FB_IMG_1684942192222

திருவாகி வந்தென் குற்றம் துடைப்பார்
உருவாகி ஊட்டும் குரு
மாயவிளை யாடல்தமை மதிவீழ செய்யாது
காயமெலாம் காக்கும் குரு
ஆனந்த ஆனந்த ஆனந்த பொழிவாகி
தானந்த மாகிடும் குரு
துன்பம் கொடுத்து துயரம் தனைமாற
இன்பம் கொடுக்கும் குரு
பிறவிகள் அறுக்க பித்தமெலாம் அழிக்க
அருவிகள் அருளாக குரு
பிழையோ பாவமோ பித்தமோ பிணிநீக்க
மழையாக மந்திரம் குரு
ஞானமும் நல்லறிவு சாதுர்யம் தன்னடக்கம்
தானங்க மாகிடும் குரு
தெரியாது புரியாது தவித்திடும் நிலைமாற
குறையாத வளந்தான் குரு
வித்தை கற்பித்து சத்தை தெளிவிக்க
சித்தியுள் நிறைந்த குரு
முடியாத காரியம் விதியென காரணம்
அடியாலே நிகழ்த்தும் குரு
ஒழுக்கம் தவநெறி நல்லறம் பாக்கியம்
வழங்கும் பகவான் குரு

← Back

Thank you for your response. ✨

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.