Author: கவிஞர்.காவிரிமைந்தன்

  • சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!

    சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!

    (நகைச்சுவை எழுத்தாளர், கவிஞர், நடிகர் கிரேஸி மோகன் அவர்களின் மறைவுக்கு வல்லமையின் ஆழ்ந்த இரங்கல். வல்லமையில் அவர் எழுதிய பல்லாயிரம் வெண்பாக்களும் சந்தப் பாக்களும் அவர் புகழையும் ஆற்றலையும் உலகிற்கு முழங்கிக்கொண்டே இருக்கும். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். வாசகர்கள், சக எழுத்தாளர்கள், நண்பர்கள், கிரேஸி மோகன் குறித்த நினைவுகளை வல்லமையுடன் பகிருமாறு அழைக்கிறோம் (vallamaieditor@gmail.com)  – அண்ணாகண்ணன்)

    காவிரிமைந்தன்

    வாழ்கின்ற வாழ்க்கையில் வருகின்ற கவலைகள்
    வாய்விட்டுச் சிரித்தால்தான் போகும்!!
    ஆறறிவு மானுடர்க்கும் ஐந்தறிவு ஜீவன்களுக்கும்
    அடிப்படையில் வேற்றுமை அதுதானே சிரிப்பு!!

    பரபரப்பாய் இயங்கிடும் பம்பர கதியிலுமே
    பல்லைக் காட்டிச் சிரிக்கும்போதே நோயகலும்!
    யாரிதற்கு வழிவகுப்பார்? யாரை இங்கே அணுகிடலாம்?
    கிரேஸி இருக்க ஏது பயம் என்றதுவே உண்மைதானே!!

    இயல்பான நகைச்சுவையை இனிதாக வழங்கவல்ல
    இரட்டையரில் இவர் ஒருவர்! ஹாஸ்ய கர்த்தா!!

    நாடக மேடைகளை நாடுதோறும் சென்று நடத்தி
    நகைச்சுவைக்கு நாங்கள் என்றே பேரெடுத்தவர்!!

    திரையுலக ஜாம்பவான்கள் சிலரும்கூட கூட்டணிவைத்து
    வெளிப்படையாய் வெற்றிக்குக் காரணம் இவரென்றாரே!!

    எவ்வயது கொண்டவரையும் சிரிக்க வைத்து
    இடைவெளி இல்லாமல் வயிறு குலுங்க வைத்து

    திறம்படவே பலகாலம் பவனி வந்தார்!
    இறையருளால் வெண்பாக்கள் இயற்றி வந்தார்!

    இவருக்கு இணைசொல்ல யாருமில்லை
    இறக்கும்வரை சிரிப்பதற்கே மறக்கவில்லை!

    சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!
    கிரெஸி என்றால் கொண்டாட்டம்!
    மோகன் என்றால் குதூகலம்!
    கூட்டுக் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டு!
    வார்த்தைக்கு வார்த்தை விஞ்சிநிற்கும்
    வளமான நகைச்சுவை இன்பம்! இன்பம்!
    மேடை நாடகங்கள் காண்பதற்கு
    கூடும் மக்களின் கூட்டம் சாட்சி!
    சிரிப்பலைகள் ஒன்றையொன்று அடங்குமுன்னே
    அடுத்ததாக எடுத்துவிடும் சாதுர்யமென்ன?
    மண்ணுலகில் வந்ததவர் காரணம் முடிந்ததோ?
    விண்ணுலகில் சிரிக்கவைக்கப் புறப்பட்டாயோ?
    புன்னகையை ஒருசிறிதும் மறக்காமல் பிறருக்கும்
    எந்நாளும் வழங்கிட்ட வள்ளல் கிரேஸி புகழ்வாழ்க!!

    அன்புடன்
    காவிரிமைந்தன்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075.

    ==============================================================

    “காலம்”

    மீ.விசுவநாதன்

    வித்தையுண்டு நல்ல விநயமுடன் ஆழ்ந்ததோர்
    பக்தியுடன் நற்பேறு பாட்டெழுதும் சக்தியுண்டாம்
    இத்தனையும் எங்கள் கிரேசிமோக னுக்குண்டாம்
    சித்தத்தில் வைத்தான் சிவன்.

    (660) 10.06.2019

    ==============================================================

    Share
  • வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம்

    காவிரிமைந்தன் வணக்கமுடன் வரையும் மடல். நலம்.. நலமே நாடுகிறேன்!

    வல்லமை இணைய தளத்தோடு இணைந்து நான் நடத்திய போட்டிகள் மூன்று..

    1. என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று நூறு கட்டுரைகள் ஆக.. அவை ஒவ்வொன்றுக்கும் எனது பின்னூட்டம் சேர்த்து.. இந்தப் புத்தகத்தை..

    01.07.2017ல் சென்னையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் பிறைசூடன் வெளியிட்டார் கடந்த 29.06.2018ல் துபாயில் நடைபெற்ற கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் மறு வெளியீடு நடந்தது.


    01.07.2018ல் சென்னையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் பிறைசூடன் வெளியிட்டார் கடந்த 29.06.2018ல் துபாயில் நடைபெற்ற கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் மறு வெளியீடு நடந்தது.

    2. மனதில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியை கமலம் ஷங்கர் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் சில பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று ஐம்பது கட்டுரைகள் ஆக.. எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு உருவான இந்த நூல் துபாயில் 12.01.2018 அன்று வெளியிடப்பட்டது.

    3. கர்மவீரர் காமராஜர் – கட்டுரைகள் பெறப்பட்டு தமிழறிஞர் தமிழருவி மணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் சில கட்டுரைகள் பெற்று 45 கட்டுரைகள் ஆக.. உருவான இந்த நூல் துபாயில் 13.07.2018 அன்று வெளியிடப்பட இருக்கிறது.

    வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை நமது வல்லமை இணையதள நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    மூன்று புத்தகங்களும் இணைப்பில் உண்டு..

    உங்கள் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றி உடையவனாக ஆவேன்.

    கூடிய விரைவில் உங்களோடு இணைந்து மீண்டும் வல்லமையில் வலம் வருவேன்…

    https://drive.google.com/file/d/1NwDBJXrFXeJ6DUT03MMPQYUSdqZZ9Xsg/view

    https://drive.google.com/file/d/1ALNzy9SvabIpSNkqlh2EpaoIM-sJNTFJ/view

     

    அன்புடன்…
    காவிரிமைந்தன்
    துபாய்

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்!

    அன்பு நண்பர்களுக்கு

    காவிரிமைந்தனின் கனிவான வணக்கம்!

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் கட்டுரைப் போட்டியாக வல்லமையில் நாங்கள் நடத்திய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரைகள் 35 வரப்பெற்றதும் அவற்றை பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து தேர்வு தந்தமையும் நினைவிருக்கும் என்று கருதுகிறேன்.

    unnamed (2)

    அக்கட்டுரைகளை அடுத்து.. அவற்றை இன்னும் வளர்த்து.. இன்னபிற எழுத்தாளர்கள்.. படைப்பாளர்களிடமிருந்து பெற்று நூறு கட்டுரைகள் என்கிற அளவில்.. ஒவ்வொரு கட்டுரைக்கும் காவிரிமைந்தன் எனது பின்னூட்டம் வரையப்பட்டு… இதோ..

    “என் பார்வையில் கண்ணதாசன்” என்கிற நூலாக வெளியிடப்பட இருக்கிறது.. கவியரசு கண்ணதாசன் விழாவில்.. 01.07.2017 (அழைப்பிதழ் இணைப்பில்)…வாய்ப்பு உள்ளவர்கள் நிகழ்ச்சிக்கு நேரில் பங்கேற்று பெருமை சேர்க்க வேண்டுகிறேன்!

    unnamed (1)

    இது தவிர.. நூலைப் பெற விரும்புவோர் தபால் கட்டணம் உட்பட ரூ.750 அனுப்பி வைத்தால்.. உங்கள் இல்லம் தேடி இந்த நூல் அனுப்பப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

    அனுப்ப வேண்டிய முகவரி 01.07.2017 நூல் வெளியீட்டிற்குப் பின் தரப்படும்!

    unnamed (3)

    நூலின் விலை ரூ.950 எனினும் உங்களுக்கான சிறப்பு விலை ரூ.750 (தபால் கட்டணம் உட்பட) என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

    Share
  • கலைமாமணி” பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு எங்கள் கண்ணீரஞ்சலி!

    -கவிஞர் காவிரிமைந்தன்

     

    Anandan

     

    “கலைமாமணி” பிலிம்நியூஸ் ஆனந்தன்…
    திரைத்துறைத் தகவல்களின் கருவூலம்
    விரல்நுனியில் தந்திட்ட பேரறிஞர்!
    இவருடனே பழகுகின்ற நாட்களையே
    தந்ததெல்லாம் நிச்சயமாய்ப் பாக்கியமே!!

    தேனொழுகப் பேசுகின்ற பண்பாளர்
    தினையளவும் கோபம்வரா ஓர்மனிதர்!
    வயதுகளைக் கடந்தபடி வரவேற்பளிப்பார்!
    சுயநலங்கள் இல்லாது வாழ்ந்தாரே!!

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்சார்ந்து
    தமிழகத்தின் தலைநகரில் சிலையமைத்தோம்!
    திருமகனின் பெயரில்பல விருதளித்தோம் – அதைத்
    திராவிட மொழிகளுக்கு வழங்க வைத்தார்!!

    அவர்தந்த அறிவுரையை அப்படியே ஏற்று
    தெலுங்கு கன்னடம் மலையாள கவிஞர்களுக்குக்
    கவியரசு கண்ணதாசன் விருதளித்த ஆண்டு 1994
    முழுமையாய் ஒத்துழைப்பு நல்கினாரே!!

    மக்கள் தொடர்பு அதிகாரி  என்னும் பதவி
    உருவாக்கித் தந்தவரே மக்கள் திலகமன்றோ?
    நாடோடி மன்னன் திரைப்படத்தில் – அதை முதன்
    முதலாய் ஏற்றவரும் பிலிம்நியூஸ் ஆனந்தனே!

    காலைமுதல் இரவுவரை ஓய்விலா உழைப்பு
    பயன்கருதாப் பற்றுவைத்த திரைத்துறை உறவு
    படம் எடுத்தவரே மறந்தபோதும் – தகவல்களை
    பட்டென்று சொல்வாரே – இனி எவரோ??

    வாழ்நாளின் பெரும்பகுதி இதற்காக வாழ்ந்துகாட்டி
    வரலாறு படைத்தவர் இவரென்றால் மிகையில்லை!
    சாதனைகள் படைத்த ”தமிழ்த்திரை வரலாறு” நூலினைத்
    தன்வாழ்நாள் சாதனையாய் வழங்கியவர் புகழ்வாழ்க!!

     

     

     

    Share
  • இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?

    கவிஞர் காவிரிமைந்தன்.

    இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?

    இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் வரைந்த பாடல்! திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் தந்த இசையமைப்பில் முகிழ்த்ததும், பி. சுசீலாவின் குரலில் பிறந்துவந்ததும் மறக்க முடியுமா? இதய வீணைதூங்கும்போது பாடமுடியுமா?

    இணைந்து வாழ வேண்டிய இதயங்கள் இடையே இடைவெளி! இதை எப்படி இதைவிட எளிமையாக இனிமையாகக் கூறிவிடமுடியும்? அன்பின் சுவாசம் தவழ வேண்டிய இல்லற வாழ்வில் அகண்ட பிரிவு மனரீதியாக அமைந்துவிடும்போது, முதல்வரிக்கு ஏற்றாற்போல் இரண்டாம் வரி, இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா? இப்படிச் சொல்லத்தான் எங்கள் கண்ணதாசன் வேண்டுமென்கிறோம்!

    அப்சல் என்கிற நண்பர் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு இப்படியெல்லாம் பாடல்கள் இருக்கின்றனவா – இதுபோல் பாடல்கள் இருந்தால் எனக்குத் தாருங்கள் என்றார்! பாடல் என்றால் ஏதோ படத்திற்காக எழுதப்படுவது என்று நினைத்துக் கொண்டிருந்த அவரின் எண்ணத்தை இந்த ஒற்றைப் பாடல் திருப்பிப்போட்டது! சொற்களை வைத்து வாழ்க்கை சூத்திரத்தை வரைந்துகாட்டிய கவிஞரின் கைவண்ணத்தை வியந்து பாராட்டாத உள்ளங்கள் ஏது?

    நடிகர்திலகம் சிவாஜி் கணேசன் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி இருவரின் இணையற்ற நடிப்பில் இருவர் உள்ளம். ஒருமித்து வாழவேண்டிய உள்ளங்கள் ஒட்டாமல் வாழும்போது இதயவீணை பாட முடியுமா?

    இதயவீணை தூங்கும் போது0          இதயவீணை தூங்கும் போது1           இதயவீணை தூங்கும் போது

    இதய வீணை தூங்கும் போது…

    படம்: இருவர் உள்ளம்
    உடல்: கவியரசு கண்ணதாசன்
    உயிர்: கே. வி. மகாதேவன்
    குரல்: பி.சுசீலா
    ___________________________________

    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
    உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
    உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
    விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
    வீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு பாடுமா?
    (இதய வீணை தூங்கும் போது…)

    மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
    சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
    அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
    அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே
    அடிமை செய்தானே…

    உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது?
    உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
    பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது?
    பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது?
    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

    காணொளி: https://www.youtube.com/watch?v=HExEutUANAY

    https://www.youtube.com/watch?v=HExEutUANAY

    Share
  • கிருஷ்ணா முகுந்தா முராரி …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    கிருஷ்ணா முகுந்தா முராரி …

    திரைத்துறையில் நடிப்புலகில் பிரபலமாய் இருந்தவர்கள் அன்றைய காலகட்டத்தில் பாடல் பாடத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது. அப்படிப்பட்டவர்கள் கர்நாடக இசையில் விற்பன்னர்களாகவும் இருந்தது தவிர்க்க இயலாத தகுதியாகவும் இருந்தது.

    கிருஷ்ணா முகுந்தா முராரேகுறைந்தது பாடலாசிரியர் எனப்படுபவர் மெத்த இசையறிவு உடையவராக இருந்தார்கள். அவ்வரிசையில் 1944ல் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தின் இப்பாடலை இயற்றிய பாபநாசம் சிவன் அவர்களும், இப்பாடலுக்கு நம் நாட்டின் தொன்மை மாறாத இசையமைப்பு தந்த மேதை ஜி.ராமனாதன் அவர்களும், இணைந்து பாடலைப் பாடியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களும் இருந்தார்கள்.

    மணக்கும் இசையில் முகிழ்த்த மலர்போல் இந்தப்பாடல் எத்தனைத் தலைமுறைகளைத் தாண்டி தமிழ்மண்ணில் கேட்கப்படுகிறது என்று பார்த்தால் அது பிரம்மாண்ட வெற்றியின் அடையாளமாய் காட்சியளிக்கிறது!

    தூய்மையான தமிழ் மொழியில் பாடல்கள் அருகியிருந்த காலம், ஆதலால் வடமொழிச் சொற்களின் கலப்பில் புனையப்பட்ட பாடலாய் இருந்தபோதும், இசையின் கவர்ச்சியாலும், குரலின் ஈர்ப்பினாலும், திரையில் தோன்றிய நாயகன் தங்கள் உள்ளத்தைக் கவர்ந்தவன் என்பதாலும் இப்பாடல் பரிபூரண வெற்றியடைந்தது!

    கிருஷ்ணா முகுந்தா முராரி …
    திரைப்படம்: ஹரிதாஸ்
    இயற்றியவர்: பாபநாசம் சிவன்
    இசை: ஜி. ராமநாதன்
    பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
    ___________________________________________

    கிருஷ்ணா! … முகுந்தா! … முராரி! …
    கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரி
    கருணா சாகர கமலா நாயக
    கருணா சாகர கமலா நாயக
    கனகாம்பர தாரி கோபாலா
    கனகாம்பர தாரி கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரி

    காளிய மர்த்தன கம்சனி தூஷன
    காளிய மர்த்தன கம்சனி தூஷன
    கமலாயத நயனா கோபாலா
    கமலாயத நயனா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரி

    குடில குண்டலம் குவலய தளநீலம்
    மதுரமுரளீ ரவலோலம்
    கோடி மதன லாவண்யம்
    கோபி புண்யம் பஜா கோபாலம்
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரி முராரி!

    காணொளி: https://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA

    Share
  • கடவுள் தந்த இரு மலர்கள் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    கடவுள் தந்த இருமலர்கள் …

    கடவுள் தந்த இருமலர்கள்2கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் பிறந்த பாட்டு! கதையின் கருவை உள்வாங்கி கவிதையாக மொழிவதில் கைதேர்ந்த கவிஞர்கள் சிலரே! இதோ இருமலர்கள் … ஒன்று பாவை கூந்தலிலே… ஒன்று பாதை ஓரத்திலே… நாயகனின் கைப்பிடித்த நாயகியையும் கைவிடப்பட்ட நாயகியையும் குறிக்கும் சொற்களாக! பத்மினி, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன் மூவரின் இடையே முகிழ்த்த பாடலை,

    கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே

    என்று பாத்திரம் பேசுகிறது. கவிஞரின் பா திறமும் பேசுகிறது. மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் வார்த்தைக் கோலம்! பி. சுசீலாவுடன் இணைந்து குரல் தருகிறார் எல்.ஆர். ஈஸ்வரி.

    இரண்டும் வாழ்வில் பெருமை பெரும்
    இதயம் என்றும் அமைதி பெறும்

    கடவுள் தந்த இருமலர்கள்கடவுள் தந்த இருமலர்கள்1இத்தகு காட்சியை வசனங்களால் வரைந்து காட்ட முடியுமென்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டியிருக்கும். பக்குவமாய்,அற்புதமாய், ரத்தினச் சுருக்கமாக உவமைகளிட்டு உள்ளம் தொடுகிற கவிஞர் வாலி அவர்களை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?

    நல்லதோர் இனிய பாடல் என்றும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கும், காலங்களை வென்ற பாடலிது!

    மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் உயிரோட்டம் அது கதையை அப்பட்டமாய்ச் சொல்கிறது! பண்பட்ட நடிப்பால் பத்மினியும் புன்னகை அரசி கே.ஆர். விஜயாவும் இணைந்து மிளிரும் இனிய பாடலை இன்னொருமுறை கேட்கலாமே!

    கடவுள் தந்த இரு மலர்கள்
    கண்மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே
    [ கடவுள் தந்த இரு மலர்கள்]

    காற்றில் உதிர்ந்த வண்ணமலர்
    கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
    ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
    அலைகள் கொண்டு போனதம்மா
    பாவைக் கூந்தல் சேர்ந்த மலர்
    பருவம் கண்டு பூத்த மலர்
    பாசம் கொண்டு வந்ததம்மா
    பரிசாய்த் தன்னைத் தந்ததம்மா
    [ கடவுள் தந்த இரு மலர்கள்]

    அலையில் மிதந்த மலர் கண்டு
    அதன்மேல் கருணை மனம் கொண்டு
    தலையில் இறைவன் சூடிக்கொண்டான்
    தானே அதனைச் சேர்த்துக்கொண்டான்
    குழலில் சூடிய ஒரு மலரும்
    கோயில் சேர்ந்த ஒரு மலரும்
    இரண்டும் வாழ்வில் பெருமை பெரும்
    இதயம் எங்கும் அமைதி பெரும்
    [ கடவுள் தந்த இரு மலர்கள்]

    காணொளி: https://www.youtube.com/watch?v=CH1eAJBQiwA

    https://www.youtube.com/watch?v=CH1eAJBQiwA

    Share
  • பாடும்போது நான் தென்றல்காற்று …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    பாடும்போது நான் தென்றல்காற்று …

    ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுகின்ற முதல் பாடலாக, மென்மையை மேன்மையாக்கிக்காட்டும் பிரத்தியேக முயற்சியில் புலவர் புலமைப்பித்தனும் மெல்லிசை மன்னரும் ஒருசேர வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாடும் நிலா பாலு பாடிய இசை அமுதமிது! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது! மஞ்சள் நிறத்தில் தன் மன்னவன் தோன்ற, கதையின் நாயகி அவனது அன்பில் மலர்ந்த பூவாய் அவன் கரங்களில் தவழ, எண்ணங்களில் எல்லாம் எழுதிவைத்த வரிகள்போல் இதமான வார்த்தைகளால் இங்கே தவழும் தென்றல் காற்று இது!

               பாடும் போது நான் தென்றல் காற்று2       பாடும் போது நான் தென்றல் காற்று

    பாடும்போது நான் தென்றல்காற்று
    பருவமங்கையோ தென்னங்கீற்று
    நான் வரும்போது ஆயிரம் பாடல்
    பாடவந்ததென்ன
    நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
    பாடும்போது நான் தென்றல்காற்று
    பருவமங்கையோ தென்னங்கீற்று

    மெல்லிய பூங்கொடி வளைத்து
    மலர்மேனியைக் கொஞ்சம் அணைத்து
    இதழில் தேனைக்குடித்து
    ஒரு இன்பநாடகம் நடித்து
    எங்கும் பாடும் தென்றல் காற்றும்
    நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே
    பாடும்போது நான் தென்றல்காற்று
    பருவமங்கையோ தென்னங்கீற்று

    எல்லைகள் இல்லா உலகம்
    என் இதயமும் அதுபோல் நிலவும்
    புதுமை உலகம் மலரும்
    நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
    யாரும் வாழப் பாடும் காற்றும்
    நானும் ஒன்றுதானே
    இன்ப நாளும் இன்றுதானே

    நம்பிக்கையை நாளும் மக்கள் நெஞ்சில் விதைக்க ஒரு கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டான் என்றால் அது மக்கள்திலகமாகத்தான் இருக்க முடியும்! ஆம், காதல் பாடலில்கூட ‘புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்’ என்று வாய்மொழிகின்றானே புலவரின் கைவண்ணத்தில்!

    காணொளி: https://www.youtube.com/watch?v=N_-1NVU1fqo

    https://www.youtube.com/watch?v=N_-1NVU1fqo

    Share
  • சரவணப் பொய்கையில் நீராடி …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    சரவணப் பொய்கையில் நீராடி …

    சரவணப்பொய்கைஇயற்கையெழில் கொஞ்சம் இதமான காலை வேளை!
    இதயத்தில் வந்துமோதும் இனிமையான பாடல்!

    சரவணப் பொய்கையில் நீராடி… பி.சுசீலாவின் குரலில் விளைந்த அற்புத நாதம்! விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து தந்த இன்னிசை வேதம்! ஆம், இது சத்தியம்!!

    திருமால் மருகன் – செந்தில் குமரன் – கந்தன் – முருகன் என்னும் கடவுளை எண்ணி வணங்கி எழுகின்ற பாடலிது! குளிர்த்தென்றல் தாலாட்டும் குதூகலம் பரவும் வண்ணம் சந்திரகாந்தா என்னும் நடிகையின் திருமுகம் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் நினைவிற்குள் வரும்!

    சரவணப்பொய்கை2கர்ணன் திரைப்படத்திற்காக பாடல்கள் எழுதிட, கவிஞருடன் மெல்லிசை மன்னர்கள் பெங்களுரில் முனைந்திருந்த நேரம். அடுத்த நாள் பாடல் பதிவுடன் துவக்கப்படவிருந்த சரவணா பிலிம்ஸாரின் ‘இது சத்தியம்’ திரைப்படத்திற்காக இயக்குநர் கே. சங்கர சார்பாக சென்னையிலிருந்து ஒருவர் விமான வாயிலாக சென்று கவிஞரை அணுகி, அதற்காகக் கவிஞரால் எழுதப்பெற்ற பாடலிது. சூழல் விளக்கப்பட்டதும் கவியரசர் நாவில் புறப்பட்டுவந்த இப்பாடலில்தான் எத்தனை சுகமான வரிகள்! இதிலும் ஒரு செய்தி கிடைத்தது!!

    சங்கரர்க்கும் ஆறுதலை சண்முகர்க்கும் ஆறுதலை
    ஐங்கரர்க்கும் மாறுதலையானதே – சங்கைப்
    பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா – நின் பாதம்
    படித்தோர்க்கும் ஆறுதலைப் பார் …

    காளமேகப் புலவரின் ‘ஆறுதலை’ எண்ணிக்கையோடு வேறுபொருள் தந்து நிற்பதைச் சுவைத்த கண்ணதாசன்,

    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்துவைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர்தந்த இன்பநிலை – கண்டு
    என்னிடம் நான் கண்டேன் மாறுதலை!

    இது காளமேகக் கடலில் மூழ்கிக்கிடைத்த முத்துக்களை வரிகளாக்கி முத்தையா தருகின்றார்! காலங்கள் கடந்தபோதும் காற்றில் கலந்து தவழ்ந்திருக்கும் கண்ணதாசன் பாடல் – இது சத்தியம் அல்லவா?

    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அன்னலே தந்து வைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
    கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
    ஓ. ஓ…ஓ. ஓ…ஓ. ஓ..
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்ல இடம் நான் தேடி வந்தேன்
    அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

    காணொளி: https://www.youtube.com/watch?v=GoNxhHAecVo

    Share
  • ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    வா… வாத்தியாரே… வூட்டாண்டே …
    நீ வாராங்காட்டி நான் வுட மாட்டேன்…
    ஜாம்பஜார் ஜக்கு… நான் சைதாபேட்டை கொக்கு…

    மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் நகைச்சுவை நடிகையாகத் தொடக்கம் தந்த ஆச்சி மனோரமா உலக வரலாற்றில் எவரும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளார். கதாநாயகியாக ஜொலித்திருந்தாலும் கூட அவரால் இந்த சரித்திரத்தைப் படைத்திருக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் பெண் சிவாஜி என்கிற அளவு நடிப்பில் தனது பரிமாணங்களைத் தந்து மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.

    manorama3தில்லானா மோகனாம்பாள், சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களில் இவரது நடிப்பு இணையற்றது. புரட்சித் தலைவர் முதல், புரட்சித் தலைவி வரை முன்னாள் முதல்வர்கள் ஐவரோடு கலையுலகில் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.

    1300 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, 300க்கும் மேலான பாடல்கள் பாடி தமிழ்த்திரையில் தனித்துவ முத்திரை பதித்து, எல்லோர் நெஞ்சங்களிலும் இடம்பெற்ற நகைச்சுவை நடிகை ஆச்சி மனோரமா அவர்களின் நினைவாக இப்பாடல் பதிவேறுகிறது …

    பொம்மலாட்டம் திரைப்படத்தில் வி. குமார் இசையமைப்பில் கவிஞர் வாலி அவர்களின் பாடல். திரையில் தோன்றும் சோ, மனோரமா ஜோடி ஜாடிக்கேத்த மூடி ரகம்!

    ஒரு திரைக்கவிஞன் எத்தனைவிதமான பாடல்களை எழுத முடியும் என்பதற்கு கவிஞர் வாலி சரியான எடுத்துக்காட்டு! முத்தான தமிழில் மோகனப் பாடல்கள் தரவும் தெரியும், சல்பேட்டாத் தமிழில் சென்னைத் தமிழ்ப் பாடல் தரவும் முடியும் என்று நிரூபித்தவர்.

    அசுரத்தனமான இசை ஞானம், கேட்ட மாத்திரத்தில் வந்துவிழும் பல்லவிகள், பாடல் முழுவதும் அந்தப் பத்திரத்தின் பதிவுகள், விழியிமையினை விரிய வைக்கும் துள்ளல் இசையுடன் நையாண்டி கலவை செய்து மக்கள் மனதில் ‘லபக்’ என்று ஒட்டிக்கொண்ட பாடல்!

    manorama2ஆச்சி மனோரமாவின் குரலில் இப்பாடல் அமைந்தது இப்பாடல் பெற்ற புகழுக்கு உச்சம்! நகைச்சுவையை தன்னிலே கலந்தளிக்கும் வல்லமை பொருந்திய “சோ” அவர்களும் ஈடுகொடுத்து உருவாக்கிய இப்பாடல் ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் ஏனைய பாடல்களை மிஞ்சி நிற்பது இதற்கான தனித்துவன்களே காரணம்!

    ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே கோர்த்தெடுத்து தருகிற யுக்தி “கவிஞர் வாலி”க்கு சபாஷ் போடவைக்கும்!

    பொதுவாகவே இப்பாடல் கேட்போரை குதூகலம் செய்யும்போது இந்தப் பாஷையை அன்றாட வாழ்வில் கொண்டிருப்பவர்கள் கொண்டாட்டம் அல்லவா போட்டிருப்பார்கள்!

    வா… வாத்தியாரே… வூட்டாண்டே …
    நீ வாராங்காட்டி நான் வுட மாட்டேன்…
    ஜாம்பஜார் ஜக்கு… நான் சைதாபேட்டை கொக்கு…
    ஜாம்பஜார் ஜக்கு… நான் சைதாபேட்டை கொக்கு…

    வாராவதிலே நின்னுக்கினிருந்தேன் அமராவதியாட்டம்
    கைப்பிடித்து நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்!
    லவ்வா பார்த்து ஷோக்கா பேசி
    டேக்கா கொடுத்தே பின்னாலே
    லவ்வா பார்த்து ஷோக்கா பேசி
    டேக்கா கொடுத்தே பின்னாலே
    சரிதான் வாம்மா கண்ணு… பட
    பேஜாரச்சு நின்னு…
    சரிதான் வாம்மா கண்ணு.. பட
    பேஜாரச்சு நின்னு… (வா வாத்தியாரே)

    நைனா உன் நினைப்பாலே நான்
    நாஷ்டா துண்ணு நாளாச்சு…
    நைனா உன் நினைப்பாலே நான்
    நாஷ்டா துண்ணு நாளாச்சு…
    மச்சா உன் மூஞ்சைப் பாத்து
    சால்னா நினைப்பு வந்தாச்சு…
    மச்சா உன் மூஞ்சைப் பாத்து
    சால்னா நினைப்பு வந்தாச்சு…
    ஆயாக்கடை இடியாப்பம்னா …
    பாயாக்கறியும் நீயாச்சு…
    ஆயாக்கடை இடியாப்பம்னா …
    பாயாக்கறியும் நீயாச்சு…
    வா வா மச்சா வா மச்சான்…
    வா வா மச்சா வா மச்சான்…
    வா வா மச்சான் ஒண்ணா சேர்ந்து
    வாரவதிக்கே போகலாம் … (வா வாத்தியாரே)

    காணொளி:https://www.youtube.com/watch?v=oiqJrRG1b7s

    Share
  • பூவண்ணம் போல நெஞ்சம் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    Salil Chowdary_stampபூவண்ணம் போல நெஞ்சம் …

    அழியாத கோலங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு! இந்திப்பட இசை அமைப்பாளர் சலீல் செளத்ரி இசையில் பிரதாப்போத்தன் – ஷோபா நடிப்பில், ஜெயச்சந்திரன் பி.சுசீலா பாடிய பாடலாய், பூவண்ணம் போல நெஞ்சம்… இளம்காதலர்களின் இனிய உரையாடல்கள் தொடர்ந்தவண்ணமிருக்க, சின்னஞ்சிறு சிரிப்பும் சந்தோஷப்பூக்களும் சிதற, உதடுகளின் அசைவுகள் இன்றி பின்னணியில் மட்டும் குரல்சேர்ப்பு நடக்கிறது.

    மெளனங்களால் வரையப்பட்ட காதல் கவிதைக்குச் சுகமான மெட்டமைத்து, வார்த்தைப் பூக்களை வார்த்தளித்திருக்கிறார் கவிஞர் கங்கை அமரன். இனிமை தவழும் இளமை ததும்பும் பாடலில் இன்பம் குறைவில்லாமல், இசையால் ஆபரணம் கட்டியிருக்கிறார்கள் சலீல் செளத்ரி.

    காதலின் அடர்த்தி அதிகமாகும்போது சொந்தங்கள் இந்தப் பிறவியும் தாண்டி ஏழேழு பிறவிகளிலும் தொடர வேண்டும் என்கிற ஆவலைப் பதிவு செய்யத் தவறுவதில்லை. மலர்களின் இதழ்விரிப்புகூட மெளனமாய்தான் நடக்கிறதல்லவா? பெண்மையின் நளினங்கள் இன்பம் கூட்டும் காதலிலே எத்தனை ரசங்கள்? ஆண் இதனை அனுபவிக்கவே பிறந்தானோ? பெண் இதனைப் பரிசளிக்கவே பிறந்தாளோ? இருவரின் கூடலில் இன்பத்தின் கொள்ளையிதோ. பாடலிலே வார்த்தைகளால் பரிமாறப்பட்டிருக்கிறது!

    படர்ந்துவிடும் கொடிபோல் பாவை தலைவன் மடியில் சாய, தொடர்ந்து வரும் இன்பங்கள்பற்றி விரிவுரை தேவையில்லை. ஷோபாவின் எதார்த்த நடிப்பில் காதல் கவரிவீசுகிறது!!!

                   பூ வண்ணம் போல நெஞ்சம்1     பூ வண்ணம் போல நெஞ்சம்     பூ வண்ணம் போல நெஞ்சம்2

    ஆண்:
    பூவண்ணம் போல நெஞ்சம்
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
    எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்

    பெண்:
    பூவண்ணம் போல நெஞ்சம்
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
    எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்

    ஆண் – பெண்: பூவண்ணம் போல நெஞ்சே… ஹே… ஏஹே…

    ஆண்: ஆஹாஹா…

    பெண்: ஆஹாஹா…

    பெண்:
    இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
    எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

    ஆண்:
    பிறக்கும் ஜென்மங்கள்
    பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

    பெண்:
    இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
    எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

    ஆண்:
    பிறக்கும் ஜென்மங்கள்
    பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

    பெண்:
    இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை
    தனிமையும் இல்லை

    ஆண்:
    பிறந்தால் எந்த நாளும்
    உன்னோடு சேர வேண்டும்

    பெண்:
    பூவண்ணம் போல நெஞ்சம்

    ஆண்:
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்

    பெண்:
    எங்கெங்கும் இன்ப ராகம்
    என்னுள்ளம் போடும் தாளம்

    ஆண் – பெண்: பூவண்ணம் போல நெஞ்சே… ஹே… ஏஹே…

    ஆண்:
    படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
    துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

    பெண்:
    கனிக்குள் வாட்டங்கள்
    அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்

    ஆண்:
    படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
    துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

    பெண்:
    கனிக்குள் வாட்டங்கள்
    அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்

    ஆண்:
    இணையும்போது இனிய எண்ணம்
    என்றும் நம் சொந்தம்

    பெண்:
    இமைக்குள் ஏழு தாளம்
    என்றென்றும் காண வேண்டும்

    ஆண்:
    பூவண்ணம் போல நெஞ்சம்

    பெண்:
    பூபாளம் பாடும் நேரம்
    பொங்கி நிற்கும் தினம்

    ஆண்: எங்கெங்கும் இன்ப ராகம்
    என்னுள்ளம் போடும் தாளம்

    ஆண் – பெண்: பூவண்ணம் போல நெஞ்சே… ஹே… ஏஹே…
    ஹே… ஏஹே… ஹே… ஏஹே…

    காணொளி: https://www.youtube.com/watch?v=0hNP6lc52tM

    https://www.youtube.com/watch?v=0hNP6lc52tM

    Share
  • அன்பு வந்தது என்னை ஆள வந்தது

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    சுடரும் சூறாவளியும் (1971) திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலிது. கவியரசு கண்ணதாசன் வரிகளுக்குச் செந்தூர இசையமைத்திருப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! தாயினை இழந்த சேய்களைத் தழுவி நாயகன் பாடும் பாடலிது. நம்பிக்கை ஒளிதனை நாளைய தலைமுறைக்கு நயமாய் எடுத்துரைக்கும் வார்த்தைகள்!

    இனியதோர் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் எத்தனை முறை கேட்டிருந்தபோதும் இந்தப் பாடல் இன்றும் என்றும் மயக்கம் தரும்! மெல்லிசை என்பது இதயத்தைத் தாலாட்ட வைக்க வல்லது என்பதற்கு இந்தப் பாடலும் சாட்சியாகும்!

    அன்பு வந்தது என்னை ஆள வந்தது2அன்பு என்பதுதான் எல்லாவற்றிற்கும் இங்கே ஆதாரமானது என்பதைப் பல்லவியிலேயே செப்பியிருக்கும் கவிஞர், காலம் வெல்லும் வெல்லும் என்று உறுதி கொள்ளலாம் என்று பிஞ்சு நெஞ்சங்களில் நம்பிக்கையை நட்டுவைக்கிறார் பாருங்கள்!

    தென்றலில் கலந்து தேன்தமிழ் இனிக்கும் வண்ணத்தைப் பாருங்கள் இப்பாடலில்! இரவின் மடியில் விழுந்துகிடக்கும்போது செவியில் நுழையும் கானங்களின் வரிசையில் பண்பலைகளில் நடக்கும் பாட்டு பவனியில் இந்தப்பாடலும் அவ்வப்போது வந்துபோகும்! சொந்தங்களை இணைக்கும் பாலமாய் தமிழ்த்திரை தந்த பாடல்களில் இதுவும் ஒன்று!!

    அன்பு வந்தது என்னை ஆள வந்தது
    சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
    அன்பு வந்தது என்னை ஆள வந்தது
    சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

    நாலு பேர்கள் வாழும் வாழ்வு நாமும் வாழலாம்
    தினம் நல்ல ஆடை நகைகளோடு மலர்கள் சூடலாம்
    கண்ணிரெண்டில் கலக்கமின்றி அமைதி காணலாம்
    காலம் வெல்லும் வெல்லும் என்று
    உறுதி கொள்ளலாம் உறவு கொள்ளலாம்
    தாயில்லாத பிள்ளைகளை நான் விட மாட்டேன்
    நானில்லாத போது தேவன் கைவிட மாட்டான் (அன்பு)

    வாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன்
    வாடா மலர் போலே உங்களைக் காப்பேன்
    மன்னர் குலப் பிள்ளைகள் போல் மகுடம் சூட்டுவேன்
    நீ மங்கை ஆகும்போது கையில் வளையல் போடுவேன்
    வாழ்த்துப் பாடுவேன்
    மஞ்சளோடும் மலர்களோடும் வாழ்ந்திட செய்வேன்
    அண்ணனோடும் தங்கையோடும் தந்தை வாழுவேன் (அன்பு)

    காணொளி: https://www.youtube.com/watch?v=9LjEGEkxhtY

    ______________________________________________________________

    அன்பு வந்தது என்னை ஆள வந்தது1

    மேலும் இதே பாடல் இத்திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் – எஸ்.ஜானகி – எல்.ஆர். அஞ்சலி குரல்களிலும் தவழ்ந்துவரும் இனிமையான இப்பாடலை இன்னுமொரு முறை கேளுங்கள்….

    அன்பு வந்தது என்னை ஆள வந்தது
    சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
    அன்பு வந்தது என்னை ஆள வந்தது
    சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

    கண்ணிரண்டு கடவுள் தந்தான் தங்கையைக் காண – நல்ல
    கையிரண்டில் வலிவு தந்தான் தங்கையைக் காக்க
    ஆற்று வெள்ளம் போன பின்பு ஆற்று மணலிலே
    வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து
    உறவுக் கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்
    தெய்வம் பார்த்த பிள்ளைபோல
    தங்கையைப் பார்ப்பேன்
    செல்வம் பார்த்த ஏழைப் போல நிம்மதி காண்பேன் (அன்பு)

    மங்கை மீனாட்சி மதுரையில் நின்றாள்
    அண்ணன் திருமாலும் அருகினில் நின்றான்
    அண்ணன் என்றும் தங்கை என்றும் தெய்வம் வாழ்ந்தது
    தெய்வ வாழ்வு இன்று எங்கள் இல்லம் வாழ்வது உள்ளம் வாழ்வது
    மாலைத் தோன்றி காவல் காக்கும் சந்திரன் ஒன்று
    காலைத் தோன்றி காவல் கொள்ளும் சூரியன் ஒன்று (அன்பு)

    காணொளி: https://www.youtube.com/watch?v=0CNNjLI0mQ4

    https://www.youtube.com/watch?v=0CNNjLI0mQ4

    Share
  • பல்லவன் பல்லவி பாடட்டுமே …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    கலங்கரை விளக்கம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இசைஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தமுதல் திரைப்படம் இது! கருப்பு வெள்ளைத் திரைப்படம் எனிலும் அனைத்துப் பாடல்களும் அற்புத ராகமாய் அமைந்தன.இறையருள் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பில், எம்.ஜி.ஆர். – சரோஜா தேவிநடிப்பில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் பாடல்கள்.

    டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பல்வேறு பாடல்களில் இப்பாடல் தனித்துவம் பெற்றது என்று டி.எம்.எஸ்.அவர்களின் பரம ரசிகர் திரு. துளசி (சென்னை) என்னிடம் குறிப்பிட்டார். என்ன தனித்துவம் என்றபோது ஒரே பாடலில் ஏற்றஇறக்கங்கள் இத்தனை அதிகமாய் அமைந்தது குறிப்பாக ஒரு சில பாடல்களில் மட்டும்தான். அன்பே வா திரைப்படத்தில்.அன்பே வா திரைப்படத்தில் ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா’, கலங்கரை விளக்கம்திரைப்படத்தில் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே என்று பட்டியலிட்டுக் காட்டினர். அதன்பின் இப்பாடலைக்கேட்டுப்பார்க்கும்போது அவர் சொன்ன உண்மை தெரிந்தது.

    pallavan pallavi1pallavan pallavi2எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த ஒரு பாடலில் மட்டும் எத்தனை முக பாவங்கள் நடனம் எனப் பரிணமிக்கிறார் பாருங்கள்.அவரும் நாடகத் துறையில் இருந்து வந்தே திரை உலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பதை இப்பாடல் காட்சிநினைவூட்டுகிறது. கவிஞர் வாலி அவர்களின் நாடகப் பின்புலமும் திரைக்கதைக்கேற்ப இப்பாடல்களுக்கு வடிவம்கொடுத்திட ஏதுவாக அமைய மெல்லிசை மன்னர் தனது ராஜ பாட்டையில் வெற்றி பவனியை மீண்டும் தொடங்கியதிரைப்படம் என்பதற்கு எல்லாப் பாடல்களும் சாட்சி சொல்லின!

    பல்லவன் பல்லவி பாடட்டுமே

    ஓ… ஆரிரோஆரிரோஆரிரோ
    ஓ… ஆரிரோஆரிரோஆரிரோ… ஓ …

    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே …
    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே …

    பல்லவன் பல்லவி பாடட்டுமே… ஏ…

    ராக பாவங்கள் பாடலில் விளங்க
    தாளப் பேதங்கள் ஆடலில் விளங்க
    ஹோ… ஹோ…ஹோ… ஹோய்
    ராக பாவங்கள் பாடலில் விளங்க
    தாள பேதங்கள் ஆடலில் விளங்க
    ராஜ சபையினில் மன்னவர் மயங்க
    ராஜ சபையினில் மன்னவர் மயங்க
    தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
    தத்தோம் தரிகிட தகதிமி தரிகிட தா …

    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே

    ஓ… ஆரிரோஆரிரோஆரிரோ
    ஓ… ஆரிரோஆரிரோஆரிரோ… ஓ …

    மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
    அன்னம் என்பதை நடையினில் காட்ட
    மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
    அன்னம் என்பதை நடையினில் காட்ட
    காதல் வீணையைக் கண்களில் மீட்ட
    காதல் வீணையைக் கண்களில் மீட்ட
    காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே

    ஹோய் ஆரிரோஹுஹுஆரிரோ ஹுஹு
    ஆரிரோ ஓ….
    ஆரிரோ ஹுஹுஆரிரோ ஹுஹு
    ஆரிரோ ஓ….

    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே

    காணொளி: https://www.youtube.com/watch?v=gFmetxJOhR4

    https://www.youtube.com/watch?v=gFmetxJOhR4

     

    Share
  • இதய வானின் உதய நிலவே …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    இதய வானின் உதய நிலவே …

    கவிஞர் விந்தனின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் வேதா, 1950ல் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்திற்காக ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் இணைந்து பாடிடும் இப்பாடல் அமைதியாக ஆனந்தமாகக் கேட்கப்பட வேண்டிய ஜீவராகம்!

    மனதில் தோன்றியதெல்லாம் பாடலில் சொல்லப்பட்ட விஷயங்களாய் ஆரம்போல் கோர்த்துநிற்கும் அழகிய பாடல்!

                         itayavanil uthaya nilavae4     itayavanil uthaya nilavae2     itayavanil uthaya nilavae3

    காட்சியமைப்பில் இயல்பாய் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் தாரகையாய் வைஜயந்தி மாலா எழிலான முகத்தில் ஏக்கங்களைக் காட்டும் தலைவியாக ஒருகரையில் தவிக்க, தலைவன் மறுகரையில் தலைவியின் வினாக்களுக்கு விடை தருகின்றான்.

    கண்டும் காணாதேங்கும் கண்கள் காதல் கண்களோ? காதல் கண்களோ? என்கிற இடம் அருமை!

    பறந்துவந்த உன்னைத் தழுவ
    பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே
    என்கிற பரிதவிப்பைப் படம்பிடிக்கும் வரிகள்…

    தக்கதோர் இசையில் மனதை வருடும் பாடலிது. மறக்காமல் கேட்பது சுகம்தரும்! பார்த்திபன் கனவிற்காக…

    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?
    ஒளியிலாத உலகம் போல
    உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே

    கண்கள் செய்த பாவம் உன்னை
    கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே
    பாய்விரித்துக் கப்பல் செல்ல
    பாவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குதே
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

    இருளகற்றும் ஒளியென்றென்னை
    எண்ணும் நீ யாரோ எண்ணும் நீ யாரோ ?
    கண்டும் காணாதேங்கும் கண்கள்
    காதல் கண்களோ காதல் கண்களோ ?
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறேன் நான் எங்கே போகிறேன் ?

    ஆசை நெஞ்சின் நேசக் கரங்கள்
    அணைக்க உன்னை நீளுதே அணைக்க உன்னை நீளுதே
    பறந்து வந்து உன்னைத் தழுவ
    பறந்து வந்து உன்னைத் தழுவ
    பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

    பாடல்: இதய வானின்
    திரைப்படம்: பார்த்திபன் கனவு (1950)
    இயற்றியவர்: விந்தன்
    இசை: வேதா
    பாடியவர்: பி.சுசீலா, ஏ.எம். ராஜா
    காணொளி: https://youtu.be/OxB4mWC3vQo

    https://youtu.be/OxB4mWC3vQo

    Share
  • பாட்டு… ஒரு பாட்டு …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    பாட்டு.. ஒரு பாட்டு…

    பாட்டு ஒரு பாட்டு3புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கதாநாயகனாக வைத்து 16 திரைப்படங்களைத் தயாரித்த பெருமை தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்கள் ஒருவருக்கே உண்டு. கருப்பு வெள்ளையில் – தாய்க்குப் பின் தாரம் என்னும் திரைப்படத்தில் ஆரம்பித்து, வண்ணத்தில் – நல்ல நேரம் திரைப்படத்தில் நிறைவுற்ற அத்தனைப் படங்களிலும் ஒரு அழகிய எம்.ஜி.ஆர். ஃபார்முலா காணலாம். ஆம்… ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் ஒரு சண்டைக்காட்சி, ஒரு பாடல் என்று விறுவிறுப்பு குறையாத திரைக்கதையோடு தடாகத்தில் பூத்த தாமரைகளாக பெரும்பாலும் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா குரல்களில் காலவெள்ளத்தைத் தாண்டி இன்றும் கரைபுரண்டு ஓடிவருகிற இன்பநதியாக இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

    பாட்டு ஒரு பாட்டு2ஏனைய பாடல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தப் பாடலுக்கு உண்டு.கள்ளமில்லாப் புன்னகையை ஏந்திவரும் கன்னி மலராக சரோஜாதேவி, அன்றுமலர்ந்த ரோஜாப் பூவாக எங்கள் எம்.ஜி.ஆர். திரையில் எழுதியிருக்கும் காதல் சித்திரம்தான் இப்பாடல்! ஒரு முறையல்ல, பல முறை ஒலிக்கும் ஒரு சொல் … பாட்டு. அது என்ன பாட்டு என்பதைச் சூசகமாக வார்த்தைகளில் விளையாடி வரைந்தளித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். கேட்டுக் கேட்டுக் கிறங்கவைக்கும் இசையை இனிமையாகச் சேர்த்திருக்கிறார் கே.வி.மகாதேவன். ஒரு அரை நூற்றாண்டாகத் தமிழ்த்திரையில் ஆட்சிபுரிந்த குரல்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா!

    அப்படி என்ன பாட்டு? கவிதைக்குள் பொருள் வைத்து,பாடல் முழுவதும் இன்பச் சுவை சேர்த்து கவிஞர் கைவண்ணம் காட்ட …

    இசையில் ஒரு தேனருவி வழிகிறது இங்கே….இங்கே…

    ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

    ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
    எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு
    ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
    எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு

    தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
    தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
    தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

    தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
    தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு
    தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
    தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு

    பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
    பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
    பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

    உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
    உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு நம்
    இருவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு காதல்
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
    ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

    காணொளி: https://www.youtube.com/watch?v=cAjFHn8V9q8

    https://youtu.be/cAjFHn8V9q8

    Share