காதல்

ராஜகவி ராகில் 

 

பனித்துளிக்குள் 
எரிகின்ற 
நெருப்பு

நித்திரையை
பார்த்துக் கொண்டிருக்கும் 
விளக்கு

முள்ளை
மலராக்கும் 
பட்டாம் பூச்சி

சில்லென 
வீசுகின்ற 
தீ

ஓடையில் 
மிதக்கின்ற 
கடல்

விறகினை 
கரும்பாக்கும் 
எறும்பு

உரத்து 
ஒலிக்கின்ற 
மெளனம்

வேடனை 
வேட்டையாடும் 
மான்

முள்ளில் 
சுரக்கின்ற 
தேன்

வண்டு தேடி 
பறக்கின்ற 
பூ

தாஜ்மகாலை 
விளம்பரப்படுத்தும் 
தொலைக்காட்சி

படகில் 
பயணிக்கின்ற 
நதி

சிற்பியை 
செதுக்கும் 
உளி

பூமியில் 
வாழும் 
ஆகாயம்

காற்றில் 
மிதக்கின்ற 
வைரக் கல்

மின்சாரமின்றி 
எரிகின்ற 
மின்குமிழ்

நெருப்பு 
பெய்கின்ற 
மழை

காதல் 
ஒளியின் 
நிழல் .

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *