Blog

  • மகாத்மா காந்தியின் மரணம்

    [1869-1948]

    மகாத்மா காந்தியின் மரணம்
    சி. ஜெயபாரதன், கனடா
    [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]

    நினைவு நாள்

    [காந்தீயக் கோட்பாடு]

    ***********************

    காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட வேண்டும்.

    சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி, உயர்நீதி, உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகியோர் இந்தியருக்கு வேண்டும்.

    சுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை. சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.

    சத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி. சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது. அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.

    அறநெறி, உரிமை, சமநெறி என்பது முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு. சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நாட்டுக்கும், எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.

    *****************************

    அறப் போர் புரிய மனிதர்
    ஆதர வில்லை யெனின்
    தனியே நடந்து செல் ! நீ
    தனியே நடந்து செல் !

    இரவீந்திரநாத் தாகூர்

     

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

     

    பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

    மகாத்மா காந்தி

    Gandhi -1

    முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!

    கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!

    உலக வரலாறு மீண்டும் மீண்டும் மீள்கிறது [History repeats again & again]! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த நான்கு பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!

    ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!

    அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!

    மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.

    ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!

    நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்

    இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!

    டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!

    “முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.

    காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்

    காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!

    40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.

    காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.

    மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்

    பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.

    சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.

    [bws_captcha]

    ‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.

    மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.

    கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!

     

    கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!

    இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரியதல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’

    அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’

    1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.

    காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.

    இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!

     

    ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!

    பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

    வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.

    [bws_captcha]

    காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.

    ‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்படவேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!

    [bws_captcha]

    இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

    ‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

    பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மையான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!

    [bws_captcha]

    இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!

    [bws_captcha]

    அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !

    மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!

    கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!

    வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!

    மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!
    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14
    http://youtu.be/QT07wXDMvS8

    ***************************

    தகவல்:

    1. Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)

    2. Gandhi His Life & Message for the World By: Louis Fischer (1954)

    3. The Life of Mahatma Gandhi By : Louis Fischer (1950/1983)

    4. http://graysparks.blogspot.com/2011/04/blog-post_18.html

    jayabarat@tnt21.com

    +++++++++++++++++
    Mohandas Gandhi Timeline

    From the Website : http://www.sparknotes.com/biography/gandhi/timeline.html

    Picture from Gandhi Movie with Ben Kingsley as Gandhi
    +++++++++++++++++

    Mohandas Gandhi
    Timeline

    October 2, 1869: Birth of Mohandas Karamchand Gandhi

    1883: Gandhi and Kasturbai are married.

    1885: Death of Karamchand Gandhi, Gandhi’s father

    September 4, 1888: Gandhi leaves for England to study law.

    June 10, 1891: Gandhi passes the bar exam in England.

    1891-1893: Gandhi fails as a lawyer in India.

    April 1893: Gandhi accepts commission to spend a year in South Africa advising on a lawsuit.

    Spring 1894: Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress.

    Spring 1896: Gandhi returns to India to collect his wife and children.

    December 1896: Gandhi returns to South Africa with his family.

    October 1899: Outbreak of Boer War (1899-1901) in South Africa. Gandhi organizes an ambulance corps for the British.

    1901: Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders.

    1901-1906: Gandhi struggles toward Brahmacharya, or celibacy, finally ending his sexual activity in 1906.

    1904: Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.”

    July 31, 1907: The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon calledsatyagraha, or “soul-force.”

    January 11, 1908: Gandhi is arrested and sentenced to two months in prison.

    October 10, 1908: Gandhi is arrested again, spends a month in jail.

    1909: Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed.

    November 13, 1913: Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter.

    June 30, 1914: Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests.

    July 18, 1914: Gandhi sails to England.

    August 1914: Gandhi arrives in England, just at the outbreak of World War I(1914-1918).

    January 9, 1915: Gandhi returns home to India, and receives a hero’s welcome.

    May 25, 1915: Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live.

    April 6, 1919: Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India.

    April 13, 1919: Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters.

    August 1, 1920: Gandhi calls for a period of non-cooperation across India.

    March 10, 1922: Gandhi is arrested for sedition.

    March 1922-January 1924: Gandhi remains in prison.

    1924-1928: Gandhi avoids politics, focusing his writings on the improvement of India.

    1925: Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress.

    February-August 1928: Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi.

    January 26, 1930: Gandhi publishes the Declaration of Independence of India.

    March 2, 1931: Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws.

    March 12-April 6, 1931: Gandhi leads his Salt March to the sea.

    May 5, 1931: Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India.

    January 1931: British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference (the Congress asks Gandhi to be this representative).

    Autumn 1931: Gandhi participates in the Round Table Conference in Britain.

    December 28, 1931: Gandhi returns to India.

    January 4, 1932: Gandhi is arrested for sedition, and held without a trial.

    September 20-25, 1932: Gandhi fasts in prison to protest the treatment of untouchables.

    1934-38: Gandhi avoids politics, travels in rural India.

    1935: Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence.

    September 1939: World War II begins, lasting until 1945.

    March 22, 1942: Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War.

    August 8, 1942: The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence.

    August 1942: Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace.

    February 10 to March 2, 1943: Gandhi fasts while imprisoned, to protest British rule.

    February 22, 1944: Death of Kasturbai

    May 6, 1944: Gandhi is released from the Aga Khan’s palace.

    Summer 1944: Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole.

    May 16, 1946: British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal.

    March 1947: Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition.

    August 15, 1947: Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan.

    August-December 1948: India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan.

    January 30, 1948: Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu nationalist.

    +++++++++++++

    S. Jayabarathan (Revised January 29, 2013)

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2GgK_Nq9NLw

    [Mahatma Gandhi Interview].

     

    Share
  • பெண்ணை வாழ விடுங்கள் !!!!


    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    அடுக்களையும் அரிகரண்டியும்

    மாதருக்கே பாத்யதை என்று

    பட்டயம் ஏதும்

    எழுதப் பட்டிருக்கிறதோ ??

     

    கல்வி கேள்வி தனில்

    தனித் திறமை இருந்தாலும்

    கறி சமைக்கத் தெரியாதவள்

    ஏளனப் படுவதும் ஏனோ ??

     

    புது வாழ்க்கைக்கும் சூழலுக்கும்

    தன்னைப் பக்குவப்படுத்திக்

    கொள்ள வேண்டியது பெண்ணெனில்

    பக்குவமென்பது ஆண்கட்கு தேவையில்லையா ??

     

    தட்சணை கொடுத்து மரு”மகளாய்”

    சென்றவள் – பசிக்குப் புசிப்பது கூட

    அனுமதி பெற்று தான் எனில்

    இது என்ன நியாயம் ??

     

    எக்காலத்திலும் பெண்ணின் திறமை

    குப்பையில் கிடக்கும் குன்றிமணி !!

    ஆணின் அதிகாரம் மட்டும் என்னவோ

    கம்பீரமான கோட்டை மணி !!!

     

    அடக்கி ஆள்தலும் அடிபணியச் செய்தலும்

    நீங்களடைந்த வெற்றி என்ற எண்ணம்

    மனதிலிருந்தால் – மன்னிக்கவும் !

    நீங்கள் தோல்விப் பாதையில்

    வெகுதூரம் பயணப்பட்டு விட்டீர்கள் ! – நாளை

    துவண்டு விழப்போவது நீங்கள்தான் !!!

     

    பொன்னும் பொருளும் உங்களுக்கு

    காணிக்கை தராதவளை ஏளனமாய்ப்

    பார்ப்போரே ! – அவளது

    சேவைக்கும் தியாகத்துக்கும் உங்களால்

    கைமாறு செய்திடல் இயலுமோ ??

    அது அவளது கடமையென

    சூளுரைப்போரே !

    நீங்கள் என்றுமே

    கடமை தவறிய

    கனவான்கள் தாம் !

    மறந்திடாதீர்கள் !!

    மறுக்க எத்தனிக்காதீர்கள் !

     

    பெண்ணுக்கெதிராய்

    பலாத்காரத்தை ஆயுதமாய்

    கையிலெடுப்போரே !

    நீங்களென்ன மனிதர்களா ?

    அன்றி மாக்களா ?

    நீங்கள் மனித உருவில்

    உலவும் மாக்களெனில்

    உங்களை வழிநெறிப் படுத்த

    தார்க் குச்சியும் சாட்டை வாரும்

    தயாராய் உள்ளது –

    மறவாதீர்கள் !!

     

    பெண்ணைப் போற்றி

    வணங்கச் சொல்லவில்லை !!!

    அவளை உயர்த்தித்

    தாங்கவும் கேட்கவில்லை !!!

    உங்கள் சகமனுஷியாய்

    உயிருள்ள ஓர்

    ஜீவனாய் பாருங்கள் !!!

     

    பெண்ணை நிம்மதியாய்

    வாழ விடுங்கள் !!!

    அவளது மகிழ்வில்

    உங்களது வாழ்வு என்றென்றும்

    வளமாகவும் !!! நலமாகவும் !!!

     

    படத்திற்கு நன்றி:

    http://www.free-photos.biz/photographs/society/photos_of_social_groups/

    Share
  • போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!

    இன்னம்பூரான்

     போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!

    அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய உபசாரங்கள் பல செய்து, அனாயாசமாகவல்லவோ அவரை சுவர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஜனவரி 9, 2013; அன்றைய தினம் வழக்கம் போல்த்தான் பொல பொலவென பொழுது விடிந்தது. அவரும் சகஊழியர்கள் எல்லாரையும் கனிவுடன், கட்டித்தழுவி குசலம் விசாரித்தார். அது பல வருடங்களாக  அவருடைய அன்றாட வாடிக்கை. பிறகு தன்னுலகம் சுற்றி வந்தார். அவருடைய நண்பர்கள் பல இனங்களை சார்ந்தவர்கள். உக்ரம், வக்ரம், மக்கார் எல்லா குணாதிசயங்களும் உண்டு, அவர்களிடம். அவர் சம்பந்தப்பட்டவை, யாவரும் நேசிக்கப்பட்டவர்கள். அவர்களும் அவரவது பலவீனங்களை உதறி விட்டு, அவருடைய அரவணைப்பை அனுபவிப்பார்கள். பிரஹாரம் சுற்றிய பிறகு, வந்தபின், வழக்கம்போல் சொற்பமான காலை உணவு. ஒரு குட்டித்தூக்கம். அதுவே நீளாதூக்கம் ஆகி விட்டது, சார்! துக்கம் தாங்காமல் என் மனம் தேம்பித் தேம்பி அழுகிறது. ஏன்? உலகமே அழுகிறது.

    மனித ஜன்மங்களே! மனித நேயம் என்று புத்தகங்கள் எழுதி, சொற்மாரி பெய்து, அதைப் பொய்த்து, நடமாடுகிறீர்களே! இந்த தேவகுமாரரின் பெயர் ஆர்னி. அவர் ஒரு கம்பீரமான பூனை. லிண்டன் மிருகக்காட்சி சாலையில் அவர் தான் செவிலித்தாய். சிங்கக்குட்டிகளும், புலிக்குட்டிகளும், குரங்குக்குட்டிகளும் அவரால் தான் பேணி வளர்க்கப்பட்டன. அவற்றின் கூடைக்குள் நுழைந்து, கட்டித்தழுவும் போது, அவை அன்னையின் அரவணைப்பின் சுகம் உணர்ந்தன.

    எனக்கு நேரடியாகத் தெரிந்த உண்மை நிகழ்வு ஒன்று. ஒடிஷாவின் ஸிமிலிபால் பிராந்தியத்தில், ‘கைரி’ என்ற புலிக்குட்டி ஒரு வீட்டு செல்லப்பெண்ணாக வளர்ந்தாள். செவிலித்தாய் ப்ளாக்கி என்ற நாய். கைரியின் உருவத்தில் ஒரு சின்ன பின்னம் அளவு சைஸ். ஆனால், கைரிக்கு ப்ளாக்கியிடம் தான் பயம். ஒரு நாள் ப்ளாக்கிக்குக் குட்டிகள் பிறந்தன. கைரிக்கு அவற்றுடன் விளையாட ஆசை.  வாசற்படியில் வந்து கெஞ்சுகிறாள். அனுமதி டினைய்ட்! தன்னுடைய கூர்நகங்களை உள்ளிழுத்துக்காட்டி கெஞ்சுகிறாள். அனுமதீட். அப்பப்பா! என்ன விளையாட்டு! போங்கள்! அதுவல்லவோ தெய்வீகம்!

    சார்! இனி மேல்  எந்த மனிதன் உக்ரமாகவும், வக்ரமாகவும், மக்காராகவும் நடந்தால், மிருகத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள், சார்! ப்ளீஸ்.

    இன்னம்பூரான்

    29 01 2013

    பி.கு: சோம்பல் இருந்தால் கூட, அதை முறித்து விட்டு, உசாத்துணையிலிருக்கும் ஆர்னியின் சித்திரத்தைக் க்ளிக்கி, ஒரு கும்பிடு போடுங்களேன்.

    உசாத்துணை:

    http://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-21244346

    Share
  • குடதிசை மருங்கில் – 4

    தேமொழி

    இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
    (தொடர்ச்சி)

    எங்கெங்கு காணினும் சக்தியடா:

     

    பார்வதி:

    அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

    அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினையை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார்.  நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகண்டு கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு,  பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

    இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

     

    துர்கை:

    அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

    துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசுரன்) கொன்றழித்தவர். இங்கு காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது.  துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன்,  இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.

    அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

    மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

     

    திரிபுரசுந்தரி:

    அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

    திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகியப் பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாக திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த  குணத்தை உடைய தெய்வமாகச்  சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளைக் குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

    இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

     

    காளி/சாமுண்டி:

    அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

    அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலனப்  பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும்  இருந்திருக்கக் கூடும்.  இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட  அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம்  மையைப் போன்ற  கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான  முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும்,  எட்டுத்திசையும் அவளது கர்ஜனயால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**

    ** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம்.  இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi:the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

    இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

    (தொடரும்)

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]
    Source:
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

      << குடதிசை மருங்கில் – 5                                                                                                         குடதிசை மருங்கில் – 3 >>

     

    Share
  • விதையின் குணம்

    மு.கோபி சரபோஜி

    பெற்றோர்களே….
    வயது போனதற்காய்
    நீங்கள்
    உதிரமும்,உணவும் தந்து
    கை தூக்கி விட்ட பிள்ளைகள்
    உங்களை
    கை விட்டு விட்டதை எண்ணி
    வருந்தாதீர்கள்.

    நீங்கள் – விருட்சம்
    அவர்கள் – விதை.

    விழுந்து எழுவது தானே
    விதையின் குணம்.

    விட்டு விடுங்கள்
    எழும்போதாவது
    வீரியமாய் எழட்டும்.

    படத்துக்கு நன்றி
    Share
  • நாலடிக் கோபுரங்கள்…!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    ஒவ்வொரு நாளும் நான் வீட்டை பூட்டி விட்டு தெருவைக் கடந்து வேலைக்குப் போவதற்குள் இன்று யாரையெல்லாம் சந்திக்க வேண்டி வருமோ என்ற எண்ணம் என் இதயத்தைப் பிடுங்கித் தின்னும். தெரிந்தவர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை. என்னைப் புதிதாகப் பார்ப்பவர்கள் ஏதோ ஒரு நாலு கால் பிராணியைப் பார்ப்பது போலவும் ,என்னை ஒரு பாவி போலப் பாவமாகக் கொத்தும் பார்வையை என் மீது வீசும் போது மட்டும் தான் எனக்கு, நாற்பது வயதாகியும் நாலடிக்கு மேலே வளராமல் நின்று விட்ட விஷயம் ஞாபகத்துக்கு வந்து உலுக்கி எடுக்கும்.

    இத்தனை பெரிய உலகத்தில் நான் மட்டும் என்னமோ “ஆண்டவா… என்னைக் கட்டையாக் குட்டையா இப்படி படைத்து விடேன்” என்று ஆர்டர் கொடுத்துப் பிறந்தவன் மாதிரி வித்தியாசமாகப் பார்ப்பவர்கள்..எனக்குள்ளும் ஒரு மனிதன் இருப்பான் என்பதை மட்டும் யாருமே உணர மாட்டேங்கறாளே ….என்ற மன உளைச்சலும் அதனால் உண்டாகும் வலியும் துயரமும் நாளைக்கு ஒருதரமாவது என்னை வருத்துவது எனக்கு வாடிக்கை தான்.

    வீட்டைப் பூட்டும் நிலைக் கதவு கூட என்னை விட இரண்டுமடங்கு உயரம். என்று எனது குட்டைக் கையால் என் தலையில் ஒரு குட்டுக் குட்டிக் கொண்டே…படியிறங்கி தெருவைக் கடக்கிறேன். அங்கிருந்து வந்த ஒரு பசு மாடு…..என்னை ஒரு பார்வை பார்த்த பிரம்மை எனக்குள்..ஒரு நிமிடம் ஒதுங்கி நிற்கிறேன். அதோடு சேர்ந்து நானும் சென்றால்…எங்கே…யாராவது சின்னப் பசங்க…”அம்மா…பசு மாடு மனிதக் கன்னுக்குட்டியோட போகுதுன்னு” வதந்தியை கிளப்பி விட்டுடுவாங்க.

    ரோட்டின் ஓரமாகக் கிளம்பி, ஓரமாகவே நடந்து போகும்போது வழக்கம் போலவே மனசுக்குள் “விஷ்ணு சஹஸ்ரநாமம்” சொல்லிக் கொண்டே போகிறேன். கண்கள் மட்டும் அங்கங்கே உயர்ந்து நிற்கும் தென்னை மரத்தைப் பார்த்து “ச்சே…இப்படி ஒரு மனுஷப் ஜென்மம் எடுத்ததுக்குப் பதிலா ஒரு வீட்டில் தென்னம்பிள்ளையாய் கூட நின்றிருக்கலாம்..” என்ற எண்ணத்தோடு அலுவலகம் நுழைகிறேன்.

    என் உயரத்தை கணக்கு வைத்தே நான் உலகத்தை அளந்து வைத்தேன். உலகம் என்னை சின்னதாக மாற்றிப் பார்க்கிறது நானும் அதை கோலிக் குண்டாக ஆக்கி என் சட்டைப் பையில் போட்டு வைக்கிறேன். என் வீடும் எனக்குச் சோறு போடும் என் அலுவலகமும் தான் என் உலகம், என் கோயில். இரண்டுக்கும் அதிக இடைவெளி இல்லை…நடந்து போகும் தூரம் தான். ஓரமாக நடந்து திரும்பினால் அலுவலகம். என்னைப் பொருத்தவரையில் இவ்வளவு தான் உலகமே இவ்வளவு தான்..! அதனால் எனக்கு உலகில் ஓடும் ரயில், பஸ், கார், ஸ்கூட்டர் ..ஏன் ஒரு சைக்கிள் கூட என்னைப் பாதிக்காது. யோசித்துக் கொண்டே உருளுகிறேன்.

    இன்னும் பத்து நிமிஷத்துக்குள் ஆபீசுக்குப் போனால் தான் லிஃப்டில் இரண்டாவது மாடிக்குப் போகலாம்..இல்லையென்றால் பவர்கட் ஆகி லிஃப்டும் வேலை செய்யாது…மேலே போக மாடிப் படியில் தான் ஏறியாக வேண்டும். அதான் நடக்காமல் காலில் சக்கரம் கட்டி உருள வேண்டியாதாச்சு.

    டேய்…நம்ப ..நாலடியார் இன்னைக்கு ஆஃபீசுக்கு லீவு போலிருக்கே..? சீட்டுக்கு அடியில் காணோமே…. என்று டைபிஸ்ட் ஷீலா பியூனிடம் கிண்டலாகக் கேட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் அவள் பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டே நான் உள்ளே நுழையவும்…..அவள் முகம் பேயறைந்தது போல வெளுத்தது.

    அவளது நெடு நெடுவென்ற உயரம்..எப்போதாவது என் மேஜை அருகே கடிதத்தில் கையெழுத்து வாங்க நிற்கும் அவளை சில நொடிகள் என் முகம் அண்ணாந்து பார்க்கும். அவளுக்குள் பெருமை பொங்கும்…என் சிறு உருவம் பார்த்து. ஒருவேளை அந்தப் பெருமையில் எனக்கு இப்படி “நாலடியர்” என்று ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கலாம். நான் நாலடி கூட உயரமில்லை…வெறும் மூணரை அடி தான்…என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.

    எனக்கு அவள் அப்படி அழைத்ததில் கவலையில்லை என்பதைத் தெரியப் படுத்துவது போல..” சரியாகத் தான் எனக்கு நீ பெயர் வெச்சிருக்கே” என்று சொல்லிக் கொண்டே எனது டேபிள் அருகில் சென்று நிற்கிறேன். டேபிள் லேசாகத் தலையில் இடித்தது.

    தலையைத் லேசாகத் தடவிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, சார்… மன்னிச்சுக்கோங்க. இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்..என்றவள் குற்ற உணர்வில் குறுகிப் போனாள் .

    எனது டேபிளில் நிறைந்த வேலைகள் என்னை ஆக்ரமித்துக் கொள்ள, வேலையில் கண்களும் கைகளும் கவனமாக இருந்தாலும் மனதுள் கவனச் சிதறல் இருக்கத் தான் செய்தது..

    கணினியில் “டேலி “யைத் திறந்து லெட்ஜர் போஸ்டிங் செய்து கொண்டிருந்தேன். மனசு உணர்வைப் போஸ்டிங் செய்து கொண்டிருந்தது.நான் கணிணியை எப்படி உபயோகப் படுத்தறேன்னு வேடிக்கை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் எட்டிப் பார்க்கும். அவர்களுக்கு இந்த வேடிக்கை ஒரு வாடிக்கை தான்.எனக்கும் பழகிப் போச்சு.

    என் அம்மா எனக்கு எவ்வளவு ஆசையாசையாய் “ராஜ ராஜன் “ன்னு பெயர் வைத்து, பத்து வயசு வரைக்கும் கூட ராஜா…ராஜா ன்னு கூப்பிட்டது இன்னும் என் காதில் விழுந்துண்டு தான் இருக்கு. அந்த ராஜா மெல்ல மெல்ல குட்டிக் கூஜா போல ஆனதும் பெற்றவர்களுக்கே மகன் என்று சொல்ல மனமில்லாத நிலை வந்ததும் தான் எனக்குள் ஓர் ஏமாற்றம்.

    திடீரென ஒரு நாள் அம்மா , நான் தூங்கி விட்டதாக நினைச்சுண்டு அப்பாவிடம் அழுதபடி பேசிய வார்த்தைகளும் கூடவே அப்பப்போ காதைத் துளைத்துக் கொண்டு கேட்கும்..

    “என்னன்னா…நம்ம ராஜா….கையும் காலும் வளராமல்…இப்படிக் குட்டை குட்டையாய் இருக்கே..பத்து வயசுக்கான வளர்த்தியே தெரியலையே…அக்கம் பக்கத்தில் எல்லாம் கேக்கறா….என்ன மாமி உங்காத்து ராஜாவுக்கு அம்பது வயசானாலும் அஞ்சு வயசு தான்னு சொல்லிண்டு நீங்க பஸ்சுலயும், டிரெயினிலும் டிக்கெட் வாங்காமலே ஊருக்கெல்லாம் அழைச்சிட்டு போயிட்டு வரலாம்..போலிருக்கே ன்னு கேலி பண்றச்ச…மனசுக்குள்ள ஒரு பயம் வந்துடுத்து. நான் என்ன பாவம் பண்ணினேனோ..தெரியலையே…..பகவான் என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறார்?

    நம்ம குடும்பத்திலயே யாருமே இப்படி இதுவரைக்கும் வளராமல் இல்லையே . இவன் மட்டும் எப்படி இந்த மாதிரி வந்து பொறந்தான்.இப்படி குள்ள மனிதனா இருக்கும் இவனை நான் எப்படி வளர்க்கப் போறேன்.யார் செஞ்ச பாவமோ பகவானே.. இப்போ அடுத்தது வேற உண்டாயிருக்கேன். அதுவும் இப்படியே வந்து பொறந்தால் நாம என்னத்துக்காவோம்…? நான் எந்த ரிஸ்க்கும் இனிமேல் எடுக்க மாட்டேன். எனக்கு இனி அம்மிக் குழவிக் குழந்தையே வேண்டாம்.

    இந்த ராஜா ஒருத்தனே போதும்..அவனை சாதாரண மனுஷனாப் பண்ண நாம என்ன செய்யணும்…? நாளைக்கு அவனை ஒரு நல்ல டாக்டரிடம் அழைச்சுண்டு போய் காட்டலாம். இதுக்கெல்லாம் மருந்து இருக்கா…?.என்று கேவிக் கேவி அழுதாள்.

    பேசாம ‘நை நை’ ன்னு அழாமத் தூங்க விடு….அப்பா எளிதாகச் சொல்லிவிட்டு திரும்பிப் படுத்தது கண்ணுக்குள் நிழலாடியது.

    அதன் பிறகு நடந்தது எதுவும் எனக்குள் நினைவில் இல்லை.

    மிகவும் ஆசையோடு என்னைத் தூக்கி கொண்ட மாமா, அத்தை . பெரியம்மா, சித்தி , பாட்டி என்று அனைத்து உறவுகளும் தூரம் விலகிப் போனது. அதையும் தாண்டி…” ஏண்டி…பங்கஜம், நம்ம வம்சத்தில் இப்படி ஒரு கொழந்தை கிடையாதுடி..இதெல்லாம் வளரக்கறது நாளுக்கு நாள் ரொம்ப கஷ்டம்.. பேசாமல் எங்காவது சர்க்கஸில் கொண்டு போய் விட்டுட்டு. அவாளே ஏதாவது படிக்கவும் வைப்பா. ‘ஜோக்கரா’ நிறைய சர்க்கஸ் கத்துக் கொடுத்து கூடவே வெச்சுப்பா . உங்களுக்கும் பணம் தருவா. புத்திசாலித் தனமா இதை நீங்கள் ரெண்டு பேரும் யோசித்து செய்தால் பிழைச்சுப்பேள். இல்லாட்டா ரொம்ப கஷ்டம்..

    நன்னா உசரமா இருக்கறவாளுக்கே சமயத்துல இந்தக் காலத்துல வேலை, கல்யாணம்னு எதுவுமே நடக்க மாட்டேங்கறது. இவன் இனிமேல் தான் பெரிய கிளாஸ் போகப் போக இவனால ஆத்துக்கு பிரச்சனையைத் தான் கொண்டு வருவான். நான் சொல்லறதை சொல்லிட்டேன்…மகளே இனி உன் சமத்து… என்று பாட்டி கொஞ்சம் கூட மனசில் ஈரமில்லாமல் அம்மாவுக்கு ஐடியா கொடுத்து விட்டுப் போனவள்..தான். அதன் பின் நானும் பாட்டியைப் பார்க்கேவே இல்லை.

    அதற்குள் அக்கம் பக்கத்திலும் சரி, படிக்கும் பள்ளியிலும் சரி,எனது ராஜ ராஜன் என்கிற பெயர் மறைந்தே போனது. அடேய்…குள்ளா ..! டேய் குட்டையா..! டேய்..வள்ளுவன் வாக்கு..! டேய் திருக்குறளு..! ஒழக்கு, அரைக்கால் படி, அம்மிக் கல்லு, ஆட்டுக் குட்டி, அகத்தியர் அவதாரம்.. ! டேய்…குள்ள வாத்து..! என்று அவரவர்கள் எனக்கு ஒரு புதுப் பெயர் வைத்து அழைத்து சந்தோஷப் படுவார்கள். அட அட அட….இப்படிக் கூப்பிட்டு என்னை அழைக்கும் போது தான் அவர்களுக்கு மனதில் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கும். எல்லாருக்கும் சிரிப்பை வர வழைக்கும் போதே, என் மனம் அழுமே என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாரா என்ன? அப்பேர்பட்ட பிறவி நானா…? அவாளா?

    இன்னும் சிலர் டேய் ஜோக்கர்…வராண்டா..என்று கேலி செய்து அவர்கள் நேற்று சர்க்கஸ் சென்ற விபரத்தை சொல்லும்போது…டேய்…அங்க உன்ன மாதிரி நாலு அஞ்சு பஃபூன்டா….நீ பெரிசானால் அங்க தாண்டா உனக்கு வேலை கிடைக்கும். என்று அனாவசியமாகப் பாட்டியை நினைவு படுத்துவார்கள்.

    அதற்குள் இன்னொருத்தன், அதுக்கு ஏண்டா பெரிசாகணும்…இப்பவே போனாலும் வேலை நிச்சயம்..நம்ம கிளாஸ் ‘கமலஹாசன்’ டா இவன்….என்று சிரிப்பான்.

    ஓங்கி ஒரு கல்லை எடுத்து அவா மண்டையில் வீசினால் தேவலாம் போலிருக்கும் எனக்கு. அன்பாய் பேசாட்டாலும் வேண்டாம்….பரிகாசம் செய்யாமலாவது இருக்கலாம். ஆனால் அது யாருக்குப் புரிகிறது.?

    ஒருவேளை அப்படித் தான் இருக்குமோ? என்னை அம்மா இப்ப வரைக்கும் அன்பாத் தான் பார்த்துக்கறா…ஆனாலும் சமயத்தில் தானும் அழுது என்னையும் அழ வைப்பாள். அதையும் மீறி ஆத்திரத்தில் முதுகில் ‘தபேலா’ வாசிப்பாள். நீ இப்படி வந்து பொறக்கலைன்னு யாரு அழுதா..? யாரு கொடுத்த சாபமோ….ன்னு ஒப்பாரி வைப்பாள். ஒழிஞ்சு போ…ன்னு கடைசியா தனது ஆற்றாமையை என் மீது திராவகமாய் வார்த்தையில் கொட்டி என் சின்ன உடம்பை எரிப்பாள்.

    பெத்தவளுக்கே சில நேரங்களில் எரிச்சலைத் தரும் நான் மற்ற யாரிடம் அனுசரணையை எப்படி எதிர்பார்ப்பது? எனக்குள் நானே சமாதானமாகிப் போவேன்.

    அடுத்து சில மாதங்களிலேயே அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு அம்மாவையும் என்னையும் விட்டு விட்டு வீட்டை விட்டே வெளியேறி விட்டார். அதுக்கு ஒரு விதத்தில் நானும் என் உயரமும் தான் காரணமாக இருக்கும். அதான் அப்பா என்னோடு முகம் தாழ்த்தியே பேச மாட்டாரே.

    “இவன் தான் சிகப்பா, மூஞ்சி மொகரை எல்லாம் நன்னாத் தானே பிறந்து தொலைச்சிருக்கான்…சர்க்கஸ் வேண்டாம்னா எங்காவது சினிமாக் கம்பெனில கொண்டு போய் விட்டுடறேன்…” நீ தான் என் மகன் ராஜான்னு சொல்லி வெச்சுண்டு இருக்கே. இந்த உலகத்துல இது மாதிரி பொறந்தா அவாள்ளாம் அங்க தான் போய் இருக்கா..தெரியுமா? என்னமோ நீ தான் ஓவியக் குழந்தையைப் பெத்துட்டா மாதிரி…ஆர்ப்பாட்டம் பண்ணாதே….அப்பாவின் இந்த வார்த்தைக்கு அம்மா அடிபணியாமல் போனது தான் அவர் எங்களை விட்டுட்டு போய்விட்டார்.

    அம்மாவும் அப்பாவும் இணைந்ததற்கு ஆதாரமா நான் வந்து பொறந்தேன்… அதே நான் இப்படி வந்து பொறந்ததால் அவா ரெண்டும் பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரிஞ்சு போயிட்டாளே….என்னோட துரதிர்ஷ்டத்தை நினைச்சு நினச்சு என் மனசும் உடல்போலக் குறுகிப் போச்சு.

    பள்ளியில் ஒரு நாள் இதையே நினைச்சுண்டு நான் தனியா அழுதுண்டு உட்கார்ந்திருந்தேன். கூடப் படிக்கும் ரேணுகா தான் அருகில் வந்து ” ஏண்டா ராஜா அழறே? என்ன விஷயம்.?..பரிட்சையில் ஃபெயில் ஆயிட்டியா என்ன..?

    இல்லை…நான் அதுக்கு அழலை..

    பின்ன ஏன் அழறே ராஜா..!

    எனக்குச் சிரிக்கத் தெரியலையே… சிரிக்க முடியலையே என்ன செய்வேன் ரேணுகா. என்னைப் பார்த்தால் எல்லாரும் சிரிக்கறா என்னால் சிரிக்க வைக்க மட்டும் தான் முடிகிறது.

    வீட்டில் தான் என் மீது அன்பு செலுத்த யாருமே இல்லைன்னு நினைச்சா..இங்க கிளாஸ்ல கூட என்னைப் பார்த்தாலே எல்லாரும் கேலி செய்யறா. அப்பாவும் எங்களை விட்டுட்டுப் வீட்டை விட்டே வெளில எங்கியோ போயிட்டா . இப்போ நான் வாழறதே வீண்.

    இன்னைக்கு சையன்ஸ் பீரியடில் பசங்க “இவன் தான் ஹுயூமன் ஹைப்ரீட் ” அல்லது மனித போன்சாய்…ன்னு சொல்லிச் சிரிச்சப்போ… அப்படியே ஏதாவது கடல்ல விழுந்து செத்துப் போயிடலாம்னு தோன்றது ரேணுகா…அப்படியே நான் விழுந்து செத்தாலும் என்னைப் பிணமாப் பார்க்கறவா கூடத் தொட பயந்துண்டு தொட மாட்டாளேன்னு கவலையா இருக்கு.

    என்ன ராஜா நீ..?அசட்டு பிசட்டுன்னு பேசாதே.பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம்னு என்
    அம்மா சொல்வா..ஆனாலும் எந்த ஒரு உபயோகமும் இல்லாத யாருமே பிறப்புதும் இல்லையாம். சிறு துரும்பும் பல் குத்த உதவும்… .ன்னு கேள்வி பட்டிருக்கே தானே…? உயரமானவரோட பல் என்பதால் யாராவது கத்தி , கபடா , கடப்பாறையை பல் குத்த உபயோகிப்பாரா ? நீயே நினைச்சுப் பாரேன். அது மாதிரி தான் நீயும்…உன்னாலயும் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பா நடக்கும்..உயிர் வாழ உயரம் மட்டுமேத் தகுதி இல்லைன்னு நீ புரிஞ்சுக்கோ.

    நீ பேசும்போது கேட்க நன்னாத் தான் இருக்கு….நீ மட்டும் என் மேலே இருக்கும் அன்பில் என் குறை தெரியாமல் பேசறே ரேணுகா.

    உனக்கு என்ன குறை..?.உயரம் மட்டும் தானே..? அதெல்லாம் ஒரு குறையே இல்லை. உன்னையாச்சும் எல்லாரும் குள்ளன்னு மட்டும் தான் சொல்றா. ஆனா இந்த உலகத்தில் எத்தனை பேர் எப்படி எல்லாம் இருக்கா தெரியுமா? எல்லாத்தையும் விடவும் கொடுமை என்னவாயிருக்கும்னு நினைக்கறே…நீ?

    போன வாரம் என் அம்மாவோடஎன் மாமாவாத்துக்குப் போயிட்டு ரயில்ல திரும்பி வந்துண்டு இருந்தோம் ….அப்போ எங்க கம்பார்ட்மெண்டுக்குள் நாலு பேர் பிச்சை கேட்டு வந்தாங்க. எங்கம்மா சொன்னாங்க..அவங்க திருநங்கையாம். அப்படி இருக்கறவங்களை வீட்டை விட்டு துரத்தி விடுவார்களாம். அவர்கள் இப்படித் தான் கூட்டம் கூட்டமாக கை தட்டி எல்லார்கிட்டயும் கை ஏந்தி ஜீவனம் நடத்துவார்களாம் எவ்வளவு கஷ்டம் இல்லையா? ஒரு பெண் தன்னை பெண் என்று சொல்ல முடியாத நிலை..ஒரு ஆண் தன்னை ஆண் என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலை. இதை விட நீ தேவலைடா ராஜா. நீயாவது உன் குறையை வாயைத் திறந்து சொல்லிடறே… .பேச முடியாதவா எல்லாம் என்ன பண்ணுவா? யோசிச்சியா?

    நம்ம இங்கிலிஷ் டீச்சர் கூட அன்னிக்கு சொன்னாளே..”காலில் செருப்பு இல்லை யேன்னு கவலைப் படுபவன்…ரெண்டு காலே இல்லாதவனைப் பார்க்கும் வரையில் தான் அப்படிக் கவலைப் பட முடியும்னு. நீயும் சொன்னதைக் கேட்டேல்ல.

    ம்ம்…கேட்டேன்…நம்ம இங்கிலீஷ் டீச்சர் ரொம்ப நல்லவர்…! என்னிடம் ரொம்ப அன்பா பேசுவார்.

    எனக்குள் எதுவோ புரிந்தது போல இருந்தது. ரேணுகா…நீ சொல்றது ஒரு விதத்தில் சரி தான். இருந்தாலும் எனக்குள் இருக்கும் பையனைப் பற்றி இவர்கள் ஏன் இங்கு யாருமே புரிந்து கொள்வதில்லை. எனக்கு நேர்ந்த இந்த ஒரு சின்ன மாற்றம் யாருக்கு வேண்டுமென்றாலும் நிகழ்ந்திருக்கும் இல்லையா? இது எனக்கு மட்டுமா விதிச்ச விதியா என்ன .?

    ராஜா..அவர்கள் உன் வெளி உருவத்தை மட்டும் தான் பார்த்து கேலியும் கிண்டலும் செய்ய முடியும். அதுவே நீ படித்து ஒரு நிலைக்கு உன்னை உயர்த்திக் கொண்டால் அவர்களுக்கு உன் இந்த உயரம் இணையாகி கண்ணுக்கு உன் குறையேத் தெரியாது. உன் உயரமே மறந்து மறைந்து போகுமடா…நீ வேணாப் பாரேன்..என்னிக்காச்சும் நீ நான் சொன்னதை நினைச்சுப் பார்க்கும் காலம் வரும்..!

    அதற்குள் பள்ளிக் கூட மணி அடிக்க இருவரும் கலைந்து போனோம். இன்றும் அது நினைவுக்குள் இருக்கு.

    ரேணுகா அன்று எனது பதினைந்து வயதில் என் சின்ன மனதில் அன்போடு விதைத்த சின்ன நம்பிக்கை விதை தான்…இன்று வரை எனக்குள் மரமாக வளர்ந்து என்னை ஒரு உயரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இல்லாவிட்டால் நானும் இந்த சமூகத்தின் சாட்டைப் பார்வையிலிருந்து தப்பிக்க எனக்கே ஒரு முகமூடி போட்டுக் கொண்டு கூடாரத்துக்குள் சுத்திலும் எல்லாரும் கைகொட்டிச் சிரிக்க நான் ஓரமாக பல்டி அடித்துக் கொண்டு பந்து விளையாடிக் கொண்டு தொப்பியைத் தூக்கி எரிந்து கொண்டும் இருந்திருப்பேன். இப்போ நாலடி இருக்கும் எனக்குள் ஒரு நாலடியாரே குடியிருக்கார்.

    ஆனால் ஷீலா மாதிரியானவர் கண்களுக்கு அந்த நாலடியார் உயரம் உருவமாக மட்டும் தான் தெரிவார் போலிருக்கு.

    மனசுக்குள் பழைய நினைவுகள் அலைமோத , வேலைகள் முழுவதும் அசுர வேகத்தில் முடித்து விட்டு “அப்பாடா என்று நிமிரும்போது “

    தயக்கத்துடன் டைபிஸ்ட் ஷீலா வந்து அருகில் நிற்கிறாள்.

    சார். உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்.

    சொல்லும்மா..என்ன விஷயம்.?…இந்த நாலடியார்ட்ட..! சிரித்தபடியே கேட்கிறேன். அந்த டிபார்ட்மெண்டுக்கு நான் தான் ‘ஹெட்.’. அதுவே அனைவருக்கும் ஜோக்கு மாதிரி இருக்கும்.

    இந்த டிபார்ட்மென்ட் ஹெட் இவர் தான்…இருந்தாலும் இவர் தலை டேபிளுக்கு மேலே தெரியாது..என்று கேலி பேசுவார்கள்.

    ராஜன் சார்..தப்பா எடுத்துக்காதீங்க..சொலணும்னு நினைக்கறேன்…சொல்ல முடியலை. ரொம்பத் தயக்கமா இருக்கு.எனக்கு செய்யும் உதவியாக நீங்க…! நீங்க…! ஷீலா தடுமாறுகிறாள்.

    ம்…சொல்லும்மா..இவ்ளோ தயக்கம் ஏன் உங்களுக்கு..? என்னால் முடிஞ்சதைச் செய்வேன். முடிஞ்சால் செய்வேன்…என்ற என்னைப் பார்த்தவள் , ஏதோ குழப்பத்துடன்….

    இல்ல..இல்ல…இப்ப வேண்டாம்…..எனக்கு சொல்லத் தயக்கமா இருக்கு. நான் எழுதி கொண்டு வரேன்..ப்ளீஸ்…சாரி..சொன்னவள் அன்று பர்மிஷன் கேட்டு விட்டு சீக்கிரமே வீட்டுக்கு சென்று விட்டாள் .

    ஒரு வேளை என் முகத்தைப் பார்த்து பயந்திருப்பாளோ ?

    “அஸ் யு விஷ் ” ன்னு வாய் சொன்னாலும்..மனசு என்னாச்சு இவங்களுக்கு….? என்று என் கேள்வியும் ஷீலாவின் பின்னாலயே போனது. இப்போ தானே இவங்களுக்குக் ரொம்ப விமரிசையா கல்யாணம் ஆகி ஆறு மாதம் ஆகப் போகிறது.

    அன்று ஆபீசில் எல்லாரும் ஷீலாவின் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்து சாப்பாட்டுப் புராணம் பாடிக் கொண்டிருந்தார்கள் .

    ராஜன் சார்….எல்லாரும் வந்தார்கள் நீங்கள் மட்டும் தான் ஆப்சென்ட்…! வந்திருக்கலாம்…என்றான் ஆபீஸ் பியூன்..ஆண்டியப்பன்

    நான் எந்த விசேஷத்துக்கும் போறதில்லைப்பா . கூட்டத்தில் நான் என்னையே தொலைத்து விடுவேன்..என்று சிரித்தேன்.

    உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை சார்….! பியூன் நக்கலாகச் சிரித்தான்.

    ஆமாம்…எனக்கு இறைவன் போட்ட பாதுகாப்புக் கவசம் தான் என் உயரம்ன்னு நினைக்கறேன். அதனால் தான் நான் அதுக்குள்ளே மட்டும் இருக்க விரும்பறேன். எனக்கு அதில் வருத்தமோ , வேதனையோ துளியும் கிடையாது. என்ன ஒண்ணு …அப்பப்போ ஏதாவது குழந்தைகளுக்கும் சில சமயம் ஒரு பெரிய விளையாட்டு பொம்மை மாதிரி தெரிகிறேன்….அதிலும் பெருமை தான் எனக்கு. சில குழந்தைகள் பள்ளிக்கு ஆட்டோவில் போகும்போது…என்னைப் பார்த்து ஹேய்…’இதோடா…ரோபோ’ ன்னு கத்தி சொல்லும் போது …எங்கே…? எங்கே…?..என்று மற்ற குழைந்தைகள் ஆர்வத்தோடு பார்க்கும் போது .போனால் போகட்டும்ன்னு …நானும் அவர்களோடு விளையாட்டில் சேர்ந்து கொண்டு..ரோபோ மாதிரியே கையைக் காலை நீட்டிக் காண்பித்து உற்சாகமூட்டுவேன்.

    ஆனால்…!

    மல்லிகைப் பூவோட வீட்டுக்குள் நுழையும் என்னை பார்த்து பக்கத்து வீட்டுப் பெண் நமுட்டுச் சிரிப்புடன் சிரித்தபடி உள்ளே நுழைவதைப் பார்த்ததும் என் முதுகின் கண்களும் பனித்து விட்டது. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்…நீ கவலைப் படாதே…ராஜா…மனம் முதுகைத் தட்டிக் கொடுத்தது.

    கை கால்களை அலம்பும் போது…தண்ணீர் தட்டுப் பாட்டுக்கு இது தேவலை என்று சொல்லிக் கொண்டேன். மற்றபடி எல்லாரும் செய்யும் வேலைகளைத் தான் நானும் செய்கிறேன்.

    சூடாக காப்பி போட்டுக் கொண்டு வந்து அப்படியே டிவி யைப் போட்டு விட்டு, சோபாவில் உட்கார்ந்தது தான் தாமதம்.

    “பழைய இரும்பு, ஈயம், பித்தாளைக்குப் பேரிச்சம்பளம்…” பழைய இரும்பு , ஈயம், பித்தாளைக்குப் பேரிச்சம்பளம்…” என்று ஒரு ஓட்டை சைக்கிளை உருட்டிக் கொண்டு கவுண்டமணியின் ஓட்டைக் காரைப் பார்த்து கத்திக் கொண்டிருந்த குள்ளமணியை கவுண்டமணி உதைத்து அனுப்பும் காட்சி….” ஆதித்யா சானலில் கத்திக் கொண்டிருந்தது… எனக்குள் எரிச்சலைத் தந்தது.

    ஏதோ…குள்ளமாகப் பிறந்து விட்டால் பிறருக்கு சிரிப்பதற்காகவே இறைவன் கொடுத்த பிறவி போல எங்கள் படைப்பை மாற்றிப் பார்க்கும் இந்த சமூகம். இதற்க்கெல்லாம் எப்போது விடிவு வருமோ? மற்ற உடல் ஊனங்களை உள்ளவர்கள் மீது கருணை காட்டும் இந்த சமூகம், குள்ளமாய் இருக்கும் என்மீது மட்டும் வெறுப்பைக் காட்டி வேதனை தருகிறது !

    நல்லவேளையா அன்று ரேணுகா என்ற அந்தப் பெண் தேவதை சமயத்தில் கொடுத்த ஒரு ஊக்கத்தால் நான் என்னையே மனதளவில் உயரமாக ஆக்கிக் கொள்ள படிக்க ஆரம்பித்தேன். குறிக்கோளே வெறியாக படிக்க ஆரம்பித்தேன். அதன் பலன் தானே எனக்கென ஒரு அரசாங்க நாற்காலியைக் கொடுத்து சம்பளமும் கொடுத்தது. பின்ன ஊரெல்லாம் கேலி பேசும் ஒரு குள்ளன் அத்தனை அவமானத்தையும் தாங்கி படித்து அரசு உத்தியோகம் கிடைப்பது என்பது சும்மாவா? இல்லாவிட்டால் இந்த உயரமான மனிதர்களின் உதாசீனத்தில் என் மனசு தினமும் பூமிக்குள் புதைக்கப் பட்டு மனசும் குள்ளமாகி இருக்கும்.

    பாவம் இந்தக் குள்ளமணி….அந்தக் காலத்திலிருந்து யாராவது ஒருத்தர் உதைப்பது போலவே காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். நினைத்தபடியே டிவி யை அணைத்து விட்டுக் கிளம்பினேன்.

    மல்லிகைப் பூவை முருகன் படத்துக்கு போட்டுக் கொண்டிருந்தேன்..அப்போது பார்த்து கதவு தட்டும் ஓசை கேட்டது.

    யாராயிருக்கும்? கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறேன்.

    பால்காரப் பையன்…தியாகு . வாசலில் அவனை அண்ணாந்து பார்க்கிறேன்.

    என்னப்பா தியாகு வேணும்? சொல்லுப்பா..என்றேன்.

    அண்ணா….போன தடவை நீங்கள் தான் எனக்கு டெர்ம் ஃபீஸ் கட்டினேள் . நான் இந்த தடவையும் உங்களைக் கேட்கலாம்னு வந்திருக்கேன். அதான் அம்மா உங்களைப் பார்த்து கேட்கச் சொன்னாள். அவன் குரலில் தயக்கம்.

    கண்டிப்பாத் தரேன்…எவ்வளவு வேணும்..?

    ஆறாயிரம் ரூபாய்….பணிவோடு சொல்கிறான் தியாகு.

    எனக்கென்ன கல்யாணமா…பிள்ளை குட்டியா..? இல்லை உடன் பிறந்தவா தான் இருக்காளா? நான் தனிக்கட்டை பிரமச்சாரி…என் பணம் உன் படிப்புக்கு உதவினால் அதுவே நேக்குப் போறும் . வருஷா வருஷம் வந்து வாங்கிக்கோ.

    இந்தா செக் . பணத்தை பாங்கில் வாங்கி ஃபீஸ் கட்டிட்டு சொல்லு..அப்படியே இந்தா என்னோட ஷர்ட் நாலு தரேன்…உன் தம்பிக்கு கொண்டு போய்க் கொடு….எல்லாம் புதுசு தான் என்று சொல்லிக் கொண்டே எடுத்துத் தருகிறேன்.

    அண்ணா….இப்போ என் தம்பி கூட நன்னா உயரமா வளர்ந்துட்டான். அவனுக்குப் பத்தாது… அதனால ஷர்டெல்லாம் வேண்டாம்…என்று சொல்லிவிட்டு செக்கை மட்டும் வாங்கிக் கொள்கிறான் அவன்.

    முகத்தில் அரை விழாத குறையாக சட்டையைக் கசக்கித் தூர எறிந்தேன். என்னோட சட்டைகள் கூட யாருக்கும் உபயோகப் படாதா? போனால் போகட்டும் போடா….! மனசு தைரியம் சொன்னது.

    வழக்கம் போல பவர்கட்டுக்கு முன்பே லிஃப்டைப் பிடித்து என் சீட்டில் போய் அமர்ந்ததும் …ஷீலா கூடவே ஒரு ஏழு வயது பெண்ணோடு உள்ளே நுழைகிறாள் .

    குட் மார்னிங் சார்..இது என்னோட நாத்தனாரின் பெண். இன்னைக்கு ஸ்கூல் லீவு..நானும் வரேன்னு சொன்னாள் . அழைச்சுண்டு வந்தேன். என்றவள்..நேற்று கேட்க வேண்டும் என்று நினைத்ததை இதில் எழுதி இருக்கிறேன். என்று ஒரு பேப்பரை என் டேபிள் மீது வைத்து விட்டு நகர்ந்தாள் .

    அவள் நகர்ந்ததும்….நான்காக மடித்த அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்கிறேன். அதில்.

    ” சாதாரணமாக நாம் யாரை அதிக நேரம் நேருக்கு நேர் பார்க்கிறோமோ, பழகுகிறோமோ அவர்களைப் போலவே நம் மனோபாவம் மாறும் என்றும்…குறிப்பாக ஒரு தாயாகப் போகிறவள் தனது குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அதற்கு ஏற்றார்போல படங்களைப் பார்த்து வரச் சொல்வார்கள்..இப்போது எனக்கு இது மூன்றாவது மாதம் நடக்கிறது.நான் நாள் பூராவும் என் எதிரில் இருக்கும் உங்களைத் தான் பார்த்து வருகிறேன். அதனால் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை உங்களைப் போன்ற உருவத்துடன் பிறந்து விடக் கூடாது என்று எண்ணுகிறேன்.தயவு செய்து என்னை கீழ் தளத்துக்கு மாற்றி விடுங்கள். தவறாக நினைக்க வேண்டாம். இது என் தனிப்பட்ட வேண்டுகோள்.

    இதைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம்..” புரிந்து கொண்டு ஆவன செய்வீர்கள்…என்று நம்புகிறேன்.

    ஷீலா சந்திரன்.

    அவள் எழுதி இருந்ததைப் படித்து முடித்தேன்.

    சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்தை சொல்லியிருந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. ஒருவேளை இவள் சொல்வது போல என் அம்மாவுக்கும் இப்படி ஏதாவது நிகழ்வுகள் நடந்திருக்கலாமோ..? என்று கூட எண்ணத் தோன்றியது. ஷீலா புத்திசாலிப் பெண்…மனசுக்குல அவளைப் பாராட்டிய படியே…அவளைக் கீழ் தளத்திற்கு மாற்ற உத்தரவு பண்ணி ஆர்டர் அடித்து கையில் கொடுத்தேன்.

    அவள் கண்களில் நன்றியும் கண்ணீர்த்துளியும் சேர்ந்து நின்று கண்ணை மறைத்தது. என் கண்களில் பெருமை பொங்கியது. “ரொம்ப சந்தோஷம் ஷீலா….நல்ல வேளை சொன்னீர்கள்….இல்லாவிட்டால் இதெல்லாம் என் சின்ன மண்டைக்குள் எப்படி உரைக்கும்…? என்று சொன்னதும் அவள் ரொம்ப நன்றி சார் என்று தழு தழுத்தாள் . பின்பு தன்னுடைய ஹாண்ட் பேக்கை தூக்கி மாட்டிக் கொண்டு..சில பைல்களையும் எடுத்துக் கொண்டு கூட வந்த நாத்தனார் மகளையும் அழைத்துக் கொண்டு “அப்போ வரேன் சார்…பார்க்கலாம்..” என்று சொல்லி கீழ் தளத்துக்குக் கிளம்பி விட்டாள்.

    இந்தா…கொழந்தே…உன் பேர் என்னம்மா..? இந்தா சாக்லேட்டு….எடுத்துக்கோ என்று கொடுத்ததும் .

    சிறிது தயங்கினாலும்…ஓடி வந்து வாங்கிக் கொண்டு சிரித்து விட்டு ஷீலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு மறுபடியும் என்னைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள் .

    அடுத்த அரை மணி நேரத்தில்….பவர் கட்டாகி ஆபீசே இருட்டில் சிக்கிக் கொண்டது.இன்னும் இரண்டு வாரத்தில் ஜெனரேட்டர் வைப்பதாக ஹெட் ஆஃபீஸில் இருந்து தகவல் வந்தது. அது வரை கொஞ்சம் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும். அதற்குள் கீழிருந்து அழுகை சத்தமும், எதிரொலியும் தொடர்ந்து கேட்டது. யார்? என்ன ? எது? என்று ஆயிரம் கேள்விகள்.எனக்கு முன்னால் ஓட….நானும் விறு விறுவென்று மாடிப் படியைக் கடந்து தாவி குதித்து இறங்கவும்….ஷீலா பயத்தில் உறைந்து போய் லிஃப்ட்டின் அருகே நின்றிருந்தாள் …அருகில் இருந்த அனைவரும் என்னவோ போல பர பரத்துக் கொண்டிருந்தார்கள்.

    நிலைமையை உடனே புரிந்து கொண்டேன் நான். யாரும் கூட்டம் போடாதீங்க…கொஞ்சம் விலகுங்க..என்று சொல்லிக் கொண்டே நான் நுழைந்தேன்…என் உயரத்துக்கு அந்த லிஃப்ட் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது எப்படியாச்சு? என்றேன், உள்ளே யார் இருக்கானாக ஷீலா என்றும் கேட்டேன்.

    ஷீலா அழைத்து வந்த பெண் குழந்தை லிப்டில் ஏறி ஏதோ பட்டனைத் தட்டியதும் லிப்ட் தானாக மேலே ஏறத் தொடங்கியது அடுத்த சில நொடியில் ‘பவர் கட் ‘ஆகி….லிஃப்ட் முக்கால்வாசி மேலே சென்று அந்தரத்தில் நின்று விட்டது . லிஃ ப்ட் இருட்டில் மாட்டிக் கொண்ட குழந்தையோ பயத்தில் வீரிட்டு பின்னால் ஓரத்தில் ஒடுங்கிக் கொண்டது. அவள் போட்ட சத்தத்தில் கட்டடமே அதிர்ந்தது.

    லிஃப்ட்டின் அடிப்பகுதி மட்டும் மேலே அந்தரத்தில் சிறு இடைவெளியில் தெரிய…ஒரே ஆதரவு அது பழங்கால ஸ்ப்ரிங் அமைப்பை உடையது..இருந்த இடைவெளி சிறிது நம்பிக்கையைத் தந்தது.இருந்தும் குழந்தையை வெளியே கொண்டு வர வேண்டுமே.. யாராவது வந்து குழந்தையைக் காப்பாத்துங்கோ என்று ஷீலா கத்தினாள். வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் பெருகியது ! யாரும் உள்ளே தவழ்ந்து போக முடியவில்லை. உள்ளே குழந்தையின் அலறல்! வெளியே ஷீலாவின் அலறல்.

    சார்…திடீர்னு இப்படியாச்சு சார்…நான் இப்படியாகும்னு நினைக்கவே இல்லை சார்..ப்ளீஸ் யாராவது ஏதாச்சும் செய்யுங்களேன்…ஷீலா துடித்தாள். குழந்தை பயப்படுவாளே…அவளது தவிப்பு எனக்கும் தொடர்ந்தது.

    நான் ஒரு மரச் சேரைப் போட்டு ஏறி அதிலிருந்து மிகவும் எளிதாக லி ஃப்டைப் பிடித்து தொங்கி, மெள்ள, மெள்ள க்ரில்லை இழுத்துத் திறந்து இடைவெளி வழியே உள்ளே நுழைந்து கொண்டு அதனுள் ஏறினேன்.ஓரமாக அழுது கொண்டிருந்தவளை சமாதானப் படுத்தினேன்.

    முதலில் அந்தப் பெண் பயந்தாலும் என்னை அந்த பயத்துடனேயே இறுக்கிக் கட்டிக் கொண்டாள் . அந்த அணைப்பில்….என்னுள் எழுந்த அன்பில் பெருமிதம் கண்டேன்.கவலைப் படாதே என்ன…..நாம வெளில போயிடலாம்….என்னை கெட்டியாப் பிடிச்சுக்கோ…என்று சொல்லிக் கொண்டே இருந்த சின்ன இடைவெளி வழியாக குழந்தையை வெளியே கொண்டு வந்து நானும் மெல்ல வெளியேறி வரவும்…அங்கிருந்த அனைவரின் முகத்தில் சந்தோஷமும் வாய்க் கூச்சல்களும், கைதட்டல்களும் காதைப் பிளந்தன. ஷீலா கண்களில் கண்ணீர்த் துளிகள் மின்னின ! குழந்தை ஷீலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “மாமி” என்று அழுது கொண்டே என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.

    என்னடி ரம்யா இப்படிப் பண்ணிட்டே….என்று அவளை வாரி அணைத்துக் கொண்டு அழுத ஷீலா…அடுத்து மூன்று மணி நேரம் மின்வெட்டு வேறு…நல்லவேளையா நீங்க வந்து தெய்வம் போல இவளைக் காப்பாற்றினீங்க….என்று ஆனந்தக் கண்ணீரோடு இரு கை கூப்பி சொன்ன ஷீலாவின் கண்களில் நன்றி தெரிந்தது.

    “எனது உயரம் இதற்கு பயன் பட்டதை நினைத்தால் எனக்குப் பெருமையா இருக்கு ஷீலா..” என்றேன்..

    அப்போது ஷீலாவின் மங்கிய விழிகளில் ‘நாலடியார்’ நாற்பதடிக் கோபுர உயரத்தில் எரியும் அணையா விளக்காய் தோன்றினார். உயரம் ஒருவரின் உருவத்தில் இல்லை என்று ரேணுகா சொன்னது இன்றும் காதுக்குள் ஒலித்தது.

    Share
  • முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ

     

    Galileo Galilei

    (1564-1642)

     

    சி. ஜெயபாரதன்,B.E (Hons), P.Eng (Nuclear) Canada


    “கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”

    காலிலியோ

     

    “பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”

    காலிலியோ

    விசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ!

    1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார்! அவர் செய்த குற்றம், மதத் துரோகம்! போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம்! காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம்! அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார்! ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார்! அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்!

    ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர்! காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது! ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை!

    Fig 2 The Trials of Galileo-1

     

    விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி!

    ‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார்! ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார்! பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ!

    ஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ! உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார்! கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

    காலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

    காலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார்! தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks]! 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார்! தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார்! அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது! 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார்! ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது!

    Fig 3 Confession to the Church

     அரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார்! கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார்! அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார்! 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர்! அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.

    1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது! ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார்! ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது! அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது! காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.

    பல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று! அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று! காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்!

    1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார்! அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார்! அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது! எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.

    Fig 4 The Trials of Galileo-2

    ‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார்! அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது! ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை! தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார்! மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது! உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது! காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார்! விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது! சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று! ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது!

    1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார்! அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார்! பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்!

    காலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்

    விஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ! அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ! துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும்! ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே! காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது

    Fig 5 Galileo Looking at Planets

    பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார்! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்! காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion]! மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity]! கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது! கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது! அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton ‘s Laws of Motion] படைக்க வழி காட்டியது!

    அடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார்! ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார்! ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth ‘s Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்!

    1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார்! அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது! காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார்! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார்! 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார்! அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்!

    Fig 6 Galileo's Refractor

    விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார்! 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன! சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார்! பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

    1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார்! 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி! 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு! வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார்! அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை!

    Fig 7 Galileo's 400th Birthday

    திருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது! வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது! தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா! உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள்! காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்!

    அவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள்! அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது! ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது! புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo ‘s Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது!

    மெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார்! 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது! அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர்! அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது! அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது!

    Fig 8 Galileo's Tomb

    சிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு! 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்!

    340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார்! 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன! கிறிஸ்துவ விஞ்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு ‘ ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது!

    ‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார்! நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக்களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே!

    1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார்! இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார்! நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது! அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter ‘s Satellites] படமெடுத்தது!

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 8, 2009 (R-2)

    Share
  • ஆத்ம சாந்தி

    ஹேமா

    “வரணும்! வரணும்!” என்று இவனுக்கு பின்னால் நின்றிருந்த யாரையோ மிக பவ்யமாய் வரவேற்றார் அப்பா. தளர்ந்த உடலை லேசாக முன்புறம் வளைத்து, கண்களில் கனிவைத் தேக்கி, கணீரென்ற குரலில் அதைச் சொன்ன போது ‘ஓம்! ஓம்!’ என்று மணியின் ஓசையைப் போல ஒலித்தது. அவரது முகத்தின் தசைகள் ஒவ்வொன்றும் புன்சிரிப்பை எதி’ரொளி’த்தன. கண்களின் வெளிச்சம் வதனத்தின் கவர்ச்சியை உயர்த்திக் காட்டுவதாய் இருந்தது.

    அதன் வசீகரத்தில் லயித்துக் கொண்டிருந்த போதே அந்த முகம் கொஞ்சம் கொஞ்சமாய் இவனை நோக்கி நகர்ந்தது. இப்போது அந்தக் கண்களின் கவர்ச்சி மறைந்து பரிதாபமாய் கெஞ்சுவது போல மாறியது. “வரணும்! வரணும்!” என்று இப்போது முணுமுணுப்பாய் வெளிப்பட்ட வார்த்தைகள் வரவேற்பில்லாத வேறு தொனியில், மிக அவசரமாய் ஏதோ ஒன்றை சொல்ல விரும்புவதாய், அடிவயிற்றைக் கலங்க வைப்பதாய் இருந்தது.

    சட்டென்று பின்னே திரும்பிப் பார்க்க, அங்கே யாருமற்று வெறிச்சோடியிருந்தது.  பெருகிய வியர்வையில் திடீரென்று விழிப்பு தட்ட, மனைவி ஆழ்ந்த நித்திரையிலிருந்தாள். மனம் திடுக்கிட்ட நிலையிலிருந்து வெளியேறாமல் திகைத்து போயிருந்தது. இந்த வாரத்தில் மட்டும் இது போன்ற கனவு வருவது இன்று மூன்றாவது முறை. நேற்றைக்கு முன்தினம் கனவில், அப்பா தெருவில் இவனை பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தார். அவர் எதையோ சொல்ல நினைப்பதாக இவனுக்கு தோன்றியது. ஆனால் நின்று திரும்பி பார்க்கும் போதெல்லாம் மறைந்து போனார். இன்று மறுபடியும் . . .

    இப்படி திரும்ப திரும்ப கனவில் அவர் வர ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும் என்று அவன் மனம் அழுத்தமாய் நம்பத் தொடங்கியது. பொதுவாய், தான் இது போன்ற விஷயங்களை நம்ப மறுப்பவன் என்பதை அந்த நிலையில் மறந்து போனான். எப்படியாவது விஷயத்தை அறிந்து அப்பாவின் கவலையைத் தீர்க்க வேண்டும் என்ற தவிப்பு மட்டும் மேலோங்கி இருந்தது. மாரடைப்பு வரும் நேரம் எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து, முடியாமல் இறந்துபோனாரா அல்லது எதையாவது சொல்லி எச்சரிக்க விரும்புகிறாரா . . . புதிர் விளையாட்டில் ஒளிந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகளைத்  தேடுபவனாய் மனதில் தோன்றிய சாத்தியக் கூறுகளை சலித்துக் கொண்டிருந்தான்.

    நெடுநேரம் கடந்தும் மனம் கனவை நோக்கி சென்றபடியே இருந்தது. அப்பாவின் நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தன. தோள்களின் மேல் அமர்த்திக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்த அப்பா . . . தோட்டத்தில் தன்னோடு அமர்ந்து ரயில் பூச்சியின் கால்களை கணக்கிட்ட அப்பா . . . நூலகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகத்தின் ருசியை உணரச் செய்த அப்பா . . . அம்மா ஊருக்குச் சென்றிருந்த போது மீ கோரீங் செய்து கொடுத்த அப்பா . . . பரீட்சையில் குறைந்த மதிப்பெண் எடுத்த போது, உன்னால் முடியும் என்று தட்டிக் கொடுத்த அப்பா . . . அம்மா இறந்த போது அழுதுக் கொண்டிருந்தவனை இறுக்க அணைத்துக் கொண்ட அப்பா . . . விழிகளில் அனிச்சையாய் கண்ணீர் வழிந்தது.

    அப்பாவிற்கு இவன் வெளிநாடு செல்வதில் என்றும் விருப்பம் இருந்தது இல்லை. ஆனாலும்,

    “நம்ம நாட்டு வசதிய பயன்படுத்தி படிச்சிட்டு, வெளிநாட்டுக்குப் போயி வேலை செய்யறது என் மனசுக்கு என்னவோ சரியாப் படலப்பா!”

    என்று லேசான மறுப்புக் குரல் எழுப்பியதோடு நிறுத்திக் கொண்டார். இவன் யு.எஸ் போவதைத் தடுக்கவில்லை.

    அங்கு நன்கு காலூன்றிய பின் தன்னுடன் வருமாறு அழைத்த போது, வந்த அப்பாவால் அங்கு ஒருமாதம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. கோப்பிக் கடையையும் அதன் உணவையும், சலசலவென்று பேசிக் கொண்டிருக்கும் மக்களையும் விட்டுவிட்டு அவரால் இருக்க முடியவில்லை. வெண்டைக்காயை மெல்வது போல் வழவழவென்றிருந்த ஆங்கிலம் இவருக்கு மிக அன்னியமாய் இருந்தது. வருடக் கணக்காய் தூரங்களை கால்களால் கடந்தே பழக்கப் பட்டவருக்கு, வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அடுத்தவரின் துணையை எதிர்பார்க்கும் நிலை கால்களை இழந்த உணர்வைக் கொடுத்திருக்கவேண்டும். வெளியே போகாமல் தொலைக்காட்சியின் தலையைப் பார்த்துக் கொண்டிருக்கவும் விரும்பாமல், வந்த இருபது நாட்களில்

    “அறையை சேவாக்கு விட்டுட்டு அப்படியே வந்திட்டேம்ப்பா, அவங்க சிங்கப்பூருக்கு புதுசு வேற, என்ன செய்யறதுன்னு புரியாது. நான் இப்போ கிளம்பறேன், முடிஞ்சா பெறகு ஒரு முறை வறேன்” என்றார்.

    “ஏம்ப்பா! அவங்க தான் குடும்பத்தோட இருக்காங்களே! பிறகென்ன? அப்படியும் ஏதாவது பிரச்சனைன்னா சித்தப்பா வீட்டுல பார்த்துக்க போறாங்க . . . நீங்க ஏம்ப்பா அநாவசியமா கவலைப்படறீங்க!” என்றதும் அவர் முகம் தொங்கிப் போய் விட்டது.

    அதன் பிறகு செடிகளுக்கு அவர்கள் சரியாக தண்ணீர் ஊற்றுவார்களா . . . அடுப்பை சரியாக மூடுவார்களா . . . வெளியேறும் போது கதவை சரியாக பூட்டுவார்களா . . . வெளியில் விட்டு வந்த செருப்பு மழையில் நனைந்திருக்குமா என்பது போன்ற உப்பு சப்பற்ற கவலைகளை அவ்வப்போது வெளியிடத் தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் வீட்டை எப்போதும் முதுகிலேயே சுமந்து திரிபவராக மாறினார்.

    எதையோ யோசித்தபடியே அமர்ந்திருந்த போதும், இரவில் தூங்க இயலாமல் அலைந்துக் கொண்டிருந்த போதும், அங்கிருந்து வெளியேறுவதற்கு பொருத்தமான காரணத்தை அவர் மனம் துழாவிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

    அடுத்த வாரத்தில்,

    “ஏம்ப்பா, அம்மாவுக்கு திதி வருது. நான் சிவன் கோயிலுக்கு போய் ஏதாவது செய்யணும், என்னைய ஃப்ளைட் ஏத்தி விட்டுடு! உனக்கு எப்ப முடியுதோ வந்து பார்த்துட்டு போப்பா!” என்று கண்கள் மிக லேசாய் கலங்க, கெஞ்சும் தொனியில் கேட்ட போது இவனால் மறுக்க முடியவில்லை.

    அதன் பின் அவன் சிங்கப்பூருக்கு வரவேண்டும் என்ற ஆவலை அவர் தொலைபேசியில் வெளிப்படுத்துவது ஏனோ குறைந்து போனது. இவனும் கிளம்பலாம் என்று அவ்வப்போது திட்டம் தீட்டி, இதோ அதோ என்று தள்ளிச்சென்று, அப்பாவின் இறப்பிற்கு தான் கடைசியாய் வந்து சேர்ந்திருக்கிறான்.

    பதினாறாம் நாள் காரியம் முடிந்த பின்னும் அவனால் அப்பா இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சந்தன சோப்பும் விபூதியும் மணக்க, எந்நேரமும் அப்பா தனது அறையிலிருந்து வெளியே வந்து, ‘எழுந்துட்டயா, சாப்பிட வாப்பா!’ என சொல்லக் கூடும், என்று தோன்றிய படியே இருந்தது.

    இரவெல்லாம் யோசித்துக் கொண்டிருந்ததில், காலை கண்விழிக்க நேரமாகிவிட்டது.  அன்றைய பொழுது முழுவதும் விடியற்காலைக்  கனவு அவனைச் சுற்றியபடியே இருந்தது. அப்பாவின் கண்களில் தோன்றிய பரிதாபம் நினைவில் சுழன்று, இவன் தொண்டையை அடைக்கச் செய்து, கண்களில் நீரை வரவழைத்தது. எதையாவது செய்து அவரது வருத்தத்தை உடனே துடைத்துவிட வேண்டும் என்று பரபரத்தது. அப்படி செய்யமுடியாமல் இருக்கும் நிலை துக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதாய் இருந்தது.

    “அப்பா ஆசைப்படி சிங்கப்பூருக்கே வந்துடு சரியாகிப் போகும்” என்றான் நண்பன். மனைவிக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அடங்கிய புன்னகையில் அதைப் புறந்தள்ளினாள். வேறு சூழ்நிலையில் அவனும் இதே போல செய்திருக்கக் கூடியவன் தான். ஆனால் அவ்வப்போது கனவுகளில் தொடர்ச்சியாய் அப்பா வருவதும், அதிலும் ஏதோவொரு துக்கத்தை சுமந்து வருவதும், மனதில் சுமையை ஏற்றியது. அப்பாவின் ஆவி ஏதோவொரு சங்கடத்தில் இருப்பதாய் நம்பி தவித்தான். அதை சாந்தப்படுத்தும் சாத்தியக்கூறுகளை யோசிக்கத் தொடங்கினான். ஆத்மாக்களுடன் பேசுவதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சி செய்தான். மொத்தத்தில், உடல் புறவேலைகளைச் செய்தாலும் மனதின் ஒரு மூலை இதைப் பற்றி ஓயாமல் சிந்தித்தபடியே இருந்தது. சில மாதங்களில் இதற்கான விடை அவனுக்கு கிடைக்கத் தான் செய்தது.

    சரியாய் அப்பா இறந்த மறுமாதம் மனைவிக்கு நாட்கள் தள்ளிப் போனதையும், ஒன்பது மாதத்தில் பிறந்த குழந்தையின் முதுகில் அப்பாவிற்கு இருந்ததைப் போலவே கூட்டு மச்சம் இருந்ததையும் பார்த்தபின், மரபணு என்று மனைவி சொன்னதையும் மீறி, கனவில் அப்பா ‘வரணும்’ என்று சொன்னதற்கான விளக்கமாக அதை எடுத்துக் கொண்டான்.

    அதன் பிறகு அவனுக்கு அது போன்ற கனவுகள் வருவதே இல்லை.

    Share
  • ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2

    தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,
    சிதம்பரம்.

    எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள்

    1968

    குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

    சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

    பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

    எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

    பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

    ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.

    விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

    சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

    2. அதிர்ச்சி …!

    குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
    வெளியான வருடம்:  1970.

    இரண்டாவது  மலராக நறுமணம் வீசும் இந்த “அதிர்ச்சி ” என்கிற இந்த குறிஞ்சி மலரைப்  பறிக்கிறேன்..

    கதை குறிஞ்சிப்பூவாக மலர்ந்து கிட்டத்தட்ட 42 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும்  இன்னும் சிறுகதை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டு படித்தவர் மனதை இறுக்கிப் பற்றிக்  கொண்டிருக்கிறது.

    மலரின் கூம்பு  இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக கூம்பாக உள்வாங்கி உணர்வுகளைக் கொத்துக் கொத்தாக மென்மையாக மனதைக்  கவர்கிறது.

    பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரையொத்த இந்த குறுநாவலைப் படிக்கும் ஒவ்வொரு உள்ளமும் “இது போன்ற ஒரு கதையை இது வரை படித்ததில்லை….இனியும் யாரும் இவ்வளவு அழகாக எழுதவும்  மாட்டார்” என்று எண்ணாமல் இருக்க முடியாது. படிக்கும் போதே கதை பேசும் ‘அதிர்ச்சி’ அனுபவம் உண்டாவதும் உறுதி.

    இத்தனை ‘அதிர்ச்சி’ தரும் கதையில் அப்படி என்ன தான் இருக்கிறது..? குறிஞ்சி மலரை மலை சார்ந்த இடங்களில் உயரமான இடங்களில் மட்டுமே காணக் கிடைப்பது போல கதையைப் படிக்கும் போதே மலை ஏற்றம் தரும் உணர்வுடன் கொண்டு செல்வது புதுமை.

    கதையின் சாரம்:

    தனது  மனைவியை இழந்தவர் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தனக்கு இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டு மேலும் அரை டஜன் குழந்தைகளைப் பெற்று, இருக்கும் இயலாமை , ஏழ்மை இரண்டும் தீராமல் போக, வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாது இருக்கும் ஒரு தகப்பன்.

    ஏழ்மை தனக்குத் தந்த வரமான வாழ்க்கையாக இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட அவரின் மனைவி தான் வெறும் பிள்ளைப் பெறும் இயந்திரம் மட்டுமே எனபதைப் போல பத்து வருடத்தில் ஆறு குழந்தைகளைப் படைத்து படைப்பாளியாகப் பெருமை கொள்ளும் விதமாக ‘சித்தி’ யின்  பாத்திரப் படைப்பு.

    தாயை இழந்த மூத்த மகள் தன் தந்தை செய்த இந்த இரண்டாம் கல்யாணத்தை ஏற்க மனசில்லாமல்,மனதோடு புழுங்கி இப்படி செய்து விட்டாரே..என்று வேதனை பட்டு, ஆத்திரப் பட்டும், அதனாலேயே தனக்கு அன்னை முறையாக வந்த ‘சித்தி ‘ யைக் கூட மனசளவில் ஏற்காமல் தாயை நினைத்து வருந்துவது.

    குடும்பத்தின் கஷ்டத்தை மனதில் கொண்டு அக்கா, தங்கை இருவருமே மாலையில் பஜ்ஜியும், போண்டாவும் செய்து தெருத் தெருவாக நடந்து விற்பனை செய்ய, அந்த வியாபார நேரத்தில் நடக்கும் வியாபாரம் செய்கிறேன் என்று வீடுகளில் ஆண்கள் செய்யும்  பல வித அத்துமீறல்கள்.., அவர்களின்  வக்கிரங்கள் , ஒரு ஏழைப் பெண் தனது வாழ்வாதாரத்துக்கு உழைத்து சம்பாதிக்க முனைந்தாலும் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, அவர்களின் நைந்து போன உள்ளத்தைப் பார்க்காமல்…உடலைப் பார்த்து தனது வக்கிரங்களுக்கு வடிகால் தேட முயலும் போது…மேலும் உள்ளம் புண்ணாக…அங்கங்கு வியாபாரம் செய்வதையே நிறுத்தி விடுகிறார்கள்.இதற்கெல்லாம் விடிவே கிடையாதா? என்றும்  மனசு ஏங்க  வைக்கிறது.

    அக்காவுக்கு வயதாகியும் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறதே என்று மனசுக்குள் கவலைப் பட்டு…அதைத் தனது அக்காவிடமே எடுத்துச் சொல்லி…நானா இருந்திருந்தால் ‘ஓடிப் போயிருப்பேண்டி அக்கா….ஓடிப் போயிருப்பேன்…’ என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்துகிறார் தங்கை ஜானகி. தங்களது பெருகிய குடும்பத்தின் ஏழ்மையை விரட்ட வீடு வீடாகச் சென்று பஜ்ஜியும் , போண்டாவும் வியாபாரம் செய்து பணம் கொண்டு வருவதனால் தான் தனது தந்தை நம் இருவரையும் திருமணம் செய்து வைக்காமல் வீட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார். இதை நானே கேட்கிறேன்…என்று நேரம் பார்த்து தன்  தந்தையை கேட்கும்  அனல் பறக்கும் வார்த்தைகளைக்  கேட்டு அக்காவே தங்கையைத் திட்டுகிறாள்.

    தனது இயலாமையை உணர்ந்தாலும் இப்போது தன்னால் ஏதும் செய்ய இயலாது , மகளின் திருமணத்திற்கு வரதட்சிணை ஏதும் தந்து நடத்தி வைக்க  இயலாது என்று தெரிவித்ததும்…இப்பேர்பட்ட குடும்பத்தை விட்டு ஓடினாலும் பரவாயில்லை என்னும் தனது உணர்வுக்கு சரியான முடிவாக அவள்  மனதுக்குள் ஏற்றுக் கொள்கிறாள்.

    இந்நிலையில், அக்காவின் வாடிக்கையாக வியாபாரம் செய்யும்  பெட்டிக்கடைக்காரர் நடேசன் அவளைக் காதலிப்பதாகவும், தான் முதலியார் வகுப்பைச்  சேர்ந்தவர் என்பதால்  உள்ளூரில் மணந்து கொண்டு வாழ இயலாது என்பதால் எங்காவது வெளியூரில் சென்று வாழலாம்…அதற்கான  சம்மதம் கேட்டுக் கடிதம் எழுதித் தரவும். அதை வாங்கிப் படித்து மனம் ஏற்றாலும் , பரிபூரணமாக நடேசனைத் தானும் விரும்பினாலும், குடும்பத்தில் மூத்தவளாக இருந்து கொண்டு, தனக்கும் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்னும் ஒரே காரணத்தில் சுயநலமாக எண்ணி  தான் ‘நடேசனோடு ஓடிப் போனால்’ தன்  தங்கையின் திருமணம் தடைபட்டு விடுமே என்ற ஒரே நல்லெண்ணத்தில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு அவரைத் நிராகரித்து, தவிர்த்து விடுகிறாள்.

    இருந்தும் சில நாட்கள் கழித்து நடேசனைப் பார்க்க வேண்டும் என்று மேலோங்கிய எண்ணத்தினால் அந்தப் பெட்டிக் கடைக்குச் செல்லும் போது  தான், அவர் அந்தக் கடையை வேறோருவருக்கு விற்று விட்டு சென்ற விஷயம். மனம் ஓடிந்தவளாக  வீடு திரும்பும் அக்கா இனி அவனைப் பார்க்கும் வாய்ப்பு தனக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு வருந்துகிறாள். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று தன்னைத் தேற்றி கொண்டு வளைய வரும் வேளையில்  தான் அவளது தங்கை ஜானகி தான் இரண்டு வருஷமாக அந்த ஊரின் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தும் கேசவன் நாயரின் தம்பி மாதவன் நாயரைத் தான் என்பவரை மனதார விரும்புவதாகவும், அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு  அவசரப் படுத்துவதாலும், அவர்கள் குடும்பத்தோடு கேரளாவுக்கு சென்று விடுவதால் தானும் அவர்களோடு சேர்ந்து சென்று விடலாம் என்னும் எண்ணத்தில் இருப்பதாகவும் சொல்கிறாள்.

    இரண்டு வருஷமாகச் சொல்லாமல் மூடி வைத்ததால், தங்கையின் எதிர்காலம் கருதி தனது காதலைக் கருக்கி விட்டேனே என்று மனதுக்குள் அழுதவளாக தனது அக்காவிடம் மட்டும் சொல்லி ஆசி வாங்கிச் செல்ல வரும் தங்கையின் தோளில் முகம் புதைத்து  மனத்தின் பாரம் இறங்க அடக்க முடியாமல் அழுகிறாள் அக்கா.

    அதில், கூடப் பிறந்த தங்கையைப்  பிரிகிறோமே  என்ற வருத்தத்தைத் தாண்டி தான் ஏமாந்து விட்டேனே என்ற  ஆற்றாமையும் சேர்ந்து கொண்டது அவளது  தங்கைக்குத் தெரியாது .

    பரிமளாவுக்கு  ஏற்பட்ட ‘அதிர்ச்சி’யை மிகவும் அழகாக எடுத்துக் கூறி தலைப்போடு கூடி கதை முடிகிறது.

    இனி , கொத்தாக குறிஞ்சி மலர் :

    இந்தக் கதையில் ஒரு சராசரி மனுஷியின் அத்தனை குணங்களும் பிரதி பலிக்கும் வண்ணம்
    இருக்கும் பாத்திரப் படைப்புகளைச் சித்தரித்திருப்பது யதார்த்தம். கதை முடிந்த பின்பும் கூட மனதைத் தாக்கி மௌனப் படுத்திவிடும் ‘அதிர்ச்சி’.

    இதோ.. மொட்டாக :

    விளக்கைச்  சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில் அதற்குள் விழுந்து விளக்கையும் அணைத்து தானும் அதிலேயே விழுந்து செத்துப் போய் கூடத்தை இருள் மயமாக்கியது. இந்த ஒரு நிகழ்ச்சி கூட தத்ரூபமாக எழுத்திலேயே ஒளியைக் காண்பித்தது .

    கதையின் ஆரம்பம்,  இருட்டை ஒளிமயமாக்க வேண்டி தீப்பெட்டி தேடும் நிலையில் கதையின் நாயகி வெளியே வருகிறாள். அந்த நேரத்தில் அந்த இருளில் தீப்பெட்டி தேடும் போதே…நமக்கு தன தங்கை, சித்தி, அப்பா..இறந்து போன தனது அம்மா என்று ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கும் விதம் அருமை.

    விளக்கேற்றி அந்த இடத்தில் ஒளி வரும்போது, நம்மிடையே அந்தப் பாத்திரத்தின் பரிமளம் புரிபடுகிறது.

    மெல்ல இதழ் விரிகிறது :

    வெறுப்பு:

    தன்னைப் பெற்ற தந்தையாகவே இருந்தாலும், “அந்த விட்டில் பூச்சிக்கும் நாற்பது வயதுக்கு மேல் இரண்டாம் தடவையாகத் திருமணம் செய்து கொண்டு வேண்டாத குடும்பச் சுமையை இழுத்து விட்டுக் கொண்டிருக்கும் இந்த அசட்டு அப்பாவுக்குமிடையே எந்த வகையான வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு ”  அந்தப் பூச்சி உயிரையே விட்டுத் தொலைத்து விட்டது. இந்த மனிதப் பூச்சியோ நானும் உயிர் வாழ்ந்து கொண்டு இன்னும் சில உயிர்களை பிறப்பித்துக் கொண்டு நானும் வாழ்கிறேன் என்று அரை உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கிறது…”  என்று எண்ணுமிடத்தில் வெறுப்பை உமிழ்கிறது.

    அருவருப்பு:

    படுக்கையில் விழுந்த எனக்குத் தூக்கம் வரமாட்டேன் என்றது. சித்திக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த அவளுடைய ஐந்து குழந்தைகளையும் ஆறாவதாக அவள் வயிற்றுள் வளர்ந்து கொண்டிருந்த உயிரையும் நினைத்துப் பார்த்தபோது எனக்கு அருவருப்பாய் இருந்தது. ஆமாம்..என் தம்பி , தங்கைகள் என்கிற நினைப்பைக் காட்டிலும் சித்தியின் குழந்தைகள் என்கிற நினைப்பே மிகுதியாக நெஞ்சில் எழுகிறது.அப்படி நினைப்பது தப்பாக இருக்கலாம். ஆனால் அப்படித்தான் என்னால் நினைக்க முடிகிறது. இந்த வரிகள் மிதமிஞ்சிய ஒரு அருவருப்பை தன் உறவுகள் மீதே பொழிகிறது.

    நியாயம் :

    “ஆழ்ந்து சிந்திக்கும் போது சித்தியையோ அவள் பெற்றிருக்கிற குழந்தைகளையோ வெறுப்பது பாவம் என்றும் அம்மா செத்துப் போய் ஒரே வருடத்துக்குள் சித்தியை அழைத்துக் கொண்டு வந்தவரும் இத்தனை உயிர்களுக்கு படைப்பாளியுமான அப்பாவைத் தான் நியாயமாகப் பார்க்கப் போனால் வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது”. இந்த நியாயமும் பேசும் கதை.

    ஏக்கம்:

    “அம்மா….அம்மா தான். இன்றைய தேதியில் அம்மா உயிருடன் இருந்தால் இந்த வீடு இப்படி இருக்குமா என்பதைப் பற்றிய கற்பனையில் ஈடுபடாமல் இருக்க முடியவில்லை. அம்மா இருந்த வரையில் ஜானகியும் நானும் அவளது அன்பு மழையில் நனைந்து கொண்டு மகிழ்ச்சியும் சிரிப்புமாக வாழ்ந்து கொண்டிருந்தோம். வறுமை எங்களைச் சிறிதும் பாதிக்கவில்லை”. இந்த வரிகள் அம்மாவின் மேல் இருக்கும் ஏக்கத்தை  பிரதிபலிக்கிறது.

    பரிதாபம்:

    குழந்தை வேண்டும் என்று ஒருவன் ஆசைப்பட்டு அது பிறக்காமல் இருப்பது வேண்டுமானால் கடவுளின் செயலாக இருக்கலாம். வருஷா வருஷம் பெற்றுகொள்வது கூட ‘அவன்’ செயலா? அது ‘அவன்’ செயலோ,இல்லாவிட்டால் அவன் மேல் பழிசுமத்தும் அப்பாவின் செயலோ. அதன் விளைவு ‘அவள்’ அல்லவோ அனுபவிக்க வேண்டியிருக்கிறது..? என்னதான் இருந்தாலும் வருஷா வருஷம் வயிற்றைத் தூகிக் கொண்டு சித்தி பெற்றுப் பிழைப்பதை நினைத்துப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஒரு பெண்ணின் நிலை கண்டு இன்னொரு பெண்  பரிதாபப் படும் வரிகள்.

    அவமானம்:

    “தங்க விக்கிரகம் மாதிரி மூக்கும் முழியுமாக ஒரு பெண்டாட்டி இருக்கையில் குறுகுறுவென்று என்னை என்ன அப்படிப் பார்க்க வேண்டிக் கிடக்கிறது? என் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுகிப் போய்  விடும் எனக்கு. உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரைக்கும் அவன் உற்றுப் பார்க்கும்போது பூமி பிளந்து அப்படியே என்னை விழுங்கி விடாதா என்று இருக்கும். சில பெண்கள் வேண்டுமானால் ஒருவேளை நம்மை ஒருவன் உற்றுப் பார்க்கிறாப்போல் அழகாய் இருக்கிறோம் என்பதில் கர்வப்பட்டுக் கொள்ளக்கூடும். ஆனால் எனக்கென்னவோ அந்த மாதிரி சமயங்களில் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்போல் அவமானமாக இருக்கும்”. ஒரு இளம் பெண்ணின் இயல்பான எண்ணம் இது. ஏழ்மை ஏற்படுத்தும் உணர்வில் இதுவும் சேரும்.

    கவலை:

    “மொத்தத்தில் பெரும்பாலோருடைய பார்வையே நன்றாகயில்லை. எல்லாம் மொய்க்கிற பார்வைகள். துகிலுரிக்கிற பார்வைகள், கற்பழிக்கிற பார்வைகள், இப்படித்தான். தங்கை ஜானகிக்கு இம்மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டனவா என்பது தெரியவில்லை”
    “ஜானகிக்கு இந்த மாதிரி தொந்தரவெல்லாம் வராமே இருக்கணுமே பகவானே” என்று அடிக்கடி வேண்டிக் கொள்வேன்”. இதில் ஒரு தாயின் கவலை தெரியும்.

    அலுப்பும் சலிப்பும் :

    “ஐயே…போதுமே! என் சந்தோஷமும் நானும்”
    கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கவலைப் படுவதற்கென்றே கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு வேலைகள் உடம்பை வெட்டி முறிக்கிற நிலை கூட நாட்கள் கிடுகிடுவென்று ஓடுவதற்குக் காரணமில்லையா? – இதில் தெரியும்.

    ஆச்சரியம்:

    ஆச்சு. அடுத்த ஆண்டு பிறக்கும் போது என் இருபத்தாறாம் வயசும் பிறந்து விடும். “என்னது? எனக்கு இருபத்தஞ்சு வயசா முடியப் போறது? அடேயப்பா! இன்னும் அஞ்சு வருஷம் ஓடிடுத்துன்னா முப்பது வயசுன்னா ஆயிடும்?”

    கழிவிரக்கம்:

    “இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கையில் ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று எவனும் என்னிடம் கேட்டது கிடையாது. ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று எவனும் சொன்னதுமில்லை”. இந்த வரிகள் உள்ளத்தின் உணர்வை அப்படியே வெளிப் படுத்துகிறது.

    நிஜம்:
    பெண்கள் வீட்டுக்குள் வைத்துப் போற்றப்பட வேண்டியர்கள் என்று நம் பெரியவர்கள் வைத்திருப்பது பெண்களினுடயவும் இந்தச் சமூகத்தினுடையவும் ஒட்டுமொத்தமான நலனைக் கருதிதான் என்பதை என் அனுபவங்கள் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

    ஆத்திரம்:

    “டூப் அடிக்கிறதைப் பார்த்தியோல்லியோ – சம்ஸ்க்ருத மந்திரம் சொல்ற வாயாலே சமஸ்கிருதம் செத்துப் போனதே இந்த மாதிரி ஆசாமிகளாலே தாண்டி ..! என்று எரிச்சலோடு என்னிடம் முணு முணுப்பாள் ஜானகி.
    எங்கள் கல்யாணத்தைப் பற்றி அசதிமறதியாகக் கூட மூச்சும் விட்டறியாத அப்பா அப்படித்தான் தயங்காமல் “பார்த்துண்டு தான் இருக்கேன்…ஒண்ணும் சரியா அமைய மாட்டேங் கிறதே” என்று புளுகும் போது”.

    பச்சாதாபம்:

    விருப்பமற்ற ஒரு பெண்ணைத் தொடுவதைக் காட்டிலும் மோசமான குற்றம் ஏதும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு பெண்ணை – அவள் சற்றும் இணங்காத போதும் – தொட்டுக் கற்பழிப்பது கொலை செய்வதைக் காட்டிலும் கொடியது. அம்மாதிரியான கொடுமைக்கு ஆளாகாமல் என் வானாளைக் கழித்துவிட வேண்டும்”. ஒரு மணமாகாத இளம் பெண்ணின் நியாயமான எண்ணம்.

    காதல்:

    அது தகாத உறவு. கூடாக் கனவு, யாருடைய ஏற் கையையும் பெற முடியாத தொந்தம் என்பது நன்றாக எனக்குத் தெரிந்திருந்த நிலையிலும் கூட இந்தப்  பாழும் மனசு ஏன் தான் இப்படி அவனையே சுற்றி சுற்றி வர வேண்டுமோ புரியவே இல்லை” அழகான வெளிப்பாடு.

    நாணம்:

    “மூஞ்சி சொல்றதோல்லியோ அப்ப அதையே கேட்டுக்கோடி” என்று சொல்லிவிட்டு நான் அவள் முகத்தைப் பார்க்காமலே கிடுகிடு என்று குழவியை ஆட்டினேன்.
    இருந்தாலும் சொல்லு சொல்லுன்னா என்னத்தைச் சொல்றது? ஏதாவது இருந்தாத்தானே சொல்றதுக்கு?
    “உன் குரலே காட்டிக் குடுக்கிரதுடி அக்கா”…என்று ஜானகி மெதுவாகச் சிரித்தாள் .
    “அப்படியே வெச்சுக்கோ போ..”
    தங்கையிடம் சொல்லத் தவிக்க நாணம் மூடும் காட்சி.

    திகைப்பு:

    (தந்தைக்கு மகள் செய்த உபதேசம்)
    வசிஷ்ட  மகரிஷி என்ன சொல்லியிருக்கார்ங்கறது தெரியாதா உங்களுக்கு? வயசுக்கு வந்த பெண்ணை மூணு வருஷத்துக்குள்ளே கல்யாணம் பண்ணி குடுக்கல்லேன்னா
    தனக்குப் பிடிச்ச எவநோடையும் போறதுக்கு ஒரு பொண்ணுக்கு முழு உரிமை உண்டுன்னும் அந்த மாதிரி செய்யற ஒரு பொண்ணோ இல்லேன்னா அவளை அழைச்சிண்டு போற ஆணோ குற்றவாளிகள் இல்லைன்னு அவரும் மனுவும் சொல்லியிருக்கிறதை நான் ஞாபகப் படுத்த வேண்டாம்னு பார்க்கறேன். தன பொண்ணு வயசுக்கு வந்த ஏழு மாசத்துக்குள்ளே ஒரு தகப்பன் அவளுக்குக் கல்யாணம் பண்ணி  வைக்கலைன்னா ஏழு கொழந்தைகளைக் கொன்ன பாவம் அவனுக்கு வந்து சேரும்னு மனு தர்ம சாஸ்திரத்திலே கூடத்தான் சொல்லியிருக்கு.இதெல்லாம் சமஸ்கிருதத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கிற உங்களுக்குத் தெரியாதா என்ன?  சும்மா சமஸ்கிருதப் புஸ்தகங்களை வரிசையா அலமாரியிலே அடுக்கி வெச்சுட்டாப்லே  ஆச்சா? நாக்கில் பல்லைப் போட்டு அவள் கூசாமல் கேட்ட கேள்விகள். வயசு வந்த ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்சக் கூச்சம் கூட இல்லாமல் ஜானகியா இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று எனக்குத் திகைப்பாய் இருந்தது.

    இயலாமை..:

    ”  இந்த ஆவணிக்குள்ளே  அக்கா கல்யாணம் நடந்தாகணும்..ஆமா..! குதிர் குதிரைப் பொண்ணுகளை வளர்த்து வெச்சிண்டு அவா சம்பாத்தியத்துலே வயிறு வளர்த்துண்டிருக்கேள்ன்னும் அதனாலே தான் எங்க கல்யாணத்தைப் பத்தின பிரக்ஞையே உங்களுக்கு இல்லைன்னும் ஊர்லே நாலு பேர் பேசற பேச்சு காதுலே விழரச்சே உங்களுக்கு அவமானமாய் இல்லே? நானாயிருந்திருந்தால் நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விட்டுடுவேன்..”
    ஜானகியின் ஒவ்வொரு சொல்லும் பச்சை மரத்தில் ஆணி அடித்தார் போல் பளிச் பளிச்சென்று வந்து விழுந்தது.

    விரக்தி:

    “பாவ புண்ணியம்” நாகரிக-அநாகரிகம் ” நீ சொல்ற ரசாபாசம்- இதுகளெல்லாம் பார்க்க வேண்டிய வீடுகள் வேறேடி . இந்த வீடு இல்லை”.

    அறிவுரை:

    இன்னிக்கு நம்ம அப்பா- அம்மாவுக்கு நாம என்ன மாதிரி மரியாதை காட்றோமோ அந்த மாதிரியான மரியாதையைத்தான் நாளைக்கு நம்ம குழந்தைகள் நமக்குக் காட்டும்..”

    குறும்பு:

    “கல்யாணமே ஆகக் காணோம். அதுக்குள்ளே குழந்தை-குட்டிக்குப் போயிட்டா இவ ..! வேடிக்கை தான்”.

    எகத்தாளம்:

    “ஓடிப் போயிருப்பேண்டி …ஓடிப் போயிருப்பேன் ” இருபத்தாறு வயசு வரைக்கும் தன் பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத தகப்பனுக்கு மரியாதை குடுக்கணுமாம் மரியாதை” – தங்கையின் எகத்தாளம்.

    துடிப்பு:

    “இந்த நடேசன் மொதலியார் ஜாதியிலே போய்ப் பொறந்து வெச்சிருக்கானே? பிராமண ஜாதியிலே பொறந்து தொலைச்சிருக்கப் படாதோ? என்று என் மனசு முட்டாள்தனமாக ஏங்கத் தொடங்கிற்று…என்ன பைத்தியக்காரத்தனம்?

    நேசம்:

    “பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலொழிய கலப்பு மணம் வெற்றியில் முடியாது என்பதையும் முக்கியமாக ஆணுக்கு அந்த மனப்பான்மை மிகுதியாக இருக்க வேண்டும் . பெற்றவர்களை விரோதித்துக் கொண்டு ஒருவனை நம்பி “அவனே கதி என்று ” ஓடி வருகிற ஒரு பெண்ணை அனுதாபத்தோடு பார்க்கும் பரந்த மனப்பான்மை ஆணுக்குள் இருக்க வேண்டும். ஏனென்றால் பெற்றவர்களுடைய அதிருப்தியும் விரோதமும் பெண்ணுக்கு பெரிய நஷ்டங்கள். புகுந்த இடத்திலும் அவள் மனப்பூர்வமாக வரவேற்கப்படுவதில்லை…என்கிற நிலையில் விட்டுக் கொடுக்கிற தன்மை பெண்ணைக் காட்டிலும் ஆணுக்குச் சற்று அதிகமாவே இருந்தால்தான் கலப்பு மனம் செய்து கொள்ளும் ஒரு பெண் நிம்மதியாக வாழ முடியும். இந்த நேசம் நடேசனின் கடிதத்தில் எதிரொலித்தது.

    மனசாட்சி:

    “நீ நிமிஷத்தில் ஓடிப் போயிடுவேடி. ஆனா அப்படி ஓடிப்போனவளுடைய தங்கையை யாரு கல்யாணம் பண்ணிப்பா நாளைக்கு? அதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? உனக்காகப் பரிஞ்சு அப்பாகிட்டக் கன்னாப் பின்னான்னு பேசின ஜானகியுடைய வருங்கால வாழ்க்கையை உன்னுடைய காரியம் எந்த அளவுக்குப் பாதிக்கும்கிரதைப் பத்தி துளிக்கூட யோசிச்சுப் பார்ககாமே…”ஓடிப்போனா என்ன” என்று நீ நினைப்பது சுயநலமில்லையா ?

    கண்ணியம்:

    “உங்கள் பயன்தராத அன்புக்கு மற்றுமொரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – பரிமளாவின் முழுக் கடிதமும் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை.

    ஆசை:

    “திடீரென்று ஒரு நாள் என் மன உறுதி சிதைந்து போயிற்று.நடேசனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கட்டுக்கு அடங்காமல் என்னுள் பொங்கிற்று. தொலைவில் நின்றாவது அவனது அன்பு முகத்தை ஒருதரமாகிலும் பார்த்து விடவேண்டும் போல் மனசு கிடந்து அடித்துக் கொண்டது. அந்த எனது ஆவலுக்குத் தடை போட முடியாமல் நான் வெகு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெட்டிக்கடைப் பக்கம் நடக்கலுற்றேன்” .

    ஏமாற்றம்:

    “அவுரு கடையை வித்துட்டுப் போயி அஞ்சாறு மாசத்துக்கு மேலே ஆகுதேம்மா”…..
    “இந்த ஊரை விட்டுப் போயிட்டாருங்கறது மட்டுந்தான் தெரியும். எங்கிட்டு இருக்காருங்குற வெவரம் தெரியலியேம்மா”
    இதைக் கேட்டதும் என் நெஞ்சுக்கூட்டினுள் ஒரு நரம்பு அருந்தாற்போல் இருந்தது.

    தைரியம்:

    “அன்னிக்குச் சொன்னேனோல்லியோ? அதைத் தான் காரியத்திலே காட்டப் போறேன்.அதாவது ஓடிப் போகப் போறேன்.”
    “..”

    பயம்:

    “பையன்  யாரு என்னன்னு தெரிஞ்சா அப்பா கட்டையை எடுத்துண்டு வருவா. நீ  கூட என்ன நினைப்பியோ தெரியல்லே”.

    தயக்கம்:

    “ரெண்டு வருஷமா எங்களுக்குள்ளே ‘இது’. உனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்பறந்தான் பண்ணிக்கணும்னு இருந்தேன். ஆனா அவா வீட்டிலே அவசரப்படுத்தறா …அதான்..”.

    பெருந்தன்மை:

    “நீ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மாநிசிருக்கிரதைப் பற்றி ரொம்ப சந்தோஷம் ஜானகி.
    ஆனா ரெண்டு வருஷமா இந்த விஷயத்தை என்கிட்டேர்ந்து மூடி மறைசிருந்திருக்கியே நியாயமா? என்று கேட்டேன்.
    அதனாலே எனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்குன்னு தெரியுமாடி உனக்கு ? என்று கேட்க முடியாமல் மனசுக்குள் பொருமினேன்.

    மகிழ்ச்சி:

    “அக்கா ! என்னை ஆசீர்வாதம் பண்ணுடீ” என்றவாறு அவள் திடீரென உணர்ச்சிவசப்பட்டு பாய்ந்து வந்து என்னைக் கட்டிக்கொண்ட போது, என்ன சொல்வது என்றே தோன்றாமல் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தேன்.
    “ஜானகி என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுடீ! அதை நீ கேட்டு வாங்கிக்கணு ம்னுட்டு இல்லை “- இப்படிச் சொல்லி விட்டு நான் அவள் தோளில் என் முகத்தை அழுத்திக் கொண்டேன்.

    துக்கம்:

    நான் அழுதது அதற்காக மட்டும் இல்லை என்றும் வேறு இன்னொன்றுக்காகவும்கூட என்றும் அவளுக்கு எப்படித் தெரியும்?

    மலர்க் கொத்தை நீட்டும் போது :

    “இந்த ஒரு அதிர்ச்சி கதைக்குள்….ஒரு பெண்ணின் அத்தனை மன உணர்வுகளும் அளவாக அழகாகச்  சேர்ந்து கொத்து மலராக நறுமணம் வீசி படிப்பவர்களை தன்னோடு கூடவே  இழுத்துக் கொண்டு செல்லும் உயிர்ப்பு இருக்கிறது.

    கதை வந்து நாற்பது வருடங்களுக்கு மேலே ஆனாலும் என்ன…? இன்னும் பூமி சுற்றும் வரையில், ஏழ்மை இருக்கும் வரையில்…இது போன்ற பரிமளாக்களும் ஜானகியும் எங்கேயோ இதே உணர்வுகளோடு திண்டாடிக் கொண்டும்,  போராடிக் கொண்டும்  தான் இருக்கிறார்கள்.

    எத்தனையோ விதத்தில் சமுதாய முன்னேற்றங்களும், மாற்றங்களும்  வந்திருந்த  போதிலும்  பூமிக்கடியில் வேர்கள் ஒன்றாக இருப்பது போல வாழ்வியலின் அடிப்படை என்றும் மாறாதது என்பதை உணர்த்தும் விதமாக ஆசையும் …ஆசாபாசங்களும் தீராது என்றும் ஆணித்தரமாக நம்மை நம்ப வைக்கிறது.

    இத்தனை வருட இடைவெளிகளுக்குப் பிறகு  இந்தக் கதையை படித்தாலும் “குடும்பம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் ” ஒரே குழந்தையோடு நின்றுவிடும் முன்னேற்றம் மட்டும் கண்கூடு.

    மேலும் பெண்களுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம் வீட்டிலும் வெளியிலும், படித்ததனால் நல மதிப்பு…தங்களின் வாழ்க்கையைத் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளும் திறனும், தைரியமும் வாழ்வின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக தற்போது  நடை முறையில் வந்து விட்டது பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான் .

    தலைமுறை இடைவெளியில் ஆண்களில் கூட நல்ல எண்ணத்தில் முன்னேற்றமும் பரந்த மனமும், வரதட்சிணை விழிப்புணர்வும் மாற்றமாக வந்துள்ளது. எல்லாம் உயர்மட்டத்திலும் , மேல்மட்ட நடுத்தர வர்கத்திலும் வந்திருந்தாலும்….இன்னும் நடுத்தர, கீழ் மட்ட வர்கத்துக் குடும்பங்கள் அதே சூழலில் தான் உழன்று வருகின்றனர்.

    எந்த வகையான  மாற்றங்களிலும் கீழ், நடுத்தர, உயர்ரக மட்டங்கள் எப்போதும் மாறாமல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லோரும் பொருளாதாரத்தில் சமமாகும் காலம் என்றுமே வரப் போவதில்லை. மாற்றங்கள் மனதளவே  என்றாலும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றம் தான் வாழ்வியல் மாற்றமும் ஆகும். வாழ்க்கையில் கஷ்டப் படும் குடும்பமும், சுக போகமாய் வாழும் குடும்பமும் – இரு வேறு முனைகளாக என்றென்றும் நிரந்தரமாக இருக்கும். அது மாறாதது.

    மற்றபடி கதையின் சாரம் அன்றும், இன்றும், என்றும் ஒரே உணர்வின் சூத்திரத்தை தான் சொல்கிறது. அதிர்ச்சிக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம்.

    கதையின் நாயகி  ‘பரிமளா’ இந்தக்  கதையைத் தாண்டி மனசுக்குள் வந்து உலாவுகிறாள். இதயத்துக்குள் காலத்துக்கும் உறைந்து போகிறாள். இது தான் ‘அதிர்ச்சி’யின் வெற்றி.  காலம் கடந்தும் இந்தக் கதை மனிதனின் வக்கிர முகமூடியைக் கிழித்து நிஜத்தை சொல்லிக் கொண்டிருக்கும்.

    தத்ரூபமாக நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லிய அழகு தனி.. அனைவரும் அவசியம் இந்த எழுத்துக்கள் பேசுவதைப் படித்தால் கேட்கலாம்.
    ================================================================================================================

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் உதிரியான சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    விண்மீனுக்கும் மானிடம் போல்

    பிறப்பு, இறப்பென்னும்

    தலை விதி உண்டு !

    வாயுத் திரட்சி ஈர்ப்பு சுழற்சியால்

    கோளாகி உஷ்ணம் மிஞ்சி

    அணுக்கருப் பிணைப்பில் காலக்ஸி

    விண்மீனாகி மின்னொளி வீசும் !

    எரிவாயு வற்றி

    கரிவாயு முற்றி முதுமையில் மங்கி

    மூப்படைந்து நிபுளா வாகும்!

    வெள்ளைக் குள்ளியாகி அது

    செம்பூத மாய் மாறி

    சிதைந்து மடியும்

    முடிவில் சூப்பர் நோவா

    வெடிப்பாகி !

    +++++++++++++

    ESO VISTA Image of Nebula

    [Odd Objects of the Helix Nebula — Each the Size of our Solar System ]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8FfLqYfI_AU

    [ VISTA – The World’s Most Powerful Survey Telescope ]

    http://www.eso.org/public/videos/eso1244b/

    [ A close-up view of the planetary nebula Fleming 1 seen with

    European ESO’s Very Large Telescope ]

    Anatomy of a Sinking Star

    சுருள் நிபுளாவில் வெளியேறும் முரண்பட்ட பேரளவு அண்டத் துண்டுகள்

    அண்டக் கோள் நிபுளா [Planetary Nebula] என்பது விண்வெளியில் மனிதக் கண்களுக்கும் நேராக மங்கித் தெரியும் முதிய விண்மீன். தன் கூர்மையான தொலைநோக்கியில் கண்டு முதன்முதல் “பிளநேட்டரி நிபுளா” [Planetary Nebula] என்று பெயர் வைத்தவர் வானியல் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [1738 -1822]. ஹெர்ச்செல் அவ்விதம் பெயரிட்டாலும் பிளாநெட்டுக்கும், நிபுளாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விண்மீன்கள் நமது பரிதியைப் போல் 8 மடங்கு நிறை பெற்றால், அவற்றின் முடிவு ஒரு பெரும் கொந்தளிப்பு முறையில் சூப்ப்பர்நோவா வெடிப்பாகச் சிதைகிறது. விண்மீன்கள் தம் ஆயுள் முழுதும் தம்மிடமுள்ள திரட்சியான ஹைடிரஜன் எரிவாயு ஈர்ப்பு அழுத்தத்தில் உஷ்ணத்தை உண்டாக்கிப் பிணைவு சக்தியில் பிணைத்து ஹீலியமாகி சுய ஒளிவீசுகின்றன. எரிவாயுவின் கொள்ளளவு குறையக் குறைய, பிணைவு சக்தி குன்றி விண்மீன் ஒளிமங்குகிறது. நிபுளா என்பது மரணத் தருவாயில் உள்ள ஒரு முதிய விண்மீன் !

    நமக்கு மிக நெருங்கியுள்ள பிளநேட்டரி நிபுளாகளில் ஒன்று “சுருள் நிபுளா” [Helix Nebula]. அது கும்ப நட்சத்திரக் கோலத்தில் [Constellation Aquarius (The Water Bearer)] உள்ளது. பூமியி லிருந்து சுமார் 700 ஒளியாண்டு தூரத்தில் சுருள் நிபுளா அமைந்திருக்கிறது. இந்த ஆபூர்வ சுருள் நிபுளா நமது பரிதி போல் உருவாகி தற்போது தனது ஆயுள் முடிந்து இறுதி மரண நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுருள் நிபுளா தன் சுற்றுப் போர்வை அடுக்கின் கிழிவைத் தடுக்க முடியாது நிபுளாவை உருவாக்கிய வாயுவை மெதுவாக இழந்த வண்ணம் இருக்கிறது ! அடுத்து அந்த விண்மீன் வடிவு “வெள்ளைக் குள்ளி” [White Dwarf Star] ஆகப் போகிறது !

     

    Life Cycle of Stars

     

    இந்தச் சுருள் நிபுளாவின் அமைப்பை 2013 ஜனவரி 22 ஆம் தேதி ஈஸோ பிரிட்டீஷ் வானோக்ககம் [ESO VISTA Telescope – European Southern Observatory in Chile] துல்லியமாகப் புதுப்படம் எடுத்துக் காட்டியுள்ளது. அது உட்சிவப்பொளியில் [Infrared Light] குளிர்ந்த நிபுளா வாயுப் பட்டைகளின் ஒளி தெரிய எடுத்துள்ளது. இவை சாதாரண கண்களுக்கு தெரியா. சுருள் நிபுளா ஒரு சிக்கலான அமைப்பு உடையது. அதனில் வாயு அயனிகளும், தூசியும் கலந்திருக்கும். அயனியான தனிமங்களும் வாயு மூலக்கூறுகளும் [Ionised Material & Molecular Gas] பெற்று “ரோஜா மலர்” இதழ்கள் போல் எழிலுடன் நிபுளா காணப்படும்.

    சுருள் நிபுளா வளையத்தின் குறுக்கு அகலம் 2 ஒளியாண்டு தூரம் ! அந்த விண்மீனிலிருந்து வெளியேறிப் பரவும் வாயுத் தூசி வீச்சுகள் குறைந்தது 4 ஒளியாண்டு தூரம் நீள்பவை. சுருள் நிபுளாவிலிருந்து பரவும் மின்னொளி வாயுவை விஸ்டா விண்ணோக்கி எளிதில் படம் பிடித்து விடுகிறது. 4 மீடர் [13 அடி] விட்டமுள்ள விஸ்டா விண்ணோக்கி வெகு தூரத்தில் பின்புலத்தில் உள்ள விண்மீன்களையும், காலக்ஸி ஒளி மந்தைகளையும் கூர்ந்து படமெடுக்கும் தகுதி யுள்ளது. நிபுளாவின் நுண்ணிய வளையங்களையும் நோக்க வல்லது.

     

    Odd objects from Nebula

    அவை ஹைடிரஜன் மூலக்கூறுகளய் [Molecular Hydrogen] நுண்ணிய குமிழாகத் தோன்றி னாலும் அவை ஒவ்வொன்றும் நமது சூரிய மண்டலத்தை போன்று பெரியவை. அச்சிறு வெளிவீச்சுகளை வால்மீன் முடிச்சுகள் [Cometary Knots] என்று அழைக்கிறார். அவை மரிக்கும் நிபுளாவிலிருந்து சக்தி மிக்க காமா கதிர்வீச்சுகளாய் [High Energy Radiation] வெளியேறுகின்றன. அந்த முடிச்சுகள் பிறகு தூசி, மூலக்கூறு வாயுவால் கவசமிடப் படுகின்றன. இந்த வால்மீன் முடிச்சுகள் எப்படித் தோன்றுகின்றன என்று தெரியவில்லை. சுருள் நிபுளாவி லிருந்து வரும் இந்த வெளிவீச்சுகளின் அபூர்வப் படத்தை ஈஸோ வெஸ்டா விண்ணோக்கி படம் எடுத்துள்ளது.

    பேரொளி வீசும் பெரும் பூதவுரு விண்மீன் தெரிந்தது விண்ணில் !

    உஷ்ணம் ஏறும் விரைவாய் ! கன உலோகம் கதிரியக்க யுரேனியம் போல் சிதைந்து நிலைத்துவம் அடைவது ! வடிவம் பெருத்து வெடிக்கும் விண்மீன் முடிவில் ! அசுரக் காந்த ஆற்றல் கொண்ட மரண விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மக்களின் உடற் மூலக்கூறுகள் முறிந்து முடமாக்கி விடும் ! உயிரினத்துக்கு மரணம் உண்டாக்கும் நியூட்ரான் விண்மீன் ! எரிசக்தி வாயுக் கோளமான உயிர் விண்மீன்கள் எரிசக்தி தீர்ந்த பிறகு வறியதாய் மூப்படைந்து சிறிது சிறிதாகி விரைவாகச் சுற்றிப் பரிதி போல் திணிவு பெற்று பன்மடங்கு பெருத்து ஆயுள் குன்றிச் செத்திடும் விண்மீன் மீண்டும் புத்துயிர் பெறும் !

    Cometary Knots

    1980 ஆண்டுகளில் பெரும் பூதவுரு விண்மீன் [HR 8752] காலக்ஸியில் காணப்பட்டது. அது வெடித்துச் சிதைந்து போகும் பெரும் பூத விண்மீன் “ரோ காஸ்” [Rho Cas of Spectral Type F] என்பதை ஒத்தது. ஆனால் 1985 முதல் 2005 ஆண்டுக்குள் HR 8752 விண்மீனின் சூழ்வெளி வெகு விரைவில் 3000 டிகிரி உஷ்ணம் மிகையானது.

    அந்த விண்மீன் இப்போது தன் பௌதிகப் பண்பாடுகளைக் காட்டிப் பேரளவு உஷ்ணமுள்ள [A Type] விண்மீன் வரிசையில் வந்து விட்டது. இவ்விதம் 20 ஆண்டுகளில் HR 8752 விண்மீனில் நேர்ந்த பெருத்த மாறுதல் நிகழ்ச்சி எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    அலெக்ஸ் லோபெல் [Alex Lobel, ROB Scientist]

    பெரும்பூத விண்மீன் HR 8752 வெற்றரங்கத்தின் ஊடே [மஞ்சள் வளர்ச்சி வெற்றரங்கம்] [YEV- Yellow Evolutionary Void] புகும் போது அதன் பௌதிகப் பண்பாடுகள் சூழ்வெளியில் மாறிப் போய் போராட வேண்டியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இருவிதப் பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று பெரும் பூத விண்மீன் [யுரேனியம், ரேடியம் போல் சிதையும் கதிரியக்கமுள்ள கன மூலகங்கள் போல] நிலைத்துவம் இழந்து சிதைவது. அதன் விளைவு : சூழ்வெளியில் ஹைடிரஜன், ஹீலிய வாயுக்களின் அயனிகள் பேரளவு பரவி வெளியாவது. அந்த அயனிகள் குறுகிய அரங்கில் 8000 டிகிரி உஷ்ணத்தில் வகுபடும் போது மீண்டும் நிலைத்துவம் பெறும்.

    அலெக்ஸ் லோபெல்

    ESO VISTA telescope

    காந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் ! பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism). குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) ! அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது ! அதன் காந்த ஆற்றல் வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை (Body Molecules) உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது.

    விஞ்ஞான விளக்க வெளியீடு (Science Illustrated Magazine) (Jan-Feb 2009)

    “பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் இருக்கலாம். அவற்றால் பூகோளத்துக்குக் கேடுகள் விளையலாம் ! அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடும். அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன ! பூமிக்கருகில் அத்தகைய ஓர் காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்துவிடலாம் ! அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முற்றிலும் அழிந்து (Mass Extinctions) போகலாம்.”

    டோனால்டு ஃபைகர் (Donald Figer (Rochester Institute of Tecnology, USA)

    ஒளிமயமாகிச் சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் கண்டுபிடிப்பு

    சமீபத்தில் ஐரோப்பிய ஆய்வுக் குழுவொன்று ஒளிமயமான ஓர் அரிய பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star H 8752] “மஞ்சள் வளர்ச்சி வெற்றரங்கம்” [YEV – Yellow Evolutionary Void] என்னும் ஓர் அபூர்வ அரங்கத்தின் ஊடே புகுந்து போவதைக் கண்டுபிடித்தார்கள். அந்தப் பேரொளி வீசும் விண்மீன் மேற்தள உஷ்ணம் [1985 – 2005] அதாவது கடந்த இருபது ஆண்டு களுக்குள் 3000 டிகிரி உஷ்ணம் ஏறியதாகக் கணித்திருக்கிறார்கள். மேலும் முப்பது [1982 -2012] ஆண்டுகளில் அதன் உஷ்ணம் 5000 டிகிரியிலிருந்து 8000 டிகிரி ஏறிவிட்டதாகத் தெரிகிறது. இந்த ஆய்வுக் கண்டுபிடிப்பு, எப்படி நிறை மிகுந்த விண்மீன்கள் காலக்ஸியில் தோன்றி முதிர்ச்சியுற்று வந்துள்ளன என்று அறிந்து கொள்ள உதவி செய்யும். பெரும் பூதவுரு விண்மீன்கள் நமது சூரியன் போல் கால் மில்லியன் அளவு கூடியதாய் பேரொளி வீசுபவை. அவற்றின் வடிவம் நமது பரிதி போல் பல நூறு மடங்கு நீளமுள்ள விட்டம் உடையவை. அதில் விந்தை என்ன வென்றால் அந்த விண்மீன் மஞ்சள் வளர்ச்சி வெற்று அரங்கத்தின் வழியாய்க் கடக்கும் போது சிதைவாகி நிலைத்து மற்றுப் போகிறது.

    பெரும் பூதவுரு விண்மீனைச் சாதாரணப் பைனாகுலரிலே காஸ்ஸியோபீடியா விண்மீன் கூட்டத்தில் [Constellation Cassiopedia] பார்க்க முடியும். நமது காலக்ஸியில் இதுவரை 12 பெரும் பூதவுரு விண்மீன்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது. பூதவுரு விண்மீன்களின் ஆயுள் குறுகியது. அவை கதிர்வீசித் தேயும் யுரேனியம், தோரியம், ரேடியம் ஆகிய கன மூலகங்கள் போன்று நிலையற்றுச் [Unstable Heavy Elemetns] சிதைபவை. இறுதியில் நிலைபெறும் ஈயம் போல், பூதவுரு விண்மீனும் சிதைவாகி இறுதியில் நிலைத்துவம் அடைபவை.

    1900 ஆண்டு முதல் 1980 வரை பூதவுரு விண்மீன் HR 8752 சூழ்வெளி உஷ்ணம் 5000 டிகிரியில் நிலையாக இருந்துள்ளது. பிறகு அது 1985 முதல் 2005 வரை திடீரென 8000 டிகிரியா ஏறியது என்று தெரிகிறது. அப்போது பூதவுரு விண்மீனின் ஆரம் நமது பரிதியைப் போல் 750 மடங்கி லிருந்து 400 மடங்காகச் சிறுத்து விட்டதாகக் கணிக்கப் பட்டுள்ளது. பூதவுரு விண்மீன் HR 8752 நிலை எதிர்காலத்தில் எப்படி மாறி இருக்கும் என்று இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அது ஒரு சூப்பர்நோவா பேராற்றல் வெடிப்பில் [Supernova Explosion] சிதைந்து விடும் என்று நம்பிட அழுத்தமானக் குறிகள் உள்ளன என்று கருதுகிறார்கள்.

    Supernova Explosion -1

    https://www.youtube.com/watch?v=dq2phsT_53E

    http://www.maniacworld.com/Crab-Supernova-Explosion.html

    ( Supernova Explosion by ESA )

    புதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்

    1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக் களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர். அதன் பிறகு அடுத்த பத்தாண்டு களில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை ! காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) ! அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது. அந்தக் காந்த தளமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.

    Fig 1E Magnetar 1900+14

    இதுவரை விண்வெளியில் 15 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன. முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப் படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars). இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20. அதன் கணிக்கப்பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம். பூமியின் காந்த தளம் : அரை காஸ். மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத்துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).

    காந்த விண்மீன்களின் இயற்கையான அமைப்பு

    பூமிக்கு அருகில் இல்லாமல் விண்வெளியில் பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ள இந்த வகைக் காந்த விண்மீன்களைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை ! பொதுவாகக் காந்த விண்மீன்களின் விட்டம் சிறியதே : சுமார் 12 மைல் (20 கி.மீடர்). ஆனால் அது நமது பரிதியை விடப் பேரளவு திணிவு நிறை அழுத்தம் (Compressed Dense Mass) பெற்றுள்ளது. ஒரு கையளவு வடிவுள்ள காந்த விண்மீன் உண்டை 100 மில்லியன் டன் எடைக்கும் மிகையாகக் கனமுள்ளது. பெரும்பான்மைக் காந்த விண்மீன்கள் தம்மைத் தாமே விநாடிக்குப் பல சுற்றுகளாய் வெகு வேகமாகச் சுற்றிக் கொள்கின்றன. காந்த விண்மீன்களின் ஆயுட் காலம் சிறியது ! அவற்றின் தீவிரக் காந்த தளம் சுமார் 10,000 ஆண்டுகளில் தேய்ந்து சிறுத்துப் போகும் ! அதற்குப் பிறகு அவற்றின் அதி தீவிர எக்ஸ்ரே எழுச்சிகள் நின்று விடும் ! அவ்விதம் கணக்குப் பார்த்ததில் நமது பால்வீதியில் முடங்கிப் போன காந்த விண்மீன்கள் சுமார் 30 மில்லியனுக்கும் மிகையாக இருக்கும் என்று தெரியப்படுகிறது.

    Fig 1G Pulsar

    காந்த விண்மீன்களின் அதி தீவிரக் காந்தத் தளம்

    பிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களைப் போல் அசுரக் காந்த வல்லமை உடைய வேறெந்த விண்மீன்களும் இதுவரைப் பதிவு செய்யப் படவில்லை. 600 மைல் (1000 கி.மீ) தூரத்தில் ஒரு காந்த விண்மீன் இருந்தாலும் அதன் காந்த தளம் பூமியில் உள்ள உயிரினங்களைக் கொல்லும் ஆற்றல் உடையது. அப்போது உடம்பு நீரில் உள்ள “எதிர்முனைக் காந்த துருவ அமைப்பால்” (Diamagnetism of Water) (Diamagnetism is the property of an object which causes it to create a magnetic field in opposition of an externally applied magnetic field, thus causing a repulsive effect) அது உடற் சதைகளைக் கிழித்து விடுகிறது ! பூமிக்கும் நிலவுக்கும் இடையே பாதித் தூரத்தில் காந்த விண்மீன் ஒன்று இருக்குமேயானால் அந்தக் காந்த தளம் நமது பூமியில் உள்ள “கடன் பிளாஸ்டிக் அட்டைப்” (Credit Card) பதிவுகளை முற்றிலும் அழித்திடும் என்று சொல்லப் படுகிறது ! 2003 பிப்ரவரியில் வெளிவந்த விஞ்ஞான இதழ் (Scientific American Magazine) காந்த விண்மீன் SGR 1900+14 பூமியில் விளைவித்த தீங்குகளை வெளியிட்டது ! எக்ஸ்ரே ஒளித்திரள்கள் (X-Ray Photons) இலகுவாக இரண்டாய்ப் பிரிந்தன அல்லது ஒன்று சேர்ந்தன ! சூனியம் கூட ஒரு மட்டத்தில் காந்த அலை அதிர்வு காட்டியது (Vacuum is Polarized) ! அணுக்கள் கூட துகள் ஒப்புநிலை எலக்டிரான் அலை நீளத்தில் (Quantum-Relativistic Wavelength of an Electron) மெல்லிய அளவில் நீள் உருளையாய் திரிபு அடைந்தன (Deformed into Long Cylinders) ! 10^5 Teslas காந்த தளத்தில் அணுக்களின் சுற்றுவீதிகள் பென்சில் போல் மெலிந்து சிறுத்து விடும் ! 10^10 Teslas தீவிரத்தில் ஹைடிரஜன் அணு ஒன்றின் விட்டம் 200 மடங்கு மெலிந்து குறுகி விடும் !

    காந்த விண்மீன்கள் எவ்விதம் உண்டாகுகின்றன ?

    நாசாவின் ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கிதான் (Spitzer Space Telescope) அசுரக் காந்த விண்மீனைக் SGR (1900+14) கண்டுபிடுக்க உதவியது. அந்த விண்மீனைச் சுற்றிலும் ஏழு ஒளியாண்டு தூரம் அகண்ட வாயு “உட்சிவப்பு ஒளிவட்டம்” (Infrared Light) இருப்பது தெரிந்தது. ஆனால் காந்த விண்மீன் எக்ஸ்ரே ஒளியில்தான் பதிவானது. ஒரு சூப்பர்நோவா விண்மீன் சிதைந்து நியூட்ரான் விண்மீனாகும் போது அதன் காந்த தளத்தின் ஆற்றல் நான்கு மடங்கு மிகையாகிறது ! பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி களான டன்கனும் தாம்ஸனும் நியூட்ரான் விண்மீனின் காந்த தளத்தைக் கணித்தார்கள். சாதாரண அளவில் 10^8 டெஸ்லாஸ் இருக்கும் நியூட்ரான் விண்மீன் “யந்திர இயக்க முறையால்” (Dynamo Mechanism) இன்னும் ஆற்றல் மிகையாகி 10^11 டெஸ்லாஸ் அளவில் பெருகி முடிவில் ஒரு அசுர ஆற்றல் உடைய காந்த விண்மீனாகிறது ! சூப்பர்நோவா வெடிப்பில் விண்மீன் 10% நிறையை இழக்கிறது ! 10 முதல் 30 மடங்கு பரிதி நிறையுடைய அத்தகைய பூத விண்மீன்கள் சிதையும் போது அவை ஒரு கருந்துளையாக (Black Hole) மாறாதபடி இருக்க பேரளவு (80%) நிறையை உதிர்க்க நேரிடுகிறது ! பிரபஞ்சத்தில் பத்தில் ஒரு சூப்பர்நோவா வெடித்து, நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது துடிப்பு விண்மீனாகவோ (Pulsar) மாறாமல் காந்த விண்மீனாக உருவடைகிறது !

    Fig 2 Making a Magnetar

    மாபெரும் பிரபஞ்சப் புதிரான காமாக்கதிர் வெடிப்புகள் !

    கடந்த முப்பது ஆண்டுகளாக அகிலவெளியில் திடீரென எழும்பும் புதிர்க் காட்சியான காமாக்கதிர் வெடிப்புகள் வானோக்கு விஞ்ஞானிகளைப் பெருவியப்பில் ஆழ்த்தி யிருக்கின்றன ! மகா சக்தி வாய்ந்த அந்தக் காமாக்கதிர் வெடிப்புகள் ஒளிமயமாகத் தோன்றி எங்கிருந்து எழுகின்றன என்று அறிய முடியாமல் அனுதினமும் காட்சி அளித்து வருகின்றன. சில வெடிப்புகள் பின்ன வினாடியில் ஒளிவீசி மறையும். சில வெடிப்புகள் சில நிமிடங்கள் நீடிக்கும். ஆனால் அந்த காமாக்கதிர் வெடிப்புகளின் ஒளிமயம் சிதையும் சூப்பர்நோவாவை விட ஒளி வீசுகின்றன. இருண்ட வான மண்டலத்தில் பெருங்கொண்ட ஒளிமயத்தில் மின்னலைப் போல் வெட்டி மறையும் ஒளித்திரட்சியே காமாக்கதிர் வெடிப்பு ! அவ்வெடிப்புத் தினம் ஒருமுறை ரீதியில் வானில் ஒளிர்கிறது. காமாக்கதிர்ப் பேழையான சூரியனை விடப் பேரளவு ஒளிமயத்தில் மின்னலைப் போல் கண்சிமிட்டும் காமாக்கதிர் வெடிப்புகள் ! சென்ற மூன்று ஆண்டுகளாக காமாக்கதிர் வெடிப்புகளின் மங்கும் எக்ஸ்-ரே, கண்ணொளி, ரேடியோ அலைகள் பற்றிய கருத்துகள் விருத்தியாகி முன்னேற்றம் அடைந்துள்ளன. அவை யாவும் விண்மீன் தோற்றத்துக்கு முன்னோடியாகவோ அல்லது சூப்பர்நோவாவுக்கு மூலமாகவோ உள்ளன !

    நியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்

    பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் ! பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன ! அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது ! அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறிகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

    Fig 4 Spitzer Space Telescope

    ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது ! அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது !

    சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் ! தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் ! இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் ! அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது ! கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது.

    Fig 6 The Magnetar Pioneers

    [தொடரும்]

    +++++++++++++++++++

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By : Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    10 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802141&format=html (Cosmos Gamma Ray Bursts)
    11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
    12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
    13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
    14 From Wikipedea – Magnetar (May 1, 2009).

    15. Spectacular Hypergiant Star Found Passing Through “Forbidden Zone.” [December 10, 2012]

    16. http://ca.news.yahoo.com/blogs/geekquinox/30-study-shows-hypergiant-star-going-rare-stage-154209537.html [December 12, 2012]

    17. http://en.wikipedia.org/wiki/VISTA_(telescope) [European Telescope VISTA] (December 9, 2012)

    18. http://en.wikipedia.org/wiki/Helix_Nebula (December 15, 2013)

    18 (a) http://en.wikipedia.org/wiki/William_Herschel William Herschel (January 14, 2013)

    19. http://en.wikipedia.org/wiki/Planetary_nebula Planatary Nebula (January 20, 2013)

    20. Daily Galaxy : Oddo Objects of the Helix Nebula – Each the Size of our Solar System (January 22, 2013)

    21. http://www.dailymail.co.uk/sciencetech/article-2118073/ESOs-Vista-telescope-captures-200-000-galaxies-image.html (January 26, 2013)

    ******************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) [January 26, 2013]

     

     

    YouTube – Videos from this email
    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    ஒரு நாணயமான உயரதிகாரி ஒருவரின் கதையைச் சொல்கிறேன். இளைஞர், ஐஏஎஸ் தேர்வுக்காகத் தன்னை நான்கு முறை ஈடுபடுத்தி ஒவ்வொரு முறையும் புள்ளிக்கணக்கில் பெரிய தேர்வை கோட்டை விட்டவர். கடைசியில் ஐபிஎஸ் கிடைத்தது. இங்கும் அவருக்கு ஒரு தடை. உயரம் ஒரு சில மில்லி மீட்டர்கள் குறைவானது என்பது. ஆனாலும் தேர்வு உயரதிகாரிகள், இவர் திறமையைக் கண்டு அதிசயமாக பாவித்து இந்த சிறு குறையை கண்டுகொள்ளாமல் விடலாம் என்று யோசனை சொன்னார்கள். ஆனால் நம்மாள் ரோஷம் மிக்கவர்.. இப்போது கண்டுகொள்ளாமல் போனாலும் பின்னாளில் இதுவே தன் வேலைக்கு உலை வைக்கும் தீயாக மாறலாம் என்று மறுத்துவிட்டார்.

    பிறகு இவருக்கு ரெவின்யூ’வில் கிடைத்தது. ஒப்புக் கொண்டார். இவர் சாமர்த்தியம் எக்ஸைஸ் வரி விதிப்பிலும், அதன் வசூலிலும் தெரிந்தது. சரியான நேர்மையாக விதிப்படி யார் யார் எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படியே நேர்மையாகவே வசூல் செய்யுங்கள் என்றார். இங்குதான் வந்தது மிகப் பெரிய சவால். ஏற்கனவே குறைந்த அளவில் உற்பத்தியைக் காண்பித்து குறைந்த அளவில் வரி செலுத்தியவர்கள் உண்மையான முறையில் வரி செலுத்தவேண்டும் என்றால் இத்தனை நாள் வரை ஏமாற்றியதும், இந்த ஏமாற்றலுக்கு உதவிய அதிகாரிகளின் ஏமாற்றுதலும் தெரிய வந்தது. ஆனாலும் சளைக்கவில்லை இவர். இப்போதிலிருந்து வசூலை ஒழுங்காக நடத்துங்கள் என்றார். ஏனைய அதிகாரிகளுக்கும் ஒரு வகையில் சந்தோஷம்.. ஒரே வருடத்தில் வசூல் அதிகமானது. அதே சமயம் ஒரே வருடத்தில் அதிகாரிகள் பலர் தங்கள்மேல் வருவாயை  அதிகபட்சமாக இழந்ததால் வெறுப்புற்று இதற்கெல்லாம் காரணமான இவரிடம் தன் மனதை மாற்றிக்கொள்ளுமாறும் பழையபடியே விட்டுக்கொடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தினர். அத்துடன் தங்கள் வசூலில் இவருக்குப் பாதியை ‘சமர்ப்பிப்பதாகவும்’ ஆசை காட்டினர். ஆனால் இவர் மசியவில்லை.. தனக்கே ஆசை காட்டியவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை வேறு பயனில்லாத பகுதிக்கு மாற்றினார்.. அவ்வளவுதான் வந்தது மோசம். ஏனைய அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து இவருக்கே வேட்டு வைத்தனர். என்ன செய்தனரோ, ஏது செய்தனரோ, இரண்டே நாளில் இவருக்கு பதவி மாற்றம்.

    கலங்கவில்லை.. அடுத்து சென்ற வேலையிலும் இதே தொடர்ந்தது. மறுபடியும் வேலை மாற்றல், இடம் மாற்றல். அங்கேயும் இவர் நேர்மையைப் பழகினார். ஆளில்லாத காட்டில் வசூலே இல்லாத இடத்தில் ‘ஆடிட்’ எனும் பெயரில் அதே பதவியில் இடமாற்றம். கவலைப்படவில்லை. நான் நேர்மையாக இருக்கும் வரை எனக்கு என் நெஞ்சில் பயமில்லை. என் நெஞ்சில் பயமில்லை எனும்போது என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிகிறது’ என்றுதான் ஒவ்வொரு மாற்றத்திலும் இவர் எழுதிக்கொடுப்பது.. இப்போதும் எங்கேயோ ஒரு மூலையில் இருக்கிறார். நேர்மை அவருக்குத் துணையாக இருக்கிறது. நெஞ்சில் பயமில்லை. நிம்மதியாகவே இருக்கிறார்.

    இங்கே இவரைப் பற்றி எழுதுவதற்குக் காரணம் நான் சமீபத்தில் வல்லமையில் மாதவன் இளங்கோ எழுதிய ‘என் இனிய சக இந்தியனே’ என்ற நீண்ட கவிதைதான்.

    மேடைபோட்டு முன்னோர் புகழ்பாடிக் காலங்கடத்தினாய்

    வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொண்டேன்!

    ஐரோப்பியரைப் பாரேன்றேன்!

    ஐயா! தாய்மொழியைக் கொண்டே தழைப்போமென்றேன்

    ஆங்கிலத்தில் அசிங்கமாய் வசவுகள் வீசினாய்

    அமைதியாய் குமுறினேன்!

    சினிமா பின்னால் ஒருகூட்டம்

    கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்

    அரசியல் பின்னால் தெருக்கூட்டம்

    இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்!

    இலக்கியம் பல படைத்த இந்தியன் எங்கே!

    அறிவியல், சிற்பம், வானவியல், கணிதம் என

    அனைத்தும் கண்ட அவன் எங்கே?

    அன்பு, பண்பு, அறம், மறம் –

    இவையெல்லாம்தான் எங்கே?

    எதுவும் இன்றி எல்லாம் கண்டவன் –

    எல்லாமிருந்தும் செய்யாதிருக்கும்

    நிலை ஏனோ?

    வந்தான் பாரதி மீசை முறுக்கியபடி,

    தொடர்ந்தான் முண்டாசை கழற்றி உதறியபடி,

    “‘நெஞ்சு பொறுக்குதிலையே

    இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்!’

    அன்றே பகர்ந்தேன் புரியலையோ?

    அறிவில்லையோ?

    நெஞ்சில் உரமுமில்லையடா,

    நேர்மை சிறிதுமில்லையடா,

    வஞ்சனை சொல்வாரடா,

    வாய்ச்சொல்லில் வீரரடா!

    நீ புறப்படடா!

    உலகெலாம் நம் புகழ் பரப்படா!

    நிலையாய், நீர்நிலையாய்,

    குளமாய் நீ இராதேடா!

    துர்நாற்றம் வீசுமடா!

    ஓடும் ஓடையாய் மாறடா!

    ஓடடா! ஓடடா! ஓடடா!!”

    வந்தோம் ஓடி வெளிநாடு!

    வாவென்றது வளநாடு!

    கடுமையாய் உழைத்தோம் திறமோடு!

    மேலை நாட்டவர் பார்த்தனர் மதிப்போடு!

    நிமிர்ந்தோம் இந்தியர் இறுமாப்போடு!

    என்று மாறும் எம் திருநாடு?

    வாழ்கிறோம் இன்று ஏக்கமோடு!

    எம்மைப்போல் ஏங்குபவர்

    எத்தனை பேர்?

    எத்தனையோ பேர்!

    நான் மேலே குறிப்பிட்ட நண்பரைப் போல எத்தனையோ பேர் எங்கெங்கோ இன்னமும் எந்தந்த நிலையிலோ இந்த பாரதத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களை யாரும் விலைக்கு வாங்கிட முடியாது. அவர்களுக்கும் ஏக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் நம்பிக்கை என்ற ஒன்றுதான் இந்த உலகத்தையே ஆட்டுவிக்கிறது. அந்த நம்பிக்கை இவர்களையும் ஒருநாள் வாழவைக்கும் என்றுதான் நம்ப விரும்புகிறேன்.

    இந்தவாரம் ஒரு சிந்தனைக்குரிய கவிதையைப் படைத்த மாதவன் இளங்கோ அவர்களை இந்தவார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்தெடுக்கிறது. திரு மாதவன் இளங்கோ அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு இன்னம்பூரான் அவர்கள் ‘குசலம்’ விசாரித்து எழுதியதில் ஒரு பகுதி

    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்
    கண்ணில் நல்லஃது   உறும் கமுமல வள நகர்ப்
    பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

    “இவ்வுலகின்கண் நல்ல முறையில் தினமும் வாழலாம்; சிந்தித்துப்பார்த்தால் அடுத்த உலகில் பெறவேண்டிய நல்ல கதிக்கும் யாதொரு விதமான குறையும் ஏற்படாது; கண்ணுக்கினிய நல்ல வளத்தோடு கூடிய கழுமலம் என்னும் சீர்காழிப்பதியின்கண் பெண்ணின் நல்லவளாகிய இறைவியுடன் பெருந்தகையாகிய சிவபிரான் நலமாக இருக்கிறான் அல்லவா”

    Share
  • அந்தக் கரங்கள்…


    செண்பக ஜெகதீசன் 

    இறைவனைத் தேடி

    இடைவிடாது மந்திரம் ஓதி

    இசைக்கும் வாயைவிட,

    இன்னலுறும் மனிதனைத் தேடி

    இயன்றவரை உதவிடும் கரங்கள்

    உயர்ந்தவைதான்..

    உகந்தவைதான்-

    இறைவன் பற்றிட…!

    படத்துக்கு நன்றி

     http://alittlebitdifferent.wordpress.com/2011/09/29/just-the-hands/


    Share
  • அமெரிக்க முடிசூட்டு விழா

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு; ஜனநாயக நாடு.  பிரிட்டன் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் தன்னுடைய அரச பரம்பரையை இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறது.  டயானா-சார்லஸ் திருமணம் தோல்வியில் முடிந்தது, டயானா தன்னுடைய காதலனோடு காரில் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு சதியால் கார் விபத்தில் மடிந்தது, இளவரசர் சார்லஸ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவரைத் திருமணம் செய்துகொண்டது ஆகிய எல்லாம் ஒரு அரச பரம்பரைக்குரிய செயல்களாக நான் நினைக்கவில்லை.  நான் நினைப்பது இருக்கட்டும்.  பிரிட்டன் தன் அரச பரம்பரையை வெகுவாகக் கொண்டாடுகிறது.  அது தன் நாட்டின் பெருமைக்குரிய சின்னமாகக் கருதுகிறது.  அரசராகப் போகும் இளவரசர் ஹேரியின் மனைவி கருவுற்றது இங்கிலாந்தைப் பொறுத்த வரை பெரிய செய்தி.

    அமெரிக்காவிற்கு என்று  ஒரு அரச பரம்பரை இல்லாவிட்டாலும்  தங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது  அந்த நிகழ்ச்சி அரசரின்  முடிசூட்டு விழாவைப் போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்  போலும்.  ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முன் அந்தப் பதவிக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்வதாக சத்தியம் செய்வதுதான் இந்தத் தொடக்க விழாவின் முக்கிய, அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற, முக்கிய நிகழ்ச்சி.  ஆனால் நாளடைவில் இது பெரிய விழாவாக உருவாகியிருக்கிறது.  பொதுமக்களும் இதை ஒரு பெரிய திருவிழா போல் கொண்டாட நினைக்கிறார்கள்.

    இந்தத் துவக்கவிழா ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற வேண்டும் என்று திருத்தப்பட்ட அமெரிக்க அரசியல் சாசனம் கூறுகிறது.  அன்றிலிருந்துதான் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதவிக் காலம் ஆரம்பமாகிறது.  முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 1789-இல் ஏப்ரல் 30-ஆம் தேதி நியுயார்க்கில் பதவியேற்றாராம்.  அப்போது அதுதான் அமெரிக்காவின் தலைநகரம்.  1801-இல் மூன்றாவது ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்ஸன் பதவியேற்ற போது வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் தலைநகரமாகியிருந்தது.

    அதன் பிறகு மார்ச் மாதம் நாலாம் தேதியை ஜனாதிபதியின் துவக்க விழா நாளாக மாற்றினார்களாம்.  தொலைபேசி, இண்டெர்னெட் ஆகிய வசதிகள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்தல் முடிவுகள் குதிரை வீரர்கள் மூலமாக தலைநகருக்கு வந்துசேர வேண்டுமாதலால் நவம்பர் முதல் செவ்வாய்க் கிழமையன்று (அமெரிக்கா உருவான நாளிலிருந்து நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமைதான் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் நாள்; இது வியப்பிற்குரிய விஷயம்தான்) தேர்தல் நடந்தாலும், வாக்குகளைக் கையால் எண்ணி, முடிவை அறிவித்து, தேர்தல் குழுவின் (Electoral College) முடிவுகளையும் தெரிந்துகொண்டு ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன.  1937-இல் ரூஸ்வெட்டின் இரண்டாவது பதவியேற்பின் போது பதவியேற்பு விழா அரசியல் சாசனம் இருபதாவது திருத்தத்தின்படி ஜனவரி 20-க்கு மாற்றி அமைக்கப்பட்டது.  இந்த இரண்டரை மாதங்கள் புதிதாகப் பதவியேற்பவர் தன்னுடைய மந்திரி சபையையும் மற்ற அதிகாரிகளையும் தேர்ந்தெடுப்பதற்கு அவகாசம் அளிக்கிறது.

    துவக்க விழா அமெரிக்க பார்லிமெண்டான கேபிடல்  ஹில்லின் (Capitol Hill) படிகளில் நடக்கும். அமெரிக்க தலைமை நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.  அதன் பிறகு ஜனாதிபதி பொறுப்பை ஏற்றவர் தன் அதிகார பூர்வமான வீட்டிற்குச் செல்வார்.  ஜெபர்ஸன் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் குதிரை மீது வாத்தியக் குழுக்கள் புடைசூழ தன் இருப்பிடத்திற்குச் சென்றாராம்.  அதுதான் இப்போது பெரிய துவக்க விழா அணிவகுப்பாக (Inaugural Parade) உருவாகியிருக்கிறது.  ஜெபர்சனை அடுத்து வந்த ஜேம்ஸ் மேடிசன் காலத்தில் அணிவகுப்பிற்குப் பிறகு துவக்க விழா நடனம் (Inaugural Ball) ஆரம்பித்தது.  இதில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் $4 கொடுத்து டிக்கெட் வாங்கினார்களாம்.  இன்று டிக்கெட்டின் விலை $60. ஆனால், நன்கொடை விலையாக முதலில் $1000-உம், பின், $500-உம் பெறப்பட்டது.  1913-இல் பதவியேற்ற உட்ரோ வில்ஸன் இது அதிகப் பணம் செலவாகும் நிகழ்ச்சி என்று கருதி ரத்துசெய்துவிட்டாராம்.  அவரை அடுத்து வந்த வாரன் ஹார்டிங்கும் அதைத் தொடர்ந்தாராம்.  1949-இல் ஹேரி ட்ரூமன் இதை மறுபடியும் கொண்டுவந்தாராம்.  ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பதினான்காக உயர்ந்தனவாம்.

    பதவிப் பிரமாண விழாவிற்கு ஆகும் செலவுகளை மட்டும்தான்  அரசு செலவழிக்கிறதாம்.  மற்ற எல்லா நிகழ்ச்சிகளுக்காகும் செலவுகளை துவக்கவிழா கமிட்டி  தனிப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கிறதாம்.  இந்த முறை ஒபாமாவே 50 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும்படி கமிட்டி அங்கத்தினர்களிடம் கூறினாராம்.

    பல நாட்களாக பதவியேற்பிற்கான  ஏற்பாடுகள் நடந்தன.  மிஷல் ஒபாமாவின் உடைகளுக்காக பல ஆயிரம் டாலர்கள் செலவழிக்கப்பட்டன.  (ஆனால் அன்று ஒரு நாள் அதை அணிந்த பிறகு அவருடைய அந்த உடை ஜனாதிபதி ஆவணக் காப்பகத்திற்குச் (presidential archives) சென்றுவிடுமாம்.)  பெரிய ஆடை வல்லுநர்கள் அதைத் தயாரித்தார்களாம். அதன் விலை ரகசியம். ஃபாஷன் பற்றித் தெரிந்தவர்கள் $10,000 இருக்கலாம் என்று மதிக்கிறார்கள். முப்பது வருஷங்களுக்கு முன் ஜனாதிபதியாக இருந்த ரீகனின் மனைவி ஆடைகளில் அதிகப் பணம் செலவழிக்கிறார் என்று மக்களிடையே அதிருப்தி இருந்ததாம்.  இப்போது மிஷல் ஒபாமாவின் உடைகளைப் பற்றி யாரும் குறை சொல்வதாகத் தெரியவில்லை.  இந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை மாற்றம்!

    துவக்க விழாவிற்குப் பிறகு அணிவகுப்பு, நடனம் என்று பல நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.  சுமார் பத்து லட்சம் பேர் வாஷிங்டனின் குளிரையும் பொருட்படுத்தாமல் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.  இது ஒபாமாவின் முதல் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கிஅயில் பாதி.

    ஒபாமா தன்னுடைய துவக்க உரையில் (Inaugural Speech) தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் கூறிய வாக்குறுதிகளை மறுபடி கூறினார்.  பலர் அன்றாடத் தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கும்போது சிலர் கையில் மட்டும் பணம் சேருவது நாட்டிற்கே நல்லதல்ல என்றும் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்களை மற்றவர்கள் வெறுக்கும் வரையில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதாகாது என்றும் அட்சய பாதிரமான அமெரிக்காவிற்கு வர விரும்புபவர்களில் தகுதி இருப்பவர்களை வரவேற்பதே மனிதநேயம் என்றும் அவர் கூறியது அவர் எப்படிப்பட்ட மனித நேயர் என்பதைக் காட்டியது.   சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது பற்றியும் விரிவாகப் பேசினார்.

    அவருடைய துவக்க விழாவில் கடவுள் வணக்கம் பாடியவர் ஒரு கருப்புப் பெண்.  கவிதை வாசித்தவர் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்.  துணைஜனாதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்வித்த உச்சநீதிமன்ற நீதிபதி போர்ட்டரீகோவிலிருந்து சிறு வயதில் அமெரிக்காவிற்குத் தன் பெற்றோர்களுடன் குடியேறி நியுயார்க்கில் வறியவர்கள் பகுதியில் வளர்ந்து படித்து முன்னேறியவர்.  இவர்களைத் தன் துவக்க விழாவிற்குத் தேர்தெடுத்ததின் மூலம் தான் இவர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதை உலகிற்கு அறிவித்தார். அமெரிக்கா பல வித மக்களையும் அரவணைக்கும் நாடு; அவர்கள் மேலே வர வாய்ப்புகள் அளிக்கும் நாடு என்று காட்டவும் அப்படிச் செய்தார் என்று நினைக்கிறேன்.  White Anglo-Saxon Protestant-களுக்குத் துவக்க விழாவில் முக்கிய இடம் இல்லை (இவர்களை WASP என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்).  இவர்கள் அமெரிக்காவிற்கு வந்த முதல் குடியேறிகளின் வழி வந்தவர்கள்.  இவர்கள் அமெரிக்கா தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள்.  இந்த இனத்தைச் சேர்ந்த யாருக்கும் இறை வணக்கம் பாடவோ கவிதை வாசிக்கவோ ஒபாமா இடம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனாலும் எனக்குள்ளே ஒரு நெருடல்.  இந்தத் துவக்க விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் வேண்டுமா?  சிகாகோ நகரின் முக்கிய வீதி ஒன்றில வயதான கருப்பர் ஒருவர் கடுங்குளிரில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது இத்தனை பணம் இதற்காகச் செலவிட வேண்டுமா?  காந்திஜி பற்றி அதிகம் தெரிந்திராத ஒரு அமெரிக்கப் பெண் என்னிடம் ஒரு முறை ‘டயப்பர் (diaper-சிறு குழந்தைகளுக்கு அவர்களுக்கு விபரம் தெரியும் வரை இடையில் கட்டும் துண்டு) கட்டிக்கொண்டு இருப்பாரே அவர்தானே நீங்கள் குறிப்பிடும் காந்திஜி’ என்று கேட்டார்.  தமிழ்நாட்டிற்கு வந்தபோது இடையில் வேட்டி மட்டும் உடுத்தியிருந்த தமிழ்நாட்டு விவசாயிகளைப் பார்த்த காந்திஜி அன்றிலிருந்து தானும் வேட்டி மட்டும் உடுத்தத் தீர்மானித்தார் என்று அந்தப் பெண்ணிற்கு விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  ஆனால் ஒபாமா காந்திஜியைப் பற்றி முழுவதும் அறிந்தவர்.  அவருடைய எளிமையை வெகுவாகப் போற்றியவர்.  ‘யாரோடு – அவர்கள் உயிரோடு இருப்பவர்களானாலும் சரி அல்லது இறந்துபோய்விட்டவர்களானாலும் சரி – நீங்கள் உணவு உண்ண விரும்புகிறீர்கள்?’ என்று ஒபாமாவிடம் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு மாணவன் கேட்டபோது எந்த விதத் தாமதமும் இன்றி அவர் உடனடியாகக் கொடுத்த பதில் ‘நான் காந்திஜியோடுதான் உணவு உண்ண விரும்புகிறேன். அவர் உண்ணும் உணவு மிகவும் எளிமையானதாக, அளவில் குறைவாக இருக்கும் என்றாலும்’ என்றார்.  அவர் காந்திஜியைப் போற்றுபவர் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?  அவராலேயே ஜனாதிபதி பதயேற்பு விழாவை எளிமையாக நடத்த முடியவில்லை என்றால் அமெரிக்காவின் பகட்டிற்கு அவர் பணிய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதைத் தவிர என்ன காரணம் இருக்க முடியும்?

    பொதுவாக இந்தியாவில்  அரசியல்வாதிகள் தாங்கள்  எளிய வாழ்க்கை வாழுவதாக – அப்படி வாழுகிறார்களோ இல்லையோ – காட்டிக்கொள்வார்கள்.  ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை.  எல்லா அரசியல்வாதிகளும் ‘டிப்டாப்பாக’ உடை அணிந்து வருகிறார்கள்.  நூற்றுக் கணக்கில் பணம் செலவழித்து தலை அலங்காரம் செய்துகொள்கிறார்கள்.  (2008 ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஜான் எட்வர்ட்ஸ் 8000 டாலர் செலவழித்துத் தலை அலங்காரம் செய்துகொண்டதாகக் கூறினார்கள்.)  அமெரிக்காவில் எல்லோரும் – முதியவர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் உட்பட – தலை அலங்காரம் செய்துகொள்ளுகிறார்கள் என்பது இன்னொரு விஷயம்.  உடம்பை ஊளைச்சதை எதுவுமில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அமெரிக்க இலக்கணங்களில் ஒன்று.  அதுவும் பொதுவாழ்வில் ஈடுப்பட்டிருப்பவர்கள் உடலை நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் அவர்களுக்கு நாகரிகம் தெரியவில்லை என்று பொதுமக்கள் நினைத்துவிடலாம்.  அதிலும் கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒபாமாவுக்கும் அவரது மனைவிக்கும் மற்ற வெள்ளையர்கள் போல் நாகரிகமாக இருக்கத் தெரியாது என்று பொதுமக்கள் நினைக்க வாய்ப்பு உண்டு.  மிஷல் ஒபாமா அவர் ஜனாதிபதி மனைவியாக ஆவதற்கு முன்பிருந்ததை விட இப்போது தன்னுடைய உடல் அமைப்பில் அக்கறை செலுத்துகிறார் என்று நான் என்று நினைக்கிறேன்.  தாங்கள் எந்த விதத்திலும் வெள்ளை அமெரிக்கர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிக்கொள்வதற்காகவும் பதவியில் இருப்பவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்.

    அமெரிக்காவின் படிமத்தை உலகில் தூக்கிப் பிடிக்க  வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒபாமாவிற்கு இருப்பதும் அமெரிக்கா தன் பலத்தையும் பணத்தையும் உலகிற்குக் காட்ட விரும்பியதும்தான் துவக்க விழா இவ்வளவு ஆடம்பரமாக அமைந்தது என்று நினைத்துக்கொண்டால் ஓரளவு சமாதானம் கிடைக்கிறது.

    http://www.huffingtonpost.com/2013/01/21/inauguration-pictures-2013_n_2492001.html#slide=2008722

    http://www.huffingtonpost.com/2013/01/21/inauguration-pictures-2013_n_2492001.html#slide=2009212

    Share
  • தெரு நாய்

    சு.கோதண்டராமன்

    எங்கும் பரவியுள ஈசனுக்கோர் பாமாலை

    எழுத முற்பட்டு ஏடெடுத்து அமர்ந்திட்டேன்

    “எனைப் பாடு, எனைப்பாடு” என்றொரு குறுக்கீடு

    எட்டி நான் பார்த்தேன். ‘சீ, ஒரு தெரு நாய்!’

    “உனக்கென்ன தகுதி ? குரைக்காமல் கிட” என்றேன்.

     

    “எங்குமுளன் ஈசன் எனில் என்னிடத்தில் அவன் இலையோ?”

    (நாய் தொடர்ந்து கூறியதை நம் மொழியில் தருகின்றேன்.)

     

    “மண்ணில் நான் பிறந்து மாதமொன்று ஆகிறது..

    புத்தியைக் கொண்டுந்தன் பிழைப்பை நடத்தென்று

    தாயும் விரட்டிடவே தனியன் ஆகிவிட்டேன்.

    கால் கொண்டு சேர்த்தது காலையில் இங்கென்னை.

    போவோர் பின் போனேன், வருவோர் பின் வந்தேன்.

    இங்குள்ள மனிதரை என் நண்பனாய் ஏற்றேன்.

     

    காலை முதல் பட்டினி, அது எனக்குப் பொருட்டல்ல.

    எனக்கொரு பிடி சோறு இடினும் இடாவிடினும்

    இப்போது வருகின்றான் யாரோ ஒரு வேற்றாள்.

    அவனிடமிருந்து உமதுடமை காத்திடுதல்

    எந்தன் கடமையென எண்ணிக் குரைக்கின்றேன்.

    பணி செய்து கிடப்பதென் கடனென் றுரைத்தது.

     

    நாய் உரைத்த சொல் யாவும் நாயகனின் சொல்லேயாம்.

    நாய் வடிவினில் விளங்கும் ருத்திரனுக்கு நம என்ற

    வேத மொழி நினைந்து விம்மிதம் எய்தினேன்.


    படத்துக்கு நன்றி

    http://thedogweb.meu.zoznam.sk/psie-vianoce/

    Share
  • பிரேமை

    இன்னம்பூரான்

    அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லையென்றால், பிரேமைக்குத் தளை இல்லை என்று ஆகிவிடுமா என்ன? இல்லை கனிவு கட்டற்ற அரவணைப்பு ஆகிவிடுமோ?  விஷ்ணுவுக்கு சகஸ்ரநாமம் என்றால் பிரேமைக்கு லக்ஷார்ச்சனையே செய்து விடலாம். பிரேமை மனம் என்னும் சுரங்கத்தில் ஜனித்து, அலைந்து, திரிந்து, திக்குத்திசை தெரியாமல் தொலைந்து, மீண்டு/ மீட்கப்பட்டு, நிரந்தரமாக மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு சஞ்சீவி; சிரஞ்சீவி. அவள் ஒரு தொடர்கதை; அமரகாவியம்.

    பெற்றெடுத்த அன்னை தான் பிரேமையின் ஊற்று, நீரோட்டம், பிரவாகம். ரத்த பாசமென்பது உள்ளம் உருகி, உடலும் சிந்தி, உருவும், உயிரும் அருளும் பாக்கியம் என்றால், அது அன்னையின் கொடையே. அவள் மறைந்த பின் ஆண்டாண்டு

    தோறும் நினவு நாளை அனுசரிக்கும் போது, மனம் தத்தளிக்கிறது.  உள்ளம் பதறுதடா! அவளை நினைக்காத க்ஷணமொன்று உண்டோ? உடன் பிறந்தோரை சஹோதரன், சஹோதரி என்கிறது சம்ஸ்கிருதம். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்று பொருள். அதனால் மட்டுமா சகோதர வாஞ்சை?

    பொருள் என்றால் என்ன பொருள்! சொல்லின் புரிதலை நாடி, தேடுவதும் பொருள் தான்.

    திரைகடலோடியும் தேடும் திரவியமும் பொருள் தான்.  திவாகரமும், நிகண்டும், அகராதியும் சொல்லும் பொருள் எல்லாவற்றிற்கும் மேலான பொருள் ஒன்று உண்டு.

    பிரேமையினால் தளை கழண்டுபோக, சுகிர்த்து மகிழ்ந்த தலைவன் பரிசம் போட ‘பொருள்’ தேடி செல்ல விழைகிறான்.  ‘ஒரு பொருளை தேடும் நீ விலை மதியா பொருளையல்லவா தொலைத்து விடுவாய்.’ என்று நைச்சியமாக  அவனை பயமுறுத்தி, அவனை தடுத்தாட்கொண்டு விடுகிறாள், தலைவியின் பாங்கி. அவளுக்கு அல்லவோ தெரியும், தலைவியின் பிரேமையின் அருமை. கூட்டுக்களவாணியாயிற்றே!

    “கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ—” என்று ஒரு போடு போட்ட பாங்கி, ஒரு குண்டையும் வீசி அவனை கலங்கடித்தாள்.

    “… விடமீன் போல் தொழுதேந்தும் வயங்கிய கற்பினாள்

    தடமென் தோள் பிரியாமை பொருளாயன் அல்லதை…” என்று.

    இன்றைய சினிமா தமிழில்:

    “மிஸ்டர்! நீ எந்த ஊருக்குப் போவையோ? எந்த மீன் கிட்ட சிக்குவையோ? எம்.எஸ். நடிச்சாங்களே அந்த சகுந்தலை சினிமாவின் ஹீரோ (வில்லன்?) துஷ்யந்தன் மாதிரி ஹீரோயினை மறந்திடுவாயோ? யார் கண்டா? அவள் விரகதாபத்தில் துடித்து மடிந்து போனால், யாரடா பொறுப்பு? அவ தாங்கமாட்டாடா கண்ணு. உங்கப்புராணை!  போகாதே! போகாதே! என் ஃப்ரெண்டின் ஃப்யூச்சர் கணவா!”

    “கடன் இறந்து…அல்லதை…’ என்ற பிரேமபாணம் கலித்தொகையில் செலவு அழுங்குவித்தல் என்ற பகுதியில் இவ்வாறு வருகிறது:

    மலைஇறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ?…
    கடன்இறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ? வடமீன்போல் தொழுதுஏத்த வயங்கிய கற்பினாள்
    தடமென்தோள் பிரியாமை பொருள்
    (கலித்தொகை 2 : அடிகள் 12, 20, 21, 22)

    செலவு என்றால் பயணம். அதை நடக்க விடாமல் செய்வதே அழுங்குவித்தல்.  பாங்கி உணர்த்தும் விலை மதியா, திரும்ப கிடைக்காத ’பொருள்’ தலவியின் இளமை. அது மட்டுமல்ல. அவளின் விரகதாபம் அவளை கொன்றுவிடுமோ என்று சொல்லி ‘மிரட்டுகிறாள்’. அவனும் செலவை தவிர்த்து விடுகிறான். ஒரு பிரமேயம் போதாதா, பிரேமைக்கு! பிரேமை இனிக்கும்; தகிக்கும்; இழுக்கும். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாத சமாச்சாரமா? என்று கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.

    அதனால் தான் வாஞ்சைக்குத் திரும்புகிறேன். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்பது மட்டுமல்ல.  ஒரு கூட்டில் வாழ்ந்த பார்ப்புகள் அல்லவா. அதனால் ஒரு பிரேமை. பல வருடங்களுக்கு முன் பிருதிவி ராஜ் நடித்த ‘படோசி’ (அண்டை வீட்டுக்காரன்) என்ற சினிமா பார்த்தது ஞாபகம் வருகிறது. கலோனிய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பரஸ்பர பிரேமையை இழந்த ஹிந்து-முஸ்லீம் ‘படோசி’. எனவே பிரேமைக்கு பரந்த இயல்பும் உண்டு. அது தான் மனித நேயம்.  தற்கால அரசியல் வசனமல்ல.

    இனி இறை மீது காதல், கனிவு, அன்பு, பிரேமை. ‘குசலம்’ படித்தவர்களில் பலர் ஒரு நுட்பம் பற்றி பேசவில்லை. திருஞானசம்பந்தர், தன்னை தேடி வந்த தகப்பனிடன் வினவியது: ‘…பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.’ குளக்கரையில் அழுது கொண்டு நின்ற திராவிட சிசுவுக்கு தங்கப்பாலாடையில் அடிசல் போட்டிய அம்பாள் நல்லாள்.  அது பொருத்தமே. கிருபாகரனோ அந்த தோணியப்பர். அவருடைய ‘குசலம்’ விஜாரிக்க வேண்டாமோ?  திருஞானசம்பந்த்ரின் மோன நிலையில் சுவாமியும் பிரேமைக்குரிய உறவினன் தான்.  அதான் ‘நலம். நலம் அறிய அவா.’

    அடுத்த கட்டம் மனதுக்குக் கஷ்டம், நம் போன்ற சராசரிகளுக்கு. தோணியப்பர் திவ்ய தம்பதிக்கு குழவியாக இருந்த போதே தெய்வீகசம்பந்தமாகிவிட்ட திருஞானசம்பந்தருக்கு 16 வயதில் இகலோக சம்பந்தம் பேசினார்கள். திருநல்லூர் நம்பியாண்டாரின் பெண்ணை இவருக்கு திருமணம் முடிக்க வந்த சுற்றத்தையும், மணமகளையும் கோயிலுக்கு அழைத்து சென்றார். அங்கு நடந்ததோ பெருமணம். எல்லாரும் கூண்டோடு கைலாசம்.

    காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
    ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே. [520]

    “இறைவனிடத்துக் காதல் கொண்டு, மனம் கசிந்து, கண்ணீர் நிறைத்து” அந்நிலையில் ஓதுகின்றவர்களை வீடு பேறுவறச்செலுத்துவது (யாதெனில்) நான்கு வேதங்களைக்காட்டிலும் மெய்பொருளாக உள்ளதும், இறைவனுடைய பெயராக உள்ளதுமாகிய ‘நமசிவாய’ என்று சொல்லப்படும் திருஐந்து எழுத்து.”

    ~ அ.ச.ஞானசம்பந்தன்

    இப்போது சொல்லுங்கள், பிரேமையின் பிரமையை பற்றி.

    பிரேமையுடன்,

    இன்னம்பூரான்

    25 01 2013

    உசாத்துணை: அ.ச.ஞானசம்பந்தன் (2005) இன்னமுதம்: பக்கம் 26.

    சித்திரத்துக்கு நன்றி: http://lh5.ggpht.com/_tQ-YR5eXQJc/SgB7pCcEwkI/AAAAAAAAH2g/6RmMCvDn0Rc/scan0010.jpg

    Share