புது கோட்டைகளில்  உன் முடியரசு
     மது  ஊற்றுகளில்      தமிழ்  குடியரசு
     உள  மாளிகையில்    பெருமா நிலஅரசு
     நீ  மாத்திரம்  தான்  கவி புவியரசு       ()
    செட்டினில்  நுழைந்ததும் மெட்டுவரும்
    மெட்டினில்  கலந்ததும்  சந்தம் வரும்
    சட்டென  சொற்களில் ஆற்றல்வரும்
    தட்டினில்  பதிவிடும் பாட்டுவரும்
    பள்ளி களறியா பாமரர்க்கும்
    கல்வி களறியா  காதலருக்கும்
    மல்யுத்தமறியா கோழையருக்கும்
    புரிந்திடும் உரந்தரம்  பொருளிருக்கும்   ()
    கண்ணனும் பிறந்து தவழ்ந்திடுவான்
   ஆயரின்  மடியினில் உறங்கிடுவான்
   மூங்கில்  காடுகள் குழலோதும்
   தூங்கிட   மருத்துவம் இது போதும்
    ஏய்த்தவர் இன்னும்   இருந்தாலும்
   ஏமாற்றியவர்  தான்  இளித்தாலும்
   கோட்டைகள்  உன்கொடி  பறக்குதய்யா
   கோபுரங்கள் பார் வணங்குதய்யா !!   ()

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *