Tag: திவாகர்

  • தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – (2)

    .
    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் – பகுதி 1

    சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் அருகில் உள்ள முருகன் லெண்டிங் லைப்ரரியை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு ஆதியில் மிகச் சிறந்த தோழர்களை (புத்தகங்களைத்தான் சொல்கிறேன்)  அறிமுகப்படுத்திய இடம் அதுதான். இர்விங் வாலஸ் இலிருந்து இதிகாசப் புத்தகங்கள் வரை வெறியாகப் படித்த நாட்கள் அவை. பள்ளி நாட்களிலிருந்து கிடைத்த அந்தக் கடைக்காரரின் நெருங்கிய சிநேகம் கைகொடுத்தது. அங்கேதான் நான் தேவன் கதைகள் மீது காதல் கொண்டேன். என் காதலுக்கு உரம் போட்டு வளர்ப்பது போல் தேவனின் பரம ரசிகரான அந்தக் கடைக்கார நண்பரும் அதிக நேரம் என்னோடு அவர் புதினங்கள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் பேசுவதிலேயே செலவிடுவார். இதனால் மேலும் இரண்டு சௌகரியங்கள் எனக்கு ஏற்பட்டன. அப்போதெல்லாம் ‘பைண்ட்’ செய்யப்பட்ட ஒரிஜினல் தேவன் தொடர்கதைப் புத்தகங்கள் எல்லாமே என் பார்வையில் தினம் பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டுக்கும் ‘இலவசமாகவே’ எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல அனுமதியும் உண்டு. (மற்றவர்களுக்கு எக்ஸ்ட்ரா லெண்டிங் ஸ்ட்ரிக்ட் ’நோ’ அத்துடன் ஃபைன் வேறு கட்டவேண்டும், அத்தோடு டி.வி.க்கள் இல்லாத காலம் என்பதையும் புத்தகங்கள் அதிகம் படிக்கமுடிந்த காலம் என்பதையும் கணக்கில் கொள்க)).

    தேவன் கதைகளில் மிகப் பெரிய விசேஷம் என்பதே எந்த விஷயத்தையும் மிக எளிதாக விளங்கும்படியாகவும் நகைச்சுவையாகவும் வாசகர் முன் எடுத்து வைப்பதுதான். எளிய நகைச்சுவை என்பது அவர் எழுத்தின் மூலாதாரமோ என்று வியக்க வைக்கும். அட்டகாசமாக ஆஹா ஓஹோ என்று சிரித்து விட்டு அடுத்தகணமே மறக்கடிக்கவைக்கும் நகைச்சுவைகள் அவர் எழுத்தில் கிடையாது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சாதாரண விஷயங்களே நகைச்சுவையாக எடுத்தாளப்படும்போது அதன் முக்கியத்துவம் தெரியும் வகையில் எழுதுவார். எதையும், எவரையும் ஆழ்ந்து நோக்கும் பார்வை அவருடையதாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அந்தப் பார்வையில் பட்டவை எல்லாம் சர்வ சாதாரணமாக எழுத்தில் பிரதிபலிக்கும். சாதாரண மனிதர்கள் பார்வையில்தான் சாதாரண மனிதர்களின் கவனம்தான் அவருக்கு முக்கியம். அதிலும் அந்தக் காலத்து மத்தியதரவர்க்கத்தாரின் நாடியைப் பிடித்துப் பார்த்து எழுதும் கலையைக் கற்றவர்.  அவர் எழுதும் தமிழ் சாதாரணமாக பேசும் தமிழ் போல இருந்தாலும் நல்ல தமிழைத்தான் பயன்படுத்துவார். பின்னாட்களில் அளவுக்கு அதிகமாக தமிழ்ச் சொற்களில் ஆங்கில எழுத்துகளைக் கலந்து கொடுத்தவர் சுஜாதா அவர்கள் என்ற பெயர் உண்டு என்றாலும் அதன் மூலகர்த்தா தேவன் அவர்கள்தான். ஆங்கிலம் மட்டுமல்ல வடமொழியும் சர்வ சாதாரணமாக எழுத்தில் காணப்படும். ஆனாலும் யாருக்குமே, ஏன், ஒரு தனித்தமிழ் ஆர்வலருக்குமே கூட இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு வராத அளவில் அந்தக் கலவை இருக்கும். அதே போல கம்பன் கவிதைகளில் உவமைகள் ஏராளமாக இருக்கும். தேவன் எழுத்துக்களில் கூட உவமைகள் ஏராளமாக உண்டு. இவர் போல கதை கட்டுரைகளில் உவமைகள் இப்படி அள்ளித்தெளித்தவர் யாரேனும் உண்டா என்று தேட வேண்டும் கூட.

    உவமைகள் எதற்காக எழுதப்படுகின்றது என்றால் சொல்லப்படும் கருத்தின் வீரியத்தை மிக அதிக அளவில் வலுப்படுத்தும் என்பதற்காகவே உவமைகள் உருவாயின. பெண்ணின் முகத்தை பூரண நிலவொளிக்கு உவமையாக்குகிறோம். அவள் கண்களை ஒளிரும் நட்சத்திரங்களுக்கு ஒப்பு நோக்கிப் பேசுகிறோம். அவள் நாசியை கூர்மையான வெள்ளைப்பறவைக்கு ஈடு காட்டுகிறோம். பட்டு’ போன்ற கன்னங்கள் எனும் போதே அதன் மென்மையைக் காட்டி விடுகிறோம். அவள் சிரிக்கும்போது தெரியும் பற்களைக் கூட விடுவதில்லை. முத்து வரிசை, முல்லைச் சரங்கள், வெள்ளி மணி என்கிறோம். இப்படி உவமைகள் சொல்லப்படும்போதெல்லாம் இந்தக் கருத்துகள் பலம் பெறுகின்றன. பலம் பெறும்போது எளிதில் வாசகர்கள் மூளையில் போய் தங்கிவிடுகின்றது. ஆனால் பொருத்தமான உவமைகள் தேட எல்லா எழுத்தாளர்களுமே கஷ்டப்படுவர். தேவன் அப்படிக் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை. சர்வ சாதாரணமாக அவர் எழுத்தில் ஒவ்வொரு முறையும் வந்து விழும் உவமைகளை மட்டும் எழுதத் தொடங்கினால் ஒரு பெரிய ‘பைண்ட்’ புத்தகமே கூட போட்டுவிடலாம்.

    இப்படி உவமைகள் நிறைந்த கதை என்று சொல்லத் தொடங்கினால் தேவனின் ‘மிஸ் ஜானகி’ ஒன்றே போதும். எத்தனை எத்தனை உவமைகள் என்ற சான்றுக்குப் போகுமுன், மிஸ் ஜானகி கதையைப் பற்றிய ஒரு சுருக்கம் ஒன்றினைத் தெரிவித்து விடுகிறேன்.. ஏனெனில் இந்த உவமைகள் பற்றி எழுதும்போது அதன் சுவை கூடுமல்லவா.

    மதுரை வக்கீல் பட்டாபி ராமய்யரின் இரண்டாவது மகளான மிஸ் ஜானகி சென்னையில் கல்லூரி ஒன்றில் படிக்கும்போது தன்னுடைய மூத்த மாணவனான கதாநாயகன் நடராஜனின் சிநேகிதம் கல்லூரியின் நூலகத்தில் அகஸ்மாத்தாகக் கிடைக்க அது காதலாக மலர்கிறது. காதலென்றால் அதுவும் அந்தக் காலக் காதல் எல்லாம் திரை மறைவில்தான், யாருமறியாமல்தான் நடக்கமுடியும். இப்படி இருக்கையில் ஆண்டுமுடிவில் வரும் விடுமுறையில் திருச்செந்தூர் சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டுமென, மதுரையிலிருந்து இதற்காக இவள் அக்கா சென்னைக்கு வந்து மெனக்கெட்டு அழைத்துப்போக, சென்னையிலிருந்து ஜானகி ரயிலில் தன் அக்கையோடு பயணமாக, நம் கதாநாயகனும் தன் காதலியின் கண்பார்வையில் இருக்கவேண்டுமென விரும்பி அவளைத் தொடர்கிறான். அக்கையும் தங்கையும் மதுரை இறங்கி இல்லம் சென்ற பிறகு அடுத்த நாள் வண்டியில் திருச்செந்தூர் செல்வதாக ஏற்பாடு.

    இந்தக் கதையில் வில்லங்கம் செய்பவர்கள் உண்டு. செய்பவர்கள் மூவர். ஒருவர் ஜானகியின் சொந்த அக்கா மங்களம், இன்னொருவர் திருச்செந்தூரின் ரிடையர்டு தாசிலதாரும் திமிராகப் பேசிப் பழகும் நாகநாதைய்யர். மூன்றாவது நடராஜனின் கல்லூரியில் படிக்கும் சக மாணவனாகக் குப்பை கொட்டும் ’அல்ட்டல்’ சந்துரு. இவன் நாகநாதைய்யரின் உறவு என்பதோடு வக்கிரபுத்தி படைத்தவன் கூட. இவனுக்கு ஜானகியை எப்படியும் ’செட்டில்’ செய்து விட வேண்டும் என்ற முனைப்போடுதான் நாகநாதய்யரே ஜானகி குடும்பத்தாரை, அவர்கள் தெரிந்தவர்கள் என்ற முறையில், வற்புறுத்தி திருச்செந்தூர் அழைத்து வருகிறார். இந்த மங்களமோ ஊர் உலகத்தை அடக்குவதோடு, கணவனையும் அடக்கி தன் முந்தானை முடிச்சில் வைத்திருப்பவள்தான் என்றாலும் நாகநாதய்யர் எப்படியோ மங்களத்தைப் புரிந்து கொண்டு அவளைத் தன் வழியில் வரவழைக்கவும் முயற்சி செய்கிறார். வில்லங்கம் என வரும்போது நல்லவைகள் செய்பவரும் வேண்டுமே.. அப்படிப்பட்ட நல்லவர்களில் முதன்மையாக திருச்செந்தூர் கடற்கரையில் தன் காகிதங்களைக் காற்றில் பறக்கவிட்டு மண்ணில் பரபரவென தேடும் ‘தலைதடவி’ சுந்தரமும் (பாவம் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, அந்த வேடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதைப் போல நம் கதாநாயகன் மட்டுமே உதவி புரிகிறான்), கல்லூரி அறை நண்பன் குடுமி மணியும் விசேஷமாக உண்டு. கூடவே சிறு சிறு உதவிகள் ஜானகியின் பயந்த சுபாவ அத்திம்பேர் ஜகதீசன் மூலமும், திருச்செந்தூர் அண்டை வீட்டுக் காரர்களாகக் குடியேறும் முன்னாள் நடிகை ஜகமும், நாட்டியமணி பங்காருவும் செய்து கொடுத்தாலும் இவர்களால் கிடைத்த உதவிகளை விட உபத்திரவமே நடராஜனுக்கு மிஞ்சுகிறது. கூடவே உபத்திரவமும் உதவியும் கொடுக்க திடீரென அவனைத் தேடி வந்த நடராஜனின் தந்தை டெல்லி ஹரனும் அதே போல கதாநாயகி ஜானகியின் தாய் தந்தையரும் அங்கு பின்னர் (திருச்செந்தூரில்) சேர்ந்து கொள்கிறார்கள  ஜானகியின் அப்பா தினம் வாயால் ஆயிரம் முறை அஸ்வமேதம் செய்துவிடுவதாக பேசுவாரென்றால், அவள் அம்மாவோ தினத்துக்கு ஒரு வியாதியைச் சொல்லிக்கொண்டு, அந்த வியாதியின் பெயரால் அன்றைக்கு என்ன கிழமை என பிறர் கண்டுகொள்ளும் அளவுக்குப் பழகும் பெண்மணி. (இதே போல ஒரு பாத்திரத்தைப் பின்னாளில் ‘அனபே வா’ எனும் படத்தில் சரோஜாதேவியின் அம்மாவாக வரும் நடிகைக்குக் கொடுத்துக் காப்பியடித்தார்கள் என்பது வேறு விஷயம்)

    இப்படிப்பட்ட சமயத்தில்தான் நடராஜன் தன் காதலி ஜானகியுடனும், இன்னமும் காதல் விஷயம் தெரியாத அவள் அக்கா மங்களத்துடனும் எதேச்சையாக சேர்ந்து கொண்ட முன்னாள் நடிகை ஜகத்துடனும், சென்னையிலிருந்து இவர்களோடு புகைவண்டியில் பயணம் செய்யும்போது, அடுத்த நாள் காலை வேளையில் திண்டுக்கல் ஸ்டேஷனில் கிடைக்கும் சுவையான சூடான இரண்டு இட்லிக்காக கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளுடன் போராடி வெற்றிகரமாக தனக்கொரு பொட்டலமும், ஜானகிக்கொரு பொட்டலமும் வாங்கி வெளியே வருவதற்குள் வண்டி இந்த அப்பாவிக் காதலனுக்குக் காத்திராமல் கிளம்பி விட, நடராஜனோ வண்டியைப் பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் வண்டியில் செல்லும் தன் அழகான காதலியையும் அவள் பார்வையில் பட வைத்திருக்கும் தன் பெட்டியையும் பறிகொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான்.

    அந்தப் பெட்டியில் சில விசேஷங்கள் உண்டு. ஜானகி தன் கைப்பட எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரமாக (காதலன் என்பான் அவ்வப்போது அதைப் படிக்கவேண்டும் அல்லவா) வைத்துள்ளான். (அந்தக் கால கட்டத்தில் காதல் கடிதம் எழுதுவது எல்லாம் மிகப் பெரிய கிரிமினல் குற்றமாக்கும் என்பதையும் நினைவில் கொள்க) இருந்தாலும் ஜானகியின் பார்வையில்தான் அந்தப்பெட்டி இருக்கிறது என்ற ஆறுதலும் என்னதான் மதுரையில் ஜானகி இறங்கினாலும் அடுத்த நாள் திருச்செந்தூரில் பார்த்து ரகசியமாக பெட்டியை வாங்கிவிடலாம் என்றும் தன்னை சமாதானம் செய்து கொண்ட நடராஜன் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறான். ஜானகி சென்ற ரயில் மதுரையை அடைந்ததும், எப்படி இந்தப் பெட்டியை தன் பெட்டிகளுடன் சேர்ப்பது என்று கவலைப்பட்ட ஜானகிக்கு, அதே வண்டியில் திருச்செந்தூர் பயணப்பட மதுரையில் ஏற வந்த நாகநாதய்யர் வந்ததால் அவளுக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தந்தது. ‘மாமா.. இந்தப் பெட்டி என் சிநேகிதியின் பெட்டி, ஜாக்கிரதையாக எடுத்துச் செல்லுங்கள், நாளை திருச்செந்தூரில் வாங்கிக் கொள்கிறேன்” என ஒப்படைத்துவிட்டு ஒரு நல்ல காரியத்தைத் திருப்திகரமாக முடித்தோம் என்ற சந்தோஷத்துடன் அந்த நிம்மதி முகத்தில் தெரிய தன் இல்லத்துக்குச் செல்கிறாள்.

    பாவம் அவள். ’கண்ணிய நடத்தையுடன் நாகநாதய்யர் எடுத்துச் செல்வார்.. அந்தப் பெட்டி அடுத்த நாள் வந்து சேரும், நடராஜனை எப்படியாவது பார்த்துத் திருப்பி  விடலாம்’ என்று நம்பிய ஜானகிக்கு இந்த நாகநாதய்யர் ரயிலில் பொழுதைக் கழிக்க வசதியாக இவளின் காதல் கடிதங்கள்தான் கிடைத்தன என்பதையும் அதைப் படித்துவிட்டு அந்த மாமா வயற்றெரிச்சலுடன் வாயும் எரிய அனைவரையும் திட்டிக் கொண்டே பயணம் செய்கிறார் என்கிற அரிய விஷயத்தை நிச்சயம் அறிந்திருக்க மாட்டாள் இல்லையா? அதிலும் தனக்கு எப்படியாவது அந்த பாழாய்ப்போன ராஸ்கல் சந்துருவை மணமுடிக்க ஆவலாய் இருக்கும் ஒருவர் கையில் இந்தக் கடிதங்கள் கிடைத்து பின்னாட்களில் என்னென்ன தொந்தரவுகள் வருமோ என்றெல்லாம் அவள் அந்தச் சமயத்தில் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

    இனி திருச்செந்தூரில் பிரத்யட்ச தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் பெருமைகளை அவ்வப்போது சொல்லிக்கொண்டே நம் கதையும் விறு விறுப்பாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.

    கதை நகரட்டும்.. இனி ஓரளவுக்கு இந்தக் கதையின் தளமும், நடையும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இனி தேவன் இந்தக் கதையில் புகுத்திய இந்த உவமைப் பொருத்தங்களைப் பார்க்கலாம்.

    (தொடர்ந்து வரும்)

    Share
  • தேவன் ஒரு சகாப்தம்

    திவாகர்

    தேவன் எனும் மகாதேவன் எனும் அரிய பெரிய எழுத்தாளரைப் பற்றி நம் காலத்துப் பெரியவர்கள் அனைவருமே நன்றாகவே அறிந்திருந்தாலும், இந்தக் கால இளைஞர்களுக்கும் வருங்காலத்துக்கும் நம்மால் இயன்ற அளவு அவர் பெருமை சொல்லலாமே என்றுதான் இக்கட்டுரைத் தொடரைத் தொடங்க முன்வந்துள்ளேன்.

    இந்த வருடம் தேவனின் நூற்றாண்டு வருடம்.. ஆம்.. சென்ற 1913 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 8ஆந்தேதிதான் தமிழுலகத்தின் இந்தச செல்லக் குழந்தை திருவிடைமருதூரில் அவதரித்தது. தான் பிறந்த இந்தத் திருவிடைமருதூரை முடிந்த போதெல்லாம் தம் கதைகளில் கொண்டுவந்து விடுவார். பிறந்த ஊரின் மீது அத்தனை பற்று வைத்திருக்கும் தேவனைப் பற்றி எழுதும்போது தேவன் படைப்புகளைக் கொண்டுதான் இக்கட்டுரை அமைய வேண்டுமென்பது என் விருப்பமாதலால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் குடும்பம் போன்றவைகளைப் பற்றியோ, அவர் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்பதைப் பற்றியோ இங்கு எழுதப்போவதில்லை என்பதை முன்னமேயே சொல்லி விடுகிறேன்.

    தேவனைப் பற்றி எழுத எனக்குக் காரணம் இருக்கிறது. நான் பிறந்தவுடன் அவர் மறைந்தார் என்ற ஒரு காரணத்தை நகைச்சுவைக்காகச் சொன்னாலும், என் எழுத்துக்கு ஆத்திச்சூடி அவர் படைப்புகளிடமிருந்துதான் பெற்றேன் என்பதை மட்டும் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். ஒரு கதை எப்படி எழுதப்படவேண்டுமென்பதோடு வாசகன் பார்வையில் அது எப்படிப் படவேண்டுமென்பதிலும் தேவன் மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். 1930 களின் ஆரம்பத்திலிருந்து 1957 வரை (ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள்) எழுதிக்கொண்டே இருந்த அந்த கை அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அந்த இடைக்கால மாற்றங்களையும் தனக்குத் தோதாக எடுத்துக் கொண்ட விதமும், அவைகளை தம் எழுத்தில் பிரதிபலித்த விதமும் மிகவும் பாராட்டத் தக்கது என்றே சொல்லவேண்டும். இந்த காலகட்டத்தின் ஆரம்பத்தில்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரப்பட்டது. இந்த காலகட்டத்தின் மத்தியில்தான் உலகத்தின் மிகக் கொடிய அழிவுக்குக் காரணமான மோசமான உலகப்போர் நிகழ்த்தப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் இந்தியா சுதந்திரமும் அடைந்து தன் மக்களின் பிரதிநிதிகளினால் தன் சுய ஆட்சியையும் ஆளப்பெறத் தொடங்கியதும்கூட.. இந்த காலகட்டத்தில்தான் அரசியலில் அவ்வளவாக மாசு படியாத சூழ்நிலை இருந்தாலும் சமூகம் மிகவும் மாசுபடிந்து முன்னேறமுடியாத நிலையில் அல்லலுற்று ஏழ்மை நிலையில் நோய்கள் மலிந்து கிடந்து, தேசத்தின் நாலா பகுதிகளும் ஒரு சோம்பலுற்ற நிலையில்தான் இருந்தது என்பதையும் மறக்கக் கூடாதுதான். பாரத மொழிகள் கூட முன்னேறமுடியாத, செழுமை அடைய முடியாத நிலையில் இருந்த காலகட்டம்கூட இதுதான். அதுவும் நம் மனதுக்கினிய தேனினும் இனிய தமிழ் மொழியைக் கட்டிக்காத்து வளர்த்து வந்தவர்கள் ஆதீனங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும், நன்னெஞ்சம் கொண்ட ஒரு சில செல்வந்தர்களே என்பதும் நாம் மறக்கக் கூடாது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யரும், மகாகவி பாரதியும் வீறு கொண்டு எழுந்து தமிழால் நாம் பெருமை பெறுகிறோம் என்று பல்வேறு காரணங்களை எடுத்துச் சொன்னதால் ஏனைய மொழிகளை விட தமிழ் இந்த அகண்ட பாரத தேசத்திலே பெருமையோடு இருந்தது என்று வேண்டுமானால் ஓரளவு சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.. ஏனெனில் படித்த பெருமக்களிடையே ஆங்கில மோகம் தலைவிரித்தாடிய காலம். ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில நாவல்கள், ஆங்கிலக் கவிதைகள், ஆங்கில நாடகங்கள் (ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிந்தவன் மட்டுமே அதிபுத்திசாலி) ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாமே தமிழோடும் மற்ற மொழிகளோடும்  ஒப்பு நோக்குகையில் தரத்தில் எங்கோ உச்சாணிக்கொம்பில் இருந்ததாகப் பட்டதால் படித்தவர்கள், படிக்கவிரும்பும் மாணவர்கள் எல்லோருமே தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதையும் நாம் ஒப்பு நோக்கவேண்டும். தமிழுக்கு என்றல்ல எந்த மொழியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.

    சரி, இந்த சரித்திரம் இப்போது எதற்கு எனக் கேட்டால், தேவன் கதைகளையும் கட்டுரைகளையும் வரிசைக் கிரமமாகப் படித்துக் கொண்டே வந்தால் இத்தனை சரித்திரங்களையும் ஆங்காங்கே நமக்கு அவரின் படைப்புகள் மூலம் விளக்கி வந்திருப்பதைக் காணலாம். ஆரம்பகால படைப்புகளில் அரசியல் நிகழ்வுகள் அதிகம் கலந்திருந்தாலும் போகப் போக சமூக நல்லமைப்பிலே நாட்டம் கொண்டு அந்த சமூகத்துக்குத் தம் எழுத்துகள் மூலம் நல்லவை செய்யவேண்டுமென்கிற தூய எண்ணத்தை அவரது தொடர்கதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும் தெள்ளிய குளத்து நீரில் தெரியும் தரைமண் போல தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கும். இப்படி நிகழ்கால சரித்திர நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கதை மூலமாகவோ கட்டுரை மூலமாகவோ எப்படியாவது பாங்காக நுழைத்துத் தெரிவிப்பது என்பது தேவனுக்கு கை வந்த கலை. ஆங்கில மோகத்தால் ஆங்கிலப் புத்தகங்கள் புதினங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவர்களை, படித்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் பக்கம் தள்ளிக்கொண்டு வந்த பெருமை தேவனுக்கும் தேவனின் எழுத்துக்கும் நிச்சயமாக உண்டு.

    தேவன் ஆனந்த விகடனுக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தது கல்கியால்தான் என்றாலும் ‘மாஸ்டர் ராஜாமணி’ தான் கல்கிக்கு தேவனை அறிமுகப்படுத்திய ’உயர்ந்த’ மனிதன். இந்த மாஸ்டர் ராஜாமணி சின்னப் பையன், வால் பையன், தேவனின் கட்டுரையின் ஒரு பாத்திரம்.. ஆனால் இந்த வால் பையனின் லூட்டியும், திறமையும்தான் கல்கியைக் கட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல், அப்போது ஒரு நாள் எதேச்சையாகவும் சாதாரணமாகவும் ஆனந்தவிகடன் அலுவலகத்தில் ‘இந்த கல்கி என்பவர் எப்படி இருப்பாரோ என்று (வேவு) பார்க்க வந்த தேவனை இசகு பிசகாக ஒரு கேள்வி கேட்க வைத்தது.. ’அது சரி, இந்தக் கட்டுரையை நீதான் எழுதினாயோ’ என கல்கி கேட்க இவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர, கல்கி தனக்கே உரிய பாணியில் சமாதானப்படுத்தி தேவனை விகடனிலேயே உதவி ஆசிரியராக நியமிக்க, அந்த 1930 ஆம் வருடங்கள் ஆனந்த விகடனுக்கே வசந்த காலமாகவும் பொற்காலமாகவும் ஆரம்பித்தன என்றே சொல்லலாம். கல்கியின் உயர்ந்த குணங்களில் ஒன்று எங்கே நல்லது தெரிந்தாலும் மனமாறப் பாராட்டுவதும், தன் சக எழுத்தாளர்களையும் கை தூக்கி விடுவதும். அந்த உயர்ந்த குணம் கொண்ட கல்கியின் வலது கரமாகவே ஆகிப்போனவர்தான் தேவன் (கல்கி ஆனந்தவிகடனில் இருக்கும் வரை).

    தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.

    “ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். (நன்றி: திரு பசுபதி – தேவன் நினைவுகள்-2 (http://s-pasupathy.blogspot.ca/2010/08/2_30.html)

    சரி, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், தேவனின் வாழ்க்கை வரலாற்றுக்கு நான் போகப்போவதில்லை.. ஆனாலும் இதோ நம் தேவன் ஆனந்த விகடனில் எழுத்துப் பணியைத் தொடங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்கிற இராமபிரானைப் போல அந்த ஒரே ஆனந்தவிகடனில் தான் சாகும் வரை இருந்து கொண்டு அவர் படைத்த படைப்புகளின் மூலமே அவரைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?

    (தொடர்வோம்)

    Share
  • மொபைல் டாக் ஷோ – 4

    திவாகர்

    புடவை

    ஹெல்லோ.. இங்கே என் பக்கத்துலே யார் இருக்கான்னு சொல்லு..

    ”யாரு…”

    சும்மா கொஞ்சம் யூகிச்சுதான் பாரேன்.. சரியா சொல்லிட்டியானா நீயே பேசலாம்.. நான் வேணுமின்னா ஒரு ஆப்ஷன் தரேன்.. இவங்க பேரோட முதல் எழுத்து ‘எஸ்’ ல ஆரம்பிக்கும்.. கண்டுபிடி பார்ப்போம்.. .

    “ஜோக்கா?.

    “சேச்சே.. ரொம்ப ஈஸியான பேரு.. இன்னோரு க்ளூ கொடுத்தேன்னா சட்’னு சொல்லிடுவே.. ஹி.. ஹி.. ஹே..

    ”ஏன் இப்படி வழியறீங்க.. நீங்க கல்யாணத்துக்குப் போனீங்களா இல்ல க்விஸ் போட்டி ஏதாவது நடத்தப் போனீங்களா.. உங்க மொபைலை சுத்தி ஒரே சப்தமா கேக்குது.. உங்க போன்’ல உங்க பேச்சே சரியா கேக்க மாட்டேங்குது.. முதல்லே மண்டபத்தை விட்டு கொஞ்சம் சத்தமில்லாத இடமா போய் நின்னுண்டு அங்கேயிருந்து கூப்பிடுங்க..”

    ஹல்லோ.. சரி.. சரி.. அப்படியே.. ஹி..ஹி.. இட்’ஸ் ஓகே.. ஷ்யூர்.. ஷ்யூர்.. ஹி..ஹி.. ஐ வில்..!

    —————————————-

    ஹல்லோ.. இப்போ நல்லா கேக்குதா..

    ஐய்யோ.. ஏன் இப்படி கத்தறீங்க.. மெதுவாப் பேசுங்க.. நல்லாவே  கேக்குது..

    ஒருவேளை கேக்கலையோ’ன்னு கொஞ்சம் சத்தமா பேசிட்டேன்.. இந்த இடத்துல அவ்வளோ யாரும் கிடையாது..

    சரி, சரி,, யாருகிட்டே நான் பேசணுன்னீங்களோ, அவங்ககிட்ட லைனைக் கொடுங்க..

    அது வந்து அங்கேயே யாரோ பார்த்துக் கூப்பிட்டாங்களா.. அங்க போயிட்டா..

    போயிட்டாளா.. யார் அது..

    அதுதான் உன் சினேகிதி சுமா.. அவதான்.. அவளும் இந்த கல்யாண மாப்பிள்ளையும் ஆபீஸ் கொல்லீக்ஸ்.. படு ஸ்டைலா எங்கிட்டே வந்து ஹெல்லோ சொல்லிட்டு ’உன்கிட்டே பேசி ரொம்ப நாளாச்சு’ ன்னு சிரிச்சாளா.. அதுதான் உனக்கு போன் போட்டேன்..

    சுமாவா, இதுக்குதான் இவ்வளவு  ஆர்ப்பாட்டம் பண்றீங்களா.. அவ கிடக்க்கிறா.. வேணுமின்னா அவளே பேசுவா.. அது சரி, கல்யாணத்துக்கு உங்க தங்கை வந்தாளா..

    ஓ.. வந்தாளே.. புருஷனோட வந்திருக்கா..

    “என்ன கலர்..’

    என்ன நீ.. அவ கலர் உனக்குத் தெரியாத மாதிரி கேக்கறே.. என்னை விட…”

    “ஐய்யோ அழகே.. ஏன் குறுக்கே கெக்கேபிக்கேன்னு பேசறீங்க.. என்ன கலர் புடவையைக் கட்டிண்டு  வந்தா’ன்னு கேக்க வந்தேன்..

    “அடடே.. நான் சரியா கவனிக்கவே இல்லே..’

    “ஓ.. இந்த சுமா வந்தாளே.. அவ..”

    “அதுவா.. ஒருமாதிரி வயலெட் கலர்’ல சின்னச் சின்ன பூ டிசைன் போட்டது.. கொஞ்சம் க்ராஸா இருந்தாலும்..”

    ”அதுதான்.. எதை கவனிக்கணுமோ அதை கவனிக்காதீங்க.. போன மாசம் அங்கே இருக்கறச்சே நான் ஒரு அரக்கு கலர்’ல பார்டர் வச்ச பட்டுப்புடவை வாங்கி உங்க தங்கைக்குக் கொடுத்தேன்.. ஞாபகம் இருக்கா.. மெடீரியல் டிஸைன்’லாம் தனியாப் போட்டுக்கொடுத்த புடவை..”

    ”தெரியுமே.. அவ கூட ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு, ’யாரு எடுத்தது.. அண்ணா செலக்‌ஷனா’ன்னு கேட்டா.. நீ மூஞ்சியைத் தூக்கிட்டு நீயே செலக்ட் பண்ணின விஷயத்தைச் சொன்னியே..”

    ”சரி சரி.. உங்களுக்கு வர வர தேவையில்லாத விஷயம் எல்லாம் நல்லா நினைவுல இருக்கு.. அந்தப் புடவையை அவ கட்டியிருக்காளா’ன்னுதான் கேட்டேன்..”

    “ஏன் அப்படி கேக்கறே..”

    “இல்லே.. பெரிசா ஆஹா ஓஹோ’ன்னு அந்தப் புடவையைப் பிடிச்சுப் போய் இனிமே எந்தக் கல்யாணமானாலும் இந்தப் புடவைதான் கட்டிக்கப்போறேன்’னு குதிச்சாளே.. அதுக்காகத்தான் கேட்டேன்.. சும்மா வேஷம் போட்டாளோ’ன்னு”

    ”ச்சே.. பாவம்.. அவ  குழந்தை.. ரொம்பப் பிடிச்சுப் போயி அப்படி குதிச்சிருப்பா.. அவளுக்கு ஒண்ணு பிடிச்சுப் போச்சுன்னா அப்படித்தான் சின்னக் குழந்தையிலேர்ந்து குதிச்சுண்டிருப்பா..”

    ”குதிக்கட்டும் குதிக்கட்டும்.. கீழே விழாம குதிச்சா சரி..”

    “இப்ப என்னாச்சுன்னு இந்த நக்கல் பண்றே?”

    ”ஆஹா.. உங்க தங்கையை இப்ப ஏதாவது குத்தம் சொல்லிட்டேனா.. ஒரேயடியா பரிஞ்சுண்டு வரவேணாமே. புடவை வாங்கிக் கொடுத்தது நானு.. அதான் கேட்டேன்..”

    ”அவ நிச்சயம் நீ வாங்கிக் கொடுத்த புடவையைத்தான் கட்டிண்டு வந்துருப்பா.. நான் அவ புருஷன்கிட்டே ஏதோ பேசிண்டே இருந்தேன்னா.. நான் இந்த விவகாரத்தை மறந்துட்டேன்..”

    ”அதுசரி, கல்யாணத்துல எல்லார்கிட்டேயும் நான் ஏன் வரலே கேட்டாங்களா..”

    ”ஓ.. எல்லாரும் கேட்டாங்களே.. உன்னால் வரமுடியலே’ன்னு சொன்னவுடனே கல்யாணப்பொண்ணு ரொம்ப வருத்தப்பட்டா.. அவ கண்ல தண்ணியே வந்திருச்சு தெரியுமா..”

    அப்படியா?

    யெஸ்.. நிஜமா.. மனசு எனக்கு உருகிப்போச்சுன்னு  வெச்சுக்கோயேன்..

    “ஆஹா.. ஹோமப்புகைப் பக்கத்துல  ரொம்ப நேரம் இருந்தா  எல்லாருக்குமே அவங்க கண்ணுங்க அழறா மாதிரிதான் இருக்கும்.. சரி வுடுங்க..

    “அப்படிங்கறே.. இருக்கலாம்.. மாப்பிள்ளை கூட கண்ணைக்  கசக்கிகிட்டேதான் இருந்தான்.. ஒருவேளை அவனுக்கும் கூட  வருத்தமோ’ன்னு நினைச்சுட்டேன்..ஹி.. ஹி..”

    “ஐய்யோ சமத்தே.. சரி சரி.. உங்க தங்கை அந்தப் பக்கம் இருக்காளா;ன்னு ஒரு நோட்டம் விடுங்களேன்..

    “அட நான் கிட்டதட்ட வெளில  இங்கே வாசல்ல இருக்கேன்.. எப்படிப் பாக்கறது.. உள்ளே  மறுபடியும் போய் பார்த்துட்டு வேணா போன் பண்ணட்டுமா..”

    “இதுக்குன்னு நீங்க ஒண்ணும் மறுபடியும் போகவேணாம்.. எப்படியும் வெளியே வந்துட்டீங்க இல்லே.. வீட்டுக்கு வந்துடுங்க”

    “ஏன் ரொம்ப கோபமாப்  பேசறே.. அட.. நாம பேசிக்கிட்டே இருக்கோமா.. அதோ, தங்கையே  இங்க வந்துண்டுருக்கா பாரு.. அவகிட்டேயே பேசறியா..”

    “ஒண்ணும் வேணாம்.. புடவை விஷயம் மட்டும் சீக்கிரம் சொல்லிட்டு போனை வையுங்க..”

    நீ எப்பவுமே தப்பாதான்  கணக்குப் பண்ணுவே.. என் தங்கைக்கு  நீன்னா உசுரு தெரியுமா… கல்யாணத்துக்கு புடவைன்னு  கட்டினா நீ வாங்கித்தந்த புடவைதான் அவ நிச்சயம் கட்டுவா. ஆனா பாரு..

    ”என்ன ஆனா.. ஊவன்னா.. அந்தப் புடவைதானா அதுன்னு அவ கிட்டக்க வரதுக்குள்ளே நல்லாப் பார்த்து சீக்கிரம் சொல்லுங்களேன்..”

    ”அது.. அது.. வந்து.. என்னவோ தெரியலே.. இன்னிக்குன்னு பார்த்து சல்வார்’ல வந்துருக்கா.. இங்கேயிருந்து ஆபீஸ் போறாளோ என்னவோ.. என்னன்னு விசாரிக்கிறேன்.. இல்லே நீயே பேசறியா..

    ஒண்ணும் வேணாம்.. போனை வையுங்க…

    ஹெல்லோ.. ஹெல்லோ.. ஹெல்லோ..

    படத்திற்கு நன்றி:

    http://us2guntur.com/html/sarees.html

    Share
  • Invitation- Thiruvalluvar Statue Unveiling ceremony & Seminar on Thirukkural – 20 Jan 2013

    Dhivakar

    Good Evening

    Wish you all a very Happy Pongal and prosperous 2013
    Unveiling ceremony program is finalised.
    Invitation card is attached herewith
    All are requested to attend the program with family and friends

    Program:

           20 Jan 13 – Sunday –    Venue: Tamil Kalai Mandram, Seethammadhara NE extension ( Near Abhaya Anjaneyalu               
           Temple / NRI Hospital / Gurudhwara )

                                           9.00 – 10. 30 AM

                         – Unveiling of Thiruvalluvar Statue by His Excellency  Dr K Rosaiah, The Governor of Tamil Nadu
                         –  Conferring the award ” Ulaga Tamil Mozhi Neriyalar” on Dr VG Santhaosam
                         – Address by His Excellency Governor & Guests

                                            1030 – 1.00 PM

                         – Music Program ( Thirukkural Isai Thendral ) by Kalaimamani Thiru TKS Kalaivanan

                         – Seminar on Thirukkural (திருக்குறள்-கருத்தரங்கம்) by Various delegates from TamilNadu 

                                              1.00 – 2.00 PM
                         – Lunch

                                               2.00 – 3.30 PM

                         – Hilarious Patti Mandram By Dr Ulaga Nayaki Palani & Team
                       
                                                3.30 – 4.30 PM

                         – Kavi Arangam by Dr ‘Perumkavi’ KO Va Nedil Sthuraman & Team

                                                4.45 – 5.00 PM 
                         – Tea Break
                                                    5.00 – 6.00 PM 

                         – Address By Scholars

                                                     6.00 – 7. 00 PM

                         – Dance Program

                                                      7.00 – 8.00 PM

                         – Dinner


    Elaborate arrangements are being made

    Large no of scholars / delegates  are visiting our Mandram and giving program

    Please spare your whole day ( 20 Jan 2013) and enjoy the Kural Mazhai

    Make the event a memorable one

    Regards

    Tamil Kalai Mandram




     

     

    Conference on Thirukural
    in Association with
    VGP Ulaga Tamil Sangam
    Venue : Tamil Kalai Mandram
    Tiruvalluvar Statue Unveiling Cermony
    &
    Cell : 8106774940, 9908028789
    9849594103, 9440356118.

    Page 2
    Unveiling of Statue of Thiruvalluvar
    Time
    : 9.00 am onwards
    Venue
    : Tamil Kalai Mandram, Visakhapatnam.
    Programme
    : Invocation of Tamil Thai Vazthu by
    T.K.S Kalaimamani and TKM Team
    Chaired by
    : “Kalaimamani” Dr.V.G.Santhosam
    Founder & President VGP Ulaga Tamil Sangam
    Presided by
    : Rev. Dr. V.G. Selvaraj
    General Secretary – Ulaga Tamil Sangam
    Mr. M. Sivaraman
    President Tamil Kalai Mandram, Vizag.
    Welcome address by : M.Ravikumar,
    Vice President.
    Tamil Kalai Mandram, Vizag.
    Unveiling of Statue : His Excellency Thiru. Dr. K.Rosaiah
    Governor of Tamil Nadu
    Presentation of award: His Excellency Thiru. Dr.K.Rosaiah
    Governor of Tamil Nadu
    Will confer the award “ Ulaga Tamil Mozhi Neriyallar”
    on Dr. V. G. Santhosam
    On behalf of Tamil Kalai Mandram, Vizag.
    Felicitation :
    Sri.Dharmana Prasad Rao,
    Hon’ble Minister for R&B, A.P.
    Smt.K.Kruparani,
    Hon’ble Union Minister of State for
    Information and Technology, Govt.
    of India
    Sri.Ganta Srinivasa Rao,
    Hon’ble Minster for Infrastructure &
    Port, A.P.
    Sri.Sabbam Hari,
    M.P
    Sri.P.Balraj,
    Hon’ble Minister for Tribal
    Welfare,A.P.
    Sri.D.Srinivas,
    M.L.A, Govt. Whip, A.P.
    Pro.Y.Lakshmi Prasad,
    Ex-MP
    Sri.M.Kandaswamy,
    Ex-MP, Thiruchengode
    Place :
    Tamil Kalai Mandram,
    Seethammadhara, Visakhapatnam.
    Date & Time: 20.01.2013 (Sunday) 9.00 a.m onwards
    All are Welcome
    Reception Committee Tamil Kalai Mandram, Vizag.

    Page 3
    Thirukural Music Nector (Seminar on Thirukural)
    Timings
    : 10.30 am to 1.00 pm
    Poetry by
    : “Thirukural Isai Thendral”
    “Kalaimamani” Thiru.T.K.S Kalaivanan
    Session-1
    Women’s forum
    In the presence of Dr.Avai Natarajan
    (Former Vice Chancellor, Tamil University, Tanjore)
    Presentation of seminar papers on Thirukural by various women participants
    Chaired by
    : Kalaimamani Dr. V.G. Santhosam
    Presided by
    : Rev. Dr.V.G Selvaraj
    Presence
    : Sri. A. Ponnu Swamy, IRS
    Commissioner Customs & Excise
    Mr. V. Divakar, Tamil Writer
    01.00 – 02.00 pm
    : Lunch Break
    02.00– 03:30 pm
    : Hilarious Pattimandram
    by Dr. Ulaga Nayagi Palani & Team
    03.30– 04:30 pm
    : Kavi Arangam
    by Munaivar. “Perumkavi”
    Ko.Va.Nedil Sethuraman & Team
    4:45- 5:00pm
    : Tea Break
    5.00-6.00
    : Speeches of Participants from other Places.
    6:00 – 7:00pm
    : Dance Programmme
    Vote of Thanks :
    Thiru.J.Anantharaman,
    Secretary, Tamil Kalai Mandram, Visakahapatnam.
    *****
    Guest of Honour :
    Sri. Tynala Vijaykumar,
    M.L.A
    Sri. Dr.Malla Vijay Prasad,
    M.L.A
    Sri. Velugupudi Ramakrishana,
    M.L.A.
    Sri.Avanti Srinivas,
    M.L.A
    Sri.Babu Rao,
    M.L.A
    Sri.P.Ramesh,
    M.L.A
    Dr.V.G.Santhosam
    Sri.V.G.Selvaraj
    Dr.R.Padmanaban
    Sri.Avai Natarajan
    Sri.K. Panneerchelvam
    Stone Trust Enterprices, Chennai.

    Page 4
    Dear
    Greetings to you All,
    It is a well known fact that VGP Ulaga Tamil Sangam is
    involved in the propagation of the ideas of Thiruvalluvar by
    organizing various Conferences, Seminars on Thirukural, Re-
    search conventions , and perpetuating his memory by installing
    his statue across the Globe and is devoted to the cause of Tamil.
    It has been decided to conduct VGP Ulaga Tamil Sangam’s
    12th conference on 20th Jan 2013 , Sunday at Visakhapatnam,
    in collaboration with Tamil Kalai Mandram , Visakhapatnam.
    Eminent personalities from Tamil Nadu and from
    Visakhapatnam are participating in the function, besides Minis-
    ters from the Central & State Government.
    To add glory to the poet of the world “Thiruvalluvar”, His
    Excellency, Governor of Tamil Nadu, Dr. K. Rosiah Garu,
    Honourable Ministers from the Centre, Mrs. Killi.Kruparani and
    other Ministers from Andhra Pradesh are participating in this grand
    function. To enhance the greatness of Valluvar across the world,
    VGP Ulaga Tamil Sangam and Tamil Kalai Mandram,
    Visakhapatnam have joined hands to hold this conference in
    Visakhapatnam and all are invited to this grand function.
    Tamil Kalai Mandram, Visakhapatnam has decided to honour
    the Founder & President of VGP Ulaga Tamil Sangam on this
    occasion, with the title “ Ulaga Tamil Mozhi Neriyallar” and felici-
    tate him for yeoman service rendered by him for the cause of
    Tamil.Besides it has been decided to honour other eminent Tamil
    personalities on this occasion.
    All are invited to attend this grand function.
    Thanking you,
    Organizing Committee,
    Tamil Kalai Mandram,
    Visakhapatnam.
    VGP Ulaga Tamil Sangam,
    Chennai.
    Share
  • அந்திமாலையும், அவளும் அவனும்-3

    திவாகர்

    “அவள் ஆண்டாள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”

    “முதலில் சுத்தமாகத் தெரியாது.. ஏதோ சிறுமி எதற்கோ நிறுத்துகிறாள் என்று நினைத்துதான் குதிரையை விட்டு இறங்கினோம்.. அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர்.. நாங்கள் உருகிப் போய்விட்டோம்.. எதற்கும் கலங்காத நரசிங்க மகாராஜா அந்த நடுச் சாலையில் மண்டியிட்டு அந்த சின்னப்பெண்ணின் கையைப் பிடித்து ’ஏனம்மா அழுகிறாய்’ என்று கேட்டார்.. அதற்கு அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் எங்களை இதோ நாம் இங்கே நிற்கிறோமே அங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு இந்தக் கோயில் உள்ளே வருமாறு வேண்டினாள். என்னையும் கையைப் பிடித்து அழைத்துப் போனாள்..”

    கண்களில் ஏதேனும் கண்ணீர் வந்ததோ என்னவோ, திம்மராசு சடாரென தன் கண்களை மேல்துணியால் ஒற்றிக் கொண்டார்.

    “எனக்கு வயது அப்போது நாற்பது இருக்கும் கிருஷ்ணா.. என் மூத்த பெண் நன்றாக வளர்ந்து சட்டென ஒரு நோய் வந்து இறந்து போன நேரம் அது.. அந்தப் பெண்ணைப் போலவே இவளும் இருந்தாள்.. எனக்குள் என்னை அறியாமலே ஒரு தந்தைப் பாசம். அந்தப் பெண் என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துப் போகும்போதே அந்தப் பாசத்தின் வலி என் நெஞ்சைப் பிசைந்து கொண்டே இருந்ததை எப்படிச் சொல்வேன்..”  திம்மராசு பெருமூச்சு விட்டு மறுபடியும் பேசினார்

    ”கிருஷ்ணா! அவள் ஒரு வார்த்தை எங்களிடம் பேசவில்லை. அவளே அங்கே உள்ள சிலந்தி வலைகளைக் கலைத்தாள், உடைந்த கற்களையும் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினாள். சிறிது நேரம் அப்படிச் செய்தவள் மறுபடியும் என் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக வலம் வந்தாள். பாசி படிந்த நீர்க்குளம் அருகே நின்றாள்.. அருகே கிடந்த காய்ந்த சருகுகளையெல்லாம் ஒதுக்கிக் கொண்டே சென்றவள் கோயில் உள்ளே பெருமாள் கர்ப்பக்கிருகத்தருகே வந்து நின்றாள்.. அவள் மறுபடி எங்களை ஒன்றும் கேட்கவில்லை.. என்னைப் பிடித்துக் கொண்டு வந்த கையை அவளே விடுப்பித்துக் கொண்டாள்.. பெருமாளைக் காணச் செல்கிறாளோ என்று நினைத்தோம்தான். உள்ளே அந்த இருளான கருவறையில் சென்றவள்.. மறுபடி வரவில்லை.. குரல் கொடுத்துப் பார்த்தோம்.. கருவறை உள்ளேயே சென்றோம்.. திக்பிரமையோடு அதுவரை கூடவே வந்த நரசிங்க மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எங்களை அழைத்து வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை.. சாட்சாத் ஆண்டாளே.. அவள்  இந்தக் கோயில் கட்டும் நிமித்தம் எங்களை அழைத்து அவள்தான் ஆணையிட்டுள்ளாள் என்று. விஷயம் புரிந்தவுடனே பார்க்கவேண்டுமே நரசிங்கரின் உற்சாகத்தை. அடுத்த ஒரு மாத காலம் அனைத்து ராஜகீய வேலைகளும் இந்த ஊரில்தான் நடந்தது என்றால் பார்த்துக்கொள் கிருஷ்ணா.. கோயில் கோபுரம் எப்படிக் கட்டப்படவேண்டும், கோயில் சுற்றுப்புறம் எப்படி இருக்கவேண்டும், உள்ளே மண்டபங்கள் எப்படியெல்லாம் மராமத்து செய்யப்படவேண்டும், நந்தவனம், குளம் எப்படியெல்லாம் சீரடைய வைக்கவேண்டும், யார் யார் நிதி ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் இங்கிருந்துதான் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டே வருடம்தான்.. இதோ இந்த கோபுரத்துடன் அழகிய கோயிலும் நந்தனவனமும் இங்கே உருவாகிவிட்டது.” *******(1)

    திம்மராசு சற்று நிதானித்தார்..

    “எங்கள் ஆண்டாள சன்னிதியில் புதுப் பொலிவு பார்த்தோம். கிருஷ்ணா! இப்போது சொல்கிறேன் ஒரு ரகசியத்தை உனக்கு.. நீங்கள் அத்தனைபேரும் தடுத்துப்பார்த்தாலும் நான் ஏன் விஜயநகரத்தை விடுத்து வில்லிபுத்தூர் வந்தேன் தெரியுமா, என் செல்லப் பெண் போல வந்து என் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாளே, அவளை நினைத்து நினைத்து உருகி உருகித்தான் இங்கே வந்து இதோ கோயிலருகேயே குடில் கட்டி வாழ்ந்து வருகிறேன்.. இனி இந்த உடலிலிருந்து என் உயிர் பிரியும் வரை அவளைப் பார்த்துக்கொண்டே இங்கேதான் வாசம் என்ற முடிவோடுதான் தினமும் உயிர் வாழ்கிறேன் கிருஷ்ணா!”

    திம்மராசுவின் குரல் குழைந்து போனதைக் கவனித்தான் கிருஷ்ணதேவன். எத்தனைப் பெரிய விஷயம் இது.. விந்தைகள் எல்லாமே இங்கு சர்வ சாதாரணம் போலும்.. அப்படித்தான் இருக்கவேண்டுமென நினைத்தான்.. இல்லையென்றால் சண்டை நடக்கும்பகுதியில் தரிசனம் கொடுத்தவன் இன்று அந்திமாலையில் நேத்ரதரிசனம் தருவானா.. அதுவும் இவர் பேத்தி மூலமாக.. கிருஷ்ணாவின் மனதில் இனம் புரியாத ஆனந்தம் புகுந்து கொண்டது.

    திம்மராசுவுடன் கோயிலுள்ளே சென்று பெருமாள் தரிசனம் செய்தவன் ஆண்டாள் ச்ன்னிதிக்கு வந்தான். கண்ணார அந்தத் தாயைக் கண்டவன் அப்படியே தரையில் விழுந்து சேவித்தான். ’இத்தனை சிறிய வயதில் எத்தனை பெரிய கிழவி போல ஞானத்தைக் கரைத்துக் குடித்து அதன் சாற்றினை மட்டும் அடியவர்களுக்கு அள்ளித் தந்த சுடர்க்கொடியே.. தாயே உன் மேல் காவியம் ஒன்றை எழுத என்னை ஒரு கருவியாக்கு’ என்று மனதுக்குள் அவளை வேண்டினான். மனது மிகவும் திருப்திப்பட்டது போல உணர்ந்தான்.

    திம்மராசு நகர்ந்தார். போகும்போது மடைப்பள்ளியில் ஆகாரத்துக்கான ஏற்பாடும் செய்யச் சொன்னார். அவருடன் கிருஷ்ணாவும் நகர்ந்தான். இருந்தும் அவன் கண்கள் ஆங்காங்கே அவர் பேத்தியைத் தேடின.. எங்கே போய்விட்டாள்.. இங்கேதான் கோயிலில் இருப்பாள் என்று சூசகமாக திம்மராசு மாமா சொன்னாரே.. இல்லை எங்கும் அவள் காணவில்லை.. மறுபடியும் கோயில் வெளியே வந்து குடிலுக்குள் சென்று இரு பலகைகளைக் கொண்டு வந்து கீழே போட்டார்.

    எங்கே அவள்.. இவள் தாத்தாவுடன் இல்லையோ என்னவோ.. ஒருவேளை தாதியரோடு தனியாக வளர்க்கிறாரோ என்னவோ.. ஆனாலும் தன்னை விட்டுப் பிரியும்போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.. ’என்னைப் பாராதது போலவே தாத்தாவிடம் காட்டிக்கொள்ளேன்’  அது சரி, இவளைப் பாராதது போல காட்டிக் கொள்ளலாம்தான்.. அதற்காக அவளைப் பாராமலே இருந்து விட முடியுமா.. திரும்பப் போவதற்குள் எப்படியாவது அவள் முக தரிசனம் செய்து விட வேண்டும்.. வருவாளா.. அப்படி வரவில்லையென்றால் மாமாவிடம் கேட்டுவிடவேண்டியதுதான்..

    அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே குதிரைக் கொளம்படிச் ச்பதங்களோடு ஒரு சிறிய படை ஒன்று தபதப’வென வரும் சப்தம் கேட்டது.. புரிந்தது கிருஷ்ணதேவனுக்கு.. தன் நண்பர்கள்தான்.. கொஞ்சம் தாமதித்தாலும் வந்துவிடுவோம் என்று மதுரையில் சொன்னார்கள் அல்லவா.. வந்துவிட்டார்கள்.

    அடுத்த அரை நாழிகையில் திம்மராசுவின் குடில் அல்லோல கல்லோலப்பட்டது. வெளியே மெய்க்காவலர்கள் படை காத்திருக்க, தஞ்சை மதுரை செஞ்சி நாயகர்கள்தான் உள்ளே வந்தவர்கள்.  அவர்கள் திம்மராசுவிடம் கிருஷ்ணை நதிக்கரையோரம் கங்கர்களோடு நடந்த சண்டையில் பெற்ற வெற்றியும் அந்த அதிகாலை வேளையில் மன்னருக்குக் கிடைத்த மகாலக்ஷிமி சமேத மகாவிஷ்ணுவின் தரிசனமும் பற்றியே வெகுவாகப் பேசினார்கள்… சற்றுநேரம் வரைக்கும் வெகு அமைதியாகக் காணப்பட்ட அந்த இடம் அமர்க்களமான குரலில் ஏற்பட்ட சப்தத்தால் பெரும் பரபரப்பு கூடியது போல காணப்பட ஆரம்பித்தது. எல்லோருக்குமே திம்மராசு மீது மரியாதை அதிகம் என்பது கூட அவர்கள் பேச்சின் மூலம் தெரிந்தது. மகாவிஷ்ணுவின் விருப்பமும், அவர் கேட்டுக் கொண்டதனால் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் புகழை தெலுங்கு மொழியில் மன்னர் பாட இருப்பதையும் சற்று எல்லோருமே உணர்ச்சிவசமாகப் பேசினார்கள்தான்.

    “திம்மராசுப் பெரியவர் பிரதானி பதவியில் இல்லையென்றாலும் இன்னமும் எங்களுக்கெல்லாம் தலைமை அமைச்சர்தாம். மன்னாதி மன்னரான கிருஷ்ணதேவராய சமூகம் மிகப் பெரிய காவியம் படைக்கும் தருணத்தில் திம்மராசனார் திருமலைத் திருப்பதியில் இருக்கவேண்டும்.. திருமலை வேங்கடவன் முன்னிலையில் அல்லவா இந்தக் காவியம் அரங்கேறப்போகிறது.. திம்மராசு மாமய்யா அவசியம் வந்து மன்னரை வாழ்த்த வேண்டும், அதற்கு மன்னாதி மன்னரும் வேண்டுகோள் விடுக்கவேண்டும்’”

    இது செஞ்சிக்கோட்டை வையப்ப நாயகர் வேண்டுகோள். அவரது குரல் மிகச் சப்தமாக வந்ததாலும், மற்ற தலைவர்கள் அதை ஆமோதித்து வரவேற்றதாலும் ஏனோ அந்த சூழ்நிலை கிருஷ்ணதேவன் மனதுக்குப் பிடிக்காமல் போனது. அவன் மனம் தனிமையில் திம்மராசு மாமாவிடம் அதிகம் பேசவே விரும்பியது.. தனிமையில் பேசினால் பேத்தி கூட வந்தாலும் வந்து சேர்ந்து கொள்வாள்.. ஆனாலும் இனி இவர்களை விலக்கமுடியாதே..

    “நண்பர்களே!.. உங்கள் அழைப்புதான் என் அழைப்பும்.. ஆனால் திம்மராசு மாமாவை நாம் கட்டாயப்படுத்தக்கூடாது.. அவர் சாதாரணப்பட்டவர் இல்லை.. அவர் வந்தாலும் வரமுடியாவிட்டாலும் அவர் ஆசிகள் எனக்கு எப்போதும் உண்டு என்பதை நான் அறிவேன்”

    பட்டும் படாமல் பேசிய வார்த்தைகளில் உள்ள உண்மையை திம்மராசு உணரத்தான் செய்தார். கிருஷ்ணாவுக்கு

    “உங்கள் அன்புக்கு நன்றி நாயகர்களே!.. ஆனாலும் என் நிலையை விளக்கமாக சற்று முன்னர்தாம் உங்கள் மன்னரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.. என் மனம் முழுவதும் திருமலையில் வேங்கடவன் சன்னிதியில் மன்னர் காவியம் பாடுவதில்தான் இருக்கும்.. ஏனெனில் நான் என் பேத்தியை விட்டு எங்கும் வரமுடியாது..”

    புரியாமல் பார்த்தார்கள் நாயகர்கள். புரிந்தவன் சிரித்தான்.

    “அதுவும் நல்லதுதான் மாமா.. உங்கள் ஆசை எனக்குத் தெரியாதா என்ன.. இருக்கட்டும்.. நான் வந்ததன் காரணமே இந்தக் காவியத்தை எப்படி ஆரம்பிக்கலாம் என்று உங்களைக் கலந்து ஆலோசிக்கத்தான்.. நல்ல காலம் நம் நண்பர்களும் வந்துவிட்டார்கள்.. எல்லோருமே கேட்கட்டுமே.. சொல்லுங்கள்.. காவியத்தை எப்படி ஆரம்பிப்பது..”

    திம்மராசு யோசித்தார்..

    ”ம்ம்.. சரியானதுதான்.. உனக்கு தரிசனம் தந்தவர் தம்மை ஆந்திர விஷ்ணு என்றார் அல்லவா.. தெலுங்கு மொழியில் ஆண்டாள் தன்னை திருமலையில் சேர்ந்ததாகப் பாடவேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் இல்லையா? உனக்கு இந்தக் காவியத்தில் பாட்டுடைத்தலைவன் திருமலை வேங்கடவன்.. நாயகி ஆண்டாள் தாய்தான்.. அவர் எப்படி தரிசனம் தந்தாரோ, என்ன வரம் கேட்டாரோ.. அங்கிருந்து காவியத்தை ஆரம்பித்து எழுது.. முதல் வணக்கத்தையும் திருவேங்கடவனுக்கு சமர்ப்பித்து விடு”

    “ஆஹா.. முதலமைச்சரின் ஆலோசனை என்றும் முதன்மையானதுதான்” மதுரை நாகம நாயக்கர் புகழாரம் சூட்ட ஆரம்பித்தார்.. கிருஷ்ணதேவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.. அவனுக்கு அந்தி மாலை நேர நேத்ர தரிசனமும் திம்மராசு பேத்தியின் கௌஸ்துப மாலையின் விளக்கமும் நினைவுக்கு வந்தன..

    ”இப்படி ஆரம்பிக்கட்டுமா?”

    ”எப்படி.. சொல் சொல்..”

    ” இலக்குமியின் திருமார்பில் ஒளிரும்
    ஆரத்தின் ஒளி நீயே உன் திருமார்பில்
    ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
    ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
    ஒளிந்திருந்தும் இந்த மணிகளின் வழியே
    தெள்ளத் தெளிவாய் வெளியே
    தெரியும் விந்தையைத் தந்த

    திருவேங்கடவனே உனக்கு முதல்வணக்கம்!” **** (2)

    நாயகர்கள் ஏதும் பேசமுடியாமல் மௌனமாக இருந்தனர். திம்மராசுவோ ஸ்தம்பித்துப் போயிருந்தார். ”என்ன சொன்னாய் கிருஷ்ணா.. ‘ஒருவருக்கொருவர் உள்ளொளியாய உள்ளேயே ஒளிந்திருந்தும் தெள்ளத் தெளிவாய வெளியே தெரிந்த விந்தையா? ஆஹா அற்புதம் கிருஷ்ணா.. உனக்கு திருவேங்கடவனின் பரிபூரண அருள் இருக்கிறது.. ஆஹா எத்தனை அருமை.. எப்படிப்பட்ட சொற்கள்.. எத்தனை வலுவான பொருளோடு அப்படியே நாவில் வந்து வெளியே வெண்முத்துக்களாக விழுகின்றன..”

    திம்மராசு புகழ்ச்சியைக் கேட்டதும் சட்டென மறுத்தான் கிருஷ்ணதேவன்.. “மாமா, மன்னிக்க வேண்டும், உங்களின் இத்தனை புகழ் வார்த்தைகளும் எனக்குச் சேரவே சேராது.. எல்லாம் உங்கள் பேத்திக்கே சொந்தம்” என்று வெளியே குரல் உடைபட சொன்னவன் மனதில் இன்னொன்றும் சொல்லிக்கொண்டான்..”என் இனிய செல்லப்பெண்ணே.. இது நீ கொடுத்த பாட்டு, உன் அருள்.. உனக்குதான் அதன் பெருமை சேரும்’…

    திம்மராசு எங்கேயோ ஒரு உலகில் இருந்ததைப் போல உணர்ந்தார்..’

    “ஆமாம்.. பேத்தி.. பேத்திதான்.. இருந்தாலும் இந்த அழகிய பாடல் உள்ள காவியம் காலம் உள்ளவரை உன்னை வாழ்த்திக் கொண்டே இருக்கும் கிருஷ்ணா!”

    நாயகர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு கிருஷ்ணதேவனை உலகளாவப் புகழ ஆரம்பித்தனர்.. கிருஷ்ணா மனதுக்குள் கவலை ஏராளமாக இருந்தது.. எத்தனை இருந்தாலும் அந்த சிறிய பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த ஞானத்தின் முன் தன் அஞ்ஞானம் எப்படி சமமாகும் என்று எப்படி இவர்களுக்கு எடுத்துரைப்பது.. அடக் கடவுளே.. ஒருமுறை அவள் தன் தாத்தாவைப் பார்க்க இங்கே தக்கணமே வரக்கூடாதா.. இத்தனை தலைவர்கள் முன் அவளுடைய ஞானத்தைக் காண்பித்து அவளை நாம் முன்னிறுத்தியிருக்கலாமே.. தாத்தா அனுமதியுடன் பேத்தியை தலைநகருக்கு அழைத்துச் சென்று கவுரவம் செய்திருக்கலாம்தான்.. ஆனால் எங்கே அவள்.. எப்படி இவரிடம் கேட்பது.. அவளைப் பற்றியும் நாம் அதிகம் பேசக்கூடாது அல்லவா.. அவள் கட்டளை இருக்கிறதே.. இதனால் அவளுக்கு நிதம் கிடைக்கும் விஷ்ணுவின் நேத்ர தரிசனம் தடைப்படுமே.. அப்படியும் அவரிடம் சூசகமாக பேத்தியைப் பற்றி சொன்னாலும் பேச்சை மாற்றிவிட்டாரே மாமா…

    ஏதேதோ பேசினர்.. பின்னர் நாயகர்கள் எழுந்து கொண்டனர். கிருஷ்ணதேவனும் எழுந்துகொண்டான்.. அடுத்தநாள் காலை மதுரையிலிருந்து ராணிகள் சகிதம் தாம் தலைநகரம் பயணப்படவேண்டும்.. சிறிது நேரம் நின்று கொண்டே பேசியவர்கள் விடை பெற்றார்கள். அழகாக தலையசைத்து வாசல் வரை வந்து வழி அனுப்பினார் திம்மராசு.

    குதிரை ஏறப்போனவன் மறுபடியும் தனியாக திம்மராசு மாமாவிடம் வந்தான். “மாமா.. தங்கள் பேத்தியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்..இது என் தனிப்பட்ட வேண்டுதல்”

    சட்டென் கையைப் பிடித்துக்கொண்டார் திம்மராசு..”ஆஹா.. கிருஷ்ணா! என் பேத்தியின் மீது இத்தனை அக்கறையா.. நான் அவளைப் பார்த்துக் கொள்ள, அவள் என்னைப் பார்த்துக் கொள்ள.. எங்களுக்கென்ன கவலை சொல்! இவைகளைப் பற்றி நீ ஏதும் கவலைப்படாமல் உன் காவியத்தை எழுது.. ம்.. சொல்ல மறந்துவிட்டேன்.. நீ எழுதும் காவியத்துக்கு அமுக்த மால்யதா என்று பெயர் வை. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் பற்றிய காவியமல்லவா” சந்தோஷமாகப் பேசி கையை விடுவித்து அனுப்பித்து வைத்தார்.. அவனும் தலையை ஆட்டி அவர் பாதம் வணங்கி விடைபெற்றான். குதிரையிலும் மெல்ல ஏறினான்.. அவன் சைகை கிடைத்ததும் மற்ற குதிரைகளும் மெல்ல நகர்ந்தன

    இருளில் குதிரைகள் சிறிது தூரம் செல்லும் வரைப் பார்த்துக்கொண்டிருந்தவரிடம் கோயில் பரிசாரகர் இரவு உணவு வகைகளை எடுத்துக் கொண்டு வந்தார். ‘அடடே.. கிருஷ்ணா மட்டும் தனியாக வந்தான் என்றே நினைத்துக்கொண்டு உணவு சமைக்கச் சொன்னேன்.. கூட வந்தவர்கள் ஏதும் உண்ணாமல் சென்று விட்டார்கள்.. எனக்கு சிறிது எடுத்து வைத்து விட்டு, மீதம் உன் இல்லத்துக்கு எடுத்துச் செல்..” என்று உள்ளே செல்லத் திரும்பினார்..

    ”ஐயா! அர்த்த ஜாம பூசைக்கு நேரமாகிவிட்டது. நீங்கள் வந்து உங்கள் பேத்தியை தரிசனம் செய்து விட்டால் நல்லது என்கிறார் பட்டர்.”

    ”இதோ வந்துவிட்டேன்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. எங்கள் கிருஷ்ணதேவன் மிகப் பெரிய அறிவாளி, ஞானி கூட.. நான் அவனுக்கு ஆண்டாளை என் செல்லப் பெண்ணாக நினைத்து கோயில் கட்டியதைச் சொன்னேன்.. எனக்கு அப்போது வயது குறைவு.. அதனால் மகளாக நினைத்தேன்.. செல்லப்பெண் என்றும் அவனிடம் சொன்னேன்.. நான் வளர்ந்தாலும் அவள் வளரமாட்டாள் அல்லவா.. இப்போது வயதாகிப்போன இந்தக் கிழவனுக்கு அவள் மகளல்ல, பேத்தி.. இதைச் சரியாகக் கணித்து விட்டான் கிருஷ்ணா. அதனால்தான் தன் புலமையைக் கூட என் பேத்தி சொல்லிக் கொடுத்தது என்று சொல்லி ஆண்டாளுக்கே பெருமையைக் கொடுத்து விட்டான் அவன்.. ஆஹா..!

    பரிசாரகருக்கு ஏதும் புரியாமல் பார்த்தார்.. அதைத் தெரிந்து கொண்ட திம்மராசு.. ’ஓ.. உனக்கு ஒன்றும் புரியவில்லை இல்லையா.. நான் சொன்னதை மறந்துவிடு.. சரி, நான் என் பேத்தியைப் பார்க்க வேண்டும்.. கிருஷ்ணா அருமையாக ஒரு கவிதை சொன்னான். அதை அவளுக்கே அர்ப்பணம் செய்துவிடுகிறேன்.. இப்போதே சொல்லிவிட்டால் அவளும் சந்தோஷப்படுவாள்.. ஆண்டாள் தாயே.. என் அருமைப் பேத்தியே.. இதோ வருகிறேன்.. உனக்கு ஒரு புதுப்பாடல் சொல்லவேண்டுமே.. திருவேங்கடவனுக்கு முதல் வணக்கமாம்.. ஆமாம்.. திருவேங்கடவன் உனக்குப் பிடித்தவன் ஆயிற்றே.. இல்லாவிட்டால் வானில் செல்லும் மேகங்களையெல்லாம் திருமலை நோக்கி திரும்பப் போகச் சொல்லி காதல் தூதுதான் விடுவாயா?..’

    திம்மராசு ஆனந்தமாக பேசிக்கொண்டு கோயிலுக்குள் செல்லும் அதே வேளையில் கிருஷ்ணதேவன் மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்த தன் குதிரையைத் திடீரென நிறுத்தினான். குதிரை பீறிட்டு திமிறிக்கொண்டே அங்கே நின்றது. மாலை இதே இடத்தில் அத்தனை நேரம் அமைதியாக நின்ற இந்தக் குதிரை இப்போது மட்டும் என்ன அப்படி திமிறல்.. அதன் திமிறல் சப்தம் மற்ற நாயகர்களையும் வீரர்களையும் நிப்பாட்டியது..

    அதே இடம்.. அதோ இந்தப் பாறை மேல்தான் அவள் நின்றாள்.. நாளையும் வருவாள்.. அந்தி வானமும் இருக்கும், அவளும் இருப்பாள் அவனைக் காண்பாள். அவன் அழகான செங்கண்ணை சிறுச் சிறிதே திறந்து தரிசனம் கொடுப்பான்..

    சட்டென ஒரு திட்டம் மனதில் வந்தது.. தானும் திம்மராசு மாமாவைப் போல இந்த ராஜ்ஜிய சுகங்களை உதறிவிட்டு இதே வில்லிபுத்தூரில் குடிலில் இருந்துகொண்டு தினமும் அவளுடன் அந்திவானத்தில் அவனைக் கண்டால்தான் என்ன.. ஆஹா.. நினைக்கும்போதே என்ன ஒரு இதமான சுகம்.. அப்படிச் செய்தால்தான் என்ன.. வேண்டாமே இந்த மன்னர் வேஷமும் நாடுகளும், சண்டைகளும்..

    ”மன்னருக்கு ஏதேனும் கவலை வந்து விட்டதோ.. ஏதேனும் மாமாவிடம் பேச மறந்து விட்டீர்களா.. என்னிடம் சொல்லுங்கள் தேவரே.. நான் சொல்லிவிட்டு வருகிறேன்.. இன்று இரவில் மதுரை எப்படியும் சென்றாகவேண்டும்.. ராணியார் வேறு பிரத்தியேகமாக எங்களுக்குச் சொல்லி அனுப்பி வைத்தார்.. தங்களைத் தவறாது பக்கத்தே இருந்து அழைத்து வருமாறு..”

    நாகம நாயகனின் குரல் காற்றில் சப்தமாக வந்ததும் கிருஷ்ணதேவன் மனதில் இருந்த திட்டமும் மனோதிடமும் மாறியது.. யாருக்கு என்ன கொடுப்பினையே அதுதானே கிடைக்கும்.. திம்மராசுவுக்கு கொடுப்பினை உள்ளது.. நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லைதான்.. அந்திவானம் இருந்த திசை நோக்கினான்.. இருளில் ஏதும் தெரியவில்லை..  கிருஷ்ணா ஒரு பெரிய பெருமூச்சு விட்டவன் தலையசைத்து குதிரையை மதுரை நோக்கி விரட்டினான்..

    (முற்றும்)

    ******1. இது சரித்திர நிகழ்ச்சியாக கருதப்பட்டு  பர்டன் ஸ்டெயின் அவர்களின் ‘விஜயநகரா’ புத்தகத்தில் பக்கம் 78 இல் ஒரு குறிப்பொன்று கொடுக்கப்பட்டுள்ளது.

    ******2. அமுக்தமால்யதா’ வில் ஸ்ரீகிருஷ்ணதேவராயனின் முதல் பாடல் – தெலுங்கு மொழியிலிருந்து, டாக்டர் பிரேமா நந்தகுமாரின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து , தமிழாக்கம் செய்யப்பட்டது.

    Share
  • அந்திவானமும் அவளும் அவனும் – 1

    திவாகர்

    கிருஷ்ணா அந்த அத்துவான பிரதேசத்தில், ராஜபாட்டையில், போக்குவரத்தே இல்லாத சூழ்நிலையில் அதுவும் அந்தி நெருங்கும் நேரத்தில் அவளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. சின்னப்பெண்ணா, இளைய கன்னியா.. யாராயிருந்தால்தான் என்ன.. இந்த வேளையில் தனிமையில் இங்கு அவளுக்கு என்ன வேலை.. ஒருவேளை இடம் தெரியாமல் வந்து விட்டாளோ.. நிற்கும்போதெல்லாம் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கும் தன் குதிரை கூட அவளைப் பார்த்ததும்  அப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்ததையும் கவனிக்கத்தான் செய்தான். இது தன் குதிரைதானா அல்லது இவள் தேவலோகத்துக் கன்னியா? புரியவில்லை..

    “ஆஹா.. இந்த அத்துவான இடத்தில் யாருமே காணப்படாத பாட்டையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. உனக்குத் துணையாக யாரும் வரவில்லையா.. சரி, நீ எந்த ஊர்.. உனக்குத் தெரியுமோ தெரியாதோ.. எனக்கு இங்கு எல்லா ஊர்களும் பழக்கம்தான்.. நீ எந்த ஊர் என்று சொல்லு.. என் குதிரை உன்னை அங்கே விட்டு விட்டுத் திரும்பி வரும்..”

    ”அட! இந்தக் குதிரையில் என்னைப் போகச் சொல்கிறாயே.. இது தனியாகப் போகுமா.. இதற்கு ஊர் வழிகள் தெரியுமா.. இதன் பெரிய செவியில் ‘அந்த ஊருக்குப் போய்க் கொண்டு விட்டு வா’ என்று சொன்னால் அது என்னை அழைத்துக் கொண்டு வேகமாக  ஓடி என்னை விட்டு விட்டு வந்து விடுமா.. அல்லது ஒருவேளை யாரிடமாவது விசாரித்து சரியான வழி கேட்டு விட்டு விட்டு வருமா?”

    சொல்லி விட்டு அவனைப் பார்த்து கண்கள் விரிய அழகாக சிரித்தாள். கொள்ளை அழகுதான்.. யார் பெற்ற பெண்ணோ..

    கலகலவென அந்தப் பெண் சிரித்தது அவனை மிகவும் கவர்ந்தது.. சிரித்ததோடு இல்லாமல் தன்னை யாரென்று தெரியாமல் எகத்தாளத்தையும் சேர்த்துப் பேசுகிறாளே.. சடாரென்று குதிரையின் மேலே இருந்து கீழே குதித்தவனைப் பார்த்து சற்று மிரள்வது போல பாதையோரத்தில் ஒதுங்கினாள்.

    இவள் மிரள்கிறாளா அல்லது மிரள்வது போல நடித்தாளா..புரியாமல் பார்த்தவன் தான் நின்ற இடத்திலிருந்தே பேசினான்.

    “என் குதிரையைப் பற்றி உனக்குத் தெரியாது.. அதனுடன் பழகப் பழகத்தான் உனக்கும் புரியும். அது போகட்டும் நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.. நீ எந்த ஊர்..?

    கேள்வி கேட்டவனை ஆவலுடன் பார்ப்பது போலப் பார்த்தவள் பின்னால் இருந்த தன் பின்னலை முன்னால் இழுத்து கையினால் அதை வருடிக்கொண்டேதான் சொன்னாள் “புதூர்தான்”..

    “ஓ.. இங்கேதானா.. சரி வா.. நானும் அங்குதான் போகிறேன்.. நீ குதிரையில் ஏறிக்கொள்.. நான் நடந்தே வருகிறேன்..”

    “ம்ஹூம்.. நான் வரமாட்டேன்.. நீதான் சொன்னாயே.. நீ பழக்கிய குதிரை என்று.. ஏதாவது ஏடாகூடமாக என்னை வேகமாக வேறு ஏதாவது ஊருக்குக் கூட்டிப்போய்விட்டால்.. என் தாத்தாவுக்கு யார் பதில் சொல்வார்கள்?”

    ”ஓ.. சரி, சரி, வா. நானும் நீயும் நடந்து கொண்டே போவோம்.. உன் தாத்தா யார்.. அவர் என்ன செய்கிறார்..”

    அவள் நகரவில்லை.. “திம்மராசு தாத்தாவை உனக்குத் தெரியாதா.. அய்யய்ய.. என் தாத்தாவைத் தெரியாது என்று ஊருக்குள் யாரிடமும் சொல்லாதே.. உன்னை ஒருவிதமாகப் பார்ப்பார்கள்”.

    சற்று அதிர்ந்துதான் போனான் கிருஷ்ணா.. என்ன திம்மராசு மாமாவின் பேத்தியா இவள்.. அட.. அதுதான் இத்தனை அழகாகப் பேசுகிறாள்.. சரி, இவள் ஏன் இந்த சாயங்கால வேளையில் யாருமில்லா இந்த பிரதேசத்தில் வரவேண்டும்.. ஆண்டவா.. இவள் தைரியசாலிதான்..

    ”ஆஹா.. உன் தாத்தாவைப் பார்க்கத்தானே நானே தலைநகரத்திலிருந்து வருகின்றேன்.. உன் தாத்தா எனக்குக் குருதேவர் போன்றவர்.. எங்கள் குலவிளக்கு..”

    இப்படிச் சொன்னாலும் அந்தப் பெண்ணின் முகத்தில் எவ்வித ஆவலும் இல்லைதான்.. இவன் சொல்வதையே காதில் வாங்காதது போல அந்த ராஜபாட்டையில் ஓரத்தில் உள்ள பாறைமேல் ஏறினாள் அவள். இதையும் கவனித்தான்.. சின்னப்பெண் தானே..இவள் தாத்தா இந்த தேசத்துக்கு செய்த சேவை இவளுக்கென்ன தெரியும்.. திம்மராசு என்ற ஒருவர் இல்லாவிட்டால் இந்த விஜயநகர சாம்ராஜ்யமே எப்போதோ அழிந்திருக்கும் என்பதை இவள் அறிவாளா.. இந்த தென்னகத்தையே ஒருங்கிணைத்து ஆண்ட நரசிங்க ராஜா இறந்த குழப்பத்தில் எல்லா நாடுகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது துணிந்து முன்னின்று தன் தந்தைக்கு பட்டம் கட்டி துளுவ வம்சத்தை சிம்மாசனத்தில் ஏற்றிய மகான் அவர் என்று இவள் அறிவாளா..இந்த விஜயநகர தேசத்துக்கே பிரதம அமைச்சராக எத்தனையோ ஆண்டுகள் இருந்து எத்தனையோ ஆலயங்கள் எழுப்பித் தந்து, எதிரிகளை அழிக்க போர்க்களங்களையெல்லாம் சந்தித்து, தன் தோளோடு தோள் நின்று சாதித்த பெருமைகளை இவள் அறிவாளா.. இப்போதும் கூட அவரைத் தனியாக சந்திப்பதற்கென்று நேரம் ஒதுக்கிச் செல்கிறோம் என்பதில் நண்பர்கள் பலர் ஆவலுடன் தாமும் வருவோம் என்று வேண்டிக்கொண்டாலும் அவர்களை கூட வரவேண்டாம் என்று ஒதுக்கியதில் அவர்கள் கொஞ்சம் கோபத்துடன் மதுரையில் தனக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை இவளுக்குப் புரியும்படி சொல்லமுடியுமா.. ஆனால் இதுவெல்லாம் இவளுக்குத் தேவையில்லைதானே. இனிமையான இளமைக் காலத்தில் இத்தனை அரசியல் விஷயங்கள் எதற்கு.. இவள் இன்பமாகத்தான் பொழுதைக் கழிக்க வேண்டும்..

    “நீ யாருடைய பெண்ணம்மா.. திம்மராசு மாமா ஆட்சிப் பொறுப்புகளிலிருந்தெல்லாம் ஒதுங்கி விஜயநகரத்தை விட்டு விரும்பி வில்லிப்புத்தூரில் வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் குடும்பத்தார் அத்தனைபேரும் தலைநகரில்தானே இருக்கிறார்கள்.. பெரியபெண் நர்மதையின் பெண்ணா.. சிறியவள் கிருஷ்ணையின் பெண்ணா? உன் பெற்றவர்கள் அனைவரும் என்னிடம் பூரண அன்பு கொண்டவர்கள் என்பது உனக்குப் புரியுமோ புரியாதோ.. ஆனால் மாமா இங்கு வந்துவிட்டபின்னர் உன் குடும்பங்களோடு கொஞ்சம் தொடர்பு விட்டுப் போனது வாஸ்தவம்தான்.. சொல்லம்மா.. உன் பெயர் என்ன..”

    அவள் மெல்லச் சிரித்தாள்.. “என் பெயர் எல்லாம் உனக்கெதற்கு.. என் தாத்தாவிடம் கோள் மூட்டப் போகிறாயா?.. அவர் என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டார்.. தங்கநிகர் நெஞ்சம் கொண்டவர், அது தரணிக்கே தெரியும்”

    “அட.. என் செல்லப் பெண்ணே.. உன்னைப் பற்றி நான் ஏன் கோள் சொல்லப்போகிறேன்.. ஆஹா.. உன் தமிழ் அருமை.. எங்கே கற்றாய்..”

    “இங்கேதான்..தமிழ் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு விட்டு தமிழ் கற்க விஜயநகரம் வரை வரவேண்டுமா என்ன?”

    “இல்லை.. தேவையில்லை.. உன் வார்த்தைகள் என்னை மயக்குகிறது.. சரி, பகல் முடியப்போகிறதே.. செல்வோம் வா..”

    “ஊம்ஹும்.. நான் உன்னுடன் வரமாட்டேன்.. நீ போ.. பிறகு வருகிறேன்.. தாத்தா பார்த்தால் உடனே கோபித்துக் கொள்வார்”

    “இல்லை.. நான் சொல்லிக்கொள்கிறேன்.. நான் சொன்னால் உன் பாட்டன் எதையும் கேட்பார்..”

    “அது இன்னும் பயம்.. நீ இல்லாததும் பொல்லாததும் ஏதேனும் சொன்னால்?”

    அவள் பயப்படுவது போல பார்த்தாள்.. இல்லை இவள் பயங்கொண்டவளாகத் தெரியவில்லை.. பாட்டனுக்கு ஏற்ற பேத்திதான்..

    “சரி.. எத்தனைநேரம் இந்த ஆளில்லா சாலையில் இப்படியே ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாய்?”

    அவள் சிரித்தாள் “அட, சரியாகச் சொல்லிவிட்டாயே! ஆமாம்.. ஆகாயத்தைப் பார்க்க நான் எப்போதும் இங்கே வருவேன்.. இந்தப் பாறைதான் நான் எப்போதும் நிற்கும் இடம்.. இங்கிருந்து ஆகாயத்தைப் பார்ப்பது என் வழக்கம்..நீ எப்போதாவது ஆகாயத்தைப் பார்த்திருக்கிறாயா? அங்கே அதிசயம் நிறைய இருக்கும் என்றாவது உனக்குத் தெரியுமா?”

    பாறை மேல் நின்று அந்த ஆகாய நிலா சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுமே சட்டென சற்றுத் திகைத்துதான் போனான் அவன்.. சென்ற மாதத்து துவாதசி நாளன்று காலைதான் ஆகாயத்தில் பார்த்ததும் அங்கே கண்ட காட்சியும் இவளிடத்தில் சொன்னால் நம்புவாளா.. இல்லை இவளுக்கு அதன் உன்னதம் தெரியுமா.. அதைப் பற்றிப் பேசத்தான் பிரத்யேகமாக திம்மராசு மாமாவிடம் செல்கிறோமென்று இவளுக்கு எப்படிச் சொல்வேன்..ஆண்டவா.. ஏன் இந்த திம்மராசு மாமாவின் பேத்தி என்னை இப்படிப் பாடாய் படுத்துகிறாள்.. இவள் யாரெனத் தெரிந்தும் இவளை இப்படியே விட்டு விட முடியுமா.. ஐய்யோ.. முடியாதுதான் சிறு பெண்.. இவள் வழியாகச் சென்றுதான் இவளை அழைத்துச் செல்ல வேண்டும்..

    “சரி.. நீ எத்தனை நேரம் இங்கு இருப்பாயோ நானும் அத்தனை நேரம் இங்கு இருப்பேன்..”

    “பசிக்குமே”

    “உனக்குப் பசிக்காதோ?”

    ”நான் இப்போதுதான் தாத்தா குடிசையில் சட்டியில் கிடந்த அமுதை அப்படியேக் குடித்து விட்டு ஓடி வந்துவிட்டேன்.. பாவம் தாத்தாவுக்குதான் பசிக்கும்..”

    “சுட்டிப் பெண்ணே! தாத்தாவைப் பற்றிய கவலையை விடு.. அவர் பசியை நான் போக்குவேன்.. அத்தோடு என் குதிரைப் பையில் ஏராளமான தின்பண்டம் கூட இருக்கிறது.. மதுரையில் கொடுத்து அனுப்பினார்கள்.. இன்னும் சிறிது நேரம் போனால் என் வீரர்கள் கூட என்னைத் தேடி வரலாம்.. நான் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியாக பிரயாணம் செய்வதில் அவர்களுக்கு வருத்தம்..”

    இத்தனை பேசினோமே.. இவள் இதையெல்லாம் கண்டுகொள்வதாகவே அவள் முகத்தில் பாவனை ஒன்றும் காணோமே என்று சற்று கவலைப்பட்டான் கிருஷ்ணா..  சிறு பெண்.. என்னமாய்ப் பேசுகிறாள்..ஆனாலும் இவளுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது.. சாலையோரத்தில் ஒரு பாறையின் மீதமர்ந்து சாவகாசமாகப் பேசும் இவளிடம் எத்தனை நேரமானாலும் பேசிக்கொண்டே இருக்கலாம் போலும்.. ஆனாலும் அந்தி மாலை நேரம்.. சற்று போனால் இருள் கூட வந்து சேர்ந்துவிடும்..

    ”அது சரி.. ஆகாயத்தைப் பார்த்தாயா.. என்று கேட்டேனே.. உன் காதில் விழவில்லையா? நான் அதற்குதான் இங்கு வந்தேன்.. நீயும் வேண்டுமானாலும் கொஞ்ச நேரம் இங்கு என்னோடு இருந்து இந்த அந்தி மாலை வேளையிலும் இருட்டு வேளையில் நட்சத்திரம் வரும்போதும் ஆகாயத்தைப் பார்..”

    அவளருகே சற்று தள்ளி அந்த அகன்ற பாறையில் அமர்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்த்தான். இதோ இப்படி வெள்ளையாக இருக்கும் ஆகாயம் இன்னும் சற்று நேரத்தில் கருப்பாக மாறிவிடும்.. ஆனால் கருப்பாக இருந்த ஆகாயம் வெள்ளையாக மாறிய அந்த சுபோதய வேளையில் கண்ட காட்சி மட்டும் மறுபடியும் நினைவுக்கு வந்தது.. நினைவுக்கு ஏன் வரவேண்டும் அதுதான் தன் மனதில் ஆழப்பதிந்துவிட்டதே என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

    ”காதில் நன்றாகவே விழுந்தது.. நானும் ஆகாயத்தைத் தனியாகவே பார்த்திருக்கிறேன்..”

    “எப்போது பார்த்தாய்?”

    ”அதிகாலை வேளையில்.. சென்ற மாதம் ஒரு அதிகாலை வேளையில் பார்த்தபோதுதான்..” என்று ஏதோ சொல்லவந்தவன் அவள் முகத்தை சட்டென்ப் பார்த்தான். அவனையே ஆவலுடன் பார்த்தவள் அவளும் தன் பார்வையை விலக்கி மறுபடியும் ஆகாயத்தைப் பார்த்தாள். இவள் தன்னிடம் விளையாடுகிறாளோ.. மாமாவிடம் இதையெல்லாம் தனியாகச் சொல்லி மகிழவேண்டும்.. தன் பேத்தி எத்தனை சுட்டியாக இருக்கிறாள் என்று அவரும் மகிழ்வாள்..

    ”அதிகாலையில் பார்த்தாயா.. அப்போதெல்லாம் பார்ப்பதை விட சாயங்காலம் முடியும்போது வானத்தைப் பார்க்கவேண்டுமே.. அதுவும் இந்தப் பாறையிலிருந்து மேற்கே பார்க்கவேண்டும் என்றுதான் இப்போது வந்தேன்..”

    ”சாயங்கால வானம் என்ன அத்தனை உசத்தி?”

    ”ஓஹோ.. நீ தமிழ் படிக்கவில்லை போலும்..”

    “அதென்ன அப்படி சொல்லிவிட்டாய்.. இரண்டு புலவர்களை மதுரையிலிருந்து வரவழைத்துக் கற்றுக் கொண்டவனாக்கும், இரண்டு வருடங்கள் தொடர்ந்து பயின்றவன் தெரியுமா”

    ”ம்ஹூம்.. எனக்கு நம்பிக்கையில்லை.. அப்படிப் படித்தவனானால் அந்தி நேரத்து வானம் அதுவும் மேற்கே வானம் என்றதும் உனக்கு ஏதும் நினைவு வரவில்லையா?”

    “ம்.. இரு.. இரு.. ஆமாம்.. மேற்கே வானம் செவ்வானமாக மாறப்போவதையும் அந்த செவ்வானத்தை கவுரவர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த யுத்தத்தில் ரத்தமாக சிவந்து போன யுத்தகளத்தை ஒப்பிட்டும் ஒரு புலவர் பாடியிருக்கிறார்.. எனக்கு நன்றாக நினைவு உள்ளது.. பெரும்பாணாற்றுப் படை, சரிதானே”

    “ஓஹோ.. நீயும் யுத்தத்தில் கலந்து கொள்வாயா.. பார்த்தாயா.. சிவந்த யுத்தபூமியை அந்தி நேரத்து செவ்வானத்துக்கு ஒப்பீடாக வைத்தார்களே.. அழகு எங்கே உள்ளதோ அங்கே ஆபத்தும் உள்ளது போலும்..”

    சட்டென அதிர்ந்தான் அவன்.. இவள் சின்னப்பெண்ணா.. தனக்குள் கேட்டுக்கொண்டவன் தன்னையே சமாதானம் செய்துகொள்ளவும் செய்தான்.. தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் எல்லா உவமைகளையும் ஒப்பிட்டுப் பாடித்தொலைத்துவிட்டன.. படித்தவர்கள் அறியத்தானே செய்வர்..இதில் சிறியவர் என்ன பெரியவர் என்ன?

    ”என்ன, என்னை மனதுக்குள் திட்டிக்கொள்கிறாயா.. சரி சரி,, உனக்கு வானத்தைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை போலும்.. போய் என் தாத்தாவைப் பார்.. உருப்படியான காரியம் செய்.. நான் இருந்து எல்லாவற்றையும் பார்த்துதான் வருவேன்..”

    ”செல்லப்பெண்ணே!.. நான் அப்படியெல்லாம் உன்னை விட்டு விட்டுப் போகமாட்டேன்.. நானும் நீயும் சேர்ந்தே செல்வோம்.. சரி, நீ உன் வேலையைப் பார்.. ஏதாவது விசித்திரம் கண்டால் சந்தேகம் கேள்.. நான் பதில் சொல்கிறேன்..”

    ”நீயா!  உனக்கு செவ்வானத்தைப் பற்றியே ஏதும் தெரியவில்லை.. இதில் என் சந்தேகத்தைத் தீர்க்கப்போகிறாயா? எதையும் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும்.. சட்டென எதுவும் தோணாது.. கொஞ்சம் பொறுமை தேவை.. உனக்குத் தெரியுமா.. இந்த வானம் முழுதும் ஒருவன் ஆள்கிறான். அவன் பெயர் தெரியுமா?”

    கிருஷ்ணதேவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. தன்னைப் போலவே சிந்திக்கும் ஒரு பிறவியை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறான். திம்மராசு மாமாவின் பேத்தியிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்தான்..

    ”செல்லப்பெண்ணே! ஆமாம்.. அவன் எனக்கும் பிடித்தவன்.. அவனை விஷ்ணு என்போம்.. நீ எப்படி கூப்பிடுகிறாயோ?

    ”ஆஹா.. உனக்கு உன் மூளை இப்போதுதான் வேலை செய்கிறது.. சரி, விண்ணை ஆள்பவன் விஷ்ணு என்கிறாய் அல்லவா.. இதோ விண்ணைப் பார்க்கிறாயே.. அந்த விஷ்ணுவையும் பார்க்கவேண்டுமே..”

    திம்மராசு பேத்தியின் வார்த்தைகள் அவனை மயக்கின. மறுபடியும் சென்ற மாதத்தில் கடந்து போன கிருஷ்ணை நதி தீரத்துப் போர்க்களமும் துவாதசித் திதியும் அந்த விண்ணை ஆளும் விஷ்ணுவும் கண்முன் வந்தனர்.. எப்படிச் சொல்வேன்.. இவளிடம்..தான் என்ன பேசினாலும் மறுத்துப் பேசும் சாமர்த்தியம் உள்ளவள்.. இவளுக்கு வாய்க்கும் இளைஞன் மிக அரிதான் அறிவு படைத்தவனாக அமையவேண்டும்.. சரி, விடக்கூடாது இவளை, இனி அந்தப் பொறுப்பையும் நாமே ஏற்போமே..

    “என்ன, வாய் மூடி மௌனமாகி விட்டாய்.. விஷ்ணுவைப் பார்க்க முடியவில்லையல்லவா..”

    “எதற்காக அந்தப் பேச்சையே எடுக்கிறாய்.. நீ பார்த்தாயோ?”

    ”அட, இடக்கு முடக்காக இதென்ன கேள்வி..  முன்பே சொன்னேனே.. சரியாகச் செவியில் விழவில்லை போலும்.. ஓஹோ செவிட்டு வீரனோ?”

    இந்த வார்த்தையைப் பிறர் யாரேனும் பேசியிருந்தால் அவர்கள் நிலைமை தலைநகரத்தில் என்னவாகி இருக்கும் என்று கற்பனை செய்து சிரித்தான்..”செல்லப்பெண்ணே!.. சரி, நான் செவிடு இல்லைதான்.. உன் பதிலைச் சரியாகத்தான் சொல்லேன்.. உன்னளவு எனக்கு தமிழில் பரிச்சயமில்லை என்றுவேண்டுமானால் ஒப்புக்கொள்கிறேன் போதுமா?”

    “ஆங்.. அப்படி வா வழிக்கு, விண்ணை ஆள்வதால் மட்டும் அவன் விஷ்ணு அல்ல, அவன் விண்ணில் பரந்து கிடக்கும் அத்தனை பிரதேசங்களிலும் வியாபித்துக் கிடக்கிறான்.. அதனால்தான் அவன் விஷ்ணு.. சரி, அவனைப் பார்க்க வேண்டுமென்றால்  வெகு சுலபமான வழி இருக்கிறது..”

    இப்போது கிருஷ்ணதேவன் ஆலோசனை சுத்தமாக அவனிடத்தே இல்லை..எங்கோ கிருஷ்ணை நதி தீரத்துக்குப் போய்விட்டது. கடும்போர்.. கங்கர்கள் மிகத் தீரமாகத்தான் போரிடுகிறார்கள்.. ஆனால் அவர்கள் வெல்லப்படவேண்டும்.. அன்று ஏகாதசித் திருநாள் வேறு.. ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதமிருப்பவன்.. அன்று அந்த ஸ்ரீகாகுள கிராமத்து கோயிலில் இருந்த பெருமாளை நினைத்துக் கொண்டே அந்தக் கோயிலின் முன்னறையில் வெறுந்தரையில் படுக்கிறான்.. அவன் தளபதிகள் வெளியே என்ன செய்வது என்பது புரியாமல் காத்துக்கிடக்கிறார்கள்.. எதிரிகள் ஓய்ந்து கிடக்கின்றனர், இன்னமும் ஓரிரு நாளில் அவர்களை எளிதாக வென்றிடமுடியும்தான்,  ஏகாதசி தின விரதம் இன்றா நேற்றா.. எத்தனையோ வருடங்களாகத்தான் மன்னர் செய்துவருகின்றார்.. ஆனாலும் யுத்த பூமியிலும் தொடரவேண்டுமா என்பதுதான் அவர்களின் மனக் கவலை.. இவை எதுவும் கவனம் கொள்ளாமல் மனத்தில் இறைவனையே நிறுத்தி ஜபம் செய்து கொண்டே இருந்ததும் விடிகாலையில் யாருமறியாமல் கிருஷ்ணை நதிக்குச் சென்று நதியில் ஸ்நாநம் முடித்து கருமையிலிருந்து வெளுப்புக்கும் வரும் வானத்தை சாதாரணமாகத்தான் பார்த்தான்..

    ஆஹா.. எப்படி வர்ணிப்பது அந்த அதிசயக் காட்சியை…

    படங்களுக்கு நன்றி:

    Raja Ravi Varma (Google) Picture

    www.pbase.com

    Share
  • வைரக்கீரிடம்

     

    திவாகர்

    இளவரசி எழிலினியின் கனவு நினைவாக நிறைவேறும் காலம் கனிந்து வருவதைக் கண்ணாரக் கண்டாள்.

    ஆகா.. மகாராஜா கூடிய விரைவில் மண்டையைப் போட்டுவிடுவாரென்று முதன் முதலாக அவள் நெஞ்சிலே தோன்றியது… இது நடக்காது என்றல்லவா இத்தனை நாள் நினைத்திருந்தோம்.. இது கனவாக இருக்கப் போகிறதா என்று எத்தனையோ முறை குழப்பத்தில் கிடந்தோமே.. இப்போதைக்கு இந்த மகாராணி என்கிற பட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவள் இழந்துகொண்டே இருந்தது கூட வாஸ்தவம்தான். ஆனால் அவள் நம்பிக்கை வீண் போகவில்லை என்றுதான் அவள் உள்மனது சொல்லியது. நன்றாக இளமை உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருந்த மகாராஜா தன் கடை மூச்சு எப்போது விடலாம் என்றுதான் கடந்த இரண்டு நாட்களாக படுத்துக் கிடந்ததாக அவள் மனதுக்குப் பட்டது. முதல்நாளே மருத்துவர்கள் நம்பிக்கையில்லாமல் முகத்தை மிகக் கோரமாக காண்பித்துக் கொண்டிருந்தது எழிலினியை மேலும் மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.  எப்போது அந்தத் தருணமோ.

    எத்தனை அழகான நாடு, மரகதமலைத் தேசம் என்றாலே எத்தனையோ நாடுகள் நினைத்த மாத்திரத்தில் பொறாமை படுமே.. எத்தனை செல்வ வளம், ஆனாலும் எல்லோரும் தோழர்களே என்பதால் இந்த நாடு நடுநிலையாக இருப்பதை அந்த எல்லோருமே விரும்புகிறார்களே, இப்படிப்பட்ட நாட்டுக்கு இன்னமும் பட்டத்து இளவரசியாகத்தான் தான் இருப்பதா.. நினைக்க நினைக்க எழிலினியின் மனம் வெதும்பியது.

    மகாராணியின் கிரீடத்து  வைர ஜொலிப்பு ஒன்றே போதுமே.. பளீரென ஒளி பட்டு பார்ப்பவரையெல்லாம் பரவசமாக்கி, ஆஹா.. எத்தனை அழகானது.. உலகத்திலேயே உயர்ந்த வகை வைரக் கற்களால் பதிக்கப்பட்ட கிரீடத்தின் மேல் பகுதியில் நீலமும், கீழ்பகுதியில் பச்சை மரகதமும் பதித்து நடுவில் மாணிக்கக் கல்லும் சேரும்போது அதன் ஒளி வீச்சு எல்லோரையும் கொள்ளை கொள்ளுமே.. ஆஹா.. ஒருநாள்..ஒருநாளாவது.. அதை அணிந்துகொள்ளும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லையே.. நான் ஆசைப்பட்டது எனக்கு வேண்டாதது இல்லையே.. எனக்குச் சொந்தமானதுதானே.. நியாய தர்மங்கள் படித்த அறிஞர்கள் சொன்னதுதானே.. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் நான் அணிந்துகொண்டே தீரவேண்டியதுதானே.. அந்த நாள் எப்போது வரும்.. அல்லது வரவே வராதா.. இந்தக் கிழவி போட்டுக்கொண்டு வந்தாலே இத்தனை களை தருகிறதே.. தான் அணிந்து வரும்போது ஆகாயத் தேவதை வருவது போல தோற்றம் தராதா என்ன?

    அதைத் தான் தரிக்கும்  வாய்ப்பு இதுவரை நழுவிக்கொண்டே  போய்கொண்டிருக்கிறது.. இந்தக் கிரீடத்தைத்  தன் தலையில் பார்க்கும்போதெல்லாம் இந்த மருமகளுக்குதான் எத்தனை பொறாமை என்று இந்த மகாராணி கேவலமாக தனியே அந்தக் கிழத்தோழிகளிடம் சொல்லிக் கொள்வதும் அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இதற்கெல்லாம் ஒரு வரம்பு வேண்டாமா.. ஆசைப்படுவது யார், தன் சொந்த மருமகள்தானே.. அடுத்த பட்டத்துக்கு உரியவள்தானே.. இவளுக்கு உரிமை இல்லையா என்ன.. கடவுளே.. இதையெல்லாம் இவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது.. ’நீ இதுவரை அனுபவித்தது போதும்…. இனிமேலும் அனுபவிக்க ஆசைப்படுவதும் பாவம்’ என்று எப்படி புரியவைப்பது..

    சென்றமுறை கூட தனிமையில்  இருக்கும்போது தன் கணவனான பட்டத்து இளவரசரிடம் கண்டிப்பாகச் சொல்லி இருந்தாள். ’உங்கள் தந்தையிடம் நீங்களே சொல்லும் விதத்தில் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கும் வயது ஏறிக்கொண்டே இருக்கிறது. அதனால் கிழம் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்.. போதும் அவர் இதுவரை ஆண்டது..’.

    இப்படிச் சொன்னவுடன் கணவன் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே சொன்னது இன்னமும் நினைவில் இருந்தது.. ”நேற்றுதான் இதை என் தம்பிகளிடமே கேட்டேன். இன்னும் எத்தனை நாள்தான் அப்பா இப்படியே இருப்பார்? மகாராசாவின் சிம்மாசனத்தில் அமர எப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்றேன்.. அதற்கு என் பெரிய தம்பி என்ன பதில் சொன்னான் தெரியுமா?”

    எழிலினிக்கு தன் மைத்துனர்களைப் பற்றி நன்றாகவே தெரியும்.. எல்லோருமே சுயநலக்காரர்கள்தான்.. இருந்தாலும் கணவனைக் கேட்டு வைத்தாள். “என்ன சொன்னான்?”

    ‘அண்ணா! கனவு காண்பதை முதலில் விட்டுவிடு.. அப்பா சிம்மாசனத்தை விட்டுக் கொடுப்பாரா?.. அவருக்கு ஆயுசு மகா கெட்டி.. பூரண ஆயுசு ’வேத நூல் பிராயம் நூறு.. மனுசர்தாம் புகுவார் எனினும்’ என்று ஒரு ஆழ்வார் பாடியிருக்கிறார். அதனால் சொல்கிறேன்.. அப்பாவாவது மேலே போவதாவது.. ஹூம்..’

    நடந்ததை வெறுப்போடு சொன்ன தன் கணவனை வருத்தமாகத்தான் பார்த்தாள் எழிலினி. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. தனக்கு வாரிசு உருவாக வாய்ப்பில்லை என்று மருத்துவர்களிடம் அறிந்ததிலிருந்து கொஞ்சம் வாழ்க்கையை வெறுத்து விட்டானென்று அவளுக்குத் தெரியாதா என்ன.. இந்தத் தம்பிகளும் இந்த விஷயம் தெரிந்து அண்ணனுக்குப் பிறகு எப்போதாவது தனக்கும் ஆட்சி கிடைக்கும் என்ற பேராசையோடு இருப்பதும், அதற்கு ஆலாய்ப் பறப்பதும் தெரியும்.. இது எந்த நாட்டிலும் சகஜமாக இருப்பது.. அதனாலென்ன.. மூத்த இளவரசன் அப்பா இருக்கையிலே ஆட்சிப் பொறுப்பேற்பதில் ஒரு தவறும் இல்லையே.. எத்தனை நாள் இப்படியே தனக்கு வாரிசு வராதே என்ற கவலையில் மூழ்கி, மற்றவர்களையும் வெறுப்பேற்றுவது.. இளவரசனுக்கு வேண்டுமானால் ஆட்சிப் பொறுப்பேற்க மனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் மனைவியான தனக்கு அந்தப் பொறுப்பேற்று மகாராணி என்கிற பட்டத்துக்கு ஆளாக பரிபூரண உரிமை உண்டே.. வைரக் கிரீடத்தின் ஒளிபாய்ச்ச மாபெரும் சபை நடுவே தான் நடந்து செல்வது எப்போது.. தன் கணவருக்காவது தன் மனைவியை வைரக்கிரீடம் அணிவித்துப் பார்க்க ஆசை எழ வேண்டாமா? இளவரசனுக்கு தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொறுப்பு வேண்டாமா.. வாரிசு தனக்கு இல்லை என்பதில் அவளுக்கும் ஏகப்பட்ட வருத்தம் இருந்தாலும், தனக்கே உரிமையான கிரீடத்தின் மகிமையை அனுபவிக்காமல் தடுக்கும் உரிமை தன் கணவனுக்குக் கூட இல்லை..

    அப்போதுதான் அந்த செவிக்கினிய  செய்தி வந்தது. மகாராஜா தன்னை ஒருமுறை மிக அவசரமாக பார்க்க விரும்புவதாக தாதிப்பெண் சொல்லியதும் விஷயம் தெளிந்து தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டுதான் எழிலினி கிளம்பினாள். கடைசியாக ஒருமுறை பார்க்க விரும்புகிறார்.. பார்க்கட்டும் பார்க்கட்டும், எத்தனைதான் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள முடியுமா.. கூடாதுதான்.. சோகத்தைத் தன் முகத்தில் வேண்டுமென்றே ஏராளமாகத் தேக்கி வைத்துக் கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தாள்.

    மகாராஜாவின் நிலைமைதான் சரியில்லையே.. ஆனால் இந்த மகாராணி, சந்தர்ப்பம் தெரிந்து செயல்படவேண்டாமோ.. கணவன் சாகக்கிடக்கும்போதும் அங்கே தன் தலையில் வைரக்கிரீடம் ஒளிபாய்ச்ச வேண்டுமென்றே அதை தன் நெற்றியில் இன்னமும் சற்று தூக்கி வைத்தாற்போல தன் கையால் சரி செய்து கொண்டு, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற வகையில் இருக்கிறாளே.. ஆனால் முகத்தை மட்டும் உம்’மென்று வைத்துக் கொண்டு நடிக்க மட்டும் நன்றாகவேத் தெரியும்..

    எழிலினிக்கு எரிச்சல்தான் வந்தது. ’இப்போது, அதுவும் இந்த சோகமான வேளையில் இது தேவைதானா.. சமயசந்தர்ப்பம் என்பது கிடையவே கிடையாதா.. இங்கு என்ன சபையா நடக்கிறது.. நாட்டியம், நாடகக் காட்சிகள், புலவர் மேடை என சந்தோஷக் களையிலா நாம் இருக்கிறோம்.. மகாராஜா பாவம்.. அவர் கடைசிக் காலத்தில் எல்லோரையும் பார்க்க நினைக்கிறாரே என்ற ஒரு இங்கித ஞானம் வேண்டாமோ.. இவளெல்லாம் மகாராணியாம்.. ஆனால் இவளைப் போல நாம் நம்மைக் காட்டிக் கொள்ளக் கூடாது..

    நினைத்த மாத்திரத்தில் தனக்கு வந்த கண்ணீரை முகத்தில் தேக்க வைத்துக் கொண்டே மகாராஜாவின் அருகில் நின்றாள் எழிலினி. தன்னைப் பார்த்ததும் மகாராஜாவின் முகத்தில் கருணை பொங்கி வழியத் துவங்கியதையும் கண்டாள். அது அவர் குரலிலும் தெரிந்தது. மகாராணியிடம் பேசுவது போலப் பேசினாலும் பார்வை தன் மீதே இருந்ததும் புரிந்ததால் சோகத்தை இன்னமும் ஏராளமாகக் காண்பித்தாள். தேவைப்பட்ட நேரத்தில் ஊற்றெடுப்பது போல கண்ணீர் கொஞ்சம் பெருகி அது கீழேயும் சிந்தியது. மன்னர் உருகித்தான் போய்விட்டார்.

    “பார்த்தாயா மகாராணி உன் மருமகளை.. இவளுக்குக் கூட என் மீது எவ்வளவு பாசம்.. இந்தச் சின்னப் பெண்ணின் மனநிலை கூட உனக்குப் புரியவில்லையே..”

    தலைகுனிந்து நின்ற மருமகளை மகாராஜா இன்னமும் அருகே வரச்சொன்னார். “இளவரசி, உன்னிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.. மருத்துவர் இப்போதுதான் சொல்லிவிட்டுப் போனார்..”

    புரிந்துவிட்டது அவளுக்கு. முகத்தில் இன்னமும் சோகம் கூட்டினாள். அதனால் கண்ணீரும் கூடியது. ஆனால் எதுவும் பேசவில்லை. ஆனால் அடுத்துப் பேசிய மகாராஜாவின் பேச்சு  அவள் தலையில் இடியாக இறங்கியது.

    “அழாதே மகளே! காலையில் வைத்தியர் நன்றாகப் பரீட்சித்து விட்டாரம்மா.. நீ எந்தவித கவலையும் படவேண்டாம். என் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லையாம். இன்னும் ஒரு மாத காலத்தில் பழையபடி உற்சாகத்தோடு என்னால் நடமாடமுடியுமாம்.. என் இதயம் எதையும் தாங்கும் மிகப் பலமான இதயமாம்”

    இப்போது எழிலினி முகத்தில்  உண்மையான சோகம் படரத் துவங்கியது. அதைக் கவனியாமல் அரசர் பேசினார்.

    “ஆனால் பார் மகளே.. எனக்கு இனியும் ஆட்சி செய்வதில்  அர்த்தமில்லை என்பதாகத்தான்  படுகிறது.. இந்த மகாராணியிடம் அப்படிச் சொன்னதும் அவளுக்குக் கோபம் வருகிறது. நீயாவது  நல்ல முறையில் எடுத்துச்  சொல்லி என் தலையின் பாரத்தை  இறக்கி வை மகளே!”

    இளவரசியின் உள் உணர்ச்சிகள் சட்டென மாறின. அந்த ஆனந்த உணர்ச்சியால் முகம் முழுவதும் மலரத் துடித்தாலும் தன்னை அடக்கிக் கொண்டாள். மகாராஜாவின் பாரம் இறக்கிவைப்பதை விட, மகாராணியின் தலைக்கனம் குறைய அருமையான வாய்ப்பு. மேலாகக் கவலையுடன் அவரைப் பார்த்துச் சொன்னாள். “மகாராஜா, நல்ல செய்திதானே.. உங்களை மறுபடி பழைய நிலையில் பார்ப்பதே எங்களுக்கு விருப்பம். மகாராணியார் சொன்னதிலும் எந்தத் தவறும் இல்லை..”

    மன்னர் முகத்தில் கோபம்  வெளிப்படையாக வந்தது.. மகாராணியைப்  பார்த்து அந்தக் கோபத்தைக்  காண்பித்தார்.

    “கேட்டாயா ராணி!.. உன்னை விட  உன் மருமகள் எவ்வளவோ மேல்.. உனக்கு அந்த வைரக் கிரீடப் பைத்தியம் இன்னமும் விடவில்லை. மகாராணி என்ற கர்வம் உனக்கு அதிகம்.. ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்.. நான் மகாராஜாவாக இருப்பதால்தான் நீ மகாராணியாக உரிமை பெறுகின்றாய்.. நான் அந்தப் பதவியில் போடும் கடைசி ஆணை இதுதான்.. முதலில் அந்தக் கிரீடத்தைக் கழட்டித் தூரப் போடு, அல்லது இன்றிரவே உன் மருமகளிடம் கொடுத்து விடு.. நான் தீர்மானித்து விட்டேன்.. நாளையே சபையில் இளவரசருக்கு முடிசூடப்படும். இவள்தான் அடுத்த மகாராணி!..

    கோபமாக வந்தாலும் தீர்மானமாக வந்த மன்னரின் பதில் எழிலினிக்கு மிக மிகப் பிடித்திருந்தது.. மகாராஜா சற்று ஆவேசமாகப் பேசி ஆணையிட்டதால் களைத்துப் போய் சற்றே கண்ணை மூடிப் படுத்தார். ஆனாலும் மன்னரின் இந்த முடிவுதான் மகாராணியின் கோப முகத்துக்குக் காரணம் என்பதும் தெரிந்தாலும் சோகத்தை முகத்தில் வைத்துக் கொண்டே வெளியேறினாள். அப்படி வெளியேறும்போது வேண்டுமென்றே ஒரு குறும்புப்பார்வையால் மகாராணியையும் அவள் வைரக்கீரீடத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மன்னர் பார்க்காத வகையில் ஒரு புன்னகையும் வீசி விட்டுதான் சென்றாள். தன் பார்வையும் மகிழ்ச்சியும், மன்னரின் கடைசி ஆணையும் மகாராணியை மேலும் வெறுப்பேற்றும் என்றாலும் அவள் மனம் குதூகலத்தில் ஆழ்ந்து போய் விட்டது.

    அந்த மகிழ்ச்சிக் கொஞ்சமும்  குறையாமல் இளவரசனை ஓடிப்போய் இறுகக் கட்டிக் கொண்டாள். ’கேட்டீர்களா இளவரசே.. இல்லையில்லை, என் இனிய மகராசா.. ஆமாம்.. இனி நீங்கள்தான் மகாராஜா, மரகதமலை மகாராஜா, நான் மகாராணி! ஆகா.. உங்கள் தந்தை பிழைத்தாலும் உங்களைத்தான் நாளைக்கு மகாராஜாவாக ஆக்க முடிவு செய்துவிட்டார்.. எத்தனை நாள் கனவு.. இன்று நிறைவேறிவிட்டது.. இன்றிரவே என் கைக்கு வந்துவிடும்.. அந்த வைரக் கிரீடம் இனி என் தலையில்தான்…” என்று இறுகக் கட்டிக் கொண்டே அவனை விடுவித்தபோதுதான் கவனித்தாள். இளவரசன் தலை தொங்கி அவள் தோளிலேயே விழுந்தது.

    உடனடியாக தருவிக்கப்பட்ட மருத்துவர்  அவனைப் படுக்க வைத்துச் சோதித்தார். “இளவரசருக்கு ஏற்கனவே இதயம் பலவீனமம்மா.. எதையாவது அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னீர்களோ.. இப்படி ஆகிவிட்டதே.. இனி பிழைக்க வைக்க முடியாதம்மா.. என்ன ஒரு சோகம்.. தந்தைக்கு !”

    செய்தி கேட்டதும் அனைவரும் இளவரசனைப் பார்க்க விரைந்தனர். மகாராணியும் தன் வைரக்கிரீடம் எங்கும் ஒளி பாய்ச்ச கண்ணீருடன் ஓடோடி வந்தாள்..

     

    Share
  • மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்)

     

    திவாகர்

    ஹெல்லோ..கொதிக்கற சாம்பார்லேர்ந்து சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானை அப்படியே எடுத்து வாயிலே போட்டு டேஸ்ட் பார்த்தா எப்படி இருக்கும்?

    அடக் கண்றாவியே.. அப்படில்லாம் டேஸ்ட் பண்ணித் தொலைக்காதீங்க.. அப்புறம் டாக்டருக்கு வேஸ்ட் அழுதாகணும்..

    அட, நான் அப்படில்லாம் செய்வேனா.. இல்லே அப்படி செஞ்சா உன்னோட இப்படி அழகா பேசமுடியுமா.. பெப்பப்பே’ ந்னுதான் பேசணும்..

    சரி, என்ன பண்றீங்க..

    அதுதான் சொன்னேனே.. சாம்பார் அடுப்பிலே கொதியா கொதிக்குது.. வெண்டைக்காய் வெந்துபோய் துள்ளி விளையாடுது..

    என்ன.. அடுக்கு மொழி விளையாடுது.. ரொம்ப ஜாலியா இருக்கீங்களோ..

    ஜாலி’ன்னா ஜாலி மாதிரி வெச்சுக்கலாம்.. இல்லன்னா ஜாலி இல்லே’ன்னும் வெச்சுக்கலாம்.. ஜாலி இல்லாத ஜாலி’ன்னும் வெச்சுக்கலாம்..

    என்ன குழப்பறீங்க.. கொழ கொழ வெண்டைக்காய் மாதிரி.. ஆமா கேக்க மறந்துட்டேன்..

    எதை வேணும்னாலும் கேளு.. மறக்காம கேளு..

    அது சரி, வெண்டைக்காயை அப்படியே போட்டிங்களா.. இல்லே.. எண்ணெய்’ல வதக்கிப் போட்டிங்களா.. வதக்கலேன்னா கொழ கொழ’ன்னு இருக்கும்..

    அடி சக்கைன்னானாம்,, இத உனக்கு சொல்லிக் கொடுத்ததே நானாக்கும்.. கல்யாணம் ஆன புதுசுல நீ ஒரு வெண்டைக்காய் வெத்த குழம்பு வெச்சயே.. பச்சையா அப்படிப் போடாதே’ன்னு அந்தக் கொழ கொழ வெண்டைக்காயைக் கையில் பிடிச்சுண்டே, குழந்தைக்குச் சொல்றா மாதிரி செல்லமா சொன்னேனே.. உனக்கு ஞாபகம் வரலே..

    அப்படில்லாம் நான் செஞ்சதா ஞாபகம் இல்லே.. நான் எப்பவுமே பெர்ஃபெக்ட்டாதான்  பண்ணுவேன்.. நீங்க ஏதோ புதுசா கதை விடறீங்க.. விட்டால் எல்லா சமையலையும் நீங்களேதான் இதுவரை பண்ணினேன்’னு சொன்னாலும் சொல்லுவீங்க.. ஏதோ.. சமையல் உங்களுக்கு பழக்கம் இல்லையே’ன்னு இப்போ வதக்கச் சொல்லி ஞாபகமூட்டினேன்..

    செந்தமிழும் நாப்பழக்கம்.. சமையலும் அப்படித்தான்.. இப்பல்லாம் நான் ரொம்ப டேஸ்ட்’டாவே பண்றேனாம்..

    யார் சொன்னது அப்படி..

    கோப்ப்படாதே.. நம்ம பில்டிங் வாட்ச்மேன் கோவிந்துதான் சொல்றான்.. நேத்து ராத்திரி என்கிட்ட தக்காளி பருப்பு வாங்கிண்டு போகறச்சே.. என் சமையலைப் பத்தியும் ருசியைப் பத்தியும் அவன் பேசறதெல்லாம் ஆஹா.. ஓஹோதான் போயேன்..

    ஓஹோ.. அவனுக்கு ஓஸி  பழகிடுச்சு.. ஏன் சொல்லமாட்டான்.. அதுக்காக நீங்க ஊர்ல இருக்கற எல்லாருக்கும் சேர்த்து சமையல்’லாம் பண்ணவேண்டாம்.. இருக்கற விலைவாசில இலவச சேவை தேவையில்லே..

    அது அப்படியில்லே..

    எது எப்படி இல்லே.. உங்களை யாராவது ரெண்டு வார்த்தை இல்லாததை இருக்கறாப் போலப் புகழ்ந்து சொன்னா போதும்.. உங்களுக்கு கிக்’ ஏறி கை கர்ணன் கையா மாறிடும்.. அதான் சொன்னேன்..

    சரி சரி.. இப்போ நான் உனக்கு எதுக்கு போன் பண்ணினேன்னா..

    சொல்லுங்க..

    ஏன் அலுத்துக்கறே.. என்னைப்  பார்.. கஷ்டமான வேளைல கூட  ஜாலியா பேசலே?.. இடுக்கண் வருங்கால் நகுக..

    அப்பறம் நகுக்கலாம்.. என்ன’ன்னு சீக்கிரம் சொல்லுங்க

    அவசரப்படாதே.. சரி, நீயே சொல்லு, நீ சீரியஸா ஒரு வேலையை பார்த்துப் பார்த்து செய்யறபோது நடுவுல ஒருத்தர் குறுக்கிட்டு கெக்கபிக்கே’ன்னு ஏதாவது செஞ்சா என்ன பண்ணுவே..

    ஐய்யோ.. எதுக்கு இத மாதிரி எரிச்சலூட்டறீங்க.. எது கையில கிடைக்குதோ அதால ரெண்டு போடுவேன்.. ஐ மீன்.. அப்படி நடுவுல வர்ரவரை..

    நீ அப்படி பண்ணுவே.. ஆனா நான் கையில தேன் பாட்டில் கொடுத்து அனுப்புவேன்..

    ஐயோ வெண்டக்காய் மாதிரி கொழப்பாம சொல்லக் கத்துக்குங்களேன்.. ஒண்ணுமே புரியலே..

    சரி சரி.. நான் இப்போ வெண்டைக்காய் சாம்பார் நல்லா கொதிக்கறச்சே கறண்டியாலே கலக்கிண்டே இருந்தேன்னா..

    நல்ல கொதிக்கறச்சே அது பாட்டுக்கு கொதிக்கட்டுமே.. எதுக்கு சும்மா சும்மா கலக்கணும்?

    இல்லே.. அப்பதான் உப்பு  போட்டேன். அதனால கலக்கினேன்..

    சரி

    நடுவுலே திடீர்னு உங்கப்பா வந்தார்..

    ஆமா.. நான்தான் அவரை அங்கே அனுப்பிச்சு கொஞ்சம்  ஹெல்ப் ஏதாவது வேணும்னா பண்ணச் சொன்னேன்..

    வந்தவர் சும்மா ஹால்’லேயே உட்காரக்கூடாதா.. நேரே இங்கேயே வந்துட்டு, ’என்ன மாப்பிளே அடுப்புலே.. ரசமா’ன்னு சிரிச்சுண்டே கேட்டார்..

    சாம்பாரை தண்ணி  மாதிரி பண்ணியிருக்கீங்க போல.. நினைச்சுப் பார்த்தா எனக்கே சிரிப்பு வருது.. ஒண்ணு பண்ணுங்க.. உங்க சாம்பார் அடிப்பகுதியை சாம்பாரா ஊத்திக்குங்க.. மேல் பகுதியை ரசமா வெச்சுக்குங்க.. இந்த ஐடியா நல்லா இருக்குல்ல.. ஆனா என்ன.. ரசத்துல வெண்டைக்காய் வாசனை வரும்..

    சிரிக்கறியா.. இனிமேதான்  விஷயமே இருக்கு.. அவர்ட்ட  ‘இல்லே மாமா.. இது வெண்டைக்காய் சாம்பார்’ன்னேன்.. அவரு உடனே என் கையிலே இருந்த கரண்டியைப் பிடுங்கி வாங்கிண்டு ‘மாப்ப்ளே.. வெண்டைக்காய் சாம்பார் பண்றதுல ஒரு டெக்னிக் இருக்கு.. ரெண்டு கொதி வரச்சேயே உப்பைப் போடணும், அப்பதான் உப்பு காயுலயும் ஊறும்.. ஆமா உப்பு போட்டீங்களா.. இல்லையா’ ந்னு கேட்டுட்டு, நான் பதில் சொல்லறதுக்குள்ளேயே சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானே கரண்டியோட் எடுத்து அப்படியே சடக்கென வாயுல போட்டுட்டார்..

    யார் வாய்’லே?

    அவர் வாய்’லதான்.. என்ன மாமா’ன்னு கேட்டா ஙே ஙே.. பேப்பே.. ஏதேதோ சொல்றார்..

    ஐய்ய்யோ.. இதத்தான் முதல்லயே போன் பண்ணிக் கேட்டீங்களா.. எங்கப்பா இப்ப எங்கே.. அடக் கடவுளே..

    உடனே கையுல தேன் கொடுத்து நாக்குல தடவிக்குங்க..ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டேனே.. நீ இப்போ அவர்கிட்டே ஏதும்  போன் போட்டு பேசாதே.. உனக்கும் பதில் பெப்பே’தான் வரும், ஹலோ.. ஹலோ.. ஹல்லோ…

     

    Share