மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++
தயவு செய்து எழுப்பாதே என்னை,
நாளைப் பொழுது இரவு வரை !
தாமதம் செய்யேன் நானினி !
இன்றிரவு கழிந்து நாளை
என்றாகும் போது,
விடைபெற்றுக் கொண்டு நான்
வெளியேறுவேன் !
போய் வர்ரேன் ! போய் வர்ரேன்
கண்மணி !
உதட்டில் காத்திருக்கும் பாடல்கள்
உணர்ச்சி ஊட்டு மெனக்கு !
ஒளிந்திருக்கும் அவை உள்ளத்தில் !
கையில் கொண்டு வரும் பூங்கொத்தை
கதவருகில் வைத்துச் செல் !
காத்திருக்கும் ஒருத்திக்கு அதனை
விட்டு வைப்பேன் !
வெகு தூரத்தில் தனித்துப் போன
என் காதலி பாடிக் கொண்டு
என்னை அழைக்கிறாள்
தன்னிடத்துக்கு !
தனித்துப் போன காதலி
பாடி என்னை அழைக்கும் போது,
ஓடிச் செல்ல வேண்டும் நான் !
போய் வர்ரேன் ! போய் வர்ரேன்
கண்மணி !
++++++++++++++++++++


Leave a Reply