மங்கையர் தினம்
தினம் தினம் இனிக்க மங்கையர்
தினம் வந்தது தானாய்….1
இதிகாசம் பதிக்கும் கலிகாலம் பழிக்கும்
சலியாத தாய்மை பணி…2
தொடராகும் தொடக்கம் துவளாத வரைக்கும்
சுடராகும் குலத்தில் பெண்..3
மகளாய் மனையாய் தமக்கை தோழியாய்
சகமாய் வந்தாள் தாய்..4
அன்பை காட்டி அகத்தை கூட்டி
பண்பை தருவது பெண்..5

Leave a Reply