விருப்பூட்டி, வாழ்வில் உயிர்ப்பூட்டி, நெஞ்சகப்
பூட்டைத் திறக்கும் புதுக்கிரேசி மோகனின்
பேட்டையில் என்றும் லூட்டியே.என்றும் அன்புடன்
அண்ணாகண்ணன்
பொன்நகை ஆயிரம் தந்தாலும் வேண்டேன்
புன்னகை வேண்டியே தவமிருப்பேன்
போற்றிப்பாட வார்த்தைகள் தேடினேன்
வசப்படவில்லையேதும் திருமால் திருப்புகழும்
வெண்பாக்களும் அள்ளிச்சென்றன அனைத்தையும்
வரைய முனைந்தேன் உன் வரைவிலக்கணத்தை
கபடமற்ற நகையாய் கலகலவென கொட்டித்தீர்ந்தது
கிரேசியாய் இல்லாமல் கிலுகிலுப்பையாய் (சாக்லேட்)
கிருஷ்ணாவுக்கே கிச்சுகிச்சு மூட்டும் மோகனமாய்
பாசத்தைப் பனித்துளிக்குள் மறைத்து வைத்தாலும்
பதறாமல் அதை பதவிசாய்ப் படைக்கும் ஆற்றலும்
கள்ளமில்லாச் சிரிப்பும் கலகலப்பான பேச்சும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையும்
உனக்கு மட்டுமே சாத்தியம் நீவிர் வாழிய வாழியவே!
அன்புடன்
பவளா திருநாவுக்கரசு


Leave a Reply