-கவிஜி
வா…வந்து
தேநீர் போடு…
மதிய மழை வரட்டும்…
***
என்றாவது திறக்கப்படும்
ஜன்னலில் திறக்காமலே
கிடக்கின்றன கைகள்…
***
ஜென் தத்துவம் ஒன்றுமில்லை
ரொட்டித் துண்டு
பெரிதென்கிறது…
***
எறும்புகளைக்
கொண்டாடுகிறது
வரிசை…
***
முதலில் இளையராஜாவின்
பாடலைச் சொல்…
பின், காதலை சொல்…

Leave a Reply