Tag: மேகலா ராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி (157)

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (125)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    20645670_1399832240070971_952874295_n

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு   ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம

    Share
  • படக்கவிதைப் போட்டி – 23

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11802085_867732629947604_440588056_n

    திரு. சுரேஷ் ராம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.08.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (14)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    10609031_716498245161097_1832540875_n

    71516183@N03_rதிருமிகு வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு  [பட்டுக்கூடுகளிலிருந்து நூல் பிரித்தெடுக்கப்படுகிறது] ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (13)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11267274_902111079853417_686643902_n

    88717027@N02_rதிரு. பாபு ராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (10)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11180019_823844851003049_1229122600_n

    129393010@N07_rதிரு என்.எஸ். ஹிரிஷிகேஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு

    மேகலா இராமமூர்த்தி

    வட அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு (Washington D.C.) அருகிலுள்ள மேரிலாந்தில் (Maryland) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இருநாட்களும் நடைபெற்ற முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு பரவலாக அமெரிக்கவாழ் தமிழர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றிருந்தது. அம்மாநாட்டு நிகழ்வுகள் குறித்துச் சுருக்கமாக நம் ‘வல்லமை’ வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். இனி மாநாட்டிற்குள் செல்வோம் வாருங்கள்!

    மேரிலாந்திலுள்ள “கல்சுரல்  ஆர்ட்ஸ் சென்டரில்’ ஆகஸ்ட் 31, 2013 அன்று சரியாக மதியம் 2 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் புறநானூற்று மாநாடு இனிதே தொடங்கியது. சுமார் 500 பேர் அமர்வதற்கான இடவசதி கொண்டது இந்த அரங்கு. தமிழன்னையை வாழ்த்தியபின் குழந்தைகளுக்கான ‘புறநானூறு – ஒப்புவித்தல் போட்டி’ நடைபெற்றது. புறநானூற்றுப் பாடல்கள் பத்தினை மனப்பாடமாகச் சொல்லிச் சிறுகுழந்தைகள் பரிசுகளைத் தட்டிச் சென்றது உள்ளம் கவர்ந்தது.

    null

    புறநானூற்று மாநாட்டுப் பதாகை

    அதனைத் தொடர்ந்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு. பிரபாகரன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். இம்மாநாட்டிற்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் அமைந்தது அவருடைய முயற்சியும், ஆர்வமுமே எனலாம். கடந்த நான்காண்டுகளாகப் புறநானூற்றுப் பாடல்களை அமெரிக்கத் தமிழர்கள் அனைவருக்கும் பயிற்றுவித்ததோடல்லாமல், அதற்குப் புதிய எளிய உரை ஒன்றையும் வரைந்த சாதனையாளர் அவர்.

    null

    முனைவர் மருதநாயகம், முனைவர் பிரபாகரன் மற்றும் முனைவர் முருகரத்தினம் (இடமிருந்து வலம்)

    அடுத்துப் புறநானூறு குறித்தச் சிறப்புக் கருத்தரங்கிற்கான முதல் அமர்வு (first panel) நடைபெற்றது. இதனைக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் திரு. அறிவுமதி அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார்.

    இவ்வமர்வில் முனைவர் திரு. சங்கரபாண்டி அவர்கள் ‘சங்க காலத்தில் சாதி – புதிய ஆய்வு முடிவுகள்’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் திரு. சிவயோகநாதன் அவர்கள் ‘அஞ்சாமை புலவரின் உடமையடா’ என்ற தலைப்பிலும், மருத்துவர் திருமதி. சரோஜா இளங்கோவன் அவர்கள் ’புறநானூற்றில் சமூக விழிப்புணர்வு’ என்ற தலைப்பிலும், மென்பொருள் பொறியாளர் திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்கள் ’புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இச்சொற்பொழிவுகள் அரங்கில் நிறைந்திருந்த மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது அவர்கள் அடிக்கடி எழுப்பிய கரவொலிகளால் நன்கு புலனானது.

    null

    முனைவர் சங்கரபாண்டி (உரை நிகழ்த்துபவர்), முனைவர் சிவயோகநாதன், மருத்துவர் சரோஜா இளங்கோவன் மற்றும் மென்பொருள் பொறியாளர் மேகலா இராமமூர்த்தி (இடமிருந்து வலம்)

    இரவு உணவு இடைவேளைக்குப் பின் இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருந்த தலைமை விருந்தினர், முனைவர் திரு. மருதநாயகம் அவர்களின் பேருரை இடம்பெற்றது. ’புறநானூறு போற்றும் வாழ்வியல் நெறிகள்’ என்ற பொருளில் அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பானதாக இருந்தது எனலாம். நம் சங்க இலக்கியத்தைக் கிரேக்க மற்றும் ரோம இலக்கியங்களோடு ஒப்பிட்டு அவர் நிகழ்த்திய பேருரை பல புதிய தகவல்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலக சகோதரத்துவக் கோட்பாடு வேறு எந்த நாட்டு இலக்கியத்திலுமே பேசப்படவில்லை என்று முடித்து அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளிக்கொண்டு போனார் அவர்.

    அடுத்த நிகழ்வாகவும் முதல்நாள்  மாநாட்டின் இறுதி நிகழ்வாகவும் அமைந்தது, ‘புறநானூற்றுப் பாடல்களுடன் முத்தமிழ் முழக்கம்’ என்ற பெயரில் வந்த இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த முத்தமிழ் நிகழ்ச்சி. அதுவே அன்றைய விழாவின் மணிமகுடமாய்த் திகழ்ந்த நிகழ்ச்சியுமாகும். பள்ளிப் பிள்ளைகள் பலர் இணைந்து ‘தகடூரான் தந்த கனி’ என்ற பெயரில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கித் தமிழ்ப் புலவரைச் சிறப்பித்த வரலாற்றைச் சுவைபட மேடையில் நடித்துக் காட்டினர்.

    null

    ‘புறநானூற்றுப் பாடல்களுடன் முத்தமிழ் முழக்கம்’ நாடகத்திலிருந்து ஒரு காட்சி..

    அடுத்துத் ’தலை கேட்டான் தம்பி’ என்ற பெயரில் குமண வள்ளலின் வரலாறு அரங்கேறியது. குமணனின் தம்பி இளங்குமணன் அண்ணனிடமிருந்து ஆட்சியைப் பறித்துகொண்டதோடல்லாமல் ’அவன் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பத்தாயிரம் பொன் பரிசு’ என்றுவேறு அறிவித்தான். அவ்வேளையில் தமிழ்ப்புலவர் ஒருவர் குமணனைக் கண்டு பரிசில் பெறுவதற்காக அவன் தங்கியிருந்த கானகத்திற்குச் செல்கின்றார். புலவருக்கு ஏதும் கொடுக்கவியலாத நிலையில் இருந்த குமணன் ’தன் தலையை வெட்டித் தம்பியிடம் கொடுத்துப் பரிசு பெற்றுச் செல்க!’ என்று வாளைப் புலவரிடம் நீட்டிய காட்சி காண்போர் கண்களில் நீர்மல்கச் செய்தது.

    அடுத்து இடம்பெற்றது ‘கவரி வீசிய காவலன்’ என்ற தலைப்பில் தமிழ்ப்புலவர் மோசிகீரனார்க்குச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசித் தமிழைப் பெருமைப்படுத்திய வரலாறு. நிகழ்ச்சியின் முடிவில் அரங்கத்தினரின் கரவொலி விண்ணைப் பிளந்தது என்றால் மிகையில்லை.

    இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கின. ’புறநானூற்றில் எனக்குப் பிடித்த பாடல்’ என்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் பலர் அவர்களுக்குப் பிடித்த புறநானூற்றுப் பாடலையும் அதற்கான காரணத்தையும் தங்கள் மழலைக் குரலில் கூறி அனைவரையும் மகிழ்வித்தனர். ’கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே’ எனத்தொடங்கும் ’ஒக்கூர் மாசாத்தியார்’ என்ற பெண்பாற் புலவரின் புறப்பாடலையே தங்கள் விருப்பப் பாடலாகப் பல குழந்தைகள் குறிப்பிட்டனர்.

    அடுத்து மாணவர்களுக்கான ‘புறநானூறு – வினாடிவினாப் போட்டி’  நடைபெற்றது. அதில் பங்குபெற்ற குழந்தைகள் புறநானூற்றிலிருந்து கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்குக்கூடச் சிறப்பாய் பதிலளித்து அரங்கத்தை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

    null

    மாணவர்களுக்கான ‘புறநானூறு – வினாடிவினாப் போட்டி’

    அடுத்ததாக, புறநானூற்றுக்  கருத்தரங்கின் இரண்டாவது  அமர்வு (second panel) தொடங்கியது. அதில் பேராசிரியர் முருகரத்தினம் அவர்கள் ‘புறநானூறு பேசும் வாழ்வியல் விழுமியங்கள்’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் அறிவுநம்பி அவர்கள் ‘புறநானூறு – பலதுறைப் பேழை’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் வாசு. அரங்கநாதன் அவர்கள் ‘உவமைகள் வழிச் சங்கத் தமிழகம்’ என்ற தலைப்பிலும் தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள். இவ்வமர்வை முனைவர் மருதநாயகம் அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார்.

    பின்பு, புறநானூற்று ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ’மாநாட்டு மலர்’ ஒன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்த முக்கிய நிகழ்வுகளாக மற்றுமொரு புறநானூற்றுக் கருத்தரங்கம் மற்றும் சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அம்மையாருடன் ஓர் கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன. வேறு யாருடைய உதவியும் இல்லாமல் தாம் தனியாகவே சங்கத்தமிழ் நூல்கள் பன்னிரண்டை இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதாகத் திருமதி. வைதேகி அவர்கள் தெரிவித்தது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அவருடைய முயற்சியையும், ஆர்வத்தையும் விழாவைக் காண வந்திருந்தோர் பலரும் பாராட்டினர். உண்மையிலேயே போற்றத்தக்க அரும்பணிதானே இது!

    அதற்கடுத்தபடியாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்  பிரபாகரன் அவர்கள் ‘புறநானூறு காட்டும் தமிழ்ச் சமுதாயம்’  என்ற பொருளில் சிறப்புச்  சொற்பொழிவாற்றினார். திருக்குறளோடு புறநானூற்றை ஒப்பிட்டு அவர் வழங்கிய அவ்வுரை மிகச் சிறப்பாகவும், சுவையாகவும் அமைந்திருந்தது.

    நாட்டிய நாடகம் ஒன்று அடுத்து  அரங்கேறி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றது. தன் தந்தையையும், பின்பு கணவனையும் போரில் இழந்த பெண்ணொருத்தி மீண்டும் ஒலிக்கின்ற போர்ப்பறை முழக்கத்தைக் கேட்டு வீரம் கொண்டு தன் இளம் புதல்வனையும் போருக்குச் செல் என்று அனுப்புவதை மையக்கருவாகக் கொண்டிருந்தது அந்நாடகம்.

    பின்பு மாலை 4 மணியளவில்  புறநானூற்றில் பல்லூடக (multi-media) வினாடிவினா ஒன்று நடைபெற்றது; இஃது பெரியவர்களுக்கானது. ‘கடையெழு வள்ளல்கள் அணி’ மற்றும் ‘மூவேந்தர் அணி’ என்ற இரண்டு அணிகள் இவ்வினாடிவினாப் போட்டியில் பங்கேற்றன. இறுதியில் ‘கடையெழு வள்ளல்கள் அணி’ பரிசினைத் தட்டிச்சென்றது (வென்ற அவ்வணியில்தான் நானும் இடம்பெற்றிருந்தேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே).

    null

    புறநானூற்றில் பல்லூடக வினாடிவினா (பெரியவர்களுக்கானது)

    பின்பு தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் திரு. அறிவுமதி அவர்கள் ‘புறநானூற்றில் முதியோள் சிறுவர்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். திரைத்துறையைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பழகுவதற்கு மிகவும் இனியவராகவும், எளியவராகவும் திரு. அறிவுமதி திகழ்ந்தார் என்பதனை இங்கு நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

    இரவு உணவு இடைவேளைக்குப் பின்பு ’அமரர் கல்கி’ அவர்கள் எழுதி இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும் ‘சிவகாமியின் சபதத்தை’ நாட்டிய நாடகமாக அரங்கேற்றினர்.

    null

    ’சிவகாமியின் சபதம்’ நாட்டிய நாடகத்திலிருந்து….

    மிகச் சிறப்பான முறையிலே அமைக்கப்பட்டிருந்த காட்சிகள், நாட்டியங்கள், பங்கேற்ற கலைஞர்களின் தேர்ந்த நடிப்பு எல்லாமும் சேர்ந்து அந்நிகழ்ச்சியை அனைவரும் பிரமிக்கும்வண்ணம் மாற்றியிருந்தன. விழாவைக் காணவந்திருந்தோர் யாவரும் இந்நாட்டிய நாடகத்தை வெகுவாக இரசித்து மகிழ்ந்தனர் என்று சொல்லவும் வேண்டுமோ!!

    இவ்வாறு இரண்டு நாள் நிகழ்வுகளை உள்ளடக்கிய முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு ’வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்’, மற்றும் ’வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு’ (FeTNA) ஆகியவற்றின் சீரிய தலைமையிலும், உழைப்பிலும் தமிழ்கூறு நல்லுலகே வியந்து பாராட்டும் ஓர் வெற்றி மாநாடாய்த் திகழ்ந்தது எனில் மிகையில்லை.

    Share
  • பொன் வண்டு கதைக்கு மேகலா இராமமூர்த்தியின் முடிவுரை

    பொன் வண்டு – முதற்பகுதி

    பொன் வண்டு (இறுதிப் பகுதி)

                                        மேகலா இராமமூர்த்தி

    …… நேரே அரசாங்க மருத்துவமனைக்கு பேருந்தை செலுத்தச் செய்தார்.

    அவசர சிகிச்சை டாக்டர் (emergency physician) விரைந்து முதலுதவி செய்ய ஆரம்பித்தார். முதலில் மூக்கிலிருந்து கொட்டுகின்ற இரத்ததை நிறுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டார். மாலாவின் துணையுடன் ஒயிலாவை நிமிர்த்தி உட்காரவைத்து, அவள் மூக்கின் மேல்பகுதியில் ஐஸ்பேக் (icepack) வைத்து இரத்தத்தை நிறுத்தினார். சிறிது நேரத்தில் ஒயிலாவிற்கு நினைவு திரும்பியது. மெல்ல மெல்ல கண்களைச் சிரமப்பட்டு திறந்தவளுக்குத் தன்னைச் சுற்றித் தெரிவதெல்லாம் ஏதோ கனவுபோலவே தோன்றியது.

    ஏதோ கேட்பதற்கு அவள் வாயைத் திறக்கும்முன், பயங்கரமான அழுகுரல் அவள் காதில் விழுந்தது. ஒயிலாவின் அம்மா அழுது அரற்றிக்கொண்டு அவளை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தாள். அவளின் பின் ஒயிலாவின் தந்தையும் அப்பத்தாவும் கலங்கிய கண்களோடு வந்துகொண்டிருந்தனர். மஞ்சு பள்ளிக்குச் சென்றிருந்தபடியால் அவளுக்கு விவரம் ஏதும் தெரியாது. ஒயிலாவின் அருகில் வந்ததும் அவர்கள் இன்னும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தனர்.

    அங்கு நின்றுகொண்டிருந்த டாக்டர் அவர்களை நோக்கி “ஏன் இப்படிக் கூச்சல் போடறீங்க?” கொஞ்சம் அமைதியா இருங்க, ப்ளீஸ்” என்றார். அங்கு சற்று அமைதி நிலவியது. ”யாரு கண்ணு பட்டுச்சோ எம்புள்ள மேலே, இப்படி ஆஸ்பத்திரியிலே கெடக்காளே? என்று சன்னமான குரலில் புலம்பினாள் ஒயிலாவின் தாய்.

    அப்போது, டாக்டர், ஒயிலரசியின் தந்தையைப் பார்த்து “கொஞ்சம் என் ரூமுக்கு வாங்கன்னு” சொல்லிவிட்டு நகர்ந்தார். ஒருவிதப் பதற்றத்தோடு அவரைப் பின் தொடர்ந்தார் ஒயிலாவின் தந்தை. ரூமுக்குள் வந்தவுடன் டாக்டர் தன் குரலைச் சற்று தாழ்த்திக்கொண்டு “இதுபோல முன்னமே மூக்குல இரத்தம் வந்திருக்கா அல்லது இதுதான் முதல் தடவையா?” என்று கேட்டார்.

    ”இல்ல டாக்டர்” அவ வீட்டுல  இருக்கும்போது இதுமாதிரி  நடந்ததில்ல. காலேஜுலேயும் நடந்திருக்க வாய்ப்பில்லேன்னுதான் நெனைக்கிறேன். அப்படி ஏதாச்சும் நடந்திருந்தா எம்மக எங்கிட்ட சொல்லியிருப்பா. ஏன் டாக்டர் கேக்கறீங்க? பயப்படறதுக்கு ஒண்ணுமில்லையே? என்று கலவரத்தோடு கேட்டார்.

    டாக்டர் சிறிது யோசித்தார். பயப்படற மாதிரி ஏதும் இருக்காதுன்னு தான் நானும் நெனைக்கிறேன். சில சமயங்கள்ல தலைல அடிபட்டாக்கூட மூக்கிலேர்ந்து அதிகப்படியா இரத்தம் வர வாய்ப்பிருக்கு. அதனால நாம எதுக்கும் மூளைய ஸ்கேன் செஞ்சு பாத்திடறது நல்லதுன்னு நெனைக்கிறேன். நம்ம மருத்துவமனைல அதுக்கான வசதியில்லை. அதனால சென்னையிலெ இருக்குற ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு சிபாரிசுக் கடிதம் தரேன். அங்க போய்ப்பாத்திடறது நல்லது என்றார்.

    ஒயிலாவிற்கு பூரண ஓய்வு  தேவைன்னு டாக்டர் சொல்லி அவளை டிஸ்சார்ஜ் செஞ்சிருந்ததாலே  அவளைப் படுக்கையைவிட்டு  எழ அனுமதிக்கவில்லை அவளின் தாயும், தந்தையும். ஒயிலாவிற்குப் பொழுது போவது மிகக் கடினமாகத்தான் இருந்தது. தோப்புப் பக்கம் போகமுடியலையேன்னு அவள் வருத்தப்பட்டுக் கொண்டே படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

    அப்போது பக்கத்து அறையில்  அவள் தாயும், தந்தையும் மெதுவாகப்  பேசிக்கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது. அவள் தந்தை, டாக்டர் தன்னிடம் கூறிய விஷயங்களை ஒன்றுவிடாமல் அவள் தாயிடம் கூறிக்கொண்டிருந்தார். தலையில் அடிபட்டாலும் மூக்கிலிருந்து இரத்தம் வடியுமுன்னு டாக்டர் சொன்னதைக் குறிப்பிட்டு, ஒயிலா எங்கயாச்சும் கீழே விழுந்தாளா? உனக்கு ஏதாச்சும் தெரியுமான்னு அவள் தாயிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்படி ஏதும் நடக்கலியே, நடந்திருந்தா ஒயிலா எங்கிட்ட சொல்லாம இருக்கமாட்டாளே என்று தன் தாய் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தை ஒயிலா கேட்டாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

    அன்று சனிக்கிழமை. கல்லூரி விடுமுறை. வழக்கத்தைவிட வேகமாகக் காலை டிபனை முடித்துவிட்டு மான் போலத் துள்ளிக்கொண்டு தோப்புக்குச் சென்றாள் ஒயிலா. முதல் நாள் தமிழ்ப் பேராசிரியை நடத்திய “காணி நிலம் வேண்டும்” என்ற பாரதியின் பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு, உற்சாகத்தில் உள்ளம் துள்ளத் தோப்பையும், சிட்டுக்குருவிகளையும் காண ஆவல் கொண்டு வேகமாக ஓடினாள். திடீரென்று கால் இடறிக் கீழே விழுந்தாள். பலமாக எதன் மீதோ தலை மோதியது; உலகம் சுழன்றது. உடனே நினைவிழந்தாள்.

    சிறுது நேரம் கழித்துக்  கண் விழித்துப் பார்க்கையில் தான் ஒரு பள்ளத்தில் கிடப்பதை அறிந்தாள் ஒயிலா. தலை விண், விண் என்று வலிப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். தன் தலை அந்தப் பள்ளத்திலிருந்த பெரிய கருங்கல் ஒன்றில் மோதியிருப்பதை அறிந்து அதிர்ந்தாள். மூக்கிலிருந்து ஏதோ கசிவதை அறிந்து கையால் வழித்தாள். ஆ! ரத்தம் என்று கத்தினாள். இங்கு நடந்ததை அம்மா, அப்பாவிடம் தெரிவிப்பதா, வேண்டாமா என்று சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவள், வேண்டாம்! அவர்களிடம் சொன்னால் பயந்து போவார்கள். வீணாக அவர்களைச் சங்கடப் படுத்த வேண்டாம், என்று முடிவெடுத்து, தோப்பில் அதற்குப் பிறகு இருக்க மனமின்றி வீடு நோக்கி நடந்தாள்.

    “நாளைக்கு விடிகாலையிலேயே ஒயிலாவோட கெளம்பிப் பட்டணம் போகணும், ஸ்கேன் எடுக்கணும்” என்று தந்தை, தன் தாயிடம் கூறிய வார்த்தைகள் ஒயிலாவின் பழைய நினைவுகளைக் கலைத்து அவளை நிஜ உலகிற்கு அழைத்து வந்தன.

    பொழுது விடிந்தது. ஒயிலரசியும், அவள் தந்தையும் சென்னைக்குப் புறப்பட்டனர். அப்பத்தா ஓடிவந்து ஒயிலாவிற்குத் திருநீறிட்டாள். ஒனக்கு ஒரு கொறவும் வராது தாயி! என்று கண்ணீரோடு திருஷ்டி கழித்தாள். ஒயிலாவின் அன்னையும், மஞ்சுவும் சோகம் கப்பிய முகத்தோடு அருகில் நின்றனர்.

    நீண்ட பயணம் ஒயிலாவை மிகவும்  களைப்படையச் செய்தது. பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள். இரவு உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு இருவரும் ஓர் விடுதியில் தங்கினர். மறுநாள் காலை சீக்கிரமேயெழுந்து மருத்துவமனை செல்ல ஆயத்தமாயினர். அவசர சிகிச்சை டாக்டர் தந்த சிபாரிசுக் கடித்ததைக் காட்டியதில் மருத்துவமனையில் சிறிது விரைவாகவே ஸ்கேன் எடுக்க முடிந்தது. ஸ்கேன் ரிசல்டை மறுநாள் தெரிந்துகொள்ளலாம் என அறிந்தார்கள்.

    ஒயிலாவும், தந்தையும் தாம் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினர். பொழுதைப் போக்குவது சிரமமாக இருந்தது இருவருக்கும். ”அப்பா! நாம சும்மா இங்கையே ஒக்காந்திருக்காம மெரினா பீச்சுக்குப் போயிட்டு வருவோமே” என்று ஒயிலா சொன்ன யோசனையை அவள் தந்தை ஏற்றுக்கொண்டார். அன்று மாலை மெரினா பீச்சுக்குச் சென்றார்கள். ஒயிலா கடல் அலைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட அவள் தந்தை, ”கடவுளே எம்மவளுக்கு ஒரு நோயும் இருக்கப்படாது. நாளைக்கி ஸ்கேன் ரிப்போர்ட்டில் ஒரு பிரச்சனையுமில்லன்னு வரணும்” என்று கண்ணீரோடு கண்ணைமூடிப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்.

    அப்பா! என்ற தீனமான குரலைக் கேட்டுக் கண்ணைத் திறந்தார் அவர். தன் மகள் நினைவு தப்பி மயக்கமாகியிருப்பதையும், அவள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதையும் கண்டு, ”ஐயோ! யாராவது உதவிக்கு வாங்களேன்!” என்று அலறினார். சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஒருவர் விரைந்து வந்தார். என்ன சார்! என்ன ஆச்சு? என்று கேட்டபடியே ஒயிலாவைப் பார்த்தார். பேச இயலாமல் ஒயிலாவின் தந்தை தவித்ததைக் கண்டு, ”பாப்பாவுக்கு என்ன ஆச்சு சார்! என்று மறுபடியும் கேட்டார். ஒயிலா திடீரென்று மூர்ச்சையானதையும், அவள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதையும் ஒயிலாவின் தந்தைக் கண்ணீரோடு கூறிமுடிக்க, அவர் ”கவலைப்படாதீங்க சார்! நான் ஆட்டோ டிரைவர் தான், பாப்பாவை உடனே ஆஸ்பத்திரியிலே சேத்து ட்ரீட்மெண்ட் குடுத்துடலாம்” என்றார்.

    ஒயிலாவின் தந்தை கண்ணீர்  மல்க அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார். காலையில் ஸ்கேன் எடுத்த மருத்துவமனையின் பேரைச் சொல்லி அங்கேயே சேத்துடலாம் என்று தெரிவித்தார். ஆட்டோ விரைந்தது.

    மறுபடி ஒயிலா கண்விழித்தபோது மீண்டும் தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்து தனக்குத் தானே வருத்தத்தோடு புன்னகைத்துக் கொண்டாள். அருகில் தன் தந்தை அமர்ந்து தன்னையே கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருப்பதை அறிந்து சிரிக்க முயன்றாள். அன்று இரவு வந்த ”ட்யூட்டி டாக்டர்” ஒயிலாவின் ஸ்கேன் ரிப்போர்ட் ரெடியாகிவிட்டது என்று கூறி ஒயிலாவின் தந்தையைத் தன் அறைக்கு அழைத்தார். ”இதோ வந்துடறேம்மா” என்று ஒயிலாவிடம் சொல்லிவிட்டு அவள் தந்தை அறையை விட்டு அகன்றார்.

    தன் எதிரில் நின்ற ஒயிலாவின்  தந்தையை வருத்தத்தோடு பார்த்த  டாக்டர், ”சார் மனசத் தேத்திக்குங்க, உங்க மகளோட சிறுமூளையிலே பலமான அடிபட்டு இரத்தம் கட்டியிருக்கு. ஆபரேசன் செஞ்சு குணப்படுத்தமுடியாத அளவு சேதம் பலமாயிருக்கு. எந்த நேரமும் அவங்க உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். கடவுள வேண்டிக்குங்க. மனுசங்களாலெ முடியாததைக் கடவுள் பொறுப்புலதான் விடவேண்டியிருக்கு” என்று கூறி அமைதியானார். அதைக் கேட்டு ஒயிலாவின் தந்தை சுக்கு நூறாகச் சிதறிப்போனார். ஸ்கேன் ரீப்போர்ட்டை கை நடுங்க வாங்கித் தன் பையில் மறைத்துக் கொண்டு தன் மகளிருந்த அறையை நோக்கித் தள்ளாடியபடியே சென்றார்.

    ஒயிலா பட்டணத்திலிருந்து வீடு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று. அவள் கல்லூரி செல்ல அனுமதிக்கப் படவில்லை. எல்லோரும் தன்னைப் பரிதாபமாகப் பார்ப்பதும், அடிக்கடி வீட்டில் அழுகுரல்கள் கேட்பதும் வாடிக்கையாயிற்று. ”பயப்படும்படி ஏதும் ஸ்கேன் ரிபோர்ட்டில் இல்லை” என்று தன் தந்தை தன்னிடம் கூறினாலும், மற்றவர்கள் நடவடிக்கையால் தன் உயிருக்கு ஏதோ ஆபத்து காத்திருக்கின்றது என்பதை அந்த சுட்டிப் பெண்ணால் நன்றாக உணரமுடிந்தது.

    மறுநாள் அதிகாலையில் உறக்கம் கலைந்து எழுந்த ஒயிலரசி அப்பத்தாவையும் எழுப்பி தனக்கு மிகவும் பிடித்த பால் பணியாரம் செய்து தரவேண்டும் என்று கேட்டாள். பேத்தியின் மீது உயிரையே வைத்திருந்த அப்பத்தாவும், ”அதுக்கென்ன ராசாத்தி இதோ செஞ்சுதாரேன்” என்று அடுக்களைக்கு விரைந்தாள். ”பல் தேய்ச்சுட்டு வந்து ஒரு பிடி பிடிக்கிறேன்னு” சொல்லிட்டு கொல்லைப் பக்கம் ஓடினாள் ஒயிலரசி.

    அரைமணி நேரமாகியும் ஒயிலரசி  அடுப்பங்கரைப் பக்கம் வரலியே, சுட்டு வச்ச பணியாரம் ஆறிப்போயிடுமே என்று எண்ணிக்கொண்டே, ”ஒயிலா… ஒயிலாக்குட்டி!” என்று கூப்பிட்டுக்கொண்டே கொல்லைப் பக்கம் வந்த அப்பத்தா, ஒயிலரசி தரையில் விழுந்துகிடப்பதைக் கண்டு பதறியபடியே அவளருகே ஓடினாள். எந்தாயீ, ஒயிலா…ஒயிலா! என் தங்கமே எழுந்திரும்மா என்று அலறினாள். அப்பத்தாவின் அலறல் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் பீதியோடு ஓடிவந்தனர். ஒயிலாவிடம் எந்த அசைவுமில்லை.

    ஒயிலாவை மடியில் போட்டுக்கொண்டு உலுக்கினாள் அப்பத்தா. அம்மா… எங்கண்ணு…எழுந்திரு தாயீ! என்று மீண்டும் அரற்றினாள்.. ஒரு பதிலுமில்லை. முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். மூக்கிலிருந்து வழிந்த இரத்தம் சிறிது காய்ந்திருந்தது.

    பின்பு நடந்ததெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள் ஆகிப் போயின! ”பொன் வண்டு” போல அவ்வீட்டில் வளைய வந்த ஒயிலாவின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஈடுசெய்யமுடியா இழப்பையும் அக்குடும்பத்திற்குத் தந்தது.

    உடலைவிட்டு ஒயிலரசியின்  உயிர் பிரிந்திருந்தாலும் அவள் ஆன்மா என்றும் அழிவின்றி அவ்வீட்டையும், அவள் மிகவும் நேசித்த தோட்டதையுமே சுற்றிச் சுற்றி வரும் என்பதில் சந்தேகமில்லை…

    Share
  • வள்ளுவர் வழியில் இளங்கோ!!

    மேகலா இராமமூர்த்தி

    ”யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

     வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்

     பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என வாயூறிப் பேசுகின்றான் மகாகவி பாரதி. இந்த வரிசையிலே காலத்தால் மூத்தவர் வள்ளுவப் பேராசான். அவரை அடுத்து வருபவர் சேரமன்னனின் இளவலான இளங்கோ. இவ்விருவரின் அறக்கருத்துக்களில் சிலவற்றை ஒப்பு நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    “சான்றோர் சான்றோர் பாலராவர்”(great minds think alike) என்பது பெரியோர் வாக்கு. இக்கருத்தை மெய்ப்பிப்பது போலவே குறளின் கருத்துக்களைப் பலவிடங்களில் எடுத்தியம்புகின்றார் சிலப்பதிகார ஆசிரியர். உதாரணங்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.

    சிலம்பின், மதுரைக் காண்டம் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாப் பகுதியாகும். அதில் வருகின்ற அடைக்கலக் காதையில் சமணத் துறவியான, கவுந்தியடிகள் பத்தினிப் பெண்டிரின் சிறப்பைப் பற்றி இடைக்குல முதுமகள், மாதரியிடம் கூறும்போது,

    ”வானம் பொய்யாது; வளம் பிழைப் பறியாது

    நீணீல வேந்தர் கொற்றம் சிதையாது

    பத்தினிப் பெண்டிர் இருந்த நாடெனும்

    அத்தகு நல்லுரை அறியாயோ நீ?” என வினவுகின்றார், இஃது,

    ”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

    பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்: 55) என்னும் திருக்குறளை நினைவுக்குக் கொண்டுவருகின்றதல்லவா?

    அதுபோலவே, சிலம்பில் மற்றுமோர் காட்சி, வழக்குரை காதையில்….

    ஆவேசத்தோடு தன் கணவன் கோவலன் கொலையுண்டதைப் பற்றித் தன்முன்னே சொல்லிக்கொண்டிருந்த கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னன் புன்சிரிப்பைச் சிந்திவிட்டு, பெண்ணே…!

    “கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று!

    வெள்வேற் கொற்றம்- காண்!” என்றல்லவா கூறுகின்றான். இவ்வரிகள்,

    ”குடிப்புறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

    வடுவன்று வேந்தன் தொழில்”(குறள்: 549)  என்னும் குறட்கருத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.

    அடுத்து, சிலப்பதிகாரத்தின், ’வஞ்சின மாலை’யில் மாபத்தினி கண்ணகி, பாண்டியன் தேவியைப் பார்த்துக் கூறும் வரிகள் இவை:

    “முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

    பிற்பகல் காண்குறூம் பெற்றியகாண்!”

    என்ன விந்தை!! தெய்வப் புலவரின் தமிழ்மறையும் இதேகருத்தை “இன்னா செய்யாமை” என்னும் அதிகாரத்தில் பறைசாற்றியுள்ளது. இதோ அக்குறள் வரிகள்..

    “பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

    பிற்பகல் தாமே வரும்.” (குறள்: 319)

    சிலம்பின் ”வஞ்சிக் காண்டம்” சேரன் செங்குட்டுவன் கண்ணகித் தெய்வத்திற்குச் சிலை எடுத்த வரலாற்றை விரித்துரைக்கின்றது. அதில், மாடல மறையோன் ’யாக்கை நிலையாமையைப் பற்றியும், ’அறக்கள வேள்வி’ செய்யவேண்டியதன் அவசியத்தையும் செங்குட்டுவனுக்கு எடுத்துரைக்கும்போது…..

    “நாளைச் செய்குவம் அறமெனின் இன்றே

    கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” என்று செப்புகின்றான்.

    இதே பொருளில் பல குறட்பாக்களை நாம் “நிலையாமை” எனும் அதிகாரத்தில் காண்கிறோமே…

    அவற்றுள் ஒன்று, நம் பார்வைக்கு…..

    “நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

    மேற்சென்று செய்யப் படும்.” (குறள்: 335)

    இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்துள்ளது சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான ”வரந்தரு காதை”. குறளும், சிலம்பும் கைகோர்த்துக்கொண்டு ஒத்த அறக்கருத்துக்களை ஓங்கி ஒலிக்கின்ற அழகை என்னவென்பது..? தமிழன்பர்கள் அனைவரும் படித்து மகிழவேண்டிய பகுதியிது!

     “தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்!

    ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

    தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;

    செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;

    ———————————————————————————

    கள்ளும் களவும் காமமும் பொய்யும்

    வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்

    இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா இவை வரந்தரு காதையின் வைர வரிகள்…!

    இவ்வரிகளுக்கு இணையான குறட் கருத்துக்களை இனிக் காண்போம்.

    வள்ளுவத்தின், “கடவுள் வாழ்த்து” தெய்வம் தெளிவதற்கு நமக்குப் பேருதவி செய்கின்றது. “நீத்தார் பெருமை” என்ற அதிகாரம், பற்றற்ற உயர்ந்தோரின்-தெளிந்தோரின் சிறப்பை வகைப்படுத்துகின்றது.

    அதுபோன்று,

    “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

    எல்லா வுயிரும் தொழும்” (குறள்: 260) என ஊனூண் துறப்பதின் அவசியத்தை குறள் கூறுகின்றது. உயிர்க்கொலை அதைவிடக் கொடியது என்பதனை,

    ”அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

    பிறவினை எல்லாம் தரும்” (குறள்: 321) என்ற குறளமுதம் “உயிர்க் கொலை நீங்குமின்” என்பதன் விளக்கம் தானே?

    தானம் செய்வதின் சிறப்பை “ஈகை”யும், தவத்தின் பெருமையை “தவம்” என்ற அதிகாரமும் தெளிவாய்ச் சொல்லவில்லையா?

    ”செய்ந்நன்றி அறிதலை”யும், ”தீநட்பின்” தன்மையையும் அறிதற்குத் திருக்குறளினும் விஞ்சிய

    வழிகாட்டி உண்டோ?

    ”உண்ணற்க கள்ளை” எனவும், ”கள்ளாமை காக்க” எனவும் வள்ளுவப் பேராசான் நமக்கு அறிவுறுத்த வில்லையா?

    “காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

    நாமம் கெடக்கெடும் நோய்” (குறள்: 360) என்பதும்,

    “பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற

    செய்யாமை செய்யாமை நன்று” (குறள்: 297) என்பதும் வள்ளுவரின் வாய்மொழிகளே!

    ”பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

    மக்கட் பதடி யெனல்”(குறள்: 196) என்று பயனில சொல்லும் “வெள்ளைக்கோட்டி”யைக் கடுமையாய்ச் சாடுகின்றார் வள்ளுவர்.

    அதுபோல்,

    ”நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்

    பெருமை யுடைத்திவ் வுலகு” (குறள்: 336) என்று ”நிலையாமை” குறித்த உண்மைகளையும் நெகிழ்ச்சியாய் வெளியிடுகின்றார்.

    இவ்வொப்பீடுகள் வாயிலாய் நாம் அறிவது என்ன? சிலம்பில் எங்கு நோக்கினும் குறட் கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன என்பது தானே!

    இவ்வுயரிய கருத்துக்கள் படிப்போருள்ளங்களைப் பரவசப்படுத்துவதோடல்லாமல், வள்ளுவரின் வழித்தோன்றலாகவே இளங்கோவடிகளை எண்ணி மகிழச்செய்கின்றது!!

    சான்றோரின் சிந்தனைகள் ஒத்திருப்பது உண்மையே அல்லவா!

     படங்களுக்கு நன்றி:

     http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Puhar-ILango.jpg

    Share