ரா.பார்த்தசாரதி

 

என் இளமையின் கேள்விக்கு  என்ன பதில்

அழகிய காதல் தேவதையே நீயோ என் எதிரில்,

என் தேவைகள் குறைவாய்  இருந்திடுமே

நின் அழகே  என் மனத்தைக் கவர்ந்திடுமே !

 

நீ ஆயிரத்தில் ஒருத்தி  என்பதை நானறிவேன்

என் ஒவ்வொரு அணுவின் உணர்வும் சொல்லிடுதே

உன் எழிலை என் மனம்  சொல்லிடாதா

காலம் கடந்தாலும், நம்மை வாழ வைத்திடாதா !

 

காதலிக்கும் போது  அவசரம் ஆகுமா

பூத்து குலுங்கும் விழிகள் காத்திருக்குமா,

காதல்  என்பது இரு விழிகளின்  நேசமா

அதுவே அவர்கள் கண்ட காதல் தேசமா !

 

காதலுக்கு பொருள் விளங்காமல் தவித்தேனே

பூமழை மேனியில்  பொழிவதைக் கண்டேனே

காதலின் பார்வை  புதிரா !  புதினமா !

என் நெஞ்சை சுற்றிவரும் ராட்டினமா !

 

தாமரை இதழ் போன்ற உன்  வதனமே

உன் முகம் நீரில் தெரியும் சந்திர பிம்பமே

காதலில்  தாமதம் செய்து என் பொறுமையை சோதிப்பாயா

தாமதம் செய்யாமல் என்னை  என்றும் மகிழ்விப்பாயா !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *