Blog

  • Cancer Institute

    Cancer Institute

    Baskar Seshadri

    When it comes the aggressive Medical campaign there is no one beat Cancer institute.

    The efforts the institution takes in the cancer awareness campaign is novel and those in the service centre in Taramani are highly capable enough to convey through a perfect mode and they are all on the Dot. They conduct the meetings and seminars like many other hospitals and create a clear feeling in the minds of the people that cancer if detected earlier can be ridden Hundred percent without any big fuss.

    This apart for the General public they also send across their teams to the schools and colleges and screen awareness films. When it comes to women colleges they stress strong on the Mammogram Point and in the boys schools they explain in detail on all effects of Smoking in a detailed campaign with lectures if needed be inside the halls.

    They have for this purpose had bought a high end Luxury Bus with all hi tech facilities worth few crores. They are ably supported by the leading corporates and Banks apart from General Public.

    In fact they had a problem in getting a RTO Certificate from the authority and later after the influence was extended by the Minister concerned in the union Govt they were able to get the RTO approval.

    The students normally let in the bus in groups and they are all educated on the various prevention Techniques and Food Habits and Life style Practices.

    The institute has a special Psycho oncology cell to handle all the related cases. All these are handled effectively by the team of social workers and Strong Volunteer force.

    The Photos here shows the Big Bus which came here for a campaign to Mylapore.

    Their mission is to canvass and they do this with the greatest Dedication.

    Please reach their office in case of any assistance at 8148760887

    Share
  • குறளின் கதிர்களாய்…(394)

    குறளின் கதிர்களாய்…(394)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(394)

    தன்னூண் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
    னெங்ஙன மாளு மருள்.

    – திருக்குறள் – 251 (புலால் மறுத்தல்)

    புதுக் கவிதையில்

    பெருக்கிடத் தன்னுடலை,
    பிறிதோருயிரின் உடலைப்
    பிடித்தே யறுத்துப்
    புசிப்பவன் எப்படிப்
    பேரருளை
    ஆள்பவன் ஆவான்-
    ஆகமாட்டான்…!

    குறும்பாவில்

    தன்னுடலைப் பெருக்கவைக்க
    அடுத்தோருயிரின் உடலையுண்பவன் எவ்வாறு
    அருளை ஆள்பவன் ஆவான்..!

    மரபுக் கவிதையில்

    தன்னுடல் தன்னைப் பெருக்கிடவே
    தானே பிடித்து மற்றுளவோர்
    இன்னுயி ரதனின் உடலினையே
    எடுத்து வெட்டி யுணவாக்கித்
    தின்றிடு மொருவன் செய்கின்ற
    தீய செயலா லன்னவனே
    நன்றெனும் அருளா மறத்தினையே
    நடப்பி லாள்வான் ஆகானே…!

    லிமரைக்கூ

    பிறவுயி ருடலைத் தின்றே
    தன்னுடல் வளர்ப்பவனிடம் அருளதன் ஆட்சி
    நிலைக்காது என்றும் நின்றே…!

    கிராமிய பாணியில்

    கொல்லாத கொல்லாத
    அடுத்த உயிரக் கொல்லாத,
    அடிச்சி அதயே திங்காத..

    தனக்க ஒடம்பப் பெருக்கவைக்க
    அடுத்த உயிரக் கொன்னு
    அந்த ஒடலத் திங்கிறவன்
    மனசுல நல்ல கொணமான
    எரக்கம்
    எப்புடி நெறஞ்சிருக்கும்,
    ஒருநாளும் நெறயாதே..

    அதால
    கொல்லாத கொல்லாத
    அடுத்த உயிரக் கொல்லாத,
    அடிச்சி அதயே திங்காத…!

    Share
  • ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

    ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

    காஞ்சி மாவட்டம், மலைப்பட்டு கிராமத்தில் உள்ள மஹாரண்யத்தில் ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பிலவ வருடப் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண மகோத்ஸவத்தில் மாலை மாற்றும் வைபவம் இதோ. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வான்கோழி

    வான்கோழி

    ஷங்கர் படக் காட்சி போல் இருக்கு, பாருங்க. இந்த இடத்தில் ஐஸ்வர்யாராய் நடனம் ஆட, ஒரு பாடல் காட்சி எடுக்கலாமா?

    படப்பதிவு: கார்கில் ஜெய்

    Cover image: Wikimedia

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொத்தவரங்காய் பருப்பு உசிலி

    கொத்தவரங்காய் பருப்பு உசிலி

    கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செல்லமா? கண்டிப்பா? | குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

    செல்லமா? கண்டிப்பா? | குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

    குழந்தைகளை வளர்ப்பது எப்படி? செல்லம் கொடுப்பதா? கண்டிப்பு காட்டுவதா? எந்த அளவுக்குச் செல்லம்? எந்த அளவுக்குக் கண்டிப்பு? கண்டித்துச் சொன்னால் கேட்காத பிள்ளைகளை அடித்துத் திருத்த முடியுமா? பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? நிர்மலா ராகவன் வழங்கும் பயனுள்ள ஆலோசனைகளைக் கேளுங்கள். இதுகுறித்து உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அமெரிக்க மயில்

    அமெரிக்க மயில்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், வண்ணத் தோகை விரித்து மயில் ஆடும் அரிய, அழகிய காட்சி. கண்டு மகிழுங்கள்.

    படப்பதிவு – கார்கில் ஜெய்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அகவை நூறு கண்ட சஞ்சிகை

    அகவை நூறு கண்ட சஞ்சிகை

    சக்தி சக்திதாசன்

    “ரீடர்ஸ் டைஐஸ்ட்” எனும் பெயர் அடிபடாத நாடுகள் இல்லை என்றே கூறலாம். தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு வாசகர்கள் மத்தியில் ஒரு பிரபலமான இடத்தை வகித்து வரும் ஒரு ஊடக சஞ்சிகையாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” ஐ நாம் காணக்கூடியதாக உள்ளது.

    நான் ஒரு பள்ளி மாணவனாக ஈழத்தில் வலம் வந்த போது என் தந்தையின் வழக்கமான வாசிப்புச் சஞ்சிகைகளில் ஒன்றாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” இருந்தது என்பதை நான் நினைவு கூர்கிறேன். அவரது பரிந்துரைப்பிலும், ஊக்குவிப்பிலும் நானும் ” ரீடர்ஸ் டைஐஸ்ட்” சஞ்சிகையை அவ்வப்போது அப்போதே படித்து வந்தும் இருக்கிறேன். அதிலுள்ள துணுக்குகள் என்னை மிகவும் அதிகமாகக் கவர்வதுண்டு. அது தவிர பலர் எழுதும் தமது வாழ்வியல் அனுபவங்களும் கூட மிகவும் ஆச்சர்யமூட்டுபவையாக இருக்கும்.

    அந்தச் சஞ்சிகையின் ஆக்கங்களின் ஆழத்தை நான் எனது 19 வயதில் லண்டன் வந்தபோது என்னால் முழுமையாக உணரக்கூடியதாக இருந்தது. எப்படி என்கிறீர்களா ?

    நான் இலண்டன் வருவதற்கு முன்னால் ஈழத்தை விட்டு வெளிநாடு ஒன்றுக்குமே சென்றிராத என் தந்தை இலண்டன் வாழ்வு முறைகளைப் பற்றியும். இலண்டன் வாழ்வின் சில நடைமுறை வழக்கங்களையும் எனக்கு அறிவுரையாகக் கூறினார். அப்போது அவரின் அறிவுரைகளை அப்போதைய வாலிபத் துடுக்கின் நிமித்தம் அக்கறையுடன் நான் எடுத்துக் கொள்ளவில்லை.

    என்னே அதிசயம் ?

    இலண்டனில் நான் பார்த்த நடைமுறைகளை அப்படியே என் தந்தை விபரித்திருந்தது என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பின்பு நான் ஈழத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தபோது இது பற்றி நான் வினவியபோது தனக்கேயுரித்தான புன்னகையுடன் அனைத்தும் தான் ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” பல வருடங்களாக வாசித்து வருவதனால் அறிந்து கொண்டது என்று விளக்கமளித்தார்.

    1922 ம் ஆண்டு முதலாம் உலக மகாயுத்தத்தில் காயமடைந்திருந்த அமேரிக்கர் ௶” ட்வீட் வாலேஸ் (DeWitt Wallace ) ரென்பவரின் சிந்தையில் உதித்ததே இந்த “ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் சஞ்சிகையாகும்.

    பல சஞ்சிகைகளில், கட்டுரைகளில் வந்த சுவையானவற்றைத் தொகுத்துக், சிலவற்றை மீண்டும் தனது பாணியில் எழுதியும் ஒரே சஞ்சிகையில் கொண்டுவர அவர் எண்ணியதன் விளைவாகவே அகவைகள் நூறுக்கு முன்பு ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் இந்த சுவையான சஞ்சிகை உதயமாயிற்று.

    தனது அரசியல் நிலைப்பாடாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” பழமைவாத (Concervative) க்கு ஆதரவாகவும், மற்றும் கம்யூனிசத்துக்கு எதிரான நிலைப்பாட்டையுமே கொண்டிருந்தது. இந்தச் சஞ்சிகையின் மூலம் வருடமொன்றுக்கு 5000 டொலர்கள் ஈட்ட முடியும் என்றே டாவீட் வாலெஸ் அவர்கள் எண்ணினார் எனினும் 1929ம் ஆண்டில் ஆச்சரியமளிக்கும் வகையில் 900000 டொலர்கள் ஈட்டினார் என்பதும் சுமார் 290000 சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது என்பதும் வரலாற்றுப் பதிவாகும்.

    இச்சஞ்சிகையின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய இராச்சியத்தில் 1928ம் ஆண்டு பதிவிடப்பட்டது.

    இச்சஞ்சிகையின் 40வது வருட பூர்த்தியின்போது சுமார் 40 நாடுகளில் சர்வதேச பதிப்புகளும், 13 மொழிகளில் 29 மில்லியன் விநியோகத்தை எட்டியது.

    பல தசாப்தங்களாக இச்சஞ்சிகையின் ஒவ்வொரு பதிப்பிலும் 30 பதிவுகள் இடம்பெறுவது வழக்கம்.

    இவற்றுள்

    • அதிசயமான துணுக்குகள் ( Amusing Anecdotes )

    • சொந்த அனுபவங்கள் ( Personal Glimpses )

    • சீருடையில் நகைச்சுவை ( Humor in Uniform )

    • ஐக்கிய அமெரிக்காவில் வாழ்க்கை ( Life in these United States )

    • நிஜ வாழ்க்கை நாடகங்கள் (Drama in Real Life )

    என்பன போன்றவை மிகவும் குறிப்பிடத் தக்க பதிவுகளாகும்.

    “ரீடர்ஸ் டைஐஸ்ட்” படிக்காதவர்கள் அல்லது அதைப் பற்றி அறியாதவர்கள் மிகவும் சொற்பம் என்றே சொல்ல வேண்டும். ஒரு நாட்டுக்கு போகாமல் அந்நாட்டைப் பற்ரிய வாழ்வு முறையை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இச்சஞ்சிகையில் கட்டுரைகளும், துணுக்குகளும் இடம் பெறுவதே இச்சஞ்சிகையின் வெற்றிக்குக் காரணமாகிறது.

    இன்றைய இலத்திரனியல் ஊடக காலத்தில் கூட இணையத்தளம் வாயிலாக தனது செல்வாக்கை இச்சஞ்சிகை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது என்பது இதன் வாசகர்களின் ரசிப்புத் தன்மையின் ஆழத்தைச் சுட்டிக் காட்டி நிற்கிறது.

    நூறாவது அகவையில் கால் பதித்து தனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இச்சஞ்சிகை இது பொன்று இன்னும் பல நூறாண்டுகள் தனது தனித்தன்மையை இழந்து விடாமல் நிலைத்திருக்கும் என்பது என் போன்ற எழுத்துப் பித்தர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

    Share
  • வாட்சப்

    வாட்சப்

    பாஸ்கர்

    எல்லோரும் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    யார் எவரென்று பலரும் அறிகிலர்.
    முகமேயில்லை இங்கு நட்பு மட்டுமே உண்டு.
    கடுகு எண்ணெய் மூட்டு வலி நிவாரணி என்பார் ஒருவர்.
    கற்பகம் காபி ஒரே கசடென்பார் அடுத்தவர் உடனே.
    காபி குடிக்காதவன் தனுஷ் பக்கம் ஞாயம் என்பான்.
    ஒரு வருஷம் போகாத கோவில் என்பார் மற்றொருவர்.
    பேத்தியின் படத்தைக் காட்டி இவள்தான் உலகமென்பார்.
    எல்லோரும் சந்தோஷத்தையே காட்டிக்கொள்கிறார்கள்.
    காலை இரண்டு மணிக்கே தூக்கம் தொலைக்கிறார்கள்.
    கேட்டால் கொசுத்தொல்லை என நழுவுகிறார்கள்.
    ஆதரவாய் அருகமர்த்தித் தோள்தொட்டு நாளாச்சு
    யாருமில்லை அருகினில், கண்கொண்டு பேச இங்கு.
    கடைசி வரை இயந்திரம் இயந்திரத்துடனே சினேகமிங்கு.

    Share
  • காஞ்சித் தேரோட்டம், ஒரு நிமிடத்தில்

    காஞ்சித் தேரோட்டம், ஒரு நிமிடத்தில்

    கோலாகலமாக நடைபெற்ற காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் தேரோட்டம், இதோ ஒரு நிமிடச் சுருக்கக் காட்சி. கச்சி ஏகம்பன் உலாவைக் கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒருநாள் ஒருத்தி!

    ஒருநாள் ஒருத்தி!

    ஏறன் சிவா

    முன்னொரு நாளில் வானத்தில்
    முழுமதி உலவும் நேரத்தில் — உன்
    கண்ணிரண் டில்நல் ஒளிகண்டேன்
    காதல் என்னும் வழிநடந்தேன் — உன்
    பொன்னிரு கைகள் தீண்டியதால்
    பொழில்தரு மயக்கம் நானுணர்ந்தேன் — என்
    விண்ணிரன் டாகி விரிந்ததடி — பெரு
    வியப்பினில் உள்ளம் குளித்ததடி!

    பின்னொரு நாளில் வானத்தில்
    பிறைமதி உலவும் நேரத்தில் — நீ
    தனியோர் இடத்தில் தவித்திருந்தாய்
    தாமரை முகமாய்ச் சிவந்திருந்தாய் — உன்
    பண்செவிக் குழியில் பாய்ந்ததடி — உன்
    பார்வையில் உள்ளம் சாய்ந்ததடி! — அன்று
    பன்னிரு கோணம் உனில்கண்டேன்
    பனிநில வடியில் உனையுண்டேன்!

    இன்னொரு நாளில் வானத்தில்
    இருள்மதி சூழ்ந்த நேரத்தில் — உன்
    கண்ணொரு குளமாய் மாறியதேன்? — அது
    கடல்தரு நீராய்க் கரித்ததுமேன்? — அடி
    என்னொரு இதயம் பறித்தவளே
    எதற்குளங் கலங்கி இருக்கின்றாய் — சொல்
    உன்னொருத் திக்கே வாழ்கின்றேன் — உன்
    ஒளிமுகத் தால்தான் நீள்கின்றேன்!

    Share
  • பழம் உண்ணும் கிளி

    பழம் உண்ணும் கிளி

    இன்று மீண்டும் கிளியின் தரிசனம் கிட்டியது. அதுவும் கிட்டத்தட்ட பத்து நிமிடத்திற்கு. இந்தக் கிளி எந்தப் பழத்தை உண்ணுகிறது என்று தெரிகிறதா, பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெள்ளித் தேரில் ஏகாம்பரநாதர்

    வெள்ளித் தேரில் ஏகாம்பரநாதர்

    ஏலவார்குழலி உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர், காஞ்சி மாநகர வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வரும் ஒய்யாரக் காட்சி. பங்குனி உத்திரத் திருவிழாவின் 6ஆம் நாள் உற்சவம். இதில் வாத்தியக் கலைஞர்களின் விறுவிறு மேளதாளம், பார்ப்போரை நிமிரச் செய்யும். நிமிர்ந்தோரை அசையச் செய்யும். அசைந்தோரை ஆடச் செய்யும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Demise of Mrs Mina Swaminathan

    Demise of Mrs Mina Swaminathan

    PRESS RELEASE

    Mina Swaminathan

    Mina Swaminathan (née Bhoothalingam), school teacher, educator, educationist, and child care expert, who chaired the committee that recommended what became the Integrated Child Development Scheme (ICDS), died on March 14 at her home in Chennai. She was 89. She was one of the founders of the Mobile Creches, a former chair of the Delhi Social Welfare Board, an Emeritus Trustee of the M. S. Swaminathan Research Foundation, a founding member of the Centre for Women’s Development Studies, and an international consultant with UNESCO and UNICEF on Early Childhood Care and Education. She also worked in the field of theatre as a means of social and women’s empowerment.

    She is survived by her husband, M. S. Swaminathan, three daughters, Soumya Swaminathan, Madhura Swaminathan, Nitya Rao, five grandchildren, and her brother, Ravi Bhoothalingam.

    As Chair of the Central Advisory Board of Education (CABE) Committee on The Preschool Child she steered the development of the Report on the Preschool Child (1972) which led to the setting up of ICDS,  the largest and most comprehensive child care service in the developing world.  Her contribution to ICDS, particularly in Tamil Nadu, is notable after she moved to Chennai in 1989, setting up mobile training teams – a unique innovation, travelling widely across the state, working with ICDS frontline workers and providing practical guidance and encouragement.

    At a time when it was not publicly recognized she played a significant role in getting professional, political and national attention focussed on the rights and needs of the young child and women of the underprivileged and marginalized sections of the population. A fiery advocate and practitioner, she devoted with passion and conviction, five long decades to childcare and education and gender equality. Communication, especially the innovative use of creative and educational drama was critical to her work.

    She was the national President of the Indian Association for Preschool Education and the editor of its journal, BALAK.   She spearheaded the introduction of early childhood care and education (ECCE) into the National Policy on Education 1986 as well as its Plan of Action, 1989 and was chair of the Focus Group on Early Childhood of NCERT, which prepared the National Curriculum Framework in 2005.  She was a founder and leader of the Alliance for Early Childhood Care and Development (ECCD).

    She consolidated her life-long experience into the project Action for Child Care and Education Strategies and Services (ACCESS), a programme for networking of stakeholders to support training, research and advocacy on ECCE at the MS Swaminathan Research Foundation (MSSRF). Her work in this field, prescient at the time, brought to focus the need for all-round development of the young child, in particular attention to underweight, malnutrition and low birth-weight, all of which has adverse impact on the cognitive abilities in later life. The results of this unique project were summarized in the book titled As the Salt in the Seas, compiled by her and L.S Saraswathi.

    An activist with strong political commitment, she acted fearlessly, speaking out on behalf of the marginalized. She never cared for personal power or positions.  In her early years, soon after returning from Cambridge, she resigned from her Planning Commission job to take up her passion for teaching children.

    A writer and planner as well, her high levels of innovation, the ability to think pragmatically and most importantly, learning from her own and others’ mistakes spoke of her versatility. Through her ability to bridge different disciplines, she inspired and converted professionals, non-governmental organizations, child care workers, policy and decision makers to become champions for child rights and early childhood development.

    Among her numerous books, articles and papers, are three popular teachers’ manuals in ECCE entitled Play Activities For Young Children published (1984), The First Three Years (1989) and Play Activities For Child Development (2008). These were based on her experiences with the youngest age-group, first at the Nehru Experimental Centre at the Indian Agricultural Research Institute, in Mobile Creches and in Asian countries.  She also authored Who Cares? (1985) a study of day care services for low-income working women and The First Five Years (1998) a state-of-the-art review of child care services in India. Some of these publications have been widely translated into other Indian languages and went into many editions.

    Share
  • வாண வேடிக்கையில் ஒரு புதுமை

    வாண வேடிக்கையில் ஒரு புதுமை

    காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வாண வேடிக்கை இதோ. நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை நினைவூட்டும் வகையில் ஐந்து வாணங்கள் விண்ணில் பாய்ந்து மத்தாப்பாய்ச் சொரிவது இனிய புதுமை. கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share