கிருஷ்ணா முகுந்தா முராரி …
— கவிஞர் காவிரிமைந்தன்.
கிருஷ்ணா முகுந்தா முராரி …
திரைத்துறையில் நடிப்புலகில் பிரபலமாய் இருந்தவர்கள் அன்றைய காலகட்டத்தில் பாடல் பாடத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது. அப்படிப்பட்டவர்கள் கர்நாடக இசையில் விற்பன்னர்களாகவும் இருந்தது தவிர்க்க இயலாத தகுதியாகவும் இருந்தது.
குறைந்தது பாடலாசிரியர் எனப்படுபவர் மெத்த இசையறிவு உடையவராக இருந்தார்கள். அவ்வரிசையில் 1944ல் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தின் இப்பாடலை இயற்றிய பாபநாசம் சிவன் அவர்களும், இப்பாடலுக்கு நம் நாட்டின் தொன்மை மாறாத இசையமைப்பு தந்த மேதை ஜி.ராமனாதன் அவர்களும், இணைந்து பாடலைப் பாடியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களும் இருந்தார்கள்.
மணக்கும் இசையில் முகிழ்த்த மலர்போல் இந்தப்பாடல் எத்தனைத் தலைமுறைகளைத் தாண்டி தமிழ்மண்ணில் கேட்கப்படுகிறது என்று பார்த்தால் அது பிரம்மாண்ட வெற்றியின் அடையாளமாய் காட்சியளிக்கிறது!
தூய்மையான தமிழ் மொழியில் பாடல்கள் அருகியிருந்த காலம், ஆதலால் வடமொழிச் சொற்களின் கலப்பில் புனையப்பட்ட பாடலாய் இருந்தபோதும், இசையின் கவர்ச்சியாலும், குரலின் ஈர்ப்பினாலும், திரையில் தோன்றிய நாயகன் தங்கள் உள்ளத்தைக் கவர்ந்தவன் என்பதாலும் இப்பாடல் பரிபூரண வெற்றியடைந்தது!
கிருஷ்ணா முகுந்தா முராரி …
திரைப்படம்: ஹரிதாஸ்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
___________________________________________
கிருஷ்ணா! … முகுந்தா! … முராரி! …
கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரி
கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா
கனகாம்பர தாரி கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரி
காளிய மர்த்தன கம்சனி தூஷன
காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா
கமலாயத நயனா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரி
குடில குண்டலம் குவலய தளநீலம்
மதுரமுரளீ ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜா கோபாலம்
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா
குவலய தள நீலா கோபாலா
குவலய தள நீலா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரி முராரி!
காணொளி: https://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA