Tag: கிருஷ்ணகுமார்

  • அபிராமி அந்தாதி | கிருஷ்ணகுமார் குரலில்

    அபிராமி அந்தாதி | கிருஷ்ணகுமார் குரலில்

    அமுதத் தமிழில் அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், இதோ உங்களுக்காக. திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைப்பில், கிருஷ்ணகுமாரின் கணீர்க் குரலில் கேட்டு மகிழுங்கள். அபிராமவல்லியின் அருள் பெறுங்கள்.

    கிருஷ்ணகுமாரின் இதர பாடல்களைக் கேட்க:

    https://www.youtube.com/playlist?list=PLMaFf7VrfFhLwywMNOlu9aNQAk1eXcun5

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நினைத்தபோது நீ வரவேண்டும் – கிருஷ்ணகுமார் குரலில்

    நினைத்தபோது நீ வரவேண்டும் – கிருஷ்ணகுமார் குரலில்

    பங்குனி உத்திரச் சிறப்பு வெளியீடு.

    நினைத்தபோது நீ வரவேண்டும்
    நீல எழில்மயில் மேலமர் வேலா

    என்ற பாடல், கிருஷ்ணகுமார் குரலில் இதோ. கேட்டு மகிழுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    என்ன கவி பாடினாலும் – கிருஷ்ணகுமார் குரலில்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி

    அகஸ்தியர் இயற்றிய ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி என்ற புகழ்பெற்ற பாடலுக்குத் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்தார். இந்த நிகழ்வுக்குத் தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி முன்னிலை வகித்தார். தம் தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்த பாடலைப் புதல்வர் கிருஷ்ணகுமார் இங்கே பாடுகிறார். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையின் அருள் பெறுங்கள்.

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி
    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி

    ஆகம வேத கலாமய ரூபிணி
    ஆகம வேத கலாமய ரூபிணி

    அகில சராசர ஜனனி நாராயணி
    அகில சராசர ஜனனி நாராயணி

    நாக கங்கண நடராஜ மனோகரி
    நாக கங்கண நடராஜ மனோகரி

    ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
    ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே

    பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும்
    பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும்

    பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும்
    பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும்

    உலக முழுதும்எனத் தகமுறக் காணவும்
    ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி
    ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே

    உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
    உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்

    நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய்
    நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய்

    நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி
    நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே

    துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்
    துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்

    தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய்
    தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய்

    அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய்
    அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய்

    அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி
    அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிவகாமசுந்தரி ஜகதம்பா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    சிவகாமசுந்தரி ஜகதம்பா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘சிவகாமசுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள்’ என்ற பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். அன்னையின் அருள் பெறுங்கள்.

    பல்லவி

    சிவகாம சுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள் (சிவகாம)

    அனுபல்லவி

    பவ ரோகம் அற வேறு மருந்தேது பழ வினைகள் தொடராமல் உனை பஜிக்க (சிவகாம)

    சரணம்

    கேளாயோ என் முறைகள் உயர் சாம கீத வினோதினி போதுமுன் சோதனை
    தாளேனே அகதி நானே ராமதாசன் பணியும் அபிராமி வாமி (சிவகாம)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நம்பிக் கெட்டவர் எவர் ஐயா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், ‘நம்பிக் கெட்டவர் எவர் ஐயா’, கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம்.

    பல்லவி

    நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
    நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)

    அனுபல்லவி

    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை (நம்பிக்)

    சரணம்

    ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
    ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பிக்)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, நீலகண்ட சிவனின் சிறப்புப் பாடல், சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளத்தீசா, கிருஷ்ணகுமார் குரலில். செவியுறுங்கள், சிவனருள் பெறுங்கள்.

    பல்லவி

    சம்போ மஹாதேவ சரணம் ஸ்ரீ காள ஹஸ்தீச

    அனுபல்லவி

    அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும்
    அடி முடி காணா நெடுமலை வாணா
    அகில புவன பரிபால சகல வரகுண விஸாலா (சம்போ)

    சரணம்

    அறியேன், சின்னஞ் சிறியேன் உனக்கனந்தம் தண்டனிட்டேன்
    அபராதங்கள் முழுதும் க்ஷமித்தருள்வாய் கை கும்பிட்டேன்
    பரிவாய் உன் சொல் கனவில் கண்டு பிழைக்கும் வழி தொட்டேன்
    பேதையாகிலும் உன் பாதம் பணியும் என் பெருகிய
    பவவினை தீரும், குரு பரனே கருணைக் கண்பாரும் (சம்போ)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்

    காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்

    காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்

    மகாபெரியவரின் நட்சத்திரமான அனுஷத்தில், கிருஷ்ணகுமாரின் குரலில் ‘காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்’ என்ற பாடலைக் கேளுங்கள். ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர!

    காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம்

    காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம் எனும் பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். காஞ்சி மகானின் அருளைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பதி மலைவாசா – கிருஷ்ணகுமார் பாடல்

    திருப்பதி மலைவாசா – கிருஷ்ணகுமார் பாடல்

    திருப்பதி மலைவாசா வெங்கடேசா என்ற இனிய பாடலைக் கிருஷ்ணகுமாரின் கணீர்க் குரலில் கேளுங்கள். நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் என்ற இனிய பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்ன கவி பாடினாலும் – கிருஷ்ணகுமார் குரலில்

    என்ன கவி பாடினாலும் – கிருஷ்ணகுமார் குரலில்

    வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகுமார், தபோவனம் சுவாமி ஞானானந்தா அவர்களைப் பாடி, இரண்டு குறுவட்டுகளை வெளியிட்டுள்ளார். இவருடைய தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. அகில இந்திய வானொலி நிலையக் கலைஞர். இவரது மரபணுக்களிலேயே இசை மரபு வளமாக உள்ளது. இந்தப் பதிவில், மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற ‘என்ன கவி பாடினாலும்’ என்ற உருக்கமான பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share