நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி? – கண்டியூர் கே.எஸ்.இராமன்
சந்திப்பு: அண்ணாகண்ணன்
என் சித்தப்பா கண்டியூர் கே.எஸ்.இராமன், தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே வசிப்பவர்.
ஆழ்வார், நாயன்மார்களால் ஒருசேரப் பாடப்பெற்ற தலம், கண்டியூர். இங்குள்ள ஹரசாப விமோசனர் கோவிலைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோவிலைத் திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த ஊரில் வசிக்கும் கண்டியூர் கே.எஸ்.இராமன், ஊரின் பெருமைகளைச் சொல்கிறார். அனுமனுக்குக் கோவில் எழுப்பியுள்ள இவர், அந்தக் கோவிலில் தினசரி பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார். கம்பராமாயணப் பாடல்களை வாயாரப் பாடும் இவர், திருமகள் எங்கெல்லாம் இருப்பாள் என்பதற்கு ஓர் அரிய பாடலைச் சொல்கிறார்.
விவசாயத்திலும் வணிகத்திலும் வெற்றிக் கொடி கட்டியவர். தமிழ் இலக்கியப் பாடல்கள் பலவற்றை அழகுறச் சொல்லக் கூடியவர். நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று விளக்குகிறார். அவருடன் ஒரு நேர்காணல். பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)