-கவிஜி
நீ கடந்த மரங்கள்
எனை
உதிர்க்கின்றன…
***
வளையலுக்குள்
மாட்டிக் கொண்ட
விளிம்புகளில்
நான் உடையப் போகும்
வட்டம்…
***
உன் கனவுக்குள்
தூக்கம் இன்றி அலைகிறது
திடுக்கென விழித்துக் கொண்ட
என் இரவு…
***
அறை முழுக்க வானவில்…
வரையத் துவங்கினாள்
கண்ணாடி பார்ப்பவள்…

Leave a Reply