Blog

  • Carnivorous Plants

    P.Tamizhmuhil Neelamegam


    We all know that plants prepare their food by the process called Photosynthesis. But there are certain plants which depend on living organisms for their livelihood.Such plants are called Carnivorous Plants.

    Carnivorous Plants are the plants which capture, kill and digest the insects and other small organisms.These carnivorous plants live in a soil that is deficient in Nutrients.So,they supplement their diet with nutrients obtained by digesting the  insects. These plants have some specialized leaves or flowers or tentacles to capture the prey and digest them.

    A plant is said to be carnivore, if they possess the following characteristics:

    • The plant must have certain adaption to capture the prey. For example, a trap.
    • The plant should be able to digest the prey. It may produce certain digestive enzymes or it may rely on certain bacteria or other organisms for digestion.
    • The plant must be able to absorb the nutrients and it should be benefited by them.

    The Plants must possess certain adaptations to capture the prey.The adaptations include trap type and certain modifications in the trap that improve the efficiency of the plant in prey capture.The trapping mechanism always involves certain leaf modifications, in which the leaves acts as a trap.

    The different trap types include

    • Pitfall traps
    • Sticky traps
    • Lobster pot traps
    • Suction traps
    • Snap traps

    Certain examples for the modifications that improve the efficiency may include

    • The plant may produce an attractive smell
    • The trap will be more attractive and colorful
    • The surface of the trap may be waxy or slippery
    • The insects may get stuck to the hairs present
    • The trap fluids may be sticky
    • The plant may produce nectar which tempts the prey

    Sundew, Pitcher plant/Nepenthes,Butterworts are certain examples of carnivorous plants.

    To be continued….

    Share
  • வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன்

     (I Hear America Singing)

     

    Walt Whitman

    (1819-1892)
    (புல்லின் இலைகள் -1)

     

    மூலம் : வால்ட்  விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

     

     

     

    அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன்

    அநேக கோலாகலப் பாடல்களைக்

    கேட்கிறேன்.

    எந்திரத் துறைஞன்

    ஒவ்வொரு வனும் தனது

    தொழில் பற்றிப் பாடுகிறான்,

    களிப்பும், கைப்பலம் அளிப்பதால்.

    தச்சன் தன் தொழிலைப் பாடுவான்

    உத்தரமோ  மரப்பலகையோ

    ஒன்றை அளந்து,

    கொத்தன் தன் தொழிலைப் பாடுவான்

    துவங்கும் போதும் பணியை

    முடித்து விட்டுப் போகும் போதும் !

    படகில் உள்ள தனக்குரிய பொருளைப் பற்றிப்

    படகோட்டி பாடுவான்

    நீராவிப் படகின் தளத்தி லிருந்து !

    செருப்பு தைப்போன் பாடுவான்

    ஒரு நாற்காலி மீதமர்ந்து !

    பொழுது புலர்ந்ததும் காதில் கேட்கும்

    மரம் வெட்டு வோன் கானம்,

    பாதையில் நடக்கும் ஏர் உழுவோன்

    பாட்டும் கேட்கும் அதி காலையில்.

    பகலிலோ அன்றி

    பரிதி அத்தமனத் திலோ !

    தாயின் சுவையான தாலாட்டு கேட்கும்,

    தன் வீட்டு வேலை செய்யும்

    தாரத்தின் பாட்டு,

    இளமங்கை ஒருத்தி தையல் வேலையில்

    அல்லது துணி வெளுப்பில்,

    தம்தம் பணியில் ஈடுபட்டுப் பாடுகிறார்

    தமது பணி ஊழியர் முன் பாடுவது

    தவிர வேறு யாரிடமும்

    அவர் பாடுவ தில்லை !

    பகற் பொழுது பகலைச் சார்ந்து செல்லும்

    இரவில் வாலிபர், மற்றும்

    எடை பெருத்தவர்,

    இரக்கம் மிக்கவர் உரக்கப்

    பாடுவர் வாய் திறந்து

    வேடிக்கைப் பாட்டுகளை.

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman   [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 16, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • Invitation- Thiruvalluvar Statue Unveiling ceremony & Seminar on Thirukkural – 20 Jan 2013

    Dhivakar

    Good Evening

    Wish you all a very Happy Pongal and prosperous 2013
    Unveiling ceremony program is finalised.
    Invitation card is attached herewith
    All are requested to attend the program with family and friends

    Program:

           20 Jan 13 – Sunday –    Venue: Tamil Kalai Mandram, Seethammadhara NE extension ( Near Abhaya Anjaneyalu               
           Temple / NRI Hospital / Gurudhwara )

                                           9.00 – 10. 30 AM

                         – Unveiling of Thiruvalluvar Statue by His Excellency  Dr K Rosaiah, The Governor of Tamil Nadu
                         –  Conferring the award ” Ulaga Tamil Mozhi Neriyalar” on Dr VG Santhaosam
                         – Address by His Excellency Governor & Guests

                                            1030 – 1.00 PM

                         – Music Program ( Thirukkural Isai Thendral ) by Kalaimamani Thiru TKS Kalaivanan

                         – Seminar on Thirukkural (திருக்குறள்-கருத்தரங்கம்) by Various delegates from TamilNadu 

                                              1.00 – 2.00 PM
                         – Lunch

                                               2.00 – 3.30 PM

                         – Hilarious Patti Mandram By Dr Ulaga Nayaki Palani & Team
                       
                                                3.30 – 4.30 PM

                         – Kavi Arangam by Dr ‘Perumkavi’ KO Va Nedil Sthuraman & Team

                                                4.45 – 5.00 PM 
                         – Tea Break
                                                    5.00 – 6.00 PM 

                         – Address By Scholars

                                                     6.00 – 7. 00 PM

                         – Dance Program

                                                      7.00 – 8.00 PM

                         – Dinner


    Elaborate arrangements are being made

    Large no of scholars / delegates  are visiting our Mandram and giving program

    Please spare your whole day ( 20 Jan 2013) and enjoy the Kural Mazhai

    Make the event a memorable one

    Regards

    Tamil Kalai Mandram




     

     

    Conference on Thirukural
    in Association with
    VGP Ulaga Tamil Sangam
    Venue : Tamil Kalai Mandram
    Tiruvalluvar Statue Unveiling Cermony
    &
    Cell : 8106774940, 9908028789
    9849594103, 9440356118.

    Page 2
    Unveiling of Statue of Thiruvalluvar
    Time
    : 9.00 am onwards
    Venue
    : Tamil Kalai Mandram, Visakhapatnam.
    Programme
    : Invocation of Tamil Thai Vazthu by
    T.K.S Kalaimamani and TKM Team
    Chaired by
    : “Kalaimamani” Dr.V.G.Santhosam
    Founder & President VGP Ulaga Tamil Sangam
    Presided by
    : Rev. Dr. V.G. Selvaraj
    General Secretary – Ulaga Tamil Sangam
    Mr. M. Sivaraman
    President Tamil Kalai Mandram, Vizag.
    Welcome address by : M.Ravikumar,
    Vice President.
    Tamil Kalai Mandram, Vizag.
    Unveiling of Statue : His Excellency Thiru. Dr. K.Rosaiah
    Governor of Tamil Nadu
    Presentation of award: His Excellency Thiru. Dr.K.Rosaiah
    Governor of Tamil Nadu
    Will confer the award “ Ulaga Tamil Mozhi Neriyallar”
    on Dr. V. G. Santhosam
    On behalf of Tamil Kalai Mandram, Vizag.
    Felicitation :
    Sri.Dharmana Prasad Rao,
    Hon’ble Minister for R&B, A.P.
    Smt.K.Kruparani,
    Hon’ble Union Minister of State for
    Information and Technology, Govt.
    of India
    Sri.Ganta Srinivasa Rao,
    Hon’ble Minster for Infrastructure &
    Port, A.P.
    Sri.Sabbam Hari,
    M.P
    Sri.P.Balraj,
    Hon’ble Minister for Tribal
    Welfare,A.P.
    Sri.D.Srinivas,
    M.L.A, Govt. Whip, A.P.
    Pro.Y.Lakshmi Prasad,
    Ex-MP
    Sri.M.Kandaswamy,
    Ex-MP, Thiruchengode
    Place :
    Tamil Kalai Mandram,
    Seethammadhara, Visakhapatnam.
    Date & Time: 20.01.2013 (Sunday) 9.00 a.m onwards
    All are Welcome
    Reception Committee Tamil Kalai Mandram, Vizag.

    Page 3
    Thirukural Music Nector (Seminar on Thirukural)
    Timings
    : 10.30 am to 1.00 pm
    Poetry by
    : “Thirukural Isai Thendral”
    “Kalaimamani” Thiru.T.K.S Kalaivanan
    Session-1
    Women’s forum
    In the presence of Dr.Avai Natarajan
    (Former Vice Chancellor, Tamil University, Tanjore)
    Presentation of seminar papers on Thirukural by various women participants
    Chaired by
    : Kalaimamani Dr. V.G. Santhosam
    Presided by
    : Rev. Dr.V.G Selvaraj
    Presence
    : Sri. A. Ponnu Swamy, IRS
    Commissioner Customs & Excise
    Mr. V. Divakar, Tamil Writer
    01.00 – 02.00 pm
    : Lunch Break
    02.00– 03:30 pm
    : Hilarious Pattimandram
    by Dr. Ulaga Nayagi Palani & Team
    03.30– 04:30 pm
    : Kavi Arangam
    by Munaivar. “Perumkavi”
    Ko.Va.Nedil Sethuraman & Team
    4:45- 5:00pm
    : Tea Break
    5.00-6.00
    : Speeches of Participants from other Places.
    6:00 – 7:00pm
    : Dance Programmme
    Vote of Thanks :
    Thiru.J.Anantharaman,
    Secretary, Tamil Kalai Mandram, Visakahapatnam.
    *****
    Guest of Honour :
    Sri. Tynala Vijaykumar,
    M.L.A
    Sri. Dr.Malla Vijay Prasad,
    M.L.A
    Sri. Velugupudi Ramakrishana,
    M.L.A.
    Sri.Avanti Srinivas,
    M.L.A
    Sri.Babu Rao,
    M.L.A
    Sri.P.Ramesh,
    M.L.A
    Dr.V.G.Santhosam
    Sri.V.G.Selvaraj
    Dr.R.Padmanaban
    Sri.Avai Natarajan
    Sri.K. Panneerchelvam
    Stone Trust Enterprices, Chennai.

    Page 4
    Dear
    Greetings to you All,
    It is a well known fact that VGP Ulaga Tamil Sangam is
    involved in the propagation of the ideas of Thiruvalluvar by
    organizing various Conferences, Seminars on Thirukural, Re-
    search conventions , and perpetuating his memory by installing
    his statue across the Globe and is devoted to the cause of Tamil.
    It has been decided to conduct VGP Ulaga Tamil Sangam’s
    12th conference on 20th Jan 2013 , Sunday at Visakhapatnam,
    in collaboration with Tamil Kalai Mandram , Visakhapatnam.
    Eminent personalities from Tamil Nadu and from
    Visakhapatnam are participating in the function, besides Minis-
    ters from the Central & State Government.
    To add glory to the poet of the world “Thiruvalluvar”, His
    Excellency, Governor of Tamil Nadu, Dr. K. Rosiah Garu,
    Honourable Ministers from the Centre, Mrs. Killi.Kruparani and
    other Ministers from Andhra Pradesh are participating in this grand
    function. To enhance the greatness of Valluvar across the world,
    VGP Ulaga Tamil Sangam and Tamil Kalai Mandram,
    Visakhapatnam have joined hands to hold this conference in
    Visakhapatnam and all are invited to this grand function.
    Tamil Kalai Mandram, Visakhapatnam has decided to honour
    the Founder & President of VGP Ulaga Tamil Sangam on this
    occasion, with the title “ Ulaga Tamil Mozhi Neriyallar” and felici-
    tate him for yeoman service rendered by him for the cause of
    Tamil.Besides it has been decided to honour other eminent Tamil
    personalities on this occasion.
    All are invited to attend this grand function.
    Thanking you,
    Organizing Committee,
    Tamil Kalai Mandram,
    Visakhapatnam.
    VGP Ulaga Tamil Sangam,
    Chennai.
    Share
  • காதல் கீதை …!

    ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்

    வீட்டை விட்டு இறங்கி பாதி வழி வந்ததும் காற்றும் கூடவே துரத்த மழை வருமோ என்று வானம் பார்க்கிறார் கல்யாண ராமன். எதற்கும் இருக்கட்டும் என்று கையோடு  கொண்டு வந்த குடை….”நானிருக்கேன் …கவலைப் படாதே .! என்றது. இந்தக் காற்றையெல்லாம் உன்னால தாக்குப் பிடிக்க முடியாது …..நீ பேருக்குத் தான் குடை…உன்னை  அது  இழுக்கும் ஒரே இழுப்பிலே  நீ என்னை விட்டு பறந்து போய்டுவே…உன்னை பற்றி நேக்குத் தெரியாதா..? எத்தனை குடைகள் உன்ன மாதிரி என்கிட்டே சொல்லிட்டு காற்றோடு விடை பெற்று ஓடிப் போயிருக்கும்.

    அதற்குள் சட சட வென்று மழை கொட்ட ஆரம்பித்தது….குடையை விரித்ததும்…அசுரக் காற்று குடையை மேலிழுத்துக்  கொண்டது. குடையின் கைப்பிடியை கெட்டியாகப் பிடித்துகொண்டு தொங்கிய கல்யாண ராமன் குடையோடு சேர்ந்து தானும் பறந்து விடாமல் இருக்கணுமே என்ற பயத்தில் சற்று இறுக்கமாக கீழ் நோக்கி இழுக்கிறார். இடுப்பு வேஷ்டி…’இதோ அவிழ்ந்து விடுவேன் ‘ என்று பயமுறுத்த ‘மானமா..?..குடையா….?என்று மனசு பட்டிமன்றம் எதுவும் நடத்தாமல் தொலைஞ்சு போ என்று கைப்பிடியைத் தளர்த்த குடை  சுதந்திரமாகப் பாடிப் பறந்து சென்றது.

    கைகள் இரண்டும் விருட்டென அவிழத் துடிக்கும் வேஷ்டியை இறுக்கிப் பிடிக்க..காற்றும் மழையும் கண்ணா மூச்சி விளையாடியது.
    குடை போச்சே…..என்று வருத்தப் பட்ட கல்யாண சுந்தரம் அருகில் இருந்த ஒரு பஸ்சுக்காக இருந்த  நிழற் குடையின் உள்ளே தஞ்சம் புகுந்தார். மழை நின்ன பிறகு  போனால் போதும். உட்கார இடம் இருக்குமா ? என்று திரும்பிப் பார்த்தவர்  முகம் சுளித்தார். ஏதோ ஒரு மட்டரக சினிமா போஸ்டர் வரிசையாக விளம்பரப் படுத்த ஒட்டியிருந்தது. ஓரங்களில் எல்லாம் வெத்தலையை மென்று துப்பிய கரை…..மனசுக்குப் பிடிக்காத குடலைப் பிரட்டும் நாற்றம் வேறு. வேற வழியே இல்லாமல் சுற்றுப்புறத்தை சகித்துக் கொண்டு நின்றிருந்தார் கல்யாண ராமன்.

    அடுத்த சில நொடிகளில் ஒரு பெண் ஓடி வந்து அந்த சிறிய இடத்துக்குள் நுழைந்து கொண்டாள் . ஸ்கூலில் இருந்து நேரே வந்ததற்கான அடையாளமாய் யூனிஃபாரமில் இருந்தாள்.  ரெட்டைச் சடை மடித்துக்  கட்டி அதன் வழியே வாடிய  மல்லிகைப்பூ சரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு வித பயம் முகத்தை மேக் அப் போட்டு விட்டிருந்தது.  அவளது முகத்தின் வியர்வையை மழை நீர் துடைத்து துடைத்து தோற்றுப் போனது. கையில் பெயருக்கு  ரெண்டு  நோட்டுக்கள் . முதுகில் கவசமாக புத்தகப்பை வேறு. அவளது கண்கள் ஒரே திக்கை பார்த்த வண்ணம் இருந்தது. அதில் யாரையோ  எதிர்பார்த்து தூரத்தில் தேடிக் கொண்டிருந்த தவிப்பும் தெரிந்தது.

    கல்யாண ராமன் அவளையே பார்த்த வண்ணம் நிற்கிறார். சின்னப் பெண்..மிஞ்சி மிஞ்சிப் போனால்..என்ன வயதிருக்கும்..? ஒரு பதினாறோ பதினேழோ தான்  இவளுக்கு. பெரிய பிரமாதமான அழகின்னு சொல்ல முடியாது..ஆனாலும் அந்த வயதுக்கு உண்டான கவர்ச்சி, கண்களில் மருட்சி, யாராவது பார்த்து விட்டார்களோ என்ற உணர்வோடு ஒரு பருவத்தின் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என்று நான்கும்  எட்டி எட்டிப் பார்த்தது.

    இதற்குள் ஓரக் கண்ணால் இவர் தன்னைப் பார்க்கிறாரா என்று பார்த்து விட்டு தன துப்பட்டாவை எடுத்து முகத்தை, தலையைத் துடைத்துக் கொள்கிறாள் .  திடீரென ஒரு பாடல் ஓசை…செல் போனில் !

    தீயே தீயே ராதீயே இனி தீயே….!.
    தீண்ட தீண்ட தீர்ந்தியே.
    தீயே தீயே ராதீயே இரு தீயே…!.
    தீர தீர சேர்ந்தியே…

    அவளது புத்தகப் பைக்குள் இருந்து வந்து கொண்டிருந்ததை கைபேசியை வெளியே எடுத்து சட்டென அதன் வாயை மூடினாள் .
    .

    அதன் பின்பு அவள் குசு குசு வென்று தனக்கும் கேட்காமல் எதையோ பேசிவிட்டு மீண்டும் புத்தகப் பைக்குள் போட்டு விட்டு மீண்டும் ஓரக் கண்ணால் கல்யாண ராமனை ஒரு பார்வை. அதன் பின்பு அலட்சியமாக ஒரு திரும்பல்.

    அதற்குள்….

    வேகமாக ஒரு பைக் வந்து ஓரமாக நிறுத்தி அதிலிருந்து ஒய்யாரமாக ஒரு காலேஜ் ஸ்டுடென்ட்  இறங்கி வருகிறான்…

    அவன் உள்ளே நுழையவும் அங்கிருந்த பெண்ணின்  முகத்தில் ஆயிரம் வாட்ஸ்  பல்பு எரிகிறது. ஊரெல்லாம் பவர் கட் இருந்தாலும் இந்த பெண்கள் முகத்தில் மட்டும் எப்போதும் மின்சாரம் தடையில்லாத சப்ளை இருக்கும் போல…என்று எண்ணிக் கொண்டவர் மெல்ல அங்கே நடக்கப் போகும் நாடகத்தை தன ஓரக் கண்ணால் பார்க்க முடிவு செய்தவராக கண்ணையும் காதையும் தீட்டிக் கொண்டு வேறு பக்கமாகத் திரும்பி  நின்றார்.

    இப்படி மழை வரும்னு நான் எதிர்பார்க்கலை…நீ ஸ்கூலேர்ந்து கிளம்பி இருக்க மாட்டேன்னு நினைச்சேன். நீ ஏன் இந்த  மழைல புறப்பட்டு வந்தே…? .இப்போ பாரு நாம இங்க வந்து மாட்டிக்கிட்டோம்.

    மதியம் இப்போ மூணு பீரியட் அதுல ரெண்டு பீரியட் மாத்ஸ்…கட் பண்ணிட்டேன். நான் பாதி நடந்து வந்தபின்னாடி தான் இப்படி மழை பிடிக்க ஆரம்பிச்சது. என்னால நீயும் இப்படி மழையில் நனைஞ்சுட்டியே….என் கிட்ட சொல்லியிருக்கலாம் இல்ல…நான் இப்ப வரலைன்னு…அவள் தனது துப்பட்டாவை இழுத்து அவன் முகத்தையும் தலையையும் துடைக்கிறாள்…’சாரிடா  அபி ‘ என்கிறாள்.

    இட்ஸ் ஆல் ரைட் …விடு… என்று விலகிக் கொண்டவன்…இதெல்லாம் எனக்கு ஜுஜிபி……நீ தனியா இங்க நிற்கறேன்னு சொன்னதும் தான் நான் கிளம்பி வந்துட்டேன்.

    அதற்குள் அந்தப் பையனின் கண்கள் அந்த சினிமா போஸ்டரை பல தடவைகள் பார்த்து பார்த்து, பின்பு அங்கேயே ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான்……….! ஒரே குளிர்…நீ கூப்பிடும் போது  நான் நெட் சென்டரில் தான் இருந்தேன். நான் இன்னைக்கு காலேஜுக்கே போகலை…. எப்படியும் நம்ம ப்ளான் படி மதியம் வெளில போகணும்..அதான் இங்கயே பக்கத்தில் இருக்கலாம்னு சும்மா வெட்டியா சாட் பண்ணிட்டு இருந்தேன்.  அவன் ஸ்டைலாக புகை விட்டுக் கொண்டிருந்தான். அவள் அதைப் பார்த்து ரசித்து கொண்டு அருகில் அவனிருக்க வானுலகில் மிதந்து  கொண்டிருந்தான்.

    இத்தனை நாளா பெய்யாமல் இன்னிக்குன்னு பார்த்து சேர்த்து வெச்சு கொட்டுது இந்த மழை இப்போ நிற்கும்னு எனக்குத் தோணலை….அடுத்து என்ன செய்யலாம்..? அவள் மெல்லக் கேட்கிறாள்.

    வரியா…எங்காவது சினிமாத் தியேட்டரில் போய் உட்காரலாம்.”காதல் ஜோடி” ன்னு புதுப்படம் நமக்காகவே  தயாரிக்கப்பட்டது போல எடுத்திருக்காராம்…அதுக்கு வேணாப் போகலாமா? .

    அய்யயோ….நான் வரலை அபி….யாராவது பார்த்தா வம்பாயிடும். இப்பவே பயம்மா இருக்கு….மெல்ல அவன் முதுகுப்பக்கமா தலையை மறைத்துக் கொள்கிறாள்.

    அங்கிருந்த ஒரு கம்பி மேல் இருவரும் எம்பிக்  குதித்து  அருகருகில் உட்கார்ந்து கொள்கிறார்கள். தனிமையும்,, உடற் கணப்பும், தைரியமும்  நெருக்கமும் இருவருக்கும் ஒரு தைரியத்தைக் கொடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.

    சந்தியா நீ என்ன சாப்பிட்டே..?

    இன்னும் ஒன்னும் சாப்பிடலை….அப்படியே கொண்டு வந்துட்டேன்…உனக்குப் பிடிக்குமே…..மிளகாய்ப் பொடி  தடவின இட்லி. என்று ஸ்கூல் பையிலிருந்து டிபன் பாக்சை வெளியே எடுக்கிறாள்.

    அவன் தன விரல்களுக்கிடை இருந்த சிகரெட்டுக்கு விடை கொடுத்து கையை மழை நீரால் அலம்பிக் கொண்டு எடு..எடு….என்று சொல்லி ஒரு இட்லியை பிய்ச்சு ‘இந்தா என்று அவளது வாயருகே கொண்டு செல்லவும்’

    முதல்ல நீ சாப்பிடு என்று அவள் முகத்தைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்கிறாள்.

    பார்த்து…பார்த்து…எங்கியாவது விழுந்து வைக்கப் போறே…! அவனது பதட்டம் குரலில்…

    இருவரும் சிரிக்கிறார்கள், குசு குசுவென்று மொபைலுக்குள் தலையை விட்டுக் குனிந்து கொண்டு ரகசியம் பேசிக் கொள்கிறார்கள்.அப்பப்போ தலையை நிமிர்த்தி இவரையும் ஒரு பார்வை பார்த்துக் கொள்கிறார்கள்.

    காசு கொடுக்காமல், இந்தக் காதல் நாடகத்தைப்  பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கல்யாண ராமனுக்கு சிரிப்பு வந்தது பைத்தியக்காரத் தனமாக கூடத் தெரிந்தது . அதே சமயம் பொறாமையாகக் கூட இருந்தது.

    அவர்களின் அன்பின் பரிமாற்றம் கல்யாண ராமனின்  மனதிற்குள் என்னவோ செய்தது…ஒரு பெண் செலுத்தும் அன்பு சுகமானது…அலாதியானது தான்

    ஆனால் அவரது அனுபவத்தில் அந்தப் பையனைப் பார்க்கும் போது  அவருக்குப் பிடிக்கவே இல்லை. இவன் நிச்சயமா இவளை ஏமாத்திடுவான் என்றே தோன்றியது. உடற் கவர்ச்சியில் உண்டான காதலுக்கு ஆயுள் அறுபது நாட்கள் தானே..?

    மழை இன்னும் விட்டபாடில்லை. மின்வெட்டு ஆகி வானம் கருத்து வெளிச்சம் மங்கிய பொழுதாக அந்தப் பகல் பொழுது இருண்டு கிடந்தது.

    திடீரென கல்யாண ராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது….நேராக அந்த இருவர் இருக்கும் பக்கம் சென்று….அந்தப் பெண்ணின்  அருகில் சிறிது தள்ளி அமர்ந்து கொள்கிறார்.

    பயந்து போன  இருவரும்…டக்கென கம்பியிலிருந்து கீழே குதித்து…’சந்தியா..வா போயிறலாம்…இங்க இன்னும் நாம நிக்க வேணாம்…அவன் சொல்கிறான்.

    வேண்டாம் அபி..இந்தக் கொட்டற மழையில எங்க போறது…? இன்னும் ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் பார்க்கலாம்…இது அவள்.

    கல்யாண ராமன் தொண்டையைக் கனைத்துக் கொண்ட படி…சொல்கிறார்…” காலம் கெட்டுக் கிடக்கு, இப்படி தனியா வராதேம்மா..யாரை நம்பியும்…..கிளாஸ் கட் பண்ணிட்டு இப்படி வந்து பொழுதைப் போக்கற  விஷயம் உங்க டீச்சருக்கோ, உங்க பேரெண்ட்ஸுக்குத்  தெரிஞ்சால் அவ்ளோதான்… முதல்ல .படிப்பு…!  அதுதான் முக்கியம் ! ..!

    இவர் பேசப் பேச அந்த பையனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது….’இதைச் சொல்ல நீ யாரு? ‘ அவன் கண்கள் கேள்வி கேட்டது. கண்களாலேயே இவரது கன்னத்தில் அறைவது போலப் பார்த்தான்…அவன்.

    வருத்தமோடு கல்யாண் ராமன் வானைப் பார்த்துப் பேசினார்

    போன வாரம் நடந்த எங்க சோகக் கதையைக் கேளுங்க….என் மகளுக்கு   ,உன் வயசு தான் இருக்கும் அவளுக்கும்,. ஸ்கூலுக்குப் போற நேரத்தில் கிளாசைக்  கட் பண்ணிட்டு எங்கியோ அவளோடு பாய்  ஃப்ரெண்டோட ஊர் சுத்தப் போயிருக்கா…இது வீட்டுக்குத தெரியாது. ஆனால் திடீர்னு ஏதோ விரோதம்…முன்பகை காரணமா அந்தப் பையனை  நாலு பேர் சேர்ந்து கட்டிப் போட்டு என் மகளைச் சீரழித்து  கத்தியால குத்தி …இரத்த வெள்ளத்தில் போட்டுட்டு போய்ட்டாங்க ஸ்கூலுக்குப் போனவள் இன்னும்  இவ்வளவு லேட்டாகியும் வரலையேன்னு  தேடிப்  போனா…. வெளில என்னவெல்லாமோ நடந்து போச்சு. போலீஸ்  ஸ்டேஷனுக்கும்… ஹாஸ்பிடலுக்கும் நடையா நடக்கிறேன்…இப்போ கூட அங்கே  தான் போறேன்….என் மகளைப் பார்க்க. உன்னைப் பார்த்ததும் எனக்கு அவள் ஞாபகம் தான் வந்தது. கூடா நட்பு வேதனை தரும்னு சும்மாவா சொல்லியிருக்கு. அதான் சொல்றேன்….இன்னும் என் மகள் ஆஸ்பத்திரியில் தான் இருக்காள் நா தழுவி தழுக்க சொல்லும்போதே…அந்தப் பையனின் கைபேசி பாடி அழைத்தது.

    எடுத்துப் பார்த்தவன்…கைபேசியை அணைத்து  விட்டு தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் உள்ளே நுழைந்து கொண்டான். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. அவனுக்குள் ஒரு அமைதியின்மை…அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என்ற துடிப்பும் தெரிந்தது.

    யார்ட்ட இருந்து போன் அபி? அவள் கேட்கிறாள். அவன் பதில் சொல்லாமல்…..அவரைப் பார்த்து…இப்ப உங்க டாட்டர் எப்படி இருக்காங்க..? அவன் இவரைப் பார்த்து அசால்டாகக்  கேட்கிறான்.அவன் மனசுக்குள் போன வாரம் தனது சிநேகிதன் ராகுல் ஒருத்தியை கத்தியால் குத்திவிட்டு இப்போது ஜெயிலில் இருப்பது நினைவுக்கு வந்தது. ஒருவேளை அந்தக் கேஸு  இவரது மகளோ என்னவோ..?

    குத்தியது யாரு சார்..?.கேட்க நினைத்தவன்..வாயை மூடிக் கொண்டான்…காரணம் மீண்டும் இவனது கைபேசி பாடி அழைத்தது.

    கல்யாண ராமன் அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். “அதனால தான்மா சொல்றேன்…யாரையும் நம்பாதே…படிக்க வேண்டிய வயசில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்க….வாழ்க்கை  நீண்டது….உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் உங்கள் வாழ்வில் தானே கிடைத்து விடும்..அதற்காக அவசரப் படக் கூடாது. ஆண்கள் எளிதாக மனதை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் நீங்கள் இளம் வயதில் பாதை தவறிப் போய்  திக்குத் தெரியாமல் வாழ்நாள் முழுதும் அதை நினைத்து மனசுக்குள் புழுங்குவீங்க…இதுல அந்தக் காலம் இந்தக் காலம் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. அடிப்படை  உணர்வுக்கு காலமோ, விஞ்ஞான வளர்ச்சியோ தடையாக இருக்காது. முதலில் நன்கு படி.  நன்னாக் கை நிறைய சம்பாதி ,சொந்தக் காலில் நின்ன பிறகு தான் காதலும், கல்யாணமும்….என்று தீர்மானமாகச் சொன்னவர் உங்கள் வீட்டிலும் இதெல்லாம் சொல்வார்கள் தானே. அம்மா அப்பா பேச்சைக் கேட்டு பிறகு மனசு பேசறதைக் கேட்கலாம்.பெற்று வளர்த்தவர்களையும் கொஞ்சம் யோசிக்கணும். அவர்களை ஏமாற்றாதீங்க. ஏமாற்றினால் பாதிப்பு பெண்ணுக்குத் தான்…  !  பசங்களுக்கென்ன….நீ இல்லையின்னா இன்னொருத்தின்னு தேடிட்டு போய் கிட்டே இருப்பாங்க..ஆனால் உன்னால அப்படிச் செய்ய முடியுமா? யோசித்துப் பாரு…  உன் கனவுகள் எல்லாம் பாழாய்ப் போகும்.பிறகு காலம் பூரா கண்ணைக் கசக்கிக் கொண்டு நிக்க வேண்டியது தான்.

    அவள் கேட்பது போல முகத்தை அவர் பக்கம் திரும்பி வைத்துக் கொண்டிருந்தாலும் காது அவன் போனில் என்ன பேசுகிறான்? என்றே கேட்டுக் கொண்டிருந்தது.

    அதிலிருந்து வந்த பெண் குரல்…இவன் பேசும் அமைதியான தொனி …இரண்டும்..அவளுக்கு கற்பனையை வளர்த்தது. யாராயிருக்கும் அந்தப்  பெண்?

    கேள்விக் குறி இவளது மனதில் விஸ்வரூபமெடுத்தது.

    கொட்டித் தீர்த்த வானம்….பூமியை நீர்காடாக ஓடவிட்டு வானம் நிர்மலமாக பளிச்சென்று இருந்தது.

    சரி…கிளம்பு…கிளம்பு….நீ கிளாசுக்குப்  போ…எனக்கு வேற வேலை இருக்கு நாளைக்குப் பார்க்கலாம்..சாரி….நான் பிறகு ஃபோன்  பண்றேன்…இப்போ அவசரமாப் போறேன்….என்று இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற தோரணையில் அவளை ‘அம்போன்னு ‘  விட்டுவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து இவளைப் பார்க்காமலே, பை சொல்லாமலே விட்டு  பறக்கிறான்.

    அபி தன மனதுக்குள் ” இந்த சந்தியா சப்ப மேட்டர்…! ஒரு நாள் பஸ் ஸ்டான்டில்  பார்த்து சிரித்துவிட்டு மொபைல் இருக்கான்னு கேட்டதுமே..நம்பரைத் தூக்கிக் கொடுத்த பார்ட்டி. எப்ப வேணா வந்து சாரி சொன்னா சரின்னு தலையாட்டிடும்..ஃ போனே செய்ததும் போகலைன்னா அந்தப் அனுஷா வெய்ட் பண்ணாமல் ஓடிடுவா….காஜல் மாதிரி
    ஃபிகரை   அங்க காக்க வெச்சுட்டு இந்தக் குள்ளக் கத்திரிக்காய்  கிட்ட வந்து நல்லா மாட்டிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்…இப்ப இவளை கழட்டி விட்டுட்டு ஓடிடலாம்….

    இவள் நில் போகாதே.. .என்று சொன்னதையோ….நானும் வரேன் என்று சொன்னதையோ….அவன் சிறிதும் காதில் வாங்காதது போல பறந்து சென்றது  அவளுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. கோபம் குமுறிக் கொப்பளித்தது.

    இதை கவனித்த கல்யாணராமன், “காதல் நாடகம் முடிந்தது பாப்பா .. நீ ஒரு ஆட்டோ பிடிச்சு ஸ்கூலுக்குப் போம்மா..”  என்றவர்…..உன்னைப் பெற்றவர்களை நம்பு…..உனக்கு வேண்டியதை அவர்கள் தான் செய்வார்கள்….”இவனை எல்லாம் நம்பாதே …காவாலிப் பயல்…நானும் பார்த்துக்கிட்டே தானே இருந்தேன்…எப்படி ஓடறான் பார்… ” என்று ஒரு சந்தேக விதையை அவளது இதயத்தில் ஊன்றி வைத்து விட்டு…..நிம்மதியாக அந்த இடத்தை விட்டு இறங்கி நடக்கிறார்.

    அவர் மனத்தில்….”யாரு பெத்த பெண்ணோ…..ஒரு வஞ்சகனிடம் இருந்து காப்பாற்றியாச்சு…..மழையே உனக்குகே கோடி நமஸ்காரம்…என்று கைகூப்பியபடி வானத்தைப்  பார்க்கிறார்….உள்ளிருந்து மனசாட்சி கேட்டது…உனக்குத் தான் கல்யாணமே ஆகலையே கல்யாண ராமா..? பின்ன எப்படி ஒரு கத்திக் குத்து கதை விட்டே…? என்று கேலி செய்து சிரித்தது.

    நல்லதுக்குப் பொய் சொல்லலாம்.  இல்லையா ?  ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்துன்னு சொல்லிருக்கா…..நான் சமயோஜிதமா ஒரே ஒரு  பொய் சொன்னேன்…அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆகணும்னு. அந்த இளம் பெண்ணுக்கு  புத்தி மாறினாச் சரி.

    அவளின்  பிஞ்சு மனத்தில் கனன்று கொண்டிருந்த தணலில்  சந்தேக  விதை விழுந்து கொழுந்து விட்டு ஏரிய அவள் இதயத்தின் காதல் அப்போதே தகனம் ஆகிப் புகையாகி ஆவியாகிறது.. அவள் மனசு ஐயோ அடுத்த பீரியர்டுக்குள்ள கிளாசுக்குள் போய்டணுமே என்று படபடத்தது.

    எதிர்பாராமல் தனக்கெனவே மழை பெய்து  அந்த கிருஷ்ண பரமாத்மாவே மழைக்கு ஒதுங்கி கீதை ஓதியதாக எண்ணி  வணக்கம் செய்தாள் .சந்தியா.. !

    ============================================================

    Share
  • பொன் வண்டு (இறுதிப் பகுதி)

    பவள சங்கரி

    அன்பு நண்பர்களே,

    பல நாட்களுக்கு முன்பு ‘பொன் வண்டு ‘ என்ற இந்த சிறுகதையின் முடிவை எழுதுமாறு ஒரு சவால் விட்டிருந்தோம். அதற்கான சரியான முடிவு கிடைக்காதலால் நானே எழுதி முடித்திருக்கிறேன். இதற்கு வேறு விதமான முடிவு யாராவது அளித்தாலும் மகிழ்ச்சி. இதோ என்னுடைய முடிவுப் பகுதி. நன்றி .http://www.vallamai.com/literature/short-stories/4737/

    உட்கார்ந்து சற்று சாய்ந்து இளைப்பாற நினைத்து மெதுவாகக் கண்ணை மூடியவள்……..அதற்குப் பிறகு நடந்தது எதுவும் அவள் அறிந்தாளில்லை. அருகில் இருந்த மாலா மட்டும் ஒயிலாவிடம் இருந்த பெரும் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே, திடுமென மூக்கிலிருந்து இரத்தம் வெள்ளமாக பெருக ஆரம்பித்தது…..மாலாவின் மீது அப்படியே சரிந்து விட்டாள். மாலா போட்ட கூச்சலில் பேருந்தின் ஓட்டுநர் அப்படியே பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். நடத்துநர் ஓடி வந்து பார்த்து சூழலைப் புரிந்து கொண்டு கூடியிருந்த மாணவர்களை விலக்கி விட்டு நேரே அரசாங்க மருத்துவ மனைக்கு பேருந்தை செலுத்தச் செய்து ……..பின் நடந்ததெல்லாம் சாமான்ய மக்கள் உணர முடியாத ஒரு அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகிப் போனது!ஆன்மா என்ற ஒன்று அழிவில்லாதது……..உயிர் என்பது என்றுமே அழிவில்லாதது……..இதற்கான ஆதாரமே ஒயிலரசியின் சரிதம் ஆனது.

    பி.கு. நண்பர்களே, இக்கதையின் இறுதிப் பகுதியை நீங்கள் எழுதலாம். இக்கதையின் போக்கிலேயே தொடருங்கள் நண்பர்களே….வாழ்த்துகள்.சவாலுக்கு சவால்!

    பொன் வண்டு  – பகுதி (2)

    நேரே அரசாங்க மருத்துவமனைக்கு பேருந்தை செலுத்தச் செய்தார்.  தீவிர சிகிச்சைப் பிரிவில்  மருத்துவர்களின் இடைவிடாத போராட்டத்தையும் மீறி, கூட்டை விட்டுப் பிரிந்தது உயிர். மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக இதுபோன்ற திடீர் மரணம் இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடும் என்று மருத்துவர்களின் அறிக்கை எளிதாக சொல்லி முடித்துவிட்டது.

    காலையில் தங்க ரதமாக அனுப்பிய மகள், வெள்ளை துணி சுற்றிய மூட்டையாக வந்து பட்டாசாலையில் கிடத்தப்பட்டபோது ஊரே சேர்ந்து எழுப்பிய ஒப்பாரி விண்ணைப் பிளந்தது.

    மூன்று நாட்கள் அன்ன ஆகாரமும், சுய நினைவும் இல்லாமல் கிடந்த ஒயிலாவின் தாய், அசந்து உறங்கிக் கொண்டிருந்த விடிகாலைப் பொழுது. சட்டென எழுந்தவள் “ஒயிலா….. வந்துட்டியாம்மா.. வாடா கண்ணு, இதோ வாரேன்… “ என்று குரல் எழுப்பியபடி மளமளவென சுருட்டிப்பிடித்துக் கொண்டு வாசலை நோக்கி ஓடினாள். மருமகளின் குரல் கேட்டு அருகில் இருந்த அப்பத்தாவும், மற்றும் சிலரும் விழித்துக் கொண்டு என்ன நடக்கிறது என்று புரியாமல் அரை தூக்கத்தில் உட்கார்ந்திருந்தனர். மருமகள் இந்த நேரத்தில் எழுந்து வாசலை நோக்கி ஓடுவதைப் பார்த்த அப்பத்தா வேகமாக எழுந்து லைட்டைப் போட்டுவிட்டு மணியைப் பார்த்தார். விடியற்காலை 1 மணி. இந்த நேரத்தில் எங்கு போகிறாளோ என்று பின்னாலேயே ஓடினால், கதவைத் திறந்து கொண்டு , வெளியே தோட்டம் நோக்கிக் செல்லும் பாதையில் வேகவேகமாக நடந்து கொண்டிருந்தாள் அவள்.

    “அடக்கடவுளே.. இவளுக்கு என்ன ஆச்சோ தெரியலியே… இந்த நேரத்துல தோட்டத்துப் பக்கம் போறாளே… டேய்… பழனிச்சாமி.. இங்கன வாப்பா.. வந்து உம்பட பொண்டாட்டி பண்ற வேலையைப் பாரு”  என்று கூச்சலிட்டதைக் கேட்டு, ஒயிலாவின் தந்தையும்  “என்னம்மா.. என்னாச்சு..” என்று  ஓடி வந்தார். விசயம் புரிந்து தானும் வெளியே தோட்டத்தின் பக்கம் வேகமாக மூச்சிறைக்க நடந்து கொண்டிருக்கும் மனைவியின் பின்னால் ஓடிச்சென்று பிடித்து நிறுத்தினார்.

    “அட…விடுங்கோ.. ஒயிலா கூப்பிட்டா, பாத்துப்போட்டு வாரேன். அழுதுட்டிருக்கா குழந்தை. தனியா இருக்க பயமா இருக்குதாம்.. நான் போய் வூட்டுக்கு கூட்டியாறேன்”

    மகளை இழந்த சோகமே வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மனைவியின் இந்த செயலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. துக்கம் தாங்காமல் பாவம் ஏதேதோ செய்கிறாளே என்று வருத்தத்துடன், அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் போதுமென்றாகி விட்டது. வீட்டிற்கு வந்தும் திரும்பத் திரும்ப ”ஒயிலா அழுதிட்டிருக்காள், நான் போய் பார்க்கிறேன் “ என்று தோட்டம் பக்கம் போகவே துடித்துக் கொண்டிருந்தவளை தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாகிவிட்டது. திடீரென்று மகளை இழந்த சோகம் பாவம் மூளையை பாதிக்கிறது, நான்கு நாட்கள் போனால் சரியாகிவிடும் என்று நினைத்தாலும், அன்று போலவே அடுத்தடுத்த நாட்களும் இரவு நேரங்களில் அந்தத் தாயின் செய்கையை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே இருந்தது. காலம் மட்டுமே இதற்கான தீர்வை அளிக்க முடியும் என்று பொறுமையாக இருந்தாலும் இது அப்படியான ஒரு பிரச்சனை அல்ல என்பது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தபோதுதான் தெரிந்தது!

    தாயைப் போலவே இளைய மகள் மஞ்சுவும் அன்று விடியலில் எழுந்து ”அக்கா தோட்டத்தில்தான் இருக்காளாம்….. வா அப்பத்தா போய் பார்க்கலாம். “ என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள். பத்தாம் நாள் காரியங்கள் செய்து சாந்தி பூசை முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.

    மறுநாள் விடியலில் “அப்பத்தா… அப்பத்தா… எழுந்திரு அப்பத்தா…. உனக்குக்கூடவா என்னைத் தெரியல…. “ என்று ஒயிலா முனகும் ஓசை கேட்டு எழுந்து உட்கார்ந்துன் கொண்டவர் சுற்றி பார்த்துவிட்டு, வெறும் பிரம்மைதான் என்று திரும்ப படுத்து உறங்க ஆரம்பித்த நேரம், ”அப்பத்தா, நான் நம்ம தோட்டத்திலேயேதானிருக்கேன். நாளைக்கு அண்ணன் என் பொறந்த நாளைக்காக வாங்கி வச்சிருக்கிற துணியை வேப்பமரத்தடி கன்னிமார் சாமியின் ஐந்தாவது சிலைக்கிட்ட வச்சி பூசை பண்ணுங்க. இனி நம்ம குடும்பத்துக்கு எந்த குறையும் வராம நான் காத்து நிப்பேன்..” என்று ஒயிலா பேசியது கனவு போல இருந்தாலும் தெள்ளத் தெளிவாக இருந்தது.

    பத்தாம் நாள் வீடு வாசல் மெழுகி, சுண்ணாம்பு பூசி, வீடு முழுவதும் கோமியம் தெளித்து, படையல் போடுவதற்கான ஆயத்தங்கள் இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருந்தது. பொதுவாக கன்னி கழியாமல் இறந்து போகும் பெண்களுக்கு பெரிய சாங்கியமெல்லாம் செய்ய மாட்டார்கள். பத்தாம் நாள் கன்னிமார் பூசை செய்து முடிப்பதோடு சரி.

    ஒயிலா தங்களை விட்டுப்பிரிந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது என்று நம்பவே முடியவில்லை. தாயும் மெல்ல தேறி வருகிற நேரம். அன்று மஞ்சு அப்பத்தாவிடம் வந்து அருகில் அமர்ந்து கொண்டு,

    “அப்பத்தா… அக்கா நேத்தும் ராத்திரி வந்துது அப்பத்தா. “

    “என்ன சொல்ற கண்ணு. அப்டீல்லாம் சொல்லக்கூடாது. சும்மா மனப்பிரமை அது. அக்கா நம்மளையெல்லாம் விட்டுப்போட்டு சாமிக்கிட்ட போயிட்டா. இனிமே வரவே மாட்டா….”

    “இல்லை அப்பத்தா. அக்கா சொல்லிச்சு. அக்கா தோட்டத்துல கன்னிமார் சாமி இருக்குற இடம் இருக்குதுல்ல.. அங்கனதான் இனிமே எப்பவுமே இருக்குமாம். வேற எங்கியும் போவாதாம். சாமியா இருந்து நம்மையெல்லாம் நல்லா பார்த்துக்குறேன்னு சொல்லிச்சு….”

    “ ஆமாம் அக்கா நமக்கெல்லாம் தெய்வமா நம்ம கூடத்தான் இருப்பா…”

    “அக்கா தன்னோட ரூமில ஒரு டப்பாவுல பொன் வண்டு வச்சிருக்குதாம். அதைய எடுத்து வெளிய உடச் சொல்லிச்சு. மறந்தே போயிட்டேன் பாரு” என்று சொல்லிக் கொண்டே ஒயிலாவின் அறையை நோக்கி ஓடியவளின் பின்னால் அப்பத்தாவும் சென்றார். அங்கு சென்ற மஞ்சு நேரே சொல்லி வைத்தது போல ஒயிலாவின் புத்தக அலமாரியைத் திறந்து மூன்றாவது தட்டின், இடது மூளையில் இருந்த ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்தாள். அதனுள் இருந்த பொன்வண்டு பளிச்சென்று வெளியே தெரிந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அந்தப் பொன் வண்டு உயிருடன் படபடத்துக் கொண்டிருந்தது.

    “பாத்தியா.. அப்பத்தா. அக்கா வந்தான்னு சொன்னா நம்ப மாட்டீங்கறயே.. பார் அக்கா சொன்ன மாதிரியே இங்க டப்பாவுல பொன் வண்டு உசிரோட இருக்குது..” என்று சொல்லிக் கொண்டே அந்த டப்பாவைத் திறந்து பொன் வண்டை எடுத்து மெதுவாக மேசைமீது வைத்தாள். வைத்த அடுத்த நொடி அது விர்ரென்று வேகமாகப் பறந்து அவர்களை மூன்று முறை சுற்றி வலம் வந்து சிட்டாகப் பறந்து விட்டது. நொடியில் அனைத்தும் நடந்து போன ஆச்சரியத்திலிருந்து மீளவே இல்லை அப்பத்தா.

    வீட்டில் படையல் போட்டு பூசை முடித்து, தோட்டத்தில் கன்னிமார் பூசை செய்வதற்காகச் சென்ற போது அங்கிருந்த ஒரு கன்னிமார் சிலையின் முன் ஒயிலாவின் கண்ணாடி வளையல்களும், அண்ணன் வாங்கிக் கொடுத்த க்கு மிகவும் பிடித்தமான கருகமணி மாலையும் இருந்தது. அது எப்படி அங்கு வந்திருக்கும் என்று ஒருவருக்கும் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. ”ம்ம்ம்ம்ம்….. ச்ச்ச்ச்ச்….ம்ம்ம்….” என்று ரீங்காரமிட்டுக்கொண்டு அந்த கன்னிமார் சிலையைச் சுற்றி வரும் பொன் வண்டைப் பார்த்தவுடன் ஏனோ நிம்மதிப் பெருமூச்சும் வந்தது. அப்பத்தாவும், மஞ்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!

    படங்களுக்கு நன்றி:

    http://badorgood.com/foto/golden-bug-189543

    http://www.photochopz.com/gallery/showphoto.php/photo/2411/ppuser/4224

    http://www.crjayaprakash.com/photography/index.php/Insects/Pon-Vandu

    Share
  • இஸ்ரேல் பயணம் – 6

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில் விமானத்தில் சென்று இறங்கினாலும் டெல் அவிவ் நகருக்குப் போகும் திட்டம் எங்களுக்கு இல்லை. அது இப்போது மிகவும் பெரிய தொழில்நகரமாகி விட்டது. இஸ்ரேலின் ஜெருசலேம் மிகப் பழமை வாய்ந்த ஊர். இங்குதான் கிறிஸ்துவர்களின் வேதப் புத்தகமாகிய பழைய, புதிய ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல இடங்களைக் காண முடிகிறது. இதனால் ஜெருசலேமில் தங்கிகொண்டு இஸ்ரேலின் மற்ற இடங்களையும் பாலஸ்தீனர்களின் ஆளுகையில் இருக்கும் வெஸ்ட் பேங்க்கில் இருக்கும் இடங்களையும் பார்ப்பதென்று முடிவு செய்தோம். டெல் அவிவ் விமான நிலையம் டெல் அவிவிற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் இருக்கிறது. (டெல் அவிவ் விமான நிலையத்தின் பெயர் பென் குரியன் விமான நிலையம். போலந்தில் 1888-இல் பிறந்த பென் குரியன் தன் இளவயதிலேயே ஸயோனிஸத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆட்டோமான் காலத்திலேயே பாலஸ்தீனத்திற்கு வந்து யூதர்களுக்கென்று தனி நாடு நிறுவுவதில் தீவிரமாகப் பணிபுரிந்தார். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு அதன் முதல் பிரதம மந்திரியானார்.) டெல் அவிவ் விமானநிலையத்தை விட்டு ஜெருசலேம் நோக்கி வர வர சமவெளியாக இருந்த இடங்கள் மலைப்பாங்கான இடங்களாகவும் பாலைவனப்பிரதேசமாகவும் மாறிக்கொண்டிருந்தன. ஜெருசலேமும் இம்மாதிரி மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கிறது.

    ஜெருசலேம் நகரம் 48 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இது பரப்பளவைப் பொறுத்த வரை இஸ்ரேலின் பெரிய நகரம் என்று கருதப்பட்டாலும் ஜனத்தொகையில் டெல் அவிவை விட சிறியதுதான். இங்கு வாழும் 7,00,000 பேர்களில் 4,60,000 பேர் யூதர்கள், 2,25,000 பேர் இஸ்லாமியர்கள் (அரேபியர்கள்), 15,000 பேர் கிறிஸ்துவர்கள். இந்த நகரின் மையத்தில் உள்ள புராதனப் பகுதி புராதன நகரம் (old city) என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்த புராதன நகரத்தைச் சுற்றிப் பல புறநகர்ப் பகுதிகள் தோன்றியிருக்கின்றன. புராதன நகரம் கடல் மட்டத்திற்கு மேல் 2,600 அடி உயரத்தில் இருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளாக உருவாக்க ஐ.நா. 1947-இல் திட்டமிட்டபோது ஜெருசலேம், பெத்லஹேம் போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர்கள் ஐ.நா.வின் நேர் பார்வையில் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த ஆறு சண்டைகளில் 1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் ஜெருசலேமை தனதாக்கிக் கொண்டது. அதனால் அது இப்போது இஸ்ரேலின் கீழ் இருக்கிறது.

    புராதன நகரம் முழுவதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருக்கிறது. அது பல மட்டங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதற்குள் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாது. அதற்குள் போவதற்கு ஏழு வாயில்கள் இருக்கின்றன. நடந்து செல்லக் கூடியவர்கள் மட்டுமே புராதன நகருக்குள் சென்று அங்குள்ள பைபிளோடு தொடர்புடைய, யூதர்களும் முஸ்லீம்களும் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடும் பல இடங்களையும் பார்க்கலாம். அது ஒரு தனி உலகம்.

    ஜெருசலேமில் ஆங்காங்கே ஆலிவ் மரங்களும் பேரீச்சம்பழ மரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் இந்தப் பிரதேசத்தில் காலம் காலமாக விளைபவை. ஆனால் அமெரிக்க யூதர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் இன்னும் மற்ற இடங்களில் வாழும் யூதர்களிடமிருந்தும் இஸ்ரேலுக்கு நிறையப் பணம் வருவதால், விவசாயத்தில் புது தொழில்முறைகளைக் கையாண்டு இஸ்ரேல் முழுவதும் பல வகைச் செடிகளைப் பயிர்செய்கிறார்கள். இங்கு விளையும் கத்தரிக்காய் பெரிதாகவும் சுவையாகவும் இருக்கிறது. மேலும் மிகவும் பெரிதாக இருந்தாலும் பிஞ்சாக இருக்கிறது. ஒரு நாள் அவற்றை வாங்கிச் சமைத்த எனக்கு அவற்றில் இரண்டையாவது இந்தியாவிற்குக் கொண்டுவர ஆசை. இஸ்ரேலின் சொட்டு நீர்ப் பாசன முறையை அவர்களிடமிருந்து கற்றுத் தமிழ்நாட்டிலும் இப்போது அதைக் கடைப்பிடிப்பதாகப் பத்திரிக்கையில் படித்தேன். நவீன விவசாயத் தொழில் முன்னேற்றத்தில் இதுவும் ஒன்று. அதுவும் தண்ணீர் அதிகம் இல்லாத இஸ்ரேலில் இந்த முறை மிகவும் பயன்படுகிறது.

    ஜெருசலேம் முழுக்க பேருந்துகளிலேயே போய்வரலாம். நிறைய பேருந்துகள் ஓடுகின்றன. சாலைகளின், ஊர்களின் பெயர்கள் ஹீப்ரு, அரேபியம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளன. யூதர்களுக்கு வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை ஓய்வு தினம் (shabbath day – அதாவது அன்று இறைவனுக்கு நன்றி சொல்லி முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று கருதுவதால்). அன்று அரசுப் பேருந்துகளை நிறுத்திவிடுகிறார்கள்; கடைகளையும் மூடிவிடுகிறார்கள். உணவகங்களும் இதில் சேர்த்தி. ஆனால் துபாயில் ரம்ஜான் சமயத்தில் போல் வெளியில் நம் உணவை உண்பதைத் தடுப்பதில்லை.

    ஜெருசலேமில், குறிப்பாக பழைய நகர்ப் பகுதியில் நிறைய யூதர்கள் தங்களுடைய பாரம்பரிய உடைகளில் நடமாடிக்கொண்டிருந்தனர்.

    ஜெருசலேமிலும் புறநகர்ப் பகுதிகளில் அமெரிக்க மாடலில் பெரிய மால்கள் இருக்கின்றன. அமெரிக்க மாடல் மால்கள் உலகெங்கிலும் பரவி வரும்போது அமெரிக்காவிடமிருந்து எக்கச்சக்கமாகப் பண உதவி பெறும் இஸ்ரேலில் இந்த மாதிரி மால்கள் இல்லாமல் இருக்குமா?

    ஜெருசலேமைச் சுற்றிலும் சிறிய தேவாலயங்கள், கிறிஸ்தவத் துறவி மடங்கள் (monasteries) மற்றும் மசூதிகள் இருக்கின்றன. பழைய நகரை விடுத்து ஜெருசலேமில் மிக முக்கியமான இரண்டு இடங்கள் எல்லோரும் பார்க்க வேண்டியவை. ஒன்று இஸ்ரேல் மியுஸியம் (The Israel Museum); இரண்டாவது யாத் வாஷம் (Yad Vashem). முதலாவது யூதர்களின் பழைய பெருமை வாய்ந்த சரித்திரத்தை எடுத்துக் கூறி தங்கள் இனம் இறைவனின் படைப்பில் சிறந்த இனம் என்று எடுத்துக் காட்ட உருவாக்கப்பட்டது. இரண்டாவது ஜெர்மனியில் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட அறுபது லட்சம் யூதர்களுக்காக நிறுவப்பட்ட நினைவுச் சின்னம். யூதர்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை அவர்களுடைய தலைமுறைகளும் உலகமும் என்றும் மறக்காமல் இருப்பதற்காகவும் இனி அந்த மாதிரி கொடுமை யூதர்களுக்கு எப்போதும் இழைக்கப்படாமல் இருப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. இரண்டிலும் பணத்தைக் கொண்டு கொட்டியிருக்கிறார்கள்.

    இஸ்ரேல் மியுசியத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. முதல் பிரிவு யூதர்களுடைய 3000 வருஷ சரித்திரத்தைப் பற்றிக் கூறுகிறது அவர்களுடைய கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகிய பற்றிப் பல விளக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்த சரித்திரம் இருக்கிறது. ஆங்காங்கு அவர்கள் கட்டிய யூதக்கோயில்கள் (Synagogue என்று யூதக்கோயில்களை அழைக்கிறார்கள்) பற்றிய விபரங்களும் நான்கு யூதக்கோயில்களின் உட்புறங்களின் மாடல்களும் இருக்கின்றன. கொச்சியில் இருக்கும் யூதக்கோயில் அவற்றில் ஒன்று. யூதர்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்தபோது இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கும் வந்திருக்கிறார்கள். குடிபெயர்ந்த பல இடங்களில் அந்தந்த இடங்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றி உபயோகித்த பொருட்கள் – துணிகள், உடைகள், ஆபரணங்கள் – காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அவர்கள் உபயோகித்த மணப்பெண் உடை ஒன்றும் இருந்தது. சரித்திர மத்திய காலத்திலிருந்து இன்று வரை, பல இடங்களிலிருந்தும் – ஸ்பெயின், சீனா போன்ற தூர தேச நாடுகளிலிருந்தும் – சேகரித்த பல பொருள்கள் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.

    பல வகையான புத்தகங்களின் கைப் பிரதிகளும் இங்கே இருக்கின்றன. 14-ஆம் நூற்றாண்டில் பாஸ் ஓவர் (Passover) பண்டிகையின் போது ஒரு யூத மதத் தலைவர் வாசித்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றும் 15-ஆம் நூற்றாண்டில் சேகரிக்கப்பட்ட பழைய ஏற்பாடு பைபிள், சட்ட சம்பந்தப்பட்ட புத்தகங்களின் பிரதிகளும் இருக்கின்றன. Passover என்பது யூதர்கள் எகிப்தில் ஃபேரோவின் அடிமைகளாக இருந்தபோது கடவுளிடம் தங்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டிக்கொண்ட போது இறைவன் யூதர்களை விடுவிக்கும்படியும் இல்லையென்றால் பல இன்னல்களுக்கு உட்படும்படியும் எகிப்து அரசனை எச்சரித்து எகிப்தியர்களுக்குப் பல தண்டனைகள் கொடுத்தார். அதில் எகிப்தியக் குடும்பத்தின் எல்லா ஆண்பிள்ளைகளையும் கொன்றுவிடுவது ஒன்று. இறைவன் யூதர்களிடம் ஆடுகளைப் பலிகொடுத்து அவற்றின் இரத்தத்தை யூதர்களின் வீடுகளின் வாசலில் பூசிவைத்தால் அந்த வீடுகளைத் தான் அடையாளம் கண்டுகொண்டு யூதர்களின் குழந்தைகளைக் கொல்லாமல் விட்டுவிடுவதாக வாக்களித்தாராம். அதைக் கொண்டாடும் நாள்தான் Passover ஆகியது.

    கலைப் பொருள்கள் பகுதியில் பல காலங்களில் சேகரிக்கப்பட்ட கலைப் பொருள்களிலிருந்து தற்கால ஓவியங்கள் – எல்லாம் யூதர்களின் படைப்புகள் – வரை இருக்கின்றன. சீனாவின் பீங்கான் சாமான்களிலிருந்து ஆப்பிரிக்காவின் மனித உருவப் பொம்மைகள், மற்றும் 18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு அழகு செய்துகொள்ளும் கலைக்கூடம் வரை இருக்கின்றன. இப்பகுதியில் பெயர்பெற்ற நவீன கலைஞர்களின் படைப்புகளையும் காணலாம்.

    இன்னொரு பகுதி தொல்லியல் துறை. இதில் இஸ்ரேலில் தோண்டி எடுக்கப்பட்ட பல தொல்லியல் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிகமாகத் தோண்டப்பட்ட இடம் இஸ்ரேல்தான் என்கிறார்கள். (இப்போதும் புராதன நகரத்தில் பல இடங்களில் தரையைத் தோண்டும் வேலை நடக்கிறது. புராதன நகரத்தில் பல இடங்கள் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை இருப்பதால் இப்படித் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.) கி.மு.வின் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி.யின் பல நூற்றாண்டுகள் வரை கண்டெடுக்கப்பட்ட பல அரிய பொருள்கள் இருக்கின்றன. சாலமன் அரசன் காலத்தில் கட்டப்பட்ட யூதர்களின் முதல் கோவிலிலிருந்து கிடைத்ததாகக் கருதப்படும் பழைய ஹீப்ரு எழுத்துக்கள் எழுதப்பட்ட தந்தத்தில் செய்த மாதுளம் பழத் தொல்லியல் பொருள் ஒன்றும் இருக்கிறது. யூதர்களின் இரண்டாவது கோவில் மாடல் ஒன்றும் இந்த மியுசியத்தில் இருக்கிறது.

    இன்னொரு முக்கியமான அம்சம் உயிரற்ற கடலின் (Dead Sea) அருகில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட சுவடிகள் (Dead Sea Scrolls) அடங்கிய பகுதி. 1947-இல் பெடுயின் (Bedouin) இனத்தைச் சேர்ந்த இடையன் ஒருவன் தொலைந்துபோன தன் ஆட்டுக் குட்டியைத் தேடுவதற்காகக் குகைக்குள் சென்றபோது அவனுக்குத் தற்செயலாகக் கிடைத்த சுவடிகளை மிகவும் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு சில தசாப்தங்களில் இன்னும் 800 சுவடிகள் பதினொரு குகைகளில் கிடைத்தனவாம். இந்தக் குகைகளுக்குப் பக்கத்தில் உள்ள கும்ரான் என்ற ஊரில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று இப்போது நம்பப்படுகிறது. இந்தச் சுவடிகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 68 வரை எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இது கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் கிறிஸ்தவ மத வரலாற்றையே இவை மாற்றிவிடலாம் என அஞ்சப்பட்டது. ஆனால் இவை யூதர்களின் பழைய வேதமான தோரா (Torah) என்று பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சுவடிகளின் மூலப்பொருள் தோலாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை ஆராய்ச்சிக்கு உரிய விஷயமாகப் பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.

    இவற்றை மியுசியத்தின் தளத்திற்குக் கீழே உள்ள அரை இருட்டு அறையில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது காட்சிக்கு வைத்திருப்பவற்றை எடுத்துவிட்டுப் புதிதாகச் சிலவற்றை வைப்பார்களாம். ஒன்றையே வைத்திருந்தால் அவை கொஞ்சம் பழுதடைந்து போகலாம் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.

    யாத் வாஷம் ஒரு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இது உலகத் தரம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 1953-இல் கட்டப்பட்டது. இப்போது நிறைய புது விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. Hall of Names என்னும் பகுதி 180 மீட்டர் நீளமுடையது. இது வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் இரண்டு பக்கங்களிலும் ஜெர்மன் படுகொலையில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்கள், அவர்களுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் இருபது லட்சம் பக்கங்கள் இங்கு இருக்கின்றன. இதன் கோன் வடிவமான கூரையில் 600 படங்கள் இருக்கின்றன. இதன் ஒருகோடியில் இருக்கும் கணினி அறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய data base இருக்கிறது. அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களின் உதவியால் யார் பற்றிய விபரம் வேண்டுமானாலும் அதில் தேடலாம்.

    கலைக்காட்சியகம் (Art Museum) ஒன்றும் யாத் வாஷத்தின் முக்கிய அம்சம். இங்குள்ள ஓவியங்கள் யாவும் ‘படுகொலை’ (Holocaust) சமயத்தில் பல யூதர்கள் உருவாக்கியவை. படுகொலையில் தப்பிக்காத பலரின் படங்களும் இருக்கின்றன. இங்குள்ள Exhibition Pavilion-இல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருள்கள் இருந்தாலும் எல்லாம் ஜெர்மானியப் படுகொலையோடு சம்பந்தப்பட்டவை. அடுத்து வரும் Learning Center-உம் அப்படியே. ஜெர்மானியப் படுகொலை ஏன் நடந்தது, எப்படி நடந்தது, யார் காரணம் போன்ற கேள்விகளுக்கு விடை காண விரும்புவோர் இங்கு கணினிகள் மூலம் விடை காணலாம்; காதில் மாட்டிக்கொள்ளும் ear phones மூலமும் விடை தெரிந்துகொள்ளலாம். Visual Center-இல் யூதப் படுகொலை பற்றிய எல்லா ஆவணப் படங்களும் இருக்கின்றன. இங்குள்ள யூதக்கோவிலில் ஐரோப்பாவில் பல இடங்களில் அழிக்கப்பட்ட யூதக்கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பல வகையான பொருள்கள் இருக்கின்றன.

    இந்த மியுசியத்தின் சார்பில் பல ஆன் லைன் வகுப்புகள் நடத்துகிறார்கள். உலகின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இதில் சேரலாம். யூதர்களின் சரித்திரத்தையும் ஜெர்மானியப் படுகொலை பற்றியும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

    யாத் வாஷத்திற்கு அனுமதி இலவசம். ஆனால் இங்கு வருபவர்கள் உரிய முறையில் உடை அணிந்திருக்க வேண்டும். அரைக்கால் பேண்ட்டுகள் (shorts), குட்டைப் பாவாடைகள் (mini skirts) அணிந்துகொண்டு மியுசியத்திற்குள் நுழைய முடியாது. இந்த வரலாற்று நிகழ்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்னும் நிமித்தமாக இந்த நிபந்தனை இருக்கிறது என்று நினைக்கிறேன். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ‘யூதப் படுகொலை’ சம்பந்தப்பட்ட சில காட்சிப் பொருள்கள் அவர்களின் மனதைப் பாதிக்கலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு போலும். எல்லாப் பகுதிகளையும் வெள்ளிக்கிழமை இரண்டு மணிக்கே மூடிவிடுகிறார்கள். சனிக்கிழமை முழுவதும் விடுமுறை. ஜெர்மானியப் படுகொலை பற்றிய எல்லா விபரங்களையும் பார்ப்பவர் மனதில் இருத்த வேண்டும் என்பதே இம்மியுசியத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது. இதற்கு வெளியே வந்து பார்த்தால் இஸ்ரேல் ஊர் முழுவதும் மிக அழகிய முறையில் தோற்றமளிக்கிறது.

    நாங்கள் இஸ்ரேலுக்குப் போகும் முன்பே ஒரு அமெரிக்க யூத நண்பர் ‘இந்த மியுசியத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேல் ஏன் உருவாக்கப்பட்டது என்று உங்களுக்கு நன்றாகப் புரியும்’ என்று சொல்லிக் கண்டிப்பாக இதைப் பார்த்து வரும்படிக் கூறினார். இப்போது இஸ்ரேல் உருவான சரித்திரம் தெரிந்த பிறகு ‘ஜெர்மானியப் படுகொலைக்கு’ வெகு காலம் முன்பே யூதர்கள் தங்களுக்கென்று, தங்கள் புண்ணிய பூமி என்று அவர்கள் கருதிய பாலஸ்தீனத்தில் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.

    Picture of Israel Museum

    http://www.google.com/imgres?imgurl=http://www.english.imjnet.org.il/Media/Uploads/Israel-Museum-entry-nighttime%281%29.jpg&imgrefurl=http://www.english.imjnet.org.il/htmls/page_1465.aspx?c0%3D14896%26bsp%3D14393&h=162&w=210&sz=1&tbnid=vt2yO0zlC3pKeM:&tbnh=160&tbnw=207&zoom=1&usg=__T26jleT2QwX_vLNk640UeUOJxU8=&docid=VqhASgAdKKw_UM&itg=1&hl=en&sa=X&ei=yXjzUJLUEMmtqAGcj4DwDg&ved=0CKUBEPwdMA0

    overview of Yad Vashem The first of many pictures

    http://www1.yadvashem.org/yv/en/museum/overview.asp

    model of second Jewish temple

    http://en.wikipedia.org/wiki/File:Jerus-n4i.jpg

     

     

     

    Share
  • பொங்கிடு பாரதமே!

     

    சத்தியமணி

    தாமரைப் பூக்களுக்கு சன்மானம் கற்பழிப்போ
    காமனின் பாவத்திலே தன்மானம் வழிபறிப்போ
    சேமங்கள் தரும்மாதர் குலத்துக்கோ இத்துன்பம்
    சன்மங்கள் தரும்தாயின் பெண்மைக்கோ இத்துயரம்
    வன்மங்கள் வீழாதோ வஞ்சகமும் சாகாதோ
    தன்மக்கள் பாழாதல் அரசாங்கம் தகர்க்காதோ
    என்னக் கொடுமையாடா எதனைச் சொல்லிடுவேன்
    உண்ணச் சோறில்லை ஒழுக்கமும் ஊணில்இல்லை
    கர்மத்தின் பலியென்றின் கடவுளுக்கும் வலிக்காதோ
    பார்த்து இருப்பதுவும் பாரதப் பண்பாடோ
    பொறுத்தது போதும் பொங்கிடு பாரதமே – இந்நிலை
    கொடுத்தவர் கெடுத்தவர் கூட்டம் வீழ்த்திடுமே

    படத்திற்கு நன்றி:

    http://www.picturesof.net/pages/110113-174848-182053.html

    Share
  • குடதிசை மருங்கில் – 2

    தேமொழி இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:

    உலகின் மிகத் தொன்மையான இந்தியக் கலாச்சாரத்தில் சிற்பங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பலகோடி இந்துக்களுக்கு சிற்ப வழிபாடு மத அடிப்படையின்  ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் பின்பற்றப்படும் உலகின் புராதனமான இந்து சமயத்தின் வழிபாட்டிற்காக செதுக்கப்பட்டவை  இந்திய தெய்வங்களின் சிற்பங்கள். இவை சான் ஃபிரான்சிஸ்கோ கலை அருங்காட்சியகத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த சிலைகளில் பல தேர்ந்தெடுக்கப்பட்டு “ஆசியக் கலை அருங்காட்சியகத்தின் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்ற சிறப்புக் கண்காட்சியில்   ஆகஸ்ட் 25, 2012 முதல்  பிப்ரவரி 25, 2013 வரை பார்வைக்கு வைக்கப் பட்டன.  இச்சிலைகள் பெரும்பாலும் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டுகளின்  காலத்தினைச் சார்ந்த கோயில் சிற்பங்கள்.  வழிபாட்டிற்காக கற்களிலும், மரத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனபின்பும் அத்தெய்வங்களின் தெய்வீக அழகினைப் பறைசாற்றுகின்றன.

     

    கீழ் வரும் இக்கட்டுரையின் பகுதி அருங்காட்சியகத்தின் சிலைகளின் படங்களையும், அதற்கு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் விளக்க உரைகளையும் மொழி பெயர்த்து, அருங்காட்சியகத்தின் முன் இசைவு பெற்று தொகுத்து வழங்கப் படுகிறது.

      அருங்காட்சியத்தில் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்

    இந்து மதக் கோயில்களில்  எழுந்தருளச் செய்யப்பட்ட தெய்வங்கள் கற்சிலை வடிவில் பக்தர்களின் ஆராதனைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர்களாய் இருப்பவர்கள். கணக்கிலடங்கா இந்துமத பெருந் தெய்வங்களும், சிறுதெய்வ வழிபாட்டிற்கான தெய்வத்தன்மை உடையவர்களாக கருதப்படும் முன்னோர்களும் கற்சிலை தெய்வங்கள் வடிவில் காட்சியளிக்கிறார்கள். பெரும்பான்மையான இந்து மதத்தினர், படைப்புகள் யாவும் சக்தி வாய்ந்த உயர்ந்த கடவுள் ஒருவரினால் உருவாக்கப் பட்டது என்பதை நம்புகிறார்கள். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா, உயிர்களைக் காக்கும் திருமால், அழிக்கும் தெய்வமான சிவன் ஆகியோர், மற்றும் பல உருவங்களைப் பெற்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வங்கள் யாவரும் அண்ட சராசரங்களையும் தோற்றுவித்து, காத்து, அழித்து எல்லையில்லாத் திருவிளையாடல்களைக்  காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பது இந்துமதக் கோட்பாடு.

    இத் தெய்வங்களே பல உருக்கொண்டு அவதாரங்களாகவும், சிறு தெய்வங்களாகவும், கிராமிய தேவதைகளாகவும், வணக்கத்துக்குரிய வீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் பல உருவில் தோன்றி மக்களைக் காத்தருள்கிறார்கள். இந்து மத தெய்வ வழிபாடு ஒரு நிலையான முறையில், தொடர்ந்து ஒரு கடவுளை வழிபடும் அமைப்பில் அமைந்ததல்ல. ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு காலக்  கட்டத்தில், இந்தியாவின் பற்பல பகுதிகளில் வெவ்வேறு வடிவில், அப்பகுதிகளில் வாழும் மக்களிடம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றி வணங்கப் படுபவர்கள்.  எனினும் பெரும்பான்மையான இந்து மதத்தினரிடம்  இக்கடவுள்கள் யாவரும் ஒரு கடவுளின் பல்வேறு மறுவடிவங்களே என்ற மாறாத கருத்தும் உண்டு. பெரும்பான்மையான இந்துக்கள் ஒரு கடவுளை சக்தி வாய்ந்த முதன்மைக் கடவுளாக ஏற்றுக்  கொண்டு அவர்களுக்கு உகந்த கடவுளாக  அத்தெய்வத்தை  வழிபடுபவர்கள்.

    இந்து மதத்தினர் தெய்வங்களின் உருவங்களை தங்கள் இல்லங்களிலும், பக்தர்கள் குழுமும்  உற்சவ விழாக்களிலும், கோயிலின் கருவறைகளிலும் வைத்து வழிபடுவார்கள்.  தெய்வச் சிலைகள் வெறும் அலங்காரமாக வைக்கப் படுவதில்லை.  கோயிலின் வடிவத்திற்கும் அமைப்பிற்கும் சிலைகளுக்கும் தொடர்புள்ளது. தெய்வச் சிலைகள் கோயிலின் கருவறையின் வழியாக உயிரோட்டத்துடன் மக்களின் நம்பிக்கைக்கான ஆதாரத்தை வழங்குகிறது.

    பிரமாண்டமான கோயில்களில் தெய்வச் சிலைகள் பீடத்தில் தனித்து நிற்கும் உருவங்களாக அமர்த்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு கோயிலும் ஒரு தனிப்பட்ட கடவுளுக்காக நிர்மாணிக்கப் பட்டு, தெய்வச் சிலைகள் கருவறையில் எழுந்தருளச் செய்யப் பட்டிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கள், பழங்கள், நைவேத்தியங்கள், வேண்டுதல்படி மற்றும் பல காணிக்கைகளைப் படைத்தது, தெய்வங்களை வழிபட்டு, தெய்வ அருளினை வேண்டி வணங்கிச் செல்வார்கள்.

    பண்டைய நாட்களில் வரையறுக்கப் பட்ட சிற்பக் கலை விதிகளின் அடிப்படையில் தெய்வச் சிலைகளின் உடலமைப்பும் முகமும் வடிவமைக்கப் படும். ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் மிகவும் கலை நுணுக்கத்துடன், அழகிய உடலமைப்புடனும், முகபாவத்துடனும் செதுக்கப் பட்டிருக்கும். மேலும் தெய்வங்களின் சிலைகள் இயல்பு வாழ்க்கை நிலையை ஒத்திராமல், கடவுள்களின் சக்தியை, தெய்வீகத் தன்மையை உணர்த்தும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கும்.

    பல சக்திகளை உடையவர் என்பதனை உணர்த்த திருமால் நான்கு கைகளையும், அவற்றில் சங்கு சக்கரங்களை ஏந்தி அரசர்கள் போன்ற உடையலங்காரத்துடன் இருப்பார்.  சிவன் ஏறத்தாழ அரை நிர்வாண வகையில் ஆடை அணிந்து பாம்புகளை அணிந்திருப்பார். அவரது தலை முடி துறவிகளைப் போன்று கொண்டையிட்டு முடியப் பட்டிருக்கும். சிவனும், திருமாலும், பராசக்தியும் அவர்களைப் பற்றிக் கூறும் புராண கதைகளுக்கு ஏற்றவாறு பற்பல வடிவங்களில் சிலை எடுக்கப் பட்டிருப்பர்கள். அது போன்றே மற்ற பிற இந்துமதத் தெய்வங்களும் அவர்களுக்கென்று குறிப்பிடப் பட்ட வடிவங்களுடன் சிலை வடிக்கப் பட்டிருப்பார்கள். இவ் வடிவங்களைக் கொண்டு இத்தெய்வங்களை அடையாளம் கண்டு கொள்வது, இடைக்கால ஓவியங்களில்  கிறிஸ்துவ மதத்தின் துறவிகளை அவர்களது உருவங்களைக் கொண்டு அடையாளம் காண்பது போன்ற சவால் நிறைந்த ஒன்றாகும்.

      கணேசா:

    அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

    கணேசர் தடைகளை நீக்கும் கடவுள்.  எந்த செயலையும் துவக்குவதற்கு முன், —பிற கடவுள்களை வணங்குவதற்கும் முன் கணேசரை வணங்குவது உட்பட, அவரை வணங்குவது வெற்றியைத் தரும். இந்தியாவில் அனைவருக்கும் விருப்பமான கடவுளான கணேசர் மகுடம் மற்றும் அணிகலன்கள் தரித்து, கையில் மழுவாயுதத்துடனும், தாமரையுடனும், கொழுக்கட்டைகளுடனும், உடைந்த தந்தத்துடன் காட்சி தருவார்.  உடைந்த தந்தம் இந்திய இதிகாசம் மகாபாரதத்தை எழுத எழுதுகோலாக  வழங்கப்பட்டது. கணேசரின் துதிக்கையைத் தடவிச் செல்வது வாழ்க்கையில் நல்வாய்ப்புகளை நல்கும் என்பது கணேசரை வழிபடுவோரின் நம்பிக்கை.

    அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

    கணேசரின் யானை முகமும், கரங்கள் பல பெற்றிருப்பதும் அவரது தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. இவை கணேசருக்கு அமையப் பெற்றிரிருப்பதன் காரணத்தைப் பல்வேறு புராணக் கதைகள் விளக்குகின்றன. கணேசரின் அன்னை பார்வதி தனக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பித் தனது  கணவன் சிவனுக்குத் தெரிவிக்காமல், அவர் உதவி இன்றித் தானே கணேசரை உருவாக்கினார்.  உண்மையை அறிந்திராத சிவன் தவறாக எண்ணி கணேசரின் தலையை வெட்டி விட்டார்.  பிறகு தவறை உணர்ந்து யானையின் தலையை கணேசருக்குப் பொறுத்தி அவரைப் பிழைக்க வைத்தார். யானைகளுக்கு இந்தியக் கலாசாரத்தில் சிறப்பிடம் அளிக்கப் படுகிறது.  யானைகள் மழை மேகத்தின் நிறத்தையும் உருவத்தையும் பெற்றிருப்பதனால் அவை வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாக கருதப் படுகிறது.

    இந்து தெய்வம் கணேசர்: இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தச் சிலை 12-13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

    (தொடரும்)

     

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

    Source:

    http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum

    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

    << குடதிசை மருங்கில் – 3                                                                                                         குடதிசை மருங்கில் – 1 >>

    Share
  • பேரழிவுப் போராயுதம் படைத்த பாரத விஞ்ஞானி ராஜா ராமண்ணா

    (1925-2004)


    சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada



    பேரழிவுப் போராயுதம்
    உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து
    விழுதுகள் அற்றுப் போக,
    விதைகளும் பழுதாக
    ஹிரோஷிமா நகரைத் தாக்கி
    நரக மாக்கி
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு !
    நாகசாகியும்
    நாச மாக்கப் பட்டது !
    புத்தர் பிறந்த நாட்டிலே
    புனிதர் காந்தி வீட்டிலே
    மனித நேயம்
    வரண்டு போன
    வல்லரசு அரக்கர் பின் சென்று
    பாரத அன்னைக்குப்
    பேரழிவுப்
    போரா யுதத்தை
    ஆரமாய்
    அணிவிக்க லாமா ?

    ++++++++++++++

    Fig 1 Albert Einstein

    உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!

    கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)


    “விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன!  அதுபோல் இந்தியாவும் விஞ்ஞானம், பொறித்துறை இவற்றை விருத்தி செய்தே செல்வீக நாடாக முன்னேற வேண்டும் !”

    ஜவஹர்லால் நேரு.


    “இப்போது நிகழ்ந்தது போல் (1945 இரண்டாம் உலகப் போர்) நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன் படுத்தவோ செய்யும் !  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன் படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப்  பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் !”

    ஜவஹர்லால் நேரு.


    “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

    டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


    “மெய்யாகச் சொன்னால் டாக்டர் ராமண்ணா  எனது குரு. அவருக்கு மிகவும் நான் கடமைப் பட்டவன். இந்தியாவின் உன்னத விஞ்ஞான மேதைகளில் அவர் ஒருவர்.”

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்.


    “ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்



    Fig 1A Two Great Architects of India

    “இப்போது நிகழ்ந்தது போல் நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும்!  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும்!”

    ஜவஹர்லால் நேரு.   (1946 ஜூன் 26)


    போதி சத்துவ புத்தரும், அகிம்சா நெறி வகுத்த மகாத்மா காந்தியும் அவதரித்த நாட்டிலே அணு ஆயுதம் உதிக்கும் என்று உலக மாந்தர் எவரும் எதிர்பார்க்க வில்லை ! அணு ஆயுதப் பந்தயத்தில் முன்னடி வைத்து வல்லரசுகளின் பின்னே செல்லும் பாரதத்தை இப்போது யாராலும் நிறுத்திக் கட்டுப்படுத்த முடியவில்லை ! விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதப் பெருக்கத்தை உலகில் நிறுத்த முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் இரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வருகிறார்கள் !

    கட்டுரை ஆசிரியர்.


    அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்

    இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும் படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்!  அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது!  அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

    ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்!  “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது!  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்!  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவ தில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

    Fig 1B Einstein & Nehru

    இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

    பாரதத்தில் அணுசக்தி ஆராய்ச்சியின் ஆரம்ப காலம்

    1945 ஆகஸ்டு 6 & 9 தேதிகளில் ஜப்பானில் அணுகுண்டுகள் போடப் பட்டு ஏறக் குறைய ஓராண்டுக்குப் பின்பு, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்பு, 1946 ஜூன் 26 ஆம் தேதி மும்பைப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய நேரு, “இப்போது நிகழ்ந்தது போல் நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும்!  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும்!” என்று இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கையை முதன் முதலில் வெளிப்படையாகப் பறை சாற்றினார்.

    ஐரோப்பிய அமெரிக்க விஞ்ஞானிகள் இரண்டாம் உலகப் போர் நிகழும் போது, அமெரிக்காவில் அணு ஆயுத ஆய்வுகள் நடத்தி வரும் சமயத்தில், 1944 ஆம் ஆண்டு மார்ச் 12 இல் டாக்டர் ஹோமி பாபா இந்திய அணுவியல் ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளிக்குமாறு, ஸர் டொராப்ஜி டாடா பீடத்திற்கு [Sir Dorabji Tata Trust] எழுதினார்.  1945 இல் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் (Tata Institute of Fundamental Research, TIFR) பம்பாயில் டாடா தொழிற்துறைப் பேரரசால் (Tata Industrial Empire) நிறுவனம் ஆகி டாக்டர் பாபா அதன் முதல் ஆணையாளர் ஆனார்.  சுதந்திர இந்தியாவில் பண்டித நேரு 1948 இல் அணுசக்திச் சட்டத்தை (Atomic Energy Act) அமுலாக்கி, இந்திய அணுசக்திப் பேரவை (Atomic Energy Commission) நிர்மாணிக்கப் பட்டது.  டாக்டர் ஹோமி பாபா அணுசக்திப் பேரவையின் முதல் அதிபர் ஆக்கப் பட்டார்.

    Fig 1C CIRUS Research Reactor

    அணு ஆயுதச் சோதனையில் புத்தர் புன்னகை செய்வாரா ?

    “உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் !  அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை !  1964 அக்டோபர் 21 இல் சைனாவின் முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பின்பு, டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்!

    1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, “புத்தர் புன்னகை செய்கிறார்” (The Buddha is Smiling) என்னும் குறிமொழியில் (Code Language) ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார்!  அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது !  அந்த இனிய சொற்றொடர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது !  இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது!  அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றினாலும், உலகில் எந்த நாடும் அதை ஒப்புக்கொள்ள வில்லை ! அழிவு சக்தியின் தீவிரத்தைச் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எங்கே, எப்படி அமைதியைப் பரப்பிட முடியும் ?

    Fig 1D Bombs Dropped on Japan

    இந்திய அணுகுண்டை ஆக்கிய அணுக்கரு ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா !  இரண்டாம் உலகப் போரின் சமயம் அணு ஆயுத மன்ஹாட்டன் திட்டத்தின் (Manhattan Project) விஞ்ஞான அதிபதியாய்ப் பணிசெய்து முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer), ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவையும் அணு ஆயுதப் படைப்பு மேதையாய் நிற்க வைக்கலாம் !

    இந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் வரலாம் ! அந்த காட்டுப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ராமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டு போல் எழுதப்பட்டு விட்டது !

    ராஜா ராமண்ணாவின் வாழ்க்கை வரலாறு

    ராஜா ராமண்ணா 1925 ஜனவரி 28 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் (Tumkur) பிறந்தார்.  தந்தையார் பெயர் பி. ராமண்ணா. தாயார் ருக்மணியம்மா. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் விஞ்ஞானப் பட்டம் பெற்ற பின், இங்கிலாந்து சென்று லண்டன் பல்கலைக் கழகத்தில் பௌதிக விஞ்ஞானத்தை எடுத்து, அணுக்கரு பௌதிகம் (Nuclear Physics), அணுஉலைப் பௌதிகம் (Reactor Physics), டிசைன், ஈரோப்பியன் இசை, வேதாந்தம் ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்றார்.  இறுதியில் லண்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்தையும் (Ph.D.), ராஜீய இசைப் பள்ளியின் L.R.S.M டிபோளாமாவையும் (Licentiate in Royal School of Music) பெற்றுக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்தார்.  அவரது மனைவியார் பெயர் மாலதி ராமண்ணா.  அவருக்கு ஒரு மகனும், இரு புதல்விகளும் உள்ளனர்.  ராஜா ராமண்ணாவுக்கு இசை, நாடகம், வேதாந்தம், இலக்கியம், அணுக்கரு & துகள் பௌதிகம் (சோதனை & கோட்பாடு) [Nuclear & Particle Physics (Experimental & Theoretical)] ஆகியவற்றில் வேட்கை மிகுதி.

    Fig 2 Cerenkov Radiation

    ராமண்ணா பாரத அணுசக்தித் துறையில் பல பெரும் பதவிகளில் பணியாற்றியவர்.  முக்கியமாக மொம்பை, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் ஆணையாளராக (Director, Bhabha Atomic Research Centre, Mumbai) எட்டாண்டுகள் (1972-1978, 1981-1983) பணியாற்றினார். முதல் ஆறாண்டுகளை ராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனை களின் பொற்காலம் என்று கூறலாம்!  அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட “புன்னகை புத்தர்” (Code Name, Smiling Buddha) என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது !  1974 மே மாதம் 18 ஆம் தேதி ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது.  டாக்டர் ஹோமி ஜெ. பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என். சேத்னா ஆகியோருக்குப் பின்பு 1983 இல் அதிபராக டாக்டர் ராஜா ராமண்ணா அணுசக்திப் பேரவைக்குத் [Chairman, Atomic Energy Commission] தேர்ந்தெடுக்கப் பட்டு நான்கு ஆண்டுகள் பணி யாற்றினார்.

    பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் (Indian Institute of Science), ஆணைக் குழுத் தலைவர் ஆகவும், ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research), இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை (Indian Academy of Sciences 1977), மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் (Indian Institute of Technology, Mumbai 1972) ஆகியவற்றின் அதிபராகவும் ராமண்ணா பணியாற்றினார். 1990 இல் பாரத அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறை மாநில மந்திரி (Minister of State for Defence) 1997 முதல் ராஜா ராமண்ணா அரசியல் மேல் சபையில் (Rajya Sabha) அங்கத்தினாராக நியமிக்கப் பட்டார்.

    இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ராமண்ணாவின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகி யுள்ளன. அத்துடன் அவரது சுயசரிதையான, “யாத்திரை ஆண்டுகள்” (Years of Pilgrimage 1991), மேற்கிசை, ராகத்தின் இசை அமைப்பு (The Structure of Music in Raga & Western Systems 1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

    Fig 3 Thorium Based Reactor

    டாக்டர் ராஜா ராமண்ணா பல பரிசுகளும், கௌரவ மதிப்புகளும் பெற்றவர்.  பல பல்கலைக் கழகங்கள் ராமண்ணாவுக்கு D.Sc. (Doctor of Science) பட்டம் அளித்துள்ளன.  சாந்தி ஸ¤வரூப் பட்நாகர் நினைவுப் பரிசு (1963), பாரத அரசின் பத்ம விபூஷண் (1975), நேரு பொறியியல், பொறித்துறைப் பரிசு (Nehru Award for Engineering & Technology 1983),  விஷ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் கௌரவ இலக்கிய டாக்டர் பட்டம் (1993) போன்றவை சில குறிப்பிடத் தக்கவை.  வியன்னாவில் அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையின் (International Atomic Energy Agency 1986) அதிபராகச் சில காலம் பணியாற்றி யுள்ளார்.  30 ஆவது அகில நாடுகளின் அணுசக்திப் பேரவைப் (IAEA) பொதுக் கூட்டத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

    இந்திய அணு ஆயுதப் பிதாவுமான டாக்டர் ராஜா ராமண்ணா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24, 2004) அதிகாலையில் மொம்பை நகர மருத்துவ மனையில் காலமானர்.  அவருக்கு வயது 79. உட்புறக் குடல் இரத்தக் கசிவில் உடல்நிலை மிகவும் சீர்கேடாகி மரணம் அடைந்ததாக, மருத்துவ மனையின் அதிபர் டாக்டர் பி.கே. கோயல் நிருபர்களிடம் அறிவித்தார். டாக்டர் ராமண்ணாவுக்கு கடந்த 15 ஆண்டுகளாகவே இருதயப் பிரச்சனைகள் இருந்து, ஒருமுறை ஆஞ்சியோ பிலாஸ்டி கடப்பு அறுவைச் சிகிட்சையும் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

    பாம்பே வொர்லியில் வசிக்கும் மகனைக் காண வந்தவர், சென்ற திங்கட் கிழமை யன்று சற்று தலை சுற்றுவதாகவும், வேர்ப்பதாகவும் குறிப்பிடவே, மொம்பை நகர மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாக, அவரது மருமகள் சீமா ராமண்ணா கூறினார். வியாழக் கிழமை மாலை 7:30 மணிக்கே அவரது முடிவு நெருங்கி விட்டாலும், மருத்துவ நியமப்படி உயிருடன் இருந்ததால் சுவாசப் பாதுகாப்புச் சாதனங்களுடன் அவர் கண்காணிக்கப் பட்டார். செய்தியை ஒளரங்காபாத்தில் கேள்விப்பட்டு ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் டாக்டர் ராமண்ணாவைக் காண மருத்துவ மனைக்கு வந்ததாக, டாக்டர் கோயல் அறிவித்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3:15 ராமண்ணாவின் ஆத்மா பிரிந்தது.

    மொம்பை சிவாஜிப் பூங்கா மின்சார எரிப்பகத்தில் டாக்டர் ராமண்ணாவின் உடம்பு வெள்ளிக்கிழமை மாலை 3:45 மணிக்குத் தகனம் செய்யப்பட்டு, ஈமச் சடங்கள் நடத்தப் பட்டன. அதில் கலந்து கொண்டவர், முந்தைய அணுசக்திப் பேரவை அதிபதி ஹோமி சேத்னா, டாக்டர் பி.கே. ஐயங்கார், தற்போதைய அதிபதி டாக்டர் அனில் ககோட்கர், இந்திய அணுமின்சக்தி அதிபர், எஸ். கே. ஜெயின், கனநீர் ஆணைக்குழு அதிபர், எஸ். சி. ஹயர்மத் ஆகியோர். “டாக்டர் ராமண்ணா மெய்யாகச் சொன்னால் எனது குரு. அவருக்கு மிகவும் நான் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தியாவின் உன்னத விஞ்ஞான மேதைகளில் அவர் ஒருவர்” என்று மருத்துவ மனையில் டாக்டர் கோயலிடம் கூறினார் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். ‘அணுக்கரு விஞ்ஞானத்தில் செய்முறைத் திறமிக்க நிபுணர் என்றும், இந்தியாவை உலக அணுக்கரு விஞ்ஞான அரங்கில் அமரச் செய்தவர் டாக்டர் ராமண்ணா’ என்றும் பெருமைப் படுத்தினார் பி.கே. ஐயங்கார்.

    Fig 4 Dhruva Research Reactor

    இந்திய அணு ஆயுதங்களின் அடித்தள வெடிப்பு ஆராய்ச்சி

    1957 இல் அணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வியன்னாவில் அகில நாட்டு அணுசக்திப் பேரவை (International Atomic Energy Agency, IAEA) அமைக்கப் பட்டு, உலக நாடுகளின் ஆராய்ச்சி அணு உலைகள், அணுசக்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் அணுப்பிளவு எருக்களின் (Fissile Material) பெருக்கத்தைக் கண்காணித்து வருகிறது !  1974 மே மாதம் 18 ஆம் தேதி பாரதத்தின் “புன்னகை புத்தர்” என்னும் குறிச்சொல் பெயரில் முதல் அணுப்பிளவுக் குண்டு (Fission Atomic Bomb) ராஜஸ்தான் பொக்ரான் பாலை நிலத்தின் அடித்தளத்தில் வெடிக்கப் பட்டது !

    1998 புத்த மகான் பிறந்த நாளான மே 11 இல், ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் இந்தியா மூன்று அணு ஆயுத வெடிப்புகளை அடித்தளத்தில் உண்டாக்கி ஆராய்ச்சிகள் செய்தது ! இரண்டு நாட்கள் கழித்து மே 13 இல் மறுபடியும் இரண்டு அடித்தள அணுகுண்டு வெடிப்புகளை ஏற்படுத்தியது ! பிரதம மந்திரி அடல் பெஹாரி பாஜ்பாயி செய்திக் கூட்டத்தார் முன்பு, மூன்று வெடிப்பில் ஒன்று 12 கிலோ டன் பிளவுச் சாதனம் (Fission Device), ஒன்று 43 கிலோ டன் வெப்ப அணுக்கருச் சாதனம் (Thermonuclear Device), மூன்றாம் சாதனம் 1 கிலோ டன்னுக்கும் சிறியது! இரண்டாம் நாள் வெடித்த சாதனங்கள் ஒரு கிலோ டன்னுக்குச் சிறியவை! உலகின் பூவதிர்ச்சி உளவிகள் (Seismic Probes) பல இரண்டாம் நாள் வெடிப்புகளை நுகர முடிய வில்லை ! இந்தியா ஒரு சிறு ஹைடிரஜன் குண்டைச் சோதித்துள்ளது என்பதைப் பல நாடுகள் அப்போது நம்பவில்லை !  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியது, ‘ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம்! ‘

    1998 மே மாதம் இரண்டாம் தடவை அடித்தள வெடிப்புச் செய்த போது பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: ‘இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! உலக மானிட ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமை ஆயுதங்கள் அவை! அணு ஆயுதங்கள் இந்தியச் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டும் பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்கு முதலில் பயன்படுத்தப்பட மாட்டா! ‘ அவ்விதம் அழுத்தமாகப் பேசி பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளைப் பயமுறுத்தப் பாரதம் அணு ஆயுதங்களைக் காட்சிக் கண்ணாடி மாளிகையில் வைத்திருக்கிறது!

    Fig 5 Pokran First Test

    இந்தியா அணு ஆயுத ஆக்கத்தில் இறங்கக் காரணங்கள் என்ன?

    ஐந்து காரணங்களைக் கூறலாம்!  முதல் காரணம், 1962 இல் சைனா இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்குப் பகுதியில் சில பரப்பு மலைப் பிரதேசங்களைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டது!  இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது !  நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார்.  மூன்றாவது காரணம், சைரஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் உண்டானது !  அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது !  நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது !  ஐந்தாவது காரணம், அப்போது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது !

    ஐந்து காரணங்களிலும் முக்கியமானது, ஐந்தாவது காரணம் !  டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது !  நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இதை அவ்வளவாக வரவேற்க வில்லை.  1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம்!  அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார்.  சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை !  இறுதியில் அவரது மர்ம மரணத்திற்குப் (1971 டிசம்பர் 30) பின், ஹோமி சேத்னா அதிபரானார்.  இந்திரா காந்தி, ஹோமி சேத்னா கண்காணிப்பின் கீழ், திறமை மிக்க அணுக்கரு பௌதிக (Nuclear Physicist) விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணாவின் நேரடிப் படைப்பில் இந்திய அணு ஆயுதங்கள் உருவாகின!

    அணுகுண்டு ஆக்குவதற்கு வேண்டிய புளுடோனியம், வேக நியூட்ரான் இயக்க (Fast Neutron Reactions) விளக்கங்களை அறிந்து கொள்வதற்குப் பூர்ணிமா-I (Purnima-I) ஆராய்ச்சி அணு உலை நிறுவப் பட்டு 1972 மே மாதம் 18 இல் இயங்க ஆரம்பித்தது !  இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் !  வெளிவரும் வெப்ப சக்தி 1 watt.  ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 mw & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 mw வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன !  துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது !  ஆய்வு அணு உலை 1 mwd (One Mega Watt in one Day] வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் சேரும் !  100 மெகாவாட் ஆற்றல் உடைய துருவ அணு உலை ஒரு நாள் இயங்கினால் (100 mwd), 100 கிராம் புளுடோனியம் கிடைக்கும் !

    Fig 6 Pokran Test Site

    அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணைத் திட்டம்

    1983 இல் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை வளர்ச்சித் திட்டம் (Integrated Guided Missile Development Program) உருவாகி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகள் விருத்தி செய்யப் பட்டன !  அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன!  சிறு தூர பிருதிவி (Short Range Prithvi), இடைத் தூர அக்னி (Intermediate Range Agni), தளத்திலிருந்து வானுக்குத் தாவும் ஆகாஷ் & திரிசூல் (Surface to Air Missiles, Akash & Trishul), கட்டளைப் பணியில் டாங்க்கைத் தாக்கும் நாகம் (The Guided Anti-Tank Nag).  முதல் ஏவுகணை பிருதிவி, அணு ஆயுத மாடல் குண்டைச் சுமந்து 1988 பிப்ரவரி 25 இல் ஏவப்பட்டு, சோதனை வெற்றி கரமாக முடிந்தது !

    இந்திய ஏவுகணைத் திட்டத்தின் அமைப்பாளி (Architect of the Indian Missile Program) டாக்டர் அப்துல் கலாம் (2002 இல் இந்திய ஜனாதிபதி),  இந்தியப் பாதுகாப்பு, ஆய்வு வளர்ச்சி நிறுவகத்தின் (Indian Defence & Research Development Organization) தலைவர்.  அவர் கூறியது: “கட்டளை ஏவுகணை ஆயுத மயமாக்கல் (Weaponization) முழுமையாக முடிக்கப் பட்டது.  பிருதிவி, அக்னி ஆகிய ஏவுகணைகள் தூக்கிச் செல்ல இருக்கும் அணு ஆயுதப் போர்க் குண்டுகளின் (Nuclear Warheads) அளவு, எடை, தூண்டும் முறை, இயங்கும் ஒழுங்கு, அதிர்வுகள் (Performance, Vibrations) யாவும் சோதிக்கப் பட்டு விட்டன!”

    1998 மே மாதம் பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: “இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்  குரிய ஆயுதங்கள்!  இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா !”

    Indian Missile Launch

    அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி ராமண்ணாவின் கருத்துக்கள்

    “பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது !  பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களை சேமித்து வைத்துள்ளன !

    இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன!  இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு.  இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை!  அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை!  உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இந்த உடன்படிக்கையைத் தயாரித்த நாடுகள்தான் தமக்குச் சாதகமாகத், தமக்குப் பாதுகாப்பாக அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டும், அவற்றைச் சோதித்துக் கொண்டும் அதன் விதி முறைகளை முறித்துள்ளன!  இந்தியா ஒரு நாடு மட்டுந்தான் அம்மாதிரிச் செயல்களை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறது!

    பழைய வரலாற்றை நினைவில் வைத்திருப்பவர்கள், இப்போது ஐக்கிய நாடுகளின் பேரவை (United Nations Organization) ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிவர்!  அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன!  நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது!”

    Indian Rockets

    உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!


    1945 ஜூன் 11 ஆம் தேதி மன்ஹாட்டன் முதல் அணுகுண்டு திட்டத்தில் பணி செய்த நோபெல் பரிசு விஞ்ஞானி, ஜேம்ஸ் பிராங்க் (James Frank) தலைமையில் சிகாகோவின் பல விஞ்ஞானிகள் ஜப்பான் மீது போட விருக்கும் அணுகுண்டால் நேரப் போகும் கோர விளவுகளை முதலிலே தடுக்க முயற்சி செய்தனர்.  அணுகுண்டுக்குப் பதிலாக வேறு ஒரு குண்டைத் தயாரித்துப் போட, அந்த விஞ்ஞானிகள் அமெரிக்க யுத்தச் செயலாளருக்குக் (Secretary of War) கடிதம் எழுதினார்கள் !  இறுதியில் ஜப்பானில் அமெரிக்கா என்ன செய்தது என்று நாமெல்லாம் அறிவோம்!

    1945 ஜூலை 17 ஆம் தேதி டாக்டர் லியோ ஸிலார்டு (Dr. Leo Szilard) தலைமையில் 63 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஓர் விண்ணப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் (President Truman) அவர்களுக்கு அனுப்பினர்.  ஜப்பான் மீது அமெரிக்கப் போர்ப்படை போட விருக்கும் அணு ஆயுதங்களால் விளையப் போகும் கதிரியக்கப் பொழிவுகளின் கோர அழிவுகள் போர் ஒழுக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை என்று அழுத்தமாய் எழுதி யிருந்தார்கள் !  லியோ ஸிலார்டுதான் முதன் முதலில் அணுகுண்டு ஆக்க, அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுத, ஐன்ஸ்டைனைத் தூண்டியவர் !

    1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது!  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

    Indian Missile Warhead

    1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் (Linus Pauling) அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒரு கோரிக்கையில் உலக அரசுகளையும், நாட்டு மக்களையும் வலியுறுத்தி ஓர் உடன்படிக்கை மூலம், எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் உடனே நிறுத்தும்படி விரைவு படுத்தினார். 1957 ஜூன் மாதத்திற்குள் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு அனுப்பினார்கள்! “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது!  அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது!  முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, பிறந்து அவர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது!”

    அத்தனைக் கூக்குரல் அறிவிப்புகள் உலக விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் முறையிடுவது என்ன ?  அழுத்தமான இந்த உபதேசம்தான் !  போதும் நிறுத்துவீர், அணு ஆயுதச் சோதனைகளை!  போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை!  போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை !  உலக ஒலிம்பிக்கில் அணு ஆயுதப் பெருக்குப் பந்தயம் இனிமேல் தொடரக் கூடாது.

    the-president.jpg

    டாக்டர் அப்துல் கலாம்

    ++++++++++++

    Reference :

    1.  http://isis-online.org/uploads/isis-reports/documents/india_military_plutonium.pdf

    2.   http://en.wikipedia.org/wiki/Bhabha_Atomic_Research_Centre

    3.   http://www.barc.ernet.in/   (Bhabha Atomic Research Centre, Mombai, India)

    4.   http://en.wikipedia.org/wiki/Smiling_Buddha  (First Atomic WeapoTesting) (18 May 1974)

    5.  http://en.wikipedia.org/wiki/Pokhran-II  (Second Atomic Testing) (11 May 1998)

    6.   http://nuclearweaponarchive.org/India/IndiaOrigin.html  (India’s Nuclear Weapons Program)  (30 March 2001 )

    7.  http://www.cna.ca/curriculum/cna_can_nuc_hist/india_pakistan-eng.asp?bc=India%20and%20Pakistan&pid=India%20and%20Pakistan (Atomic Weapon Testing of India & Pakisthan)  (2010)

    +++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 26, 2012 (R-4)

    Share
  • ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1

    தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,
     சிதம்பரம்.

    எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் :

    குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

    சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

    பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

    எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

    பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

    ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.

    விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

    சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

    1. அரியும் சிவனும் ஒண்ணு …!

    குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
    வெளியான வருடம்:  1968.

    முதல் மலராக நறுமணம் வீசும் இந்த “அரியும்  சிவனும் ஒண்ணு ” என்கிற இந்த மலரை கையில் எடுக்கிறேன்.

    கதை கிட்டத்தட்ட 45 வருடங்கள் முன்பு மலர்ந்து இன்னும் சிறுகதை உலகில் தாழம்பூவைப் போல் நறுமணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.

    மலரின் ஐந்து இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக ஐந்து இதழ்களாக  சேர்ந்து  மலரின் மணத்தையும் எழிலையும் தென்றலோடு கலந்து பரப்புகிறது.

    ஆயிரம் சிக்கலைத் தண்ணீருக்கடியில் வைத்துக் கொண்டு தடாகத்தின் மேலே சிரிக்கும் தாமரையாக காதல் கலையுடன் கொள்ளை அழகு தான்….! இருந்தாலும், அன்பை மட்டும் அச்சாணியாகக் கையில் எடுத்துக் கொண்டு ஆன்மாவுக்குள் எழும் போராட்டங்களை, ஒரு குடும்பத்திற்குள் நிகழும் சம்பவங்களை ஒவ்வொரு  இதயத்தின் எண்ணங்களின் வலிமையை, வழியை, வலியைத்  திறம்படக் குறுநாவலாக  எழுதி அதற்கு அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்ப தீர்வுகளைத் தந்து சிறப்பான, சுவையான  கதைகளைத்  தருபவர் எழுத்தாளக் கதையரசி ஜோதிர்லதா கிரிஜா.

    வருடங்கள் பல கடந்தாலும், அன்றும் இன்றும் என்றும் “காதல்” என்ற உணர்வு வீட்டுக்குள் நுழைந்து விட்டால் காதல் வயப்பட்டவருக்குக் “கதவைச் சாத்தடி” என்பது தான்  வாய்ப்பாடு, நிலைப்பாடு, எதிர்ப்பாடு ! அவரைத்  தவிர ஏனையோரின் மன நிலை எப்படி இக்கட்டுக்குள் தள்ளப்படும். அதில் தியாகம் எப்படி பெரும் பங்கை தனக்கென எடுத்துக் கொள்ளும்.. சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத ஒருவர் என நாம் நினைத்திருப்பவர் கூட தன்னைத் தியாகம் செய்து அந்தக் காதலை வாழ வைக்க தவிப்பர்.

    இந்தக் கதையில் ஐந்து  இதழ்களாக  மீனா, அவளது அப்பா சுப்பராமன், அம்மா அலமேலு , மீனாவின் காதலனாக ராகவன், அந்த வீட்டில் சமையல் செய்து வரும் சொர்ணம்.  மகரந்தமாகக் ‘காதல்’.

    கதையின் துன்பியல் கரு :

    ஒரு ஐயர் வீட்டு படித்த பெண், ஐயங்கார் வீட்டுப் பையனைக் காதலித்து அவனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளது படித்த பண்டிதரான தந்தை அதை எதிர்க்கிறார். தாய் தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாமலும், மகள் ஆசையை நிறைவேற்ற முடியாமலும் தவிக்கிறாள். ஆனால் அந்த வீட்டு சமையல்காரர் அவர்கள் போடும் திட்டத்தைத் தடுத்து எடுத்துச் சொன்னாலும் இறுதியில் பாசத்துக்கும் , நியாயத்துக்கும் கட்டுப்படுகிறார்   .பெண்ணின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவளுக்கும் அவளது காதலனுக்கும் இடையே கடிதத் தூதாகச் சென்று அவர்களது கல்யாணத் திட்டத்தை செயலாக்குகிறார்.

    அவர்களின் விருப்பப்படி பெண்ணை அவளது காதலனின் தங்கை  வீட்டுக்கு பழனிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறார். அவளது காதலன் மட்டும் தான் அதே ஊரில் இருந்து கொண்டு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நம்ப வைப்பதற்காக அங்கேயே இருக்கிறான்…..ஒரு மாதம் பெற்றவர்களை தவிக்க வைத்தால் ஒருவேளை இந்தக் கல்யாணத்திற்கு அவர்கள் சம்மதிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் போடும் நாடகமாக இவர்கள் போட்ட திட்டத்துக்கு துணை போக  அவர்களுக்கு உதவுகிறார் சமையல்காரர்.

    பிடித்த ஒருவனோட வாழ்வதைத் தடுக்கும் பெற்றோர்கள் தாம்     குறிப்பிடுபவரைத் திருமணம் செய்ய மாட்டேன் அதற்கு பதிலாக கிணற்றில் விழுவேன் என்று சொல்லும் தான் வளர்த்த மகளின் மனசைப் புரிந்து கொண்டு அவர்கள் திட்டப் படி பெற்றவர்களுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து உறங்கச் செய்து பெண் விட்டு வீட்டை விட்டு வெளியேற உதவி செய்கிறார் சமையல்காரர்.

    தான் வீட்டை விட்டு  ஓடிவிட்டால் ஒருவேளை அப்பாவின் மனசு மாறலாம் என்று மகள் போடும் திட்டத்திற்கு சொர்ணம் (சமையல் காரர் ) கூட இருந்து உதவி செய்தாலும்..இத்தனை கால நம்பிக்கையை முறித்து, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டோமே…தான் செய்தது ..நம்பிக்கை துரோகம் அல்லவா?  என்று தன் மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத அவர்  அந்த குற்ற உணர்வில் நடந்த அனைத்து உண்மைகளையும் எழுதி வைத்து விட்டு , வீட்டு எஜமானிக்கு எந்த பாதிப்பும் வராமல் தன வயிற்று வலியால் தான் தற்கொலை செய்து கொள்வதாக தனியாக போலீசுக்கும் இன்னொரு  கடிதம் எழுதி வைத்து விடுகிறார்.  தனது இறுதி ஆசையாக, வேண்டு கோளாக, “பெண்ணுக்கு அவள்  காதலித்தவனையே மணம் முடித்து வையுங்கள் ‘ என்று கேட்டுக் கொள்கிறார்.  சமையல்காரர் தற்கொலை செய்து கொண்டதை கடிதம் வாயிலாகக் காட்டி முடிக்கப் படுகிறது கதை.

    கதையின் எழில் நடை:

    கொஞ்சம் கூட தொய்வில்லாத ராஜ நடை… ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரத்தை பத்திரமாக கையாண்டுள்ள விதம் பாராட்டுதலுக்கு உரியது. உணர்வுகளின் கொந்தளிப்பும் அந்தக் காலத்தில் எஸ் எஸ் எல் சி படித்துவிட்டு காலேஜூக்குப் போகும் பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் “எங்கே தன்  பெண் பெற்றோரை மீறிப் போய்விடுவாளோ ‘ என்ற பயம் உள்ளுக்குள் ஆரம்பித்ததை உணர்த்திய விதம்… இன்றைய  பெற்றோர்களின் மனநிலை…அதையும் தாண்டிய விபரீத பயங்களில் ‘வெளியில் படிக்கப் போன பெண் ‘பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று ஒவ்வொரு நாளும் கவலைப்படும் இன்றைய காலக் கட்டம் அன்று இல்லை..என்பதைக் கதை நன்கு உணர்த்துகிறது.

    மலரைப் பன்னீரால் அலசும்போது :

    “மீனா என்ன பண்ணிண்டு  இருக்கா?” என்ற கேள்வியோடு ஆரம்பிக்கிறது கதை.  கேட்கும் போதே ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் கதாசிரியர்.

    “அழுது அழுது முகமெல்லாம் கோவைப் பழமாக சிவந்து கெடக்கு”  சொல்லும்போது அந்த வீட்டின் பிரச்சனையே  அவளால் தான் என்று முதல் அட்சதை விழுவதில் புரிகிறது.

    அதைப் பொருட்படுத்தாக தந்தை….” அந்தப்  பயல் இந்தப் பக்கம் வராம கவனிச்சுக்கோ ” – இது அவரது எதிர்ப்பை காண்பிக்கிறது.

    “அப்போ அந்த ஐயங்கார் பையனைத் தான் பண்ணிக்குவாளாக்கும் ” – இதுவும் அப்பா தான்.

    இப்படி ஒரே பக்கத்திலேயே வந்து விழுந்த நாலு வரியில் அந்தக் கதையைப் பற்றி நம்மால் முழுதும் ஊகிக்க முடிகிறது. ஒரு அய்யர் வீட்டுப் பெண் அய்யங்கார் வீட்டுப் பிள்ளையை திருமணம் செய்வது கூட அந்த காலத்தில் சிக்கல் தரும் விஷயமாகும் என்பதை தெரியப் படுத்துகிறது இந்தக் கதை.

    அதற்கேற்றவாறு கதையின் தலைப்பும் “அரியும் சிவனும் ஒண்ணு …!”  என்று அழுத்தமாக சாம்பலை திருமண்ணோடு  கலந்தது போல தலைப்பைக் கதையோடு பிணைத்து வைத்த விதம் பெருமை.

    கதம்ப மாலை :

    தந்தை சுப்பராமன் :

    சமஸ்கிருதம் படித்தவர் “கௌரி சரித்திரம்”  படித்து குழந்தைகளுக்கு போதிப்பவர், “அரியும் சிவனும் ஒண்ணு : அதையறியாதவன் வாயிலே மண்ணு’ன்னு ” ஊருக்குச் சொல்லிக் கொடுத்தாலும் தன்  வீடு என்று வரும்போது சர்வ ஜாக்கிரதையாக அரியும் சிவனும் வேறடா..எல்லாம் அறிந்தவன் நானடா ” .என்றும்  படிச்சவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற மொழிக்கு ஏற்ப சித்தரிக்கப் பட்ட அப்பா….ஆணாதிக்கமும், அடக்கு முறையும் ,சமயத்தில் மனைவியை குத்திப் பேசுபவராக, எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுபவராக இருந்தாலும் அப்படிப் பட்டவருக்கும் இதயத்தில் ஈரம் இறுதியாய் சுரக்கிறது என்பதைக் காட்டிய விதம் கதைக்கு அழகு செய்கிறது.

    அதே சமயம்…ஒரு குடும்பத் தலைவனின் பொறுப்பைக் கயிறு மேல் நடப்பதைப் போல உணர வைத்திருக்கும் விதம். கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டாலும்….”ச்சே.ச்சே…விளையாட்டுக்கு ஏதோ சொன்னா. அதை விபரீதமா எடுத்துண்டுட்டியே ” என்று மனைவியை சமாதானப் படுத்தும் மனசை மிகவும் கண்ணியமாகச் செதுக்கி இருக்கிறார் ஆசிரியர்  .கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதற்குச் சரியான உதாரணம் இந்த அப்பா சுப்பராமன்.

    தாய் அலமேலு :

    அந்தக் காலத்தில் வெறும் அஞ்சாவது வரை படித்தவள் .இருந்தாலும் சமயோஜித புத்தி நிறைந்த, கணவன் சொல்லே  மந்திரம் என்று பணிவோடு சித்தரித்த தாய்…”மனைவிக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும் என்னும் நினைவே அற்றவராய் கணவன் வாய்த்திருந்தாலும் அவரை அனுசரித்துப் போகும் பெண்மை கொண்ட தாய்மையை சித்தரித்த விதம் அழகு. ஒரு பக்கம் கட்டியவர்…இன்னொரு பக்கம் தான்  பெற்றவள் என்று பாசத்தின் நடுவில் தத்தளிக்கும் விதம் பெண்மையைப்  பெருமைப் படுத்துகிறது. கதையில் வாயில்லாப் பூச்சியாக வளைய வரும் அம்மா அலமேலு.

    அந்த காலத்து ஆணாதிக்கம் நிறைந்த வீடுகளில் இருக்கும் பெண்களின் நிலை’வெயிட்லெஸ்ஸாக’ காலிப் பெருங்காய டப்பாக்களாக
    அடுப்படியில் வெறும் தராசுத் தட்டுக்களாக காற்றிலாடும்  நிலையையும் கூடவே நம்மால்  உணரவும் முடிகிறது.

    “ஒரு பொண்ணு வெறும் வெளி அழகைப் பார்த்துட்டு மட்டுமே ஆசைப் படுவாள்னு நினைக்காதீங்கோ…” தன் மகளின் உணர்வுகளை மதித்த தாயாக சித்தரிக்கப்  பட்டிருக்கிறார் .

    மகளாக மீனா:

    காலேஜ் படிக்கும் இளங்குமரி . துணிச்சலும், பிடிவாதமும் கொண்டவள்… காதலில் விழுந்ததால் வைராக்கியமும் கூடவே எழுந்து…

    நியாய அநியாயம் பேசும் மன உறுதி அவள் “கௌரி சரித்திரம்” புத்தகத்தைக் கிழித்து தன அப்பாவின் கருத்தை எதிர்க்கும் விதத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. சமையல்காரர் மீது பரிவும், பாசமும், அம்மா மீதும், அப்பா மீதும்…தன்னைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே  என்ற வருத்தமும் நிறைந்து…இவர்களின் பிடிவாதத்தால் தனது காதலை விடத் துணியாத மனோபலமும் கொண்டவளாக மீனா. எப்படியாவது தனது பெற்றோர்களின் சம்மதம் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளில், தன காதலன் ராகவன் மீது கொண்ட நம்பிக்கையில் வீட்டை விட்டு ஓடிப் போகவும் துணிந்த  துணிச்சல்காரியாக மீனா காட்டப் படுகிறாள்..

    “அப்பா அம்மா பார்த்துப் பண்ணி வைக்கப் போறதும் எவனோ ஒருத்தன் தானே? அவன் மட்டும்என்னைக் கைவிட மாட்டான்னு என்ன நிச்சயம்? அவனை நம்பி அப்பா அம்மாவை விட்டுட்டுக் கிளம்புற ஒரு பொண்ணு கல் மனசுக்காரி இல்லேனா, தானே தேடிண்ட ஒருத்தனோட கிளம்பிப் போயிடற பொண்ணு மட்டும் கல்மனசுக்காரி ஆயிடு வாளா?”…மீனாவின் அனல் பறக்கும் வார்த்தைகள், தான் செய்யத் துணிந்த காரியத்திற்கு நியாயம் சொல்வது போலிருக்கிறது.

    காதலனாக ராகவன்:

    மிகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்ட பாத்திரமாக ராகவன்… .”படிப்புக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை” என்றும்… தான் நேசிக்கும் பெண்ணே  தனக்கு  துணைவியாக வர வேண்டும் என்ற உந்துதலில்  “ஒரு பெண்ணை வற்புறுத்தி இன்னொருத்தனுக்குக் கட்டிக் கொடுக்கிற வழக்கம் என்னிக்குத் தான் நிக்குமோ, தெரியல்லே..ஊருக்கு ஒரு பாரதியார் பிறக்கணும் போல இருக்கு ” என்று தன்  ஆற்றாமையை சொல்லும் இடத்திலும் , தனது கண்ணியத்தை ஊர்ஜிதம் செய்ய “அதோ , என் மேஜை மேலே இருக்கிற சுவாமி விவேகானந்தர் படத்தை சாட்சியா வெச்சு நான் உங்களுக்கு வாக்குறுதி குடுக்கிறேன்..மீனாவுக்கு சிறு தீங்கும் நேராது ” என்று சொர்ணத்திடம் சொல்லும் போது  நேசத்தின் நிஜம் உணர முடிகிறது. கடிதம் விடு தூது , தூக்க மாத்திரை திட்டம்…எல்லாம் நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்கிறார் ராகவன்.

    “ஒரு பொண்ணு மேலே ஒரு ஆணுக்கு ஏற்படற அன்பை உம்ம வாழ்க்கையிலே ஒரு முறையாவது நீர் உணர்ந்திருந்தா எங்க ஏமாற்றம் உமக்குப் புரியும்…நீ பிரும்மச்சாரியாவே உம்ம காலத்தை கழிச்சுட்டீர்.”  என்று சொர்ணத்தின் மனசுக்குள் அமிழ்ந்திருக்கும் சோகத்தை சுகமாக வெளிப் படுத்தக் காரணாமாக இருந்த ராகவன் “நீங்களே எங்க திட்டத்துக்கு உதவி செய்யலேன்னா வேற எப்படி நாங்க எங்க காரியத்தைச் சாதிக்கிறது?” என்று கொக்கி போட்டு தன பக்கம் இழுத்த விதம் அருமை. நினைத்ததை முடிப்பவனாக  ராகவன்.

    சமையல்காரராக சொர்ணம் :

    இவர் தான் இந்தக்  கதையைத் தாங்கும் கோபுரத் தூண் என்று அழுத்திச் சொல்லலாம். முப்பத்தி ரெண்டு வருஷமா ஒரே வீட்டில் சமையல் செய்து அந்த வீட்டில் ஒருவராகவே வளைய வரும் சொர்ணம். மீனாவைத்  தன் மகளாக பாவித்து வளர்த்து வந்த பாசம் பல இடங்களில் வெளிப் படுகிறது. நிறைய படித்திருந்தும் இவர்கள் வீட்டோடு இருக்கும் விசுவாசம், மகளது காதலை எதிர்க்கும் தந்தையைத் தானும் எடுத்துச் சொல்லி அவர் சம்மதிக்க வேண்டுமே என்ற நப்பாசையில் தான் வாங்கிக் கட்டிக் கொள்வது, எப்படியாவது அம்மா, அப்பா மனம் கோணாமல் நடந்து கொள்ள மீனா விடம்  எடுத்துச் சொல்லும் விதம், அவளது காதலன் ராகவனிடம் “இவராவது கேட்க மாட்டாரா “என்று அவர் மனதை மாற்ற ஒரு சந்தர்ப்பமா மீனா கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தூது போவது. அங்கு ராகவன் தன மனதை மாற்றி திருப்பி அனுப்பும் போது  மீனாவிடம் வாதாடுவது கதைக்குப் புத்துயிர் ஊட்டுகிறது.  சிறு கதா பாத்திரமும் செயற்கரிய செயல் செய்து கதைக்கு மெருகூட்ட முடிகிறது.

    அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ‘தியாக பூமி’ படமும், அதைத் தொடர்ந்து ‘நானும் பார்த்தாலும் பார்த்தேன் அம்மா மேலே கேஸ் போட்ற அப்பாவை இப்பத் தான் பார்த்தேன்..” என்று குழந்தை சாரு  கோர்டில் சொன்னதும் சொர்ணம் நினைவுக்குக் கொண்டு வந்து, ‘கடவுளே..! அப்பாவும், பெண்ணும் ஒருவர் மீதொருவர் கேஸ் போடும் காலமா இது “?  என்று வியந்து காலத்தின் படிமத்தைச் சொல்கிறார்.

    அதிலும் மீனாவின் அன்பு தான் வெல்கிறது. இறுதியாய், உறுதியாய் அவர்களது நல்ல வாழ்வுக்குத் தன்னால்  உதவ முடியுமோ, அவர்கள் சொன்ன படி இரவு உணவில் தூக்க மாத்திரைகளை சுப்பராமனுக்கும், அலமேலு அம்மாவுக்கும் தெரியாமல் கலந்து கொடுத்து உறங்கச் செய்து விட்டு மணப்பெண் மீனாவை ராகவன் சொன்னபடி அவரது தங்கை வீட்டுக்கு, பழனிக்கு அனுப்பி வைக்கறார்.

    ஒரு விதத்தில் மீனாவின் காதலை சேர்த்து வைத்த நிம்மதி இருந்தாலும், இத்தனை காலம் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு மேலோங்கி தான் ஒரு கடிதம் எழுதி விட்டு சமையல்காரர் தற்கொலை செய்து கொள்வது உள்ளத்தைத் தொடுகிறது..

    யாரையும்  காட்டிக் கொடுக்காமல் போலீசுக்கும் வேறு மாதிரியாக ஒரு கடிதம் “தனது தற்கொலைக்கு தனது வயிற்று வலி தான் காரணம் ” என்று சொர்ணம் பொய் சொல்லுவதை நாம் மன்னித்து விடலாம்.

    தன்  உயிரை விடத் துணிந்தவர் தனது இறுதி வேண்டுகோளாக “மீனாவை விரைவில் அழைத்து வந்து அந்தப் பையன் ராகவனுக்கே அவளை மணமுடித்து வையுங்கள் “என்று  ஆசீர்வாதமாக எழுதியதைப் படித்ததும் கண்களைக் கண்ணீர் மறைக்க சுப்பராமன் நாற்காலியில் தொப்பென்று விழுவது சொர்ணத்தின் குறிக்கோள் வெற்றியைக் காட்டுகிறது. .

    இந்த முடிவு அவர்கள் வீட்டில் விரைவில் ஒரு புரட்சிகரமான திருமணம் வெற்றிகரமாக நடக்கப் போகுது என்பதைச் சொல்வதாக இருக்கிறது.

    இந்தச்  சிறு கதையில், பெண்கல்வி,காதலைத் தொடர்ந்து, மன உறுதி, துணிச்சல், முடிவெடுக்கும்  தீர்க்கம், மனவேதனை, காதல் தோல்வி, மகள் மீது கொண்ட நம்பிக்கை, காதலன் மீது கொண்ட நம்பிக்கை, சாதி வெறி, ஆணாதிக்கம், ஏக்கம், தியாகம்..இன்ப முடிவுஎன்று கதை முழுமை அடைகிறது.  ஒரு நிறைவைத் தந்த சிறுகதை.  கதை முழுவதும் நிழலாய், ஆரத்தின் நூலாய் வரும் சொர்ணம்..முடிவில் ஒளிவீசுகிறார்.   உயிர்த் தியாகம் என்ற போது மன வருத்தத்தைத் தந்தாலும் “அரியும் சிவனும் ஒண்ணு” என்பதைச் சொர்ணம் மூலம்  நிலைநாட்டிக் காட்டுகிறார் கதாசிரியர்..  கதையில் வினையூக்கி சிறுபாத்திரம் சொர்ணமே.

    ஒரு உயிரின் அழிவில் தான் இன்னொருவரின் வாழ்க்கை ஆரம்பம் என்று அறிந்ததும் ராகவனும், மீனாவும் அவசரப் பட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. ஆஹா…..இந்தத் தாக்கம்  எல்லாம் தான் கதையின் வெற்றி அல்லவா..!


    இந்தக் கதையை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களைத்  தான் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். நாற்பத்தி ஐந்து வருடங்கள் பின்நோக்கிச் சென்று படித்து விட்டு நிகழ் காலத்திற்கு வந்த போது  புரிகிறது.  காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் விஞ்ஞான தொடர்புத் துறையில் முன்னேறி இருப்பது போல, மனித மனங்கள் எத்தனையோ விஷயங்களில் பின்நோக்கிச் சென்று விட்டது தான் நிஜம்.

    பெண் கல்வி நன்கு வளர்ந்து முன்னேறிவிட்ட நிலையில், காதல் ஜாதியைத் தாண்டி மதத்தையும் தாண்டி குதித்துக் கொண்டு முன்னேறி விட்டது. ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு உயிர்த் தியாகம் செய்வ தெல்லாம் அந்தக் காலத்தில் நடந்திருப்பதை எண்ணினால்….இப்போது ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு உயிரை எடுப்பதில் முன்னேறி இருப்பது தெரிகிறது.

    அந்தக் காலத்துக் காதல் தூதுவர்களை அதாவது கடிதம் எழுதி கொடுத்து அனுப்பிவிட்டு பதிலுக்காகக் காத்திருப்பது, தோற்றுப் போவோம் என்று தெரிந்ததும் தூக்க மாத்திரையைத் தேடுவது.என்று மீண்டும் நீண்ட காலங்கள் கழித்து இவர்களை சந்திக்கும்  ஒரு வாய்ப்பு கிடைத்தது.

    இப்போது பெற்றோர்களின் சம்மதம் என்பது தேவையற்றதாகத் அவர்களுக்குத் தோன்ற…நான்கு நண்பர்கள் சாட்சிக்கு இருந்தால் ஒரு கல்யாணம் என்ற நிலை கூட பரவி வருகிறது.

    முதலில் முப்பத்தைந்து வருடம் ஒரே வீட்டில் வேலை செய்யும் நல்ல உள்ளங்கள் இன்றைய கால கட்டத்தில் காண்பது அரிது. தியாகம், பாசம், அன்பு , உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்று உயிரை விடவும் துணிவது இதெல்லாம் தற்போது இப்படிக் கதைகளில் படித்தால் தான் உண்டு.

    பெரிய திரைப் படங்கள் சுருங்கி சின்னத் திரையாகி விட்டது போல பரந்திருந்த மனிதர்களின் உறவுகளும், உணர்வுகளும் கூட சுருங்கிப் போய் சுயநலத்தின் காப்சூல் ஹார்ட்டாகப்  மாறிக்   கொண்டிருப்பதால் இது போன்ற மனித மனங்களை மேம்படுத்தும் கதைகளைப் படித்தாவது நமது மனத்திற்கு உணர்வுகளுக்கான உரமிடலாம்.

    அருமையான தமிழில் நல்ல கற்பனை வளத்தில் எழுதிய சொல்லாடல்களைக் சேர்த்துக் கட்டிய அந்தக் காலத்தின் சிறப்பைச் சொல்லும் முகமாக என்றென்றும் ஏட்டில் நிலைத்துவிட்ட ஒரு யதார்த்தமான  இந்த சிறுகதை இலக்கியத்தை  அவசியம் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    புத்தகத்தின் தலைப்பு: “வித்தியாசமானவர்கள்”

    மிக்க நன்றி.

    =========================================================================================================================

    Share
  • முதியோர் இல்லம்

     

     

    விசாகை மனோகரன்

     

     

    ஏரெடுத்துழைத்துமை வளர்த்தவர்களை
    ஏறெடுத்தும் பார்க்காத தலைமுறையே!
    ஏற்றிவிட்ட ஏனியை எட்டி உதைத்தவர்களே
    அந்நிலை உதைப்பவனுக்கே திரும்பாதா!
    தந்தை வழி நட என்பது சரியாயின்
    உங்கள் பிள்ளைகளும் எட்டி உதைப்பார்களே!

    முதியோர் இல்லம் அனாதைகளுக்கே
    அனாதை ஆக்கப்பட்டவர்களுக்காக இல்லயே!
    முற்றிலும் துறந்த முனிவனுக்கு துணை தேவையில்லை
    நமக்காக முழுவதும் துறந்தவருக்கு அது அவசியம்தானே!

    முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
    பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
    பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!

    தவமாய் தவமிருந்து மெய்வலிக்கப்பெற்று
    கண்ணுக்குள் வைத்து வளர்த்து
    எங்கள் சந்தோஷத்தில் சந்தோஷித்த
    பெற்றோர்களே! உங்கள் இயல்பு
    நீங்கள் இதையும் மன்னிப்பீர்கள்
    தலை வணங்குகிறேன்.

    Share
  • வல்லமையின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

     

     

     

    அன்பு நண்பர்களே,

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! எங்கும் மங்களம் பொங்குக! சுவைத்து மகிழுங்கள்!

     

    பொங்கலிது பொங்கல்…

    பொங்கிவரும் ஆனந்தப்பொங்கல் ..!

     

    பொங்கட்டும் தைப்பொங்கல்!!

    வகுப்பறை சிரிப்புகள்

     

    சீர்காழி -அக்கினிபுரீசுவரர்

     

    பொங்கும் மங்கலம்.

     

    நுவல்- புத்தக மதிப்புரை

     

     

    “அந்த இனிய நாட்கள்”

     

    “பொங்கல் திருநாள்”

     

     

    “பொங்கல் நினைவுகள்”

     

    தமிழர் திருநாள் வாழ்த்து!

     

    வைகுண்டப் பிராப்தம்

     

    “பொலி! பொலி!!”

     

    பொங்கலோ பொங்கல்!

     

     

    வண்ணத் தூரிகைக் காவியங்கள்

    பயணம்…

     

    பொங்கலோ பொங்கல்

     

     ஒரு வேப்பமரமும் சில சாமிகளும்

     

     

    பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!

     

    ஆஹா என்ன ருசி!

     

    பொங்கலோ பொங்கல் ….. பொண்களோ

    பொண்கள்!

     

    கலி

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்  

    இந்த வாரம் எல்லோருக்கும் சுபவாரமாக ஆரம்பிக்கவேண்டுமென நிச்சயித்துத்தான் நம் பெரியோர்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் போலும். அறுப்பு முடிந்து புது அரிசி எடுத்து ஆதவன் முன்னிலையில் பொங்கிச் சாப்பிட்டு ஆனந்தப் பொங்கல் விழாவும் அத்தோடு பெருமை சேர்க்க திருவள்ளுவர் விழாவும் கொண்டாடும் சுபவேளையில் இங்கே விசாகப்பட்டினத்தில் நம் தமிழினத்துக்கே பெருமை சேர்த்து தமிழ் வேதம் தந்த திருவள்ளுவருக்கு சிலை எடுக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் இதற்கேற்றாற்போலவே எல்லாமே அமைந்துவிட்டதும் கவனிக்கவேண்டும்.

    குறள் என்று பெயரில் ஒன்றரை அடிதான் அது.. ஆனால் எத்தனை சேதி சொல்கின்றதோ..  நம்மொழியில் அல்லாது எம்மொழியில் உண்டு இவை போல என்று பெருமிதப்படுகின்றோம்.. அறம் பொருள் இன்பம் எனும் மூன்று பகுதிகளாகப் பாடப்பட்ட திருக்குறள் அதன் அடுத்தப் பகுதியான வீட்டின்பத்தைப் பாடவில்லை.  இந்த கர்மயோகத் திருக்குறளை அப்படியே பின்பற்றினால் வீடு பாக்கியமும் உண்டு என்று சொல்லாமல் சொல்லி விட்டார் போலும். அதே சமயத்தில் இந்த குறட்பாக்களை நம் மனிதர்கள் ஒவ்வொருவரும் அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் வழிகளைக் கடைபிடித்தால் நல்வாழ்வு நிச்சயமாக அமையும்.. கொலையும் குற்றமும் ஒழியும், பசியும் பிணியும் தோன்றவே தோன்றாது.. காதல் பெருகும், காதலால் அன்பும் பெருகும்.. அன்பு பெருகினால் அங்கே அமைதிதான்.. யுத்தமும் துன்பமும் சாவும் போராட்டமும் இனி கிடையாது…மனிதருக்கு மனிதர் வெறுப்பு வளராது.. எங்கும் வெற்றிதான்.. எல்லோரும் நல்லவரே.. ஆஹா.. கனவு காண்கிறேனோ..

    இருந்தும் நம் நண்பர் துரை அவர்களின் புதிய குறட்பாக்களைப் படிக்கையில் இப்படியெல்லாம் கனவு காண்பது என்பது என் ஒருவனுக்கு மட்டும் சொந்தமல்ல என்பது புரிந்தது… துணைக்கு அனேகம் பேர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் வந்தது.. நான் காண்பது வெறுங்கனவு. துரை காண்பதோ இனிய கனவுகள். அந்தக் கனவுகளைக் குறட்பாக்கள் மூலம் வெளிப்படுத்தும் பாணியும் கூடவே ஒரு படத்தையும் போட்டு நம்மை அங்கே இழுக்கும் பாணியும் அருமை. காதலின் மீது ஒரு சில குறட்பாக்கள் துரையின் தூரிகை மூலம்:

    என்தாகம் என்னென்(று) அறிந்தும்ஏன் என்வலையுள்
    வந்தின்றும் சிக்கவில்லை நீர்

    நீர்சேர்ந்தால் நெல்சோறு; மண்சேறு; தேன்சாறு;
    நானென்ன ஆவேனாம் கூறு

    உம்வாசம் நானுணர்த்தேன்; தன்வேசம் தானுதறி
    முன்வாசல் ஓடும் மனது

    ஒத்த அதிர்வெண்ணோ(டு) ஒன்றாய் அலைவரிசை
    வாய்த்தவன் வந்தமைந்தால் தேன்

    சொல்லாமல் ஆறாது; சொன்னாலும் தீராது
    சொல்லடா என்செய்ய வென்று

    தூத்துக்குடி துரை முன்னர் ராஜராஜசோழன் மீது வெண்பா எழுதிவந்தார். ஏனோ நடுவில் நிறுத்தி விட்டார். அவர் அதையும் முடிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த தைத்திருநாளில்  குறட்பாக்கள் எழுதி வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைச் சொல்லி வல்லமை குழுவினர் சார்பில் ஆனந்தப்படுகிறோம். துரை அவர்களுக்கு வாழ்த்துகள்.

    இன்றைய கடைசி பாரா: கவிஞர் இரா.ரவி எழுதியது.

    ஈராயிரம்  வயது கடந்தும்
    இளமையாக இருப்பவர்  
    திருவள்ளுவர் !   

    மரபு அன்று என்றவர்களையும்
    ஏற்க வைத்தவர்
    திருவள்ளுவர் !   

    வாசுகியின் கணவர்
    வாசகர்களின் கண் அவர்  
    திருவள்ளுவர் !

    Share
  • “வடு”

    பொன். இராம்

    “ஏன் நிக்கறே? உக்காந்துக்கறது தானே”. . .

    “ ஸ்டீல்ல தட்டு மாதிரி போட்டிருக்கே. சுடுதும்மா. மேலே ரூஃபிங்கே இல்ல பாத்தியா!. . . வெயில் வேற. . . சுள்ளுன்னு அடிக்குது.“

    “ஏன் பஸ் வரலையா? வீட்லருந்து அப்பவே வந்துட்டியோ. . .“

    “நீ வேற இந்த ஸ்டாப்பிங்ல பஸ் வரலன்னு காது கேட்காத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பஸ்ல ஏறிட்டேன். ஏறுன பிறகு தான் தெரிந்தது. ஏண்டா ஏறினோம்னு. . . ஒரு ஸ்டாப் போய்ட்டு இறங்கிட்டேன்.“

    “ஏன்? என்னாச்சு? உங்களுக்குத்தான் முதியோருக்கான ஸீட் பஸ்ல முன் பக்கம் கவர்ன்மெண்ட் கொடுத்திருக்கே . . . “
    அம்மாவின் முகம் மாறியதைப் பார்த்த மல்லிகா அம்மாவின் தோளை ஆதரவுடன் பற்றினாள்.

    “என்னம்மா. . . என்னாச்சு?“

    “ஒண்ணுமில்லம்மா! வரவர பெத்தவங்க வளர்ப்பு சரியில்லையோன்னு தோணுதும்மா!“
    “ஏம்மா?“ நல்லா படிக்குற, ஒழுக்கமான குழந்தைகள் இல்லையாம்மா?
    கனத்த மௌனம் அம்மாவிடம் இருந்து புறப்பட்டது.

    “கொஞ்ச நேரம் அந்த பார்க்ல உக்காந்துக்கலாம் வர்றியா?“

    தூரத்தில் தெரிந்த சாவு ஊர்வலத்தைப் பார்த்தாள் அம்மா. காருக்குள் இறந்தபெண்ணின் அருகில் ஒருவன் அவள் காதருகில் அழுதபடி அவன் பேசுவதை உற்றுப்பார்த்தாள். செத்தபிறகு பிணத்திற்கு எல்லாஉணர்வும் கேக்கும்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். உணர்வுபூர்வமாக இன்றுதான் பார்க்கிறேன்…………….

    அம்மாவின் மனமறிந்தாள் மல்லிகா.

    இடத்தை விட்டுப்போய்விடவேண்டும் என நினைத்தாள்.
    “சரி! வாங்க பேசிட்டே போகலாம். . .“

    நேற்று நான் காந்தி இறந்தப்ப போட்ட டிரஸ்ஸைப் பாத்தேன்.
    பல தடவை பாத்துட்டேன். இருந்தும் அதைப் பாக்கும்போது பழைய ஞாபகம் வருது. வருஷம் பல மாறினாலும் ஒண்ணு தெளிவாத் தெரியுது. அங்க இருந்தவங்கள்ள நம்ம இந்தியர்களை விட வெளிநாட்டவர்கள் தான் அதிகம். உனக்குப் புரியுதா என் வேதனை… அங்கேயே இருந்துடலாமோன்னு தோணுச்சு…….

    அம்மா நீங்க அதிகம் பேச வேண்டாம். அப்பா நாட்டுக்காக வாழ்ந்து உயிரை விட்டார். கவர்மெண்ட் தர எந்த சலுகையும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க….நாளைக்கு அப்பா இறந்தநாள் ஜனவரி 26. கொஞ்சநேரம் ஃபிரெண்ட்ஸைப் பாத்துட்டு வரேன்னு கிளம்பினீங்க…உங்களுக்குப் பிடிச்ச லைப்ரரிக்குப் போலாமா……

    ஒண்ணும் வேண்டாம் வீட்ல தேவைப்பட்டது கிடக்கு. நீ போய் பால் மட்டும் வாங்கி வா..

    தாய்போல மரத்தின் நிழல் சிமெண்ட்பெஞ்சைத் தடவியிருந்த இடத்தில் மஞ்சள் நிறக் கொன்றைமலர்கள் சிதறியிருந்ததை இரசித்தபடி சிவகாமி அமர்ந்தாள்.

    அம்மாவுக்கெனச் சூடாகப் பால் வாங்க அருகில் இருந்த ஆவின் பூத்திற்குச் சென்றாள் மல்லிகா.

    எதிர் பெஞ்சில் கண் தெரியாமல் அமர்ந்திருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனருகில் தட்டில் சாதத்துடன் நின்ற பெண்ணையும் பார்த்தாள். என்ன செய்கிறார்கள் எனப் பார்த்தபடி இருந்தாள் சிவகாமி.
    சாதத்தை எடுத்துச் சிறுவனுக்கு ஊட்டுவாள் என எதிர்பார்த்திருந்த வேளையில், அந்தப் பெண் சிறுவனின் கையைச் சாதத்தில் வைத்துத் தொட்டுக்காட்டி, கையைப் பிடித்து வாயில் வைத்ததைச் சிவகாமி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ஒரு நிமிடம் கண்ணை இமைக்க மறந்த சிவகாமி அடுத்து என்ன நடக்கும் என்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

    சிறுவன் அம்மா கொடுத்த சாதத்தைப் பிசைந்து பொரியல் இருந்த இடத்தைத் தடவிச் சரியாகச் சாப்பிட்டு முடித்தான். கை கழுவ பக்கத்தில் வாட்டர் பாட்டிலைத் தடவினான்.

    “அம்மா!“

    “என்ன சிவா?“

    “கை கழுவ தண்ணிம்மா!“

    “உனக்கு இடது கைப்பக்கமா நாலு அடி எடுத்து வை. . . வாஷ் பேசின் இருக்கு. . . பாத்துப் போ!“ என்றாள் அந்தத்தாய்.

    “இந்தாங்கம்மா பால்!“ என்றாள் மல்லிகா.

    வாயில் விரலை வைச்சு சிவகாமி, “உஷ்!. . . “ என்றாள் அந்தச் சிறுவனைச் சுட்டிக்காட்டியபடி.
    “சிவா, இந்தாப்பா. . .“ என கூறியபடி அவன் தோளைத்தட்டி ஸ்டிக்கை அம்மா கொடுத்தாள்.

    சிவா ஸ்டிக்கை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக மண்தரையில் மாற்றி மாற்றி தட்டிப் பார்த்து நடக்க ஆரம்பித்தான்.
    திடீரென ஏதோ ஸ்டிக்கில் தட்டுப்பட. . . அப்படியே உட்கார்ந்தான்.
    பச்சைப் புல்லின் மென்மையான வாசத்துடன் காலைப்பனியின் ஈரம் கையில் ‘ஜிலீர்‘ரென உரச, இலேசாகப் புன்னகைத்தான்.

    “அம்மா. . . இதென்ன?. . .“

    “இதுவா. . . பனியின் ஈரம். . .“ என்றவள் சட்டென நாக்கைக் கடித்தாள்.

    “ஓ. . . உனக்குப் பனின்னா என்னன்னு தெரியாதே!“

    “தெரியும்மா. . . எங்க மிஸ் சொல்லிக் கொடுத்திருக்காங்க. . .“

    “சரி. . . பார்த்துப் போ. . .“

    ஸ்டிக்கால் தரையைத் தட்டியபடி நின்றான்.

    “அம்மா, இந்தக்கல்லு எல்லாருக்கும் இடைஞ்சலா. . . வழுவழுன்னு இருக்கேம்மா. . . “

    “கூழாங்கல்லு தான் அது. . .“

    “பார்க்கை டெக்கரேட் பண்ணிட்டு அப்படியே போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.“

    “ஏம்மா அவங்களுக்குத் தன்னுணர்வு இல்லையா?“

    “தன்னுணர்வா அப்படின்னா?“

    “இது தெரியாதாம்மா உங்களுக்கு?“

    “அடுத்தவங்க பார்க்கறாங்கன்னு நமக்குப் பெருமை வரணுமேங்கறதுக்காக எந்த நியாயமான செயல் செய்வதுபோல நடிக்கக்கூடாது. வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது. ரோட்டில் கிடக்கிற குப்பையை எடுத்துக் குப்பைத்தொட்டியில போடணும். . . குழியா கிடக்குன்னு ரோடே போடலைன்னு மறியல் செய்யிறதவிட அந்தக்குழிய நிரப்ப பக்கத்துல கிடக்கிற மண்ணையோ, கல்லையோ போட்டுக் குழியை மூடலாம்ல. . . தெருவுல போறவங்களுக்கு நிழல் வேணும்னு மரம் நடணும்னு தோணனும். மரத்து மேலே லைட்டைப் போட்டு தன் கடைக்கு மட்டும் விளம்பரம் தேடுறது இல்லம்மா தன்னுணர்வு. சென்னைய தவிர மத்த ஊர்ல ஒரு நாள்ல அரைநாளுக்கும் மேல கரண்ட் இல்லாம மக்கள் திண்டாடுறது தெரிஞ்சும் சீரியல் செட், ஆடம்பர லைட் போட்டு மின்சாரத்தை இஷ்டத்திற்கு செலவழிக்கிறதில்லை தன்னுணர்வு. இருக்கறத சிக்கனமா எல்லாரும் பயன்படுத்தணும். அது தான் மனிதத்தன்மை. இது தாம்மா தன்னுணர்வுன்னு எங்க மிஸ் சொன்னாங்கம்மா. . .“
    வானத்திலிருந்து புஷ்பங்கள் தன் உடம்பில் கொட்டியது போல உணர்ந்தாள் சிவகாமி. “ரொம்ப கரெக்ட்“ எனக் கூறியவாறு கை தட்டிய சிவகாமியைப் பார்த்தாள் அந்தத்தாய்.

    “உங்க பையனா?“

    “ஆமா . . . லேட் மேரேஜ்ல பிறந்தான். டெலிவரி அப்ப நர்ஸோட கவனக்குறைவால ரெண்டு கண்ணும் தெரியாம போய்டுச்சு. . .“ அந்தக் குறை தெரியாம இருக்க அப்பப்ப இப்படி வருவேன். அவனுக்கு அப்பா இல்ல. . . ஆர்மில இருந்தார். திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். இருந்தும் அவன் கால்ல நிக்கணும்னு தான் இப்பிடி. . . அவனுக்கு இருக்கற மிஸ் ரொம்ப க்ரேட்டுங்க. . . எல்லாருக்கும் அப்படி வாய்க்கறதில்ல. . . என்றாள் சிவகாமி.
    “பால் குடிக்கறீங்களா?. . . எதுக்கும் இருக்கட்டும்னு ஃப்ளாஸ்க்ல ஜஸ்ட் இப்பதான் வாங்கிக்கிட்டு நேரா வரேன்.
    இரண்டு தம்ளர் பால் எக்ஸ்ட்ரா தான் வாங்கினேன்“ என்றாள் மல்லிகா.

    “வேண்டாங்க. . . வெளில எங்கயும் சாப்பிடறதில்லே.“

    “ஏன் பயமா?. . . ஏதாவது கலந்து இருப்பாங்களோன்னு. . .“

    “சேச்சே. . . அதெல்லாமில்ல. . . டயட்ல இருக்கேன். இவன் ஒரு கால்ல நிக்கற வரைக்கும் நான் இருக்கணும்ல. . . காலம் போன காலத்துல பெத்து வச்சிருக்கேனே!. . .“

    “இந்த பையனுக்கு ஒரு குறையும் வராதும்மா. . .“
    பெருமூச்செறிந்தபடி அம்மா பேச ஆரம்பித்தாள்.

    “நான் இன்னைக்கு பஸ்ல போனேன்னு சொன்னேல்ல. . . கேளு மல்லிகா. . . நெஞ்சே ஆறலை. . . அங்க வயசான ஒரு பாட்டி என்னமாதிரின்னு வச்சுக்கோயேன். முதியோருக்கான சீட்ல உக்காந்துட்டாங்கம்மா! உடனே பக்கத்திலிருந்த பெண் ஐயய்யோ, எந்திருச்சுருங்க. . . இது அந்தப் பசங்க உட்கார்ற இடம்! வந்தா திட்டுங்க. . .“ என்றாள்.

    “அப்ப பாத்து பக்கத்துல ஒரு லேடி பேக் மாட்டிட்டு நின்னுக்கிட்டு இருந்தாங்க. எங்கே போறாங்கன்னு தெரியல. . . நீங்க உக்காருங்கம்மா. . . பாத்துக்கலாம்“ னு சொன்னாங்க.

    “பதிமூணு… பதினாலு… வயசு தாம்மா ஆகும் அவுங்களுக்கு. வாய் பேச முடியாத காதும் கேளாத பசங்கம்மா அவுங்க“.

    அவங்களுக்குள்ளயே சைகைலேய பேசிட்டுக் கோபமாக கையைக் காட்டினாங்க.
    அதப்பாத்தவுடன் அந்த வயசானஅம்மா எழுந்துட்டாங்க…..

    “பேக் மாட்டின பொண்ணு உடனே, “நீங்க உட்காருங்க! போர்டுல என்ன போட்டிருக்கு? முதியோர்னு போட்டிருக்கா? அந்தக்குழந்தைகளுக்காகக் காலியா இருந்தாலும் நாங்க நிக்கறோம்.
    வயசானவங்க அப்படி இல்லை இல்லையா?

    “கடவுள் இவங்களைப் படைச்சதுக்கு வருத்தப்படறோம். ஆனா முதியோருக்கு மரியாதை தரணும்னு கூடத் தெரியலையேம்மா. . . “
    குரல் வந்த திசையை நோக்கிச் சடாரெனத் திரும்பினாள் பேக் மாட்டிய பெண்.
    வெறும் மஞ்சள்கயிற்றுக் கழுத்தோடு,நிறை மாதப் பெண்ணின் இடுப்பில் வாயில் எச்சில் ஒழுகியபடி, நடப்பது எதுவும் அறியாமல் கால் சூம்பியநிலையில் மாறுகண்ணுடன் இருந்த ஏழுவயதுக் குழந்தையைப் பார்த்தாள்.

    “அவங்க பாக்கறதைப் பாத்து அவங்க மேம் கிட்டே சொல்லப் போறாங்களாம். இந்த பஸ் அவங்களுக்காம். அதுல எல்லாரும் ஏறிட்டாங்களாம்“.

    “உங்களுக்கு இந்த லேங்வேஜ் எப்படித் தெரியும்?“

    “எங்க வீட்ல இந்த மாதிரி சொந்தம் உண்டு“ என்றாள் எங்கோ பார்த்தபடி. . .

    “பொய் சொல்கிறாள் என்பது அவள் பார்வையில் தெரிந்தது. கண் எப்படிப் பொய் பேசும்?“

    “பயமாயிருக்கும்மா. . . இதுங்க வாழ்க்கையை நெனச்சு!“ என்றாள்.

    அதுசரி..நீங்க ஒரு ஆட்டோல போகக்கூடாதா…வயித்துல ஒண்ணு கையில ஒண்ணு……. என்றாள்.

    என்னை விடும்மா…வலி வந்தா மரத்துக்கு மறைவுல புள்ளையை பெத்துட்டு அடுத்த நிமிஷமே வேலை பாக்கணும்னு நினைக்கற குடும்பத்துல பிறந்துட்டு… என்வசதியைப்பத்திப் பேசுறிங்களே.. பெண்கள் படிக்கணும்மா—நேர்மையா வாழணும்மா….தான் கற்ற அறிவு பிறருக்குப் பயன்படுற வகையில வாழணும்மா..அடக்கமாகவும் இருக்கணும்மா….இதுங்களுக்குக் கத்துக்கொடுத்த ஆசிரியரைத் தாம்மா தப்பு சொல்லணும்னுட்டு அந்தப் பெண் மடமடவென அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விட்டாள். அவள் வாழ்க்கையில எத்தனை பிரச்சினைகளைப் பாத்தாளோம்மா! நானும் இறங்கிட்டேம்மா. மனசு தாங்கல. . . சீட் எங்கள மாதிரி இருக்கறவங்களுக்குக் கொடுன்னு கேக்கலை. நாங்க வயசானவங்க அனுபவம் இருக்கு. ஆனா இந்தப் பசங்க என்ன செய்யப்போகுதோன்னு தான் பயமாயிருக்கு. . . யாருக்கும் விட்டுக் கொடுக்கணும்னு தோணலைன்னு நினைச்சுத் தாம்மா பஸ் ஸ்டாண்ட்ல நின்னேன். நீ வந்துட்டே. . . ஆனா கடவுள் தான் இந்தப் பார்க்குக்கு வர வச்சதுன்னு நினைக்கறேன். இல்லாட்டா சிவாவைப் பார்த்திருப்பேனா?“ என்றாள் சிவகாமி.

    “ஒரு பிள்ளைன்னாலும் அடிச்சுத் திருத்தாட்டியும் அன்பாகவாவது பெற்றோர் திருத்தற சூழல் வரணும்ல…“

    மூடிக்கிடக்கிற கருமேகத்தை சூரியன் விலக்கப் பார்த்துத் தோற்றுக் கொண்டிருந்தது. பார்க்கிலிருந்த சூரியகாந்திப் பூக்கள் அப்போது வீசிய மெல்லிய தென்றல் காற்றில் மௌனமாகத் தலை அசைத்து நின்றன.

    Share
  • ஓவிய மாமேதை மாதவனின் பொங்கல் ஓவியங்கள்.

    அன்புள்ள வல்லமை உள்ளங்களுக்கு

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ஓவியர் மாதவனை வல்லமை உள்ளங்களுக்கு  அறிமுகப்படுத்த வேண்டுமெனில் சாம்பா பதிப்பகம் வெளியிட்ட பாடப்புத்தகங்களை இங்கே நினைவு கூறவேண்டும். ஓவியர் மாதவனின் கைவண்ணம் மற்றும் கலைவண்ணம் காண்போரை மயக்கும். அவரின் கற்பனையில் உதித்த பொங்கல் படங்களை நம் வல்லமை உள்ளங்களுக்காக இங்கே வழங்குகிறோம்.

    இந்த அறுவடைத் திருநாளில் பழையன கழித்து, புது சிந்தனைகளைக் கூட்டி, பகலவனைத் தொழுது,உழுத மாடுகளை வழிபட்டு வணங்கி கன்னல் சுவைத்து, இன்னல் நீங்கி, மின்னலாய் ஒளிர மங்கள வாழ்த்துக்களை பொங்கலோ பொங்கல் என நுரை பொங்க வல்லமை இதழ் மூலம் வழங்கி மகிழ்கிறோம்.

    தூரிகை சின்னராஜ்

    Share