பக்க வாத்தியத்தை முக்கிய வாத்தியமாய் முழங்கிய
பக்கா வாத்தியக்காரன்!
தபலாவின் மையத்தில் மட்டுமா நீ வாசித்தாய்?
தபலாவையே மையத்தில் வைத்து வாசித்தாய்!
இசை காதுகளுக்கானது என்பர்
உனது இசையோ
கண்களுக்கும் ஆனது
தபலாவில்
உன் விரல்கள் ஆடும் நடனம்
ஒரு பேரருவியின் முத்தம்!
அதிலிருந்து பெருகும் இசை
ஒரு ஜீவ நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும்!
– அண்ணாகண்ணன்
#zakir #zakirhussain


Leave a Reply