Blog

  • தமிழ்நாடு பெயர் மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை

    தமிழ்நாடு பெயர் மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை

    சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு நாள் – வானதி சீனிவாசன்

    நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு நாள் – வானதி சீனிவாசன்

    மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு. பெயர் சூட்டப்பட்ட நாளைக் கொண்டாடுவது பொருத்தமற்றது

    கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை.

    மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள், சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டன. “இந்நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி, ‘தமிழ்நாடு நாள்’ என்று சிறப்பாகக் கொண்டாடப்படும்” என்று கடந்த 2019 ஜூலை 20ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அன்றைய முதல்வர் திரு. கே.பழனிசாமி அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை வரவேற்ற அன்றைய திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாளுக்குக் கடந்த இரு ஆண்டுகளாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 1 தமிழ்நாடு நாளுக்குத் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1ஆம் நாளில், நாம் தமிழ்மொழி, இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்” என்று கூறியுள்ளார்.

    ஆனால், அக்டோபர் 30ஆம் தேதி முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மாநிலம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1967 நவம்பர் 18ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

    1956 நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும். 1967 நவம்பர் 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1969 ஜூலை 18ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளை அல்ல. இதனைத் தலைவர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும்.

    குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே அறிக்கைகள் வெளியிடும் சிலரின் வேண்டுகோளை ஏற்று, வரலாற்றை மாற்ற முயல வேண்டாம் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாள். தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    Share
  • இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி

    இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி

    India Has Successfully Tested Its First 3,000-Mile Ballistic Missile

    இந்தியாவின் தூர நீட்சி கட்டளை வெடிகணை முதற் சோதனை வெற்றி

    2021 அக்டோபர் 28 இல் இந்தியா முதன்முதல் செய்த 3000 மைல் தூர நீட்சி அக்கினி -5 வெடிகணைச் சோதனை வெற்றி, ஆசியாவில் இந்தியா சைனா போன்ற நாட்டின் எந்த நகரையும் துல்லியமாகத் தாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியது ஆனால் இந்தியா முதன்முதல் அக்கினி-5 வெடிகணையை பகை நாட்டின் [NO FIRST USE] மீது ஏவாது. மேஜர் கௌரவ், அக்கினி-5 மிக்க ஆற்றல் கொண்ட வெடி ஆயுதம். அணு குண்டையும் ஏந்திச் செல்லும் தகுதி உடையது. தணிந்த ஆற்றல் [620-1242 miles] [1000-2000 km] கொண்ட வெடி கணை அக்கினி-பிரைம் சோதனை செய்யப் பட்டது. சைனா 2021 ஆகஸ்டு மாதம் தனது ஹைபர்சானிக் ஆயுதத்தைச் சோதனை செய்து பூமியை ஒருமுறை சுற்றி, குறிக்கோளை 24 மைல் தூரத் துல்லிமத்தில் தாக்கியது.

    India’s long-range ballistic missile adds a strategic piece amid growing US-China tensions.

    India successfully test-launched on October 28, 2021 its first ballistic missile, the Agni-5, at roughly 10:20 AM EDT, using a three-stage solid-fueled engine that can fire nuclear payloads up to 3,000 miles with an extremely high level of accuracy, according to an initial report from  Republic World, an India-based news service.

    On the world stage, this weapon isn’t new, but it represents a major advancement for India, and fundamentally alters the balance of power in the region amid mounting tensions between major worldwide powers.

    The test of Agni-5 is part of India’s central defense policy to have “credible minimum deterrence” to maintain its commitment to “No First Use”, according to the report. The country’s first long-range intercontinental ballistic missile was developed by the Defense Research and Development Organization (DRDO), and can target any location in China, and even reach as far as Europe. Major Gaurav Arya of India’s military forces said Agni-5 can actively deter China’s strategic plans. “This missile has nothing to do with Pakistan, it does not even consider Pakistan as a possible landing target,” he said. “This is an aim at China, which is very important.”

    Arya also said that once Agni-5 is inducted for real-world service, it will serve as a powerful symbolic piece on the board against China’s government, according to the report. “We can hit you whenever we want, wherever we want inside Mainland China,” he said. This comes on the heels of another recent success of the DRDO’s Indigenous Technology Cruise Missile (ITCM), fired off the Odisha coast. Earlier, in July, India also test-fired its New Generation Akash Missile (Akash-NG), which is a surface-to-air missile system that can reach 37 miles (60 km). Other recently developed weapons from the DRDO include the Man-Portable Anti Tank Guided Missile, and another new missile of the Agni series called the Agni-Prime, with a range of 621 to 1,242 miles (1,000 to 2,000 km).

    Ballistic missiles are far easier to shoot down than hypersonic weapons

    This comes amid rising tensions between the U.S. and China, the former of which has good relations with India. But while India’s expanding ballistic missile capabilities add to the hypothetical chessboard should conflict happen, it’s still one step behind its northern rival. Earlier this month, it was revealed that China had tested a hypersonic missile in August that launched atop a Long March rocket, and then circled the Earth in low orbit before descending to its final target, which it only missed by 24 miles. For reference, the Earth is 7,917.5 miles in diameter, which means, as far as public knowledge goes, China is an entire step ahead of India’s ally, the United States, in the most advanced missile technology.

    Last week, the Pentagon confirmed that a test launch of a hypersonic missile had failed, implying that the United States’ hypersonic weapons technologies have yet to reach the level of maturity of its China-built counterparts. While the U.S. has famously closed the technological gap with rival countries at blinding speeds, and India’s newest ballistic missile is another strategic asset in the defense against possible conflict with China, India’s ballistic technology could be vulnerable to strategic air defense capabilities of its northern neighbor, since ballistic missiles’ parabolic trajectory makes them a far easier target than hypersonic weapons

    இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++

    அக்கினி இடித் தாக்கம்!
    அசுர வல்லமை ஊக்கம்!
    பொறுமை யற்ற புயலிலே
    புதுநெறி படைக்க
    புறப்படும் எமது கனவுகள்!

    டாக்டர் அப்துல் கலாம்
    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk

    “இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை!  இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை!  வல்லமைதான் வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”

    டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி

    இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை

    டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ஃபான் பிரௌன் [Wernher Von Braun].  அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார்.  பாரத நாட்டில் டாக்டர் ஃபான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.  அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார்.  இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம்.  அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது!  1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார்.  உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில்  பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.

    1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார்.  அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.  திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர்.  தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார்.  பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார்.  அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.

    1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார்.  அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன.  முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence].  அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force].  இரண்டுக்கும் விண்ணப் பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது.  முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.  அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.

    தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது!  தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை!  கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார்.  அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

    டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டிஃபிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது.  அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிராஃப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.  அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிராஃப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார்.  அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார்.  சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார்.  பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..  SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார்.  1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது.  அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.

    ICBM

    ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார்.  அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர்.  வீணை வாசிக்கிறார்.  ஸ்ரீராகத்தை ரசிக்கிறார்.  தமிழில் கவிதை புனைகிறார்.  தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர்.  அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.

    Fig 1G Indian Rockets

    இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்

    1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது.  கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன.  எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன.  சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ஆழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.  சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.

    டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்

    1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defense Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது.  அத்திட்டமே இந்திய இராணு வத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது.  அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின.  அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின.  அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

    1. நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது.  உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

    2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம்.  வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின.  அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்).  சோவியத் யூனியன் ராக்கெட் பொறி நுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.  பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின.  பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம்.  அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும்.  அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

    3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile).  எல்லா வற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது.  அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது.  நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்த டிக்கப் பயனாகிறது.  ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

    4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை.  அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)

    5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest),  அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்].  உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப் படுகிறது.  1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது.  2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..

    பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா

    இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது.  தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது.  2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்).  சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது.  முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும்.   ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2,  துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.

    தகவல்:

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program By: Wikipedia
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
    12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
    13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
    14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
    15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
    16 Missile Test By India [February 5, 2007]
    17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
    18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
    19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
    20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]

    21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/]
    22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
    23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html]
    24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
    25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html]
    26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/]
    27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
    28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,
    29.  https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam
    30.  http://www.abdulkalam.nic.in/profile.html
    31. /india-has-successfully-tested-its-first-3000-mile-ballistic-missile?utm_source=newsletter&utm_medium=mailing&utm_campaign=Newsletter-28-10-2021

    Share
  • இங்கிலாந்தில் வாண வேடிக்கை

    இங்கிலாந்தில் வாண வேடிக்கை

    இங்கிலாந்தின் பிளாக்பூல் நகரம், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வண்ணமயமாய் ஜொலிக்கும். வண்ண விளக்குகளும் வாண வேடிக்கைகளும் இரவைப் பகலாக்கும். இந்த ஆண்டு இந்த விழாக் காலத்தை நீட்டித்திருக்கிறார்கள். 2022 ஜனவரி வரை இந்தக் கோலாகல வைபவம் தொடரும். இது முற்றிலும் இலவசம். எவரும் கண்டுகளிக்கலாம். இதோ இந்த 2021ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. படப்பதிவு, நவ்யா.

    Blackpool Illuminations is the No. 1 free light show in the world; This has been a major part of Blackpool’s attraction since 1879 when they were described as ‘Artificial Sunshine’. Blackpool Illumination 2021 is a little different this year. The annual Illuminations display is to be extended by two months to provide an invaluable boost to the resort’s tourism season after COVID-19. The 2021 Blackpool Illuminations will shine throughout Christmas and New Year. They’ll burst into light and colour from September to January 2022!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாமென்ன செய்யலாம் பூமிக்கு?

    நாமென்ன செய்யலாம் பூமிக்கு?

    சி. ஜெயபாரதன்

    சூடேறிப் போச்சு
    பூகோளம் !
    ஊழ் வினையோ, சதியோ,
    இயற்கை நியதியோ ?
    நாமென்ன செய்யலாம் இப்போ
    பூமிக்கு ?
    வீடேறிச் சீர்கேடு
    விரட்டுது !
    நாடெங்கும் நாசம்
    நாள் தோறும்
    நேரும் !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    காட்டுத் தீயும்,
    பேய்மழை வெள்ளமும்
    ஓயாது ஒழியாது
    தாக்கும்
    பேரழிவுக் காட்சி !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?
    நாடெங்கும் கூக்குரல்
    மாந்தர்
    எல்லாம் இழந்து இடமின்றி
    எங்கெங்கோ
    ஓடிப்
    புலம் பெயர்வார் !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    பருவக் காலம் தவணை
    மாறிப் போச்சு !
    பயிரெல்லாம் கருகிப்
    பதராகப் போச்சு !
    நாமென்ன செய்யலாம்
    பூமிக்கு ?
    உயிரினம் யாவும் நோய்
    நொடியில்
    சாகாமல் சாகுது !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    ஊருக்கு ஊர்
    ஓர் உதவிப் படை தேவை.
    முன்னுதவி செய்ய
    முந்திடும்
    தன்னார்வப் படை.
    ஊர்ச் செல்வீகர்
    உடன்பாடு, பங்கீடு, உழைப்பு
    தேவை.
    நாமிதைச் செய்யலாம்
    நாட்டுக்கு.

    பெட்ரோல் கார் ஓட்டு.
    ஜெட் எஞ்சின் விமானத்தில் போ.
    பிரயாணத்தை குறை.
    டீசல் எஞ்சின்
    விவசாய அறுவடை செய்யட்டும்.
    கரி வாயுவை
    வடிகட்டி,
    கரியை நீக்கு !
    நாமிதைச் செய்யலாம்
    பூமிக்கு.

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(374)

    குறளின் கதிர்களாய்…(374)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(374)

    கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டி
    னாற்று பவர்க ணிழுக்கு.

    – திருக்குறள் – 893(பெரியாரைப் பிழையாமை)

    புதுக் கவிதையில்

    தானழிய
    ஒருவன் எண்ணினால்,
    பகை மன்னர்களை
    அழிக்கவல்ல
    ஆற்றல் மிக்க
    பெரியோர்களிடத்து
    அறநூற்களை மீறித்
    தவறுகளைச்
    செய்தாலே போதும்…!

    குறும்பாவில்

    ஒருவன் தானழிய எண்ணிடில்,
    பகையரசர்களை அழிக்கவல்ல பெரியோர்களுக்கு அறநெறி
    தவறி தீங்குசெய்தால் போதுமே…!

    மரபுக் கவிதையில்

    பகையா யுள்ள மன்னவரை
    பதமா யழித்து ஒழித்திடவே
    வகைய தறிந்ந பெரியோராம்
    வல்ல வர்கள் துன்புறவே
    மிகையாய் அறநூல் நெறிதவறி
    மெய்யாய்த் தீங்கு செய்தாலே,
    பகைவ ரிலாமல் அவனேதான்
    பட்டே அழிவான் பாரினிலே…!

    லிமரைக்கூ

    தானே அழிவான் ஆங்கு,
    பகையழிக்கும் திறன்மிகுந்த பெரியோர்க்குச் செய்தால்
    அறமிலா தொருவன் தீங்கு…!

    கிராமிய பாணியில்

    செய்யாத செய்யாத
    தீங்கு செய்யாத,
    பண்பில ஒசந்த பெரியவங்களுக்குத்
    தீங்கு செய்யாத..

    தானே ஒருவன்
    அழியணுண்ணு நெனச்சா
    வேற ஒண்ணும்
    செய்ய வேண்டாம்,
    பகயாளி ராசாவயெல்லாம்
    அழிய வைக்கிற
    அறிவும் தெறமயுமுள்ள
    பெரியவங்களுக்கு அவன்
    மொறயில்லாமத்
    தீங்கு செய்தாலே போதும்..

    அதால
    செய்யாத செய்யாத
    தீங்கு செய்யாத,
    பண்பில ஒசந்த பெரியவங்களுக்குத்
    தீங்கு செய்யாத…!

    Share
  • Indira Gandhi

    Indira Gandhi

    Baskar Seshadri

    When I was working in a Private company in Nungambakkam our accountant came to me and expressed a news which was shocking and I was not too sure whether it was correct.

    It was in 1984 October and I had joined that company only in September. My work was to fetch coffee and go to bank and come to do sundry works for a meagre pay of Rs 275/pm. The matter is not about the Money or employment.

    This news is different and to confirm the news of the accountant I came out from the office Near josier Street in Nungambakkam and pedaled towards Gemini.

    The situation was chaotic and there were unrest here and there. There were fearful places allover and the news was confirmed that Indira Gandhi fell to the Bullets by her own security Guards on the fateful day of October 31. Had a strong opposition towards opposition since I was a serious reader of Thuglak and it remained for long the way till the death of Indira. She had done lots of Blunders from the days of Emergency and had done favoritism to many known people a typical approach any Powerful Politician could always do.

    The Allahabad Judgement came as a jolt and ended her Big Political aspiration and the Emergency was to scuttle the opposition. All had come to an end on that morning of October 30th When she was about to start her day in the palatial House of Prime Minister.

    Beant Singh with his accomplice shot her at the Point blank range and even before she could be rushed to AIIMS She was pronounced dead. The death was more of a shock since it was at PB Range. Finally she won all her opposition and enemies in and out with her death.

    It was a cowardice act, the world can never forget. She was a tall leader with grit quicky and Energetic throughout. But other attitudes took her to a fathom. The Blue star operation was all the basic fact for this end to come at an age of 67 . The trigger at Golden temple ended in a Trigger at her own residence.

    Her Bold decision to curb the violence ended in a tragedy when she lost her life. In fact she exercised her best powers after winning in 1980.  Violence is not in the weapon but in the of People who hold it

    Share
  • மழலை மகாலட்சுமி | சித்தநாதேஸ்வரர் கோவில் | கும்பகோணம்

    மழலை மகாலட்சுமி | சித்தநாதேஸ்வரர் கோவில் | கும்பகோணம்

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில், திருநறையூர் ஆகிய தலங்களில் உள்ள மூன்று ஆலயங்களுக்கு வெ.சுப்ரமணியன் அண்மையில் சென்றிருந்தார். இந்த ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு சௌந்திர நாயகி அம்பாள் சமேத சித்தநாத சுவாமி திருக்கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தார்.

    வேறெந்தச் சிவாலயத்திலும் இல்லாத அமைப்புகள், இந்த ஆலயத்தில் உள்ளன. இந்தத் திருத்தலத்தில் மேதாவி மகரிஷி, சித்தநாதரைப் பூஜித்து மகாலட்சுமியை மகளாக அடைந்து வளர்த்து, நாச்சியார்கோவில் அருள்மிகு சீனிவாசப் பெருமாளுக்குத் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம்.

    சித்தநாத சுவாமி திருக்கோவிலில் மூன்று தட்சிணாமூர்த்திகள், ஐந்து சண்டிகேஸ்வர்கள், மழலை மகாலட்சுமிக்குத் தனிச் சன்னதி என்று பல சிறப்புகள். நவகிரகங்களைத் தட்சிணாமூர்த்தி பார்த்தவாறு இருப்பது கூடுதல் சிறப்பு. இந்தத் தலத்தின் சிறப்புகளை விளக்குகிறார் T.G. குருநாத சிவாச்சாரியார். மகாலட்சுமிக்குச் சிவன் அண்ணா, பார்வதி அண்ணி என இவர் சொல்வது சிறப்பு. பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • வேளாண் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்

    வேளாண் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்

    வேளாண் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன. இதனால் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு. இந்த நுட்பங்களை எப்படிப் பயன்படுத்தலாம்? வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர் வெங்கி என்கிற வெங்கட்ராமன் ராமச்சந்திரன் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ் இலக்கணத் தாத்தா! 

    தமிழ் இலக்கணத் தாத்தா! 

    -மேகலா இராமமூர்த்தி

    பழந்தமிழ் ஏடுகளைத் தேடி ஊர் ஊராய் அலைந்து அவற்றைத் திரட்டிப் பதிப்பித்தவரும் தென்னிந்திய கலைச்செல்வரும், தாம் செய்த அரிய தமிழ்ப் பணிகளுக்காகத் ’தமிழ்த் தாத்தா’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான டாக்டர் உ.வே.சா.வைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும்.

    ஆனால், தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பதில் ஆர்வங்காட்டிய தமிழ்த் தாத்தாவைப் போலவே தமிழ் இலக்கண நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வங் காட்டி, அவற்றைப் பிழையறப் பதிப்பித்தவரும் தமிழ் இலக்கணத்தில் தேர்ந்த புலமைபெற்று விளங்கியமையால் ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என அன்று பாராட்டப்பெற்றவருமான மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை இன்றைய தமிழர் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அத் தமிழ்ச்சான்றோரைத் தமிழர்க்கு மீள் அறிமுகம் செய்துவைத்தல் நலம் என நினைக்கின்றேன்.

    1896ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ஆம் நாள் மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை, பாக்கியம் அம்மையார் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையவர்கள். இவரின் உடன்பிறப்புக்கள் மொத்தம் ஏழு பேராவர். சொந்த ஊர் சென்னை சைதாப்பேட்டைக்கு மேற்கில் அமைந்திருந்த சிற்றூரான மேட்டுப்பாளையமாக இருந்தபோதிலும், குழந்தைகளின் கல்விக்காகச் சைதாப்பேட்டையில் குடிபுகுந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார் வீராசாமிப் பிள்ளை.

    வேணுகோபாலருக்கு ஐந்து வயது நிரம்பியதும் அங்கிருந்த ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைச் சேர்ந்த மாதிரிப் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு ஓராண்டுக் காலம் கல்விபயின்றார் அவர்.

    அப்போது வறுமை மேகம் வேணுகோபாலப் பிள்ளையின் குடும்பத்தைச் சூழவே, மாதிரிப் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடமொன்றில் சேர்க்கப்பட்டார்.

    இன்னல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அக் குடும்பத்தை முற்றுகையிடவே சைதாப்பேட்டையில் தாம் வாழ்ந்துவந்த 40,000 உரூபாய் மதிப்புள்ள வீட்டை 2000 உரூபாய்க்கு விற்றுவிட்டுப் பல்லவபுரத்திற்கு (பல்லாவரம்) குடும்பத்தோடு குடிபெயர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார். பின்னர் அங்கிருந்து புரசைப்பாக்கத்திற்கு (புரசைவாக்கம்) குடிபெயர்ந்தது அக்குடும்பம். இவ்வாறு தொடர்ந்து வீடு மாறவேண்டிய சூழல் ஏற்பட்டதால் வேணுகோபாலப் பிள்ளையில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

    கல்வியில் ஆர்வமிருந்தும் கற்க இயலாத குடும்பச் சூழலால் வேப்பேரியிலுள்ள அச்சகத்தில் பணியிலமர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளை. காலை எட்டு மணிமுதல் மாலை 5 மணிவரை அப்பணியில் உழைத்த அவர், அறிஞர்கள் சிலர் இணைந்து நடத்திய இரவுப்பள்ளியில் சேர்ந்து ஓய்வுநேரத்தைக் கல்வி கற்பதில் கழிக்கலானார்.

    வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் தமிழ் ஆகியவற்றைப் பயிற்றுவித்த வழக்கறிஞர் டி.என். சேஷாசலம் ஐயரவர்கள், வேணுகோபாலரின் தணியாத தமிழார்வம் கண்டு, தக்கார் ஒருவரிடம் அவர் தனியே தமிழ்பயிலுதல் நன்று என்று அவருக்கு அறிவுறுத்தினார்.

    வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் பயிற்றுவித்த ஆசிரியர்களுள் சென்னைக் கல்வித்துறைத் துணை இயக்குநராகப் பணியாற்றிய திரு. வி.ஆர். அரங்கநாத முதலியார், திரு.கே. மாசிலாமணி முதலியார், வழக்கறிஞர் திரு. எம். தாமோதர நாயுடு, திரு. மோகனரங்கம் பிள்ளை ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

    என்ன இது இம் மனிதர்களுக்குப் பின்னால் ஐயர், முதலியார், நாயுடு, பிள்ளை என்று ஒரே சாதிப் பெயர்களாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?

    பெயர்களுக்குப் பின்னால் சாதி அடையாளங்கள் இருந்தாலும் பேதம் ஏதுமின்றித் தமிழர்கள் தமிழால் ஒன்றிணைந்திருந்த காலம் அது. இப்போதோ பெயரளவில் சாதியை ஒழித்திருக்கின்றோமே தவிர அது முன்னைக் காட்டிலும் கூர்மையடைந்து பேதங்களையும் சமூகத்தில் அளவற்ற சேதங்களைவும் விளைவித்து வருகின்றது என்பதுதான் நடைமுறை உண்மை.

    வேணுகோபாலப் பிள்ளையின் வரலாற்றுக்குத் திரும்புவோம்!

    சேஷாசலம் ஐயரின் அறிவுரையை ஏற்ற வேணுகோபாலப் பிள்ளை, அந்நாளில் தமிழிலக்கண இலக்கியங்களில் வல்லுநராகவும் நல்லாசிரியராகவும் விளங்கிய சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் கோவிந்தராச முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படிக் கற்றார்.

    பின்னாளில் தமிழ்ப் பெரும்புலவராக விளங்கிய மங்கலங்கிழார், தமிழ்ப் பேரறிஞர் மதுரை முதலியார், அருச்சுன முதலியார் ஆகியோரும் அப்போது வேணுகோபாலரோடு உடன்பயின்ற மாணாக்கர் ஆவர். இப்பெருமக்களுடன் இறுதிவரை இடையறா நட்பு பூண்டிருந்தார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

    1920ஆம் ஆண்டுமுதல் 1923ஆம் ஆண்டுவரை சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் உதவித் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார் வேணுகோபாலப் பிள்ளை. அப்போது அவரைச் சந்தித்த புரசைப்பாக்கம் லூத்தரன் மிஷன் பெப்ரீஷியஸ் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. எம். ஏ. வேதநாயகம் அவர்கள், தம் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராய்ப் பணியாற்றுமாறு வேணுகோபாலருக்கு வேண்டுகோள் விடுக்கவே, அதனையேற்று அப்பள்ளியில் தமிழாசிரியர் பொறுப்பில் அமர்ந்தார். பின்னர் அப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக வளர்ச்சியடைந்தது.

    அக்காலக்கட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய வித்துவான் தேர்வில் வெற்றிபெற்றுப் பட்டதாரியானார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

    வேணுகோபாலப் பிள்ளை பணியாற்றிய லூத்தரன் பள்ளியின் மேற்பார்வையாளர்களாக ஜெர்மானியப் பாதிரியார்கள் இருந்தனர். அவர்களுக்குத் தமிழிலும் நல்ல புலமை இருந்தது. அவர்களின் நட்பால் வேணுகோபாலருக்குப் பள்ளியில் இருந்த மதிப்பும் செல்வாக்கும் மேலும் உயர்ந்தன. வேறெந்தப் பள்ளியிலும் தமிழாசிரியருக்கு அத்தகைய செல்வாக்கு கிடைத்திராது எனலாம்.

    ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த அந்நாட்டு அறிஞர் சிலரும் அவர்தம் மனைவிமாரும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ் பயின்றனர். இப்பள்ளியோடு தொடர்புடைய பாதிரியார்களால் சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தில் குருகுல் கல்லூரி ஒன்றும் நடத்தப்பெற்று வந்தது. அக்கல்லூரியில் கிறித்தவமதத் தொண்டில் ஈடுபடுவதற்குப் பயிற்சிபெறுவோர்க்குச் சைவ வைணவ சமய நூல்கள் சிலவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் வேணுகோபாலர் விளங்கினார். 1938ஆம் ஆண்டு தம் ஆசிரியத் தொழிலைவிட்டு நீங்கினார் அவர்.

    பின்னர், பதிப்புப் பணியிலும் எழுத்துப் பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்கட்கென்று பல நூல்களை எழுதினார். அந்நூல்களின் வழியே பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிமுகமானார் வேணுகோபாலப் பிள்ளை. அவர் எழுதிய நூல்களைப் பல இதழ்களும் மதிப்புரை வழங்கிப் பாராட்டின. அவ்வாறு அவர் எழுதிய நூல்களுள் ஒன்று அரிச்சந்திர புராணச் சுருக்கம் என்பதாகும்.

    உரைநடையில் அமைந்த அந்நூல் குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8ஆம் நாள் ’நவசக்தி’ இதழில் வெளியிட்ட மதிப்புரையின் ஒரு பகுதி இது…

    ”……தீந்தமிழ்ச் சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்துள்ள உரைநடையைக் கொண்ட கதைச் சுருக்கம், ஒரு பூங்காவெனப் பொலிகிறது. அதனிடைத் தென்றற் காலும் வீசுகிறது. திரு. வேணுகோபாலர் தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மை செய்யும் பெற்றி வாய்ந்ததென்று சுருங்கக் கூறலாம்.”

    தமிழ்நூல்கள் அளவில் சிறியவையாயினும் பெரியவையாயினும் அவை பிழையின்றித் திருத்தமாக வெளிவரவேண்டும் என்பதைத் தம் வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டிருந்தார் வேணுகோபாலப் பிள்ளை. பதிப்புத்துறையின் நுட்பங்களையெல்லாம் ஆங்கில நூல்கள் வாயிலாகக் கற்றுத்தேர்ந்த அவர், பதிப்பித்த நூல்களின் விவரம் வருமாறு:

    இறையனார் அகப்பொருளுரை
    தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியர் உரை
    யாப்பருங்கல விருத்தியுரை
    யாப்பருங்கலக் காரிகை
    விசாகப் பெருமாள் தமிழிலக்கணம்
    தஞ்சைவாணன் கோவை – விளக்கக் குறிப்புரை முதலியன.

    வேணுகோபாலப் பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையம் வெளியிட்ட யாப்பருங்கலக் காரிகையின் துணையோடுதான் நமக்கு முந்தைய தலைமுறை யாப்பு பழகியது என்பது கருதத்தக்கது.

    மேற்கண்ட இலக்கண நூல்களேயல்லாமல்,

    அட்டப்பிரபந்தம் – விளக்கக் குறிப்புரை
    நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
    நளவெண்பா
    நீதிநூல்கள்
    பதினெண் சித்தர் ஞானக் கோவை
    விநோத ரச மஞ்சரி

    திருவாய்மொழி ஈட்டு வியாக்கியானம் – 10 பகுதிகள்

    உள்ளிட்ட இலக்கிய நூல்களையும் பதிப்பித்து, பதிப்புத் துறையில் ஆழமாய்க் கால்பதித்த வேணுகோபாலர், சிறந்த சொற்பொழிவாளராகவும் பரிமளித்தார்.

    அவற்றுள் 1931ஆம் ஆண்டு, சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் தமிழ்க்கழக ஆண்டுவிழாவில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவும், 1948ஆம் ஆண்டு மன்னார்குடியில் நடைபெற்ற தமிழ்த் திருநாளில் அறிஞர் அண்ணாவுடன் இணைந்து ஆற்றிய சொற்பொழிவும் குறிப்பிடத்தக்கன.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 4, 5 தேதிகளில் ’தமிழ் அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் வேணுகோபாலப் பிள்ளை ஆற்றிய சொற்பொழிவு நூலாகவும் வெளிவந்துள்ளது.

    தமிழ்நூல்களில் காணப்பெறும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கற்பனைகளை இந்நூலில் நமக்கு அடையாளம் காட்டுகின்றார் வேணுகோபாலப் பிள்ளை. அவ்வகையில், குறுந்தொகையிலுள்ள ’கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் இறையனார் எனும் பெயரிய மானுடப் புலவரேயன்றிக் கண்ணுதற் கடவுளான சிவனார் இல்லை என்று விளக்கும் வேணுகோபாலர், சமண முனிவர்கள், தாம் பாண்டி நாட்டைவிட்டுப் போவதற்குமுன் ஆளுக்கொரு வெண்பாவை எழுதித் தம் ஆசனத்தின்கீழ் வைத்துவிட்டுச் சென்றதாகவும், அவற்றை வையை ஆற்றில் பாண்டிய மன்னன் எறியச் சொல்ல, அவற்றில் எதிரேறி வந்த நானூறு பாடல்களின் தொகுப்பே நாலடி நானூறு என்பதும் பொருந்தாக் கருத்தே என்கிறார்.

    வேணுகோபாலப் பிள்ளையின் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதானால் ஜானகி அம்மையார் என்ற பெண்மணியை மணந்து மூன்று புதல்வர்களைப் பெற்றார். அப்புதல்வர்களுள் ஒருவர் குழந்தைப் பருவத்திலேயே வருந்தத்தக்க வகையில் இறந்துபோனார்.

    சென்னையில் வசித்துவந்த வேணுகோபாலப்பிள்ளையின் குடும்பம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் அங்கு ஏற்பட்ட குழப்பங்களால் சென்னையைவிட்டுக் காஞ்சிபுரத்துக்குக் குடிபெயர நேர்ந்தது. அக்காலத்தில் வித்துவான் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தமிழ் மாணாக்கர் பலருக்கு மாலை நேரங்களில் வகுப்பெடுத்தார் வேணுகோபாலப் பிள்ளை.

    தமிழ்படிக்க விரும்பும் மாணவர்கள் தம் பொருளாதாரச் சூழலால் அவ்வாய்ப்பை இழந்துவிடக் கூடாது எனக் கருதிய அவர், “தாம் பெற்ற தமிழ்க்கல்வி பெறுக இவ்வையகம்” எனும் உயரிய நோக்கோடு மாலை நேரத்தில் இலவசமாகவே மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புக்களை நடத்தினார். அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.

    தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களேயன்றிச் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரான கமில் சுவலபில் அவர்களும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்பயின்ற அனுபவம் உடையவராவார். தமிழகச் சித்தர்கள் குறித்து தாம் எழுதிய “The Poets of the Powers” என்னும் நூலில் தம் ஆசிரியர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டு “எனது குரு” என்று சுவெலபில் குறிப்பிட்டிருப்பது அவரது நன்றியறிதலையும் வேணுகோபாலப் பிள்ளைபால் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பினையும் புலப்படுத்துகின்றது.

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமணரான ஜீவபந்து ஸ்ரீபாலர் என்பவர் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்ப் பெருங்காப்பியமான சீவக சிந்தாமணி குறித்துச் சொற்பொழிவாற்ற வேண்டினார். அவ்வேண்டுகோளை ஏற்று ஜைனத் தமிழ்க் கழகத்தின் சார்பில் ஞாயிறுதோறும் சீவக சிந்தாமணிச் சொற்பொழிவை மூன்றாண்டுகள் நிகழ்த்தி முடித்தார் வேணுகோபாலர். இப்பெருந்தொண்டினைப் பாராட்ட விழா எடுத்தனர் ஜைனத் தமிழ்க் கழகத்தார்.

    அவ்விழாவில் சிந்தாமணிச் சொற்பொழிவு நினைவுமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. வேணுகோபாலப் பிள்ளைக்குப் புத்தாடைகளும் விலைமதிப்பு மிக்க பார்க்கர் பேனாவும் பரிசளிக்கப்பட்டன.

    அந்நினைவு மலருக்கு நன்மொழி எனும் பெயரில் பொன்மொழிக் கட்டுரை ஒன்றை நல்கிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்,

    ”வகுப்பை நடாத்திய மகாவித்துவான்
    மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு
    என் வாழ்த்து உரியதாகுக! அவரைச்
    சிந்தாமணிச் செல்வர் வேணுகோபாலப் பிள்ளை
    எனத் தமிழ்நாடு இனி வழங்குவதாக!”

    என்று தம் கட்டுரையில் குறிப்பிட்டதை ஏற்று அவரைச் ’சிந்தாமணிச் செல்வர்’ என்று அழைத்து மகிழ்ந்தது தமிழ்கூறு நல்லுலகு.

    அரசு இலக்கண இலக்கியப் பாடநூல்களின் தலைமைப் பதிப்பாசிரியர்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவின் தலைமைப் பதிப்பாசிரியர்; தமிழகப் புலவர் குழுவின் தலைவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்புக் குழு உறுப்பினர் எனப் பல பெரும் பொறுப்புகளை ஏற்று, அவற்றைத் திறம்படச் செய்த செயல்வீராகவும் திகழ்ந்தார் வேணுகோபாலப்பிள்ளை.

    காஞ்சியில் நடைபெற்ற அன்னாரின் மணிவிழாவில் தமிழவேள் பி.டி. ராஜன் அவர்கள் மீனாட்சி கருணையைப் பொன்னாடையாகப் போர்த்துகின்றேன் எனக்கூறி வேணுகோபாலப் பிள்ளைக்குப் பொன்னாடை அணிவித்தார். விழாவுக்கு வந்திருந்த தமிழறிஞர்கள் அவரை ’மகா வித்துவான்’ எனப் போற்றினர்.

    காஞ்சி அன்னை தமிழிலக்கிய மன்றத்தினர், அருந்தமிழ் வளர்த்த பெருந்தகையாம் வேணுகோபாலப் பிள்ளைக்கு ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என்று பட்டமளித்துச் சிறப்பித்தனர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தார் அவருக்குப் ‘பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.

    1967-இல் சென்னை தொல்காப்பியர் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் வேணுகோபாலப் பிள்ளைக்குச் ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார், அன்றைய தமிழக முதல்வர் அண்ணா. 

    நற்றமிழ் அறிஞராய், நல்லாசிரியராய், சிறந்த சொற்பொழிவாளராய், தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ந்த புலமையாளராய் விளங்கி, ஒல்லும் வகையிலெல்லாம் தமிழ்த்தொண்டாற்றித் தமிழன்னையைச் சிறக்கச் செய்த மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை மறவாது போற்றுவோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை நூற்றாண்டு விழா மலர் – தமிழ்வளர்ச்சித் துறை வெளியீடு.
    2. https://www.hindutamil.in/news/literature/513791-venugopala-pillai.html

    Share
  • பழகத் தெரிய வேணும் – 89

    பழகத் தெரிய வேணும் – 89

    நிர்மலா ராகவன்

    என்ன இடர் வரினும்

    சில தாவரங்கள் வெப்பமாக இருந்தாலும், மழை அடித்துக்கொட்டினாலும் பிழைத்துக்கொள்ளும். வேறு சில வெயிலில் வாடி, பெருமழையில் அழுகிப் போய்விடும்.

    மனிதர்களும் அப்படித்தான். பலர் சிறிதளவு துன்பத்தைக்கூட தாங்கமுடியாது ஒடுங்கிவிடுவார்கள். புதிதாக ஒரு வழியைத் தேடும் உற்சாகத்தை இழந்துவிடுவதுதான் காரணம்.

    ஒரு சிலர் எவ்வளவுதான் இடர்கள் வந்தாலும், அவற்றைச் `சவால்’ என ஏற்று, `இந்த நிலையும் ஒருநாள் மாறும்!’ என்ற நம்பிக்கையுடன் நடப்பார்கள். அதுவே வாழ்வின் வெற்றிதான். (பலர் புகழ ஏதாவது செய்வதுதான் வெற்றி என்பதல்ல).

    வீட்டைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற அண்மைக்காலத் தடையுத்தரவில், பலரும் தம் வேலையை இழந்தனர். கடைகளை மூடவேண்டிய நிலைமை பல வியாபாரிகளுக்கு.

    விமானப்பயணம் கூடாது என்ற நிலையில், விமானப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு வருமானம் இல்லாதுபோயிற்று.

    ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சி இல்லாததால், கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை இன்னும் சிலருக்கு.

    இவர்கள் அனைவரும், `அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!’ என்று நம்பிக்கை இழந்தால் என்ன ஆகும்?

    நிலைமை மாறும் என்று பொறுமையைக் கடைப்பிடிக்கமுடியுமா?

    என்ன கஷ்டம் வந்தாலும், சாப்பாடு மட்டும் எல்லாருக்கும் அவசியமான தேவை என்று, உணவுப்பொருட்களைத் தயார் செய்கிறார்கள் பலர். அவற்றை வீடுகளுக்குக் கொண்டுசெல்லும் பணி சிலருக்கு. ஆண்களோ, பெண்களோ, இவர்களில் எவரும் அந்தஸ்து பார்ப்பதில்லை.

    ஒருவர் ஆயிரம் மரவள்ளிக்கிழங்கு செடிகளை நட்டு, கிழங்கை வறுவலாக விற்று, ஒரே நாளில் பல ஆயிரம் ரிங்கிட் சம்பாதிப்பதாகச் செய்தி வந்தது.

    இருபத்தி இரண்டு வயதான சீன இளைஞன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே பெற்றோருடைய சிறு கடையில் உதவி செய்திருக்கிறான். படிப்பு முடிந்ததும், தன் அறிவைக்கொண்டு, கணினிவழி வியாபாரத்தைப் பெருக்கியிருக்கிறான். `இதற்கு கல்லூரிப் படிப்பும், அதற்கான செலவும் வீண்!’ என்று பலர் கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தவில்லை.

    ஒரே தொழிலில் நிலைத்திருந்து கஷ்டப்படுவதைவிட, அதை விட்டுவிட்டு, புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவது அச்சத்தை விளைவித்தாலும், அதுதான் புத்திசாலித்தனம்.

    அவ்வாறு செய்தால், `முன்பே செய்திருக்கவேண்டும்!’ என்ற வருத்தம் காலங்கடந்து உண்டாகாது. கிடைப்பது தோல்வியாக இருந்தாலும், செய்யாது போய்விட்டோமே என்ற வருத்தமாவது எழாதிருக்கும்.

    கதை

    நேபாளத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, விமானத்தில் கோலாலம்பூர் திரும்பிக்கொண்டிருந்தேன்.

    விமானம் தரையிறங்கும்போது, ஒரு பக்கத்திலிருந்து பல குரல்களில், மகிழ்ச்சி கலந்த சிரிப்பு உரக்கக் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நாலரை மணிநேரப் பயணமாக இருந்தாலும், வழியில் சாப்பிட எதுவும் வாங்காது, அங்கு உட்கார்ந்திருந்தார்கள் பல நேபாளிகள்.

    முதன்முறையாக வெளிநாடு வந்திருக்கும் தொழிலாளிகள் என்று புரிந்தது.

    வெளிநாட்டுக்கு வேலை நிமித்தம் போகிறவர்கள் பலவிதத் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். தாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை, குறுகிய இடத்தில் நிறைய பேருடன் படுக்கை, உற்றவர்களைவிட்டுப் பிரிந்திருத்தல், மாறுபட்ட கலாசாரத்தால் ஏற்படும் குழப்பங்கள் – இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று நினைத்தும் பாராது, வளமான எதிர்காலக் கனவுகளுடன் மகிழ்ந்திருந்தார்கள்.

    எதிர்ப்படும் சங்கடங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டு, வேலையைப் பொறுப்பாகச் செய்பவர்கள் முதலாளிகளின் ஆதரவைப் பெற்று, உயர வழியுண்டு.

    வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த ஒரு தையல்காரர் தான் எதிர்பார்த்தபடி வாழ்க்கை எளிதாக இல்லை என்றோ, அல்லது மதுபானங்கள் எளிதாக, எங்கும் கிடைப்பதைக் கண்டோ, அப்பழக்கத்திற்கு அடிமையானார். அவரது உத்தியோகம் நிலைக்கவில்லை.

    அவர் செய்த தவறு: ஆரம்பித்த காரியத்தை (புதிய நாட்டில் கிடைத்த வேலையை) சரியாக முடிக்காது, அதில் முழுக்கவனமும் செலுத்தாது, முதலாளி பலமுறை கண்டித்தபோதும் விழித்துக்கொள்ளாமல் இருந்தது.

    புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமானால், பழைய பழக்கங்களை, தொடர்புகளை, விட்டுவிடத் தயாராக இருக்கவேண்டும்.

    கதை

    இன்பக் கனவுகளுடன் மலேசியா வந்தடைந்த அயல்நாட்டுத் தொழிலாளி ஒருவருக்கு சம்பளம் அளிக்கப்படவில்லை, கேட்டால் அடி, உதை. சாப்பாட்டுக்கே வழியில்லாது போனபோதும், அவருக்கு எங்கு போய், என்ன செய்வதென்று புரியவில்லை. கடப்பிதழோ, முதலாளி கைவசம்.

    அவரைப் பற்றிய செய்தி தினசரியில் முதல்நாள் வெளியாகியது. பஞ்சத்தில் அடிபட்டவர்போல் காணப்பட்டார். மறுநாள், அவருடைய மரணச்செய்தி!

    இம்மாதிரியான, கொடுமைக்கார, முதலாளிகள் தண்டிக்கப்பட்டாலும், பிழைப்பை நம்பி வந்த உயிர் போனது போனதுதான்.

    பலர் எப்படியோ தப்பித்துவிடலாம். இருப்பினும், `நான் என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தேன், தெரியுமா?” என்று கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதால் பயனில்லை. அவற்றை மாற்றவா முடியும்!

    `நான் இத்தனைத் துன்பங்களை கடந்துவந்திருக்கிறேனா!’ என்ற வியப்புடன், பல வருடங்களுக்குப்பின், பேரக்குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதைகளாக வேண்டுமானால் அவை அமையும்!

    வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்ற நிலையில், `வேறு என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்துக்கொண்டே இருப்பவருக்கு உற்சாகம் குன்றுவதே கிடையாது.

    `எல்லாம் நன்மைக்கே!’ என்று எப்போதும் சொல்லிவந்த ஒருவனுக்கு விபத்தினால் ஒரு கால் முடமாகிவிட்டது.

    `இதில் என்ன நன்மை?’ என்று சிலர் கேலி செய்ய, `ஒரு செருப்பு வாங்கினால் போதுமே,’ என்றானாம்!

    எந்த நிலையிலும் அவன் தன் உற்சாகத்தை இழக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டியது.

    கதை

    பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நியு யூ (NIU YU) என்ற பெண் தனது பதினோராவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் ஆவலில் இருந்தாள்.

    சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அன்று நடந்த பூகம்பத்தில் 70,000 பேர் உயிரிழந்தனர். அச்சிறுமியின் பள்ளிக்கூடக் கட்டடம் இடிந்து விழ, மூன்று தினங்கள் அதனடியில் மாட்டிக்கொண்டாள். உயிர் பிழைத்தாள். ஆனால், வலது காலை எடுக்கும்படி ஆயிற்று.

    இப்போது, முழங்காலுக்குமேல் செயற்கைக்கால் வெளியே தெரிய நடக்கும் அப்பெண் ஒரு மாடல்!

    “என்னைப்போன்றவர்கள் முழுமை அற்றவர்களாக இருக்கலாம். ஆனால், நாங்களும் அழகானவர்கள்தாம்!” என்னும் அவளது தன்னம்பிக்கை பலருக்கும் தைரியம் அளித்துவருகிறது.

    கசப்பான நிகழ்வுகள் முடியும்போது, புதிய திருப்பங்கள் ஏற்பட வழியுண்டு.

    அதற்காக, துன்பம் எதிர்ப்படும்போதுதான் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதல்ல.

    முடிவில் ஆரம்பம்

    நான் பள்ளியில் படித்தபோது, அநேகமாக எல்லா ஆசிரியைகளும் கணவனை இழந்தவர்கள், அல்லது முதிர்கன்னிகள். பதின்ம வயதில், அவர்களுடைய நிலை புரியவில்லை.

    கதை

    இளம்வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவள் அவள்.

    துக்கத்தைவிட, `இனி யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்!’ என்ற மலைப்புதான் பெரிதாக எழுந்தது.

    அவளுடைய தந்தை அவளுடன் வந்து தங்கி, அவள் பாதியில் விட்ட படிப்பைத் தொடரச் செய்தார்.

    புதிய இடத்தில், புதிய மனிதர்களுடன் எப்படித்தான் காலம் கழிக்கப்போகிறோமோ!’ என்று முதலில் பயம் ஏற்பட்டது. `வேறு வழியில்லை!’ என்ற நிலையில், படிப்பைத் தொடர்ந்தாள்.

    பிறகு, ஆசிரியப்பணியில் அமர்ந்தபோது, வாழ்க்கை அவ்வளவு பயங்கரமானதாகத் தோன்றவில்லை. `பிறர் கையை எதிர்பார்த்து, காலத்தைக் கழிக்கத் தேவையில்லை!’ என்று புரிய, தன்னம்பிக்கை வளர்ந்தது.

    பாதுகாப்பான நிலையைப் பெரிதாகக் கருதி, அளவுக்கு மீறிய பொறுமையுடன் இருந்தால், வளர்ச்சி ஏது!

    இளமையும் ஆரோக்கியமும் இருக்கும்போதே சிலர் ஒன்றன்பின் ஒன்றாக, பல பொழுதுபோக்குகளில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கற்பது தம் திறமைக்கே சவால் விட்டுக்கொள்ள எண்ணித்தான்.

    அவ்வாறு கற்பது எதுவும் வீண்போவதில்லை. வேறு எங்காவது உபயோகப்படும்.

    சில சமயம், நாம் விரும்பினாலும், எதிர்பார்க்காவிட்டாலும், மாற்றங்கள் நம்மைத் தேடி வரும். புதிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைத்தால், அங்கு புதிய மொழி ஒன்றைக் கற்கவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாதது.

    `புதியதாக எதிலாவது இறங்குவதா!’ என்ற அச்சம் அப்போது தடுக்கக்கூடும்.

    அடுத்தடுத்த நாட்கள் ஒரே சீராக இருந்தால், சலிப்பு ஏற்படுமே! வாழ்வில் வளர்ச்சியோ, முன்னேற்றமோ இருக்குமா?

    Share
  • பச்சைப் பயறு அறுவடை

    பச்சைப் பயறு அறுவடை

    நம் மாடித் தோட்டத்தில் இன்று பச்சைப் பயறு என்கிற பாசிப் பயறு அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தங்கப் பத்திரங்கள் – சில கேள்விகள்

    தங்கப் பத்திரங்கள் – சில கேள்விகள்

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது பற்றி, முந்தைய பதிவில் விளக்கியிருந்தோம். அது தொடர்பாகச் சில கேள்விகளைச் சுதா மாதவன் எழுப்பியுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், இவற்றுக்குப் பதில் அளித்துள்ளார். உங்களுக்கு ஏதும் ஐயங்கள், கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்

    அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்

    DESALINATION PLANT IN UNITED ARAB EMIRATES

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    JAPAN HTTR PRODUCES ELECTRIC POWER, HYDROGEN GAS 7 METHANE GAS
    NUCLEAR ENERGY COGENERATION SYSTEM

    அணுமின் நிலையத்தின் முக்கிய சாதனங்கள்

    Learn more about nuclear hydrogen production.

    DESALINATION PLANT

    அணுசக்தி உலையில் வீணாகும் வெப்பசக்தி மீள்பயன்பாடு

    அணுமின்சக்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வது மூன்றில் ஒரு பங்கு வெப்பசக்தியே [சுமார் 35% இயக்கத் திறன்] [EFFICIENCY]. குளிர்கலனில் TURBINE CONDENSER] 65% வெப்பசக்தி பயன் தராமல் கடல் தணிப்பு நீரிலோ , கோபுரத்திலோ [CONDENSER COOLING WATER] வீணாகிறது. இந்த 65% வெப்பசக்தி மீட்கப்பட்டு பல தொழிற்துறை ஆலைகளுக்குப் பயன்படுகிறது. முக்கிய கடல் சார்ந்த பகுதிகளில் உப்பு நீக்கி குடிநீர் தயாரிக்க முடிகிறது மேலும் எரிசக்தி நீரக வாயு [HYDROGEN GAS], மீதேன் [METHANE GAS] தயாரிக்கவும், குளிர் நாடுகளில் வீடுகளுக்குச் சூடு அளிக்கவும், தொழிதுறை ஆலைகளுக்கு நீராவி அனுப்பவும் உதவுகிறது. ஜப்பானில் இயங்கி வரும் உச்ச உஷ்ண அணு உலை [HTTR] [HIGH TEMPERATURE TEST REACTOR] மின்சாரம் தயாரிப்ப தோடு, பயன்படா சக்தி மீட்கப்பட்டு நீரக வாயு, மீதேன் வாயு தயாரிக்கப் படுகிறது. இம்முறைக்கு கூட்டுப்பிறப்பு [cogeneration] முறை என்று பெயர். கூட்டுப்பிறப்பு முறையின் இயக்கத் திறன் 80%.

    தற்போது 10% உலகத் தேவைக்கு அணுசக்தி நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன குளிர் நாடுகளான ரஷ்யா, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, சுலோவேகியா, சுவிட்சர் லாந்து,யுக்ரேன் வீடுகளைச் சூடாக வைத்திருக்க அணுமின்சக்தி நீராவி பயன்படுகிறது.

    https://www.iaea.org/sites/default/files/styles/original_image_size/public/ne-charts-1140×640.jpg?itok=tywG9Wzs

    Non-electric applications of nuclear energy are reviewed, including technological, environmental and economic issues of such applications as well as future prospects and benefits of non-electric applications of nuclear energy. The applications for nuclear energy are significantly greater than electricity generation, including cogeneration, district heating and cooling, high-temperature process heating, hydrogen and alternative fuel production, transportation and desalination. These applications of nuclear energy expand its prospects and enhance its benefits, such as reduced environmental impact and climate change mitigation. Interest in non-electric applications of nuclear energy is growing, driven by environmental, economic, security and other reasons. The potential uses of nuclear energy beyond electricity generation and supply are likely to find increasing application in the future.

    What is the role of the IAEA?

    • The IAEA supports and facilitates the development of new and emerging non-electric applications of nuclear technologies through scientific and technical publicationswebinars and coordinated research projects.
    • The IAEA has developed software tools, such as the Hydrogen Economic Evaluation Program (HEEP) and Hydrogen Calculator, to assess options for hydrogen production. Links to download both tools are available here.
    • To assess nuclear desalination, the IAEA has developed the Desalination Economic Evaluation Program (DEEP) and the DEsalination Thermodynamic Optimization Programme (DE-TOP) to perform economic, thermodynamic and optimization analyses of different power resources coupled to various desalination processes. The software are available for download here.
    • The IAEA has been coordinating feasibility studies on nuclear desalination since 1989. The IAEA Technical Working Group on Nuclear Desalination is a global network of experts that supports programme assessment and planning, research, development, design, construction, economics, safety aspects, international collaboration for demonstration projects, and operation and maintenance of nuclear desalination plants.

    ======================================================================

    இந்தியாவில் ஆறு 1000 MW அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

    Image result for westinghouse nuclear reactor ap1000

    வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம்

    https://www.reuters.com/article/us-india-usa-trump-westinghouse-exclusiv/exclusive-westinghouse-set-to-sign-pact-with-indian-firm-for-nuclear-reactors-during-trump-visit-idUSKBN20E1PM

    https://timesofindia.indiatimes.com/india/US-based-Westinghouse-to-build-6-nuclear-power-plants-in-India/articleshow/52644065.cms

    https://en.wikipedia.org/wiki/AP1000

    Obama, Modi Kick Start the Westinghouse Nuclear Deal

    +++++++++++++++++++

    Image result for westinghouse nuclear reactor ap1000

    அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள் 

    2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய்  கோகலேயும் அமெரிக்க  அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது.  பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.  கடந்த பத்தாண்டு களாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது ?  அணு உலை இயக்கும் இந்தியாவா ?  அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா ?  [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.]  இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும். இந்தியா 2031 ஆண்டுக்குள் 22,480 மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது.  2019 ஆண்டு  அணுமின்சார உற்பத்தி அளவு ; 6780 மெகாவாட்.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது.  “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம்.  இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்]  முனைந்துள்ளது.  அமெரிக்கன் 1000 மெகாவாட் ஒரு நிலையம் நிறுவ, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம். சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன.  நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ்  நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும்.  ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.

    Image result for indian electric power generation

    Information

    1. https://www.iaea.org/newscenter/news/the-use-of-nuclear-power-beyond-generating-electricity-non-electric-applications
    2. https://www.iaea.org/topics/non-electric-applications
    3. https://www.iaea.org/newscenter/news/nuclear-and-renewables-modelling-tool-to-evaluate-hybrid-energy-systems
    4. https://www.iaea.org/topics/non-electric-applications/nuclear-hydrogen-production
    5. https://www.sciencedirect.com/science/article/pii/B978012818483700010X
    6. https://www.cnbc.com/2021/02/25/bill-gates-nuclear-power-will-absolutely-be-politically-acceptable.html
    7. https://nuclearsafety.gc.ca/eng/reactors/research-reactors/other-reactor-facilities/small-modular-reactors.cfm
    8. https://www.anl.gov/article/10-myths-about-nuclear-energy

    Share