கவிஞர் காவிரிமைந்தன்.

பாட்டு.. ஒரு பாட்டு…

பாட்டு ஒரு பாட்டு3புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கதாநாயகனாக வைத்து 16 திரைப்படங்களைத் தயாரித்த பெருமை தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்கள் ஒருவருக்கே உண்டு. கருப்பு வெள்ளையில் – தாய்க்குப் பின் தாரம் என்னும் திரைப்படத்தில் ஆரம்பித்து, வண்ணத்தில் – நல்ல நேரம் திரைப்படத்தில் நிறைவுற்ற அத்தனைப் படங்களிலும் ஒரு அழகிய எம்.ஜி.ஆர். ஃபார்முலா காணலாம். ஆம்… ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் ஒரு சண்டைக்காட்சி, ஒரு பாடல் என்று விறுவிறுப்பு குறையாத திரைக்கதையோடு தடாகத்தில் பூத்த தாமரைகளாக பெரும்பாலும் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா குரல்களில் காலவெள்ளத்தைத் தாண்டி இன்றும் கரைபுரண்டு ஓடிவருகிற இன்பநதியாக இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

பாட்டு ஒரு பாட்டு2ஏனைய பாடல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தப் பாடலுக்கு உண்டு.கள்ளமில்லாப் புன்னகையை ஏந்திவரும் கன்னி மலராக சரோஜாதேவி, அன்றுமலர்ந்த ரோஜாப் பூவாக எங்கள் எம்.ஜி.ஆர். திரையில் எழுதியிருக்கும் காதல் சித்திரம்தான் இப்பாடல்! ஒரு முறையல்ல, பல முறை ஒலிக்கும் ஒரு சொல் … பாட்டு. அது என்ன பாட்டு என்பதைச் சூசகமாக வார்த்தைகளில் விளையாடி வரைந்தளித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். கேட்டுக் கேட்டுக் கிறங்கவைக்கும் இசையை இனிமையாகச் சேர்த்திருக்கிறார் கே.வி.மகாதேவன். ஒரு அரை நூற்றாண்டாகத் தமிழ்த்திரையில் ஆட்சிபுரிந்த குரல்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா!

அப்படி என்ன பாட்டு? கவிதைக்குள் பொருள் வைத்து,பாடல் முழுவதும் இன்பச் சுவை சேர்த்து கவிஞர் கைவண்ணம் காட்ட …

இசையில் ஒரு தேனருவி வழிகிறது இங்கே….இங்கே…

ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு

தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு

பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு நம்
இருவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு காதல்
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

காணொளி: https://www.youtube.com/watch?v=cAjFHn8V9q8

https://youtu.be/cAjFHn8V9q8

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.