புதிய நாடாளுமன்றத்தில் கோளறு பதிகம்
செங்கோலுடன் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. இதில் திருஞானசம்பந்தர் இயற்றிய கோளறு பதிகம் பாடப்பெற்றுள்ளது. இப்பதிகத்தின் நிறைவுப் பாடலின் ஈற்றடி,
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!
என அமைந்துள்ளது அழகிய பொருத்தம். ‘கோளறு பதிகம்’, மிகச் சக்தி வாய்ந்தது. நவகிரகங்களால் நேரக்கூடிய தீமைகளை விலக்கக்கூடியது. இதை ஓதும் அடியார்களுக்கு நாளும் கோளும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது என்று சம்பந்தர் ஆணையிட்டுச் சொல்கிறார். இந்த அற்புதப் பதிகத்தை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சிவபெருமானின் அளவற்ற கருணையைப் பெறுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)