கவிஞர் காவிரிமைந்தன்

கவிக்குயில் திரைப்படத்தில் .. சிவகுமார்.. ஸ்ரீதேவி நடிப்பில்.. இளையராஜா நடத்தியிருக்கும் இசை மழை..  பஞ்சு அருணாசலம்.

பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பத்மஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடலை ஒரு முறையும் எஸ். ஜானகி குரலில் மற்றொரு முறையும் ஒலிக்கும் இப்பாடல் கேட்டு உருகாதார் எவரிங்கே? 72 மேளகர்த்தா ராகங்களில் நெஞ்சினில் உள்ளாடும் ராகம் இதுவோ?

கதையின்படி.. நாயகியின் மனதில் உள்ள ராகத்தை நாயகன் கண்டுபிடிக்க வேண்டும். முதல் முறை சரியாக நாயகன் கண்டுபிடிக்கவில்லை. மறுமுறை.. நாயகின் முனகல் அவன் காதுகளுக்கு எட்டிவிட ஏகாந்தமாய் தொடங்குகிறான்… அவள் மனதில் குடி கொண்டிருந்த ரீதிகௌளை ராகத்தை..

சுகமான ஸ்வரங்களின் லய நயங்கள்.. கூடிவர உணர்ச்சியின் மைய மண்டபம் உஷ்ணமாகிறது.
அழகு மயில் ஸ்ரீதேவி .. ராதை வேடம் அணிந்து ஆடி வர…கண்ணன் வேடத்தில் சிவகுமார் புல்லாங்குழல் முழங்க..
பாடலில் அங்கிருக்கும் ஜீவராசிகளும் மயங்கிக் கிடக்க .. காற்றினில் அந்த கானம் வருகிறது.. கண்ணன் பாடும் பாடல் என்பதால் காதல் வண்ணம் படுவதில் ஒன்றும் வியப்பில்லை!

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.