பாடும்போது நான் தென்றல்காற்று …
–கவிஞர் காவிரிமைந்தன்.
பாடும்போது நான் தென்றல்காற்று …
‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுகின்ற முதல் பாடலாக, மென்மையை மேன்மையாக்கிக்காட்டும் பிரத்தியேக முயற்சியில் புலவர் புலமைப்பித்தனும் மெல்லிசை மன்னரும் ஒருசேர வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாடும் நிலா பாலு பாடிய இசை அமுதமிது! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது! மஞ்சள் நிறத்தில் தன் மன்னவன் தோன்ற, கதையின் நாயகி அவனது அன்பில் மலர்ந்த பூவாய் அவன் கரங்களில் தவழ, எண்ணங்களில் எல்லாம் எழுதிவைத்த வரிகள்போல் இதமான வார்த்தைகளால் இங்கே தவழும் தென்றல் காற்று இது!
பாடும்போது நான் தென்றல்காற்று
பருவமங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் பாடல்
பாடவந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
பாடும்போது நான் தென்றல்காற்று
பருவமங்கையோ தென்னங்கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர்மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக்குடித்து
ஒரு இன்பநாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே
பாடும்போது நான் தென்றல்காற்று
பருவமங்கையோ தென்னங்கீற்று
எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழப் பாடும் காற்றும்
நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
நம்பிக்கையை நாளும் மக்கள் நெஞ்சில் விதைக்க ஒரு கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டான் என்றால் அது மக்கள்திலகமாகத்தான் இருக்க முடியும்! ஆம், காதல் பாடலில்கூட ‘புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்’ என்று வாய்மொழிகின்றானே புலவரின் கைவண்ணத்தில்!
காணொளி: https://www.youtube.com/watch?v=N_-1NVU1fqo
https://www.youtube.com/watch?v=N_-1NVU1fqo