கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.
‘கொண்டு செலுததிடுவேன்’ எனத் தொடங்கிய சிந்தில் மயங்கியது என் சிந்தை. தம்பி கிருஷ்ணகுமார் அவர்களும் தாங்களும் சுருதி தாளம் என்னும் வரம்புகளைப் புறந்தள்ளி இறையுணர்வோடு பாடியது கேட்டு நெகிழ்ந்து போனேன். கீர்த்தனைகள் இல்லாத வசை இதனால் நீங்கியதோ? இந்தச் சிந்தினை ரெட்டியார் 23 காவடிச் சிந்துகள் மெட்டில் ஏதேனும் ஒன்றிலோ ‘கண்ணன் வருகின்ற நேரம்’ என்னும் ஊத்துக்காடு வேங்கடசுப்ப ஐயர் பாட்டுப் போலவோ அமைத்திருந்தால் இன்னும் சிறந்திருக்கும் என்பது என் கருத்து.
மேலும் பாடலைப் பல்லவி அனுபல்லவி சரணம் என்ற அளவில் அமைத்துக் கொண்டும் வினைச்சொற்களைப் பொருத்தமாக மாற்றியும் அமைத்திருக்க வேண்டும்.
முழுமையான சொற்களைவிட சீர் பிரிப்பு (யாப்பில் இது வகையுளி எனப்படும்) இன்னும் சுவைதரும். சிந்துக்கு அதுதான் இனிமை. சென்னி குளநகர் வாசன் – தமிழ் தேரும் அண் ணாமலை தாசன்’ என்பது போல.
மாலையில் மதியம் தான் இனிமை என்பார் அப்பர் தம்பி அன்னா கண்ணனின் இசையும் கீர்த்தனையும் கூட இனிமைதான்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
வணக்கம்!
‘கொண்டு செலுததிடுவேன்’ எனத் தொடங்கிய சிந்தில் மயங்கியது என் சிந்தை. தம்பி கிருஷ்ணகுமார் அவர்களும் தாங்களும் சுருதி தாளம் என்னும் வரம்புகளைப் புறந்தள்ளி இறையுணர்வோடு பாடியது கேட்டு நெகிழ்ந்து போனேன். கீர்த்தனைகள் இல்லாத வசை இதனால் நீங்கியதோ? இந்தச் சிந்தினை ரெட்டியார் 23 காவடிச் சிந்துகள் மெட்டில் ஏதேனும் ஒன்றிலோ ‘கண்ணன் வருகின்ற நேரம்’ என்னும் ஊத்துக்காடு வேங்கடசுப்ப ஐயர் பாட்டுப் போலவோ அமைத்திருந்தால் இன்னும் சிறந்திருக்கும் என்பது என் கருத்து.
மேலும் பாடலைப் பல்லவி அனுபல்லவி சரணம் என்ற அளவில் அமைத்துக் கொண்டும் வினைச்சொற்களைப் பொருத்தமாக மாற்றியும் அமைத்திருக்க வேண்டும்.
முழுமையான சொற்களைவிட சீர் பிரிப்பு (யாப்பில் இது வகையுளி எனப்படும்) இன்னும் சுவைதரும். சிந்துக்கு அதுதான் இனிமை. சென்னி குளநகர் வாசன் – தமிழ் தேரும் அண் ணாமலை தாசன்’ என்பது போல.
மாலையில் மதியம் தான் இனிமை என்பார் அப்பர் தம்பி அன்னா கண்ணனின் இசையும் கீர்த்தனையும் கூட இனிமைதான்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுடன்
ச.சுப்பிரமணியன்