கண்ணாடி பார்ப்பவள்…!

0

-கவிஜி

நீ கடந்த மரங்கள்
எனை
உதிர்க்கின்றன…

***

வளையலுக்குள்
மாட்டிக் கொண்ட
விளிம்புகளில்
நான் உடையப் போகும்
வட்டம்…

***

உன் கனவுக்குள்
தூக்கம் இன்றி அலைகிறது
திடுக்கென விழித்துக் கொண்ட
என் இரவு…

***

அறை முழுக்க வானவில்…
வரையத் துவங்கினாள்
கண்ணாடி பார்ப்பவள்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *