Tag: இன்னம்பூரான்

  • வாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் – நூல் மதிப்புரை

    — இன்னம்பூரான்.

     

    jk2

    வாழும் கலை: மரணமில்லாத ஜே.கே. தத்துவங்கள்

    பி.எஸ்.ஆர். ராவ். (2007/2013) சென்னை; நர்மதா பதிப்பகம்
    புத்தக விமர்சனம்: இன்னம்பூரான்

    கைரேகைகளைப் போல அவரவரது வாழ்க்கையின் நடை, தனது அழியா வரிகளைப் பதித்து விடுகிறது. நாம் எஞ்சிய வாழ்க்கையின் போது அவற்றை அழிக்கமுடியாது என்றாலும், வருகை புரியும் ரேகைகளின் ஆளுமை பிற்கால வாழ்வியலை நிர்ணயிக்கும். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ( ஜே.கே. ) மே 11, 1895 அன்று மதனப்பள்ளியில் ஜனித்தார். ஆசாரசீலர்களான ஒரு வளநாடு தெலுங்கு பிராமணக்குடும்பம் என்று பி.எஸ். ஆர். ஆர். குறிப்பிட்டதில் ஒரு நுட்பம் காண்கிறேன். ‘எங்கிருந்தோ வந்தான்…’ என்ற பாரதி வாக்குப்படி, மதனப்பள்ளி கட்டுப்பெட்டிக் குடும்பத்து பையன், தந்தையின் அலுவல் பொருட்டு சென்னையில் வந்திருந்து, பிரம்மஞ்ஞான சபையில் [The Theosophical Society, of which I became a member,decades later.] ‘முத்துக்குளித்து’ அன்னி பெசண்ட் அம்மையாரால் கடவுளின் அவதாரம் என்று பிரகடனம் செய்யப்பட்டவனானான். சர்ச்சைகள் கிளம்பி அடங்கின. தனது அபிமான புத்திரனாக, இவரை அம்மையார் அறிவித்தவுடன், ஜே.கே உலகுக்கே குரு என்ற கருத்து, பிரம்மஞ்ஞான சபையின் தாரக மந்திரம் ஆயிற்று. மனிதர்களில் அவரொரு மாணிக்கம் (ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்) என்று தான் அன்னி பெசண்ட் கூறி வந்தார். அந்தக் கருத்து நடைமுறைக்கு வந்திருந்தால், அவர் மிகவும் போற்றப்பட்டிருப்பார்; வணங்கப் பட்டிருப்பார்; மடாதிபதியாக மேலாண்மை பெற்றிருக்கலாம். ஒன்று நிச்சயம். இன்றளவில் சுவடு ஒன்றும் இல்லாமல் முழுமையாக மறக்கப்பட்டிருப்பார்.

    ஹாலந்தை சேர்ந்த ஓமன் நகரில் ஆகஸ்ட் 3, 1929 அன்று அந்தக்கூட்டத்தின் நக்ஷத்ர ஸ்தாபனத்தின் தலைவர் என்ற தகுதியின் படி தலைமை உரை ஆற்றிய ஜே.கே. அந்த ஸ்தாபனத்தைக் கலைத்து விட்டார். பிரம்மஞான சபையிலிருந்தும் விலகி விட்டார்.

    அந்தணக்குல ஜனனம் ஜனன ரேகை;
    பிரம்மஞான சபை பருவ ரேகை;
    அவதார பிரகடனம் அபிமான ரேகை;
    தன்னை தனித்து அமைத்துக்கொண்டது ஆத்மரேகை.

    [“கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்யத் தியானம் உதவுகிறது.” ~ ஜே.கே.]

    அது தான் நிர்ணயரேகையாக அமைந்தது, இன்றளவும் நம்மை சுய விசாரணை செய்ய உந்துகிறது.

    முன்னும் பின்னும் தெரியாதவற்றை விமர்சனம் செய்ய திறந்த மனதின் விகாசம் பெரிதும் உதவும். அண்டை வீட்டு பி.எஸ். ஆர். ராவ் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஜே.கே.யின் சிந்தனையின் தூய பிரதிபலிப்பு. ஒரு வருடத்துக்கு மேல் எனக்கு நெருங்கிய நண்பர். கருத்து வேறுபாடு அபரிமிதம் என்றாலும் சிந்தனை பரிமாற்றங்கள் எம் இருவரின் வாழும் கலைக்கு அர்ப்பணம். அதனால் இந்தப் புத்தக விமர்சனம் எனக்கு மெத்தக் கடினமாயிற்று. அதனுள் ஒரு நுட்பம். அது யாதெனில், திறந்த மனதின் விகாசத்தை நான் தேடி அலையும் போது, ஜே.கே. அவர்கள் கூறுவதை உன்னித்துக் கேட்கமுடிகிறது. முன்னும் பின்னும் தெரியாதவை கட்டியம் கூறுகின்றன. பீடிகை முற்றிற்று.

    “இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவ ஞானம்.”

    “தன்னை அறிந்து இன்பமுற விழைவோருக்கு ஒரு பரிசுப்பதிப்பு.”

    என்ற சொற்றொடர்கள் நூலின் முகப்பை அலங்கரிக்கின்றன. இவை என்னை மிகவும் அலைக்கழித்த வரிகள். சுவாமி விவேகானந்தர், Bertrand Russell, Aldous Huxley, Jean Paul Sartre, Søren Aabye Kierkegaard போன்ற சிந்தனையாளர்கள் சிறு வயதிலேயே என் மனதை ஆக்கிரமித்தவர்கள். அந்தக் காலகட்டத்தில் ஜே.கே. அவர்களை அறிய நேர்ந்ததே நல்லதொரு வாய்ப்பு. சிலந்தி வலை போல் உமிழ்ந்து பின்னப்பட்ட என் சிந்தனை வலை, தட்டி உதற வேண்டிய ஒட்டடையாகப் போகாமல் இருப்பதற்கு, அந்த அறிமுகம் பெரிதும் உதவியது. இல்லாவிடின், இந்த விமர்சனம் எழுதுவது சாத்தியமில்லை.

    மானிடராகப் பிறப்பு எய்தியவர்கள் அன்றாடம் சந்திக்கும் கருத்துலகம்

    ~ உண்மை, ஒழுங்கு, அன்பு, எளிமை, சுதந்திரம் என்ற வரிசையில் தொடங்கி,

    ~ அறிந்து கொள்வது, ஆழ்ந்து கேட்பது, தனித்துச் செயல்படுவது போன்ற செயல்பாடுகளை விவரித்து,

    ~ அகம்பாவம், முரண்பாடுகள், இம்சை, பயம், பிரச்சினை, யுத்தம் போன்ற தீய தன்மைகளையும்,

    ~ கட்டுப்படுத்தும் அதிகாரம், ஜீவிதம், கல்வி, உளவியல் புரட்சி, மனித உறவுகள் போன்ற அன்றாட நடைமுறைகளையும்,

    ~ பிம்பங்கள், எண்ணங்கள், கல்வி, சமயம் போன்ற தலைப்புகள் மூலம் வாழ்வியல் தத்துவங்களையும்,

    இந்த நூலின் 41 பகுதிகள் எடுத்துரைக்கும். அவற்றின் அமரிக்கையான தன்மையும், அடுக்கி வைத்த வரிசையும், கலையார்வத்துடன் நன்முத்துக்களைப் பதித்த ஆபரணங்களைப் போன்ற சொல்லலங்காரமும் போற்றத்தக்கவைதான். இந்த ஆபரணத்தோற்றம், திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்குத் தென்பட்டிருக்காது. தள்ளி நின்று விமர்சனம் செய்பவர் கண்ணில்தான் படும்.

    நூலாசிரியர் தன் முன்னுரையில்,

    “ஜே.கே.யின் நூல்களையும் சொற்பொழிவுகளையும் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நிறைய பேர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அவருடைய சிந்தனைகளை சாதாரண படிப்பு படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி, நடைமுறையில் இருந்து வரும் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதியிருக்கிறேன். இது மொழி பெயர்ப்பு அல்ல. இந்த நூலைப் படிப்பவர்கள் சிறந்த மனிதர்களாக உருவெடுப்பார்கள்.”

    என்றது நிதர்சனமாகத் தெரிகிறது.

    “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்”.

    “நாம் தேர்ந்து எடுக்கும் ஜீவிதம் உன்னதமான, விசாலமான, பயனுள்ள, சிறந்த குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்… உலக அமைதியை நிலை நாட்டுவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். அராஜகம், கலவரம், யுத்தம் போன்றவற்றை உருவாக்காதபடி நம் ஜீவிதம் அமைய வேண்டும்… வானம், காற்று, நீர், மலை, கடல், மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், செடி, கொடிகள் போன்ற அனைத்துடனும் நாம் நல்ல ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்…. இன்று மனிதன் வாழும் ஜீவிதம் வேதனை நிறைந்ததாகவும், சுவையற்றதாகவும், சலிப்பு நிறைந்ததாகவும் இருந்து வருகிறது…. மகிழ்ச்சியும் இன்பமும் தரும் ஜீவிதத்தை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்….. மதம், கடவுள்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை சம்பந்தப்பட்ட ஜீவிதங்கள் நல்ல ஜீவிதங்களாக இருக்க முடியாது. அவை அனைத்தும் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து… மனித வாழ்க்கையை வேதனை நிறைந்ததாக மாற்றி வருகின்றன….. ஜே.கே. சொன்ன உளவியல் வழிமுறைகளைப் பின்பற்றுவதின் மூலம்தான் உலகில் இருந்து வரும் கெட்டவை அனைத்தையும் அகற்ற முடியும்… உங்களுடைய எதிர்பார்ப்புகளைப் பொறுத்துத்தான் உங்கள் ஜீவிதங்கள் அமையும்… நன்கு பராமரிக்கப்பட்ட பழச்செடி நிறைய ருசியான பழங்களைத் தருவது போன்று நன்கு பராமரிக்கப்பட்ட ஜீவிதமும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தரும்.”
    [நூல்: பக்கங்கள்: 194 -210].

    ஆசிரியர் எளிய முறையில் எழுதியதை, இந்த 33வது உட்பொதிவு ஆன ஜீவிதத்தின் சாராம்சம் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு உட்பொதிவும் அவ்வாறே அமைந்து, ஜே.கே.யின் தத்துவத் திறவுகோலாக இயங்குகின்றன.

    தியானம் என்ற 39வது உட்பொதிவு ஒரு அமைதியான புரட்சி.

    “கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்ய தியானம் உதவுகிறது… தியானத்திற்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அது அவன் முழு வாழ்க்கையைத் தழுவியதாக இருக்கவேண்டும்… தியானம் என்பது முழுமையான கவனம்தான்… எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது தியானம் அல்ல… ஏகாந்தமான நிலையில் மௌனம் என்ற அழகான மலர் வளரும். அன்பு ஆறாக உருவெடுத்து ஓடும். அப்போது மனவருத்தங்கள் முரண்பாடுகள் போன்ற எதுவும் இருக்காது.”
    [நூல்: பக்கங்கள் 286 -311]

    ஜே.கே.யின் சிந்தனைகள், கேள்வி-பதில் என்ற உட்பொதிவுகள் இந்த நூலுக்கு ஒரு முழுமையை அளிக்கின்றன. They are remarkable exercises in filling up the blanks. ஜே.கே. தன்னுடைய சிந்தனைகளுக்கு ஏகபோகம் கொண்டாடியதும் இல்லை. அவற்றிற்கு ஈடு, இணையில்லை என்று சொந்தம் கொண்டாடியதும் இல்லை. அவர் ஒரு சிந்தனை மார்க்கம் வகுத்தார். பயணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை. அது போதும்.

    இலக்கிய / தத்துவ / சிந்தனை உலகில், புத்தக விமரிசனங்கள் நீண்டதாகவே அமையும். நூலின் உள்ளடக்கத்தைக் கூறுவதும், ஆசிரியரின் அணுகு முறையை அலசுவதுதான் முதலிடம் பெறும். விமர்சகரின் கருத்துக்கள் எல்லாம் இடம் பெறுவதில்லை… ஜே.கே.’எந்த நூலையும் யாருடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டாமல் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் (அல்லது பொருளின்மை) பற்றியும் பேசியவர்’ என்று தி இந்து இதழில் ஐந்து வருடங்கள் முன்னால் திரு. அரவிந்தன் எழுதியதும், ஜே.கே. நம்மையே நம் வினாக்களுக்கு விடை அளிக்க வைக்கும் அனுபவமும் நினைவில் இருப்பதால், நான் ஒப்பீடு ஆய்வுகளில் இறங்கவில்லை.

    சிந்தனைகள் பயணிக்கும் விதம் பற்றி சில வரிகள். வல்லமை இதழின் பன்முகம் அறிவோம். நூல்களை மதிப்பீடு செய்வது பற்றி ஒரு கருத்து பரிமாற்றம். இந்த நூலை மதிப்பீடு செய்ய சொல்லி ஒரு பரிந்துரை. அது நிறைவேற்றப்படுகிறது. வல்லமை இதழுக்கும், பரிந்துரை செய்த நண்பர்கள் அண்ணா கண்ணனுக்கும், தேமொழிக்கும், நூலாசிரியர் திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    -#-

    சித்திரத்துக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/5915156.jpg

    இன்னம்பூரான்
    மார்ச் 6, 2016

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: 5: “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?”

    இன்னம்பூரான்
    03 03 2016

    a1

    நவம்பர் 14, 2009 அன்று மின் தமிழில் ‘தாவீது பாக்கியமுத்து நன்றாகத் தமிழில் எழுதுவார். அவர் எழுதிய “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?” என்ற கட்டுரையை படித்திருக்கிறேன்.’என்று ஒரு 1941வது வருட நிகழ்வை (அதாவது 75 வருடங்களுக்கு முன்னால்) பற்றி எழுதியிருந்ததை என் கண் முன்னால் வந்து வைத்தது: மாது சிரோன்மணி பத்ம பூஷண் எம். சாரதா மேனன் (டாக்டர்) அவர்களுக்கு தமிழ் நாட்டு அரசு அவ்வையார் விருது கொடுத்து, தன்னை கெளரவித்துக்கொண்ட இன்றைய தகவல்.

    அவரை பற்றி ஹிந்து நாளிதழில் அக்டோபர் 31, 2011 அன்று வந்த கட்டுரை வரவழைத்த பின்னூட்டங்களின் சுருக்கம்:

    Kurt Waschnig: ஆம். டாக்டர் சாரதா மேனன் சொல்வது சரி தான். கருணையை நாம் தான் வரவழைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு மனமும் மூளையும் துணை புரியவேண்டும்…‘டாக்டர்’ தலையெடுத்த காலகட்டத்தில், மனம் நலம் குன்றியோர் ஒதுக்கப்பட்டனர், பைத்தியம் என்று முத்திரை குத்தப்பட்டன்ர். அதனால் அவர்கள் சீறியெழுந்ததும் உண்டு. தன் மருத்துவ அனுபவத்தினால்,அதை உணர்ந்த ‘டாக்டர்’ SCARF அமைப்பை நிறுவினார்…அது வசிக்க இடம், மேன்மையான மனோநல ஆலோசனை, சிகிச்சை,பயிற்சி, வேலை வாய்ப்பு, நடமாடும் ஆஸ்பத்திரி, ஆராய்ச்சி, விழிப்புணர்ச்சி எல்லாவற்றிலும் தலைமை தாங்குகிறது…இது ஒரு பிரமாதமான வெற்றி. ஒரு பெண்ணரசியின் கருணை, கருணையின் புரிதல் சாதித்த சாதனை இது

    K.P. safarulla: இவர் ஒரு தேவதை.

    kothandaraman:புகழ்வாய்ந்த இந்த 88 வயது மன நல மருத்துவருக்கு பாரதரத்னா கொடுக்கவும்,நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கவும், தமிழ் நாட்டு அரசு பரிந்துரைக்கவேண்டும். ( இது சொல்லி ஐந்து வருடங்களுக்குப் பின் அவ்வையார் விருது.)

    கட்டுரைச் சுருக்கம்:

    டாக்டரின் ஆலோசனை அறைக்கு விலாசம் போடப்படவில்லை. மனோ நல வைத்தியர் என்ற சொல்லைக் கேட்டாலே கொதித்து எழும் schizophrenia patients பல வாரங்களுக்குப் பின் நன்றி கூற வருகிறார்கள். மனித நேயத்தின் மறு உருவான டாக்டர் திட்ட வட்டமாக

    “மனம் தான் செயலை தீர்மானிக்கிறது. கனிவும், அன்பும் மனம் விரும்பினால் தான் இயங்குபவை. மூளையின் முன் அனுமதி இல்லாமல் ஒன்றும் நடவாது.” என்று கூறுகிறார்.

    அவருக்கு மங்கலான ஒரு நினைவு: 1947ல் அவர் மனோநலம் படிக்க விரும்பினார். 65 வருடங்களாக அதே தவம். எதிர் நீச்சல்: எட்டாவது மகவான அவர் ஏழாவது பெண். பெற்றோருக்கு ஏமாற்றம்.

    பால பருவத்தில் கடுஞ்சொல் வீசும் ஒரு கன்யாஸ்திரீயின் விவகாரத்தினால், இரண்டாம் வகுப்பு படித்த டாக்டர் ஒன்றாம் வகுப்பில் அமர்கிறார். தலைமை ஆசிரியை கேட்டதற்கு ‘என் சிக்கலை நானே தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.’என்கிறார். இது மறைந்த என் தம்பி பார்த்த சாரதியை நினைவூட்டுகிறது. ஒரு கன்யாஸ்திரீ அவன் தலையில் ஸ்கேலால் அடிக்கிறார். இவன் அந்த பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டான். மதர் ஸுபீரியர் வீட்டுக்கு வந்து மன்றாடினர். தந்தை ஒத்துப்பாடினார். அவன் தன் பிரச்னையை நானே தீர்த்துக்கொள்கிறேன் என்று திரு ரசலையா அவர்களிடம் பேசி வேறு பள்ளிக்குப் போகத்தொடங்கினான். இந்த மனோபாவம் போற்றத்தக்கது.

    பெண்ணீயத்துக்குத் துணை போனது, அக்காலத்து கலோனிய அரசு. அவர்களுக்கு மருத்துவப்படிப்பு இலவசம். இன்றும் ஐ ஏ எஸ் எழுதுவது பெண்ணரசிகளுக்கு இலவசம். [தனி மொழி: அந்தக்காலத்தில் நான் மருத்துவம் படிக்க ஆசை கொண்டேன். பிராமணர்களை ஒடுக்க வந்த கம்யூனல் ஜீ.ஓ. ஒரு தடை. வறுமை மற்றொரு தடை. இன்று கூட ‘பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?’ என்று அங்கலாய்க்கிறேன்.]

    டாக்டர் மொழிப்பிரச்னையை கூட எளிதாக தீர்த்தார். தெலுங்கில் Bacteriology படித்து பாஸ் செய்தார்! 1961ல் சென்னை மனோ நல ஆஸ்பத்திரியின் தலைமை. பிரமாதமான புரட்சிகரமான சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொணர்ந்தார். 1978ல் அவர் ஓய்வு (இன்றும் ஓய்வில்லை, 93 வயதில்) பெற்ற போது மனோ நலத்துறை திடம் பெற்று இருந்தது. அதுவே பெரிய சாதனை.

    நான் அதிகம் பேச என்ன இருக்கிறது?
    அவரே பேசுவதை கேட்டுத் தெளிந்து செயல் படுங்கள்
    https://www.youtube.com/watch?v=POcosfHeLcg

    இன்னம்பூரான்
    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.harmonyindia.org/images/Sarada_Menon.jpg

    உசாத்துணை: http://www.thehindu.com/features/magazine/unconditional-giver/article2573633.ece

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • ‘இன்னம்பூரான் பக்கம்’.4 சமுதாயமும், நீயும்,நானும், அவரும். கட்னா ~ போஹ்ரா

    இன்னம்பூரான்

    c9a0ac5b-01c2-4fa3-b152-6dc1e4c3e324

    FGM (FEMALE GENITAL MUTILATION

    ‘ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்…’ என்று அவசரத்தில் எழுதிவிட்டேன் போலும்! கட்னா எனப்படும் சிறுமிகளின் பிறப்புறுப்பை குத்திக்கிளறிக் குலைப்பது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில், இந்தியா உள்பட, நாட்தோறும் நடந்து வருகிறது.

    எல்லா நாடுகளிலிருந்தும் அகதிகளின்/வந்தேறிகளை பெற்றுள்ள இங்கிலாந்து நாட்டின் பதிவு ஒன்றை நோக்குக.

    இங்கிலாந்தில் கட்னா சட்டவிரோதம். அதனால் பிறந்த நாட்டுக்குக் கொண்டு போய் கிட்டத்தட்ட 1.37 லக்ஷம் பெண்மணிகள் இவ்வாறு குலைக்கப்பட்டதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது ஒரு ஊகமே. இந்த அவலங்கள் மர்மாகவே உளன என்பதால், உண்மை மேலும் படுமோசமாக இருக்கலாம். இங்கிலாந்திலேயே [London, Cardiff, Manchester, Sheffield, Northampton, Birmingham, Oxford, Crawley, Reading, Slough and Milton Keynes.] இந்த அறுவை நடந்திருக்கலாம் என்று அந்த நாட்டு அரசின் ஆய்வு கூறுகிறது. பூப்படைவதற்கு முன். பெண் குழந்தைகளும், சிறுமிகளும் இந்த அவஸ்தைக்கு, வாசனைக்குக்கூட மருத்துவம் அறியாத தாதிகளால், கையில் கிடைத்த கத்தி, கத்திரி, பிளேடு ஆகியவற்றால், மயக்கமருந்தும், பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில், உட்படுத்தப்படுகிறார்கள், கட்டி வைத்து. அப்பனும், ஆத்தாளும் தான் உள்கை. கட்னா எனப்படும் இந்த டார்ச்சரில் நான்கு வகை உண்டு: clitoridectomy, excision, infibulation, pricking, piercing, cutting, scraping and burning the area. இந்த கசுமாலங்களை தமிழில் மொழிபெயர்த்தால், அதை காமாந்தகாரச்செயல் என்று சால்ஜாப்பு அணிகள் குற்றம் சாற்றுவார்கள். விழிப்புணர்ச்சி கண்களை இறுக்க மூடிக்கொள்ளும். கட்னாவினால் பயன் ஒன்றுமில்லை. அதீதமான வலியும், திக்கிட்டுப்போவதும், ரத்தப்போக்கும், சிறுநீர் கழிப்பதில் இன்னல்களும், அவயவங்களின் அலங்கோலமும், இன்ஃபெக்ஷனும் தான் பாக்கி. மாதவிலக்கு தடைபடும். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். பிள்ளைப்பேறு கடினமாகும். உடலுறவு பாதிக்கப்படும். அது சாத்தியமில்லாமல் கூட ஆகிவிடலாம், உளவியல் பார்வையில், பாதிக்கப்பட்டவர்கள், வாழ்நாள் முழுதும் நிம்மதி இழப்பார்கள். தந்தையும் தாயும் தனக்குத் துரோகம் செய்ததை நினைத்து மருகிப்போவார்கள்/ இங்கிலாந்தில் இந்த சட்டவிரோதமான செயலுக்கு 14 வருட சிறைத்தண்டனையும், பலத்த அபராதமும் விதிப்பார்கள். இந்த சின்னாபின்னத்தை ஓரளவு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

    இவ்வாறு தன்னுடைய மகள்களையே சின்னாபின்னப்படுத்தும் சமுதாயங்கள், இது தான் பெண்களை ஆளாக்கி, திருமணம் செய்ய தகுந்த வழிமுறை என்கிறார்கள். பெண்கள் அதற்கு முன் உடலுறவில் நாட்டம் காட்டக்கூடாது, எப்படியும் அவர்களுக்கு காம வேட்கை இருக்கக்கூடாது என்று விரும்பி, இப்படி சிதைக்கிறார்கள்.

    இங்கிலாந்தில் இந்த அருவருக்கும் தீயச்செயலை வந்தேறிகளில் சில இனங்கள் மட்டுமே செய்கின்றன. ஆனாலும் அரசின் Health and Social Care Information Centre (HSCIC) என்ற அமைப்பு இதை ஒழிக்க பாடுபடுகிறது. உருது முதல் பலமொழிகளில் விழிப்புணர்ச்சி ஊட்டுகிறது.

    More about FGM – English version (PDF, 248Kb)
    Mwy o wybodaeth am FGM – Welsh version (PDF, 175Kb)
    ስለ ኤፍ ጂ ኤም ተጨማሪ መረጃ – Amharic version (PDF, 1.09Mb)
    مزيد من المعلومات حول ختان الإناث – Arabic version (PDF, 177Kb)
    FGM اطلاعات بیشتر درباره – Farsi version (PDF,221Kb)
    Renseignements complémentaires sur les MGF – French version (PDF, 182Kb)
    FGM زانیاری زیاتر دەربارەی – Kurdish Sorani version (PDF, 246Kb)
    Macluumaad dheeraad ah ee ku saabsan FGM – Somali version (PDF, 196Kb)
    Habari zaidi kuhusu ukeketaji wa wanawake – Swahili version (PDF, 176Kb)
    ብዛዕባ ኤፍ ጂ ኤም ተወሳኺ ሓበሬታ – Tigrinya version (PDF, 766Kb)
    ایف جی ایم کے بارے میں مزید معلومات – Urdu version (PDF, 188Kb)

    இந்தியாவில் நடப்பதை கவனிப்போம். போஹ்ரா என்ற சமுதாய பிரிவில் தலைவர்கள் வைத்தது தான் சட்டம். திரு. இஞ்சினீயர் என்ற சமூக ஊழியர், பல அடிதடிகளின் மத்தியில், இதை எதிர்த்துப் போராடி வந்தார், செத்தும் போனார். அந்த காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்தேன். அந்த சமூகத்தில் கட்னா செய்ய்ப்படாத பெண்கள் அசுத்தம்; கற்பிழந்தவர்கள். பெண்கள் கட்னாவை பற்றி பேசக்கூடாது. அது குடும்ப அவமானம். அதற்கு மேல் அச்சம். மத குருமார்களும், குடும்பமும், தாய்தந்தையர் என்ன செய்வார்கள் என்று சொல்லமுடியாது. அச்சம், பயம், பீதி இவை எல்லாம் வினோதமான களம் எனலாம். காலில் ஆணி விழுவதைப் போல் நமநமத்து பெண்களை வழிக்கு கொண்டு வரும் என்கிறார்கள்.
    அந்த சமூகத்தை சேர்ந்த சில பெண்மணிகள் இந்த சனியனை உரத்துக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். மஸூமா ரனல்வி சொல்வதை கேளுங்கள்.

    Masooma Ranalvi IBNLIVE.COM

    The experience of just penning down in detail the suppressed memory of a dark and sordid ritual was cat
    #Bohra community #female genital mutilation #genital mutilation #Speak out on FGM

    அவருடைய பேச்சில் தென்படும் துணிவை பாராட்டுகிறேன். அவர்களின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக அமைந்ததை கவனியுங்கள்.

    இந்த விண்ணப்பத்தை நோக்குங்கள்.

    Speak out on FGM

    At the age of seven, I was subjected to Female Genital Mutilation (FGM) in Mumbai, in a most unhygienic and clandestine manner. The shock and trauma of that day are still with me.

    Like me, there are thousands of my Dawoodi Bohra sisters who have been subjected to genital cutting as children and even today thousands of Bohra girls are being subjected to this practice, since it has been ordained by the clergy of our community.

    A few months ago, women like me got together under the forum – ‘Speak out on FGM’ – to begin a conversation on this extremely secretive ritual which has caused physical and psychological damage to each of us in some way or the other.

    We the undersigned women, who have been subjected to Female Genital Mutilation (FGM) also known as ‘Khatna’ belong to the Dawoodi Bohra community which has its major adherents in India.

    The practice of FGM is done surreptiously and in a clandestine manner to all the girl children in our community, without any consent whatsoever. The alleged reason for this tradition is to curb the sexual drive of women and control them.

    The Dawoodi Bohras are amongst the most educated in India, yet we are also the only Muslim community in India to practice FGM. The practice has nothing to do with religion and is more of a cultural practice.

    Most of us are too scared to speak out publicly. We fear ostracization, social boycott and exclusion of our families from the rest of the community by our religious clergy if we object to the continuation of this practice.

    FGM has no health benefits, in fact it harms girls and women in many ways. It involves removing and damaging healthy and normal female genital tissue, and interferes with the natural functions of girls’ and women’s bodies. FGM is often done without anaesthesia, without medical supervision and sometimes the procedure goes horribly wrong.

    It often leads to pain, shock, tetanus, genital sores, excessive bleeding, etc. It also has long-lasting psychological impact on the victims, ranging from sexual disorders, fear of sexual intimacy, nightmares and post traumatic stress disorder.

    In December 2012, the UN General Assembly adopted a unanimous resolution on the elimination of FGM. Across the world FGM is being outlawed in many countries. Nigeria and Gambia recently made FGM illegal after women came together, campaigned and raised their voice. FGM is banned in over 20 countries in Africa itself.

    The World Health Organisation (WHO) classifies FGM as a violation of the human rights of girls and women. According to WHO, FGM reflects deep-rooted inequality between the sexes, and constitutes an extreme form of discrimination against women. It is nearly always carried out on minors and is a violation of the rights of children.

    In Australia, three Dawoodi Bohras were held guilty of FGM recently by the Supreme Court of New Wales, Australia. The case was closely watched by the Dawoodi Bohra community in India.

    We urge the Government to pass a law banning this practice in India, such that anyone found involved in aiding, abetting and perpetrating this practice should be punished. Pressure of this law and fear of punishment will be the best way to put a stop to this cruel practice.

    I along with my Dawoodi Bohra sisters want to raise our voice against FGM in India and put an end to this. You can support us by signing this petition.
    Sign our petition and ask the government of India to act against Female Genital Mutilation!

    Masooma Ranalvi, Aarefa Johari, Insia Dariwala, Shabnum Poonawala, Nafisa Pardawala, Farida Ali, Tasneema Ranalvi, Hanan Adarkar, Shaheeda Kirtane, Tanvee Vasudevan, Ummul Ranalvi, Zainub Poonawala, Sana Vaidya, Zehra Patwa, Farzana Doctor, Fiza Jha, Zarine Hashim

    On Behalf of SPEAK OUT ON FGM

    VIEW
    http://www.ibnlive.com/news/india/we-found-courage-to-speak-out-on-female-genital-mutilation-in-india-so-can-you-1191974.html

    நானும் நமது குழுமங்களில் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். பெண்ணியம் பெண்ணியம் என்று முழங்கும்/ கர்ஜிக்கும் தாய்க்குலம் கருநாகமென நஞ்சு கக்கும் இந்த அவலத்தை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் விழிப்புணர்ச்சிக்கு பாடுபடுவதில்லை? இந்த அவலம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று உறுதி அளிக்க முடியுமா? அது முடியும் என்றால், தமிழ்நாட்டு எல்லை கடந்த அவலங்களை கண்டிக்கக்கூடாதா?

    சமுதாயம் தான் சமுதாயத்தின் விரோதி.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: http://cdn.youthkiawaaz.com/wp-content/uploads/2013/06/mutilation-tools.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: 3: கனம் கோர்ட்டார் அவர்களே![27]

    இன்னம்பூரான்
    27 02 2016

    இது இன்றைய செய்தி -27 02 2016.

    சட்டம் சட்டத்துக்குள்; நியாயம் நீதிபதி வழங்கும் தீர்வில் சட்டத்தின் உட்பொருள் காண்பது; தர்மம் தலைகாக்கும்.

    aib

    “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
    முத்துடைத் தம்நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
    மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
    கைத்தலம் பற்றக் கணக் கண்டேன் தோழிநான் “

    என்ற காதல்மொழி உரைத்த ஆண்டாளின் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்தராயிருப்பு என்ற ஊரில் [அர்ச்சானாபுரம்] தொழப்படும் நல்லதங்காள் என்ற தெய்வம் ஒரு மனுஷியை பற்றியது. அவள் வறுமை தாங்காமல், மன உளைச்சலின் காரணமாக தனது ஒன்பது குழந்தைகளை கிணற்றில் போட்டு கொன்றது கர்ணபரம்பரை.நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் – தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. [விக்கிப்பீடியா].

    அவளுக்கு [மறுமலர்ச்சி கண்ட தற்கால நல்லதங்காள்.] காவேரி என்ற புனைப்பெயர் சூட்டுவோம். அவள் தன் வாழ்க்கையின் மறுமலர்ச்சி நோக்கி பயணிக்கும் போது, அதற்கு தர்மமிகு கோர்ட்டார் வழி வகுத்தப்போது , நாம் அவரை வெட்ட வெளியில் உண்மை பெயர் சொல்லி விமர்சனம் செய்வது கொடுமை. தற்காலம் குழுமங்களில் என்னவென்னமோ எல்லாம் பேசுகிறார்கள். ‘காவேரியை’ அந்த துன்பக்கேணியில் இறக்க எனக்கு விருப்பமில்லை.

    அவர் பட்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமில்லை. அவர் கருவிலே இருக்குபோதே, குடும்பத்தைத் தவிக்க விட்டு, தந்தை ஓடிப்போனார். ஒரு வயது நிரம்பும் வேளையில் தாயும் அவரை கைவிட்டாள். சில குடும்பங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது உண்டு. அமெரிக்காவோ, இங்கிலாந்தோ,கனடாவோ, அந்த மாதிரி மேல்நாடுகளில், அரசும், சமுதாயமும், இம்மாதிரியான அனாதைகளை உய்விக்க முன் வருவார்கள். Foster-children is a well-known civilised concept in the western world. ஒரு நாள் போர்ட்ஸ்மத் நூலகம் திறக்க வேண்டி காத்திருந்த போது , ஒரு முதிய பெண்மணியுடன் பேச்சுக்கொடுத்தேன். உலக யுத்தத்தின் போது தாயும் தந்தையும் நாட்டுப்பணியில். குழந்தைகள் கிராமத்து பெரியோர் குடும்பங்களில். தான் அப்படி வளர்ந்தவள் என்று கூறிய அவர், தத்து எடுத்துவர்களின் அன்பை பாராட்டி கண்ணீர் உகுத்தார், 70 ஆண்டுகளுக்குப் பிறகு. அமெரிக்காவில் அரசு மான்யத்தைப் பெற்று ஏழைகள் தான் சக ஏழைகளின் அனாதை குழந்தைகளை வளர்க்கிறார்கள்.

    இங்கோ, இவரை வளர்த்து வந்த பாட்டியினால், வறுமையின் பொருட்டு, இவரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. சமுதாயம் வேடிக்கை பார்த்தது. காலம் கழிந்து வந்தது. இவரும் கண்ணன் என்ற தினக்கூலியை மணந்தார், மூன்று ஆண் குழந்தைகள். இல்லாமையில் தத்தளிப்பு. கணவன் வேலை தேடி கேரளா செல்கிறார். ஒரு சச்சரவினால், பாட்டி விலகி விடுகிறார்.

    செப்டம்பர் 2008: பசியின் கொடுமை தாங்காமல், குழந்தைகளை கிணற்றில் வீசி, தானும் குதிக்கிறார். ஆழம் இல்லாத கேணி. இவர் பிழைத்து விடுகிறார். இந்த அவலங்களை படித்த Centre for Protection of Civil Liberties (CPCL) அவருக்கு உதவ முன் வருகிறது. பேசக்கூட முடியாத அளவு சோகத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு ஆறுதல் கூற, கண்ணனை வரவைழைத்தார்கள். இவருக்கும் ஜாமீன் கிடைத்தது. கஷ்டப்பட்டு வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுத்தார்கள். இருவரும் ஒருபாடாக ஆறுதல் அடைந்து குடித்தனம் நடத்தினார்கள். ஒரு ஆண் குழந்தை உபயம்.

    இந்த காலகட்டத்தில் சட்டம் குறுக்கிட்டது. இந்தியன் பீனல் கோடு 302ம் ஷரத்துப்படி, கொலைக்குற்றத்துக்கு ஆக அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. அவர் நிலை குலைந்து போனார். குழந்தையையும் எடுத்துக்கொண்டு சிறையில் 11 மாதங்கள் கழித்தார்.

    CPCL ஒரு விடாக்கொண்டன். உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார்கள். சேலத்தின் மனோநிலை பேராசிரியர் டாக்டர் மீனாக்ஷி .

    ‘Kaveri was suffering from ‘psycho motor activity retardation’ (slowing of motor activity and cognitive function which are manifestations of severe depression). The doctor explained that a person suffering from it would have depression, loss of trust in life and urge to commit suicide. என்று சாக்ஷியம் அளித்தார். உச்ச நீதிமன்றம் அதை மதித்தது. அவளை விடுதலை செய்ய உத்திரவிட்டது. நீதிபதிகள் எம்.ஜயசந்திரனும், எஸ்.நாகமுத்துவும், அவர் மேல் சாட்டப்பெற்ற குற்றம் சட்டப்படி செல்லாது என்றார்கள். மேலும், அவளிடம் தடாலடியாக பெறப்பட்ட வாக்குமூலம் சட்டத்துக்கு உட்பட்டது அல்ல என்றார்கள். நீங்கள், போலீஸின் தகாத செயல், கீழ்க்கோர்ட்டின் அசமஞ்ச தீர்ப்பு ஆகியவற்றையும், அவற்றினால் நடந்த வாழ்க்கைக்கொலையையும் கண்டு கொள்ள வேண்டும்.

    காவேரியின் முதல் மகன் ஆறாம் வகுப்பில். அடுத்த பையன் ஐந்து மாத குழந்தை. சீர்மையாக, அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறது.கடந்த இழப்புகளை நினைத்து வருந்தும் காவேரி நாட்தோறும் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு மன்றாடுகிறார். வாழ்க! வாழ்க! காவேரியின் குடும்பம்.

    முனைவர் செல்வகுமார் CPCL ஐ இந்த/அடுத்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என என் பரிந்துரை.

    பெண்ணியம் போற்றும் நமது அங்கத்தினர்கள் இதையெல்லாம் கவனிக்காமல், பழைய 78 ஆர்.பி.எம். கிராமஃபோன் தட்டுக்களைப் போல் சொன்னதையே சொல்லி தன்னை மகிழ்வித்துக்கொள்ளலாகாது என்பது என் தாழ்மையான கருத்து.

    சித்திரத்துக்கு நன்றி:http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-56/Kallu_Paanai-1.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: 2: கனம் கோர்ட்டார் அவர்களே![26]

    இன்னம்பூரான்
    27 02 2016

    d46e33f5-ece4-49dc-9494-25695e8e1d0d

    உரிமை போராட்டங்களில் உரிமையும் தாக்கப்படுவது ஒரு இயல்பான காட்சி. ஒரு உள்ளங்கை நெல்லிக்கனி உதாரணம்.
    ‘தன்னுடைய கோலை சுழுற்றுவதற்கு உமக்கு முழு உரிமை உண்டு, அது என் மூக்கை உடைக்கும் வரையில்.’

    எனினும் கோலை சுழற்றுபவர்களுக்கும், சிதைந்த நாசிகளுக்கும் பஞ்சமில்லை!

    மஹாலக்ஷ்மி பாவானி என்ற வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் மகளிர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில் கூறப்பட்ட தகவல், சர்வ வல்லமை படைத்த ஆண்டவனையும் உலுக்கி எடுத்து விடும். குஞ்சும் குளவானுமான வருடந்தோறும் இல்லத்தில் ‘கரு’ பணி செய்து வரும் பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும், அந்தந்த பஸ்களில் பள்ளி சென்று வரும் சிறுமிகளுக்கு நீலத்திரைப்படங்களை காண்பித்து, அவர்களை பாலின தொந்தரவு செய்கிறார்கள் என்றும் அத்தகைய வக்கிரங்களை சட்டரீதியாக தடுக்கவேண்டும் என்றார்.

    Child pornography உலகெங்கும், அதுவும் இணையத்தில், பரவியிருந்தாலும், அநேக தேசங்களில் உடனடி தடையும் தண்டனையும் உண்டு. போர்ட்ஸ்மத் என்ற இங்கிலாந்து நகரில், ஒரு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனெரல் நீதிபதி. மேற்படி குற்றங்களுக்கு கடுந்தண்டனை விதிப்பார். ஒரு நாள் அவர் வீட்டில் சோதனை. ஆயிரக்கணக்கான நீலப்படங்கள். கையோடு கையாக கைது செய்து விட்டார்கள். அமெரிக்காவில், cybercrime police உடனேயே, கத்தியும் கபடாவுமாக வீட்டில் புகுந்து கைது செய்யக்கூடும். ஶ்ரீலங்காவில் வசித்து வந்த ஒரு பிரபல ஆங்கிலேய எழுத்தாளரை இங்கிலாந்து ராஜகுமாரன் (கிழம்!) வந்து பாராட்டுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஏன் தெரியுமா? அந்த பெரிசு Child pornographyயில் மூழ்கி ஞானஸ்நானம் செய்வதால். ஆனால் அவரை கைது செய்யவில்லை, பல வருடங்களாக. இந்தியாவில் இந்த வக்ரமான மனோவியாதி மிகவும் பரவலாக இருந்தாலும், தமிழனின் நாகரீகத்தில் ஒளிந்து கொண்டிருந்தாலும், சர்வம் மர்மமயம். இது ஒழிக.

    எதற்கெடுத்தாலும் நாமும் கோர்ட்டாரை அணுகுகிறோம்; அவர்களும் மனமுவந்து தீர்வு அளிக்கிறார்கள். இந்த வக்ராதிபதிகளை தண்டிக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்திய கோர்ட்டார் மிகவும் மன உளைச்சல்களுக்கு ஆளாகி, இதை அசிங்கம், சமுதாயத்தின் நன்னெறிக்கும் அபாயம் என்று கூறினர். நீதிபதி மிஸ்ரா அவர்கள்,

    ‘…பேச்சுரிமையும், விட்டு விடுதலையும் கட்டுப்பாடற்றவை அல்ல. அரையணா சர்ச்சைகளும், கோர்ட்டின் எல்லை சர்ச்சைகளும் குறுக்குசால் ஓட்டக்கூடாது..’

    என்று அச்சுறுத்தினார். மத்திய அரசு பொருத்தமான சட்டங்கள் இயற்றவேண்டும் என்ற நீதிபதிகள், அந்த அரசிடமிருந்து ஒரு விளக்கம் கேட்டு ஆணையிட்டனர். கவின்கலைக்கும், வக்கிரபுத்திக்கும் வித்தியாசம் உண்டு என்ற அவர்கள், அவற்றை பகுத்து அறிவது கடினம் என்றனர்.

    படிப்பினை:

    டாக்டர் தேவி ரஜப் அவர்கள் நாசகார பன்முகங்களை ஒழிப்பதில் கவனம் செலுத்தாமல், வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதால் இளைய சமுதாயம் மாபெரும் தவறு செய்கிறது; கடமையிலிருந்து நழுவி விடுகிறது; சமுதாய சீர்குலைப்பு தழைவிட்டு வளர்கிறது என்பதை எடுத்துரைத்து விட்டார். அதை நாம் ஊன்றி கவனித்து, நமது சம்பிரதாய சண்டைகளிலிருந்து (பாட்டியின் மொட்டை, பார்ப்பன துவேஷம் போன்ற சில்லறை மாஜி தாவாக்கள்: அதெல்லாம் செத்த பாம்பு, மேடம். Child pornography ஒரு கட்டுவிரியன்: அடுத்து வருவது கருநாகம். ) விடுதலை பெற்று ஆக்கப்பூர்வமான சமுதாய நிவாரணங்களுக்காக உழைக்க வேண்டும். சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான் என்பது கசப்பான உண்மை. சமுதாயத்தின் பின்னடைவை தடுத்தாட்கொண்டு முன்னேற்றங்களை கொணரவதும் சமுதாயம் தான் என்பது இனிப்பான உண்மை.

    இனி உங்கள் பாடு.

    -#-
    சித்திரத்துக்கு நன்றி: https://forrestduba475.files.wordpress.com/2011/02/child-pornography.jpg

    உசாத்துணை:

    Printable version | Feb 27, 2016 7:01:19 AM | http://www.thehindu.com/todays-paper/tp-national/prevent-access-to-child-pornography-centre-told/article8287151.ece
    © The Hindu

    இன்னம்பூரான்

    Share
  • வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும் செ.இரா. செல்வக்குமார்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம். கடந்த 200 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர், வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் முனைவர் தேமொழி அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான்,  பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 200 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு செ.இரா. செல்வக்குமார் அவர்கள் தெரிவு செய்ய உள்ளார்கள் என்பதையும்  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    crசெ.இரா. செல்வக்குமார் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலே மின்னிய, கணினியியப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அவருடைய ஆய்வும் கற்பித்தலும் குறைக்கடத்தி நுண்கருவிகள் (Semiconductor micro-nano eleactronic devices) துறையைச் சார்ந்தது. அவர் கிண்டி பொறியியற்கல்லூரியில் இளநிலை பொறியியற்பட்டமும் இந்தியத்தொழினுட்பக்கழகம் (ஐ.ஐ.டி), மும்பையில் முதுநிலைப்பட்டமும், சென்னை இந்தியத்தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி)  முனைவர்ப்பட்டமும் பெற்றவர். பின்னர்  வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முதலில் முதுமுனைவராகவும் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1992 இல் கலிபோர்னியாவிலுள்ள இசுட்டான்போர்டு (Stanford) பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும், (Visiting faculty),  பின்னர் 2003 இல் பிரின்சிட்டன் (Princeton) பல்கலைக்கழகத்தில் வருகைதரு சிறப்பாளராகவும் (Visiting Fellow) பணியாற்றியிருக்கின்றார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் (1996-2005) வாட்டுமேட்டு (WATMAT) என்னும்  பொருளறிவியல், பொறியியல் நடுவத்தின்  இயக்குநராக இருந்தார். ஐ.இ.இ.இ (IEEE)  என்னும் அனைத்துலகப் பொறியியல் நிறுவனம் நடத்தும்  ‘’IEEE Bipolar/BiCMOS Circuits and Technology Meeting.’’ என்னும் கருத்தரங்கத்தின் தலைவராக 1994 இல் இருந்தார்.  ஐ.இ.இ.இ ஆய்விதழ் ஒன்றுக்குச் சிறப்பாசிரியராகவும்  இருந்தார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் மேலவை (Senate) உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆளுநர் குழுவின் (Board of governors) உறுப்பினராகவும் 3 ஆண்டுகள் (2006-2009) பணியாற்றியிருக்கின்றார். 1992 முதல்  American Men and Women of Science என்னும் தொகைநூலில் குறிக்கப்பெற்றுள்ளார்.

    crs

    இவர் கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தில் தமிழில் எழுதிவருகின்றார். Alt.culture.tamil,  soc.culture.tamil, tamil.net போன்ற மடலாடற்குழுமங்களின் நிறைய எழுதியிருக்கின்றார். அதன் பின் இப்பொழுது முகநூலிலும், அவர் நடத்தும் தமிழ்மன்றம் என்னும் கூகுள் மடலாடற்குழுமத்திலும் தொடர்ந்து எழுதிவருகின்றார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 820 கட்டுரைகளைத்தொடங்கி எழுதியும் 20,000 உக்கும் கூடுதலான தொகுப்புகள் செய்தும் ஆக்கம் அளித்திருக்கின்றார். பள்ளிநாள்களிலிருந்தே தமிழ்ப்பற்றுடன் தமிழ்வளர்ச்சி சார்ந்தவற்றில் பங்காற்றி வருகின்றார். முகநூலில் அதிகமான தமிழ் மொழிபெயர்ப்புகள் செய்தவர் இவரே.   மாதத்துக்கு 80 மில்லியன் பேருக்கும் மேலானோர் வருகைதரும் கோரா (Quora) என்னும் தளத்தின் முன்னணி எழுத்தாளர்களில்  (Top Writers) ஒருவராக 2016 இல் அறிவிக்கப்பெற்றுள்ளார்.  அங்கு  அவர் எழுதியவையும் பெரும்பாலும் தமிழ்சார்ந்தவையே.

    cr2

    மேலும் ஓவியம் வரைதல், களிமண் சிலைவடித்தல், பாப்புனைதல், பாறையேற்றம், மொழியியல் ஆர்வம் போன்ற பல்கலைகளிலும் வித்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அவரைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய வலைப்பக்கங்கள்:

    https://ece.uwaterloo.ca/~selvakum/biop.html

    https://uwaterloo.ca/electrical-computer-engineering/people-profiles/chettypalayam-selva-selvakumar

     விக்கிப்பீடியா பயனர் பக்கம்:  https://ta.wikipedia.org/s/1lo
    முகநூல் பக்கம் :  https://www.facebook.com/c.r.selvakumar

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில்  தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.  மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    Share
  • ‘இன்னம்பூரான் பக்கம்’- 1

    இன்னம்பூரான்

    சமுதாயமும், நீயும், நானும், அவரும்

    f956a23c-4711-4df9-ae1a-e4d27c8b84a4

    ‘உலகெங்கும் காணக்கிடைக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணமுடியவில்லையே; அவற்றின் சீற்றத்தைக் குறைக்கவும் கூட முடியவில்லையே’ என்று அங்கலாய்க்கும் தென்னாப்பிரிக்க சிந்தனையாளர் டாக்டர் தேவி ரஜப் அவர்கள் இளைய சமுதாயம் வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதை கண்டு வருந்துகிறார். அது, சமூக விரோதிகளின் நாசகார பன்முகங்களை கண்டுகொள்ளாததால் விளையும் அவலங்களை தடுப்பதை, குலைக்கிறது என்கிறார் (Confluence: Feb 2016). அத்தருணம் ஒரு ஹிந்து மெய்யறிஞர், ‘இந்த மதமோ, அந்த மதமோ, எந்த மதமாயினும், (நாத்திகத்தின் பல உட்பிரிவுகள் உட்பட) அதன் விசுவாசிகள் தங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று அடித்துக் கூறுவதால் அபாயம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சுகிறார். அவர் விடுத்த எச்சரிக்கை: மனிதம், சுதந்திர உலகம் ஆகியவற்றை காப்பாற்ற, எந்த விதமான மதாபிமானத்தையும் புறக்கணிக்காமல், ’ அப்பா! இதற்கு கடவுளின் துணை நாடாதே (Not in God’s name!) என்றதை வழிமொழிகிறார்.

    உலகசமுதாயம் பெரிது; கணக்கற்ற வாழ்வியல்கள். சற்றே சிறியதான தேசாபிமான சமுதாயமும் அப்படித்தான் என்றாலும், நாட்டுப்பற்று ஒரு தொப்பிள் கொடி. இந்தியா இதற்குரிய உதாரணம். அதன் பல பகுதிகள்- அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஆண்டிப்பட்டி வரை- இமாலயத்திலிருந்து திருவிதாங்கூர் வரை, தனது தனித்துவ சமுதாய பண்புகளையும், இந்திய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் இயங்கி வருகின்றன. மனித இனம் என்பதால் முரண்களுக்கு பஞ்சம் இல்லை.

    உலகெங்கும் சமுதாய அநீதிகள் காலம் காலமாக கோலோச்சுவதும், அவை தோன்றி மறைவதும் கண்கூடு. ஆனால், மேல்மட்டம் கண்களை மூடிக்கொள்வார்கள். ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், பழங்குடி சண்டைகளும் காணக்கிடைக்கின்றன. நான் பட்டியலிட்ட அவலங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏகபோக உரிமையல்ல. நான் மற்ற மாநிலங்களிலும் கண்டிருக்கிறேன். டில்லியின் மேல்மட்டத்தில், தலைக்கூத்தல், (முதியவர்களை 26 வகைகளில் ஒன்றில் கொன்று விடுவது) பெண்சிசுவதை, கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து ஆகிய நான்கு அவலங்களும், மற்றும் பல சமூகவிரோதங்களும் பரவலாகத்தான் இருந்தன, இருக்கின்றன. சொத்து களவாடவேண்டி, செல்வந்தர்கள் வீடுகளில் தலைக்கூத்தல் மாதிரி முதியவர்கள் குறி வைக்கப்பட்டது உண்டு. உசிலம்பட்டி சிசுக்கொலையை விட, டில்லியில் அதிகம். 1965 -1990களில் ரயிலில் வந்தால், இருபக்கமும் செக்ஸ் டெட்டர்மினிஷன் விளம்பரங்கள் . மெத்தப்படித்த கொலைகார டாக்டர்கள் தான், சட்டத்தை அவமதித்து, இன்றைக்கும் சேலத்தில் கூட சிசு வதை செய்திருக்கிறார்கள், அரசு விளம்பரங்கள் அலறும் போதும். இத்தனைக்கும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்கள். சில மாநிலங்களில் கந்துவட்டி கொடுக்கமுடியமால் தற்கொலைகள் இன்று கூட நடக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு பிரபல செல்வந்தர் கூட தற்கொலை செய்து கொஞ்சம் பழைய செய்தி. பீஹார், உத்தர் பிரதேஷ் கட்டப்பஞ்சாயத்துக்கள் உயிர்க்கொல்லிகள். ஒடிஷாவின் நெற்களஞ்சியமான காலகண்டியில் ஏழை வயிற்றில் மண்.

    நான் பாலபருவத்தில் கண்டு கலங்கிய வறுமையின் பூதாகாரம் யாருக்கும் புரியவில்லை. அரைப்பட்டினியில் ஐம்பது நாட்களாவது வதங்கியவர்களுக்குத் தான் அதன் வலி புரியும். நான், சொந்த அனுபவத்தாலும், நாடு முழுதிலும் பணி புரிந்திருந்ததாலும், கிராமங்களுக்கு அடிக்கடி செல்லவேண்டி இருந்ததாலும், இவற்றை அறிவேன்.

    இந்தியாவில் ஒரு புரட்சி வந்தே தீரும் என்று, இந்தப் பின்னணியில் பலதடவை எழுதியிருக்கிறேன். எனது ஆசானாகிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், நானும் பல கோணங்களில் மார்க்சிஸ்ட் தான். இதை படித்த பின் புரியும்.

    ‘…புரையோடிப்போன சமூகத்தை மொத்தமாய் புரட்டிப்போடுவதற்குப்பெயர் தான் புரட்சி…83 ஆயிரம் சதுரமைல் பரப்பளவு கொண்ட ஹைதராபாத் சமஸ்தானத்தில் மூன்று மாவட்டங்களின் நிலம் பத்துப்பதினைந்து சுவான்தார்களுக்குச் சொந்தம். விஷ்ணுப்பூர் தேஷ்முக்: 40 ஆயிரம் ஏக்கர்: சூர்யாபேட் தேஷ்முக்: 20 ஆயிரம்: கல்லூர் தேஷ்முக் ஒரு லக்ஷம்…இந்த பண்ணையாளர்கள் விவசாயத்தொழிலாளிகளை நாயினும் கேவலமாக நடத்தினர். கூலியே இல்லாமல் வேலை கட்டாயம். ஐந்து பேருக்குக் கொடுக்கும் கூலி ஒரு ஆள் சாப்பிடக்கூட காணாது. கூலி கேட்டால் கடன். மன்னிக்கவும் குட்டி வட்டி, கந்து வட்டி; பல்லக்குத்தூக்க வேண்டும்; குதிரை வண்டி முன்னால் ஓடவேண்டும்; சமையல், சலவை, நாவிதம் எல்லாம் இலவசம். பண்ணையாருக்கு கால் அமுக்கி விடவேண்டும்; விருப்ப நாயகிகள் தரவேண்டும், மனைவிகளை…அதில் பந்தாட்டம் உண்டு. வரதக்ஷிணையில் அடிமைப்பெண் உண்டு. (கொஞ்சம் சுருக்கினேன், பெரும்பாலோர் இத்தகைய கசப்பு செய்திகளை படிக்கமாட்டார்களே என்று.) (ஆதாரம்: ஜூனியர் விகடன்: 3.2.16)

    மேற்படி மனித உதாசீனங்கள் தஞ்சை டெல்டாவில்- வாண்டையார், வடபாதி மங்கலம், சாம்பசிவ அய்யர் (கொஞ்சம் நல்லவர் என்பார்கள் விவசாயிகள்), குருதி வெள்ளம் எல்லாவற்றிலும் உண்டு. நான் வாழ்ந்த மதுரை பக்கத்திலும் உண்டு, கொஞ்சம் டிஃஃபெரண்ட் பார்முலா. சொன்னால் பொல்லாப்பு. சாதியை சாடுகிறான் என்பார்கள். ஆனாலும் ஏழைக்கு சாவு மணி தான். ஏன் தலைக்கூத்தல் நடக்காது? முதலாளியை கொல்லமுடியாது. அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் போட ஒரு சோறு இல்லை. பொட்டுத்துணி இல்லை. பசங்க வள வள. எல்லாம் பட்டினி, அழுகை. மருத்துவம் கேள்விப்படாத உண்டு. ஏழ்மை இல்லை; வறுமை இல்லை; வரட்சி இல்லை; இல்லாமை, ஐயா.

    எழுபது வருடங்களுக்கு முன்னால் நான் கண்ட அவலங்கள் இன்றும் நடக்கின்றன, தமிழ்நாட்டில், நடத்தப்படுகின்றன. சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான். அதையெல்லாம் விட்டு விட்டு…இதற்கு மேல் எழுத இன்று சக்தியில்லை.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://fscomps.fotosearch.com/compc/CSP/CSP017/k20722685.jpg

    இன்னம்பூரான்

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே [ 25]

    இன்னம்பூரான்
    17 06 2016

    aii

    இல்லறம் வாழ்வியலில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருப்பதாலும், அது பெரும்பாலோருக்கு உகந்ததாக அமைந்து இருப்பதாலும், ஆண்-பெண் உறவு போற்றப்பட்டதாக அமைகிறது. இங்கு திருமணவைபவம் முன் நிறுத்தப்படவில்லை. நற்றிணை போன்ற சங்கப்பாடல்களில் அந்தரங்க உறவு மேன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில் காதல் – ஆணழகன் – பெண்ணரசி – உறவு என்பன அகம் எனப்படும். அகப்பொருளின் பாடு பொருள் ஆண் பெண் என்னும் இருபாலாரது காமம் ஆகும். காமம் என்பது உலக உயிர்களுக்கெல்லாம் உரியது. தேவருலகங்களில் செங்கோல் ஆட்சி செலுத்துகிறது. உடைமையது இன்பம் தருவது. இது குறித்துத் தொல்காப்பியனார் இவ்வாறு சொல்கின்றார்.

    எல்லாஉயிர்க்கும் இன்பம் என்பது
    தானர்ந்து வருஉம் மேவற்றாகும்.
    -தொல்காப்பியம் பொருளதிகாரம் – நூற்பா 27

    தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அகம் புறம் குறித்து வரையறுத்துக் கூறுகின்றார். அகம் பற்றிக் கூறும் போது ‘ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம். . .’ என்றுதான் அவர் ஆரம்பிக்கின்றார். நாம் தான் அதன் காதில் ‘சிற்றின்பம்’ என்ற பூ சூட்டி விட்டு, தட் தடாவென்று தடை விதித்து விட்டு, ரகசியமாக, தடையை மீறுகிறோம். தொன்மை காலங்களிலிருந்து தற்காலம் வரை, தேவ வாக்குக்கள், அரசாணைகள், பிரகடனங்கள், சட்டங்கள் ஆகியவை ஆணும் பெண்ணும் பிரிந்தால் ஏற்படக்கூடிய குழந்தைகளின் தவிப்பு போன்ற சிக்கல்களை அலசி, ஆராய்ந்து, சில வழிமுறைகளை அமல் படுத்துகின்றனர்.

    சில உண்மையான நிகழ்வுகள்:

    மீனுவுக்கும் சீனுவுக்கும் 1978ல் திருமணம். பத்து வருடங்களில் மூன்று குழந்தைகள். அந்த காலகட்டத்தில், தான் இஸ்லாமியர் ஆகிவிட்டதாக சான்றுகள் காட்டி, மற்றொரு பெண்ணை மணந்து கொண்டான், சீனு.

    அதே வருடத்தில் [1988] சீதாவை மணந்த கிஷோர், அவளை துன்புறுத்தினான். மூன்றே வருடங்களில், மற்றொரு பெண்ணுடன் உடன்போக்கு சென்று, பின்னர் இஸ்லாமியராக மதம் மாறி மணந்து கொண்டான்.

    1992: கமலா என்போம், அவருடைய பெயரை, இங்கு. அவர் தாயகம் சென்று திரும்பினால், அவரது எட்டு வருட தாம்பத்தியம் நட்டாற்றில். அவரது கணவன் சந்திரன் விவாகரத்து வேண்டும் என்றான். திக்கிட்டுப்போன கமலாவின் மனம் உடைந்து விட்டது. அழுதுகொண்டே , மறுத்து விட்டாள். ஒரு வருடம் பொறுத்த பின், சந்திரன் தான் இஸ்லாம் மதத்தைத் தழுவி விட்டதாக கூறி, சாக்ஷியம் காட்டி, வேறு ஒரு பெண்ணை, புதிய மதம் அனுமதிக்கிறது என்று, மணம் செய்து கொண்டான்.

    நீங்கள் நீதிபதியாக இருந்தால் என்ன தீர்வு சொல்வீர்கள்? மூன்றும் நடந்து விட்ட சம்பவங்கள். தீர்வும் வழங்கப்பட்டது. அது பின்னர்.

    இரண்டு துணை வினாக்கள்: [1] சட்டவிரோதமாக பல இருதாரத்தினர் சகஜமாக உலவுகிறார்கள். சட்டம் அவர்களை என்ன செய்யும்?

    [2] குஜராத்தில் மைத்ரீகரார் என்ற காந்தர்வ விவாகம், காண்ட்றாக்ட் என்ற முறையில், ‘தொட்டால் உண்டு; விட்டால் போச்சு.’ என்ற நடைமுறையில் இருந்தது. சட்டம் அவர்களை என்ன செய்யும்?
    -#-

    சித்திரத்துக்கு நன்றி:
    http://allwallpapersnew.com/wp-content/gallery/cute-love-wallpaper-cute-wallpapers-mobile/Animated-Cute-Love-Wallpaper-e1332485702246.jpg

    இன்னம்பூரான்

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே [ 24]

    இன்னம்பூரான்
    13 06 2016

    சட்டம் இயற்றுவது சட்டசபை; சட்டத்தை நிர்வகிப்பது நிர்வாகம்; சட்டத்தை மேன்மை படுத்துவது நீதிமன்றம். மூன்றும் இணக்கத்துடன் இணைந்து செயல்படுவது, அரசமைப்பு. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. நடைமுறையில் நுட்பங்களும், சிக்கல்களும், வழுக்களும், துணைமன்றங்களும், அவற்றின் நுட்பங்களும், சிக்கல்களும், வழுக்குகளும் ஊடே அமைந்து, கூட்டுறவாகவோ, ஊடுருவலாகவோ செயல்படுவதால், சில சமயம் திகைத்து நிற்கிறோம். அவரவர் அபிப்ராயங்களை கட்டவிழ்த்து ஜல்லிக்கட்டுகிறோம். இது நிற்க.

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
    கோடாமை சான்றோர்க் கணி. [திருக்குறள் 118]

    ‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் -துலாம் போல- அமைந்து ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ -பரிமேலழகர் உரை: வை.கோவிந்தன் பிரசுரம்.

    அத்தகைய சான்றோர் பணி புரிந்தால், நீதிமன்றங்கள் சட்டத்தை மேன்மைப்படுத்த முடியும். நடுவு நிலையில் நின்று பகர்ந்த தீர்வுகள் வாழ்வியலில் நலம் தரும் நடைமுறைகளை சாத்தியப்படுத்த முடியும். பற்பல படிநிலைகளில் நின்று அளித்தத் தீர்வுகளில் குற்றம் காண்பது, மனித இயல்பு. படிநிலை உயர உயர, விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது, தீர்வுகள் மாற்றப்படலாம்; ரத்து செய்யப்படலாம்; மாற்றுக்கருத்துக்கள் தலையெடுக்கலாம்.

    இன்றைய பதிவில் இரு கோர்ட்டார்கள் ஆஜர். தீர்வுகளின் சுருக்கத்தைப் படித்து விட்டு, நமது தீர்வுகளை அவரவர் மனதில் உலவ விடலாம். நீதிபதிகள் மீது அவதூறு செய்யக்கூடாது. ஆனால், பழிச்சொற்களை உதறாமல், தீர்வுகளை நாகரீகமாக அலசலாம். விருப்பம் உள்ளவர்கள் அலசுக.

    I. தடை.:

    ai
    எனக்குத் தெரிந்த நாள் முதல் சபரிமலையில் சபரிக்கு மோக்ஷம் கிடையாது. பெண்ணினம் தள்ளுபடி. சபரிமலை தேவஸ்வம் வாரியம் ஒரு ஆணுலகம். ‘சபரிமலைக் கோயிலுக்குள் நுழைய மாலையிட்டுக் கொண்டு, இருமுடி தாங்கி செல்லும் பக்தர்கள் கடும் விரதங்களையும் கடினபாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது… நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தடை பக்தர்கள் மனதில் உட்பொதிந்துள்ளது… கடவுள் ஒரு துறவி, அவரை வழிபடச்செல்லும் பக்தர்கள் ‘சுவாமி’ என்று அழைக்கப்படுகின்றனர்.’ என்ற வாதங்கள் எடுபடவில்லை.

    பெண்களை தடை செய்வதை நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தவர்கள், சட்ட மாணவர்கள். அவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மிகவும் பிரபலமான பெண்ணிய வழக்கறிஞர்: தாய்க்குலம். அவர் “பெண் பிரம்மச்சாரிகளும் இந்த உலகத்தில் உள்ளனர…அனைத்து ஆசைகளையும் துறந்து வாழ்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. நமது அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 அனைத்து மனித இனத்துக்கும் பொதுவான மத ஸ்தலங்களை திறந்து விடுங்கள் என்கிறது. நாங்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்லர் என்று கூற வருகிறீர்களா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் எழுப்பிய வினாக்கள்:

    ஆன்மிகம் முழுதும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா? மதம் என்ற புலத்தில் பெண்கள் ஆன்மிக நிலையை அடைய லாயக்கற்றவர்கள் என்று கூறுகிறீர்களா?

    உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா?

    அவருடைய அறிவுரை: “வழிபாட்டு பண்பாட்டில் ஒரு மையமான குழு இருக்கும். இதில் பிறரை வெளியாட்கள் என்று தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கும். ஆனால் மதம் என்பது முழுமைத்துவத்தை வலியுறுத்துவது, அதுதான் சனாதன தர்மம், பால், சாதி, இன வேறுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கியதே சனாதன தர்மம்”.

    நீதிபதி மிஸ்ரா, “அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படை உரிமையான சமத்துவம் என்பதை மீறி இந்த தடை மரபு நீடித்து நிலைக்கப் போகிறதா? வேதங்களிலும், உபநிடதங்களிலும் பெண்/ஆண் பாகுபாடு இல்லையெனும் போது, வரலாற்றில் எந்த காலக்கட்டத்தில் இந்தப் பாகுபாடு தொடங்கியது என்று கூறுங்கள்” என்று வலியுறுத்தினார்.

    உத்தரவு 1: தடைக்கு ஆதரவான ஆயிரமாண்டு கால நிரூபணத்தை ஆறு வாரங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    உத்தரவு 2: இந்த வழக்கிற்கு சட்ட, அரசியல் சாசன மற்றும் ஆன்மீக தளங்களில் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது என்பதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் என்பவரை நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளராக நியமனம் செய்கிறேன்.

    யான் கூற விழைவது: இப்போது பம்பா நதியின் நட்டாற்றில் நிற்கிறோம்.
    கேள்விக்கு என்ன பதில்?
    -#-

    II. உடை:

    அடுத்து வருவது:

    ai1
    ராமநாதபுரம் மாவட்டம், உத்தர கோசமங்கையில் 3,300 ஆண்டுகள் பழமையான மங்களநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மூலவர் மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் மரகத நடராஜர் சந்தனக் காப்பு இல்லாமல் காட்சியளிப்பார்.

    வழக்கறிஞர்கள் இல்லாமல் வழக்கா? ராமநாதபுரம் வழக்கறிஞர் முருகன் அவர்களுக்கு ஒரு வேட்கை [இன்னம்பூர் ஶ்ரீநிவாசர் கட்டாரி அணிந்துள்ளாரா? என்று தூக்கம் தொலைத்த சம்பத்துப் போல!]: இந்த நடராஜர் சிலை உண்மையில் மரகதத்தால் செய்யப்பட்டதா? இல்லையா? என்று அவர் தூக்கத்தைத் தொலைத்தது மட்டுமல்லாமல், [கண்ணகி சிலம்பை உடைத்தது போல]சிலையை உடைத்து மரகதமா இல்லையா? என்பதை ஆய்வு செய்ய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், வழக்குத் தொடர்ந்தார்.

    இதை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

    “அனைத்து மத நம்பிக்கைக ளையும் அறிவியலை பயன்படுத்தி ஆராய்ந்து கொண்டிருக்க முடி யாது. சில நம்பிக்கைகளை நம்பிக்கையாகவே இருக்க விடுவது நல்லது. மனுதாரர் மரகத நடராஜர் சிலை உண்மையில் மரகத்தால் செய்யப்பட்டது என நம்பினால் நம்பலாம். அவருக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், அவர் கோயிலுக்கு செல்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.

    மனுதாரர் மரகத நடராஜர் சிலையை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் ஒரு சிலையை உடைக்காமல் அந்த சிலை குறித்து ஆய்வு செய்ய முடியாது. அப்படி சிலை உடைக்கப்பட்டால் அந்த சிலை வழிபாட்டுக்கு தகுதியற்றதாகி விடும். மனுதாரர் இப்படிப்பட்ட தவறான உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    உத்தரகோசமங்கை கோயி லுக்கு கோடிக்கணக்கான பக் தர்கள் வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் செயல்களை செய்வது சரியல்ல. மரகத நடராஜர் ஆண்டுதோறும் சந்தனக் காப்பில் இருப்பதை பெரிய பிரச்சினையாக்கி, அதை சரிசெய்ய சிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

    இந்த மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், சுய கட்டுப்பாடு காரணமாக மனுதார ருக்கு அபராதம் விதிக்காமல் விட்டுவிடுகிறோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது “

    இனி உங்கள் பாடு, மரகத நடராஜர் பாடு, முருகன் பாடு. அவர் உச்சநீதி மன்றத்துக்கு விண்ணப்பம் செய்வாரானால், அவருக்கு நீங்கள் பரிந்துரை செய்யும் வாதங்கள் யாவை?

    என் தம்பிடி கருத்து: கனம் கோர்ட்டார் அபராதம் சிறிதளவாவது விதித்திருக்கவேண்டும்.
    -#-
    உசாத்துணை, இரவல் நன்றி, காப்புரிமை நன்றி: தி இந்து: 12 02 2016

    சித்திரங்களுக்கு நன்றி:
    http://ammandharsanam.com/magazine/April2013unicode/images/10-Sabari.jpg
    http://www.narthaki.com/info/articles/images/art3286.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • இனி ஒரு விதி செய்வோம்: 1

    இன்னம்பூரான்
    ஜனவரி 1, 2016

    innam

    தற்காலம் பொற்காலமில்லை என்று நாம் யாவரும் அறிவோம். பொற்காலம் என்ற சொல்லே ஒரு மயக்கம். மிடாஸ் என்ற ஐதிக அரசன் தொட்டதெல்லாம் பொன் ஆனதால், பட்டினியில் வாடினானாம். நமக்கு வேண்டியதெல்லாம் நல்ல காலம். உழைப்புக்கேற்ற ஊதியம். மகவுகளுக்கு தரமான கல்வி. பொறுப்பும், காருண்யமும், திறனும் கூடிய மருத்துவம். ஒளிமயமான வருங்காலத்தை அளிக்கக்கூடிய தனிமனிதனின் ஆற்றலும், சமூகத்தின் பரந்த மனப்பான்மையும், சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனைகளும், தடம் மாறாத அரசும்.

    நாம் நிதர்சனமாக அன்றாடம் கண்டும் காணாது விடுபவை: சுண்ணாம்பு காளவாயிலும், செங்கள் சூளையிலும் கொத்தடிமைகள். முறுக்கு பிழிவது சிறார்கள். தேநீர் ஆற்றுவது சிறார்கள். ஆரம்பக்கல்வி அரசின் பொறுப்பு. இலவசம். அதைத் தட்டிப்பறித்தது அரசியல் சாஸனத்தின் உள்ளுறை குறைபாடு. தற்குறியாக ( எழுதப்படிக்கத்தெரியாதவர்களாக) இறந்தது பல ஏழை தலைமுறைகள். அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி அளிக்கப்பட்டது. அதை பிற்காலம் கல்வி தந்தைகள் சூறையாடியதற்கு யார் காரணம்? அக்காலம் பிரபலங்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் செல்வார்கள். தற்காலம், வீடு, மனை, வயற்காடு எல்லாவற்றையும் விற்றால் தான் ஏழைகள், காசை தட்டிப்பறித்து, அதன் பின்னர் பிரமாதமான சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில், நிவாரணம் நாட இயலும். இது எல்லாமே நமது சமுதாயம் அழுகிப்போகும் சின்னங்களே.

    பொது வாழ்வு என்றொரு துறை இருக்கிறது. பொது நலம் நாடுவோர்களின் தோணி, அது. மக்கள் யாவரும் அந்தத் துறையில் அனுபவம் பெறவேண்டும். தனது நேரம், செல்வம், உழைப்பு எல்லாவற்றிலிருந்தும் கடுகளவாவது பொது நலத்துக்கு உழைக்க வேண்டும். சாதாரணமாக, சராசரி மக்களுக்கும் பொதுநலசேவைக்கும் காத தூரம் என்பதை, சில நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டை அலக்கழித்த மழையும், வெள்ளமும், சகதியும் தகர்த்து விட்டது. சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் ஓடோடி முன்பின் அறியாதவர்களுக்கு உதவினார்கள். சாதிமதபேதம் முதலில் தகர்ந்தது. இளைய சமுதாயத்தின் முதிர்ந்த மனப்பான்மையை கண்கூடாகப்பார்த்தோம். தலை வணங்கினோம். யாவரும் சேவகனானோம். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற சொற்றொடர் தாரகமந்திரமானது.

    இனி ஒரு விதி செய்வோம்.
    பிறந்த குழந்தைக்கு, நாமே முன்னோடியாகத் திகழ்ந்து, பொதுநல சேவை பாடங்கள் நடத்தத் தொடங்குவோம். வளரும் சிறார்களுக்கு சிறிய சிறிய பொறுப்புகள் கொடுத்துப் பழக்குவோம்.

    -#-
    சித்திரத்துக்கு நன்றி: http://www.quickmeme.com/img/30/3000818e21952986f174bf51237dd650fa11b000adf99846bc2699b9a0113dbb.jpg

    Share
  • விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

    `இன்னம்பூரான்
    15 12 15

    innam-edited

    ஆராய்ச்சிமணி அடித்தக் கறவைப்பசுவுக்கும், வண்ணாத்தியிடம் ஜஹாங்கீர் துப்பாக்கி நீட்டியதும் வகுக்கப்பட்ட விதியல்ல; நீதிபோதனை.

    மின்னிதழ்களிலும், மின்குழுமங்களிலும் தற்காப்புக் கருதி நான் நீண்டகாலம் எழுதுவதில்லை.‘நாவினால் சுட்டவடு..’ என்று தெரியாமலா சொன்னார், வள்ளுவர் பெருந்தகை? மதிக்கப்படாவிடினும், மிதிபட வேண்டாம் அல்லவா! இது நிற்க.

    சிந்தனையும் சொல்லும் இணைந்து செயல்படுபவை. ஆங்கிலத்தில் algorithm என்ற சொல் கொடி கட்டிப்பறக்கிறது; சாதனை படைக்கிறது; அதற்கு’ வழிமுறை’ என்று தமிழ்ப் பொருள் கூறப்படுகிறது. என்னுடைய கணிப்பில் அது மேலான,புடம் போட்ட வழிமுறை. நான் மதிக்கும் algorithm: ‘விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன்.’ என்பதே. இன்று ‘மருத்துவத்தின் மூன்று வி (நீ)திகள்’ என்ற தலைப்பில் சித்தார்த் முக்கர்ஜீ என்ற மருத்துவர் எழுதிய கட்டுரை ஒன்றை படித்ததின் விளைவாக எழுகிறது, இந்தத் தொடர். நான் விதித்துக்கொண்ட விதியை மீறி, நீதி பேசுகிறது. குறைப்பிரசவம் ஆனாலும் ஆகலாம். அப்போது விட்டு விட வேண்டியது தான். விதி யாரை விட்டது? இதுவும் நிற்க.

    சென்னை வெள்ளத்தில் நகரே சிதிலம் அடைந்தது. தமிழ்நாடு முழுதும் சேதம் அடைந்தது. மனம் பதைத்து, பல தடங்கல்களை கடந்து, மூட்டைகளை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு டிசம்பர் 7 அன்று எடுத்து சென்றால், அத்தியாவசிய பொருள்கள் மிகுதியாக வந்தன; மிகுதியாகப் போயின. செல்வந்தர்கள் பால் பாக்கெட்டுக்குக் கையேந்தினர். ஏழை பாழை தாராளமாக் வழங்கினர். பேதமில்லாத உலகம். எண்பதைத் தாண்டிய முதியோர்களுடன் பள்ளி மாணவர்கள் இணைந்து செயலாற்றினர்; நம் வீட்டு சிறுவர்/சிறுமிகளோ, உலகின் பலபகுதிகளிலிருந்து whatsapp மாயா மச்சீந்திரா உபாயங்கள் மூலம் உடனக்கடி அபயம் அளித்து வந்தனர். Blue Cross நிறுவனத்தின் Dawn அவர்கள் அசகாய வேலை செய்து உயிர் மீட்டனர். மற்றும் பல மனிதநேய நிகழ்வுகள், உருக்கமான செய்திகள், எண்மெய்ப்பாடுகளும், வளைய வந்த மனித அபிமானங்களும், சுவபாவங்களும், பல பாடங்களைக் கற்பித்தன. மேற்படி செயல்பாடுகளில் ஒன்று கூட விதிக்கு உட்பட்டவை அன்று. அன்றாட இயல்பு வாழ்க்கையில் இவை இடம் பெற்றிருக்கப்போவதில்லை. அவை நீதிதேவதையின் வழிமுறை.

    மேல்தளத்து (அதாவது பாதுகாப்பாக இருந்த) மக்கள் ரூல் பேசினார்கள். அரசை கண்டித்தார்கள். ஆக்கிரமிப்புகளை பற்றியும், நீராதாரம் பற்றியும், ‘அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்’ என்று முடியா வழக்குகளை சகதியிலும், ஊடகங்களிலும், மின்/மின்னா குழுக்களிலும் பேசி வந்தனர். பிராவகத்து போராளிகளுக்கு இதெல்லாம் இரண்டாம் பக்ஷம். அவர்கள் விதியை மறந்தனர். நீதியை நாடினர்.

    வாழ்வியலில் நாம் சிரத்தையுடன் (பஹுகார்யமாக), அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு, பக்குவமான தீர்வுகளை நாடுகிறோம். வாகை சூட முடியவில்லை; பகை தான் புகைக்கிறது. சில உதாரணங்களுடன், இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.

    Lord Keynes said, ‘In the long run, we are all dead’. ஆம். நிரந்தரவாழ்க்கை யாருக்கும் கிடையாது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். நமது ஊர்களில் 99.99 % வீடுகளில் வாசற்படி தெருவை ஆக்கிரமித்து இருக்கும். நடைபாதைகள், சின்னச்சின்ன குருவிகளுடன் செத்துப்போயின. அரசு கட்டிடம் வாசலில் நடை பாதைக்கு முள்வேலி பாருங்கள்! இது குடிமகனின் செயலா! அரசின் கொடுமையா? ‘இன்று வீட்டுமனை விலை ஆகாயத்தைத் தொடுகிறது. ஏரிக்கரையில் ஒரு குட்டிப்பகுதியை கைப்பற்றி, குடிசை போட்டு, காரை வீடு; மாடி வீடு; பல தளங்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என்று, கேட்ட லஞ்சத்தைக்கொடுப்பது விதிக்கும் முரண்; நீதிக்கும் முரணாக விதியை உலுக்கிவிட்டேன்.’ என்பவர்களின் முதலையீடுகளை, ஏன் உயர் அதிகாரி செல்வி அமுதா இடிக்கமாட்டார்? நீரை வெளியேற்ற வேண்டி,அவசர கட்டத்தில் சில சில உப விதிகள் அடிபட்டுப்போயிருக்கலாம். ஆனால் நீதி நிலைத்து நின்றதே.

    லஞ்ச லாவண்யத்தின் தீமைகளை பற்றி எமது சிறிய சிந்தனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. வாய்ச்சொல் வீரர்களை பற்றியும் பேச்சு எழுந்தது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அநீதி; விதிக்கு முரண். இந்தியாவின் முதல் லஞ்சஒழிப்புச் சட்டத்தில் லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை உண்டு. ஆனால், வழிமுறை அவ்வாறு இல்லையே. இந்தியா முழுதும் நாம் நாட்தோறும் கண்ணாரக்காண்பது கோடிக்கணக்கான லஞ்சம், ஊழல், சால்ஜாப்பு, அரசியல் வாதிகளில் பலரின் தீவினைகள். இந்தப்பின்னணியில் ஏரி ஏன் உடையாது? நதி ஏன் பெருக்கெடுக்காது? கடல் ஏன் கொந்தளிக்காது? வீடு ஏன் முழுகாது? உயிர் ஏன் பிரியாது? ஒவ்வொரு கட்டுமானத்திலும் – ஏரிக்கரை, தூர் வாருதல், ரோடு, கட்டிடங்கள், பாலங்கள், அன்றாட பராமரிப்பு – இவைகளில் உள்ள குறைகள், ‘ஈயத்தைப் பார்த்து இளைத்ததாம் பித்தளை’ என்ற வகையில் இன்று சந்தி சிரிக்கின்றன. இவைகளெல்லாம் விதிகளின் கீழ்படிதலாக, நீதியை கற்பழித்துக் கட்டப்பட்டனவையே. சாணக்ய நீதிப்படி உரியகாலத்தில் விதி மீது சதி செய்தவர்களை கடுமையாக தண்டிக்காதவர்களையும் தண்டிக்க வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதை உரத்த குரல் எழுப்பி கண்டிப்பவர்களும், அரசு உயர் அதிகாரியின் விளக்கங்களும் விதியை பற்றி விளாசலாம். நீதி எங்கே போயிற்று? முதற்கண்ணாக, தமிழ்நாடு சென்னையை விட பெரியது. தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது என்ன? கடலூர் மூழ்க, செம்பரம்பாக்கம் என் செய்தது?

    இரண்டாவதாக, நமக்கு பரந்த மனப்பான்மை வேண்டும். விசாலமான நோக்கு வேண்டும். இரக்க சுபாவம் வேண்டும். மருத்துவத்தில் முதலுதவி கொடுப்பது வரிசை விதியை விலக்கும் நீதி. அது போல ஏழைபாழைகளுக்கு முதலில் வாழ்வாதாரம் கொடுத்து எல்லாருக்கும் உடனடி உதவி கொடுக்க வேண்டும். நம்மால் ஏன் ராணுவம் போல் இயங்கவில்லை என்பதை பரிசீலனை செய்யவேண்டும். வெட்கக்கேடு! பரிதவிக்கும் மக்களை விட்டு, மேட்டுக்குடி வீஐபிகளை காப்பாற்ற சொன்னார்கள், அதிகார மையங்கள் என்று ராணுவம் கூறும் போது, நாக்கிப்பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது.

    எந்த எந்த அளவில் எந்த எந்த அன்றாட அரசு ஆணைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பது ஒரு பூடகமான விஷயம். இலைமறைவு; காய் மறைவு. விதியை மீறும் நீதி அழிப்பு. காங்கிரஸ் ஆட்சியிலேயே சென்னையில் வீடுகளை வாடகைக்கு விடும் தீர்மானங்களை அமைச்சர்கள் கையில். பிற்காலம் அது புழக்கடைக்கு வந்தது. எல்லாத்துறைகளிலும் அன்றாட தலையீடுகள் தான் பேயாட்டம் ஆடின. காவலராயினும், ஆசிரியராயினும், குமாஸ்தாவாயினும், பொறியாளராயினும், அந்தந்தத்துறைத்தலைவர்கள் கையாலாகதவர்களாயினர். உயர் அதிகாரிகள் கொள்கை வகுப்பதும், அதற்கு நேரமும், அடிப்படை ஞானமும் இல்லாத நிழல் மனிதர்களும், அவர்களின் கூடாநட்பு கொண்ட அமைச்சர்களும், அன்றாட வரத்துப்போக்குக்களில் விதி மீறி, நீதி தவிர்த்து நடமாடும் காலம் பழுத்தது. அணைகள் பாதுகாப்பையும், அரவணைப்பையும் காலங்காலமாக அந்தந்தத்தலத்தில் பொறுப்பும், பதவியும் வகிக்கும் உதவி பொறியாளர் தான் செய்கிறார் என்பதை தலைமை அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்.

    இனி ஒரு விதியும் அதை வழிமுறை நடாத்தும் நீதியையும் கொணருவோம். மாநிலம் முழுதும் எல்லா பிராந்தியங்களும், நீர்நிலைகளும் பற்றிய முழு உண்மை நிலை, எந்த விதமான கலப்பில்லாமல், அசல் புள்ளி விவரங்களுடன், மெத்த விசாரணையின் அறிக்கையுடன் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். அதற்கு முன்னால், பல விதங்களில் தண்டோரோ போட்டு மக்களின், அதிகாரிகளின், ஆர்வலர்களின் சாக்ஷியம் பெறப்படவேண்டும். அது நேர்காணலில் நடக்க வேண்டும். ஒவ்வொரு ஆவணத்தின் வரலாறு வேண்டும். Logging என்ற உடனடி தகவல் பதிவு செய்யப்பட்டதா என்ற விஷயத்துக்கு சத்தியபிரமாணமும் வேண்டும். மற்றபடி சான்றும் வேண்டும்.
    என்ன நிவாரணம் கிடைக்கிறதோ அதை விட, விதி வகுக்கும் திறனும், நீதி வழங்கும் மூதறிஞர்களும் கிடைப்பது தான் தேசத்தின் விதியை நிர்னயிக்கும்.

    நீதியில்லையேல் பீதி: நீதியில்லையேல் வீதி; நீதியில்லையேல் மீதியில்லை.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:https://arthamullainiyamanam.files.wordpress.com/2013/05/074sattam.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே: 23

    இன்னம்பூரான்.

    BL27_snail_jpg_2257904f

    சமுதாயத்தில் இயல்பாகவே கடமையாற்றலும், கடமை தவறினால், ஏற்புடைய நிவாரணமும், தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் இருக்கவேண்டும். நிவாரணம் உரிய நேரத்தில், சிக்கலும், பிரச்சினையும் இல்லாமல் கிடைக்கவேண்டும். இன்றைய நடைமுறையில் தவறு செய்தவர்கள் வீண்வாதம் செய்வதை, அதுவும் கோர்ட்டார் முன்னிலையில், அடிக்கடி காண்கிறோம். சான்றாக, போபால் நச்சு வாயு, கும்பகோணம் பள்ளி தீ விபத்து, டில்லி உபஹார் சினிமா தியேட்டர் இடிபாடு ஆகியவற்றைக் கூறலாம். என்ன தான் சால்ஜாப்பு சொல்லி தப்பிக்கப் பார்த்தாலும், குற்றம் குற்றமே. ஆனாலும் அளவுகடந்த தாமதங்களுக்குப் பிறகு தீர்வுகள் கிடைப்பதால், நாம் பழங்கஞ்சி குடிப்போர் கழக உறுப்பினர் ஆகிவிடுகிறோம்.

    ஒரு பார்வை:
    சென்னை எழும்பூர் பகுதியில் இருக்கும் தொன்மையான பெண்பாலாருக்கும், குழவிகளுக்கும் ஆன ஆஸ்பத்திரி பிரபலமானது. அதற்கு நல்ல பெயருண்டு. ஆனால், அங்கு ஒரு மாபெரும் தவறு நடந்துவிட்டது, 1996ல். அவ்வருடம் ஆகஸ்டு மாதம் கிருஷ்ணகுமார் தம்பதிக்கு பத்து மாதங்கள் பொறுத்திருக்காமல், பத்து வாரம் முன்னமே, குழந்தை பிறந்து விட்டது. அத்தகைய குழவிகளுக்குக் கண்பார்வை பாதிப்பு இருக்கக்கூடும் என்று பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்து, உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்பதை டாக்டர்கள் அவர்களிடம் சொல்லவில்லை.

    விளைவு: அந்தப் பெண்குழந்தை ஒரு வருடத்துக்குள் கண்பார்வை இழந்தது. பெற்றோர்களும் அலையாத இடம் இல்லை. அமெரிக்கா போய் செய்யாத அறுவை சிகிச்சைகள் இல்லை. பயன் யாதும் இல்லை.

    1998லியே அந்தப் பெண்ணின் தந்தை தேசீய நுகர்வோர் மையத்தில் கேட்டது நியாயமான நிவாரணம் (ரூபாய் 20 லட்சம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த வகையில் + 30 லட்சம் வருங்கால மருத்துவ செலவுக்காக + 50 லட்சம், பட்ட கஷ்டம், மனவலி, உடல் வேதனை ஆகியவற்றுக்காக) மொத்தம் ஒரு கோடி. உலக பிரபலம் பெற்ற அகில இந்திய மருத்துவ மையம், எழும்பூர் ஆஸ்பத்திரி கடமை தவறி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டதை உறுதிப் படுத்திய பிறகும், தேசீய நுகர்வோர் மையம் மொத்தமாக ரூ. 5 லட்சம் நிவாரணம் அளித்தது எந்த விதத்திலும் உகந்ததாகப் படவில்லை. எதிர் தரப்பு தமிழக அரசு. அவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கலாமா?

    தந்தை உச்சநீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்தார். அவருடைய வழக்கறிஞர் நிக்கில் நய்யார் அவர்கள் தங்கள் கேட்ட நிவாரணத்தைத் தொகையின் நியாயத்தை எடுத்துக்கூற, உச்ச நீதி மன்றம் ரூ.1.80 கோடி நிவாரணம் கொடுக்கவேண்டும் என்று தீர்வு அளித்தது, ஜூன் 24, 2015 அன்று.

    அதற்குள் அந்தப் பெண்ணுக்கு வயது 18 ஆகிவிட்டது. அவள் கண்ணொளி இழந்த ஒரு யுவதி.

    இனி ஒரு விதி செய்வோம்: நீதிமன்றங்களை மக்கள் மிகவும் மதிப்பதால், அவை தீர்வு அளிக்கும்போது, தாமதம் யாரால் ஏன் ஏற்பட்டது என்ற தகவலை ஒரு பட்டியலாக தரவேண்டும்.

    சித்திரத்துக்கு நன்றி: http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/02257/BL27_snail_jpg_2257904f.jpg

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி!

    இன்னம்பூரான்.

     

    ‘வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி…!’
    -பளிக்கறை புக்க காதை: 112-121: மணிமேகலை

     

    மணிமேகலை காப்பியத்தில் ‘செயல் திறனுடையவனே! கேட்பாயாக’ என்று விளித்த சொற்றொடரே, நோயற்ற வாழ்வை மக்களே அமைத்து கொள்ள முடியும் என்பதை உணர்த்த, பொருத்தமான தலைப்பு. அசகாய சூரர்கள் நமது மக்கள், துயில் கலைந்துவிட்டால்!

    அன்றாட வாழ்க்கையில் நாம் தூய்மையுடன் இயங்கினால் நோய்கள் பல அணுகா. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பற்பல கிருமிகளை அண்ட விடாது. கை கால் கழுவுவதின் முக்கியத்துவத்தை செம்மல்வைஸ் 1847 லேயே நிறுவி விட்டார். இல்லம் தோறும் தங்கு தடையில்லாமல் கொழிக்கும் குப்பையையும், கூளத்தையும் அகற்றி சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. மகட்பேறு காலத்து கவனிப்பு, மழலைகளுக்கு தடுப்பூசி, வளரும் பருவத்திலிருந்து உடற்பயிற்சி, உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும் கவனம், நடை, உடை, பாவனைகளில் பண்பு, லாகிரி விலக்கு, பாவேந்தரின் ‘குடும்ப விளக்கு’ இல்லறம், முதியோர் சேவை ஆகியவற்றை கற்றுத்தரக்கூடிய விழிப்புணர்ச்சி, ‘வரப்புயர…குடி உயர்வது’ போல, வாழ்க்கைப் பயணத்தின் தரமுயர்த்தும். பட்டி, தொட்டி தோறும், மக்களை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். விழிப்புணர்ச்சி, திருமூலர் ‘உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்’ என்று அருளிய ஆலயத்தின், அடித்தளம்.

    சுகாதாரத்தை பள்ளிகளில் ஆசிரியர்கள் அனுபவக்கூறாக, சுயநடத்தை மூலம், படிப்படியாக பயிற்சியுடன் கற்றுக்கொடுக்கவேண்டும். காந்தீயத்தின் அடிப்படையில் கழிவறை சுத்தம் செய்வது முதல் உறுப்பு தானம் வரை கற்பிக்கப்படவேண்டும். விடலைப்பருவம் வருமுன் மென்மையான பாலியல் பாதுகாப்புப்பாடங்களை பெற்றோர் உதவியுடன் அளிப்பது போன்ற ‘வருமுன் காப்போன்’ செயல்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். அறியாமையினாலும், அசட்டையினாலும், புற்று நோய், நீரழிவு, இதய பாதிப்புகள், இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மக்கள் மிகவும் தாமதித்து வருவதால், உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. பசுமரத்தாணி போல் மனதில் படியும் முறையில், எச்சரிக்கைகளை சித்தரித்து விளக்குவது எளிது. சான்றாக,எதிராஜ் கல்லூரியும் மதராஸ் மருத்துவ கல்லூரியும் இணைந்து, காய்ச்சிய எண்ணையில் திரும்பத்திரும்ப சமைப்பதின் அபாயத்தை நிரூபித்துள்ளன. உள்ளூர் ஆர்வலர்கள் மூலம் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து, ஆலோசனை வழங்கி, சிறுநீரகம் திறன் இழப்பத்தை தடுத்தாட் கொள்ளமுடியும் என்பதை சென்னைக்கு அருகே நிரூபித்ததை, ‘நேச்சர்’ என்ற பிரபல மருத்துவ இதழ் பாராட்டியிருக்கிறது. உடனடியாக, திறந்த மனதுடன், இத்தகைய பணிகளுக்கு அரசும் வடம் பிடித்தால், கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்; செலவு கணிசமாகக் குறையும். மக்களே நோயற்ற வாழ்வை அமைத்துக்கொள்வார்கள். வருங்கால சந்ததிகள் நீடூழி வாழ்வார்கள். மருத்துவ படிப்பில் சமுதாய நலன் பொருட்டு இயங்கும் ‘வருமுன் காப்போன்’ துறை மேலும் பிரகாசப்படுத்தப்படவேண்டும்.

    சித்தம், யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் குறை காணத் தேவையில்லை. அவற்றின் மேன்மையை ஆய்வு மூலம் கண்டறிவது, அரசின் கடமை. எனினும்,பாமரர்களுக்கு உகந்த நிவாரணம் பற்றியும், போலி வைத்தியர்களை தவிர்க்கவும் ஆலோசனை தரும் மையங்கள் பெருகவேண்டும். உதாரணமாக, நீரழிவு நோய்க்கு பூரண நிவாரணம் எந்த முறையிலும் கிடையாது. ஆராய்ச்சி மூலம் அலோபதி அந்த வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. புற்று நோய் தீவிரமானது; உயிர் கொல்லி. இன்றே அறுவை சிகிச்சை அவசரம் என்ற நிலையில் மற்ற முறைகள் உதவா. தற்காலம், இந்த சிக்கல்களை அவிழ்க்க முடியாமல் பாமரன் திண்டாடுகிறான்; இறந்தும் போகிறான், சொத்துப்பத்துக்களை இழந்தபின். பணம் பறிக்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் பெருகி விட்டன. வைத்தியம் சம்பந்தமான காப்புரிமை திட்டங்களை தணிக்கை செய்யும் அளவுக்கு மக்கள் மன்றங்கள் உருவாக வேண்டும்.

    அறுவை சிகிச்சைகள் மிகவும் முன்னேறிவிட்டன. வயறு அதிசயங்கள் நிறைந்த ஆலயம் என்றொரு மருத்துவ பழமொழி. தற்காலம், செரிமான வியாதிகள் பொருட்டு இயங்கும் அறுவை சிகிச்சைத்துறை அவற்றை விட அதிசய நிவாரணங்கள் தருகிறது. மற்ற அவயவங்கள் பொருட்டும் அத்தகைய முன்னேற்றம் காண்கிறோம். அரசு நடத்தும் ஆஸ்பத்திரிகளில் ஏழைபாழைகளுக்கு இலவசமாகவே நிவாரணம் கிடைக்கிறது. கடினமான, சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சைகள் அன்றாடம், வாகை சூடி, நிறைவேறுகின்றன. இவற்றை பன்மடங்கு பெருக்குவதும், நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் இவை எளிதில் கிடைப்பதும் அவசரத்தேவை. மக்கள் முடிந்தவரை நற்பெயர் பெற்ற அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்வது சாலத்தகும்.தொலைநோக்கில் பார்த்தால், இது தான் சிக்கனம், மக்கள் சேவை, மருத்துவ சாத்திரத்தின் இலக்கு.

    முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் மருத்துவத்தின் தேவை ஏறி வருகிறது. பெற்றெடுத்த செல்வங்களும், சமுதாயமும், அரசும், முதியோர்களுக்காக, இணைந்து பயணிப்பது உசிதம். கவனத்துடன் செயல் பட்டால், குறைந்த செலவில் அதிக பயன் காண முடியும். உளவியல் இங்கு கை கொடுக்கும். அன்பு அருமருந்தாக நிவாரணம் தரும்.

    இறந்தவர்களின் உறுப்புக்கள் மற்றவர்கள் உடலில் வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு இறவாவரம். தமிழகத்தில் நடக்கும் உறுப்பு தானம் பற்றிய அதிசய செய்திகளே விழிப்புணர்ச்சியின் அடித்தளம். முடிவாக கூறப்போனால், உறுப்புகளுக்கு ஒரு மறுவாழ்வு திண்ணம். அதைப்பற்றி இடை விடாத பிரசாரமும், சட்டத்திருத்தங்களும் தேவை.

    நோயற்ற வாழ்வை மக்களே அமைத்து கொள்ள முடியும் என்பதை விளக்க ஒரு நூலே தேவை. எனவே, இந்த கட்டுரை ரத்னசுருக்கமான ஒரு அறிமுகமே. [497]

    ஆசிரியர் குறிப்பு:
    சென்னை மாநகரத்தின் பழம்பெருமை வாய்ந்த மருத்துவ மையம்: General Hospital,Madras & Madras Medical College. நானூறு வருடங்களுக்கு மேலான பாரம்பரியம். அங்குள்ள செரிமான வியாதிகளுக்கு அறுவை மூலம் தீர்வு காணும் துறை சுதந்திரதினம் பொருட்டு, மக்களிடையே குறுகிய காலகட்டத்துக்குள் ஒரு கட்டுரை போட்டி (500 சொற்களுக்குள்) நடத்துவதாகவும், ஜூலை 31, 2015 கெடு என்றும் அறிவித்தார்கள். நான் அறிவிப்பு வந்த அன்றே கட்டுரையை அனுப்பிவிட்டு, ஆகஸ்ட் 2 அன்று வெளியூர் சென்று விட்டேன். இதை மறந்தும் விட்டேன். ஆகஸ்ட் 14 மாலை ஒரு குறும் தகவல். உங்கள் கட்டுரைக்கான மெடலை நாளை வந்து பெற்றுக்கொள்ளவும். உம்மை சிறப்பிப்போம். [‘எல்லாரும் காத்திருப்பார்கள், உடனே வர’ என்று நினைத்திருப்பார்கள் போல!] நான் போக இயலவில்லை. என் தம்பி மூலமாக கொடுத்து அனுப்பினார்கள்.

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

    Share
  • எங்கே தொலைந்து போனாள், வீரி?

    — இன்னம்பூரான்.

    6358ae93-440e-4e20-a6ef-0c4b8e14c327_S_secvpfஎன்றுமில்லாதத் திருநாளாக, இன்று பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன்: ’36 வயதினிலே’. பெண்ணினம் படும் அவத்தைகளை மென்மையாகவும், அழுத்தம்திருத்தமாகவும் நடித்துக்காட்டினார், நடிகர் ஜோதிகா. நினைவுகள் நம்மைக் கேட்டுக்கொண்டு வந்து போவது இல்லை. அவற்றின் போக்கே அலாதி. இறைவனைத் துதிக்கும்போது காதலி தோன்றுவாள்; அவளுடன் அன்யோன்யமாக இருக்கும்போது, என்றோ நம்மிடம் வளர்ந்த பூனைக்குட்டி நினைவில் தோன்றுவான். அந்த மாதிரி, ஜோதிகாவின் நடிப்புத்திறனால், எனக்கு வீரியை பற்றிய கவலை பற்றிக்கொண்டது.

    கதாபாத்திரங்கள் எல்லாம் சுத்த கற்பனையே என்று சத்தியப்பிரமாணம் செய்து விட்டுத்தான் உண்மையைப் பாயாய் சுருட்டிப் பதிவு செய்வார்கள். விமர்சனம் செய்பவரும், தன் பங்குக்கு, ‘இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி’ என்று ஒத்துப்பாடுவார். வீரியின் பெயரை கூட, நான் மாற்றவில்லை. மாற்றினால், அது கதையின் வழுவாக அமையும். அவளுக்குத் தமிழ் தெரியாது என்றாலும், ‘உள்ளது உள்ளபடி’ ஊரையும், மற்ற விவரங்களையும் கொடுக்க நான் தயாராக இல்லை. அவள் பழங்குடி இனம் தான். லம்பாடி என்று பெயர். அதற்காக நான் வம்படிக்கப்போவதில்லை. சொல்வது எல்லாம் நிஜம்; ஆங்காங்கே பொருத்தமான மிகையும், கற்பனையும் துணை புரியும்.

    நாங்கள் வடநாட்டின் ஒரு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுப் போனபோது, ஏற்கனவே நண்பராக இருந்த முன்னவரின் வீட்டிலேயே நாங்கள் வசிக்க நேரிட்டது. பல அன்றாட அலுவல்களைப் பற்றி பெண்ணரசிகள் பேசிக்கொண்டனர். அதன் பயனாக, கதவோரம் நின்று கொண்டிருந்த பேரழகி வீரி அவர்களின் சிபாரிசின் பேரில் எங்களுக்கும் ஏற்பாடு ஆனது. சில எச்சரிக்கைகளும் தமிழில் கொடுக்கப்பட்டன. அன்றிலிருந்து, வீரி ராஜ்யம் தான். சூது வாது அறியாத 16 வயது பதுமை போன்ற பெண். சிவப்புத்தோலுக்கு மதிப்பு கொடுக்கும் சமுதாயத்தில், அவளுடைய மாநிறம் தூக்கி அடித்தது. புயல் மாதிரி தான் உள்ளே நுழைவாள். கதவைத் திறந்து வைத்திருப்போம். இல்லையெனில் மணி அடித்து கலாட்டா செய்து விடுவாள். ஊரைக் கூட்டி விடுவாள். எதிர் வீடு உள்ளூர் கலெக்டரது. அவர் வீட்டில் மணி அடித்து விட்டு, எங்கள் திறந்த வீட்டில், ‘கை வீசம்மா! கை வீசம்மா’ என்று அட்டகாசமாக நுழைந்து விடுவாள். அந்த மாநிலத்தில் வீட்டுக்குக் கடைநிலை ஊழியர் கிடையாது. அவரே கதவை திறுந்து வந்து, ‘ஓ! வீரியா?’ என்று சிரித்து விட்டுப் போய்விடுவார். யாருமே அவளிடம் கடுஞ்சொல் சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவள் ஒரு குழந்தை.

    எங்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் வியர்த்தமாயின. அறைகளில் கண நேரத்தில் கூட்டி, பெருக்கி, மெழுகும் வீரி, குளியல் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாள். அது முடிந்த பின் ஜொலிப்பாள்; சோப்பு கணிசமாகக் கரைந்திருக்கும். பவுடர் டப்பா காலி. கூந்தல் தைலம் காலி. வஸந்தா, அவளுக்கு வேண்டிய ஒப்பனைச் சாமான்கள் வாங்கித்தருவதாகவும், எங்கள் பிரத்தியேக சோப்பு வகையறாவை விட்டு வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். எங்கிருந்து கிடைத்ததோ, அவளே பட்டியல் கொடுத்தாள்: பியர்ஸ் க்ளிசரைன் சோப்பு, பாண்ட்ஸ் பவுடர், ஹிமாலயா ஸ்னோ, குஸுமாஞ்சலி என்ற கூந்தல் எண்ணைய். எனக்கு சம்பளம் போதாது என்பதால், நாங்கள் அந்த உயர்தர அலங்கார பொருள்களுக்கு போகவில்லை என்றாலும், அவளுக்கு வாங்கிக்கொடுத்தோம், லாக்டோ காலமைன் உள்பட. நோ யூஸ். அவள் அவற்றுடன் மற்றதையும் உபயோகிப்பாள்; பேசிப்பயன் இல்லை. ஆனால், அவள் மாதிரி வஸந்தாவின் அடர்ந்த கூந்தலுக்கு அகில் புகை சாற்ற, வீரிக்கு இணை வீரியே. சமையல் அறை சூபர்விஷன் செய்யும்போது இரண்டு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, ‘நன்றாயிருக்கிறது’ என்று சான்றிதழ் கொடுப்பாள். ஆகமொத்தம் வீட்டுக்குச் செல்லப்பெண்.

    ஒரு நாள் தனக்கு கல்யாணம் என்று சொன்னாள். ஒரு நோஞ்சல் பையனை கொண்டு வந்து, அவன் தான் முறை மாப்பிள்ளை என்றாள். ஏதோ சொல்லி விட்டு, எங்கள் எதிரிலேயே ஒரு ஷொட்டு வாங்கிக்கொண்டான். நாங்கள் திருமணத்துக்கு சீர் எடுத்துச் சென்றிருந்தோம். சிறிது நேரம் தான் இருக்க முடிந்தது. ஒரே டான்ஸ். கொம்மாளம். வேலையை விட்டு விட்டாள். குலத்தொழிலாகிய கிருஷ்ணன், ராதை வகையறா களிமண் பொம்மைகளைச் செய்து தென்னாட்டில் கூவிக்கூவி விற்கப்போவதாகச் சொன்னாள். பல வருடங்கள் கடந்தன. ஒரு நாள் பல்லாவரம் பக்கம் காரில் சென்ற போது வீரி சாயலில் ஒரு பெண்ணைப்பார்த்து, வஸந்தா திரும்பவந்து கவனித்து, உறுதி செய்து கொண்டபின், இறங்கி குசலம் விசாரித்தோம். மூன்று குழந்தைகள்; வாடிய முகம்; மெலிந்து போன உடல். களைப்பு. ஒரு பாடாக, அருகாமையில் இருக்கும் அவர்கள் கூட்டத்தில் இவர்களது பொம்மைகளை ஒப்படைத்து விட்டு, அந்தக் குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்தோம். முசுடாகவே இருந்த அவள் புருஷன் பீடி பிடிக்க வெளியில் போய்விட்டான். குழந்தைகள் புரண்டு விளையாடின. ஏழை வீட்டுக் குழந்தைகளுக்கு, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தெரியும் போலிருக்கிறது!

    பெருங்குரல் எடுத்து அழுதாள். கணவன் சோற்றுக்குப் பணம் கொடுப்பதில்லை, குடிகாரன், அடிப்பவன் என்றாள். அவனுக்கு மேலும் இரு தாரங்களாம். பஞ்சாயத்தில் விவாகரத்து கேட்டாள், லம்பாடி இன வழக்கப்படி. அந்தக் கட்டப்பஞ்சாயத்து மறுத்து விட்டதாம். மேலும் பல இன்னல்கள் பற்றிச் சொல்லி தேம்பினாள். அதை உங்களிடம் சொல்லமாட்டேன். ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து விட்டு, அவர்களைக் கொண்டு போய் விட்டு வந்தாலும், நாங்கள் ஆவன செய்யவில்லை என்ற சோகம் எங்களை வீட்டு நீங்கவில்லை.

    எங்கே தொலைந்து போனாள், வீரி?

    சித்திரத்துக்கு நன்றி: http://mmimages.maalaimalar.com/Articles/2012/Dec/6358ae93-440e-4e20-a6ef-0c4b8e14c327_S_secvpf.gif

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • “பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!

    — இன்னம்பூரான்.

    kamarajar coin

    பாரத ரத்னா கே.காமராஜ்

    காமராசர் பாமரனின் பிம்பம். பிரதிபிம்பம் அன்று. மக்கள் என்ற கடலோடு கலந்து உறவாடிய தலைமாந்தன். மண் வாசனை பூமியில் ஊன்றிய கால்களை அவர் அகற்றியதும் இல்லை; ஆகாயகோட்டை கட்டியதும் இல்லை. அதனால், பாமரமக்களின் வாழ்வாதாரம் அவரது இதயகமலத்தில். அவர் முதல்வராக இருந்த போது, கலோனிய அரசின் இரும்புக்கோட்டை எனப்படும் ஐ.சி.எஸ் அதிகாரிகள் உயர்பதவிகளில் இருந்தார்கள். படிக்காத மேதை என்று தவறாக சுட்டிக்காட்டப்பட்ட முதல்வரிடம் அவர்கள் மிகுந்த மரியாதையுடன் பழகினார்கள். அதன் பின்னணியை ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி கூறியதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    கிராமங்களுக்கு மின் வசதி கொடுக்கும் திட்டத்தின் படி அந்தந்த ஜில்லா (மாவட்டம்) கலைக்டர்களிடமிருந்து நான்கு கிராமங்களை பற்றி பரிந்துரை வரவேண்டும். இது சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை கூடியபோது ஒரே ஒரு கலைக்டரிடமிருந்து பரிந்துரை வரவில்லை. முதல்வருக்கு திடீரென்று அசாத்தியமான சினம் வருவது உண்டு, நற்காரியங்களுக்கு யாராவது முட்டுக்கட்டை போட்டால். அதனால் அமைச்சரவையில் ஒரு பதட்டம். நிதானமாக ‘அய்யா’ அவர்கள் (அவரது இந்த அடையாளம் தான் புழக்கத்தில் இருந்தது) அந்த ஜில்லாவின் நான்கு கிராமங்களின் பெயரை பட்டியலில் சேர்க்க சொல்லிவிட்டு, அடுத்த திட்டத்துக்கு போய்விட்டார். நிர்வாகப்புலி என்ற புகழ் வாய்ந்த அந்த அதிகாரி, “மக்கள் தொகை/வறுமை/வேளாண்மை தேவை/கல்வி/மின் இணைப்பு சாத்தியம்/ காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று எப்படி பார்த்தாலும் இத்தகைய தேர்வை எந்த கலைக்டரும் செய்திருக்கமுடியாது” என்றபோது, குழுமியிருந்த அதிகாரவர்க்கம் மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்ந்தது. அய்யா அவர்களின் காலடி படாத கிராமமே கிடையாது எனலாம். தமிழ் நாட்டின் புவியியல் பாடம் எடுக்க அவருக்கு இணை யாரும் இல்லை; இது அய்யாவே சொன்னது. பாரத மிகுமின் நிறுவனத்துக்குத் திருவெறும்பூரை பரிந்துரைத்தவர், அய்யாவே. மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்த்து கற்றாரை காமுற்றவர் அல்லவா! ஒளவை பாட்டி அகமகிழ்வாள்.

    அதே நிர்வாகத்திறனின் மறுபக்கம்: 1954ல் முதல்வரான அய்யா அப்போது சட்டமன்றத்தில் அங்கத்தினர் அல்ல. பிற்காலத்து மாஜி பிரதமரை போல, மேல் மன்றத்தில் இடம் பெற்று இயங்க மறுத்ததே, மக்களாட்சிக்கு அவர் கொடுத்த மரியாதை. குடியாத்தத்தில் இடை தேர்தல்; கம்யூனிஸ்ட் போட்டி. இருபக்கமும் தீவிர பிரச்சாரம். ஆனால், வாக்காளர் நியாயமாக கேட்ட மேம்பாலம் பற்றி வாக்குறுதி அளிக்க அய்யா மறுத்து விட்டார். அவருடைய விதுரநீதி: “நியாயமே ஆயினும், என் வாக்குறுதிக்கு இணையாக எதிர்கட்சி தோழர் கோதண்டம் வாக்குறுதி கொடுக்க முடியாது. நான் அந்த அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கில்லை.” எட்டே அமைச்சர்கள் இருந்த அவரது அமைச்சரவையில் நால்வர், இவருடைய அலைவரிசையில் இல்லை என்றாலும், தகுதிக்கு மதிப்பு கொடுத்தார். இதை எல்லாம் எந்த பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறார்கள்?

    ராஜாஜிக்கும் காமராசருக்கும் கருத்து வேற்றுமை நிலவியது என்றாலும், நகராட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் கண்ணியம் தான் அடித்தளம். இருவரும் சிபாரிசு செய்யமாட்டார்கள். ஒரு நல்வழிப்பாதையிலிருந்து மற்றொரு நல்வழிப்பாதைக்கு குறுக்கு வழியில் செல்லமாட்டார்கள். இருவரும் சுற்றத்தை அண்ட விடமாட்டார்கள். சராசரி மனிதர்களோடு அவர்கள் இருவரும் பழகும் விதம் அலாதி. ராஜாஜி சென்னை வரும்போது, விமான நிலையத்தில் வரிசையாக பலர் நிற்பார்கள். ஒருவரிடன் மகளின் திருமணத்தை பற்றியும், மற்றொருவரிடம் மகனுக்குக் கிடைத்த வேலை பற்றியும், மற்றொருவரிடம் நாற்று நட்டச்சா என்றும் கேட்பார். எல்லாருக்கும் தன்னை பற்றி மட்டுமே மூதறிஞர் நினைக்கிறார் என்று தோன்றும். அதே மாதிரி பெருந்தலைவர் காமராசர் எல்லாரையும் நினைவில் வைத்துக்கொண்டு, அவரவருக்கு இதமாக பேசுவார். ஆயுள் முழுதும் முருக தனுஷ்கோடி போன்ற அன்யோன்ய நட்புகள் சில.

    அவருடைய தமிழ், கறார் கலந்த கொஞ்சும் தமிழ்; ஒரு ‘ரசாயனக்கலவை’ எனலாம். அதனால், அதிகார மையங்களில், அய்யா சொல்வதை எல்லாரும் கவனமாகக் கேட்பார்கள். ‘பார்க்கலாம்’ என்ற சொல் காமராசருடன் ஐக்யமாகி விட்டது. அது அவருடைய நிதானத்தையும், சிந்தித்து செயல் படுவதை சுட்டுகிறதே தவிர, அங்கு எள்ளலுக்கு இடம் கிடையாது. அய்யா அவர்களின் மேலாண்மையையும், அரசியல் அணுகுமுறையையும், நிர்வாகத் திறனையும், நாட்டுப்பற்றையும், கொள்கை என்ற அசையா நிலையையும், மக்கள் தொண்டையும், தொலை நோக்கையும், விருதுப்பட்டியும் (பின்னர் தான் விருதுநகர் என்ற விலாசம்!) அறியும்; தமிழகமும் அறியும்; இந்தியா முழுதும் அறியும். ‘மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன்’ ஒரு ரசவாத வித்தகர் தான். கர்மவீரர் காமராசரை போல் ஒருவரை ’…நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா…’ என்று கவிஞர் வாலி விசனத்துடன் வினவிய போது, ‘இல்லை! இல்லை!’ என்று எட்டுத் திக்குக்களிலிருந்தும் எதிரொலி கேட்டதாம்!

    அத்தகைய சான்றோனின் வரலாறு, வருங்கால சந்ததிக்கு வாழ்வியல் பாடமாக அமையும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. ‘காமாட்சி’ குலதெய்வம். அந்த பெயரை அவருக்கு சூட்டினார்கள். அன்னை சிவகாமிக்கு, அவர் ‘ராசா’. திரிபு: காமராசு. ஆறு வயதில் தந்தை மரணம்; பள்ளிப்படிப்புக்கு முழுக்கு. மாமனின் துணிக்கடையில் எடுபிடி வேலை. சிறுவயதிலேயே நாட்டுப்பற்று பற்றிக்கொண்டது. 16 வயதிலேயே அரசியல் பணி; ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்ரகம்; முதல் முறை கைது. நாடு விடுதலை பெறுவதை கண்டு களிக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட தீரர் சத்தியமூர்த்தி தான் இவரது அரசியல் ஆசான். அவரது ஆசை நிறைவேறவில்லை எனினும், ஆகஸ்ட் 15, 1947 அன்று அவரது இல்லத்தில் அய்யா அவர்கள் தேசீயக்கொடியை ஏற்றியபோது, அவரது ஆத்மா பங்கேற்றுக்கொண்டிருக்கும்.

    மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக பணி புரிந்த காமராசர், 1954ல் முதல் முறை பதவி ஏற்றுக்கொள்ளும் முன்னால், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் இல்லத்துக்குச் சென்று, அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து ஆசி பெற்ற பின் தான் அரசியல் பணியை துவக்கினார். அது அமோகமாக அமைந்தது என்பது குறிப்படத்தக்கது. மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதல்வராக மக்களால் அரியணையில் அமர்த்தப்பட்ட காமராசர், கட்சிப்பணியும், நாட்டுக்குத் தொண்டும் முக்கியம் என்று ஒரு நிலைப்பாடு எடுத்தது, பிரதமர் நேருவைத்தவிர மற்றவர்களுக்கு வியப்பு அளித்தது. முதல்வர் பதவியை உதறினார். அக்டோபர் 9, 1963 அன்று அகில இந்திய காங்கிரசின் தலைவர் ஆனார். அய்யா அவர்களின் தியாகமும், அரசியல் உத்தியும் பெரிதும் போற்றப்பட்டன.

    நேரு மறைந்தவுடன், பிரச்னைகள் அணுகாத வகையில், லால் பகதூர் சாஸ்திரி பிரதமராவதற்கும், அவருடைய அகால மரணத்திற்கு பிறகு இந்திரா காந்தி பிரதமராவதற்கும் வழி வகுத்தது, காமராசர் தான். என்றும் தன் கடமையிலிருந்து வழுவாத காமராசரின் கரும வீரத்துக்கு, இந்திரா காந்தியின் தன்னிச்சைப்போக்கு ஒரு அறை கூவலாக எழுந்தது. கட்சி உடைந்தது. இந்திரா காந்தியின் “அவசர நிலை” என்ற மின்வேலி அவருக்கு தாங்கொண்ணா கவலை கொடுத்தது. தேசபக்தர்களான ஜெயப்பிரகாஷ் நாரயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தினர். காந்தியடிகள் பிறந்த நாளன்று (அக்டோபர் 2, 1975) அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி அவரை மிகவும் வாட்டியது. அன்றே உயிர் துறந்தார். அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

    தியாகராய நகரின் திருமலைப்பிள்ளை வீதியில் அவர் வாடகைக்கு இருந்த தெருவிலே நானும் குடி இருந்ததால், அடிக்கடி காலையில் அவருடைய வீட்டை தாண்டித்தான் போகவேண்டும். மூன்று வயது சிறுவனான என் மகன், அவர் வீட்டு வாசலில் நின்று விடுவான்; வாசலில் நிற்கும் காவலரின் துப்பாக்கியை தொடவேண்டும்! அந்த நாளில் தடாலடி காவல் பட்டாளம் எல்லாம் கிடையாது. ஒருவர் மட்டும் தான். சில நாட்கள் அரிதாக, அய்யா அவர்கள் அந்தப்பக்கம் நின்று கொண்டிருப்பார். சிறுவனுடன் இரண்டு வார்த்தை பேசுவார். எனக்கு புளகாங்கிதம். பொது கட்டுரையில் சுய அனுபவங்களை மட்டுறுத்த நினைத்தேன். இல்லை. சொல்லத்தான் வேண்டும். அய்யா அவர்களை பற்றி எது சொல்ல நேரிட்டாலும், இன்றைய இளைய சமுதாயம் அவரது வாழ்க்கைக்குறிப்புகளின் ஒவ்வொரு வரியிலும் நல்வழி கற்கக்கூடும்.

    சான்றாக, மேலும் இரு செய்திகளை கூறலாம். விருதுநகரில் வசித்த அன்னைக்கு மாதம்தோறும் பணம் அனுப்புவார். அன்னை சிக்கனமாக வாழ்ந்தால் தான், அது போதுமானது. காமராசருக்கு உள்ளூரில் பக்தி கலந்த மரியாதை இருந்தது. அக்காலம் வீடுகளுக்கு குழாய்நீர் கொடுப்பது சொற்பம். தெருக்குழாய் தான் நீருக்கு ஆதாரம்; அஞ்சல் அதிகாரி வீட்டு வாசலில் தபால் பெட்டி வைப்பது போல, தெருக்குழாயை காமராசர் அன்னைக்கு வசதியாக, அருகில் வைத்துக்கொள்ள அவருடைய சகோதரிக்கு ஆசை; அதை அய்யா நிராகரித்து விட்டார். அதை விட முக்கிய அறிவுரை, ஒரு நிகழ்வு ரத்து செய்ததில். அரசியல் வாதிகளின் திருவிளையாடல்களுக்கு எல்லை கிடையாது. யாரோ ஒருவரின் தூண்டுதலால், பிரதமர் நேரு தமிழகத்தில் பயணம் செய்த போது, விருதுநகரில் காமராசரின் அன்னை அவருக்கு விருந்தோம்ப ஏற்பாடு நடந்தது, அவருக்கு தெரியாமல். நேருவும் சம்மதித்து விட்டார். இந்த சேதி அய்யாவுக்கு தாமதமாகத்தான் கிட்டியது. அன்னையிடம் கோபித்துக்கொண்டார். நிகழ்வை ரத்து செய்து, நேருவிடம் தெரிவித்து விட்டார். அதனால் ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை அவர் பொருட்படுத்தவேயில்லை. நேர்மை நீர்த்து விடக்கூடாது என்பதில் அவர் வாழ்நாள் முழுதும் திண்ணமாகவே இருந்தார்.

    பாருங்களேன். நான் அவரை கடைசியாக பார்த்தது, ராஜாஜியின் மரணத்தின் போது. ராஜாஜி ஹாலில் அவருடைய பூதவுடல் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்டகூட்டத்தில் நடுவில் அய்யா அவர்கள் ‘தனிமையில்’ நின்று கொண்டிருந்தார். லேசான தூறல். அக்காலத்தில் காவல் துறையின் மாணிக்கமாக கருதப்பட்ட கமிஷனர், கே.ஆர்.ஷெனாய் (ஆம். அவரை கேலி செய்துதான் கண்ணதாசன் அய்யாவிடம் செமையாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.) அவரை அணுகி, ‘அய்யா களைத்து போய்விடுவீர்கள். ஒரு நாற்காலியும் குடையும் கொண்டு வருகிறேன்’ என்றார். ‘பெரியவரே போய்விட்டார்.’என்றவர், மவுனத்தில் ஆழ்ந்தார். வேறிடம் செல்லவேண்டிய அவசரம், கமிஷனருக்கு. ‘ அய்யா மனதளவில் வேறு எங்கோ இருக்கிறார். அவரை விட்டு நகராதே. நான் விரைவில் வருகிறேன்.’ என்று சற்றே பரிச்சியமாகியிருந்த என்னிடம் கட்டளையிட்டு விட்டு, விரைந்தார்.

    நான் நகரவில்லையே -இன்றும் தான். வாழ்நாள் முழுதும் நகரமாட்டேன்.

    சித்திரத்துக்கு நன்றி: http://static-numista.com/catalogue/photos/inde/g1117.jpg

    Share