Tag: பாஸ்கர்

  • இனிய பாலா

    இனிய பாலா

    பாஸ்கர்

    இப்போது தான் பாலாவைப் பார்த்துவிட்டு வந்தது போல இருக்கிறது. அன்பால் அவர் நட்பின் கைகளைப் பற்றும் விதம் தனி வகை. இணைப்புப் பாலம் போல விரல்கள் ரீதியாக அவர் கைகளைப் பற்றுவார். அது நெகிழ்ச்சியின் உச்சம். பற்றும் கைகளுக்குத் தான் தெரியும்.

    காவேரி மருத்துவமனையில் அவரைப் பார்த்தபோது மெலிதான குரலில் பாஸ்கரா என்றார். ஆமாம் சார் எனச் சொல்லி அவர் கைகளைப் பிடித்து கொண்டேன். நிறைய எழுதியாச்சு. ஆனாலும் இன்னும் பாக்கி உண்டு என்றார். போதுமே என்றேன். அவர் கேட்கவில்லை. எழுதாமல் இருப்பதும் ஒரு கட்டத்தில் சந்தோஷம் தானே எனச் சொல்ல நினைத்தேன். அதற்குள் மருந்து கொடுக்கச் சிப்பந்தி வர, பேச்சு தடைப்பட்டது. அவரைப் போல யாரும் ஆழ்ந்து பார்க்க முடியாது. நின்றபடி வணங்கினேன், கிட்டத்தட்ட அவரை என் கண்ணுக்குள் போட்டபடி.

    இதோ இன்றோடு அவர் அமரராகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? அவர் குரல், அந்த தீர்க்கமான கண்கள் எங்கே? நிலையாமை ஓர் ஆனந்த வலி. அதை விடவும் முடியாது. பிடிக்கவும் முடியாது. உண்டு, கண்டு, பிணைந்து, புனைந்து எல்லாக் குரூரமும் தாண்டி ஒட்டிக்கொண்டுள்ள மிச்ச அன்பை இப்படிக் கொட்டும்போதே வாழ்வின் பிரமிப்பு தட்டுகிறதே, பொய்மையைத் தொலைத்து உள்மன நிஜ தரிசனம் செய்தால் எவ்வளவு பெரிய பேரின்பம்? அந்த இன்பத்தைத் தான் பாலா தொடச் சொன்னார் .

    திடீர் எனக் கைபேசி அழைப்பு வரும் போது அவர் கேட்கும் முதல் கேள்வி, என்ன ஒய் தூங்குறீரா? என்பது தான் இல்லை எனச் சொன்னாலும் உண்மையில் நான் விழித்துகொள்ளவில்லை என்றுதான் பொருள். உம்மை மறக்க முடியுமா ஸ்வாமி?

    ஏதோ பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் கேட்டார். ஒய், எத்தனை வருஷமாய் என்னைத் தெரியும்? – கிட்டத்தட்ட எனக்கு உங்களுடன் சுமார் முப்பத்து அஞ்சு வருடத் தொடர்பு என்றேன். அப்போது கௌரிக்கு சுமார் மூன்று வயது இருக்கும். கெளரியிடம் திரும்பி உங்கள் பழைய வீட்டு போன் நம்பர் தெரியுமா எனக் கேட்டேன். பட்டெனச் சொன்னாள்.

    அடேங்கப்பா என்றார் அவர் பாணியில். அவர் நினைவு வரும்போதெல்லாம் அந்த வார்த்தையைத் தான் நான் மனத்துக்குள் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் .

    Share
  • எனக்குக் கிடைத்த முதல் வேலை

    எனக்குக் கிடைத்த முதல் வேலை

    பாஸ்கர் சேஷாத்ரி

    அது வருஷம் எண்பத்து நாலு. ஏதோ படித்துவிட்டு இலக்கியம், கூட்டம் என்று சுற்றிக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் உள்ள பெரிய மனிதரிடம் என்னைக் கூட்டிச் சென்றார் அந்த அம்மையார்.

    அவர் பெயர் கோபால்சுவாமி. பெரிய வரித்துறை நிபுணர். வாசலில் எப்போதும் அவரைக் காண ஒரு கூட்டம் இருக்கும். எனக்கான ஆறுதல், அவரது பக்கத்து வீட்டில் நான் குடியிருந்தது தான்.

    உன் அப்ளிகேஷன் எங்கே? எனக் கேட்டார்.

    இதோ

    தட்டெழுத்தில் அடித்த ஒரு விண்ணப்பம் அது.

    சொன்ன வேலையைச் செய்வியா?

    செய்வேன் சார்.

    நான் சொன்னேன் எனச் சொல்லு என ஒரு ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அவங்களைப் போய்ப் பார் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    இரண்டு நாளில் பார்த்துவிட்டு, சம்பளம் பேசி (மாசம் இருநூற்று எழுபத்து ஐந்து ரூபாய்), பணியில் சேர்ந்துவிட்டேன்.

    முதல் நாளில் சேர்ந்தவுடன் கணக்காளர்,  “உனக்கு இங்கே சேர் எல்லாம் கிடையாது. தோ, அங்கே போய் உக்கார் என்றார். அவர் மணி அய்யர்.

    ஒரு மணி நேரத்தில் கூப்பிட்டு, கையில் பிளாஸ்க் ஒன்றைக் கொடுத்துவிட்டு, சுப்ரபாத்தில் காப்பி வாங்கிக்கொண்டு வா. இந்தா சைக்கிள் சாவி என்றார்.

    அந்த வயதில் வலிக்காமல் வலித்த வலி. சந்தோஷமாக வாங்கி வந்தேன்.

    டம்ப்ளரில் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு நீயும் எடுத்துக்கோ என்றார்.

    அலுவலகத்தில் குடித்த முதல் காப்பி, நின்றுகொண்டுதான்.

    அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன்.

    பொது மேலாளர் ஒரு நாள் கூப்பிட்டு, நீ விற்பனைப் பிரிவில் சேர்ந்துகொள் எனச் சொன்னார்.

    ஒரு நாளில் அதிகாரி போல ஆனேன். சுமார் ஏழு வருடங்கள் அங்கு உழைத்த உழைப்பு, இன்னொரு நிறுவனத்திற்கு இட்டுச் சென்றது.

    அதற்கு அடித்தளம் அமைத்த அந்தப் பெண்மணி, என் தாயார்.  இன்று அந்த நிறுவனம், காசாளர், மேலதிகாரி யாரும் இல்லை. ஆனால், என் நினைவில் நிறைந்து நிற்கின்றார்கள்.

    Share
  • A Good Move

    A Good Move

    Baskar Seshadri

    Shilpa Prabhakar IAS is appointed as a special officer to handle all the petitions received by MK Stalin when he was electioneering. She is in charge to upload all the complaints and also for the redressal of the grievances within the stipulated hundred days.

    Shilpa has the credit of having achieved many big tasks in various capacities in many parts of south. She took the initiative to admit her daughter in an Anganwadi school at par with others and had set a precedent to popularise the government schools. The government had made a good choice in picking to oversee and solve with the redressal mechanism. Kudos

    Photo Courtesy – DT Next

    Share
  • சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

    சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

    பாஸ்கர்

    நீதிமன்றத்திற்கு ஒருவர் வருகிறார். சுமார் ஐம்பது வயதுக்கு மேல். எளிமையான உருவம். காவி வேஷ்டி. நகர்ப்புறம் சாராதவர். அவர் பொதுநல வழக்கு ஒன்றிற்கு வந்து இருக்கிறார். நீதிபதி அமர்ந்து இருக்க அவர் சார்பாக அவரே வாதாடுகிறார். நீதிபதிக்குத் தமிழ் தெரியாது. வழக்காட வந்தவருக்கு ஆங்கிலம் தெரியாது. பொது நலத்தை மனத்தில் வைத்துக்கொண்டு வழக்குத் தமிழில் அவர் பேச, அதைப் பின்னர் விளக்க வழக்கறிஞர் ஒருவர் குறிப்பெடுத்துக் கொண்டு தயாராக இருக்கிறார். பராசக்தி சிவாஜி போல அவர் பத்து நிமிஷம் பேசினார். அன்றைய வழக்கு முடிந்தது.

    எனக்கு இதை நண்பர் மாதவன் நேற்று டிராபிக் ராமசாமி மறைவு பற்றிப் பேசும்போது சொன்னார்.

    எனக்குத் தோன்றிய மூன்று விஷயங்கள் –

    நேர்மையும் பொதுநலனும் மனத்தில் இருந்தால் வெற்றி நிச்சயம். அப்படி வரவில்லை என்றாலும் அதன் தாக்கம் உள்ளே எப்போதும் இருக்கும். சத்தியத்தை அது என்றும் கைவிடாது.

    ராமசாமிகள் இங்கு வந்துகொண்டு தான் இருப்பார்கள். இந்த நபரும் அவர் போல நேர்மையை ஆயுதமாகக் கொண்டவர். நலத்தொண்டு அவரிடம் எப்போதும் இருக்கும். விலை கொடுத்து அவரை வாங்க முடியாது.

    இதை எல்லாம் தாண்டி இன்றைய சூழலில் மொழி தெரியாத போதும் உண்மை ஒன்றை நம்பி, ஒருவர்க்கு அவர் மொழியில் பேசி வழக்காடும் உரிமையை நீதிமன்றம் கொடுத்து இருப்பது நமக்கெல்லாம் பெரிய பலம். இன்று நீதி தான் நாமக்கு நாதி. இவர் நிச்சயம் ஜெயிப்பார். அப்படி அவர் தோற்றாலும் அவரின் வேகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது.

    அவரிடம் பேசி அவரைப் பற்றிய தகவல்களை ஏன் பெறவில்லை என நண்பரிடம் கேட்டேன்.

    மாதவன் சொன்னார் “அடுத்த பொது நல வழக்கு ஒன்றிற்காக அவர் வேறு ஒரு நீதிமன்றத்திற்கு அவசரமாகச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்”.

    நிச்சயம் அவரை ஒரு நாள் சந்திப்பேன். டிராபிக் ராமசாமிகள் மறைவதில்லை.

    Share
  • Good Bye Kalyanam Sir

    Good Bye Kalyanam Sir

    Seshadri Baskar

    I planned to meet Sri. V. Kalyanam and was in Touch with his daughter few months ago. In the last week of February I had an opportunity to meet him. Since the pandemic had been ruling I decided that I should spend little time with him with a simple exchange of pleasantries.

    I stood in front of him with my folded hands. He could not recognize any one but was able to see with his poor vision.

    Sit down was the one line he said. I sat in the chair in front of his bed. He could not speak and in no time he closed his eyes and slept. It was Shri Kalyanam, personal secretary of Mahathma Gandhi who served him for four years.

    He was literally near Gandhi when he was shot at by Nathuram Godse. Yesterday he passed away at the age of 99 and her daughter told they have an idea to celebrate his hundredth birthday celebrations this coming august in a low key. But that was not to be.

    Kalyanam Sir, my respects to you.

    Share
  • Traffic Ramaswamy

    Traffic Ramaswamy

    Seshadri Baskar

    We miss you Ramaswamy sir.

    You gave a lot of people the courage and helped us to question on the rights and your energy and courage drive us today. I had the opportunity to meet him few times with my friend Madhavan Srinivasan on some issues and had spoken to him on few matters concerned with civic matters.

    His grit and determination at this ripened age and emotive approach against the wrong acts is a moral guide as to how one should approach the civic issues.

    You are a driving force to many here today and I am one among them. I feel like missing my father once again.

    In Tears, Unable to control my emotions.

    Share
  • Its Time for Punch – Go to Paul James

    Its Time for Punch – Go to Paul James

    Baskar Seshadri

    When everyone had a dream to become an engineer or pursue aeronautical, James here in Mylapore decided to take up a different line two years ago and Mylai Boxing academy was born. It was a difficult situation in the beginning for him, when there were no takers for his coach and it was the place that matters most in deciding the growth of any venture. At that time, It was Mr. Rakesh who volunteered to give his place on solaiappan street, Mylapore where the Malathi Montessori school was functioning and it was closed few years ago. He remembers Rakesh every minute for all the support he has been lending all these years for his Venture.

    It’s not just a bed of roses and going to James to get admitted. He is very particular about the studies of the student and only if he convinced that they are bright enough in academics he will admit the students. It was started on April 2 of 2019 and he had completed his two full years now. He teaches in the morning to some select students in Nageswara Rao Park and the aim of the coach Paul James is to groom more people to make them represent India in Boxing. He has nearly sixty students coming in different times and evening sessions does happen at Solaiappan street between six and eight pm. Both boys and girls can join if they fit the bill as James sees them.

    James now 24 is not keen on fees and he has no qualms in admitting even from local slums and other parts of town. James has to credit big trophies which he got from TN Sports University, and he is a gold medallion winner which he had bagged in many events. If anybody has an aspiration one has to be a sound student and the approval of the parents is a must to get admitted over there. So if you come across anyone who has a keen interest in Boxing just do refer to our James. I am sure he will take those to greater heights.

    Meet James in the Mahalakshmi School premises in the evening after six pm. Who knows, maybe your daughter or son can scale a high alt soon in this new coaching of boxing.

    Please note that this is first boxing coaching ring in Mylapore and it’s on Solaiappan street, Mylapore.

    If you are interested to talk to James catch him at 8056269195. He will be too happy to talk to you. This boxing ring is near Chitrakulam and Sankara Mutt which is close by Solaiappan street. It’s time for Punch .

    Share
  • சார் போஸ்ட்

    சார் போஸ்ட்

    பாஸ்கர்

    அம்ருதாஞ்சன் கட்டடம், அந்தக் காலத்து வடிவமைப்பு. எப்போதும் லேசாக அந்தத் தைல வாசம் வரும். அதை நுகராதவர்கள் யாரும் இல்லை. விஷயம் வாசம் அல்ல. அந்த இடம். அது பலரது கனவுகளைத் தாங்கி கொண்டு நிற்கும் வாசல்.

    எழுபதுகளில் மஞ்சள் தெருவிளக்குகள்தான். ஒவ்வொரு நாள் இரவும் சுமார் ஏழரை மணியளைவில் சுமார் அங்கு முப்பது பேர் கூடி நிற்பார்கள். பொதுக்கூட்டம் ஏதும் இல்லை. ஆர் எம் எஸ் தபால் வண்டிக்காக அங்கு நிற்கும் மக்கள் – யுவதிகளும் உண்டு.

    வேலை தேடும் என்னைப் போன்ற ஆட்களும் உண்டு. இதில் பிரசித்தம் என்னவெனில் அந்த வண்டியில் தபால் சேர்த்தால் அடுத்த நாள் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை.

    அங்கேயே தபால் தலை உண்டு. பதிவு தபால் உண்டு. ஒரு குட்டி தபால் அலுவலகம். சுமார் பத்து நிமிடம் தான் நிற்கும்.

    நான், மௌலி மற்றும் நண்பர்கள் சிலர் அங்குச் செல்வது பத்திரிகைகளுக்குத் தபால் அனுப்ப.. வேலை எல்லாம் அப்புறம். என்னைப் போல, மெயிலுக்கும் இந்துவுக்கும் எழுதும் முதியவர் குழு ஒன்றும் உண்டு.

    நான் கத்துக்குட்டி. அவர்கள் விரல் நுனியில் உலகை வைத்து இருப்பார்கள். கிட்டத்தட்ட நாங்கள் அரை நிஜார்.

    அது அஜந்தா தாண்டி லஸ் பக்கம் வரும் அழகே தனி. ரௌண்ட்டானாவில் அது திரும்பும்போது எங்கள் குதூகலம் சொல்லி மாளாது.

    இப்படி தினம் தினம் எதாவது எழுதி அது பிரசுரம் ஆக வேண்டும் என்ற வெறி உச்சத்தை அடைய, அங்குச் செல்வது என்பது ஒரு தவிர்க்க முடியாத பழக்கம் ஆகிவிட்டது.

    பழக்கம் சட்டென உடையாது. ஆனால் வண்டி அங்கு வரும் வசதியை தபால் துறை ஒரு நாள் விலக்கிக்கொண்டது. எல்லோருக்கும் அது பெரும் துக்கம். அந்த விஷயத்தைக் கூட, சிலர் எழுதினார்கள். ஆனால் எதுவும் அரசின் முன் எடுபடவில்லை.

    நேற்று அதே இடத்தில ஒரு தபாலைப் பெட்டியில் போடும் போது ஏற்பட்ட சப்தம் சட்டென என்னை முப்பது வருடங்கள் பின்தள்ளிப் போட்டது. இந்தச் சப்தம், என்னை அந்நாட்களில் வெகுவாய் தாக்கிய ஒன்று. தபாலைப் பெட்டி முழுங்கினால் வரும் ஒரு நிறைவை பின்னாளில் எந்த மின்னஞ்சலும் தரவில்லை.

    Share
  • பாய்

    பாய்

    பாஸ்கர் 

    எண்பதுகளில் மெட்ராஸ் யூனிவெர்சிட்டியில் விசாரணை பகுதியில் ஒரு முஸ்லிம் பாய் இருப்பார். கெட்டிக்கார தாத்தா. எல்லா தகவலும் விரல் நுனியில். பைன்ஆர்ட்ஸ் பற்றி கேள்வியா தோ பதில் தயார். போன செமஸ்டருக்கும் நாலாவதுக்கும் ஏதேனும் கட்டணம் மாறுமா எனக் கேட்டால் சட்டெனச் சொல்வார்..

    பொறுமையின் சிகரம். கோபமே வராது. கல்லூரி கட் அடித்து விட்டு பஸ் பாசில் அவரைப் பார்க்கச் செல்வேன். எனக்கு அரட்டை. மற்றவர்க்குப் படிப்பு. பிரிட்டிஷ்காரன் கட்டடத்தில் நடந்து சென்றால் கொஞ்சம் கர்வம் கொப்பளிக்கும். அவ்வளவே. அது படிப்பால் உண்டாகும் கர்வம் இல்லை.

    அவரைப் பற்றி, நகைச்சுவை ஒன்று சொல்வார்கள்.

    சார் நான் என் கைக்குட்டையை சென்டேனரி ஹால்பக்கம் காவாவில் போட்டுவிட்டேன். கொஞ்சம் ஹெல்ப் பாய்.

    எத்தனை மணிக்கு சார்.

    ரெண்டு மணிக்கு பாய்.

    அப்ப ஒன்னு செய்யுங்க.

    ரெண்டு எட்டுக்கு ஸ்டேட் பேங்க் பக்கம் போய் நின்றால் உம்ம கைக்குட்டை அங்கு கிடைக்கும். அதன் டிராவல் டைம் ஏழு நிமிஷம். அடைப்பு இருப்பதால் ஒரு நிமிஷம் லீட் டைம். நேராகச் சென்றால் சரியாகக் கிடைக்கும். – அதுதான் பாய்.

    பாய் பற்றி இன்னொரு விஷயம். அவர் பணிக் காலத்தின் இறுதி வரை அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்தது இல்லை. ஞானமும் படிப்பும் கல்வியும் புத்தகத்தில் தான் இருக்கிறது என நினைப்பவர்கள் முதலில் அதனைத் தள்ளி வையுங்கள். புத்தகம் விரலைப் பிடித்துக்கொள்ள. நடக்க வேண்டியவர்கள் நாமே.

    Share
  • Mask

    Mask

    Baskar Seshadri

    We know the need of the masks and they are available aplenty allover.

    I spotted this young chap near luz junction close to ICICI ATM Selling this. He is a tenth class student and with no school now he had been asked by his father to sell the same in the signal point. His father sells the same stuff elsewhere.

    If you happen to travel that side please buy the masks for you , your family, friends and to others if you can . It costs Rs Five per piece and its well stitched and good in quality too. They are also reusable but not to be used in the machine but to be washed by hands gently. Support boys like him. A journey of thousand miles starts with a single step.

    Just imagine a boy of this age to sell the stuff in a scorching sun when he has to learn what algorithm is in a school. Not Self-pity or any big worrisome thinking but a care towards a chap who is part of us.

    Share
  • Well Done, ECI

    Well Done, ECI

    Baskar Seshadri

    I exercised my franchise at Vidya Mandir school mylapore and went round to many booths to cover the polling within my limited capacity. I should say that this is the best polling I have seen in these forty long years. It was orderly, perfect, well mannered with the best possible adherence.

    I covered to a maximum of ten booths from santhome to Mandaveli and from Royapettah to Mylapore and I found the same pattern of discipline in all the booths. The police officials. para military forces, and election duty officers were too kind enough in extending their best service today.

    The officials inside the booth were quiet and were impartial and the elderly were given the best respect. Besides their handling of these massive exercise during this pandemic period is extremely laudable. From the distribution of the glove to the assistance of exercising it was no doubt a job well done by the ECI.

    Thankfully it’s not too hot and the turnout was really good. The ECI Top man Mr. Sahu in charge of Tamilnadu says its close to twenty Four percent in five hours indicating an average of five percent per hour roughly. The Electorates are brilliant and they need no education honestly since their presence all over show how concerned and conscious they were to elect their Representative. Kudos to the stakeholders, polling and police officials and the ECI.

    I am proud to be a voter of this soil and I hold this Pride with me. Hail India.

    Share
  • கமலா மாமி

    கமலா மாமி

    பாஸ்கர்

    நினைத்து பாருங்கள். நாற்பது வருடங்களுக்கு முன் சுற்று புற சூழல் பாதிப்பில்லாத மயிலாப்பூர் மற்றும் அதன் மாட வீதிகள். அதுவும் நான் சொல்ல போவது அந்த எட்டாம் நம்பர் வடக்கு மாட வீதி. மூன்றடிக்கும் குறைவான அகலம் கொண்ட அந்த சந்தில் என் சினேக காலம் ஊன்றியது. அது நண்பர் மௌலியின் வீடு. நீளமான சந்து. அந்த பக்கம் போனால் பலா தோப்பு வந்து விடும் போல். அவ்வளவு நீளம். அதில் ஒரு அஞ்சடி மர பெஞ்ச். அதில் தான் அய்யாசாமி என்கிற மௌலியின் தாத்தா அமர்வார். கையில் ஒரு விசிறி. சுமார் ஆறடி உயரம். பார்த்தாலே பயம் வரும் ஒரு உருவம். எங்களை திட்டுவதே அவர் பொழுது போக்கு. ஆனால் மிக அன்பானவர். கட்டை குரலில் அவர் கத்துவது ஊரெல்லாம் எதிரொலிக்கும். ஒரு அலாதியான அன்பு அவருக்கு மௌலியிடம் உண்டு.

    அப்போதெல்லாம் குறைவான போக்குவரத்து. நன்கு நீர் நிரம்பிய கோவில் குளம். அதிரடி வேகத்தில் எப்போதும் காற்று. அதுவும் அந்த சந்தில் முட்டி மோதி உள்ளே செல்கையில் அதன் வேகம் கூடும். வாழ்வில் கோபப்பட வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு விவரம் புரியாத சந்தோஷம். எல்லாம் இலவசம். மிதி வண்டியில் ஊர் சுற்றி வரும் எங்களுக்கு எல்லா தெருக்களும் அத்துப்படி. திரும்ப திரும்ப கொஞ்சம் சினிமா, காரம்போர்ட், அவ்வப்போது கிரிக்கெட். இரவு பொழுது தான் எல்லோர்க்கும் அவஸ்தை. வெளியே செல்ல கட்டுப்பாடு. அதனால் என்ன ? அடுத்த நாள் திட்டம் பின்னிரவே தயார். பசிக்கும்போது தான் எங்களுக்கு வீட்டு நினைப்பு.

    அதுவும் மௌலியின் அம்மா எங்களுக்கு கொடுக்கும் தயிர் சாதம் ஒரு வரப்ரசாதம் – காற்றில் முடி பறக்கும் அந்த மதிய பொழுதில் சுமார் வெய்யிலில் அந்த ஜில்லென உணவு நிஜ தேவாம்ருதம். அந்த ஒரு சுவையை நான் இன்று வரை ருசித்ததில்லை. கமலா மாமியின் கை வண்ணம் அது – எத்தனை அன்பு இதயங்களை கடந்து வந்து இருக்கிறது இந்த வாழ்க்கை. எந்த முனையில் உறவுகள் முளை விடுகிறது என்றே புரிவதில்லை. அது எப்படி வீர்யம் அடைந்து பல்கி பெருகிறது என்றும் தெரிவதில்லை. வாழ்வின் வடிவமைப்பு புரிபடவில்லை. இது இப்படி என எண்ணும்போது வேறு ஏதோ ஒன்று வெளிப்படுகிறது. எதையும் ஒரு கட்டுக்குள் கொண்டு நிர்ணயம் செய்ய முடியவில்லை – இதோ எல்லோரும் அறுபதை தொட்டாகி விட்டது குளம் இருக்கிறது. நீர் இல்லை. மனம் இருக்கிறது. வயசு இல்லை. இன்றும் தயிர் அல்லது மோர் சாதம் நினைப்பு வந்தால் கமலா மாமி தான் நினைவுக்கு வருகிறார்கள்.. உணவின் சுவை கைப்பதத்தில் இல்லை. அது மனசில் இருக்கிறது. வாழ்க்கை தீராநதி.

    Share
  • Issued in the Public Interest on a Social Service – Myrtel Service

    Issued in the Public Interest on a Social Service – Myrtel Service

    Baskar Seshadri

    Myrtle Social Welfare Network is running remedial education centres at 8 SC & ST villages in Attrambakkam, odappai, seethanjeri Panchayat Poondi block, Tiruvallur district, by providing every day evening nutritional supplements such as cooked 150 gms of white and black chenna, white and black karamani, peanuts, double beans etc.

    But due to funding we have restricted to 5 villages now, our needs are Rs. 2000 as a part time tuition teacher salary for each village and 10 kg pulses required every day for 5 centers, pulses each kg Rs.75 approximately, donor can give us cash or kind also. And cook salary is Rs.9000 including delivering in the respective villages.

    Donor can transfer directly to the tution teachers and cook Bank account directly as money transfer. Beyond this if anyone can donate that could be helpful for the children they are most welcome. Donors can also give utensils and unused items like water filters, Good Mats, Mosquito coil among other things.

    Now they urgently need fans in this hot summer as a priority item.

    For any assistance on this i can be reached for guidance needed if any.

    Contact: Baskar Seshadri – 9841033888

    Share
  • Chandrababu

    Chandrababu

    Baskar Seshadri

    Joseph Pichai Chandrababu was born in 1927 and He died on March 8th in 1974 at the prime age of 47. He would have turned 94 this year had he been alive. A No nonsense man and straight forward person could not survive for long here in the industry. His last days were too pathetic and the owner of the house where he lived had cut the electricity (Babu could not pay even the small Electricity bill or the rental) and Babu had no means to eat or manage. At times It was the family of MSV which used to get him the food.

    Many oldies may be aware that it was Chandra babu who lived such a lavish life had even built his car parking in the first floor where he used drive in atop to reach home. All came to a standstill and at a point when Bhantalu went to Book him for Sabash Meena (Double role) he insisted that he be paid one Rupee extra than what Sivaji Ganesan was Paid. When the news went to Ganesan he simply said “He is a performer and pay him what he needs” Such was the generosity and confidence one had in their talent. When everyone left Babu It was Visvanathan who helped him to his best level and as a gratitude Babu told the people around him on death bed that MSV be informed first about his death. In deference to his wishes the cortege carrying Chandrababu stopped a while at the house of MS Viswanathan. Then went on to Rest at Quibble islands Cemetery. Today is the day of His Memorial. His life is a Lesson to everyone. An Actor who has no parallel.

    Share
  • Covid Vaccinations

    Covid Vaccinations

    Baskar Seshadri

    When the services are extremely good in all the UPHC’s in offering the best services on Covid Vaccinations I wonder why there are no more takers.

    I see many people opting for private hospitals for this Jab and some even do not mind to travel bit afar. This mindset is to be attended and it gives a feeling that governmental institution is not to be taken seriously. Though the election mode is on and the Government can release the Advertisement in newspapers through the Medical services department and create more awareness and invite more to go for the vaccination, preferably in government run hospitals.

    In the public interest this can be done in both print and television media for the benefit of the public.

    Share