திருவாகி வந்தென் குற்றம் துடைப்பார்
உருவாகி ஊட்டும் குரு
மாயவிளை யாடல்தமை மதிவீழ செய்யாது
காயமெலாம் காக்கும் குரு
ஆனந்த ஆனந்த ஆனந்த பொழிவாகி
தானந்த மாகிடும் குரு
துன்பம் கொடுத்து துயரம் தனைமாற
இன்பம் கொடுக்கும் குரு
பிறவிகள் அறுக்க பித்தமெலாம் அழிக்க
அருவிகள் அருளாக குரு
பிழையோ பாவமோ பித்தமோ பிணிநீக்க
மழையாக மந்திரம் குரு
ஞானமும் நல்லறிவு சாதுர்யம் தன்னடக்கம்
தானங்க மாகிடும் குரு
தெரியாது புரியாது தவித்திடும் நிலைமாற
குறையாத வளந்தான் குரு
வித்தை கற்பித்து சத்தை தெளிவிக்க
சித்தியுள் நிறைந்த குரு
முடியாத காரியம் விதியென காரணம்
அடியாலே நிகழ்த்தும் குரு
ஒழுக்கம் தவநெறி நல்லறம் பாக்கியம்
வழங்கும் பகவான் குரு
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]


Leave a Reply