-றியாஸ் முஹமட்
தரணியில்
கவி பாட
என்னை
அழைக்கின்றாள்!
முத்து முத்தாகக்
கவி பாட
நான் கவியரசு
வைரமுத்துவுமில்லை!
கட்டுக் கட்டாக
அவிழ்த்த விட
நான் கவிஞர்
கண்ணதாசனுமில்லை!
சுரந்து வரும்
என் எண்ணங்களையும்
வண்ணக் கனவுகளையும்
வாளி கொண்டு
அள்ளி இறைக்க
நான் கவிஞர்
வாலியுமில்லை!
அதை நின்று கேட்டு
ரசிக்க ருசிக்க
இங்கே ஒரு
பாரதியுமில்லை
ஒரு
நாதியுமில்லை!
அமரர்
கல்கியைப்
போலக்
காலங்கள்
கடந்தாலும்…
பாவலர்
பா விஜயைப்
போல
என் பருவங்கள்
தொடர்ந்தாலும்…
விட மாட்டேன்
என் பேனாவை!
இனி எனது
எழுது கோலில்
தீ மூட்டித்
தீக்குச்சியாய்
எரியப்
போகிறேன்…
நசிங்கிப் போன
என் சமூகத்தின்
நாளைய
விடியலுக்காக..!


Leave a Reply