Blog

  • அன்புசிவ வெண்பாக்கள்

     

    கிரேசி மோகன் 

    Lord Shiva HD Wallpapers 6

    காப்பு
    ——–
    பழமளித்த தந்தை புரமெரித்த போது12056_468338519868554_1663975219_n
    தொழமறக்க தேர்கால் துணித்த -அழகா
    தளைதட்டா வெண்பாக்கள் தந்ததில் பக்திக்
    களைகட்ட கற்பகச்சேய் காப்பு….03-07-2011
    ————————————————————-
    நூல்
    ——-

    அப்பர் தமிழ்கேட்டு வெப்பக் களவாயை
    அப்பிய சந்தனமாய் ஆக்கியோய் -தப்பில்
    குதியிட்டுத் தாழ்ந்தேன் மதியில் சதங்கை
    ஜதியிட்டுத் தாண்டவ மாடு….(1)

     
    அசையும் உயிரில் அசைவாய் இருந்து
    அசையாது நிற்கும் அரனே -அசைந்து or இசைந்து
    பசையாய் இடபாகம் பற்றிய உமையும்
    அசைந்திடத் தாண்டவ மாடு….(2)

    எண்ணாத போதிலும் எண்ணும் எழுத்துமாய்bhimashankar jyotirling famous shivaji temple at india pictures
    உண்ணா முலைசமேத ராகஉந்தன் -முன்னாலே
    அண்ணா மலையான் அடியெடுத்து வைத்திடுவான்
    பின்னாலே நீசுற்றும் போது….(3)….02-04-2008

     
    இல்லையென்று சொல்வோர்(கு) இயம்ப பதிலில்லை
    தில்லையில் என்வீட்டுத் திண்ணையில் -இல்லையேல்
    கொல்லையில் நான்மட்டும் காண்பதற்கு இல்லையென்று
    சொல்லாது தாண்டவம் ஆடு….(4)

     
    இல்லம் புகந்தன்று பிள்ளைக் கறியுண்டு
    வெள்ளை மனச்சிறுத் தொண்டர்தம் -உள்ளத்தை
    சோதித்த ஆண்டவா சொக்கநாதா என்நெஞ்சில்
    தாதித்தை தாண்டவம் ஆடு….(5)

     
    கால்கட்டு சுந்தரர்க்கு கைகட்டு போட்டவரின்
    மால்கட்(டு) அவிழ்த்த மகாதேவா -நூல்கட்டிMallikarjuna_ShivLing_500x375
    ஆட்டுவிக்கும் அம்பலனே ஆடுமிந்த பொம்மையை
    ஆட்படுத்த தாண்டவம் ஆடு….(6)

    காளை அமர்ந்தோனுன் காலைப் பணியுமென்
    வேளை வரவேண்டும் வெண்பாவில் -காளமேகம்
    போலாக்கு முத்தமிழில், நின்புகழை முப்புரி
    நூலாக்கிப் பூணுமென் நெஞ்சு….(7)….23-1-2009

    நஞ்சானால் நெஞ்சில் நதியானால் நீள்முடியில்
    மஞ்சானால் மாகயிலை மாடியில் -பஞ்சானால்
    தீக்கண் புகுந்தேனும் தீய்ந்திடுவேன் ஏனெதற்கு
    போக்கத்துப் போனேன் பிறந்து….(OR)
    போக்கத்த மாயப் பிறப்பு….(8)….23-1-2009

    தலைப்பிள்ளை ஆறு தலைப்பிள்ளை சூழOMKARESHWAR2-18082011-052309._omkareshwar-jyotirlinga-shiva-temple-khandwa-mp
    மலைப்பெண் மதங்கர் மகளோ(டு) -அலைப்பெண்
    கலைப்பெண் சமேத கயிலைக் குடும்பி
    முளைத்தென் மனதில் மலர்….(9)….23-1-2009

    நீறாணை காற்று நிலமனல் நீள்விசும்பு
    நீரானைப் போற்றி நெகிழ்ந்திட -நீராணை
    இட்டால் நினக்குள்ளே கட்டாயம் வந்திடுவான்
    பிட்டால் சுமந்தான்மண் பண்டு….(10)….23-1-2009

    அம்போவென்(று) என்னை அகிலத்தில் ஆடவிட்ட
    சம்போ மகாதேவா சிந்திப்பாய் -உன்போல்
    மனையாள், இரண்டு மகன்கள் பெற்ற
    இணையாம் எனக்கேன் இழிவு….(11)….22-1-2009

    எனையாளும் ஈசா எனதுயிர் ஸ்வாசா
    வினையாள லாமோசர் வேசா -துணையாவாய்Mahakal_Ujjain
    மன்றாடிக் கேட்கின்றேன் மாயப் பசிநீக்கி
    அன்றாடங் காய்ச்சிக்(கு) அருள்….(12)….22-1-2009

    சுகம்தரும் சொல்லை சிவனென்று கண்டேன்
    புகலெனெக்(கு) உந்தனிரு பாதம் -பகலிரவாய்
    தொந்திரவு செய்வேன் திருவருள் கிட்டிட
    உன்தயவு ஒன்றே உரம்….(13)

    தில்லை சபேசா திகம்பர வேஷாகேள்
    இல்லை பணிவென் இதயத்தில் -வள்ளலே
    வாயென்மார் மீதேறி வாலையுடன் வந்தாடி
    நாயன்மா ராக நிமிர்த்து….(14)….21-1-2009

    விடையவரே கேளும் வினாவினை தீ£ரும்trayambakeshwar-jyotirlinga-2
    அடைய முடியவில்லை ஆன்மா -தடையாய்
    மனம்நெஞ்சு மூளை மதியுள்ளம் என்று
    பிணம்தின்னும் பஞ்சவரைப் போக்கு….(15)….21-1-2009

    பனிமலை வாசா பரசிவ வாச
    முனிமன நேசா மஹேசா -இனிவரை
    காத்திருக்கும் என்னுள்ளே காத்திருக்கும் போதேநீ
    தூத்திவிடு தேடல் திளைப்பு….(16)….21-1-2009

     
    கண்ணாலே முப்புரத்தைக் காமனைத் தீயிட்ட
    அண்ணா மலையுன் அடிமுடியை -எண்ணிலேன்
    முப்புறமும் காமத்தில் மூழ்கியயித் தீயோனை
    அப்பனே ஆதரித்(து) ஆற்று….(17)

     
    கழுதை மனமே பழுதைச் சுமந்துthe temple of india  maharastra at  grishneshwar jyotirling  photo gallery free download
    பொழுதைக் கழித்தது போதும் -தொழுது
    வணங்கிட பார குணங்களை ஏற்பான்
    அணங்கை சுமக்கும் அரன்….(18)

    மண்சுமந்து பிட்டுக்குப் புண்சுமந்தாய் மேனியில்முக்
    கண்சுமந்து கந்தனைக் கண்டெடுத்தோய் -பெண்சுமந்த
    பாகத்தோய் நஞ்சுண்ட தாகத்தோய் என்நெஞ்சில்
    ஆகமத் தாண்டவம் ஆடு….(19)

     
    முடவனன்று வேண்ட தடதடவென்(று) ஓடி
    குடமுழுக்(கு) ஆடிய கும்பேசா -விடமுண்டோய்
    ஆடை கரித்தோல் அணிந்தெனது நெஞ்சமாம்zzzevaijnath9
    மேடையில் தாண்டவம் ஆடு….(20

    நாம்நமதை விட்டு நமச்சிவாய நாமத்தை
    ஒம்நமஹ சேர்த்தென்றும் உச்சரிப்போர் -காமமதை
    வென்றிடக் கைகொடுக்கும் விஸ்வேசா என்நெஞ்ச
    மன்றிடைத் தாண்டவம் ஆடு….(21)

    நாரதன் தும்புரு நந்தி மிருதங்கம்
    பாரதி வீணை பயின்றிட -வாரிதி
    வானைப் பிடித்திட வையம் அறிந்திட
    தாணுவே தாண்டவம் ஆடு….(22)

     
    நாவாரப் பைந்தமிழில் தேவாரப் பிள்ளைக்குப்
    பாவூற வைத்த பரமசிவா -பூவாரம்
    கொன்றையும் கங்கையும் கொண்டையில் சூடியோய்
    என்றென்முன் தாண்டவம் ஆடு….(23)

    lord-shiva-31v
    ஒருமுறை யேனும் அருணா சலத்தை
    கிரிவலம் செய்யக் கிடைக்கும் -கருவினில்
    தோன்றி இடுகாட்டில் தூங்கும் பரிட்சையைத்
    தாண்டிக் கயிலாயத் தேர்வு….(24)

     
    பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
    அதிகாரம் செய்த எமனை -குதிகாலால்
    எட்டி உதைக்க எழுந்த பதமென்மேல்
    பட்டிடத் தாண்டவம் ஆடு….(25)

     
    பெரிய புராணம் படித்தறி யேனேimages (4)
    நரியைப் பரியாக் கியவா -இறைவாநான்
    நாயன்மார் ஆகிஉன் நாமம் ஜபித்திட
    நீயென்மார் தாண்டவம் ஆடு….(26)

     
    பிரிவோடு வாழ்ந்த திருநீல கண்டன்
    உறவோடு சேர உகந்தோய் -திருவாரூர்
    த்யாகேசா தில்லை நடராசா நெஞ்சத்(து)
    ஆகாசம் தாண்டவம் ஆடு….(27)

     
    பூசலா நாயனாரின் மாசிலா நெஞ்சத்து
    வாசியாக கோயில் வளர்த்தோய் -காசிக்கு
    வந்துன்னைக் காண்போரை வாழ்விப்போய் என்நெஞ்சில்images (3)
    தந்தனத்தோம் தாண்டவம் ஆடு….(28)

     
    தவக்களை வாயினால் தத்துவம் பேசி
    சவக்களை ஆனது சிந்தை -தவக்களை
    வீச இமயத்தே வீற்றோய் எனக்கருள்
    ஓசை அடங்கிய ஓம்….(29)

     
    தேனீக்குப் போட்டியாய் மாணிக்க வாசகன்தன்
    ஆணிப்பொன் பாக்கள் அருந்தியுந்தன் -தீவிக்கும்
    கண்டத்து நஞ்சை அமுதாக்கிய சங்கரா
    பண்டைஊழ் தாண்டவம் ஆடு….(30)

    bhimashankar jyotirling famous shivaji temple at india pictures
    விழிமலர்த் தூவி வழிபட்ட வேடன்
    அழிவிலா நாயன்மா ராக -வழிவகுத்தோய்
    நானார் அறிந்திட நீயென்னுள் ஆனந்தக்
    கோனாராய் தாண்டவம் ஆடு….(31)

    அறையாய் உமைக்கு அரையை அளித்த
    அரனே அடியார்க்(கு) அரணே -அறமே
    பொருளே சுகமாம் பயனே பரமே
    மருளே வராது மகிழ்த்து….(32)….23-1-2009

     

    மாசில் வீணையும் பாதிப்பில்
    ————————————-

    சங்கீதம் சந்திரன் சாத்வீக மாருதம்images (7)
    இங்கிதம் கூட்டும் இளவேனில் -தங்கித்தேன்
    தின்னும் கருவண்டின் தீர்த்தக் கரையாம்முக்
    கண்ணன்தன் சீதக் கழல்….(OR)
    கண்ணன் குளிர்ந்த கழல்….(33)….24-1-2009

    கொழிக்கும் புலனைவர் கூட்டத்தின் கொட்டம்
    அழிக்கும் கடவுளே அன்பாய் -விழிக்கும்
    சிவனே உமையாள் கவனம் தவிர்த்து
    இவனே கதியென்(று) இரு….(34)

    முதற்பிள்ளை நெஞ்சில் நுதற்பிள்ளை கண்ணில்
    சதிர்க்கென்று மேனியில் சக்தியுமை -முதற்குன்றாம்images (8)
    வெண்வரை வாசா வறியவனென் வாய்மூட
    மந்திர மானது நீறு….(35)….24-1-2009

    கொழிக்கும் புலனைவர் கூட்டத்தின் கொட்டம்
    அழிக்கும் கடவுளே அன்பாய் -விழிக்கும்
    சிவனே உமையாள் கவனம் விலக்கி
    இவனே கதியென்(று) இரு….(36)….24-1-2009

    கூத்தபிரான் தீமையைத் தீர்த்தபிரான் தென்முகம்
    பார்த்தபிரான் வாமபாகம் பார்வதியை -சேர்த்தபிரான்
    தீர்த்தபிரான் வெண்ணீறால் நீர்த்தபிரான் (OR) ஆனைத்தோல் போர்த்தபிரான் அன்புக்குத்
    தோற்த்தபிரான் சேவடி தொழு….(37)….17-2-2009

    ஆடிய பாதன் அயன்மால் அடிமுடி Mahakal_Ujjain
    தேடிய பாதன் திருவிளை -ஆடிய
    பாதன் அடியவர் பேதம் அறுத்திடும்
    நாதன் திருவடி நண்ணு….(38)….16-2-2009

    கூடலில் சொக்கேசன் ஆடலில் அம்பலத்தோன்
    பாடலில் நாயன்மார் பண்ணாவான் -தேடலில்
    தென்முகம் நோக்கித் தவம்செய்யும் நாயகனின்
    பன்முகம் எண்ணாநாள் பாழ்….(39)….17-2-2009

    வெளுத்த உடலும் வரிப்புலித் தோலால்
    வளைத்த இடைவாழ் வனப்பும் -திளைத்த
    இமய மலையில் இமைகள் குவித்து
    அமையும் அரன்தொழில் அன்பு….(40)….17-2-2009

    கைவல்யம் கேட்கிலேன் கைலாசம் வேண்டிலேன்images (11)
    பொய்மல்கும் வாழ்விலாடி பிம்பமாய் -செய்யென்னை
    தெய்வமே தேசிகா உய்ய உபதேசம்
    செய்வாயா சங்கரா செப்பு….(41)….17-2-2009

     
    துன்மார்கப் பாதையில் அந்தக னாய்ச்சென்று
    கண்வேர்த் திடநான் களைப்புற்றேன் -சன்மார்க
    பந்துவே சங்கரா ஈசான்ய மூலைக்கு
    வந்தென்னைத் தள்ளி விடு….(42)

     
    வரத்தினால் பூமிக்கு வல்லூறாய்ப் போன
    மருத்துவனைக் காலால் மிதித்தோய் -சிறுத்தimages (10)
    விகார அகந்தை விலகதிரு வெண்கா
    அகோரமூர்த்தி

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
    நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
    தாயுமாவான் தந்தை தவித்து….(44)….10-3-2009

    ஆர்வம் முறுக்கிட ஆசை கிழித்திட
    போர்வை மனது பலநூறு – நார்நாராய்
    கந்தையா னாலும் கசக்கிக் கட்டிட
    புந்தியை ஈசா பிழி….(45)

    சம்பந்த அண்ணனும் கம்பத்து பிள்ளையும்shiva-statue-nageshwar-jyotirlinga-temple-dwarka
    அம்பைஉண் ணாமுலையும் சூழ்ந்தாலும்-நம்பந்தம்
    நீக்கிடுவான் ஸ்ரீரமணர் ஆக்கிடுவான், நானொழிய
    ஆக்கிரமித்(து) ஆள்வான் அரன்….(46)….24-03-2008

    கண்ணாலே முப்புரத்தைக் கற்பூரம் ஆக்கிய
    அண்ணா மலையுன் அடிமுடியை-எண்ணிலேன்
    முப்புறமும் காமத்தில் மூழ்கியயித் தீயோனை
    அப்பனே ஆதரிப் பாய்….(47)….25-03-2008

    மதுரை மதர்-அரவிந்தர் சொஸைடிக்கு செல்கையில்
    —————————————————————-

    அச்சம், அசூயை, அகங்கார, ஆணவ
    எச்ச மிகுதியால் இவ்வுலகில் -அச்சனே!
    பொய்யில் எழுதும் புலவன் எனக்குன்மெய்
    செய்யுள் எழுதுசொக் கா….(48)….17-9-2010

    விட்டலனைப் போல்மதுரை வீதி விளையாடி
    பிட்டலைந்து தின்று பிரம்படி -பட்டவனேtumblr_ljtqdfVCcs1qf0agqo1_r1_500
    எக்களங்க மும்வாரா ஏற்றம் எனக்குவர
    சொக்கலிங் காயென்சொல் கா….(49)….17-9-2010

    இரா.முருகனுக்கு எழுதியது
    ————————————-
    எந்தையே உந்தன் இரண்டாம் மகனுனக்கு
    முந்தை ஒருநாள் உபதேசம் -தந்தனன்
    அந்த முருகன் இராமுருகன் ஆகிட
    சிந்தைகொள் சங்கரா சட்னு….(50)….23-1-2009

    கோளரி கோவிந்தன் நூலறி நான்முகன்
    தாளறி தோளறியா தோற்றத்தில் -தீயெரி
    வெற்பாய் வளர்ந்தோய் வணங்குகிறேன், பத்தினி
    கற்பாய் இருந்தளி காப்பு….(51)….24-1-2009

    பெண்ணுமை பாகனே கண்ணுதல் நாயகா
    ஷண்மத ஸ்தாபகா சங்கரா -தண்மதி
    பாகீ ரதிசூடும் நாகா பரணனே
    தேஹி பவதி பிட்சாம்….(52)….28-1-200912056_468338519868554_1663975219_n

    போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்
    மோகம்போம் மூர்கம்போம் மும்மலம்போம் -நாகம்பூண்
    நஞ்சுண்ட நாதனை நன்ணும் அடியார்க்கு
    நெஞ்சுண்ட நோய்கள்போம் நீர்த்து….(53)….17-2-2009

    கலைகங்கை நாகம் கமழ்கின்ற கொன்றை
    மலைமங்கை கொண்டமகா தேவன் -நிலையை
    சிவராத் திரியன்று சிந்தித்(து) இருப்போர்க்கு
    கவிராத் திரிபகலும் காண்….(54)….23-2-2009
    மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….(55)….10-3-2009

    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….(56)….10-3-2009shiv parivar-3r

    ஏகனை தேவியுமை பாகனை தீந்தமிழ்ப்
    பாகனை தேவார ராகனை -நாகணை
    தேகனை நற்றவர்தம் யூகனை நந்திஹேச
    வாகனனை வாயாற வாழ்த்து….(57)….5-4-2009

    ரிஷப வாகனத்தன்று எழுதியது
    —————————————–

    மாடமர்ந்த கற்பகமும், கோடொடிந்த பிள்ளையும்
    ஆடகச் செம்பொன் அழகனும் -கூடவர
    வீடுவிட்டு வேடிக்கை மாடவீதி பார்க்கின்ற
    தோடுதொட்டக் காதனைத் தொழு….(58)….5-4-2009

    பாகீ ரதியைப் பிறைமான் மழுவினைom_namah_shivaya-god-825
    பாகீ சதியுடன் தாங்கிடும் -த்யாகேசா
    வாகனம் வாயில்லா ஜீவன் வதையுறுமே(or)
    வாகனக் காளையின் வேகம் குறையுமே
    நீகனம் ஆனதே னோ….(59)….5-4-2009

    பிக்ஷாடணர் அன்று எழுதியது
    ————————————-
    மெய்யடி யார்கள் மிகுந்த மயிலையில்
    ஐயம் உனக்கேன் அமுதீசா -ஐயம்
    விடுத்து எடுப்பாய் தொடுத்தமலர் மாலை
    இடத்து உமைதோள் இட….(60)….8-4-2009

    திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ்
    —————————————————-
    செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
    கல்யாணம் செய்தவன் கைத்தலம் -செல்லும்
    தினம்நாளை சேர்வீர் திருமயிலா பூருக்கு
    இனம்ஜாதி இல்லை இதற்கு….(61)….8-4-2009images (12)

    கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
    நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
    வேதியர் மாலயன் வானோர் குழுமிட
    பாதியில் பாதி பிணைந்து….(62)….9-4-2009

    அன்னைக்கு தந்தைக்கு அர்த்தமதன் சொல்லுக்கு
    புன்னைக்கு பூங்கொடி பெண்ணுக்கு -இன்னைக்கு
    கையோடு கைகோற்கும் கல்யாண உற்சவம்
    மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு….
    மொய்யெழுத வாரீர் முனைந்து….(63)….9-4-2009

    குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்றுunnamed
    சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
    வாயாறக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
    நோயாறிப் போகும் நொடித்து….(64)….9-4-2009

    திருவாதிரை அன்று எழுதியது
    —————————————
    பாதியுறை பார்வதி பங்கனுக்(கு) இன்றுதிரு
    ஆதிரை நன்நாள் அனைவரும் -ஆதியிறை
    தில்லை நடேசன் திருவடி நாடிடுவீர்
    கொல்லையில் பூக்கும் களிப்பு….(65)….22-12-2010

    மதுரை பேராசிரியர் ஞானசம்பந்தன் ஈற்றடிக்கு
    ———————————————————–

    பாலமார் கண்டன் பதினாறாய் வாழ்வதற்கு
    காலன் உயிர்குடித்த காளியின் -காலெனக்கு
    ஏதானால் நானும்தான் எத்துவேன் கூற்றினை
    பாதியின் பாதியளிப் பாய்….(66)….

    N.C.ஸ்ரீதர் காளஹஸ்தி பிரார்த்தனைக்குimages (13)
    ————————————————-
    மூளத்தீ முப்புரத்தை மூழ்கடித்த முக்கண்ணா
    காளத்தி நாதரே, கண்ணப்பன் -காலொத்திக்
    கண்ணைக் கொடுத்த கருணைக்கு நாயன்மார்
    சின்னம் அளித்தோய் சரண்….(67)….07-05-2011

    சடையில் குளிர்ந்த ஜலமும் கலையும்
    இடையில் இமவான் மகளும் -உடலில்
    களபம் அரனே, கதகதப்பாய் எந்தன்
    உளப்பாவத் தீக்குள் ஒதுங்கு….(68)….28-01-2010

    ஒதுங்கி இருந்து ஒருகாலில் தங்கச்
    சதங்கை அணிந்து சபையில் -மதங்க
    மகளிணைந்து ஆடும் மகாதேவன் பாதத்
    துகளணிந்து நெஞ்சே துலங்கு….(69)….30-07-2011images (14)

    துலங்குவெண் நீறு துனிப்பிறைக் கோடு
    இலங்க ஜதியின் இசைக்கு -மலங்க
    விழித்துமையாள் மண்பார்த்து வெட்க அரவக்
    கழுத்தரனின் கூத்தே களிப்பு….(70)….30-07-2011

    களியா திரையோன்தென் கல்லால் இறையோன்
    வளிவான் நதிமதி வேய்ந்தோன் -புலியா
    சனத்தில் அமர்ந்து சுகத்தில் திளைப்போன்
    மனத்துப் பிணிக்கு மருந்து….(71)….30-07-2011

    மருந்தவன் நீறு விருந்தவன் நாமம்
    அருந்தவன் ஆடல் அழகு -பெருந்தவம்
    சும்மா இருந்தந்த சோணா சலன்நினைவில்
    உம்மால் முடிந்தவரை உன்னு….(72)….31-07-2011images (15)

    உன்நுதற் கண்கொண்டு உற்றெனைப் பார்த்திடு
    என்னிதய காமன் எரிந்திட -பின்னதை
    நெற்றியில் பூசிடு நீறாய், நிகழ்ந்திடும்
    வெற்றிக் குமாரசம்ப வம்….(73)….31-07-2011

    வம்புக்(கு) இழுத்திடு வாயாடி கீரன்போல்
    சம்புயெதிர் வந்துன்னை சந்திப்பான் -நம்பிதை
    காட்டில் எரிதலினும், பாட்டால் பொசுங்கிட
    ஏட்டிலுன் பேரிருக்கு மே….(74)….31-07-2011

    மேய்ந்து மகளிர் முலைபற்றி மந்தமாய்
    சாய்ந்து கிடக்காதே சோம்பேறி -பாய்ந்துimages (16)
    வருகங்கை வீச்சை விரிகுழல் ஏந்தி
    தருசங் கரன்தாள் தழுவு….(75)….31-07-2011

    தழுவுசிவ மார்கம் கழுவுபவ ரோகம்
    மழுவுமான் ஏந்தும் மஹேசன் -குழுவில்
    அடியார்க்(கு) அடியாராய் ஆகும் பணிக்கு
    துடியாய்த் துடித்தல் தவம்….(76)….31-07-2011

    தவமெதற்கு தான தருமம்தான் ஏனோ
    சிவமிருக்க சிந்தையில், ஜீவன் -அவமனைத்தும்
    சூரியன்தன் முன்தோன்றி சூம்பிப் பனியுருகி
    நீரிழந்த ஆவி நிலைப்பு….(77)….31-07-2011

    நிலைப்படியில் நின்று நமனழைக்கும் நேரம்
    குலப்படிப்பு கோத்திரங்கள் கூறி -களைப்படையாய்
    மார்கண்டன் ஆர்த்தநஞ்சு நீர்கண்டன் பேர்சொல்ல
    பார்கண்டம் போகும் பணிந்து….(78)….31-07-2011

    பணிந்தாய் பதர்முன் குனிந்தாய் குதிர்முன்1780843_587204171369869_249422305_n
    துணிந்தாய் எளியோரைத் தூற்ற -மனிதா!
    கனிவாய் திருவல்லிக் கேணியோன் சொன்ன
    பணிருத் திரத்தைப் பழகு….(79)….31-07-2011

    பழகப் புளிக்கும் பெரும்பாலும் காமம்
    அழகின் கதியும் அதேதான் -முழுகு
    சிவாய நமவென்ற சிந்தையில் நாளும்
    அவாவைம் புலன்கள் அழிவு….(80)….31-07-2011

    அழிப்பது போலிருக்கும் ஆனால் அவனோ
    கழித்தபின் கூட்டும் கணக்கன் -ஒழித்த
    உயிரைப் பெருக்கி உலவவிட்டு ஆன்ம
    பயிரை வகுக்கும் பரம்….(81)….31-07-2011

    பரம்பரை கர்வம், பணத்திமிர், மோகம்
    இரும்பினில் நாரெடுக்கும் இன்பம் -புரம்தனை
    தீக்குள் தொலைத்தவனை பாக்குள் பிடித்திடும்
    சாக்கில் சிவத்தை சுகி….(82)….31-07-2011

    சுகம்பிறக்கும் முன்னால், அகம்சுரக்கும் பின்னால்images (4)
    இகம்பரத்தை ஈர்க்கும் இயல்பாய் -யுகம்பொருத்து
    சொக்கனாய், சங்கரனாய், சுந்தரனாய்த் தோன்றிய
    முக்கண்ணன் ஈசனை மொய்….(83)….01-08-2011

    மொய்யெழுதப் போனவன் மாப்பிள்ளை, தன்பெயரை
    கையெழுத்துப் போடாதோன் கல்விமான் -தையெழுங்கால்
    மட்டுமல்ல ஈசனருள் கிட்டுமா யின்நிற்கும்
    எட்டுவித சித்தி எதிர்….(84)….01-08-2011

    எதிர்படும் கூற்றின் எருமை மிரளும்
    விதிர்த்தகுப்தன் ஏடு வதங்கும் -குதித்த
    மறலிக்கை பாசம் மருக்கொழுந்தாய் வீசும்
    திறலக்கை ஈசன் தயை….(85)….01-08-2011bhimashankar jyotirling famous shivaji temple at india pictures

    தயாபரன், கங்கை மயானத்தில் செல்வோர்
    பயாஅபயம் போக்கப் பரிவாய் -கயாபுரத்து
    விஸ்வநாதன் கர்ணத்தில் வாசிக்கும் மந்திரத்தால்
    பஸ்மமாகும் செத்தோர் பிறப்பு….(86)….01-08-2011

    பிறப்பறுக்கும் நூலோன், மறக்கடிக்கும் மாலோன்
    இறப்பெதிர்க்கும் சூலோன் இதுதான் -இருப்பதற்கு
    எங்கும் இருந்தாலும் தங்கும் அடியார்மேல்
    பொங்கும் கருணையின் பால்….(87)….01-08-2011

    பாலவன் பாதிநிறம்,பச்சையவன் மீதிநிறம்
    ஆலவன் ஜோதியமர் ஆசனம் -மூலவன்
    ஆகம நூலவன் அல்லாது போலவன்
    தேகமில் தேவனவன் தான்….(88)….01-08-2011images (17)

    தான்தோன்றி ஜாலமவன், கான்தோன்றும் காலனவன்
    ஆண்போன்றும் பெண்போன்றும் ஆனதவன் -”நான்”தோன்ற
    ஜீவனாய் வீண்தோன்றி, ஜம்பமாய் வான்தோன்றி
    தேவனாய் வந்தடைவான் தீர்வு….(or)
    ஆவலாய்வந் தான்மா அவன்….(90)….01-08-2011

    அவனர லிங்கம் ,அவனரி சிங்கம்
    அவனலர் தங்கும் அயனும் -அவனவனி
    வந்த மனிதன் விழியிமையா வானவன்
    எந்த பொருளுமவ னே….(91)….02-08-2011

    நேற்றின்று நாளையவன், காற்றுவான்மண் தீநீராய்
    போற்றப் படுகின்ற பூதமவன் -தோற்றம்
    இலாதவன், தோன்றும் கலாதரன், சொல்லிச்
    சொலாதவன் ஆலில் ஜபித்து….(92)….02-08-2011images (18)

    ஜபமாலை தாங்கி, சதுர்மறை ஏந்தி
    அபயவர ஹஸ்தம் அமைந்து -தபஸாய்
    சனகா தியர்சூழ சங்கேதம் பேசும்
    முனிதக் ஷிணாமூர்த்தி மாண்பு….(93)….02-08-2011

    மான்மழு சூலம் மலைமகள் பார்வதி
    வான்விழு கங்கை வளர்பிறை -ஊன்தழுவ
    வெள்ளி மலையேறி வாசம் புரிந்திடும்
    சொல்லில் அடங்கா சிவம்….(94)….02-08-2011

    சிவானந்த சாகரத்தில் சிந்தை குளிக்க
    அவாவந்த ஐம்புலன்கள் ஆசு, -முவாசைகள்,
    நானெ னுமகந்தை தானெனும் தற்பெருமைtrayambakeshwar-jyotirlinga-2
    வீணெனவிட் டோடும் வெளுத்து….(95)….02-08-2011

    வெளுத்ததெலாம் பாலாய் வழித்துண்ணும் மூடா
    களித்ததால் வந்த கருப்பு -குளித்திட
    எந்நாளும் போகாது உன்னாசை சொக்காயை
    வண்ணானச் சொக்கன்முன் வை….(96)….02-08-2011

    வைகறையில் நீராடி வாயாறத் தேவாரம்
    மெய்கரைய ஓது மடநெஞ்சே -மைகரையா
    வண்டு நிகர்த்த விழியாள் வலத்தினில்
    கொண்ட சிவன்தாள் குனி….(97)….02-08-2011

    குனிந்திடக் குட்டு துணிந்திடப் பட்டு
    நினைந்திடாய் கூடாத நட்பு -அணிந்திடுவாய்OMKARESHWAR2-18082011-052309._omkareshwar-jyotirlinga-shiva-temple-khandwa-mp
    மந்தா கினியை மதியை குழல்சூடும்
    அந்தாள் நமச்சிவாய அஞ்சு….(98)….02-08-2011

    அஞ்சை அடக்கிடலாம் அஞ்சா(து) இருந்திடலாம்
    அஞ்சிரெண்டு மாதகர்பம் ஆட்படாய் -அஞ்சிலொன்றில்,
    அஞ்சிலொன்றைத் தாண்டிய அஞ்சனசேய் அம்சமான
    அஞ்செழுத்துக் காரன் அளிப்பு….(99)….02-08-2011

    அளியினம் பூவென்(று) அணுகிடும் பாதத்
    துளிமக ரந்தத்தை துய்க்க -கலிகொண்ட
    அல்வினை சேரா(து) அணைத்தருளும் கற்பகச்
    செல்வி கபாலி சரண்….(100)….03-08-2011….

    ————————————————————————————————————————–

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.hoparoundindia.com/travel-blogs/172/12-jyotirlingas-of-india—jyotirlinga-temples.aspx

    Share
  • திருமால் திருப்புகழ்…. (46)

    கிரேசி மோகன்
    திருப்புல்லாணி தர்ப சயன பெருமாள் ராமர்….
    ——————————————————————————

    Thiruppullani
    ——————————————–
    தனத்தய் தான தான தனத்தய் தான தான
    தனத்தய் தான தான -தனதான….

    ———————————————————————————————————–

    athjaganatharkovil01

    விருப்பில்லாது வாழ்வில் ,வெறுப்பில்லாது தாழ்வில்267670_165775183491627_150863698316109_390197_6242566_n
    இருப்பில்தோயும் சோணை -ரமணேசர்
    உரைப்பில்கூறும் நானை, மறைப்பில்லாது காண,
    உறுப்பில்லாத பார்வை -அருள்வாயே

    செருப்பில்தேசம் ஆள பிறப்பில்நாலில் ஆழ்வார்,
    வனத்துள்காலம் ஈரேழ் -பொழுதாள
    ஒருச்சொல் தாரம் பாணம் எனச்செல் ,வேடர் கூறும்
    கதைக்குள் வாழும் நாத -அருள்வாயே

    ஒருப்புள் காகம் சீதை, உறுப்பில் கீற, வீசும்
    ஒருப்புல் வாளி கோப -சிவராம
    கடித்தவ்ஆயி போடும், கனிக்குள் பாசம் ஊற
    படைப்பில் ஜாதி மீறும் -தவராமா

    குரக்கர் சேனை யோடு அரக்கர் சேனை சாய,
    களைப்பில் தேக வாதை -அதுதீர
    தவப்புல் மீது ஏளும், கருப்பில் நீல மேனி
    திருப்புல் லாணி ராம -பெருமாளே

    ———————————————————————————————————————-

    DSCN0045_thumb

    DSCN0047_thumb[1]P1010216

     

     

     

     

     

    படங்களுக்கு நன்றி:

    http://thiruppul.blogspot.in/2010/03/blog-post_21.html

    நக்கீரன்

     

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (7)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு,

    நம் குடியரசு இந்தியாவின் தேர்தல்களை விருப்பு வெறுப்பற்ற முறையில், எந்த ஒரு அமைப்பையும் சாராமல் நேர்மையாக நடத்தும் தங்களுடைய சமீபத்திய அறிவிப்பின்படி தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என்பது எந்த வகையில் சரியாகும்? இது பற்றி சட்ட ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்களா? நீங்கள் எடுத்த முடிவு சரியானது என்றால் இத்தனை ஆண்டுகள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் தவறான ஒன்றா? இப்படி தேர்தலுக்கு முன்பாகவே வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் மக்களை திசை திருப்பிவிடாதா? அன்பளிப்பு அளித்து செய்திகள் வெளியிடக்கூடிய இந்த காலகட்டத்தில் நீங்கள் அறிவிப்பு வெளியிட்டு வெகு சில நாட்களுக்குள் இந்தியா முழுவதும் செய்தி சேகரித்து இவ்வளவு விரைவாக கருத்துக் கணிப்பை எப்படி வெளியிடமுடியும் என்ற ஐயம் வராதா? மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கும் தங்களைப் போன்றோரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக அல்லவா இருக்கவேண்டும்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • இங்கிலாந்திலிந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (102)

    சக்தி சக்திதாசன்

    1780843_587204171369869_249422305_n
    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் கனத்த இதயத்துடன் என் விரல்கள் இவ்வார மடலை வரைகின்றன.

    இன்று காலை இங்கிலாந்து நேரப்படி காலை ஏழு மணியளவில் என் அண்ணனின் தொலைபேசி அழைப்பு இதயத்தை அழுத்தும் துயரச் செய்தியைக் கொண்டு வந்தது.

    ஆம் 32 அகவைகளே நிறைந்த எனது மூத்த சகோதரனின் மூத்த மைந்தன் நேற்று மாலை அகால மரணமடைந்த துயரச் செய்தி உள்ளத்தை வருத்தியது.

    வாராவாரம் உங்களுடன் இம்மடலுடன் உரையாடும் எனக்கு இவ்வாரம் உரையாட முடியுமா? எனும் எண்ணம் எழுந்தாலும் இதயத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமையும் இவ்வெழுத்து ஒன்றே அதிர்ந்த மனதுக்கு அமைதியளிக்கும் அருமருந்தாகிறது.

    வாழ்க்கை விசித்திரமானது, வியக்க வைப்பது, புரிய முடியாதது என்று வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு மடல்களில் நான் குறிப்பிட்டதுண்டு.

    ஆனால் சமயங்களில் வாழ்க்கை கொடுமையானது கூட என்பது இப்போது தெள்ளிடைத் தெளிவாகத் தெரிகிறது.

    உள்ளத்தின் உறைந்து கிடக்கும் உணர்வுகள் நிலநடுக்கம் வந்தால் கிளர்ந்தெழும் சில உறைநிலங்களைப் போல அதிர்வடையச் செய்யும் செய்திகளைக் கேட்டதும் ஒரு கிளர்ச்சி அடைந்து விழித்து உருக்கொண்டு எம்மை ஆட்டிப்படைக்கின்றன.

    விளங்க முடியா நிகழ்வுகள், விளக்க முடியா வகையில் விசித்திரமான வடிவங்களில் வெவ்வேறு திசைகளில் இருந்து எம்மைத் தாக்கும் போது உள்ளம் சிறிது உருகத்தான் செய்கிறது.

    ஆத்திகர் நாத்திகர் யாராக இருந்தாலும் இயற்கையின் நிகழ்வுகள் யாருக்காகவும் எப்போதும் நின்று போய் விடுவதில்லை பிறப்புக்களும், இறப்புக்களும் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் உள்ளாகி நடந்து விடாமல் இருந்து விடுவதில்லை.

    மனித வாழ்க்கையில் நெடுங்கதைகளும் உண்டு குறுங்கதைகளும் உண்டு. தமது காரியங்களைச் செய்ய தமக்கு வாரிசுகள் வேண்டும் என விரும்பி தமது வாரிசுகளைப் பேணும் பெற்றோரே அவர்களுக்கு காரியம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது துர்பாக்கியமே !

    ஆனால் துர்பாக்கியம் என்பதற்காக நிகழ்வுகள் நின்று போய்விடுவதில்லை. பிள்ளைகளைக் கண்முன்னாலே பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் தைரியம் படைத்தவர்கள் சிலரே.

    என்னைவிட வயதில் பத்து வயது மூத்தவர் என் சகோதரர் . இருவரும் வாழ்வது பல்லாயிரம் மைல்களுக்கப்பால். ஈழத்தை விட்டு ஏறத்தாழ ஒரே சமயத்தில் வெளியேறியவர்கள் நாம். அது இற்றைக்குச் சுமார் 40 வருடங்களின் முன்னால். இதுவரை சுமார் நான்கு தடவைகள் சந்தித்திருப்போம்.

    சுமார் ஆறு மாதங்களின் முன்னால் என் சகோதரரின் இளைய மைந்தனின் திருமணத்திற்குச் சென்றபோது மறைந்த இளவலை கடைசியாகச் சந்தித்தேன்.

    இன்று அவனது மறைவால் தவித்துக் கொண்டே என் சகோதரரைத் தேற்றுவதற்கு வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.

    வார்த்தையின்றிப் போகும்போது கண்ணீர் தான் கைகொடுக்குமோ !

    என் மனதின் தவிப்புக்கு வடிகாலாக மனதின் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக நான் ஆண்டவன், வல்லமை, அனைத்திற்கும் மேலாக என் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை

    துயரத்துடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • காதல் நாற்பது – 4, எலிஸபெத் பிரௌனிங்

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்unnamed

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்

    உன்வசம் உள்ளது உன் பிறவிப்பணி !
    உனக்கு அழைப்பு வருகிறது
    சிற்சில செல்வ மாளிகை
    அரங்கத்திலே!
    உன்னதப் பாக்களை
    மிக்க நளினமாய்ப்
    பாடுவோனே !
    உன் கர்ப்ப உதடுகள் உதிர்ப்பதை
    மென்மேலும் கேட்டு,
    நடன மாடுவோர் கால்கள்
    இடறி முறிந்து போய் விடும்!
    உன் உன்னத கைகளால்
    கீழ்மை யான, இந்த
    ஏழ்மை மாது இல்லத்தின்
    தாழ்ப்பாளைத் திறப்பாயா ?
    உனக்குத் தெரியாமலே
    உன்னிசைக் கீதங்கள்
    பூரணப்
    பொன் அலைகளாக
    என்  இல்லத்தின் வாசல் முன்
    வருவது பற்றி
    என்ன நீ
    நினைக்கிறாய் ?
    ஏற்று அதைத்
    தாங்கி கொள்வாயா ?
    என் வீட்டுக் கூரைக் குள்ளே
    பறக்கின்றன,
    வௌவாலும் ஆந்தைகளும் !
    விட்டில் போன்ற
    என் கீச்சுக் குரல்
    உன் மகர யாழ் முன்னே
    எப்படிப் போட்டி இடும் ?
    மெதுவாக முணு முணுப்பேன்,
    மேலும்
    என்னை ஒதுக்கி விட்டு
    விலகுவது
    எதிரொலிக் கப்படுமா ?
    ஏகாந்தனாய்த்
    தனித்து நீ
    இனிதே பாட நேர்ந்தால்
    அழுதிடும் என் நெஞ்சுக்குள்
    எழுந்திடு மோர்
    அவலக் குரல் !

     
    Poem -4

    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing
    Thou hast thy calling to some palace-floor,
    Most gracious singer of high poems! where
    The dancers will break footing, from the care
    Of watching up thy pregnant lips for more.
    And dost thou lift this house’s latch too poor
    For hand of thine? and canst thou think and bear
    To let thy music drop here unaware
    In folds of golden fullness at my door?
    Look up and see the casement broken in,
    The bats and owlets builders in the roof!
    My cricket chirps against thy mandolin.
    Hush, call no echo up in further proof
    Of desolation! there’s a voice within
    That weeps . . as thou must sing . . . alone, aloof.
    **********

     

     

     

    Share
  • சர்வாதிகாரி!…

    எஸ். கோதண்டராமன்

     

         சர்வாதிகாரி அவர். நாட்டுக்கு அல்ல, வீட்டுக்கு. இங்கு அவர் வைத்தது தான் சட்டம். இன்று என்ன உணவு சமைக்க வேண்டும் என்பதிலிருந்து யார் யார் என்ன உடை அணிய வேண்டும் என்பது வரை அவர் தீர்மானத்தைப் பொறுத்தது. இட்லி சாப்பிட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கும்போது, வேறு எதாவது கொடுத்தால் அவருக்கு வரும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே. வீட்டில் மாவு இல்லாவிட்டால் கடையிலோ, அங்கும் இல்லாவிட்டால், அக்கம் பக்கத்து வீடுகளில் யாசகம் வாங்கியோ செய்து போட்டால் தான் மற்றவர்கள் பிழைக்க முடியும். அவர் தூங்கும் போது தான் மற்றவர்கள் அவரவருக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தொலைக் காட்சியில் காண முடியும். தொலைபேசி ஒலித்தால் அவர் தான் முதலில் எடுக்க வேண்டும். அவர் பேசி விட்டுக் கொடுத்த பிறகு தான் மற்றவர்கள் பேச முடியும். சில சமயம், தானே பதில் சொல்லிவிட்டுப் போனை வைத்து விடுவார். யாரிடமிருந்து ஃபோன் என்று கேட்டால் பதில் வராது. “உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயம். சொல்லித் தான் ஆகணுமோ?” என்பது போல முகத்தைத் திருப்பிக் கொள்வார். இவ்வளவு வல்லாட்சியாளராக இருந்தும், வீட்டிலுள்ள அனைவரும் அவருக்கு இன்முகத்துடன் அடங்கி நடப்பார்கள்.

         எந்த வல்லாட்சியும் நிலைத்ததாக வரலாறு இல்லை. ஆனானப்பட்ட சதாம் உசேனின் சர்வாதிகாரம், எண்ணைப் பணமும் ஏராளமான ஆயுதங்களும் இருந்தும், அமெரிக்கப் படை பலத்துக்கு முன் நிற்க முடியவில்லை. ராணுவ வலிமை மிகுந்த ஹோஸ்னி முபாரக்கோ தன் சொந்த நாட்டு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தில் பதவி இழந்தார். இந்நிலையில் இரண்டே முக்கால் வயதான இந்த சர்வாதிகாரி எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? ஆம். நம் கதாநாயகன் பிறந்து இன்றோடு 1000 முறை சூரியன் உதித்திருக்கிறான்.

         வல்லாட்சிக்கு எதிரான போராட்டத்திற்கான விதை தூவப்பட்டது அவரது இரண்டாவது பிறந்த நாள் அன்று. கையில் சாக்லேட் டப்பாவைத் தூக்கிக் கொண்டு பக்கத்து பிளாட்காரர்களுக்கு ‘பாப்பாக்கு பத்தே (பர்த் டே)’ என்று சொல்லி அவர்களுடைய கொஞ்சுதல்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வரும் போது உடன் சென்ற அவனது தாயிடம் ஒரு பெண்மணி கேட்டார், “அடுத்த வருஷம் ஸ்கூல்லே சேர்க்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டிங்களா?”

         “இப்பத் தானே ரெண்டு வயசு முடிஞ்சிருக்கு. ஜூனுக்கு இரண்டரை வயசு தான் ஆகும். மூணு வயசு முடிஞ்சாத் தானே எல்கேஜியிலே சேத்துப்பாங்க.”

         “உலகம் தெரியாம இருக்கீங்களே. நல்ல ஸ்கூல்லே எல்கேஜியிலே சேர்க்க மாட்டாங்க. ப்ரீகேஜியிலே தான் சேத்துப்பாங்க. நீங்க இப்பவே ட்ரை பண்ணினாத் தான் கெடைக்கும்.”

         உடனே தாயும் தந்தையும் எது நல்ல பள்ளி என்று தெரிந்து கொள்வதற்காக இணையதளத்தில் பெற்றோர் குழுமத்தின் உரையாடல்களை எல்லாம் அலசினார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு குறை. இருந்தாலும் பொது மக்கள் மத்தியில் எது பிரபலமானது என்று தீர்மானித்து அந்தப் ப…… பள்ளிக்கு போன் செய்தார்கள்.

         “ப்ரீகேஜி அட்மிஷனை நாங்க அப்பவே முடிச்சுட்டோமே.”

         “நான் அடுத்த வருஷத்துக்குக் கேக்கறேன். ஜூன் மாசம் ஆரம்பிக்கிற கிளாசுக்கு அட்மிஷன் வேணும்.”

         “அதைத் தான் நான் சொல்றேன். வர ஜூன் பேட்சுக்கு இந்த நவம்பரிலேயே நாங்க அட்மிஷனை முடிச்சுட்டோம். இடமில்லே. சாரி.”

         “சரி, அதுக்கு அடுத்த வருஷம் எல்கேஜியிலே சேர்க்கணும்னா எப்ப அப்ளை பண்ணணும்?”

         “நாங்க ப்ரீகேஜிலே மட்டும் தான் அட்மிஷன் பண்றது. மத்த கிளாசிலே புதுசா யாரையும் சேக்கறது இல்லே.”

         இப்படி ஒவ்வொரு பள்ளியாக விசாரித்து விசாரித்து எல்லாப் பள்ளிகளிலும் எதிர்மறை விடையே கிடைத்ததால் நமது குழந்தையின் எதிர்காலமே பாழாகி விடுமோ என்ற கவலை வந்து விட்டது.

         மீண்டும் தேடுதல் வேட்டை.

         எதிர்வீட்டுப் பெண்மணி சொன்னார், “பக்கத்திலேயே ஒரு ஸ்கூல் இருக்கு. சுமாரா இருக்கும். பரவாயில்லே. ஃபீசும் கம்மி தான். வேணுமானாப் பாருங்க.”

         அந்த சுமார் பள்ளிக்குப் போனார்கள். நல்ல வேளை சேர்க்கை இன்னும் துவங்கவில்லை.

         “அட்மிஷனுக்கும் வகுப்பு துவங்குவதற்கும் இடைவெளி மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பது அரசாங்க உத்தரவு. நாங்கள் மட்டும் தான் அதைக் கடைப்பிடிக்கிறோம்.

         உங்கள் குழந்தையைச் சேர்த்துக் கொள்கிறோம். ஸ்கூல் ஃபீஸ், அட்மிஷன் ஃபீஸ், ஸ்பெஷல் ஃபீஸ்,  புத்தகம் எல்லாம் சேர்த்து 16500 ரூபாய் கட்டிவிடுங்கள். இந்த விலாசத்தில் ஸ்கூல் யூனிஃபார்ம் வாங்குங்கள். ஜூன் முதல் தேதி குழந்தையை அழைத்துக் கொண்டு வாருங்கள்.”

         அப்பாடா, ப்ரீகேஜி பிரச்சனை தீர்ந்தது. அடுத்த வருஷம் எல்.கே.ஜி. இங்கே படிக்கக் கூடாது. வேறு நல்ல பள்ளியாக இப்பொழுதிலிருந்தே பார்க்க வேண்டும்.

         ஜூன் பிறப்பதற்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே குழந்தையை ஸ்கூலுக்குப் போகப் போகிறோம் என்று சொல்லிச் சொல்லித் தயார் செய்தாகி விட்டது. அந்த நாளும் வந்தது. புதுச் சீருடை போட்டுக் கொண்டு பக்கத்து வீடுகளில் எல்லாம் போய் “புதூ தத்தை, ஊனிஃபாம்” என்று காண்பித்து விட்டு வந்தான் குழந்தை.

         முதல் நாள். எல்லாக் குழந்தைகளும் தாய் தந்தையுடன் வந்திருந்தார்கள். பூஜைகள் நடந்தன. ஒரு மணி நேரத்தில் அவரவர் குழந்தையுடன் வீடு திரும்பினார்கள். நாளை முதல் முறையான வகுப்பு என்று சொன்னார்கள்.

         மறுநாள். குழந்தை உற்சாகத்துடன் சீருடை மாட்டிக் கொண்டு தாயுடன் பள்ளிக்குப் போனான். கேட் அருகில் போனவுடன் அங்கிருந்த ஒரு ஆயா தாயை வெளியிலேயே நிறுத்தி விட்டுக் குழந்தையை மட்டும் வெடுக்கென்று பிடுங்கி உள்ளே தூக்கிக் கொண்டு போனார். மிரட்சியில் அழுதது குழந்தை. சில விநாடிகளில் சத்தம் நின்று விட்டது.

         ஆபரேஷன் தியேட்டரிலும், நர்சரி வகுப்பறைகளிலும் என்ன நடக்கிறது என்பது வெளி உலகிற்குத் தெரியாது. முன்னதில் நோயாளி மயக்க நிலையில் இருப்பார். பின்னதில் குழந்தைகள் நடப்புகளை வாய் விட்டுச் சொல்லத் தெரியாதவர்கள். கண நேரம் கூடச் சும்மா இராமல் ஆட்டம் பாட்டம் துள்ளல் என்று இருக்கும் சக்தியே வடிவமான 30 குழந்தைகளை மூன்று மணி நேரம் எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பது இரண்டாவது தாயான அந்த ஆசிரியைக்கு மட்டும் தான் தெரியும். வெளியில் வரும்போது குழந்தைகள் உற்சாகமாக வருவார்கள். அந்த உற்சாகம் விடுதலை பெற்ற மகிழ்ச்சியா, இது தான் நம் தலையெழுத்து என்று குழந்தை தன்னைத் தானே உணர்ந்து கொண்ட ஞானப் பரிபக்குவமா, தெரியாது.

         நாட்கள் ஓடின. தினசரி, குழந்தையை அழ அழப் பள்ளியில் கொண்டு விடுவதும் திரும்பும்போது சிரிப்புடன் வருவதும் வழக்கமாகிவிட்டது. குழந்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படும் சிறார் பாடல்களைத் தன் மழலை மொழியில் உதிர்க்கும்போது பெற்றோர் அக மகிழ்ந்தனர். ஒரு நாள் பாடல்களின் நடுவே    அவன் சொன்ன ஒரு சொல் வித்தியாசமாக இருக்கவே, மறு நாள் தாய் ஆசிரியையிடம் கேட்டாள்.

         “மிஸ், தூக்கத்திலே குழந்தை டார்க் ரூம், டார்க் ரூம் னு அடிக்கடி சொல்றானே, அது எந்த ரைமிலே வருது?”

         “அதுவா, அது ஒண்ணுமில்லே. இன்னொரு பையன். மகா சேட்டை. அவனைக் கொஞ்சம் வழிக்குக் கொண்டு வருவதற்காக டார்க் ரூமிலே போட்டுப் பூட்டிடுவேன்னு சும்மா சொன்னது அது.”

         ஒரு நாள், பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் குழந்தை “ஊனிபாஃம் வாந்தாம்” என்று தகராறு செய்தான். “யூனிஃபார்ம் வேண்டாமென்றால் விட்டுவிடேன், சாதாரணச் சட்டையைப் போட்டு அழைத்துக் கொண்டு போ. இவன் என்ன ராணுவப் பயிற்சிக்கா போகிறான்? என்றான் அவளது கணவன். “இன்னிக்கு ஒரு நாளைக்கு இடம் கொடுத்தா இதுவே வழக்கமாயிடும்” என்று கூறித் தாய் அவனுக்கு வலுக்கட்டாயமாக அதை அணிவித்து அழ அழக் கூட்டிக் கொண்டு போனாள். மதியம் திரும்பும் போது வழக்கம்போல உற்சாகமாக இருந்தான். மாலையில் கணவன் வீடு திரும்பியதும், “பார்த்தீங்களா, காலையில் சற்று நேரம் அழுதானே தவிர சமாதானம் ஆகிவிட்டான். அவன் சொன்னதைக் கேட்டு நாம் அவனுக்கு யூனிஃபார்ம் அணிவிக்காமல் அழைத்துச் சென்றால் அதுவே அவனது ஒழுங்கீனத்துக்கு வழி வகுக்கும். இப்பொழுதிலிருந்தே பழக்கம் பண்ணினால் தான் படிப்பில் சிரத்தை வரும். உயர்ந்த நிலையை அடைய முடியும். அவன் நாசாவின் டைரக்டர் மாதிரி உலகளவில் பெரிய பதவிக்கு வரணும், குறைஞ்சது அப்துல் கலாம் போல ஒரு இஸ்ரோ டைரக்டராகவாவது வரணும் ” என்றாள்.

         நீ சொல்ற அந்த அப்துல் கலாம் ப்ரீகேஜியும் படிக்கல்லே, எல்கேஜியும் படிக்கல்லே. உயர்நிலைப் படிப்பு வரையில் சாதாரணப் பள்ளியில் தான் படித்தார் என்று அவன் நினைத்துக் கொண்டான். சொல்லவில்லை.

         அடுத்த நாள் சாப்பிட மாட்டேன் என்று சண்டித்தனம், அதற்கு அடுத்த நாள் குளிப்பதற்கே மறுப்பு, அடுத்த நாள் பல் துலக்கவே போராட்டம் என்று வர வர அவனுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாகி வந்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் எழுந்ததிலிருந்தே அழுகை. “கூல் வாந்தாம், கூல் வாந்தாம்” என்று சிணுங்கிக் கொண்டிருந்தான். கால ஓட்டத்தின் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்து, அது வரை வாய் மூடி, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வீட்டுப் பெரியவர்கள் இப்பொழுது வாய் திறந்தார்கள். “இது என்ன பெரிய கிளாசா, ஒரு நாளைக்கு கொஞ்சம் விட்டுப் பிடியேன். அழ விடாதே” என்றாள் குழந்தையின் பாட்டி.

         “அவங்க மிஸ் சரியாத் தான் சொன்னாங்க, வீட்டிலே பெரியவங்க இருந்தா செல்லம் குடுத்துக் குழந்தையைக் குட்டிச் சுவராக்கிடுவாங்கன்னு. உங்க காலம்னு நினைச்சீங்களா, இப்பல்லாம் 99 சதவீதம் வாங்கினாப் போதாது, ஒரு அரை மார்க் கால் மார்க் கூட வாங்கினவன் அடிச்சுகிட்டுப் போயிடுவான். நாள் தவறாம ஸ்கூலுக்குப் போனாத் தான் படிப்பிலே ஈடுபாடு வரும்.” இது தாய்.

         குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லத் தூக்கியபோது அவன் தன் முழு பலத்துடனும் திமிறிக் கொண்டு தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான். சமாளிக்க முடியாத நிலையில் தாய் அவன் முதுகில் ஒரு தட்டு தட்டி விட்டாள். அது வரையில் பிறர் அடிக்கப்படுவதைக் கூடப் பார்த்திராத அந்தப் பி்ஞ்சு உடல் துடித்து விட்டது. சுற்றி நின்றவர்கள் கண்களில் நீர் ததும்பியது. அவனுடைய முரண்டல் நின்றது. அழுது கொண்டே சென்றவனைப் பள்ளியில் விட்டு வந்தாள் தாய். மதியம் அவனை அழைக்கப் போனபோது அவனுடைய ஆசிரியை சொன்னார், “குழந்தை அழுகிறான் என்பதற்காக பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து விடாதீர்கள். அதுவே வழக்கமாகிவிடும்.” குழந்தை அழவில்லை என்றாலும் அவனது முகத்தில் இருந்த மலர்ச்சியைக் காணவில்லை.

         மாலையில் உடல் கொதித்தது. காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய்க் காட்டி மருந்து வாங்கி வந்தாள். இரவு தூங்கும் போது இடை இடையே அவன் விசிக்கும் சத்தம் கேட்டது. அவ்வப்போது “தாக் ஊம் வாந்தாம்” என்று அவனது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

         தாய் தூங்கவில்லை. ஆத்திரப்பட்டுக் குழந்தையை அடித்து விட்டோமே என்று அழுது கொண்டிருந்தாள். இவனை எப்படி அழாமல் பள்ளிக்குப் போக வைப்பது என்று யோசித்துக் கொண்டும் இருந்தாள்.

         தந்தை தூங்கவில்லை. குழந்தைக்குப் பள்ளிச் சூழ்நிலையை ஏற்றுக் கொள்வதற்கான மன முதிர்ச்சி இன்னமும் வரவில்லை என்பதை அவன் அறிந்து கொண்டான். கட்டாயப்படுத்தாமல் தன் இயல்புப்படி விட்டாலே அவனுடைய அறிவு வளரும் என்பதைத் தன் மனைவிக்கு எப்படிப் புரிய வைப்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

         பெரியவர்களும் தூங்கவில்லை. குழந்தைகளின் குதூகலத்தை, குறுகுறுப்பை, கற்பனையை, துள்ளலை, எதையும் வியப்புடன் பார்த்து மகிழும் பால் மனத்தை இந்தக் காலக் கல்வி அடக்கி ஒடுக்கிச் சிறைப்படுத்துகிறதே, இவர்கள் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குகிறார்களே என்று மனத்துக்குள் புலம்பிக் கொண்டிருந்தனர்.

         இதோ பொழுது புலரப் போகிறது. சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் துவங்க இருக்கிறது.

         அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தாய் செய்யும் செயல்களைச் சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. தன் மகனைச் சான்றோன் ஆக்கி, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க வேண்டும் என்ற ஆசை அது. அது என்றும் நிலைத்திருக்கும்.

    Share
  • முடிதிருத்தகமும் மனிதமும்..

    மாதவன் இளங்கோ

    பெல்கிய நாட்டின் லூவன் நகர பிரசல்ஸ் தெருவில் உள்ள ஒரு முடிதிருத்தகம். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன்.

     சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று – ‘முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது’. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், இன்னும் மூன்று வருடங்களில் உனக்கு அநேகமாக முடியனைத்தும் கொட்டிவிடும் போலிருக்கிறது என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் வேறு சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நிறைய முடி வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

     ‘உங்கள் ஆரூடம் ஒருவேளை பலித்துவிட்டால், நீங்கள் ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும்! அதனால், எனக்கு நன்றாக முடி வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.’ என்று நானும் சிரித்துக் கொண்டே கூறிவிட்டுத் திரும்பினேன்.

     ஆங்கிலத்தில் முடிதிருத்துபவர்களை ‘Tonsorial Artist’ என்பார்கள். உண்மையாகவே அது ஒரு கலை என்பதில் எனக்குத் துளி ஐயமில்லை. ஏனென்றால், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாடிக்கூட இத்தனை அழகாய் என்னைத் தூங்க வைக்க முடியாது. 😉

     இன்று நான் சென்று வந்தது, நான் வழக்கமாகச் செல்லும் பாகிஸ்தானியர் ஒருவரின் முடிதிருத்தகம். உள்ளூர்காரர்களிடம் சென்றால் சொத்தையே எழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களிடம் எப்போதுமே செல்வதில்லை. இந்த நகரத்துக்கு வந்த புதிதில், ஒரே ஒருமுறை தலைமுடி வெட்டிக்கொள்ளச் சென்று, மொட்டை அடித்துக்கொண்டு திரும்பியதோடு சரி. பிறகு அவர்கள் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

     சரி, அதை விடுங்கள். நான் கூற வந்தது இதுதான் –

     பதினைந்து மணித்துளிகள் ஒரு பாகிஸ்தானியரிடம் தலையைக் கொடுத்து, நிம்மதியாய் தூங்கிவிட்டு வந்திருக்கிறேன். தலையில் முடியிருக்கும் வரை, இந்த ஊரில் நான் இருக்கும் வரை, இன்னும் பலமுறை அவரிடம் செல்வேன் – அந்த பதினைந்து மணித்துளி உறக்கத்துக்காய்.. நிம்மதிக்காய்.. நிம்மதியான உறக்கத்துக்காய்..

     அரசியல்வாதிகளும், மதவாதிகளும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் – மனிதர்களைப் பிரிக்க. நிஜத்தில் மனிதமே நிலைத்து நிற்கிறது. நிற்கும். வெல்லும்!

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 27

     

    சீதாயணம் படக்கதை -27​

    ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

     

    jay1

     

    jay2

    தகவல் :

     

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and          Picture Credit to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • எளியோரைத் தாழ்த்தி!…

    கவிஞர் காவிரிமைந்தன்

     

    எளியோரைத் தாழ்த்தி.. வலியோரை வாழ்த்தும்….

    (கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி)

    ஏழைச் சொல் அம்பலத்தில் ஏறாது என்பது பழமொழி.  இந்த உலகத்தில் குறிப்பாக மனித குலத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் – ஏழை – பணக்காரன் – ஜாதிப் பிரிவுகள் மேலோர் கீழோர் என்கிற வர்க்கபேதங்கள் வகுத்த வைத்த பாவிகள் சுயநலம்தேடி சமுதாயத்தில் உலவும் பேய்கள் – இவர்களால் ஏழை வர்க்கம் இன்னுமின்னும் இன்னல்களுக்கு ஆளாவதும் வசதியுள்ளவர்கள் மட்டுமே வாழத்தக்கதாய் இந்த உலகம் மாறிவருவதும் கொடுமையென கொதித்தெழும் கவிஞரின் நெஞ்சம் வடித்த பல்லவியைப் பாருங்கள்!

    வஞ்சம், சூது, களவு இவைகளால் ஆட்படும் இதயத்தல் பொங்கிவரும் உணர்வுகளை கவி வடிவம் தந்திருக்கிறார் கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

    தடைகள்மீறி நடைபோட எண்ணும் எழுவததைக்கூட வரிகளில் பதிய வைத்துள்ள பாங்கு இதோ..

    டி.எம்.செளந்திரராஜன் அவர்களுடன் பாலசரஸ்வதி இணைந்து பாடிய பாடல்!  கே.வி.மகாதேவன் இசையமைப்பில் கவிஞர் கு.ச.கிருஷ்ணமூர்த்தியின் பொன்னெழுத்துக்கள் மின்னும் பல்லவியும் தொடரும் சரணங்களும் பாத்திரப்படைப்பாய் கவிஞன் கூடுவிட்டு கூடு பாய்ந்து எழுதியதை பறைசாற்றுகிறது!

    அர்த்தமுள்ள பாடல்கள் அன்றைக்கு எழுதப்பட்டவையாக இருந்தாலும் காலங்களைக் கடந்தும் ஏதோ கல்வெட்டுக்களாய் பொறிக்கத்தக்கதாய் முத்தான வரிகளைத் தாங்கியிருப்பதால்.. இப்பாடல்களின் ஆயுசு அதிகமென்பதில் ஆச்சரியமில்லை!

    மானுட தர்மம் என்ன சொல்கிறது என்று பார்க்கும்போது நிச்சயமாக ஏழையை அது கைவிடுவதில்லை.. மாறாக நீதியின் குரலாய் எழும்பி இந்த நித்திலம் முமுவதும் ஒலிக்கிறது!

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    !

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா

    படுபாவியால் வாழ்வுபறி போவதோ

    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா

    படுபாவியால் வாழ்வு பறி போவதோ

    அறியாத நங்கை எனதாசை தங்கை

    கதிஏதும் காணாமல் மனம் நோவதோ

    அறியாத நங்கை எனதாசை தங்கை

    கதிஏதும் காணாமல் மனம் நோவதோ

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    சிறகே இல்லாத கிளிபோல ஏங்கி

    உனைக் காணவே என் உளம் நாடுதே

    சிறகே இல்லாத கிளி போல ஏங்கி

    உனைக் காணவே என் உளம் நாடுதே

    பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை

    சிறைக்காவல் இங்கே தடை போடுதே

    பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை

    சிறைக்காவல் இங்கே தடைபோடுதே

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 54

    குன்றக்குடி அடிகள்

    54. எளிய வாழ்வியல் உண்மை!

    ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் பழி வாங்குதல் ஆகும். இந்த பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழி வாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.

    பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர்.

    திருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ஒதுக்குகிறது. ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக் கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழிவாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் அறிவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.

    ஆம்! எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள் – உபதேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (திருக்குறள் – 314) என்பது குறள்.

    பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் ஞானம் இல்லாதவன்; அற்ப அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும். இல்லையெனில் திருவள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.

    ஆதலால் திருவள்ளுவர் “இன்னா செய்தாரை ஒறுத்தல்” என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க நிலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்கு திருவள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.

    இந்தச் சூழ்நிலையைத் திருவள்ளுவர் பயன்படுத்திக்கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம்! பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி? “தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு!” என்று வள்ளுவர் கூறுகின்றார்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (திருக்குறள் – 314) என்பது திருக்குறள்.

    “இன்னா செய்தாரை ஒறுத்தல்” – என்ற சொற்றொடர் உடன்பாட்டுச் சொற்றொடர். “அவர் நாண நன்மை செய்துவிடல் என்பது” பொறுத்தாற்றும் நெறியில் ஆற்றுப்படுத்தலாகும். இந்தக் குறள் சிறந்த உளவியல் அறிவியலைச் சார்ந்த குறள்.

    “எவருடனும் முதல் நிலையில் உடன்பட்டு நில்; அவருடைய நம்பிக்கையைப் பெறு; பின் அவர்களை உன் நெறிக்கு அழைத்துக் கொள்”. இது எளிய வாழ்வியல் உண்மை.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • காத தூரம்

     

     

    சங்கர் சுப்பிரமணியன்

     

    என் வீட்டிலிருந்து காத தூரம் நடந்தால்
    வரும் காணிநிலம் அதில் கண்கள் விரிய பார்த்தால்
    கொஞ்சும் அழகுப்பாவை ஒன்று அவளுடன்
    எனக்கு ஒரு கனத்த கதையுண்டு

    வண்ணக் கலவைகளை முகத்தினில் பூசி கொஞ்சும் தமிழ் பேசி
    ஆசை வார்த்தைகள் ஆயிரங்களை அழகாக கோர்த்து
    புரட்டு கதைகள் பல பேசி பொய்முகம்
    போர்த்திக்கொண்டே பேதை அவளிடம் பழகினேன்

    அவள் விழிக்கும் அதிகாலை நான் விழித்து அவளுக்கு
    முன்னதாக அவள் எப்பொழுதும் விரும்பிச் செல்லும்
    அந்த சிவனுக்கு முன்நின்று மந்திரங்கள் படித்து
    கபட நாடகம் அரங்கேற்றியே அவள் அன்பைப் பெற்றேன்

     

    என் வானத்து நிலவென்றென். நீ இல்லாத வாழ்வு இருளென்றேன்.

    உன் உறவு என் உயிரென்றென். நீ இன்றி நான் உலர்ந்த சருகென்றேன்.

    உள்ளமெல்லாம் அவள் நினைப்பில் கரைந்ததாக பொய்யுரைத்தே

    அவள் உள்ளத்தில் நிறைந்தேன் அழகான வண்ணத்தில்

     

    அத்தனையும் நம்பிய அந்த அறியாத பேதை என்னை அவள்
    உயிராய் தீர்மானித்தாள் என் நினைவுகளை நெஞ்சத்தில்
    சூடிக்கொண்ட நேசத்தில் அவள் நெகிழ்ந்திருந்த ஒரு கணத்தில்
    கனன்று எரிந்த உணர்ச்சிகளில் நான் அவளை முழுவதுமாய் சுவைத்தேன்

     

    நாடகத்தின் முடிவாக போட்ட என் வேஷம் கலைக்க
    எக்காளமிட்ட சந்தோஷத்துடன் என் மனம் சந்தர்ப்பங்களை
    எதிர்நோக்க கனவிலும் நான் எதிர்பாராத முடிவுரையை
    கடவுள் அரங்கேற்றினான் என் கண் முன்னே

     

     

    தேனுண்ட வண்டு போல் அவள் தனித்திருந்த
    அந்த நள்ளிரவு அவள் வீடு தேடி நான் போனேன்
    என் மெல்லிய சத்தத்திற்கு வெட்கத்துடன் அவள் கதவு திறக்க
    வேட்கையுடன் நான் உள் நுழைந்தேன்

     

    உணர்வுகளின் தழுவல்களில் உயிரோட்டங்களைத் தேடி
    தனியாத மோகத்தில் நாங்கள் தவமாய் கூடிக்கொண்டிருக்க
    பெருத்த சத்தம் கேட்டு பதறி கலைந்து சுற்றம் பார்த்தால்
    எங்களை ஆவேசத்தடன் சுற்றியிருந்தது அந்த பெருந்தீ

    கணமும் தாமதியாது எரியும் நெருப்பை அவள் போர்த்திக் கொண்டு வேகத்துடன்
    என்னை வெளித்தள்ளினாள் என்ன செய்கிறேன் என்கிற உணர்வுகளற்று
    என்னையும் நான் மாய்த்துகொள்ள வேகத்துடன் நெருப்புக்குள் ஓடமுயல
    சுற்றியிருந்த ஊர் என்னை தடுத்து தனித்து நிறுத்தி விட்டது

    கனநேரத்தில் நடந்தேறிய அந்த நாடகத்தின் கடைசித் தருணத்தில்

     என்னை காப்பாற்றி விட்ட பெருமித சந்தோசத்தில்

    இதயம் நிரம்பிய புன்னகையுடன் என்னை பார்த்தபடியே

     அந்த நெருப்பினில் தன்னை தாரை வார்த்து கொண்டாள்

     

    பாவிமகள் போகையில் என் நெஞ்சத்து ஆழத்திலே
    அவள் உயிரை பதித்து என்னுயிரை கொன்று போனாளே
    நீங்காத அவள் நேசத்தின் வாசமுடன் நிஜங்களை தொலைத்து

    நான் முடிவுதேடும் இறப்பு நோக்கிய பயணத்தில் வாழ்கிறேன்

     

     

    Share
  • முகக்களை

     
    செந்தில் குமார்

     

    சாவிற்கு முன் தெரியும் முகக்களையை தரிசித்திருக்கீற்களா?
    அப்போது தெரியும் வாழ்வின் மகத்துவம்.
    சாகும் முகத்தின் புன்சிரிப்பை பார்த்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அன்பின் ஆழம்.
    சாகும் நொடியில் அந்த முகத்தில் தெரியும் புரிதலை கவனித்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அறிவின் பிதற்றல்.
    சாவை உணர்ந்துகொண்ட சந்தோஷத்தை அனுபவித்திருக்கீற்களா?
    அப்போது புரியலாம்…..வாழ்க்கை.

    சாவை புரிந்து கொண்டதுபோல் தாத்தா முகம் இருந்தாலும்
    “இன்னும் கொஞ்சம் வாழ்விருக்காதா?” என்று
    தொக்கி நிற்கும் கேள்வி
    என்னை புலப்படுத்தியதற்கு
    நன்றி.

    Share
  • திருமால் திருப்புகழ் (45)

    கிரேசி மோகன்

    ஒருவனைப் புகழ்வதை விட அவனது BETTER-HALF மனைவியைப் புகழ்ந்தால் அவன் அருள் இன்னும் வேகமாகக் கிட்டும்….அந்த BETTER-HALF , BUTTER-HALFகண்ணனின் மனம் கவர்ந்த மனைவியாய் இருந்தால் ,கேட்கவே வேண்டாம் அருள் கொட்டும்….மேலும் இந்த BETTER-HALF, வில்லிபுதூர் பட்டர் பிரான் பெண் ஆண்டாள்….மாதங்களில் நான் மார்கழி என்று மாலை கீதையில் மார்தட்டிக் கொள்ள வைத்த, முப்பது(திருப்பாவை) செப்பிய மங்கை….ஆக இன்று ‘’ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று’’ அருணகிரி சந்தத்தில் ஆண்டாள் திருப்புகழ்….

     Tamil-Daily-News-Paper_52750360966

    “ஆடிவரும் பூரமதில் பூத்தமுகம் ஒன்றுAndal
    ஆசுகவி பட்டர்மகள் ஆனமுகம் ஒன்று
    காடுவன மாலிதனில் கண்டமுகம் ஒன்று
    மாடமதில் ரங்கனிடம் காதல்முகம் ஒன்று
    சூடும்மலர் மாலைதனை சூடும்முகம் ஒன்று
    ஸ்ரீவிலிபு தூரில்கவி செப்புமுகம் ஒன்று
    கூடலுடன் ஊடலையும் கூறுமுகம் ஒன்று
    கீதையுடன் பாசுரமி ணைத்ததமிழ் தாயே”

    Share
  • திருமால் திருப்புகழ் (44)

     

    கிரேசி மோகன்

    15032009072

    தானன தானன தானன தானன
    தானன தானன -தனதான….
    ———————————————————————————————————-

    Poothana_Moksh

    பாலினில், சேடனின் பாயினில், த்வாபர 969181_504980929606941_408884359_n
    வேளையில், பூபளு -நினைவாலே,
    காவலில், தேவகி பாலனில், ராவினில்,
    தாளெழு தாவலை -யமுனாவில்,

    சீலமும் சீர்வளர் ஆயர்தம் பாடியில்,
    யாதவ பூமியில், -வசுதேவர்
    போய்விட வேறொறு தாய்மடி தாவலில்,
    மாமனின் தேதிசொல், -நவகாளி,

    பாலளி பூதனை ப்ராணனில், காளியன்
    மேல்நட மாடிடும் -இருகாலில்,
    வேணுவின் ஓசையில், பேணிடும் கோவினில்,
    ராதையின் காதலில், -நடுவோனில்,(ஐவரில் நடுவோன் அர்ச்சுனர்)

    நூலினில் கீதையில், நாணினில், மாருதி
    தேரினில், பாரதம் -புரிவோனே.
    பாரினில் நாமதை காணவு லாவரு,
    ஷீரடி சாய்குரு -பெருமாளே….கிரேசி மோகன்….

    ————————————————————————————————————————

     

    பின்-குறிப்பு- பார்க்கும் யாவற்றிலும் பெருமாளை மட்டும் பார்த்தால் திவ்ய தேசம்….பார்க்கும் யாவற்றையும் பெருமாளாகவே பார்த்தால் பாரத தேசம்….அப்படிப் பார்த்தபோது, இன்றைய சந்தத்திற்கு உட்பட்டு எழுந்தருளினார் சத்குரு ஷீரடி சாயி பெருமாள்….இந்த உலக ‘’உள்ளே வெளியே’’ விளையாட்டில் நாம் ஜெயிக்க, உள்ளிருந்து உழைப்பவர் பெருமாள்….வெளியிலிருந்து வழங்குபவர் குருநாதர்….கடவுளும்-குருவும் ஒன்றே….இருவருக்கும் குறைந்த பட்ச வேற்றுமைகள் ஆறிருந்தாலே அதிகம்….

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (6)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மதிப்பிற்குரிய ஐயா அன்னாஅசாரே அவர்களே,

    நீங்கள் புவனேசுவரத்தில் ஆரம்பித்துள்ள இரண்டாவது சுதந்திரப் போரட்டம் மூலமாக 2024 இல் மிக அதிகமாக விவசாயிகளையே பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பப்போவதாகக் கூறியுள்ளீர்கள். உங்களுடைய முதல் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன? முடிவுற்றதா? வெற்றி பெற்றுவிட்டீர்களா? ஊழலுக்கு எதிரான உங்களுடைய போராட்டத்தின் இன்றைய நிலை ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஊழல்வாதிகளை தங்களுடைய வேட்பாளர்களாக அறிவித்துள்ளனரே. இந்த அரசியல்வாதிகளை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா? அன்றாடம் மக்கள் உங்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது இப்படி ஏதாவது புதிய போராட்டம் அறிவிக்கிறீர்களா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share