annakkannan

அண்ணாகண்ணன்

ஆசிரியரின் குரலில் இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்.

 

விட்டதைப் பிடிப்பேன்
விடமாட்டேன் இனி விடமாட்டேன்
தொட்டதை முடிப்பேன்
விழமாட்டேன் தலை கவிழமாட்டேன்

உள்ளதைச் சொல்வேன்
கட்டமாட்டேன் இட்டுக் கட்டமாட்டேன்
நல்லதைச் செய்வேன்
ஒட்டமாட்டேன் தீயில் ஒட்டமாட்டேன்

கண்டதை ரசிப்பேன்
மூடமாட்டேன் விழி மூடமாட்டேன்
கொண்டதைக் கொடுப்பேன்
பாடமாட்டேன் பஞ்சம் பாடமாட்டேன்

விண்ணிலே பறப்பேன்
படமாட்டேன் அடை படமாட்டேன்
மண்ணிலே விதைப்பேன்
வேர்த்திருப்பேன் மலர் பூத்திருப்பேன்

புன்னகை விரிப்பேன்
அழமாட்டேன் அஞ்சித் தொழமாட்டேன்
இன்றினில் வாழ்வேன்
இசைத்திருப்பேன் திசை அசைத்திருப்பேன்!

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.