Author: ரா. பார்த்த சாரதி

  • கல்லறைப் பூவின் கண்ணீர் துளி

     

    கண்ணே! உன் நினைவு

    என்னை என்றும் நினைக்க வைக்கிறது!

    உன் ஸ்பரிசம் என் தேகத்தை

    என்னை என்றும் சிலிர்க்க வைக்கிறது !

    உன்னை கண்ட நாள் முதல்

    என் கண்கள் காதலால் நனைகின்றது !

    உன் இருவிழிகள் கூர்மையான அம்புபோல்

    என் இதயத்தை துளைக்கின்றது !

    உன் உண்மையான காதல்

    என் நெஞ்சை வாட்டுகிறது !

    உன்னோடு வாழ்ந்த வாழ்க்கை

    என் உள்ளத்தில் கோவில் கொண்டுள்ளது !

    உன் மரணமோ உன் கல்லறை பூவாய் கிடந்தது

    என் கண்ணீர் துளிகளால் எழுதப் பட்டிருக்கு!

     

    ரா.பார்த்தசாரதி

    Share
  • ஆசையே அலைபோலே

     

     
    ஆசையின் போக்கில் செல்லும் மனிதனே

    ஆபத்தை விலைக்கும் வாங்கும் மானிடனே

    அடைவது எல்லாம் துன்பமே அறிந்திடுவாயா

    ஆசையை அடக்க மார்க்கத்தினை அறிந்தாயா !

     

     

    துடுப்பிலா படகில் சென்றால் இலக்கை அடையமுடியுமா

    பொறுப்பில்லாமல் வாழ்வதாலே பலன் பெறமுடியுமா

    மனிதனின் மனதினில் அலைபோல ஆசைகள் எழுமே

    ஆசையை கடிவாளமிட்டு அடக்கி ஆள வேண்டுமே!

     

     

    எதை எடுத்தாலும் சந்தேகிப்பவன் வாழ்க்கை துயரமாகும்

    தன்னை நம்பாதவன், கற்பனை செய்து தவிப்பவனாகும்

    மதிப்பினை தருவது நிறை வேற்றப்படும் நற்செயலாகும்

    இதனை மனதில் கொண்டால் வாழ்க்கை நலமாகும் !

     

     

    கையளவு இதயம் வைத்தான், கடலளவு ஆசை வைத்தான்

    ஆசையே மனிதனின் அழிவிற்கு வித்து என உணரவைத்தான்

    மண் மீதும், பெண் மீதும் ஆசை கொண்டவனை அழித்தான்

    மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் உதாரணமாக வைத்தான்

     

     

    ஆசையை துறந்தவன் முற்றும் துறந்த முனிவனாகிறான்

    ஆசையை துறக்காதவன் துன்பமெனும் கடலில் மூழ்கின்றான்

    மது, மாது, சூது இம்மூன்றும் மனித வாழ்வை சீர்குலைக்கும்

    மனிதனின் மனம் செம்மையாய் இருந்தால்தான் நன்மை பயக்கும்!

     

     

    மனமெனும் கடிவாளத்தால் ஆசையினை அடக்கப் பழகு

    பிறர் பொருள் மீது ஆசை படுவதையும் அறவோடு விலக்கு

    ஆசையை விட பேராசையே அழிவிற்கு பாலம் அமைக்கும் 

    ஆசைக்கு அணை போட்டால்தான் வாழ்க்கை நிலைக்கும் !

     

    ரா. பார்த்தசாரதி

    Share
  • உன்னதமான வாழ்க்கை

     
    சும்மாவே இருந்திருந்து, சோம்பித் திரிந்திடுவார்

    வாழ்க்கை வெறுத்துவிட்டது என புலம்புவார்

    தன் கையில் எல்லாம் வரவேண்டுமென எதிர்ப்பார்ப்பார்

    இருப்பிடம் விட்டு நகர்வதற்கும் காலதாமதம் செய்வார் !

     

     

    உடம்பை சுமையாய், மனசை பாலைவனமாய்

    வாழ்க்கை வறண்டதாய் என்றும் நினைத்துடுவார்

    இதுவா வாழ்க்கை என உள்ளுக்குளே புலம்பிடுவார்

    வீணாய் போன, நாட்கள் ஆயுள் பகுதியால் மறைத்துடுவார் !

     

     

    வெந்த சோற்றை தின்று விதிவசத்தால் இறப்பாயா

    வாழ்வின் ஓவ்வொரு கணமும் சுவைக்க பழக மாட்டாயா

    ஓவ்வொரு விடியலும்,தனக்காகவே என எண்ணமாட்டாயா

    வாழ்க்கை வாழ்வதற்க்கே எனவும் நினைக்கமாட்டாயா !

     

     

    உன்முன் பறந்து விரிந்த வர்ணம் சொல்லவில்லை

    பரந்த மனப்பான்மை கொண்டு பார்க்க மனமில்லை

    காலையில் சூரிய கிரணங்கள் கண்களை கூசாமலில்லை

    இன்னும் உன் சோம்பேறிதனத்திற்கு முடிவு இல்லை!

     

     

    உன் மனம் அழுக்கு மூட்டை அல்ல

    வேண்டாத அழுக்கை மனதிலிருந்து நீக்கு

    நல்லெண்ணத்தை மனமெனும் பூந்தொட்டியில் செருகு

    புது,புது எண்ணங்களை எண்ணி வாழ்வை புதிதாக்கு !

     

     

    உனக்கேயின்றி ஊருக்காக உழைத்துப் பார்

    உனக்குள் ஏற்படும் உற்சாகத்தை நினைத்துப் பார்

    மரணம் என்பது மனிதனுக்கு நிரந்தரம் என நினைத்திடு

    உன்னத வாழ்க்கை வாழ்ந்து, புகழினை அடைந்திடு !

     

     

    ரா.பார்த்தசாரதி

    Share
  • நினைக்கத் தெரிந்த மனம்

     ரா.பார்த்தசாரதி

    செய்தித் தாளை பிரித்தால் தினம் ஒரு சாலை விபத்து,

    நினைத்தாலே  பதை  பதைக்கிறது நம் மனம் 

    இரக்கமில்லாமல் கலப்படம் செய்யும் அரக்கர்களை கண்டு

    எதிர்க்க முடியாமல் கொதிக்கின்றது நம்  மனம்!

     

    ஜாதி,மத சண்டைகளை செய்யும் மத வெறியர்களை கண்டால் 

    சமாதானப்படுத்துவதா, பரிதாபப்படுவதா என நினைக்கும் நம் மனம் 

    நாடுகள் வேறாக இருந்தாலும்,அப்பாவிகளை கொல்லும் 

    தீவிரவாதிகளை கண்டால் வெறிக்கிறது நம் மனம் !

     

    சஞ்சலமின்றி சிறை செல்லும் அரசியல்வாதிகளை கண்டால் 

    காறித் துப்ப நமது மனம் எண்ணுகின்றது !

    கோடி,கோடியாக பணம் செலவழித்து திரைப்படம் எடுப்பதை கண்டால்!

    காதலுக்காக உயிர் விடுவது கண்டு நம் மனம் சிரிக்கின்றது!

     

    மக்களின் அறியாமையை மூலதனமாக்கி பணம் சேர்க்கும் 

    ஆன்மிகவாதிகளை கண்டால் நம் மனம் சினம் கொள்கிறது!

    முதல் போட்டு ஆரம்பித்த தொழில் நலிவடையும் போது 

    முதலாளியை கண்டு நம் மனம் வருத்தம் கொள்கின்றது !

     

    தினமும் நம் அறிவும், மனமும் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது  

    நம்மிடம் வெவ்வேறு வேலைகள் வரும்போது இவை திசை மாறுகிறது 

    நினைக்க தெரிந்த மனதிற்கு கெட்டதை மறக்கத் தெரியவேண்டும் 

    மறக்கத்  தெரிந்த மனதிற்கு என்றும் உண்மை புரியவேண்டும்

     

    Share
  • இறைவனின் விளையாட்டு

     

            ரா.பார்த்தசாரதி

     

    இறைவனே ஏன் என்னை படைத்தாய் என நினைக்கும்போது

    என் கண்ணெதிரே  கைகால் இழந்தவன்  காட்சியளிக்கின்றான்

    ஊன்று கோல் துணையுடன் அருகில் வந்து கைநீட்டுகின்றான்

    உனக்கும் கீழே பல கோடி  என இறைவன் அறிவுறுத்துகின்றான் !

     

    தள்ளாத வயதில் கீரை விற்கும் கிழவியின் தன்னம்பிக்கை

    சாலையோரத்தில்  காலணி தைக்கும் தொழிலாளியின் நம்பிக்கை

    சாலையில் குப்பை கூட்டுபவர்களின் அன்றாட வாழ்க்கை

    மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு கூலிக்காக வாழும் வாழ்க்கை !

     

    வெய்யில் மழை பாராமல் கூவி கூவி விற்கும் பூக்காரி

    நடை பாதையில் பழரசம் தேநீர் விற்கும் வியாபாரி ,

    பாதையோரத்தில், சிறு பொருட்களை விற்கும் வியாபாரி,

    நொண்டியானாலும், பேனா விற்கும் ஒரு  சிறு வியாபாரி !

     

    மனிதன் பிறக்கும்போது, ஏழை,பணக்காரனாய் பிறப்பதில்லை

    அவனவன், படிப்பாலும், தொழிலாலும்,மாறுபடாமல் இருப்பதில்லை

    படிக்காதவன் இழிந்த செயலை செய்வதற்கு தயங்குவதில்லை

    வாழ்க்கை எனும் படகை செலுத்த மனிதன் சோர்வடைவதில்லை !

     

    வாழ்க்கையை, வாழ்க்கையாலே  இறைவன் பிரிக்கின்றான்

    இறைவன் விளையாட்டை  நம்மிடம்  காட்டுகின்றான்

    தோல்விகண்டு துவளும்போது பல செயல்களை நடத்துகின்றான்

    அவற்றை கண்டு நம் மனதில் நம்பிக்கை பிறக்க வைக்கின்றான் !

     

     

     

     

    Share
  • பெண்ணடிமை

     

     

    தலையாட்டி பொம்மைகளா நினைக்கும் நிலைமையா ?

    தாய்க்குலத்தின் வாய் பேசா வனிதையா ?

    சாவி கொடுத்தால் சலங்கை ஒலி தாலமிடத்

    தாவி ஓடும் பாவைகளா!

     

    தன் ஆசைகளை, புதைத்து வைத்து வெளியிடமுடியாத ஊமை

    பணம் இருந்தும், அதனை செலவு செய்ய முடியாத நிலைமை

    திரைப்படங்களில் வரும் தேனிலவு ,

    வானிலவுத் தேவதைகளா !

     

    தொப்புள் கொடி அறுந்ததும் அப்பனுக்கு அடிமை,

    தாலிக்கொடி யேறியதும் கணவனுக்கு அடிமை,

    வேலைக்கு போன ஊழியத்தில் மேலதிரிகாரிக்கு அடிமை,

    முதுமையடைந்ததும், பிள்ளைகளுக்கு அடிமை !

     

    வாழ்க்கையில் உனக்கு இல்லாத பட்டமா !

    விதவை, மலடி, உடன்கட்டை ஏறுடி,

    வரதட்சணை வர்த்தகி !

     

    வரதட்சணை கொடுக்காதவளை கண்டாலே காஸ் அடுப்பு வெடிக்கும்

    தட்டிக் கேட்க யார் வந்தாலும் பணத்தினால் மூடி மறைக்கும்!

     

    புகுந்த வீட்டில் மாமியாருக்கு அடிமை,

    ஆணைப் பெற்றவளும் நீதான்

    பெண்ணைப் பெற்றவளும் நீதான்

    ஆயினும், வீடும்,நாடும் உனக்கு பொல்லாத சிறைதான் !

     

    தலையாட்டம் நின்று, தலை நிமிர்ந்து

    என்று வீதியை எதிர்க்கின்றாயோ

    அன்றுதான் உனக்கு விடுதலை பெண்ணே !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • சுமைகளும், சுகங்களும்

     

     

    மனிதா, வாழ்க்கையை சுமையானதாய் எண்ணிவிடாதே

    சுகங்களும் தேடி வரும் என்பதை நீ மறந்துவிடாதே

    குடும்பத்தலைவனுக்கோ என்றும் வாழ்வில் சுமைதான்

    சுமைகளையும், சுகங்களாக கருதுபவனே சிறந்தவன் !

    நெஞ்சினில் உரம் கொண்டு சுமைகளை தாங்கிடுவாய்

    சுகமான சுமைகளும் உண்டு என்பதை அறிந்திடுவாய்

    மயிலிறகு அதிகமாய் ஏற்றினாலும், அச்சு முறியும் ,

    மனதில் சுமைகள் அதிகமானாலும் மனம் இறுகும் !

    வீட்டிற்கு முதல்வனே என்றும் ஓர் சுமைதாங்கி

    எல்லா இன்ப, துன்பங்களுக்கும் அவன் ஒரு இடிதாங்கி,

    எல்லாவற்றையும், பொறுமையோடு எதிர் கொள்ளவேண்டும்

    எத்துயர் வரினும் எதிர்த்து திறம்பட செயலாற்ற வேண்டும் !

    மனித வாழ்க்கையில் காதலும் சுகமாய் பூக்குதே

    அதுவே சிற்சில சமயத்தில் சுமையாய் தாக்குதே

    சுமைகளும், சுகமும் கலந்ததே மானிட வாழ்க்கை

    இதனை அறியாமல் ஏன் மாற்றுகிறாய் உன் போக்கை !

    ரா.பார்த்தசாரதி

     

    Share
  • அம்மாவும் மகனும்

        ரா.பார்த்தசாரதி

     

     

    வாசலில் காகம் கரைந்தால் உன் வரவை

    என் கண்கள் வாசலை எட்டிப் பார்கின்றதே,

    நான் கண்ணாடியை பார்க்கும்போது உன் முகம்தான்

    எனக்கு தெரிகின்றது, ஏன் எனில் நீ என் சாயல்தான்

    என் பழைய சேலையில் உன் வாசம்தான் வாழ்கிறது

    அருமை மகனே அதனுடனே  என் பொழுதும் போகிறது !

    உன்னை விழிமேல் வழி வைத்து உன் வரவுக்காக  ஏங்குகிறேன்

    காலம் தாமதித்து வந்தாலும் மனதால்  பேதலிக்கின்றேன்!

     

     

    அழைப்பு மணி அடித்ததும் என் கால் வாசல் நோக்கி விரையுமே

    உன்முகம்  கண்டதும்  தாயின் கண்கள் மலர்ந்து வரவேற்குமே !

    பணம் பக்கத்தில் நிற்கும், பாசம் உயிரோடு கொல்லும்

    உனக்காக சேர்த்து சாப்பிட்டாலும், என் மனப்பசி அடங்கா

    நீ உப்பில்லாமல் சாப்பிட்டதால் நாக்கு செத்துப்போய்விட்டதா

    உன் அம்மாவின் ஞாபகம் வராமல் போனதா!

    உனக்கு பிடித்ததை நான் சாப்பிடும்போது மனம் ஒப்பவில்லை

    என்  மனப்பசி  சாப்பிடாமல் என்னை தடுப்பதை உணராமலில்லை!

     

     

    வேர், இலைகள், கிளைகள் இருந்தால்தான் விழுது  விழும்

    தாய் ஆணிவேராக இருந்தாலும் பாசம் மிகுந்து  வரும்!

    தொப்புள் கொடி  உறவு  என்றும்  நிரந்தர உறவாகும்

    பாசமும், பந்தமும் என்றும்  நிலை பெற்றதாகும் !

    வீட்டினில்  விளக்கு எரிந்தாலும் இருளில் மூழ்கிறது மனசு

    பெத்த மனம் பித்து , பிள்ளை மனம் கல் என்பது பழமொழி !

    வாரம் ஒரு முறை ஸ்கைப்பில் காட்சி தருவாயா

    அது காணும் பேற்றை மகனே எனக்கு  அளிப்பாயா!

     

     

     

     

    Share
  • உலக புத்தக தின விழா

     

     
    காகிதத்திற்கு இரு பெருமை உண்டு

    ஒன்று பணமாகவும், பு த்தகமாவும் மாறுவதுண்டு ,

    புத்தகத்தை கொண்டு ஆசிரியர் பாடம் நடத்துவதுண்டு

    அதன் வாயிலாக மாணவர்கள் அறிவை பெருக்குவதுண்டு!

     

     

    புத்தகம் படிப்பினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு

    படிக்காத மேதைகளும் இவ்வுலகில் உண்டு

    அறிவை விரிவாக்கும் கருவியே புத்தகம்

    மனிதனை தனிமை படுத்தாத நண்பனே புத்தகம்!

     

     

    சமுதாயத்தில் மக்கள் வாழ்க்கையை உயர்த்துவதும் புத்தகமே

    அதிக புத்தகம் படிப்போரை அறிவாளியாக உலகம் கருதுமே

    நமது கலாசாரத்தின் தொன்மையை பறைசாற்றியது புத்தகமே ,

    புத்தகதினால் சிந்தையின் வெளிப்பாடும், அறிவும் விரிவாக்குமே !

     

     

    நம் அறிவின் ஆன்மா புத்தகத்தில்தான் ஒளிந்திருக்கு

    மனிதனின் அறியாமையை அழிக்கும் ஒளிவிளக்கு

    நல்ல புத்தகங்களுக்கு என்றும் மதிப்புண்டு

    ஏப்ரல் இருபத்திமூன்றாம் தேதி உலக புத்தக தின மாக கருதுவதுண்டு !

     

     

    ரா.பார்த்தசாரதி

    Share
  • அம்மா

     

    ரா.பார்த்தசாரதி

     

     

    அ  என்பது  உயிரெழுத்து 

    ம்   என்பது  மெய்எழுத்து 

    மா  என்பது  உயிர்மெய் எழுத்து 

     

    உனக்கு உயிரும், உடலும் தந்தவள் அம்மா 

    உனக்கு முகவரி அளித்தவளும்  அம்மா

    உலகை எனக்கு நீ  காட்டினாய் 

    உனக்கு என்ன நான் தருவேனோ !

     

    உனக்கு ஆயிரம் கவலைகள் இருப்பதாக தெரியும்

    இதுவெல்லாம்  என் புன் சிரிப்பாலே  மறையும் 

    தொப்புள் கொடி  உறவானதே 

    தொட்டிலில்  ஆரம்பமானதே 

     

    அம்மா என் ஆசை  அம்மா 

    நான் கேட்காமலே முத்தம் கொடுப்பாய் அம்மா 

    தோளை  தூளியாக்கி உன் இனிய குரலால் தாலாட்டுவாய் 

    உன் மடியினை தொட்டிலாக்கி என்னை தூங்க வைப்பாய் !

     

    அம்மா  என்றும்  அன்பின்  உருவமானாய் 

    எனக்கு நிழல் தரும்  குடையானாய் 

    எனது கண்கண்ட  தெய்வமானாய் 

    தியாகத்தின்  உருவமானாய் !

     

    அம்மா  என்றாலே கருணையின் வடிவம் 

    அம்மா இல்லாத  அனாதைகளுக்கு ஆண்டவனே அம்மா !

     

     

     

    Share
  • தமிழ் புத்தாண்டே வருக

     

    101

    தமிழ் ஆண்டுகளின் எண்ணிக்கை அறுபதே

    ஹேமவிளம்பி ஆண்டும் இன்று பிறந்ததே

    விரும்பியதை பெற தமிழ்ப்புத்தாண்டு மலரட்டும்

    தீயவை அழிந்து நல்லவை பெருகட்டும் !

    நாட்டிலும், மாநிலத்திலும், புதிய திட்டம் உண்டாகட்டும்

    அரசியல் தலைவர்கள் நன்மனங்கொண்டு நடக்கட்டும்

    மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடட்டும்

    தமிழ்ப் புத்தாண்டால் தமிழகம் நன்மை அடையட்டும் !

