-துஷ்யந்தி
இன்பத்தையும் துன்பத்தையும்
தாங்கிக் கொள்ளும்
சுமைதாங்கி!
என்புகளே அத்திவாரம்
சதையெனும் சீமெந்து பூசப்பட்ட
கட்டடம்!
இதயமெனும் கிரீடம்
இணைக்கப்பட்ட நாடி நாளங்கள்
வர்ண ஒளிவிளக்காய்
இரத்தவோட்டம்!
தலைமைப் பீடமாய் மூளை
எண்ணிலடங்கா மடிப்புக்கள்
கணனியையும் மிஞ்சிடும்
அற்புதச் சேமிப்பகம்!
கண்களெனும் காட்சிப் பீடம்
காதுகளெனும் கேள்விப் பீடம்
வாயெனும் வாக்குப் பீடம்
கை கால்களாய் செய்கைப் பீடம்
அங்கங்களால் ஆன
பல்கலைக்கழகம்!
உள்வாங்கும் உணவுகளை
இயந்திரமின்றி உடைத்தெறிந்து
அகத்துறிஞ்சும் களஞ்சியம்!
பல்வேறு தொகுதிகளைத்
தொடராய்க் கொண்ட
தொழிற்சாலை!
ஆன்மா ஒளிந்திருக்கும்
இருள் சூழ்ந்த மண்டபம்
பக்தி எனும் தீபம், பாதை காட்ட
நவீன உலகுடன் போட்டியிடும்
அங்கீகாரமில்லாச் சாதகன்
இறைவனால் ஆக்கப்பட்ட
அற்புதக் கலையகம்!
உடலுக்கு நன்மை செய்
உனக்கு நன்மை செய்திடும்!
தூய்மை காத்திடு
அது உன் சிந்தையைத்
தூய்மையாக்கிடும்!
காரணம் உடல் ஓர் ஆலயம்!!

Leave a Reply