இந்தக் கோணங்களில் குயிலை நீங்கள் கண்டதுண்டா?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இந்தக் கோணங்களில் குயிலை நீங்கள் கண்டதுண்டா?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சிரிப்பானந்தா நிறுவிய அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் சித்திரை சிங்கர் வழங்கிய சிரிப்புப் பாடல், அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த ‘விண்ணோடும் முகிலோடும்’ என்ற புகழ்பெற்ற பாடலை, அமிர்தராஜ் பாடக் கேளுங்கள். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் பொழிந்த இன்னிசை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

-மேகலா இராமமூர்த்தி
ஒரு நாணயத்திற்குத் தலை, பூவென இரு பக்கங்கள் இருப்பதுபோல் மானுட வாழ்க்கையும் இன்பம் துன்பம் எனும் இரு பக்கங்களைக் கொண்டதாகும். இவற்றில் எது எப்போது வரும் என்பது ஊகிக்க இயலாத ஒன்றாகும்.
2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா கொடுந்தொற்றுகாலச் சூழலை இதற்குத் தக்கதோர் சான்றாய் எடுத்துக் காட்டலாம். இயல்பாய்ச் சென்றுகொண்டிருந்த மனித வாழ்க்கை திடீரென்று முடங்கி, அனைவரும் வீடடங்கி இருக்கும் நிலையை ஒரு தீநுண்மி ஏற்படுத்தும் என்று யாரும் கனவிலும் கருதவில்லை; ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டது.
அத்தொற்றின்மீது ஏற்பட்ட அச்சத்தினாலும், அதனைக் கையாளுவது எப்படி என்பது தெரியாத காரணத்தினாலும் சில காலம் செய்வதறியாது திகைத்துப்போயிருந்த மாந்த இனம், அத்தொற்றைத் தடுக்கும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்ததினால் அதிலிருந்து மீண்டுவருவதைக் காண்கின்றோம்.
இவ்வாறு வாழ்வில் நேரிடும் எதிர்பாராத இன்னல்களையும் அவற்றால் ஏற்படும் இழப்புகளையும் கையாளுவதற்கும், அவற்றிலிருந்து மீண்டெழுவதற்கும் மக்களுக்குச் சில அடிப்படைப் பண்புகள் அவசியமாகின்றன. அவற்றை நம் சங்கப் பாடல்களும், வான்புகழ் வள்ளுவரின் வள்ளுவமும் விளக்கி மக்களுக்கு வழிகாட்டியிருக்கின்றன.
பக்குடுக்கை நன்கணியார் என்ற சங்கப்புலவர் ஒரு தெருவின் வழியாய்ச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் சாவு நிகழ்ந்ததற்கு அடையாளமாய் நெய்தல் பறை ஒலித்துக்கொண்டிருந்ததனைக் கேட்டார். இன்னும் சற்றுத் தொலைவு சென்றார்; மற்றொரு வீட்டில் திருமணத்திற்குரிய மங்கல முழவு ஒலித்துக்கொண்டிருந்தது.
கணவனோடு மகிழ்ந்திருக்கும் பெண்கள் மலரணிந்து மங்கலமாய்க் காட்சியளிப்பதையும், கணவனைப் பிரிந்த பெண்கள் தங்கள் மைதீட்டிய கண்களில் நீர்பெருக வருந்தியிருப்பதையும் கண்டார் புலவர். ஒருபுறம் இன்பம் மறுபுறம் துன்பம் எனக் கலந்திருக்கும் வகையில் இவ்வுலகைப் படைத்து, சிலரை அழுது அரற்றவும் வேறுசிலரை மகிழ்ச்சியில் திளைக்கவும் வைத்தவன் பண்பிலாக் கொடியவனாய்த் தோன்றினான் புலவருக்கு.
இந்த முரண்பட்ட நிலைக்கு என்ன தீர்வு என்று ஆழ்ந்து சிந்தித்தவர், உலகத்தின் இயற்கை இதுதான்; இதனை மனிதர்களால் மாற்றிவிட முடியாது எனும் உண்மையை உணர்ந்தார். ஆதலால், இவ்வுலகில் வாழ்பவர்கள் இன்னாத தன்மை கொண்ட அதன் இயல்புணர்ந்து, அதற்கிடையிலும் இன்பமாய் வாழ்வதொன்றே அதற்கான தீர்வாய் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதனைத் தம் பாடலிலும் பதிவுசெய்தார்.
வாழ்வில் இடுக்கண்ணும் இன்னலும் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு வெல்வதெப்படி என்பதனை விளக்கி வள்ளுவப் பேராசான் ‘இடுக்கண் அழியாமை’ என்றோர் அதிகாரத்தையே படைத்துள்ளார்.
”தடை நேர்கின்ற இடங்களிலெல்லாம் அதற்காகச் சோர்ந்துவிடாமல் வண்டியை விடாமுயற்சியோடு இழுத்துச்செல்லும் எருதைப்போல், துன்பம் வந்த காலத்தில் அதற்காகத் துவண்டுவிடாமல் தொடர்ந்து முயல்பவனுடைய துன்பமானது துன்பமடைவது உறுதி” என்கிறார் வள்ளுவர்.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து. (குறள்: 624)
”செல்வம் வந்தபோது அதன்மீது பற்றுக்கொண்டு அதனைக் காத்தறியாதவர்கள், அச்செல்வம் தம்மைவிட்டு நீங்கித் தாம் வறுமையுற்றபோது ’செல்வத்தை இழந்தோமே’ என்று அல்லற்படுவரோ?” என்று வினவி நம்மைச் சிந்திக்க வைக்கின்றார் மற்றொரு குறளில்.
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். (குறள்: 626)
’செல்வத்தின் இயல்பு சகடக்கால் போல் உருண்டு செல்வதாகும். அஃது ஓரிடத்தில் நிலைத்து நில்லாது’ என்கின்ற நாலடியார் பாடலையும் இங்கே நாம் இணைத்துப் பார்க்கலாம்.
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும். (நாலடி – 2)
இடுக்கண் வந்துற்றபோது நாம் உறுதியிழக்காமல் வாழ்வதற்குக் கைக்கொள்ள வேண்டிய மற்றொரு பண்பையும் வலியுறுத்துகின்றார் வள்ளுவர். அதுதான் இன்பத்தை விரும்பாது, இடும்பை மானுட வாழ்வின் இயல்பு என்றுணர்ந்து அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். (குறள் – 628)
இன்பநாட்டமே மானுட இயல்பென்பதனால் இடும்பையை வாழ்வின் பகுதியாக ஏற்றுக்கொள்ளும் பண்பென்பது எல்லோர்க்கும் எளிதில் வாய்த்துவிடாது. எனினும், அறிவிலும் வாழ்வியல் அனுபவத்திலும் தேர்ந்தவரான ஐயன் வள்ளுவர் உரைக்கும் இவ்வுயர் பண்பை நாம் வளர்த்துக்கொள்ள முயல்வது நமக்கு நன்மை பயக்கும்.
உலக வாழ்வில் ஈடுபட்டாலும், தாமரையிலை நீர்போல் அதில் ஒட்டாமல் வாழ்வோர் துன்பப்படுவதில்லை; துயருறுவதில்லை. இதையே ’ஸ்திதப் பிரக்ஞ’ மனநிலை என்றுரைக்கின்றது பகவத் கீதை.
எனவே, எதிர்பாராத இடுக்கண்ணும் இழப்பும் ஏற்படும்போது, பெறுவதைப் போலவே இழப்பதும் மனித வாழ்வின் இயல்பே எனும் பக்குவத்தையும், தோல்விகள் ஏற்படும்போது துவளாது, பகடுபோல் அவற்றை எதிர்கொண்டு, வெல்லும் ஊக்கத்தையும் பெற்றோமென்றால் கலக்கமுற்றிராது வாழலாம்; மற்றையோர்க்கும் நல்வழிகாட்டியாய்த் திகழலாம்.


தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உரத்த சிந்தனை உதயம் ராம் வழங்கிய நகைச்சுவை உரையின் முதல் பகுதி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

செண்பக ஜெகதீசன்
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
– திருக்குறள் – 635 (அமைச்சு)
புதுக் கவிதையில்…
அரசுக்கான
அறங்களை அறிந்தே,
கல்வி
அறிவு மிகப்பெற்றே,
அடக்கமாய்ப் பேசும்
ஆற்றல் உள்ளளவனாய்,
எப்போதும்
செயல்திறன் மிக்கவனாய்
உள்ளவனே
அரசர்க்கு ஆராய்ந்து கூறும்
தக்க துணைவனாவான்…!
குறும்பாவில்…
அரசறம் அறிந்தே கல்வியாளனாய்
அடக்கமான பேச்சுடைய செயல்வீரனே அரசர்க்கு
ஆராய்ந்துகூறும் தக்க துணைவனாவான்…!
மரபுக் கவிதையில்…
அரசதன் அறங்களை அறிந்தவனாய்
அளவிலாக் கல்வியு முடையவனாய்,
உரக்கவே பேசிடா தடக்கமுடன்
உரைத்திடத் தெரிந்தவன் உத்தமனாய்
அரசனின் வாழ்வதன் காலங்களை
அறிந்ததன் படிச்செயல் படுகின்ற
தரமுடைச் செயலதன் வீரனெனும்
தக்கவன் அரசனின் அமைச்சாமே…!
லிமரைக்கூ…
அரசறிவு உயர்கல்வி யுடனே
சொல்லடக்கம் கொண்டே செயல்வீரனாய் இருத்தல்,
அரசனுக்கேற்ற அமைச்சனின் கடனே…!
கிராமிய பாணியில்…
மந்திரி மந்திரி
மகாராசாவுக்கு ஏத்த மந்திரி,
மதிப்பு மிக்க மந்திரி..
நாட்டு அரசியலறிவு
நல்ல படிப்பு,
அடக்கமான பேச்சோட
எதயும்
ஆராஞ்சி சொல்லுற
தெறமயுள்ள செயல்வீரன்தான்
ராசாவுக்கு
தக்க தொணயான மந்திரி..
அவுருததான்,
மந்திரி மந்திரி
மகாராசாவுக்கு ஏத்த மந்திரி,
மதிப்பு மிக்க மந்திரி…!

சென்னையில் இன்று மாலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. நூற்றுக்கணக்கான பேருந்துகள், ஆங்காங்கே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து ஊழியர்கள் திடீர்ப் போராட்டத்தில் குதித்துள்ளனர். களத்திலிருந்து இதோ நேரடி விவரங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

செங்கோலுடன் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. இதில் திருஞானசம்பந்தர் இயற்றிய கோளறு பதிகம் பாடப்பெற்றுள்ளது. இப்பதிகத்தின் நிறைவுப் பாடலின் ஈற்றடி,
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!
என அமைந்துள்ளது அழகிய பொருத்தம். ‘கோளறு பதிகம்’, மிகச் சக்தி வாய்ந்தது. நவகிரகங்களால் நேரக்கூடிய தீமைகளை விலக்கக்கூடியது. இதை ஓதும் அடியார்களுக்கு நாளும் கோளும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது என்று சம்பந்தர் ஆணையிட்டுச் சொல்கிறார். இந்த அற்புதப் பதிகத்தை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சிவபெருமானின் அளவற்ற கருணையைப் பெறுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அறுபடை வீடுகளுள் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வந்தோம். திரும்பிய புறமெங்கும் திருமண ஜோடிகள், காதுகுத்து, முடி காணிக்கை, புது வாகனத்துக்குப் பூஜை, பக்தர்களே எடுத்து வந்து அளிக்கும் பிரசாதம் என மங்கல நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.
வரிசையில் நிற்கும் பக்தர்களின் தாகம் தீர்க்க, தண்ணீர் கொடுத்தவண்ணம் உள்ளனர். பக்தர்கள் நடக்க எளிதாக, கம்பளம் விரித்து அதில் தண்ணீர் ஊற்றுகின்றனர். பஞ்சாமிர்தப் பிரசாதம் தாராளமாகத் தருகின்றனர்.
விதானத்தை அலங்கரிக்கும் அறுபடை முருகன் ஓவியங்கள் தனி அழகு. கோவிலுக்கு உள்ளே குரங்குகள் இயல்பாக ஓடி, ஆடி விளையாடுகின்றன. அதில் ஒரு குரங்கு, வேங்கடாசலபதியின் தலைமேல் ஏறி அமர்ந்துவிட்டது. இந்த அழகிய திருக்கோவிலுக்குள் ஒரு சிறிய உலா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
மங்கையர் தினம்
தினம் தினம் இனிக்க மங்கையர்
தினம் வந்தது தானாய்….1
இதிகாசம் பதிக்கும் கலிகாலம் பழிக்கும்
சலியாத தாய்மை பணி…2
தொடராகும் தொடக்கம் துவளாத வரைக்கும்
சுடராகும் குலத்தில் பெண்..3
மகளாய் மனையாய் தமக்கை தோழியாய்
சகமாய் வந்தாள் தாய்..4
அன்பை காட்டி அகத்தை கூட்டி
பண்பை தருவது பெண்..5

திருத்தணி முருகன் கோவிலில் ஒரு நல்ல சேவை
திருத்தணி முருகன் திருக்கோவிலில் பக்தர்களுக்குப் பஞ்சாமிர்தப் பிரசாதம் வழங்கும் காட்சி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திருவாகி வந்தென் குற்றம் துடைப்பார்
உருவாகி ஊட்டும் குரு
மாயவிளை யாடல்தமை மதிவீழ செய்யாது
காயமெலாம் காக்கும் குரு
ஆனந்த ஆனந்த ஆனந்த பொழிவாகி
தானந்த மாகிடும் குரு
துன்பம் கொடுத்து துயரம் தனைமாற
இன்பம் கொடுக்கும் குரு
பிறவிகள் அறுக்க பித்தமெலாம் அழிக்க
அருவிகள் அருளாக குரு
பிழையோ பாவமோ பித்தமோ பிணிநீக்க
மழையாக மந்திரம் குரு
ஞானமும் நல்லறிவு சாதுர்யம் தன்னடக்கம்
தானங்க மாகிடும் குரு
தெரியாது புரியாது தவித்திடும் நிலைமாற
குறையாத வளந்தான் குரு
வித்தை கற்பித்து சத்தை தெளிவிக்க
சித்தியுள் நிறைந்த குரு
முடியாத காரியம் விதியென காரணம்
அடியாலே நிகழ்த்தும் குரு
ஒழுக்கம் தவநெறி நல்லறம் பாக்கியம்
வழங்கும் பகவான் குரு
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவது ஏன்? இதனால் என்ன நன்மை? இதன் மூலம் வங்கித் துறைப் பங்குகளின் விலை அதிகரிக்குமா? கடனுக்கான வட்டி விகிதங்கள் மாறுமா? இந்த நோட்டுகளை எங்கே, எப்படி மாற்றிக்கொள்ளலாம்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)