ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 47

0

சி. ஜெயபாரதன்.

 

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“அப்படியே அச்சம், அறியாமை, கோழைத்தனம் உள்ள ஏழைக் குடிசைகள் வழியாக அவற்றைப் புறக்கணிக்காமல் பார்க்கப் போய் வருவீர் ! விரைவாய் இயங்கும் விரல்களும் நுட்பக் கருவிகளும் கொண்டு தேசத்தின் சொத்தைப் பற்கள் தோண்டிய குழியை நிரப்பித் தேய்வுகளை மறைத்து வரும் பல் மருத்துவர் வசிக்கும் இல்லத்திற்கும் சென்று வருவீர் !”
கலில் கிப்ரான். (Decayed Teeth)
___________________

பூமியின் சீற்றம் !
___________________

புயலடிப்பு ! இடி இடிப்பு !
தீப்பிடிப்பு ! இவைதான்
புவி காட்டும் சீற்றங்கள் !
மனித இதயத்தில்
மண்டும் வெறுப்பு பொறாமை
தீவினை –
இவற்றுக்கு ஒப்பாகும் !
மக்கள் கூக்குரலும்
இழப்பு அழுகுரலும் அவற்றால்
இன்னலும், விபத்தும்,
இதர எச்சரிக் கைகளும்
எனது மனத்தில்
நினைவு கொணரும்
காட்சிகள் !
காலத்தின் நாடக அரங்கில்
காணும் கூத்துகள் !
___________________

நான் காண்கிறேன் இந்த
மானிடனை !
பூமித் தளமெங்கும் அவன்
எழுப்பிடும்
வரலாற்றுத் தூண்கள்,
கோபுரம், மாளிகை, நகரம்,
கோயில்கள் !
நான் காண்கிறேன் இந்த
பூமியை !
அது கடுஞ் சினமுற்று
அந்தக் கட்டடத்தை எல்லாம்
பெயர்த் தெடுத்துத்
தனது நெஞ்சுக் குள்ளே
புதைத்துக் கொள்ளும்
சீற்றமுடன் !
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *