Tag: கவிஜி

  • தசாவதாரம்

    –கவிஜி.

    கவிஜிசாய்பாபா காலனி, சிவனாந்தா காலனி, சிங்காநல்லூர், உக்கடம், கணபதி, சரவணம் பட்டி, ஒன்டிபுதூர், மலுமிச்சம்பட்டி, கணுவாய், பீளமேடு…இந்த பத்து இடத்திலயும் இருப்பேன், தசாவதாரம் மாதிரி…. நீ தான் புத்திசாலியான போலிஸ் ஆச்சே…. கண்டு பிடிடா பாக்கலாம்… இப்போ சொல்றேன்டா.. இந்த முறையும் நீ என்னை பிடிக்க முடியாது…….. ஏன்னா….. எப்பவும்… நான் உன்ன விட ஒரு படி மேலடா.. என் நண்பனே…….. தில் இருந்தா நீ மட்டும் வா…. வந்து என்னை கண்டு பிடி…ஏன்னா… இந்தப் பத்து இடத்திலயும் விநாயகர் கோயில் இருக்குடா…. சாமி முக்கியம் நண்பரே…. நாளைக்கு காலைல 10 மணிக்கு…..ரெடியா…….. ஜூட்….. சொல்லிட்டு அடிக்கறது தான் என் ஸ்டைல்டா.. போலிஸ் நண்பனே….

    ஜிந்தா….

    கடிதம் படித்த மித்ரனால் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை……. ஜிந்தா, மித்ரனின் வாழ்நாளில்… மறக்கவே கூடாத, முடியாத அவனின் பால்ய நண்பன்.. ஒரே பள்ளிக் கூடம்….அருகருகே வீடு.. படிப்பு, விளையாட்டு, வினை.. எல்லாவற்றிலும் ஆள் மாறி ஆள் என்று நம்பர் ஒன்னுக்கான போட்டி அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருக்கும்…… காலத்தின் வசத்தில் மித்ரன் போலிஸ்.. ஜிந்தா கொள்ளைக்காரன்….போன முறை ஜிந்தா ஜெயித்தான்… இந்த முறை மித்ரன் ஜெயித்தே ஆக வேண்டும்…

    மித்ரனின் மனம் ஆள் அற்ற தண்டவாளமாய் தடதடத்தது….

    “சார்… பத்து இடம்தான….. பத்து இடத்திலயும் இருக்கற விநாயகர் கோயிலுக்கு போலிஸ் ப்ரோடேக்சன் குடுக்கலாம்… மாட்டிக்குவான் சார்….”

    “இல்ல ரத்னம்… போலிஸ் இருக்கறது தெரிஞ்சா அவன் வரவே மாட்டான்… அதுதான் ஸ்பெசிபிக்கா என்னை மட்டும் கூப்டறான்..அவனுக்கு என்னை ஜெயிக்கணும்… சோ நான் தனியா போகற மாதிரி இருந்தா கண்டிப்பா வருவான்….அவன எனக்கு நல்ல தெரியும்… ஜெய்க்கறதுக்காக என்ன வேணாலும் செய்வான்…..”

    ……………………………………………………………………….

    “நானே போகணும் ரத்னம்… போய் அவன புடிச்சு, அடிச்சு ரோட் ரோடா… நாய இழுத்துட்டு வர்ற மாதிரி இழுத்துட்டு வந்தாதான் போலிசா இருக்கற என்னை எதுக்கற அந்த திமிருக்கு தீனி போட்ட மாதிரி இருக்கும்…”என்ற மித்ரனின் கண்கள் சிவந்து கிடந்தன…

    “அப்டினா.. எப்டி சார்… பத்து இடம்… பத்துல, ஒரு இடத்துல இருக்கற விநாயகர் கோயிலுக்குக்கு கண்டிப்பா வருவான்… ஆனா, நீங்க எப்டி அந்த ஒரு இடத்தை கண்டு பிடிக்க முடியும்… நம்ம டீம் மப்டில ஒளிஞ்சிருந்து, அவன் எங்க வந்துருக்கான்னு கண்டு பிடிச்சு உங்களுக்கு சொன்னாலும், நீங்க அப்போ வேற இடத்துல இருந்தீங்கன்னா….அங்க இருந்து இந்த குறிப்பிட்ட இடத்துக்கு வரதுக்குள்ள அவன் போய்டுவான்… சோ ஹௌ சார்…?….எப்படி சாத்தியம்….?…..”

    ரத்னம் பேச பேச மித்திரன் யோசித்துக் கொண்டே கண்களை மூடினான்…

    அடுத்த நாள் காலை 10 மணி….

    சொன்னது போலவே ஒண்டிபுதூர் விநாயகர் கோயிலுக்குள் இருந்து பிடித்து வெளியே இழுத்து வரப்பட்ட ஜிந்தாவை அடித்து துவைத்து இழுத்து வந்தான் மித்ரன்…

    எப்படி எப்படி.. எப்படி….?

    அந்த எப்படி ஜிந்தாவுக்கும் இருந்தது…கேட்டும் விட்டான்…. எப்டிடா கண்டு பிடிச்ச ………………………….?………வாயிலேயே மிதித்தான் மித்திரன்…

    “கெட்ட வார்த்தை பேசின….”………….என்று சொல்லிக் கொண்டே பூட்ஸ் காலால் முகத்தை நசுக்கினான்….

    ஜிந்தாவுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது…

    “சொல்லுடா.. எப்டிடா கண்டு பிடிச்ச….?”என்றான் மிகவும் அதிர்ந்தவனாக….. தான் தோற்று விட்ட வலி கோபமாய் வார்த்தையில் சத்தமாக வெளிப்பட்டது…

    ரத்னம் உள்பட அனைவருக்குமே காவல் நிலையத்தில் அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான்….

    “ஹ ஹஹா….. டேய்… ஜிந்தா…. நீ இங்கிலீஷ்ல எவ்ளோ பெரிய பருப்புன்னு எனக்கு தெரியுண்டா….. ஆனா ஒண்டிபுதூர்க்கு ஸ்பெல்லிங் ஏண்டா தப்பா எழுதின… அவ்ளோ நடுக்கமா… dக்கு பதிலா t…போட்ருக்க….”என்றபடியே நடந்து சென்று மீண்டும் ஒரு மிதி வைத்தான்…. மித்ரன்….

    “போலிஸ்டா… பொறுக்கி இல்ல….”

    Share
  • கடவுளின் அகல விரிந்த கைகள்…..

    –கவிஜி.

     

     

    புத்தனிடம் பேச
    எதுவுமில்லாத யசோதரையிடம்
    பேச நிறைய இருக்கிறது…
    ________________________________________________

    உலகின் முதல் கதையும்
    கடைசி கதையும்
    ‘கடவுள்’ ஆகவே இருக்கிறது…
    ________________________________________________

    கைகளை எவ்வளவு
    அகலமாக விரிக்க
    முடிகிறதோ
    அவ்வளவுதான் வானம்
    குழந்தைக்கு….
    ________________________________________________

    பூவைச் சூடிக்
    கொண்ட தோட்டம் என
    உன் கல்லறை…
    ________________________________________________

    உங்கள் வீட்டுப் பூனைகளிடம்
    கேட்டு விடாத கேள்விகளில்
    எங்கள் வீட்டு அடுப்பு
    கடைசியாய்
    எரிகிறது…
    ________________________________________________

    கவிஜி

    Share
  • மன அரங்கம்….

    கவிஜி

    திரையை விரித்துக் கொண்டு
    உள்ளே சென்று நடித்து விட்டு
    விடிந்ததும் வெளியேறி
    போகிறார்கள் நடிகர்கள்
    என்று நினைத்த காலத்தில்
    சினிமா சிலிர்த்தது…

    ப்ரொஜெக்டரில் தலைகீழாய்
    தெரிந்த காட்சிகளை
    குனிந்து குனிந்து
    பார்க்கையில் சினிமா
    பிரமாண்டம்….

    திரைக்குள் விழுந்த குத்துகளில்
    வெளியே அடி வாங்கியதாக
    உணர்ந்த
    காலத்தில் புரியாத லாஜிக் அழகு…

    ஒற்றைப் பொத்தானில்
    நிறுத்தி விட்டு
    ‘போரா இருக்கு’ என்று
    திரும்பி படுக்கையில்
    பால்ய சினிமாவின் இடையே
    கரண்ட் போனது போல
    அத்தனை பெரிய கூச்சல்…

    தூக்கமின்றி தவிக்கிறது
    மன அரங்கம்….

    கவிஜி

    Share
  • இப்படிக்கு இது கடவுள் மொழி…

    கவிஜி
    சட்டென தலை இழுத்துக்
    கொண்ட பெரு
    மழைக்குள் உன் துளிகள் அமிலம்..

    யாருமற்ற வெளிக்குள்
    வேகம் குறைத்திட்ட நீ
    நிற்க மட்டுமில்லை…

    யாவரும் நலமாகிட துடிக்கும்
    சிறகுக்குள் சதிராடும்
    தென்றலை
    கொல்வது உன் சுபாவம்…

    மூச்சுக்குள் உன் சிரிப்பு
    முண்டியடிப்பதில்
    முரண்பட்டவனாவதைத் தவிர
    வேறு என்ன செய்ய முடியும்…

    அத்தனை சரிகளையும் ஒரு
    தவறாய் கலைத்து விட்ட
    நீ வரைய வரைய
    அழிந்து கொள்ளும் ஓவியம்…

    காதுக்குள் அசரீரியாய் அணத்தும்
    அற்புதக் குவியல்களுள் உன்
    குரலும் கலப்பதில் நான்
    சாத்தானாவதை நெருங்குகிறேன்…

    இப்படிக்கு இது கடவுள் மொழி…

    கவிஜி

    Share
  • எங்கள் ஊர் ராஜகுமாரி!

    -கவிஜி 

    இன்னும்
    அவளாகத்தான்
    இருக்கிறாள்… (more…)

    Share
  • ஜென்

    -கவிஜி

    வா…வந்து
    தேநீர் போடு…
    மதிய மழை வரட்டும்…

    ***

    என்றாவது திறக்கப்படும்
    ஜன்னலில் திறக்காமலே
    கிடக்கின்றன கைகள்…

    ***

    ஜென் தத்துவம் ஒன்றுமில்லை
    ரொட்டித் துண்டு
    பெரிதென்கிறது…

    ***

    எறும்புகளைக்
    கொண்டாடுகிறது
    வரிசை…

    ***

    முதலில் இளையராஜாவின்
    பாடலைச் சொல்…
    பின், காதலை சொல்…

     

    Share
  • விடிஞ்சா கல்யாணம்

    — கவிஜி.

    ஊரே புது வருசத்தை எதிர் நோக்கி என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது, எப்போதும் போல…. ஆனால்… மனமெங்கும் அந்த திகிலின் தவிப்புகளோடு….

    இளசுகள் கோவில் திடலில் அரட்டை அடித்துக் கொண்டும்.. திகில் விஷயத்தைப் பற்றி விவாதிக் கொண்டும் இருக்க.. பெருசுகள்.. மிரண்டு போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்…கிட்டத்தட்ட ஊரின் மத்தியில் பெரிய வீதியில், மக்கள் கூட்டம் காலியாகவே இருக்க… சந்திரன் பெரிய வீதியின் நடுவிலிருக்கும் போர் பைப்பில் தண்ணீர் எடுக்க குடத்தை எடுத்துக் கொண்டு சென்றான்… அங்கே ஏற்கனவே இவன் வருகையைக் கவனித்து நியந்தா நின்று கொண்டிருக்க, இருவர் கண்களும் ரகசியம் பேசிக் கொண்டன…அது தீரா ரகசியம்…. தீர தீர ரகசியத்தின் கதவுகள் அடைத்துக் கொண்டே விரியும்…சங்கேத பாஷைகள்….

    ஆங்காங்கே நின்ற சிலரும் அவர்கள் மேல் கண்களை விடாமல் இல்லை.. ஊருக்கே அரசல் புரசலாக தெரிந்த காதல் கதைதான். ஆனாலும் திரைக்கதையில் சூடு பிடிக்கும் நேரத்தை எப்போதும் காத்திருக்கும் கூட்டத்தில் சிலர், அங்கு தண்ணீர் பிடிக்க நின்று கொண்டிருந்ததும்… வடிவேலு வீட்டு வாசலில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்ததும்…. நியந்தாவையும்… சந்திரனையும் ஒன்றும் செய்யவில்லை.. அவர்கள் எல்லாம் கடந்த தத்துவத்தில் கலந்து மூழ்கி… அவளின் நிறை குடத்துக்கும் சேர்த்து போர் பைப்பை அடித்துக் கொண்டிருந்தான்…இருவரும் ஒருவரையொருவர் தின்றே விடுவது போல பார்த்துக் கொண்டார்கள்….சரிவாக மேல் நோக்கி நீண்டு இருக்கும் போர் பைப்பின் அடி முனையை அவன் பிடித்து அடிக்க, சற்று கொஞ்சம் தள்ளி, இடைப்பட்ட இடத்தில் அவள் பிடித்திருக்க, அவனின் வலது கை உள்ளங்கைக்குள் கொண்ட கடிதத்தை நொடியினில் அவளின் உள்ளங்கைக்குள் நகர்த்தினான்.. அதற்கும் குறைவான நொடியினில்…அவளும் உள் வாங்கிக் கொண்டாள்..பெண்மையின் உள் வாங்கும் திறன் என்றைக்குமே வியப்புதான் என்பது போல நீர் கொட்டிக் கொண்டிருந்தது….

    கடிதம் கை மாறிய புள்ளியை காலம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டது போல.. மென் முறுவலைக் கொண்ட இருவரும்… மெல்ல சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டார்கள்…….. இன்று இரவு… புது வருடம்… பிறக்கும் நேரத்தில் அனைவரும் சர்ச்சில் கண்கள் மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கையில் அவள் சர்ச்சை விட்டு வெளியே வந்து விட வேண்டும்… போட்ட திட்டத்தின் படி இருவரும் ஓடி விடுவதுதான் கடிதத்தின் சாராம்சம்… அவள் கடிதத்தை பாவாடை பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டாள், சட்டையின் கை மடிப்பை சுருட்டி விடுவது போல…….

    “ஏன் ஒயிலா… டிவில சொல்ற மாதிரி இன்னைக்கு 4 மணிகெல்லாம் இருட்டாகும்ங்றது நிஜமா…?” என்ற ஒயிலா..கேட்டுக் கொண்டே “ஏன் சந்திரா … இன்னும் எவ்ளோ நேரம் தண்ணி அடிப்ப….. நாங்களும் அடிக்கனும்ல”- என்று சந்திரனைப் பார்த்து கேட்க கேட்கவே அவன், குடத்தைத் தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்… நியந்தாவும், அவள் வீட்டை நோக்கி நடந்தாள்….பார்வையை அவர்கள் இருவர் மீதும் மாற்றி மாற்றி போட்ட பேபிக்கா…”ம்ம்ம்ம்……………………..” என்று ஒரு பெருமூச்சு விட்டபடியே……

    “அது என்ன அப்டி சொல்லிட்ட ஒயிலா… டிவில சொல்றது எத்தன நடந்திருக்கு…… அதுமில்லாம.. இதே மாதிரி 84வது வருசத்துல ஒரு டைம் அப்டி நடந்திருக்கு.. நானெல்லாம் சின்ன புள்ள, அப்போ.. நீயெல்லாம் பொறக்கவே இல்ல…வீட்ல இருக்கற ஆடு கோழியெல்லாம் அடிச்சு சாப்டோம்.. சாகத்தான போறோம்னு… அப்புறம் பார்த்தா… யாரும் சாகல…அந்த மாதிரிதான் இன்னைக்கும் நடக்க போகுது…. அது ஒண்ணுமில்ல.. பூமில நடக்கற கோளாறுதான்… இப்பிடி எல்லாத்துக்கும் காரணம்… அதும், இது நடந்தாலும் நடக்கலாம்.. இல்லானா இல்ல.. கவலைப் பட ஒன்னும் இல்லன்னுதான் அந்த டிவிக்காரன் சொன்னான்…..” என்றபடியே அவளும் நிறைந்த குடத்தைத் தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடை போட..அதற்குள் மறு குடத்தைத் தூக்கிக் கொண்டு நியந்தாவும்,…. சந்திரனும் வந்து விட்டார்கள்…

    ‘ஆமா.. ஒவ்வொரு டிவிக்காரன் ஒவ்வொன்னு சொல்றான்… எதை நம்பறது” என்று புலம்பியபடியே ஒய்லாவும் குடத்தை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள்….

    ஊருக்குள் ஆங்காங்கே.. அனைவரின் மனநிலையும் இந்த 4 மணிக்கு சூரியன் மறைவது பற்றிதான்…. கிட்டதட்ட அனைவருமே… சூரியன் மேலேயே ஒரு கண் வைத்திருந்தார்கள்…குடத்தை நிறைத்துக் கொண்டே தன் காதலியின் கண்களை ஊடுருவிக் கொண்டும்…. மென் புன்னகையில் வார்த்தைகள் பரிமாறிக் கொண்டிருக்க.. சட்டென அது நிகழ்ந்தது….. ஊரே கத்த துவங்கியது…

    ஒரு பக்கமாக இருந்து அணையும் லைட்டைப் போல.. சட சடவென சூரியன் தன் வெளிச்சத்தை நிறுத்திக் கொள்ளத் துவங்கினான்…அது ஓர் அதீத இருட்டை வெளிக் கொணர்ந்தது…. மிதக்க விட்ட இருட்டைப் போல.. ஒவ்வொருவரும் தனி தனி இருளாய் வெளியோடு நின்று புள்ளியானார்கள்…

    “ஹே….ஹே…………………….ஹே……………..” என்று கூச்சலும் குழப்பமும்…மக்களை சிதறி ஓட வைக்க அல்லது ஒருவரையொருவர் பற்றிக் கொள்ள.. தடுமாறி.. பயந்து… நிலை இழந்து தவித்து… நடு காட்டுக்குள் அகப்பட்டுக் கொண்ட இருட்டைப் போல… மிரண்டு தவிக்க… .. .. சட்டென எதிரே இருந்த நியந்தாவின் கையைப் பிடித்து இழுத்து ….அணைத்தான்….

    “டேய்…. என்னமோ நடக்குதுடா….” என்று வடிவேலு, அவன் வாசலில் நின்று சத்தம் போட்டுக் கத்த …. எதைப் பற்றியும் கவலைப் படாமல் சந்திரனும் நியந்தாவும் இதழோடு இதழ் பதித்து வெளிச்சம் உமிழ்ந்தார்கள்…

    இரவின் பிடியில்…. மிகப் பெரிய அச்சம் காதலாகவும்… பெரும் அமைதியாகவும்…. வெளிப்பட்டன…. சட்டென்று கூச்சல் குழப்பங்கள் மெல்ல மெல்ல குறைந்து ஆழ்ந்த மௌனத்துக்குள் ஒரு வித பெருமூச்சுக்கள் மட்டும் இரவைப் போர்த்திக் கொண்ட பெரும் பாம்பு போல… காற்றோடு மெல்லிய இரைச்சலாய் மிதக்கத் தொடங்கியது….. வானம் பார்த்த கண்களில் சூரியத் தேடல்கள் ஒரு 300 ஜோடிக் கண்களாக மின்னின…அது வழக்கம் போலான ஓர் இரவு இல்லை… அச்சங்களின் அச்சுக்களால் தூவப்பட்ட பயங்களின் ஆக்கிரமிப்பு…. பேச்சுகளை காவு வாங்கிய உமிழ்நீரின் விழுங்கல். தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த மரணத்தின் வாயில் மெல்ல விலகத் தொடங்கியது…. வானம் கொடுத்த கீற்று துகள்களின் வெளிச்சம் பட்டவுடன் மீண்டும் பிறந்த மனிதனாய்… புதிய பூமியாய்…. விடுபடத் துவங்கியது….. அடைபட்ட பறவைகளின் விடுதலையைப் போல மீண்டும் மெல்ல மெல்ல சத்தங்களும் கத்தல்களும்.. ஆரம்பிக்க……. ஆரம்பிக்க… விடுபட்டிருந்தார்கள்.. நியந்தாவும்.. சந்திரனும்…விட்டு விலகாமல் அவர்களைச் சுற்றியது… இதழ் சிவந்த முத்தங்கள்….

    சூரியன் சில நிமிடங்களில் மெல்ல மீண்டும் தலை காட்ட.. அனைவரின் முகத்திலும் படர்ந்திருந்த இருளின் சாயம் மெல்ல விலகி இயல்பு நிலைக்கு வந்தார்கள்…..

    இனி பயம் இல்லை என்பது போல ஊர் கலை கட்டத் துவங்கியது…. அது வரை நிறுத்தி வைக்கப் பட்ட கபடி போட்டி…. ஆட்டம் பாட்டம் ….. சரக்கு பார்ட்டி… அன்ன நடை, வண்ண நடை என்று குமரிகளின் அணிவகுப்பு… என்று ஊர் பட்டாசுகளுடன்…. 2005ஐ வழி அனுப்பிக் கொண்டிருந்தது…

    நேரம்..மாலை 6

    ஒவ்வொரு புது வருடமும் ஒரு வித தவிப்பை தந்து விடுகிறது….. காரணமற்ற சந்தோசம் போலொரு தோற்றத்தை விதைத்து விடுகிறது….எதையாவது கொண்டாட சொல்லும் மனதுக்குள் ஒரு வித வழி இல்லாமல் அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனை போல மதில் எழுப்பிக் கொண்டு விடுகிறது…ஊர், அது பாட்டுக்கு தன் புது வருட கொண்டாட்டங்களுக்கான வேலைகளை பார்க்கத் துவங்கி விட்டது… அதுவும்… இப்படி ஒரு உயிர் போகும் பிரச்சினைக்கு பின் தப்பித்துக் கொண்ட மறு வாழ்வென.. பார்க்கும் கண்கள் எல்லாம்… பகைமை மறந்து பேரன்பு பெருக பார்த்தது…

    நியந்தாவின் வீட்டுக்கு பின் புறம்… தன் துணிகள் அடங்கிய பேக்கை வைத்துக் கொண்டு பர பரக்க… சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றான் சந்திரன்… கொஞ்சம் முள் புதர்களும்.. புல்வெளிகளும் கொண்ட இயற்கையின் அரணாக அவனின் தலை மறைவு காக்கப் பட்ட மாலை மசங்கும் வேளையில் மொட்டை மாடியில் இருந்து நியந்தா தூக்கிப் போட்ட அவளின் பேக் சற்று பட படக்க வைத்து, நிமிட நேரக் காத்திருப்பை பூர்த்தி செய்தது…

    கீழே விழுந்த அவளின் பேக்கில் இருந்த துணிகளை எல்லாம் எடுத்து, தான் கொண்டு போயிருந்த தன் பேக்கில் வைத்து விட்டு அவளின் பேக்கை புதர் மறைவில் போட்டு விட்டு வீதியின் கிழுக்கு முகம் நோக்கி நடக்கத் துவங்கினான்…. யாரும் பேக்கோடு அவனைப் பார்த்து விடக் கூடாது என்பதில் முழுக் கவனமும்.. மிரண்டு, சிலிர்த்துக் கொண்டிருந்தது…. வீதியின் குறுக்கு சந்துகளில் புகுந்து.. இடது வலது என்று மாறி மாறி நடந்து, மத்தேயு வீட்டுக்கு முன் வரும் போது எதிரே பரிமளாக்கா வந்து கொண்டிருந்தாள்….

    “அயோ.. எமகாதகி…. மாட்னோம்… கதை முடிஞ்சது…..” என்று யோசித்துக் கொண்டே, என்ன செய்யலாம் என்று பர பரத்த மூளையை ஒன்று திரட்டும் வேளைக்குள், பார்த்தே விட்டாள் பரிமளாக்கா…

    சட்டென நின்று விட்டான் .. திரு திரு விழிகள்..திடும்மென வானம் பார்த்து, வாட்சைப் பார்த்து… ஏதேட்சையாக அந்த அக்காவைப் பார்ப்பது போல பார்க்க… அவனை கூர்ந்து கவனித்து விட்ட பரிமளா….. “என்ன சந்திரா… ஒரு படத்துல ரேஷன் அரிசியை குப்பைத் தொட்டில வெச்சுட்டு பேந்த பேந்த முழிக்கற பாக்கியராஜ் மாதிரி பாக்கற… ஏதும் ஒளிச்சு வெச்சிருக்கியா…?” என்று எட்டிப் பார்த்தாள், அவன் நின்ற இடத்தில் இருத்த குப்பைத் தொட்டியில்…

    “அயே. என்னாக்கா… என்னென்னமோ பேசற….. ஒளிச்சு வைக்க என்ன இருக்க… மனச கூட நான் ஒளிச்சு வைக்கறது இல்ல… ஆமா… என்னக்கா… நைட் சர்ச்ல ஏதும் நாடகத்துல நடிக்கறியா!?” என்று கேள்வியை நடை மாற்றினான்…

    “ம்கும்….. அது ஒன்னு தாண்டா பாக்கி.. என் பொழப்பே நடிப்பா நடிக்குது.. இதுல நான் வேற தனியா நடிக்கணுமா… கழுத… என்று முணகிக் கொண்டே கடந்து போக யத்தனிக்க..

    “இல்லக்கா… முடி நரைச்ச மாதிரி இருக்கு…துணிக்கு மேல துணி போட்டு கொஞ்சம் குண்டான மாதிரி இருக்க.. அதான் கேட்டேன்…” என்று அவனும் முன்னோக்கி நடப்பவன் போல நடக்கத் துவங்கினான்…

    அவனைத் திரும்பி பார்க்காமலே… “என்ன.. புதுசா பாக்கற மாதிரி உளறிட்டு போறான்.. வயசான உடம்பு வரும்.. முடி நரைக்கும்.. இதுல நடிப்பென்ன வேண்டிக் கிடக்கு…உன்ன மாதிரியே ஒல்லிப் பிச்சானாவே எல்லாரும் இருக்க முடியுமாடா…” என்று புலம்பியபடியே பரிமளாக்கா நடக்க… முன்னோக்கி நடந்தவன் சட்டென திரும்பி ஓடி வந்து குப்பைத் தொட்டியில் ஒரு மூலையில் வைத்திருந்த பேக்கை எடுத்துக் கொண்டு ஓடினான்.. “நல்ல வேளை இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தா மாட்டிருப்பேன்” என்று, மனம் முணு முணுத்தது சந்திரனுக்கு……

    நடப்பது போல சிறு ஓட்டம்.. ஓடுவது போல ஒரு நடை… ரவி வீட்டு திண்ணையில்… மயில்சாமி நண்பர்கள் நான்கு பேர் உட்கார்ந்து ஐந்து டம்ளரில் சரக்கு ஊற்றி… நான்கை எடுத்து ஒரே முகமாய் மேல் நோக்கி காட்டி “இது நம்ம ராஜாவுக்காக…” என்றபடியே மட மடவென குடித்தார்கள்.. அவர்களைக் கடந்து கொண்டிருந்த சந்திரன் கண்களில் இந்தக் காட்சி விழுக, மனித ஆர்வத்தின் நீட்சியாக சற்று ஓரமாய் நின்று அவர்களைக் கவனித்தான்……

    “என்னடா இது…எல்லாருமே நாடகத்துல நடிக்க போறானுங்களா…. மயில்சாமிக்கு ஜடாமுனின்னு பேரே இருக்கு, அவ்ளோ முடி இருக்கும்… இப்போ இவ்ளோ சொட்டையா இருக்கான்… அட எல்லாருக்குமே தொப்பை.. வழுக்கை என்று ஆளே மாறி இருக்காங்களே….. அது என்ன ராஜாவுக்கு…. ஒன்னுக்கு போன கேப்ல அவன் சரக்கையும் சேர்த்துக் குடிக்க பண்ற ஏற்பாடுதான இது….!” என்று யோசித்தபடியே.. “சரி.. நம்மல எவனும் பாக்காம இருந்தா சரி” என்று முணங்கிக் கொண்டே வீறு நடையை மாற்றி வேக நடையை கொண்டான்…. பதுங்கிச் செல்லும் புலியின் வேகத்தில் பேக்கை முதுகோடு போட்டுக் கொண்டு மலை ஏறுபவன் போல மூச்சை அளவோடு விட்டு வாங்கிக் கொண்டே நடந்தான்…

    “இன்னைக்கு மட்டும் நான் போய் சேர்ந்துட்டன்ன்ன்.. ஜெய்ச்சிட்டேன்ன்…..” என்று கவுண்டமணியின் வசனம் கூட மண்டைக்குள் செந்திலாய் பார்த்தது…….

    “என்ன சந்திரா…. என்னமோ திருடப்போறவன் மாதிரி போய்ட்டு இருக்க…… ஊரே.. கோயில்லயும்.. சார்ச்சுலயும் குமிஞ்சு கிடக்கு.. நீ எங்க கிழக்க போறவன்…” என்று மொட்டாயி திண்ணையில் படுத்திருந்த ஆறுமுகம் கேட்க, சட்டென பக்கவாட்டில் இருந்து அதுவும் இருட்டுக்குள் இருந்து எதிர்பாராத சத்தமாக ஒரு குரல் வர, கண நேர மிரட்டலாய் மிரண்ட சந்திரன் பேக்கை சட்டென கையோடு இறக்கி கால் பக்கத்தில் போட்டுக் கொண்டு……வராத வார்த்தைகளை யோசனை கொண்டு கோர்த்தான்….

    “இல்லை.. பங்காளிய பாக்க போயிட்டிருக்கேன்.. ஒரு சின்ன வேலை…… அதான்…” என்றான் முகத்தை துடைத்துக் கொண்டு.. ஒரு பக்கம்… ‘ஹேப்பி நியூ இயர்…” என்று மைக் செட்டில் பாட்டு ஓடிக் கொண்டிருக்க.. மறுபக்கம்…”ஆனந்தம் பொங்குதே,, ஆனந்தம் பொங்குதே.. ஆனந்தம் பொங்கி பொங்குதே….” என்று இன்னொரு மைக் செட்டில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது…. கொஞ்சம் சத்தமாகத்தான் பேச வேண்டி இருந்தது…

    “புது வருஷம் பொறக்க போகுது.. மாமன கவனிச்சுட்டு போடா சந்தரா…” என்று படுத்துக் கொண்டு காலாட்டியபடியே கேட்ட ஆறுமுகத்துக்கு 5 ரூபாயை எடுத்து கொடுத்தான்….. எடுத்துக் கொடுக்க, கொடுக்கவே.. “ஆமா மாமா.. எங்க மொட்டாயி காணோம்…..” என்றான்…. அவன் பார்வையின் நினைப்பு முழுக்க அவன் காலடியில் கிடந்த பேக்கிலேயே இருந்தது…. கையில் வாங்கி கண் அருகே கொண்டு போன ஆறுமுகம்.. 5 ரூபாய் நாணயத்தை இருட்டை விலக்கி உற்றுப் பார்த்து….ஒரு முடிவுக்கு வந்தவனாய்….”ம்ம்ம்.. மொட்டாயி செத்துப் போய்ட்டா… உனக்குத் தெரியாது…..?… வெண்ணை…இந்தா இதை தூக்கிட்டு ஓடிப் போய்டு…” என்று கையிலிருந்த 5 ரூபாய் நாணயத்தை தூக்கி சந்திரன் மேல் எறிந்தான்……..

    விட்டால் சரி என்பது போல குனிந்து அப்படியே பேக்கை இழுத்துக் கொண்டு ஓடியே போனான் சந்திரன்…

    ‘5 ரூ……வாய்க்கு ஊறுகாய் கூட கிடைக்காதுடா…. மசுருகளா… கோட்டர் 125 ரூவா…..டா…..” என்று புலம்பியபடியே மீண்டும் புரண்டு படுத்துக் கொண்டான் ஆறுமுகம்..

    மணி இரவு 7…

    கனத்து மௌனித்து கிடந்தது வீதி…. மூச்சுக்கு கூட காற்று இருக்கிறதா என்றால் பெரு மூச்சு வாங்கித்தான் உணர முடியும்…நீண்டு கிடந்த மஞ்சள் நிற வீதியில்… அடுக்கி வைத்தார் போல இரண்டு பக்கமும் இருந்த வீடுகளை ஒரு முறை சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டான், சந்திரன்.. “நாளைக்கு இந்நேரம் என்ன ரணகளம் ஆகப் போகுதோ” என்று ஆழ்மனம் புலம்பியது வார்த்தைகளற்று…

    மோகினி போல சட்டென்று சித்திரக்குள்ளி குறுக்கு சந்து வழியாக வெளியே வந்தாள்… திக்கென்றாகி விட்டது சந்திரனுக்கு…

    ‘எங்கண்ணா கிளம்பிட்ட….” என்றாள்.. தன் புடவையை சரி …செய்தபடியே…

    அவள் இன்னும் கூர்ந்து கவனித்து விடுவதற்குள் பேக்கை மறைக்க வேண்டும் என்ற படபடப்பில், பேக்கை சற்று வலது பக்கமிருந்த திண்ணையில் படாரென வைத்து விட்டு….. “சும்மா… சித்ரா… பங்காளிய பாக்க…..” என்று அவளையே உற்று கவனித்தவன்.. என்ன சித்ரா… நீயும் நாடகத்துல நடிக்க போறியா… உங்கம்மா புடவைய கட்டிட்டு பெரிய பொம்பள மாதிரி கெட் அப் மாதிட்ட…” என்றான்…வார்த்தைகளை அளந்து அளந்து பேசுபவன் போல…

    ஏதோ டப்பிங் படம் பார்த்த மாதிரி……” நாடகமா.. நானா.. அதெல்லாம் ஒரு காலம்ண்ணா….அப்புறம்……….. இது ஒன்னும் எங்கம்மா புடவை இல்ல.. என் புடவைதான் .. எல்லாரும் ரெம்ப குண்டாகிட்டேனு சொல்றாங்க.. உனக்கும் அப்டிதான் தெரியுதா” என்றாள்.. இன்னும் அவள் புடவையை அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டேதான் இருந்தாள்…

    “ஆமா… இல்ல…. என்ன சொல்றது … ஆமா..கொஞ்சம் குண்டாத்தான் தெரியறா.. சொன்னா நம்பவா போறா”- என்று யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான் சந்திரன்…. அவள் பேக்கை பார்த்து விடக் கூடாது என்பதைப் போல பேக் இருந்த இடத்தை உடலைத் திருப்பி மறைத்தும் கொண்டான்…

    அவள் அவனைப் பார்க்காமலே… இன்னும் புடவையை சரி செய்தபடியே…”சரிண்ணா.. நான் கிளம்பறேன்…சர்ச்சுக்கு நேரமாச்சு…” என்று சொல்லி அவன் பதிலுக்கு காத்திராமல் போய்க் கொண்டிருந்தாள்……

    “யப்பா வாயாடி… இன்னைக்கு ஏதோ கொஞ்சமா பேசிட்டு போறா….”-என்றபடியே பேக்கை தூக்கிக் கொண்டு கிழக்கு நோக்கி வேக வேகமாய் ஓடினான்.. ‘ஓட ஓட தூரம் குறையல” என்பது போல.. குறையாமல் இருப்பது போல இருந்த கால்களின் வலிமைக்கு கிழக்கின் கோடியில் இருந்த புளிய மரத்தின் அருகாமை மிகப் பெரிய பிரமாண்ட பேயைப் போல பயமுறுத்தியது……… இந்த மரத்துக்கு ஊருக்குள் பேய் மரம் என்று தான் பெயரே…”இது தான் சரியான இடம்.. எவனும் கிட்ட கூட வர மாட்டான்” என்று நினைத்துக் கொண்டே… பேக்கை புளிய மரத்தின், சற்று மேலே வளைந்து சென்ற கிளைகளின் இடையே சொருகி வைத்தான்… “நைட் வர்றோம்.. பேக் எடுக்கறோம்.. இப்டி இந்த வழியே… பள்ளம் தாண்டி… சுடுகாடு தாண்டி, பவானி ரோட்டை பிடிச்சு ஈரோட பஸ் பிடிக்கறோம்… அப்புறம்.. போட்ட திட்டத்தின் படி கல்யாணம்….”- விடிஞ்சா கல்யாணம் என்று நினைக்கும் போதே உள்ளுக்குள் கட்டெறும்பு ஏறிய கரும்பாய் இனித்து சிவந்தது மனது..

    புது வித நம்பிக்கையோடு.. மீண்டும் ஊருக்குள் நடக்கத் துவங்கினான்.. ஊரே ஏதோ மாறி விட்டது போல ஒரு வகை பழுப்பு நிறம் போர்த்தி இருந்ததை ரசிக்க கூட முடிந்தது… “ஊரின் எல்லையைத் தாண்டி விட்டால், பின் யாரும் தங்களை ஒன்னும் செய்து விட முடியாது” என்பதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டான்…. நியந்தாவின் முதல் முத்தம் ஞாபகம் வந்தது…. முதலில் அவன் காதலிக்க துவங்கியது என்னவோ நியந்தாவின் அக்கா நிவ்யாவைத்தான்… அவள் “முடியாது” என்று கூறிய பின் “சரி கேட்டுப் பாப்போம்” என்று கேட்டதுதான்… நியந்தாவின் காதல்… அவளோ, தனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே அவனை காதலிப்பதாக கூறி மீண்டும் மீண்டும் சக்கரை ஆலையை விதைத்தாள்…நினைத்தாலே இனித்த அவளின் நினைவுகளில் தேங்கியே, ஊருக்குள் நடந்தவனின் பார்வையில், மயில்சாமி நண்பர்கள் விழுந்தார்கள்…. ஆளுக்கொரு பிளாஸ்டிக் டம்ளரில் சரக்கை வைத்துக் கொண்டு சலம்பிக் கொண்டிருந்தார்கள்.. “என்னடா அதுக்குள்ள இடத்தை மாத்திட்டானுங்க..” என்று முணங்கிக் கொண்டே பார்த்தவனுக்கு இம்முறை ராஜாவும் ஜோதியில் இருந்தது நன்றாக தெரிந்தது… “அட… மயில்சாமிக்கு மீண்டும் ஜடாமுனி போல கூந்தல் எப்படி முளைத்தது…..?…” தலையை முதன் முறையாக பிடித்துக் கொள்ளத் தோன்றியது சந்திரனுக்கு…….”ஒருவேளை தான் தான் கற்பனை செய்கிறோமோ ..” என்று ஒரு புயல் அவனுக்குள் விதையைப் போல விழுந்தது…..” காட்சிகள் யாவும் காட்சிகளா.. மாயங்களின் பிடியில்… மாறும் சூழ்ச்சிகளா…?”

    கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்த்தான்… முடி இருந்தது… “சற்று முன் ரவி வீட்டு திண்ணையில் பார்த்த போது சொட்டையாக இருந்தானே.. இப்போது எப்படி.. இத்தனை முடி மீண்டும்.. எது நிஜம்.. முடிக்கு டோப்பா வெச்சதா.. இல்ல.. சொட்ட மாதிரி வேஷம் போட்டதா…”- என்று குழம்பிக் கொண்டே மனதுக்குள் புரண்ட பிழைகளோடு மீண்டும் நடக்கத் துவங்கினான்….முன்னோக்கி நடந்தவனக்கு அடுத்த அதிர்ச்சியாய்… விசும்பிக் கொண்டிருந்தது… சித்திரக்குள்ளியின் முழங்கால் கட்டிக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்த காட்சி……. மெல்ல அருகே சென்றான்.. அவள் விசும்பிக் கொண்டிருந்தாள்…

    “என்னாச்சு சித்ரா… ஏன் அழுதுட்டு இருக்க…?!” என்றான்.. அவளை கூர்ந்து பார்த்தபடியே..

    “நான் அழுதா உனக்கென்னண்ணா… வேலைய பாத்துட்டு போ.. நானே எங்கம்மா.. என்னைய நாடகம் நடிக்க விட மாட்டேங்குதுன்னு அழுதுட்டு இருக்கேன்…”-என்றபடியே அவள் தொடர்ந்து விசும்பலை சரியாக செய்தாள்..

    “அயோ.. என்னடா இது குழப்பம்…….” என்றபடியே.. அட… நாடகம் நடிக்க விருப்பம் இல்லன்னு இப்ப தான சொன்ன.. அதும் புடவை கட்டிட்டு இப்ப தானே ஜாம் ஜாம்னு போன.. அதுக்குள்ளே என்னாச்சு…”- என்றவனை…கூர்ந்து பார்த்த சித்ரா…சட்டென்று விசும்பலை நிறுத்தி விட்டு,… “நான் புடவை கட்டுனா நல்லாவா இருக்கும்..?…. எனக்கென்ன வயசு இருவதா…புடவை கட்டிட்டு திரிய…. பத்து தான….பாவாடை சட்டை தான் அழகா இருக்கும்…. நீ எங்கம்மாவ பார்த்து நான்னு நினைச்சிருப்ப.. லூசு மாதிரி…. “-என்றபடியே மீண்டும் விசும்பத் தொடங்கினாள்…

    நெஞ்சே அடைத்து விடும் போல் இருந்தது…. தலை சுற்றி நடந்தவனை.. மொட்டாயி குரல் தடுத்தது………

    “யார் ரத்னமா பேரனா…. என்ன ஊரே… கோயில்லயும் சார்ச்சுலயும் கிடக்கு.. நீ இங்க உலாவிட்டு கிடக்க… ஏதும் சிநேகிதம் கீற இருக்காடா… பேர கெடுத்துக்காத…” என்று திண்ணையில் உடகார்ந்தபடி வெத்திலையை குத்திக் கொண்டே பேசியது…….நின்று நிதானமாக மொட்டாயியை பார்த்தான்… திண்ணையை துலாவிய கண்களுக்கு ஆறுமுகம் அகப்படவில்லை…

    “ஆயா….. ஆறுமுகண்ணன் எங்க..” என்று மெல்ல கேட்டான்…அவன் கண்கள் அந்த இருள் சூழ்ந்த திண்ணையை வெறித்தது…. “மொட்டாய் செத்துப் போய்ட்டா… உனக்கு தெரியாது….” என்று ஆறுமுகம் கோபத்தில் கத்தியது, காரணமே இல்லாமல் மீண்டும் ஒலித்தது சந்திரன் செவியில்….ஒலிப்பதெல்லாம்…. ஒலியா….என்பதைப் போல மௌனம் கலைத்த மொட்டாயி…. ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டது… “அந்த தறுதலை காணாம போய்தான் ரெண்டு மாசம் ஆச்சே… உனக்கு தெரியாதா…… அவன் உருப்படுவானா… அரிசி சோரா குடுத்து வளத்தேனே.. இப்படி அந்த ஓடுகாலி நாய் கூட சேர்ந்து ஓடிப் போய்ட்டானே.. குடிகாரன் நாயி…..”-மொட்டாயின் குரல் தொடர…. நா வரளத் துவங்கியது சந்திரனுக்கு… “இல்ல.. இது சாதாரணம் இல்ல.. ஏதோ தப்பு நடக்குது….”

    தலைக்குள் ரீங்காரம் மெல்ல அல்ல.. மிக வேகமாக சுற்றுவது போல.. அவனின் கற்பனையோ…. அல்லது கற்பனையின் அவனோ… சுற்றத் தொடங்கினார்கள்… .. மனதுக்குள் தீர முடியாத கேள்விகளோடு குழப்பங்களும் நிறைந்து கொண்டன… கால்கள் முன்னோக்கி நடந்தாலும். மனதுக்குள் சற்று முன் பார்த்த, மாறிய கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளை விரித்துக் கொண்டே சென்றது… எதிரே வந்து கொண்டிருந்த பரிமளாக்கா, இன்னும் எண்ணை ஊற்றினாள்.. சிக்கென்று, நடந்து வந்தவள்… அவன் முன்னால் நின்று… “என்ன சந்திரா.. இன்னைக்கு நீ ஆடப் போறியா… இல்லையா.. போன வருஷம் உன் ஆட்டம் மஜா டா.. “என்று கூறி விட்டு வேகமாக கடந்து போனாள்… வீதி லைட் வெளிச்சத்தில், அவளின் கறுத்த உடல் .. கணக் கச்சிதமாக அவனின் பாருக்குள் அலையாக ஆடியது….மீண்டும் கறுத்த முடியோடு…உடல் ஒல்லியாகி எப்பவும் போல இருந்தாள்…

    மனதுக்குள் ஏதேதோ சிந்தனைகளை ஓட விட்ட சந்திரன்…”அக்கா ஒரு நிமிஷம்”- என்று போனவளை நிறுத்தினான்.. அவளும், நின்று மெல்ல திரும்பினாள்….

    “அக்கா திரும்பாத……. திரும்பாமலே.. நான் கேக்றதுக்கு பதில் சொல்லு… என்றான் கணீர் குரலில்…

    திக் என்று நின்ற…. பரிமளா… கொஞ்சம் திரும்பிய கழுத்தைக் கூட வேகமாக முன் பக்கமாக திருப்பிக் கொண்டாள்…… “இது சந்திரன் குரல் மாதிரியே இல்லையே” என்று உடல் நடுங்க நினைத்த பரிமளா….. “ஏன் சந்திரா,.. என்ன கேக்க போற…ஏன் திரும்ப வேண்டான்னு சொல்ற…’ என்று மெலிதாக.. ஆனால் பிசிறில்லாமல் வார்த்தைகளை விட……” கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இதே இடத்துல நாம பார்த்தோம் தானக்கா…”என்றான்..பயந்து கொண்டே…. வேகமாய் வியர்க்கவும் தொடங்கி இருந்தது . அவன் உடலும் மனமும்…

    நின்றபடியே கண்களை இடதும் வலதும் திருப்பிய பரிமளா….. “என்ன கேக்கறான்…. இவன காலைல இருந்தே பாக்கலயே… ஏன் இப்டி கேக்கறான்… திரும்ப வேண்டானும் சொல்றான்… என்னாச்சு….” என்று தொடர்பற்ற யோசனையில் சிக்கி நிற்க… “சொல்லு………….க்கா….” என்று அடித்தொண்டையில் இருந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டான் சந்திரன்..

    “இல்லடா.. இப்போதான் பாக்கறேன்….”என்று பயந்தபடியே பரிமளா கூற…..” அயோ…பேயி………” என்று கத்திக் கொண்டு ஓடத் துவங்கினான் சந்திரன்… “அயோ.. பேயா….”- என்று பரிமளாவும் கத்திக் கொண்டு குறுக்கு சந்துக்குள் ஓடத் துவங்கினாள்……

    மணி இரவு 9.30

    கோவில் திடலில் நடந்து கொண்டிருந்த நாடகம் பார்க்க கூட்டத்தோடு நின்றான்…சந்திரன்….மனதுக்குள் பக் பக் என்றும் திக் திக் என்றும்.. ஏதேதோ… எண்ணங்கள் தடுமாற… ஒரே முகத்தில் இரண்டிரண்டு பேராக பலர் இருப்பது போல பிரமிக்கவும் செய்தான்….

    “என்ன… முனியாண்டி… கொஞ்ச நேரம் சர்ச்… கொஞ்ச நேரம் கோயில்னு ரெண்டு பக்கமும் இருக்க…சாமி மாதிரி ” என்று கேட்டபடியே செங்கல்ராஜ் நடந்து போக.. முனியாண்டி… அவனையும் பார்த்துக் கொண்டு…. இதை கவனித்துக் கொண்டிருந்த சந்திரனையும் பார்த்து.. “குடி…..” என்பது போல, ஒரு மலையாளியைப் போல ஜாடை செய்தான்……….நேரம் ஓட ஓட.. சிந்தனையில்.. குழப்பங்கள் மறைந்து…நியந்தாவின் ஞாபகங்கள் தலைக்குள் சுழன்றன…

    குளிரை போக்க பெரும்பாலைய மக்கள் தலையோடு குல்லா போட்டபடியும் ஸ்வெட்டர் போட்டபடியும் ஆவிகளைப் போல அலைந்து கொண்டிருந்தார்கள்….. இன்னும் சற்று நேரத்தில் புது வருடம் வந்து விடப் போகிறது… புது நம்பிக்கை பிறக்க போகிறது. என்று உள்ளுக்குள் கொண்ட குதூகலத்தை நடந்தே காட்டிக் கொண்டிருந்தார்கள்…மூளைக்குள் போட்டு வைத்த அத்தனை திட்டங்களையும்.. ஒரு சேர ஓட்டிப் பார்த்தான் சந்திரன்… அத்தனை குழப்பங்களையும் தாண்டி…….சில்லென்ற காற்று மெல்ல ஒரு ராணியின் விசிறியை போல… மிதந்து கொண்டிருந்தது….

    நேரம் 11.55.

    சர்ச்சில் அனைவரும் கண்கள் மூடி ஜெபிக்கத் தொடங்கினார்கள்… இன்னும் 5 நிமிடத்தில் புது விடியல்….

    அடுத்த நிமிடம்… நியந்தாவும்… சந்திரனும் ஓடிக் கொண்டிருந்தார்கள்…….

    டிக் டிக் டிக் …….அடுத்த நிமிடம்.. பேக் அவர்கள் கையில்.. டிக் டிக் டிக் ……அடுத்த நிமிடம்… பள்ளம் தாண்டி….. ஓடிக் கொண்டிருந்தார்கள்…..டிக் டிக் டிக் …… அடுத்த நிமிடம்.. பவானி சாலையில்….

    அடுத்த நிமிடம்…. தூரத்தில் பின்னால்.. பட்டாசுகளும்… கூக்குரல்களும்.. கொந்தளிக்க.. சட்டென்று நின்று, நியந்தாவும் சந்திரனும் ஒருவரையொரு ஆரத் தழுவிக் கொண்டார்கள்…. புது வருடம்…. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்… என்று ஊருக்குள் கத்திய சத்தம் ஒரு சாரலைப் போல.. அவர்களை நொடிகள் இடைவெளியில் வந்து சேர்ந்தன…… முத்த மழையில் நனைந்து கொண்டார்கள்…. ஒரு முறை அவளைத் தூக்கி சுற்றினான்… ஒரு குழந்தையைப் போல……. அவள் மெது மெதுவாய் தழுவி வழுக்கினாள்.. ஒரு குமரியைப் போல…..

    இருள் சூழ்ந்த சாலையில்…. அவளின் கண்கள் பிரகாசமாய் காதலை முணுமுணுத்தது… கண்களோடு இதழ் பதித்தவனுக்கு… பதில், கன்னம் கடித்து சொன்னாள்… இருவரும்…. இருள் புன்னைகையோடு மீண்டும் நடையும் ஓட்டமுமாக முன்னோக்கி நடக்க… பின்னால் தீப்பந்தங்களோடு ஒரு கூட்டம் அலறிக் கொண்டு வருவதை தூரக் காட்சிகளும்.. தூரக் கத்தல்களும்….உணர வைத்தன… மீண்டும் அதி வேகமாக அடிக்கத் தொடங்கிய இதயங்களை கோர்த்துக் கொண்ட கை கொண்டு தைரியப் படுத்திக் கொண்டு வேகம் எடுத்தார்கள்…. மிரண்டு போன மனதோடு… எல்லாம் புரிந்து விட…. ஓட்டம் வேகமெடுத்து… ஓடினார்கள்.. ஓடிக் கொண்டே இருந்தார்கள்…இருள் துரத்தும் அதே நேரத்தை…அவர்கள் துரத்துவது போல ஒரு ஓவியக் கரைதலாய் அவர்கள் காதலைக் கொண்டே கடந்து கொண்டு இருந்தார்கள்….

    கண நேர கீற்றாய் சட்டென ஒரு ஜீப் அவர்களைக் கடந்து முன்னால் சென்று,வேகமாய் நின்று… பின்.. அதே வேகத்தில் சர்ரேலென வந்து சர்ரென்று அவர்களின் அருகே நின்றது…

    இருவரும் மிரண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பார்க்க….உள்ளேயிருந்து டிரைவர், “சீக்கிரம் ஏறுங்க…. வாங்க…. நான் உங்கள டிராப் பண்றேன்… நீங்க எவ்ளோ ஓடினாலும் அவுங்க உங்கள பிடிச்சிடுவாங்க… வாங்க… யோசிக்க இது நேரமில்ல”- என்று கிட்டத்தட்ட ஆணையிடும் தொனியில் கூறினான்… “பயப்படாதீங்க… ஏறுங்க..” என்று கேட்ட பாதுகாப்பின் சத்தத்தை… நம்பவும் இல்லாத நம்பவும் செய்கின்ற தடுமாற்றத்தோடு அந்த நேர முடிவாக, ஏறிக் கொண்டார்கள்…..வண்டி அதே வேகத்தில் கிளம்பியது…. மெல்ல திரும்பிப் பார்த்த சந்திரனின் கண்களுக்கு குட்டி குட்டி தீப்பத்தங்கள் தூரத்தில் தலை அசைப்பது தெரிந்தது…. நியந்தாவும் சந்திரனும்… ஒருவரையொருவர்.. அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டார்கள்.. வண்டி அதே வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது… இரு பக்கமும் இருள் சூழ்ந்த காட்டுக்குள் ஒரு கீற்றைப் போல ஜீப்பின் முகப்பு வெளிச்சம் கீறிக் கொண்டு போக அதன் பின்னால் ஜீப் போய்க் கொண்டே இருந்தது……

    “ரெம்ப நன்றிங்க.. எங்கள ஈரோட்ல இறக்கி விட்ருங்க…” என்று ஒரு 30 கி மீ, ஒரு வகை மௌனம் கலந்த இருக்கதோடு கடந்த பயணத்தின் முமூடியையைக் கிழித்தான் சந்திரன்…

    மெல்ல புன்னகைத்துக் கொண்ட டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து கண நேரத்தில் விலகிய ஜீப் இடது புறமாக சரிந்து கவிழ்ந்து எதிரே இருந்த ஒரு புளிய மரத்தின் மீது மோதி சரிந்தது….. இருள் மிரண்டு ஒதுங்கிக் கொண்டது போல.. ஜீப்பின் முகப்பு வெளிச்சம் கோணல் மாணலாக அங்கும் இங்கும் பரவி விரவி… பாதி கண்கள் திறந்து மயங்கியது போல புளிய மரத்தின் கிளைகளின் ஊடாக நீண்டு கிடந்தது…

    கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்தது என்றே கணிக்க முடியாத சந்திரன் மெல்ல உள்ளே கிடந்த நியந்தாவை வெளியே இழுத்தான்…. ஆங்காங்கே சிராய்ப்புகளோடு நிற்க முடிந்தது அவனால்… திரும்பி தேடிய இருளுக்குள் முகப்பு வெளிச்ச பரப்பில், புளிய மரத்தின் அடியினில் ஒரு ரத்தக் காட்டேரியைப் போல முணகிக் கொண்டிருந்தான் … டிரைவர்….

    ஓடிச்சென்று அவன் அருகே நின்று அவனைத் தூக்க முயற்சிக்கையில் சந்திரன் அதிர்ந்தான்… இன்னும் நன்றாக அவனை உற்றுப் பார்த்தான்….ஆங்கங்கே அடி பட்டு முகம் கிழிந்து, ரத்தம் வழியக் கிடந்த அவனின் முகம் தொட்டு திருப்பி இன்னும் நன்றாகப் பார்த்தான்… மனதுக்குள் பெரும் குழப்பம்… அவனைக் கவ்வ, மிரண்டு இரண்டு அடி பின்னால் நகர்ந்து தடுமாறினான்…. ஆம்.. அவன் சந்திரனைப் போலவே இருந்தான்.. “என்ன விதமான குழப்பம்… இது..” என்று கண்களை அழுந்த அழுந்த தேய்த்துக் கொண்டு மீண்டும் அருகினில் சென்று பார்த்தான்…. ஒரு முறை, தான் தெளிவாகத்தான் இருக்கிறோமா என்ற சுய பரிசோதனைக்கு மனதை ஆட் படுத்திக் கொண்டான்…. மறுபடியும் பார்த்தான்… ஆம்.. அதே முகம்… அதே உடல்… ஆனால் கொஞ்சம் வயதாகி இருந்தான்…… மற்றபடி ஒரே உருவம்தான்…ஆம்… அந்த டிரைவர்… அப்படியே தன்னைப் போலவே இருந்ததைப் பார்த்து… என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிய சந்திரனை டிரைவர் பார்த்து மெல்ல புன்னகைத்தான்…. .

    தலையை பிடித்துக் கொண்டு, திக் திக் பார்வையோடு……. ‘என்ன நடக்குது.. ஒன்னும் புரியல.. ஊருக்குள்ள ஒருத்தர் மாதிரியே வயசான ஒருத்தர் இருக்காங்க.. சரி ஒருவேளை என் கற்பனையோன்னு கூட நினைச்சேன்.. ஆனா.. இங்க என்ன மாதிரியே வயசான நீ…… எப்டி… என்ன நடக்குது … ஆமா.. யார் நீ… எதுக்கு எங்கள காப்பாத்த வந்த… எங்கிருந்த வந்த…. “.. என்று பெரும் குழப்பத்தோடு மீண்டும் தலையில் கை வைத்துக் கொண்டு சரிந்திருக்கும் டிரைவர் அருகே அமர்ந்தான்…. லட்சம் பூச்சிகள் மனதுக்குள் அரிப்பது போல உடல் நடுங்கிய கோர்வையாய் ஒரு நிழலைப் போல கவனித்தான்….

    தன்னைப் போலவே இருந்த சந்திரனைப் பார்த்து, “பயப்படாத…. எல்லாம் சொல்றேன்..” என்று மெல்ல பேசத் தொடங்கினான் டிரைவர்…

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்……

    “சந்திரா…. விதி வலியது தெரியுமா…..’ என்று பேசத் தொடங்கினான் டிரைவர்..

    சட்டென கண்களை அகலமாய் திறந்த சந்திரன் “என் பேர் உனக்கெப்டி தெரியும்…?” என்று ஆச்சரியக் குறியில் அதிர்ந்தான்… .. முட்டியில் வழிந்த குருதியை உதறிக் கொண்டே…

    “பேர் என்ன…! எல்லாமே தெரியும்…” என்று இடைவெளி விட்ட டிரைவர் …..” என்னை பத்தி எனக்கு தெரியாதா…..?” என்றான்…..

    இன்னும் கூர்ந்து கவனித்த சந்திரன்… என்ன இது… “என்னை பத்தி எனக்கு தெரியாதா…..!”- ஒன்னும் புரியல’ என்று முணங்கினான். வெற்றுப் பார்வையில் மிகப் பெரிய பயம் கலந்து நின்றது….இரவாக…

    டிரைவர் மெல்ல சிரித்துக் கொண்டு…. “இன்னைக்கு சாயந்தரம் சூரியன் 4 மணிக்கே மறைஞ்சதுல ஏற்பட்ட கால மாற்றத்துல…கால குழப்பத்துல 2005ம் 2015ம் கலந்துடுச்சு சந்திரா… அதான்.. 10 வயசு வித்தியாசத்துல ஒரே மாதிரி ரெண்டு ரெண்டு பேரா இன்னைக்கு ஊருக்குள்ள இருக்காங்க… ஒரே கிணறு உனக்கு மூடி இருக்கற மாதிரி தெரியுது……எனக்கு திறந்து இருக்கற மாதிரி தெரியுது……..ராஜா இல்லாத நண்பர்களை முதல்ல நீ பார்த்தது 2015… அதுல ராஜா இல்ல… ரெண்டாவது, ராஜாவோட சேர்ந்து அந்த கூட்டத்தை நீ பார்த்தது 2005…. 2010ல ராஜா செத்துப் போய்ட்டான் சந்திரா… அதான் 2015ல நீ பாக்கும் போது ராஜா இல்ல… ஆனா அவனே 2005ல இருந்தான்ல..”

    சந்திரனுக்கு தலை சுற்றி வாந்தி வருவது போல இருந்தது…. “என்ன மாதிரியான ஆங்கில பட குழப்பம் இது?” என்று மனதுக்குள் முணங்கியவன் .. ஒரு முறை இன்று நடந்த அத்தனை குழப்பங்களையும் மனக் கண்ணால் ஓட்டிப் பார்த்தான்…பரிமளாக்கா …… சித்ரா…மொட்டாயி, ஆறுமுகம்…. செங்கல் ராஜ்…. இன்னும் கண்ட அத்தனை இரட்டை வேடங்களுக்கும் காரணம் புரியத் தொடங்க… இந்த பிரபஞ்சத்தின் மீது இனம் புரியாத பயம் வந்தது.. நிழலைப் போல ஒன்று நம்மை கண்காணித்துக் கொண்டே இருப்பதாய் அறிந்த வியாக்கியானத்தின் பிடியில்… மனிதன் ஒன்றுமே இல்லை என்ற சிந்தனைக் குழப்பம் தெளிவாய் புரிந்தது……

    “அப்டினா… என்னோட 2015, நான் தான் நீ……… இல்லையா…!” என்று ஆச்சரியப்பட்டான்… அவன் கண்கள் ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கி நீந்தியது…..2015 சந்திரனை உற்று.. ஏதோ கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது போல பார்த்தான்………..2005 சந்திரன்….அவர்களை சுற்றி பூமி வேக வேகமாய் சுற்றுவதைப் போலொரு மாயம்… மிதப்பதை உணர்ந்தார்கள்…இயல்புக்குள் கலந்து கொண்ட மாய தத்துவங்களின் கைகளில் மூளை பிசையப் படும் காட்சிக்குள் பின்னோக்கி தலைகீழாய் சரிவது போல் இருந்தது… சூழலின் இருண்மை…

    வரட்சியான பார்வையோடு, 2015 சந்திரன்……. “சரி சந்திரா…நீங்க கிளம்புங்க….அவுங்க கைல மாட்னா அவ்ளோதான்…..” என்றான்… தவிப்போடு……..

    “நீ… நீங்க……?”-தன்னையே வேறு ஒருவனாக பார்த்து பேசுவது என்பது இனம் புரியாத தவிப்பின் உச்சம் என்று உள் மனம் அசை போட்டது சந்திரனுக்கு…

    “நான் என்னை பாத்துக்குவேன் …., நீங்க போங்க… நாளைக்கு மறுமடியும் சூரியன் வழக்கம் போல உதிச்சிட்டா.. இந்த 2015 இருக்காது…நானும் இருக்க மாட்டேன்….இந்த குழப்பம் தீர்ந்திடும்… ஏன் அப்டி பாக்கற… அதான் நீ இருக்கியே… நீ தான நான்…இது என் நியந்தா தான…. “என்று சொல்லி மென் புன்னகையோடு கண்ணடித்தான்…

    “சரி” என்ற சந்திரன்.. எழுந்து நியந்தாவைக் கூட்டிக் கொண்டு ஓடத் துவங்கு முன் சற்று நின்று.. திரும்பி… “சந்திரா … எங்க கல்யாணம்…… நடந்திடும் தான… நீ எதிர்காலத்துலதான இருக்க.. அப்போ என்ன நடந்துதுன்னு உனக்கு தெரியும் தானே…? என்றான்…முகம் பிரகாசிக்க…

    2015 சந்திரன்… மெல்ல புன்னகைத்து விட்டு.. “காலத்தின் கணக்கை முன் கூட்டியே கணிக்கலாம்.. வாழ கூடாது… நீ போ… எல்லாம் புரியும்” என்றான்…..ஒரு வித அமானுஷ காற்று, அந்த இடத்தை நிரப்பியது….இருண்மையின் சிலிர்ப்புக்குள் மிதக்கத் துவங்கிய மாயக் கண்கள் புன்னகை செய்தன….

    சந்திரன் நியந்தாவைக் கூட்டிக் கொண்டு ஓடினான்… ஓடி புள்ளியாகி இருட்டுக்குள் மறைந்து போனான்….

    வேண்டும் என்றே ஜீப்பை கவிழ்த்திய காட்சியை ஒரு முறை நினைத்துப் பார்த்தான்….2015-சந்திரன்…. அவனுக்கு முன்னால் கவிழ்ந்து கிடந்த ஜீப்புக்கும் தரைக்கும் இடையே நசுங்கி செத்துக் கிடந்தாள் நியந்தா….

    “ஒரே ஆளாக இருந்தாலும்.. மனசு வேறடா…அது வருசத்துக்கு வருஷம் என்ன… நிமிசத்துக்கு நிமிஷம் மாறும்….இது என் நியந்தாடா…. நியந்தா எனக்கானவன்.. உன் கூட போக விடுவேனா….” என்ற 2015-சந்திரனின் மனம் ஒரு பேயைப் போல கண்கள் விரித்தது…..

    ஓடிக் கொண்டிருந்த சந்திரனின் கைகளில் இருந்த நியந்தாவின் கை மெல்ல காற்றோடு கரையத் துவங்கியது….

    Share
  • பிறழ்வு வண்ணங்கள்

    -கவிஜி 

    வோல்கா கரையெங்கும்
    உன்கனவு மழை
    போத்தல்
    திறக்காத போதும்
    மதுவின் மழை
    என் மனங்கும்…!

    வழி மாறியதோ,
    விழி தூறியதோ,
    உள்ளம் பொங்கும்
    துளிகளின் நிலவுக் கூட்டம்…

    வண்ணப் பிறழ்வுகளின்
    மாமரத்துத் தனிமையென,
    தலைவிரித்த பெருமழைக்குள்
    நம் நிழல் வட்டம்…!

    காகிதப்பூக்கள் கப்பலான
    தத்துவத்தில்
    ஆளுக்கொரு ஜன்னல்
    நெடும் பயணம்…!

    திறவாத கூட்டுக்குள்
    திறம்பட வரைந்த
    தூரிகையில் சொட்டும்
    நிறமற்ற மழை
    குடியற்ற நம்வெளி…!

    மழைக்கு ஒதுங்கிய
    பாதங்களில்
    மனம் நிறைக்கும்
    மழை, வீடெங்கும்!

     

     

    Share
  • முரண்களின் முரண்!

    -கவிஜி 

    நதி எரிக்கிறது
    குளிர்உதிர்த்த
    மதியின் நிறம்!

    ——–

    இறுதி ஊர்வலத்தில்
    தெரியாமல் விழுந்துவிட்ட
    ஒரேஒரு முள்கூட
    மரணத்தை
    வன்மையாகக் கண்டிக்கிறது!

    ——–

    எல்லா ஊர்க்
    கோவில்
    ஆலய
    மசூதி
    வாசல்களிலும்
    இந்தியப் பிச்சைக்காரர்கள்!

    ——–

    தலைகீழாய்த்
    தொங்கும் கயிற்றில்
    நேராக இறங்குகிறது
    எறும்பு…!

     

    Share
  • அம்மா வீடு!

    -கவிஜி 

    என் வீடு
    அம்மா வீடாகிப்
    போனது…

    வந்து போகத்
    திருவிழாக்கள்
    தேவைப்படுகின்றன…

    என்குழந்தையை விட
    அண்ணனின் குழந்தையைச்
    சற்று அதிகமாகவே
    கொஞ்சுகிறார் அப்பா…!

    ஒரு பொம்மையைக் கூட
    கேட்டுத்தான்
    எடுக்க வேண்டி இருக்கிறது…
    சிரித்துக் கொண்டே
    மறுத்து விடுகிறார் அண்ணி…

    எனதறையில்
    பழைய பொருட்கள்
    போட்டு வைத்திருக்கிறார்கள்
    எனது பள்ளிக்காலச் சீருடைகள் உட்பட…

    ஏனோ இப்போதெல்லாம்
    அம்மா வீட்டை
    எனக்கும்
    அம்மா வீடென்றே
    சொல்லத் தோன்றுகிறது…!

     

     

    Share
  • ஜன்னல் தேசங்கள்!

    -கவிஜி 

    வீதி முழுக்க
    அடைத்துக் கிடக்க
    ஒற்றை ஜன்னல்
    மட்டும்
    திறந்தே கிடக்கும்
    வீட்டுக்குள்
    யார்தான் இருப்பார்கள்?
    என்றபடியே
    பயந்து பயந்து
    வீதியில் நடந்து
    மழையில் நனைந்தும்
    நனையாமலும்
    சுற்றும் முற்றும்
    பார்த்தபடி ஜன்னல்
    அருகே சென்று
    எட்டிப் பார்க்கும்
    முன் கணமொன்றில்
    ஏதேச்சையாக
    என்வீட்டு ஜன்னலை
    திரும்பிப் பார்த்தேன்…
    எப்போதும்போல்
    கன்னத்தில்
    கைவைத்து
    இந்த ஜன்னலைப்
    பார்த்துக் கொண்டிருந்தேன்
    நான்…!

     

    Share
  • கண்ணாடி பார்ப்பவள்…!

    -கவிஜி

    நீ கடந்த மரங்கள்
    எனை
    உதிர்க்கின்றன…

    ***

    வளையலுக்குள்
    மாட்டிக் கொண்ட
    விளிம்புகளில்
    நான் உடையப் போகும்
    வட்டம்…

    ***

    உன் கனவுக்குள்
    தூக்கம் இன்றி அலைகிறது
    திடுக்கென விழித்துக் கொண்ட
    என் இரவு…

    ***

    அறை முழுக்க வானவில்…
    வரையத் துவங்கினாள்
    கண்ணாடி பார்ப்பவள்…

    Share
  • பொம்மைகளின் காடு!

    -கவிஜி

    புலி, கரடி, சிங்கம்,
    குரங்கு, மான்
    காட்டு நாய், மயில்
    எனப் பல விலங்குகளிடையே
    ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்
    ‘சே’
    என்னை அவன்
    காட்டுக்குள் அனுமதிக்க
    மறுத்தான்….
    எவ்வளவு கெஞ்சியும்
    அனுமதிக்காத அவன்,
    கடைசியாக உதிர்ந்த
    யோசனையில் ஒரு முயல்
    பொம்மையை
    வாங்கிக்கொண்டு வந்த
    என்னைச்
    சிரித்துக் கொண்டே
    உள்ளேசெல்ல அனுமதித்தான்…
    முயல் பொம்மையை
    அவன் கூட்டத்தில்
    சேர்த்துக் கொண்ட பாங்கில்
    எங்கள் வீட்டு முகப்பறை
    ஓர் அடர்ந்த காடாகத்தான்
    தெரிந்தது…!

     

     

    Share
  • தி லாஸ்ட் செல்ஃபி

    –கவிஜி.

    இந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது…. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடோ ஆசையோ இல்லை…

    போகி…………………….றே………………………..ன்…

    என் சொந்த ஊருக்கு, நான் பிறந்த மண்ணுக்கு… நீண்ட நாட்களுக்கு பின்.. இல்லையில்லை நீண்ட வருடங்களுக்கு பின்…போகிறேன்.. மனதுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.. நொடிக்கொரு தரம் மாறும் மனநிலைக்குள் நான் எந்த நொடி என்பதுதான் எனது பதிலாக இருக்கிறது, மாறாக கேள்வியும் கூட…கேள்விகளினூடாக நினைவுகளும் பயணிக்கத்தான் செய்கிறது….பயணங்களின் ஊடாக நினைவுகளும் நிலைக்கண்ணாடி சுமக்கத்தான் செய்கிறது….

    எங்கள் ஊருக்கு ஜீன்ஸ் பேண்டை அறிமுகப் படுத்தியவன் நானே.. கான்வாஸ் ஷூ.. குளிர் கண்ணாடி.. ஒற்றைக் காதுக் கடுக்கன் என்று 90களின் உலகத்தை ஊருக்குள் கொண்டு சென்றவன் நானே.. அதன் மூலமாக எனக்கு கிடைத்த பெண் தோழிகளின் எண்ணிக்கை அதிகம்.. அதே போல் அதைக் கண்டு பொறாமை கொண்டு எனை வாய்ப்பு கிடைத்தால் அடித்து துவைக்க காத்துக் கொண்டிருந்த ஆண் நண்பர்களுக்கும் பஞ்சமில்லை…ஆனாலும் நானே.. இளவரசன் என்பது போலதான்….. பைஜாமா போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதாக இருந்தாலும் சரி…தொடை ஒட்டிய ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு வீதி வலம் வருவதாக இருந்தாலும் சரி… நானே… நாகரிகத்தின் குறியீடாக இருப்பது போலக் காட்டிக் கொள்வேன்.. மற்றவர்களும் காண்பார்கள்….

    எல்லாரும் சாதாரண மிதி வண்டி ஓட்டியபோதே நான் பைக் மாதிரியான மிதி வண்டியை ஓட்டியவன்.. கொஞ்சம் ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் என்னை சுற்றி எப்போதும் படிப்பு தொடபான விஷயங்கள் மொய்த்துக் கொண்டிருக்கும்.. ஊருக்குள் பல பேருக்கு கடிதம் எழுதிக் கொடுத்தும், படித்தும், பேர் வாங்கிய கொஞ்சம் புத்திசாலியும் கூட…..ஊரில் இருக்கும் என்ன மாதிரி பசங்க எல்லாருமே பயந்து கொண்டிருந்த குடுகுடுப்புக் காரனை…. பேயை போல வேஷம் போட்டு ஊர்க்கோடி வரை விரட்டி கொண்டுபோய் விட்டு வந்த கில்லி என்று பெரியவர்கள் மெச்சுவார்கள்….

    அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.. நான் எங்களூருக்கு இப்போது போவது எதற்கென்றால்……?……

    சேப்டர் ஒன்
    அது உங்களில் பல பேருக்கு மொக்கையாக் கூட இருக்கலாம். என்ன செய்வது எனக்கு மொக்கையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கலாம். உங்களுக்கு மொக்கையா இருப்பது அவருக்கு பிடிக்கலாம்… எல்லாமே சமநிலை யதார்த்தம்தானே…அப்ப,டி அது எனக்கு ஹாபி… இந்த ஸ்டாம்ப்ஸ் எல்லாம் சேர்த்து வைப்பது போல… இந்த பழைய கால நாணயங்களையெல்லாம் சேகரிப்பது போல… சரி அப்படி என்ன ஹாபி என்று யோசிப்பவர்கள் பின் தொடருங்கள்…… சொல்கிறேன்..சொல்லுதல் எல்லாமே சொல்லி விட்டவைகளின் நீட்சி என்று நான் நம்புவதே இல்லை..நம்பியவைகளை எல்லாம் சொல்லிவிடுவதும் இல்லை… ஒரு புதிருக்குள் தலையை மட்டும் விட்டு விட்ட உடலின் வாலின் துடித்தலைப் போலதான் இங்கு வாழ்வின் இரண்டாம் பாகம் துடித்துக் கொண்டேயிருக்கிறது…..

    சுழற்சிகளின் தத்துவ சாரத்தோடு பேருந்தை விட்டு இறங்கிய நான், ஊர்க்கோடியில் இருந்த அந்த மரத்தை நோக்கித்தான் சென்றேன்…. என்னை தாண்டிய சிலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை… நானும் கண்டு கொள்ளவில்லை… என் மனம் முழுக்க அந்த மரமே வியாபித்திருந்தது…இந்த மரத்தின் யோசனை எத்தனை இரவுகளில் கிளை அசைத்திருக்கும்……மனம் அசைய அசைய மரத்தை பார்த்தும் விட்டேன்….பார்க்க பார்க்க பரவசம்… என் கண் முன்னால் விதைந்து… செடியாகி.. மரமாகி இத்தனை காலத்துக்கு அப்புறமும் இங்கு இப்படி நிற்கிறதே….. காலத்தின் கிளைகளை என்னவென்று வர்ணிப்பது…! அடுப்பில் சட்டினியை வைத்துக் கொண்டு…. “குட்டி…. ஓடிப் போய் கருவாபுல்ல புடிங்கிட்டு வா” ன்னு அத்தை சொல்ல சொல்ல, நான் பாதி மரம் ஏறி இருப்பேன்… அடுத்த கணம் பிடுங்கிய கறிவேப்பிலை சட்டினியில் மணக்க மணக்க வதக்கப் படும்… இன்றும் மணக்கும் நினைவுக்குள் மரம் இன்னும் பெரியதாகி இருந்தது…. இருக்கிறது….இருக்கும்……

    சுற்றும் முற்றும் பார்த்தேன்.. யாரும் இல்லை… பறந்து கிடந்த வெளி எங்கும் வெறும் கட்டடங்களால் சூழ்ந்த ஒரு வேறு பகுதி போல தோன்றினாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கொண்டது புதியதாக இருந்தது…இரவு பகல் பாராமல் வாசல் எங்கும் மக்களின் கூட்டமும்…அப்பத்தாவின் கதையும்…வெண்ணிலவின் குளிரும்.. அடர் வெயிலின் நிறமும்…. தங்கிக் கிடந்த நாட்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை…. தொலைக்காட்சியை முடக்கி வைத்துக் கொண்டார்கள் போல…. ஜன்னல்கள் கூட அடைபட்டே கிடந்தன……மள மளவென ஏற முடியவில்லை என்றாலும்.. பார்த்து பார்த்து ஏறினேன்… அப்பிடி இப்பிடி என்று கறிவேப்பிலை மரத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்… ஏனோ காலத்தில் பின்னோக்கி ஏறி நடந்து வந்து என் பால்யத்தை அடைந்தது போலவே ஒரு மிரட்சி… மனதுக்குள் மட்டும் கறிவேப்பிலையின் இலையில் தங்கிய நேற்று பெய்த மழையின் குளிர்ச்சி…

    எனக்கு புன்னகையை அடக்கவே முடியவில்லை…சிறு பிள்ளையின் இனிப்புத் தேடல் போல எனது மனம் அலைந்தது….எடுத்தேன் என் செல்போனை… முகத்துக்கு நேராக நீட்டினேன்.. கறிவேப்பிலை மரத்தின் உச்சியிலிருந்து கறிவேப்பிலை பழங்களினூடாக என் முகம் விழுவது போல ஒரு செல்பி எடுத்தேன்… நான் முன்னமே சொல்லாமல் சொன்னது போல என் ஹாபிக்கு என் நினைவுகளின் துளியை விதைக்கும் பயணம் இது என்பது போல… வாழ்வின் சாட்சியாய்…. ஒரு பால்ய நண்பனைப் போல நான் எடுத்துக் கொண்ட இந்த செல்பி… என்னை தாலாட்டியது போல இருந்தது….. தூரத்தில் இன்னுமும் ஏதோ ஒரு வீட்டில் “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது”…பாட்டு பாடிக் கொண்டிருந்தது….. மெய்மறந்த, என் பிடி விலக… சர சரவென கீழே………..

    சேப்டர் டூ
    நீண்டு கிடந்த தனிமைக்குள் மீண்டும் நான் தேடிக் கொண்ட தனிமையோடு அமர்ந்திருந்தேன்… இதே ரயிலடியில் எத்தனை நாள் விளையாடி இருப்பேன்.. எப்போதாவது வரும் அந்த ஒற்றை ரயிலைக் காண எத்தனை நேரம் காத்துக் கிடந்திருப்பேன்.. ரயில் மீது இனம் புரியாத அச்சம் கொண்ட ஆசை மனதுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும், இழுக்காத நிறுத்தல்களைக் கொண்ட குறியீட்டு சொப்பனமாய் நான் மீண்டும் மீண்டும் ஒரு ரயிலின் பாதையாய் இருப்பது போல இன்று அமர்ந்திருந்தேன்…..

    என் இடது பக்க விலா சதையில் இருந்து ரத்தம் கசிவதை துடைத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்……கறிவேப்பிலை மரம் செல்பியில் கிடைத்த விழுதலில் இன்னும் கொஞ்சம் கீழே நகர்ந்திருந்தால் சதையை கிழித்த கூர் வாது.. வயிற்றுக்குள்ளும் சென்றிருக்கும்… கடைசி நேரத்தில் கிடைத்த இன்னொரு கிளை உயிர் காத்தது…நினைக்கவே உடல் வேர்த்தது….

    எத்தனை யோசித்தாலும்… என் சிறு வயது ரயிலுக்கு வண்ணம் பூசவே முடியவில்லை….. ஒரு கருப்பு வெள்ளை சினிமா படம் போலதான் ஓடி வந்து என்னைத் தாண்டி செல்லும் ரயிலை நினைக்க முடிகிறது…. ரயிலின் ஞாபகங்கள் எப்போதுமே தாலாட்டும் காலங்களைக் கொண்டவை… ஆனால் இன்று வரை நான் ரயிலில் பயணம் செய்ததே இல்லை என்பதை யோசிக்கும் போது, அன்று ரயிலைப் பார்க்க காத்திருந்த ஆசைக்கு கை கால் முளைத்து ஓட வைத்தது போலத்தான் நினைக்கிறேன்…..

    கண்களாய் நீண்டு விட்ட போதும் முழுக்க தண்டவாளத்தின் நீட்சியே….. ஒரு நதி போல திரும்பி பார்த்த பின்னும் வாலின் திரும்புதலாய் மீண்டும் நீண்டு கிடக்கும் இம் முனையை… இன்னும் கொஞ்சம் நீட்டித்துக் கொள்ளும் கற்பனையோடு இனம் புரியாத புள்ளிக்குள் அடைபட்டவனாக மிதந்தேன்…. தூரத்தில் கேட்கும் ரயிலின் ஓசையை துல்லியமாக இதயம் உள் வாங்கி எதிரொலிப்பதாக நினைத்த மாத்திரத்தில் ஒரு சதுர புள்ளியாக வரத் தொடங்கி இருந்தது ரயில்….

    ‘அதே ரயிலா’- என்று கேட்ட மனதோடு எழுந்து நின்றேன்……. தண்டாவாளத்தில் நடுவில் நின்ற போது மனதுக்குள் ஏதேதோ கிளிக்கியது….. ‘இது என் ரயில்’- என்ற ஒரு வகை இருள் மாப்புடன் என் செல்போனை எடுத்து என் முகத்துக்கு நேராக நீட்டி செல்பி எடுக்கத் தயாராக இருந்தேன்… ரயில் என் அருகே வரும் போது செல்பி எடுத்து விட்டு எட்டிக் குதிப்பதுதான் திட்டம்….

    ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது… நன்றாகவே சத்தத்தையும்.. வேகத்தையும் உள் வாங்க முடிந்தது…… ஏனோ கை நடுங்கத் தொடங்கியது… காதோரம் வியர்வை கொப்புளங்கள் உடைந்து வழிந்தன……. கால்கள் பலம் இழப்பது போல ஒரு நிஜம் என்னை சுற்றி அலையடித்தது…ரயிலின் பெரும் ஓலம் மிக அருகில் கேட்டது… என் பெரு விரல் வேலை செய்யாமல் இருப்பது போல தோன்ற, நொடியில் ஒரு முறை கிளிக் செய்தேன்… தொடுதிரையில் விரல் படாமலே வேகமாக தன் தலையை எடுத்துக் கொண்டது போல இருந்தது… என்ன செய்வதென்றே தெரியவில்லை.. எதற்கு நிற்கிறேன் என்றே மறந்து போனது…இன்னும் ரயிலின் நேரக்கத்தின் தூரம் குறைந்தது ….மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு சதுரத்தில் குவித்து… கண்களை கூர்மையாக்கி…கிளிக்கி விட்டேன்…. ஆனால் என் உடல் நடுக்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆடி விட.. மீண்டும் மீண்டும் முயற்சிகளில் கிளிக்கிக் கொண்டேயிருக்க…………… இருக்க…………………. க்க……………………. ரயில் என் முதுகுக்கு அருகே வந்து…வந்து……ந்து…………து…. வந்து விட்டதை செல் போன அப்படியொரு பயங்கர சத்தத்தோடு பிரதிபலித்தது……. இதோ.. இதோ.. அடுத்த நொடி….

    சேப்டர் 3
    எல்லா கிராமத்திலும்.. ஒரு கதை சொல்லி இருப்பார்கள்…. கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கும்… இந்த வீடு.. எங்கள் ஊர் கதை சொல்லியின் வீடு.. இந்த திண்ணையில்தான் கதை சொல்லியான எங்கள் எல்லாருக்கும் சொந்தமான, பொதுவான அப்பத்தா உட்கார்ந்திருக்கும்… விடிய விடிய சுவற்றைப் பார்த்து விட்டு விடிந்த பின், “இன்னுமா படம் போடறானுங்க.. நான் போறேன்”- என்று எழுந்த போதுதான்.. தான் திரையைப் பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்ததை உள் வாங்கி கொள்ளும் அளவுக்கு ஏதோ ஒரு கதையின் ஓட்டத்தை மனதுக்குள் ஓட விட்டுக் கொண்டேயிருக்கும், ஒரு சுவாரஷ்யமான கதாபாத்திரம் எங்கள் அப்பத்தா………

    வெள்ளிக்கிழமை இரவென்றால் அது பேய் கதைக்கான நாள்.. அதுவும் அடுத்த இரண்டு நாட்கள் பள்ளிகள் விடுமுறை என்பதால் பள்ளி விட்டதுமே வீட்டுக்கு சென்று துணி மாற்றிக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று என்னைப் போல உள்ள பசங்களையும், பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு ஏதோ திருவிழாவுக்கு போவது போல படை திரட்டிக்கொண்டு வரும் நான் ஒரு கதாநாயகனாகவேதான் தோன்றுவேன்.. அப்படி ஒரு நினைப்பு….. அப்பத்தாவும்.. கதை சொல்லும் போதெல்லாம் அதிகமாக, என்னையேதான் பார்த்து பேசும்.. அடிக்கடி உதாரணதுக்கு.. “இப்போ இவன் இருக்கானே…” என்று என்னைத்தான் கை காட்டி பேசும்… ரயிலில் அடி பட்டு இறந்த யானை பேயின் கதையை சொன்ன நாளில்தான்.. ஊருக்குள் முதன் முதலாக ஒரு முக்கியமான நபர் வந்தார்… நாங்கள் அவரை கண்டு கொள்ளாமல் யானைப் பேயின் கதைக்குள் மூழ்கிக் கிடந்தோம்……

    அப்பத்தா கதை சொல்ல சொல்ல கதாபாத்திரங்கள் நம் அருகே செல்வதைப் போலவே இருக்கும்…. நம்மோடு கலந்து உரையாடுவது போல இருக்கும்… பேய்க் கதைகளின் பேய்கள் நம்மை ஊடுருவி பார்ப்பது போலவே இருக்கும்…… அப்படி ஒரு ஆளுமை.. வார்த்தை பிரயோகம்… கதைகள், காடு மலைகளைத் தாண்டி ஒரு தேவதையைத் தேடி ஓட வைக்கும்… இரவெல்லாம் விரட்டிய பேயிடம் மாட்டிக் கொள்ளாமல்… கிராமம் கிராமமாக ஓடிக் கொண்டேயிருக்கும் கதை நாயகன் பேயிடம் மாட்டிக் கொண்ட கதையைக் கூட காப்பாற்றியபடியே ஓடிக் கொண்டிருப்பான்……. அவன் ஓட்டம் தடை படும் நேரத்தில் எல்லாம்.. எங்களின் வாய் பிதுங்கும்…… விட்டால் அழுகையே வந்து விடும்…. எங்களின் முக குறிப்பை புரிந்து கொண்டு கதையை சாமர்த்தியமாக நீட்டிக் கொண்டு செல்லும் அப்பத்தா…. புதிர்களின் முடிச்சாகவேதான் தெரிந்தது…..

    ஒரு கதையில்கூட கெட்டவன் வெற்றி பெற்றது போல அப்பத்தா, கதையை முடிக்காது…..

    “தர்மம்தான் ஜெயிக்கணும்..”- என்று அடிக்கடி சொல்லும்.. “தீமை அழியத்தான் வேணும்….. நல்லவனா இருக்கத்தானே இந்த பொறப்பு.. அது கதையா இருந்தா என்ன… நிஜமா இருந்தா என்ன…?.. ரெண்டும் ஒன்னுதான்”- என்று அடிக்கடி அடிக் கோடிட்டு கதையை துவக்கும்… அல்லது முடிக்கும்…..

    அப்பத்தாவுக்கென்று யாரும் சொந்த பந்தங்கள் கிடையாது.. எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இந்த வீட்டில்தான், அதுவும் இந்த திண்ணையில் தான் உட்காந்திருக்கும்.. தூங்கும்.. பெரும்பாலும் பகலில் தூங்கிக் கொண்டேயிருக்கும்…இரவில் விழித்துக் கொண்டே கதை தேடிக் கொண்டிருக்கும்….கேட்டால் சொல்லும்…. “கதைங்கறது கதையில்ல, அது நிசம்…. அதை தேடிட்டே இருக்கனும்…. விட்டா உசுரு மாதிரி ஓடிப் போய்டும்…”- என்று தொடர்ந்து பேசும்.. பேச பேச பேசிக் கொண்டே இருக்கும் சொற்களின் கூட்டாஞ்சோறுக் குவியலாய் எங்களுக்கு மட்டும் ருசி சேர்ந்து கொண்டேயிருக்கும்……

    சிறுகதை… குறுங்கதை.. தொடர்கதை.. ஒப்பாரிபாட்டு.. பிறந்த நாள் பாட்டு… நாற்று நட பாட்டு… சமைந்த பெண்ணுக்கு பாட்டு…இறப்புக்கு பாட்டு என்று எப்போதும்.. கதைகளும் பாட்டுகளும்தான்….. இவை அனைத்தும் இலக்கியங்கள் என்று தெரியாமலே இங்கேயே வாழ்ந்து இங்கேயே முடிந்தும் போன அப்பத்தாவை நினைக்க நினைக்க மனதுக்குள், விட்ட கதை தொட்ட கதை விடாமலும், தொடாமலும்.. துரத்துவதை உணர முடிந்தது….எத்தனையோ அப்பத்தாக்கள் சொல்ல முடியாத கதைகளோடு, கதைகளாய் ஆகி விடுவதை கோடிட்டுக் கொண்டே இருந்த மனதோடு……ஊருக்குள் தனித்துக் கிடந்த வீட்டில் யாருமில்லாமல் இடிந்து பாழடைந்து கிடந்த திண்ணையின் ஓரத்தில் அமர்ந்தேன்….மனக் கண் முன்னால் அப்பத்தா திண்ணையில் அமர்ந்திருப்பது போலவும் நாங்கள் கீழே அமர்ந்து அப்பத்தாவையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிகள் முன் பின்னாக ஓடின..அடித் தொண்டையில் அடிக்கடி சிரிக்கும் அப்பத்தாவின் குரல் கூட கேட்பது போலதான் இருந்தது அந்த நிமிடம்…

    அப்பத்தாவின் ஆன்மா எனக்குள் ஏதோ ஒரு கதையை சொல்ல முயற்சிப்பதாக நினைக்கத் தூண்டியது.. அங்கு சட்டென வீச ஆரம்பித்த கறிவேப்பிலை வாசம்…. கறிவேப்பிலை துவையல் மீதிருந்த அப்பத்தாவின் ஆசையை ஞாபகமூட்டியது…

    கதைசொல்லிகளின் மனதில்தான் கதைகளின் ஆரம்பவும் முடிவும் கணக் கச்சிதமாக அமர்ந்து விடுகின்றன……. மனம் கனத்த மௌனத்துக்குள் செல்ல செல்ல.. நான் என் செல்போனை எடுத்தேன்.. ஏற்கனவே எடுத்த செல்பிகளை மீண்டும் தொடுதிரை நகர்த்தி நகர்த்தி பார்த்தேன்….மனம் ஒரு வித அலைக்குள் தடுமாறி ஆழ்ந்த மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது போல உணர்ந்தேன்….. … கறிவேப்பிலை மர உச்சியில் எடுத்த செல்பி.. என்னை ஒரு சிறு பிள்ளையாக காட்டியது போல இருந்தது….. அடுத்து…………. நகர்த்தினேன்…..அடுத்து…………. நகர்த்தினேன்…. ரயிலின் முன்னால் நொடிகளில் உயிர் தப்பிய செல்பி…. பட படக்கும் காற்றில் மிதந்து செல்லும் ஒரு போர் வீரனைப் போல காட்டியது….. புன்னகைக்க தோன்றியது…. திக் திக் நொடிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின் ஒரு சமயம் பார்க்கும் போது… கிடைக்கும் திர்லிங்… கைகளின் மயிர்கால்கள் நட்டுக் கொண்டன……. மைக்ரோ நொடிகளில் உயிர் தப்பிய ….செல்பியல்லவா…!

    சிரித்துக் கொண்டே … மெல்ல தலையை சாய்த்து.. அப்பத்தா அமர்ந்திருக்கும் இடத்தோடு தலையைக் காட்டி ஒரு செல்பி எடுத்தேன்.. எடுக்க எடுக்கவே உடலை வளைத்து நின்ற கால்கள்… தடுமாறி…திரும்பி..

    “என் கண்கள்… என் கண்கள்… அப்பத்தா……”………………………… கத்தினேன்…..

    சேப்டர் 4
    “நான் வந்த ரயிலில் தான் அந்த யானை அடி பட்டு செத்து போச்சு”- என்றுதான் எங்களிடம் பேசவே ஆரம்பித்தது ஷைலஜா… எனக்கு ஷைலஜாவைப் பார்க்க பார்க்க ஒரு புது மாதிரியாக இருந்தது…..

    சைலஜா…. எப்டி இருக்கும் என்று எப்படி சொல்வது……?…!….

    இந்த சினிமாக்களில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு படித்த பெண், தாவணி பாவாடையில் வெல வெலவென ஒல்லியாக, வளர்ந்து ஜடையை தூக்கி முன்னால் போட்டுக் கொண்டு, மாலை நேரங்களில் சிறுவர்களுக்கு பாடம் எடுப்பார்களே.. அந்த மாதிரி ஒரு பெண்… அந்த மாதிரி எங்கள் ஊரில் எந்த பெண்ணும் இருந்ததில்லை. எப்போதும் குளித்து, தலை முடியை காற்றில் அலைய விட்டு… உதட்டு சாயம் பூசி… பள பளக்கும் குட்டிகுரா பவ்டர் போட்டு… அதுவும் அவ்ளோ உயரத்தில் பார்க்கவே, பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும் அழகு….

    தூரத்தில் வந்தாலும் மினுங்கும் ஒற்றை மூக்குத்தி… முகத்தை இன்னும் அழகாக்கி காட்டும்.. நான் நிறைய தடவை நேராகவே, “அக்கா நீங்க ரெம்ப அழகு” என்று கூறி இருக்கிறேன்… ஷைலஜா என்னை பிடித்து இழுத்து என் கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தம் பதித்து…. “என்ன அக்கானு எல்லாம் கூப்ட வேண்டாம்… ஷைலுனு கூப்டு, அதான்.. அழகா இருக்கும்” என்று கண்ணடித்தது..

    நானும்.. முதலில் தயங்கி தயங்கி ‘ஷை…ல் …லு….” என்று மெல்ல முணங்கிக் கொண்டே அழைத்தேன்…. வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் “ஷைலுலுலுலுலுலுலுலு……………..” என்று சத்தமாக கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன்… மெல்ல பழகியது…… பல நாள் இரவுகளில் வெண்ணிலா முகம் பிரகாசிக்கும் மொட்டைமாடியில்… நான் அப்பத்தா கூறிய பேய்க் கதைகளை கூறுவேன்… கண்கள் அகல விரிந்து… பின் மெல்ல சுருக்கி … உதடு குவித்து… பின், கதையின் போக்குக்கு தகுந்தார் போல முகம் மற்றும் உடல் விரியும் ஒரு மோகினியைப் போல மாற்றிக் கொள்ளும் ஷைலுவின் பாவங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே செய்யாது…

    “அப்பத்தா கதை சொன்ன அந்த வெள்ளிக் கிழமையில் வந்த அந்த முக்கியமான ஆள் இந்த ஷைலுதான்…” என்று குழந்தையின் கன்னத்தை பிடித்து இழுப்பது போல நான் அவ்வப் போது செய்வது ஷைலுவுக்கு ரெம்ப பிடிக்கும்…

    “அது ஏன் ஷைலு…….தினமும்.. நம்மூர் ஆம்பளைங்க எல்லாம் தெரியாம தெரியாம இங்க வராங்க.. அப்போ மட்டும் நீ என்னை வீட்டுக்கு போக சொல்லிர்ற….. ஏன்?…..” என்று கேட்ட போது.. என்னை சற்று நேரம் முறைத்து பார்த்து விட்டு,……. ‘வா’…… என்று அருகே அழைத்து இறுகக் கட்டிக் கொண்டது…. அதன் பிறகு நான் கேட்பது இல்லை…….

    ஒரு நாள் நீண்ட நேரம் அழுது கொண்டிருக்கும் போல…. முகம் வீங்கி கண்கள் சிவந்திருந்தது….

    “ஏன் சைலு அழுதிருக்க…. என்னாச்சு….?”- என்று கேட்டேன்..

    என்னைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தபடி “சீக்கிரம்… தம்பி பாப்பா பொறக்க போறான்.. எனக்கு பயமா இருக்கு…. இன்னைக்கு என் கூடயே படுத்துக்கோ”- என்று என்னை அணைத்து என் வயிற்றில் முகம் புதைத்து தூங்கிப் போனது…. நான் தூக்கம் வராமல்.. வெகு நேரம் விழித்துக் கிடந்தேன்…

    காலையில், “ஆமா உனக்கு வயசென்னடா.. உன் உயரத்தை வச்சு சொல்லவே முடியல” என்று கேட்டது…

    நான் ’13’ என்றேன்.. மெல்ல திறந்த புன்னகையோடு.

    சிரித்துக் கொண்டே கன்னம் பிடித்து கிள்ளியது ஷைலு…

    அதன் பிறகு…. நான் ஊரை விட்டு போக வேண்டியதாய் இருக்க, எல்லாவற்றையும் விட்டு சென்றது போல ஷைலுவையும் விட்டு சென்றேன்.. காலத்தின் ஓட்டத்தில் மறதி என்பதை விட.. ஞாபகம் என்பதே அதிகம் இருந்தாலும்… தூரம் அதிகமானது போலதான் இருந்தது… என்று யோசித்துக் கொண்டே ஷைலுவைப் பார்க்க சைலுவின் வீட்டு பக்கம் போய்க் கொண்டிருக்கும் போதுதான்.. ஆங்காங்கே சிலர் நிற்பதும், குனிந்து கொண்டு போவதும் வருவதுமாக இருந்தார்கள்….

    கண்களில் பட்டாம் பூச்சிகள் சிறகில்லாமல் பறப்பது போல ஒரு பிரமை…என் கண்ணுக்கருகே வலித்த கன்னப்பரப்பை கையால் தேய்த்துக் கொண்டே முன்னேறினேன்….. அப்பத்தாவை திண்ணையில் கட்டி வைத்திருந்த கம்பி வளையத்தின் முனையில் என் பேண்ட் மாட்டவில்லை என்றால் அப்பத்தாவின் திண்ணையை செல்பி எடுத்த போது உடல் வளைந்த நொடிகளில் தடுமாறி சரிந்து.. பின் சரி செய்து கொள்ள திமிறியதில் அப்பத்தாவின் திண்ணையில், மேல் சட்டத்தில் அடித்திருந்த ஆணி என் தடுமாற்ற விழுதலில் என் கண்ணுக்குள் போயிருக்கும்… கால் தடுமாறியதில் காலம் மெல்ல நகர ஆணிக்குள் போக வேண்டிய கண்ணுக்கு பதில் கன்னம் உரசிப் போனது…

    நினைக்கும் போதே கண்ணுக்குள் ஊசி குத்துவது போல இருந்தது… ஒரு முறை கண்ணை தடவிக் கொண்டே, அப்பத்தாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடந்தேன்…. யாரும் என்னை கண்டு கொள்ளாமல் வேலையைப் பார்த்தபடி இருந்தார்கள்… சொல்லப்போனால் யாருமே யாரையுமே கண்டு கொள்ளவில்லை…ஒரு வேளை என் முகம் மறந்திருக்கலாம்… ஷைலுவின் வீட்டு முன் ஒரு துக்க வீட்டைப் போல, நின்றவர்களின் பாவனை இருந்தது…..

    ஆம்.. அது துக்க வீடுதான்..

    ஷைலு இறந்து விட்டதாம்…. கேட்ட நொடி திக் என்று நின்று யோசித்து… அழுகை, முடியாத மன நிலையில் நான் மெல்ல வீட்டுக்குள் சென்றேன்… வயதான ஷைலுவின் முகம் இன்னும் பழைய முகமாகவே இருந்தது…. கூட்டம், என்னை யாரோ ஒரு வாடிக்கையாளன் என்று கூட நினைத்திருக்கலாம்…. நினைப்பது தானே… நினைப்புக்கு ஏது தொடக்கம் அல்லது முடிவு… யாரும் கண்டு கொள்ளவில்லை.. எனக்கு ஷைலுவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது…கண்டிப்பாக ஆசை தீர அழுகை தீர கட்டிக் கொள்ள வேண்டும்…எப்படி கட்டிக் கொள்வது…? ஆனால் கட்டிக் கொள்ள வேண்டும்… ஆன்மாவுக்குள் கேட்கும் அலறல் சத்தம் ஷைலுவுக்கு கேட்டிருக்கும்….. நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதிக்க வேண்டும்… எத்தனை கதைகளை சொல்ல நினைத்து வந்தேன்… சொல்லவும் முடியாமல்.. சொன்னாலும் கேட்க முடியாத இடத்தில் நான் ஷைலுவைப் ஆழமாய் பார்க்க ஷைலுவும் என்னை மட்டுமே பார்ப்பது போல இருந்தது….

    “என்னதான் இருந்தாலும் அவ பையன் வராம, பொணத்தை எடுக்கறது நியாயம் இல்ல.. அவன் வந்த பின்னால எடுத்துக்கலாம்..வந்துட்டு இருக்கானாம்”- என்ற கூட்டம் மெல்ல கலையத் துவங்கியது…ஏனோ பிணம் காக்கும் இரவில்தான் அதிகமாக பசிக்கிறது….. எனக்கு ஒப்பாரி வைத்து அழ வேண்டும் போல தோன்றியது ….சில பாட்டிகள் ஆங்கங்கே சிணுங்கிக் கொண்டிருந்தார்கள்…

    இரவை துளைத்த நேரத்தில் பிணம் இருந்த அறைக்குள் யாருமே இல்லை… நான் உள்ளே போனதையும் வெளிய தூங்கிக் கொண்டிருந்த சில பெருசுகள் கண்டு கொள்ளவில்லை… நான் உள்ளே சென்று கதவை நன்றாக சாத்தி விட்டு ஓடிச் சென்று ஷைலுவை வாரி அணைத்துக் கொண்டேன்…… கனமாக இருந்து ஷைலுவின் …. காதுக்குள் ரகசியமாய் கூறினேன்..

    “நான் தான் நான்தான் என்று..”

    ம்ஹும்.. அசைவே இல்லை…. எத்தனை அன்பும் அரவணைப்பும் இறந்த உடலை ஒன்றுமே செய்வது இல்லை… கன்னம் பிடித்து கிள்ளிப் பார்த்தேன்….. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல கிடந்தது ஷைலு…. நன்றாக அணைத்து என் மார்போடு ஷைலுவின் தலை இருக்கும்படி வைத்துக்கொண்டேன்.. காலம் முழுக்க யார் யார் தலையையோ தாங்கிய மார்பு இது….. இன்று துக்கப் பட்டு விசனப் பட்டு நொந்து சுருங்கிக் கிடந்தது…. எனக்கு நண்பர் ஒருவர் எழுதிய ஒரு கவிதைதான் ஞாபகம் வந்தது…….

    மென் முலைகள்
    பருத்து, நின்று
    வசீகரித்து,
    செவ்வரிகளாகி, சிவந்து
    காலை மாலை எவ்வேளையும்
    கண் நிரப்பும்
    சிறு மலையாகி
    பின், மெல்ல மெல்ல
    சரிந்து, விழுந்து
    மறந்து போகும்
    நாளில்
    மாராப்பு சரி செய்ய
    தோன்றாத
    மென் நடையோடு
    எங்கள் வீதி அழகி ஒருத்தியின்
    கதையை
    முடித்து வைக்கிறோம்….

    ஷைலுவை சாய்த்துக் கொண்டு தாலாட்டினேன்…ஒரு குழந்தையைப் போல முகத்தை ஏந்திக் கொண்டேன்…தலையின் கனம் நேரம் கூட கூட அதிகமாகிக் கொண்டேயிருக்க தலையை நேராக சாய்க்க நான் சற்று என் உடலைத் திருப்பினேன்… யாரோ என் தலையை இன்னும் சற்று ஷைலுவின் முகத்தைப் பார்த்து வேகமாக இழுத்தது போல இருந்தது ….

    “ஷைலுலுலுலுலுலு” என்று சத்தமே வராமல் கத்தினேன்…

    சேப்டர் 5
    இறுதிச் சடங்குக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க, நான் பிணம் போல அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் … சட சடவென எல்லாம் நடந்தது.. ஷைலுவின் பையன்… வேண்டா வெறுப்பாக தீ மூட்டி விட்டு வேகமாக போய்க் கொண்டிருந்தான்…..ஊரும் அவன் பின்னால் ஒழுக்கத்தின் வரிசையைப் போல போய்க் கொண்டிருந்தது….நான் ஷைலு எரிவதைப் பார்த்துக் கொண்டு கரைந்து கொண்டிருந்தேன்…..கரைதலில் நேற்றைய இரவு மூளைக்குள் கொட்டியது….. நேற்று ஷைலுவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு செல்பி எடுத்த போதுதான் அந்த செந்தேள், மேலே சிதிலமடைந்த கரும்புகை அப்பிய ஓட்டில் இருந்து நேராக என் முகத்தை நோக்கி விழுந்தது….. கண நேரத்துக்குள் யாரோ இழுத்தது போல நான் என் தலையை இடம் மாற்றியதில் அந்த செந்தேள் என் தலை இருந்த இடத்தில் விழுந்தது….என் தலை தப்பியது…

    அடிக்க எதுவும் கிடைக்காத போது… ஷைலுவின் கையைக் கொண்டே செந்தேளை நசுக்கினேன்…. மனதுக்குள் பெரும் புயல் ஓயாமல் வீசிக் கொண்டே யிருப்பது போல என் செல்பி ஆசையும்..உச்சி மழைக் காற்றாய் வந்து போனது…. நினைக்க நினைக்க என் மனநிலை மேல் எனக்கு சந்தேகம் வரத்தான் செய்தது….. எரிய எரிய மெல்ல எழுந்து அமர்ந்த ஷைலுவின் நெஞ்சில் ஒருவன் ஓங்கி ஓங்கி தடியால் அடித்தான்..

    “அட …பாவி…மார்புகளின் சுமையை இறக்கி வைக்கவே விரும்பியவள் ஷைலு…. இன்று இறுகிப் போன பின் இத்தனை அடி எப்படி தாங்குகிறாள்…”-என்னால் அங்கு அமர முடியவில்லை…. எழுந்து நடந்தேன்…. வேகமாக நடந்தேன் ….

    சற்று தூரம் தள்ளி ஒரு தம்பதி ஒரு குழந்தையை அழுதுகொண்டே குழிக்குள் போட்டு மண்ணை தள்ளத் தொடங்கியிருந்தார்கள்…. மரணங்களிலேயே குழந்தையின் மரணம் மிக கொடுமை ஆனது என்று மனம் வேறு திசையில் பயணிக்க தொடங்குகையில் சட்டென உள்ளே இருந்த பிசாசு விழிக்கத் தொடங்கியது…என் செல்போனை எடுத்துக் கொண்டு அந்த குழந்தையின் அருகே செல்பி எடுக்க சென்றேன்…”செல்பி எடுக்காவிட்டால் அந்தக் குழந்தை உயிர் பெற்று விடுமா என்ன?” என்று சமாதானம் வேறு சொல்லிக் கொண்டது மனம்…. அப்போதுதான் ஒன்றை …கவனித்தேன்… அந்த குழந்தை மிகக் குறைவாக மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை நன்றாகவே பார்க்க முடிந்தது……. அது தெரியாமல் கணவனும் மனைவியும் மண்ணை அள்ளி அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்……

    நான் கத்தினேன்..

    “டேய்… குழந்தை இன்னும் சாகலடா… இன்னும் சாகலடா……..ஏம்மா…. நிறுத்துமா.. குழந்தை சாகல.. உயிர் இருக்கு…”

    யாருக்குமே நான் கத்துவதோ அங்கு நான் இருப்பதோ, கேட்கவில்லை…………… தெரியவில்லை…………………

    சேப்டர் ?
    நேற்றிரவு ஷைலு வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு (அதுவும் பாழடைந்த பழைய வீடுதான் ) சென்று இருட்டுக்குள் வெகுநேரம் அமர்ந்திருந்தேன் ,…. ஒரு கரப்பான் பூச்சி என் கன்னத்தில் உரசுவதும்….பறப்பதுமாக இருக்க ஜன்னலோரம் மெல்ல நகர்ந்து சென்று திறந்திருந்த சாளரத்தின் விளிம்பில் சாய்ந்து நின்றேன்.. அப்போதுதான் நிலா தன்னை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்ததோ என்னவோ… பளிச்சென ஒரு இரவைக் கண்டேன்…

    வந்து வந்து போய்க் கொண்டும்.. கன்னம் காது மூக்கு நெற்றி என்று பட்டும் படாமல் சிறகடிப்பதுமாக இருந்த கரப்பான் பூச்சியியோடு ஒரு செல்பி எடுக்க சட்டென்று ஒரு குரங்கு மனதுக்குள் தாவியது… கரப்பான் பூச்சி கன்னம் உரசியவுடன் செல்பி எடுப்பதுதான் எனது திட்டம்… திட்டதை தாண்டியும் கரப்பான் பூச்சி என் மூக்கின் நுனியிலே அமைந்தது.. நிலா வெளிச்ச நேரத்தில் சிலு சிலு காற்றில்… தனிமை இருளுக்குள் மௌன சாட்சியாக அந்த கரப்பான் பூச்சி என்னிடம் கொண்ட நட்பின் சாட்சியை செல்பியாய் எடுத்த மறுகணம்… நான் சற்றும் எதிர்பார்க்காத நொடியில் கரப்பான் பூச்சி என் மூக்கினுள் நுழைந்தது, படு வேகமாக….. அவ்ளோ தான்… தலைக்குள் பம்பரம் சுழல்வுது போல நான் கிறுகிறுத்து தடுமாறி…… திரும்பியதில் சுவற்றில் அடித்திருந்த ஆணியில் என் நெற்றியைக் கொண்டு சொருகினேன்……..

    சூடாக என் மூக்கில், கன்னத்தில் வழிந்த குருதியை தொட, தொடவே நெற்றியை வேகமாக வெளியே உருவின சற்று நொடியில் கிறுகிறுத்த தலை சாளரத்தை தாண்டி கீழே சரிய, முழு உடம்பும்…….கீழே சரிந்தது…மாடியில் இருந்து சரிந்த நான் கீழே இருந்த ஒரு கறிவேப்பிலை மரத்தின் நடுவே விழ, குத்தி கிழிக்கப்பட்ட வயிற்றோடு வலி தாங்காமல் மாட்டிக் கொண்ட மரத்திலிருந்து எட்டிக் குதிக்க, நான் எகிறி இப்போது விழுந்தது என் வீட்டுக்கு பின்புறமுள்ள கறிவேப்பில்லை மரத்தை ஓட்டிப் போய்க் கொண்டிருக்கும் தண்டவாளத்தில்…….

    கண நேரத்தில் வந்து போன ரயிலுக்குள் நான் வெறும் சதைகளாகக் கிடந்தேன்.. என்னோடு சில தேள்களும் செத்துக் கிடந்தன….

    இந்த சேப்டர்க்கு நீங்களே எண் கொடுத்துக் கொள்ளுங்கள்…

    Share
  • இவன்

    – கவிஜி

    இவன் - ஒரு பக்க கதை- கவிஜி

    அவன், அந்த வீட்டின் பின்புற சுவற்றில் ஏறி உள்ளே குதித்தான்….

    மனக் கண்ணில் ஒருமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்…

    இதே வீடு தான்…

    குறைஞ்ச பட்சம் 200 சவரன் நகை இருக்கும்….வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே, திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றிருக்கிறார்கள்.. நம்பகமான இடத்தில் இருந்துதான் செய்தி கிடைத்திருக்கிறது… முதுகில் தொங்கிய பேக்கை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.. ஏனோ புன்னகை வந்தது,…

    சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்…அந்த வீட்டை சுற்றி யாரும் இல்லை… பின் கதவை சில பல தொழில் நுட்பத்தோடு திறந்து, உள்ளே சென்றான்…. ஒரு பூனையைப் போல அவன் பாதங்கள் மிதந்தன… மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டே நகை இருக்கும் அறைக்குள் சென்றான்…. நேரத்தைப் பார்த்தான்..

    மணி நள்ளிரவு 2.30….

    எல்லாம் சரியாக நடக்க வேண்டும்…. போட்ட திட்டப்படி இம்மி பிசகாமல் அத்தனையும் நடக்க வேண்டும்….. மனதை ஒரு நிலைப் படுத்தினான்…. அறையில் ஓரமாய் இருந்த இன்னொரு பீரோவை ஒட்டி ஒரு ஜன்னல் இருந்தது…. மெல்ல ஜன்னலை திறந்து வெளியே பார்த்தான்… மஞ்சள் வெளிச்சத்தில் வீதி உறங்கிக் கொண்டிருந்தது…

    பேக்கை திறந்து வைத்துக் கொண்டான்…. வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்…. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிய வேண்டும்… அறை முழுவதும் புழுக்கத்தால் ஒரு வித சூட்டுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது….

    அவன், அனுமானத்தின் படி….அந்த இரு திருடர்களும் வீட்டுக்குள் நுழைந்து பீரோவுக்கு அருகில் வர..பேக்கில் இருந்த சைலன்சர் போட்ட துப்பாக்கி கொண்டு பட் பட் என்று சுட்டு விட்டு வந்த வழியே ஓடத் துவங்கினான்….

    நாளை இரவு கணுவாய் காலனிக்கு போக வேண்டும்… என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்த அவன்… இவன் என்ற ஆபரேசனில் நகரில் எங்கெல்லாம் கொள்ளை நடக்க இருக்கிறதோ அங்கெல்லாம் முன் கூட்டியே சென்று கொள்ளைக்காரர்களை போட்டுத் தள்ளும் ஸ்பெசல் ஆபீசர்….

    இவன்…

    கவிஜி

    Share