அமுதத் தமிழில் அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், இதோ உங்களுக்காக. திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைப்பில், கிருஷ்ணகுமாரின் கணீர்க் குரலில் கேட்டு மகிழுங்கள். அபிராமவல்லியின் அருள் பெறுங்கள்.
அகஸ்தியர் இயற்றிய ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி என்ற புகழ்பெற்ற பாடலுக்குத் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்தார். இந்த நிகழ்வுக்குத் தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி முன்னிலை வகித்தார். தம் தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்த பாடலைப் புதல்வர் கிருஷ்ணகுமார் இங்கே பாடுகிறார். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையின் அருள் பெறுங்கள்.
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி
மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், ‘நம்பிக் கெட்டவர் எவர் ஐயா’, கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம்.
பல்லவி
நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)
அனுபல்லவி
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை (நம்பிக்)
சரணம்
ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பிக்)
மகாசிவராத்திரியை முன்னிட்டு, நீலகண்ட சிவனின் சிறப்புப் பாடல், சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளத்தீசா, கிருஷ்ணகுமார் குரலில். செவியுறுங்கள், சிவனருள் பெறுங்கள்.
பல்லவி
சம்போ மஹாதேவ சரணம் ஸ்ரீ காள ஹஸ்தீச
அனுபல்லவி
அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும்
அடி முடி காணா நெடுமலை வாணா
அகில புவன பரிபால சகல வரகுண விஸாலா (சம்போ)
சரணம்
அறியேன், சின்னஞ் சிறியேன் உனக்கனந்தம் தண்டனிட்டேன்
அபராதங்கள் முழுதும் க்ஷமித்தருள்வாய் கை கும்பிட்டேன்
பரிவாய் உன் சொல் கனவில் கண்டு பிழைக்கும் வழி தொட்டேன்
பேதையாகிலும் உன் பாதம் பணியும் என் பெருகிய
பவவினை தீரும், குரு பரனே கருணைக் கண்பாரும் (சம்போ)
வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகுமார், தபோவனம் சுவாமி ஞானானந்தா அவர்களைப் பாடி, இரண்டு குறுவட்டுகளை வெளியிட்டுள்ளார். இவருடைய தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. அகில இந்திய வானொலி நிலையக் கலைஞர். இவரது மரபணுக்களிலேயே இசை மரபு வளமாக உள்ளது. இந்தப் பதிவில், மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற ‘என்ன கவி பாடினாலும்’ என்ற உருக்கமான பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)