Blog

  • ‘PuthiyaThalaimurai digitizes Newspaper synopsis

    9th Feb. 2015 ‘PuthiyaThalaimurai digitizes Newspaper

    As a go green initiative New Gen Media launches its Digital Smartpaper ”PuthiyaThalaimuraiIndru.”

    apu
    Chennai based New Gen Media Corporation having proved its mettle in publication, news and entertainment broadcasting is all set to climb the next rung of the ladder – on to the digital platform with the launch of itssmartpaper ”PuthiyaThailaimuraiIndru”on Monday, 9th February 2015 at 9 am.

    apu1
    At the click of the mouse “PT Indru” will reach the Inbox of the subscribers who can access this smart paper with a personalised special code to enjoy the pleasure of reading a virtual print newspaper.

    Speaking on the launch – Mr. R.B.U Shyam Kumar – CEO of New Gen Media Corporation claims ”PuthiyaThalaimuraiIndru is a blue ocean initiative, where we are not competing with any other existing medium. This smart paper is a convergence of print, radio, television and technologyprimarily aimed to cater to the Tamil diaspora across the world.”

    apu2

    a) How it differs from a regular e-paper

    ”PT Indru” is designed like a typical print news paper withadditional advanced features of watching, reading and listening to content. Unlike an e-paper, it will have news in video and audio formats besides another document format for reading which is why it’s being called“a smart paper.”
    Shyam said ”Today we have consumers expecting multiple digital options. After analysing different patterns of news consumption, we have designed ”PT Indru” with smart features catering to all forms of news consumption. Yet another feather to the cap is the eco friendly approach that we have adhered to. We are not using any news print that is made out of felling trees to print the news paper. We can proudly claim that this is a go-green initiative from our socially sensitive group. Yet another added advantage is that the readable news items can be downloaded in PDF format in any gadget for future reading purposes.”

    b) At the Marketing Front

    The pre launch survey, analysis and advertisements of ”PT Indru” have proved that consumers from the age group between 18 to 34 years are keenly interested in the smartpaper. Hitherto, there have been considerable amount of enquiries from the Tamil population living overseas mainly fromUS, UK, Australia, and Canada.

    To quote Mr. Shyam, “I’m expecting a huge response from the Tamil population across the globe, since we are delivering them a virtual Tamil news paper to their gadgets which can be accessed anywhere anytime with utmost convenience which may not be possible with a conventional print news paper. We would like to cater to one lakh subscribers soon. The annual subscription of ”PT Indru” is Rs 99/- which means 30 paise per day.”

    apu3

    c) Why paid Subscription

    In the digital market where free content is widely available, the launch of ”PT Indru” in a paid subscription format is seen as an early attempt by the content provider for monetising the digital content which indeed is a rare phenomenon in today’s world.
    Mr. Shyam justifies their move stating ”we don’t want to encourage anything free…. because, according to us – anything that comes free always has a lesser attention from the consumers. So when they pay, their expectation and concentration on our content will be more and their valuable feedback will trigger us to perform better.Moreover, we are charging a very nominal price of Rs 99 per year, which is just the cost of designing and developing this medium, thereby in the actual sense we are not charging the consumer for content and still. This is indeed much less expensive than the ordinary newspaper” recounts Mr.Shyam.

    d) Advertising opportunities

    There are various advertising options available in ”PT Indru” similar to the print news papers. There will be a Front page premium, Backpage, Right hand page, Banners etc… which will have the special features of linking the brand or advertisers portal with all these advertisements that will redirect the consumers towards their websites.

    e) Brand Positioning

    Upholding the vision of the Group’s President Mr.Sathyanarayanan, ”PT Indru” is being positioned, as a symbol of change in accordance with the changing times. Hence our earnest attempt to replace an ordinary print news paper with our digital smartpaper, more so to cater to the vibrant technologically advanced young generation of smart digital consumers, who are so inclined to their digital life with smartphones, tablets and laptops.

    As a publisher and broadcaster, PuthiyaThalaimurai exhorts the advertisers and consumers “to come along with us to adapt and cater to the changing world of the new generation of consumers – hence our brand name “NewGen Media.”
    f) Editorial

    The editorial affairs of the smartpaper ”PT Indru” will be handled by an efficient team headed by Ms. Jeeva who has moved out of ‘Dinamalar’ publications to join PuthiyaThalaimurai.

    Regarding the editorial Mr. Shyamrecounts ””PT Indruwill have a curated content from our other mediums as a leveraging exercise with inputs from PT’s broadcasting, publications, stingers etc.We will also have special content designed exclusively for the consumers of our smartpaper such as cinema and lighter viewing or reading materials which are not part of our other mediums due to positioning issues.”

    g) Technical Team

    The technical part of ”PT Indru” initiative is sphere headed by Boopi who has a very rich knowledge of digital space. His team is in the process of developing applications for the smart phones which will be rolled out shortly after the launch.
    To put it in a nutshell, New Gen Media Corporation is geared up to pioneer the digital space with the launch of its smartpaper ”PT Indru” which will be followed by a whole range of digital magazines in different genres.
    ***********************

    Share
  • படக் கவிதைப் போட்டி!

    அன்பினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    10968398_790635987695368_6964584805244615655_n

    நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் அவர்களால் நம் குழும உறுப்பினரான அனிதா சத்யம் அவர்கள் இந்த மாதத்தின் சிறந்த ஒளிப்படக் கலைஞராகத் தேர்வு பெறுகிறார். அவர் எடுத்த படத்தை, கவிதைப் போட்டிக்கான முதல் படமாக அறிவிக்கிறோம். அழகோவியமான இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • காலம்

    மீ.விசுவநாதன்

    ilaiyuthir_web

    கனிவு , பணிவு , கவனச் சிறப்பு ,
    பனிபோல் தெளிவாய்ப் பழகு மினிமை ,
    உதவும் குணத்தா(ல்) உயர்ந்த பதவி
    பதமாய் அமைதல் பலம்.

    Share
  • பிரதமர் மோதிக்கு ஒரு கடிதம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    Narendra_Modi-Oct-12

    புதுதில்லியில் இந்துத்துவவாதிகள் சில கிறிஸ்தவத் தேவாலயங்களையும் பள்ளிகளையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகள் உங்களைப் பார்த்து இந்த மாதிரி வன்முறைகளைத் தடுக்கும்படி 2014 டிசம்பரில் மனுக் கொடுக்க வந்தபோது அவர்களைச் சந்திக்க நீங்கள் மறுத்திருக்கிறீர்கள். இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. பெங்களூரில் நடந்த இந்திய கத்தோலிக்க மாநாட்டில் கலந்துகொள்ள வருவதாகயிருந்த வாடிகனைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு மத்திய அரசு விசா கொடுக்க மறுத்திருக்கிறது. இவர்கள் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவுக்கு வருவதற்கு விசாவுக்கான விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார்கள். கடைசி நாள் வரை அவர்களுக்குப் பதில் எழுதாமல் இருந்துவிட்டுக் கடைசி நாளில் நொண்டிச் சாக்குகள் சொல்லி அவர்களுடைய விசா விண்ணப்பங்களை நிராகரித்திருக்கிறார்கள். விண்ணப்பத்தில் எப்படிப்பட்ட தவறு என்று எந்த விளக்கமும் கூறப்படவில்லை. நீங்கள் தெரிந்தும் தெரியாதது மாதிரி இருந்தீர்கள்.

    பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து மஹாசபா, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற இந்துத்துவவாதக் கட்சிகள் தங்கள் கொள்கைகளையும் அதன் மூலம் செயல்களையும் மக்களிடையே பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மொகலாய மன்னர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னும் பிரிட்டிஷ் காலனீயவாதிகள் இந்தியாவை ஆள ஆரம்பிப்பதற்கு முன்னும் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த எல்லோரும் இந்துக்களே எனவும், அதனால் இப்போது அவர்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லி அப்பாவி மக்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றுகிறார்கள். குடிமக்கள் எல்லோருக்கும் பிரதம மந்திரியான நீங்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

    ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் இந்துக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இந்தியக் கலாச்சாரமாகவும் பாரம்பரியமாகவும் எடுத்துக்கொண்டு அவற்றைக் காப்பதாகக் கூறிக்கொண்டு இளைஞர்கள் மனதை தங்கள் கொள்கைகளின் பக்கம் திருப்ப முயன்று வருகிறார்கள். இதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் நீங்கள் மௌனம் சாதித்தீர்கள்.

    குஜராத்தில் பி.ஜே.பி.யின் மதவாதக் கொள்கை பற்றிப் பேசுவதற்காகத் தன் மனைவியுடன் சென்றுகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கடசியைச் சேர்ந்த ஒருவரையும் அவர் மனைவியையும் இந்துத்துவவாதிகள் சுட்டிருக்கிறார்கள். இதைப் பற்றியும் நீங்கள் எதுவும் கூறவில்லை.

    இதுவரை மௌனம் சாதித்துவந்த நீங்கள் திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்னால் புதுதில்லியில் நடந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பிறரை மதம் மாற்ற முயற்சிப்பவர்களைக் கண்டிப்புடன் எச்சரித்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னதாகப் பத்திரிக்கையில் வந்ததை அப்படியே கீழே தருகிறேன். “மதத்தின் பெயரால் வன்முறை நிகழ்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; சமூக அமைதியைக் குலைக்கும் அத்தகைய வன்முறைகளைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”. மேலும் நீங்கள் கூறியது: “‘சப்கா சாத்; சப்கா விகாஸ்’ என்ற கொள்கையின் அடிப்படையில் எங்கள் அரசு செயல்படுகிறது. இதை ஒவ்வொரு மேஜையிலும் உணவு; ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில்; ஒவ்வொருவருக்கும் வேலை; ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் மற்றும் கழிப்பறை’ என எளிதாகக் கூறலாம். இந்தக் கொள்கைதான் இந்தியாவைப் பெருமையுடைய நாடாக மாற்றும். ஒற்றுமை மூலம்தான் நாம் இதை அடைய முடியும். ஒற்றுமை நம்மை பலமடையச் செய்யும். வேற்றுமை நம்மை பலவீனமடையச் செய்யும்”. மேலும் நீங்கள் கூறியது: “எங்கள் அரசு எல்லா மதங்களுக்கும் சமமான மதிப்பளிக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்ற முழுச் சுதந்திரத்தை அரசு உறுதிசெய்கிறது. பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த மதக் குழுக்களோ அல்லது சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த மதக் குழுக்களோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருவருக்கு ஒருவர் வெறுப்பை உமிழ, மோதலை ஏற்படுத்த விட மாட்டோம். மதத்தின் பெயரால் வன்முறை நிகழ்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய வன்முறைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.”

    நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் ‘டில்லியில் கிறிஸ்தவப் பள்ளிகள் மீதும் தேவாலயங்கள் மீதும் நடந்த வன்முறைகளை அனுமதிக்க முடியாது. அது தொடர்பான குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு சமுதாயத்தில் இடமில்லை’ என்று கூறியிருக்கிறார்.

    இந்தத் திடீர் மாற்றம் உங்களிடம் எப்படி, எப்போது வந்தது? இந்தியாவிற்கு வந்துவிட்டுப் போன அமெரிக்க அதிபர் ஒபாமா தான் திரும்பிச் செல்வதற்கு கொஞ்ச நேரம் முன்பு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நாசூக்காக மத நல்லிணக்கம்தான் இந்தியாவுக்கு நல்லது. இந்தியர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்தியா முன்னேறும்’ என்று சொன்னதன் விளைவா? பின் அவர்கள் நாட்டிற்குச் சென்ற பிறகு அங்கு நடந்த ஒரு ஜெபக் கூட்டத்தில் இந்தியாவில் இந்துக்களல்லாத இந்தியர்கள் மேல் நடக்கும் வன்முறைகளை அறிந்தால் காந்திஜி அதிர்ச்சி அடைவார் என்று சொன்ன பிறகா?

    இதைவிட முக்கியமாக டில்லி சட்டசபைத் தேர்தலில் மக்கள் உங்கள் கட்சியை மூன்றே இடங்களில் ஜெயிக்கவைத்து உங்கள் கட்சியோடு தொடர்புடைய இந்துத்துவவாதக் கட்சிகள் செய்த செயல்களும் அவற்றை நீங்கள் கண்டிக்காததும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை உங்களுக்கு உணர்த்திய பிறகா? தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தலில் உங்கள் கட்சி வேட்பாளர் டிபாசிட் இழந்த பரிதாபத்தைப் பார்த்த பிறகா?

    எந்த நிகழ்ச்சி உங்களை மாற்றியிருந்தாலும் இந்திய மக்களாகிய எங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை பிறக்க வேண்டுமானால் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் நீங்கள் கூறியவற்றை அப்படியே செயலில் காட்ட வேண்டும். குஜராத்தில் கம்யூனிஸ்ட் தலைவரைச் சுட்டவர்களைத் தீவிரமாகத் தேடிப்பிடித்து அவர்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். மறுமதமாற்றம் செய்பவர்கள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கவேண்டும். மதம் சார்ந்த வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும்படி சட்டம் இயற்ற வேண்டும். இதைப் பயமின்றிச் செய்ய போலீஸ், சி. பி. ஐ., அரசு தரப்பு வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். ‘லவ் ஜிஹாட்’ என்னும் பெயரில் காதலர்களைப் பிரிப்பவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும். எல்லா மதத்தினரின் முக்கிய தினங்களிலும் அவர்களை இந்தியப் பிரதமர் என்ற முறையில் நீங்கள் மனதார வாழ்த்த வேண்டும். ட்விட்டர் செய்தி எல்லாருக்கும் போய்ச் சேராது. இந்துக்கள் நிறையப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் சாமியார்களின் வாயை அடைக்க வேண்டும். நீங்கள் பேசும் மேடைகளில் எல்லாம் மத நல்லிணக்கத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்தியா முன்னேற அது ஒன்றுதான் வழி என்று அடித்துச் சொல்ல வேண்டும். பாடப் புத்தகங்களில் மத விரோதத்தைத் தூண்டும் பாடங்களை அகற்ற வேண்டும். கிறிஸ்தவ நிகழ்ச்சியில் நீங்கள் பேசியது உங்கள் உள்ளத்திலிருந்து வந்தது என்று நாங்கள் நம்ப வேண்டுமானால் மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் நீங்கள் செய்து காட்ட வேண்டும்.

    செய்வீர்களா?

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 45

    –சு. கோதண்டராமன்.

    துன்பம் நீங்க வேதம் கூறும் வழி

    boston.com.bigpicture

     

    நம் விருப்பம் நிறைவேறாமல் தடுக்கும் தடையே துன்பம் என்பது. இது வேதத்தில் பல சொற்களால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சொல்லும் துன்பத்தின் ஒரு குறிப்பிட்ட வகையைக் குறிக்கிறது.

    ரேபஸ் என்பது அங்கக் குறைபாட்டைக் குறிக்கும். தேவர்கள் ரேபஸ் இல்லாதவர்கள் என வேதம் கூறுகிறது.

    நோயைக் குறிக்க ரபஸ், அமீவா என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ருத்ரன் ரபஸை நீக்குபவராகக் கூறப்படுகிறார். (2.33.7)          மருத்துகளே, உடைந்த எலும்பைச் சரி செய்து ரபஸை நீக்குக என்கிறது மற்றொரு ரிக். (8.20.26)

    உயிர் வாழத் தேவையான உணவு, நீர் இவை கிடைக்காத நிலை, அதாவது வறுமை – அம்ஹஸ், அம்ஹதி என்ற சொற்களால் கூறப்படுகிறது. இந்திரா எங்களுக்கு செல்வம் கொடுத்து அம்ஹஸை நீக்குக என்கிறது ஒரு மந்திரம். (4.20.9) சிறையிலகப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல் முதலியனவும் இதே தலைப்பில் அடங்கும்.

    நமக்கு நெருங்கினவரது மரணத்தால் ஏற்படும் துன்பம் அகஸ் अघस्. எங்களது அகஸ்ஸைப் போக்கிச் செல்வத்தை அருளுக, அக்னியே என்கிறது வேதம். (1.97.1 )

    இந்த சூக்தத்தில் உள்ள எட்டு மந்திரங்களும் சிதைக்கு எரி மூட்டுவதற்கு முன்பாக, பிரேதத்தைச் சுற்றி வரும்போது சொல்லப்படுகிறது.

    அக்னியே எங்களை அகஸ்ஸுக்கோ, விஷகடிக்கோ உள்ளாக்காமல் காப்பாயாக.(1.189.5)    

     எங்களுக்குத் துன்பம் தருபவர்க்கு நீ அகஸ்ஸைக் கொடுப்பாயாக. (5.3.7)

    பிறருக்குக் கொடுக்காமல் உண்பவன், மரண துக்கம் வரும்போது அதைத் தனியாக அனுபவிக்கிறான் என்பதைக் கேவலாதி கேவலாக: என்று சுருக்கமாகக் கூறுகிறது ஒரு ரிக். (10.117.6)      

    பிரத்தியட்சமாக அனுபவிக்கும் துன்பங்கள் மட்டுமன்றி, வரவிருக்கும் துன்பம் வராமல் காப்பாற்ற வேண்டும் மந்திரங்கள், இந்திரா, எங்களைத் துன்பத்தில் தள்ளாதே (1.54.1)   போன்று பல உள்ளன.

    துரிதம் என்பது எல்லா வகையான துன்பங்களையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்.

    பெரும்பாலான மந்திரங்கள் எங்களது துன்பத்தை நீக்கு என்றுதான் வேண்டுகின்றன. என்னுடைய துன்பத்தை நீக்கு என்று வேண்டும் மந்திரங்கள் மிகக் குறைவு.

    துன்பத்தின் காரணத்தைப் பற்றிக் கூறும்போது, மனிதர்களால் ஏற்படுவது, தேவர்களால் கொடுக்கப்பட்டது என இரண்டு வகையாகப் பிரிக்கிறது வேதம் – மர்த்ய க்ருதம், தேவ க்ருதம். மனிதரால் ஏற்பட்ட துன்பத்தையும் தான் செய்த தவற்றினால் ஏற்படுவது, மற்றவர்கள் செய்த தவற்றினால் ஏற்படுவது என இரண்டாகப் பிரிக்கிறது.

    எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளிலிருந்தும் நாங்கள் செய்த தவறுகளிலிருந்தும் எங்களை விடுவிப்பாயாக. (7.86.5)           மற்றவர்கள் செய்த பாவத்தின் பலனை நாங்கள் அனுபவிக்காமல் இருப்போமாக.(2.28.9)

    திரிகளின் சாபத்தால் ஏற்படும் துன்பத்திலிருந்து (அபிசஸ்தி), காக்குமாறு வேண்டுகிறது. (1.18.3, 6.42.4)       

    தான் செய்த தவறு என்பது ஆகஸ் (आगस्) எனப்படுகிறது. அதுவே சிறியதாக இருந்தால் அது ஏனஸ் எனப்படுகிறது.

    எது பாவம்? ருதத்தை (இயற்கை நியதியை) மீறுவது பாவம். அதன் விளைவாகத் தேவர்கள் துன்பம் கொடுக்கிறார்கள். ருதம் என்பது மேலோரைப் போற்றலும் சார்ந்தோரைக் காத்தலும் ஆகும் என்பதை முன்னர் பார்த்தோம். மனிதன் ஏன் ருதத்தை மீறுதலாகிய பாவத்தைச் செய்கிறான்?

    பாவத்திற்குத் தூண்டு கோல்கள் யாவை என்று ரிஷி பட்டியல் இடுகிறார். அவை மது, கோபம், சூது, அறியாமை, கனவுகள் என அறிகிறார். பாவம் செய்யாதிருக்கப் புத்தி கொடு என்று வேண்டுகிறார். (7.86.6,7.)

    மற்றொரு மந்திரத்தில், அறியாமை, ஆணவம், கவனமின்மை, தூண்டுதல்களை எதிர்கொள்ள முடியாத பலவீனம் ஆகியவை பாவம் செய்வதன் காரணமாகக் கூறப்படுகின்றன. (4.54.3)   

    செயலால் செய்யப்படுவது மட்டும் பாவம் அல்ல. வாயினால் தவறாகப் பேசுவதும் பாவம் என்கிறது வேதம்.

        மற்றவர்களிடம் பேசுவதிலோ, மற்றவர்களைப் பற்றிப் பேசுவதிலோ, தெரிந்தோ தெரியாமலோ தூங்கும்போதோ விழித்திருக்கும்போதோ நாங்கள் என்ன தவறு செய்தாலும் அதை வருங்காலத்திலும் செய்யாமல் காப்பாயாக. (10.164.3)

    பாவத்திலிருந்தும் அதன் விளைவான துன்பத்திலிருந்தும் தப்புவது எப்படி? பிரார்த்தனை ஒன்றுதான் வழி. தேவர்களைச் சரணடைந்து மன்னிப்புக் கேட்பதுதான் துன்பங்களிலிருந்து நீங்க வேதம் கூறும் ஒரே மார்க்கம்.

    தேவர்களைச் சரணடைந்து விட்டால் துன்பங்களிலிருந்து தப்பித்து விடலாம் என்ற துணிச்சலில் பாவம் செய்து கொண்டே இருக்கலாமா? முடியாது. தேவ பூசைக்கு முன்னதாக நாம் நம்மைப் பாவங்கள் இல்லாதவர்களாகச் செய்து கொள்ள வேண்டும்.

    “பாவம் நீங்கினால்தான் தேவ பூசை செய்யலாம், தேவரைப் பூசித்தால்தான் பாவம் நீங்கும்” என்பது குழப்பமாகத் தோன்றும். இதன் பொருள் என்னவெனில், பாவத்தைப் போக்கிக் கொள்ள நம்முடைய முயற்சியும் அவசியம், அதாவது செய்த பாவங்களுக்காக நாம் மனமார வருந்த வேண்டும் என்பதுதான். மனதில் பாவ நாட்டம் இல்லாமல் தூய்மை செய்து கொண்டால்தான் பூசை செய்வதற்கு உரிய தகுதி கிடைக்கும். பூசை செய்வதன் மூலம் பாவத்தின் விளைவுகளைத் தேவர்கள் நீக்குவார்கள்.

    தேவர்களைப் பூசிப்பதால் செய்த பாவங்கள் போவது மட்டுமல்ல, இனி வருங்காலத்தில் பாவம் செய்வதற்குக் காரணமான எண்ணங்களும் நீக்கப்பட்டு மனம் தூய்மை அடையும் (10.63.8)  என்பது தெரிகிறது. ஆண்டாளின் திருப்பாவையில் வரும் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது அல்லவா?

    பாவக் கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி:

    புராண காலத்தில் ருதம் என்ற கருத்துரு மறைந்து முழுமுதல் கடவுள் என்ற கோட்பாடு உண்டாயிற்று. அந்நிலைக்கு சிவனை உயர்த்தின சில நூல்கள். விஷ்ணுவை உயர்த்தின வேறு சில நூல்கள்.

    ருதம் வழக்கு ஒழிந்ததால் ருதத்தை மீறுதல் பாவம் என்பதும் மறைந்தது. பிறர்க்கு துன்பம் தருவது தான் பாவம் என்ற எண்ணம் பரவலாயிற்று. அத்துடன் பிறர்க்கு உபகாரம் செய்தல் புண்ணியம் என்ற புதிய கருத்தும் வளர்ந்தது. பரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம்.

    இது புத்த சமயத்தின் தாக்கமாக இருக்கக் கூடும்.

     

     

     

    Picture Source: http://www.boston.com/bigpicture/2013/04/daily_life_march_2013.html

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(140)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    உங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.

    இந்த இனிய மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்க்கை என்பது மிகவும் விசித்திரமானது. ஒரே சூழலில் ஒரே வகை வசதிகளுடன் ஒரே வாழ்க்கை முறையில் வாழும் இருவரின் வாழ்க்கை முன்னுக்குப் பின்னாக அமைந்து விடுவதும், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வசதிகளுடன் வந்தவர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக அமைந்து விடுவதும் நான் இயற்கையாக… கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்.

    மிகவும் அழகான திட்டத்துடன் தாம் போகும் பாதையைத் தீர்க்கமாக தீர்மானித்துக் கொண்டு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குவோர் எத்தனையோ பேர் தாம் கனவில் கூட எண்ணியிராத ஒரு வாழ்க்கையை அடைந்து விடுவதை நான் பல இடங்களில் கண்டுள்ளேன்.

    அதேசமயம் எந்த வித இலக்குகளும், திட்டமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்போரைப் பார்த்து இவர்களது வாழ்க்கை இப்படித்தான் இருக்கப் போகிறது என்று எண்ணி விட்டு பல வருடங்களின் பின்னால் அவர்களைச் சந்திக்கும் போது நாம் முற்றிலும் எண்ணியிராத ஒருவகை வாழ்க்கையில் அவர்களைச் சந்திக்கும் நிலமைகளும் உண்டு.

    அதற்காக வாழ்வில் எதுவித இலக்குகளுமின்றி, லட்ச்சியங்களுமின்றி வாழ்வதுதான் முறை என்பதல்ல எனது வாதம். வாழ்க்கைச் சக்கரத்தின் சுழலில் சிக்கும் போது எங்கே எப்படி வெளிவருகிறோம் என்பது சிலசமயங்களில் எமது கைகளில் தங்கியிருப்பதில்லை.

    இங்கே நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவது ஒரு இளம் தாய் நம்பிக்கையோடு தனது வாழ்க்கைப் பயணத்தை தான் திட்டமிட்ட திசையில் செலுத்தி அதி வெற்றி கண்ட ஒரு சம்பவமே !

    எதற்காக இது என்கிறீர்களா?

    நம்மில் பலர் தாயானதும், முதிய வயதினை அடைந்ததும் நாம் ஏதோ செல்லாக்காசு என எண்ணி நம்மை நாமே ஒதுக்கி வைத்து விடும் மனநிலையை அடைகிறோம்.

    உலகில் பிறந்த அனைவருமே இவ்வுலகில் ஏதோ ஒரு வகையில் மிகவும் திறமையுள்ளவர்களாகவே இருக்கிறோம். வாழ்வின் மத்திய பருவத்தை அடைந்து விட்டோம் என்பதற்காக நமது உபயோகமான பருவம் முடிந்து விட்டது என்று எண்ணக் கூடாது.

    rclarke2ரிபெக்கா கிளார்க் (Rebecca Clarke) எனும் ஒரு இளம் தாய் தன்னுடைய மகள் பள்ளிக்குச் சேர்ந்ததும், வெறுமனே தன்னுடைய மகளை பள்ளிக்குக் கூட்டிச் செல்வதும், பள்ளியிலிருந்து திரும்பக் கூட்டி வருவதும் தான் தன்னுடைய பணி என்று இருந்து விடவில்லை.

    தன்னுடைய மகள் படிக்கும் அந்தப் பள்ளியிலே தானும் ஏதாவது வகையில் ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

    அதே பள்ளியில் சம்பளம் வாங்காமல், மதிய இடைவேளையின் போது சிறு குழந்தைகள் தமது உணவை உண்ணும் போது மேற்பார்வை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

    திருமணம் ஆகி குழந்தை பெறும் முன்னர் ஒரு கணணி நிறுவனத்தில் பணிபுரிந்த அவர் குழந்தை பிறந்ததும் அந்தப் பணியை விட்டிருந்தார்.

    குழந்தைகளோடு பழகும் போதும், அவர்கள் புத்தகங்களை வாசிக்கும் போது அதனால் அவர்கள் அடையும் திருப்தியைக் கண்ட அவர் தான் தனது எதிர்காலத்தை இக்குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக செலவு செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

    விளைவு !

    rclarkeசும்மா இருக்கவில்லை குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் பயிற்சியை பிரத்தியேகமாகப் பயின்றார்.

    நாளைய தலைமுறைக்கு சிறந்த முறையில் அடிப்படை அமைத்துக் கொடுக்கும் பணியில் தன்னை அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று இலட்சியத்தை வகுத்துக் கொண்டார்.

    என்னே ஆச்சரியம் அடுத்த வருடத்தில் அதே பாடசாலையில் 5 அல்லது 6 வயதுக் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் பணியிலமர்ந்தார்.

    வெறுமனே ஊதியத்திற்காக மட்டும் உழைக்கும் ஒரு வாத்தியாரம்மாவாக இருக்காமல் தனது மனத்திருப்திக்காக குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை சீராக கொடுக்க முனைந்ததால் அவரது முன்னேற்றம் துரித வேகத்தில் இருந்தது.

    சாதாரண ஆரம்பக்கல்வி ஆசிரியராக பணியிலமர்ந்த ரிபெக்கா கிளார்க் அற்புதமான ஆசிரியராக நிர்வாகத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.

    rclarke1விளைவாக, மதிய உணவுவேளை மேற்பார்வையாளராக தனது லட்சியப்பயணத்தை ஆரம்பித்தவர் அப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

    உண்மை. உன்னத உயர்ந்த லட்ச்சியம், அயராத உழைப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை இவைகளை தமது அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டவர்கள் தமது இலட்சியப் பயணத்தில் நிச்சயம் வெற்றி அடைவார்கள் என்பது அசைக்க முடியாத உண்மை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமா ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கையெழுத்து! தலையெழுத்து!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    பிச்சை போட வேண்டாம்!
    புகழ் தேட வேண்டாம்!
    ஏழை எளியோரை  நினைத்துப் பாருங்கள் – அந்த 

    அல்லாஹ்வே உங்களுக்குத்  துணையிருப்பார்!

    இருப்பதை வைத்துச் 
    சிறப்பாய் வாழ்வோம் 
    இறைவனை வணங்கி!

    நிம்மதியாய் இருப்போம்
    போட்டி பொறாமை  

    சண்டை சச்சரவு
    இவையெல்லாம் எதற்கு?

    மனதிலே விஷமென்றால் 
    எதற்கு மனிதாபிமானம்?

    மனதில் நச்சுத்துளி கலந்து
    சமூகத்துக்கு எழுதி என்ன பயன்?
    உறவுகளைப் பசிக்க விட்டுவிட்டுப் 
    பணத்தினைக் கட்டிக்காத்து என்ன பயன்?

    மனமும் உடலும் கருகிய பின் 
    குடும்பம் இருந்து  என்ன பயன்?
    சோற்றில் விஷத்தைப் போட்டுவிட்டு 
    வேடிக்கை பார்த்து  என்ன பயன்?
    உறவே சீரழிந்த பின்

    பணமும் பிணமும் எதற்கு?

    எழுத்தில் எல்லா வரிகளும் 
    தலைக்கனம் நோக்கிப் போகிறது!
    உடலும் உள்ளமும் ஊனமுற்றே 
    வாழ்வு வீணாய்ப் போகிறது…

    கையெழுத்து 
    நன்றாகயில்லையெனினும் 
    பரவாயில்லை – தலையெழுத்து 
    நிம்மதியாக அமைய 
    வழிகாட்டுங்கள்…!

    ஒருவனின் கதை கவிதை கட்டுரை அல்ல 
    ஒரு இனத்தின் வேதனை…!

     

    Share
  • காணா இன்பம் கனிந்ததேனோ…

    — கவிஞர் காவிரிமைந்தன். 

    kaana inbam

    எழுதப்பட்ட பாடலை எந்த ராகத்தில் பொருத்துவது என்று யோசித்து… அதை அடிப்படையாகக் கொண்டு வார்த்திடும் இசையமைப்பு பெரும்பாலான பழைய பாடல்களில் காணலாம். சபாஷ் மீனா திரைப்படத்திற்காக தொடுக்கப்பட்ட இப்பாடல்… காணா இன்பம் கனிந்ததேனோ… பாடியிருப்பவர்கள் திரு.மோதி மற்றும் பி.சுசீலா… பாடலை இயற்றியவர் கு.மா. பாலசுப்பிரமணியம். இசையமைத்திருக்கிறார் டி.ஜி.லிங்கப்பா.

    SABASH MEENAஎண்ணிலடங்காத இன்பத்தை அள்ளித்தரும் பாடலிது! பாடல் வரிகள் தம் பங்கிற்கு பாதை வகுத்துக் கொடுக்க… பயணம்போவது இசை ஆலாபனைகள்! அதுவே இப்பாடலின் உச்சம் என்றும் சொல்லலாம்! இருவர் குரலும் அதற்கேற்றவாறு தாள லய ஜதியுடன் இணைந்து மேல்ஸ்தாயி வரை படரும் அழகு… கேட்கத்திகட்டாத பாடலாய் இதனை மாற்றியிருக்கிறது!

    1958ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மாலினி மற்றும் பலர் நடித்திருக்க… இனிய கானம்… காணா இன்பம் கனிந்ததேனோ… திரைப்பாடலைக் கேட்க விருப்பமில்லாதோர்கூட இப்பாடலில் மயங்கியதும் கேட்டுக் கிறங்கியதும் உண்மைதானே!!

    காணா இன்பம் கனிந்ததேனோ …
    காணா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலந்தானோ
    ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ …

    காணா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலந்தானோ
    வானம் சிந்தும் மாமழை எல்லாம்
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ …
    ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    வானம் சிந்தும் மாமழை எல்லாம்
    வானோர் தூவும் தேன்மலரோ?
    வானோர் தூவும் தேன்மலரோ?

    மேகம் யாவும் பேரொலியோடு
    மேகம் யாவும் பேரொலியோடு
    மேளம் போலே முழங்குவதாலே
    காணா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலந்தானோ …

    கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
    விண்ணில் வாண வேடிக்கையோ?
    மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
    மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
    காணா இன்பம் கனிந்ததேனோ
    ஆஅஆஆஆஆஆஆ
    காணா இன்பம் கனிந்ததேனோ …
    ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    காணா இன்பம் கனிந்ததேனோ …
    ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ …

    பாடல்: காணா இன்பம் கனிந்ததேனோ
    திரைப்படம்: சபாஷ் மீனா (1958)
    இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    பாடியவர்: மோதி, பி.சுசீலா
    காணொளி: https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

    Share
  • கலைமகள் அழைக்கிறாள்!

    -றியாஸ் முஹமட்

    கலைமகள்
    அழைக்கிறாள்…                                          riyaz

    தரணியில்
    கவி பாட
    என்னை
    அழைக்கின்றாள்!

    முத்து முத்தாகக்
    கவி பாட
    நான் கவியரசு
    வைரமுத்துவுமில்லை!

    கட்டுக் கட்டாக
    அவிழ்த்த விட
    நான் கவிஞர்
    கண்ணதாசனுமில்லை!

    சுரந்து வரும்
    என் எண்ணங்களையும்
    வண்ணக் கனவுகளையும்
    வாளி கொண்டு
    அள்ளி இறைக்க
    நான் கவிஞர்
    வாலியுமில்லை!

    அதை நின்று கேட்டு
    ரசிக்க ருசிக்க
    இங்கே ஒரு
    பாரதியுமில்லை
    ஒரு
    நாதியுமில்லை!

    அமரர்
    கல்கியைப்
    போலக்
    காலங்கள்
    கடந்தாலும்…

    பாவலர்
    பா விஜயைப்
    போல
    என் பருவங்கள்
    தொடர்ந்தாலும்…

    விட மாட்டேன்
    என்  பேனாவை!

    இனி எனது
    எழுது கோலில்
    தீ மூட்டித்
    தீக்குச்சியாய்
    எரியப்
    போகிறேன்…

    நசிங்கிப் போன
    என் சமூகத்தின்
    நாளைய
    விடியலுக்காக..!


    Share
  • கிராமிய கவிகளும் இலக்கியமும்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    நாட்டார் பாடல்கள். இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கரைவாகுப் பற்றுப் பிரிவிலும் (கல்முனை,திகாமடுல்லை) விவசாயம் சம்பந்தமான தொழில் ஈடுபடுபவர்கள்மத்தியில் இந்தப் பாடல்கள் பிரசித்தி பெற்றவைகளாகும்

    ஆண்களை விட பெண்கள்தான் பிரபல்யம்

    ஒருவர் ஆரம்பித்தால் தொடர்ந்து பாடுவதற்கு ஏனையவர்கள் தயாராகி விடுவார்கள்.

    ஆனால் இன்றைய கால கட்டத்தில்,நாட்டார் பாடல்கள் அன்றைய தலைமுறையு டன்  அழிந்து விடுகின்றது .

     நாட்டார் பாடலுக்கு களமே, களத்து மேடுதான்.

    தற்போது அறிமுகமாகியுள்ள நவீன விவசாயமுறைகள்

    ,இயந்திர மயப்படுத்தல்,

    கட்டாயக் கல்வி முறை,

     இவைகளெல்லாம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி,அடுத்த தலைமுறைக்கு இது இறுவட்டாக மட்டுமே காட்சி அளிக்கும்.

    தன்னைக் கல்யாணம் பண்ண முனையும்,ஒருவரை பெண் வெறுத்து ஒதுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டபாடல்கள்.தற்போதைய காலத்திற்கு ஏற்றமாதிரிக் கூறுவதானால்,கடலை  போடுபவரைக் கண்டால்,கட்டோடு பிடியாத பெண்ணின் வரி வடிவம்.இதோ

    கச்சான் அடித்த பின்பு -நடுக்
    காட்டில் மரம் நின்றதுபோல்
    உச்சியில் நாலு மயிர்-தலை
    ஓரம் எல்லாம் வழுக்கை

    கண்ணுமொரு பொட்டை-இரு
    காதுகளும் செவிடாம்
    குருத்தெடுத்த வாழை போல-அவர்
    கூன் வளைந்திருப்பார்

    முப்பத்தி இரண்டில் இப்போ -இந்த
    மூணு பல்லுத்தான் மீதி
    காகக் கறுப்பு நிறம்-ஒரு
    காலுமெல்லோ முடமவர்க்கு

    நாணற்பூப்போல -தலை
    நரைத்த கிழவனுக்கு
    கும்மாளம் பூப்போல -இந்தக்
    குமர்தானோ வாழுறது

    தங்கத்தாற் சங்கிலியும் -ஒரு
    தக தகவென்ற பட்டுடையும்
    பட்டணத்துச் செப்புமிட்டு-எனை
    பகல் முழுதுஞ் சுற்றி வாறான்.

    அத்தர் புனுகாம்
    அழகான பவுடர் மணம்
    இஞ்சி தின்ற குரங்குபோல –
    இவருக்கேனோ இச்சொகுசு.

    பட்டுடுத்துச் சட்டையிட்டு -நறு
    பவுசாக நடந்திட்டாலும்
    அரைச் சல்லிக் காசுமில்லை -ஆள்
    ஆறுநாட் பட்டினியாம்.

    சங்கிலியும் தங்கமில்லை –
    சரியான பித்தளையாம்
    இடுப்பிலேயும் வாயிலேயும்-
    இருக்கிறது இரவல் தானாம்…!

    இந்த அருமையான அன்றைய பாடல் இன்றைய சினிப்  பாடலை முந்திவிட முடியாது

    கிராமியக் கவிதைக்கு  புகழ் பெற்ற இடம்  மட்டக்களப்பு.( கிழக்கு மாகாணம் )

     தேனுக்கும் ,பாலுக்கும்,மீனுக்கும்   ,அன்புக்கும் ,விருந்துக்கும்  அறிவுக்கும் புகழ் பெற்றவர்கள்  மட்டக்களப்பு மக்கள்

    கலைகளைபேணி வளர்பதிலும்,  தலைசிறந்து விளங்குகின்றவர்கள்மட்டக்களப்பு மக்கள் .உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பாட்டு, நிறைந்து வழங்குகின்றன.

    கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் ,வயல்வெளிகளிலும் ,வீடுகளிலும் ,வீதியிலும் உலவும் இப்பாடல்களை தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் ஒருவரும் பெரிது கவனம்இதுவரை  செலுத்தவில்லையென்பது கவலையாகும்

    .இயற்கை வழ்வில் நின்று விலகி நிற்கும் நாகரிகத்தில் திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது.

     நாட்டுப்புற பாமரமக்களுக்கும், நகரமக்களுக்கும் ,வாழ்க்கை முறையிலும் உள்ளப்பாங்கிலும் வேறுபாடு வளர்ந்துகொண்டே வருவதனால்

    பாமரமக்கள் பாடும் பாட்டை கேட்டு மகிழ்கிற மனநிலை படித்தமக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டது என்று கூறலாம்.

     நாட்டுப்பாடல்களை படுவோரின் தொகையும் நளுக்குநாள் குறைந்து கொண்டேவருகின்றது. நாளடைவில் நாட்டுப்பாடல்கள் மறைந்து விடக்கூடும்.என்ற அச்சம் என்னைப் போன்ற பலருக்கும்  உண்டு

    கவி என்னும் சொல் மட்டகளப்பிலே அகத்தினை ,நாட்டுப்பாடல்களைக்குறிக்கும்
    சிறப்புசொல்லாக வழங்குகின்றது.

     இக்கவிகளில் அதிகம் ஈடுபாடுடையவர் மட்டக்களப்பு இஸ்லாமிய மக்களே.

     சிறந்த கவிவளைப்பாடவல்லவர் இன்றும் பலர் உளர்.
    இத்தகைய உணர்ச்சிமிக்க காதற்பாடல்களாகிய கவிகள் கூற்றுக்குரியோர் பெயராற் காதலன் கூற்றாய் உள்ளவை,

    காதலி கூற்றாய் உள்ளவை,

    தோழி கூற்றாய் உள்ளவை,

    தாயார் கூற்றாய் உள்ளவை,

     நான்கு பிரிவுகளாகஇவை  வகுக்கப்பட்டுள்ளன.

    இக் காதற்கவிகள் தமிழிலுள்ள அகப்பொருள் மரபுக்கு மாறாகஇருக்ககூடும்

    உதாரணமாகத் தமிழ் இலக்கியத்திற் களவு ஒழுக்கம் பெரும்பாலும் தோழி துணை கொண்டே நடக்கும்.

    தலைவி ஒருபோதும் குறியிடம் கூறமாட்டாள். ஆனால் நாட்டுப்பாடலில் தலைவி தானே தலைவனிடம் குறியிடம் கூறும்வழக்கைகாணலாம்.

    சந்தன மரத்தை மச்சான்
    சந்திக்க வேன்டுமென்றால்
    பூவலடிக்கு மச்சான்
    பொழுதுபட வந்திடுங்கோ.

    கடப்படியில் வந்து நின்று
    காளை கனைக்கும் மென்றால்
    எங்கிருந்த போதும் நாகு
    எழுந்துவர மாட்டாதோ
    போன்ற பாடல்கள் தலைவி தலைவனிடம் குறியிடம் கூறுவதைக் குறிக்கின்றன.

    மட்டகளப்பில் – மழைவளம் குறைந்து, பசியும் பிணியும் பெருகும் காலத்து கண்ணகி தேவிக்குச் சாந்தி செய்யும் போது கொம்புவிளையாட்டு நடத்தி மகிழ்வர்.

    கொம்புவிளையாட்டில் ஊர் முழுவதும் இருகட்சியாகப் பிரியும்.

    ஒன்று கோவலன் கட்சி,

    மற்றது கண்ணகி கட்சி.

    இக்கட்சிகள் வடசேரி, தென்சேரி என்ற பெயர் பெறும்.

    இவ்வாறாக பிரிந்து, போட்டியாக ஒரு சேரியார் இன்னொரு சேரைப்பழித்து வசைப் பாடல்கள் பாடுவர்.
    பால்போல்நிலவெறிக்கப் படலை திறந்தவன ஆர்தோழி
    நான்தாண்;டிவடசேரியான் உனக்கு நழிப்பணம் கொண்டுலாவுகிறேன்.
    என்பன போன்ற தனி வசைப்பாடல்களும் பல உள.

     இப்பாடல் இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் மண்டூர் ,தமபிலுவில், காரைதீவு, வந்தாறுமூலை, போன்ற ஊர்களில் மட்டும் ஆடப்படுகின்றது.

     துன்பத்தைப்போக்கி இன்பத்தை பெருக்கப் பாடப்படும் இப்பாடல்கள் அழியாமற் காக்கப்படவேண்டியவை.
    ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்கள் பலதுறைப்பட்டு விளங்குகின்றன.

     நாட்டுப்பாடல்களை இறவாமல் காப்பது எல்லோருடைய கடமையாகும்

    தமிழரின் இலக்கிய செல்வத்திலே இப்பாடல்களுக்கு சிறந்த இடம்முண்டு.

    தமிழில் எத்தனையோ இலக்கிய நு}ல்களும், இலக்கண நு}ல்களும், இறந்து போய்விட்டன என்று வரலாறு கூறுகின்றது.

     யாழ் நூலகம் எரிக்கப் பட்டபோது சாம்பலாக்கப் பட்டுவிட்டது மனித ஆத்மாக்கள் கவலைப் படுகின்றது

    மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களின் முதற் பதிவு 1960 ம் ஆண்டில் வெளிவந்ததுள்ளது

    ஈழத்திலுள்ள அறிஞ்ஞர் பலர் ஈழத்து நாடோடிபாடல்களை அவ்வப்போது சேர்த்துப்பத்திரிகைகளிலும,; துண்டு பிரசுரங்களிலும் வெளியிட்டு வந்துள்ளனர். இவர்களுள் திரு. மு. இராமலிங்கம் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.

    நாட்டுப்பாடல், நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும்.

    இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன.

     அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.

    நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன.

    நாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, பாமர ஜனகானம்பொதுஜனகானம்கிராமியபாடல், எனப் பலவாறு அழைப்பர்.

     பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம்.

     மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும்.

    ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன.

    சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

    தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும்.

     சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம்.

     சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

     இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன.

    பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டுதமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.

    நாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார்

    பாஞ்சாலி சபதம். இவருக்கு முன் கோபாலகிருஷ்ண பாரதியார்,இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர்.

    பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும்.

     மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும்.

     எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம்.

    நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்5]

    நாலு மூலை வயலுக்குள்ளே

    நாத்து நடும் பொம்பிளே

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    நண்டு சாறு காய்ச்சி விட்டு

    நடு வரப்பில் போற பெண்ணே – உன்

    தண்டைக் காலு அழகைக் கண்டு

    கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    பெண்டுகளே! பெண்டுகளே!

    தண்டு போட்ட பெண்டுகளே! – உன்

    கொண்டை அழகைக் கண்டு

    கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார்

    நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், காதல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது

    கிராமத்து வாழ்க்கை மிகவும் இனிமையானது. அமைதி நிறைந்தது. உற்சாகம் மிகுந்தது. கிராமிய மக்கள் அன்பும் நல்ல பண்பும் கொண்டவர்கள். அழகியல் சூழலில் ஆனந்தமாக வாழ்பவர்கள். இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் அவர்களின் காலம் கழிகிறது. இத்தகையவர்கள் வாழ்க்கையிலும் எத்தனையோ தொல்லைகளும் பிரச்சினைகளும் அவை காதல், சோகம், ஏமாற்றம், வறுமை, விவேகம் என பல்வேறு வகைப்பட்டு நிற்கிறது.

    வாழ்வியல் பிரச்சினைகளை அவர்கள் இனிய கவிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இக்கவிகள் வாழும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன. கிராமிய கவிகளும் இலக்கியமும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    திருமண பந்தத்தில் இணைய நினைக்கும் ஒரு இளஞ் சோடியின் மன உளைச்சலை வெளிப்படுத்தும் வரிகளாக பின்வரும் வரிகள் (அமைந்துள்ளன. வருமானம் இல்லாத காரணத்தால் கல்யாணம் செய்து கைப்பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தலைவனின் பாடலடிகள் சுட்டி நிற்கின்றன.

    காலயும் புலந்திருக்கு
    கனவெல்லாம் கலைஞ்சிரிச்சி
    மாலையும் கையுமா
    மச்சான் ஒன்ன கண்டிருந்தேன்

    வேலயும் இல்ல மச்சி
    வருமானம் கொறஞ்சிரிச்சி
    தோளிலே ஒன்ன வைக்க
    தோது இல்ல என் கிளியே!

    அடக்கு முறைக்குள் இருந்து வெளிவரத் துடிக்கும் ஒரு யுவதியின் மனோ வலிமையை சுட்டி நிற்கிறன.கீழ் உள்ள வரிகள்  அதில் தனது நியாயமான சுதந்திரத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி முன்னேறத்துடிக்கும் பாங்கில் அது அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

    சுற்றி வர நெருஞ்சி முள்ளு
    சுருண்டிருந்து பாத்திருக்கேன்
    தடை தாண்டிப் பாய்ந்து வர
    நல்ல சப்பாத்துக்காய் 
    காத்திருக்கேன்!

    இன்றைய காலத்தில் பெண்களுக்கான அடக்கு முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றங்களைக் கண்ட போதும் ஆணாதிக்கத்தின் பலம் குறைந்தபாடில்லை என்பதாக நினைக்கும் ஒரு யுவதியின் மனவெளிப்பாட்டை மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கின்றன.

    அலைகள் ஒரு போதும் ஓய்வதில்லை. அதேபோல இந்தப் பெண்ணும் தன் நினைவலைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு கன்னியின் மன ஏக்கத்தை பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

    ஓடுகின்ற
    தண்ணியிலே
    ஆடுகின்ற
    அலையெல்லாம்
    தேடுகின்ற
    என் மனதின் 
    ஏக்கங்களைக்
    கூறாதோ!

    தொழில் நிமித்தம் வீட்டைவிட்டு வெளியூருக்குச் சென்ற கணவன் பல நாட்களாக திரும்பி வரவில்லை. அவரது வருகையை எதிர்பார்த்து மனைவி வாடிப் போகிறாள். கணவனை நினைத்து அவள் ஏங்கும்; பாடல்  இப்படி வருகிறது.

    கழுத்திலே மின்னுகிற
    கரிச மணிக் கோர்வையிலே
    கைய வைத்து உருட்டி விடும்
    என் ஆசைக் கண்ணாலா

    தொழிலுக்கு தொலை தூரம்
    போனவரே
    நெடுநாளா சேதியில்ல
    என் நெஞ்சம் வெடிக்குதுகா!

    பருவகால மழை பிழைத்துப் போனால் உழவர்களின் பாடு திண்டாட்டம்தான். உழவர்கள் விளைச்சலை நன்றாகத் தந்தால் தான் நாட்டு மக்கள் நன்றாக சாப்பிட முடியும். விளைச்சலில் பிரச்சினைகள் ஏற்படாமல் அல்லாஹ்வை வேண்டி நிற்கும் சூடடிக்கும் பாடல் இப்படி வருகிறது.

    மாடுகள் வலய வலய
    நெல் மணிகள் குலய குலய
    பாடுகிறோம் பாட்டு
    சூடடித்து முடியும் வர
    சுகமாகக் கேட்டு!

    நாடுகிறோம் அல்லாஹ்வை
    நல் விளைச்சல் கெடச்சிடவே
    தேடுகிறோம்
    கடனெல்லாம் தீர
    ஒரு நல் வாழ்வை!

    சிறுவர்களை மகிழ்விப்பதற்காக அச்சிறுவர்களின் தாயாரோ அல்லது உறவினர்களோ பாடும் பாடல் இது.

     எதுகையும் மோனையும், இயைபுத் தொடையும் மிக இயல்பாக இப்பாடலில் அமைந்துள்ளது. இப்பாடலை மறுவாசிப்பு செய்யும்போது, நம்மையும், இப்பாடல் கரைந்து மோன காலத்திற்குள் தள்ளுகிறது. ஞாபகம் வருகிறதே பாணியில் பின்னோக்கி நம் நினைவின் நிழல்களை நகர்த்தினால், நம் குழந்தைப் பருவத்து நிகழ்வுகள் நினைவுக்கு வரும். இனி பாடலைப் பார்ப்போம்.

    சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

    சாயக் கிளியே சாய்ந்தாடு

    அன்னக் கிளியே சாய்ந்தாடு

    ஆவாரம் பூவே சாய்ந்தாடு

    குத்து விளக்கே சாய்ந்தாடு

    கோயில் புறாவே சாய்ந்தாடு

    மயிலே குயிலே சாய்ந்தாடு

    மாடப் புறாவே சாய்ந்தாடு

    குழந்தைகள் பாடிக்கொண்டு விளையாடும் விளையாட்டுப் பாடல்கள் தனி ரகமானவை. குழந்தைகளின் விளையாட்டோடு, இசையும், இலக்கியமும் கலந்தது வியப்பான விசயமாகும்.

    குழந்தைகளின் விளையாட்டுக்கள் காலாவதியானதுடன், சேர்ந்து அவர்கள் விளையாட்டோடு பாடிய பாடல்களும் காற்றில் கரைந்து விட்டன.

    கண்ணாம் கண்ணாம் பூச்சாரே,

    காது காது பூச்சாரே

    எத்தனை முட்டை இட்டாய்?

    மூணு மூட்டை!

    மூணு முட்டையும் தின்னுப்புட்டு

    ஒரு சம்பா முட்டை கொண்டுவா!

    என்பன போன்ற பாடல்களைப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களுக்கு நாம் பொருள் விளக்கம் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கக்கூடாது.இத்தகைய பாடல்களின் இசை அமைதியையும் தாளக்கட்டையும்,சொற்செட்டுகளையும் மட்டும் நாம் அனுபவிக்கவேண்டும். பொருளற்ற வெற்றசைச் சொற்களாகவே இத்தகைய பாடல்களில் வார்த்தைகள் வந்து உக்கார்ந்திருக்கும். சான்றாக,

    மாப்பிள்ளை மாப்பிள்ளே

    மண்ணாங்கட்டி தோப்புளே

    அரைக் காசு வெற்றிலைக்கு

    கதி கெட்ட மாப்பிள்ளே. . .!

    என்ற பாடலைக் கூறலாம்.

    மைத்துனன் முறை உள்ள பையனை மச்சினன் முறை உள்ள பையன் கேலி செய்து பாடுவதாக அப்பாடல் அமைந்துள்ளது.

    சக்கு சக்குடி சருவொலக்கையடி

    குத்தொலைக்கையடிகுமரன் பொண்டாட்டி

    பாளையத்திலே வாழ்க்கைப்பட்ட

    பழனி பொண்டாட்டி. . .

    வெற்றசைச் சொற்களால் ஆன இசைப்பாடல் இது.

    பனை மரமாம் பனை மரமாம்

    பச்சைக் கண்ணாடி

    பல் இல்லாத கிழவனுக்கு

    டபுள் பொண்டாட்டி. . .

    என்ற குழந்தைப் பாடல் இரண்டாம் தாரமாகக் கிழவர் ஒருவர் இளம்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதைக் கேலி செய்கிறது. இரண்டு பொண்டாட்டி என்பதை டபுள் பொண்டாட்டி என்று பாடுவது தமிழ் மொழியில் ஏற்பட்ட மொழிக்கலப்பைப் பதிவு செய்கிறது.

    பலிஞ் சடுகுடு அடிப்பானேன்?

    பல்லு ரெண்டும் போவானேன்?

    உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்

    ரெண்டு பணம் தெண்டம்தெண்டம்!

    என்கிற பாடலிலும் கேலி செய்யும் தொனியே மிஞ்சி நிற்கிறது.

    கிக்கீக்குஸ் கம்பந் தட்டை

    காசுக்கு ரெண்டு கெட்டு

    கருணைக் கிழங்கடா

    வாங்கிப்போடா. . . வாங்கிப்போடா. . .!

    இந்தப்பாடல் கரிசல் காட்டில் தோன்றியதாக இருக்க வேண்டும். கம்மங்கதிர்,கம்பு, கம்மஞ்சோறு, கம்மந்தட்டை என்பவை கரிசல் காட்டிற்கே உரியவையாகும். இப்பாடலும் பொருளற்ற வெற்றசைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

    சடுகுடு விளையாடும்போது, பிள்ளைகள் பலவிதமான சிறுபாடல்களைப் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். அவைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அத்தகைய குறும் பாடல்களில் சிலவற்றைக் கீழே காண்போம்.

    சடுகுடு மலையிலே

    ரெண்டானை

    தவறி விழுந்ததுதவறி விழுந்தது

    கிழட்டானை. . . கிழட்டானை.

    வெள்ளிப் பிரம்பெடுத்து

    விளையாட வாராண்டா. . .

    தங்கப் பிரம்பெடுத்து

    தாலி கட்ட வாராண்டா. . .

    தாலி கட்ட வாராண்டா. . .

    தூத்தூ நாய்க்குட்டி

    தொட்டியக்குடி நாய்க்குட்டி

    வளைச்சி போடடா. . நாய்க்குட்டி. .

    இழுத்துப் போடடா. . நாய்க்குட்டி. . .!

    அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை

    கல்லிலே போட்டா சுரைக் குடுக்கை

    சுரைக் குடுக்கை. . . சுரைக் குடுக்கை. . .!

    ‘கழிச்சிக் கல்’ விளையாட்டு என்று ஒருவித விளையாட்டைச் சிறுவர்கள் சென்ற தலைமுறைவரை விளையாடினார்கள். இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலும் காணக் கிடக்கிறது.

    சங்ககாலம் முதல் சென்ற தலைமுறைவரை தொடர்ந்து வந்த இந்தக் குழந்தை விளையாட்டை, இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் கடத்த முடியாமல் போனது எதனால்?

    இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமிக்க இந்தச் சிறுவர் விளையாட்டை,சமீபத்திய வாழ்க்கை முறையால் நாம் தொலைத்துவிட்டோம்.விளையாட்டிலும், உலக மயமாக்கல் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிறது.

    விளையாட்டு என்றதும் மட்டைப் பந்து என்ற கிரிக்கெட்தான் இக்காலத்துப் பிள்ளைகளின் நினைவுக்கு வருகிறது. இந்த மட்டைப் பந்து விளையாட்டு என்பதும் ஒரு காலத்தில் சிறு பிள்ளைகள் விளையாடிய கிட்டிப்புல் என்ற சில்லாங்குச்சி விளையாட்டின், விஞ்ஞானபூர்வமான விரிவாக்கமே!

    ‘கழிச்சிக் கல்’ விளையாடும் பிள்ளைகள் விளையாட்டின்போது ஒவ்வொரு கல்லையும் எடுக்க, ஒருவிதப் பாடலைப் பாடுவார்கள். அத்தகைய பாடல் இதில் ஒன்று முதல் பத்துவரை உள்ள எண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டப்படுகின்றன!

    கொக்குக்கிக் கொக்கு

    ரெட்டை சிலாக்கு

    மூக்குச் சிலந்தி

    நாக்குலா வரணம்

    ஐயப்பன் சோலை

    ஆறுமுக தாளம்

    ஏழுக்குக் கூழு

    எட்டுக்கு முட்டு

    ஒன்பது கம்பளம்

    பத்துப் பழம் சொட்டு

    இதுவும் பொருளற்ற ஒரு வித இசைப்பாடலே. குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்க இத்தகைய பொருளற்ற இசைப்பாடல்கள் உதவின.

    அந்தாதித் தொடை அமைந்த வினா-விடை பாணியிலான சில குழந்தைப் பாடல்கள் கேட்பதற்கும் பாடுவதற்கும் ரஸமாக இருக்கிறது. அத்தகைய பாடல்களில் சான்றுக்கு ஒரே ஒரு பாட்டு

    ஆண்டி. . . ஆண்டி.. .

    என்ன ஆண்டி?

    பான்னாண்டி. .

    என்ன பொன்?

    காக்காப் பொன்.

    என்ன காக்காய். . .?

    அண்டங்காக்காய். . .

    என்ன அண்டம்?

    பூ அண்டம்.

    என்ன பூ?

    பனம் பூ.

    என்ன பனை?

    தாளிப் பனை.

    என்ன தாளி?

    நாக தாளி.

    என்ன நாகம்?

    சுத்த நாகம்

    என்ன சுத்தம்?

    வீட்டுச் சுத்தம்

    என்ன வீடு?

    ஓட்டு வீடு

    என்ன ஓடு?

    பாலோடு

    என்ன பால்?

    நாய்ப் பால்

    என்ன நாய்?

    வேட்டை நாய்

    என்ன வேட்டை?

    பன்றி வேட்டை

    என்ன பன்றி?

    ஊர்ப் பன்றி

    என்ன ஊர்?

    கீரையூர்

    என்ன கீரை?

    அறைக்கீரை

    என்ன அறை?

    பள்ளி அறை

    என்ன பள்ளி?

    மடப் பள்ளி

    என்ன மடம்?

    ஆண்டி மடம்

    என்ன ஆண்டி

    பொன்னாண்டி . . .

    இந்தப் பாடல் இத்துடன் முடிவதில்லை. தேவை எனில் குழந்தைகள் ‘என்ன பொன்?’ என்று கேள்வியை எழுப்பி அதற்கு ‘ஆணிப் பொன்’ என்று விடையும் கூறிச் சங்கிலித் தொடர்போல் பாடலைத் தொடரலாம்.

    மொழிப் பயிற்சிக்கும், உச்சரிப்புப் பயிற்சிக்கும், நினைவாற்றலை வளர்க்கவும் கேட்ட கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் கூறும் மனத்திறனையும் இத்தகைய பாடல்கள் வளர்க்க உதவின.

    குழந்தைப் பருவம் முடிந்து வளர் இளம் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் இளங் குமரிப்பெண்கள் மற்ற முறைகாரப் பெண்பிள்ளைகளைக் கேலி செய்து விளையாட்டாகச் சில பாடல்களைப் பாடுகிறார்கள். நேசமிக்க இத்தகைய பாடல்களும் இன்று காணாமல் போய்விட்டன.

    மாதிரிக்கு அத்தகைய பாடல்களில் இந்த ஒன்றை மட்டும் வாசகர்கள் சுவைக்கலாம்

    அத்தான் தங்கையே ராமக்கா

    அரிசிக் காரன் வந்திட்டான்

    சின்ன வீட்டிலே புகுந்துக்கோ

    சிலுக்குத் தாளம் போட்டுக்கோ

    புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ

    புருசன் கூடப் பேசிக்கோ. .!

    ஒரு காலத்தில் குழந்தைகளின் வாழ்வுலகமும், இளம் பருவத்து வளர் இளம் பெண்களின் கனவுலகமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிய சோலைகளாக இருந்தன!

    இன்று அவர்களின் கனவுலகமே பாலைவனங்களாகிவிட்டன. கட்டற்ற கற்பனை வெளியில், மொழியின் கைபிடித்து இசையின் காலடித்தடம் தேடி அலைந்த பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வனுபவம், இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. இந்தக் கலாச்சார மாற்றம் நம்மை மேல் நோக்கி நகர்த்துகிறதா? புதைகுழியில் தள்ளுகிறதா? புரியவில்லை.

    நாடோடிப்பாடல்களில்
    கதை

    இசைப் பாடல்கள்

     கவிதைகள்

    பழ மொழிகள்

    விடுகதைகள்

    ஒப்பாரி

    கவிகள்

    தாலாட்டுக்கள்

    ஊஞ்சல் பாடல்கள்

    கப்பற் பாடல்கள்

    பாலர் விளையாட்டுப் பாடல்கள்

    இவையெல்லாம் நாட்டார் இலக்கியங்களாகும்.

    Share
  • “ஈஸி… வசந்த்”

    — தேமொழி.

    நாசமாப் போறவன், உருப்படவே மாட்டான்… என்று திட்டியபடி செல்போனை சோபாவில் வீசியெறிந்தான் வசந்த். அது அவன் எதிர்பார்த்தது போல சோபாவில் விழாமல் தரையில் மோதி விழுந்தது.

    “ஈஸி… வசந்த்” என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த பெண்ணும், அவளுடன் வந்த கணேஷும் சோபாவில் சாய்ந்தார்கள்.

    அந்த பெண் தரையில் இருந்த செல்போனை எடுத்து டீடேபிளில் வைத்தாள். தலையில் கிரீடமாகக் கறுப்புக் கண்ணாடி…காற்சட்டையில் துழாவி தனது செல்போனை எடுத்துக் குடைய ஆரம்பித்தாள்.

    கையில் நகப்பூச்சு இல்லை என்பதை வசந்த் கவனித்தான். ஏனோ அவளைப்பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது.

    முதன் முறையாக ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடாமல் ஏன் எரிச்சலடைகிறான் என்று அவனுக்கேப் புரியவில்லை.

    “ஹலோ” என்றான் அவளை நோக்கி, இவள் யார் எனக்கு அட்வைஸ் கொடுக்க என்ற எரிச்சல் தென்பட்டது வசந்தின் குரலில்.

    “ஹலோ” என்றால் அவளும், தனது போனில்.

    “நான் உன்னிடம்தான் பேசுகிறேன்”

    “நன்றி, ஆனால் நான் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன், தெரியவில்லை”

    எழுந்து போய் ஜன்னலோரம் நின்று மொணமொணவென்று மெதுவாகப் பேசினாள்.

    “பாஸ், எங்க புடிச்சீங்க இந்த ராங்கிக்கரியை, கொஞ்சம் நஞ்சம் வரும் காற்றையும் ஜன்னலை அடைத்துக் கொண்டு மறைக்கிறாள்”

    “டோன்ட் பீ சில்லி வசந்த், ஏன் கரண்ட்டுக்கு என்னாச்சு? சென்னையில் கூடவா எலெக்ட்ரிசிட்டி பிராப்ளம்?”

    “ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் புட்டுகிச்சாம், தம்புச்செட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லைன்னு சொல்லிட்டான் இ.பி. ஆபிஸ்ல, நீங்க இன்னமும் அதைச் சொல்லல”

    “நானும் சொல்லணுமா? சரி, தம்புசெட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லை”

    விளையாடாதீங்க பாஸ், நானே வெறுப்பில் இருக்கேன், கண்டவனெல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கிறான், கண்டவளெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றாங்கோ, நீங்களுமா கலாய்க்கணும்? யாரிந்த அரை லூசு? எங்க புடிச்சீங்க இதை, என்னையே டபாய்க்குது”

    “நான் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருக்கேன்” என்றவாறு அந்தப் பெண் போனில் பேசி முடித்து விட்டு வந்தாள்.

    “உன்னை உதைப்பேன் என்கிறாள்”

    ganesh-vasanth“நீங்க வேற அதை எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா பாஸ், என்ன திமிர்?” வசந்த் அவளை முறைதான்.

    “ஹை வசந்த், என் பேர் தேனு, பேராசிரியர் கணேஷின் ஸ்டுடெண்ட், வீட்டுக்கு போற வழியில ப்ரபொசர் கார் ப்ரேக் டவுன் ஆகி திண்டாடிகிட்டு இருந்தார், நான்தான் வாங்க உங்க ஆபிசில கொண்டு போய் விடறேன்னு சொல்லி ரைட் கொடுத்தேன். வெளியில் உங்க காரைப் பார்த்ததும், வசந்த் ஆபீஸ்லதான் இருக்கான், உள்ள வா, வசந்தை இன்ட்ரோடியுஸ் பண்றேன்னு சொன்னார்”.

    கணேஷ் இந்த அகாடெமிக் இயரில், யூனிவெர்சிடி சட்ட வகுப்பில் கௌரவ ஆசிரியராக சில வகுப்புகள் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளான்.

    “நான் உன்ன ஹனின்னு கூப்பிடலாமா?”

    “நான் துப்பாக்கி சுடுவதில் எக்ஸ்பெர்ட், ப்ரைசெல்லாம் வாங்கியிருக்கேன்”

    “அட சட்… பாஸ், இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாதவங்க கார்ல எல்லாம் ஏறாதீங்க பாஸ், இன்னக்கி இரக்கப்பட்டு ரைட் தரேன்னு கொண்டு வந்து விடுவாங்க, இன்னொருநாள் பாவம் ரொம்ப டயர்டா இருக்கீங்க வாங்க காபி சாப்பிடலாம்னு அழைச்சிப் போய் சிரிக்க சிரிக்க பேசி காஃபி வாங்கித் தருவாங்க, பிறகு நீங்க இழக்கக் கூடாததெல்லாம் இழக்க வேண்டி வரலாம்”.

    “தேவுடா..தேவுடா, ரோஜுலு மாரயி …தேவுடா…” என்று பாடி உதட்டை சுழித்து அழகு காட்டிய தேனு மீண்டும் செல்போனைக் குடைந்தாள்.

    “அது சரி, நாங்க வந்த போது கோபமாய் யாரைத் திட்டிக் கொண்டிருந்தே?”

    “ஒரு மனோ வியாதி வைத்தியரிடம் ….”

    “ஓ ….அந்த அளவுக்கு முத்திப் போச்சா”

    “பாஸ், கண்டவங்களையும் குறுக்கே பேச வேணான்னு சொல்லுங்க”

    “நீ சொல்லு, உனக்கு என்ன ஆச்சு?”

    “எனக்கு ஒண்ணுமில்ல, ஒரு கேஸ்… தேனு, தேனுண்ணு ஒரு பொண்ணு”

    “அதும் பேரும் தேனு தனா?”

    “ஆமாம் பாஸ், அந்த பேரு வச்சாலே சொர்ணாக்கா போல இருப்பாங்க போல, மேல கேளுங்க , வயசாகியும் கல்யாணம் வேணாமின்னு அம்புட்டு அடமாம். அவளோட அம்மா ஒரு மனோ வியாதி டாக்டர்கிட்ட அவளக் கொண்டு போனாங்களாம். அவரு ஊசி போட்டு சரி பண்ணிடறேன்னு சொல்லி ஊசி போட்டிருக்காரு. இந்தப் பொண்ணும் நோய் தெளிந்து போன பின்னர் டாக்டரையே கட்டுவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம். கொஞ்ச நாளில் டாக்டரிட்ட இருந்த ஊசியையும், சிரிஞ்சு பாட்டில் மருந்துகளையும் அவருக்குத் தெரியாமல் சுருட்டிக் கொண்டு அடுத்தாத்து அண்ணாசாமியுடன் சென்னைக்கு ஓடி வந்திடுச்சாம் .”

    “பிறகு சென்னையில் அந்த செக்ஸ் ஊசியை ஏலம் விடும் முயற்சியில் அது தொலைந்துவிட, அதை விசாரிக்க தேனுவிடம் போன மருத்துவக் கவுன்சில் தலைவர் நாகபூஷணத்திற்கு தொலைந்து போனது போலி ஊசி என்று தெரிந்தது விட்டது. அந்த மனுஷன் விடுவானா? ஒரிஜினல் ஊசியையும் தேனுவையும் சுருட்டிக் கொண்டோடிவிட்டான். போதாக்குறைக்கு ஜானு அப்படின்னு இன்னொரு செட்டப் வேறே வச்சுகிட்டான். ஜானுவுக்கும் தேனுவுக்கும் நாளும் குடுமிப் புடி சண்டை. பொறுக்க முடியாமல், இதோ ஊசியையை ஒழிச்சுக் கட்டுறேன்னு பாவ்லா காட்டி, ஏமாத்தி பொய் ஊசி ஒண்ணை அழிச்சி ரெண்டு பொண்ணுகளையும் கழட்டி விட்டுட்டான். அத்தோடு விட்டானா, புதுசா வசந்தான்னு இன்னொரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்தான். உடனே தேனுவும் ஜானுவும் மோப்பம் புடிச்சி, இவன் நம்மை ஏமாத்தி தொரத்த நாடகம் போட்டான்னு புரிஞ்சி நேரே வந்துட்டாங்க. அப்பாலே மூணு பொண்ணுங்களுக்கும் சண்டை. தெருவில் உரண்டு புரண்டு உன்னை உயிரோடு விட்டேனா பார் என்று ஆளாளுக்கும் சவால் விட்டாங்க. தெருவே வேடிக்கப் பாத்துது. அவனவன் செல்போன்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். “

    “இதுக்கும் நீ திட்டுனதுக்கும் என்ன தொடர்புன்னு சுருக்கமா சொல்லு, வள வளவளக்காத. கதை சகிக்கல, காது கொண்டு கேக்க முடியல்ல, காதிலேயே நாத்தமடிக்குது”.

    “இருங்க பாஸ். பிறகு இங்கதான் ஒரு ட்விஸ்ட். அந்த மூணாவது பொண்ணு நேத்து ஆளு அவுட்டு, மதியம் தூங்கும் போது முகத்தில் தலையணையை அழுத்திக் கொலை. உடனே மருத்துவக் கவுன்சில் தலைவன் நாகபூஷணத்தை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது. அவன் என்னடான்னா தேனுவும் ஜானுவும்தான் வசந்தாவைப் போட்டுத்தள்ளியிருப்பாங்க, எனக்கு அவங்க மேலேதான் சந்தேகமுன்னு சொல்லியிருக்கான். போலீஸ் சந்தேகக் கேசுல தேனுவையும் ஜானுவையும் இப்ப உள்ள போட்டுட்டாங்க. எல்லோருமே ஜெயில்ல இப்போ கம்பி எண்ணுறாங்க. தேனுவோட அம்மா வந்து எம்பொண்ண வெளிய கொண்டுவாங்க அப்படின்னு அழுதாங்க. நானும் சாயுங்காலம் வாங்க எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க, அவரு கேஸ எடுத்துப்பாரான்னு தெரிஞ்சுக்கலாமுன்னு சொல்லி அனுப்பி வச்சேன். நீங்க வரதுக்குள்ள கொஞ்சம் தகவல் சேகரிக்க எண்ணி, நம்பரைத்தேடி, அந்த மனோ வியாதி டாக்டர போன்ல கூப்பிட்டு விசாரிச்சேன். அவனிடம் என்னை அறிமுகப் படுத்தி வசந்த் பேசுறேன்னு சொன்னவுடன் ரொம்பவே உற்சாகமானான்.”

    “அந்த மாதிரி உற்சாகமானவனை நீங்க திட்ட காரணம் என்ன? நான் சொல்லவா? உங்களுக்கும் ஒரு செக்ஸ் ஊசி வேணுமின்னு கேட்டுருப்பீங்க , அவன் முடியாதுன்னு சொல்லிட்டான்”

    “தேனுன்னு இருக்கிற உன் பேரை தேனீ அல்லது தேளு அப்படின்னு மாத்தி வச்சுக்கோ, சும்மா வாயால கொட்டிகிட்டே இருக்க”

    “கட் இட் அவுட், வாட் ஹி சட் வசந்த், தேனு சொன்ன மாதிரிதான் கேட்டியா?”

    “அப்படி ஒரு ஊசி இருக்கிறது உண்மையா? எவ்ளோ விலை அப்படின்னு கேட்டேன் பாஸ். அதுக்கு அந்தப் பாழாப் போறவன், “யோவ், நான் உன்ன புத்திசாலின்னு நெனச்சிருந்தேனே, ஏன்யா இந்த மாதிரி கேக்கிற, உண்மையா இருந்தா நான் எவ்வளவோ சம்பாதிச்சிருப்பேனே. மனோ வியாதி டாக்டருங்கிறதாலே மனோதத்துவ முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன். சிரிஞ்சில டிஸ்டில்ட் வாட்டர போட்டு இன்ஜெக்ட் செய்து, இது ஒரு அதி அற்புதமா வேலை செய்யுற மருந்துன்னு சொல்லுவேன். பேஷண்டும் நான் பேசுறதக் கேட்டு உண்மையின்னு நம்பி கொஞ்சம் கொஞ்சமா பலனடைவாங்க. ப்ளாசீபோ எஃபக்ட்டு, பிளசிபோ விளைவு, மருந்துப்போலி விளைவு, வெற்று மாத்திரை விளைவுன்னெல்லாம் நீங்க கேள்விப் பட்டதே இல்லையா? மூளைக்கு நான் அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுப்பேன். தேனுவும், அண்ணாசாமியும் அந்த மருந்தெல்லாம் சுருட்டிகிட்டு போனவுடன், தேனுவின் தொல்லை ஒழிஞ்சுது மருந்து புட்டிகளில் இருக்கிற தண்ணியெல்லாம் முடிஞ்சவுடன் ஆட்டம் போடுறத நிறுத்திடுவாங்கனு கண்டுக்காம விட்டுட்டேன். நீங்களும் இதெல்லாம் உண்மையான்னு கேக்க வந்திட்டீங்களே” அப்படின்னு கத்தி போனைக் கட் பண்ணிட்டான்.

    “நீ நெனச்சது சரிதான்”

    “தேங்க் யூ ப்ரபொசர்”

    பாஸ்…என்று கோபத்துடன் வசந்த் தொடங்கியபொழுது, கணேஷின் செல்போன் இடைமறித்து ஒலித்தது. போனில் எண்ணைப் பார்த்து “இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்…” என்று கூறிவிட்டு கணேஷ் இடையூறு இல்லாமல் பேசுவதற்காக ஜன்னலோரம் போனான்.

    “வசந்த், எனக்கு கைரேகை பார்ப்பீர்களா? நான் ப்ரபொசர் மாதிரி புகழ் பெற்ற லாயரா வருவேனா?” என்றாள் தேனு.

    அவள் குரலில் இருந்தது கிண்டலா அல்லது உண்மையான ஆர்வமா என வசந்திற்குப் புரியவில்லை.

    “நான்கூட புகழ் பெற்றவன்தான். இப்பவெல்லாம் முகத்தை பார்த்தே ஜோசியம் சொல்லப் படித்திருக்கிறேன். உன் சப்பை மூக்கைப் பார்த்தால் நீ எதிலேயும் முன்னேறவே மாட்டாய் எனத் தெரிகிறது”.

    “ஃபை..ஃபை..சொதப்பி ஃபை, நாட்டாமை உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்தி ஃபை” என்ற தேனு எழுந்து ஆடினாள்.

    “என்ன இங்க கொண்டாட்டம்? ராஜேந்திரனைப் பார்க்கப் போகணும், என்னிடம் கார் கிடையாது”

    “வாங்க ப்ரபொசர், வீடு போற வழியில உங்கள டிராப் பண்றேன்”

    “நீ உருப்படியா வீடு போற வழியைப் பாரு, திருப்பி வர பாஸ் என்ன பண்ணுவாராம், வாங்க பாஸ் நான் இருக்கேன் உங்களுக்கு”

    “பை, பை சீரியோ…”

    தனது கார் கதவைத் திறந்து உட்க்காரப்போன தேனு போன் அடிக்கவே கதவை மீண்டும் மூடி அதில் சாய்ந்து பேசி , சிரிக்கத் தொடங்கினாள்.

    வசந்தின் காரில் கிளம்பினார்கள் கணேஷும் வசந்தும். ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் பார்த்த வசந்த் கடுப்புடன். “பாருங்க, நடுதெருவில என்ன சிரிப்பும் கொம்மாளமும், எப்பப் பாரு போனைக் குடைய வேண்டியது, இதெல்லாம் தேருங்கறீங்க பாஸ், நோ சான்ஸ்?”

    “ஹார்ஷ் வார்ட்ஸ் வசந்த், அந்தப் பொண்ண ஏன் வாரிக்கிட்டே இருக்க, பின்னால பாக்காத முன்னால பாரு”

    “என்ன பாஸ் திடீர்னு தத்துவம்”?

    “தத்துவமில்ல, காருக்கு எப்ப பெட்ரோல் போட்ட? எம்ப்டின்னு காட்டுது? போக வேண்டிய இடத்திற்கு போகும் வரை பெட்ரோல் இருக்குமா?”

    “இருக்கும்”…. தெருமுனைக்கு வந்த கார் நின்றுவிட்டது “ஆனால் இருக்காது பாஸ்.”

    “ஹல்லோ, எனி ஒன் நீட் சம் ரைட்?” பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து தேனு தலையை நீட்டிக் கேட்டாள்.

    “வாடா, அப்புறம் பெட்ரோல் போட்டுக்கலாம்”

    “வாங்க ப்ரபொசர், நான் இருக்கேன் உங்களுக்கு” என்றாள் தேனு.

    [தன்னிலை விளக்கம்: எழுத்தாளர் சுஜாதாவைப் போல நானும் “கணேஷ்-வசந்த்” கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாறின் அடிப்படையில் எழுந்த கற்பனைக் கதையிது, சுஜாதா மன்னிப்பாராக]

    https://groups.google.com/d/msg/vallamai/_DG_fpwcNgY/DcSH1SWhMucJ

     

     

    படம் உதவி: https://siliconshelf.wordpress.com/

    Share
  • பெரிய வாத்தியார்

    நிர்மலா ராகவன்

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தார் சாம்பசிவம்.

    இப்படி ஆரம்பித்தாரானால், உலகின் எந்த மூலையிலோ நடந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும்.
    இதைப் பழக்க தோஷத்தில் அறிந்திருந்த நண்பர் நாதன், “காலம் கெட்டுப் போச்சு!” என்று சொல்லிவைத்தார், பட்டுக்கொள்ளாமல்.

    முன்பு ஒருமுறை, ‘எதைச் சொல்றீங்க?’ என்று தெரியாத்தனமாய் கேட்கப்போய், ‘ஏன்யா? நீங்க தினசரி பேப்பரே படிக்கிறதில்லையா? இல்ல, டி.வி.யிலேயாவது பாத்துத் தெரிஞ்சுக்கிறது! இப்படி ஒங்களைமாதிரி, ‘நாட்டை ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, இல்ல, அந்தக் கொரங்கே ஆண்டால் என்ன’ன்னு கெணத்துத் தவளையா அவனவனும் இருக்கிறதாலேதான் ஒலகம் இப்படி சுயநலம் பிடிச்சு, ஒரேயடியாக் கெட்டுக் கிடக்கு!’ என்று சாம்பசிவத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டது இந்த ஜன்மத்துக்கும் மறக்குமா!

    தான் தினசரி படிக்காததிற்கும், உலகம் கெட்டுப்போவதற்கும் என்ன சம்பந்தம் என்று நாதனுக்குப் புரியத்தான் இல்லை. அதை வாய்திறந்து எப்படிக் கேட்பது? என்ன இருந்தாலும், தான் சாதாரண ஆசிரியராக இருந்தபோது, அதே தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்தவர் ஆயிற்றே! இப்போது இருவருமே ஓய்வு பெற்று, அரசாங்கம் அளித்துவந்த சொற்ப பென்ஷன் பணத்தில் வறுமையின் எல்லைக்கோடு கண்ணில் தெரியும் தூரத்தில் இருந்துவந்தபோதும், சாம்பசிவம் மட்டும் அந்தப் பழைய மிடுக்கைக் குறைத்துக்கொள்ளவே இல்லை.

    ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்புவரை இருந்த அப்பள்ளியில் படித்த சிறுவர், சிறுமியர் அனைவரும் ‘பெரிய வாத்தியார்’ என்று பயபக்தியுடன்ஒதுங்கி வழி விட்டது, வாரம் தவறாது, திங்கள் காலை அவர்கள் எல்லாரையும் பள்ளி வளாகத்தில் இரட்டை மாடிக் கட்டிடத்தின்முன் நிற்கவைத்து, ஒழுக்கம், கடவுள், கலை என்று தனக்குத் தோன்றியதைப்பற்றி எல்லாம் மைக்கே அதிர்ந்துவிடும்படி அலறியது, மற்றும் தான் சொன்னது, செய்தது எதிலாவது குறையோ, மாற்றமோ தெரிவித்த ‘மரியாதை கெட்ட’ ஆசிரியர்களை அவர்களது வேலைப்பளுவை அதிகரிக்கச்செய்து, மரியாதை உள்ளவர்களாக மாற்றியது — இப்படிப் பலவும் சாம்பசிவம் தனக்குத்தானே போட்டுக்கொண்டிருந்த மதிப்பெண்களைக் கூட்டிக்கொள்ள வைத்திருந்தன. மேலும், அவருடைய பெரிய ஆகிருதியும், ரகசியம் பேசினால்கூட எட்டு வீடுகளுக்குக் கேட்கும் சிம்மக்குரலும் அவரது பலம்.

    சாம்பசிவம் ஓய்வு பெற்றதும், அந்தச் சிற்றூரைவிட்டு, டவுனில் இருக்கும் மகனுடனேயே போய் தங்கிவிடவேண்டும் என்று அவருடைய மனைவிக்கு ஆசை. ஆனால் தான் யாரென்றே தெரியாத பலரும் இருக்கும் ஓரிடத்தில் போய், தனது மதிப்பைக் குறைத்துக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை.

    இது பழகிப்போன இடம். ஓரிரண்டு தறுதலைகள் இவரைப் பார்த்தும் பாராதமாதிரி ஒதுங்கிப்போனாலும், ‘பெரிய வாத்தியார்’ என்று மார்க்கெட்டில் முருங்கைக்காய் விற்பவரிலிருந்து தபால்காரர்வரை இவரைத் தெரியாதவர்கள் எவருமில்லை. ‘ஆசிரியர்’ என்றால் எல்லாமே அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற அவர்கள் எண்ணத்திற்கேற்ப இவரும் நடந்துகொண்டார். தனக்குச் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, எல்லா விஷயங்களுக்கும் நியாய அநியாயம் கற்பிப்பார். பெரும்பாலும், இவரது தர்க்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் காதில் இவரது சொற்கள் விழாதது இவருக்குச் சௌகரியமாகப் போயிற்று.

    இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த சாம்பசிவம் ஒரே ஒரு தவறுமட்டும் செய்துவிட்டார். கல்யாணமான முதல் இருபது வருடங்கள் மனைவியை ஒரேயடியாக அடக்கி ஆண்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறார், காலங்கடந்து. வீட்டில் அவள் ராஜ்ஜியந்தான்.

    ‘போன ஜன்மத்தில கோயில் தேரா இருந்திருப்பீங்களோ! மழையோ, வெயிலோ, நாள் தவறாம தெருத்தெருவா அசைஞ்சுக்கிட்டுப் போகணும் ஒங்களுக்கு!’ அவர் எது செய்தாலும், அதைப் பழிக்காவிட்டால் அவளுக்கு உணவு செரிக்காது.

    அவள் வாய்க்குப் பயந்தே அவர் கூடுமானவரை வீட்டில் இருப்பதைத் தவிர்க்கிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை.
    அவள் சொல்வதற்கு ஏற்றார்போல், கடைத்தெரு, கோயில் பிரகாரத்துக்கு வெளியே, ‘விளையாட்டு மைதானம்’ என்ற பெயர் தாங்கிய முட்செடிகள் அடர்ந்த புல்வெளி — இப்படி, கால் போன போக்கில் செல்வார் சாம்பசிவம். அந்தச் சிற்றூரைத் தவிர வேறு வெளியுலகமே அறிந்திராத அப்பாவிகள் யாராவது சாம்பசிவத்திடம் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கும்தான் பொழுது போகவேண்டாமா?

    அப்படித்தான் அன்று நாதனும் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்த சாம்பசிவம், “எல்லாம் சட்ட விரோதமா நம்ப நாட்டுக்குள்ள நுழைஞ்சவங்களைத்தான் சொல்றேன்!” என்று பீடிகை போட்டார்.

    “யாரு, இந்தோன்களைச் சொல்றீங்களா?” மரியாதையை உத்தேசித்து, அக்கறை காட்டினார் நாதன்.

    “அது பழைய சமாசாரமில்ல? நான் அதைச் சொல்ல வரல,” என்று மறுத்தாலும், வகுப்பில் பழைய பாடங்களை மீண்டும் மீண்டும் சொல்லி நினைவுபடுத்துவதுபோல, அந்தப் பழைய சமாசாரத்தைப்பற்றியே பேசிக்கொண்டுபோனார். “மலையில வளர்ந்திருக்கற மரத்தையெல்லாம் நெருப்பு வெச்சுக் கொளுத்திட்டு, அங்க கத்தரிக்கா, வெண்டைக்கா செடியெல்லாம் போட்டு, அதில காய்க்கறதை ஒண்ணுக்கு நாலு விலை வெச்சு நம்ப தலையில கட்டறானுங்க. இன்னும், ராவில வீடு பூந்து திருடிட்டு, ‘என்னைப் பிடிங்கடா, பாக்கலாம்!’ அப்படின்னு சவால் விடறமாதிரி, கறுப்புக் கறுப்பா கைரேகையை வீட்டுச் சுவத்தில பதிச்சுட்டுப் போறானுங்களாம். அதான் தெரிஞ்ச கதையாச்சே!”

    “ஓ! அப்போ ‘பங்களா’வைச் சொல்றீங்களா?” என்று கேட்கும்போதே நாதனுக்குப் பெருமை ஓங்கியது, சரியான விடை அளித்துவிட்ட மாணவனைப்போல.

    “அதேதான்!” என்று சாம்பசிவம் ஆமோதிக்கவும், நாதனுக்கு உச்சிகுளிர்ந்து போயிற்று. அந்தச் செய்தியும் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், அது தன் வாயிலிருந்து வருவதைப் பெரிய வாத்தியார் விரும்பமாட்டார் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால், அவருக்கும்தான் அலட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுப்போமே என்று பெருமனது பண்ணி, வாயை மூடிக்கொண்டு, பழைய பணிவு மாறாது நின்றார்.

    “ஏழு வயசுப் பொண்ணு, பாவம்! இப்பத்தான் பல் விழுந்து முளைச்சிருக்கும். அதைப்போய்…! சே! இவனுங்களை எல்லாம் அவன் ஏறி வந்த படகிலேயே திரும்பவும் ஏத்திவிட்டு, நடுக்கடலிலே மூழ்க வைக்கணும்!”

    சாம்பசிவத்துக்குத் திடீர்திடீரென்று யார்மேலாவது கோபம் கிளம்பும்.

    ‘இவன்களை எல்லாம் வரிசையா நிக்கவெச்சு, சுட்டுத்தள்ளணும்!” என்று ஆக்ஞை பிறப்பிப்பார். இல்லாவிடில், ‘நகக்கணுவிலே ஊசியேத்தணும்,’ ‘கொதிக்கற எண்ணையில தூக்கிப் போடணும்’ என்று, நரகத்தில் நடத்தப்படுவதாகப் பெரியவர்கள் கூறித் தான் கேட்டிருந்ததை எல்லாம் சொல்லிச் சபிப்பார்.

    ‘பிரெஞ்சுக்காரன் கடலிலே அணுசக்தி ஆராய்ச்சி செய்யறானே! அதில செத்துப்போற மீனை எல்லாம் அவனையே சமைச்சுச் சாப்பிடச் சொல்லணும்!’ என்று ஏசுவார். எல்லாம், ‘அவன் காதில் விழவா போகிறது!’ என்ற தைரியந்தான்.
    சொல்கிறபோது சிறிது வீரமாக உணர்வார். வீட்டில் நுழையும்வரை அது நிலைக்கும்.

    “காலம் கெட்டுப் போச்சு!” என்று ஒத்துப்பாடினார் நாதன். மனமோ, ‘ஓ! இதுதானா காரணம்!’ என்று எக்காளமிட்டது.

    சாம்பசிவத்தின் கடைசி மகள் கடந்த வருடம் பெட்ரோல் ஸ்டேஷனில் வேலைபார்த்த ஒரு அயல் நாட்டானின் அழகிலோ, வேறு எதிலோ மயங்கி, வீட்டைவிட்டு ஓட இருந்தாள். தக்க சமயத்தில் மூக்கில் வியர்த்து, அதைத் தடுத்து, பெண்ணை உடனடியாக டவுனுக்கு, அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் சாம்பசிவம். அடுத்த வீட்டுக்காரன் யாரென்றே தெரியாது அங்கு ஒவ்வொருவரும் வாழ்ந்தது அவருக்குச் சாதகமாகப் போயிற்று.

    அப்பெண்ணை நிறைமாதக் கர்ப்பிணியாக அங்கு ஆஸ்பத்திரியில் பார்த்ததாக அவர்கள் பள்ளித் தோட்டக்காரன் முருகன் நாதனுடைய காதைக் கடிக்காத குறையாகச் சொன்னதோடு, ‘பெரிய வாத்தியார்கிட்ட இதைப்பத்தி நான் சொன்னதா எதுவும் கேட்டுடாதீங்கைய்யா!’ என்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

    அதன்பின், அப்பெண் தந்தைவீடு வந்து சேர்ந்தாள். அவளைப்பற்றிய ரகசியம் தனக்குத் தெரிந்திருப்பதாலேயே தான் அவரைவிட ஒரு படி மேல் என்று நாதன் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்த எண்ணத்தில் பிறந்த கருணையுடன், “நாடுவிட்டு நாடு எதுக்காக வந்து, இங்க இருக்கறவங்க பிழைப்பிலே மண்ணைப் போடணும்கிறேன்!” என்றார் அழுத்தமாக.

    தமது மூதாதையர்களும் அதேமாதிரிதான் தாய்நாட்டைவிட்டு இந்த மலேசிய மண்ணில் கால்பதித்தார்கள் என்பதை இருவருமே அப்போது நினைத்துப்பார்க்க விரும்பவில்லை.

    நாதன் சொன்னது தன் காதிலேயே விழாததுபோல் நடந்துகொண்டார் சாம்பசிவம். ஒருநாள்போல் தினமும் இரவில் வீட்டுக்குப் போனால், மனைவியிடம் ‘பாட்டுக் கேட்கவேண்டி வருமே’ என்ற பயமெழ, சாம்பசிவம் அவசரமாகப் பேச்சை முடித்துக்கொள்ளப் பார்த்தார்: “அட, நாம்பளும் இளவட்டங்களா இருந்தவங்கதான். இப்படி ஆயிரக்கணக்கான மைல் தொலைவு — மலைமேலேயும், காட்டுக்குள்ளேயும் நடந்துவந்து, — பிழைப்புத் தேடறது லேசில்ல. ‘பணம்தான் கிடைக்குதில்ல, சன்னியாசிமாதிரி இரு’ன்னு சொல்லிட முடியுமா?”

    பெரிய வாத்தியார் திடீரென்று கட்சி மாறிவிட்டது எதனால் என்று திகைத்தார் நாதன். ஆண்-பெண் விவகாரத்தைப்பற்றிப் பேச்சு திரும்பியதும், சாம்பசிவத்துக்கு மனைவி ஞாபகம் வந்ததை அவர் எப்படி அறிவார்!

    “கோயிலுக்கு வந்தோமா, சாமி கும்பிட்டோமான்னு இல்லாம, கண்டதுங்களைப்பத்தி எல்லாம் என்னா பேச்சுங்கறேன்!” என்னவோ, அடுத்தவர் மூச்சு விடாமல் பேசினாற்போலவும், தான் அதைக் கேட்க நேர்ந்துவிட்டாற்போலவும் நொந்துகொண்டவர், நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “என்னப்பனே, முருகா! எல்லாருக்கும் நல்ல புத்தியைக் குடுடா!” என்று கடவுளை இறைஞ்சியபடி, எதிரில் நின்றிருந்தவரிடம் விடைபெற்றுக் கொள்ளாமலேயே நடையைக் கட்டினார்.

    (இதயம், 1996, வலைத்தமிழ்)

    Share