Blog

  • மல்லாரி!…

    விசாலம்

     

    கலி யுகத்தில் மிகவும் எளிதாக உள்ளொளியை அதாவது நமக்குள்ளே இருக்கும் கடவுளை உணர வைக்கும் சக்தி இசைக்கு இருக்கிறது. கோடிக்கோடியாக ஜபம் செய்யவேண்டியதில்லை. பல ஆயிரங்கள் சிலவு செய்து ஹோமம் வளர்த்து பூஜை செய்தால் எத்தனைப்பலன்கள் கிடைக்குமோ அவை நெஞ்சுருகி பாடி அந்த இறைவனுக்கே எல்லாம் சமர்ப்பித்தால் கிடைத்துவிடும் .தவிர இறைவனது தரிசனமும் கிடைத்து அவர் அருளுக்கும் பாத்திரமாகி விடுவீர்கள் இசையில் மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாகராஜர் . ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதர், ,திரு சியாமா சாஸ்திரி மூவருமே தங்கள் இசையினாலேயே தங்கள் இஷ்ட தெய்வங்களைத்தரிசித்தனர், இறைவனுக்கு அருளும் அறுபத்தினாலு உபசாரங்களில் இசையும் ஒன்று .இதனால் தான் இன்றும் கோயில் மண்டபங்களில் இசையும், நாட்டியமும் நடைப்பெறுகிறது.இறைவன்,இறைவிக்கென்று இது நடக்கும் போது டிக்கட் ஒன்றும் வைப்பதில்லை, எல்லோரும் போய் ஆனந்தம் பெறலாம் ஆகம சாஸ்திரத்தில் கோயிலில் இன்ன ராகம் இந்தந்த வேளையில் பாட வேண்டும் என்றும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது .கோயில் பிரகாரம் மிகப்பெரிதாக அமைந்துவிடுவதால் அங்கு வாய்ப்பாட்டைவிட நாதசுரம் தான் சோபிக்கும் .நாதசுரத்தின் ஒலி வெகு தூரம் போய் ரீங்காரம் செய்யும் தன்மை கொண்டிருப்பதால், கோயில்களில் நாதசுரத்தையே அதிகமாக நாம் பார்க்கிறோம் .அதற்கேத்தாற்போல் தவிலும் சத்தமும் அதற்கேத்த ஜோடிதான் கோயில்களில் காலை ஐந்திலிருந்து ஆறு வரை நாதசுரவித்துவான் பூபாள ராகம் .மலயமாருதம் அல்லது பௌளி ராகம் வாசிப்பார்கள்.

    இந்த ராகங்களில் சுத்த ரிஷபம், சுத்த தைவதம் இருப்பதால் மனதைக்கொள்ளைக்கொண்டுச்செல்லும் பாவம் இவைகளில் இருக்கும் .சுவாமி துயில் நீங்கி கண்விழிக்கும்போது “திருப்பள்ளி எழுச்சி” பாடும் வழக்கம் உண்டு .அவை அநேகமாக பூபாளத்தில் இருக்கும் காலை எட்டு மணியிலிருந்து ராகங்கள் தன்யாசி , சாவேரி .,அசாவேரி. வாசிக்கும் வழக்கம் இருக்கிறது .பத்து மணி சுமாருக்கு ராகங்கள் சுருட்டி. அல்லது மணிரங்கு ரொம்ப வியாபகமாக வெளிவரும். ஒவ்வொரு புகழப்பெற்ற ஸ்தலங்களிலும், கோயில்களிலும் நான் போகும் போது இவைகளை கவனிப்பேன் 12 மணிக்கு கோயில் மூடிவிடும். பின் மாலை ஐந்து மணிக்கு நாதசுர வித்துவான் காம்போஜியும். சங்கராபரணமும் பிச்சுதறுவார்கள். இரவு சயனாசனத்தின் போது ராகம் நிலாம்பரியோ அல்லது ஆனந்தபைரவியோ நம்மை மறக்கச்செய்யும் ,நம் முன்னோர்கள் காலையிலிருந்து இந்த ராகங்களைக்கேட்டு மணி சுமார் எவ்வளவு இருக்கும் என தீர்மானிப்பார்கள் என்று என் தந்தை என்னிடம் கூறியிருக்கிறார்.

    ஒவ்வொரு நாளும் ஒரு ராகம் கண்டிப்பாக மாறாமல் வந்து விடும். அதுதான் கம்பீர நாட்டை இந்த ராகத்தில் வாசிக்கும் தனிப்பட்ட நடை தான் “மல்லாரி ” மல்லாரி பலவிதமாக வரும் அவை தீர்த்தமல்லாரி, தளிகை மல்லாரி, கும்பமல்லாரி, புறப்பாடு மல்லாரி,தேர் மல்லாரி இவைகளின் பெயர்களிலிருந்தே இவைகள் எப்போது வாசிக்கபடும் என்று யோசிக்க முடிகிறது.

    இறைவன் அல்லது இறைவிக்கு அபிஷேகம் செய்ய குடத்துடன் ஒரு நதியோ அல்லது குளத்திற்கோ சென்று நீர் எடுத்து வருவார்கள் .அப்போது வாசிப்பது தீர்த்த மல்லாரி.

    சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் போது வாசிப்பது தளிகை மல்லாரி .சுவாமியை வரவேற்க பூர்ணகும்பத்துடன் வேதங்கள் ஓதி எதிர்க்கொண்டு அழைப்பார்கள் அந்த நேரம் வாசிப்பது கும்ப மல்லாரி. சுவாமி வீதி ஊர்வலம் வர கோயிலை விட்டுக்கிளம்புவார் அப்போது வாசிக்கும் மல்லாரி பறப்பாடு மல்லாரி.

    பிரம்மோத்ஸவ நாட்களில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் விதவிதமான அலங்காரங்களுடன். விதவிதமான வாகனங்களில் வீதி வலம் வருவார் இறைவன் தேர் மிக பெரிதாக இருக்கும் ஆதலால் அது கோயில் வெளியிலே தான் நின்றுகொண்டிருக்கும், இறைவன், இறைவி தனக்கென்று அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்தபடி வெளிவந்து பின் அந்தத்தேரில் அமர்த்தப்படுவார்கள்.ஆஹா அப்போது கேட்கவேண்டுமே அந்த மல்லாரியை. முதல் காலத்தில் மெள்ள ஆரம்பித்து பின் மூன்று காலங்களிலும் ஜமாய்த்துவிடுவார்கள் நாதசுர வித்துவான்கள். மல்லாரி அதிகமாக துருவதாளம், திருபுடை தாளம் மட்யதாளமாக இருக்கும் .இதில் மூன்று காலங்கள் வாசித்து பின் திஸ்ர நடைக்கும் கொண்டுவருவார்கள்.ஆஹா அப்படியே குதிரை “டக் டக்கென்று ‘போவது போல் இருக்கும் .மல்லாரி எப்போதுமே வாத்தியங்களுக்குத்தான் எடுபடும் இந்த மல்லாரியில் பாட்டு அதிகமாக கிடையாது .ஒரே ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன், சரியாக ஞாபகமில்லை

    “ஆயாத்தி ராஜகோபாலா
    அகிலலோக பரிபாலா
    ராஜ ராஜாத்தி ராஜ வ்ரஜ ராஜ மது வ்ருஷ்ணி போஜ சூர குலராஜா
    ஸார ஸாயத விலோசனா பவபய நிரோத விலோசனா மந்த ஹாஸ {ஆயாதி}

    இது ஊத்துக்காடு இயற்றியது போல் தோன்றுகிறது.

    இந்த தேர் புறப்பாடும் மல்லாரி ராகமும் நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி அம்மன் கோயிலிலும், மன்னார்குடி ராஜகோபால சன்னதியிலும் நாதசுர சக்கரவர்த்தி திரு டி ஆர் ராஜரத்தினம் இரவு 11 வரை வாசித்ததை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை என் காதிலிலேயே ஒலிக்கிறது

    Share
  • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

    பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

    œœœ

    பொருள்
    திருமண அழைப்பிதழ்கள் – அறிமுகமும் அனுபவமும்

    உரையாற்றுபவர்
    பேரா. பெருமாள்முருகன்
    (தமிழ் இணைப்பேராசிரியர், அ.அ.அரசு கலைக்கல்லூரி, நாமக்கல்)

    தேதி: 13 டிசம்பர் 2013
    நேரம்: மாலை 5.00 மணி

    இடம்:

    ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
    3ஆவது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
    தரமணி, சென்னை 600 113
    தொலைபேசி: 2254 2551/2254 2552

    (தேநீர்: மாலை 4.30 மணி)

    சொற்பொழிவு


    அச்சிடப்பட்ட அனைத்தும் சமூக ஆவணங்களாகத் திகழும் தன்மை கொண்டவை. அவற்றுள் பொதுமக்களிடையே புழங்கிவரும் திருமண அழைப்பிதழ்களுக்கு முக்கிய இடமுண்டு. சாதி அடிப்படையிலும், இடத்தின் அடிப்படையிலும், மொழியிலும் பல்வேறு வகைப்பட்டவையாக அழைப்பிதழ்கள் விளங்குகின்றன. அவற்றைச் சேகரித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவற்றிலுள்ள பல்வேறு செய்திகளை அறிமுக நிலையில் எடுத்துரைப்பதாகவும் இவ்வுரை அமையும்.

    பேரா. பெருமாள்முருகன்

    பேரா. பெருமாள்முருகன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    œœœ

    Share
  • ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்

    GOCE Records Gravity

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    [ Earth’s Gravity Scars, made by Japan Earthquake in 2011 ]

     

    http://spaceinvideos.esa.int/Videos/2013/03/Earthquake_sensed_by_GOCE

    http://spaceinvideos.esa.int/Videos/2013/03/Earthquake_felt_in_Space

    http://spaceinvideos.esa.int/Videos/2004/07/GOCE

    http://spaceinvideos.esa.int/Videos/2011/03/GOCE_Geoid

    http://spaceinvideos.esa.int/Videos/2013/10/Goce_completes_his_mission

    http://spaceinvideos.esa.int/Videos/2013/10/Atmospheric_density_and_winds_from_GOCE

    http://spaceinvideos.esa.int/Videos/2013/10/GOCE_data_on_density_and_wind_compared_to_model

     

    குட்டை உயரத்தில் புவிசுற்றி வரும்
    வட்டப் பாதையில் ஈசாவின்
    கோசி விண்ணுளவி !
    துல்லியமாய்க் கணித்துப்
    புவியீர்ப்பு மாறுதல் களை எல்லாம்
    நவீன முறையில்
    படங்கள் மூலம் பதிவு செய்யும் !
    கடலின் நீரோட்டச் சுழற்சி
    கண்காணிக்கும் !
    பூமியின் மேடு பள்ளத்தைச்
    சேமிக்கும் தொடர்ந்து !
    இமயத்தின் உயரத்தை அளக்கும் !
    அரிசோனாவில்
    அதிசயக் ‘கானியன்’ மேடு பள்ளம்
    பதிவு செய்யும் !
    எரிமலைக் குழம்பின் போக்கு
    நிலநடுக்கத் தாக்கின்,
    புவியீர்ப்பு வடுக்களைப் பதியும்  !
    ஆர்டிக் பனிப் பாறைத்
    துண்டாவதும்
    அண்டார்க்டிக் பனிக் குன்று
    விண்டு போவதும்
    கண்டு பிடிக்கும் !
    பூரணப் புவியீர்ப்பு வரை படத்தைச்
    சீராகப் பதிந்து வருவது
    கோசி ஈர்ப்புளவி !

    ++++++++++++++

    ESA GOCE Gravity Mapper

    பூகம்ப நில அதிர்ச்சிகள் புவியீர்ப்பில் வடுக்களை உண்டாக்கும்.

    2013 டிசம்பர் 3 ஆம் தேதி தகவல்படி ஈசாவின் துணைக்கோள் “கோசி” [GOCE- Gravity Ocean Circulation Explorer] ஜப்பானில் 2011 மார்ச் 11 இல் நேர்ந்த 9.0 ரிக்டர் அளவிப் பூகம்பம் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகளை [Gravity Scars] தெளிவாய்ப் பதிவு செய்துள்ளது.   அது அனுப்பிய புதுத் தகவல் நாசா புவித்தள உளவி கோசியின் மகத்துவப் பணியை எதிர்பாராத விதமாக விரித்துள்ளது.  அத்துடன் கோசி துணைக்கோள் புவியீர்ப்பு வேறுபாடு வரைப் படத்தை வெகு நுணுக்கமாகவும் பதிவு செய்துள்ளது.   பூமியில் ஏற்படும் பெரிய பூகம்பங்கள் புவித்தள அடித்தட்டு [Tectonic Plates] அமைப்புகளைத் தாறுமாறாக மாற்றுவ தோடு, அப்பகுதியின் ஈர்ப்பியல் அளவையும் ஓரளவு பாதிக்கிறது.

    Gravity affeted by 2011 earthquake

    புவித்தள ஈர்ப்பு சக்தி பூமி எங்கும் ஒரே அளவில் இல்லாமல், இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது.   அந்த புவித்தள ஈர்ப்பு வேறுபாட்டையும், உண்டாகும் மாறுபாட்டையும் துல்லியமாகத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது நாசாவின் கோசி துணைக்கோள்.   புவித்தள ஈர்ப்பு வேறுபாட்டுக்குப் பல காரணங்கள் உள்ளன.   முதல் காரணம் உட்தளப் பூமியில் உள்ள கற்பாறைகள், கடல்நீர் ஆழம், அடித்தட்டு [Tectonic Plates] அடுக்கு அமைப்புகள் ஓவ்வோர் இடத்திலும் மாறுபடுகின்றன.  பூகம்பத்தின் போது பல்லாயிரம் கி.மீ. அடியில் உள்ள அடித்தட்டுகள் நகர்ச்சி அடைவதால்  புவிப்பளு அப்பகுதியில் மாறி, ஈர்ப்பு சக்தி பாதிக்கப் படுகிறது.   2011 இல் நேர்ந்த ஜப்பான் 9.0 ரிக்டர் அளவிப் பூகம்பத்தில் கடலுக்கு அடியில் நில நடுக்கம் ஏற்பட்டு, சுனாமி அலைகள் பொங்கி எழுந்து, 20,000 பேர்கள் உயிரிழந்தார்.   அப்போது கடல் அடித்தட்டு  அடுக்கு நிலமும், மேற்தட்டு நீரும் தடம் புரண்டு, புவியீர்ப்பு சக்தி அளவு பாதிப்பாகித் தழும்புகள் படிந்தன.

    கோசி துணைக்கோள் மூலம் கடலில் நேரும் நீர்ச்சுற்றுகளைக் கண்காணித்து எப்படி வெப்பம் கடத்தப் படுகிறது என்றும், நீர் மட்ட உயர்வு, தாழ்வுகளைத் தொடர்ந்து நோக்கவும் முடிகிறது.   தற்போது நில நடுக்கங்கள் உண்டாக்கும் புவியீர்ப்பு மாறுதல் வடுக்களைப் படம் வரையப் பூகம்ப ஓசை அலைகளைத்  துணைக்கோள் கோசி பதிந்து வருகிறது.   பூகம்பம் உட்தளப் பூமியில் நில நடுக்க அலைகளை [Seismic Waves] உண்டாக்குவதுடன், மேற்புறத்திலும் பரவி முரசம் போல் அதிர்கிறது.   அதனால் பூமியின் சூழ்மண்டலத்திலும் ஒலி அலைகள் எழுகின்றன.  அந்த ஒலி அலைகள் பூமிக்கு மேல் சில செ.மீ. முதல்  200-300 கி.மீ. [100 – 200 மைல்]  வரைப் பயணம் செய்கின்றன.   தணிவு அதிர்வு ஒலி அலைகள் [Low Frequency Infrasound Waves]  மட்டுமே இவ்வித உயரங்களுக்கு ஏற முடியும்.   இந்த தணிவு அலைகளே சூழ் மண்டல வாயுவில் செங்குத்து நகர்ச்சிகளை [Vertical Movements] நீட்டியோ, குறுக்கியோ  உண்டாக்கிக் காற்றுத் துகள்களை விரைவாக்கியோ, மெதுவாக்கியோ [Accelerate or Decelerate]  தள்ளுகின்றன.  அவையே ஈர்ப்பு சக்தி குறைவு, மிகைவுக் கறைகளை [Gravity Scars] ஆராய எடுத்தாளப் படுகின்றன.

    “இமய மலைப் பகுதிகள், மைய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத் தொடர், அண்டார்க்டிகா போன்ற இடங்களில் தோன்றும் புதிய வடிவ மாறுதல்களைக் கோசி விண்ணுளவி பதிவு செய்யும்.  இந்த இடங்கள் அடிக்கடி நெருங்கப் படாதவை..  அண்டார்க்டிகா பனித்தள ஈர்ப்பின் உயர் அதிர்வு தள மாறுபாடுகளை விமான மூலம் ஆய்வு செய்ய ஆங்கே விமானத் தளங்கள் இல்லை.”

    டாக்டர் ருனே ஃபிளோபர்கேகன், ஈசா கோசித் திட்ட மேலாளர்

    “புவிப் பூரணம் (Geoid) என்பது பூமி பூராவும் நோக்கும் ஒரு சமநிலைக் கட்டமைப்புக் கணிப்பு முறை.  அதன்படி பூகோளத்தின் மேல் ஏதேனும் இரண்டு புள்ளிகளை எடுத்துக் கொண்டு எது உயரத்தில் உள்ளது, எது தணிவாக உள்ளது என்று தீர்மானிக்க முடியும்.”

    பேராசிரியர் ரெய்னர் ரும்மல் (Reiner Rummel Chairman, GOCE Scientific Consortium & Munich University Researcher)


    “ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது.  நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி !  நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி.  ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது.  அது மெய்யான கருத்தில்லை.  நாம் வட துருவத்துக்குச் சென்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும்.”

    டானிலோ மூஸி (Danilo Muzi GOCE Program Manager) (Mar 16, 2009)

    “2002 இல் சூழ்வெளித் துணைக்கோள் (EnviSat Satellite) ஏவியதற்குப் பிறகு ஈசாவின் கோசி விஞ்ஞானத் துணைக்கோள் தான் (ESA’s GOCE) முதன்முதலில் பூகோளத்தை நுட்பமாய் நோக்க அர்ப்பணிக்கப் பட்டது !  வடிவளவு மாற்றப்பட்டது.  ஆனால் அதன் திட்டக் குறிப்பணிகள் மாறவில்லை.  உன்னத பொறியியல் நுட்பத்தைப் பயன்படுத்தி ஐரோப்பிய மற்றும் உலகச் சமூகங்கள் பலனடைய உயர்ந்த விஞ்ஞானத்தை படைக்க முற்படுகிறோம்.”

    ஜான் ஜேக்ஸ் டோர்டைன் (Jean-Jacques Dordain, ESA Director General) (March 17, 2009)


    இதுவரைக் காணாத பூமியின் அற்புத ஈர்ப்பு விசை அமைப்பு

    2009 மார்ச் 17 இல் ஈசா ஏவிய “கோசி விண்ணுளவி” புவியீர்ப்பின் புதிய வண்ணப் படத்தை வரைப்படமாய்ப் (Gravity Mapping GOCE Space Probe) பதிவு செய்து இரு மாதங்களுக்கு ஒருமுறை பூமிக்கு அனுப்பி வருகிறது.  பூமியின் தள மட்டத்தை உளவிப் புவியில் எங்கே மேடு பள்ளங்கள் உள்ளன வென்று தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.  அந்த முறைப்பாடு “புவிப் பூரணம்” (Geoid) என்று அழைக்கப் படுகிறது.  அவ்விதத் துல்லிய அளவில் உளவும் உன்னதக் கருவி ஈசாவின் கோசி என்னும் துணைக் கோளில் அமைக்கப் பட்டு உள்ளது.  கோசி விண்ணுளவி பூமியைத் தணிவாக (250 கி.மீ.) (90 மைல்) உயரத்தில் சுற்றி வருகிறது.  அதைச் செம்மையான பாதையில் சுற்றக் கட்டுப்பாடு செய்யும் ஸெனான் அயான் எஞ்சின் (Plasma Pulse Rocket) எரிசக்தி வாயு தீரும்வரை (2014 ஆண்டு வரை) பயணம் செய்து கொண்டிருக்கும்.  கோசி சேமித்து அனுப்பும் தகவல் விஞ்ஞானிகளுக்குப் பல்வேறு பூதளவியல் துறைகளில் பயன் அளிக்கும்.  முதலாவது மிக்க பயன் பெறுபவர் குறிப்பாகப் பருவக் காலநிலை ஆராய்ச்சிகளில் (Climatologists) பணி செய்து வருபவர்.  பேரளவில் சூழ்ந்துள்ள கடல் வெள்ளத்தின் நீரோட்டம் எவ்விதம் உலகத்தில் அங்குமிங்கும் வெப்பத்தை நகர்த்திச் செல்கிறது என்பதை அறிய உதவி செய்கிறது.  முக்கியமாக நார்வேயில் நடக்கும் ‘புவி நோக்குப் பேச்சவையில்’ (Earth Observation Symposium) கோசி விண்ணுளவியின் புதுத் தகவல் ஆராயப்படும்.

    Fig 3 Details of GOCE

    இந்தப் பத்தாண்டு (2010) முடிவுக்குள் ஐரோப்பா 8 பில்லியன் ஈரோ நிதிச் செலவில் (10 பில்லியன் டாலர்) இன்னும் 20 புவியியல் குறித் திட்டங்களை (20 Missions) நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஈசா ஏவிய கோசி விண்ணுளவி பூமியைக் கீழ் மட்ட உயரத்தில் (250 கி.மீ) துருவத்துக்கு துருவமாகச் சுற்றி வருகிறது.  கோசி தன்னோடு இணைந்துள்ள “சரிவு மானியில்” (Gradiometer) பிளாட்டினத்தால் செய்யப் பட்ட மூன்று இரட்டைக் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  அவை பூமியின் “ஈர்ப்பு விரைவாக்கத்தை” (Acceleration due to Gravity) (1 part in Trillion) துல்லிமத்தில் அளக்கும்.  புவியின் ஈர்ப்பு விரைவாக்கம் (Acceleration due to Gravity) பொதுவாக நிலையானது (9.8 meter/sec. squire) என்று அனுமானிக் கிறோம்.  உண்மையில் அது பூமியில் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.  பூமத்திய ரேகை பகுதியில் ஈர்ப்பு விரைவாக்கம் : (9.78 meter/sec. squire) மிகக் குறைவு.  துருவப் பகுதியில் ஈர்ப்பு விரைவாக்கம் : (9.83 meter/sec. squire) மிக உச்சம்.  மலைப் பகுதிகள் துருத்திக் கொண்டிருக்கின்றன. கடல் குழிகள் நீர் நிரம்பி திணிவு நிலை மாறியுள்ளன.  புவியின் மையப் புள்ளி நகர்வதால் மேடு பள்ளங்களாலும், கடல்நீர் ஏற்ற இறக்கத்தாலும், நீரோட்டத்தாலும் ஈர்ப்பு விரைவாக்கம் மாறுதல் அடைகிறது !

    Fig 2 Dynamic Earth Explorer


    கோசி விண்ணுளவி எவ்விதம் ஈர்ப்பு விரைவாக்கம் உளவுகிறது ?

    “புவிப் பூரணம் (Geoid) என்பது பூமி பூராவும் நோக்கும் ஒரு சமநிலைக் கட்டமைப்புக் கணிப்பு முறை.  அதன்படி பூகோளத்தின் மேல் ஏதேனும் இரண்டு புள்ளிகளை எடுத்துக் கொண்டு எது உயரத்தில் உள்ளது, எது தணிவாக உள்ளது என்று தீர்மானிக்க முடியும்.” என்று ஆராய்ச்சியாளர் ரெய்னர் ரும்மல் (Reiner Rummel Chairman, GOCE Scientific Consortium & Munich University Researcher) கூறுகிறார்.  அதாவது ஒரு தாளில் வரைபடம் தள மட்டமாகக் (Horizontal) கருதப்பட்டால் புவியீர்ப்பு இழுக்கும் திசை மட்டத் தாளுக்குச் செங்குத்தாகும் (Perpendicular).  இந்தக் கற்பனைத் தளத்தில் ஓர் உருண்டைப் பந்தை வைத்தால் தளம் சாய்வாகத் தெரிந்தாலும் (புவியின் மையம் ஈர்ப்பதால்) பந்து உருண்டு செல்லாது.  கோசி அனுப்பிய வரைப் படத்தில் வெவ்வேறு வண்ணத்தில் தெரியும் இந்தச் சரிவுகளைக் காணலாம்.  அந்தச் சரிவுகள் பூமியின் தள மட்டம் பொதுவாக நீள்வட்டக் கோளத்திலிருந்து (Ellipsoid) எவ்விதம் விரிவடையும் என்பதைக் காட்டும்.  வட அட்லாண்டிக் பகுதியில் ஐஸ்லாந்தைச் சுற்றிலும் தள மட்டம் நீள்வட்டக் கோளத்திலிருந்து 80 மீடர் (270 அடி) உயரத்தில் பீடம் போல் உயர்ந்துள்ளது.  இந்தியக் கடல் தள மட்டத்துக்குத் 100 மீடர் (330 அடி) அது தணிவாக உள்ளது.

    புவியீர்ப்பின் வெவ்வேறு விளைவுகளை வரைப்படம் பதியும் கோசி

    1.  பூமியானது சிறிதளவு மட்டமான நீட்சிக் கோள வடிவமாகக் (Slightly Flattened Ellipsoidal Shape) கோசி பதிவு செய்துள்ளது.

    2.  பூமியின் மீது இழுக்கப்படும் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மிகச் சிறிய மாறுதலையும் உளவுகிறது (1 in 10 Trillion Accuracy) கோசி.

    3.  கோசி அனுப்பிய தகவல் கணிப்புகள் (GOCE Data) முழுமையான “புவிப் பூரண” (Geoid) நிலையை அமைக்க உதவும்.

    4.  கோளங்கள் சரிவில் உருளாத சமநிலை ஈர்ப்பு விசை இருப்பிடங்களை (Gravity of Equal Potential) உளவுதல்.

    5.  நீரோட்டமும், புயலடிப்பும் இல்லாத சமநிலைக் கடலின் வடிவத்தைப் பதிவு செய்வது.

    6.  கடல் தள மட்டத்தையும் புவிப் பூரணக் கணிப்புகளையும் ஒப்பிட்டு கடலின் வெப்பப் போக்கை, நகர்ச்சியை அறிவது.

    7.  புவியீர்ப்பு மாறுதல் எழுந்திடும் எரிமலைக்குக் கீழே கனல் குழம்பின் (Magma Movements) நகர்ச்சியைத் தாறுமாறாக்குவது அறியப் படுகிறது.

    8.  பூமிக்குச் சீரான பொது உயர ஏற்பாட்டுக்குத் (Universal Height System) துல்லியப் புவிப் பூரணம் (Geoid) உதவி செய்கிறது.

    9.  ஒரிடத்து ஈர்ப்பு விசைக் கணிப்பு துருவத்தில் பனித்தட்டுகள் இழப்பான அளவைக் காட்டும்.

    புவிப் பூரணக் கணிப்பு (Geoid) கடல், காலநிலை ஆய்வுகளுக்குத் தேவை

    Fig 1F Ocean Circulation

    புவிப் பூரணக் கணிப்பு (Geoid) ‘கடலியல் ஆய்வாளருக்கு’ (Oceanographers) மிகவும் தேவைப்படுவது.  காரணம் புயலின்றி, நீரோட்டமின்றி, நீர்மட்ட எழுச்சி/இறக்கமின்றி (No Wind, No Water Currents, No Tides) கடல் வடிவம் எப்படி இருக்க வேண்டுமோ அந்த வடிவுக்கு வரைப்படம் கிடைக்கிறது.  ஆய்வாளர் இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கணித்தால் புறத் தூண்டல்களின் தீவிரத்தைத் (Wind, Water Currents, Tides) தெரிந்து கொள்ளலாம்.  மேலும் கடல் எப்படி வெப்பசக்தியை உலகம் பூராவும் நகர்த்துகிறது என்பதற்கு இந்த வரைப்படம் காலநிலை வடிவாளருக்கும் (Climate Modellers) தேவைப் படுகிறது.  ‘புவிப் பூரணக் கணிப்பால்’ இன்னும் புவியியல் விஞ்ஞானத்துக்குப் பற்பல பயன்கள் உண்டாகும்.  அகில உலகுக்கு ஓர் ‘ஏகமயக் கடல் மட்ட அமைப்பு’ (Universal Global Level System) உலகின் எப்பகுதிக் கடலின் உயரத்தை ஒப்பீடு செய்ய உதவும்.  கட்டடக் கட்டமைப்பில் எத்திசையில் நீரோட்டம் நிகழும் என்று பொறிநுணுக்கவாதிகளுக்கு வழிகாட்டுவது போலாகும்.

    Fig 1E Gravity Mapper Satellite GOCE

    புவிப் பௌதிகவியல் நிபுணருக்குப் பூகம்பம், எரிமலை தூண்டும் பூமிக்கடியில் என்ன நிகழ்கிறது என்றறிய ‘கோசியின் கணிப்புகள்’ (GOCE Data) உதவும்.  “இமய மலைப் பகுதிகள், மைய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத் தொடர், அண்டார்க்டிகா போன்ற இடங்களில் தோன்றும் புதிய வடிவ மாறுதல்களைக் கோசி விண்ணுளவி பதிவு செய்யும்.  இந்த இடங்கள் அடிக்கடி நெருங்கப் படாதவை..  அண்டார்க்டிகா பனித்தள ஈர்ப்பின் உயர் அதிர்வு தள மாறுபாடுகளை விமான மூலம் ஆய்வு செய்ய ஆங்கே விமானத் தளங்கள் இல்லை.” என்று ஈசா கோசித் திட்ட மேலாளர், டாக்டர் ருனே ·பிளோபர்கேகன் (Dr. Rune Floberghagen) கூறுகிறார்.  கோசி விண்ணுளவி மிகத் தணிவான உயரத்தில் (250 கி.மீ.) (90 மைல்) பூமியைச் சுற்றி வருவதால், ஈசா கோசி திட்டத்தை 2014 ஆண்டுவரை நீடிக்கப் போகிறது.  மேலும் கோசி சூரிய சக்தியைப் பயன்படுத்துவதால் அதன் ஸீனான் அயான் எஞ்சின் சிறிதளவு ஸீனான் எரிசக்தியைப் பயன்படுத்தி வருகிறது.  அனைத்து ஸீனான் எரிசக்தி தீர்ந்த பிறகு, கோசி விண்ணுளவி பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு வாயு மண்டலத்தில் விழுந்து எரிந்து சாம்பலாகும் !

    கோசி விண்ணுளவியின் இயக்கப்பாட்டு அமைப்புகள்

    1.  1100 கி.கிராம் எடையுள்ள கோசி விண்ணுளவி உறுதியான உலோகங்களில் கட்டுமானம் ஆனது.  நிலையாக அமைக்கப் பட்ட சூரிய சக்தி செல்களைச் சுமக்கிறது.  விண்ணுளவியின் அரவம் (Spacecraft Noise) தாண்டி ஈர்ப்பு விசைக் கணிப்புகள் அனுப்பப் பட வேண்டும்.

    2.  விண்ணுளவியின் 5 மீடர் X 1 மீடர் பரிமாணச் சட்டத்தில் வாயு உராய்வில் சமநிலைப் படுத்தத் “துருத்திகள்” (Stabilising Fins) பொருத்தப் பட்டுள்ளன.

    3.  கோசியின் விரைவாக்க மானிகள் () புவியீர்ப்பு விசை அளக்கக் கூடிய துல்லிமம் :
    புவியீர்ப்பில் 10 டிரில்லியனில் 1 பின்னம். ( 1 in 10^13 gravity of Earth).

    4. பிரிட்டன் தயாரித்த ஈசாவின் ஸெனான் எஞ்சின் ஒரு பிளாஸ்மா உந்து ராக்கெட். (Xenon Ion Pulse Rocket Engine).  அதன் வேகம் விநாடிக்கு 40 கி.மீ. (24 மைல்).  பிளாஸ்மா எஞ்சின் விண்ணுளவியைச் சீராக ஒரே தணிவு உயரத்தில் சுற்ற உந்து வேகத்தை ஏற்றி இறக்குகிறது.

    Fig 1A GOCE Lift off from Russian Cosmodrome

    பூகோளத்தின் துல்லிய ஈர்ப்பு விசை நுட்பம் வரையும் கோஸ் விண்ணுளவி

    2009 மார்ச் 17 ஆம் தேதி ஈரோப் விண்வெளித் தேடல் ஆணையகம் ஈசா பூகோளத்தின் நுட்ப ஈர்ப்பியலை இரண்டு வருடங்கள் வரைந்து பதிவு செய்ய தனது “கோசி” (ESA’s Satellite GOCE) துணைக்கோளை ரஷ்யாவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து (Plesetsk Cosmodrome in Russia) ஏவியது.  தூக்கிச் சென்ற ராக்கெட் உலகக் கண்டம் தாண்டும் கட்டுப்பாடு தாக்குகணை (Modified Intercontinental Ballistic Missile) ! “கோசி” துணைக் கோள் 90 நிமிடங்கள் பயணம் செய்து 280 கி.மீடர் (170 மைல்) உயரத்தில் பூமியை நெருங்கிய தணிவுச் சுற்றுவீதியில் (Earth’s Lower Orbit) பரிதியை எப்போதும் நோக்கிச் (Near-Sun-Synchronous) சுற்ற வந்தடைந்தது. “கோசி” விண்ணுளவி பூமியின் ஈர்ப்பியல் தளம், நிலைத்துவக் கடல் நீரோட்டம், எரிமலை, பூகம்பம் உண்டாக்கும் பூமியின் அடித்தட்டு நகர்ச்சி ஆகியவற்றைத் தேடிப் பதிவு செய்யும் (GOCE means Gravity Field & Steady-State Ocean Circulation Explorer).  துணைக்கோளின் எடை 1052 கி.கிராம்.  அதன் சுற்றுப் பாதை பூமத்திய ரேகைக்கு 96.7 டிகிரி கோணத்தில் அமையும் படி இயக்கப் பட்டது.  “கோசி” துணைக்கோள் சுற்று வீதியில் இடப்பட்ட பிறகு “கிரூனா” சுவீடன் தொடர்பு அரங்கிலிருந்து (Kiruna, Sweden Satellite Tracking Station) தொடர்பு கொள்ளப்பட்டது.  துணைக்கோளை சுற்று வீதியில் ஏற்றி இறக்கும் ஈசா கட்டுப்பாடு அரங்கம் டார்ம்ஸ்டாட், ஜெர்மனியில் (ESA Satellite Control Station, in Darmstadt, Germany) இருக்கிறது.

    Fig 1 Gravity Mapper GOCE Launch

    “கோசி” விண்ணுளவி பூகோளத்தின் ஈர்ப்பியல் கவர்ச்சியின் வேறுபாடுகளை நுட்பமாய்க் கண்டு பதிவு செய்யும்.  ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது.  நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி !  நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி.  ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது.  அது மெய்யான கருத்தில்லை.  நாம் வட துருவத்துக்குச் சென்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும்.  இந்த புதிரான போக்குக்குக் காரணம் நமது பூமியின் தாறுமாறான வடிவே !  பூமி நாம் படத்தில் காண்பது போல் ஒரு பூரணக் கோள மில்லை !  துருவப் பகுதிகளில் அது தட்டையாக உள்ளது !  பூமத்திய ரேகைப் பரப்பில் தடிப்பாகப் பெருத்திருக்கிறது.  பூமியின் உட்கருவும் சீராக ஓரினத்தன்மை உள்ள பாறைகளைக் கொண்ட தில்லை !  அதற்கு மேல் அடுக்கப் பட்டுள்ள பூதட்டுகள் சில பகுதிகளில் தடித்தும் சில பகுதிகளில் மென்மை யாகவும் அமைந்து விட்டன.  எல்லாவற்றும் மேலாக கடல் வெள்ளம் மூன்றில் இரண்டு பாகம் நிரம்பியுள்ளது.  கடலலைகள் நிலவு-பரிதியின் ஈர்ப்பியல் கவர்ச்சிகளால் பூமிக்கு இருபுறத்திலும் கொந்தளித்து ரப்பர் போல் நீண்டும் சுருங்கியும் பூமியின் ஈர்ப்பியலில் மாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன !

    “கோசி” விண்ணுளவி பூகோள விஞ்ஞானத்துக்குச் சேர்க்கும் புதிய கணிப்புகள்

    1 பூகோளக் காலநிலை முன்னறிவிப்பு :  கடல் வெள்ளத்தின் உள்ளோட்டம் உளவப் பட்டு “பளு நகர்ச்சி” & “வெப்பக் கடப்பு” (Mass Transfer & Heat Tranfer) போன்றவைப் பேரளவில் சூழ்வெளிக் கால நிலை மாற்றம் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்தல்.

    2. பூகோளத்தின் நிறை உட்புறத்தில் எப்படி நிலவிப் பரவி யுள்ளது என்று உளவி, பூகம்பம், எரிமலை போன்ற எதிர்பாராத புவியின் அபாயங்களை முன்னறிதல்.

    3. ஈர்ப்பியல் விதி பூமிக்கு மேலென்றும், கீழென்றும் விளக்கம் தருவதால் “கோசி” துணைக்கோள் பதிவு செய்யும் புதிய தகவல் ஒர் மெய்யான அகிலரூப ஏற்பாட்டை (Truly Universal System) உருவாக்க உதவி செய்யும்.

    4. ஈசா அனுப்பப் போகும் பல தொடர் துணைக்கோள் திட்டங்களில் ஒன்றான “கோசி” விண்ணுளவி சூழ்வெளி சூடேற்றப் பிரச்சனைகளுக்கு துரித விடைகளை அளிக்கும்.

    5. பூமியின் ஈரரங்குச் சுற்று வீதிகளில் (285 கி.மீ. & 263 கி.மீ உயரங்களில்) “கோசி” துணைக்கோள் சுற்றி வந்து விஞ்ஞானத் தகவல் சேமிக்கும்.  ஆறு மாதக் கால இடைவெளியில் அவை சேர்க்கப்படும்.

    ஈசா ஏவப் போகும் எதிர்காலப் பூகோளம் தேடும் விண்ணுளவிகள்

    1999 ஆம் ஆண்டில் முதன்முதல் ஈசா “கோசி” (GOCE) விண்ணுளவித் தயாரிக்க டிசைன் செய்து உயிரினக் கோள் ஒன்றுக்கு அனுப்பிச் சோதிக்கத் திட்டமிட்டது.  அது பூகோளத்தின் வாயுச் சூழ்வெளி (Atmosphere) உயிரியல் கோளம் (Biosphere) ஈரக்கோளம் (Hrdrosphere) குளிர்க்கோளம் & உட்கோளம் (Cryosphere) & Interior ஆகியவற்றில் ஆழ்ந்து ஆராய்ச்சிகள் புரிந்து இயற்கை நிகழ்ச்சிகள் மனித இனத்துக்கு விளை விக்கும் பாதிப்புகளை எடுத்துக் காட்டும்.  அடுத்து இரண்டு பெரு நிதித் திட்டங்கள் (ADM-Aeolus for Atmospheric Dynamics in 2011 & EarthCARE to investigate the Earth’s Radiative Balanace in 2013) விருத்தியாகி வருகின்றன.  மேலும் மூன்று சிறுநிதித் திட்டங்கள் (CryoSAT-2 in 2009), (SMOS in 2009) & (SWARM in 2011) தயாராகி வருகின்றன.  கிரையோஸாட்-2 (CryoSAT-2 in 2009) பனித்தட்டுகளின் தடிப்பை அளக்கும்.  சுமாஸ் (SMOS in 2009) விண்ணுளவி தள ஈரப்பாடு அளவை உளவும்.  மேலும் கடல் நீரின் உப்பளவைக் காணும். சுவார்ம் திட்டம் (SWARM in 2011) பூகாந்த மூலத்தை உளவி அறியும்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, ESA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Creates Gravitational Waves ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    6 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    7 The Geographical Atlas of the World, University of London (1993).
    8 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    9 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    10 http://jayabarathan.wordpress.com/2008/02/02/einsteins-universe-1/ [Einstein’s Theory on Gravity -1]
    11 http://jayabarathan.wordpress.com/2008/02/09/einsteins-universe-2/ [Einstein’s Theory on Gravity -2]
    12 http://jayabarathan.wordpress.com/2008/03/21/how-gravity-works/ [How Gravity Rules the Universe]
    13 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903191&format=html (EAS’s GOCE Space Probe)
    14 ESA Earth Observation Program : Advancing Earth Science Through New Sensing Technology By Puirluigi Silvestrin (Oct 29, 2007)
    15 ESA Gravity Mission GOCE (March 18, 2009)
    16 Science Daily : March Launch Planned for ESA’s Gravity Mission GOCE (Feb 5, 2009)
    17 BBC News : Supermodel Satellite Set to Fly By Jonathan Amos (March 16, 2009)
    18 ESA Launches First Earth Explorer Mission GOCE (March 17, 2009)
    19 Space Flight Now : Gravity Mapper Ascends to Space atop Rockot Booster By Stephen Clark (March 17, 2009)
    20 BBC News Gravity Satellite Leads New Wave By : Jonathan Amos (March 17, 2009)
    21 ESA Launches Earth Explorer Mission GOCE (March 17, 2009)
    22 BBC News Gravity Satellite Feels the Force By : Jonathan Amos (April 6, 2009)
    23 GOCE Delivering Data for Best Gravity Map Ever (September 30, 2009)
    24 BBC News ESA Satellite Senses Eath’s Pull By : Jonathan Amos (December 24, 2009)
    25 ESA Site Report – ESA Gravity Mission GOCE (Updated May 20, 2010)
    26 BBC News Earth’s Gravity Pictured in High Definition By : Jonathan Amos (June 28, 2010)
    27 ESA Site Report – GOCE First Global Gravity Model (June 29, 2010)
    28 Stop Watch – ESA GOCE Satellite Helps Create Map of Earth’s Gravity By Katen Sharma (June 30, 2010)

    29.  http://www.shahidulnews.com/news-archives

    30.  http://news.bbc.co.uk/2/hi/8767763.stm  [June 28, 2010]

    31.http://www.esa.int/Our_Activities/Observing_the_Earth/GOCE/GOCE_the_first_seismometer_in_orbit  [March 8, 2013]

    32.http://www.esa.int/Our_Activities/Observing_the_Earth/GOCE/Earth_s_gravity_scarred_by_earthquake/(print) [December 3, 2013]

    33.http://www.spacedaily.com/reports/Earths_gravity_scarred_by_earthquake_999.html  [December 6, 2013]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (December  7, 2013)

    Share
  • மண்டேலா, ஓ எங்கள் கறுப்புக் குயிலே….

    எஸ் வி வேணுகோபாலன் 

    mandela

    ஆதிக்கத்தைப் புறம்தள்ளும் சிரிக்கும் கண்கள்
    காலம் ஏற்றிக் கொடுத்த
    வரைகோடுகளும் அழகு சேர்க்கும் முகம்
    கறுப்பின் உரிமைக்காய்ப் போராடியே
    வெளுத்துப் பூத்த தலை
    எப்படி விடைகொடுப்போம் உயிர்ப்பின் உருவகத்திற்கு!

    சிறைக்குள் விரிந்த வானத்தில்
    பறந்து கொண்டிருந்த பறவையே!
    இளமையின் கனவுகள், காதல், வேகம்
    எந்த இயல்பான உணர்ச்சிக்காகவும்
    இழக்கத் தயாரில்லை சுதந்திரத்தின் மாண்பை
    விடுதலை நேரத்தில் வெளியேறிய பெருமூச்சில்
    வெளிப்படவில்லை பழி தீர்க்கும் உணர்ச்சி
    மன்னிப்பின் தீப்பொறியே சுடர்விட்டது
    ‘அவர் நாண நன்னயம் செய்தது’
    உனது புதிய அரசியல் நாகரீகம்
    எப்படி வழியனுப்புவோம் உயிர்த்துடிப்பின் உட்கருவை!

    தொண்டு செய்து பழுத்த
    எங்கள் இன்னொரு பழமே !
    அதிகாரத்தின் இரண்டு முனைகளையும்
    ருசித்தவன் நீ
    ஆளுமையின் அடையாளம் அதிகாரத்தில் அல்ல,
    கழற்றி உதறினாலும்
    அது அகலாதது என்பதைக்
    கற்றது உலகம் உன்னிடமிருந்து
    எப்படி அஞ்சலி செலுத்துவோம் எங்கேயும் நிறைந்த வெளிச்சத்திற்கு !

    கறுப்பா வெளுப்பா
    ஆதிக்கக் குரலிடையே
    வேறுபாடு இல்லை உனது அகராதியில்
    சமத்துவ சமூகத்திற்கான உனது தீபம்
    மாசற்று எரிகிறது மகத்தான குன்று ஒன்றின்மீது
    பாட்டன் பூட்டனுக்கும்
    கொள்ளுப் பேரன்களின் கொள்ளுப் பேரன்களுக்கும் கூட
    தந்தையாக நிரந்தரமானது உனது பிம்பம்
    உறுதியின் உயிர்மூச்சுக்கு எப்படி நடத்துவோம் இறுதி யாத்திரையை!

    மண்டேலா ஓ எங்கள் கறுப்புக் குயிலே !
    ஒடுக்கப்படுவோர்க்கு நெஞ்சுரம் புகட்டும் பெயர்ச்சொல்லே !
    உலகளாவிய விடுதலை கீதத்தின் குறியீடே !
    நம்பிக்கை கை விளக்கே!
    அடங்க மறுத்தலை
    அமைதியாகவே காட்டத் தெரிந்திருந்த அற்புதக் கனலே !
    செவ்வணக்கம் தோழா உனது புகழார்ந்த வாழ்க்கைக்கு!

    ************

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 20ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    முதல்வன் முறையீடு.

    மதுரையம் பதியில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தர கடவுளை நோக்கிப் பாடியதாக அமைந்தவை. கன்னிவனமென்பது மீனாட்சியம்மன் ஆட்சிபுரியும் தலம். ஆதியில் கடம்பவனமாக இருந்த மதுரை ஊழிக்காலத்திலும் அழியாமல் நின்ற காரணத்தால் ‘கன்னி’ எனும் பெயர் பெற்றது.

    கன்னிவனநாதா, கன்னிவனநாதா,
    மூலமறியேன், முடியும் முடிவறியேன்
    ஞாலத்துட்பட்ட துயர் நாட நடக்குதடா,
    அறியாமையாம் மலத்தால் அறிவு முதற் கெட்டனடா
    பிரியா வினைப் பயனாற் பித்துப் பிடித்தனடா,
    தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா
    மனுவாதி சக்தி வலையில் அகப்பட்டனடா
    மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
    தாமாயுலகனைத்தும் தாது கலங்குகிறண்டா. 1.

    மதுரையம்பதி மேவிய சிவபெருமானே, சிவபெருமானே! ஆன்மாக்கள் எங்கிருந்து பிறந்தன, எங்குபோய் முடிகின்றன என்பதை உணர்ந்தேனில்லை. இப்பூவுலகில் வாழ்க்கையின் ஊடே கணக்கற்ற துன்பங்கள் வந்து சேர்ந்து துயரத்துள் ஆழ்த்துகின்றன. வாழ்க்கையில் இன்பம் எது, துன்பம் எது என்பதை அறிந்து கொள்ள முடியாத அறியாமையாம் மலம் அறிவை மூடிவிட்ட காரணத்தால் அறிவு முதல் அனைத்தும் கெட்டுத் தொலைந்தது. முற்பிறவிகளில் செய்த பாவங்கள் எனைத் துரத்தி வந்ததனால் மனம் பித்துப் பிடித்துப் போனது. ‘தனுவாதிய நான்கும்’ அதாவது தனு, கரணம், புவனம், போகம் எனப்படும் இப்பூவுலக வாழ்வின் தத்துவங்களில் மூழ்கித் தவித்து மனம் மயங்கி, மறைக்கும் மாயத் தொழிலைப் புரியும் ‘திரோதான’ சக்தியுள் ஆட்பட்டுவிட்டேன். உலகமும் அதன் உட்பொருளும், மறையும் பாங்கினதால் அவை மாயை எனப்படும். அந்த மா மாயை எனும் பெரும் மாயக் காட்டினுள் வழியறியாது அலைந்து திரிகின்றேன், இப்பிறவியும் வாழ்வும் மாயை எனும் உண்மை புரிவதால், உளம் கலங்குகிறேன். (இதில் கண்டுள்ள சில சொற்களும் கருத்துக்களும் சைவ சித்தாந்தம், யோகம் பயின்றவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுதல் நலம்)

    கன்னிவனநாதா, கன்னிவனநாதா,
    மண்ணாசை பட்டேனை மண் உண்டு போட்டதடா
    பொன்னாசை பெண்ணாசை பேர்கேனே என்குதே
    மக்கள் சுற்றத்தாசை மறக்கேனே என்குதே
    திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே
    வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே
    சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே
    மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
    சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே
    கட்டு வர்க்கத்தாசை கழலேனே என்குதே
    செட்டு தனில் ஆசை சிதையேனே என்குதே
    மாற்றும் சலவை மறக்கேனே என்குதே
    சோற்றுக் குழியும் இன்னும் தூரேனே என்குதே 2.

