கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ‘கறவைகள் பின்சென்று’ என்ற பாடலைப் புதிய மெட்டில் பாடி ஆடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். சென்னை, திருநீர்மலையில், நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவின் இசைத் தொண்டு.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *