Blog

  • வார ராசிபலன் (14-01-2013-20.01.2013)

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால
    முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப்
    பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள்
    நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை
    விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம்.
    இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள்
    புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில்
    இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    ரிஷபம்: பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத்
    தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில்
    பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .
    மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும்,
    திறமையையும் வீணடிக்காததிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில்
    வெற்றி பெற,உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான
    பொறுப்புக்களை கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில்
    வைத்துக் கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய
    நேரிடும்.

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும்
    வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.
    பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை
    இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு
    நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர்
    பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை,
    தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய்
    மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய
    வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன்
    திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும்.
    அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய்
    முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது
    வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு
    பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில்
    அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

    சிம்மம்:உயரதிகாரிகள் காட்டும் ஆதரவு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு,
    உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள்
    படிப்புக்கு முக்கியத்துவம் தந்தால், பாடங்கள் கரும்பாய் இனிக்கும். பொது
    வாழ்வில் இருப்போர் ஆவேசமான பேச்சு, மற்றும் செயல் பாடு இரண்டும் எல்லா
    நேரங்களிலும் விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
    பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத்
    தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில்
    பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள்.
    இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம்
    கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது.
    பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை
    முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே
    செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் ,
    சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை
    முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

    துலாம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி
    உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு
    வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண்
    செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல்
    இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை
    மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல்
    ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட
    அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன்
    செயல்படலாம்.

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம்
    செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றி தொடரும். மாணவர்கள் சோர்வை
    விரட்டியடி க்கும் சத்தான பானங்களை குடித்து வந்தால், சிந்தனை வளம்
    மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதை
    தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும்
    துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை இதமான
    முறையில் எடுத்துச் சொன்னால்,அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய
    கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

    தனுசு: குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
    பிரச்னைகள் சுமுகமாக முடியும். வெளி இடங்களில் தங்கி படிக்கும் மாணவ
    ர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள்
    கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை
    மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும்
    உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி
    வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்துவிடவும்.

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன்
    வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும்
    கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது
    நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப
    உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள
    குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம்.
    வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது.
    பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின்,
    கையெழுத்திடுவது அவசியம்.

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல்சம்பந்தமான உபாதைகள் உங்கள்
    இயல்பு வாழ்வை பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து
    விடுங்கள். கலைஞர்கள் விழா விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை
    அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே
    ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில்
    ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழு பொறுப்பை அளிக்காமல், உங்கள்
    கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.பணியில் இருப்போர்
    வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும்
    வாய்ப்பு உங்களை நாடி வரும்.

    மீனம்: நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை தவிர்த்தால், நட்பு
    கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற
    வேண்டி யிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன்
    அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்கு புதிய மனை மற்றும்
    இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா விருந்து
    ஆகியவற்றிற்கு கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை
    நண்பர்கள் இனிமையாய் மாற்றிடு வார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு
    தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால்,
    தேக நலன் சீராக இருக்கும்.

    Share
  • அந்திமாலையும், அவளும் அவனும்-3

    திவாகர்

    “அவள் ஆண்டாள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”

    “முதலில் சுத்தமாகத் தெரியாது.. ஏதோ சிறுமி எதற்கோ நிறுத்துகிறாள் என்று நினைத்துதான் குதிரையை விட்டு இறங்கினோம்.. அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர்.. நாங்கள் உருகிப் போய்விட்டோம்.. எதற்கும் கலங்காத நரசிங்க மகாராஜா அந்த நடுச் சாலையில் மண்டியிட்டு அந்த சின்னப்பெண்ணின் கையைப் பிடித்து ’ஏனம்மா அழுகிறாய்’ என்று கேட்டார்.. அதற்கு அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் எங்களை இதோ நாம் இங்கே நிற்கிறோமே அங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு இந்தக் கோயில் உள்ளே வருமாறு வேண்டினாள். என்னையும் கையைப் பிடித்து அழைத்துப் போனாள்..”

    கண்களில் ஏதேனும் கண்ணீர் வந்ததோ என்னவோ, திம்மராசு சடாரென தன் கண்களை மேல்துணியால் ஒற்றிக் கொண்டார்.

    “எனக்கு வயது அப்போது நாற்பது இருக்கும் கிருஷ்ணா.. என் மூத்த பெண் நன்றாக வளர்ந்து சட்டென ஒரு நோய் வந்து இறந்து போன நேரம் அது.. அந்தப் பெண்ணைப் போலவே இவளும் இருந்தாள்.. எனக்குள் என்னை அறியாமலே ஒரு தந்தைப் பாசம். அந்தப் பெண் என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துப் போகும்போதே அந்தப் பாசத்தின் வலி என் நெஞ்சைப் பிசைந்து கொண்டே இருந்ததை எப்படிச் சொல்வேன்..”  திம்மராசு பெருமூச்சு விட்டு மறுபடியும் பேசினார்

    ”கிருஷ்ணா! அவள் ஒரு வார்த்தை எங்களிடம் பேசவில்லை. அவளே அங்கே உள்ள சிலந்தி வலைகளைக் கலைத்தாள், உடைந்த கற்களையும் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினாள். சிறிது நேரம் அப்படிச் செய்தவள் மறுபடியும் என் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக வலம் வந்தாள். பாசி படிந்த நீர்க்குளம் அருகே நின்றாள்.. அருகே கிடந்த காய்ந்த சருகுகளையெல்லாம் ஒதுக்கிக் கொண்டே சென்றவள் கோயில் உள்ளே பெருமாள் கர்ப்பக்கிருகத்தருகே வந்து நின்றாள்.. அவள் மறுபடி எங்களை ஒன்றும் கேட்கவில்லை.. என்னைப் பிடித்துக் கொண்டு வந்த கையை அவளே விடுப்பித்துக் கொண்டாள்.. பெருமாளைக் காணச் செல்கிறாளோ என்று நினைத்தோம்தான். உள்ளே அந்த இருளான கருவறையில் சென்றவள்.. மறுபடி வரவில்லை.. குரல் கொடுத்துப் பார்த்தோம்.. கருவறை உள்ளேயே சென்றோம்.. திக்பிரமையோடு அதுவரை கூடவே வந்த நரசிங்க மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எங்களை அழைத்து வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை.. சாட்சாத் ஆண்டாளே.. அவள்  இந்தக் கோயில் கட்டும் நிமித்தம் எங்களை அழைத்து அவள்தான் ஆணையிட்டுள்ளாள் என்று. விஷயம் புரிந்தவுடனே பார்க்கவேண்டுமே நரசிங்கரின் உற்சாகத்தை. அடுத்த ஒரு மாத காலம் அனைத்து ராஜகீய வேலைகளும் இந்த ஊரில்தான் நடந்தது என்றால் பார்த்துக்கொள் கிருஷ்ணா.. கோயில் கோபுரம் எப்படிக் கட்டப்படவேண்டும், கோயில் சுற்றுப்புறம் எப்படி இருக்கவேண்டும், உள்ளே மண்டபங்கள் எப்படியெல்லாம் மராமத்து செய்யப்படவேண்டும், நந்தவனம், குளம் எப்படியெல்லாம் சீரடைய வைக்கவேண்டும், யார் யார் நிதி ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் இங்கிருந்துதான் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டே வருடம்தான்.. இதோ இந்த கோபுரத்துடன் அழகிய கோயிலும் நந்தனவனமும் இங்கே உருவாகிவிட்டது.” *******(1)

    திம்மராசு சற்று நிதானித்தார்..

    “எங்கள் ஆண்டாள சன்னிதியில் புதுப் பொலிவு பார்த்தோம். கிருஷ்ணா! இப்போது சொல்கிறேன் ஒரு ரகசியத்தை உனக்கு.. நீங்கள் அத்தனைபேரும் தடுத்துப்பார்த்தாலும் நான் ஏன் விஜயநகரத்தை விடுத்து வில்லிபுத்தூர் வந்தேன் தெரியுமா, என் செல்லப் பெண் போல வந்து என் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாளே, அவளை நினைத்து நினைத்து உருகி உருகித்தான் இங்கே வந்து இதோ கோயிலருகேயே குடில் கட்டி வாழ்ந்து வருகிறேன்.. இனி இந்த உடலிலிருந்து என் உயிர் பிரியும் வரை அவளைப் பார்த்துக்கொண்டே இங்கேதான் வாசம் என்ற முடிவோடுதான் தினமும் உயிர் வாழ்கிறேன் கிருஷ்ணா!”

    திம்மராசுவின் குரல் குழைந்து போனதைக் கவனித்தான் கிருஷ்ணதேவன். எத்தனைப் பெரிய விஷயம் இது.. விந்தைகள் எல்லாமே இங்கு சர்வ சாதாரணம் போலும்.. அப்படித்தான் இருக்கவேண்டுமென நினைத்தான்.. இல்லையென்றால் சண்டை நடக்கும்பகுதியில் தரிசனம் கொடுத்தவன் இன்று அந்திமாலையில் நேத்ரதரிசனம் தருவானா.. அதுவும் இவர் பேத்தி மூலமாக.. கிருஷ்ணாவின் மனதில் இனம் புரியாத ஆனந்தம் புகுந்து கொண்டது.

    திம்மராசுவுடன் கோயிலுள்ளே சென்று பெருமாள் தரிசனம் செய்தவன் ஆண்டாள் ச்ன்னிதிக்கு வந்தான். கண்ணார அந்தத் தாயைக் கண்டவன் அப்படியே தரையில் விழுந்து சேவித்தான். ’இத்தனை சிறிய வயதில் எத்தனை பெரிய கிழவி போல ஞானத்தைக் கரைத்துக் குடித்து அதன் சாற்றினை மட்டும் அடியவர்களுக்கு அள்ளித் தந்த சுடர்க்கொடியே.. தாயே உன் மேல் காவியம் ஒன்றை எழுத என்னை ஒரு கருவியாக்கு’ என்று மனதுக்குள் அவளை வேண்டினான். மனது மிகவும் திருப்திப்பட்டது போல உணர்ந்தான்.

    திம்மராசு நகர்ந்தார். போகும்போது மடைப்பள்ளியில் ஆகாரத்துக்கான ஏற்பாடும் செய்யச் சொன்னார். அவருடன் கிருஷ்ணாவும் நகர்ந்தான். இருந்தும் அவன் கண்கள் ஆங்காங்கே அவர் பேத்தியைத் தேடின.. எங்கே போய்விட்டாள்.. இங்கேதான் கோயிலில் இருப்பாள் என்று சூசகமாக திம்மராசு மாமா சொன்னாரே.. இல்லை எங்கும் அவள் காணவில்லை.. மறுபடியும் கோயில் வெளியே வந்து குடிலுக்குள் சென்று இரு பலகைகளைக் கொண்டு வந்து கீழே போட்டார்.

    எங்கே அவள்.. இவள் தாத்தாவுடன் இல்லையோ என்னவோ.. ஒருவேளை தாதியரோடு தனியாக வளர்க்கிறாரோ என்னவோ.. ஆனாலும் தன்னை விட்டுப் பிரியும்போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.. ’என்னைப் பாராதது போலவே தாத்தாவிடம் காட்டிக்கொள்ளேன்’  அது சரி, இவளைப் பாராதது போல காட்டிக் கொள்ளலாம்தான்.. அதற்காக அவளைப் பாராமலே இருந்து விட முடியுமா.. திரும்பப் போவதற்குள் எப்படியாவது அவள் முக தரிசனம் செய்து விட வேண்டும்.. வருவாளா.. அப்படி வரவில்லையென்றால் மாமாவிடம் கேட்டுவிடவேண்டியதுதான்..

    அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே குதிரைக் கொளம்படிச் ச்பதங்களோடு ஒரு சிறிய படை ஒன்று தபதப’வென வரும் சப்தம் கேட்டது.. புரிந்தது கிருஷ்ணதேவனுக்கு.. தன் நண்பர்கள்தான்.. கொஞ்சம் தாமதித்தாலும் வந்துவிடுவோம் என்று மதுரையில் சொன்னார்கள் அல்லவா.. வந்துவிட்டார்கள்.

    அடுத்த அரை நாழிகையில் திம்மராசுவின் குடில் அல்லோல கல்லோலப்பட்டது. வெளியே மெய்க்காவலர்கள் படை காத்திருக்க, தஞ்சை மதுரை செஞ்சி நாயகர்கள்தான் உள்ளே வந்தவர்கள்.  அவர்கள் திம்மராசுவிடம் கிருஷ்ணை நதிக்கரையோரம் கங்கர்களோடு நடந்த சண்டையில் பெற்ற வெற்றியும் அந்த அதிகாலை வேளையில் மன்னருக்குக் கிடைத்த மகாலக்ஷிமி சமேத மகாவிஷ்ணுவின் தரிசனமும் பற்றியே வெகுவாகப் பேசினார்கள்… சற்றுநேரம் வரைக்கும் வெகு அமைதியாகக் காணப்பட்ட அந்த இடம் அமர்க்களமான குரலில் ஏற்பட்ட சப்தத்தால் பெரும் பரபரப்பு கூடியது போல காணப்பட ஆரம்பித்தது. எல்லோருக்குமே திம்மராசு மீது மரியாதை அதிகம் என்பது கூட அவர்கள் பேச்சின் மூலம் தெரிந்தது. மகாவிஷ்ணுவின் விருப்பமும், அவர் கேட்டுக் கொண்டதனால் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் புகழை தெலுங்கு மொழியில் மன்னர் பாட இருப்பதையும் சற்று எல்லோருமே உணர்ச்சிவசமாகப் பேசினார்கள்தான்.

    “திம்மராசுப் பெரியவர் பிரதானி பதவியில் இல்லையென்றாலும் இன்னமும் எங்களுக்கெல்லாம் தலைமை அமைச்சர்தாம். மன்னாதி மன்னரான கிருஷ்ணதேவராய சமூகம் மிகப் பெரிய காவியம் படைக்கும் தருணத்தில் திம்மராசனார் திருமலைத் திருப்பதியில் இருக்கவேண்டும்.. திருமலை வேங்கடவன் முன்னிலையில் அல்லவா இந்தக் காவியம் அரங்கேறப்போகிறது.. திம்மராசு மாமய்யா அவசியம் வந்து மன்னரை வாழ்த்த வேண்டும், அதற்கு மன்னாதி மன்னரும் வேண்டுகோள் விடுக்கவேண்டும்’”

    இது செஞ்சிக்கோட்டை வையப்ப நாயகர் வேண்டுகோள். அவரது குரல் மிகச் சப்தமாக வந்ததாலும், மற்ற தலைவர்கள் அதை ஆமோதித்து வரவேற்றதாலும் ஏனோ அந்த சூழ்நிலை கிருஷ்ணதேவன் மனதுக்குப் பிடிக்காமல் போனது. அவன் மனம் தனிமையில் திம்மராசு மாமாவிடம் அதிகம் பேசவே விரும்பியது.. தனிமையில் பேசினால் பேத்தி கூட வந்தாலும் வந்து சேர்ந்து கொள்வாள்.. ஆனாலும் இனி இவர்களை விலக்கமுடியாதே..

    “நண்பர்களே!.. உங்கள் அழைப்புதான் என் அழைப்பும்.. ஆனால் திம்மராசு மாமாவை நாம் கட்டாயப்படுத்தக்கூடாது.. அவர் சாதாரணப்பட்டவர் இல்லை.. அவர் வந்தாலும் வரமுடியாவிட்டாலும் அவர் ஆசிகள் எனக்கு எப்போதும் உண்டு என்பதை நான் அறிவேன்”

    பட்டும் படாமல் பேசிய வார்த்தைகளில் உள்ள உண்மையை திம்மராசு உணரத்தான் செய்தார். கிருஷ்ணாவுக்கு

    “உங்கள் அன்புக்கு நன்றி நாயகர்களே!.. ஆனாலும் என் நிலையை விளக்கமாக சற்று முன்னர்தாம் உங்கள் மன்னரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.. என் மனம் முழுவதும் திருமலையில் வேங்கடவன் சன்னிதியில் மன்னர் காவியம் பாடுவதில்தான் இருக்கும்.. ஏனெனில் நான் என் பேத்தியை விட்டு எங்கும் வரமுடியாது..”

    புரியாமல் பார்த்தார்கள் நாயகர்கள். புரிந்தவன் சிரித்தான்.

    “அதுவும் நல்லதுதான் மாமா.. உங்கள் ஆசை எனக்குத் தெரியாதா என்ன.. இருக்கட்டும்.. நான் வந்ததன் காரணமே இந்தக் காவியத்தை எப்படி ஆரம்பிக்கலாம் என்று உங்களைக் கலந்து ஆலோசிக்கத்தான்.. நல்ல காலம் நம் நண்பர்களும் வந்துவிட்டார்கள்.. எல்லோருமே கேட்கட்டுமே.. சொல்லுங்கள்.. காவியத்தை எப்படி ஆரம்பிப்பது..”

    திம்மராசு யோசித்தார்..

    ”ம்ம்.. சரியானதுதான்.. உனக்கு தரிசனம் தந்தவர் தம்மை ஆந்திர விஷ்ணு என்றார் அல்லவா.. தெலுங்கு மொழியில் ஆண்டாள் தன்னை திருமலையில் சேர்ந்ததாகப் பாடவேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் இல்லையா? உனக்கு இந்தக் காவியத்தில் பாட்டுடைத்தலைவன் திருமலை வேங்கடவன்.. நாயகி ஆண்டாள் தாய்தான்.. அவர் எப்படி தரிசனம் தந்தாரோ, என்ன வரம் கேட்டாரோ.. அங்கிருந்து காவியத்தை ஆரம்பித்து எழுது.. முதல் வணக்கத்தையும் திருவேங்கடவனுக்கு சமர்ப்பித்து விடு”

    “ஆஹா.. முதலமைச்சரின் ஆலோசனை என்றும் முதன்மையானதுதான்” மதுரை நாகம நாயக்கர் புகழாரம் சூட்ட ஆரம்பித்தார்.. கிருஷ்ணதேவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.. அவனுக்கு அந்தி மாலை நேர நேத்ர தரிசனமும் திம்மராசு பேத்தியின் கௌஸ்துப மாலையின் விளக்கமும் நினைவுக்கு வந்தன..

    ”இப்படி ஆரம்பிக்கட்டுமா?”

    ”எப்படி.. சொல் சொல்..”

    ” இலக்குமியின் திருமார்பில் ஒளிரும்
    ஆரத்தின் ஒளி நீயே உன் திருமார்பில்
    ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
    ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
    ஒளிந்திருந்தும் இந்த மணிகளின் வழியே
    தெள்ளத் தெளிவாய் வெளியே
    தெரியும் விந்தையைத் தந்த

    திருவேங்கடவனே உனக்கு முதல்வணக்கம்!” **** (2)

    நாயகர்கள் ஏதும் பேசமுடியாமல் மௌனமாக இருந்தனர். திம்மராசுவோ ஸ்தம்பித்துப் போயிருந்தார். ”என்ன சொன்னாய் கிருஷ்ணா.. ‘ஒருவருக்கொருவர் உள்ளொளியாய உள்ளேயே ஒளிந்திருந்தும் தெள்ளத் தெளிவாய வெளியே தெரிந்த விந்தையா? ஆஹா அற்புதம் கிருஷ்ணா.. உனக்கு திருவேங்கடவனின் பரிபூரண அருள் இருக்கிறது.. ஆஹா எத்தனை அருமை.. எப்படிப்பட்ட சொற்கள்.. எத்தனை வலுவான பொருளோடு அப்படியே நாவில் வந்து வெளியே வெண்முத்துக்களாக விழுகின்றன..”

    திம்மராசு புகழ்ச்சியைக் கேட்டதும் சட்டென மறுத்தான் கிருஷ்ணதேவன்.. “மாமா, மன்னிக்க வேண்டும், உங்களின் இத்தனை புகழ் வார்த்தைகளும் எனக்குச் சேரவே சேராது.. எல்லாம் உங்கள் பேத்திக்கே சொந்தம்” என்று வெளியே குரல் உடைபட சொன்னவன் மனதில் இன்னொன்றும் சொல்லிக்கொண்டான்..”என் இனிய செல்லப்பெண்ணே.. இது நீ கொடுத்த பாட்டு, உன் அருள்.. உனக்குதான் அதன் பெருமை சேரும்’…

    திம்மராசு எங்கேயோ ஒரு உலகில் இருந்ததைப் போல உணர்ந்தார்..’

    “ஆமாம்.. பேத்தி.. பேத்திதான்.. இருந்தாலும் இந்த அழகிய பாடல் உள்ள காவியம் காலம் உள்ளவரை உன்னை வாழ்த்திக் கொண்டே இருக்கும் கிருஷ்ணா!”

    நாயகர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு கிருஷ்ணதேவனை உலகளாவப் புகழ ஆரம்பித்தனர்.. கிருஷ்ணா மனதுக்குள் கவலை ஏராளமாக இருந்தது.. எத்தனை இருந்தாலும் அந்த சிறிய பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த ஞானத்தின் முன் தன் அஞ்ஞானம் எப்படி சமமாகும் என்று எப்படி இவர்களுக்கு எடுத்துரைப்பது.. அடக் கடவுளே.. ஒருமுறை அவள் தன் தாத்தாவைப் பார்க்க இங்கே தக்கணமே வரக்கூடாதா.. இத்தனை தலைவர்கள் முன் அவளுடைய ஞானத்தைக் காண்பித்து அவளை நாம் முன்னிறுத்தியிருக்கலாமே.. தாத்தா அனுமதியுடன் பேத்தியை தலைநகருக்கு அழைத்துச் சென்று கவுரவம் செய்திருக்கலாம்தான்.. ஆனால் எங்கே அவள்.. எப்படி இவரிடம் கேட்பது.. அவளைப் பற்றியும் நாம் அதிகம் பேசக்கூடாது அல்லவா.. அவள் கட்டளை இருக்கிறதே.. இதனால் அவளுக்கு நிதம் கிடைக்கும் விஷ்ணுவின் நேத்ர தரிசனம் தடைப்படுமே.. அப்படியும் அவரிடம் சூசகமாக பேத்தியைப் பற்றி சொன்னாலும் பேச்சை மாற்றிவிட்டாரே மாமா…

    ஏதேதோ பேசினர்.. பின்னர் நாயகர்கள் எழுந்து கொண்டனர். கிருஷ்ணதேவனும் எழுந்துகொண்டான்.. அடுத்தநாள் காலை மதுரையிலிருந்து ராணிகள் சகிதம் தாம் தலைநகரம் பயணப்படவேண்டும்.. சிறிது நேரம் நின்று கொண்டே பேசியவர்கள் விடை பெற்றார்கள். அழகாக தலையசைத்து வாசல் வரை வந்து வழி அனுப்பினார் திம்மராசு.

    குதிரை ஏறப்போனவன் மறுபடியும் தனியாக திம்மராசு மாமாவிடம் வந்தான். “மாமா.. தங்கள் பேத்தியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்..இது என் தனிப்பட்ட வேண்டுதல்”

    சட்டென் கையைப் பிடித்துக்கொண்டார் திம்மராசு..”ஆஹா.. கிருஷ்ணா! என் பேத்தியின் மீது இத்தனை அக்கறையா.. நான் அவளைப் பார்த்துக் கொள்ள, அவள் என்னைப் பார்த்துக் கொள்ள.. எங்களுக்கென்ன கவலை சொல்! இவைகளைப் பற்றி நீ ஏதும் கவலைப்படாமல் உன் காவியத்தை எழுது.. ம்.. சொல்ல மறந்துவிட்டேன்.. நீ எழுதும் காவியத்துக்கு அமுக்த மால்யதா என்று பெயர் வை. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் பற்றிய காவியமல்லவா” சந்தோஷமாகப் பேசி கையை விடுவித்து அனுப்பித்து வைத்தார்.. அவனும் தலையை ஆட்டி அவர் பாதம் வணங்கி விடைபெற்றான். குதிரையிலும் மெல்ல ஏறினான்.. அவன் சைகை கிடைத்ததும் மற்ற குதிரைகளும் மெல்ல நகர்ந்தன

    இருளில் குதிரைகள் சிறிது தூரம் செல்லும் வரைப் பார்த்துக்கொண்டிருந்தவரிடம் கோயில் பரிசாரகர் இரவு உணவு வகைகளை எடுத்துக் கொண்டு வந்தார். ‘அடடே.. கிருஷ்ணா மட்டும் தனியாக வந்தான் என்றே நினைத்துக்கொண்டு உணவு சமைக்கச் சொன்னேன்.. கூட வந்தவர்கள் ஏதும் உண்ணாமல் சென்று விட்டார்கள்.. எனக்கு சிறிது எடுத்து வைத்து விட்டு, மீதம் உன் இல்லத்துக்கு எடுத்துச் செல்..” என்று உள்ளே செல்லத் திரும்பினார்..

    ”ஐயா! அர்த்த ஜாம பூசைக்கு நேரமாகிவிட்டது. நீங்கள் வந்து உங்கள் பேத்தியை தரிசனம் செய்து விட்டால் நல்லது என்கிறார் பட்டர்.”

    ”இதோ வந்துவிட்டேன்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. எங்கள் கிருஷ்ணதேவன் மிகப் பெரிய அறிவாளி, ஞானி கூட.. நான் அவனுக்கு ஆண்டாளை என் செல்லப் பெண்ணாக நினைத்து கோயில் கட்டியதைச் சொன்னேன்.. எனக்கு அப்போது வயது குறைவு.. அதனால் மகளாக நினைத்தேன்.. செல்லப்பெண் என்றும் அவனிடம் சொன்னேன்.. நான் வளர்ந்தாலும் அவள் வளரமாட்டாள் அல்லவா.. இப்போது வயதாகிப்போன இந்தக் கிழவனுக்கு அவள் மகளல்ல, பேத்தி.. இதைச் சரியாகக் கணித்து விட்டான் கிருஷ்ணா. அதனால்தான் தன் புலமையைக் கூட என் பேத்தி சொல்லிக் கொடுத்தது என்று சொல்லி ஆண்டாளுக்கே பெருமையைக் கொடுத்து விட்டான் அவன்.. ஆஹா..!

    பரிசாரகருக்கு ஏதும் புரியாமல் பார்த்தார்.. அதைத் தெரிந்து கொண்ட திம்மராசு.. ’ஓ.. உனக்கு ஒன்றும் புரியவில்லை இல்லையா.. நான் சொன்னதை மறந்துவிடு.. சரி, நான் என் பேத்தியைப் பார்க்க வேண்டும்.. கிருஷ்ணா அருமையாக ஒரு கவிதை சொன்னான். அதை அவளுக்கே அர்ப்பணம் செய்துவிடுகிறேன்.. இப்போதே சொல்லிவிட்டால் அவளும் சந்தோஷப்படுவாள்.. ஆண்டாள் தாயே.. என் அருமைப் பேத்தியே.. இதோ வருகிறேன்.. உனக்கு ஒரு புதுப்பாடல் சொல்லவேண்டுமே.. திருவேங்கடவனுக்கு முதல் வணக்கமாம்.. ஆமாம்.. திருவேங்கடவன் உனக்குப் பிடித்தவன் ஆயிற்றே.. இல்லாவிட்டால் வானில் செல்லும் மேகங்களையெல்லாம் திருமலை நோக்கி திரும்பப் போகச் சொல்லி காதல் தூதுதான் விடுவாயா?..’

    திம்மராசு ஆனந்தமாக பேசிக்கொண்டு கோயிலுக்குள் செல்லும் அதே வேளையில் கிருஷ்ணதேவன் மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்த தன் குதிரையைத் திடீரென நிறுத்தினான். குதிரை பீறிட்டு திமிறிக்கொண்டே அங்கே நின்றது. மாலை இதே இடத்தில் அத்தனை நேரம் அமைதியாக நின்ற இந்தக் குதிரை இப்போது மட்டும் என்ன அப்படி திமிறல்.. அதன் திமிறல் சப்தம் மற்ற நாயகர்களையும் வீரர்களையும் நிப்பாட்டியது..

    அதே இடம்.. அதோ இந்தப் பாறை மேல்தான் அவள் நின்றாள்.. நாளையும் வருவாள்.. அந்தி வானமும் இருக்கும், அவளும் இருப்பாள் அவனைக் காண்பாள். அவன் அழகான செங்கண்ணை சிறுச் சிறிதே திறந்து தரிசனம் கொடுப்பான்..

    சட்டென ஒரு திட்டம் மனதில் வந்தது.. தானும் திம்மராசு மாமாவைப் போல இந்த ராஜ்ஜிய சுகங்களை உதறிவிட்டு இதே வில்லிபுத்தூரில் குடிலில் இருந்துகொண்டு தினமும் அவளுடன் அந்திவானத்தில் அவனைக் கண்டால்தான் என்ன.. ஆஹா.. நினைக்கும்போதே என்ன ஒரு இதமான சுகம்.. அப்படிச் செய்தால்தான் என்ன.. வேண்டாமே இந்த மன்னர் வேஷமும் நாடுகளும், சண்டைகளும்..

    ”மன்னருக்கு ஏதேனும் கவலை வந்து விட்டதோ.. ஏதேனும் மாமாவிடம் பேச மறந்து விட்டீர்களா.. என்னிடம் சொல்லுங்கள் தேவரே.. நான் சொல்லிவிட்டு வருகிறேன்.. இன்று இரவில் மதுரை எப்படியும் சென்றாகவேண்டும்.. ராணியார் வேறு பிரத்தியேகமாக எங்களுக்குச் சொல்லி அனுப்பி வைத்தார்.. தங்களைத் தவறாது பக்கத்தே இருந்து அழைத்து வருமாறு..”

    நாகம நாயகனின் குரல் காற்றில் சப்தமாக வந்ததும் கிருஷ்ணதேவன் மனதில் இருந்த திட்டமும் மனோதிடமும் மாறியது.. யாருக்கு என்ன கொடுப்பினையே அதுதானே கிடைக்கும்.. திம்மராசுவுக்கு கொடுப்பினை உள்ளது.. நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லைதான்.. அந்திவானம் இருந்த திசை நோக்கினான்.. இருளில் ஏதும் தெரியவில்லை..  கிருஷ்ணா ஒரு பெரிய பெருமூச்சு விட்டவன் தலையசைத்து குதிரையை மதுரை நோக்கி விரட்டினான்..

    (முற்றும்)

    ******1. இது சரித்திர நிகழ்ச்சியாக கருதப்பட்டு  பர்டன் ஸ்டெயின் அவர்களின் ‘விஜயநகரா’ புத்தகத்தில் பக்கம் 78 இல் ஒரு குறிப்பொன்று கொடுக்கப்பட்டுள்ளது.

    ******2. அமுக்தமால்யதா’ வில் ஸ்ரீகிருஷ்ணதேவராயனின் முதல் பாடல் – தெலுங்கு மொழியிலிருந்து, டாக்டர் பிரேமா நந்தகுமாரின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து , தமிழாக்கம் செய்யப்பட்டது.

    Share
  • ஐன்ஸ்டைனின் பிண்ட சக்தி சமன்பாடு (E=mc^2) வளைந்த பிரபஞ்சக் கால வெளியில் பயன்படுமா ?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=saik4xZU8gI

    http://www.youtube.com/watch?v=CC7Sg41Bp-U&feature=player_embedded

    [ஐன்ஸ்டைன் பிண்ட சக்தி சமன்பாடு]

    “எனது ஒப்பியல் நியதியானது மெய்யென்று வெற்றிகரமாய் நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஒரு ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரஜை என்று போற்றும். நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும்! ஜெர்மெனி என்னை யூதன் என்று இகழும்!”“நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம்.  அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஓர் உயர்ந்த சக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”

    “நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம்.  அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஓர் உயர்ந்த சக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “எதிர்கால உலக யுத்தங்களில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது! அதை அகில நாடுகள் உணர வேண்டும்! பிறகு அணு ஆயுத அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராப் பிரச்சனைகள் உலகப் போர்களால் ஒருபோதும் தீர்வாகப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, உலக நாடுகள் வேறு சமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமென நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.”

    பெர்டிராண்டு ரஸ்ஸெல், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மற்றும் சில விஞ்ஞானிகள்.


    ஐன்ஸ்டைன் பளு சக்தி சமன்பாடுக்கு விண்வெளியில் புது சோதனை

    2013 ஜனவரி 11 ஆம் தேதியில் அரிஸோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிக விஞ்ஞானி ஆன்ரை லெபெட் [Andrei Lebed] ஐன்ஸ்டைன் பளு சக்தி சமன்பாட்டில் ஒரு வினா எழுப்பி உலகப் பௌதிக விஞ்ஞானிகளின் சிந்தனையைக் கலக்கியுள்ளார். ஆயினும் அந்த மாறுபட்ட கருத்து செயல் முறையில் மேலும் சோதிக்கப் பட்டு நிரூபிக்கப் பட வேண்டும். உலகப் புகழ் பெற்ற “ஒளித்திலகப் பிண்ட சக்தி சமன்பாடு” [Iconic Equation E=mc^2] விண்வெளியில் பயணம் செய்யும் ஒருவருக்கு ஏற்புடைத்தா வென்று வினா எழுப்புகிறார் ! 1945 ஜூலை மாதம் வெடித்த முதல் அணுகுண்டு சோதனை, பொருளும் சக்தியும் ஒன்றே என்றும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றலாம் என்றும் நிரூபித்துக் காட்டியது. அதுவே ஐன்ஸ்டைனின் சிறப்பு ஒப்பியல் நியதி [Special Relativity Theory] சொல்லியதை மெய்ப்பித்துக் காட்டியது.

    இவ்வாறு பல முறைகளில் ஐன்ஸ்டைன் பளு சக்தி சமன்பாடு நூறாண்டு களாக பூமியில் நிரூபிக்கப் பட்டாலும், சில வெளி வளைவு அரங்குகளில் அந்தச் சமன்பாடு ஒத்துவராது என்று ஆன்ரை லெபெட் புதிதாய் ஓர் கருத்தை வெளியிட்டுள்ளார். லெபெட் சமன்பாட்டில் வரும் “பளுநிறை” [Mass] என்னும் கருத்திலே ஐயுற்று வினா எழுப்புகிறார். பலரும் ஒப்புக் கொண்ட வாய்ப்பாடு [Paradigm] நகர்ந்து செல்லும் முடத்துவ பளு நிறைக்கும் [Moving Inertia Mass], ஈர்ப்புத் தளம் பாதிக்கும் பளு நிறைக்கும் [Gravitational Mass] வேறுபாடு இல்லை என்பது. இப்போது பிரச்சனையே அதில்தான். அதாவது முடத்துவப் பளு நிறையும், ஈர்ப்புப் பளு நிறையும் ஒன்றல்ல. ஒரு கார் இன்னொரு காரை மோதும் போது, கார் பின்புற வளைவுத் தட்டை வளைப்பது நகரும் முடத்துவ நிறை [Moving Mass]. காரில் அடித்தாக்கம் [Impact] உண்டாக்குவது ஈர்ப்பு பளு நிறை [weight]. முதலில் இவற்றைப் பூர்வாங்கப் பௌதிகத்தில் புகுத்தியவர் காலிலியோ. நவீன பௌதிகத்தில் விளக்கியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். லெபெட் கூறுவது : இவற்றின் வேறுபாட்டால் பளு சக்தி சமன்பாடு சற்று சிதைவு அடைகிறது..

    Space Curvature

    பெரும்பான்மையான பௌதிக விஞ்ஞானிகள் முடத்துவப் பளு நிறையும், ஈர்ப்புப் பளு நிறையும் சமமானவை என்றே கருதுகிறார். ஆனால் பொது ஒப்பியல் நியதியில் [General Relativity] சில குவாண்டம் விளைவால் [Quantum Effects] முடத்துவப் பளுநிறை ஈர்ப்புப் பளு நிறைக்குச் சமமாகாமல் போகிறது என்று லெபெட் கூறுகிறார். ஆதலால் பிண்ட சக்தி சமன்பாடு முடத்துவ நிறைக்கு ஏற்றதே தவிர ஈர்ப்புப் பளு நிறைக்கு ஒவ்வாது என்கிறார் லெபெட்.

    ஐன்ஸ்டைன் கூற்றுப்படி ஈர்ப்பியல்பு [Gravitation] என்பது விண்வெளி வளைவின் விளைவு [Result of Curvature in Space]. விண்வெளிக்கு வளைவு உள்ளது. ஓர் அண்டத்தின் நிறை அதில் நகரும் போது, அந்த வளைவு பளு நிறையைப் பாதிக்கிறது என்பது நவீன மாறுதல் கருத்து.

    புரட்சி விஞ்ஞானத் தத்துவங்கள் புதிதாய் எழுந்தன!

    இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலில் பூர்வீகப் பெளதிக விஞ்ஞானக் கருத்துக்கள் பல கீழே தள்ளப் பட்டுப், புரட்சிகரமான புது விஞ்ஞானக் கோட்பாடுகள் தோன்றின. அணுவின் அமைப்பு, அண்ட வெளி காலக் கோட்பாடு, பொருள் சக்தி உடன்பாடு போன்ற பழைய தத்துவங்கள் பல தகர்க்கப் பட்டு, அவை புதுப்பிக்கப் பட்டன. 19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞான நிபுணர்கள் மைக்கேல் ஃபாரடே, ஜேம்ஸ் மாக்ஸ்வெல் ஆகியோர் படைத்த பூர்வீக நியதி, மின்காந்தவியல் [Electromagnetism] ஒன்றைத் தவிர மற்றவை யாவும் மாற்றப் பட்டன. அப்போது உதித்தது தான் ஐன்ஸ்டைன் படைத்த ‘ஒப்பியல் நியதி’ [Theory of Relativity]. அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] பற்றிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது, ஒப்பியல் நியதி! புது பெளதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை! பலருக்குப் புரிய வில்லை! பலர் எதிர்த்து வாதாடினர்!

    Testing mass energy equation in Space

    மானிட சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, இவ்வரிய ‘ஒப்பியல் நியதி ‘. பல நூற்றாண்டுகளாய் பரந்த விஞ்ஞான மாளிகை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ஃபாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில வேதத்தை ஆக்கம் செய்தார். ஐன்ஸ்டைன் முடித்த பிறகு, இருபதாம் நூற்றாண்டிலும் விஞ்ஞான வல்லுநர்களான பாயின்கரே [Henri Poincare], லோரன்ஸ் [Lorentz], மின்கோவஸ்கி [Minkowski] ஆகியோர், ஒப்பியல் நியதியை எடுத்தாண்டு, மேலும் செழிக்கச் செய்தனர். ஆதி அந்தம் அற்ற, அளவிட முடியாத மாயப் பிரபஞ்ச வெளியில் தாவி, ஆகர்ஷ்ணம், மின்காந்தம் இவற்றின் ரகசியங்களை அறிந்து, அணுக்கரு உள்ளே ஊடுருவி அளவற்ற சக்தியைக் கணக்கிட்டு வெளியிட்டது, ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதி!

    இரண்டாம் உலக மகா யுத்தத்தை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும் படி 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதியவர், ஐன்ஸ்டைன்! அக்கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதிய மூவர், ஐரோப்பிய யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கு ஓடி வந்த ஹங்கேரிய விஞ்ஞான மேதைகள்: லியோ ஸிலார்டு [Leo Szilard], எட்வர்ட் டெல்லர் [Edward Teller], யுஜீன் வைக்னர் [Eugene Wignar]. ஹிட்லர் அணுகுண்டைத் தயாரிக்கும் முன்பே, அமெரிக்கா உண்டாக்க வேண்டு மென்று, ஐன்ஸ்டைனைக் கையெழுத்திட வைத்தவர்கள். அணுசக்தி யுகத்தை துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன், அணுகுண்டு பெருக்கத்தையும், சோதனைகளால் எழும் கதிரியக்கப் பொழிவு தரும் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

    Einstein Image-1

    புது விஞ்ஞான மேதை பூமியில் பிறந்தார்!

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1879 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 நாள் ஜெர்மெனியில் உள்ள உல்ம் [Ulm] என்னும் சிறிய நகரில் நடுத்தர யூத குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் ஹெர்மன் ஐன்ஸ்டைனும், தாயார் பாலீன் ஐன்ஸ்டைனும் சாதாரண யூதத் தம்பதிகள். ஆல்பர்ட் பிறந்த ஓராண்டு கழித்து, ஐன்ஸ்டைன் குடும்பம் மியூனிச் பெரு நகருக்கு ஏகிய பின், தந்தையார் மின்ரசாயன [Electro Chemical] வர்த்தகம் ஒன்றைத் துவக்கினார். ஆல்பர்ட் பேசுவதற்குத் தாமதமாகி, பின் தங்கிய மாணவனாக இருந்து, பள்ளிக்கூடத்தில் மந்த புத்தியுள்ள அமைதிச் சிறுவனாகக் காணப் பட்டான். கனவு காணும் கண்களுடன் எந்த விளையாட்டிலும் ஈடுபாடு இல்லாதவனாய் ஒதுங்கி இருந்தான். பெரியவர்களுக்கு எரிச்சல் ஊட்டும் வண்ணம், ஆல்பர்ட் எதையும் ஆமை வேகத்தில்தான் செய்து முடித்தான்! மகன் டைஸ்லெக்ஸியா [Dyslexia] நோயில், எழுதப் பேச முடியாமல் பத்து வயது வரை இருந்ததாகத் தாய் கருதினாள். ‘எந்த உத்தியோகம் அவனுக்கு உகந்தது ‘ என்று தகப்பனார் ஒரு சமயம் கேட்டதற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர், ‘ஆல்பர்ட் எதிலும் உருப்பட்டு சாதிக்கப் போவதில்லை ‘ என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாராம்!

    ஐந்து வயதில் ஒரு சமயம் நோயில் விழுந்து படுக்கையில் கிடந்த போது, தகப்பனார் காந்தத் திசை காட்டும் [Magnetic Compass] பைக்கருவி ஒன்றை ஆல்பர்ட்டுக்குக் கொடுத்தார். சிறுவனுக்கு அது ஒரு விந்தைக் கருவியாகவும், சிந்தனைத் தூண்டுவதாகவும் இருந்தது. தட்டை எவ்விதம் சுற்றித் திருப்பி னாலும், காந்த ஊசி எப்போதும் ஒரே திசையைக் காட்டியது. அவ்வாறு நிகழ்வதற்குச் சூழ்வெளியில் ஏதோ ஒன்று ஊசியை இயக்கி வருவதாக ஆல்பர்ட் நினைத்தான்.

    Mass energy equation-3

    அது என்னவாக இருக்கும் ? சூழ்வெளி எப்போதும் காலி வெற்றிடம் என்றல்லவா கருதப் படுகிறது! அந்த வயதில் சிறுவன் சிந்தனை தூண்டப் பட்டு அண்ட வெளியை நோக்கிச் சென்றது! அதுவே ஆல்பர்ட் பின்னால் அண்ட வெளி, காந்த சக்தி, புவீ ஈர்ப்பு பற்றி ஆழ்ந்து சிந்திக்க அடிகோலி இருக்கலாம்!

    வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் முன்பே, பனிரெண்டு வயதில் ஆல்பர்ட், தானாக யுகிளிடியன் ஜியாமெட்ரிப் [Euclidean Geometry] புத்தகம் ஒன்றை எடுத்து முழுவதையும் படித்து முடித்தார். கணிதத் துறையின் ஒழுக்கப்பாடும் [Orderliness], தேற்றங்களின் [Theorems] சீரான வாதமுறையும் [Logics] ஐன்ஸ்டைன் சிந்தையைப் பற்றி என்றும் அழியாத படி முத்திரையாய்ப் பதிந்தன! அவரது 15 ஆவது வயதில் தந்தையாரின் வர்த்தகம் பூராவும் நொடித்துப் போய், குடும்பம் இத்தாலிக்குச் சென்று, மிலான் நகரில் குடியேறியது. ஐன்ஸ்டைன் சுவிட்ஜர்லாந்துக்குப் போய் உயர்நிலைப் பள்ளியை முடித்து, அங்கே ஜூரிச் நகர் தேசிய பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தார். 1905 இல் ஐன்ஸ்டைன் ஜூரிச் பல்கலைக் கழகத்தில் பெளதிக விஞ்ஞானத்தில் Ph.D. பட்டதாரி ஆனார்.

    Relativity and gravity

    தனது 26 ஆம் வயதில், ஐன்ஸ்டைன் மூன்று முக்கிய விஞ்ஞானத் தத்துவங் களை முதன் முதல் வெளியீடு செய்து, தன் திறத்தை உலகுக்குக் காட்டினார். முதல் வெளியீடு: திரவத்தில் அங்கு மிங்கும் பரவிடும் திரள்களின் [Particles] இயக்கத்தைப் பற்றிய ‘பிரெளனியன் நகர்ச்சி ‘ [Brownian Motion]. இரண்டாவது: ஒளியின் இயல்பாடு பற்றி விளக்கும் புரட்சிகரமான ஒரு புதிய சித்தாந்தம், ‘ஒளிமின் விளைவு ‘ [Photoelectric Effect] என்று சொல்லப் படுவது. சில வேளைகளில் விஞ்ஞானத்தில் ஒளியைத் திரளாய்க் கருதலாம். திரள்கள் ஒளியை ஏந்திச் செல்லும் என்று ஒரு புது விளக்கத்தைக் கூறினார். அவற்றுக்கு ‘ஒளித்திரள்: ‘ [Photon] என்னும் புதிய பெயரையும் அளித்தார். மூன்றாம் வெளியீடுதான் உலகப் புகழ் பெற்ற, ‘சிறப்பு ஒப்பியல் நியதி ‘. 1921 ஆம் ஆண்டு பெளதிக விஞ்ஞானத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நோபில் பரிசு பெற்றார்.

    ஐன்ஸ்டைன் இசைக்கலையில் ஈடுபாடு கொண்டு வயலின் வாசிப்பதில் கைதேர்ந்தார். விஞ்ஞானத்துக்கு அடுத்தபடி இசை ஒன்றுதான் அவரது மனதுக்கு இனிமை அளித்தது. புதிய துணிவுடன் வாழ்க்கைக் கடலில் மீண்டும் மீண்டும் நீந்தி முன்னேற, ஐன்ஸ்டைனுக்கு ஒளி காட்டிய இயல்புகள் இவைதான்: அருள்தன்மை, அழகுச்சுவை, மெய்ப்பாடு தேடல். ஐன்ஸ்டைன் பின்பற்றும் மதம், கடவுள் நம்பிக் கையைப் பற்றிக் கேட்ட போது, அவர் கூறியது: ‘நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைத் தாழ்மையுடன் மதிப்பதுதான், என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத, பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உருவாக்கிய, ஓரு மாபெரும் ஒளிமயமான மூலசக்தி, எங்கும் பரவி யிருப்பதை ஆழ்ந்து உணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது ‘.

    ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, யூதரான ஐன்ஸ்டைன் யுத்த ஆரம்பத்துக்கு முன்பே ஜெர்மெனியை விட்டு அமெரிக்காவுக்கு விரைந்தார். 1933 ஆம் ஆண்டு நியூ ஜெர்சி, பிரின்ஸ்டனில் உள்ள உயர் விஞ்ஞானக் கல்விக் கூடத்தில் [Institute of Advanced Study] பேராசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டு, விஞ்ஞான ஆராய்ச்சியில் மூழ்கினார்.

    Mass energy equation

    தோற்றம் பல, சக்தி ஒன்றே! சக்தியே முதற் பொருள்!

    ‘சக்தி எல்லை அற்றது! முடிவற்றது! சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழி! சக்தி கூட்டுவது, பிணைப்பது, கலப்பது, வீசுவது, சுழற்றுவது, சிதறடிப்பது, ஓட்டுவது, நிறுத்துவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது, குளிர் தருவது, அனல் தருவது, கொதிப்புத் தருவது, ஆற்றுவது, எழுச்சி தருவது. சக்தி முதற் பொருள்! வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை! தோற்றம் பல சக்தி ஒன்றே! ‘ என்று சக்தியைப் பற்றி மகாகவி பாரதியார் தன் வசன கவிதையில் பாடி யிருக்கிறார்.

    அகில விஞ்ஞான மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டிலேயே, பிண்டத்தைச் [Matter] சக்தியாக மாற்றலாம் என்று முதன் முதல் கணித மூலமாகவே ஒரு மாபெரும் மெய்ப்பாட்டைக் கணித்துக் காட்டினார்! அதுதான் ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாடு ‘ [Mass Energy Equation]. 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் நியூ மெக்ஸிகோ, லாஸ் அலமாஸில் அணுகுண்டு விஞ்ஞானிகள் அதைச் செயற்கை முறையில் செய்து காட்டி நிரூபித்தார்கள்! ஆனால் அண்ட வெளியில், ஆதவனும், எண்ணற்ற சுயஒளி விண்மீன்களும் அந்த சமன்பாட்டைக் கோடான கோடி ஆண்டுகளாய் மெய்ப்பித்து வருகின்றன!

    அணுகுண்டு 1945 இல் வெடித்த போது, அணுசக்தியைப் பற்றி ஐன்ஸ்டைன், ‘கற்கால மனிதன் முதலில் தீயைக் கண்டு பிடித்த பிறகு, பூமியிலே படைக்கப் பட்ட ஒரு புரட்சிகரமான பூத சக்தி ‘ என்று கூறினார். பொருளும் சக்தியும் ஒன்று. பொருளிலிருந்து சக்தியையும், சக்தியினால் பொருளையும் ஆக்கலாம் என்பதை, அவர் தன் 26 ஆம் வயதில் ஆக்கிய ‘சிறப்பு ஒப்பியல் நியதி ‘ [Special Theory of Relativity] கூறுகிறது.

    Fission energy

    பாரிஸில் ஆராய்ச்சி செய்து வந்த, நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானத் தம்பதிகள், மேரி கியூரி [Marie Curie] (1867-1934), பியரி கியூரி [Pierre Curie] (1959-1906) கண்டுபிடித்த ரேடியம் [Radium], பொலோனியம் [Polonium] உலோகங்கள் இரண்டும் வீரிய கதிரியக்கம் [Radioactivity] உடையவை. அக் கன மூலகங்களின் [Heavy Elements] அணுக்கரு [Nucleus] இயற்கையில், தானாகவே பிளவுபட்டுச் சிதைந்து [Spontaneous Disintegration], அவற்றி லிருந்து வீரியமும் வெப்பமும் மிக்க காமாக் கதிர்கள் [Gamma Rays], தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கின் றன. ஐன்ஸ்டைன் பளு சக்தி சமன்பாடு மூலம் ரேடியம் பொலோனியம் அணுக்கரு விலிருந்து வெளியாகும் வெப்ப சக்தியைத் துள்ளியமாகக் கணக்கிட்டு விடலாம்.

    யுரேனியம் [Uranium235], புளுட்டோனியம் [Plutonium239] போன்ற கனமான உலோகங்களின் [Heavy Elements] அணுக்கருவை நியூட்ரான் கணைகள் தாக்கிப் பிளக்கும் போது எழுவது, ‘பிளவு சக்தி ‘. ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் போன்ற எளிய மூலகங்களின் [Light Elements] அணுக்கருவை உஷ்ணத்தில் பிழம்பாக்கிப் பிணைத்தால், வெளிவருவது, ‘பிணைவு சக்தி ‘. அணுக்கருப் பிளவு இயக்கத்தில் [Nuclear Fission] கனப் பிண்டம் [Matter] உடைக்கப் பட்டு, முடிவில் சிறிய அணுக்கருப் பண்டங்கள் [Fission Products] விளைகின்றன. அணுக்கரு பிணைவு இயக்கத்தில் [Nuclear Fusion] எளிய பிண்டங்கள் இணைந்து முடிவில் பெரிய அணுக்கருப் பண்டம் உருவாகிறது. இரண்டு அணுக்கரு இயக்கச் சமன்பாடுகளிலும் இறுதி மொத்தத்தில் ‘பளுஇழப்பு ‘ [Mass Defect] நேர்ந்து, அதற்குச் சமமான சக்தி வெளியாகிறது. இதுதான் ‘இணைப்புச் சக்தி ‘ [Binding Energy] என்று அணுக்கரு பெளதிகத்தில் கூறப் படுகிறது. பளுஇழப்பு நிறையை ஒளி வேகத்தோடு இரண்டு முறை அடுத்து அடுத்துப் பெருக்கினால் சக்தியின் அளவைக் கணக்கிட்டு விடலாம். இந்தச் சமன்பாட்டின்படி ஒரு பவுண்டு யுரேனியம்235 அணுக்கரு பிளவு பட்டால், சுமார் 11,000 MW வெப்ப சக்தி ஒரு மணி நேரம் வெளியாகும்!

    மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம் 1 :-

    யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>

    –>பேரியம்139* + கிரிப்டான்95* (தேய்ந்து) –>

    –>மாலிப்டினம்95* + லாந்தனம்139* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி

    மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம் 2 :-

    யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>

    –>ருபீடியம்93* + சீஸியம்140* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி

    [(*) குறி கதிரியக்க மூலகத்தைக் காட்டுகிறது]

    Mass energy equation-1

    ஒப்பியல் நியதி, ஒப்பற்ற விஞ்ஞான வேதம்!

    ‘எனது ஒப்பியல் நியதி மெய்யென்று வெற்றிகரமாய் நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரஜை என்று போற்றும். நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மன் என்று ஏசும்! ஜெர்மெனி என்னை யூதன் என்று இகழும்! ‘ என்று ஐன்ஸ்டைன் தன் நியதியை வெளியிட்ட போது கூறினார். பிரிட்டிஷ் வேதாந்த மேதை, பெர்ட்ராண்டு ரஸ்ஸல் [Bertrand Russell] ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி, ‘தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை ‘, என்று போற்றுகிறார்.

    ஒப்பியல் நியதி பொது, சிறப்பு என்று இரண்டு பிரிவுகளில் எழுதப் பட்டுள்ளது. சிறப்பு நியதியின் வாசகங்களில் ஒன்று: அகில வெளியில் எந்த ‘முடத்துவக் கூண்டு நோக்கியிலும் ‘ [Inertial Frame of Reference] ஒளியின் வேகம் நிலையானது [Constancy of the Velocity of Light]. ஓர் இயங்கும் அண்டத்தின் [Moving Body] வளர்வேகம், சீர்வேகம், அல்லது தளர்வேகம் [Acceleration, Uniform motion, or Deceleration] எதுவும், அண்டம் வெளியாக்கும் ஒளியின் வேகத்தை பாதிக்காது! ஒளியை தூரத்தில் இருந்து எதிர்கொள்ளும் வேறு ஓர் அண்டத்தாலும் ஒளிவேகம் பாதிக்கப் படாது! உதாரணமாக 60mph வேகத்தில் ஓடும் ரயில் வண்டியிலிருந்து, ஒரு பந்தை 5mph வேகத்தில் வீசி எறிந்தால், அதைத் தரையில் நிற்கும் ஒரு மனிதன் கையில் பற்றும் போது, பந்து 55mph ஒப்பு வேகத்தில் [50+5=55mph Relative Velocity] அவனைத் தாக்குகிறது! ஆனால் வண்டி எஞ்சின் மின்விளக்கிலிருந்து 186,000mps வேகத்தில் கிளம்பும் ஒளி தரை மனிதன் கண்களில் படும் போது, ஒளியின் வேகம் அதே 186,000mps. ரயிலின் வேகம் பந்தின் ஒப்பு வேகத்தை மாற்றியது போல், ஒளியின் வேகத்தைப் பாதிப்பது கிடையாது. அதாவது ஒளிவேகம் ‘தனித்துவம் ‘ அல்லது ‘முதற்துவம் ‘ [Absolute] உடையது! ஓளி வீசும் ஓர் அண்டத்தின் வேகம், அதிலிருந்து வெளியாகும் ஒளியின் வேகத்தை மாற்ற முடியாது! இதைப் புரிந்து கொள்ளுவது சற்று கடினமே!

    அடுத்த வாசகம்: அண்ட வெளியில் ஒளிவேகத்தை மிஞ்சிய வேகம் வேறு எதுவும் கிடையாது! அதாவது வெவ்வேறு கூண்டு நோக்கிகளில் நிற்கும் நபர்களுக்கு இடையே உள்ள ஒப்புவேகம், ஒளிவேகத்தை மிஞ்ச முடியாது!

    Einstein Image -3

    அகில வெளியில் ஒளி பயணம் செய்ய நேரம் எடுக்கிறது. ஒளியின் வேகம் வினாடிக்கு 186,000 மைல். ‘ஓளியாண்டு ‘ [Light year] என்பது தூர அளவு. அதாவது ஒளிவேகத்தில் ஓராண்டு காலம் செல்லும் தூரம். கோடான கோடி விண்மீன்களின் தூரத்தை ஒளியாண்டு அளவியலில் தான் நிர்ணயம் செய்கிறார்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடம் ஆகிறது. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் 91 மில்லியன் மைல் [186,000 x 8 x 60]. ஆகவே ஓர் அண்டத்தி லிருந்து எழும் ஒளி, பூமியில் நிற்கும் ஒரு நபரின் கண்களைத் தொடும் போது, அது பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான ஒரு நிகழ்ச்சி!

    விரிந்து கொண்டே போகும் விண்வெளி வளைவு!

    மகாசக்தியைப் பற்றிப் பாரதியார் எழுதும் போது, ‘விண்டுரைக்க அறிய அரியதாய், விரிந்த வானவெளி யென நின்றனை! அண்ட கோடிகள் வானில் அமைத்தனை! அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை! மண்டலத்தை அணுவணு வாக்கினால், வருவது எத்தனை, அத்தனை யோசனை தூரம் அவற்றிடை வைத்தனை! பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை! பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை! வாயுவாகி வெளியை அளந்தனை! விண்ணை அளக்கும் விரிவே சக்தி! ‘

    பொது ஒப்பியல் நியதி பிரபஞ்சத்தின் தோற்றம் எத்தகையது என்று ஆய்வு செய்கிறது. விண்வெளியின் வடிவம் சதுரப் பட்டகமா [Cubical] ? நீண்ட கோளமா ? கோளக் கூண்டா ? அல்லது எல்லையற்ற தொடர்ச்சியா [Unbounded Infinity] ? அகில வெளியின் எல்லையைக் கணிக்க இருப்பவை இரண்டு கருவிகள்: பல மில்லியன் மைல் தொலைவிலிருந்து பூமியின் மீது, சுடரொளி வீசும் கோடான கோடிப் ‘பால் மயப் பரிதிகள் ‘ [Milky Way Galaxies] எழுப்பும் ஒளி, மற்றொன்று அவை அனுப்பும் வானலைகள் [Radio Waves]. ஒளி எல்லாத் திக்குகளிலிருந்தும் பூமியைத் தொடுவதைப் பார்த்தால், ஒன்று அது ஒழுங்கமைப்பு [Symmetrical Shape] உடையது, அல்லது முடிவற்ற தொடர்ச்சி கொண்டது போல் நமக்குத் தோன்றலாம். உண்மையில் அவை இரண்டும் அல்ல! ஐன்ஸ்டைன் கூற்றுப்படி பிரபஞ்சத்தை எந்த ‘முப்புற வடிவியல் ‘ [Three Dimensional Geometry] அமைப்பாலும் உருவகிக்க முடியாது. ஏனெனில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யாது தகவல் ஏதும் அனுப்பாததால், அண்ட வெளியின் எல்லை வடிவு நமக்குத் தெரிவதில்லை!

    mass energy eqn

    ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி கூறுகிறது: ஓர் அண்டத்தின் பளு [Mass] விண்வெளி மீது, நடு நோக்கிய [Towards the Centre] வளைவை [Curvature of Space] உண்டு பண்ணுகிறது. தனியாய் வீழும் [Free Fall] ஓர் அண்டம் வெளி வளைவு அருகே நெருங்கும் போது ‘நீள்வட்ட வீதியைப் ‘ [Orbits] பின்பற்றுச் சுற்றுகிறது. அண்ட கோளங்களின் ஈர்ப்பியல்புக்கு [Gravitation], ஐன்ஸ்டைன் வைத்த இன்னுமொரு பெயர் ‘வெளி வளைவு ‘. ஐஸக் நியூட்டன் ஈர்ப்பியல்பைத் தன் பூர்வீக யந்திரவியலில் [Classical Mechanics] ஓர் உந்தல் [Force] என்று விளக்கினார்.

    விண்வெளியை ஒரு மாளிகை வடிவாகவோ, கோள உருவாகவோ முப்புற அங்களவுகளால் [Three Dimensional] கற்பனை செய்ய இயலாது. ஐன்ஸ்டைன் கூற்றுப்படி அது நாற்புற அங்களவு [Four Dimensional] கொண்டது. அண்ட வெளியின் நான்காம் அங்களவு [Fourth Dimension], காலம் [Time]. கோடான கோடி அண்ட கோளங்களையும், ஒளிமயப் பரிதிகளையும் [Galaxies] பிரம்மாண் டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ளதால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [Curved & Distorted] விரிந்து கொண்டே போகிறது!

    அண்ட வெளியின் ஈர்ப்பு விசையால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே நேர் கோட்டில் செல்லாது வளைந்தே போகிறது. தொலைவிலிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரியனை நோக்கி வளைகிறது. ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதியின்படி, சுமார் 25,000 மைல் சுற்றளவுள்ள பூமியில் ஓரிடத்திலிருந்து கிளம்பும் ஒளி, புவி ஈர்ப்பால் வளைக்கப் பட்டு, முழு வட்டமிட்டு புறப்பட்ட இடத்தையே திரும்பவும் வந்து சேர்கிறது.

    Nuclear fission

    எதிர்கால அணு ஆயுதப் போரை இனியாவது உலக நாடுகள் நிறுத்துமா ?

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, ஹிரோஷிமாவில் 1945 ஆகஸ்டு 6 ஆம் நாள் அமெரிக்கா அணுகுண்டு [A-Bomb] போட்டு 130,000 பேர் அழிக்கப் பட்ட தினத்தைத் தன் ‘இருண்ட நாள் ‘ [Darkest Day] என்று குற்ற முள்ள நெஞ்சுடன் வருந்தினார், ஐன்ஸ்டைன். 1949 செப்டம்பர் 3 ஆம் தேதி ரஷ்யா தனது முதல் அணுகுண்டை வெடித்து, அணு ஆயுதப் பந்தயத்தை ஆரம்பித்து வைத்தது! 1951 ஜனவரி 31 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஹைடிரன் குண்டு [H-Bomb] தயாரிக்கப் பச்சைக் கொடி காட்டியதும், ஐன்ஸ்டைன் கூறினார்: ‘ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனையில் வெற்றி பெற்றால், பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், அகில வெளியில் கதிரியக்க விஷப் பொழிவுக்கும், விஞ்ஞான யந்திரம் பாதையை விரித்து விட்டது என்பது அர்த்தம்! ‘. 1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதங்களைத் தயாரித்து வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. அடுத்து ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ஆசியாவில் சைனா, இந்தியா, பாகிஸ்தான் அணு ஆயுத ஒலிம்பிக் பந்தத்தை ஏந்திக் கொண்டு, பந்தயத்தைத் தொடர்கின்றன!

    அவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் தனது 76 ஆவது வயதில் நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டனில் காலமானார். ஆய்வுக் கூடமான அவரது அபார மூளையைத் திருடி, நரம்பு மருத்துவ நிபுணர்கள் 45 ஆண்டுகளாக அமெரிக்காவிலும், கனடாவிலும் ஆராய்ந்து வருகிறார்கள்! இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஏப்ரல் 1955 இல் பெர்டிரண்டு ரஸ்ஸல் [Bertrand Russell] தயாரித்த ‘அணு ஆயுதப் போர்த் தடுப்பு ‘ விண்ணப்பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானிகளோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! ‘எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது! அதை அகில நாடுகள் உணர வேண்டும்! பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப் போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் ‘.

    2012 ஆம் ஆண்டில் புதிதாக மகுடி ஊதிக் கூடையைத் திறந்து படமெடுத்தாடும் அணு ஆயுதப் பாம்புகளை மறுபடியும் வெளியே கொண்டுவரும், உலக நாடுகளின் காதுகளில் ஐன்ஸ்டைன், ரஸ்ஸெல் போன்ற மேதைகள், முன்பு முழக்கிய தடுப்பு சங்கநாதம் கேட்குமா ?

    *******************

    தகவல் :

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Popular Science, Astronomy Magazine.

    1. Albert Einstein By: Frederic Golden, Time Magazine -Person of the Century [Dec 31, 1999]
    2. A Brief History of Relativity By: Stephan Hawking, Time Magazine
    3. Einstein’s Unfinished Symphony By: Madeleine Nash, Time Magazine
    4. The Age of Einstein By: Roger Rosenblatt, Time Magazine
    5. 100 Years of Einstein By: Gregory Mone, Popular Science [June 2005]
    6. Gravity Probe Launched By: Chad Cooper, Staff Writer, NASA Kennedy Space Center (Apr 2, 2004]
    7. http://www.thinnai.com/science/sc0317021.html [Author’s Article on Einstein]
    8. Einstein Probe Heads into Space BBC News.
    9. Einstein Mass Energy Equation Marks 100 Years By: Roland Pease BBC Science Writer.
    10 All Systems Go on Gravity Probe B Source NASA [April 30, 2004]
    11 Testing Einstein’s Universe: Gravity Probe B [Feb 2005]
    12 The Latest Gravity Probe B Information [http://einstein.stanford.edu/] Report on: (Jan 31, 2006).

    13. http://www.sciencedaily.com/releases/2013/01/130108162227.htm [Testing Einstein’s Famous Equation E=mc2 in Outer Space] [January 8, 2013]

    14 http://en.wikipedia.org/wiki/Mass%E2%80%93energy_equivalence [Mass–Energy Equivalence] [January 10, 2013]

    15. http://plato.stanford.edu/entries/equivME/ [The Equivalence of Mass and Energy] [February 6, 2012]

    16. http://sciencefocus.com/feature/physics/what-einstein-got-wrong [What Einstein got wrong]

    ++++++++++

    S. Jayabarathan (jayabarat@tntt21.com) January 13, 2013

    YouTube – Videos from this email
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 54

    மலர் சபா

    புகாரக் காண்டம் – 07. கானல் வரி

    முகம் இல் வரி
    குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகனது காதல் மிகுதியைக் குறிப்பினால் அறிந்து கூறுதல்

    (8)

    கடல்துறையில் மேய்ந்திருக்கும்
    வலம்புரிச் சங்குகள்
    தோய்ந்ததனால் மணலில் ஏற்படுகின்றன.
    வடுக்களும் சிறு குழிகளும்.

    அவ்வடுக்கள் மறையும்படி
    பூந்தாதுகள் உதிர்த்து நிற்கின்றன
    அழகிய புன்னைமரத்தில்
    பூத்துநின்ற செழுமையான பூக்கள்.

    அத்தகையதான கானலிடத்தே நிற்கின்ற
    தலைவியின் முழுமதி போன்று
    ஒளிரும் முகமதனில் இருக்கும்
    கயல் போன்ற கண்கள் செய்த
    வடுக்களைப் போக்க
    காம நோயினைப் போக்க
    எந்த மருந்தாலும் இயலாது.
    மருந்தால் போக்க முடியாத நோய்தனை
    தேமல் படர்ந்து நிற்கும்
    அவள் மென்மையான மார்புகள் மட்டுமே
    போக்கி நிற்கும் போலும்!

    (9)

    கானல் வரி
    கழற்று எதிர்மறை

    முள்பொருந்திய மீன்வற்றல்களைக்
    காயப்போட்டிருக்கும் இடத்தில்
    கவரவரும் பறவைகளை விரட்டவென்று
    காவல் நிற்கிறாள் கன்னியொருத்தி.
    வண்டுகள் சூழ்ந்திருக்கும்
    புலிநகக் கொன்றைப்பூங்கொத்தைக்
    கையில் ஏந்தியிருந்தாள்.
    அந்த அணங்கு. (வருத்தும் தெய்வம்)

    மணம்கமழ் பூக்ககளையுடைய அக்கானலிடத்தே
    தன்னைப் பார்ப்பவரை வருத்தும் தெய்வம்
    வாழ்ந்து கொண்டிருப்பதை நான் அறியேனே!
    அறிந்திருந்தால் அங்கு போயிருக்க மாட்டேனே!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram18.html
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html

    Share
  • அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர்

    (1878-1968)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada


    நோபெல் பரிசு அளிப்பில் மறக்கப் பட்ட அணுவியல் மேதை!

    இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு [Modern Physical Science] அடிப்படையாகி, அதை விரிவாக்கக் காரணமான முக்கிய மேதைகளில் மாதர்கள் மூவர்! ரேடியம் கண்டு பிடித்து, ‘இயற்கைக் கதிரியக்கத்தை’ [Radioactivity] விளக்கிய மேரி கியூரியே முதல்வர்! தாயைப் பின்பற்றிச் ‘செயற்கைக் கதிரியக்கத்தை’ உண்டாக்கி மூலக மாற்றம் [Artificial Transmutation] செய்த அவரது மூத்த புதல்வி ஐரீன் ஜோலியட் கியூரியே இரண்டாமவர்! கியூரி பரம்பரையைப் பின் தொடர்ந்து, யுரேனிய உலோகத்தை நியூட்ரான் கணைகளால் தாக்கி, ‘அணுக்கருப் பிளவு ‘ [Nuclear Fission] நிகழ்ந்துள்ளது என்று 1939 இல் முதன் முதல் பறைசாற்றிய ஆஸ்டிரிய மாது, லிஸ் மைட்னர் [Lise Meitner] மூன்றாமவர்! அணுப்பிளவு அறிவிப்பு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் காட்டுத் தீபோல் பரவி, 1942 இல் என்ரிகோ ஃபெர்மி முதல் ஆராய்ச்சி அணு உலையைச் சிகாகோவில் இயக்கி, முதல் அணு ஆயுதம் 1945 ஆகஸ்டு மாதம் ஹிரோஷிமாவில் போடப் பட்டு உலகில் அணுயுகப் புரட்சி உதயமானது! அதுமுதல் அகிலமெங்கும் அணு ஆயுதங்களும், அணுசக்தி நிலையங்களும் பெருகி, உலக வரலாறே முற்றிலும் மாறிப் போய்விட்டது!

    இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த அந்த மகத்தான ஆக்கத்திற்கு, 1944 இல் அணுவைப் பிளந்த குழுவினரில் மூன்றாவது குழுவைச் சேர்ந்த, ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆட்டோ ஹான், ஃபிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் [Otto Hahn, Fritz Strassmann] இருவர் மட்டுமே நோபெல் பரிசு பெற்றார்கள்! ஆனால் ஆட்டோ ஹானுடன் இயற்கை, செயற்கைக் கதிரியக்க இயக்கங்களில் துணையாளியாகப் பல சோதனைகள் செய்து, புது மூலகத்தைக் கண்டு பிடித்து, அணுக்கரு இயக்கங்கள் செய்து, அவற்றின் விளைவுகளை ஆழமாகப் புரிந்து, ‘அணுப்பிளவு ‘ என்று பெயரிட்ட லிஸ் மைட்னரையும் இணைத்துப் பரிசு அளிக்க, நோபெல் பரிசுக் குழுவினர் தவறி விட்டனர்!

    லிஸ் மைட்னர் முப்பது ஆண்டுகளாக ஆட்டோ ஹானுடன் கூட்டாளியாக ஆராய்ச்சிகள் செய்து பெர்லின் கெய்ஸர் வில்ஹெம் ரசாயன ஆய்வுச் சாலையில் பணி ஆற்றியவர்! அந்த ஆண்டுகளில் ரேடியம் கண்டு பிடித்த மேரி கியூரியைப் பின்தொடர்ந்து 1917 இல் பிச்பிளண்டி [Pitchblende] தாதுவில் புரொடாக்டினியம் Protactinium] என்னும் புது உலோகத்தைக் கண்டு பிடித்தவர்! அடுத்து ஐரீன், பிரடெரிக் ஜோலியட் கியூரி தம்பதிகள் படைத்த செயற்கை மூலக மாற்ற முறைகளைக் [Artificial Transmutation of Elements] கையாண்டு தாங்களும் புதுப்புது மூலக ஆக்கத்தில் முனைந்து, அணுப்பிளவு இயக்கங்களை ஆட்டோ ஹானுடன் சோதித்தவர்! பெளதிகத் திறமை மிக்க லிஸ் மைட்னர், ரசாயனச் சிறப்புநர் ஆட்டோ ஹான், ரசாயனப் பிரிப்பு முறைகளில் சாமர்த்தியசாலி ஸ்டிராஸ்மன், ஆகியோரின் கூட்டு ஆராய்ச்சியே முடிவில் அணுப்பிளவு இயக்கத்தை உறுதியாக விஞ்ஞான உலகில் நிலை நாட்டியது!

    லிஸ் மைட்னர் இருபதாம் நூற்றாண்டு அணுவியல் விஞ்ஞானிகளின் நடுவே மிளிரும் ஒரு வைரம்! மாதருள் ஒரு மாணிக்கம்! அக்காலத்தில் நோபெல் பரிசு பெற்ற ஏனர்ஸ்டு ரூதர்ஃபோர்ட்டு, நீல்ஸ் போஹ்ர், மேரி கியூரி, ஐரீன் கியூரி, பெக்குவரல், ஜேம்ஸ் சாட்விக், என்ரிகோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், ஆட்டோ ஹான் ஆகியோரின் நீண்டகால நட்பையும் மதிப்பையும் பெற்ற பெளதிக விஞ்ஞான மேதை, லிஸ் மைட்னர்!

    விஞ்ஞான நிபுணர் லிஸ் மைட்னரின் வாழ்க்கை வரலாறு

    1878 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் லிஸ் மைட்னர் ஆஸ்டிரிய நாட்டு வியன்னாவில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். செல்வந்தரான அவரது தந்தையார் வியன்னாவில் ஒரு பிரபல வழக்கறிஞர். சிறு வயதிலேயே லிஸாவிடம் தென்பட்ட நாணம், அவர் வாலிபப் பெண்ணாகிப் பிறகு வயது முதிர்ந்த காலங்களிலும் காணப் பட்டது! லிஸ் மைட்னர் சிறுமியாக இருந்த அந்தக் காலத்தில், பெண்டிர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பது கூட ஆதரிக்கப் படவில்லை! பெண்கள் மேற்படிப்புக்குப் போவது அவர் சமூகத்தில் அறவே வரவேற்கப் படவில்லை! ஆனால் அவரது பெற்றோர்கள் லிஸ் மைட்னர் கல்விக்கு ஊக்கம் அளித்து தனியாகப் பயிற்சியாளர் [Tutor] மூலம் புகட்டி, மேற்படிப்புக்கும் மிக்க ஆதரவாக இருந்தனர்! மங்கை லிஸ் தனக்குக் கணிதமும், பெளதிகமும் எளிமையாக இருப்பதை அறிந்து கொண்டு, அவற்றில் மனம் ஊன்றிப் படித்துச் சிறப்பாகத் தேர்ச்சி அடைந்தார்.

    வியன்னா பல்கலைக் கூடத்தில், [University of Vienna] நுழைவுத் தேர்வுகளில் உயர்ந்த மதிப்பு எண்கள் வாங்கி 1901 இல் தன் மேற்படிப்பைத் துவங்கினார். அங்கே கணிதம், பெளதிகம் ஆகிய இரண்டு பகுதிகளில் சிறப்பாகக் கருத்தூன்றித் தொடர்ந்தார். அவருக்குப் பேராசிரியராக விஞ்ஞானம் புகட்டியவர்கள்: புகழ் பெற்ற லுட்விக் போல்ட்ஸ்மன் [Ludwig Boltzman (1844-1906)], மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)], ஃபிரான்ஸ் எக்ஸனர் [Franz Exner]. வெப்ப இயக்கவியல், பூர்வீக நிலைத்துவ யந்திரவியல், நகர்ச்சி நியதி [Thermodynamics, Classical Statistical Mechanics, Kinetic Theory] ஆகியவற்றில் கைதேர்ந்தவர், போல்ட்ஸ்மன். வெப்ப இயக்கவியல் படித்தோருக்குப் பொது வாயு இலக்கம் ‘R ‘, [Universal Gas Constant, ‘R ‘] அல்லது போல்ட்ஸ்மன் நிலையிலக்கம் [Boltzman Constant k] என்றால் என்ன வென்று அறிவர்.

    1906 ஆம் ஆண்டில் லிஸ் மைட்னர், ‘ஓரினத் தரமற்ற திடவங்களில் வெப்ப நுழைவு ‘ [Heat Conduction in Non-homogenous Solids] என்னும் கோட்பாடை எழுதி வியன்னா பல்கலைக் கழகத்தில் Ph.D. பட்டம் பெற்றார். பெளதிகப் பட்டம் பெற்ற மாதர் பணி செய்ய வியன்னாவில் எவ்வித விஞ்ஞான வேலை வாய்ப்பும் இல்லாததால், லிஸ் 1907 இல் பெர்லின் நகருக்குச் செல்ல வேண்டிய தாயிற்று! பெர்லினில் புகழ் பெற்ற மாக்ஸ் பிளாங்க் [Max Planck] ஆற்றிய விஞ்ஞானச் சொற்பொழிவுகளில் பங்கெடுத்த பின், டாக்டர் ஆட்டோ ஹான் [Otto Hahn] ஆய்வுக்கூடத்தில் சேர்ந்து, கதிரியக்க ஆராய்ச்சிகளைச் செய்தார்.

    ஆட்டோ ஹானுடன் முப்பது ஆண்டுகள் அணுக்கரு ஆராய்ச்சி

    1901 இல் ரசாயனத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி, ஆட்டோ ஹான் ஆங்கிலம் கற்க 1904 இல் இங்கிலாந்து லண்டனுக்குச் சென்றார். அங்கே நோபெல் பரிசு பெற்ற ஸர் வில்லியம் ராம்ஸேயுடன் [Sir William Ramsay (1852-1916)] சேர்ந்து பல்கலைக் கழகக் கல்லூரியில் கதிரியக்க ஆய்வுகள் செய்தார். ராம்ஸே சுத்தமாக்கக் கொடுத்த கரடு முரடான ரேடியம் கூட்டுத்திரளில் [Radium Compound] ஆட்டோ ஹான் ஓர் புதிய கதிரியக்கப் பொருளைக் கண்டு பிடித்தார்! அது கதிர்த்தோரியம் [Radiothorium] என்று அழைக்கப் பட்டது! அடுத்து ராம்ஸே சிபாரிசின் பேரில் ஆட்டோ ஹானுக்குப் பெர்லின் பல்கலைக் கழகத்தில் [University of Berlin] ஆசிரியர் பதவி கிடைத்தது. பதவியை ஏற்றுக் கொள்வதற்கு முன், அப்போது கனடா மான்டிராயாலில் [Montreal, Canada] ஆராய்ச்சி செய்து வந்த, புகழ் பெற்ற அணுவியல் விஞ்ஞான மேதை ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுடன் [Ernest Rutherford] பணி புரிய விரும்பினார்! தன் கதிரியக்க ஞானத்தை விரிவு படுத்தவும், அணுவின் உள்ளமைப்பைப் பற்றி அறியவும் விழைந்து அங்கே பல மாதங்கள் தங்கிப் பயின்றார்!

    1906 இல் கனடாவிலிருந்து திரும்பி ஜெர்மனிக்கு ஆட்டோ ஹான் வந்த போதுதான், அவரது ஆய்வுக் கூடத்தில் பணி புரிய உதவியாகச் சேர்ந்தார், லிஸ் மைட்னர்! அடுத்து 1911 இல் ஆட்டோ ஹானும், லிஸ் மைட்னரும் பெர்லின் கெய்ஸர் வில்ஹெம் ரசாயன ஆய்வுக்கூடத்தில் [Kaiser Wilhelm Institute for Chemistry, Berlin] பணி செய்ய மாறினர். அங்கே தனியாக ஆரம்பித்த கதிர் ரசாயனத் துறையகத்தில் [Dept of Radiochemistry] ஆட்டோ ஹான் தலைவராக ஆக்கப் பட்டார். 1915 இல் முதல் உலகப் போர் மூளவே, ஆட்டோ ஹான் ராணுவத் துறையில் சேர்ந்து, ரசாயன நச்சுப்போர் சிறப்புநராகப் [Chemical Warfare Specialist] பணி செய்ய வேண்டிய தாயிற்று. லிஸ் மைட்னர் போரில் காய முற்றோர்க்கு உதவி புரிய பணிப் பெண்ணாக வேலை செய்தார்.

    1915 இல் போர் முடிந்த பின் இருவரும் கதிரியக்க ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்கள். லிஸ் மைட்னர் பிச்பிளண்டி [Pitchblende], ஸ்கோபைட் [Scopeite], யுரேனோஸ்ஃபரைட் [Uranosphaerite], யுரேனினைட் [Uraninite], பேகலைட் [Bakelite] போன்ற யுரேனியத் தாதுக்களை மேரி கியூரிபோல் சுத்தீகரித்து, 1918 இல் மிகச் சிரமமான புரொடாக்டினியம் [Protactinium-231] என்னும் புதிய கதிர் மூலகத்தைப் [Radio Element] பிரித்தெடுப்பதில் முதலில் வெற்றி பெற்றார்!

    கதிரியக்க முள்ள மூலகமான புரொடாக்டினியம்-231 ஆல்ஃபா துகளை [ஹீலியம்] வெளியேற்றி இயற்கையாகத் தேய்ந்து, ஆக்டினியம்-227 [Actinium-227] மூலகமாக மாறுகிறது! புரொடாக்டினியம்-231 மூலகத்தின் அரைப்பளு வாகத் தேயும் காலம் அல்லது “அரை ஆயுள்” [Half Life] 32,800 ஆண்டுகள்! அதன் திணிவு இரும்பைப் போல் இரு மடங்கு [15.4 gram/cubic cm]. அந்த உலோகம் உருகிடும் உஷ்ணம் 1552 டிகிரி C.

    91(புரொடாக்டினியம்)231 –>2(ஹீலியம்)4 + 89(ஆக்டினியம்)227

    மூலகங்களின் முன்னுள்ளது அணு எண் [Atomic Number->புரோட்டான் எண்ணிக்கை]. அவற்றின் பின்னுள்ளது பளு எண் [Mass Number->புரோட்டான்+நியூட்ரான் எண்ணிக்கை].

    1932 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] அணுக்கருவுள் இருக்கும் நியூட்ரான் [Neutron] என்னும் புதிய துகளைக் கண்டு பிடித்தார். நியூட்ரான்களின் வேகத்தை மிதமாக்கி இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி 1934 இல் முதன் முதல் யுரேனிய அணுவை தாக்கி இரு கூறாகப் பிளந்தாலும், அவர் அதன் முக்கியத்தை அறியத் தவறி விட்டார்! பிளவு இயக்கத்தில் விளைந்த கதிர் மூலகங்களைப் [Radio Elements in Fission Products] பிரித்தெடுப்பதில் ஃபெர்மியின் திறமைச் சோதிக்கப் படவே, என்ன விளைந்துள்ளது என்று அறிய முடியாமல் அவர் திண்டாடிப் போனார்! வெறும் பெளதிக விஞ்ஞானியான ஃபெர்மி, ரசாயனச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அணுப்பிளவு முயற்சியில் ஆரம்ப நிலைக்கு மேல் முன்னேற முடிய வில்லை!

    அடுத்து ஃபெர்மி புரிந்த யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தை மேரி கியூரியின் புதல்வி ஐரீன், அவரது கணவர் பிரடெரிக் [Irene & Frederick Joliot Curie] ஆகியோர் பாரிஸிலும், ஆட்டோ ஹான் அவரது புதிய உதவியாளர் பிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் ஆகியோர் பெர்லினிலும் திருப்பிச் செய்து பார்த்தனர்! விளைவுப் பொருட்களைப் பிரித்து அவை என்ன மூலகங்கள் என்று கண்டு பிடிப்பதில், என்ரிகோ ஃபெர்மி, ஜோலியட் கியூரித் தம்பதிகள் யாவருமே மிகச் சிரமப் பட்டார்கள்! ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் இருவரும் பாதிக்கு மேல் முன்னேற முடியவில்லை!

    ஜெர்மனியில் யூத வெறுப்பாளி அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி!

    ஆட்டோ ஹானுடன் ஆய்வுகள் செய்து கொண்டே, 1926 முதல் 1933 ஆண்டு வரை லிஸ் மைட்னர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் நிலையான பெளதிகப் பேராசிரியராகச் சேர்ந்து நிம்மதியாகப் பணி ஆற்றினார். ஆனால் அது நெடுநாள் நீடிக்க வில்லை! அப்போது மைட்னரும், ஹானும் கதிரியக்க மூலகங்கள் தேயும் போது பீட்டா துகள் [Beta Particle] வெளியேறி, புது மூலகங்கள் தோன்றுவதைப் பிரித்தெடுத்து ஆராய்ந்தார்கள். 1933 ஏப்ரலில் அடால்ஃப் ஹிட்லர் [Adolf Hitler] ஜெர்மன் அரசாங்கத்தைக் கைப்பற்றித் தளபதி ஆனார்! ஹிட்லர் முதலில் ‘யூத எதிர்ப்புச் சட்டத்தை ‘ [Anti-Jewish Law] அமுல்படுத்தி, ஜெர்மனியில் இருந்த ஆரியரற்ற அறிஞர்களின் [Non-Aryan Academies] பதவிகளைப் பிடுங்கி அவர்களை வெளியே தள்ளினார்! 100 மேற்பட்ட உயர்ந்த யூத விஞ்ஞானிகள் தம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மறைமுகமாக ஜெர்மனியை விட்டு அன்னிய நாடுகளுக்கு ஓடினார்கள்! அவர்களில் முக்கிய மானவர்கள்: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், எட்வெர்டு டெல்லர் [Edward Teller], ஜார்ஜ் காமாவ் [George Gamov], ஹான்ஸ் பெதே [Hans Bethe], மாக்ஸ் பார்ன் [Max Born], ஜேம்ஸ் ஃபிரான்க் [James Franck], லிஸ் மைட்னரின் மருமான் ஆட்டோ பிரிஷ். இவர்களில் பலர் அமெரிக்காவில் சரண் புகுந்து, பின்னால் 1942 மன்ஹாட்டன் திட்டத்தில் [Manhattan Project] அணு ஆயுத ஆக்கத்திற்கு உழைத்தவர்கள்! ஆட்டோ ஹான், மாக்ஸ் பிளான்க்ஸ் இருவரும் லிஸ் மைட்னரை ஹிட்லரிடமிருந்து சில வருடங்கள் காப்பாற்றினார்கள்! அதே சமயம் ஸ்டிராஸ்மன் பல யூதர்கள் ஜெர்மனியிலிருந்து தப்பிச் செல்ல உதவி செய்தார்!

    ஹிட்லரின் கொடுமை தாளாது, யூதரான லிஸ் மைட்னர் 1938 ஜுலையில் சுவீடனுக்கு [Sweden] ஓடினார்! அங்கே ஸ்டாக்ஹோம் நோபெல் ஆய்வுக் கூடத்தில் [Nobel Institute in Stockholm] அணு ஆய்வுக் குழுவில் ஆசிரியராகச் சேர்ந்து அங்கே 20 ஆண்டுகள் தங்கினார்! அடுத்து 1958 இல் மைட்னர் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் 1968 வரை கேம்பிரிட்ஜிலே காலம் தள்ளினார்.

    முதன் முதல் அணுப்பிளவு இயக்க அறிவிப்பு

    ஆய்வு ரசாயனத்தில் [Analytical Chemistry] வல்லுநரான, பிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் 1929 இல் டாக்டர் பட்டம் பெற்று, 1934 இல் ஆட்டோ ஹான் ஆய்வுக் கூடத்தில் சேர்ந்தார். நியூட்ரான், யுரேனிய அணுக்கரு இயக்கத்தில், யுரேனியம் தகர்க்கப் பட்டு, முடிவில் உண்டான சிறு துணுக்குகளை முறையாகப் பிரித்து, அவற்றில் ஒரு விளைவு பேரியம் [Barium Element] என்று கண்டு பிடிக்க உதவியவர், பிரிட்ஷ் ஸ்டிராஸ்மன்! ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் இருவரும் பேரியம் ஒன்றை மட்டும் கண்டார்கள்! அந்த சமயத்தில் அதே அணுக்கரு இயக்கத்தைச் செய்து பார்த்த ஐரீன் கியூரி, பிரடெரிக் ஜோலியட் தம்பதிகள் தாம் பிரித்தெடுத்த லாந்தனம் மூலகம் [Lanthanam Element] ஒன்றை மட்டும் கண்டார்கள்! 1932 இல் முதன் முதல் யுரேனிய அணுவைப் பிளந்த இத்தாலிய மேதை என்ரிக்கோ ஃபெர்மி, புதிதாய் விளைந்த யுரேனியக் கதிர் ஏகமூலத்தை மட்டும் கண்டு, தவறாகத் தான் மூலக மாற்றம் செய்து விட்டதாகக் கருதினார்! யானையின் ஓர் அங்கத்தைத் தடவி வர்ணித்த குருடர்போல், ஒவ்வொரு குழுவினரும் ஏதாவது ஒன்றை மட்டும் கண்டு, மற்றவற்றை ஆராய முடியாமல் விட்டு விட்டு அணுக்கருப் பிளவு இயக்கத்தின் மகத்தான முழு வடிவத்தைக் காண முடியாமல் போனார்கள்!

    மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம் 1 :-

    யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>

    –>பேரியம்139* + கிரிப்டான்95* (தேய்ந்து) –>

    –>மாலிப்டினம்95* + லாந்தனம்139* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி

    மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம் 2 :-

    யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>

    –>ருபீடியம்93* + சீஸியம்140* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி

    [(*) குறி கதிரியக்க மூலகத்தைக் காட்டுகிறது]

    ஆட்டோ ராபர்ட் ஃபிரிஷ் [Otto Robert Frisch] 1904 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் ஆஸ்டிரியா வியன்னாவில் யூத குடும்பத்தில் பிறந்தவர். லிஸ் மைட்னரின் தங்கை அகஸ்டி மைட்னரின் [Auguste Meitner Frisch] புதல்வர், ராபர்ட் ஃபிரிஷ். 1926 இல் வியன்னா பல்கலைக் கழகத்தில் Ph.D. பட்டம் வாங்கினார். ஃபிரிஷ் ஆட்டோ ஸ்டெர்ன் [Otto Stern], இம்மானுவல் ஈஸ்டர்மன் [Immanuel Eastermann] ஆகியோருடன் 1933 இல் கூட்டாக உழைத்து புரோட்டான்களின் காந்த நெம்பலை [Magnetic Moment of Protons] அளந்தார். ராபர்ட் ஃபிரிஷ் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், அமெரிக்காவுக்குச் சென்று, அங்கே ராபர்ட் ஓப்பன்ஹைமரின் [Robert Oppenheimer] கீழ் மறைமுக மன்ஹாட்டன் திட்டத்தில் பங்கெடுத்து, அணு ஆயுதப் படைப்பு விஞ்ஞானிகளில் ஒருவராகப் பணி யாற்றினார்! 1947 ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்று, காவென்டிஷ் ஆய்வுக்கூடத்தில் 1979 வரை அணுக்கரு பெளதிகத் துறையின் ஆணையாளர் ஆகப் பணியாற்றினார்.

    1938 டிசம்பரியில் ஆட்டோ ஹானும், ஸ்டிராஸ்மனும் நியூட்ரான், யுரேனிய அணுக்கரு இயக்க விளைவில் ஒரே ஒரு துணுக்கு பேரியத்தைப் பிரித்து, அவ்வியக்கத்தை வெளியிட்டார்கள். ரசாயன மேதைகளான இருவருக்கும் மெய்யாக என்ன நிகழ்ந்துள்ளது என்று விளங்காமல், கடிதம் மூலம் சுவீடனிலிருந்த பெளதிக மேதை லிஸ் மைட்னருக்கு, அந்த இயக்கத்தைப் பற்றி ஆட்டோ ஹான் எழுதினார்! அதிர்ஷ்ட வசமாக பெரியம்மா லிஸ் மைட்னரைப் பார்க்க வந்திருந்த, ராபர்ட் ஃபிரிஷ் ஆட்டோ ஹானின் கடிதத்தைப் படிக்க நேர்ந்தது! இருவரும் குளிர்ப்பனிக் காலத்தில் நெடு நேரம் நடந்து, அந்த அணுக்கரு இயக்க விளைவை ஆய்வு செய்து, உலக வரலாற்றையே மாற்றி விட்ட ஓர் புதிய முடிவுக்கு வந்தனர்!

    பிரிட்டனில் பதிப்பாகும் ‘இயற்கை ‘ [Nature] என்னும் வெளியீட்டில் எழுதி, இருவரும் 1939 ஜனவரி 16 ஆம் தேதி அறிவித்தார்கள். ‘இது ஒரு நூதன அணுக்கரு இயக்கம்! கதிரியக்கத்தில் தேயும் நிலையற்ற யுரேனியம்235 அணுக்கரு, ஒரு மித நியூட்ரான் துகள் சேர்ந்தவுடன் பாரம் தாங்காமல், இரண்டு சிறு துண்டங்களாகப் பிளந்திருக்கிறது! அவை ஏறக்குறைய சமமான சிறு துணுக்குகள்! இது ஓர் ‘அணுக்கருப் பிளவு’ [Nuclear Fission] இயக்கம்! மூலக அணி அட்டவணையின் இறுதியில் இருக்கும் யுரேனியம் திரிவு நிலையில் பிளந்து, நடுவே உள்ள இரு மூலகங்களாகச் சிறுத்துள்ளது! இதன் விளைவில் பேரளவு சக்தி வெளியாகும்! அதாவது அணுக்கரு இயக்கத்தில் ஒரு துகளின் பிணைவு சக்தி [Binding Energy] 7.5 MeV அளவிலிருந்து 8.4 MeV ஆகக் கூடி விட்டது! ‘ இச்செய்தி விஞ்ஞான உலகில் விரைவாகப் பெருகியது! அடுத்து அவ்வியக்கத்தை உடனே பிரான்ஸில் செய்து பார்த்த ஐரீன், பிரடெரிக் ஜோலியட் கியூரி தம்பதிகள் வெளியாகும் சக்தி 200 MeV என்று கணக்கிட்டு அறிவித்தார்கள்! மேலும் அணுக்கருப் பிளவில், ஒவ்வொரு பிளவிலும் புதிதாக இரு வேக நியூட்ரான்கள் எழுவதைக் காட்டி, அவற்றைக் கட்டுப்படுத்தி அணுக்கருத் தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] ஏற்படுத்தி, பிரமாண்டமான அணுசக்தியை வெளிப்படுத்தலாம் என்று பிரடெரிக் ஜோலியட் கியூரி அறிவித்தார்!

    மேற்கூறிய ‘அணுக்கருப் பிளவு ‘, ‘அணுக்கருச் சக்தி ‘ ஆகிய செய்தி ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மின்னல் போல் பரவியது! ஆட்டோ ஹானும், ஸ்டிராஸ்மனும் அணுவைப் பிளந்து விட்டோம் என்று வெளிப்படையாகப் பறை சாற்றினார்கள்! அணுப்பிளவுக் கண்டு பிடிப்புக்கு லிஸ் மைட்னர் பல பரிசுகளும், வெகுமதிகளும் பெற்றார். 1944 ஆம் ஆண்டில் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் அணுப்பிளவை உண்டாக்கியதற்கு நோபெல் பரிசு பெற்றார்கள்! யுத்தம் முடிந்த பின்புதான் 1946 இல் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் இருவரும் நோபெல் பரிசு பெற ஸ்டாக்ஹோம் சென்றார்கள்! ஹிட்லருக்குப் பயந்து, ஆட்டோ ஹான் அணுக்கருப் பிளவு விளக்கத்தில் யூதரானத் தன் முப்பது வருடத் துணையாளியின் பங்கைக் குறைவாக எழுதி மறைத்ததால், நோபெல் பரிசு லிஸ் மைட்னருக்குக் கிடைக்காமல் போனது! லிஸ் மைட்னரும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், நெஞ்சுக்குள்ளே வேதனைப் பட்டார். மற்றும் அணு ஆயுதம் 1945 இல் ஆக்கப் பட்டு ஜப்பானில் விழுந்து, ஆயிரக் கணக்கான பேர் மாண்டதைக் கேட்டு, லிஸ் மைட்னரும், ஆட்டோ ஹானும் மனம் உடைந்தனர்! சொற்பொழிவின் போது, லிஸ் மைட்னர் தான் அணுப்பிளவுச் சோதனைகளில் பல்லாண்டு பங்கேற்றதை வெறுத்து, வெளியே சொல்வதைக் கூட மறைக்க முற்பட்டார்!

    அமெரிக்கா லிஸ் மைட்னருக்கு அளித்த உன்னதப் பரிசு

    முதல் உலகப் போர் ஐரோப்பாவைக் கலக்கிய போது, லிஸ் மைட்னர் யுத்த முன்னணியில் நின்று பணிப் பெண்ணாக காய முற்றோர்களுக்கு உதவி செய்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், ஐரோப்பாவில் பல நாடுகள் அணு ஆயுதம் செய்ய லிஸ் மைட்னரை அழைத்த போது, அவர் பங்கொள்ள மறுத்தார்! உலக நாடுகள் அணுகுண்டுகள் ஆக்குவதையும், அணு ஆயுதங்கள் பெருக்குவதையும் அறவே எதிர்த்தார்! அணு ஆயுதப் படைப்புக்கு ஓரளவு காரணமான லிஸ் மைட்னர், எங்கெங்கு சென்று சொற்பொழிவு தரும் போதெல்லாம், அணுப்பிளவில் தான் சாதித்ததை வெளியில் சொல்லிக் கொள்வ விழைவதில்லை! 1960 இல் லிஸ் மைட்னர் தனது 82 ஆவது வயதில் விஞ்ஞான ஆராய்ச்சிப் பணிகளிலிருந்து முழுமையாக ஓய்வெடுத்துக் கொண்டார்! அவர் கடைசிவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை!

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லிஸ் மைட்னரை, உலகப் புகழ் பெற்ற மேரி கியூரியுடன் ஒப்பிட்டு, அவரை “ஜெர்மன் மேடம் கியூரி” என்று பாராட்டி மதிப்பீடு செய்தார்! லிஸ் மைட்னரின் வாழ்க்கையில் அவரது பெரும் ஆறுதல் என்ன வென்றால், நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதைகள் நீல்ஸ் போஹ்ர், அவரது மனைவி மார்கரெட் [Neils Bohr, Wife Magarethe], மாக்ஸ் பார்ன் [Max Born], உல்ஃப்காங் பாலி [Wolfgang Pauli], ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகிய நண்பர்கள் தன்மீது கொண்டிருந்த நிலையான நட்பு மட்டுமே!

    1946 இல் லிஸ் மைட்னர் அமெரிக்காவுக்குச் சென்று, கத்தோலியப் பல்கலை கழகத்தில் விஜயம் செய்யும் பேராசிரியராகப் [Visiting Professor at Catholic University, Washington D.C.] பணி செய்தார். 1959 இல் இரண்டாம் முறை வந்த போது, பிரைன் மாவர் கல்லூரியில் [Bryn Mawr College] விஞ்ஞானச் சொற்பொழிவை நிகழ்த்தினார்! 1944 இல் நோபெல் பரிசுக் குழு செய்த தவறைச் சீர்ப்படுத்த 1966 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது உயர்ந்த 100,000 டாலர் “என்ரிகோ ஃபெர்மிப் பரிசை” [Enrico Fermi Award] அணுப்பிளவு முன்னோடிகளான ஆட்டோ ஹான், லிஸ் மைட்னர், பிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் மூவருக்கும் அளித்துக் கெளரவித்தது!

    1958 ஆம் ஆண்டு லிஸ் மைட்னர், இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜில் ஒரு சிறு இல்லத்தில் பத்தாண்டுகள் வாழ்ந்து, 1968 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி, தனது 90 ஆவது வயதில் அமைதியாகக் காலமானார். அவரது ஆத்ம விருப்பங்கள் இரண்டு: ஒன்று இசை, மற்றோன்று கண்கொளாக் காட்சியான ஆஸ்டிரிய மலைத்தொடர் மீது உலாவுவது! அவர் சுவீடன் நாட்டுக் குடியினர் ஆயினும், தனது ஆஸ்டிரிய பிரஜா உரிமையை இறுதிக் காலம் வரை வைத்திருந்தார்! அணுப்பிளவை முதலில் அறிவித்த மைட்னர் பெயரில், அணு எண் 109 உடைய கதிரியக்க மூலகம் [Radio Element] ‘மைட்னரியம்’ [Meitnerium] என்று 1997 இல் பெயரிடப் பட்டுள்ளது! ஜெர்மன் விஞ்ஞானிகள் பிஸ்மத், இரும்பு [Bismuth & Iron] ஆகிய மூலகங்களை அணுப்பிணைவு இயக்கத்தில் [Nuclear Fusion] பிணைத்து 1982 ஆம் ஆண்டு ஆய்வுக் கூடத்தில் செயற்கை முறையில் முதன் முதல் உண்டாக்கப் பட்ட மூலகம், மைட்னரியம்!

    *******************

    Information

    1. http://en.wikipedia.org/wiki/Lise_Meitner

    ++++++++++++++++++

    S. Jatyabarathan (jayabarat@tnt21.com) March 4, 2010

    Share
  • சுவாமி விவேகானந்தரின் தத்துவ முத்துக்கள்!

    பவள சங்கரி

    சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் தத்துவங்கள்!

    உம்மை நேசிப்பவரை ஒருக்காலும் வெறுக்காதே!

    உமக்கு உதவியவரை ஒருநாளும் மறவாதே!

    உம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்ற எண்ணாதே!

    15 வாழ்க்கைத் தத்துவங்கள்

    1. அன்பு மட்டுமே வாழ்க்கையின் மேன்மைக்கான வழி.

    சுயநலமில்லாத சத்தியமான அன்பு ஒன்றே அமைதியாக வாழும் வழி.

    2. உம்முடைய எண்ணமே உம்மை வழிநடத்துகிறது.

    நம் எண்ணங்களே ஒரு பொருளை அழகுபடுத்தவோ அன்றி அவலட்சணப்படுத்தவோ காரணமாகிறது. நல்ல எண்ணங்களே நல்ல செயலுக்கு வித்தாகி, உலகிற்கு ஒளியூட்டுகிறது.

    3. வாழ்க்கை சௌந்தர்யமானது.

    வாழ்க்கையின் அழகான பகுதியை நேசிக்கப் பயில வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொளல் வேண்டும்.

    4. எண்ணம் போல் வாழ்வு.

    உம்மைக் கடவுளாக நீவிர் நினைத்தால் கடவுளாகவே ஆகிறீர். தீய எண்ணம் கொண்ட தேவதாவாக எண்ணினால் அதுவாகவே ஆகிறீர்.

    5. தளைகளை விலக்கிக் கொள்ளுங்கள்.
    உள்ளக்கோவிலில் இறை எனும் உன்னதத்தை உறையச் செய்தால், தளைகளனைத்தும் விலகி, சுதந்திரமாக உம்மை வாழச் செய்யும்.

    6. குறை கூறும் ஆட்டத்தை விளையாடேதே!
    அடுத்தவரிடம் குறை காணும் குணம் கொள்ளாதீர், உம்மால் அவரோடு இணங்கி கைகோர்த்து நடக்க முடிந்தால் நல்லது. இல்லையேல் அவர் பாதையில் அவர் செல்ல ஒதுங்கி வழிவிடுதலே உன்னதம்.

    7. உத்வும் மனப்பான்மை கொண்டிரு.
    உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து. (குறள் – 105)

    8. உம்முடைய நிறைவான கொள்கைகளை உயரச்செய்யும்
    உன்னத இலட்சியம் கொண்டோரின் வெற்றிக்கு உம்மால் இயன்றதைச் செய்து அவரை ஊக்குவிப்பதே சிறந்த பண்பு..

    9. உம் ஆன்மாவிற்கு செவி சாய்த்திரும்.
    உம் ஆன்மாவே உம்மை நல்வழிப்படுத்தக்கூடிய ஆசான்.

    10. நீவிர் நீவிராக இரும்.
    உங்களுடைய இயற்கைக்கு உகந்து நீங்கள் நீங்களாகவே இருப்பதே சாலச் சிறந்தது.

    11. இயலாமை என்று எதுவுமில்லை.
    நான் வலுவிழந்திருக்கிறேன் என்று எண்ணுவதும், சொல்லுவதுமே பெரிய பாவம். அடுத்தவரையும் வலுவிழந்தவர் என்று எண்ணுவதும் பாவச்செயலே.

    12. நீவிரே சக்தி உடையவர்.
    அனைத்துச் சக்திகளும் பெற்றவர் நாமே என்ற உறுதியான எண்ணம் கொண்டிருத்தல் வேண்டும்.

    13. அன்றாடம் பயிலுங்கள்.
    நம் ஆன்மாவிற்குள்ளேயே கற்க வேண்டிய பாடங்கள் பல உள்ளது. ஆன்மாவின் திரையை விலக்கி நம்மை நாம் உணர்ந்தால் அறிவின் ஒளியைக் காணலாம்.

    14. உண்மையாயிரு!
    சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். சத்தியத்தை நிலைநிறுத்தும் பொருட்டு எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் சத்தியத்தை இழத்தல் கூடாது.

    15. மாற்றி யோசியுங்கள்!
    தீர்வு இல்லாத பிரச்சனை என்பதே இந்த உலகில் இல்லை. ஆழ்ந்து சிந்திந்து செயல்பட்டால அதற்கான வல்லமையை எளிதில் பெறலாம்.

    படங்களுக்கு நன்றி:

    http://www.swami-vivekanand.com/photos/

    Share
  • வால்ட் விட்மன் வசன கவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது

     

                                                                                                                                         

     

     

     

                                                                    வால்ட்  விட்மன்  வசன கவிதை -6

    ஒரு நூலை வாசிக்கும் போது

     (When I Read the Book)


    (1819-1892)

    (புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட்  விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

     

    சிறந்த ஒரு நூலை,

    வரலாற்று நூலை நான்

    வாசிக்கும் போது எனக்குள்

    எழும் கேள்வி இதுதான் :

    இதைத் தான் மனித வாழ்வென்று

    எழுத்தா சிரியர் உரைப் பாரா ?

    ஆதலால் நான் மரித்து மறைந்த பின்பு

    எவராவது ஒருவர் எழுதுவாரா

    எனது வாழ்வினை ?

    (எவனோ ஒருவன் அறிந்திருக்க வேண்டுமோ

    என் வாழ்வைப் பற்றி ?)

    ஏன் ? என்னைப் பற்றி அடிக்கடி

    நான் நினைப்ப துண்டு

    அறிந்தது நான் மிகச் சிறிதளவு.

    அதாவது

    உண்மை யான என் வாழ்வைப் பற்றி

    ஒன்றும் அறியாதவன் நான்.

    மங்கி மறைந்து போய்

    திசை மாறிச்

    சிதறிய ஏதோ சில நினைவுக்

    குறிப்புகள் மட்டும்,

    என் சுயப் பயனுக்குத் தேடுகிறேன்

    இங்கே பதிவு செய்வதற்கு !

    +++++++++++++++++

    கதவுகளை மூடாதீர் !

    (Shut Not Your Doors)

    வால்ட் விட்மன்


     

    மூதறிவு பெற்ற நூலக அதிபரே !

    எனக்கு

    மூடாதீர் உமது கதவுகளை.

    நிரம்பிய நூல் அலமாரி வரிசைகளில்

    இல்லாத வற்றையும்

    தேவையாய் இருப்பதையும் நான்

    எடுத்து வருகிறேன் :

    ஆரம்பிக்கும்

    போர்க் களத்தில் நான் ஆக்கிய

    ஓர் நூலை !

    வார்த்தைகள் இல்லை என் நூலில் !

    உள்ளது அதனில்

    ஒவ்வொரு கண்ணோட் டமும் !

    தனிப்பட்ட நூல்

    இணைப்பில்லை மற்ற நூலுடன்,

    அறிஞர் அறியாதது !

    ஆயினும் மெய் சிலிர்க்க வைக்கும்

    உன்னை ! இதுவரை

    உரைக்காத, வெளி வராத கருத்துகள்

       உள்ளன

    ஒவ்வொரு பக்கமும் !

     

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman   [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 8, 2013)

    http://jayabarathan.wordpress.com/

     

     

    Share
  • பட்டி நோம்பி

    ”அட, என்ன பாக்கறீங்க? ஊர்ல மழைங்ளா? ஒரு ஒழவு மழை இருக்குமுங்ளா? பொங்கலூருக்கு வடக்கமின்னா நல்ல மழையின்னு பெரிய பாப்பாத்தியவிங்க ஊட்டுக்காரர், வந்திருந்தவரு சொன்னாரு. இங்க வாசத் தொளிக்குறதுக்கு மூத்த புள்ளியா ரெண்டு அடி அடிச்சிப் போட்டு, தாந்து போச்சுங்க. எதுக்குமு, இந்த தை பொறந்தா ஒரு வழி பொறந்துதானுங்க ஆகோணும்?”

    ”ஆமாங்க மச்சான். எங்களுக்குமு ஒழவு மழையல்லாம் பேயிலீங்கோ. காட்டுத்தண்ணியே காட்டைவுட்டுப் போகுலீன்னா பார்த்துகுங்க நீங்களே?”

    “அது செரீங். தை பொறந்தாச்சின்னா, பட்டி பெருகோணும்; வெள்ளாமை வெளையோணும்; பொங்கல் பொங்கோணும்!! அது மாறாது பாருங்க. அல்லாம் நல்லாத்தான் ஓடி அடையும். என்ன நாஞ்சொல்றது சரித்தானுங்ளே?”

    “ஆமாமாங். இப்பெல்லாம் ஆருங் முன்ன மாதர தை நோம்பியெல்லாங் கும்புடுறாங்க? அல்லாம் மாறிப் போச்சு பாருங்!”

    “நெம்ப நல்லாவே. இங்க, நாங்க ஒரு நாலஞ்சி பண்ணையத்துக்காரங்க மட்டும் இன்னுமு பழைய மொறைக்கி அல்லாத்தையும் செஞ்சிட்டுதான் வாறம். நம்ம இருக்குற காலத்துக்கும் செஞ்சி போடலாம். அதுக்கப்பொறம் என்னமோ ஆயிட்டுப் போகுது போங்க!”

    ”பெரிய அமுச்சி இருக்கமுட்டும் நாங்களும் தொட்டி கட்டி, பட்டி மெரட்டிட்டுதா இருந்தமுங்க. அமுச்சி போய்ச் சேந்தவுட்டு, பெரியம்மணிய பெங்களூருக்கு கண்ணாலங்கட்டி தாட்டியுட்டதாச்சிங்? அதுக்குப் பொறகு அல்லாமே நெதானமாய்ப் போச்சுங்!”

    ”நாம சின்ன வயசுல இருக்கறப்பெல்லாம் ஒரு வாரம் பத்து நாளத்து நோம்பியா இருந்துச்சு. இப்பெல்லாம் ஆரும் மூனு நாள் நோம்பியாக்கோடக் கும்புடுறது இல்லை?!”

    “கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லுங்க பழமைய. ஏன் நிக்கிறீங்க? குக்கீட்டுச் சொல்லுங்க மச்சே! வேலை கெடக்கட்டும்; எப்பூஞ்செய்யுற வேலைதான?!”

    ”அது செரி. கார்த்திகை மாசம் சோதி வெச்ச நாள்ல இருந்தே பட்டி நோம்பிக்கான வேலைகளும் தெரக்கா ஆரமிச்சிரும். சோதியன்னைக்கு சூந்து விளையாடுவோம். வெடிய வெடிய ஆடுவோம். கருது அறுத்து குச்சுக வெச்சிருக்கும். அந்தக் குச்சுகள்ல இருந்து தட்டுக் கத்தைகளை ஒன்னு ஒன்னா எடுத்தாந்து, அதோட மொனையில தீயைப் பத்த வெச்சி வளைச்சி வளைச்சி சுத்துவோம்.

    நாலுபேரு அஞ்சு பேருன்னு கூட்டாச் சேந்துட்டு போயி களவாடுவோம். மாங்கா திருடுவோம். தேங்கா திருடுவோம்; ஆகாதவன் கெணத்துக்குள்ள எறங்கி மோட்டாரைக் கழட்டித் தண்ணிக்குள்ள போட்டுட்டு வருவோம். ஊர் வெடலைக காயடிக்காத காளைகளுக்கு எணை ஆச்சுதே? ஆனாலும் அதுல ஒரு நேர்மை இருக்கும். பொண்டு புள்ளைக மேல கை வெக்க மாட்டம். ஏழைபாழைகளுக்கு சகாயமா நடந்துக்குவம்.

    சூந்து ஆடி முடிஞ்சு ஊட்டுக்குப் போகும் போது கெழக்க வெளுத்துரும். அந்த நேரத்துக்கும், ஊட்டுக்குப் போயி நாலு அச்சு, அஞ்சு அச்சுன்னு இராகிக் களியோட சுண்டைக்கா வத்தக்கொழம்பு, தூதுவளைச் சாறுன்னு கலந்து கட்டி ஒரு எடுப்பு எடுத்துட்டுதா தூங்கப் போவம்.

    அன்னக்கி பொழுது பம்பலா அப்படி முடியும். அது முடிஞ்ச கொஞ்ச நாள்லயே மார்கழி மாசம் பொறந்திரும். மார்கழி மொதநாள் அன்னிக்கே வடக்க தங்காத்தா கோயலு, ஊருக்குள்ள விநாயகங்கோயல்னு எல்லாக் கோயல்லயும் அன்னாடப்பூசை ஆரமிச்சிரும். ஒவ்வொரு கோயல்லயும் காலையில அஞ்சரையிலிருந்து ஏழு மணி வரைக்குமு, சாயங்காலம் ஆறுல இருந்து ஒம்பது மணி வரைக்குமு பாட்டுப் போட்டியில சாமி பாட்டுக போடுவாங்க. பண்டாரத்தார் ஊட்டு சம்முகம் ரெண்டு வேளையும் பூசை செய்வான்.

    ஊர்ல இருக்குற நாய்க்கமாருங்க எல்லாம் பசனை கோயல்ல காலையில அஞ்சு மணியிலிருந்து பசனை பாடுவாங்க. ஆறு மணிக்கு சங்கு சேகண்டி ஊதிட்டு பாடிட்டே ஊர் சுத்தி வருவாங்க. பெரிய சிங்கார் நாய்க்கர் ஆர்மோனியப் பொட்டி, சுப்புராயலு நாய்க்கன் மிருதங்கம், நம்ம பாட்டையன் கஞ்சிரா, நரசிம்ம நாய்க்கரும் காவேட்டி நாய்க்கரும் சால்ரா போடுவாங்க. மித்தவிங்க எல்லாரும் கை தட்டிட்டே பசனைக்கு பின்பாட்டு பாடுவாங்க. கோபால்சாமி நாய்க்கனும் குழித்தோட்டத்து பட்டீசுவரக் கவுண்டனும் நல்லாப் பாடுவாங்க. அந்த ஆதிசேசா, அனந்த சயனாங்ற பாட்டுப் பாடும் போது ஊரே முழிச்சுக்கும். அவிங்க மொத்தம் நுப்பது பேரு. இப்பெல்லாம் எங்க அந்த மாதர பசனை கோசுடியே இல்லை போ. எங்கியோ கோயமுத்தூருகிட்ட வடவள்ளியில இருக்குதுன்னு சொல்லிச் சொல்றாங்க. பீளமேடு இரங்கம்மா கோயல் கோசுடின்னு சொல்லிக்கிறாங்க.

    கடைசி நாளன்னக்கி திருப்பாவை முச்சூடும் பாடி, பசனை கோயல்காரங்க ஊருக்குள்ள மெரவனை வருவாங்க. தங்காத்தா கோயல்லயும், புள்ளார்கோயல்லயும் பூசை செய்து அவிசாயங் குடுப்பாங்க. பசனை கோயல்ல மாசம் முப்பது நாளும் சக்கரைத் தளிகையுமு, கடைசி நாளன்னிக்கு கூடா தட்டவடையுங் குடுப்பாங்க.

    அந்த முப்பது நாளும் ஊருக்குள்ள அல்லாரும் சாமி கும்புடுறதும், அறுவடைப் பம்பலைப் பாக்கறதும், பட்டி நோம்பிக்கான வேலைகளைப் பார்க்கறதுமா ஒரே தடபுடலா இருக்கும். அல்லாரும் மனசு நெறஞ்சி தாய் புள்ளையா பந்த பாசமா இருக்குறது எப்பன்னு கேட்டா, இந்த மார்கழி ஆரமிச்சி தை நோம்பி முடியுற காலத்தைத்தான் சொல்லோணும்.

    பட்டி நோம்பி வாறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடியே சந்தைகளுக்குப் போயி வேணுங்றதை வாங்கிப் போட்ருவாங்க. அல்லாமே நெல்லு குத்தி அரிசி பொடச்சி, பொங்கலுக்குன்னு தனி அரிசி, படைப்புக்குன்னு தனி அரிசி கட்டி வெச்சிருவாங்க. ஊருக்குள்ள அரசாணிக் காய் ஊரெங்கும் பொழங்கும். அங்கங்க ஊட்டு வாசல்ல பூசணிப் பூ வெச்சிக் கோலம் போடுவாங்க. மார்கழி முப்பதும் பொம்பளைப் புள்ளைகளுக்குக் கோலம் போடுறதும் கோயல்களுக்கு மாலை கட்டுறதுதான் வேலை.

    பொம்பளைப் புள்ளைகளுக்கு அந்த வேலைன்னா, ஆம்பளைப் பசங்களுக்கு வண்டியப் பழுது பார்த்து வெக்கிறது. கீல் போட்டு இருசுகளைப் பதனம் பன்றது. ஏர்க்கால், பார்ச்சட்டம், மூக்காணி அல்லாத்தையும் மராமத்து செய்யுறதுன்னு வேலை முசுவா இருக்கும். எருதுகளுக்கு இலாடம் போட்டு பருத்திக் கொட்டைப் புண்ணாக்கும் நல்ல அரிசித் தவிடுமாப் போட்டு பாங்காக்குவாங்க.

    திமில் இருக்குற காயடிக்காத காளைக் கன்னுகளுக்கு கொம்புக் கவுறு பூட்டுறதும், கழுத்து மணி பூட்டுறதும், கொம்புச்சலங்கை கொழுவுறதும் நடக்கும். இந்த மாதரக் காளைகளை வெச்சிருக்கிற நாங்கெல்லாம் ஒரு மொறப்பாத்தான் ஊருக்குள்ள திரிவோம். எங்களைக் கண்ணு வெக்காத பொம்பளைப் புள்ளைக ஊர்ல கெடையாது.

    மார்கழி கடைசி நாள் அன்னக்கி, பசனை கோயல் சப்பரம் தூக்கிட்டு வந்து ஊருக்குள்ள பசனை பாடி முடிஞ்சதும் காப்புக்கட்டு ஆரமிச்சிரும். ஊட்டுல, தோட்டத்துச் சாளையில இருக்குற பழசு பரட்டை எல்லாத்தையும் கழிச்சிக் கட்டிட்டு செய்யுறதுதான் காப்புக்கட்டு. காப்புக்கட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊடு ஒட்டடை அடிச்சி பூசி வழிக்கிற வேலை ஆரமிச்சிருவாங்க. மொகுடு ஏறிப் பூசுறது, அட்டாலியில ஏறி சுத்தம் செய்யுறதுக்குன்னு நாங்க கொஞ்சப் பேர்தான் இருப்போம். எங்களை எல்லாரும் வந்து கூப்புடுவாங்க. ஒரே கிராக்கிதான் எங்களுக்கு. தெனை மாவும், அரிசி மாவும், கைமுறுக்கும், ஓலைமுறுக்கும், உப்பட்டும்னு எங்களை நெம்ப நல்லாக் கவனிப்பாங்க.

    காப்புக்கட்டு அன்னிக்கு மத்தியானத்துல இருந்தே ஊட்டு வாசல் வழிக்கிறதும், களத்து மேட்டுல வழிக்கிறதும்னு பொம்பளைக முசுவா இருப்பாங்க. எளவட்டப் பொடுசுகெல்லாம் ஓடி ஓடிக் கோலம் போட்டு ஊரே ஜாகோன்னு இருக்கும். அந்த தாவணிட் தலப்புல மூஞ்சியத் தொடச்சிக்கிறதும், பாவாடைய கணுக்கால் தெரியுறா மாதர ஏத்தியுட்டுச் சொருகிக்கிறதும், எங்களையெல்லாம் அல்லைல பார்த்துட்டே கோலம் போடுறதும் விட்டேத்தியா வக்கணை பேசுறதும்னு அவிக செய்யுற லொல்லு கொஞ்ச நஞ்சமல்ல போங்க.

    தெகோட்டுல இருக்குற பையான் வீட்டு ஆளுக ஒவ்வொரு வீட்டுக்கும் காப்புக்கட்டுக்கு வேண்டியதை எல்லாம் கொண்டாந்து குடுப்பாங்க. காலையில நேரத்துல அவங்க கொண்டார்ற மக்கிரியில, கோலப்பொடியும், அரப்புமு இருக்கும். அவங்கவங்க பண்ணையத்துல இருந்து மாட்டுச்சாணம் முந்துன நாளே வந்திடும் வாசல் வழிச்சுடுறதுக்கு. வழிச்சுட்ட ஈரம் காயம் போறதுக்குள்ளயே அம்மணிகளும் பாப்பாத்திகளும் கோலம் போட்டு உட்றுவாங்க. ஊட்டு கார வாசல், திண்ணையில எல்லாம் அரிசி மாவுக் கோலம் போட்டு உட்றுவாங்க.

    மஞ்ச வெயில் வர்றதுக்கும் சித்தங்கூரத்துக்கு முன்னாடி, பையான் ஊட்டு ஆளுக மறுக்காவும் பூளைப்பூவு, புங்கங்கொழுந்து, வேப்பங்கொப்பு, மாவிலை, ஆவரம்பூக் கொத்துன்னு ஊட்டு ஊட்டுக்கும் கொண்டாந்து குடுத்துட்டு போவாங்க. தோட்டங்காட்டுல இருக்கிறவங்க, அவங்கவங்களுக்கு வேண்டியதை அவிங்களே பொறிச்சிக் கொண்டாந்துருவாங்க.

    எல்லா தழைகளையுமு வேணுங்ற அளவுக்கு ஒன்னு கூட்டி, மொதல் கொப்பைக் கொண்டு போயி புள்ளார் கோயல்ல வெச்சிக் கட்டிட்டு வருவோம். கூடவே பக்கத்துல இருக்குற ஒன்னு ரெண்டு கோயல்லயும் கட்டிட்டு வந்திருவோம். ஊட்டு எறவாரம், மதில்சுவரு, தோட்டங்காட்டுல இருக்குற பொழிக்கல்லு, கெணத்து மேடு, பாம்பேறி, சுட்சுப் பொட்டின்னு எல்லா எடத்துலயும் பூளைப்பூக் கொப்புகளை வெச்சி காப்பு கட்டிட்டு வர இராத்திரி மணி ஏழெட்டு ஆயிரும்.

    ஒவ்வொரு ஊட்டுலயும் பெத்து, பொறப்பு, ஒறம்பரைகன்னு ஒரே பம்பலா இருக்கும். ஊட்டுக்கூடு பலகாரம் பணடம் மாத்திக்கிறதும், அங்கங்க உக்காந்து பழமை பேசுறதும் நடக்கும். புள்ளார்கோயல் மைதானத்துல கோலாட்டம், ஒயிலாட்டம், கொட்டுமொழக்கு எல்லாமும் நடக்கும்.

    அடுத்த நாள் பெரிய நோம்பி. காலையில வெடியிறதுக்கு முன்னாடியே எழுந்து தலைக்கு வாத்துட்டு, கார வாசலுக்கு அல்லாரும் வந்துருவோம். கார வாசல் நடுப்புல பெரிய அய்யன் கல்லு வெச்சு அடுப்புக் கூட்டுவாரு. உன்ற அக்கா வழிச்சி உட்டு மஞ்சத்தூவி கோலம் போட்டு உடுவா. நானும் உன்ற அக்காளும் கரும்பு, காப்பு கட்டுனதுல மிச்சமான வேப்பந்தழை, ஆவரம்பூவு, மஞ்சக்கொப்பு, துளசிச்செடி, துண்ணூர்ப்பத்திரி எல்லாமும் வெச்சி சோடனை செய்வோம். ஆத்தாவும் அய்யனும் சேந்து பொங்கல் வெப்பாங்க. உன்ற அக்கா பள்ளையம் போடுவா. பொங்கல் பொங்குனவுட்டு, கெழக்க வெளுத்து வர்ற கதிரவனுக்குப் பொங்கல் வணக்கமும் நாட்ராயனுக்கு பள்ளையமும் படைச்சி சாமி கும்புடுவோம். காலையில பொங்கச் சோத்தை உண்டு போட்டு, அல்லாரும் பொறப்புட்டு ஆண்டியூர் காளியம்மன் கோயலுக்கு போயிட்டு வருவோம். கொஞ்ச பேரு திலுமூர்த்தி மலைக்குப் போயிட்டு வருவாங்க. பெரியூட்டு ஆளுக எல்லாம் கெழக்க பழநிக்குப் போயிட்டு வருவாங்க.

    பெரிய நோம்பி அன்னிக்கு இராத்திரி முச்சூடும் ஊர்த்தலைவாசல்ல, ஊர்த்தலைவருக்கு மொறை செஞ்சி ஆட்டபாட்டம் நடக்கும். ஒரு பக்கம் கொட்டுமொழக்கு நடக்கும். ஆம்பளை ஆளுகெல்லாம் ஒயிலாட்டம், கோயில்மாடு மிரட்டுறது, சலங்கையாட்டம்னு பல வேடிக்கைகளும் செஞ்சி பராக்கு பார்க்க வெப்பாங்க. பொம்பளையாளுக கும்மியடிச்சி கந்தபுராணம் சொல்லுவாங்க.

    வெடிஞ்சி எந்திரிச்சா, பட்டி நோம்பி! பண்ணையம் வெக்கிறவங்களுக்கெல்லாம் இதான் நோம்பி நாளு. ஊர்க்குளத்துல அங்கங்க நின்னு பண்டங்கன்னுகளைக் கழுவியுடுவாங்க. நான் பெரிய வாய்க்கால்ல போயி மாடு கன்னுகளைக் குளிப்பாட்டியுட்டு ஓட்டிட்டு வருவன். கொம்பு சீவி பெயிண்ட் அடிச்சுடுவேன். மொட்டை வண்டிக்கும் பெயிண்டி அடிச்சுடுவேன். சவாரி வண்டிக்கு மழத்தண்ணி ஒழுகாதபடிக்குத் தார் பூசியுடுவோம். போனகிழமைச் சந்தையில வாங்கிட்டு வந்த மொகரைக்கவுறு, மூக்கணாங்கவுறு, கைக்கவுறு, கொம்புச்சூடி, கம்பளிக்கவுறு, கழுத்துச்சங்கு அல்லார்த்தையும் கொண்டாந்து பண்டங்கன்னுகளுக்குப் பூட்டியுடுவோம். காளைகளுக்கு கழுத்து மணியும் கொம்புச்சூடியும் பொருத்தியுடுவோம். இந்த வேலைக ஒரு பக்கம் நடந்திட்டு இருக்கும் போது, அய்யனும் ஆத்தாவும் களத்து மேட்டுல எல்லா வேலைகளையும் பார்த்துகிட்டு இருப்பாங்க.

    சாய்ங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம், களத்து மேட்டுக்கு மேவறத்தல்லையில இருக்குற வில்வமரத்துக்கடியில அய்யன் பட்டி கட்டியுடுவாரு. ஆத்தாவும் அக்காவும் பாம்புப் புத்துக்கு விளக்கு வெச்சிக் கும்பிட்டுட்டு வருவாங்க. களத்து மேட்டுல இருக்குற கருப்பராயனுக்கு கலயத்துல பொங்கல் வெச்சிக் கும்பிடுவாங்க. கருப்பராயனுக்கும் தாத்தைய்யன் கோயிலுக்கும் பள்ளையம் வெச்சி படப்பும் போட்டுக் கும்பிடுவோம். அதுக்குள்ள இருட்டாயிருந்திருக்கும்.

    ஒரு எட்டு மணி வாக்குல அல்லாரும் வில்வமரத்தடிக்கு வந்திருவோம். பண்ணையத்துல வேலை பாக்குற சித்தாள் சின்னமுத்தி, பார்வதி, மாட்டுக்காரன் சின்னான், வேலையாளுக வேலன், கந்தன் அல்லாரும் அவங்கவங்க ஊட்டு ஆளுகளோட வந்திருவாங்க. குருவனும் அமுசாவும் தீப்பந்தம் கொண்டாந்திருவாங்க. ரெண்டு தீப்பந்தம் எரியுற வெளிச்சத்துல வில்வமரமே எரியுற மாதிரி இருக்கும். அல்லையில தேங்கா மட்டைகளை எரிச்சுட்டு தப்பட்டைப் பலகைகளை காய்ச்சிட்டே குளிர் காஞ்சிட்டும் இருப்பாங்க.

    அய்யன் கைவாகுல பட்டி தயாரா இருக்கும். களிமண்ணும் மாட்டுச் சாணியும் கலந்து தெப்பக்குளம் கட்டியுட்டு இருப்பாரு. அதுல நெம்ப அழகா ஆவரம்பூவு, மொடக்கத்தான் பூவு, மாவிலை எல்லாத்தையும் குத்தியுட்டு, கார்த்திகை விளக்குகளை அங்கங்க வெச்சிப் பத்த வெச்சிருப்பாரு. கட்டுன தெப்பக்குளம் பூராவும் செஞ்சேரிமலையிலயோ, திருமூர்த்தி மலையிலிருந்தோ கொண்டு வந்த தீர்த்தத்தை வுட்டு நெப்பியிருப்பாரு. குளத்துச் செவுத்துல கார்த்திகை விளக்கு எரியொ, குளத்துக்குள்ள இருக்குற வெங்கச்சாங்கல் சாமிக அப்படியே மின்னும்.

    தெப்பக்குளத்தை ஒட்டி முன்னாடியே வெங்கச்சாங்கல்லுல சாமி வெச்சி, அதுக்கு சந்தனம், துண்ணூரு, குங்குமம் எல்லாம் வெச்சி உட்டிருப்பாரு அய்யன். அந்த சாமிக்கு முன்னாடிதா படையல் படைப்பாங்க.

    அந்த படையல்ல, பண்ணையத்து ஆளுக அல்லார்த்துக்கும் மனசு நிறைஞ்சு, மனம் போல துணிமணிக வெச்சிருப்போம். ஒவ்வொரு துணிமணிகளுக்கும் மேல பொங்கப்பணம் ஆயிரம், ஐநூறுன்னு வெச்சிருப்போம். அந்த வருசம் வெளைஞ்ச வெளைச்சலைப் பொறுத்து, மூணு பொங்கல், ஆறு பொங்கல், பன்னென்டு பொங்கல்னு வெள்ளாமையப் பொறுத்து அது மாறும். கறந்த பாலைக் கொண்டாந்து பட்டிக்கு முன்னால வெச்சிறுவோம்.

    அய்யன் செரின்னு சொன்னவுடனே, பண்ணையத்துல இருக்குற ஆளுக எல்லாரும் தப்பட்டை பலகை, கொட்டு மொழக்குன்னு வாத்தியம் போடுவாங்க. நாங்களும் ஒறம்பரைகளுமா சேந்து களத்து மேட்டுல கும்பிட்டு வந்து, பொங்கல் பொங்கி, தேங்கா பழம் உடைச்சி, பொரி கடலை எல்லாம் வெச்சி சாமி கும்புடுவோம்.

    அய்யன் நாலு பேர்த்தை மின்னாடி வரச் சொல்லுவாரு. ஒருத்தர் கையில ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. ரெண்டாவது ஆளு கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. மூனாவது ஆள் கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. நாலாவது ஆள் கையில வாணாச்சட்டி நெறைய பொங்கலும் குடுத்துருவாரு.

    இப்ப மூனு பேரும், பண்டங்கன்னுக கட்டி இருக்குற கட்டுத்தாறையச் சுத்தியும் போகோணும். மொத ஆள் கையிலிருக்குற மாவிலைய தூக்குப் போசியில உட்டு எடுத்து, “கை கழுவு பட்டியார் கை கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்த ஆள் அதே மாதர, மாவிலைய போசிக்குள்ள உட்டு எடுத்து, “வாய் கழுவு பட்டியார் வாய் கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்து வர்ற ஆளு, ”அரசன்னம் பட்டியார் அரசன்னம்”னு சொல்லுவாரு. நாலாவதா வர்ற ஆளு, ஒவ்வொரு பண்டங்கன்னுக்கும் ஒவ்வொரு கவளம் பொங்கச் சோத்தை ஊட்டியுடுவாரு. இப்படி ஒரு விசுக்காவோ, மூனு விசுக்காவோ, இருக்குற பொங்கச் சோத்துக்கு ஏத்தா மாதர மாடு கன்னுகளுக்கு பொங்கச் சோத்தை ஊட்டியுடுவோம்.

    கை, கால் மூஞ்சியெல்லாங் கழுவிட்டு வந்து அல்லாரும் கட்டியுட்டு இருக்குற பட்டி மின்னாடி, தீப்பந்தத்து வெளிச்சத்துல உக்காந்துக்குவோம். பண்ணையத்து ஆளுகெல்லாம் தண்ணி வாத்து எடுத்துக் குடுத்த புதுத்துணிகளை உடுத்திட்டு வருவாங்க. அவங்களும் எங்களுக்கு எதுத்தாப்பல உக்காந்துக்குவாங்க. அறுவடை எல்லாம் எப்படிப் போச்சு, அடுத்த வருசம் பண்ணையத்துக்கு ஆரெல்லாம் இருக்கப் போறாங்க, அவங்களுக்கு வருசம் அளக்குறது எவ்வளவு, கூலி எவ்வளவுன்னு பேசுவாங்க. நோம்பி கழிச்சிப் பேசிக்கலாமுங்கன்னும் சொல்லீருவாங்க. ஆனா, மாடு கன்னு பாத்துகுறவங்களை முன்னாடி வரச் சொல்லி குத்தம் குறையிருந்தா மன்னிச்சுக்கப்பா; நீ மனசு நிறைஞ்சாத்தான் பட்டி நெறையும்; எதுனாலும் சொல்லிப் போடுன்னு சொல்லிக் கேட்டு மனசு நிறையப் பண்ணுவாங்க.

    அது முடிஞ்சதீமு, கொட்டு மொழக்கு ஆரம்பமாயிரும். முடக்கத்தான் கொடியில பெரிய வடம் செஞ்சி, தண்ணி நெறஞ்சி இருக்குற பட்டிக்கு முன்னாடி ரெண்டு அல்லையிலயும் ரெண்டு பேர் அந்த வடத்தை குறுக்க புடிச்சிட்டு நின்னுக்குவாங்க. இதை கன்னுமெரட்டுன்னு சொல்லிச் சொல்றது. கொட்டு மொழக்கோட, இருக்குற தூக்குப்போசி, இரும்புச்சட்டின்னு கையிக்கு கெடைக்குறதை எல்லாத்தையும் கையில வெச்சிட்டு அடீஅடீன்னு அடிச்சி கொட்டு மொழக்குவாங்க. அந்த கொட்டுமொழக்குக்கு நடுப்புல, பொம்பளையாளுக குலுவை போட, ஆம்பளை ஆளுக “கலகலகலகல”ன்னு மாட்டுக்கன்னை புடிச்சாந்து மிரட்டியுட்டு பட்டிய மிதிக்க வெச்சி அழிச்சுடுவாங்க. மாட்டுக்கன்னும் அந்த வாத்தியம் குலுவை சத்தத்துக்கு மிரண்டு போயி சங்குசங்குன்னு குதி போட்டுட்டு ஓடிப் போகும். ஒரே கொண்டாட்டமா இருக்கும்.

    சித்த நேரங்கழிச்சு, வந்திருக்கவங்க அல்லார்த்துக்கும்  பந்தி உடுவாங்க. மொதல் மரியாதை பண்ணையத்துல வேலை செய்யுற ஆளுகளுக்குத்தா. அவிகளை உக்கார வெச்சி, இலையில அரிசி மாவு, தினை மாவுப் பலகாரமெல்லாம் வெச்சிப் பந்தியுடுவாங்க. அப்புறம் ஒறம்பரைகெல்லாம் சேர்ந்து விருந்து உண்டு போட்டு ஊட்டுக்குப் போக மணி காலையில ரெண்டு மூனுன்னு ஆயிரும்.

    வெடிஞ்சா, மூக்கரசு நோம்பி. பூநோம்பின்னும் சொல்லுவாங்க. வயசுப் பொண்ணுங்க பையங்கெல்லாம், ஊட்டுப் பலகாரத்தை கட்டுச்சோறா கட்டிகிட்டு ஆண்டியூர் கரட்டுல இருக்குற வழுக்காம் பாறைக்குப் போவாங்க. அங்க இருக்குற வழுக்காம் பாறையில வழுக்கி விளையாடுறது, பன்னாங்கல் விளையாடுறது, கூட்டாஞ்சோறு திங்கறது, ஆலமரத்துல தூரி கட்டி விளையாடுறதுன்னு விதவிதமா பொழுதா வரைக்கும் விளையாடிட்டு வருவாங்க.

    நாங்கெல்லாம் சோமவாரப்பட்டியில இருக்குற மாலகோயிலுக்குப் போவம். அங்க, ஆல் கொண்ட மால் திருக்கோயில்னு ஒன்னு இருக்கு. சுத்துபத்து நூத்திப்பத்து கிராமங்கள்ல இருந்தும் பண்ணையத்துக்காரங்க அங்க வருவாங்க. கூட்டம்னா கூட்டம், அப்படியொரு கூட்டமா இருக்கும். அல்லாரும் அவங்கவங்க மாட்டுப் பாலைக் கொண்டாந்து, ஆல் கொண்ட திருமாலுக்கு ஊத்திட்டுப் போவாங்க. அவங்கவங்க காளை மாட்டுக்கு மணி கட்டி, கொட்டுமொழக்கோட ஆட்டம் போட்டுட்டே கோயலுக்கு வந்து கோயல் திருவமுது ஊட்டி விட்டுக் கூட்டிட்டுப் போவாங்க. வண்டி கட்டிட்டு நெறைய சனம் வந்து போகும். கோயல் மைதானத்துல ஆட்டம் பாட்டம்னு வேடிக்கைக நெம்ப இருக்கும். அதுகளைப் பாக்குறதுக்கும் நெறைய சனம் வந்து போகும்.

    அன்னிக்கி சாயங்காலம், ஊர்க்கிணத்துல வெச்சி பூநோம்பி. ஊர்ப் பொம்பளைங்க எல்லாம் வந்து ஒன்னு கூடி கும்மியடிச்சிப் பாடுவாங்க. பாட்டுப் பாடிட்டே ஊர்வழியில, இட்டேரியில, கோயல் தோட்டம் துறவுன்னு நாலாபக்கமும் பாட்டுப் பாடி, கும்மியடிச்சி, முளைப்பாரி எடுத்திட்டு போவாங்க. ஊர்முச்சூடும் போயி ஆவரம்பூவு, துளசிச்செடி, பொன்னரளி, பூவரளின்னு எல்லாம் பொறிச்சிட்டு வந்து சாமிக்கு சாத்திட்டு இராவு முச்சூடும் பாட்டுப் படிச்சி, கும்மியடிச்சி, விளக்குமாவு எடுத்து திருவிழாவை விழாவாக் கொண்டாடுவாங்க. கொட்டு மொழக்கு, உரிமி மேளம், பம்பை மேளம், சிலம்பாட்டம், இறகாட்டம்னு அதுகளும் ஊருக்குள்ள நடக்கும்.

    இப்படியான பூ நோம்பியில மனசு மசிஞ்சு காதல் மலர்றதும் உண்டு. அப்படியான காதல்ல மனசு மசிஞ்ச காத்தவராயன், அவங்க அம்மாவுக்குப் பாடுற பாட்டோட இந்த பொங்கல் பத்தின நம்ப பழமைய முடிச்சிக்கலாமுங்க மச்சே, சரியா? இந்த சொல்றன் கேட்டுகுங்க.

    அங்கே கண்டேன் மெய்மறந்தேன்
    அழகான மாலையவளை
    கண்டு வந்த பூநோம்பிதொட்டு
    கண்ணுறக்கம் இல்லையம்மா
    படுத்தா உறக்கமில்ல
    பாய் போட்டாத் தூக்கம் வருகுதில்லே
    பாத்துவந்த வங்கணத்தியவளை
    சேத்துக்கூட்டியார விடை கொடம்மா
    வாழ்த்தி வரங்குடம்மா
    நானும் போயவர்றேனம்மா
    பாவை வந்தாப் போதுமம்மா!!”

    மாமனும் மச்சானும் விடை பெற்றுக் கொள்கிற வேளையில் ஒரு சேரச் சொல்லிக் கொண்டார்கள், “பொங்கல் பொங்கோணும்! வெள்ளாமை வெளையோணும்! பட்டி பெருகோணும்!!”

     

    Share
  • HEALTHY BODY MAKES HEALTHY MIND (15)

    Sangeetha

    15.KALE

    Kale is the most popular of the greens these days: it’s delicious, versatile, and incredibly nutritious. Kale contains beta-carotene and the antioxidants lutein and zeaxanthin—which are associated with eye health—as well as potassium, vitamin A, vitamin C, fiber, iron, and calcium. Plus, you get 2 grams of protein in a serving.

    Fighting Disease
    Kale aids in releasing toxins in the body that can cause and lead to life-threatening diseases. It helps fight off and alleviate various cancers, especially colon, prostate and ovarian. The vitamin K helps with Alzheimer’s disease as it may forestall the effects of mental aging. The folic acid and B6 provide cardiovascular support and prevent heart disease.
    Detoxification and Weight loss
    The fiber (5 grams in one cup) and sulfur in kale aid with digestion and liver health. The Vitamin C it contains hydrates your body and increases your metabolism, leading to weight loss and healthy blood sugar levels. The fiber in kale also lowers cholesterol.

    One cup of kale has zero fat and only 36 calories and is high in vitamins and antioxidants.The vitamin A and C in kale improves your immune system and fights off viruses and bacteria. So if you feel like you’re getting a cold, add some kale to your diet. It helps more oxygen get to your blood and greatly helps those who are anemic.
    Vitamin A keeps your eyes from optical diseases that come with age. It also helps store vitamins in the retina. The calcium and vitamin K and D keep your bones strong. And if you have stiff joints, the Vitamin C keeps them flexible.

    KALE PORIYAL


    Heat oil in a pan, splutter mustard, cumin seeds, split black gram, dry red chili and curry leaves. Sprinkle asafoetida, add diced onions and garlic. Fry them till slightly translucent, add the chopped kale greens, turmeric and water. Let it cook uncovered for 6 minutes over medium flame or until all the water is absorbed. When it looks fully wilted and dry, add salt and garnish with coconut. Switch off and serve hot with rice.

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-24

     பெருவை பார்த்தசாரதி

    சென்ற மாதம் வெளிவந்த 23 வது தொடருக்குக் கிடைத்த வல்லமை வார விருது, என்னை மேன்மேலும் சிந்திக்க வைத்துவிட்டது. விருதை வழங்கிய எழுத்தாளர் மதிப்பிற்குறிய திவாகர் அவர்கள், தனது முன்னுரையில் “நேரத்தின் முக்கியத்துவத்தை”ப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தபோது, நேரமும், காலமும் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள, இந்த ‘பொன்னான நேரத்தை’ இந்த வாரத் தொடருக்காக அற்பணிக்கிறேன்.

    நேரம் கிடைக்கும் போது, அதைத் திட்டமிட்டுச் செலவிட்டால் அதன் பலனுக்கு எல்லையில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் அனுபவத்தில் உணரமுடியும். நேரத்தை நல்வழியில் செலவிடும்போது, பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது, நண்பர்களின் தொடர்பு விரிவடைகிறது, உறவினர்களுக்கிடையே இருந்த உறவு மேலும் பலப்படுத்தப்படுகிறது, புதிய சுற்றத்தார்களின் நட்பு கிடைக்க வாய்ப்புகள் வருகிறது. இதே நேரத்தை வாசிப்பிலே செலவிடும்போது, பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளமுடிகிறது. நேரத்தைக் கணக்கிட்டு, சரியாகப் பயன்படுத்துபவர்கள் “நேரம் போவதே தெரியவில்லை’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா?… ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வழிகள் பல இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே நேரத்தைச் சேமிக்க முடியும். நேரத்தைச் சிக்கனமாக்கி பயனுள்ள வழிகளில் சிந்தனையைச் செலுத்தும்போது, சிறிது நேரமாவது, இப்பிரபஞ்சத்தில் சந்தித்துக்கொண்டிருக்கும் தொந்தரவுகளிலிருந்து தற்காலிக விடுதலை கிடைக்கும் அனுபவத்தை அனைவரும் உணரமுடியும். பரபரப்பான நம் வாழ்க்கையில், எல்லாவிதமான ஆடம்பரமும் அத்தியாவசியமாகிவிட்ட இன்று, எதையுமே விட்டுக்கொடுக்கும் மனோபாவம் இல்லாமல் ‘நேரம்’ என்பது பல சமயங்களிலெ வீணே வெகுசீக்கிரம் கழிந்துவிடுகிறது என்பதும் உண்மை.

    இன்றைக்கு, கிடைக்கும் நேரத்தில் நாம் அதிகமாக செலவிடுகின்ற இடம் இணையதளம், பொதுவாக அனைவரின் மனதையும் வெகுவாகக் கவரக்கூடிய தன்மையைப் பெற்றது. ஏனென்றால் வேறு எங்கும் தேடியது, இங்கு தேடாமலே கிடைக்கிறது. இவ்வாறு பயனடைபவர்கள், பயனை முழுவதுமாகப் பெற்றபின், தங்கள் கருத்துகளை பதிலாகத் தெரிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் எல்லா வலைப்பூக்களிலும் “comments please” என்ற வாசகத்தைப் படைப்பாளர்கள் பதித்திருப்பார்கள். தனக்கு வேண்டிய அத்துணை தகவல்களையும் முழுமையாகப் பெற்ற பிறகு கூட நன்றி தெரிவிக்காமல் ‘பதில்’ என்கிற விசையை அழுத்துவதற்கே நேரமில்லை சார்’? என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் தமக்கு வரும் அஞ்சல்களை திறந்து பார்ப்பதே கிடையாது. நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு,பல்லாயிரக்கணக்காண அஞ்சல்கள் பார்வைக்காக (Mail-Inbox) தேங்கியிருக்கின்றன, அவை அனைத்தையும் பார்க்க வேண்டுமானால் இனி மறுபிறவி எடுத்தால் கூட முடியாது. அஞ்சல் எழுதுவதாவது? படிப்பதாவது?..அலுவலக வேலை, வீட்டு வேலை, குடும்பச்சுமை, இத்யாதிகள்… இதற்கே நேரம் போதவில்லை, சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் தூங்குவதற்கே நேரமில்லை, இதற்கெல்லாம் ஏது நேரம்?…….என்று அலுத்துக் கொண்டு மேட்ச் (cricket) பார்ப்பதில் மூழ்குபவரும் இருக்கிறார்கள்.

    யதார்த்த எழுத்தாளர் திரு லேணா தமிழ்வாணன் அவர்கள் நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு, நேரத்தைத் திட்டமிட்டு செலவிட பலவழிமுறைகளுடன் கையடக்கமாக ஒரு சிறிய புத்தகம் வெளியிட்டிருக்கிறார், நேரமிருந்தால் வாங்கிப் படித்துப் பயனை நேரத்தின் பயனை அனுபவிக்கலாம். நான் படித்த துணுக்கு ஒன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒருவரிடம் எதைப் பற்றிக்கேட்டாலும் ‘நேரமில்லை’, ‘நேரமில்லை’ என்பாராம். இதற்கு அவருடைய நண்பர் ஒரு உபாயம் சொல்லியிருக்கிறார். உன்னுடைய மனைவி நிறையப் படித்தவர் ஆயிற்றே, உன்னிடம் இருக்கும் சில பொருப்புகளை அவரிடம் ஒப்படைத்து விட்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாமே. அவசியம் ஏற்ப்பட்டால் அவரையே ‘பர்சனல் செகரட்டரியாக’க் கூட நியமிக்கலாம் என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, ‘என்ன உங்கள் மனைவி உங்களுக்கு உதவிகரமாக செயல்படுகிறாரா’?.. என்றாராம். அதற்கு அவர் எல்லாம் சரியாய்ச் சென்றுகொண்டிருக்கிறது, என்னுடைய பாதி வேலையை அவளே கவனிக்கிறா…இப்ப அவ்வளவா!….நேரங்கறது……ஆனா……என்று இழுத்திருக்கிறார். என்ன ஆனா, ஆவன்னா பதில் சொல்லுங்கள் என்று நண்பர் அதட்டலாகக் கேட்டதற்கு, அவர் கூறிய பதில்: ‘அவ என்னோட வேலைகளைச் செய்யும் போது, 24 மணி நேரமும் அவகூட நான் இருப்பதுதான் மிகவும் கொடுமையானது’ என்றாராம்.

    நம் மனதைக் கவருகின்ற ஒரு முக்கியச் செய்தியைப் பற்றி படிக்கும்போது, அச்செய்தியைப்பற்றி எங்காவது ஓரிடத்தில் நேரம் கிடைக்கும்போது குறித்து வைத்தோமானால் அது என்றைக்காவது ஒருநாள் எழுதுவதற்கு உதவும். நேரம் போகவில்ல்லை, வேறு எதுவும் வேலையுமில்லை, என்ன செய்வது, இப்படி தூக்கம் வராமல் படுக்கையில் புரள்பவர்கள் உடனே பேனாவை எடுத்து எதையாவது மனதில் தோன்றுபவைகளை எழுதிப் பாருங்கள், உடனே தூக்கம் வந்துவிடும். நமது குழந்தைகள் சில சமயம், புத்தகத்தை கையில் பிரித்தபடி வைத்துக்கொண்டு அப்படியே தூங்குவது இதற்கோர் உதாரணம். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் கையில் எப்போதும் ஒரு பேனாவும், சிறிய நோட்டுப் புத்தகமும் இருக்கும். எங்காவது பொதுக்கூட்டங்களில் பங்கு பெறும்போது, சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும், சிறு சிறு குறிப்புகளையும், நீதிக்கதைகளையும் ஞாபகம் வரும்போதெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, சந்தர்ப்பம் வரும்போது, தனது உரையில் அச்சிறு குறிப்புகளை நினைவு கூறும் நற்பழக்கம் அவரிடையே இருந்தது.

    தங்களுக்கு தெரிந்த ஒரு தகவல், மற்றவருக்கு தெரிந்திருக்கும் என்று யூகிக்க முடியாது, அதேபோல், மற்றவர்களுக்கு கிடைக்கும் எல்லா தகவல்களையும் நாமும் அறிந்திருக்க வாய்ப்பில்லையாதலால், அறிந்தவைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளும்போது, ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க வழிவகுக்கிறது. இதற்கெல்லாம் நேரம் கிடைக்கும்போது நூலகத்தையும் நம்மோடு இணைத்துக் கொண்டு நிறைய படிக்கவேண்டியிருக்கும். படிப்பதற்கு நேரமில்லை என்று சொல்வதைவிட, கிடைக்கும் நேரத்தை படிப்பதற்குப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்!………பண்டித நேரு அவர்களும், அண்ணல் காந்தி அடிகளும் நேரம் தவறாமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள். அண்ணல் பிறந்து ஒரு நூற்றாண்டு முடிந்து விட்டது, பிறந்த நாளையும், இறந்த நாளையும் கொண்டாடத் தவறியதில்லை. நமெகெல்லாம் காந்தியை நினைவிருக்கிறது, ஆனால் ‘காந்தியக்கொள்கை’ நினைவிருக்கிறதா?.. அண்ணல் அவர்கள் மனிதர்கள் மத்தியிலே தெய்வமாக வாழ்ந்தவர், இந்தியாவின் பிரதமர் பதவிக்கோ, ஜனாதிபதி பதவிக்கோ ஆசைப்படவில்லை, கடைசிவரை எளிமையாக ஒரு சந்நியாசியைப் போல வாழ்ந்து காட்டியவர். நேரம் தவறாமை என்பதும் அவரது கொள்கையில் ஒன்று. டால்ஸ்டாயின் பண்ணையில் பணிசெய்தபோது, பள்ளிச் சிறார்களுக்கு நேரத்தைச் செலவிடுவதற்கு திட்டமிட்டுக் கொடுத்தவர். பள்ளி நேரம் தவிர, மற்ற நேரங்களில் குழந்தைகள் ஏதாவதொரு கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்ரீ கால்லென்பாக், ஸ்ரீ பிரக்ஜி தேசாய் போன்றவர்களிடம் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக் கொண்டார். பள்ளிக் குழந்தைகள் ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் இருக்க, தச்சுவேலை, நூல்நூற்றல், சமையல் போன்ற கைத்தொழிலை பள்ளிச் சிறார்களுக்குப் பயிற்றுவிக்க ஊக்குவித்தார். ஒருமுறை பொதுக்கூட்டத்துக்குச் செல்ல சற்று தாமதமாகி விட்டது. அவர் செல்லும் வழியில் ஒரு சைக்கிளில் சென்றவரிடம் அந்த சைக்கிளை இரவல் வாங்கி அவரே சைக்கிளை மிதித்துச் சென்று சரியான நேரத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக ஒரு நூலில் படித்திருக்கிறேன்.

    இதே போல் பண்டித நேரு அவர்கள் தனியாக லிஃப்டில் மாட்டிக்கொண்டுவிட்டார். பிறகு லிஃப்ட் சரிசெய்யப்பட்டு, வெளியில் வரும்போது அருகிலிருக்கும் அதிகாரிகளிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அவர் போட்ட உத்தரவு என்ன தெரியுமா? “இனிமேல் எல்லா லிஃப்ட்களிலும் தவறாமல் ஒரு நல்ல விஷயங்களைத் தரக்கூடிய ஒரு தரமான புத்தகம் வைக்கப்படவேண்டும்” என்பதே. “எனக்குக் கிடைத்த இந்த அரிய அரைமணி நேரத்தில் நான் பல நல்ல விஷயங்களைப் படித்திருப்பேனே”?…….என்று ஆதங்கப்பட்டுக்கொண்டாராம். அன்றைக்கு இருந்த பெருந்தலைவர்களெல்லாம், நேரம் தவறாமைக்கு (punctuality) மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள், இன்று நாம் சொல்லிப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    ஒவ்வொரு நாளும் எப்படிக் கழிந்தது?..கழிந்த நாட்கள் திரும்ப வருமா?..என்றெல்லாம் நாம் சிந்திக்கிறோம். ஒரு நாளில் இருபத்திநான்கு மணிநேரம் என்பது, அதில் உண்பதற்கு மூன்று மணிநேரம் (மூன்றுவேளை), அரசியல் கலந்த அலுவலகத்தில் பத்துமணி நேரம், மீதி இருக்கும் நேரமெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி, இடையில் ஒன்றுக்கும் உபயோகமில்லாத வெட்டிப்பேச்சு, இத்யாதிகள் போன்றவற்றில் காலம் வீணே கழிந்து விடுகிறது. அனுதினமும், மூன்று வேளை உணவு உண்டு, இரவு தவறாமல் உறக்கம் செய்து மறுபடி திரும்பத் திரும்ப செய்த வேலைகளையே செய்து கொண்டிருக்கின்றோம்!…நமக்கு ஏதாவதொரு அற்பவிஷயம் தெரிந்து விட்டால் போதும், அதையே மறுபடி பேசிப்பேசி நண்பர்களைப் பகைத்துக் கொள்கிறோம், புதிதாக வேறு ஒன்றையும் கற்றுக் கொள்ள மனம் இயம்பவில்லை என்பதைச் சிந்தித்து மனம் வருந்துவதை!……..
    “உண்டதே உண்டு உடுத்ததே உடுத்து
    உரைத்ததே அடுத்தடுத்து உரைத்து
    கண்டதே கண்டு கேட்டதே கேட்டுக்
    கழிந்தன கடவுள் நாள் எல்லாம்”
    என்று நான்கு வரிகளில் மிக அழகாக ‘இறைவன் நமக்களித்த வாழ்நாள்’ என்றும், நித்தமதை வீணே கழிக்கிறோமே!……..என்றும், மாதுறவு நீக்கி மா-துறவு (மகத்தான துறவு வாழ்க்கை) விரும்பி ஏற்ற பட்டிணத்தடிகள் நம்மிடம் சொல்லிச் சொல்லி வருந்துகிறார்.

    மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையோடு ஒன்றி வாழுகின்றன. உணவு, உழைப்பு, உறக்கம் இம்மூன்றையும் காலத்தோடு செய்து முடிக்கிறது. இப்பூவுலகைச் சுற்றியுள்ள கிரகங்களும் இம்மி பிசகாமல் திட்டமிட்டால்போல செயல்படுகின்றன, ஒரு நிமிடம் அவை மாறிச் செயல்பட்டால் இவ்வுலகில் எத்தகய மாற்றம் நிகமும்!…என்பதைச் சற்று சிந்தித்தால் வியப்பாக இருக்கிறதல்லவா?….இவை யாவுமே கிரமப்படி, திட்டமிட்டபடி செய்ல்படுவதால்தான் இயற்கை தன் வேலையைச் செவ்வனே செய்யமுடிகிறது. இப்படி காலமும் நேரமும் இயற்கையோடு இணைந்து செயல்படுகின்றன. நிமிடங்கள் பலருக்கு பொருட்டே இல்லை, ஆனால் அதே நிமிடங்கள் சிலருக்குத் திருப்பு முனையாகவோ, சாதனையாளராகவோ மாற்றுவதற்குத் துணை போகிறது. மகாபாரதத்தில், அருச்சுனன் தவசு பற்றி அறியாதவர் இலர். சிவபெருமானிடமிருந்து ‘பசுபதாஸ்த்திரம்’ என்ற அரிய அஸ்த்திரத்தைப் பெற தன்னைத் முற்றிலுமாக நேரத்தைத் திட்டமிட்டு காலைமுதல், இரவு படுக்கைக்குச் செல்லும் வரையில் தனது அன்றாட அலுவல்களை முறைப்படுத்தி ஒரு நாளில் கிடைக்கும் நேரத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என மாற்றி அமைத்துக் கொள்கிறான். சாதாரண மனிதனைப் போலல்லாது, படிப்படியாக தனது உணவு உண்ணும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்கிறான். முதல் ஆறு மாதத்திற்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் மூன்று வேளை உணவு உண்கிறான், அடுத்த ஆறு மாதம், அதற்கடுத்த ஆறு மாதம் என்று படிப்படியாக ஒரு வேளை உணவைக் குறைத்து, பதினெட்டாவது மாதத்திலிருந்து முற்றிலும் உணவு உண்பதைத் தவிர்க்கிறான். கடைசியில் வெறும் தண்ணீரையும், காற்றையும் உண்டு, சுவாசித்து, ஒற்றைக்காலில் நின்று கடும் தவமிருந்து, அவன் நினைத்த பசுபதாஸ்த்திரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றதாக மாபாரதத்தில் தகவல் உள்ளது. இந்தச் சம்பவத்தை, இத்தருணத்தில் நாம் நினைவு கூர்ந்தால், ஒவ்வொரு மனிதனும் நேரத்தின் அவசியத்தை உணர்ந்து திட்டமிட்டு செயல்படமுடியும்.

    இந்த உலகத்தில் கண் இமைக்கும் நேரத்தில் என்னவெல்லாம் அதிசயம் நிகழ்ந்து விடுகிறது. உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவதொரு அதிசயம் நிகழ்வதாக கூறுகிறார்கள். நமது நினைவுகளை ஒரு அரை நூற்றாண்டுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றால் அன்று நேரத்தைக் கணக்கிடுவதிலும், செலவழிப்பதிலும் அதிக சிரமம் இருந்தது என்பதை உணரமுடியும். ஏனென்றால் அன்று பொழுதைக் கழிப்பதற்கு பொழுது போக்கு சாதனங்கள் (Electronic gadgets) அவ்வளவாக இல்லை. அன்றய சூழ்நிலையில் இணையதளம் (Net), டிவி (TV), கணிணி (Computer), முகநூல் (Facebook) முதலியவை இல்லை. ஒரு நிமிடம்தானே என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம், ஆனால் இந்த ஒரு நிமிடத்தில் நடக்கும் ஒன்றிரண்டு அதிசயங்களைச் சற்று கூர்ந்து படிப்போம்: ஒரு நிமிடத்தில் இந்தியாவில் 54 ஜனனமும், 10 மரணமும் நிகழுகிறது, 780 அலைபேசிகள் (cellphones) உருவாக்கப்படுகின்றன, உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் வருமானம் 15,000 டாலருக்கு மேல், இணையதளத்தில் 7,75,000 பேர் எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள், 141 மில்லியன் மக்கள் மெயில் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள். முகநூலில் (Facebook) 50,000 பேர் உரையாடிக்கொண்டிருக்கும்போதே, 1,35,800 பேர் தங்களது படங்களை தரவேற்றம் (uploading photos) செய்து கொண்டு, 5,10,000 கருத்துக்களும் (comments) எழுதப்படுகின்றன என்பதை இணைய ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இது போல் ஒரு நிமிடத்திற்குள் நடந்தேறும் இன்னும் பல ஆய்வுக் குறிப்புகளை நேரம் போவது தெரியாமல் அடிக்கிக் கொண்டே போகலாம். இதைப் படித்துக் கொண்டிருக்கின்ற நமது இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடித்திருக்கும், 15 முறை கண்சிமிட்டி இருக்கும். அற்ப ஜீவியான கொசு ஒரு நிமிடத்துக்கு 750 முறை தமது சிறகை அடித்துக் கொள்ளுகிறதாம். இத்தகய வியக்கத்தக்க அதிசயங்களை, சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யப்படும்படி கழிந்துகொண்டு இருக்கிறது. நேரம் கிடைக்கவில்லை என்பதைவிட கிடைக்கும் நேரத்தில் பயனுள்ள, படித்த, சேகரித்த நல்ல தகவல்கள், செய்திகள் போன்றவைகளை மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கின்ற பழக்கத்தைக் (Hobby) கடைபிடிக்கும்போது ‘இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்குமே!..என்ற ஆதங்கத்தை எழுத்தாளர்களாக இருப்பவர்கள் உணரமுடியும். ‘ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்’ என்ற பாடலும், ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார், வீணாய் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’ என்ற திரையிசைப் பாடல்களின் வரிகளை நினைவு கூர்ந்து திட்டமிட்டு கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டால் எந்நேரமும் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் நல்ல நேரமாக அமையும் என்பதை உணரலாம்.

    தொடரும்………

    Share
  • செயற்கைக் கதிரியக்கம் ஆக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் & ஜோலியட் கியூரி தம்பதிகள்

    சி. ஜெயபாரதன்

     

    (1897-1956)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada

     

    புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி

    1903 ஆண்டில் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்கு, நோபெல் பரிசை பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரலுடன் பகிர்ந்து கொண்டனர்! அப்போது அவர்களின் புதல்வி ஐரீன் கியூரி ஆறு வயதுச் சிறுமியாக, அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்! முப்பத்தி ரெண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1935 ஆம் ஆண்டு அதே இடத்தில் ஐரீன் கியூரி, அவரது கணவர் பிரடெரிக் ஜோலியட் இருவருக்கும் செயற்கைக் கதிரியக்கம் ஆக்கியதற்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டது. அப்போது ஐரீன் அருகில் அவரது புகழ் பெற்ற தாய் மேரி கியூரி அமர்ந்திருக்க வில்லை! அவர் ரேடியத்தின் வீரியக் கதிரியக்கம் பல்லாண்டுகள் தாக்கி ஓராண்டுக்கு முன் இரத்த நோயில் இறந்து போனார்! பெளதிக விஞ்ஞானத்திற்கு நோபெல் பரிசு பெற்ற முதற் பெண்மணி, மேரி கியூரி! இரண்டாவது பெண்மணி புதல்வி ஐரீன் கியூரி! தாய் உயிரோடு இருந்திருந்தால், நோபெல் பரிசு கிடைத்த புதல்வியைப் பெற்றதற்கு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார் ?

    சில விஞ்ஞானிகள் வெறும் தத்துவ வாதிகள்! சில விஞ்ஞானிகள் சோதனைகளைத் திறம்படச் செய்யும் திறமைசாலிகள்! சில விஞ்ஞானிகள் மேம்பட இயக்கும் நிர்வாகிகள்! ஐரீன் ஜோலியட் கியூரி மேற்கூறிய முத்திறமும் படைத்தவர்! ஐரீன் பாரிஸ் கியூரி ஆராய்ச்சிக் கூடத்தின் ஆணையாளர். அங்கே தனியாக ஐரீன் கணவருடன் ஆய்வுகள் செய்தும் வந்தார்! பிரென்ச் அணுசக்திப் பேரவையில் ஓர் உறுப்பினர். அத்துடன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் ரசாயனத் துறைப் பேராசிரியர்! ஆய்வுக் கூடத்தில் ஐரீன் ஓர் யதேட்சை அதிகாரி! எதுவும் துப்புரவாகத், தூய்மையாகத், துல்லியதாக [Meticulous] இருக்க வேண்டுமென அவரது பதவி அதிகாரத்தைக் காட்டுவார்!

    கதிரியக்கம் கண்டு பிடித்து, உலகப் பெயர் பெற்ற மேரி கியூரி, பியரிக் கியூரி ஆகிய விஞ்ஞானத் தம்பதிகளுக்குப் பிறந்த மூத்த புதல்வி ஐரீன் கியூரி! இதுவரை யாரும் அடையாத இரண்டு நோபெல் பரிசுகளைப் பெற்று, நவீன விஞ்ஞானத்துக்கு அடிகோலிய மேரி கியூரியின் அருமைப் புதல்வி, ஐரீன் கியூரி! ‘தாயைப் போல பிள்ளை’ என்ற முதுமொழியை மெய்ப்பித்து, முதன் முதல் செயற்கைக் கதிரியக்கத்தைச் [Artificial Radioactivity] செய்து காட்டி தாயைப் போல் தானும் தன் கணவருடன் 1935 இல் நோபெல் பரிசு பெற்றவர்! மூலக மாற்றத்தைப் [Transmutation of Elements] புரிந்து ஏராளமான கதிரியக்க ஏகமூலங்களைப் படைத்து [Radioactive Isotopes], மூலகங்களின் அணி அட்டவணையைப் [Periodic Table of Elements] பெரிது படுத்திய விஞ்ஞானப் பெண் மேதை, ஐரீன் ஜோலியட் கியூரி!

    தாய் மேரி கியூரியைத் தெரிந்த அளவுக்கு, தாயைப் போல் வாழ்வு முழுவதையும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கே அர்ப்பபணித்த ஐரீன் கியூரியைப் பற்றி, பலர் அறிய மாட்டார்கள்! புகழ் பெற்ற விஞ்ஞானப் பெற்றோர்களால் புதல்வி ஐரீன் மறைக்கப் பட்டாள்! அவளுடன் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்ட அவளது விஞ்ஞானக் கணவன், பிரடெரிக் ஜோலியட்டால் அவள் பெயர் மறைந்து போனது! விஞ்ஞானி யில்லாத அவரது தங்கை ஈவ் கியூரி 1937 இல் தாயின் சரிதையைப் புத்தகமாக எழுதி, பலரைக் கவர்ந்ததால் ஐரீன் புகழ் சிறிது மறைவு பட்டுப் போனது! கதிரியக்கத்தை விளக்கி, நவீன விஞ்ஞானத்திற்கு பாதை வகுத்த மேரி கியூரியின் கால் தடத்தைப் பின்பற்றிச், செயற்கைக் கதிரியக்கத்திற்கு வழி வகுத்துப், புதிய கதிரியக்க மூலகங்களை [Radioactive Elements] உண்டாக்கி, அணுவைப் பிளக்க அடிகோலிய ஐரீன் கியூரிக்கு நோபெல் பரிசு கிடைத்தாலும், மேரி கியூரியின் புகழ் பன்மடங்கு பெருகியதே தவிர, புதல்வியின் புகழ் உலகில் மறைந்தே கிடந்தது!

    ஐரீன் பிரடெரிக் தம்பதிகளின் விஞ்ஞான வாழ்க்கை வரலாறு

    1897 செப்டம்பர் 12 ஆம் தேதி பாரிஸில் மேரி கியூரி, பியரி கியூரி விஞ்ஞானத் தம்பதிகளுக்கு ஐரீன் மூத்த புதல்வியாய்ப் பிறந்தார். இரண்டாம் புதல்வி பெயர் ஈவ் கியூரி. தாய்மைப் பணிகளை ஒருபுறம் கவனித்துக் கொண்டே, மறுபுறம் விஞ்ஞான ஆராய்ச்சிகளைக் கைவிடாது கண்காணித்து வந்தார், தாய் மேரி கியூரி. மேரியின் முக்கியப் பணி புதல்விகள் இருவருக்கும் உயர்ந்த கல்வியைப் புகட்ட ஆவன செய்வது.

    சிறிய வயதிலிருந்தே, ஐரீன் எதிலும் மிகத் திறமைசாலியாக மிளிர்ந்தாள்! கணிதத்தில் அவள் மித மிஞ்சிய சாமர்த்தியசாலி! பத்து வயதிலேயே ஐரீன் கணக்கில் கொண்டிருந்த வலிமை பளிச்செனத் தெரிந்தது! வல்லுநர்களின் பிள்ளைகள் பத்துப் பேருடன் ஒருத்தியாக, தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளியில் ஐரீன் படிக்கத் தொடங்கினாள். அப்பள்ளியின் ஆசிரியர்கள்: மேரி கியூரி, பெளதிக விஞ்ஞானி பால் லாங்கிவின் [Paul Langevin], ஜீன் பெர்ரின் [Jean Perrin] ஆகியோர்.

    செவைன் கல்லூரியில் [College of Sevigne] உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஐரீன் சார்போன் பல்கலைக் கழகத்தில் [Sorbonne, Now University of Paris] 1914 இல் கணிதமும், பெளதிகமும் பயின்றார். ஐரோப்பாவில் முதல் உலகப் போர் 1916 இல் துவங்கவே, ஐரீன் கல்லூரிப் படிப்புத் தடையுற்றது! அப்போது ஐரீன் தாய் மேரி கியூரியுடன் சேர்ந்து, போரில் காயப் பட்டவர்களுக்குப் பணி செய்ய, எக்ஸ்ரே சாதன வாகனத்தில் பயணம் செய்து முதல் உதவி செய்தாள். மேலும் ஐரீன் அப்பணியைப் பிரான்ஸ், பெல்ஜியம் ராணுவ மருத்துவக் கூடங்களில் நீடித்து, எக்ஸ்ரே ஆய்வுச் சாதனங்களை நிறுவ எற்பாடு செய்தாள். அவ்வரிய சமூக சேவை யானது பாராட்டப் பட்டு, ஐரீன் ராணுவப் பதக்கத்தைப் பெற்றாள்.

    பிரடெரிக் ஜோலியட் 1900 ஆம் ஆண்டில் பாரிஸில் பிறந்தவர். சிறு வயதில் விளையாட்டுப் பிள்ளையாய்த் திரிந்து குடும்பத்தின் சொத்து, சுகங்கள் கரைந்து போகவே, பிரடெரிக் படிப்பில் அக்கறை காட்ட வேண்டிய தாயிற்று! பெளதிகத் தொழிற்துறைக் கல்லூரியில் பொறியியல் பயின்று, பட்டம் பெற்று முதல்வராகத் தேர்ச்சி அடைந்தார். ராணுவச் சேவை செய்த பிறகு, ஆராய்ச்சி செய்ய அவருக்கு உபகார நிதி வெகுமதி யாகக் கிடைத்தது.

    1918 இல் 21 வயதாகும் போது, ஐரீன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் கியூரி ரேடிய ஆய்வுக் கூடத்தில் [Curie Radium Institute], தாயின் துணையாளி ஆகப் பணிபுரியச் சென்றாள். அங்கே நடக்கும் ஆராய்ச்சியில் பங்கெடுத்து ‘போலோனியத்தின் ஆல்ஃபாக் கதிர்கள் ‘ [Alpha Rays of Polonium] என்னும் விஞ்ஞானக் கோட்பாடை எழுதி, 1925 இல் டாக்டர் [Doctor of Science] பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டு பெளதிக விஞ்ஞானி பால் லாங்ஜிவின் சிபாரிசின் பேரில் மேரி கியூரியிடம், உதவி விஞ்ஞானியாய் ஆராய்ச்சி புரிய வந்தார், பிரடெரிக் ஜோலியட் [Frederick Joliot]. ஆய்வுக் கூடத்தில் கதிரியக்கச் சூழ்நிலையில் பணி செய்ய, அவருக்கு முன்னறிவிப்பாய் சோதன முறைகளைச் சொல்லிக் கொடுக்கும் முதல் வேலை ஐரீனுக்குத் தரப்பட்டது! ஐரீன், பிரடெரிக் இருவரும் விஞ்ஞானம், கலைத்துவம், மனிதத்துவம், விளையாட்டு, பொழுது போக்கு ஆகியவற்றில் ஒரே மாதிரி ஆர்வத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் காதல் வயப்பட்டு 1926 அக்டோபர் 28 இல் மணம் புரிந்து, தாய் தந்தையரைப் போன்று விஞ்ஞானத் தம்பதிகள் ஆயினர்! 1928 முதல் ஐரீன், பிரடெரிக் இருவரும் ஒன்றாய் இணைந்து நீண்ட நேரம் விஞ்ஞான ஆராய்ச்சிகள் புரிந்தனர்! 1930 இல் பிரடெரிக் ஜோலியட் எழுதியக் கதிர் மூலகங்களின் மின்னியல் ரசாயனக் [Electrochemistry of Radio Elements] கோட்பாடுக்கு டாக்டர் [Doctor of Science] பட்டத்தைப் பெற்றார். ஐரீன் பிரடெரிக் தம்பதிகளுக்கு ஹெலென் [1927] என்ற புதல்வியும், பியர் [1932] என்ற புதல்வனும் பிறந்தனர்.

    ஐரீன், பிரடெரிக் தம்பதிகள் ஆக்கிய செயற்கை மூலகங்கள்

    பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் 1896 இல் யுரேனிய உப்பு எக்ஸ்ரே போல் கதிர்வீசுவதை முதலில் ஆராய்ச்சியின் போது கண்டார். அதைத் தொடர்ந்து மற்ற தாதுக்களை ஆய்வு செய்த மேரி, பியர் கியூரித் தம்பதிகள் 1898 இல் ஆல்ஃபாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் வீசும் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] ரேடியம், போலோனியம் ஆகிய இரண்டு கதிரியக்க மூலகங்களை முதலில் கண்டு பிடித்தார்கள். ஆல்ஃபாத் துகள் ஓர் ஹீலிய அணு. பீட்டாத் துகள் எதிர்மின் கொடை [Negative Charge] உள்ள ஓர் எலக்டிரான். காமாக் கதிர்களுக்கு எக்ஸ்ரே [X-Rays] போன்று எந்த வித மின்கொடையும் கிடையாது. அடுத்து 1932 இல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] அணுக்கருவுள் இருக்கும் நியூட்ரான் என்னும் புதிய துகளைக் கண்டு பிடித்தார். நியூட்ரான் துகளுக்கும் எந்த வித மின் கொடையும் இல்லை! அதே ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானி கார்ல் டேவிட் ஆன்டர்ஸன் நேர்மின் கொடை யுடைய பாஸிட்ரான் துகளைக் [Positron] கண்டு பிடித்தார். அதன் இருக்கையை ஐரீன் பிரடெரிக் தம்பதிகளும் சோதனை மூலம் நிரூபித்து உறுதிப் படுத்தினர்.

    இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் அணுவியல் மேதை ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு [Ernest Rutherford (1871-1937)] மூலக மாற்றம் புரிய ஆராய்ச்சிகள் செய்தார். அப்பணியில் அவருக்கு 1929 இல் உதவி செய்த ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow], விரைவாக்கிய புரோட்டான் கணைகளைப் [Accelerated Protons] பயன்படுத்தி அணுவைப் பிளக்க எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று கணித்தார். அப்போதுதான் முதன் முதலாக காமாவ் மூலகங்களின் ரசவாதம் அல்லது மூலக மாற்ற முறைகளுக்கு [Artificial Transmutation of Elements] அடிப்படைக் கோட்பாடுகளை அமைத்தார். 1932 இல் அவற்றைப் பயன்படுத்திப் பின்னால் ஜான் காக்கிராஃப்ட் [John Cockcroft (1897-1967)] தனது நேரடி விரைவாக்கியில் [Linear Accelerator], போரான், லிதியம் [Boron & Lithium] ஆகிய இரண்டையும் புரோட்டான் கணைகளால் தாக்கி ஹீலியத்தை வெற்றிகரமாய் உண்டாக்கினார்! அதுவே முதன் முதல் செய்யப் பட்ட மூலக மாற்றம் அல்லது ரசவாதம் [Artificial Transmutation].

    அணுவின் மையமான அணுக்கருவில் புரோட்டான், நியூட்ரான் உள்ளன. சூரியனை மையமாகக் கொண்டு, அண்ட கோளங்கள் சுற்றி வருவதைப் போல், அணுக்கரு நடுவை எலக்டிரான்கள் சுழல்வீதியில் [Orbits] சுற்றி வருகின்றன. புரோட்டான் நேர்மின் கொடையும் [Positive Charge], எலக்டிரான் எதிர்மின் கொடையும் [Negative Charge] கொண்டவை.

    நியூட்ரானுக்கு எவ்வித மின் கொடையும் [Neutral Charge] இல்லை! ஓர் மூலகத்தின் புரோட்டான் எண்ணிக்கை அணு எண் [Atomic Number] என்றும், புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கை நிறை எண் அல்லது பளு எண் [Mass Numer] என்றும் குறிப்பிடப் படுகின்றன. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மூலகங்களின் அணுக்கருவில் புரோட்டான்களின் எண்ணிக்கை ஒன்றாக இருந்து, நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபட்டிருந்தால், அவற்றை ஏகமூலங்கள் [Isotopes] என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரே அணு எண்ணைக் கொண்டு வேறுபட்ட நிறை எண்களைப் பெற்ற மூலகங்களை நிலையான மூலகத்தின் ஏகமூலங்கள் என்று சொல்கிறார்கள்.

    ஐரீன் கியூரியும் பிரடெரிக் ஜோலியட்டும் மூலக மாற்றத்தில் [Transmutation of Elements] புரிந்த அரும் பெரும் விஞ்ஞானச் சாதனைகள் என்ன ? அவர்கள் இருவரும் மேரி கியூரி, பியர் கியூரித் தம்பதிகள் போல் நோபெல் பரிசு பெறும் அளவுக்கு, ரசாயனத்தில் ஆக்கிய தென்ன ? ஐரீனுடைய பெற்றோர்கள் தனித்தெடுத்த ரேடியம், போலோனியம் என்னும் இரண்டு சுயமாய்த் தேயும் மூலகங்களில் [Spontaneous Decay of Elements], ரேடியத்தை விடப் போலோனியம் பதினாறு மடங்கு மித மிஞ்சி நிலையற்று [Highly Unstable], அதன் அணுக்கரு வேகமாய்த் தேய்வடைகிறது! அதாவது ஒரே அளவு எடை எடுத்துக் கொண்டால் போலோனியம், ரேடியத்தை விட அதி வேக முள்ள ஆல்ஃபாத் துகளை அதிக எண்ணிக்கையில் வெளியாக்குகிறது! ஆல்ஃபாத் துகள் என்பது ஹீலிய அணுவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!

    1934 ஆம் ஆண்டில் ஐரீன், பிரடெரிக் இருவரும் செய்து காட்டிய ‘செயற்கைக் கதிரியக்கம் ‘ [Artificial Radioactivity] என்பது என்ன ? தம்பதிகள் தமது ஆராய்ச்சியின் போது போரான், அலுமினியம், மக்னீஷியம் ஆகியவற்றைத் தனித் தனியாக [Boron, Aluminium, Magnesium], அதி வேக ஆல்ஃபாத் துகளைக் கணையாகக் கொண்டு தாக்கிய போது இதுவரை யாரும் அறியாத விந்தை விளைவுகளைக் கண்டார்கள்! முதல் இயக்க முடிவில் கதிர்வீசும் புதிதான நைட்ரஜன் மூலகம் [Radioactive Nitrogen] உண்டானது! அதாவது போரான் மூலகம் நைட்ரஜனாக மாறி விட்டது! இது ஓர் மூலக மாற்றம்[Transmutation of Element], அல்லது ரசவாதம் [Alchemy] என்று சொல்லப் படுகிறது. இந்த அணுக்கரு இயக்கத்தின் சிறப்பு என்ன வென்றால், நைட்ரஜன் கதிரியக்கம் கொண்டிருந்தது! ரேடியம், போலோனியம் போல் அணுக்கருச் சிதைவு அடைந்து தேய்ந்தது! அதன் அரை ஆயுள் [Half Life], அதாவது பாதி நிறை யாகும் காலம் சுமார் 10 நிமிடம்! மேலும் அக்கதிரியக்கம் செயற்கை முறையில் ஆக்கப் பட்டது! முதல் இயக்க விளைவில் உண்டான நைட்ரஜன்13, நிலையற்றுத் தேய்ந்து கதிர் வீசியது! நிலையற்ற நைட்ரஜன்13 நிலையான நைட்ரஜன்14 மூலகத்தின் ஓர் ஏகமூலம் [Unstable Nitrogen13 is an isotope of the stable Nitrogen14].

    [போரான்10] + [ஹீலியம்4] –>[நைட்ரஜன்13]* + [நியூட்ரான்1]

    [அலுமினியம்27] + [ஹீலியம்4] –>[ஃபாஸ்ஃபரஸ்30]* + [நியூட்ரான்1]

    [மக்னீஷியம்24] + [ஹீலியம்4] –>[சிலிகான்27]* + [நியூட்ரான்1]

    [எண்கள் நிறை எண்ணைக் (Mass Number) குறிப்பன. (*) குறியிட்டவை கதிர் வீசும் மூலகங்கள்]

    அடுத்து அலுமினியம், மக்னீஷியம் ஆகிய உலோகங்களைத் தனியே வைத்து ஆல்ஃபா கணைகளைக் கொண்டு தாக்கியதில், அவையும் மாற்றப்பட்டு புதிய செயற்கை மூலகங்கள் அணுக்கரு இயக்கங்களில் விளைந்தன! அவை முறையே ஃபாஸ்ஃபரஸ்31, சிலிகான்28 நிலையான மூலகங்களின் ஏகமூலங்கள். அத்துடன் ஃபாஸ்ஃபரஸ்30, சிலிகான்27 ஆகிய இரண்டு புது மூலகங்களும் கதிரியக்கம் உள்ளவை! ஜோலியட் தம்பதிகள் ஆக்கிய அவ்வரிய மூலக மாற்றங்களைப் பின் தொடர்ந்து, சுமார் 700 மேற்பட்ட கதிர் ஏகமூலகங்கள் [Radio Isotopes] உண்டாக்கப் பட்டு, மூலகங்களின் அணி அட்டவணையில் [Periodic Table of Elements] பின்னால் சேர்க்கப் பட்டன!

    செயற்கை மூலக மாற்றக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரசவாதிகள் [Alchemists] தாமிரம், பித்தளை போன்ற அடித்தள உலோகங்களை மாய மந்திரம், போலி ரசாயன முறைகளைக் கையாண்டு, அவற்றைத் தங்கமாக மாற்றப் பல முறை முயற்சி செய்தார்கள்! ஐரீன், பிரடெரிக் பழைய ரசவாத முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்து, செயற்கை விஞ்ஞான முறையில், மூலக மாற்றத்தைச் [Transmutation of Elements] செய்து காட்டினர்! ரேடியம், போலோனியம், யுரேனியம், தோரியம் போன்ற கன உலோகங்கள் இயற்கையில் தாமாகவே சிதைந்து தேய்ந்து கதிர்களைக் கக்கி, வேறுவித உலோகங்களை விளைவித்தன! அந்த அணுக்கரு இயக்கங்களை விஞ்ஞான மேதைகள் பெக்குவரல், மேரி கியூரி, பியர் கியூரி ஆகியோர் ஆராய்ச்சியின் போது கண்டு பிடித்தனர்! இப்போது ஐரீன், பிரடெரிக் இருவரும் செயற்கை முறையிலும் புது மூலகத்தை, கதிர்வீசும் மூலகத்தை உண்டாக்கலாம் என்று நிரூபித்துக் காட்டினர்! அவ்வரியச் செயற்கைக் கதிரியக்கத்திற்கு ரசாயன விஞ்ஞானத்தின் நோபெல் பரிசையும் 1935 இல் பெற்றார்கள்.

    Carbon Isotopes

    அடுத்து நேர்மின் கொடையுள்ள புரோட்டான்களை [Positively Charged Protons] மின்காந்தத் தளங்களில் கணைகளாய்த் துகள் விரைவாக்கிகளில் [Particle Accelerators] வேகப் படுத்தி, குறியாக மற்ற உலோகங்களை வைத்துப் புது மூலகங்களை விஞ்ஞானிகள் உண்டாக்க ஆரம்பித்தனர். அப்பணியில் கணைகளை வேகப் படுத்த ‘நேரடி விரைவாக்கிகள் ‘ [Linear Accelerators], ‘சுழல் விரைவாக்கிகள் ‘ [Cyclotrons] என்னும் பூத மின் யந்திரங்கள் அமைக்கப் பட்டன. உதாரணமாக கீழே காணப்படும், விரைவாக்கிய புரோட்டான் லிதிய மூலகத்தைத் தாக்கும் போது, அணுக்கரு இயக்கத்தில் புதிய மூலகம் பெரிலியம் விளைகிறது.

    புரோட்டான் கணை, லிதியம் குறி மூலக அணுக்கரு இயக்கம்:-

    லிதியம்7 + புரோட்டான்1 –>பெரிலியம்7 + நியூட்ரான்1

    ஐரீன், பிரடெரிக் தம்பதிகளின் படைப்பான ‘செயற்கைக் கதிரியக்கம் ‘ நவீன அணுக்கரு விஞ்ஞானத்தை [Modern Nuclear Physics] வளர்த்தது! மேலும் மேலும் விருத்தி செய்தது! முதன் முதல் அணுவைப் பிளக்க வழி வகுத்து, அதன் உள்ளிருந்த அளவற்ற சக்தியை வெளியேற்றத் தூண்டியது! மனித இனத்தை அழிக்க உலகில் ராட்சத அணு ஆயுதங்கள் உண்டாக்கப் பாதை இட்டது! ஆக்க வினையாய் மின்சக்தி நிலையங்கள் தோன்ற உதவியது! புதுப்புது மூலகங்கள் ஆக்கிட வழி திறந்தது! விஞ்ஞானிகள் ஆய்வு அணு உலைகளை [Atomic Reactors] அமைத்து, மின்கொடை யற்ற நியூட்ரான் [Neutrons] கணைகளைப் பயன்படுத்தி யுரேனியம், தோரியம் போன்ற கன உலோகங்களைத் தாக்கும்படி செய்து ஆராய்ச்சிகள் செய்தனர்! நீர் அல்லது கனநீர் மிதவாக்கித் திரவம் [Heavy Water Moderator], அல்லது கரித்திரள் மிதவாக்கி [Graphite Moderator] ஆகியவற்றால் நியூட்ரான்கள் வேகத்தைக் கட்டுப் படுத்தி அணு உலைகளில் ஆய்வுகள் செய்தனர். மித வேக நியூட்ரான்கள், சிலவற்றை யுரேனியம் [Uranium238] விழுங்கியது! சில மித வேக நியூட்ரான்கள் யுரேனிய அணுவை இரு கூறாய்ப் பிளந்தன! அதி வேக நியூட்ரன்கள் சில சமயம் யுரேனியம்238 தாக்கிப் புது மூலகம் புளுடோனியத்தை [Plutonium239] முதன் முதலாகப் படைத்தன! பிளவுப் பிண்டமான [Fissile Material] புளுடோனியம்239 அணு ஆயுதங்களுக்குப் பயன் பட்டது!

    மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம்:-

    யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>

    –>மாலிப்டினம்95* + லாந்தனம்139* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி

    மாலிப்டினம், லாந்தனம் இரு பிளவான சிறு துணுக்குகள்!

    ஒவ்வோர் அணுப்பிளவிலும் புது நியூட்ரான்கள் இரண்டு விளையும்!

    அளவற்ற சக்தி அணு ஆயுதத்தில் வெடிக்கிறது! அல்லது

    மின்சக்தி யாக மாற்றி மின்சாரம் பரிமாறுகிறது!

    அதிவேக நியூட்ரான், யுரேனியம்238 அணுக்கரு இயக்கம்:-

    புது மூலகம் புளுடோனியம்239 விளைவு.

    யுரேனியம்238 + நியூட்ரான்1 –>யுரேனியம்239*

    யுரேனியம்239* (தேய்ந்து) –>நெப்டினியம்239* + பீட்டாத் துகள்

    நெப்டினியம்239* (தேய்ந்து) –>புளுடோனியம்239* + பீட்டாத் துகள்

    [(*) குறியிட்டவை கதிர் வீசும் மூலகங்கள் (Radioactive Elements)]

    பிரான்ஸில் முதல் அணுக்கருத் தொடரியக்கம் ஆக்கிய தம்பதிகள்

    1934 ஆம் ஆண்டு முதன் முதலில் இத்தாலிய விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மி நியூட்ரான் கணைகளால் யுரேனிய அணுவைத் தாக்கி, அணுக்கருவை இருகூறாகப் பிளந்தார்! ஆனால் அவ்வரிய விஞ்ஞான சாதனை அவருக்கு அப்போது தெரியாமலே போயிற்று! அணுக்கருவைப் பிளக்க முதலில் ஆலோசனை கூறியவர் ஐரீன் கியூரி! அதன் விளைவைப் புரிந்து கொண்டு ‘அணுப்பிளவு ‘ என்று விளக்கம் தந்த பெண் மேதை, ஆஸ்டிரியப் பெண் விஞ்ஞானி லிஸ் மெயிட்னர்! ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹானிடம் [Otto Hahn] முப்பது ஆண்டுகள் துணையாளி ஆகப் பணி ஆற்றியவர், லிஸ் மெயிட்னர்!

    ஐரீன் கியூரி செயற்கைக் கதிர் ஊட்டம் [Irradiation] சம்பந்தமாக உரையாற்றிய சமயம், நியூட்ரான்களை கணையாய் ஏவி, யுரேனிய அணுவைப் பிளக்க முடியும் என்று கூறியதைப் பின்பற்றி, ஜெர்மனியில் ஆட்டோ ஹான், அவரது தோழர் ஸ்டிராஸ்மன் இருவரும் 1938 இல் யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தை உண்டாக்கினார்கள்! ஆனால் அந்த இயக்க விளைவில் உண்டான சிறு கதிர்த் துணுக்குகளைக் கண்டு வியந்ததைத் தவிர, அதன் முக்கியத்துவத்தை அவர்களால் விளக்க முடியவில்லை!

    அந்த ஆண்டு செப்டம்பரில் ஐரீன் கியூரியும், அவரது துணையாளி ஸாவிட்ச்சும் [P. Savitch] ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் செய்த யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தைத் திருப்பிச் செய்தார்கள். அப்போது அணுப்பிளவின் ஒரு சிறு துணுக்கான லாந்தனம் [Lanthanam] மூலகத்தின் கதிர்வீச்சைக் கண்டார்கள். ஆனால் லிஸ் மெயிட்னர் அவரது நண்பர் ஆட்டோ பிரிஷ் [Otto Frisch] இருவரும்தான் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் புரிந்த அணுக்கரு இயக்க நிகழ்ச்சியை, ‘அணுப்பிளவு ‘ [Fission] என்று முதன் முதலில் விளக்கப் படுத்தி விஞ்ஞான வெளியீட்டில் உலகுக்குப் பறைசாற்றினர்.

    அவ்வெளியீட்டைப் படித்தபின் உடனே பிரடெரிக் ஜோலியட், அணுப்பிளவைப் பற்றி ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு பிளவும் வெளியாக்கும் பிளவு சக்தி 200 MeV என்றும், பிளவு விளைவுத் துணுக்குகள் புரோமின் [Bromine, Atomic Number 35] முதல் சீரியம் [Cerium, Atomic Number 58] வரையுள்ள மூலகங்களுக்கு இடைப்பட்டவை என்றும் முதலில் அறிவித்தார்! அத்துடன் நிகழும் ஒவ்வொரு யுரேனிய, நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தின் விளைவில் புதிதாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் உண்டாகின்றன என்றும், அவற்றைக் கட்டுப்படுத்தி அணுக்கருத் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] ஏற்படுத்தி, அளவற்ற சக்தியை வெளிப்படுத்தலாம் என்றும் முதன் முதல் உலக விஞ்ஞானிகளுக்கு முன்னறிவித்தார்!

    1940 இல் ஹிட்லர் பிரான்ஸை கைப்பற்றவே ஐரீன், பிரடெரிக் இருவரது அணுப்பிளவு ஆராய்ச்சிகள் மூடப் பட்டன! ஐரீன் தன்னிரு பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு சுவிட்ஜர்லாந்துக்கு ஓடி அங்கே சரண் புகுந்தார்! பெயரை மாற்றிக் கொண்டு, தனியாக பிரடெரிக் மட்டும் பாரிஸில் காலம் தள்ளினார்! 1944 இல் நேச நாடுகள் போரிட்டுப் பிரான்ஸை விடுவித்ததும், பிரசிடென்ட் சார்ல்ஸ் டிகாலே [Charles de Gaulle] நாட்டைச் சீர்ப்படுத்தினார். பிரடெரிக் பிரான்ஸின் அணு ஆராய்ச்சித் துறைகளை ஒழுங்கு படுத்தி, பிரான்ஸில் அணுசக்திப் பேரவை [French Atomic Energy Commission] நிறுவ ஏற்பாடுகள் செய்தார்! 1946 இல் டிகாலே பிரான்ஸ் அணுசக்திப் பேரவையைத் திறந்து வைத்து, பிரடெரிக் ஜோலியட் அதிபதியாக நியமிக்கப் பட்டார்!

    1942 இல் இத்தாலிய அமெரிக்க விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மி, அணு ஆயுதத்தைப் படைக்கச் சிகாகோவில் முதன் முதல் அணுக்கருத் தொடரியக் கத்தைச் செய்து காட்டி, அணுயுகத்தின் பிரம்மாண்டமான நுழை வாயிலைத் திறந்து வைத்தார்! 1948 பிரான்ஸின் முதல் ஆராய்ச்சி அணு உலை பிரடெரிக் மேற்பார்வையில் சான்டில்லன் கோட்டையில் [Fort de Chantillon] இயங்க ஆரம்பித்தது! பிரான்ஸில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஐரீன் கியூரியும், அவரது கணவர் பிரடெரிக் ஜோலியட்டும் அணுக்கருத் தொடரியக்கம் செய்து காட்டி, அணுசக்தி ஆக்க வரலாற்றில் முதல்வர் வரிசையில் அவர்களும் நின்று உலகப் புகழ் பெற்றார்கள்! 1960 பிப்ரவரி 13 இல் பிரான்ஸ் தனது முதல் அணுகுண்டை ஸகாரா பாலை வனத்தில் வெடித்துச் சோதனை செய்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய அணு ஆயுத வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து கொண்டது!

    Natural Isotopic Abundances of light stable isotopes.

    Hydrogen                Carbon                 Nitrogen                     Oxygen

    1H – 99.984%     12C – 98.89%      14N – 99.64%        16O – 99.763%

    2D – 0.0156%      13C – 1.11%         15N – 0.36%           17O – 0.0375%

    +++++++             ++++++               ++++++              18O – 0.1995%

    மனித இனத்திற்குப் பயன்படும் கதிரியக்க ஏகமூலங்கள்

    கதிரியக்க ஏகமூலங்கள் [Radioactive Isotopes] மனித இனத்துக்குப் பயன் படாத துறையே இல்லை! உலகெங்கும் மருத்துவம், தொழிற்துறை, பொறியியல், வேளாண்மை, விஞ்ஞானம் மற்றும் பல ஆராய்ச்சிகள் செய்ய நூற்றுக் கணக்கான கதிர் மூலகங்கள் உபயோகம் ஆகின்றன! நேரடி, சுழல் விரைவாக்கி யந்திரங்கள் [Linear, Cyclotron Accelerators], அணு உலைகள் ஆகியவற்றில் கதிர் ஏகமூலங்கள் தயாரிக்கப் படுகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏகமூலங்கள் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் பட்டுள்ளன! அவற்றில் இயற்கையாகக் கிடைப்பவை 276. கதிரியக்கம் கொண்டவை 740.

    அமெரிக்காவில் டென்னஸி மாநிலத்தின் ஓக் ரிட்ஜ் அணு உலைகளில் [Oak Ridge Atomic Reactors] நூற்றுக் கணக்கான கதிர் ஏகமூலங்கள் உற்பத்தியாகி, உலகம் எங்கும் அனுப்பப் படுகின்றன. அவற்றில் 78% மருத்துவ ஆய்வுகளுக்கும் [Medical Diagnosis], புற்று நோய் குணப்பாடுக்கும் [Cancer Treatment] பயன் படுகின்றன! 12% ஏகமூலங்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும், 6% தொழிற்துறைப் பணிகளுக்கும், 4% வேளாண்மை விருத்திக்கும் உபயோக மாகின்றன. மருத்துவ, உயிரியல் பணிகளுக்கு ஹைடிரஜன், கரி, ஸல்ஃபர், ஃபாஸ்ஃபரஸ், குளோாரின், கால்ஸியம், ஆர்செனிக், ஐயோடின், வெள்ளி, தங்கம் ஆகியவற்றின் ஏகமூலங்கள் தயாரிக்கப் படுகின்றன. இப்போது அகில நாடுகளும் தமது அணு உலைகளில் எண்ணற்ற கதிர் ஏகமூலங்களை ஆக்கி வருகின்றன.

    ஐரீன் பிரடெரிக் தம்பதிகளின் இறுதிக் காலம்

    முதல் உலகப் போரின் சமயத்தில் காயப் பட்டோர்களுக்குச் சிகிட்சை செய்ய எக்ஸ்ரே கதிர்ப்பட [Nurse Radiographer] பணிப் பெண்ணாக ஐரீன் கியூரி, தாயுடன் சேர்ந்து சேவை செய்தார். பிரென்ச் விஞ்ஞானக் கழகம், [French Academy of Science] பிரென்ச் மருத்துவப் பேரவை இரண்டும் நோபெல் பரிசு பெற்ற பிரடெரிக் ஜோலியட்டுக்குச் சிறப்புநர் தகுதியை அளித்தது. ஆனால் நோபெல் பரிசு பெற்ற பெண்மணி ஐரீன் கியூரிக்கு பிரென்ச் விஞ்ஞானக் கழகம் சிறப்புநர் மதிப்பைத் தர, பிரென்ச் ஆடவர் குழு மறுத்தது! அதே போல் இரட்டை நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரிக்கும் பிரென்ச் விஞ்ஞானக் கழகம் அங்கத்தினர் பதவி கூடத் தர எதிர்த்தது! ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ‘ [Liberty, Equality & Fraternity] என்று பிரென்ச் புரட்சியின் போது முழக்கிய பிரான்ஸ், விஞ்ஞானக் கழகத்தில் சமத்துவத்தைப் பெண்ணினத்திற்கு அளிக்காமல் அவர்களை இரண்டாம் தரக் குடியினராகத் தாழ்த்தியது, வருந்தத்தக்க செய்தி!

    1956 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் ஐரீன் ஜோலியட் கியூரி கதிரியக்கச் சூழ்நிலையில் நீண்ட காலம் பாதிக்கப் பட்டு, இரத்த நோயில் [Leukemia] தாய் மேரி கியூரி போல் தானும் அவதியுற்று, பாரிஸில் 59 ஆவது வயதில் காலமானார்! பிரிட்டானியில் [Brittany] ஓய்வெடுக்கச் சென்ற போது விபத்தில் காயமுற்று, சில நாட்கள் கழித்துப், பிரடெரிக் 1958 ஆகஸ்டு 14 ஆம் தேதி தனது 58 ஆவது வயதில் காலமானார். தாய் ஐரீன் கியூரி, தந்தை பிரடெரிக் ஜோலியட் இருவரும் விட்டுச் சென்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் புதல்வி ஹெலனும், புதல்வன் பியரும், தன் பெற்றோர் கடைப்பிடித்தது போலப் பரம்பரையான குல வித்தையைப் பின்தொடர்ந்தனர்!

    ***************

    Information :

    1.  http://www.answers.com/topic/irene-joliot-curie (Biography: Irene Joliot-Curie)

    2.  http://en.wikipedia.org/wiki/Ir%C3%A8ne_Joliot-Curie [January 3, 2013]

    3.  http://en.wikipedia.org/wiki/Fr%C3%A9d%C3%A9ric_Joliot-Curie  [December 3, 2012]

    +++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 8, 2013 [R-1]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • அந்திவானமும், அவனும் அவளும் – 2

    திவாகர்

    நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளிக்கிறார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன். இறைவா.. எப்படி விவரித்தால் இவள் முதலில் நம்புவாள்..

    “என்ன யோசிக்கிறாய்.. ஏதாவது கதை அளக்கலாமா இந்தப் பெண்ணிடம் என்று யோசித்துப் பார்க்கிறாயோ.. பொய் சொன்னால் எனக்குத் தெரிந்து விடும்..”

    ஏதோ ஒரு உத்வேகத்தில் அவளிடம் அங்கே அன்று நடந்ததை அப்படியே சொன்னான். அவன் கண்ணுக்கு அவள் சின்னப் பெண்ணாகத் தோன்றவில்லை.. ஆருயிர் நண்பன் ஒருவன், தன் நலம் விரும்பி, தன்னை எப்போதும் சீண்டிக் கொண்டிருக்கும் சகோதரி, தன்னை அரவணைத்துப் பாலூட்டும் தாயாகத்தான் நினைத்தான்..

    “நான் மெய்யாகத்தான் சொல்கிறேன்.. என் இரு கண்களாலும் அந்தத் தாமரைச் செங்கணானைப் பார்த்தேனே” கெஞ்சினான் கிருஷ்ணா..

    “ஓ.. பார்த்து விட்டாயா.. ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே.. நான் சொல்லவில்லை அப்போதே.. விண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தால் சற்று தீர்க்கமாகப் பார்த்தாலே அவன் தெரிய வருவான்.. அன்று உனக்கு அவன் தெரிந்ததால் அப்படி ஒன்றும் விசேஷமில்லை..”

    ”கண்ணம்மா! என் செல்லப்பெண்ணே!.. இப்படி ஒரேயடியாக எனக்குக் கிடைத்த தரிசனத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடாதே! விண்ணிலே எல்லாருக்கும் அந்தத் தரிசனம் கிடைத்து விட்டதா.. என் ஒருவனுக்கு மட்டும் ஏன் அப்படித் தெரியவேண்டும், நீயே சொல்லேன்..”

    “அடடா. ஏன் இப்படி புலம்புகிறாய்? ஒன்று சொல்லட்டுமா.. நீ அவனை சரியாக தரிசனம் செய்யவில்லை என்று கூட சொல்வேன்.. சரி, நீ பார்த்த விஷ்ணுவின் மார்பில் என்ன கண்டாய்?

    ”அதுதான் சொன்னேனே.. கௌஸ்துபமணியைப் பற்றி..”

    “நன்றாக உற்றுப்பார்த்தாயா?”

    ”பார்த்தேனே!”

    ”இல்லை பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் அங்கே லக்குமியும் உள்ளே இருப்பதை உணர்ந்திருப்பாய்.. இல்க்குமி அவன் மார்பில் குடி கொண்டவள் அல்லவா..!”

    ”ஆமாம்.. அது என்னவோ சரியானதுதான்.. ஆனால் அவள் ஏன் அவனுடன் கருடபக்‌ஷியில் பக்கத்தே அமர்ந்து  தரிசனம் தரவேண்டும்?”

    சிரித்தாள் சின்னப்பெண். “அவள் மகா கருணையுள்ளவள்.. கௌஸ்துபமணியில் பார்க்க முடியாதவன் தனியாகவாவது பார்க்கட்டுமே என்று காட்சியளித்திருக்க வேண்டும்.. தமிழில் சொல்கிறேன்.. கேட்டுக் கொள்!”

    ஆணையிடுவது போல வந்த குரலில் அடிபணிவதுபோன்ற நிலைக்கு ஆளானான்.. “அப்படி சொல் செல்லம்மா!”

    இலக்குமியின் திருமார்பில் ஒளிரும்
    ஆரத்தின் ஒளி நீயே உன் திருமார்பில்
    ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
    ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
    ஒளிந்திருந்தும் இந்த மணிகளின் வழியே
    தெள்ளத் தெளிவாய் வெளியே
    தெரியும் விந்தையை என்னென்பேன்

    அப்படியே உருகிப் போனான் கிருஷ்ணதேவன்.. யார் இந்தப் பெண்.. தெய்வமா.. மகாலட்சுமியா, தன்னை என்றும் காக்கும் குலதெய்வமா.. மகேசுவரன் பத்தினி மகாசக்தியா.. இல்லை இல்லை இவள் நம் திம்மராசுவின் பேத்திதான். அவரும்தான் எத்தனையோ சமயங்களில் மிக நேர்த்தியாக எத்தனையோ விஷயங்கள் சொன்னவர் ஆயிற்றே.. கனவிலிருந்து வெளி வந்தவன் போல மயக்க நிலையில் இருந்தான் கிருஷ்ணா.

    ”அதோ பார் செவ்வானம்.. மெல்ல மெல்ல அந்திவானம் வெள்ளையிலிருந்து செம்மைக்கு மாறி வரும் விந்தையைப் பார்.” அவள்தான் சந்தோஷமாக கையைத் தட்டிக் கொண்டே கூவினாள்.

    அவளோடு சேர்ந்து அவனும் மேற்கே உயரப் பார்த்தான்.. ஆமாம் எத்தனை அழகிய வானம்.. ஆஹா வெண்மை நிறம் போய் பல நிறங்களாகக் கலந்து செம்மையில் முடிகிறதே.. இந்த வானத்தை ஏன் குருஷேத்திர பூமிக்கு ஒப்புவமையாக்கினாரோ அந்த தமிழ்க் கவிஞர்..

    ”இந்த செவ்வானத்தைப் பார்த்தால் உனக்கு என்ன ஞாபகம் வருகிறது..”

    “ஓ அதுதானே ஏற்கனவே பேசினோமே.. யுத்தகளம் பற்றி”

    அவள் சிரித்தாள்.. அந்த அந்தி மாலை நேரத்தில் அவள் கண்களில் கூட அந்த சிரிப்பின் மலர்ச்சியைக் கண்டான்.

    “எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?”

    “சொல்லேன்..”வியப்பாகக் கேட்டான் கிருஷ்ணா.

    “அந்த செங்கணான் விழிகள்தான் இந்த அந்தி வானம்.. நன்றாகப் பார்.. எப்படி சிறுகச் சிறுக விழித்து எழுகிறான் பார்.. வெண்மையானவை எல்லாம் நிறம் மாறி தன் கண்ணின் நிறத்துக்குக் கொண்டு வரும் அற்புதம் பார்த்தாயா.. தமிழில் கோதையின் பாடல் கேட்டதுண்டா..

    ”கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல்  விழியாவோ”.. என்று பாடினாளே.. பார்த்தாயா.. நீ அன்று பார்த்த தாமரைக் கண்ணானும் இவனும் ஒன்றுதானே..

    கிருஷ்ணதேவன் மறுபடி அந்தி வானத்தைப் பார்த்தான். தான் முன்னம் பார்த்த விஷ்ணுவின் ரூபமும் கூடவே அவன் நினைவில் வந்தது.. ஆமாம். அவன் செங்கணான்.. ’அந்தி வானத்து செங்கண்ணா! நீ எப்படியெல்லாம் காட்சி தருகிறாய்.. நான் சாதாரண மந்த புத்தியுள்ள மானிடன் என்பதால் முழு உருக்கொண்டு நான் மனதில் வேண்டியதற்கேற்ப அன்று அர்ச்சாரூபத்தில்  ஸ்ரீதேவி சமேதராக காட்சி தந்தாய்.. அதை நானல்லவோ கர்வப்பட்டு அரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் பேசிக்கொண்டு வருகிறேன்.. இதோ இன்று இந்த தெய்வீகப் பெண் மூலம் இயற்கையாகவே உன்னைப் பார்க்க முடியும் என்ற எளிய தத்துவத்தைப் புரிய வைத்தாய்.. நீ எங்குதான் இல்லை.. எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் பரமாத்மாவே.. உன் கருணையை இவள் மூலம் தெளிய வைத்தாயே..’

    கிருஷ்ணதேவன் இமைகளில் கண்ணீர் ததும்பியது.. நாம் திம்மராசுவைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்டாளின் பாடல்களுக்காகத்தானே நாமே அவள் ஆசி பெற இந்த ஊர் வந்தோம்.. இறைவனே சமயம் பார்த்து இந்தப் பெண்ணை இங்கே அனுப்பினானோ.. பகவான் இயற்கையாகவும், தேவதேவனாகவும் காட்சி அளிப்பவன் மட்டுமல்ல, அவன் ’மனுஷ்ய ரூபிணே’ என்பது கூட எத்தனை சத்தியம்.. திம்மராசு மாமாவின் பேத்தியால் எத்தனை அறிந்து கொண்டோம்..

    ”அடடே.. நீ இப்படி யோசித்துக் கொண்டே இரு.. இதோ இருள் வந்துவிட்டது.. என்னை தாத்தா வீட்டில் தேடுவார்.. உனக்கென்ன குதிரை இருக்கிறது.. நீ பறந்து வந்து விடுவாய்.. நான் இப்படியே வயலுக்குள் குறுக்காகப் புகுந்து அல்லவா ஓடவேண்டும்.”

    அவள் இனிய குரலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவன் மனம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தததால் அவனிடம் இப்போது சலனம் இல்லை.. அவன் தலையசைத்தான்…

    “பார்த்தாயா.. முதலில் பார்த்தபோது ஏதோ பெரிய மனிதன் போல வெளி வேஷம் போட்டிருக்கிறாய்.. ஒரே மாயவார்த்தை பேச்சுதான்.. குதிரையில் ஏறி வா, நான் வேண்டுமானால் நடந்து வருகிறேன்.. என்றெல்லாம் அழைத்தாய்.. இப்போது பார்.. மௌனியாகிவிட்டாய்.. ஒரு வார்த்தைக்குக் கூட என்னைக் குதிரையில் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லவில்லை.. போகட்டும்.. எனக்கு வயலில் ஓடுவதெல்லாம் நித்தமும் பழக்கம்தான்.. நீ சொன்னாயே என்று நம்பி உன்னுடன் குதிரையில் இன்று வந்தால் நாளையும் இந்த ஆசை பெருகும்.. வேண்டாம்.. வேண்டாம்.. நீ மட்டும் நிதானமாக வா..”

    கிருஷ்ணாவின் கண்கள் இன்னமும் கலங்கித்தான் கிடந்தன.. அவள் அதைக் கண்டு விட்டபின்னாலும் கூட சிரித்தாள்..

    “ஒரு முக்கியமான விஷயம்.. என்னைப் பற்றி தாத்தாவிடம் கோள் மூட்டி விடாதே.. பிறகு நாளை என்னால் இங்கே வரமுடியாது.. விஷ்ணுவின் கண்களைக் காணவும் முடியாதபடி செய்யாதே.. அட, என்னைக் கண்டதாகவே பேசாதேயேன்..என்ன.. வரட்டுமா..

    சொன்னவள் அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் குறுக்கே கிடந்த வயல்களின் ஒத்தையடிப் பாதையில் ஓடத் துவங்கியதும்தான் சற்று நினைவுக்கு வந்தான்..

    “அட.. பார்த்துப்போ செல்லம்மா.. ஓடாதே.. ஓடாதே.. விழுந்து விடப்போகிறாய்”

    பரிவுடனே வந்த வார்த்தைகள் காற்றில் கலந்து வீணாகிப் போனதுதான்.. அவள் ஓட ஓட  அவள் உருவமும் தன் கண்களுக்கு மறைந்ததோடு இருளும் சட்டென வருவது போல வந்துவிட்டதால் அவன் அவள் போகும் திக்கையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.. போகட்டும்.. திம்மராசு மாமாவுக்குதான் எத்தனை பாக்கியம்.. இவர் பிரதம அமைச்சராக இத்தனை வருடங்கள் நல்லாட்சி தந்து பரிபாலனம் செய்தார் என்றெல்லாம் புகழ்ந்தோமே.. அதுவா பாக்கியம்.. இல்லை.. இவளைப் பேத்தியாகப் பெற்றதுதான் அவர் பாக்கியம்.. அப்படி பாக்கியம் செய்த மகானைத் தான் காணப்போவதும் தான் செய்த முன்வினைப் பயனே..

    குதிரையில் ஏறி மெல்லச் செல்லுமாறு அதைச் சிமிண்டினான்.. நிதானமாகவே செல்வோம்..அவள் போன பின்பு அங்கு செல்வோம்.. அதுதான் முறையும் கூட..இவளைப் பற்றி நாம் எதுவும் சொல்ல வேண்டாம்தான்.. ஆனால் மீண்டும் ஒருமுறை இந்த அழகிய கண்மணியைப் பார்க்கலாம் அல்லவா..

    குதிரையும் சற்று நிதானமாகவே நடந்ததுதான்.. ஆனாலும் தூரம் அதிகமில்லை என்பதால் ராஜபாட்டை பிரிந்து ஊருக்கு செல்லும் வழியாகக் குறுகி வழிவிட்டது.. இருள் படர்ந்தாலும் அங்கே தெரிந்த அந்தக் கோயிலின் கோபுரத்தில் ஒவ்வொரு நிலையிலும் வைக்கப்பட்டிருந்த பெருந்தீபங்கள் அதன் உயரத்தை அழகாகக் காண்பித்ததோடு, அந்தக் கோபுரத்தின் அழகையும் உயர்த்திக் காண்பித்தன. சமீபத்தில் கட்டப்பட்ட நெடிதுயர்ந்த கோபுரம்.. பகலில் பார்க்கவேண்டுமே இதன் அழகை..’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன் கோயில் அருகே குதிரையை நிறுத்தினான்.. கோயிலுக்குள் செல்லாமல், கோயில் அருகாமையில் உள்ள அந்தக் குடிலுக்குள்தான் அவன் காலடிகள் பட்டன..

    பெரிய குடில்தான்.. இந்த மூன்று வருடத்தில் எத்தனையோ முறை வந்துவிட்டோம்.. திம்மராசு மாமா இந்தக் கோயில் அருகேதான் இருக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்து கட்டிக் கொண்ட குடில் இது.. பகலில் வெளியிலிருந்து பார்த்தால் குடிசை போலத்தான் இருந்தாலும் உள்ளே அதன் தெய்வீகத்தைப் பார்த்து யார்தான் பரவசப்படமாட்டார்கள்..

    அவன் உள்ளே நுழைந்ததுமே எதிர்வந்து அழைத்துக்கொண்டார் திம்மராசு..

    “நேற்றே வருவாய் என்று காத்திருந்தேன் கிருஷ்ணா, அப்படித்தான் செய்தி வந்தது.. இருக்கட்டும்.. மதுரையில் நண்பர்களைப் பிரிந்து வருவது சற்று கஷ்டம்தான்.. அதுவும் கூடவே அல்லுடு ராமராஜுவும் வந்திருக்கிறான் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றான் உன்னுடைய ஆள். அவனிடம் சற்று எச்சரிக்கையாகவே இருக்கச்சொல்.. அச்சுதன் இப்போது எங்கே இருக்கிறான்?”

    சடசடவென கேள்விகள் கேட்ட தன்னுடைய முன்னாள் முதன்மை அமைச்சரை முதலில் பாதம் தொட்டுப் பணிந்தான் கிருஷ்ணா.. திம்மராசு இப்போதெல்லாம் அரசியல் அதிகம் பேசுவதில்லை என்றாலும் மாமாவுக்கு என்றும் தங்கள் குலத்து நலன் முக்கியம் என நினைப்பவர் ஆயிற்றே..

    “தம்பி அச்சுதன் காளஹத்தி கோபுரத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறான் இல்லையா.. அங்குதான் தற்சமயம் வாசம்.. அல்லுடுவைப் பற்றி நன்றாகவேத் தெரியும்.. சிறுவயது அல்லவா.. சற்று துள்ளும்தான்.. மதுரையில் நாகம நாயகனுக்கும் செஞ்சி வையப்ப நாயகனுக்கும் சில சண்டைகள்.. அச்சுதன் பக்கத்தில் இருந்தால் சண்டையிட்டிருக்கமாட்டார்கள்.. இருவருமே அவனுக்கு நண்பர்கள்.. அல்லுடு ராமராஜு துடுக்கால் இருவருக்கும் கோள் மூட்டி விட்டான்.. நான் சற்றுப் பேசி சரிசெய்து விட்டுதான் வந்தேன். மாமா! தாங்கள் இல்லாத விசயநகரம் எனக்கு தலைநகரம் இல்லை.. தலைவலி நகரம்.”

    “ஓ.. அதை விடு, சென்ற மாதம் ஸ்ரீகாகுள நிகழ்ச்சியை நினைத்து நினைத்து நெஞ்சம் குளிர்ந்து கொண்டிருக்கிறேன்.. அதைப் பேசு.. அரசியலே வேண்டாமென்றுதானே இங்கே வந்தேன்.. வா.. உட்கார்ந்து பேசுவோமா..” என்ற திம்மராசு, சட்டென ஞாபகம வந்தவராக ”இல்லை.. இல்லை.. இரவுப் பூசைக்குக் கோயிலுக்குள் சென்று திரும்பாவிட்டால் என் பேத்திக்குக் கோபம் வந்து விடும்.. வா.. முதலில் அங்கு போவோம்.. ஆனாலும் பிரயாணக் களைப்புடன் இருப்பாய்.. ஏதானும் சத்தன்னம் அருந்துகிறாயா” என்றவர் அவன் பதிலுக்குக் காத்திராமல் குடில் உள்ளே சமையல்கட்டுக்குச் சென்றுவிட்டார்.. சென்றவர் உடனடியாகத் திரும்பவும் வந்தார். கிருஷ்ணாவுக்கு விஷயம் புரிந்தது. உதட்டில் ஒரு மென்னகை கூட வந்தது. சுட்டிப் பேத்திதான் முழுவதும் தின்றுவிட்டு ஏப்பம் விட்டுதான் அங்கே பாறைக்கு வந்தாள் என்ற விஷயம் இவருக்கு எப்படித் தெரியும்..

    “உனக்கு அதிர்ஷ்டமில்லை கிருஷ்ணா! மதியம் நைவேத்தியம் செய்துவிட்டு, நானும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு மீதியில் பாலை சற்று அதிகமாகவே ஊற்றி வைத்தேன்.. இப்போது பார்த்தால் சத்தன்னப் பானையில் ஒரு பருக்கை கூட இல்லை.. இந்தப் பூனைகளின் தொல்லை சில சமயங்களில் தாங்கமுடியவில்லை கிருஷ்ணா.. போகட்டும் அவைகளுக்கென பிரத்தியேகமாக யாராவது உணவிடுவார்களா.. என்ன.. பூனையும் தெய்வ ரூபம்தானே.. கோயில் மடைப்பள்ளியில் உனக்குப் பிரத்தியேகமாக சுடச் சுடச் செய்து வைக்க வைத்தால் போயிற்று..”

    கிழவர் முகம் சற்று வாட்டமாக வைத்துக்கொண்டு பேசினாலும் அந்தச் சமயத்திலாவது சட்டியில் உள்ள சத்தன்னத்தைத் தின்று விட்டது அவர் பேத்திதான் என்பதைச் சொல்லலாமா என்று யோசித்தான்.. வேண்டாம், அது தவறு.. குழந்தைக்குப் பசித்திருக்கும்.. பாவம்..

    கொடுத்து வைத்தவள்.. இல்லை இல்லை.. இவர்தான் கொடுத்து வைத்தவர். எப்படிப்பட்ட தெய்வ குணம் படைத்தவள் அவள்.. ஆமாம்..எங்கே அவள்.. இன்னுமா வரவில்லை.. வந்திருப்பாள்.. கோயிலுக்குள் போயிருப்பாள் போலும்.. மாமாதான் சொன்னாரே..

    இருவரும் பேசிக்கொண்டே பக்கத்திலே உள்ள ஆலய கோபுரத்தருகே வந்தனர். உயரமான அந்தக் கோபுரத்தை கழுத்தை உயர்த்திப் பார்த்தான்.

    “காளஹஸ்தி காலி கோபுரத்தைக் கூட அச்சுதன் இப்படித்தான் உயரமாகக் கட்டி வருகிறான்.. தலைநகரம் திரும்புமுன் அங்கே செல்லவேண்டும்..”

    “கிருஷ்ணா, இந்தக் கோபுரம் வந்த கதை தெரியுமா.. ஆண்டாள் பிரத்தட்சயமாக வந்து தனக்கு வேண்டுமெனக் கட்டிக் கொண்டது இந்த கோபுரம், இதற்கு நானே சாட்சி!”

    இந்த சம்பவம் கிருஷ்ணதேவன் கேள்விப்பட்டதுதான்.. இருந்தும் இவர் வாயால் இன்னொருமுறை சொல்லட்டுமே..

    முப்பது வருடங்களுக்கு நானும் நரசிங்கராஜாவும் இங்கே உள்ள பாண்டியமன்னரின் மறைவுக்காக வந்திருந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம்.. இந்த வழியாகத்தான் வந்தோம். இதோ இந்த இடங்களெல்லாம் புதர்களும் முட்செடிகளும், பாழடைந்த இடிபட்ட மண்டபங்களும் சிலந்தி வலைகள் எங்கெங்கும் காணப்பட நரசிங்கர் அதிர்ந்துபோய்விட்டார். இந்த ஊர் கேட்பாரற்றுக் கிடந்தது. ஊரில் கோயில் இருந்தும், வேளா வேளைக்கு பூஜை இருந்தும் பாழடைந்த மதில்கள், கோயில் சிலைகள் என எல்லாமே பழமையாக இருந்ததைப் பார்த்த நரசிங்க ராஜா மிகவும் வருத்தப்பட்டு ஏதாவது செய்யவேண்டும்..என்று சொல்லிக்கொண்டே இந்தக் கோயிலுக்குள் நுழையாமல் ஊரைக் கடந்துவிட்டோம். இந்த ஊர் எல்லையில்தான் அந்த அதிசயம் நடந்தது.”

    திம்மராசு பூர்த்தியாக பழைய நினைவுகளில் மூழ்கிப் போய்விட்டார். அவர் மனம் அந்தப் பழைய காட்சியில் நினையாக நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டது போலும். கிருஷ்ணாதான் கேள்வி கேட்டான்..

    “கேள்விப்பட்டதுதான்.. இருந்தும் சொல்லுங்களேன்..”

    “கிருஷ்ணா.. நீ கேள்விப்பட்டதை விட நேரடியாக அனுபவித்தால்தான் அந்த மகிமை புரியும்.. சென்ற மாதம் கங்கர்களுடன் நடந்த போரின் கடைசி நாளன்று காலை உனக்குக் காணக்கிடைக்காத காட்சி கிடைத்ததே.. அதை நீ உணர்ந்து சொல்லும்போதுதான் அதன் மகிமை எனக்கே புரியும்..”

    “ஆமாம்.. உண்மைதான் மாமா!”

    ”நாளைக் காலை இந்த ஊரைப் பகலில் பார்த்தாயானால் இதன் புதுமையையும், இந்தக் கோயிலில் புனிதத்தையும் பார்த்து ஆச்சரியப்படுவாய்.. ஆனால் அன்று அப்படியில்லை.. கோபுரம் இல்லாத அனாதைக் கோயிலாக இருந்தது. ஒருகால கட்டத்தில் இந்தக் கோயிலிலா விஷ்ணுசித்தர் பூசை செய்து வந்தார் என்ற கேள்வி வரும்.. ஏன் எங்களுக்கே விஷ்ணுசித்தர் நினைவு கூட அன்று வரவில்லை.. அப்படிப்பட்ட நிலையில்தான் ஊர் எல்லையில் எங்கள் ஆண்டாள் எங்கள் குதிரைகளுக்கு முன் நின்று நிறுத்தினாள்..”

    (அடுத்த பகுதியில் நிச்சயமாக முடியுமென நினைக்கிறேன்)

    படங்களுக்கு நன்றி : kothairangan.blogspot.com and Flikr

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் .. (40)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    2013 பிறந்தவுடன் கனத்த நெஞ்சுடனும், பனித்த விழிகளுடனும் இம்மடலை வரைகின்றேன். பெண்களின் மதிக்கும் அடிப்படை வலுத்த கலாச்சாரமிக்க பின்புலங்களிலிருந்து வந்தவர்கள் நாம்.

    நாகரீகம் எனும் பெயரில் இந்த உலகம் வெகுவேகமாக இன்று ஏதோ ஒரு திசையை நோக்கி ஓடுவதை போல ஓடிக் கொண்டிருக்கிறது போலத் தென்படுகிறது.

    பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க செந்தமிழ்ப்புலவன் பாரதி தன் தமிழெனும் சாட்டையெடுத்து சமுதாயத்தை நோக்கி வீசினான். தீந்தமிழ்ப் பாடல்களிலே பெண்களுக்கு இழைக்கப்படும் ஆநீதிகளை தெட்டத்தெளிவாக எடுத்துச் சொன்னான்.

    சமுதாயத்தில் ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் தாழ்ந்தவளில்லை என்னும் நிலைப்பாட்டை அந்நாட்களில் பின் தங்கிய சமுதாயம் என வர்ணிக்கப்பட்ட கீழைத்தேச சமூகங்களை நோக்கி வலியுறுத்திச் சொன்னான்.

    1893ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி சுவாமி விவேகானந்தரின் பேச்சு சிக்காகோவில் ஓங்கி முழங்கியது. ஆமாம் இந்திய நாட்டு கலாச்சாரத்தின் மகிமையைப் பற்றிப் பேசும் போது ” தாய்மார்களே ” என அவர் விளித்த போது அவரைப் பார்த்து நகைத்தவர்களைப் பார்த்து எமது நாட்டில் தனது மனையாளைத் தவிர்ந்த அனைத்துப் பெண்களையும் நாம் தாயே என்றுதான் அழைக்கிறோம் ஏனெனில் அவர்களை அத்தகைய ஒரு கெளரவத்திற்குரிய ஒரு இடத்தில் வைத்திருக்கிறோம் என்றார்.

    ஆனால் இன்றோ ?

    அத்தகைய உன்னத பண்பு நிறைந்த நாட்டின் தலைநகரிலே மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் மானபங்கப் படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

    உள்ள‌ம் கனக்கிறது ! உணர்வுகள் கொதிக்கின்றன ! ஏதோ இனம்புரியா பீதியுடன் கலந்த வேதனை நெஞ்சத்தின் ஓரங்களை நெருஞ்சி போல் தைக்கின்றது.

    சரி மிருகவெறி கொண்ட காடையர் கூட்டமொன்றின் செயல் என்றுமே நடந்திராத ஒன்று என்ற எண்ணத்தை வீழ்த்தியடிப்பது போல் தினந்தோறும் கற்பழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை என்று ஒரு புள்ளி விபரமும், குடும்பத்திற்குள் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் புள்ளி விபரமும் ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப் படும்போது விடையில்லா வினா நெஞ்சில் பூதாகரமாக எழுகின்றது.

    சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்ட அந்தச் சமூகம் , கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட இக்காலச் சமூகம் வரை எத்தகைய மாற்றங்களுக்குள்ளாகியதால் இப்படியான் நிகழ்வுகள் நிகழக்கூடிய சூழல் தோன்றியது ?

    சிக்கலான கேள்வி, விடை தெரியாமல் உள்ளம் தடுமாறுகிறது. 19ம் நூர்றாண்டிலே வாழ்ந்த விவேகானந்தர் காலச் சமுதாயமும் 22ம் நூற்றாண்டு காலத்திலே வாழும் எக்காலச் சமுதாயமும் உடைகளணியும், உத்தியோகம் பார்க்கும் , பிரயாணம் செய்யும் வழிமுறைகளிலே பெரும் மாற்றங்களுக்குள்ளாகியிருக்கலாம். ஆனால் அன்று “அம்மா” என்று அழைத்த குழந்தை இன்றும் “அம்மா” என்றுதானே அழைக்கிறது ? அந்த உறவின் அழுத்தம் மாற்றம் காணக்கூடியதா ?

    இல்லையே ! அப்படியாயின் எப்படி தாரத்தைத் தவிர்ந்த மற்றைய பெண்களைச் ச்கோதரிகளாகவும், தாய்மார்களாகவும் கெளரவிக்கும் பண்பை மட்டும் மாற்ற‌த்துக்குள்ளாக்கலாம் ?

    காலத்துக்குக் காலம் வாழ்க்கையின் நடைமுறை வழக்கங்களினால் காலம் எம்மீது எறியும் சில மாற்றங்கள் , அவை மானிடத்தின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்காதவரை எம்மைக் காலமாற்றத்தை உள்வாங்கப் பண்ணுவதைத் தவிர்க்க இயலாது.

    அதற்காக தூய பண்புகளின் தன்மையைக் காலம் மாற்றத்தையோ அன்றி நாகரீக வளர்ச்சியையோ காரணமாகக் கூறி மாற்றிக் கொள்வது என்பது ஏற்றுக் கொள்ள‌ முடியாத ஒன்று.

    சில தினங்களுக்கு முன்பு இது சம்பந்தமாக இந்தியாவில் நடைப்பெற்ற போராட்டங்களைப் பற்றிக் காட்டிய இங்கிலாந்து பி.பி.ஸி தொலைக்காட்சிச் செய்திச் சேவையில் பேட்டி காணப்பட்ட இந்தியப் பெண் ஒருவரின் கூற்றுப்படி ” இப்படியான சம்பவங்கள் நடப்பதன் அடிப்படைக் காரணம் பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு இல்லை என்பது மட்டுமல்ல, சமுதாயம் பெண்களின் மீது கொண்டுள்ள ஒரு தாழ்ந்த பார்வையுமே ” என்று கூறினார்.

    இப்படியான பிரச்சனைகளை அரசாங்கம் மட்டுமே சட்டங்கள் இயற்றுவதன் மூலம் தீர்த்துவிட முடியுமா?

    சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சில அழுக்கு மனப்பான்மைகளை கழுவியகற்றும் பணியில் முக்கியத்துவம் வகிக்க வேண்டியது எமது இளைய தலைமுறையே !

    வாலிப வயதில் பெண்களின் மீது காதல் கொள்வது வாலிபரின் வழக்கம் அதே போல மனம் கவர்ந்த வாலிபனிடம் தன் மன‌தைப் பறிகொடுப்பதும் வனிதையரின் உரிமை. ஆனால் இவை அவரவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் கெள்ரவம் எனும் எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

    பெண்களைக் காமப் பொருட்களாகப் பார்க்கும் ஆண்களின் மனப்பான்மை முற்றிலும் மாற்றப்பட வேண்டும், அதே போல தமது கட்டழகை காமத்தின் அடிப்படையில் காட்சிப் பொருளாக்கும் பெண்களின் மனோபாவமும் மாறவேண்டும்.

    கெள்ரவமாக நாகரீகமான முறையில் உடையுடுத்தி ஆண்களுடன் சகஜமாகப் பழகும் பெண்கள் அனைவரும் தமது விளையாட்டுப் பொருட்கள் என எண்ணும் ஆண்கள் பலர் நம்மிடையே இருப்பது உண்மை. அத்தகையவர்களின் தவறைச் சுட்டிக்காட்டி புதுமையான  பெண்களை மதித்துக் கெளரவிக்கும் புரட்சிகர தலைமுறையைத் தோற்றுவிப்பது எமது ஆற்றல்மிக்க இளைய தலைமுறையின் கடமையாகிறது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வாயு தேவன் புலம்பல்

     

    சு. கோதண்டராமன்

    வெப்பம் மிகுந்த இடம் நோக்கி
    விரைந்து செல்லும் இயல்புடனும்
    சூடு என் மேல் பட்டவுடன்
    சுர்ரென மேலெழும் இயல்புடனும்
    இறைவா என்னைப் படைத்துவிட்டாய்
    இவ்விதி மாற்றல் எளிதாமோ

    வீடுகள் தோறும் கூரையினில்
    விதவிதப் பெயருடன் தொங்கிடுவார்
    முக்கரம் விரித்துச் சுழன்றிடும் இச்
    சக்கரத்தாழ்வார் செயல் காணீர்

    தலைவா உன்னை மறந்துவிட்டு
    தானே விதியெனத் தருக்குகிறார்
    மக்கள் உடலைக் குளிர்வித்து
    மற்றவர் வெப்பம் நான் பெற்று
    மேலே செல்ல முயலுகையில்
    மிகுந்த எதிர்ப்புக் காட்டுகிறார்
    கழுத்தைப் பற்றித் திருகுகிறார்
    தரையில் தள்ளி மோதுகிறார்
    குனிய வைத்துக் குட்டுகிறார்
    கொடுமை அந்தோ நான் சகியேன்
    இறைவா உன்னை வேண்டுகிறேன்
    இனிப் படமுடியாது இத்துயரம்
    சக்கரத்தாழ்வார் செயும் கொடுமை
    சற்றே மாற்ற மாட்டீரோ ?

    Share
  • அந்திவானமும் அவளும் அவனும் – 1

    திவாகர்

    கிருஷ்ணா அந்த அத்துவான பிரதேசத்தில், ராஜபாட்டையில், போக்குவரத்தே இல்லாத சூழ்நிலையில் அதுவும் அந்தி நெருங்கும் நேரத்தில் அவளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. சின்னப்பெண்ணா, இளைய கன்னியா.. யாராயிருந்தால்தான் என்ன.. இந்த வேளையில் தனிமையில் இங்கு அவளுக்கு என்ன வேலை.. ஒருவேளை இடம் தெரியாமல் வந்து விட்டாளோ.. நிற்கும்போதெல்லாம் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கும் தன் குதிரை கூட அவளைப் பார்த்ததும்  அப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்ததையும் கவனிக்கத்தான் செய்தான். இது தன் குதிரைதானா அல்லது இவள் தேவலோகத்துக் கன்னியா? புரியவில்லை..

    “ஆஹா.. இந்த அத்துவான இடத்தில் யாருமே காணப்படாத பாட்டையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. உனக்குத் துணையாக யாரும் வரவில்லையா.. சரி, நீ எந்த ஊர்.. உனக்குத் தெரியுமோ தெரியாதோ.. எனக்கு இங்கு எல்லா ஊர்களும் பழக்கம்தான்.. நீ எந்த ஊர் என்று சொல்லு.. என் குதிரை உன்னை அங்கே விட்டு விட்டுத் திரும்பி வரும்..”

    ”அட! இந்தக் குதிரையில் என்னைப் போகச் சொல்கிறாயே.. இது தனியாகப் போகுமா.. இதற்கு ஊர் வழிகள் தெரியுமா.. இதன் பெரிய செவியில் ‘அந்த ஊருக்குப் போய்க் கொண்டு விட்டு வா’ என்று சொன்னால் அது என்னை அழைத்துக் கொண்டு வேகமாக  ஓடி என்னை விட்டு விட்டு வந்து விடுமா.. அல்லது ஒருவேளை யாரிடமாவது விசாரித்து சரியான வழி கேட்டு விட்டு விட்டு வருமா?”

    சொல்லி விட்டு அவனைப் பார்த்து கண்கள் விரிய அழகாக சிரித்தாள். கொள்ளை அழகுதான்.. யார் பெற்ற பெண்ணோ..

    கலகலவென அந்தப் பெண் சிரித்தது அவனை மிகவும் கவர்ந்தது.. சிரித்ததோடு இல்லாமல் தன்னை யாரென்று தெரியாமல் எகத்தாளத்தையும் சேர்த்துப் பேசுகிறாளே.. சடாரென்று குதிரையின் மேலே இருந்து கீழே குதித்தவனைப் பார்த்து சற்று மிரள்வது போல பாதையோரத்தில் ஒதுங்கினாள்.

    இவள் மிரள்கிறாளா அல்லது மிரள்வது போல நடித்தாளா..புரியாமல் பார்த்தவன் தான் நின்ற இடத்திலிருந்தே பேசினான்.

    “என் குதிரையைப் பற்றி உனக்குத் தெரியாது.. அதனுடன் பழகப் பழகத்தான் உனக்கும் புரியும். அது போகட்டும் நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.. நீ எந்த ஊர்..?

    கேள்வி கேட்டவனை ஆவலுடன் பார்ப்பது போலப் பார்த்தவள் பின்னால் இருந்த தன் பின்னலை முன்னால் இழுத்து கையினால் அதை வருடிக்கொண்டேதான் சொன்னாள் “புதூர்தான்”..

    “ஓ.. இங்கேதானா.. சரி வா.. நானும் அங்குதான் போகிறேன்.. நீ குதிரையில் ஏறிக்கொள்.. நான் நடந்தே வருகிறேன்..”

    “ம்ஹூம்.. நான் வரமாட்டேன்.. நீதான் சொன்னாயே.. நீ பழக்கிய குதிரை என்று.. ஏதாவது ஏடாகூடமாக என்னை வேகமாக வேறு ஏதாவது ஊருக்குக் கூட்டிப்போய்விட்டால்.. என் தாத்தாவுக்கு யார் பதில் சொல்வார்கள்?”

    ”ஓ.. சரி, சரி, வா. நானும் நீயும் நடந்து கொண்டே போவோம்.. உன் தாத்தா யார்.. அவர் என்ன செய்கிறார்..”

    அவள் நகரவில்லை.. “திம்மராசு தாத்தாவை உனக்குத் தெரியாதா.. அய்யய்ய.. என் தாத்தாவைத் தெரியாது என்று ஊருக்குள் யாரிடமும் சொல்லாதே.. உன்னை ஒருவிதமாகப் பார்ப்பார்கள்”.

    சற்று அதிர்ந்துதான் போனான் கிருஷ்ணா.. என்ன திம்மராசு மாமாவின் பேத்தியா இவள்.. அட.. அதுதான் இத்தனை அழகாகப் பேசுகிறாள்.. சரி, இவள் ஏன் இந்த சாயங்கால வேளையில் யாருமில்லா இந்த பிரதேசத்தில் வரவேண்டும்.. ஆண்டவா.. இவள் தைரியசாலிதான்..

    ”ஆஹா.. உன் தாத்தாவைப் பார்க்கத்தானே நானே தலைநகரத்திலிருந்து வருகின்றேன்.. உன் தாத்தா எனக்குக் குருதேவர் போன்றவர்.. எங்கள் குலவிளக்கு..”

    இப்படிச் சொன்னாலும் அந்தப் பெண்ணின் முகத்தில் எவ்வித ஆவலும் இல்லைதான்.. இவன் சொல்வதையே காதில் வாங்காதது போல அந்த ராஜபாட்டையில் ஓரத்தில் உள்ள பாறைமேல் ஏறினாள் அவள். இதையும் கவனித்தான்.. சின்னப்பெண் தானே..இவள் தாத்தா இந்த தேசத்துக்கு செய்த சேவை இவளுக்கென்ன தெரியும்.. திம்மராசு என்ற ஒருவர் இல்லாவிட்டால் இந்த விஜயநகர சாம்ராஜ்யமே எப்போதோ அழிந்திருக்கும் என்பதை இவள் அறிவாளா.. இந்த தென்னகத்தையே ஒருங்கிணைத்து ஆண்ட நரசிங்க ராஜா இறந்த குழப்பத்தில் எல்லா நாடுகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது துணிந்து முன்னின்று தன் தந்தைக்கு பட்டம் கட்டி துளுவ வம்சத்தை சிம்மாசனத்தில் ஏற்றிய மகான் அவர் என்று இவள் அறிவாளா..இந்த விஜயநகர தேசத்துக்கே பிரதம அமைச்சராக எத்தனையோ ஆண்டுகள் இருந்து எத்தனையோ ஆலயங்கள் எழுப்பித் தந்து, எதிரிகளை அழிக்க போர்க்களங்களையெல்லாம் சந்தித்து, தன் தோளோடு தோள் நின்று சாதித்த பெருமைகளை இவள் அறிவாளா.. இப்போதும் கூட அவரைத் தனியாக சந்திப்பதற்கென்று நேரம் ஒதுக்கிச் செல்கிறோம் என்பதில் நண்பர்கள் பலர் ஆவலுடன் தாமும் வருவோம் என்று வேண்டிக்கொண்டாலும் அவர்களை கூட வரவேண்டாம் என்று ஒதுக்கியதில் அவர்கள் கொஞ்சம் கோபத்துடன் மதுரையில் தனக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை இவளுக்குப் புரியும்படி சொல்லமுடியுமா.. ஆனால் இதுவெல்லாம் இவளுக்குத் தேவையில்லைதானே. இனிமையான இளமைக் காலத்தில் இத்தனை அரசியல் விஷயங்கள் எதற்கு.. இவள் இன்பமாகத்தான் பொழுதைக் கழிக்க வேண்டும்..

    “நீ யாருடைய பெண்ணம்மா.. திம்மராசு மாமா ஆட்சிப் பொறுப்புகளிலிருந்தெல்லாம் ஒதுங்கி விஜயநகரத்தை விட்டு விரும்பி வில்லிப்புத்தூரில் வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் குடும்பத்தார் அத்தனைபேரும் தலைநகரில்தானே இருக்கிறார்கள்.. பெரியபெண் நர்மதையின் பெண்ணா.. சிறியவள் கிருஷ்ணையின் பெண்ணா? உன் பெற்றவர்கள் அனைவரும் என்னிடம் பூரண அன்பு கொண்டவர்கள் என்பது உனக்குப் புரியுமோ புரியாதோ.. ஆனால் மாமா இங்கு வந்துவிட்டபின்னர் உன் குடும்பங்களோடு கொஞ்சம் தொடர்பு விட்டுப் போனது வாஸ்தவம்தான்.. சொல்லம்மா.. உன் பெயர் என்ன..”

    அவள் மெல்லச் சிரித்தாள்.. “என் பெயர் எல்லாம் உனக்கெதற்கு.. என் தாத்தாவிடம் கோள் மூட்டப் போகிறாயா?.. அவர் என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டார்.. தங்கநிகர் நெஞ்சம் கொண்டவர், அது தரணிக்கே தெரியும்”

    “அட.. என் செல்லப் பெண்ணே.. உன்னைப் பற்றி நான் ஏன் கோள் சொல்லப்போகிறேன்.. ஆஹா.. உன் தமிழ் அருமை.. எங்கே கற்றாய்..”

    “இங்கேதான்..தமிழ் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு விட்டு தமிழ் கற்க விஜயநகரம் வரை வரவேண்டுமா என்ன?”

    “இல்லை.. தேவையில்லை.. உன் வார்த்தைகள் என்னை மயக்குகிறது.. சரி, பகல் முடியப்போகிறதே.. செல்வோம் வா..”

    “ஊம்ஹும்.. நான் உன்னுடன் வரமாட்டேன்.. நீ போ.. பிறகு வருகிறேன்.. தாத்தா பார்த்தால் உடனே கோபித்துக் கொள்வார்”

    “இல்லை.. நான் சொல்லிக்கொள்கிறேன்.. நான் சொன்னால் உன் பாட்டன் எதையும் கேட்பார்..”

    “அது இன்னும் பயம்.. நீ இல்லாததும் பொல்லாததும் ஏதேனும் சொன்னால்?”

    அவள் பயப்படுவது போல பார்த்தாள்.. இல்லை இவள் பயங்கொண்டவளாகத் தெரியவில்லை.. பாட்டனுக்கு ஏற்ற பேத்திதான்..

    “சரி.. எத்தனைநேரம் இந்த ஆளில்லா சாலையில் இப்படியே ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாய்?”

    அவள் சிரித்தாள் “அட, சரியாகச் சொல்லிவிட்டாயே! ஆமாம்.. ஆகாயத்தைப் பார்க்க நான் எப்போதும் இங்கே வருவேன்.. இந்தப் பாறைதான் நான் எப்போதும் நிற்கும் இடம்.. இங்கிருந்து ஆகாயத்தைப் பார்ப்பது என் வழக்கம்..நீ எப்போதாவது ஆகாயத்தைப் பார்த்திருக்கிறாயா? அங்கே அதிசயம் நிறைய இருக்கும் என்றாவது உனக்குத் தெரியுமா?”

    பாறை மேல் நின்று அந்த ஆகாய நிலா சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுமே சட்டென சற்றுத் திகைத்துதான் போனான் அவன்.. சென்ற மாதத்து துவாதசி நாளன்று காலைதான் ஆகாயத்தில் பார்த்ததும் அங்கே கண்ட காட்சியும் இவளிடத்தில் சொன்னால் நம்புவாளா.. இல்லை இவளுக்கு அதன் உன்னதம் தெரியுமா.. அதைப் பற்றிப் பேசத்தான் பிரத்யேகமாக திம்மராசு மாமாவிடம் செல்கிறோமென்று இவளுக்கு எப்படிச் சொல்வேன்..ஆண்டவா.. ஏன் இந்த திம்மராசு மாமாவின் பேத்தி என்னை இப்படிப் பாடாய் படுத்துகிறாள்.. இவள் யாரெனத் தெரிந்தும் இவளை இப்படியே விட்டு விட முடியுமா.. ஐய்யோ.. முடியாதுதான் சிறு பெண்.. இவள் வழியாகச் சென்றுதான் இவளை அழைத்துச் செல்ல வேண்டும்..

    “சரி.. நீ எத்தனை நேரம் இங்கு இருப்பாயோ நானும் அத்தனை நேரம் இங்கு இருப்பேன்..”

    “பசிக்குமே”

    “உனக்குப் பசிக்காதோ?”

    ”நான் இப்போதுதான் தாத்தா குடிசையில் சட்டியில் கிடந்த அமுதை அப்படியேக் குடித்து விட்டு ஓடி வந்துவிட்டேன்.. பாவம் தாத்தாவுக்குதான் பசிக்கும்..”

    “சுட்டிப் பெண்ணே! தாத்தாவைப் பற்றிய கவலையை விடு.. அவர் பசியை நான் போக்குவேன்.. அத்தோடு என் குதிரைப் பையில் ஏராளமான தின்பண்டம் கூட இருக்கிறது.. மதுரையில் கொடுத்து அனுப்பினார்கள்.. இன்னும் சிறிது நேரம் போனால் என் வீரர்கள் கூட என்னைத் தேடி வரலாம்.. நான் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியாக பிரயாணம் செய்வதில் அவர்களுக்கு வருத்தம்..”

    இத்தனை பேசினோமே.. இவள் இதையெல்லாம் கண்டுகொள்வதாகவே அவள் முகத்தில் பாவனை ஒன்றும் காணோமே என்று சற்று கவலைப்பட்டான் கிருஷ்ணா..  சிறு பெண்.. என்னமாய்ப் பேசுகிறாள்..ஆனாலும் இவளுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது.. சாலையோரத்தில் ஒரு பாறையின் மீதமர்ந்து சாவகாசமாகப் பேசும் இவளிடம் எத்தனை நேரமானாலும் பேசிக்கொண்டே இருக்கலாம் போலும்.. ஆனாலும் அந்தி மாலை நேரம்.. சற்று போனால் இருள் கூட வந்து சேர்ந்துவிடும்..

    ”அது சரி.. ஆகாயத்தைப் பார்த்தாயா.. என்று கேட்டேனே.. உன் காதில் விழவில்லையா? நான் அதற்குதான் இங்கு வந்தேன்.. நீயும் வேண்டுமானாலும் கொஞ்ச நேரம் இங்கு என்னோடு இருந்து இந்த அந்தி மாலை வேளையிலும் இருட்டு வேளையில் நட்சத்திரம் வரும்போதும் ஆகாயத்தைப் பார்..”

    அவளருகே சற்று தள்ளி அந்த அகன்ற பாறையில் அமர்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்த்தான். இதோ இப்படி வெள்ளையாக இருக்கும் ஆகாயம் இன்னும் சற்று நேரத்தில் கருப்பாக மாறிவிடும்.. ஆனால் கருப்பாக இருந்த ஆகாயம் வெள்ளையாக மாறிய அந்த சுபோதய வேளையில் கண்ட காட்சி மட்டும் மறுபடியும் நினைவுக்கு வந்தது.. நினைவுக்கு ஏன் வரவேண்டும் அதுதான் தன் மனதில் ஆழப்பதிந்துவிட்டதே என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

    ”காதில் நன்றாகவே விழுந்தது.. நானும் ஆகாயத்தைத் தனியாகவே பார்த்திருக்கிறேன்..”

    “எப்போது பார்த்தாய்?”

    ”அதிகாலை வேளையில்.. சென்ற மாதம் ஒரு அதிகாலை வேளையில் பார்த்தபோதுதான்..” என்று ஏதோ சொல்லவந்தவன் அவள் முகத்தை சட்டென்ப் பார்த்தான். அவனையே ஆவலுடன் பார்த்தவள் அவளும் தன் பார்வையை விலக்கி மறுபடியும் ஆகாயத்தைப் பார்த்தாள். இவள் தன்னிடம் விளையாடுகிறாளோ.. மாமாவிடம் இதையெல்லாம் தனியாகச் சொல்லி மகிழவேண்டும்.. தன் பேத்தி எத்தனை சுட்டியாக இருக்கிறாள் என்று அவரும் மகிழ்வாள்..

    ”அதிகாலையில் பார்த்தாயா.. அப்போதெல்லாம் பார்ப்பதை விட சாயங்காலம் முடியும்போது வானத்தைப் பார்க்கவேண்டுமே.. அதுவும் இந்தப் பாறையிலிருந்து மேற்கே பார்க்கவேண்டும் என்றுதான் இப்போது வந்தேன்..”

    ”சாயங்கால வானம் என்ன அத்தனை உசத்தி?”

    ”ஓஹோ.. நீ தமிழ் படிக்கவில்லை போலும்..”

    “அதென்ன அப்படி சொல்லிவிட்டாய்.. இரண்டு புலவர்களை மதுரையிலிருந்து வரவழைத்துக் கற்றுக் கொண்டவனாக்கும், இரண்டு வருடங்கள் தொடர்ந்து பயின்றவன் தெரியுமா”

    ”ம்ஹூம்.. எனக்கு நம்பிக்கையில்லை.. அப்படிப் படித்தவனானால் அந்தி நேரத்து வானம் அதுவும் மேற்கே வானம் என்றதும் உனக்கு ஏதும் நினைவு வரவில்லையா?”

    “ம்.. இரு.. இரு.. ஆமாம்.. மேற்கே வானம் செவ்வானமாக மாறப்போவதையும் அந்த செவ்வானத்தை கவுரவர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த யுத்தத்தில் ரத்தமாக சிவந்து போன யுத்தகளத்தை ஒப்பிட்டும் ஒரு புலவர் பாடியிருக்கிறார்.. எனக்கு நன்றாக நினைவு உள்ளது.. பெரும்பாணாற்றுப் படை, சரிதானே”

    “ஓஹோ.. நீயும் யுத்தத்தில் கலந்து கொள்வாயா.. பார்த்தாயா.. சிவந்த யுத்தபூமியை அந்தி நேரத்து செவ்வானத்துக்கு ஒப்பீடாக வைத்தார்களே.. அழகு எங்கே உள்ளதோ அங்கே ஆபத்தும் உள்ளது போலும்..”

    சட்டென அதிர்ந்தான் அவன்.. இவள் சின்னப்பெண்ணா.. தனக்குள் கேட்டுக்கொண்டவன் தன்னையே சமாதானம் செய்துகொள்ளவும் செய்தான்.. தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் எல்லா உவமைகளையும் ஒப்பிட்டுப் பாடித்தொலைத்துவிட்டன.. படித்தவர்கள் அறியத்தானே செய்வர்..இதில் சிறியவர் என்ன பெரியவர் என்ன?

    ”என்ன, என்னை மனதுக்குள் திட்டிக்கொள்கிறாயா.. சரி சரி,, உனக்கு வானத்தைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை போலும்.. போய் என் தாத்தாவைப் பார்.. உருப்படியான காரியம் செய்.. நான் இருந்து எல்லாவற்றையும் பார்த்துதான் வருவேன்..”

    ”செல்லப்பெண்ணே!.. நான் அப்படியெல்லாம் உன்னை விட்டு விட்டுப் போகமாட்டேன்.. நானும் நீயும் சேர்ந்தே செல்வோம்.. சரி, நீ உன் வேலையைப் பார்.. ஏதாவது விசித்திரம் கண்டால் சந்தேகம் கேள்.. நான் பதில் சொல்கிறேன்..”

    ”நீயா!  உனக்கு செவ்வானத்தைப் பற்றியே ஏதும் தெரியவில்லை.. இதில் என் சந்தேகத்தைத் தீர்க்கப்போகிறாயா? எதையும் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும்.. சட்டென எதுவும் தோணாது.. கொஞ்சம் பொறுமை தேவை.. உனக்குத் தெரியுமா.. இந்த வானம் முழுதும் ஒருவன் ஆள்கிறான். அவன் பெயர் தெரியுமா?”

    கிருஷ்ணதேவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. தன்னைப் போலவே சிந்திக்கும் ஒரு பிறவியை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறான். திம்மராசு மாமாவின் பேத்தியிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்தான்..

    ”செல்லப்பெண்ணே! ஆமாம்.. அவன் எனக்கும் பிடித்தவன்.. அவனை விஷ்ணு என்போம்.. நீ எப்படி கூப்பிடுகிறாயோ?

    ”ஆஹா.. உனக்கு உன் மூளை இப்போதுதான் வேலை செய்கிறது.. சரி, விண்ணை ஆள்பவன் விஷ்ணு என்கிறாய் அல்லவா.. இதோ விண்ணைப் பார்க்கிறாயே.. அந்த விஷ்ணுவையும் பார்க்கவேண்டுமே..”

    திம்மராசு பேத்தியின் வார்த்தைகள் அவனை மயக்கின. மறுபடியும் சென்ற மாதத்தில் கடந்து போன கிருஷ்ணை நதி தீரத்துப் போர்க்களமும் துவாதசித் திதியும் அந்த விண்ணை ஆளும் விஷ்ணுவும் கண்முன் வந்தனர்.. எப்படிச் சொல்வேன்.. இவளிடம்..தான் என்ன பேசினாலும் மறுத்துப் பேசும் சாமர்த்தியம் உள்ளவள்.. இவளுக்கு வாய்க்கும் இளைஞன் மிக அரிதான் அறிவு படைத்தவனாக அமையவேண்டும்.. சரி, விடக்கூடாது இவளை, இனி அந்தப் பொறுப்பையும் நாமே ஏற்போமே..

    “என்ன, வாய் மூடி மௌனமாகி விட்டாய்.. விஷ்ணுவைப் பார்க்க முடியவில்லையல்லவா..”

    “எதற்காக அந்தப் பேச்சையே எடுக்கிறாய்.. நீ பார்த்தாயோ?”

    ”அட, இடக்கு முடக்காக இதென்ன கேள்வி..  முன்பே சொன்னேனே.. சரியாகச் செவியில் விழவில்லை போலும்.. ஓஹோ செவிட்டு வீரனோ?”

    இந்த வார்த்தையைப் பிறர் யாரேனும் பேசியிருந்தால் அவர்கள் நிலைமை தலைநகரத்தில் என்னவாகி இருக்கும் என்று கற்பனை செய்து சிரித்தான்..”செல்லப்பெண்ணே!.. சரி, நான் செவிடு இல்லைதான்.. உன் பதிலைச் சரியாகத்தான் சொல்லேன்.. உன்னளவு எனக்கு தமிழில் பரிச்சயமில்லை என்றுவேண்டுமானால் ஒப்புக்கொள்கிறேன் போதுமா?”

    “ஆங்.. அப்படி வா வழிக்கு, விண்ணை ஆள்வதால் மட்டும் அவன் விஷ்ணு அல்ல, அவன் விண்ணில் பரந்து கிடக்கும் அத்தனை பிரதேசங்களிலும் வியாபித்துக் கிடக்கிறான்.. அதனால்தான் அவன் விஷ்ணு.. சரி, அவனைப் பார்க்க வேண்டுமென்றால்  வெகு சுலபமான வழி இருக்கிறது..”

    இப்போது கிருஷ்ணதேவன் ஆலோசனை சுத்தமாக அவனிடத்தே இல்லை..எங்கோ கிருஷ்ணை நதி தீரத்துக்குப் போய்விட்டது. கடும்போர்.. கங்கர்கள் மிகத் தீரமாகத்தான் போரிடுகிறார்கள்.. ஆனால் அவர்கள் வெல்லப்படவேண்டும்.. அன்று ஏகாதசித் திருநாள் வேறு.. ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதமிருப்பவன்.. அன்று அந்த ஸ்ரீகாகுள கிராமத்து கோயிலில் இருந்த பெருமாளை நினைத்துக் கொண்டே அந்தக் கோயிலின் முன்னறையில் வெறுந்தரையில் படுக்கிறான்.. அவன் தளபதிகள் வெளியே என்ன செய்வது என்பது புரியாமல் காத்துக்கிடக்கிறார்கள்.. எதிரிகள் ஓய்ந்து கிடக்கின்றனர், இன்னமும் ஓரிரு நாளில் அவர்களை எளிதாக வென்றிடமுடியும்தான்,  ஏகாதசி தின விரதம் இன்றா நேற்றா.. எத்தனையோ வருடங்களாகத்தான் மன்னர் செய்துவருகின்றார்.. ஆனாலும் யுத்த பூமியிலும் தொடரவேண்டுமா என்பதுதான் அவர்களின் மனக் கவலை.. இவை எதுவும் கவனம் கொள்ளாமல் மனத்தில் இறைவனையே நிறுத்தி ஜபம் செய்து கொண்டே இருந்ததும் விடிகாலையில் யாருமறியாமல் கிருஷ்ணை நதிக்குச் சென்று நதியில் ஸ்நாநம் முடித்து கருமையிலிருந்து வெளுப்புக்கும் வரும் வானத்தை சாதாரணமாகத்தான் பார்த்தான்..

    ஆஹா.. எப்படி வர்ணிப்பது அந்த அதிசயக் காட்சியை…

    படங்களுக்கு நன்றி:

    Raja Ravi Varma (Google) Picture

    www.pbase.com

    Share