    கன்னிவனமாம் மதுரயம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே! மண் மீது ஆசை கொண்டு மேன்மேலும் நிலம் வாங்கி மகிழ்ந்திருந்தேன், அந்த மண்ணே இந்த உடலைத் தின்றுவிட்டதே. பொன் மீதும், பொன் நகை மீதும் கொண்ட ஆசையும், பெண்ணாசையும் என்னைவிட்டுப் போகமாட்டேன் என்கிறதே. பெண்டு, பிள்ளைகள், உறவுகள் என்று நான் கொண்ட ஆசைகள் எதனையும் மனம் மறக்க மாட்டேன் என்கிறதே, எட்டு திசைகளையும் கட்டியாள வேண்டுமென நான் கொண்ட ஆசையும் தீரமாட்டேன் என்கிறதே; பற்பல வித்தைகள், அறுபத்தினாலு கலைகள் மேன்மேலும் கற்கவேண்டும் என்கிற மனத்தாசையை விட்டொழிக்க இயலவில்லையே, அட்டமாசித்திகளை எப்படியும் அடைதல் வேண்டுமென்ற எண்ணமும் நீங்கவில்லையே; மந்திரங்கள் செய்யும் மாயங்கள் அனைத்தையும் கற்றல் வேண்டுமென நினைப்பது மறக்கவில்லையே, பிறர் பார்க்க அழகொழுக இருக்க நினைப்பதும் துறக்க முடியவில்லையே; வியாபாரம் செய்து அதில் லாபம் அடையவேண்டுமென்ற ஆசை சிதைய மறுக்கின்றதே (செட்டு = வியாபாரம்), வேளைதோறும் சலவை செய்த ஆடை அணியும் ஆசை மறக்கமாட்டேன் என்கிறதெ, சொற்றினைக் கொள்ளும் வயிறும் நிரம்பி விட்டது போதும் எனும் நிலையை அடையமாட்டேன் என்கிறதே.

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    ஐந்து புலனும் அடங்கேனே என்குதே
    சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே
    காமக் குரோதம் கடக்கேன் என்குதே
    நாமே அரசென்று நாடோறும் எண்ணுதே
    அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே
    கைச்சு மின்னுமானம் கழலேனே என்குதே
    நீர்க்குமிழியாம் உடலை நித்தியமாய் எண்ணுதே
    ஆர்க்கும் உயிர் ஆசை அழியேனே என்குதே
    கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக் கண்டும்
    எண்ணும் திரமா இருப்போமென்று எண்ணுதே
    அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரவா எண்ணுதே
    தனித்திருக்கேன் என்குதே தனைமறக்கேன் என்குதே
    நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே
    உரகப்படத்து அல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே
    குரும்பை முலையும் குடிகெடுப்பேன் என்குதே
    அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே
    மாதர் உருக்கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே
    ஆதரவும் அற்றிங்கு அரக்காய் உருகிறண்டா
    கந்தனை ஈன்றருளும் கன்னிவனநாதா
    எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா 3.

    என் ஐம்பொறிகளும் அடங்கமாட்டேன் என்கின்றனவே, அவற்றல் வரும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவற்றைத் தேடுகின்றதே. எதையெதையோ எண்ணி மனம் சஞ்சலப்படுவது நின்று, தெளிய மாட்டேன் என்கிறதே. காமமும் குரோதமும் தணிய மறுக்கின்றதே, நானே ராஜா நமக்கு நிகர் எவருமில்லை என்கிற ஆணவம் தினந்தோறும் தோன்றுதே. அச்சமும், ஆங்காரமும் அடங்க மறுக்கின்றதே, அனைத்தையும் ஒழித்தாலும் மனம் மட்டும் குரங்குபோல் தாவுவது நிற்கவில்லையே. நீர்க்குமிழி போன்ற நிரந்தரமற்ற இந்த உடலை சாச்வதமானது என்று மனம் எண்ணுகின்றதே, உயிர்மேல் இருக்கும் ஆசை அழியமாட்டேன் என்கிறதே. கண்ணெதிரே மாண்டவர் பிணம் கட்டையில் எரிவது கண்டும், நாம் மட்டும் நிரந்தரமாய் இருப்போம் என்று எண்ணம் இருக்கிறதே. நிரந்தரமில்லாததை நிரந்தரம் என்று எண்ணுகிறதே, சுற்றிலுமுள்ள ஆர்ப்பாட்டங்களிலிருந்து தனித்து இருக்க மறுக்குதே, மனம் அனைத்திலும் விடுபட்டு இருக்கவும் முடியலையே. இடுகாட்டில் மரணக் குழியோ உன்னை நான் உண்டு தீர்ப்பேன் என்கிறதே, பெண்ணுறவின் மீதான ஆசை உன்னைக் கெடுத்தே தீருவேன் என்கிறதே. தென்னங்குரும்பை போன்ற தனங்கள் உன் குடியைக் கெடுப்பேன் என்று கச்சைகட்டி நிற்கின்றதே, அழகிகளின் அம்பு விழிகள் என் ஆவியைக் குடித்தே தீருவேன் என்கிறதே. எமனோ பெண்ணுருவத்தில் வந்து என்னை மோசம் செய்ய எண்ணுகிறான், என்னைத் தேற்றி ஆதரவு தர எவருமின்றி நான் அரக்கைப் போல உருகுகின்றேனடா. கந்தவேளாம் முருகக் கடவுளைப் பெற்றெடுத்த மதுரையம்பதிவாழ் சிவனே, எந்த விதத்தில் நான் நினது திருவடிகளைப் பற்றிக் கொள்வேன்?

    கன்னிவனநாதா கன்னி வனநாதா
    புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாவோ
    கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாவோ
    கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ
    நீர்யாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ
    பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ
    வேதனை செய்தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ
    அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ
    மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாதோ
    தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ
    சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ
    நோய் உண்ணவே மெலிந்து நொந்தநாள் போதாதோ
    பேய் உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ
    ஊனவுடல் கூன் குருடாய் உற்றநாள் போதாதோ
    ஈனப் புசிப்பில் இளைத்த நாள் போதாதோ
    பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ
    கெட்டநாள் கெட்டேன் என்று கெட்டநாள் போதாதோ
    நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ
    எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ
    காமன் கணையால் கடைபட்டல் போதாதோ
    ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ
    நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ
    தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ
    உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ
    வருத்தம் அறிந்தையிலை வாவென்றழைத்தயிலை.

    கன்னிவனமாம் மதுரையம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே!! எத்தனை பிறவிகள், எத்தனை அனுபவங்கள், எத்தனை துன்பங்கள். புல்லாகவும், பூண்டாகவும் பிறந்து வாடிய காலம் போதாவோ, கல்லாகவும் மரமாகவும் கிடந்த காலம் போதாவோ. கீரியாகவும், புழுவாகவும் பிறந்து நொந்த காலம் போதாவோ நீர்வாழ் ஜந்துவாகவும், மண்ணில் ஊரும் உயிராகவும் இருந்தநாள் போதாவோ. பூதமுமாய், தேவனுமாய்ப் பிறந்து கிடந்த நாள் போதாவோ, பிறருக்குத் துன்பங்களைக் கொடுத்து வாழ்ந்த நாள் போதாவோ. அன்னையின் கர்ப்பத்தில் அடைபட்டுக் கிடந்தநாள் போதாவோ, மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாவோ. தாயாகவும், மனைவியாகவும் தாழ்ந்து கிடந்த நாள் போதாவோ, சேயாய், புருஷனாய் சென்ற நாள் போதாவோ. நோய் மலிந்து மெலிந்த நாள் போதாவோ, பேய்களுக்கு உணவாக ஆன பேயாகப் பிறந்த நாள் போதாவோ. பிறப்பெடுத்த நாள் முதலாய் கூன், குருடு, முடமாகத் துன்பம் அடைந்த நாள் போதாவோ, உண்ண உணவின்றி வாடி மெலிந்த நாள் போதாவோ. பிறப்பினால் களைப்பும், பரிதவிப்பும் அடைந்த நாள் போதாவோ, இருக்கின்ற காலமும் கெட்டதோடு, மேலும் கெட்டவனாக ஆனதும் போதாவோ. இந்த பாழ் பிறவி நிலையில்லை என்பது தெரிந்து வருந்தியது போதாவோ, என் வினையால் மற்றவர்கள் பாரம் சுமந்ததும் போதாவோ. காமன் கண்வீச்சால் கடைப்பட்டுப் போனதும் போதாவோ, எமன் கரங்களால் இடிபட்டடும் போதாவோ. பிரம்மனின் தலையெழுத்தால் வதையுண்டது போதாதோ, தேன்சொரியும் துளசிமாலை அணிந்த பெருமாளின் சக்கரத்தால் பட்டவினை போதாவோ. உருத்திராட்சம் அணிந்த சிவன் சம்ஹாரம் செய்ததால் துன்பப்பட்டது போதாவோ, என் வருத்தத்தை உணரவில்லை, போதும் பட்டது இனி முடியாது, வந்துவிடு என்னிடம் என்று அழைத்தாயில்லை, என் செய்வேன்.

    (கன்னிவனநாதரிடம் முறையீடு இன்னும் வரும்)

    Share
  • அய்யப்பா சரணம்

    சு. ​கோபாலன்

    கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே அய்யப்பன் சீசன் ஆரம்பமாகிவிடும். அய்யப்ப பக்தர்கள் எங்கும் தென்படுவார்கள். அய்யப்ப கோஷங்கள் எங்கும் கேட்கும். எனக்கும் அய்யப்பன் மேல் ஒரு கவிதை மாலை தொடுக்க உற்சாகம் பிறந்தது.

    அய்யப்பன் வரலாறு

    a_1

    பந்தளம் எனும் கேரள நாட்டின் அரசன் ராஜசேகர பாண்டியன்

    சந்தான பாக்கியம் இன்றி ஈசனை அரசியுடன் உளமுருக வேண்டினான்.

    வனத்துள் ஒரு நாள் வேட்டை ஆடச் சென்ற மன்னன்

    மனத்தைக் கவரும் அழகுமிகு குழந்தை ஒன்றைக் கண்டான்.

    மணிமாலை கழுத்தில் அணிந்து தோன்றிய அத்தெய்வீகக் குழந்தைக்கு

    மணிகண்டன் எனும் பெயரைச் சூட்டினார் அங்கு வந்த முனிவர் ஒருவர்.

    சிந்தை மகிழ்ந்த அரசனும் அரசியும் சீராட்டி வளர்த்த மணிகண்டன்

    விந்தை பல புரிந்து யாவரையும் வியப்பில் ஆழ்த்தினானே!

    குருகுலம் சென்று கலைகள் வித்தைகள் யாவும் சிறப்பாய் கற்றபின்னர்

    குருதட்சணையாய் அவர் மகன் இழந்த பார்வை பேச்சை மீட்டுக் கொடுத்தானே!

    பின்னர் தானே ஒரு அழகிய ஆண் குழந்தையை ஈன்று மகிழ்ந்த அரசி

    மன்னர் மணிகண்டனுக்கு மகுடம் சூட்ட விழைவதை அறிந்து அச்சமுற்று

    மந்திரி, மருத்துவன்  இருவருடன் கூடி சதிசெய்தாள் மணிகண்டனை விரட்டிட.

    தந்திரமாய் தனது போலித் தலைவலி தீரப் புலிப்பால் தேவையென நம்பச்செய்தாள்

    காட்டுக்கு புலிப்பால் தேடிச்சென்ற மணிகண்டன் மகிஷி எனும் அரக்கியை அழித்து

    நாட்டுக்கு புலிமேல் அமர்ந்து பெரும் புலிக் கூட்டத்துடன் திரும்பினானே!

    பன்னிரு வயது முடிந்த மணிகண்டன் தான் தெய்வப்பிறவி அய்யப்பன் என உணர்த்தி

    தன்னுடைய அவதார நோக்கம் முடிந்ததால் வானுலகம் செல்வதாய் அறிவித்தான்.

    பந்தள மன்னனும், தவறை உணர்ந்த அரசியும் மற்றும் கூடினின்ற குடிமக்களும்

    தங்கள் உடனேயே தங்கிவிடும்படி உள்ளன்போடு அய்யப்பனை வேண்டினரே!

    ஆலயம் ஒன்று கட்டிக் கொடுத்தால் அங்கு கலியுகம் முழுவது தவமிருப்பதாய் கூறிட

    சாலவும் சிறந்த அன்புக் கட்டளையாய் சிரமேல் ஏற்று மன்னனும் அகமகிழ்ந்தானே!

    அம்பை வில்லிலிருந்து எய்து அது விழும் இடத்தில் கோயில் கட்ட அய்யப்பன் அருளிட

    பம்பை நதிக்கரையில் சபரிமலையில் அம்பு சென்று விழுந்த இடத்தில் அரசன்

    படிகள் பதினெட்டுக் கொண்ட கோவிலை அகத்தியரின் ஆலோசனையுன் கட்டிமுடித்திட

    அடியவர்கள் தரிசித்து வழிபட அழகிய அய்யப்ப விக்ரகத்தை பரசுராமன் ஸ்தாபித்தாரே!

    அமர்ந்த நிலையில் தவ யோக கோலத்தில் காட்சி தரும் அய்யப்பனை அடியவர்கள்

    மிகுந்த பக்தியுடன் தரிசித்து வழிபட்டு அருள் பெற்று வருகின்றனரே அன்னாள் முதலே!

    அய்யப்பன் வழிபாடு

    சபரிமலை சென்று அய்யப்பனை தரிசித்திட கார்த்திகை முதல் நாள் முதலே

    அபரிமித சிரத்தையுடன் ஆயத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவரே அடியவர்கள்

    மாலை (துளசிமணி அல்லது உத்திராட்சம்) ஒன்றை குருசாமி மூலம் அணிந்து

    நேம நிஷ்டையுடன் ஒரு மண்டலம் (41 நாட்கள்) கடும் விரதம் காப்பரே!

    இருமுடி எனும் பையில் பூஜை மற்றும் பயணப் பொருட்களை நிரப்பித் தலையில் தாங்கி

    கருனிற உடையுடுத்தி கோயிலில் வழிபட்டுத் தம் புனிதப் பயணத்தைத் தொடங்குவரே!

    பம்பா நதியின் குளிர்ந்த நீரில் குளித்து உடலும் உள்ளமும் தூய்மையாகிட

    தெம்பாய் ‘சாமியே சரணம் அய்யப்பா’ போன்ற சரண கோஷம் எழுப்பி

    வெறும் அடியுடன் வெகு தூரம் கடினமான காட்டு வழியில் நடந்து சென்று ஐயன்

    திருவடி வணங்கி திவ்ய தரிசனம் செய்திட அலை மோதுமே அடியவர் கூட்டம்.

    மசூதி ஒன்று வாவர் என்பவரின் நினைவாய் ஆலயம் அருகில் உண்டு

    விபூதி அங்கு பெற்றுக் கொண்ட பின்னர் அடியவர்கள் ஆலயத்தை அடைந்திடுவர்.

    பக்திப் பரவசத்தில் மூழ்கி சரண கோஷமெழுப்பி பக்தர்கள் பதினெட்டுப் படிகளேறி

    சக்திமிகு கலியுகக் கண்கண்ட கடவுள் அய்யப்பனின் அற்புத தரிசனம் பெற்றிடுவரே!

    நெய் அபிஷேகம் அய்யப்பனுக்கு மிக உகந்த ஒன்றாம் அது செய்யும் நேரத்தில்

    மெய் சிலிர்த்து நின்று கண்ணாரக் கண்டு மகிழ்வர் பேறு பெற்ற மெய்யடியவர்.

    ஐயப்பா உன்னருள் செய்யப்பா என வேண்டும் அடியவரை உய்விப்பான்

    ஐயமில்லையிப்பா இதில் அணுவளவும் பக்தர்கள் உணரும் மெய்யப்பா இது

    படத்திற்கு நன்றி: http://www.swamysharanam.org/

    Share
  • வாழ்க்கை நலம் – 38

    குன்றக்குடி அடிகள்

    38. பயனுடைய சொல்லையே சொல்லுக!

     

    இந்த உலக படைப்புகள் எல்லாம் பயனை மையமாகக் கொண்டனவேயாம். பயன்படுத்தப்படாதன கழிகின்றன. தவறாகப் பயன்படுத்தப்படுவன தீமையை விளைவிக்கின்றன. இந்த உலகில் ஆற்றல் வாய்ந்தவைகளில் “சொல்” தலையாயது. சொல்லப்படுவது சொல். அறிந்து ஆராய்ந்து சொல்லப்பெறும் சொற்கள் பயனைத்தரும்.

    பயனுடைய சொற்களே சொல். பயனற்றவைகள் ‘சொல்’ என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப் பெறுதல் இல்லை. வறுமை, பொருள் சார்ந்தது மட்டுமல்ல. சொற்களிலும் வறுமை உண்டு என்பது இளங்கோவடிகள் கருத்து. “வறுமொழியாளர்” என்று சிலம்பு கூறுகிறது. பயன் மிகுதியும் இல்லாத சொற்கள் என்பது சிலம்பின் கருத்து. “வெற்றெனத் தொடுத்தல்” என்று இலக்கணம் கூறும்.

    தீய சொற்கள் அவற்றைச் சொல்வோருக்குத் தீமை விளைவிப்பதும் உண்டு. திருக்குறள், சொற்களில் அதிகக் கவனம் செலுத்துகிறது. இனியவை கூறல், புறங்கூறாமை போன்ற அதிகாரங்கள் மூலம் விளக்கியுள்ளது. இவை போக “பயனில் சொல்லாமை” என்று தனியே விரித்தும் கூறியது. பயனில்லாத சொற்களையும் சொல்லக்கூடாது என்பதேயாகும்.

    வாழ்க்கை, பயனைக் குறிக்கோளாக உடையது. வாழ்க்கையின் குறிக்கோளை அடைதற்குரிய கருவிகளில் ஒன்று சமூகம். சமூக அமைப்பும் உறவும் சொற்களால் இயக்குவிக்கப்படுகின்றன. சமூகத்தில் இயங்கி நம்முடைய வாழ்க்கைக்கும் ஆக்கம் தரும் நெறிகளைப் பற்றி அறிவது “அரும் பயன்” ஆகும்.

    அற்ப மகிழ்ச்சி; சிறுபொழுது இன்பக் கிளர்ச்சிகளுக்காகச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. நீண்ட நெடிய பயன் வேண்டும். அரிய பயனாக இருந்தால் மட்டும் போதாது. திருவள்ளுவருக்குக் கொள்ளை ஆசை! பெரும் பயன் வேண்டும் என்கிறார்.

    வாழ்க்கையின் அருமைக்குரிய பயன்களை ஆராய்ந்து அறிக! அந்த, அறிய பயன்களைத் தரக்கூடிய சொற்களைத் தேர்வு செய்க. அச்சொற்களையே சொல்லுக.

    “அரும்பய  னாயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பய னில்லாத சொல்.”

    (திருக்குறள் 198)

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • ஆக்கிரமிப்பு

    கோதை நாராயணன்

    “என்னடி ஆச்சு… பெரிய கப்பல் கவிழ்ந்தாப்புல கன்னத்துல கை வைச்சுண்டு… நான் வருவது கூட தெரியாம…?

    “ஏன்னா… நம்ம 51 F  சுகன்யா இருக்காளே குழந்த…?”

    “யாரு.. நம்ம விகாஷினி குட்டியோட அம்மாவை தான சொல்ற… அவளுக்கென்ன இப்போ புது அறிமுகம் ?”

    “முதல்ல சொல்லுறத கேளுங்கோ…! அவ தன் ஆத்துகாரரோட டைவர்ஸ் வாங்க போறாளாம் ….” சொல்லும் போதே சரஸ்வதி மாமிக்கு மூச்சிறைத்தது .

    “பின்னே அவா அவா  ஆத்துக்காரரோட தான் டைவர்ஸ் வாங்க முடியும் …ஹா ..ஹா ..” சிரித்தார் சுந்தரம் .

    “உங்களுக்கு எல்லாமே கேலியா போச்சு … நான் பெத்த பிள்ளையாட்டம் நினைச்சுண்டு இருந்தேனே இப்டி பண்றாளே … காலையில வந்து ஒரு பாடு சுகன்யா அழுதுண்டு தான் தீர்மானமா இருக்கிறதா சொல்லிட்டு போய்ட்டான்னா … அதுல இருந்து மனசு கிடந்து அடிக்கிறது … நல்ல பொண்ணு… ரகுவிற்கும் என்ன குறைச்சல் அவனும் நல்ல பையன்… பின்ன ஏன் இவாளுக்கு புத்தி இப்டி போறது?”

    சுந்தரம் பதிலளிக்கும் முன்னே, இண்டர்காம் 51 H யிலிருந்து வர “ஆமா கௌசி .. உனக்கு எப்ப தெரியும் ?” சுந்தரத்திடம் புலம்பியவற்றின் தொடர்ச்சியை போனில் தொடர்ந்தாள் சரஸ்வதி.

    அந்த ப்ளாட்டில் நிறைய பேர் குடியிருந்தாலும் சரஸ்வதி மாமி மற்றும் சுகன்யாவுடன் சேர்த்து ஒரு நாலு குடும்பம் மட்டும் மிகவும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வந்தார்கள். இதில் குழந்தை இல்லாத தம்பதிகளான  சுந்தரம் – சரஸ்வதி தம்பதிகள் மட்டுமே வயதில் பெரியவர்கள். இதில் சுகன்யா – ரகுவும் காதல் மணம் புரிந்து இந்த பிளாட்டிற்கு குடி வந்த போது சரஸ்வதி அவர்களுக்கு பெருமளவு அரவணைப்பு கொடுத்தாள். சுகன்யாவிற்கு தலைபிரசவம் ஆன போது இவளே முன் நின்று அனைத்தும் பார்த்தாள். குழந்தை விகாஷினி என்றால் அனைவருக்கும் உயிர். ரகுவும் சுகன்யாவும் வேலைக்கு சென்ற பின் இவர்கள் மூன்று குடும்பங்கள் மட்டுமே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்து கொண்டார்கள். இந்த இரண்டு வருடமாக தான் விகாஷினி ஸ்கூலுக்கு சென்று வருகிறது. இந்த தருணத்தில் தான் சுகன்யா டைவர்ஸ் குண்டை தூக்கி போட்டு விட்டு சென்றாள்.

    தொடர்ந்து வந்த நாட்களில் மாமி புலம்பி புலம்பி அடிக்கடி மற்ற தேவகி ,கௌசி இவர்களுடன் ஆலோசனை கூட்டம் போட்டு போட்டு ஓய்ந்தாள் .

    சுந்தரமும் இரு முறை லிப்டிலும், கீழே பார்க்கிங்கிலும் சில முறை ரகுவை பார்க்க நேர்ந்தது. பிரச்னை என்றால் அதில் ஆண் என்ன பெண் என்ன… பெண்களாவது புலம்பி அழுது தீர்த்து கொள்கிறார்கள். ஆண்கள் தங்களுக்குள்ளேயே இறுக்கி கொண்டு… ம்…. ரகுவின் முகமும் தொங்கி போய் தான் இருந்தது. சுந்தரத்தை கண்ட போதெல்லாம் சங்கடமாய் ஒரு சிரிப்பு வலுக்கட்டயமாய் உதிர்த்து விட்டு மொபைலை காதில் சொருகி கொண்டான்.

    அன்று அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்த சுந்தரத்தை சரஸ்வதி, “ஏன்னா … நா… ஒண்ணு சொல்லட்டுமா …?”

    “ஒண்ணு என்ன எத்தனை வேணா சொல்லு…”

    “ப்ச் … நா … சீரியஸா பேசிண்டுருக்கேன் நீங்க தமாஸ் பண்ணாம கேளுங்கோ ….!”

    “சுகன்யாவும் ரகுவும் டைவர்ஸ் வாங்க போறா …” “பத்து நாளா இத மட்டும் தான் நீ என்கிட்டே சொல்லிட்டு இருக்க தெரிமோ … வேற ஏதாவது புது விஷயமா …?”

    ஒரு நிமிஷம் சுந்தரத்தை முறைத்து விட்டு, “என் மனதுக்கு நீங்க போய் பேசி பார்த்தா, அவா மனசு மாறுவான்னு தோன்றதுன்னா …..”

    “ஏன் என்ன பார்த்தா தான் மடையன்னு தோண்றதா உனக்கு … இங்க பாரு சரசு … இப்ப எல்லாருமே படிச்சவளா தானே இருக்கா … அதனால அவா தீர்மானத்துல நாம தலையிடக் கூடாதுடி … உணர்வுகளுக்கு மீறிய புரிதல் இந்த காலத்துல யாருக்கு இருக்கு?”

    “நீங்க போய் பேசி பார்த்துட்டு விடுடின்னு சொல்லுங்கோ நா கேட்குறேன் … எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது … விகாஷினியை நினைச்சு பாருங்கோ… அவளுக்காக போய் பேசுங்கோ …!”

    விகாஷினி பேரை கேட்டதும் சுந்தரத்திற்கு மறுக்க முடியவில்லை .

    மறுநாள் ரகுவின் வீட்டிற்கு சென்ற சுந்தரம் பேசி தோற்று தான் திரும்பினார் .

    அவர் வரவுக்காகவே காத்திருந்த சரஸ்வதி, “சொல்லுங்கோ … போனேளா … பேசினேளா … மனசு மாறினாளா…?”

    புன்னகையை உதிர்த்த சுந்தரம், “பிரியத்தான் போறாங்களாம்…!”

    “அட …ராமா …!”

    “ஆனா அவா பிரியமா இருக்க வைக்கிறது ரொம்ப சுலபம் சரஸ்வதி …..!”

    விழிகளில் ஆச்சரியமாய், “அட …எப்டினா … அத சொல்லுங்கோ முதல்ல …. எப்டி … அதானே நமக்கு வேணும் ?”

    “சரஸ்வதி நம்ம காலம் போல இப்போ இல்ல … இரண்டு பேரும் வேலைக்கு போறா, நிறைய மக்களை சந்திக்கிறா, வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு, கல்யாணத்துக்கு முன் பேசிய அளவில் பாதி கூட கல்யாணத்திற்கு பின் பேசுவது இல்லை … முக்கியமா மனசு விட்டு பேசுவது இல்லை …. சரி, நீ என்ன பண்ற நம்ம மலை முருகர் கோவிலுக்கு நாம எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை போவோம் … சுகன்யாவையும் ரகுவையும் நீ எப்டியாவது சம்மதிக்க வை கோவிலுக்கு வர… அப்புறம் நான் சொல்லுற படி நீயும் பேசு… நம்ம கௌசி -வெங்கடேஷ், தேவகி -கண்ணன்  அவா ஆத்து குட்டீஸ் என எல்லோரும் போவோம் … சுகன்யா-ரகுவை சைலண்ட்டா அட்டாக் பண்ணுவோம்” என சுந்தரம் பேச பேச குஷியானாள் மாமி.

    ஞாயிறும் வந்தது.

    மலை மீது நின்று கொண்டு கீழே பார்க்கும் போது நாம் மட்டும் உயரத்தில் இருக்கும் இறுமாப்பு அனைவர் முகத்திலும். நான்கு குடும்பங்களும் முருகரை தரிசித்து விட்டு மனநிறைவுடன் அருகிலுள்ள ஒரு பார்க் போன்ற இடத்திற்கு வந்தமர்ந்தனர். சாப்பிடுவதற்கு சரஸ்வதி மாமி எல்லாருக்கும் புளியோதரையும், தயிர் சாதமும் கொண்டு வந்திருக்க, மற்றவர்கள் தின்பண்டங்கள் என அந்த இடமே களைக்கட்டியது. குட்டீஸ் ஒரு பக்கம் விளையாட ஆரம்பிக்க, மாமி, கௌசி, தேவகி, சுகன்யா என பெண்கள் ஒரு குழுவாகவும், சற்று தொலைவில் சுந்தரம் தலைமையில் ஆண்கள் ஒரு குழுவாகவும் தனி தனியாக அரட்டை கச்சேரியை ஆரம்பித்தனர்.

    கௌசி மெதுவாக, “சுகன்யா இந்த புடவை உன் நிறத்திற்கு எடுப்பா இருக்கு … யாரோட செலெக்ஸன் …?”

    “இது …” என சுகன்யா ஆரம்பிக்கும் முன்னே வெங்கடேசின் குரல் அழைக்க, ஒரு நிமிஷம் என கௌசி எழுந்து சென்றாள்.

    திரும்பிய கௌசி ,”வண்டியில் தண்ணீர் பாட்டில் மறந்துட்டார் போய் எடுத்து கொடுத்துட்டு வரேன் …ம் …சொல்லு …சுகன்யா….?”

    “இது …..”

    “என்ன இங்க பட்டிமன்றம் …..”கேட்டபடியே அங்கு வந்த சுந்தரம், தேவகியை கண்ணன் அழைப்பதாக கூற தேவகி எழுந்து சென்றாள் .

    இப்பிடியாக சில முறை சுந்தரம் இவர்கள் பக்கம் வந்து வந்து போனார் .

    சுகன்யாவிற்கு எரிச்சலே வந்தது, என்ன பெண்கள் இவர்கள் ? எதற்கு எடுத்தாலும் அடிமை போல், எடுபிடி போல் ஓடிக்  கொண்டு என நினைக்க…

    இதே நாடகம் அங்கு ரகுவின் முன் சுந்தரத்தின் மூலம் நடந்தேறிக்  கொண்டிருந்தது .

    மனதிற்குள் சலித்த ரகு என்ன மனிதர் இவர் சரியான பொண்டாட்டி தாசனாய் இருப்பார் போலவே. நினைத்தவனாய் சுந்தரத்தை பார்த்து “என்ன மாமா இது… உங்களுக்கு கோபமே வராதா …?”

    “யார் சொன்னது எனக்கு கோபம் வராதுன்னு… அழகா வரும், வந்தா உடனே நம்ம ப்ளாட் கார்டன் இருக்கோன்னோ அங்க போய் மண்வெட்டி எடுத்து தேவை இல்லாத களைகள் எல்லாத்தையும் கொத்தி கொஞ்ச நேரம் சுத்தபடுத்திடுவேன். கோபமும் ஒரு வகை ஆற்றல் தானே. அதை களைகளின் மேல் காமிச்சுட்டா அங்க இடமும் சுத்தமாகும், என் மன வேகமும் அடங்கிடும். அப்புறம் கொத்தின களைப்புல மாமி கையாள சூடா காப்பி கிடைக்காதான்னு தோணிடும். சரஸ்வதியும் ஒண்ணுமே நடவாத மாறி சூப்பரா ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியை எடுத்துண்டு வருவா பாரு… எல்லா கோபமும் பறந்திடும்.  ரகு கணவன் -மனைவிக்குள்ள கோபம் வரலாம் ஆனா வெறுப்பு வரக் கூடாது. கோபம் வருவதற்கு ஒரு காரணம் இருக்கிற மாறி நான் அவள விரும்பினதுக்கும் பல காரணம் இருக்குமோன்னோ, அத யாரும் திருமணத்திற்கு அப்புறம் நினைக்கிறதே இல்ல… நா கொஞ்ச நாழி அத நினைச்சுப்பேன்… அழித்து அழித்து செய்ய வாழ்க்கை என்ன வரைபடமா ரகு? ஹ ஹ ஹா ….” தான் பெரிய ஜோக் அடித்தாற் போல் சிரித்தார் சுந்தரம்.

    சுருக்கென்று இருந்தது ரகுவிற்கு…

    குழந்தைகள் ஓடி வர, எல்லாருக்கும் பசி வயிற்றை கிள்ளியது. வட்டமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட, ரகு-சுகன்யா முகங்கள் மட்டும் எதையோ சிந்தித்த படியே இருந்தது.

    குழந்தைகள் அப்பளத்திற்கு சண்டையிட கௌசியும், தேவகியும் அவரவர் குழந்தைகளை அதட்ட, விகாஷினி தனக்கு தான் அப்பளம் என அடம் பிடித்து கொண்டிருந்தாள்.

    “சரி .. சரி .. விடுங்க குட்டீஸ் … பாவம் விகாஷினி தாய்-தகப்பன் ஆதரவில்லாம வளர போற குழந்த, அவளுக்கு கொடுங்க முதல்ல …!!” கூறிய சரஸ்வதியை இரண்டு ஜோடி தீக்கண்கள்  நோக்கின. மற்றவர்கள் எதார்த்தமாய் சாப்பிட்டு கொண்டிருக்க விகாஷினி குட்டி தனக்கு அப்பளம் கிடைத்த சந்தோஷத்தில் கை கொட்டி சிரித்தது.

    வீடு திரும்பும் போது ரகுவும் சுகன்யாவும் வேனில் சேர்ந்து அமர்ந்திருக்க சுந்தரம் சரஸ்வதியை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தார். கச்சிதமாக எல்லாம் முடிந்த திருப்தி அனைவர் முகங்களிலும்.

    அடுத்து வந்த நாட்களில் ரகு-சுகன்யா வீட்டிலிருந்து டைவர்ஸ் பத்தி எந்த தகவலும் இல்லை. நாட்கள் வாரங்கள் ஆகி, வாரங்கள் மாதங்கள் ஆனபோது விகாஷினிக்கு தம்பி வர போகும் செய்தி மட்டும் வந்தது.

    செய்தி கேட்ட சரஸ்வதி, “ஏன்னா … உங்களுக்கு மெடல் தான் கொடுக்கணும் போங்கோ … வார்த்தைக்கு வார்த்தை டைவர்ஸ்ன்னு பேசினவாளை இப்டி சமத்தா ஆக்கிட்டேளே … ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ..?”

    “வந்துட்டுதா?”

    “இல்ல நம்ம ப்ளாட்டுல கூட ஒரு கெட் டுகதர் வச்சு இருக்கலாமேன்னா … அத விட்டுட்டு அவ்ளோ தூரம் மலை முருகர் கோவிலுக்கு போய் … ஏன்னா அந்த முருகர் அவ்ளோ சக்தி வாய்ந்தவரான்னா?”

    “புத்திசாலி முருகர்!!!!!!”

    “.!!!!…” மாமி முழிக்க…

    “இல்லையா பின்ன சுத்தமா செல் போன் டவர் கிடைக்காத இடமா பார்த்துல கோயில் கொண்டு இருக்கார்……!!!!!!!!!!”

    “ஆ …” வென்று தன் ஆத்துக்காரரின் சமோசிதத்தை எண்ணி அயர்ந்து நின்றாள் மாமி .

    Share
  • Friendship Forever!

     

     Pavala Sankari

     
    Words could never tell you494px-WoodlandKingfisher
    How fruitful friendship always be,
    Just little words that come out
    That are heavenly meant
    That makes the heart smile
    That makes the life worthwhile!

     

    Brushing up the tears as well as
    Picking up from the pool of confusion
    Sinking in sadness avoided by consoling
    Mending up the broken heart with feather
    Blowing out the heartbreak away and
    Turning out the world upside and around!!

     

    Even though the past is past untold
    Future will be fantastic humanity
    Even though not able to keep the
    Feet from stumbling could get a hand to
    Grasp and save from not to fall deep
    When in need of care warm hands spread

     

    Decision making may depends
    Encouraging ever supports
    Boundaries never be determined
    Could give the room to grow by himself!
    And accept him as he is himself!
    Could pick up the pieces to put back in their own!
    Glad and sad times all passes through easily!

     
    Friend is like a halcyon with the power to calm winds of the sea
    Friend is like an owl who is wise and beautiful
    Friend is like a flower who is soft and silky
    Friend is like an angel of love who is in disguise
    Friend is like a heart which bears everything
    Friend is like a heaven where you can rest peacefully!!!

     

    Image Courtesy : http://en.wikipedia.org/wiki/Halcyon_(genus)

     

     

    Share
  • சீதாயணம் நாடகம் -10

    படக்கதை -10

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -10

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    sita 18

     sita 19

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (86)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் அன்புடன் இணைகிறேன்.

    “கலிகாலம்” எனும் இக்காலத்தில் கலாச்சாரம் சீரழியும், உலகில் உறவுமுறைகள் சீர்கெடும், மனித தர்மம் நிலைகுலையும் என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது என்றெல்லாம் கேள்வியுற்றிருக்கிறோம் .

    சே என்ன இதெல்லாம் கட்டுக்கதை ! சுத்த ஹம்பக் ! ஏதோ வேலையற்ற முன்னோர்கள் எம்மைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லிப் போன மூடக் கதைகள் என்றெல்லாம் எமது பகுத்தறிவு அடிப்படையில் நாம் அனைத்தையும் தள்ளி வைத்து வாழப் பழகிக் கொண்டோம்.

    ஆனால் இன்று நாகாரீக உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை இவ்வாழ்க்கை எங்கே இழுத்துப் போய்க் கொண்டிருக்கிறது ?

    என்னடா? எதற்காக சக்தி இந்தப் பீடிகை போடுகிறான் ? எனும் எண்ணம் உங்களுக்குள் எழுவது இயற்கை.

    நேற்றைய இங்கிலாந்து தொலைக்காட்சிச் செய்திகளில் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்பட்ட செய்திகளில் ஒன்று,

    கடந்த 2012 ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் நீச்சல் தடாகத்தில் பாய்ந்து அதிகதூரம் ஊடுருவும் போட்டியில் வெற்றியீட்டி இங்கிலாந்து நாட்டிற்குப் பதக்கம் வாங்கிக் கொடுத்த “டாம் டேலி((Tom daley)” எனும்19 வயது நிரம்பிய இளவலின் அறிவித்தலாகும்.

    அது என்ன அப்படியான அறிவித்தல் ?

    ss1தான் மற்றொரு ஆணுடன் காதல் வயப்பட்டிருப்பதான செய்தியே அது. அதற்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னனியில் இருத்திய காரணம் என்ன ? எனும் கேள்வி நெஞ்சை உருத்தத்தான் செய்கிறது.

    நாட்டின் இளவல்களுக்கு இரு முன்னுதாரணமாக விளங்க வேண்டியவர், மற்றைய இளம் சிறார்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டக்கூடிய ஒருவர் தான் இயற்கைக்குப் புறம்பான ( இதை இயற்கை என்று எண்ணுபவர் என்னை மன்னிக்கவும்) வகையில் வாழ்வை அமைத்துக் கொண்டார் என்பது வளரும் தலைமுறைக்கு ஒரு தவறான எடுத்துக்காட்டாக அமைந்து விடும் எனும் வாதிடும் சாராரும், இல்லை இவ்வாழ்க்கைமுறை இன்றைய காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று ஆகையால் இத்தகைய முன்னனி விளையாட்டுவீரர் வெளிப்படையாக அறிவித்தல் விடுத்தது சரியே என வாதிடுவோருக்கும் இடையிலான கருத்து மோதலை பகிரங்கமாக நடத்தவே இவ்வறிவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கைக்கு எல்லைக்கோடுகள் மனிததர்மத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இப்படித்தான் வாழவேண்டும் என்று காட்டப்பட்ட உதாரணங்கள் நம் மத நம்பிக்கைகளின் வழியாக எமது மனங்களிலே மனிதநீதிகளாகக் காட்டப்பட்டன.

    இம்மனிதநீதிகளின் அடித்தளத்தில் தான் மானிட சட்டங்கள் இயற்றப்பட்டன.. அதிலிருந்து நழுவி நாம் எப்படியும் வாழலாம் எனும் வழிக்குள் அனைவரும் வந்து விட்டால் பின்னால் மனித தர்மங்களின் நிலைதான் என்ன ? எனும் கேள்வியால் எமது மனங்களை அச்சம் கவ்விக் கொள்ளத்தான் செய்கிறது..

    இத்தகைய வாழ்க்கை வழிமுறைகளுக்கு இதனை ஆதரிப்பவர்கள் தமது வாதத்திற்கு துணையாக பகுத்தறிவு எனும் போர்வையில் நாத்திகத்தை துணைக்கிழுப்பதை பார்க்கும் போது மனம் வேதனை கொள்ளத்தான் செய்கிறது.

    பெரியாரின் நாத்திகக் கொள்கை என்பது மூடநம்பிக்கைகளின் பெயரில் மனிதர்களின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்த்ததே தவிர மானிட வாழ்க்கையின் அடிப்படை வாழ்க்கை முறையை மாற்றியமைத்து ஆணும், ஆணும் அன்றிப் பெண்ணும், பெண்ணும் தம்பதிகளாக வாழுவதற்கு நியாயம் கற்பிக்கவில்லை.

    இன்று நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் இவ்வோரினத் திருமணங்கள் என்பது இயற்கையான ஒரு நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அதிகாரத்திலிருக்கும் கூட்டரசாங்கமும், எதிர்கட்சி ஸ்தானத்திலிருக்கும் தொழில் கட்சியும் இவ்வாழ்க்கை முறைக்குத் தமது பூரண ஆதரவை வழங்கியிருப்பது கட்டுப்பாடற்ற சமுதாய வரம்புகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதே உண்மை.

    மனித நாகரீகத்தின் அதி உச்சமான வாழ்க்கைமுறை எனும் போர்வையில் இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை முறைகளைச் தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயாரால் ஆதரிப்பது எவ்வகையில் மக்கள் நலனை முன்னேடுப்பதாகும் என்று வாதிடுகிறார்கள் பலர்,

    மனிதனை மனிதனாக மதித்து பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே சந்தர்ப்பங்களை வழங்குவதே நாகரீகம் என்பதன் முழு அடையாளமாக இருக்க வேண்டுமே ஒழிய அம்மாவை, மம்மி என்றழைப்பதை வேண்டுமானால் நாகரீகமாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர மாமி என்றழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா ?

    அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நாகரீகம் என்று பெயர் சூட்டிவிட்டு ஜயோ எமது நாட்டில் சட்டம், ஒழுங்கு முறை சீர்குலைந்து விட்டதே என்று புலம்புவதால் என்ன பயன் ?

    சட்டம் ஒழுங்கு என்பனவற்றின் அமுலாக்கல் மனித தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்தே நடைமுறுத்தப்படுகிறது. அதை விடுத்து சமுதாயத்தில் வெற்றி பெற்றவர்கள் எனபவர்கள் எப்படியும் வாழலாம் எனும் உதாரணத்தை முன்னெடுப்பதன் மூலம் வளரும் தலைமுறையின் மனதில் சட்டத்திற்கும் ஒழுங்குக்கும் எவ்வகையான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது ? என்பது அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே.

    இது ஒன்றும் புதிதல்ல இத்தகைய உறவுமுறைகள் அன்றைய காலத்திலும் இருந்தன ஆனால் அவை திரைமறைவில் அரங்கேறின என்றொரு வாதம் ஒரு மூலையில் இருந்து ஒலிக்கத்தான் செய்கிறது.

    கொலைகள் அன்றும் இன்றும் திரைமரைவில் நிகழ்கின்றன,. அதற்காக கொலையை இயற்கை என்று நாகரீகத்தின் பெயரால் நியாயப்படுத்தி விட்டால் கொலை கூட மனிததர்மமாகி விடுமா?

    இதுதான் எம் கண்முன்னால் அரங்கேறும் கலிகால வாழ்க்கைமுறையோ ?

    வருங்காலச் சரித்திரம் விடை பகரும் என நம்புவோம்

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • குறவன் பாட்டு – 20

    களிறுகள் பலாக்கனி உண்ணுதல்

     

    தாமரை இலையின் வடிவம் கொண்டு,

    சாமரம் வீசும் செவிமடல் இரண்டும்,

    வாரணத் தலைவனின் வெம்மை நீக்க,

    சேவகம் செய்யும் பணிப்பெண் டீரோ!                                                                                                      161

     

    நீண்டிருக்கும் கவைக் கோலால், தரையில்

    நின்றுகொண்டே கனிபறிக்கும் மனிதன் போல,

    நீண்ட குழல் கரம் நீட்டி,

    நறுமணப் பலாவைக் களிறுகள் பறிக்கும்!                                                                                              162

     

    துணி துவைக்கும் பெண்கள் போல,

    தனிக் கரத்தில் காம்பைப் பற்றி,

    கனி துவைத்துச் சுளை பிரித்து,

    இனி துண்டு களிறுகள் களிக்கும்!                                                                                                 163

     

    குயில்களின் கயமை

     

    செங்குண்டு மணிபோலக் கண்கொண்டு, தீக்

    கங்குண்டு வெந்தது போல் உடல்கொண்டு,

    பொங்கிடும் இன்னிசைக் குரல் கொண்ட,

    சங்கீதக் குயிலின் சிறுமதியை அவளறிவாள்!                                                                                     164

     

    காக்கைக் கூட்டில் கயமையாய், அடை

    காக்கும் தாய்மை மனமின்றி முட்டையை,

    மாற்றாந் தாயிடம் விட்டுப் பறந்தது,

    தாலாட்டுப் பாடாத இன்னிசைக் குயில்!                                                                                                   165

     

    முட்டையி லிருந்து முதலில் வெளிப்பட்ட,

    செங்கண் குஞ்சு பின்னங் கால்களால்,

    கொட்டையை உந்தித் தள்ளும் வண்டெனப்பிற,

    முட்டையைக் கீழே தள்ளி யது!                                                                                                                    166

     

    கூட்டில் இருந்து விழுந்த முட்டையை,

    மண்ணில் விழும்முன் குறத்தி பிடித்தாள்!

    உச்சியிலி ருக்கும் கூட்டில் இருந்து,

    முட்டையை எடுக்கும் சூட்சமம் அறிந்தாள்!                                                                                         167

     

     
     
    பறவைகள் அம்பாகப் பாய்தல்
     
    வானம் என்னும் வில்லில் இருந்து,

    சீறிப் பாயும் அம்பைப் போல,

    சிறகை மடித்துப் பறவைகள் கூட்டம்,

    நீரில் பாய்ந்து மீன்களைப் பிடித்தன!                                                                                                   168

     

    தலைமேலாய் உடல்திருப்பி மலம் கழிக்கும்,

    மலைக்குகை வெளவால்போல், உடல்திருப்பி மீனோடு,

    தலைநிமிர்த்தி மேல்நோக்கி பறவைகள் பாய்ந்தேறி

    அலையில்லா ஏரிவிட்டு அகன்றவானை அடைந்தன!                                                                  169

    Share
  • மகாகவி பாரதியார் தமிழ்இசை விழா

     

    திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி கல்விச்சங்கம் நடத்தும் மகாகவி பாரதியார் தமிழ்இசை விழா

    நிகழிடம்: மகாகவி பாரதியார் பயின்ற வகுப்பறை

    நாள்:7.12.13 காலை:9 மணி

    வரவேற்புரை: திரு.மு.செல்லையா M.A,செயலாளர்,கல்விச்சங்கம்

    தலைமை: திரு.எஸ்.மீனாட்சிசுந்தரம் B.Sc.B.L,தலைவர், கல்விச்சங்கம்

    வாழ்த்துரை: திரு.தளவாய் .தீ.ராமசாமி,பொருளாளர், கல்விச்சங்கம்

    திரு.பி.டி.சிதம்பரம்,ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், கல்விச்சங்கம்

    திரு.ரா.சுரேஷ், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், கல்விச்சங்கம்

     

    சிறப்புவிருந்தினர்:திரு.இசைக்கவி ரமணன்,இசைக்கவிப்பொழிஞர்,சென்னை

    மகாகவி பாரதியாரின் கவிதைகளுடன் இசையுரை

     

    நல்லதோர் வீணையில் மகாகவி பாரதிக்கு இசையஞ்சலி : திரு.பரத்வாஜ் ராமன்,பிரபல வீணைக்கலைஞர் திரு.வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்களின் வழித்தோன்றல்

    “மகாபாரதி எனும் யுகக்கவிஞன்” சிறப்புரை

    பேராசிரியர் ச.மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி

    நன்றியுரை: திரு.சு.அழகியசுந்தரம் M.Com.,M.Ed,தலைமையாசிரியர்

     

    Share
  • ஐயப்பன் திருப்புகழ் – 4

    சு. ரவி

    வணக்கம், வாழியநலம்,

     

    அந்த ஒரு வருடம். விரதமிருந்த கார்த்திகை மாதத்தில் ஒருமாலைப்போதில், விரதநெறிகளுக்குப் பொருந்தாத நினைவுகளில் மனம் அலைபாய்ந்த நேரம்! எனையாளும் சபரிகிரீசனைத் தொழுது எழுந்த திருப்புகழ்…

    படிக்க, (பாடிப் பார்க்க) ரசிக்க

    ராகம்: பைரவி  ( பாடலும் By RAVI)

    ஐயப்பன் திருப்புகழ் – 4

    தனத்தனந்தன  தனதன தனதன

    தனத்தனந்தன  தனதன தனதன

    தனத்தனந்தன  தனதன தனதன  தனதான

    மனத்துறங்கிய  நினைவுகள் அலையென

    கதித்தெழுந்திட உறுதியும்   அனலினில்

    உருக்குலைந்திடு  மெழுகென உருகிட                                     மதன்வீசும்

    மலர்ச்சரம்பல மறுபடி  மறுபடி

    துளைத்தநெஞ்சொடு துயர்தரு விளைவுகள்

    சுமக்கவென்றெனை  நிலைகெட விடுவது                 முறையாமோ?

    நினைப்பணிந்துநின் அழகிய பதமலர்

    அடைக்கலம்புகும் அடியவர் நடுவினில்

    இருத்தி,என்பவ  வினையற  கதிபெற                                     அருள்தாராய்!

    நிருத்தனம்பயில்  இறையவர் அருளிய

    வரத்தையங்கவர் சிரமிசை முயலுமொர்

    அரக்கனும்பட நிலவென  உருவொடு                           வருமாயன்

    வனப்புபொங்கிய வதனமும் அதிலிரு

    நிறைத்த அஞ்சனம்  எழுதிய விழிகளும்

    நினைப்பழுந்திட அரனுறு மயலினில்                                    உருவாகி

    வனத்தடங்களை  வருடிய  படிதவழ்

    அலைக்கரங்களொ டுலவிடு நதிநுரை

    கொழித்தபம்பையின்  எழுகரை  மிசைவளர்          மணிமார்பா!!

    தனத்தனந்தன  தனதன தனவென

    இடக்கை,திண்டிமம் ஒலிதர அழுதையில்

    அரக்கிதுஞ்சிட அழகிய  நடமிடு                                                சபரீசா!!

    தரித்தசந்தன மணமுற  இருசெவி

    தமிழ்ப்பெருங்கவி  பருகிட சபரியில்

    தவப்பிழம்பென வளரொளி யுடனமர்                       பெருமாளே!

    (அடைக்கலம்புகும் அடியவர் நடுவினில்

    இருத்தி,என்பவ  வினையற கதிபெற அருள்தாராய்!)

    Share