Blog

  • தமிழ்நாடு பெயர்மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை | 1968

    தமிழ்நாடு பெயர்மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை | 1968

    சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    தமிழ்நாடு எனப் பெயர் வைத்ததன் மூலம் சோறு கிடைக்குமா? என்ற கேள்விக்கு அண்ணா பதில் அளித்துள்ளார். ஜாங்கிரி, ஜிலேபி போன்ற பலகாரங்கள் வட்ட வடிவத்தில் இல்லாவிட்டால் அவை இனிக்காதா என்ற கேள்விக்கும் இதில் பதில் உள்ளது. சுவையான உரை.

    (ஜூலை 18 (1967) – தமிழ்நாடு பெயர் மாற்றம் நிகழ்ந்த நாள்)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை | கறவைகள் பின்சென்று

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
    சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ‘கறவைகள் பின்சென்று’ என்ற பாடலைப் புதிய மெட்டில் பாடி ஆடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். சென்னை, திருநீர்மலையில், நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவின் இசைத் தொண்டு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 51

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 51

    -மேகலா இராமமூர்த்தி

    இராவணன் போர்க்களம் புகுந்த செய்தியை ஒற்றர் வாயிலாய் அறிந்த இராமனின் தோள்கள் பூரித்தன. போர்க்கோலம் பூண்டான் அவன். போர்க்களம் புகுந்த இராவணனோடு முதலில் போரில் இறங்கியவன் சுக்கிரீவன். கடும்போரினால் அவன் சற்றுக் களைத்த வேளையில் அவனுக்குத் தோள்கொடுக்க இடைபுகுந்தான் அனுமன். மரங்களையும் மலைகளையும் பெயர்த்து இராவணனையும் அவன் சேனையையும் தாக்கினான். பதிலுக்கு இராவணனும் மாரியென அம்புகளைப் பொழியவே அவற்றால் அலக்கண் (துன்பம்) உற்றான் அஞ்சனை மைந்தன்.

    வானர சேனையை இராவணன் துன்புறுத்துவது கண்டு அவனை எதிர்க்கவந்தான், வில்லேந்திய மேருவென விளங்கிய, இராமனின் இளவலான இலக்குவன்; வந்தவன் தன் வில்லின் நாணினைத் தெறித்து ஒலியெழுப்பவே இடிமுழக்கமொத்த அவ்வொலிகேட்டுக் கிலிகொண்டது அரக்கர்குழாம்.

    வல்லமைமிகு இராவணனும் தன்னருகில் நின்ற வீரர்களின் உள்ளம் இலக்குவனின் நாணொலியால் வேறுவேறாகி உடைந்து நிற்கின்ற தன்மையை நோக்கி, வீரனாகிய இராமனின் தம்பி இலக்குவனுடைய கூற்றுவனின் கொடும் புருவம் போன்ற வில் எழுப்பிய பேரோசையையும் கேட்டு, ”என்னே இவன் ஒரு மனிதனா!” என வியந்து, சரிந்த தன் மகுடத்தை உயரே ஏற்றிக்கொண்டான்.

    ஆற்றல்சால் அரக்கன்தானும் அயல்நின்ற வயவர் நெஞ்சம்
    வீற்றுவீற்று ஆகிஉற்ற தன்மையும் வீரன் தம்பி
    கூற்றின்வெம் புருவம்அன்ன சிலைநெடுங் குரலும் கேளா
    ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா.
    (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7159).

    இலக்குவனின் வில் வளைவை கூற்றுவனின் புருவ வளைவோடு கம்பநாடர் ஒப்பிட்டிருப்பது அரியதொரு கற்பனையாய்ப் பொலிகின்றது.

    இலக்குவனின் அம்புகளை இராவணன் இலாவகமாய்த் தடுத்து, அவன் அம்பறாத் தூணியையும் அறுத்தவேளையில், இளைப்பாறி அங்குவந்த அனுமன் பேருருவம் எடுத்து இராவணன் முன்பு நின்றான்; இராவணனைப் பார்த்து,

    ”இராவணா! உன் மார்பில் நான் குத்துகின்றேன்; அக்குத்துக்கு நீ பிழைத்திருந்தால் உன் முழுபலத்தோடு என்னை மார்பில் குத்துவாய்; உன் குத்துக்கு நான் பிழைத்திருந்தேனாகில் உன்னோடு இனிப் போர் புரியேன்” என்று சூளுரைத்தான். அதுகேட்டு வியந்த இராவணன்,

    ”பேருருவெடுத்து நெடிது நின்றோனே! தனியாய் உள்ள நீ, போராயுதம் எதுவும் உடையாய் அல்லை; அப்படியிருந்தும் வெறுங்கையால் என் சுற்றத்தார் பலரைக் கொன்றாய்; வலிமைமிகு சேனையோடு உயர்ந்த தேரின்மேல் வந்த என்னெதிரில் வந்து, உன்னுடைய ஆற்றல் ஒன்றையே கொண்டு எதிர்நிற்கின்ற உனக்கு இவ்வுலகில் உள்ளவர் யார் நிகராவார்? சொல்!” என்று அனுமனின் வீரத்தையும் பேராண்மையையும் போற்றினான்.

    ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒருநீ எனது உறவும்
    கொன்றாய் உயர் தேர்மேல் நிமிர்கொடு வெஞ்சிலை கோலி
    வன்தானையினுடன் வந்தஎன் எதிர்வந்து நின் வலியால்
    நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய்.
    (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7184)

    ’வீரனை வீரன் அறிவான்’ எனும் மொழிப்படி அனுமனின் வீரத்தை உணர்ந்து போற்றிய இராவணன், அனுமனைப் பார்த்து ”என்னைக் குத்து” என்று அவனுக்கு அனுமதியளித்தான்.

    உடனே, தன் வயிரக் கையால் அனுமன் இராவணனின் மார்பில் குத்தினான்; அக்குத்தினால் இராவணன் மார்பில் தங்கியிருந்த திசையானைகளின் தந்தங்கள் அவன் முதுகுவழியாய்ப் பொலபொலவெனக் கீழே வீழ்ந்தன. கதிகலங்கிப் போன இராவணன், தன்னுயிர் உடலைவிட்டு வெளியேசென்று மீண்டதுபோன்ற உணர்வினைப் பெற்றான்.

    மீண்டும் அனுமனின் வீரத்தைப் புகழ்ந்த அவன், ”இப்போது என் முறை; நான் விடுகின்ற குத்தைத் தாங்கிக்கொண்டும் நீ உயிர்பிழைத்து இருப்பாயாகில் நீ இன்றும் இருப்பாய்; என்றும் இருப்பாய்; உனக்கு அழிவில்லை” என்றான். இது தன்னை அறியாமலேயே இராவணன் அனுமனுக்குத் தந்த வாழ்த்தாய் அமைகின்றது. அதனைத் தொடர்ந்து அனுமனை இராவணன் தன் முழுபலத்தோடு குத்த அவனும் கலங்கிப்போனான்.

    அதன்பின்னர் இலக்குவனும் இராவணனும் மீண்டும் ஒருமுறை நேரடிப் போரில் ஈடுபடலாயினர். இராவணனின் ஆற்றல்மிகு அயன் வேலினால் தாக்குண்ட இலக்குவன் சோர்ந்தான். அவனை இலங்கைக்குத் தூக்கிச் செல்ல முயன்ற இராவணன், தூக்க இயலாமல் வெய்துயிர்க்க, அப்போது அங்குவந்த அனுமனோ தாய்க்குரங்கு தன் மகவினை எடுத்துச் செல்வதுபோல் இலக்குவனை மிக எளிதாக அவ்விடத்தினின்று தூக்கிச் சென்றான்.

    பக்தியும் அன்பும் உடையார்க்கு, இறைவன் எளியவன் என்னும்
    கருத்தை இப்பாடல் உணர்த்துகின்றது. “பத்துடை அடியவர்க்கு
    எளியவன்; பிறர்களுக்குரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
    அரும்பெறல் அடிகள்” (திருவாய்: 1:3:1) என்னும் நம்மாழ்வாரின்
    திருவாய்மொழிப் பாசுரத்திற்கு அரியதோர் விளக்க நிகழ்ச்சியாய்
    இஃது அமைந்துள்ளது. 

    போர்க்கோலம் பூண்ட இராமன் இராவணனோடு பொருதற்கு அப்போது வந்துகொண்டிருந்தான். இராமனைக் கண்ட இராவணனும் அவனை எதிர்ப்பதற்குத் தோதாய்த் தன் தேரை அவன் பக்கம் திருப்பினான். தேரின்றித் தமியனாய் வந்த இராமனைக் கண்ட அஞ்சனை மைந்தன், ”ஐய! நின்னொடு போரிடுதற்கு இராவணன் குதிரைகள் ஆயிரம் பூட்டிய தேரில் வந்துகொண்டிருக்க, நீ தரையில் நின்று அவனொடு மலைதல் ஒரு வெறுமைத் தன்மையை அல்லவோ காட்டி நிற்கும்! ஆதலால், என் தோளில் ஏறுக!” என்று வேண்டிக்கொண்டான்.

    ”நன்று…நன்று” என்று அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட கொண்டல்வண்ணனான காகுத்தன் அனுமனின் சுந்தரத் தோள்களில் அழகாய் ஏறியமர, கன்றைச் சுமக்கும் தாயென மாருதி களித்தான்; இன்பக் கடலில் குளித்தான்.

    இராமனும் இராவணனும் முதன்முறையாக ஒருவரோடொருவர் நேரடியான போரில் இறங்கினர்; இராமனின் சரமெனும் கூற்றம் இராவண சேனையில் அவனொருவனைத் தவிர மீதமுள்ளோரைக் கொன்றொழித்தது. தன் சேனையின் பிணக்குவியல் கண்ட இராவணன் அராவென வெகுண்டான். திரண்ட இரு கணைகளை இராமனின் இரு தோள்களிலும் அழுந்திப் புதையுமாறு எய்தான்.

    அப்போதும் இராமன் முகத்தில் சினக்குறி தோன்றவில்லை. முறுவல்பூத்த முகத்தினனாய், அம்புகளை எய்து அவன் இராவணன் வில்லை அறுத்தான். மற்றோர் அம்பால் மணிகள் பதிக்கப்பெற்ற இராவணனின் மகுடத்தை வீழ்த்திக் கடலில் இறுத்தான்.

    மகுடமிழந்த இராவணன் செருக்கழிந்து நாணமுற்றவனாய்க் கீழ்நோக்கிய பார்வையும் தலையும் உடையவனாய், ஒளியிழந்த முகத்தோடு போர்க்கருவிகள் இழந்த கைகளைத் தொங்கவிட்டவனாய், அதனால் விழுதுடைய ஆலமரம் போன்ற மெய்யினைக் கொண்டவனாய், அறத்தினை மீறிய தீயோர் செயல்கள் இப்படித்தான் முடியும் என உலகோர் எல்லாம் ஆரவாரமிட்டுக் கூற, தன் நிறம் பொலிவிழந்து கரிந்துபோக, கால் விரல்களால் நிலத்தைக் கிளறியவண்ணம் நின்றான்.

    அறம் கடந்தவர் செயல் இது என்று உலகுஎலாம் ஆர்ப்ப
    நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
    இறங்கு கண்ணினன் எல்அழி முகத்தினன் தலையன்
    வெறுங் கை நாற்றினன் விழுதுடை ஆல்அன்ன மெய்யன்
    . (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7184)

    போரில் தோற்று நாணி நிற்கும் பெருவீரனொருவனின் தோற்றத்தை அவ்வந்நிலைகட்கேற்ற மெய்ப்பாடுகளுடன் இப்பாடல் தெளிவாய்க் காட்டுகின்றது.

    ஆயுதமின்றிக் கைகள் இருபதும் தொங்கிக் கிடக்கும் தோற்றம் ’விழுதுடை ஆல்அன்ன மெய்யன்’ ஆயிற்று.

    அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்.
    (குறள்: 142) என்பது அறநூல் கருத்தாகலின் முன்னர் இதனைக் கூற அஞ்சிய உலகம் இப்போது இராவணனின் தளர்ச்சிகண்டு துணிந்து கூறியதால், ”அறங்கடந்தவன் செயல் இது என்று உலகெலாம் ஆர்ப்ப’ என்றார் கல்வியில் பெரிய கம்பர்.

    இராவணனின் இரங்கத்தக்க இழிநிலை கண்ட, மிக இளைய கமுக மரத்தின்மீது வாளை மீன்கள் தாவிப் பாயும் கோசல நாட்டு வள்ளலாகிய, இராமன், “சிறையிலிருக்கும் சீதையை விடுத்து, நின் தம்பியான வீடணனுக்கு ஆட்சியைக் கொடுத்து அவனுக்கு ஏவல்செய்து இருப்பாயெனில் உன்னை என் அம்பினால் கொல்லேன். அதனை நீ விரும்பாது என்னோடு போர் புரிய விரும்புகின்றாயா? அவ்வாறெனில், அரக்கரை ஆள்கின்ற ஐயா! உனக்குத் துணையாய் அமைந்த படைகள் அனைத்தும் பெருங்காற்றினால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப்போல் இப்போது சிதைந்து போயினமையைக் கண்டாய்; (ஆதலால்) இன்று உன் இலங்கை அரண்மனைக்குச் சென்று, போர்க்கு நாளை வருவாயாக!’ என இராவணனுக்கு அருள்புரிந்து விடுத்தான்.

    ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
    பூளை ஆயின கண்டனை இன்று போய்ப் போர்க்கு
    நாளை வா என நல்கினன் நாகு இளங் கமுகின்
    வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.
    (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7271)

    இராவணனின் நால்வகைப் படைகளின் அழிவிற்குப் பூளைப் பூவை ஈண்டு உவமையாக்கியுள்ளார் கம்பர். “காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடல் அரக்கர் சேனை, கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன் கோவில்” (பெரிய திரு. 4:10:6) எனத் திருமங்கையாழ்வார் மொழிந்துள்ள உவமை தம் சிந்தை கவர்ந்தமையால், அவர் மொழியைப் பொன்னேபோல் போற்றி,  “மாருதம் அறைந்த பூளையாயின”  என்று அவ் உவமையைத் தம் பாடலிலும் பயன்படுத்தியுள்ளார் கம்பர்.

    தன் மனையாட்டியை வஞ்சித்துச் சிறைவைத்துள்ள பாதகன்
    நிராயுதனாய்க் கண்முன் நிற்பது கண்டும், அவனைக் கொல்லாது, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என நவில்தல் ஒப்பற்ற உயர்பண்பாகும். இதனையே ’தழிஞ்சி’ என்கின்றது புறத்துறை.

    “அழியுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
    கழிதறுகண்மை காதலித்து உரைத்தன்று”
    (புறப், வெண்.72) என ஐயனாரிதனார் இதனைப்
    போற்றுவார்.

    இராமன் அறக்கருணையோடு ”இன்றுபோய் நாளை வா” என்று இலங்கையர்கோனிடம் கூறவும், ”திசையானைகளின் தந்தங்கள் துளைத்த மார்பும், கைலாய மலையினை அள்ளியெடுத்த வலிமிகு தோளும், நாரத முனிவனும் நன்று என்று ஏற்குமாறு சாம வேதத்தை இசைநயத்தோடு பாடிய நாவும், மாலையணிந்த மணிமுடி பத்தும், தவஆற்றல் கண்டு சிவபிரான் கொடுத்த (சந்திரஹாசம் என்ற) வாளும், தன்னைவிட்டு நீங்காதிருந்த வீரப்பண்பும் போர்க்களத்தே போட்டுவிட்டு வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டு போனான் இராவணன்” என்று அவனிழந்த தற்கிழமை, பிறிதிற்கிழமைப் பொருள்களை அற்புதமாய்ப் பட்டியலிட்டு உரைக்கின்றார் கவிச்சக்கரவர்த்தி.

    வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
    நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
    தாரணி மௌலிபத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
    வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டு போனான்.
    (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7272)

    [பா-பே: …வெறுங்கையோடு இலங்கை புக்கான்.]

    இலங்கை நோக்கி நடந்த இராவணன், எதிரில்நின்ற எவரையும் நோக்காது நிலமகளையே நோக்கியவண்ணம் தன் அரண்மனை முற்றத்துள் நாணத்தோடு புகுந்தான்.

    தன் தோல்விகண்டு வானோர் நகுவர்; மண்ணோர் நகுவர்; தான் வென்று சிரித்தற்குரிய பகைஞர் நகுவர் என்பது குறித்தெல்லாம் இராவணன் நாணவில்லையாம். வேல்போன்ற நெடுங்கண்களையும் சிவந்த வாயினையும் மெல்லிய சாயலையும் கொண்டவளும், மிதிலையில் தோன்றியவளுமான சனகன் மகள் சானகி, தன் தோல்வியறிந்தால், எள்ளி நகுவாளே என்றெண்ணியே நாணத்தால் வாடினான் அவன் என்கின்றார் மானுட உளவியலில் துளையமாடிய கம்பர்.  

    வான்நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடுவயிரத் தோளான்
    நான்நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்றுஅதற்கு நாணான்
    வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
    சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பு கின்றான்.
    (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7282)

    அப்போது இராவணனைக் காணவந்தான் அவன் தாய்வழிப் பாட்டனான மாலியவான். இராவணன் அவனிடம், ”வெள்ளம்போன்ற அரக்கர் சேனையை அழித்தபோதும், என்மீது அம்புகளைப் பொழிந்தபோதும் அந்த இராமன் முகத்தில் சினத்தின்குறி சிறிதேனும் காணப்படவில்லை; கூனியின் முதுகில் உண்டையை அடித்த செயல்போல் விளையாட்டு மனநிலையோடே அவற்றை அவன் நிகழ்த்தினான்” என்று தொடங்கி இராமனின் வில்லாற்றலை விவரமாய் வருணித்துவிட்டு, ”நாசம் வந்துற்றபோதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்று தன் பகைவனைப் புகழ்ந்தான்.

    அதுகேட்ட மாலியவான், ”அறிவிற் சிறந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாது நீ போரில் இறங்கி உனக்கும் உன் சுற்றத்துக்கும் செல்வத்துக்கும் அழிவைத் தேடிக்கொண்டாய்” என்று இராவணனைக் கடிந்துரைக்க, அப்போது அங்குவந்த இராவணனின் அமைச்சனான மகோதரன், ’இராவணனுக்குப் பயனில்லாத பேச்சுக்களை நீ பேசுகின்றாய்” என்று மாலியவானை அதட்டிவிட்டு, இராவணனைப் பார்த்து, ”வென்றவர் தோற்பதும் தோற்றவர் வெல்வதும், உயர்ந்தவர் தாழ்வதும் தாழ்ந்தவர் உயர்வதும் உலகத்தியற்கை என்பது அறிஞர்கள் கண்ட முடிபு; அவ்வாறிருக்கத் தேவரையும் மூவரையும் (மும்மூர்த்திகள்) வென்ற நீ புல்லிய மானுடரைப் புகழ்வது எதற்கு? இதன்வாயிலாய்க் கும்பகருணனின் ஆற்றலையும் அல்லவா நீ இகழ்கின்றாய்?” என்றுரைத்து மாவீரன் கும்பகருணனைப் போருக்கு அனுப்புமாறு இராவணனைத் தூண்டுகின்றான்.

    மகோதரனின் மொழிகளால் ஊக்கமும் உற்சாகமும்பெற்ற இராவணன், இராமனிடம் பெற்ற தோல்வியை மறந்து மீண்டும் போரைத் தொடரும் எண்ணங்கொண்டவனாய்க் கும்பகருணனை அழைத்துவருமாறு பணியாளரை ஏவினான்.

    அதனையேற்று பணியாளர் நால்வர் கூற்றுவனின் தூதரெனக் கும்பனின் அரண்மனையை அடைந்தனர். அவனோ அப்போது இலங்கையில் நிகழ்ந்தவை எவற்றையும் அறியாதவனாய் நீடுதுயிலில் ஆழ்ந்திருந்தான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • ஆடிமாதம் அம்மனின் மாதமாகும்!

    ஆடிமாதம் அம்மனின் மாதமாகும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                                         
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பன்னிரண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களை சிறப்பென்றும்சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது – மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன. மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம். ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியை,  சித்திரையைதையைஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம். இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகி விட்ட நிலையில்மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக்கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது! வருகின்ற ஆடியை விட்டு விட்டு விலகத்தான் எங்களால் முடியுமாமுடியவே முடியாது! நாடிவரும் ஆடி பற்றி பார்ப்போமா வாருங்கள்!

    ஆடி என்றவுடன் – ஆடிச்செவ்வாய்ஆடி வெள்ளிஆடிப்பூரம்ஆடிக்கார்த்திகைஆடித்தபசுஆடிப் பெருக்குஆடி அமாவாசைஆடி பெளர்ணமிஎன்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும். அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா?

    மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. ஆண்டாளின் திருப்பாவையும்மணி வாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகிறது. வைணவர்களும்சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதுதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய் புரட்டாசி விளங்குகிறது. ஆடி, புரட்டாசிமார்கழி இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றன அல்லவா என்று வினா எழுகிறதல்லவாஆடிபுரட்டாசிமார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான – வீடு குடுபுகுதல்திருமணம்திருமண நிச்சயார்த்தம்காது குத்தல்எதையும் செய்வதில்லை. காரணம் – இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள். மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங்களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

    சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் – தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி பயணிக்கிறார். தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தை பித்ருக்குகளுக்கு வழி பாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

    மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆடி தொடங்கி மார்கழி வரையான ஆறுமாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடிவரையான ஆறு மாதங்களும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும். வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும். தெற்கு நோக்கி சூரியன் பயணிக்கும் பொழுது வெம்பம் தணிந்து – காற்றுமழைபனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக்காலம் தேவர்களுக்கு இராக்கால மாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்கால தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி இரவின் தொடக்கம். மார்கழி விடியலின் தொடக்கம்.

    ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம். கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது. இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் – ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால்த்தானோ என்று எண்ணிட  வைக்கிறது.

    அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால்  பரவும் நோய்கள்  அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால்வேப்பிலைமஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சு வதும்அம்மனுக்கு வைத்து வழிபடுவது கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா!

    ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும் நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே. அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய் கருதி போற்றி வழிபாடுகளில் ஈடுபடு வதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.

    ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக்கயிற்றை மாற்றுவதும்அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்துக்குரியதாய் இருந்தாலும்பெரும்பாலன சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த்திருவிழாதெப்பத்திருவிழாதீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரி யாய்  கருமாரி விளங்கிறாள் அல்லவா?  சின்னக் கோவில்கள்பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடை பெறுவதும் நோக்கத்தக்கது.

    ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும், தையில் வருகின்ற அமாவாசையும், கடலில் நீராட உகந்த தினங்களாகும். தஷிணாயன புண்ணிய காலம்உத்தராயன புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.

    இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி மாதத்தில்த்தான். சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்த்தான் அவதரிக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்த்தான் என்பதும் அகமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    தையினை பொங்கல் திருநாளாய்அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்த்தான். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்த்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா?

    ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு “ஆடிச்செவ்வாய் தேடிக்குளி – அரைச்ச மஞ்சளைப் பூசிக்குளி” என்னும் முதுமொழியும் பழக்கத்தில் இருக்கிறது.

    ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம்என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள். அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்த்திரம் என்று சொன்னாலும் – இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் – பத்தாவது மாதமான சித்தியிரையில் பிரசவம் நடக்கும். சித்தியிரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு நல்லதல்ல என்னும் கருத்து சாதரணமாக சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம். வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் காலநிலை காரணமாக பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா?

    ஆடி என்றவுடன் ஆடிவேல் விழா அகத்தினில் அமர்ந்து விடும்!  எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரும் கட்டாயம் வந்து நிற்பார்.தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டுவருவதும் நாடிவரும் ஆடி அல்லவா !

    ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்த மானந்தம் தோழர்களே!
    கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

    பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
    பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
    வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
    மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

    வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
    வேலூரில் சக்கரையுங்கலந்து,
    தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
    சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

    வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
    வெல்லக் கலவையை உள்ளே இட்டு
    பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
    பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

    பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
    போட்டு மாவுண்டை பயறுமிட்டு
    மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
    மணக்க மணக்க வாயூறிடுமே

    குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
    குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
    அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
    ஆடிப் படைப்பும் படைப்போமே

    வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
    வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
    அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
    ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

    வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
    மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
    கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
    கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

    நாடிவரும் ஆடி அமங்கல மான மாதம் அல்ல! அது தெய்வீக மாதம்! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனை போற்றிக் கொண்டாடி, தோழர்களுடன் பாடி மகிழுவோம் வாருங்கள்.

    Share
  • A battery car service

    A battery car service

    Baskar Seshadri

    Young Munuswamy is basically a photographer covering various functions in Chennai and with no business activity since the days of Covid. He was looking for an employment and had found one in Kapaleeswarar Temple, Mylapore.

    Yes, he is the battery car operator that brings and drops the aged and physically challenged devotees to the temple. He makes it a point to be at the entrance of the temple at sharp nine in the morning and goes around to fetch the pilgrims.

    He goes via north mada street and move upto Ramakrishna mutt road and turn back at sangeetha to reach the temple again.

    Literally he makes around fifteen trips every day in the morning and evening.  The number of trips may go up on festival and auspicious days.

    He works upto one in the noon and drops the vehicle in Karpagambal kapaleeswarar kalyana mandapam near Sai Baba temple where the vehicle is left for charging.

    Few Years ago well before Covid, two such vehicles were donated by Sundaram Finance and one is now being used now here in the temple and the other had been sent to servicing.

    Former MLA Dr. Nataraj Inaugurated the event at that time but as temples were closed the vehicles were not used for long time. In the evening, Munuswamy Resumes work at four pm and closes the schedule at nine pm.

    The devotees are happy about this service and thank the sponsor Sundaram Finance.

    Please tell your aged friends and contacts of this service who are regulars to the temple.

    This vehicle can carry seven persons including the operator – In the meanwhile am planning to write to HRCE and the temple authorities  to get the second vehicle readied so that it can be used on South Mada and East mada streets in the days to come.

    Share
  • குறளின் கதிர்களாய் – 410

    குறளின் கதிர்களாய் – 410

    செண்பக ஜெகதீசன்

    காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
    – திருக்குறள் -122 (அடக்கமுடைமை)

    புதுக் கவிதையில்…

    அவனி வாழ்வில்
    அடக்கத்தை
    அரும்பொருளாய் எண்ணிப்
    பாதுகாக்க வேண்டும்,
    அதனைவிட மதிப்பில்
    உயர்ந்த செல்வம்
    உலகத்தில் வேறில்லை…!

    குறும்பாவில்…

    அடக்கத்தை வாழ்வில் நாம்
    அரும்பொருளாய்ப் பேணிப் பாதுகாக்கவேண்டும்,
    அதைவிட நற்செல்வம் எதுவுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    அடக்கம் என்னும் நல்லறத்தை
    அவனி வாழ்வில் அரும்பொருளாய்க்
    கடமை என்றே காத்திடுவாய்
    கண்ணாய் அதையே போற்றிடுவாய்,
    கிடைக்கும் செல்வம் பலதிலுமே
    கீர்த்தி மிக்க வேறெதுவும்
    கிடைப்ப தில்லை இதுபோலே,
    கிட்டாச் செல்வம் அடக்கமாமே…!

    லிமரைக்கூ…

    என்றும் காத்திட வாராய்
    அடக்கத்தை வாழ்வில் அரும்பொருளாய், அதனிலும்
    உயர்செல்வம் வேறிலை பாராய்…!

    கிராமிய பாணியில்…

    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    ஒலக வாழ்க்கயில
    ஒசந்த செல்வம்,
    அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்..
    ஒலக வாழ்க்கயில அடக்கமுங்கிற
    ஒழுக்கத்த பெரிய செல்வமா
    நல்ல மொறயில
    காப்பாத்தி வெச்சுக்கோ,
    அதவிட மதிப்புல
    ஒசந்த செல்வம்
    ஒலகத்தில
    வேற எதுவுமேயில்ல..
    தெரிஞ்சிக்கோ
    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    ஒலக வாழ்க்கயில
    ஒசந்த செல்வம்,
    அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்…!

    Share
  • நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பெரியாழ்வார் திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செவ்வாழை மால்ட் | வெந்தயக் களி | பிரண்டை இட்லி பொடி

    செவ்வாழை மால்ட் | வெந்தயக் களி | பிரண்டை இட்லி பொடி

    தூத்துக்குடியில் உள்ள ஃபார்மர்ஸ் ஃபுட் (Farmer’s Food) என்ற நிறுவனம், இயற்கை உணவுகள் பலவற்றைப் புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நடத்தி வரும் பூர்ணிமா விக்னேஷ், முருங்கை நூடுல்ஸ், கேரட் நூடுல்ஸ், பீட்ரூட் நூடுல்ஸ், செவ்வாழை மால்ட், வெந்தயக் களி, பிரண்டை இட்லி பொடி…. எனப் பலவற்றைத் தயாரித்துச் சந்தைப்படுத்துகிறார். இவரிடமிருந்து அண்மையில் சில பொருள்களை நாங்கள் வாங்கினோம். அவை எப்படி இருக்கின்றன எனப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பல்லாண்டு | பெரியாழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

    திருப்பல்லாண்டு | பெரியாழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

    அல்வழக் கொன்றுமிலா அணி கோட்டியர்
    கோன் அபிமான துங்கன்
    செல்வனைப் போலே திருமாலே – நானும்
    உனக்குப் பழவடியேன்
    நல்வகையால் நமோ நாராயணா என்று
    நாமம் பல பரவி
    பல்வகையாலும் பவித்திரனே – உன்னைப்
    பல்லாண்டு கூறுவனே

    பெரியாழ்வார் இயற்றிய திருப்பல்லாண்டுப் பாடலை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய விண்வெளிப் படங்கள்

    நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய விண்வெளிப் படங்கள்

    First Image of Universe: The first image of James Webb Telescope, known as Webb’s First Deep Field, is of a galaxy cluster named SMACS 0723. It contains the light from galaxies that has taken many billions of years to reach us.

    நாசாவின் மிகப்பெரும் ஜேம்ஸ் வெப் [james webb] தொலைநோக்கி அனுப்பிய முதல் தெளிவான விண்வெளிப் படங்கள்

    சி.ஜெயபாரதன்

    https://ottawa.ctvnews.ca/video?clipId=2483186&jwsource=clhttps://www.msn.com/en-us/news/others/james-webb-space-telescopes-first-color-images-revealed/vi-AAZuUBK

    https://r.search.yahoo.com/_ylt=AwrEs0d7StBiN88jmns87olQ;_ylu=c2VjA3NyBHNsawN2aWQEZ3BvcwMxMw–/RV=2/RE=1657846523/RO=11/RU=https%3a%2f%2fwww.msn.com%2fen-us%2fnews%2ftechnology%2fnasa-releases-stunning-webb-telescope-images%2fvi-AAZvBZ6/RK=2/RS=2on4sthbqAd2pflhJU9dZPXQocg-

    This landscape of “mountains” and “valleys” speckled with glittering stars is actually the edge of a nearby, young, star-forming region called NGC 3324 in the Carina Nebula. Captured in infrared light by NASA’s new James Webb Space Telescope, this image reveals for the first time previously invisible areas of star birth.

    Called the Cosmic Cliffs, Webb’s seemingly three-dimensional picture looks like craggy mountains on a moonlit evening. In reality, it is the edge of the giant, gaseous cavity within NGC 3324, and the tallest “peaks” in this image are about 7 light-years high. The cavernous area has been carved from the nebula by the intense ultraviolet radiation and stellar winds from extremely massive, hot, young stars located in the center of the bubble, above the area shown in this image.

    ++++++++++++++++++++++++++

    நாசா, ஈசா, சீசா முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் மிகப்பெரும் விண்வெளித் தொலைநோக்கியை ஏவி உள்ளன.

    Ariane 5 moments after lift-off

    NASA’s James Webb Space Telescope –
    [January 9, 2022]


    Arianespace’s Ariane 5 rocket launches with NASA’s James Webb Space Telescope onboard, Saturday, January 8th, 2022, from the ELA-3 Launch Zone of Europe’s Spaceport at the Guiana Space Centre in Kourou, French Guiana. The James Webb Space Telescope (sometimes called JWST or Webb) is a large infrared telescope with a 21.3 foot (6.5 meter) primary mirror. The observatory will study every phase of cosmic history—from within our solar system to the most distant observable galaxies in the early universe. Photo credit: NASA
    Learn about the James Webb Space Telescope | Space | EarthSkyNASA Delays James Webb Telescope Launch Date, Again - The New York TimesThe James Webb Space Telescope is a space telescope developed by NASA with contributions from the European Space Agency, and the Canadian Space Agency. The telescope is named after James E. Webb, who was the administrator of NASA from 1961 to 1968 and played an integral role in the Apollo program. Wikipedia


    Comparison of Webb with Hubble Primary Mirro
    rsமுப்பெரும் விண்வெளி நிறுவங்கள் ஒப்பற்ற ஒரு பெரும் விண்வெளி ஆய்வுத் தொலைநோக்கியை ஏவி உள்ளன.

    2022 ஜனவரி 8 ஆம் தேதி காலை 7:20 மணிக்கு, நாசா, ஈசா, சீசா [ NASA, ESA, CSA] [NATIONAL AERONAUTICAL & SPACE ADMINISTRATION, EUROPEAN SPACE AGENCY, CANADIAN SPACE AGENCY] ஜேம்ஸ் வெப் எனப் பெயர் பெறும் பெரும் தொலைநோக்கியை, [James Webb Telescope] ஈசா ஏவுதளம் பிரென்ச் கயானாவி லிருந்து ஏரியான்-5 ராக்கெட்டில் ஏந்தி, பூமியைச் சுற்றி ஆய்வு செய்ய வெற்றி கரமாக அனுப்பி உள்ளது. இப்போது இயங்கி வரும் ஹப்பிள் தொலைநோக்கி துவங்கிய அண்டவெளித் தேடலை, வெகு தூர ஒளிமந்தைகள் [GALAXIES] ஆய்வை, தூரத்து உலகங்கள் அமைப்பை, ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி தொடரும். அப்பெரும் பணிகளை உலக முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் ஒன்று கூடி, பூர்வீகப் பேபி பிரபஞ்சம், முதல் ஒளிமந்தை, நமது சூரிய மண்டலம், அண்டைச் சூரிய மண்டலக் கோள்கள் ஆகிய வற்றின் தோற்றங்களை ஆய்வு செய்ய தங்க முலாம் பூசிய 21 அடி முதன்மைக் கண்ணாடி உள்ளது..

    ஏவிய 27 நிமிடத்தில் விண்வெளி நோக்கச் சிமிழ் ஏரியன்-5 ராக்கெட்டிலிருந்து பிரிந்து, பூமியிலிருந்து சுமார் 870 மைல் [1400 கி.மீ.] உயரத்தில் பூமியைச் சுற்ற ஆரம்பித்தது. அடுத்த மூன்று நிமிடத்தில், வெப் தொலைநோக்கியின் சூரியத் தட்டுகள், விரிந்து விண்சிமிழ் சூரிய சக்தியில் இயங்கியது.

    ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி இப்போது பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தூரத்தில், பூமியோடு சேர்ந்து, ஒரு நேர் கோட்டில் சூரியனைச் சுற்றி வருகிறது.

    Webb Space Telescope

    Posted byLaura DattaroNovember 28, 2011

    On Thursday, November 17, 2011, the House and Congress came to an agreement for the fiscal year 2012 budget that includes funding for NASA and approves the full requested funding for the James Webb Space Telescope (JWST), the successor to the magnificent Hubble Space Telescope. The Webb, which came under fire in July 2011 when the House proposed cutting its funding entirely, will receive $529.6 million, the amount required for it to stay on track for its planned 2018 launch.

    Here are five cool things – which you might not know – about the JWST project.

    1. The James Webb will unfold in space. It’s being launched on an Ariane 5 rocket, provided by the European Space Agency (ESA). But because of its massive size — it’s as big as a tennis court and about 40 feet (12 meters) high — it must be folded up for the trip. Many features of the telescope, such as the hexagonal shape of the mirrors, were designed to enable the unfolding process. Check out the video below for a glimpse of how Webb’s unfolding will take place.

    2. The Webb will be nearly 1 million miles from Earth. To be exact, it’ll be 940,000 miles (about 1.5 million kilometers) from Earth.

    Webb will orbit at the Second Lagrangian Point. Credit: NASAIt’s being sent to what’s known as the L2 – the second Lagrangian point in the Earth/sun system. The Lagrangian points are named for Joseph Louis Lagrange, who realized that there would be stable or semi-stable points in the vicinity of every two orbiting bodies in space. In other words, every time you have two orbiting bodies, you also get five Lagrangian points. At these points, a third body can maintain a relatively stable orbit without the heavy usage of thrusters and propellants. In this case, the sun and Earth are the two bodies in space. The Webb Telescope will orbit the L2 point in the Earth/sun system, which means it will follow Earth around the sun, always in a straight line with the Earth and sun. Its orbit will be far from Earth – beyond the moon’s orbit. For comparison, the Hubble Space Telescope is 380 miles away in low Earth orbit.

    3. The Webb Telescope’s 18 mirrors are coated in a thin layer of 24-karat gold. Webb’s purpose is to read infrared light, the wavelength of light that is emitted by the farthest objects in the universe. Gold reflects red light better than other materials, making the mirror 98 percent reflective, rather than the 85 percent achieved by ordinary mirrors.

    Webb4. The Webb Telescope’s science instruments will operate at temperatures near absolute zero, the theoretical temperature at which all molecular and atomic motion ceases.

    WebbEverything that exists emits infrared radiation, which is produced from the vibration of atoms. The colder something is, the less infrared it emits. Because Webb is designed to work in the infrared, but emits infrared itself, it must be kept as cold as possible to keep its interference with itself at a minimum. Webb’s massive sunshield divides the telescope into a hot side, with temperatures around 185 degrees F, and a cold side, around -388 degrees F, or 40 Kelvin. In contrast, the coldest temperature ever recorded on Earth was -129 degrees F.

    5. Planning for the Webb telescope began in 1995. Just five years after Hubble launched, scientists at the Space Telescope Science Institute (STScI) in Baltimore, Md., first envisioned what its successor would look like, knowing it would take many years to bring this vision to fruition. Now the Webb is scheduled to be launched in 2018, and it’s a safe bet that astronomers soon will begin imagining an instrument to extend our vision with a telescope even grander and more powerful than the Webb.

    For more information about the ‘scope and its science, visit its web site, or check out STScI on Facebook.

    Budgets for NASA and James Webb Space Telescope still undecided

    Webb Telescope instrument passes test to withstand space rigors

    https://www.theguardian.com/science/2021/dec/20/james-webb-space-telescope-mission-ready-christmas-eve-launch#:~:text=The%20observatory%20will%20probe%20the%20atmospheres%20of%20distant%20planets%2C%20looking%20for%20molecular%20conditions%20that%20could%20sustain%20life

    Illustration of the James Webb Space TelescopeAn artist’s view of the James Webb Space Telescope

    A rendering of the James Webb Space Telescope with its components fully deployed.
    NAMES Next Generation Space Telescope (NGST; 1996–2002)
    MISSION TYPE Astronomy
    OPERATOR STScI (NASA)[1]
    COSPAR ID 2021-130A
    SATCAT NO. 50463[2]
    WEBSITE Official website
    MISSION DURATION 10 years (planned)15 days (elapsed)
    SPACECRAFT PROPERTIES
    MANUFACTURER Northrop GrummanBall AerospaceL3Harris[1]
    LAUNCH MASS 6,161.4 kg (13,584 lb)[3]
    DIMENSIONS 20.197 m × 14.162 m (66.26 ft × 46.46 ft), sunshield
    POWER kW
    START OF MISSION
    LAUNCH DATE 25 December 2021, 12:20 UTC
    ROCKET Ariane 5 ECA (VA256)
    LAUNCH SITE Centre Spatial GuyanaisELA-3
    CONTRACTOR Arianespace
    ORBITAL PARAMETERS
    REFERENCE SYSTEM Sun–Earth L2 orbit
    REGIME Halo orbit
    PERIAPSIS ALTITUDE 250,000 km (160,000 mi)[4][5][failed verification]
    APOAPSIS ALTITUDE 832,000 km (517,000 mi)
    INCLINATION 4.0560[2]
    PERIOD 6 months
    MAIN TELESCOPE
    TYPE Korsch telescope
    DIAMETER 6.5 m (21 ft)
    FOCAL LENGTH 131.4 m (431 ft)
    FOCAL RATIO f/20.2
    COLLECTING AREA 25.4 m2 (273 sq ft)[6]
    WAVELENGTHS 0.6–28.3 μm (orange to mid-infrared)
    TRANSPONDERS
    BAND S-band, telemetry, tracking, and controlKa-band, data acquisition
    BANDWIDTH S-band up: 16 kbit/sS-band down: 40 kbit/sKa-band down: up to 28 Mbit/s
    INSTRUMENTS
    FGS-NIRISSMIRINIRCamNIRSpec
    ELEMENTS
    Integrated Science Instrument ModuleOptical Telescope ElementSpacecraft (Bus and Sunshield)
    James Webb Space Telescope mission logo

    தகவல் :

    1. https://en.wikipedia.org/wiki/James_Webb_Space_Telescope
    2. https://www.space.com/nasa-james-webb-space-telescope-launch-success
    3. https://www.nasa.gov/press-release/nasa-sets-coverage-invites-public-to-view-webb-telescope-launch
    4. https://www.bbc.com/news/science-environment-59419110

    S. Jayabarathan [July 14, 2022] [R-1]

    Share
  • ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்ய வேண்டுமா?

    ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்ய வேண்டுமா?

    குரு பூர்ணிமா அன்று, பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் நடைமுறை, அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. குரு வந்தனம் என்ற பெயரில் முக்கிய சடங்காக இது இடம் பெற்றுள்ளது. இது சரியா? மரியாதையை இப்படித்தான் காட்ட வேண்டுமா? ஓய்வுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நிர்மலா ராகவன் அவர்களுடன் ஓர் உரையாடல். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்

    அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்

    துப்புடையாரை அடைவதெல்லாம்
    சோர்விடத்து துணை ஆவர் என்றே!
    ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்!
    ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
    எய்ப்பு என்னை வந்து நலியும்போது
    அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
    அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
    அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

    என்ற பெரியாழ்வார் திருமொழியை நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவைச் சேர்ந்த நீலமேகம் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வரவேண்டும் வரவேண்டும் | ஞானானந்த கிரி

    வரவேண்டும் வரவேண்டும் | ஞானானந்த கிரி

    இன்று குரு பூர்ணிமா. தபோவனம் ஞானானந்த கிரி சுவாமிகளைக் குருவாய் வணங்குவோர் பலர். அவரைப் பற்றி, திருமதி மங்களம் சங்கரநாராயணன் இயற்றிய ‘வரவேண்டும் வரவேண்டும்’ என்ற பாடலை அவர் புதல்வர் கிருஷ்ணகுமார் இங்கே பாடுகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ப்ரியா கல்யாணராமன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    ப்ரியா கல்யாணராமன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    குமுதம் ஆசிரியராக, புகழ் பெற்ற எழுத்தாளராக விளங்கிய ப்ரியா கல்யாணராமன், அண்மையில் தமது 56ஆவது வயதில் மாரடைப்பால் மறைந்தார். அவருடன் நெருங்கிப் பழகிய ஓவியர் ஸ்யாம், தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரம் சுவரோவியங்கள்

    தாம்பரம் சுவரோவியங்கள்

    தாம்பரம் மேம்பாலச் சுவர்களை அலங்கரிக்கும் அழகு திகழும் ஓவியங்கள் இதோ. கல்லூரி மாணவர்களின் கைவண்ணம், கலை வண்ணமாக மிளிர்வதைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share