    ஆறுகள் இணைந்து தண்ணீர் பிரச்சனை தீரட்டும்

    மாநிலங்கள் கைகோர்த்து மக்களுக்கு நன்மை செய்யட்டும்

    நாட்டுக்கு நாடு சமாதானம் தானமாய் கிடைக்கட்டும்

    வேற்றுமையில் ஒற்றுமை நம்மிடையே ஓங்கட்டும் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • இளமையின் கேள்வி

    ரா.பார்த்தசாரதி

     

    என் இளமையின் கேள்விக்கு  என்ன பதில்

    அழகிய காதல் தேவதையே நீயோ என் எதிரில்,

    என் தேவைகள் குறைவாய்  இருந்திடுமே

    நின் அழகே  என் மனத்தைக் கவர்ந்திடுமே !

     

    நீ ஆயிரத்தில் ஒருத்தி  என்பதை நானறிவேன்

    என் ஒவ்வொரு அணுவின் உணர்வும் சொல்லிடுதே

    உன் எழிலை என் மனம்  சொல்லிடாதா

    காலம் கடந்தாலும், நம்மை வாழ வைத்திடாதா !

     

    காதலிக்கும் போது  அவசரம் ஆகுமா

    பூத்து குலுங்கும் விழிகள் காத்திருக்குமா,

    காதல்  என்பது இரு விழிகளின்  நேசமா

    அதுவே அவர்கள் கண்ட காதல் தேசமா !

     

    காதலுக்கு பொருள் விளங்காமல் தவித்தேனே

    பூமழை மேனியில்  பொழிவதைக் கண்டேனே

    காதலின் பார்வை  புதிரா !  புதினமா !

    என் நெஞ்சை சுற்றிவரும் ராட்டினமா !

     

    தாமரை இதழ் போன்ற உன்  வதனமே

    உன் முகம் நீரில் தெரியும் சந்திர பிம்பமே

    காதலில்  தாமதம் செய்து என் பொறுமையை சோதிப்பாயா

    தாமதம் செய்யாமல் என்னை  என்றும் மகிழ்விப்பாயா !

    Share
  • பண்பாட்டு மயக்கம்

    ரா பார்த்தசாரதி

     

        மேலை நாட்டு   பிசாவும், பெர்கரும்   நாகரிக உணவானதே 

         நம் சாப்பாட்டு  மேசைக்கு இறங்கியது,  விரும்பியசிற்றுண்டியானதே 

         உடல்நலம்  கெடுவதை நாம் அறியாமல் இருக்கின்றோமே 

        இயற்கை உணவு சிறந்தது என அறிந்தும், தவிர்க்கின்றோமே !

       

        ஆணும்,பெண்ணும்,   அறிமுகத்தில்  கைகுலுக்கினர் 

        பயமின்றி இரவு நேரங்களில் கூடிப் பேசுகின்றனர் 

        நகரின் மது கடையில் சேர்ந்து கும்மாளமிடுகின்றனர் 

       இரவு நேர பணிகளில் ஆபாச பேச்சுக்கள் மிளிர்கின்றன !

      

       ஒருவர்க்கொருவர்  மரியாதையின்றி  டா  போடுதல் 

        கேட்டால், தெரிந்தவர்,  சிநேகம்  என சொல்லி மழுப்புதல் 

       பணத்திற்காக, பகடைக்காயாய்  ஆணை ஆட்டிவித்தல்,

       நட்பா, காதலா ! என்ற நிலையிலே  தடுமாறுதல் !

      

       ஆணுக்கு நிகர் பெண் என்று நினைக்கும் பெண் 

       பேதமின்றி ஆணுடையில் நடமாடும் கோலம் ,

        கண்டதே காட்சி, கவர்ச்சியான, ஆடை அலங்காரம் 

        எங்கு முடியுமோ  இந்த பண்பாட்டு  மயக்கம் !

    Share
  • உதிரிப்பூக்கள்

    ரா.பார்த்தசாரதி

     

    இறைவனிடத்தில் அர்ச்சனைப் பூக்களாய் வீழ்கின்றோம்

    மனிதனின் இறப்பின் போது காலடியில் மிதிப்படுகின்றோம்

    யாரோ இறந்ததிற்கு  எங்களை மிதித்து கொல்கின்றனரே

    மணமானாலும், பிணமானாலும் கடைசியில் வீசி எறிகின்றனரே !

     

    நாங்கள் பல நிறங்களில் இருந்தாலும் எங்களுக்கு ஜாதி இல்லை

    எங்களின் மணம் பலவிருந்தாலும் எங்களிடத்தில் போலி இல்லை

    உதிரிப்பூவானாலும், மாலையானாலும் எங்கள் அழகே ஒரு கவர்ச்சி !

    எங்களை சூடியவர்களும்  அடைவதோ பெருமிதத்தில் மகிழ்ச்சி !

     

    மணமகன், மணமகள் கழுத்தில் அடையாளமாக தொங்குகிறோம்

    அரசியல் தலைவர்கள் கழுத்தையும் பகடிற்காக  அலங்கரிக்கின்றோம்

    பாலியில் செய்யும் வேசியும் எங்களால் தன் அழகினை காண்பிக்கிறாள்

    எங்கள் நறுமணத்தை உடலுக்கு நறுமண திரவியமாய்  பூசுகிறார்கள் !

     

    பல உதிரிப்பூக்கள் நாறுடன் சேர்த்து  பூமாலையாகிறது

    பல கைகள் சேர்ந்தால்தான் ஒரு திட்டம் முடிவாகிறது

    வாசமில்லா  மலருக்கு  என்றும் மதிப்பு  கிடையாது

    நேசமில்லா உறவிற்கு என்றும் உயர்வு கிடையாது !

     

    முதலிரவில் படுக்கையில் கிடப்போம்,மறுநாள் குப்பைத் தொட்டியில்

    காகித பூவிற்கு தரும் கவர்ச்சி  எங்கள் உண்மை தன்மைக்கு கிடைப்பதில்லை

    எங்களை மிதிப்பவர்களே  நீங்கள் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை

    நாங்கள் உதிர்வதே மீண்டும், பிறப்பதற்குத்தான் என்று  எவருமறியவில்லை

     

     

     

    Share
  • அன்றும், இன்றும்

     

     

                      ரா.பார்த்தசாரதி

     

    பெற்றோர்களே  பிள்ளைகளின் திருமணம்  தீர்மானிக்கப்பட்டதே

    மகன் , மகளின் வாழ்க்கையும் சிறப்பாக  அமைந்ததே

    நிலைமையறிந்து, குலமறிந்து, திருமணம் நிச்சயக்கப்பட்டதே

    இன்றோ ஆணும், பெண்ணும்,பேசி திருமணம் முடிவடைந்ததே !

     

    திருமணம்    என்பது  ஆயிரம்  காலத்துப்  பயிரா,

    பழமை மாறாமல் காத்தவர்களின்  தவறா,

    அக்கால திருமணம் பந்தத்தினால் ஏற்பட்டதே

    இக்கால  திருமணம்  பணத்தினால் தீர்மானிக்கப்பட்டதே !

     

    அன்பு, பாசம், தியாகம் இவற்றிற்கு  அர்த்தம்முண்டு

    இன்று இவற்றிற்கு எல்லாம் ஓர்  அளவுண்டு

    சேர்ந்து  வாழ்ந்தால்  கோடி நன்மை என சொல்வதுண்டு

    இன்றோ   பிரிந்து   வாழ நினைப்பதுண்டு !

     

    வாழ்வின் காலச்சக்கரம்  அன்று  உறுதியாயிருந்ததே

    வாழ்க்கை  வாழ்வதற்கே என சொல்லப்பட்டதே

    வாழ்க்கை அன்று  சொர்க்கமாய்  அமைந்ததே

    இன்றோ வாழ்க்கை  நரகமாய்  மாறியதே !

     

    பழமைப்பேசி  இளந்தலைமுறையினரை திருத்தமுடியுமா

    புத்திமதி கூறினாலும், அவர்களால்  ஏற்றுக்கொள்ளமுடியுமா

    நானே ராஜா என்று நினைப்பவர்களை  திருத்தமுடியுமா

    அழிவு  பாதையில் செல்பவர்களை தடுக்கமுடியுமா !

     

    உலகத்தோடு ஒட்டி வாழ்வதே  வாழ்வு

    காலத்திற்கு ஏற்ப வாழ்வதே  இதற்கு தீர்வு

    விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் என்றும் நன்மை

    இதனை மறந்து வாழ்ந்தால் வாழ்வே தனிமை !

     

     

     

     

    Share