எளியோரைத் தாழ்த்தி!…
கவிஞர் காவிரிமைந்தன்
எளியோரைத் தாழ்த்தி.. வலியோரை வாழ்த்தும்….
(கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி)
ஏழைச் சொல் அம்பலத்தில் ஏறாது என்பது பழமொழி. இந்த உலகத்தில் குறிப்பாக மனித குலத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் – ஏழை – பணக்காரன் – ஜாதிப் பிரிவுகள் மேலோர் கீழோர் என்கிற வர்க்கபேதங்கள் வகுத்த வைத்த பாவிகள் சுயநலம்தேடி சமுதாயத்தில் உலவும் பேய்கள் – இவர்களால் ஏழை வர்க்கம் இன்னுமின்னும் இன்னல்களுக்கு ஆளாவதும் வசதியுள்ளவர்கள் மட்டுமே வாழத்தக்கதாய் இந்த உலகம் மாறிவருவதும் கொடுமையென கொதித்தெழும் கவிஞரின் நெஞ்சம் வடித்த பல்லவியைப் பாருங்கள்!
வஞ்சம், சூது, களவு இவைகளால் ஆட்படும் இதயத்தல் பொங்கிவரும் உணர்வுகளை கவி வடிவம் தந்திருக்கிறார் கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
தடைகள்மீறி நடைபோட எண்ணும் எழுவததைக்கூட வரிகளில் பதிய வைத்துள்ள பாங்கு இதோ..
டி.எம்.செளந்திரராஜன் அவர்களுடன் பாலசரஸ்வதி இணைந்து பாடிய பாடல்! கே.வி.மகாதேவன் இசையமைப்பில் கவிஞர் கு.ச.கிருஷ்ணமூர்த்தியின் பொன்னெழுத்துக்கள் மின்னும் பல்லவியும் தொடரும் சரணங்களும் பாத்திரப்படைப்பாய் கவிஞன் கூடுவிட்டு கூடு பாய்ந்து எழுதியதை பறைசாற்றுகிறது!
அர்த்தமுள்ள பாடல்கள் அன்றைக்கு எழுதப்பட்டவையாக இருந்தாலும் காலங்களைக் கடந்தும் ஏதோ கல்வெட்டுக்களாய் பொறிக்கத்தக்கதாய் முத்தான வரிகளைத் தாங்கியிருப்பதால்.. இப்பாடல்களின் ஆயுசு அதிகமென்பதில் ஆச்சரியமில்லை!
மானுட தர்மம் என்ன சொல்கிறது என்று பார்க்கும்போது நிச்சயமாக ஏழையை அது கைவிடுவதில்லை.. மாறாக நீதியின் குரலாய் எழும்பி இந்த நித்திலம் முமுவதும் ஒலிக்கிறது!
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா
!
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா
பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வுபறி போவதோ
பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறி போவதோ
அறியாத நங்கை எனதாசை தங்கை
கதிஏதும் காணாமல் மனம் நோவதோ
அறியாத நங்கை எனதாசை தங்கை
கதிஏதும் காணாமல் மனம் நோவதோ
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா
சிறகே இல்லாத கிளிபோல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே
சிறகே இல்லாத கிளி போல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே
பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடை போடுதே
பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடைபோடுதே
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா
1958.ல் வெளிவந்த பாடல் “எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா ” ….அந்த வர்க்கபேதம் இன்றுவரை 2020–7–28.தீராமல் அப்படியே இருக்கிறது …!