செல்வன்

இவ்வார வல்லமையாளராக அஜீத் பாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அஜித் பாய் அமெரிக்க தகவல் தொடர்புத்துறை (எப். சி சி) தலைவர் ஆவார். இப்பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் எனும் பெருமைக்கு உரியவர். இவரது பெற்றோர் கொங்கணி மொழி பேசுவோர். அஜீத் பாய் பிறந்த ஊர் நியூயார்க்.

வக்கீல் படிப்பில் தேர்ச்சி பெற்ற அஜீத் பாய் அமெரிக்க டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸில் பணிபுரிந்தார். அதன்பின் 2001ல் வெரிசான் கம்பனியில் சேர்ந்தார். அதன்பின் எப்.சி.சியில் பல்வேறு பதவிகளை வகித்தார். இவரது நிர்வாகதிறமையை பாராட்டி ஒபாமா 2012ம் ஆண்டில் எப்.சி.சி கமிட்டியில் உறுப்பினராக ஆக்கினார். அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் அஜீத் பாயை எப்.சி.சி தலைவராக நியமித்தார். இந்த பெருமைமிகு பதவிக்கு நியமிக்கடும் முதல் இந்தியராக அஜீத் பாய் ஆனது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சுதந்திர பொருளாதார கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட அஜீத் பாய் அரசு இணையத்தில் தலையிடுவதை கடுமையாக எதிர்த்துவந்தார். ஒபாமா அரசு கொண்டு வந்த நெட் நியூட்ராலிட்டி விதிமுறைகள் இணையத்தில் அரசின் தலையீட்டை அதிகரித்து, சுதந்திர இணையம் உருவாவதை தடுக்கும் என நம்பினார்.

இன்று அஜீத் பாய் வெளியிட்ட அறிவிப்பில் இணைய நெட் நியூட்ராலிட்டி விதிகள் முழுமையாக இரத்து செய்யபடும் என அறிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், கருத்துரிமை ஆர்வலர்கள் என பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து அஜீத் பாயை பாராட்டி வருகிறார்கள்.

இணையம் சுதந்திரமாக இருப்பதே அனைவரின் கருத்துரிமையையும் உறுதி செய்யும் என்பதால் அஜீத் பாய் எடுத்துள்ள இந்த முடிவு உலகெங்கும் உள்ள கருத்து சுதந்திர ஆர்வலர்களின் சுதந்திரத்தைக் காக்கும் விதத்தில் இருக்கிறது. இன்று நெட் நியூட்ராலிட்டி சட்டம், நாளை வேறு ஒரு சட்டம் என இணையத்தை அரசு நசுக்க முற்படுவது கருத்துரிமைக்கு எதிரான செயலாகும்.

அஜீத் பாயின் இந்த வெற்றிகரமான முடிவும், அவரது வாழ்வின் வெற்றிக்கதையும் உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என நம்பி வல்லமை  அஜீத் பாயை பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்! (249)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *