-கவிஜி

புலி, கரடி, சிங்கம்,
குரங்கு, மான்
காட்டு நாய், மயில்
எனப் பல விலங்குகளிடையே
ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்
‘சே’
என்னை அவன்
காட்டுக்குள் அனுமதிக்க
மறுத்தான்….
எவ்வளவு கெஞ்சியும்
அனுமதிக்காத அவன்,
கடைசியாக உதிர்ந்த
யோசனையில் ஒரு முயல்
பொம்மையை
வாங்கிக்கொண்டு வந்த
என்னைச்
சிரித்துக் கொண்டே
உள்ளேசெல்ல அனுமதித்தான்…
முயல் பொம்மையை
அவன் கூட்டத்தில்
சேர்த்துக் கொண்ட பாங்கில்
எங்கள் வீட்டு முகப்பறை
ஓர் அடர்ந்த காடாகத்தான்
தெரிந்தது…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *