே

    அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    ஓவியம் – வி.கிருத்திகா

    Share
  • அட!

    அண்ணாகண்ணன்

    உலகம் மாறவே இல்லை
    என்பது உண்மை.
    உலகம் அடியோடு மாறிவிட்டது
    என்பதும் உண்மை.
    இரண்டும் வெவ்வேறு உலகங்கள்.

    பொழுது போகவில்லை
    என்பார் ஒருவர்.
    பொழுது பறக்கிறது
    என்பார் அடுத்தவர்.
    இரண்டும் சரி.
    இருவரின் பொழுதுகளும் வெவ்வேறு.

    அட,
    ஒரே ஆளே
    கடந்த நொடியில் ஒருவராகவும்
    இந்த நொடியில் இன்னொருவராகவும்
    இருக்கிறாரே!

    Share
  • நா.கண்ணனின் கவிதைகள் குறித்து அண்ணாகண்ணன்

    நா.கண்ணனின் கவிதைகள் குறித்து அண்ணாகண்ணன்

    முனைவர் நா.கண்ணனின் மிசித்ர கவிதைகள் குறித்த எனது கருத்துரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அமரர் பாரதி மணி

    அமரர் பாரதி மணி

    அண்ணாகண்ணன்

    அண்மையில் காலமான பாரதி மணி அவர்களைப் பல்லாண்டுகளாக அறிவேன். சென்னையில் பல நிகழ்ச்சிகளில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். புகையிலை பிடிப்பது பற்றி, ஒரே புத்தகம்தான் எழுதுவேன் என்றது பற்றி, இன்னும் பலவற்றைக் குறித்து அவருடன் விவாதித்தது உண்டு. அனைத்தையும் சுவாரசியமாக விளக்குவார். செய்வதை ரசித்துச் செய்வார்.

    அவருடைய தில்லி சாகசங்களைப் படித்துவிட்டு, சென்னையில் அவர் வீட்டுக்குச் சென்றேன். அருமையாகக் காப்பி போட்டுக் கொடுத்தார். உங்கள் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கலாமே. உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள இயக்குநர்களிடம் சொல்லுங்கள். நான் வேண்டுமானால், திரைக்கதை எழுதித் தருகிறேன் என்றேன். வேறு டைரக்டர் எதற்கு? நீங்களே டைரக்ட் செய்யலாம் என்றார். அதன் பிறகு அந்த முயற்சியை நான் தொடரவில்லை.

    பெங்களூருக்கு அவர் பெயர்ந்த பிறகும் தொலைபேசியில் பேசி வந்தேன். 30.01.2018 அன்று பெங்களூர் வீட்டைக் காலி செய்துவிட்டு நான் புறப்பட்ட நாளில், ரயிலைப் பிடிப்பதற்கு முன்னால், அவசர அவசரமாக அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு, போக்குவரத்து நெரிசலைக் கடந்து, கே.ஆர். புரம் ரெயில் நிலையத்தை அடைந்தபோது, நான் ஏற வேண்டிய வண்டி, நிலையத்தில் நின்றிருந்தது. நான் என் பொதிகளை எடுத்துக்கொண்டு, வியர்க்க, விறுவிறுக்க, அந்த நடைமேடையை நெருங்குவதற்குள் அது புறப்பட்டுவிட்டது. அதில் முன்பதிவு செய்திருந்தேன். அதை விட்டுவிட்டு, அடுத்து வந்த வண்டியில், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்துச் சென்னை வந்தேன். அப்போது பெரிய குழப்பம், எனக்குள் இருந்தது. பாரதி மணியைப் பார்க்காமல் நேராக ரெயில் நிலையம் வந்திருந்தால், அந்த ரெயிலைப் பிடித்திருக்கலாம் என ஒரு மனம். அப்படிப் போனால், பாரதி மணியை அதன் பிறகு பார்க்க முடியாமல் போயிருக்கும். எனவே, பார்த்து வந்தது சரிதான் என ஒரு மனம். பார்த்து வந்ததுதான் சரி என இப்போது நினைக்கிறேன்.

    அவருடைய வாழ்க்கையை, அதிலும் குறிப்பாக அவரது சாகசங்களை, திரைப்படமாக எடுக்கலாம். நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.

    அவர் என்றும் நம் நினைவுகளில் வாழ்வார்.

    Share
  • அண்ணாகண்ணன் மதிப்பாய்வு 1

    அண்ணாகண்ணன் மதிப்பாய்வு 1

    நமது புதிய திட்டத்தின்படி, படைப்புகளை அனுப்பக் கேட்டிருந்தேன். முதல் படைப்பாக ஒரு தலையங்கக் கவிதை வந்திருக்கிறது. அது குறித்த எனது மதிப்பாய்வு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாமியார் Vs மருமகள் | நிர்மலா ராகவன்

    மாமியார் Vs மருமகள் | நிர்மலா ராகவன்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நிகழும் சண்டைகள் குறித்து நிறையப் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். எப்படிச் சண்டை ஆரம்பிக்கிறது? இதில் கணவன் என்ன செய்ய வேண்டும்? சண்டையைத் தீர்ப்பது எப்படி? தவிர்ப்பது எப்படி? ஆலோசனை வழங்குகிறார் எழுத்தாளர் நிர்மலா ராகவன்.

    உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உங்க வீட்டுப் பெண்களை இப்படி வரைவீர்களா?

    உங்க வீட்டுப் பெண்களை இப்படி வரைவீர்களா?

    சந்திப்பு – ஓவியர் ஸ்யாம், அண்ணாகண்ணன்

    ஓவியர் ஜெயராஜ் நேர்காணலின் இரண்டாவது பகுதி. பனியன் வாசகங்கள் முதல் பெண்களின் அனாடமி வரை பல்வேறு கேள்விகளுக்கு இதில் பதில் அளித்துள்ளார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொண்டு செலுத்திடுவேன் – 2

    கொண்டு செலுத்திடுவேன் – 2

    அண்ணாகண்ணன் இயற்றி இசையமைத்த ‘கொண்டு செலுத்திடுவேன்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    இந்தப் பாடல், அண்ணாகண்ணன் குரலில்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி- 2

    இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி- 2

    நான் இயற்றிய ‘இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி’யைத் திருமதி பரிமளா சாரநாதன், அழகுற இசையமைத்துப் பாடியுள்ளார். இந்தப் பாட்டு விருந்தினைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share