Tag: அண்ணாகண்ணன்

  • அண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்

    அண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்

    ஒவ்வொரு புயலின்போதும் ஏற்படும் சேதங்கள் கணக்கில் அடங்கா. முக்கியமாக, மின் கட்டுமானம் முழுவதுமாகச் சிதைகிறது. மின் கம்பங்கள் முறிந்து விழுகின்றன. மின் வடங்கள் துண்டிக்கப்படுகின்றன. மக்களும் அரசும் இதர அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இந்தப் பின்னணியில், புயலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான யோசனைகளை முன்பே நான் கூறியுள்ளேன். இந்தப் பதிவில், மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம் கொடுப்பதன் மூலம் புயல் சேதத்தைக் குறைக்க, என் யோசனைகளைத் தெரிவித்துள்ளேன். இது, ஸ்மார்ட் சிட்டி எனப்படும் நுண்ணறிவு நகர்களாக மேம்படுத்தவும் பயன்படும்.

     

    இதுகுறித்து மின்பொறியாளர்களின் கருத்துகளை அறிய, ஆவலாக உள்ளேன். அன்பர்கள், இதனைப் பார்த்து, உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Q&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?

    Q&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?

    அண்ணாகண்ணன்

    நண்பர் வெண்மணி குமார் அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    Cover Image courtesy: https://www.maxpixels.net

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை

    உன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை

    தமிழர்கள் போற்றிய, நம் உயிரோடும் உணர்வோடும் கலந்த உன்னதக் காதல் காட்சிகள் சிலவற்றை நினைவுகூர்வோம், நெஞ்சில் ஏந்துவோம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்புவது எப்படி? – A Tutorial on sending complaints to Labour Department

    தொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்புவது எப்படி? – A Tutorial on sending complaints to Labour Department

    அண்ணாகண்ணன்

    A Tutorial on sending complaints to Tamilnadu Labour Department.

    பணி நீக்கமா? ஊதியக் குறைப்பா? விடுப்பு மறுப்பா? கூடுதல் பணிச் சுமையா? வருகைப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்கவில்லையா? பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலா? வருங்கால வைப்புநிதி, காப்பீடு இல்லையா? பணிப் பாதுகாப்பை வழங்கவில்லையா? கையூட்டுச் சிக்கலா? உங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும் தொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்பலாம். எந்தத் தளத்தில், எந்தப் பக்கத்தில், படிவத்தில், எவ்வாறு புகார் அனுப்புவது என்பதை இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • TN ePass பெறுவது எப்படி? – How to get TN ePass? – A tutorial

    TN ePass பெறுவது எப்படி? – How to get TN ePass? – A tutorial

    அண்ணாகண்ணன்

    மாவட்டம் கடந்தும், மாநிலம் கடந்தும் செல்ல வேண்டிய தேவையிருப்போர், கட்டாயமாக தமிழகப் பயண அனுமதிச் சீட்டு (TN ePass) பெறவேண்டும். இதைப் பெறும் வழி தெரியாமல் பலரும் அல்லாடி வருகிறார்கள். இதைப் பைசா செலவில்லாமல், இணையம் வழியாக விண்ணப்பித்துப் பெறுவது எப்படி என்று இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிக்கல் எங்கே? தீர்வு அங்கே!

    சிக்கல் எங்கே? தீர்வு அங்கே!

    அண்ணாகண்ணன்

    வேலையிழப்பும் வருவாய் இழப்பும் பொது முடக்கமும் தொழில் முடக்கமும் உலகில் பலரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளன. கவலைப்படுவதால் சிக்கல் சிறிதளவும் குறையாது. சீரிய செயலே நம்மைக் காக்கும்.

    அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் செலவிடுங்கள். இதர அனைத்துச் செலவுகளையும் அடியோடு நிறுத்துங்கள். அக்கம் பக்கம், சொந்த பந்தங்கள் குறித்து யோசிக்க வேண்டாம்.

    வசதிக்குப் பழகிவிட்டேன் என உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அது ஒரு மனநிலை. மனநிலையை மாற்றிக்கொண்டால், புதிய பழக்க வழக்கம் உருவாகும்.

    இன்னொரு வகையில் பார்த்தால், இது நன்மையே. வீட்டை விட்டுத் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம். நமக்குப் போக்குவரத்துச் செலவு, திரையரங்கம், மால், ஷாப்பிங்… போன்ற பல செலவுகள் அறவே இல்லை. கல்விக் கட்டணம், வங்கிக் கடன் போன்றவையும் உடனடியாக இல்லை. 3 மாதத் தவணைகளைத் தள்ளி வைத்துள்ளார்கள். வீட்டுச் செலவுகளை மட்டும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் போதும்.

    பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, நண்பர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன், ஒருநாள் சென்னை எழும்பூரில் நடந்துகொண்டிருந்தேன். அந்தச் சாலையோரத்தில் இருந்த பேக்கரிக் கடையைக் காட்டினார். அங்கே இரண்டு ரூபாய்க்கும் பன் கிடைக்கிறது என்றார். இந்தியாவில் இரண்டு ரூபாயிலும் ஒருவேளை பசியாறலாம். அனைவருக்கும் வாழ இங்கே வழியுண்டு என்றார்.

    பணமில்லாதபோது எளிமை, நாளை நிறையப் பணம் கிடைத்ததும் ஆடம்பரமான வாழ்க்கை என மாறக் கூடாது. கூடிய வரை எப்போதும் எளிய வாழ்க்கையையே வாழ வேண்டும். அதுவே எந்நாளும் நன்மை பயப்பது.

    இதிலே மிக முக்கியமானது, நாம் மகிழ்ச்சியாக இருப்பது. நாம் ஏதோ குறைந்துபோய்விட்டோம், அனைத்தையும் இழந்துவிட்டோம், முடங்கிக் கிடக்கிறோம் என்றெல்லாம் எதிராக நினைக்காமல், இதுவும் நன்மைக்கே என்றும் இதற்குள் நமக்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன என்றும் எண்ணிப் பார்த்தால், உற்சாகம் பிறக்கும்.

    ஒரே மாதிரி தினந்தோறும் வேலை செய்துகொண்டிருக்காமல், நிரல் மாற்றி, நிறம் மாற்றி, அளவு மாற்றி, இடம் மாற்றி அதையே விதவிதமாகப் புதுமையாகச் செய்து பாருங்கள். நேர்க்கோட்டில் நடந்துகொண்டிருந்தால், ஒருநாள் வட்டமாக நடக்கலாம். அடுத்த நாள் சதுரமாக. இன்னொரு நாள், 8 வடிவில். பாடிக்கொண்டே நடக்கலாம். கைத்தட்டிக்கொண்டே நடக்கலாம்.

    வழக்கத்தை மாற்றினால், மனத்திற்குப் புதிய உற்சாகம் கிடைக்கும்.  இதற்கெல்லாம் நீங்கள் எந்தச் செலவும் செய்ய வேண்டாம். மகிழ்ச்சிக்கும் காசு பணத்திற்கும் தொடர்பு இல்லை. தொட்டிக்குள் அடைபட்டாலும் பூ சிரிக்க மறப்பதில்லை. எப்போதும் மகிழ்ந்திருப்போம். எல்லாம் இன்ப மயம்.

    எளிமையாக, செம்மையாக வாழ விருப்பமா? சீர் இயக்கத்தில் சேருங்கள் – https://www.facebook.com/groups/558828647883520

    ———————————————————–

    Pic courtesy: https://www.maxpixels.net

    Share
  • சீர் இயக்கம் எதற்காக? – அண்ணாகண்ணன் உரை

    சீர் இயக்கம் எதற்காக? – அண்ணாகண்ணன் உரை

    2018 அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளில், எளிய வாழ்வின்வழி ஏற்றம் என்ற நோக்குடன்,  சீர் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினேன். இதற்கான பேஸ்புக் குழு இங்கே – https://www.facebook.com/groups/558828647883520/
     
    சீர் இயக்கம் குறித்தும் எளிய வாழ்வியலுக்கான என் வழிகாட்டிகள் குறித்தும் எளிமையை வாழ்க்கைமுறையாகக் கொள்வது குறித்தும் இந்தக் காணொலியில் விளக்கியிருக்கிறேன். 
     
     
     
    எளிய வாழ்க்கையில் ஆர்வம் கொண்டோர், இந்தக் குழுவில் இணையுங்கள்.
     
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 45 – புலம்பெயர் தொழிலாளர் இடர் தீர

    அண்ணாகண்ணன் யோசனைகள் 45 – புலம்பெயர் தொழிலாளர் இடர் தீர

    நடந்தே கடப்பேன் எனது துயரை என்பது போல, ஒரு முரட்டுத் துணிச்சலுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் நடக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின் முடிவு சரிதானா? அவர்களுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்? இந்தச் சிக்கலுக்கு எனது தீர்வு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 44 – வீட்டிலிருந்தே உற்பத்தி, வீட்டிலிருந்தே சேவைகள்

    அண்ணாகண்ணன் யோசனைகள் 44 – வீட்டிலிருந்தே உற்பத்தி, வீட்டிலிருந்தே சேவைகள்

    ஊரடங்கால், பொது முடக்கத்தால் நாம் வீட்டில் முடங்கித்தான் கிடக்க வேண்டுமா? பணியாற்ற முடியாதா? பொருளீட்ட முடியாதா? வீட்டிலிருந்தே வேலை என்பது போல, வீட்டிலிருந்தே நம்மால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும், வீட்டிலிருந்தே சேவைகள் வழங்க முடியும். பொருளாதாரச் சுணக்கம் கண்டுள்ள இந்தியாவின் அடிப்படைச் சிக்கலுக்கு எனது தீர்வு இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 42: Fake ID-களைத் தவிர்ப்பது எப்படி?

    அண்ணாகண்ணன் யோசனைகள் 42: Fake ID-களைத் தவிர்ப்பது எப்படி?

    Fake ID எனப்படுகிற போலிக் கணக்குகளை எப்படிக் கண்டறிவது? எப்படி தவிர்ப்பது? எப்படி தடுப்பது? இதோ என் யோசனை.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 11ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    11ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    2020 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 10 ஆண்டுகளை நிறைவுசெய்து 11ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பத்து ஆண்டுகளில் வல்லமை, 16,535 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,505 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 900 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

    கடந்த ஆண்டு, தொழில்நுட்பச் சிக்கல்களால் வல்லமை 37 நாள்கள் முடங்கியது. பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, மீண்டது. இப்போது செம்மையாகச் செயல்பட்டு வருகிறது. நமது வழங்கியை (Server) மாற்றினோம். தரவுகளைப் பாதுகாக்க, தரவு சேமிப்பகத்தைத் (Data back-up) தேர்ந்தோம். தொழில்நுட்ப ஆதரவு (Technical support) நிறுவனத்தைத் தேர்ந்தோம். இவையனைத்தும் கட்டணச் சேவைகள். எனினும் உரிய நேரத்தில் எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ஜெயபாரதன், மேகலா இராமமூர்த்தி, நாங்குநேரி வாசஸ்ரீ, திருச்சி புலவர் இராமமூர்த்தி ஆகியோர் வழங்கிய நன்கொடையால், தளம் நிமிர்ந்தது. கவிஞர் வித்யாசாகர், பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், முனைவர் நா.கணேசன், பெரியவர் இன்னம்பூரான் உள்ளிட்டோர் மேலும் நன்கொடையும் உதவிகளும் வழங்க இசைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள்.

    தரமான, நடுநிலையான, கூர்மையான மின்னிதழாக வல்லமை தொடர்ந்து மிளிர்ந்து வருகிறது. ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பிட்டு, ஆய்வறிஞர்கள் வழங்கும் மதிப்புரைகள், ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுதலாய் அமைகின்றன. நாம் இன்னும் நிறையப் பணிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆக்கப்பூர்வமான படைப்புகளையும் ஆய்வுகளையும் ஊக்குவித்து வளர்த்தெடுக்க, வல்லமை உறுதி பூண்டுள்ளது. இதற்குத் தொடர்ச்சியான நன்கொடைகள் தேவை. உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவுங்கள். ஆர்வமும் நேரமும் தமிழறிவும் படைத்தவர்கள், வல்லமை ஆசிரியர் குழுவில் இணையலாம். வாய்ப்புள்ளோர், வல்லமையில் விளம்பரங்கள் வெளியிடலாம்.

    வல்லமை 11ஆவது ஆண்டில் நுழைந்துள்ள இந்த நாளில் வல்லமை யூடியூப் அலைவரிசையை அறிமுகப்படுத்துகிறோம். இதில் அன்பர்கள் உறுப்பினராக இணைந்து (Subscribe), ஈடுபாட்டுடன் பங்கெடுக்க வருமாறு அழைக்கிறோம்.

    வல்லமை யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்: http://www.youtube.com/channel/UCnjxyY8wTI3_HHFCD162IIA?sub_confirmation=1

    இதன் இடுகைகளுக்கு விருப்பக்குறியிட்டு, பின்னூட்டங்கள் அளித்து, உங்கள் நண்பர்களுக்கு இந்தப் பதிவுகளையும் அலைவரிசையையும் பகிர்ந்து, அவர்களையும் இணையுமாறு ஆற்றுப்படுத்த வேண்டுகிறோம். இந்த முயற்சியின் பயன், பலரையும் எட்ட வேண்டும் என்பதே நம் நோக்கம்.

    இந்த அலைவரிசையில் முனைவர் பா.ஜெய்கணேஷ் அவர்களின் காலந்தோறும் சங்க இலக்கியம் என்ற இணையவழி உரையை முதல் பதிவாக அளித்துள்ளோம்.

    தமிழில் மின்னாளுகை என்ற தலைப்பிலான எனது முனைவர்ப் பட்ட வாய்மொழித் தேர்வின்போது வழங்கிய திரை உரைக் காட்சித் தொடரையும் நீங்கள் காணலாம்.

    இந்த அலைவரிசை, கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, அறிவுப் பகிர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆய்வுக் கட்டுரைகள், இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வேடுகளின் சுருக்கங்களை இதில் காணொலியில் (வீடியோவில்) பதிந்து ஏற்றலாம். நீண்ட கட்டுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் முழுமையாகப் படிப்பதற்கு முன்னால், அதன் சாரத்தை ஓரிரு நிமிடங்களில் வழங்கினால், வாசகருக்கு அல்லது பயனருக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் இது, முழுக் கட்டுரையைப் படிப்பதற்குத் தூண்டுகோலாக அமையும். இது, ஒரு திரைப்படத்தைக் காண்பதற்கு முன்னால், அதன் முன்னோட்டத்தைப் பார்ப்பது போலாகும்.

    வாய்ப்புள்ளோர், முழுக் கட்டுரையின் செய்திகளையும் முழுமையான உரையாகவும் வழங்கலாம். இது ஒரே நேரத்தில் ஓர் உள்ளடக்கத்தைக் காணொலி வடிவிலும் எழுத்து வடிவிலும் வழங்குவதாகும். இதில், எழுத்தில் காட்ட முடியாத தொனியையும் குறிப்பையும் உணர்வுகளையும் பாவங்களையும் காட்ட இயலும். மேலும் காட்சி வடிவச் சான்றுகளையும் இதர இணையப் பக்கங்களையும் காணொலிகளையும் எடுத்துக் காட்டலாம்.

    இவை மட்டுமின்றி, தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் போன்றவை அன்றாடம் நடைபெற்று வருகின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் இவை அனைத்தும் இணையம் வழியே நடைபெறுகின்றன. மேலும் பல்வேறு பயிற்சி வகுப்புகளும் இணையத் தொடர்களும் முழு வீச்சில் நடக்கின்றன. இவை அனைத்தையும் ஆவணப்படுத்த, வல்லமை விழைகிறது. இவற்றின் முழுமையான காணொலிப் பதிவுகள், திரைஉரை காட்சித் தொடர்கள் ஆகியவற்றை இந்த அலைவரிசையில் ஆவணப்படுத்த விரும்புகிறோம்.

    அன்பர்கள் தாங்கள் உருவாக்கும் பவர்பாயின்ட் உரைகளை நமக்கு அனுப்பினால், அவற்றைக் காணொலியாக மாற்றி, வெளியிட இயலும். எனவே, காணொலிப் பதிவாக இருந்தாலும் பவர்பாயின்ட் ஆக இருந்தாலும் பிடிஎப் ஆக இருந்தாலும் எந்த வடிவில் உங்கள் காட்சியுரை இருந்தாலும் எங்களுக்கு அனுப்புங்கள். எங்கே, என்றைக்கு, எந்த நிகழ்வில் இதை வழங்கினீர்கள் என்ற விவரத்தைக் குறிப்பிட்டு அனுப்புங்கள். இவற்றை நாங்கள் உரிய முறையில் ஆவணப்படுத்துவோம். யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவதோடு, அவற்றை வல்லமை மின்னிதழிலும் காட்சிப்படுத்துவோம்.

    தொழில்நுட்பம் வழங்கியுள்ள அளப்பரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழ் உள்ளடக்கத்தையும் தமிழாய்வையும் வளர்த்தெடுக்க, வாருங்கள்.

    உங்கள் இலக்கியப் படைப்பு அல்லது ஆய்வுக் கட்டுரை அல்லது முனைவர் பட்டம் குறித்து, சுருக்கமாக / விளக்கமாகப் பேசி ஒரு பதிவை கூகுள் டிரைவ் வழியாக vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். பேச்சின் இடையே உங்கள் முனைவர் பட்ட ஆய்வேட்டினைக் காட்டலாம். அதில் உள்ள முக்கிய தரவுகள், சான்றுகளை எடுத்துக் காட்டலாம். அதன் தனிச் சிறப்புகளை எடுத்துரைக்கலாம்.

    வல்லமை எவ்வாறு உங்களுக்குப் பயனளிக்கின்றது என்றும் இன்னும் என்னென்ன செய்யலாம் என்றும் அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறோம். வல்லமையின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் ஆசிரியர் குழுவினர், ஆய்வுலகினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், வாசகர்கள், நன்கொடையாளர்கள், தொழில்நுட்ப ஆதரவு நல்கும் எல்.கார்க்கிக் உள்ளிட்ட நண்பர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன், மிகச் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார். பிழை திருத்துவதில் முனைவர் அருணன் கபிலன் பங்களிக்கிறார். தரமான படைப்புகளாலும் படக்கவிதைப் போட்டி முடிவுகளாலும் மேகலா இராமமூர்த்தி, வல்லமைக்கு அணிசெய்து வருகிறார். சாந்தி மாரியப்பனும் ராமலக்ஷ்மியும் உரிய படங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கி வருகின்றனர். வல்லமையின் மதிப்பாய்வு அறிஞர்கள், சிறப்பான மதிப்பீடுகளை வழங்கி வருகின்றனர். இவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகுந்த நன்றி.

    தரமான இதழாக வல்லமை தொடர்ந்து பயணிக்கும். உங்கள் அனைவரின் தொடர்ச்சியான நல்லாதரவினை வேண்டுகிறோம்.

    Share
  • இனி விடமாட்டேன்

    இனி விடமாட்டேன்

    அண்ணாகண்ணன்

    ஆசிரியரின் குரலில் இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்.

     

    விட்டதைப் பிடிப்பேன்
    விடமாட்டேன் இனி விடமாட்டேன்
    தொட்டதை முடிப்பேன்
    விழமாட்டேன் தலை கவிழமாட்டேன்

    உள்ளதைச் சொல்வேன்
    கட்டமாட்டேன் இட்டுக் கட்டமாட்டேன்
    நல்லதைச் செய்வேன்
    ஒட்டமாட்டேன் தீயில் ஒட்டமாட்டேன்

    கண்டதை ரசிப்பேன்
    மூடமாட்டேன் விழி மூடமாட்டேன்
    கொண்டதைக் கொடுப்பேன்
    பாடமாட்டேன் பஞ்சம் பாடமாட்டேன்

    விண்ணிலே பறப்பேன்
    படமாட்டேன் அடை படமாட்டேன்
    மண்ணிலே விதைப்பேன்
    வேர்த்திருப்பேன் மலர் பூத்திருப்பேன்

    புன்னகை விரிப்பேன்
    அழமாட்டேன் அஞ்சித் தொழமாட்டேன்
    இன்றினில் வாழ்வேன்
    இசைத்திருப்பேன் திசை அசைத்திருப்பேன்!

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இணையவழியில் மது விற்க முடியும்!

    இணையவழியில் மது விற்க முடியும்!

    அண்ணாகண்ணன்

    டாஸ்மாக் மதுக் கடைகளில் மக்கள் குவிந்து வருவதால், கொரோனா தொற்று ஆபத்து மிகுந்துள்ளது. இதை இணையம் வழியே விற்றால், குறைந்தபட்சம், கொரோனா பரவலையாவது தடுக்கலாம். இணையம் வழியே மது விற்க முடியாது என்று அரசு, அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், நினைத்தால் முடியும் என்பதே உண்மை. இதற்குச் செய்ய வேண்டியவை குறித்து இந்தப் பதிவில் சிறிது விளக்கியுள்ளேன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Q & A: சுதா மாதவன் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில்

    Q & A: சுதா மாதவன் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில்

    அண்ணாகண்ணன்

    எனது யூடியூப் அலைவரிசையில் ஒரு புதிய பகுதியாக, அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். இந்த முதல் பதிவில், முகநூல் (பேஸ்புக்) நண்பரும் வல்லமை வாசகருமான சுதா மாதவன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளேன்.

     

    உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள், யோசனைகள், கருத்துகள், பின்னூட்டங்கள் இருந்தால், வீடியோவில் பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    கொரோனா தொற்று பரவும் இந்த ஊரடங்கு காலத்தில், கடைகளிலும் பொது இடங்களிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதோ எனது யோசனை.

     

    படப் பதிவு: ஹேமமாலினி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share