Blog

  • காதல் நாற்பது – 13: கட்டு மீறிய காதல் !

    –சி. ஜெயபாரதன்.

     

     

    Elizabeth Browing

     

    காதல் நாற்பது (13)
    கட்டு மீறிய காதல் !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    உன்மீது நான் கொண்ட காதலை
    என்னைச் சொல்ல வைத்தி டுவாய்
    ஏற்புடைய சொற்களில்
    நாகரீகமாக !
    நம்மிரு முகங்களுக் கிடையே
    ஒளித் தீபம் ஏந்தி,
    வெளியே காற்று கொந்தளிக்க,
    விளக்கொளியை
    சமர்ப்பிப்பேன் நின் பாதங்களில் !

    எனது கையிக்கும் எட்டாமல்
    என்னுள் ஒளிந்திருக்கும்  உணர்ச்சியை
    எப்படி வார்த்தை களில்
    நிரூபணம் செய்வது ?
    என்னைத் தாண்டிச் செல்லும்
    எனது ஆன்மாவைப்
    பற்றி நிறுத்த என் கையிக்குக்
    கற்றுக் கொடுக்க இயலாது !

    அந்தோ இல்லை,
    உன் நம்பிக் கைக்கு
    என் ஊமைத்தனப் பெண் நிலைமை
    பாராட்டச் செய்யும்
    என் பெண்மைக் காதலை !
    உனை வசப்படுத்த நான்
    முனைந்தாலும்
    உனக்குரி யவளாய்
    ஆக்கப் படாது போனால்
    கிழிக்குமென் உயிர் ஆடையைச்
    சிறிதளவில் !

    உறுதியாய் யுள்ள
    வாய்ச்சொல் தோற்றாலும்
    வைராக்கிய முள்ள
    இந்த இதயம்,
    ஒருமுறை உன்னால்
    தீண்டப் பட்டால்
    எடுத்து ரைக்கும்  அது
    படும் துயரை !

    ********************

    Poem -13
    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing

    And wilt thou have me fashion into speech
    The love I bear thee, finding words enough,
    And hold the torch out, while the winds are rough,
    Between our faces, to cast light on each?–
    I drop at thy feet. I cannot teach
    My hand to hold my spirit so far off
    From myself–me–that I should bring thee proof
    In words, of love hid in me out of reach.
    Nay, let the silence of my womanhood
    Commend my woman-love to thy belief,–
    Seeing that I stand unwon, however wooed,
    And rend the garment of my life, in brief,
    By a most dauntless, voiceless fortitude,
    Lest one touch of this heart convey its grief.

    **********

    Share
  • கணேசன்

    –நாகை வை. ராமஸ்வாமி.

    குக்கிராமமும் இல்லாத, டவுனும் இல்லாத அந்த ஊர், கடலூர் டவுன் ஒட்டியது. மலைகள் இல்லாவிட்டாலும்,  கடிலம் ஆற்றை ஒட்டி, மலர்கள் பூத்துக் குலுங்கும், அழகான செழுமையான இடம்.

    அங்கே,  “திரு நாகலிங்கம் ஐயா உபய துணிக்கடல்”  மிகவும் பிரபலம் வாய்ந்தது.  மிகவும் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடை, வளர்ந்து, பல நகரங்களிலும் கிளைகள் பெருகியதால், துணிக்கடை, ‘துணிக்கடல்’ ஆக மாறியது.  நாணயம், நம்பிக்கை, தரம் இவற்றிற்குப் பெயர் பெற்றது.

    அதன் உரிமையாளர் திரு கணேசன் அந்த ஊரின் பெரிய புள்ளி.  இலவசப் பள்ளிக்கூடம், இதர பல திட்டங்கள் அவர் நன்கொடையுடன் மக்களுக்கு நன்மை செய்து, அந்த செய்தி பரவி, பத்திரிகைகளிலும் வரத் தொடங்கியது.  அவர் எது செய்தாலும், ‘திரு நாகலிங்கம் ஐயா உபய….” என்ற பெயரில் தான் தொடங்குவார்.

    அன்று காலை, ‘செய்தியாளர்’ என்று எழுதப்பட்ட ஒரு ஜீப் அந்தக்கடை வாசலில் நின்றது.  அதிலிருந்து இறங்கிய ஒரு நிருபர், “கணேசன் சார் இருக்கிறார்களா” என்று வினவியபடியே கடைக்குள் நுழைந்தார்.

    “ஐயா வர இன்னும் நேரம் இருக்குங்க, நீங்க வேண்டுமானால் அவங்க தோட்டத்தில சந்திக்கலாம்” என்று விலாசம் கொடுத்தார்கள் சிப்பந்திகள்.

    சிப்பந்திகளை தம் குடும்ப உறுப்பினர்கள் போல் கவனித்து வந்தார் உரிமையாளர் கணேசன்.  அதனால், சிப்பந்திகளும், தண்டத்திற்கு அழும் மற்ற வேலைக்காரர்கள்  போலல்லாமல், பொறுப்புடனும், அக்கறையுடனும் வேலை செய்து, வியாபாரம் வளர பெரிதும் பாடுபடும் வகையினர்.

    தலையில் முண்டாசுடன் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த நடு வயது தாண்டிய,  ஆனால் கம்பீரம் குறையாத அந்த ஆசாமியிடம், நிருபர், “கணேசன் ஐயாவைப் பார்க்க வேண்டும், அழைத்துச் செல்கிறீர்களா” என்று கேட்டார்.

    “என்ன விஷயம்?”

    “எங்கள் பத்திரிகைக்கு ஒரு பேட்டி காண்பதற்காக”

    “அப்படியா, உள்ள வாங்க”

    உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அவரை அமர்த்திவிட்டு உள்ளே சென்றார் அந்த ஆசாமி.

    சிறிது நேரம் கழித்து உள்ளிருந்து, “வணக்கம், வாங்க, நான் தான் கணேசன்” என்ற குரல் கேட்டது.

    அந்த நபரைப் பார்த்த நிருபருக்கு ஒரே ஆச்சரியம்.  ஏனென்றால், அவர் சந்தித்த அந்த தோட்ட ஆசாமிதான் அவர்.

    “ஐயா, நீங்க..?”

    “நான் தான் அது.  அப்போ தோட்ட தொழிலாளி, இப்போ கடை முதலாளி, என்ன வேண்டும் சொல்லுங்க.

    “முதலில் கொஞ்சம் தேனீர் அருந்துங்க” என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுதே ஒரு அழகான ட்ரேயில் பீங்கான் கோப்பையில் சூடான தேனீர் பிஸ்கட்டுகளுடன் வந்தது.

    “ஐயா, முதலில் முன்னறிவிப்பில்லாமல் வந்ததற்கு என்னை மன்னிக்கவும். தாங்கள் இந்த வட்டாரத்தில் செல்வாக்குடன் இருக்கும் பெரிய மனிதர்.  எங்கள் பத்திரிகையில் தங்கள் பேட்டி வரவேண்டும் என்று வாசகர் பலர் கேட்டுக்கொண்டதன் பேரில், வந்துள்ளேன்.”

    “அப்படி என்ன தம்பி பேட்டி எடுக்கும் அளவுக்கு நான் செஞ்சிட்டேன்? உங்க பெயர் என்ன சொன்னீங்க?”

    “நான் சென்னையிலிருந்து வருகிறேன் ஐயா, என் பெயர் ஸ்ரீதர், ‘சாதனை’’ பத்திரிகையின் சார்பாக வந்திருக்கிறேன்.

    “அப்படியா, பெயர் நல்லா இருக்கே, உங்களுடையவும், உங்கள் பத்திரிகையுடையவும்.  அது என்ன சாதனை? பெயர் புதுசா இருக்கே?”

    “ஆமாம் ஐயா, எங்கள் உரிமையாளர் திரு கிருஷ்ணஸ்வாமி எதையும் புதியதாக, ஒரு சாதனையாகச் செய்வார்.   எங்கள் பத்திரிகையில் வரும் பேட்டிகள், கட்டுரைகள் அனைத்தும் ஏதாவதொரு சாதனை பற்றியே இருக்கும்.  அது வருங்கால சந்ததியினருக்கு ஒரு படிப்பினையாகவும், ஊக்கமளிக்கும் முன்னோடியாகவும்,  அமையும்.  ”

    “ரொம்ப நல்ல விஷயம்.  சொல்லுங்க, என்ன தெரிஞ்சுக்க வேணும் என்னய பத்தி?”

    “எல்லாமே சொல்லுங்க, உங்க கடந்த கால வாழ்க்கை, எப்படி முன்னுக்கு வந்தீங்க, எல்லாமே”

    “நான் ஒரு ஆறாங் கிளாஸ் மட்டும் தொட்ட படிப்பறிவில்லாதவன், ஏதோ எனக்குத் தெரிஞ்ச வரை சொல்லிட்டே போறேன், எப்படி எளுதணும்னு நினைக்கிறீங்களோ, எளுதிக்கிங்க, ஆனால், தப்பா மட்டும் எளுதிடாதீங்க, சரியா?”

    “ஆகட்டும் ஐயா, சொல்லுங்க”

    ஜவுளிக்கடைகமல் ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஒரு காட்சி பின்னோக்கி செல்லும், வெகு பிரமாதமாக எடுத்திருப்பார்கள், அது போல, கணேசனின் நினைவலைகள் பல வருடங்கள் பின்னோக்கி சென்றன.

    கணேசன் ஒரு 11 வயது சிறுவன்.  குடிகார கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, கணேசனையும், அவனுக்கு அடுத்த 6 வயது தங்கையையும் பராமரித்துக் கொண்டு, சமாளித்து வரும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசமுடைய நல்ல குணமுடைய சிறுவன்.  ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றினாலும், என்ன செய்வது எப்படி செய்வது என்று அறியாமல் திணறினான்.

    அன்று பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய அவன் வீட்டில் நடந்ததைப் பார்த்து கதி கலங்கிப் போய்விட்டான்.   குடித்துவிட்டு வந்த அப்பா, காசு கேட்டு அம்மாவை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்.   இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் இப்பொழுது தான் நேரில் பார்க்கிறான்.

    சிறுவனாக இருந்தாலும், இப்பிரச்சினைக்குக் காரணம் பணம் என்பதைப் புரிந்து கொண்டான். ஒரு முடிவு எடுத்தான்.

    மறுநாள், வழக்கம்போல் அம்மா, பள்ளிக்கூடம் போவதற்காக சோற்றுமூட்டை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, “அம்மா, நான் இனி பள்ளிக்கூடம் போகமாட்டேன்.” என்றான்.

    அம்மா திடுக்கிட்டு, “ஏண்டா கணேசு, இப்படிச் சொல்லறே?” என்று கேட்டதற்கு, “நான் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கிறேன் அம்மா, நீ இப்படி அப்பாவிடம் அடிபடுவது எனக்கு ரொம்ப தாங்கலை” என்று அழுதான்.

    “எல்லாம் சரியாயிடும் கண்ணு, கடவுள் கண்ணைத் திறந்தார்னா, ஒரு நிமிஷத்தில் கஷ்டமெல்லாம் சரியாயிடும்,  அப்பா வேணுமின்னா அடிக்கிறாரு, அவருக்குள்ள ஒரு கஷ்மாலம் பூந்துகிட்டு ஆட்டுது. நீ இஸ்கூலுக்கு போய் படிச்சு பெரிய ஆளா வரணுமின்னு நான் கனா கண்டுகிட்டு இருக்கேன், நீ என்னடான்னா, என் தலையில இடி போடறே?”

    “சரி வுடு, இன்னிக்கு போவல.”

    அன்று இரவு தூங்காமல் மண்டைக்குள் கரப்பான் பூச்சி, தேள், பூரான் இவையெல்லாம் புகுந்து குடைந்தாற்போல் உணர்ந்தான், பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், மனசு லேசானது, மண்டையில் கலக்கம் இல்லை, தேள் இல்லை, தெளிவு இருந்தது.

    “டேய், கணேசு, செல்லம், எளுந்திரிச்சி இஸ்கூல் போடா கண்ணு” என்று சொல்லிக் கொண்டே வந்த அவன் அம்மாவுக்கு அதிர்ச்சி.

    படுக்கையில் கணேசன் இல்லை.  படுக்கை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.  பட்சி பறந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.  வயிற்றில் கலக்கம், நெஞ்சில் கனம், கண்களில் தாரை.

    ஆறு மாதங்களாகியும் கணேசன் என்ன ஆனான் என்று புரியாமல் தவித்தனர், அம்மாவும், தங்கையும்.

    ஒரு நாள் விடியல், “அம்மா” என்று குரல் கேட்டு, கனவோ என்று படுத்துவிட்டாள், மீண்டும் “அம்மா” என்று கேட்டு, குடிசைக் கதவைத் திறந்து பார்த்து ஆச்சரியத்தில் மகிழ்ந்தாள்.  அங்கே, சற்று வளர்ந்த கணேசன்.  உச்சி முகர்ந்து கட்டி பரவசமடைந்தாள்.

    அப்பா குடல் வெந்து இறந்த செய்தியும், அவன் ஒரு துணிக்கடையில் வேலையிலிருக்கும் விஷயத்தையும் பரிமாறிக்கொண்டனர்.

    அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் வாங்கி வந்த துணிமணிகள், தின்பண்டங்கள் கொடுத்து அம்மாவின் கையில் ரூ.2000 கொடுத்து வணங்கினான்.  அன்று பூராவும் அம்மாவின் அரவணைப்பு அன்பில் திளைத்தான்.  அடிக்கடி வருவதாகச் சொன்னான்.

    கணேசன் வேலையில் சேர்ந்தது ஒரு பிரபல துணிக்கடையில்.  அவன் முதலாளி திரு நாகலிங்கம் ஒரு பெரிய தனவந்தர், மனவேந்தர் (பெரிய மனம் படைத்தவர்களை, ஏன் மனவேந்தர் என்று அழைக்கக் கூடாது?)

    அவனைப் பற்றி அறிந்து, முதலில் கவுண்டரில் உதவியாளராகச் சேர்த்து, வேலை கற்றுக் கொள்ளச் சொன்னார்.  பிறகு ‘டெலிவரி பாய்’ என்று சரக்குகளை  வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் பணி கொடுத்தார்.

    கவுன்டரில் துணி காண்பித்து அளந்து கொடுக்கும் வேலையும் அவ்வப்போது.. அதற்குள் வியாபாரம் பற்றிய விபரங்கள் தெரிந்துகொண்டான்.  துணி மணிகள் மொத்தமாக சென்னை, பம்பாய், சூரத் முதலிய இடங்களிலிருந்து கொள்முதல் செய்வது, தரம் பிரிப்பது, விலை நிர்ணயம் செய்வது எல்லாம்.

    அப்பொழுதுதான் அவனுக்குள் புகுந்தது பணத்தாசை பூதம்.  நாணயத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொண்ட அவன் துரோகம் செய்ய முற்பட்டான்.

    “தம்பி கணேசா, நாளை அடுத்த ஊர் மிராசுதார் வீட்டுக்கு சரக்கு கொடுத்துவிட்டு, பணம் வாங்கி வந்துடு, ஜாக்கிரதை, பணம் பெருசு.  வெள்ளன கிளம்பி நம்ம வண்டியிலே போய்விட்டு வந்துடு” என்றார் முதலாளி.

    “ஆகட்டும் ஐயா”

    ஏற்கனவே கவுன்டர் வேலை வரும்பொழுதெல்லாம், அரை மீட்டர் அளவுக்கு துணிகளில் மிச்சம் பிடித்து, பிட் துணி வரும்பொழுதெல்லாம், அதை சுருட்டி, ஒரு நண்பராக்கிக் கொண்ட டெய்லரிடம் கொடுத்து சிறிது சிறிதாக பணம் சேர்த்தான்.

    அங்குள்ள வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பித்து அதில் சேமித்தும் வைக்கத் துவங்கியாகிவிட்டது.

    மறுநாள் காலை வண்டி வந்ததும், ஐயாவிடம் சொல்லி, வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி, தானே வண்டியை ஓட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

    மாலை கடை திரும்பிய கணேசைப் பார்த்த முதலாளி பதற்றம் அடைந்துவிட்டார்.  ஏனெனில், அவன் உடம்பில் ரத்தக் காயங்கள்.

    விசாரித்தபொழுது, வழியில் திருடர்கள் அவனை மடக்கி பணத்தைப் பறிக்க முயன்றதில், அவனுக்கு செமத்தியாகக் கொடுத்துவிட்டனர்.

    “அடப் பாவமே, ஏண்டா கணேசா, பணம் பறி போய்விட்டதா?”

    “பூரா போகல ஐயா, நான் மறைச்சு வச்சிருந்தேன், ஒரு இருபத்தி ஐயாயிரம் மட்டும் எடுத்துக்கிட்டு போயிட்டாங்க ஐயா, மீதி பத்திரமா இருக்கு ஐயா, இந்தாங்க, எழுபத்தையாயிரம். ஆனா ரொம்ப வருத்தமாயிருக்கு ஐயா, ஐயா பணத்த இப்படி கோட்டை  விட்டுட்டமேன்னுட்டு ”

    “போனாப் போவது பயலே, நீ பத்திரமா வந்திட்ட இல்ல, டாக்டருகிட்ட போய் நான் சொன்னதாக சொல்லி மருந்து போட்டுக்கிடு”.

    “சரிங்க ஐயா,”  உள்ளுக்குள் சந்தோஷம் அவனுக்கு.  இதுவரை சேர்த்ததில் இருபத்திஐயாயிரம், இப்போது சுளையாக இருபத்தி ஐயாயிரம், ஐம்பது ஆயிரம் சேர்த்தாகிவிட்டது, ஒரு சின்ன கடையாகப் போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட வேண்டியது தான்.

    கடை வெச்சு, நல்லா பணம் பண்ணனும், தங்கச்சியை நல்லா படிக்கவெச்சு, நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கணும்.  அம்மாவை பத்திரமா பாத்துக்கணும், அவங்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து சந்தோஷமா வச்சுக்கணும்.

    அவன் கற்பனை இறக்கை முளைத்த வெண் குதிரையாக வானில் பறந்தது, அதில் அவன் ஒரு ராஜகுமாரானாக உட்கார்ந்திருந்தான்.  சினிமா பார்க்கும் பழக்கமுள்ளவனாதலால், அவன் உதடுகள் “ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம்….” என்ற பாடலை முணுமுணுத்தது, மனது, எம்.ஜி.ஆருக்குப் பதிலாக தன் உருவத்தைப் பதித்தது.

    சற்று ஓய்வில், முதலாளி வெளியில் சென்றிருந்த சமயம், வண்டிக்கார அண்ணாச்சி, கணேசைத் தனியே அழைத்து, “தம்பி உங்கிட்ட தனியே பேசணும், ராத்திரி தூங்கப் போகயிலே, எங்க வீட்டு வாசலுக்கு வந்து ஒரு குரல் கொடு.” என்றதும் தான் சுய நினைவிற்கே வந்தான்.

    “என்ன அண்ணாச்சி, எதினாச்சும் சங்கடமா?”

    “நேரில சொல்றேன், வா.”

    அன்று இரவு அண்ணாச்சி சொன்ன விஷயம், அவனுக்கு அதள பாதாளத்தில் விழுந்த உணர்வை ஏற்படுத்தியது.

    அவன், முதலாளிக்குச் செய்துகொண்டிருந்த துரோகம் அனைத்தும் முதலாளிக்குத் தெரியும் என்றும், அன்று வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி அவனே மிராசுதார் வீட்டிற்கு அவன் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம், அண்ணாச்சியை பின் தொடர்ந்து பார்க்கச் சொல்லிவிட்டார் முதலாளி.   வரும் வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி, அவனே காயம் ஏற்படுத்திக் கொண்டு, பணத்தை அவன் அறையில் பதுக்கி வைத்துவிட்டு வந்த விஷயம் முதலாளிக்குத் தெரிந்துவிட்டது என்று சொன்னதுமல்லாமல், அநேகமாக அவனுக்கு சீட்டு கிழிக்கப்படும் என்றும் சொன்னார்.

    வியர்த்து வெலவெலத்துவிட்டது கணேசனுக்கு, இனி தன் வாழ்க்கை அவ்வளவுதான், கம்பி எண்ணி ஜெயில் வாசம் தான் என்ற பயத்தில் இரவைக் கழித்தான்.

    என்னதான் இருந்தாலும், அடிப்படையில் நல்ல குணம் கொண்ட அவன், அம்மா சொல்லிக் கொடுத்த அரைகுறை கடவுள் வாழ்த்துக்களைச் சொல்லி, விபூதி இட்டுக் கொண்டு, கோயிலுக்குச் சென்று கும்பிட்டுவிட்டு முதலாளி வீட்டிற்கு கடை திறக்குமுன்னே சென்றான்.

    முதலாளி, “எங்கடா பயலே வந்தே, காலங்கார்த்தால, என்று சொல்வதைப் பார்த்தால், அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, அண்ணாச்சி சொன்னது வேறு, நடப்பது வேறாக இருக்கிறதே?

    எது என்னவானாலும் சரி என்று, முதலாளி கால்களில் நெடுஞ்சாணாக விழுந்து, “ஐயா, என்னை மன்னித்துவிடுங்க  என்ன வேண்டுமானாலும், எப்படி வேணுமானாலும் தண்டிச்சிடுங்க ஐயா, உங்க உப்பைத்தின்றுவிட்டு, உங்களுக்கே துரோகம் செய்துவிட்டேன் ஐயா”, என்று தேம்பித் தேம்பி அழுதவாறே செய்த தவறுகள் எல்லாம் சொல்லிவிட்டு, இதுவரை சேமித்து வைத்த ஐம்பதாயிரம் ரூபாயையும் கடையில் அவரிடம் கொடுத்துவிடுவதாகச் சொன்னான்.

    “எளுந்திரடா பயலே, எனக்கு எல்லாம் தெரியும்.  நீ நல்லவனாச்சே, ஏன் இப்படி புத்தி போச்சு என்று யோசனை செய்தேன், உன்னுடைய கடந்த கால வாழ்க்கைக் கஷ்டம், நீ உன் அம்மாவிடமும் தங்கச்சியிடமும் வச்ச பாசமும் இப்படி செய்யத் தூண்டிவிட்டது தெரிந்தது.  நீ கெட்டுப் போறதுக்கு முன்னமே, நான் ஒன்னய ஒரு வழி செஞ்சிருக்கணும்.  பரவாயில்ல, நீ இன்னிக்கு கடைக்குப் போகவேண்டாம்.  சாயந்திரம் வீட்டுக்கு வா”  என்றார்.

    வங்கிக் கணக்கை முடித்து பணத்தை எடுத்துக் கொண்டு, கையில் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு, முதலாளி வீட்டுக்குச் சென்றான்.  பணம் பூராவையும் அவர் காலடிகளில் வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை கால்களில் விழுந்தான்.

    “டேய் பயலே, எழுந்திருடா,  நீ உண்மையானவன், உழைப்பாளி, நல்லவன் என்று எனக்குத் தெரியும்.  இருந்தாலும், நீ பட்ட கஷ்டம் உன்னை சில தவறுகளை செய்ய வைத்துவிட்டது.  நான் உன்னைக் கண்காணித்து வந்தேன்.  நீ உன் தவறுகளை உணர்ந்து, எடுத்த பணத்தை பூராவும் திரும்ப கொடுத்த நேர்மையே நான் உன் மீது வைத்த நம்பிக்கை வீணல்ல என்று காட்டுகிறது” என்றார்.

    பிறகு,  அங்கு காத்திருந்த வண்டிக்கார அண்ணாச்சியைக் கூப்பிட்டார், “என்னப்பா, நான் சொன்னது உனக்கு சம்மதமா?” என்று கேட்டார்.  அண்ணாச்சி, “ஐயா, எது சொன்னாலும் செஞ்சாலும் அது நல்லதுக்குத் தானே ஐயா, நீங்க சொன்னா சரி ஐயா” என்றார்.

    பிறகு, கணேசனிடம், “இந்தாப்பா, நீ வேலை செஞ்சது போதும்..” என்றார்.

    அவனுக்குத் தலை சுற்றியது.

    “ஐயா, எனக்குத் தண்டனை கொடுங்க ஐயா, ஆனா, வேலையிலிருந்து மட்டும் நிறுத்திடாதீங்க ஐயா” என்று கதறினான்.

    “எலே, இருடா, நான் ஒன்னய வேலை செஞ்சது போதும் என்று தானே சொன்னேன், வியாபாரம் செய்ய வேண்டாமுனு சொன்னேனா?” என்றார்.

    திகைத்தான் கணேசன்.

    அவனை மன்னித்ததோடல்லாமல், அவனுக்காக ஒரு சிறிய துணிக் கடை வைத்துக் கொடுத்து, அண்ணாச்சி மகளையும் அவனுக்கு கல்யாணம் செய்து கொடுத்து அவனை வாழ வைத்துவிட்டது அந்த மனித தெய்வம்.

    அவன் நா தழுதழுத்தது.  “ஐயா, உங்கள் பெருந்தன்மைக்கும் என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும், என் தோலை செருப்பாகச் செய்து தங்களுக்குப் போட்டாலும் ஈடாகாது” என்று சொல்லி தேம்பினான்.

    “ஹலோ, தம்பி ஸ்ரீதர், என்ன, நான் சொன்னது கேட்டுச்சா? தூங்கிட்டீங்களா?” என்றதும் தான், அந்த நிருபருக்கு கனவிலிருந்து மீண்டது போல் இருந்தது..

    ஐயா, மெய் மறந்து விட்டேன் ஐயா, இப்ப புரியுது நீங்க ஏன் உங்க கடைக்கு  எல்லாம் அப்படி பெயர் வைத்தீர்கள் என்று.

    “எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகம்  வருது, சொல்லவா?” என்றார் அந்த நிருபர்.

    “சொல்லுங்க தம்பி, ஆனால், இந்த போர்டைப் பார்த்துவிட்டு சொல்லுங்க” என்றார் கணேசன்.  “அட, அதாங்க நான் சொல்ல வந்தது” என்று சொன்ன ஸ்ரீதர் பார்த்த அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது,

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்துவிடல்” என்ற குறள்.

    நான் எங்க முதலாளிக்கு துரோகம் செய்தேன், ஆனால், என்னை அவர் நான் எண்ணிப் பார்க்க முடியாத, எனக்குத் தகுதியே இல்லாத உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார வச்சிட்டார்.  அதனால தான் அந்த குறளை ஒரு படிப்பினைக்காக எளுதி வச்சிருக்கேன் தம்பி.

    “டாடி, நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வரேன், பை” என்றவாரே வந்த அந்த பையனிடம், “அங்கிளுக்கு வணக்கம் சொல்லுடா தம்பி” என்றார்.

    வணக்கம் சொன்ன அந்த பையனிடம்,  “தம்பி, உன் பெயரென்ன?” என்று கேட்டதற்கு வந்த பளிச் –

    “நாகலிங்கம்”..

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://redtricom.files.wordpress.com/2013/07/sonia-selections-devon.jpeg?w=494&h=403

    Share
  • மாபெரும் குறு – கதைப் போட்டி!

    செல்வமுரளி

    “விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5 -ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு @Visualmedia Technologies மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு – கதைப் போட்டி.

    50 ஓவர் கிரிக்கெட் ஆட்டங்கள்போய் இன்று 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டம் வந்துவிட்டது.அதேபோல் இந்த கதை எழுதுபவர்களிடையே ஆர்வம் ஊட்டவும், புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும் இந்த முயற்சி

    சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.

    இந்த போட்டியில் தேர்வாகும் சிறந்த தேர்வாகும் சிறந்த 50 கதைகள் ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் கதை தொகுப்புகள் கொண்ட ஒரு மென்பொருளாக உருவாக்கி வெளியிடப்படும். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கைகளில் உங்கள் கதைகளுடன் உங்கள் பெயர் ஒளிரும்.

    கதைகளை அனுப்பவும், மேற்கொண்டு விபரங்கள் தேவைப் படினும் – ஈ.மெயில் ஐ.டி-க்கள்

    murali(at)visualmediatech.com & yeskha(at)gmail.com

    கதைகள் அனுப்ப கடைசி தேதி : 30.07.2014

    முதல் பரிசு : 20 கிராம் வெள்ளி நாணயம்

    இரண்டாம் பரிசு : 10 கிராம் வெள்ளி நாணயம்

    மூன்றாம் பரிசு : 5 கிராம் வெள்ளி நாணயம்

    மூன்று கதைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

    விதிமுறைகள்

    உங்கள் கதையின் அளவு அதிக பட்சம் 50 வார்த்தைகள் மட்டுமே. மிகுதல் கூடாது.

    ஒருவரது ஒரு கதை மட்டுமே போட்டிக்கு பரிசீலிக்கப்படும். ஆனால் ஒருவரே எத்தனை கதை வேண்டுமானாலும் டைப்பி அனுப்பலாம். நீங்கள் எழுதியதில் “ஏ, சூப்பருப்பா” என்று தோன்றும் கதையை (போட்டிக்கு) என்றும் மற்ற கதைகளை (தொகுப்புக்கு) என்று குறியிட்டும் அனுப்பவும்

    வயது வரம்பா? கிடையவே கிடையாது.

    உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் (தமிழ் எழுதத் தெரிந்த யாரும்) கலந்து கொள்ளலாம்.

    கதைகள்

    இணைய தளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே வெளிவந்திருக்கக் கூடாது, மிக முக்கியமாக மண்டபத்தில் யாரோ எழுதியதை (ஃபேஸ்புக் (அ) ப்ளாக்) “கட்டு, காப்பி, பேஸ்ட்டு, அனுப்பு” செய்யவே கூடாது.

    போட்டி முடிவுகள் வெளிவரும் வரையில் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்ப மாட்டேன் மேலும் இது சொந்தச் சரக்கே என்று டிஸ்கியில் உத்தரவாதம் போட்டு அனுப்ப வேண்டும்.

    கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

    கதைகள் தேர்வு செய்யப்பட்டால் அதன் பதிப்பு உரிமை “விஷூவல்மீடியா டெக்னாலஜிஸ்” ஐ சேரும். கதைகளை எந்தப் பதிப்பிலும் வெளியிட விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு உரிமை உண்டு.

    தேர்ந்தெடுக்கப்படும் 50 கதைகளும் தொகுக்கப் பட்டு ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக வெளியிடப்படும். நீங்கள் போட்டியில் கலந்து கொள்வதன் மூலமே அதன் உரிமையை விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு அளிக்கிறீர்கள்.

    திகில், த்ரில், நகைச்சுவை, ஐடியா, காதல், நக்கல், அரசியல் என எந்தப் பிரிவிலும் கலக்கலாம்.

    “அட” என ஆச்சரியப்படுத்தும் “ஆ” என அதிர்ச்சியூட்டும், “க்யூட்” என புன்னகை பூக்க வைக்கும் “பளிச்” என கவனம் ஈர்க்கும் கதைகளை இருபது கரம் நீட்டி வரவேற்கிறோம்.

    “காதல் வலையில் வீழ்த்து”, “சதி வலை”, “டைப்பிஸ்ட் கமலா”, “ஹெட்கிளார்க் ரங்கநாதன்” போன்ற பழைய சொற்பிரயோகங்களை தயவு செய்து தவிர்க்கவும்.

    முடிவு வெளியாகும் வரை இது தொடர்பாக எந்த ஒரு தனிப்பட்ட மெயில், போன் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்
    .
    இது விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் மற்றும் ஜோக் எழுத்தாளர் சேலம் எஸ்கா இணைந்து தனிப்பட்ட ஆர்வத்தினால் எந்த ஒரு இலாப நோக்கமும் இன்றி நடத்தும் ஒரு போட்டியாகும். எங்களது முடிவே இறுதி முடிவு.

    தீபம் விளக்கெண்ணெய் போட்டு பரிசீலித்தும் தவறுதலாக திருடப்பட்ட கதைகள் வெளிவந்தால் அதற்கு கதையை அனுப்பியவரே பொறுப்பு. மேற்கொண்டு எழும் பஞ்சாயத்துகளுக்கு எந்த விதத்திலும் விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்- , சேலம் எஸ்கா-வோ பொறுப்பல்ல.

    பரிசு வழங்க விரும்பும் ஸ்பான்சர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும் (பெரிய லெவல்-லாம் இல்லைங்கண்ணே. உங்களிடம் நிறைய புத்தக கலெக்ஷன் இருந்தால் பத்து பேருக்கு புத்தகப் பரிசு கொடுக்கலாம். நீங்கள் துணிக்கடை வைத்திருந்தால் சால்வை கொடுக்கலாம், இந்த மாதிரி வேறேதேனும் ஐடியாவும் கொடுங்க)மாபெரும் குறு – கதைப் போட்டி சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.

    “விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5 -ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு @Visualmedia Technologies மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு – கதைப் போட்டி.

    தேர்வாகும் சிறந்த 50 கதைகள் ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக உருவாக்கி வெளியிடப்படும். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கைகளில் உங்கள் கதைகளுடன் உங்கள் பெயர் ஒளிரும்.

    கதைகளை அனுப்பவும், மேற்கொண்டு விபரங்கள் தேவைப் படினும் – ஈ.மெயில் ஐ.டி-க்கள்

    murali(at)visualmediatech.com & yeskha(at)gmail.com

    கதைகள் அனுப்ப கடைசி தேதி : 30.07.2014

    முதல் மூன்று கதைகள் பிரபல நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும். பரிசு மற்றும் நடுவர்கள் விபரம் பிறகு….
    நண்பர்கள் இந்த அறிவிப்பை ஷேர் செய்து தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்.

    விதிமுறைகள்

    உங்கள் கதையின் அளவு அதிக பட்சம் 50 வார்த்தைகள் மட்டுமே. மிகுதல் கூடாது.

    ஒருவரது ஒரு கதை மட்டுமே போட்டிக்கு பரிசீலிக்கப்படும். ஆனால் ஒருவரே எத்தனை கதை வேண்டுமானாலும் டைப்பி அனுப்பலாம். நீங்கள் எழுதியதில் “ஏ, சூப்பருப்பா” என்று தோன்றும் கதையை (போட்டிக்கு) என்றும் மற்ற கதைகளை (தொகுப்புக்கு) என்று குறியிட்டும் அனுப்பவும் வயது வரம்பா? கிடையவே கிடையாது.

    உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் (தமிழ் எழுதத் தெரிந்த யாரும்) கலந்து கொள்ளலாம்.

    கதைகள் இணைய தளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே வெளிவந்திருக்கக் கூடாது, மிக முக்கியமாக மண்டபத்தில் யாரோ எழுதியதை (ஃபேஸ்புக் (அ) ப்ளாக்) “கட்டு, காப்பி, பேஸ்ட்டு, அனுப்பு” செய்யவே கூடாது.

    போட்டி முடிவுகள் வெளிவரும் வரையில் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்ப மாட்டேன் மேலும் இது சொந்தச் சரக்கே என்று டிஸ்கியில் உத்தரவாதம் போட்டு அனுப்ப வேண்டும்.

    கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

    கதைகள் தேர்வு செய்யப்பட்டால் அதன் பதிப்பு உரிமை “விஷூவல்மீடியா டெக்னாலஜிஸ்” ஐ சேரும். கதைகளை எந்தப் பதிப்பிலும் வெளியிட விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு உரிமை உண்டு.

    தேர்ந்தெடுக்கப்படும் 50 கதைகளும் தொகுக்கப் பட்டு ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக வெளியிடப்படும். நீங்கள் போட்டியில் கலந்து கொள்வதன் மூலமே அதன் உரிமையை விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு அளிக்கிறீர்கள்.

    திகில், த்ரில், நகைச்சுவை, ஐடியா, காதல், நக்கல், அரசியல் என எந்தப் பிரிவிலும் கலக்கலாம்.

    “அட” என ஆச்சரியப்படுத்தும் “ஆ” என அதிர்ச்சியூட்டும், “க்யூட்” என புன்னகை பூக்க வைக்கும் “பளிச்” என கவனம் ஈர்க்கும் கதைகளை இருபது கரம் நீட்டி வரவேற்கிறோம்.

    “காதல் வலையில் வீழ்த்து”, “சதி வலை”, “டைப்பிஸ்ட் கமலா”, “ஹெட்கிளார்க் ரங்கநாதன்” போன்ற பழைய சொற்பிரயோகங்களை தயவு செய்து தவிர்க்கவும்.

    முடிவு வெளியாகும் வரை இது தொடர்பாக எந்த ஒரு தனிப்பட்ட மெயில், போன் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்
    .இது விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் மற்றும் ஜோக் எழுத்தாளர் சேலம் எஸ்கா இணைந்து தனிப்பட்ட ஆர்வத்தினால் எந்த ஒரு இலாப நோக்கமும் இன்றி நடத்தும் ஒரு போட்டியாகும். எங்களது முடிவே இறுதி முடிவு.

    தீபம் விளக்கெண்ணெய் போட்டு பரிசீலித்தும் தவறுதலாக திருடப்பட்ட கதைகள் வெளிவந்தால் அதற்கு கதையை அனுப்பியவரே பொறுப்பு. மேற்கொண்டு எழும் பஞ்சாயத்துகளுக்கு எந்த விதத்திலும் விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்- , சேலம் எஸ்கா-வோ பொறுப்பல்ல.

    பரிசு வழங்க விரும்பும் ஸ்பான்சர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும் (பெரிய லெவல்-லாம் இல்லைங்கண்ணே. உங்களிடம் நிறைய புத்தக கலெக்ஷன் இருந்தால் பத்து பேருக்கு புத்தகப் பரிசு கொடுக்கலாம். நீங்கள் துணிக்கடை வைத்திருந்தால் சால்வை கொடுக்கலாம், இந்த மாதிரி வேறேதேனும் ஐடியாவும் கொடுங்க)
    நண்பர்கள் இந்த அறிவிப்பை ஷேர் செய்து தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்.

    Selva.Murali | Visual Media Technologies | Your Dreams Visual Here

    Mobile : +91-99430-94945/
    Mail ID :- murali@visualmediatech.com <Murali@visualmediatech.com> |
    visualmediatech.com

    www.Rupeeshost.com | www.CloudsIndia.in| Cloud Hosting Providers | VPS|
    Cloud|

    DoveMail | Bulk mailing Solutions | Voice mail Solutions

    Technet24x7.com | Technical Support & Call Center support

    CPAD – Low Cost Tablet PC Sellers | WWW.CPADINDIA.COM

    Share
  • திருமால் திருப்புகழ் (145)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் விஷ்ணுவின் சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    blogger-image-1688585714

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_06_01_archive.html

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (144)

    கிரேசி மோகன்

    Bhagavatha - Krishna's subdues Indra's pride  - keshav
    Bhagavatha – Krishna’s subdues Indra’s pride – keshav

    செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் விஷ்ணுவின் சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    Bhagavatha - Grace shown to the brahmin matrons - Keshav
    Bhagavatha – Grace shown to the brahmin matrons – Keshav

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • வாஸுதேவ அஷ்டகம்

    சு.ரவி 

     

    Click on link below to listen to some Krishnar Songs written by me & sung by SPB, CHITHRA,KS RAJAGOPAL- music by Ramesh Vinayagam n one song by L.Krishnan.
    4 stanzas of Vaasudeva Ashtakam can be heard in SPB’s golden voice..

    Scroll below for full Ashtakam n a few Krishna paintings frm my iPad..

    For ketka, padikka, paarkka rasikka..

    Su.Ravi

     

    https://archive.org/details/SuraviKrishnarAlbumSongs

    3EFC1BDF-2029-4A1C-9FB5-7C905DBE2E77

    வாஸுதேவ அஷ்டகம்
    சினம் கொண்ட மாமன்
    சிறை தந்த பாலன்
    தினம் கோடி லீலை
    நிகழ்த்தும் ப்ரதாபன்
    மனம் கொண்ட கள்வன்
    மழை மேக வண்ணன்
    இனம் கண்டு கொண்டேன்
    இவன் வாசுதேவன் (1)

    விளம் சாய்த்த கன்றும்,
    விரல் மீது குன்றும்
    உளம் தன்னில் என்றும்
    படம் போல் இலங்கும்
    இளம் பிள்ளை என்றாலும்
    தெய்வ ஸ்வரூபம்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (2)

    55DC1229-D01F-4DCE-9656-39E72922A910

    விடம் கோண்ட நீரில்
    ‘துடும்” என்று பாயும்
    படம் கண்டு தாவிப்
    பதம் மாற்றி ஆடும்
    நடம் செய்த பாதத்தை
    நாராயணன் என்(று)
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (3)

    ‘ஹரே த்வாரகா வாஸி
    கோவிந்தா’ என்றே
    குரல் தந்த பெண்ணின்
    குறை தீர்த்த தெய்வம்
    அறம் காக்க வென்றே
    முனம் தூது சென்றான்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (4)

    2950F0C3-96B2-4409-928B-2594D6E13CDA

    களம் கண்ட பார்த்தன்
    கலங்கித் துடித்தே
    உளம் சோர்ந்த நேரம்
    உரம் தந்த சாரம்
    நலம் காட்டும் கீதை
    நவில்கின்ற தாதை
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (5)

    குழல் கொண்டு ராகம்
    இசைக்கின்ற மேகம்
    தழல் உண்டதே போல்
    தகிக்கின்ற தேகம்
    சுழல்கின்ற சிந்தைக்குள்
    சூல்கொண்ட மோஹம்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (6)

    B7D35E70-35CF-47B7-ADFD-ECCC825A75EA

    இவன் கோபியர் நெஞ்சில்
    காதல் ப்ரவாஹம்
    இவன் யோகியர் நெஞ்சில்
    ஞானத் தடாகம்
    இவன் யாவும் ஆகின்ற
    ப்ரம்ஹ ஸ்வரூபம்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (7)

    இவன் கேசவன், மாதவன்
    பத்மநாபன்
    இவன் மாயவன், வாமனன்
    பாண்டுரங்கன்
    இவன் ஸ்ரீதரன், விஷ்ணு
    கோவிந்தன் என்றே
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (8)

     

     

    Share
  • வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை

    -மேகலா இராமமூர்த்தி
    வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை
    (செயின்ட் லூயி, மிசௌரி)
    பகுதி – 2

    ஜூலை 5-ஆம் தேதி காலையும் (முந்தைய நாளைப் போலவே) 8:30 மணியளவில் ’மறை ஓதுதல்’ நிகழ்ச்சியோடு அன்றைய நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.

    IMG_0285தமிழ் விழாக்கள் எவற்றிலுமே இதுவரை நிகழ்த்தப்பட்டிராத ஒன்றான குறும்படங்கள் இயக்கும் போட்டியை இவ்விழாவையொட்டிப் பேரவை நடத்தியிருந்தது. அதில் சுமார் 30 குறும்படங்கள் கலந்துகொண்டன. அவற்றில் சிறந்தவையாகத் தேர்வான 10 படங்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

    அடுத்த நிகழ்ச்சியாக, குழந்தைகள் பங்கேற்ற தமிழ்த்தேனீ – பன்முகத்திறன்(Jeopardy)போட்டி அரங்கேறியது. பாரதியார் அணி, பாரதிதாசன் அணி, கம்பர் அணி, கண்ணதாசன் அணி என்ற நான்கு அணிகள்IMG_0304 இதில் பங்குபெற்றிருந்தன. கொடுக்கப்படும் படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளைச் சொல்லுதல், சொல்லப்படும் தலைப்புக்களில் பேசுதல், திரைப்படப் பாடல்களில் கேள்விகள் என்று பல்வேறு துறைசார் வினாக்கள் குழந்தைகளின் அறிவுத்திறனைச் சோதிக்கும் வகையில் இப்போட்டியில் கேட்கப்பட்டன; அவர்களும் சளைக்காமல் எல்லாவற்றிற்கும் பதில்களை உடனுக்குடன் அளித்தனர். பாரதியார் மற்றும் பாரதிதாசன் அணிகளுக்கிடையே கடும்போட்டி நிலவியது பார்வையாளர்கள் மத்தியில் யார் வெல்லப்போகிறார்கள் என்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில் இவ்வணியினரிடையே சமநிலை (tie) ஏற்பட்டு ‘tie-breaker’ மூலம் பாரதிதாசன் அணியினர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுக் கோப்பையைத் தட்டிச் சென்றனர்.

    திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் நிகழ்த்திய ‘இலக்கியம் – தமிழ் அமெரிக்கர்களுக்கு’ என்ற சுவையான சொற்பொழிவொன்று அடுத்து இடம்பெற்றது. அமெரிக்கத் தமிழர்கள் தமிழிலக்கியங்களைக் கற்றின்புற வேண்டும்; அடுத்த தலைமுறையினரிடம் அவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அவர் தன் இனிய உரையை நிறைவு செய்தார்.

    அடுத்து, பல்வேறு நடனக் குழுவினர் பங்குபெற்ற ‘FeTNA – தில்லானா போட்டி’ எனும் நடனப்போட்டி விழாமேடையில் நிகழ்ந்தது. நடனக் குழுவினரின் அதிரடி ஆட்டங்களும், வண்ண வண்ண உடைகளும் பார்வையாளர்களின் கண்களுக்கு நல்லதோர் விருந்தாக அமைந்திருந்தன என்றே சொல்லவேண்டும். இதில் ’சென்னை கேங்ஸ்டர்ஸ்’ மற்றும் ’ரகளை பாண்டியர்கள்’ என்ற புதுமைப் பெயர்களைக் கொண்ட இரு குழுக்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்குத் தலா $500 பரிசும், $250 பரிசும் வழங்கப்பட்டன.

    IMG_0321பின்பு, பேரவை விழாவைப் பொறுப்பேற்று நடத்திவந்த மிசௌரி தமிழ்ச் சங்கத்தினர் பங்குகொண்ட ’இயற்கையின் படைப்புக்கள்’ எனும் கருத்தை மையப்படுத்திய குழந்தைகளின் நடனம் ஒன்று மிகச் சிறப்பாக அரங்கேறியது. காற்று, நீர், நிலம், வானம், நெருப்பு என்ற பஞ்சபூதங்கள் மனித வாழ்க்கைக்கு எத்துணை இன்றியமையாதவை என்பதை விளக்கும் நிகழ்ச்சியாக – சமூக விழிப்புணர்வூட்டும் பயனுள்ள நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது.

    அதற்கடுத்து, ’சிரித்தால் பெறலாம் இதய நலம்’ எனும் பொருளில் பேசிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார், தமிழகத்திலிருந்து வந்திருந்த இதய நல மருத்துவர் சொக்கலிங்கம் அவர்கள்.

    அமெரிக்கத் தமிழ் அகாதெமி சார்பில் நடத்தப்பட்ட ‘தமிழ்க்கல்வி நேரம்’ அடுத்து அரங்கு கண்டது. இதில், அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் தமிழ்க்கல்வி பெறவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு, தமிழ்க்கல்வி பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாகவும் அக்கல்விக் கழகத்தினர் குறிப்பிட்டுப் பார்வையாளர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

    அதனைத் தொடர்ந்து, பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை த்ரிஷா கலந்துகொண்டு ரசிகர்களின் வினாக்களுக்கு விடையளித்த ‘திரை நட்சத்திர நேரம்’ எனும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அடுத்த நிகழ்வாகவும் அன்றைய நிகழ்வுகளின் மணிமுடியாகவும் திகழ்ந்ததுIMG_0345 வடஅமெரிக்காவைச் சேர்ந்த 15 தமிழ்ச் சங்கங்கள் தங்கள் சங்கங்களின் பதாகைகளுடன் வீரநடைபயின்ற ‘சங்கங்களின் சங்கமம்’ எனும் அற்புத நிகழ்ச்சி. ஒவ்வொரு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ச் சங்கத்தினரும் மேடையில் அணிவகுத்து வந்தபோது அந்தந்த மாகாணங்களிலிருந்து விழாவைக் காண வந்திருந்த மக்கள் கரவொலி எழுப்பியும், சீழ்க்கை ஒலி(விசில்) எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் புலப்படுத்தினர். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மிசௌரி தமிழ்ச் சங்கத்தினர் நடத்திக்காட்டிய பறையிசையோடு கூடிய நடனம் வெகுசிறப்பாகவும், கலை நேர்த்தியுடனும் விளங்கியது. ’சங்கங்களின் சங்கமம்’ எனும் இந்நிகழ்ச்சி இவ்வாண்டுதான் முதன்முதலாக பேரவை விழாவில் இடம்பெற்றிருக்கின்றது. முதல் முயற்சியிலே முத்திரை நிகழ்ச்சியாக இது அமைந்துவிட்டது போற்றத்தக்கதே!

    maruthasala adigalதொடர்ந்து வந்த நிகழ்ச்சி, தமிழகத்திலுள்ள பேரூர் மடத்தைச் சேர்ந்த குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மருதாசல அடிகளார் வழங்கிய ’எங்கும் தமிழ்’ எனும் சிறப்புச் சொற்பொழிவாகும். தமிழின் இலக்கிய இலக்கண வளங்களை அருமையாய் விளக்கிய அவர், இன்றைய காலகட்டத்தில் தமிழ் சந்தித்துவரும் பல்வேறு மாற்றங்களையும், வளரும் தலைமுறையினர் தமிழைப் பேணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் தன் பேச்சில் வெளியிட்டார்.  மருதாசல அடிகளாரின் பேச்சு வளரும் தலைமுறையினரின் சிந்தனையைத் தூண்டுவதாய் அமைந்திருந்தது.

    அன்றைய இரவின் இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது, விஜய் தொலைக்காட்சி sonia divakar’சூப்பர் சிங்கர் புகழ்’ திவாகர் மற்றும் சோனியா குழுவினர் நடத்திய ’மெல்லிசை – சூப்பர் சிங்கர்ஸ்’ எனும் நிகழ்ச்சி. இதில், புகழ்பெற்ற  பல்வேறு தமிழ்த் திரைப்படப்பாடல்களைப் பாடி திரையிசை ரசிகர்களை குதூகலப்படுத்தினர் இக்குழுவினர்.

    இவ்வாறு பல்சுவைகளையும் உள்ளடக்கிய முழுநாள் நிகழ்ச்சிகளை ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் செயின்ட் லூயி நகரில் தமிழ் மக்கள் கண்டு களித்தனர்.

    ஜூலை 6-ஆம் தேதி நிகழ்ச்சிகள் அரைநாள் நிகழ்ச்சிகளாய், தமிழின் வளர்ச்சி குறித்துச் சிந்திக்கும் நிகழ்ச்சிகளாய் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்த அறிஞர் பெருமக்களான ஸ்ரீலஸ்ரீ மருதாசல அடிகளார், கவிஞர் குட்டிரேவதி, மருத்துவர். எழிலன் நாகநாதன், அமெரிக்காவாழ் தமிழறிஞர் திருமதி. வைதேகி ஹெர்பர்ட் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு தமிழிலக்கியங்களின் சிறப்புக்கள், நவீன இலக்கியங்களின் ஆளுமை, வருங்காலத்தில் தமிழ் எனப் பல்வேறு தளங்களில் தங்கள் சிந்தனைகளைப் பதிவு செய்தனர். மதியம் 12 மணியளவில் இவ்விலக்கிய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

    ஜூலை 3-ஆம் தேதி இரவு ’ஸ்டார் நைட்’ நிகழ்ச்சியோடு தொடங்கிய பேரவையின் தமிழ்விழா ஜூலை 6-ஆம் தேதி மதியம் தமிழிலக்கியத் திறனாய்வோடு இனிதே முடிவுற்றது.

    தமிழர் அடையாளம் காப்போம்! ஒன்றிணைந்து உயர்வோம்! எனும் வாசகங்களை இவ்வருடத்திய கொள்கை முழக்கமாகக் கொண்டிருந்த பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா, தமிழரின் பல்வேறு பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகளையும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்திக் காட்டியதன் வாயிலாகத் தங்கள் கொள்கை முழக்கம் வெற்று முழக்கமல்ல…வெற்றி முழக்கமே என்பதை நிரூபித்தது.

    வாழ்க தமிழர் விழா!
    வெல்க தமிழ்!

    (முற்றும்)

    Share
  • டாக்டரும் பீ.பியும்

    மாதவ. பூவராக மூர்த்தி

    examen_medico_paciente_del_doctor_3_oficina_pegatina-r8b97746fbd6340e4b561f443aca9fc0c_v9wth_8byvr_512உலகத்தில் தனியாக இருக்கும் எதுவும் அவ்வளவு சிறப்பு பெற்றதாக இருக்காது. ஒரு துணை வேண்டும் அப்போதுதான் அதன் சிறப்பு இன்னும் அதிகமாகும். உதாரணம் பாலும் பழமும், பாயும் தலைகாணியும், கீத்தும் கழியும், வெற்றிலையும் பாக்கும். ஆணும் பெண்ணும். இப்படித்தான் நானும் பீ பியும். முதலில் அப்படித்தான் தலைப்பிடுவதாக இருந்தேன். அதன் பிறகு நான் என்னும் அகங்காரம் வேண்டாம் என்று தோன்றியது. போனமுறை “அப்பரும் நானும்” என்று ஒரு கட்டுரை எழுதினேன்.

    மறுபடியும்” நான்” “தான்” இதெல்லாம் எதற்கு என்று எனக்கே தெரியாமல் என்னுள் இருந்த பீ.பி யை கண்டுபிடித்து சொன்ன டாக்டரை அதனுடன் சேர்த்து இந்த தலைப்பை உருவாக்கினேன். உங்களுக்கு B.P இருக்கிறதா? அதற்கான மாத்திரை எல்லாம் எடுக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே போய் செக் பண்ணி மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள். செக் எல்லாம் பண்ணியாயிற்று நார்மல் என்றால் சந்தோஷம்.

    சிலபேரிடம் யதேட்சையாக உங்களுக்கு பீ.பி இருக்கிறதா என்று கேட்டால் அவர் இரத்த அழுத்தம் மேலும் “அதிகமாகி இருந்தா என்ன பண்ணப் போறீங்க ? இல்லேன்னா என்னப் பண்ணப் போறீங்க” என்று நம்மிடம் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து விடுவார். ஆசாமிக்கு அது இருக்கிறது என்பது அவர் சொல்லாமலேயே நமக்குப் புரிந்து விடும்.

    அந்த காலத்தில் எல்லாம் விரிவாக சொன்ன காலம். என் பெரிய மாமாவுக்கு (பீ.பி என்று தமிழில் அடிப்பது கஷ்டமாக இருப்பதால் அதை “அது” என்று வைத்துக் கொள்வோம்.) அது இருந்தது. அவர் எல்லோரிடமும் அதைப் பெருமையாக சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு இரத்தக் கொதிப்பு இருக்கு டாக்டர் கிட்ட காட்டி மருந்து சாப்பிட்டுகிட்டு இருக்கேன் என்பார். சில சமயம் அதை பிளட் பிரஷ்ர் என்பார் பலசமயம் பிளட் பிளஷர் என்பார்.

    இந்த கட்டுரை நீங்கள் முழுவதுமாக ரஸிக்க வேண்டுமென்றால் என்னைப் பற்றியும் என் தைரியத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் எனக்கும் ஆஸ்பத்திருக்கும் வியாதிக்கும் காத தூரம். நான் பிறந்ததும் கிராமத்தில் பாட்டி வீட்டில்தான். அதன் பிறகு மாந்தம், கணை பெரளி வாயு ஜலதோஷம் ஜுரம் எல்லாவற்றிற்கும் கை வைத்யம்தான். ஜுரத்துக்கு கஷாயம், இருமலுக்கு சித்தரத்தை, மாந்தத்துக்கு வேப்பெண்ணெய், அஜீரணத்துக்கு ஓமவாட்டர், தலைவலிக்கு சுக்கு பட்டைதான். மஞ்சகாமாலைக்கு அஞ்சு ஊசி மந்திரிப்பு சுளுக்குக்கும் தேள்கடிக்கும் அப்பாவே மந்திரிப்பார்.

    இப்படி நாளொரு வியாதியும் பொழுதொரு வைத்யமாய் வளர்ந்தேன். பள்ளி கல்லூரி காலத்தில் எங்கள் ஊர் மாயவரம் ராம்மூர்த்தி டாக்டர்தான் வைத்யர். அவர் என் சகல வியாதிக்கும் பத்து ரூபாயிக்கு மிகாமல் மருந்து எழுதி கொடுத்து சரி பண்ணிவிடுவார்.

    ஆஸ்பத்திரி பக்கமே போகாமல் தப்பித்து வந்தேன். வேலையும் கிடைத்தது. கல்யாணமும் நடந்தது. ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய கட்டாயம் சிசேரியன் பண்ணி பிறந்த இரண்டு குழந்தைகளைப் பார்க்க அப்பாவாக (அப்பாவியாகப்) போய் வந்தேன்.

    பெட்டில் படுத்திருக்கும் வியாதியஸ்தர்களை நண்பர்களை பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போவதை தவிர்த்து முக்கியமான கட்டங்களில் மட்டும் போனேன்.

    இன்ச்ஜெக்‌ஷன் கூட ரொம்ப கம்மிதான். போடுவதற்கு முன்பே கண்ணை மூடிக்கொண்டு முகம் அஷ்ட கோணலாக்கிdoctor-cartoon (சாதாரணமாகவே முகம்  சப்தகோணல்) பயந்துகொண்டு போட்டு பஞ்சை பதினைந்து நிமிடம் போட்ட இடத்தில் வைத்துக் கொண்டு சோகமாக இருப்பேன்.

    சென்னையில் சீனிவாசன் டாக்டரும் நல்லவர். என் டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர் அன்போடு கவனித்து என் உபாதைகளுக்கு மாத்திரை சிரப்போடு நிறுத்திக் கொள்வார். சில சமயம் வியாதியின் தீவிரத்தைக் கருதி என்னிடம் நிலமை விளக்கி ஊசி போட வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதாகவும் என் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வேண்டுகோள் விடுப்பார். நானும் அவருக்காக ஒத்துக்கொண்டு அந்த அவஸ்தைக்கு ஆளாவேன். நல்ல உயரம் பருமன் அவர் உள்ளே போய் அந்த ஊசியை கையில் பிடித்தவுடன் என் லப்-டப் ஜாஸ்தியாகிவிடும். அந்த சில நிமிடங்கள் நான் நானாக இருக்க மாட்டேன். அவர் போட்ட ஊசி மருந்து போட்ட இடத்திலேயே அசையாமல் இருப்பது போல் எனக்கு பிரமை.

    நான் நாற்பது வயது வந்தவுடன் வாக்கிங் போக ஆரம்பித்தேன். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஆஸ்பத்திருக்கு நான் போக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். தொடர்ந்து வயிற்று வலி போக்கு அடி வயற்றில் வலி. இரண்டு நாள் சீனிவாச டாக்டர் மருந்து கொடுத்துப் பார்த்தார். இடது தொடையில் வீக்கம்போல் இருந்து வலித்தது. நான் நரிகட்டியிருக்கும் என்று நினைத்தேன். எதற்கு இருக்கட்டும் என்று அவரிடம் சொல்லி வைத்தேன். வைத்யரிடமும் வக்கீலிடமும் உண்மை சொல்ல வேண்டும் அல்லவா?

    அவர் யோசனையில் ஆழ்ந்தார். தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டினார். உள்ள வந்து படுங்க என்றார். இருமச்சொன்னார். மர்மதேசத்தில் டார்ச் அடிச்சு சோதனை செய்தார்.. வாங்க என்று கையலம்பினார். உங்களுக்கு ஹிரண்யா. ஆபரேஷன் பண்ண வேண்டும் என்றார்.

    இடியோசை கேட்ட நாகம்போல் என்று ஒரு பிரயோகம் உண்டல்லவா அதை இங்கே உபயோகப்படுத்தத் தோன்றுகிறது. என் மனைவி கூட நின்றாள். பயத்தில் என் முகம் வெளிறிவிட்டது. தொண்டை வறண்டது. குரல் கம்ம ஸார் இதுக்கு என்ன மருந்து என்றேன். மருந்து கிடையாது ஆபரேஷன் தான் என்றார்.

    அடுத்த நாள் அவரிடம் போனபோது பிரஷர் செக் பண்ணினார். பயத்தில் அது தாறுமாறாக எகிறியது. சீனிவாச டாக்டர்.பி பி சோதனை மெஷினை அடிக்கடி பம்ப் செய்தார். என் கையை சுற்றியிருந்த துணி கையை நெருக்கியது. இரண்டு வேளை செக் செய்து உங்களுக்கு பி.பி இருக்கு ஆபரேஷனுக்கு முன் ஹார்ட் ஸ்பெஷ்லிஸ்டைப் பார்த்து விடுங்கள் என்று ஒரு டாக்டரின் முகவரியும் தந்தார். அவரிடம் போனிலும் சொல்ல டாக்டர் அர்த்த நாரி என்னை அவர் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.

    முதல் நாள் அனுபவம் மறக்க முடியாது. நல்ல நாள் பார்த்து ஒருநாள் பிளாட் பிள்ளையாருக்கு அஞ்சு ரூபாயும், வெங்கடாஜலபதிக்கு ஒரு மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் காசை மீசல் கட்டிவைத்துவிட்டு சகுனம் பார்த்து புறப்பட்டோம்.

    நிறைய பேர் கையில் எக்ஸ்ரே முகத்தில் கவலையுமாக இருந்தார்கள். ஒரு பக்கம் மாவு மிஷின் அரைக்கறமாதிரி சத்தத்தில் ஒரு பலகையில் ஒருவர் நின்ற இடத்திலேயே நடந்து கொண்டிருந்த்தார். எனக்கு முன் ஒரு பத்து பேர் இருந்தார்கள். இன்னும் இரண்டு பேர் சந்தோஷமாக இருந்தார்கள். விஜாரித்த்தில் அவர்கள் எல்.ஐ.சி பாலிசி வாங்கியவர்களுக்கு டாக்டர் சர்டிபிகேட் வாங்க வந்தவர்கள் என்று தெரிந்தது.

    ஒரு பெரியவர் தன்பக்கத்தில் இருந்தவரிடம் எனக்கு மூணு இடத்திலே பிளாக்.98 ,90 ,95% என்று ஏதோ பிளஸ் டூ பையன் வாங்கின மார்க் போல சொல்லிக்கொண்டிருந்தார்.

    என் முறை வந்த பொழுது நான் பயத்தோடு அவர் முன் நின்றேன் பி பி பார்த்தார். திரும்பச்சொன்னார். மறுபடியும் அவர் பக்கம் திரும்பசொல்லி ஒரு எக்ஸ்ரேயும் ஈ.சி.ஜியும் எடுத்துடுங்க என்றார். அடுத்த ரூமில் இருந்த சுமதி என்னை இருட்டறையில் வைத்து எக்ஸ்ரே எடுத்து, உயரமான டேபிளில் படுக்க வைத்து வாட்சு மோதிரமெல்லாம் பறித்துக் கொண்டு உடல் முழுவதும் ஒரு பிசினைத் தடவி அதில் ரப்பர் குமிழியை ஒட்டி மிஷினுடன் இணைத்து ஒரு பேப்பரை உருவி அட்டையில் ஒட்டி என் கையில் திணித்தாள்.

    அதற்குள் இரண்டு பேர் டாக்டரைப் பார்த்துவிட்டு ஈ.சி.ஜிக்கு வரிசையில் நின்றார்கள். டாக்டர் என்னை பார்த்து அது பற்றியும் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விரிவாக என்னிடம் கூறி உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகளை மாற்றி கொள்ளவேண்டும் என்று சொல்லி ஒரு மாதத்திற்கு மருந்து எழுதிக் கொடுக்க, சுமதி அதை காலை மாலை என்று இரண்டு கவரில் போட்டு மொத்த பில் தொகையும் வாங்கிக் கொண்டாள்.

    வெளியே வரும்போது இருட்டி விட்டது. மனைவி கவலையோடு பக்கத்தில் வந்து நீங்க இனிமே ரொம்ப கத்தக்கூடாது என்றாள். நான் அவளை முறைத்தேன். ஒருவாரம் சாப்பிட்டேன். வாழும் நாளில் வலியில்லாமல் வாழ வேண்டும் என விரதம் பூண்டேன். காபியை நிறுத்தினேன். எண்ணெய் பதார்த்தங்களை அறவே ஒழித்தேன். வறுவல் முறுக்கு சீடை பூரி எல்லாவற்றையும் தியாகம் செய்தேன்.

    ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்த்து. அது ஒரு தனிப்பதிவிற்கு உகந்தது. ஆனால் பீ.பி தொடர்ந்தது. மாத்திரை தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது எப்போது அதிகமாகும் எப்போது குறையும் என்று இன்னும் எனக்கு பிடிபடவில்லை.

    இப்போது உணவு விஷயத்தில் கொஞ்சம் தளர்த்திவிட்டேன். அவ்வப்போது பஜ்ஜி, போண்டா சாப்பிடுவதுண்டு. சில மாதம் செக்கப் போகும்போது டாக்டர் வழக்கம்போல் அன்போடு நலம் விசாரித்து எப்படியிருக்கீங்க என்று கேட்பார். நல்லா இருக்கேன் என்பேன். பார்த்துடலாம் என்று சினிமா டிராமா பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டே பிரஷர் மானியை என் கையில் சுற்றி பம்ப் பண்ணுவார். இந்த மாதம் சாப்பிட்ட போண்டாவெல்லாம் மனதில் வரும். சாப்பிட்டுருக்க வேண்டாமோ என்று தோன்றும். அவர் மீட்டரை அவர் பக்கம் வைத்து காற்றை இறக்கி மறுபடியும் ஏற்றி பார்ப்பார். ஒன்றும் சொல்லாமல் எழுத ஆரம்பிப்பார்.

    எட்டிப் பார்த்தால் 130/84 என்று இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். சில சமயம் ரொம்ப குறைவாக போண்டா சாப்பிட்டு அதைவிட குறைவாக சத்தம் போட்ட மாதத்தில் 140/100 காட்டும். கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே என்று மாத்திரை மாற்றி கொடுப்பார்.

    ஊருக்குப் போகும் போது ஜட்டி பனியன் எடுத்து கொள்கிறேனோ இல்லையோ மாத்திரைகளை மறக்காமல் எடுத்து கொண்டுவிடுவேன். மாத்திரை இல்லையென்றால் மனதில் பயம் வந்து விடும்.

    இந்த பீ.பி ஒரு வியாதி என்று ஆபீஸில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். டோமிசலிரி மருத்துவ வசதி அளிக்கப்படுவதில்லை. உங்களுக்கு அது இருப்பதையோ அதற்கு நீங்கள் மாத்திரை எடுப்பதையோ உங்கள் உரையாடல்களில் இடம்பெறச் செய்யாதீர்கள்.

    கேட்கும் சிலர் இலவசமாக அறிவுரை வழங்கி சிலசமயம் அதிகம் எச்சரிப்பார்கள். ஸார் அதுக்கு ரெகுலரா மாத்திரை எடுத்துங்கோ இப்படித்தான் என் ஃபரண்டு ஒருத்தன் இரண்டு நாள் மாத்திரையை மறந்துட்டான். ஒரே அடியா அடிச்சுடுத்து.கிழங்கு மாதிரி இருந்தவன் பட்னு போயிட்டான் ஜாக்ரதை.

    ஏண்டா இவருடன் பேசினோம் என்று பண்ணிவிடுவார்கள். அதனால் இப்போது நான் அது பற்றி யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

    ஆமாம் உங்களுக்கு b.p இருக்கா?

    Share
  • எம்மொழியே செம்மொழி!

    -ரா. பார்த்தசாரதி

    இனிய  தமிழ் மொழியே நமக்கு அமுதம்!                   semmozhi tamil
    நமக்கு இன்பம் தந்ததாலே நல்லமுதம்!
    எங்கள்  தமிழ்மொழியே சிறந்த செம்மொழி!
    அருளாளர்களும், ஆழ்வார்களும் வளர்த்த மொழி!

    தமிழுக்கும் அமுதென்றுபேர் என்பார் பாரதிதாசன்!
    தமிழ்  எங்கள் அறிவுக்குத்  தேன் என்பார்
    தமிழ் எங்கள்  பிறவிக்குத்  தாய்  என்பார்
    தமிழையும் தாயையும் புகழாமல் இருப்பவருண்டோ தரணியிலே?

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
    தேன்வந்து  பாயுது காதினிலே என்றார் பாரதியார்!
    செம்மொழி மாநாடு நடந்ததும் கோவையிலே,
    தமிழர்கள் கவிதை பாடியதும் தமிழ் ஆர்வத்தினாலே!

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்!
    தமிழ் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை,
    தமிழ் உரையாடலே, நீதிமன்றச்  சபையினிலே,
    எம் தமிழ்மொழியும், பெருமையுறுமே பாரினிலே!

    தமிழ் பரவும் வகை செய்திடுவோமே!
    கணினி மென்பொருளால் உலகெங்கும் பரப்பிடுவோமே!
    அயல் நாட்டினரிடையே  எம்மொழி தொன்மையென எடுத்துரைப்போமே!
    எம்மொழியே ஏற்ற மொழி என நிலைநாட்டுவோமே!

    தமிழ் தமிழென முரசு கொட்டவேண்டாம்!
    ஆங்கிலத்தை என்றும் தமிழிலே கலக்கவேண்டாம்!
    தமிழிலும்  அறிவியல், உலகவியல்  உண்டு!
    பொருளை விளக்கவும் எம்மொழிகே தனித்திறமை உண்டு!

    எளிய நடையினில் எம்மொழியில் எழுதிடவே…
    இலக்கணங்கள் புதிதாய் நன்முறையில் தோன்றிடவே…
    வெளியுலகில் புதிய சிந்தனைகள் வருவதுண்டு!
    அச்சிந்தனையினை விளக்கவும் எம்மொழிக்குத் தனிச் சிறப்புண்டு!

    ஆங்கிலப் பெயர்ப் பலகையினைத் தமிழில் மாற்றுவதும் நல்லதன்றோ!
    அதுவே தமிழ்நாட்டின் தமிழ்க்கே ஒரு சிறப்பன்றோ!
    தனியார்ப்பள்ளிகளிலும் தமிழ்மொழிக் கல்வி புகுத்திடவேண்டுமே!
    அறிவியலிலும், உலகவியலிலும் தனித்தொரு திறனாய்வு செய்திடல்                                                                                                                                                     வேண்டுமே!

    எம்மொழி, செம்மொழி  எனச் சொன்னால் போதாது!
    ஏற்றமிகு மாற்றங்கள் செய்திடல் வேண்டும்!
    மாற்றங்கள் செய்யப் பள்ளியும், கல்லூரியும் ஒருமைப்படவேண்டுமே!
    பாமரனும் படித்து  உவகை  கொள்ள வேண்டுமே!

    இலவச நூலகங்கள்  எவ்விடத்திலும் நிறுவவேண்டும்!
    எம்மொழியே உயர்வென்று பறைசாற்றிட வேண்டும்!
    தலைமுறைகள் பல கழிந்தோம் குறைகளைய வேண்டும்!
    எம்மொழியே செம்மொழியென ஆதரிப்பீர்! வாரீர்!

    Share
  • காற்று வாங்கப் போனேன் பகுதி – 21

    கே. ரவி

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் அருட்செல்வர் திரு.நா.மகாலிங்கம் அவர்கள் நடத்தி வரும் வள்ளலார்-காந்தியடிகள் விழாவில் ஒருநாள், 1970 என்று நினைக்கிறேன், கவிஞர் தேவநாராயணன் இறைவணக்கம் பாடினார். அவர் பாடிய பாடல், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் கலைமகள் துதி.

    தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்

    சிந்திப் பார்க்கே

    களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல

    காட்டல் கண்ணீர்த்

    துளிவரவுள் ளுருக்குதலிங் கிவையெல்லாம் நீயருளும்

    தொழில்க ளன்றோ

    ஒளிவளரும் தமிழ்வாணீ அடியனேற் கிவையனைத்தும்

    உதவு வாயே

    அவர் பாடும் போது ஏனோ தெரியவில்லை என் கண்கள் கலுழ்ந்தன. என்னைச் சுற்றி நிறைய பேர் இருந்தனர் என்பதை மறந்து நான் கண்ணீர் சொரிந்து நின்றது எனக்கே அதிசயமாய் இருந்தது. அது என்னை மீறி நடந்த செயல். காரணம் புரியவில்லை. என் அகங்காரத்தை ஊடுருவிச் சென்று உயிர்நிலையை அளாவிப் பிசைந்து, சுற்றம் மறக்கச் செய்து, ஏன், என்னையே நான் மறக்கச் செய்த அந்தப் பாட்டு வரிகளை எண்ணி எண்ணி வியந்தேன். ‘மெய்மறத்தல்’ என்பதை எனக்கு நிதர்சனமாக உணர்த்தியது அந்தப் பாடல். உருக்கம் விளைவிக்கும் ஆற்றல் கவிதைக்கு உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்ற அரற்றலின் பொருள் புரியத் தொடங்கியது. இதுவே மெய்யான தரிசனம் என்று குதிக்கத் தொடங்கினாள் மனோன்மணி.

    சிகாமணியோ தன் வேலையைக் கச்சிதமாகச் செய்யத் தொடங்கினான்.

    “நமக்கு என்ன தெரியும் என்பதில் தெளிவு வேண்டும். அதைப் பிறர்க்குச் சொல்ல முயலும் போதும் தெளிவாகச் சொல்ல வேண்டும். சிந்திப்பார்க்கே களிபெருகுமாறு அவர்கள் உள்ளங்களில் ஆனந்தக் கனவுகள் பல காட்ட வேண்டும். கேட்போர் மனமுருக வைத்து, அவர்களறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கச் செய்ய வேண்டும். ஈதனைத்தும் உன் அருளால் மட்டுமே கிடைக்கக் கூடியவை. இவை அனைத்தையும் எனக்கு நீ அருள வேண்டும். இவ்வாறு தன்னுள் தமிழ்க் கவிதைகள் ஊற்றெடுக்கும் சுடராக விளங்கும் கலைமகளை பாரதி வேண்டுகிறான்.”

    இப்படி ஒரு நீண்ட வியாக்யானப் பிரசங்கம் செய்தான் சிகாமணி. உண்மைதான், கவிஞனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவள் கலைவாணி. அந்தப் பாட்டை நான் கேட்கும் போதே, என் உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டி, என்னையறியாமல் கண்ணீர் பெருகும் உருக்கத்தை விளைவித்தவள் அந்த ஸ்வேத பத்மாஸனி தானே!

    மனோன்மணி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆனந்தக் கூத்தாடினாள். ஆனந்தக் கனவு பல காட்டுவதும், கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குவதும் ஆகிய இரண்டு தொழிலையும் ஒரே சமயத்தில் நடைபெறச் செய்யும் அதிசயத்தில் திளைத்துப் பரவசம் அடைகிறாள். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் . . .!

    அர்த்தம் முழுதாகப் புரியாத போதும் வானொலியில் “ஓ துனியா கே ரக்குவாலே”, “ஓ ரே தால் மிலே நதீகி ஜல் மே” போன்ற ஹிந்தி பாடல்களைக் கேட்டு உருகிக் கண்பனித்திருக்கிறேன். அது த்வனியின் சிறப்பு. த்வனி என்ற தென்றல் வீசும் போது தலையசைக்கும் நாணல்தானே அர்த்தம்! கவிதையின் ஊற்றுக்கண் எங்கே என்பதை ஒருவாறு புரிந்து கொண்டேன்.

    என் கவிதைப் பயணத்தில் இரண்டு திருப்புமுனைகள்: பாரதி கலைக்கழகமாகிய அடியார்கள் திருக்கூட்டத்தில் நான் சேர்ந்தது ஒன்று; பாரதியின் விஸ்வரூப தரிசன அனுபவம் நேர்ந்தது மற்றொன்று. இரண்டுக்குமே கவிமாமணி தேவநாராயணன் காரணமானார்.

    ஆயிரம் மேதைகள் பிறந்திடலாம் – அதில்

    ஒருவந்தான் கவியம்மா – அந்த

    ஒருகவிஞன் சொல்லும் ஒவ்வொரு கவியும்

    உன்னருட் துளியம்மா – அதற்கிவ்

    வுலகம் விலையம்மா

    இப்படி மனம் நெகிழச் செய்யும் கவிதைகள் பல எழுதியவர் தேவநாராயணன். படிப்போர் நெஞ்சில் நம்பிக்கைச் சுடரேற்றும் வரிகளையும் வாரி வழங்கியவர் அவர்:

    உழைக்கத் தெரிந்த என்னை உலகம்deva

    ஒருநாள் உணருமடா

    ஒவ்வொரு கல்லாய் அடுக்கி வைத்தே – என்

    மாளிகை உயருமடா

    எப்பொழுதும் என் மனத்தின் ஒரு மூலைல் ஒலித்துக் கொண்டே இருக்கும் அவர் பாடல்:

    பாரதியே ஒரு பாரதம் – அவன்

    பாட்டெல்லாம் தமிழ் மாருதம்

    பாரத மண்ணின் காவிய வளம்தான்

    பாரதி தோன்றக் காரணம்

    அந்தப் பாட்டில் வரும் ஒரு வரி:

    ஏட்டில் எழுத்தில் இனிவரப் போகும் எழுச்சிகள் எல்லாம் பாரதி

    இந்தச் சத்தியப் பிரகடனத்தைச் செய்த அவருக்கு வெறும் சொற்களில் நான் புகழஞ்சலி செய்வதைக் காட்டிலும், அவர் அமரரானதும் அவருக்கு நண்பர் வ.வே.சு. சூட்டிய அற்புதமான கவிதைப் பாமாலையை நினைவு கூர்வதே பொருத்தம்:

    யுகமொன்று மறைந்ததைப்போல் உணர்வளித்துச் சென்றுவிட்டாய்;

    சகமீதோர் வெற்றிடத்தை சாட்சியெனத் தந்துவிட்டாய்;

    எங்கிருந்து வந்தாய்நீ; இன்றெங்கே சென்றுவிட்டாய்?

    தங்கிய காலமெல்லாம் தமிழிசைத்தே வாழ்ந்திருந்தாய்;

    கலைக்கழகக் கவியரங்கில் கணீரென்று நீபாடத்

    தலையசைத்து இரசிக்காதோர் தமிழறியாச் செவிடரன்றோ!

    பல்லவிகள் நீபாடப் பல்லக்காய் எம்செவிகள்

    அள்ளிச் சுமந்து ஆடியதை மறப்போமோ?

    உள்ளும் புறமும் வெள்ளையென வந்திடுவாய்;

    கள்ளமிலா நெஞ்சோடு கவிக்கணைகள் வீசிடுவாய்;

    பொய்ம்மைக்கு எதிரிநீ; புன்மைக்கு எதிரிநீ;

    இன்மைக்கு எதிரிநீ; இயலாமைக்கு எதிரிநீ.

    கடிவாளம் போடாத கவிதைப் புரவிகட்கும்

    பிடிதாளம் எனச்சொல்லிப் பின்னலிசை போட்டவன்நீ!

    உன் கவிதைகள் –

    உலாவரும் இடம்தான் உதடுகளே யன்றி

    உதிக்கின்ற இடமென்றும் உள்ளிருக்கும் இதயமன்றோ!

    பாடம் நாக நந்தியார் எடுக்கப்

    பாத்திரங்கள் நீ துலக்க

    நாடகம் நடத்தியதை யாமின்றும் மறப்போமோ!

    சகுனியென நீவந்து சபைகண்ட அழகெல்லாம்

    பகரவொணாப் பரவசந்தான் மாமனே மறப்போமோ!

    தேசமொழியில் வந்த தெய்வத் திருக்கதையை

    பாசமொழி நம்தமிழில் பேசவைத்துப் பார்த்தவனே!

    வண்ணத் திரையதனில் கண்ணனை ஆடவைத்தாய்;

    எண்ணத்தில் உயர்ந்ததனால் எங்கும் உயர்ந்து நின்றாய்;

    மண்வளத்தால் பிறந்தவன்நம் மாகவிஞன் என்றுரைத்தாய்;

    மண்ணுக்கு வளம்சேர்த்து மனதில் நிறைந்துவிட்டாய்.

    உனையிழந்த வருத்தம் எமக்குண்டு; உனக்கில்லை.

    வினைமுடிந்த நண்பர்களின் விருந்தாகச் செல்வதனால்;

    இளங்கார் வண்ணன்முதல் நாகநந்தி, நாசீ.வ.

    வளஞ்சார் வ.சா.ப., ரா.பு.த. என்று பலர்

    வரவேற்கக் காத்துள்ளார் வாயிற் படிகளிலே!

    ஞாலம் தந்த உறவா நம்முறவு இல்லையில்லை

    காலம்தந்த வரவு நம் கவிஞர்களின் உறவு;

    காலம் பிரிக்கும்; காலமே இணையவைக்கும்;

    காலம் பெரிது நம் களம்சிறிது; விடைபெறுவேன்

    எனக்குக் கவிதா தேவியின் தரிசனத்தை முதன்முதலாகக் காட்டிய தேவநாராயணனை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். அந்த தரிசனத்தில் விசுவரூபம் காட்டிய பாரதியே கீதாச்சாரியனாகிய கண்ணன். எவ்வளவு சொன்னாலும் தெளிவுபெறாத நானே பார்த்தன்.

    அடுத்த தரிசனம் நான்பெறக் காரணமானவர் கண்ணதாசன். அதைப் பற்றி அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்.

    Share
  • “பள்ளு இலக்கியம் – முக்கூடற் பள்ளு” – திரு சொ.வினைதீர்த்தான் உரை

    12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியக் கூட்டத்தில் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் இது எழுபத்து நான்காவது கூட்டமாகும். காப்பியங்கள், பதினெண் கீழ்கணக்கு நூல்கள், இலக்கண நூல் வரிசை அனைத்தும் பேசப்பட்டுத் தற்போது சிற்றிலக்கியங்கள் வரிசை தொடங்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாக வகுப்பறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் ‘கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்’ “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி”, ‘காயக் கண்டது சூரிய காந்தி,’ என்று தொடங்கும் மூன்று பாடல்களே தெரிந்த நிலையில் இணையத்திலிருந்து பள்ளு இலக்கியம் பற்றிய பதிவுகளைப் பார்த்தும் தமிழ் இணையப் பல்கலைக் கழகத் தளத்திலிருந்த உரையைப் படித்தும், முனைவர் நாகநாதன் உதவிய புலியூர்க் கேசிகன் உரையுடன் உள்ள செண்பகா பதிப்பக நூலை உள்வாங்கியும் தன் உரையை அமைத்துக்கொண்டதாகக் கூறித் திரு வினைதீர்த்தான் தன் உரையைத் தொடங்கினார்.

    அவர் உரையில் மேலும் கூறிய செய்திகள் வருமாறு:
    பள்ளத்தில் பயிர் செய்த மருத நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். ஈழத்தில் எழுந்த 6 பள்ளு நூல்கள் உட்பட 35 பள்ளு நூல்களின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன. பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்த நூல் ‘முக்கூடற் பள்ளு’ ஆகும். இதில் கூறப்படுகிற காவை வடமலைப் பிள்ளை காலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நூல் 1780ல் பாடப்பட்ட நூல் என்று தெரியவருகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

    பொருநை நதி, சிற்றாறு என்னும் சித்ராநதி, காட்டாறு ஆகிய மூன்று நதிகள் கூடுகிற இன்று சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிற முக்கூடல் ஊரில் கோவில்கொண்டுள்ள அழகருடைய பண்ணையில் வேலை பார்ப்பவன் வடிவழகக்குடும்பன். திருமாலைத் தொழாத பேரை இரண்டுகால் மாடெனவே கொழுவில் பூட்டி விரட்டி உழுவேன் என்று சொல்லும் தீவீரமான வைணவன். அவனுக்கு மாமன் மகள் மூத்த பள்ளி. அவன் கண்டு ஆசைப்பட்டு இரண்டாவதாகக் கட்டிக்கொண்டவள் மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி. சிவநெறி சார்ந்தவள்.

    இவர்களுடைய வாழ்வில் பயிரிடும் ஒருபோகத்திற்கான பயிர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவு இந்நூல். பலவகையான உழவுக் கருவிகள், பகல் உண்ட உணவு எந்த அரிசி என்று தெரியாத இக்காலத்தில் வியப்புடன் நாம் அறிய வேண்டிய அன்றிருந்த நெல்வகைகள், மாடுகள், அவற்றின் சுழிவகைகள், மீன் வகைகள் என நூலில் ஏராளமான செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

    மேலும் கீழ்க்கண்ட சமுதாய, உளவியல் சிந்தனைகளை நூலிலுள்ள பாடல்கள் வழி ஆய்வுரையாகத் தொடர்ந்தார்.

    1.பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை
    2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்கும் தான் தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே என்றும் அழகர் என்று முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன்.
    3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.
    4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி.
    5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை.
    6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி கட்டளைகளுக்கும், பிறவற்றிற்கும் சென்ற நிலை.
    7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.
    8.அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல்.
    9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல்.
    10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரைய வெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும்.
    11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். இனக்கவர்ச்சியால் எழும் சிக்கல்கள்.
    12.கம்பனுக்கு ஈடாகக் கவிநயத்துடன் முக்கூடல் பள்ளு ஆசிரியன் காண விரும்பிய கற்பனை நாடு,

    சந்தமும், பண்ணும் அமைந்த நாடகப் பாடல்களின் சொல்நயமும் பொருள் நயமும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

    நண்பர்களைக் கீழ்க்கண்ட தளத்தில் நூலைப் படிக்க வேண்டி நன்றி தெரிவித்து உரை நிறைவுசெய்யப்பட்டது –  http://www.tamilvu.org/library/libindex.htm

    1

    2

    3

    4

    5

    6

    படங்கள்:
    1.சங்கத்தின் செயலர் திரு ஜனநேசனுடன் திரு வினைதீர்த்தான்
    2.திரு சொ.வினைதீர்த்தான்
    3.துணைவியார் திருமிகு அன்னபூரணியுடன்
    4.சங்கத் தலைவர் திரு மாதவன் திரு வினைதீர்த்தானுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்
    5.கற்றறிந்த ஆன்றோர் அவையினர்
    6.கருதுரைக்கும் பேரா. ஆறு.மெய்யாண்டவரும் காப்பியக் கவிஞர் மீனவனாரும் உள்ள ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    Share
  • தெய்வம் இருப்பது எங்கே?

    –கவிஞர்  காவிரிமைந்தன்
    sivaji
    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை

    தெளிவாகத் தெரிவது ஒன்று!  தெளிவின்றி மறைவது ஒன்று!  எதை நாம் இருக்கிறது என்று உறுதி செய்ய முடியும்?  எதை நாம் இல்லையென்று மறுத்திட முடியும்?  கேள்விகள் பல எழலாம்!  விடைகள் தான் எங்கே? அறிவுக் கண்ணில் பார்க்கும்போது அதற்கும் எல்லைகள் உண்டு!  அகக்கண்ணால் பார்க்கும் போது அதற்கோர் உலகம் உண்டு! விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங்காலம் முன்பாகவே மெய்ஞானம் கண்ட உண்மைகள் கோடி!

    அறிவின்வழி எதுவுமே உறுதி செய்யப்பட வேண்டும்! ஆன்மீகம் கண்டவர்கள் யார்? அதன்வழியே நின்றவர்கள் யார்? வழிவழியாய்  தொடரும் இந்தச் செவி வழிச்சங்கதிகளை செப்பேட்டிலும், பனை ஓலைச்சுவடிகளிலும் காணும்போது விஞ்ஞானத்தை மெய்ஞானம் விஞ்சியிருப்பதை உணரலாம்!  சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவையெல்லாம்.. இந்த ஆண்டில்.. இன்ன தேதியில்.. இன்ன நேரத்தில் ஏற்படும் என்று நவீன உலகம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, ஞானிகளும் மேதைகளும் தவசிகளும் தங்கள் மெய்யுணர்வால் கணக்கிட்டுச் சொன்னது எப்படி?

    அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் கண்ணதாசன் அழகாக குறிப்பிடுகிறார். மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்கிற பழமொழியில்.. மாதா என்பது சர்வ நிச்சயமான ஒன்று!  மாதா சொல்லித்தான் ‘பிதா’ அறிமுகாகிறார் – குழந்தைக்கு!  அக்குழந்தையை பிதா – குருவிடம் கொண்டு சேர்க்கிறார்! குருவோ.. தெய்வத்தை உணரச் செய்கிறார்!
    images3images2images1
    இறைவன் இருப்பது எங்கே என்கிற கேள்வி எழுவது இன்று நேற்றல்ல.. மறைபொருளின் கீர்த்தி அறியாத வரையில்.. உள்ளத்தில் உள்ளது கடவுள் என்பது உணராத வரையில்.. தெய்வத்தைத் தேடும் மனிதனின் வாழ்வில் மாற்றமில்லை.  ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற நம் முன்னோர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோவிலை உருவாக்கினார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் பழமொழி தந்தார்கள்.  கற்பக் கிரகத்தில் கற்சிலையாய் இருந்தாலும் அங்கே கடவுளுக்கு நடத்தப்படும் ஆராதனையின்போது அந்த தீப ஒளி ஒருசில மணித்துளிகளுக்குள் .. சட்டென்று கண்ணில்பட்டு மறைந்தாலும் அங்கே காணும் தெய்வ தரிசனம் மனதில் நின்றுவிடும்.  ஆலயவழிபாட்டில்கூட அனுஷ்டிக்கப்படும் ஆராதனையிலும் சூட்சுமங்கள் பொதிந்தே உள்ளன.  அவ்விடம் நின்று ஆண்டவன் எண்ணி அருளை வேண்டுவோர் உள்ளம் எப்படியிருக்க வேண்டும் என்பதைக்கூட கவியரசு கண்ணதாசன் இலக்கணம் வகுத்தாற்போல் ஒரு திரைப்பாடலில் தருகிறார் பாருங்கள்.. பாடலை மீண்டும் கேளுங்கள்..

    http://www.youtube.com/watch?v=Ry7xzM477BI

    காணொளி: http://www.youtube.com/watch?v=Ry7xzM477BI

     

    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்

    தெய்வம் இருப்பது எங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    தெய்வம் இருப்பது எங்கே

    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    தெய்வம் ஏற்கும் உனது தொண்டு

    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    Share
  • திருமால் திருப்புகழ் (143)

     

    கிரேசி மோகன்

     

    ஓவியம்  கேஷவ்
    ஓவியம் கேஷவ்

    அவையென இவையென அளவிடல் தவறென 
    கவிமணி மலையணில் கூட்டியதை 
    புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
    மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே 
    தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
    குளிர்மழை காத்தனை யாதவனே 
    கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக் 
    கரணம்செய் காக்கும் மாதவனே”….(3)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ஓவியம்  கேஷவ்
    ஓவியம் கேஷவ்

    “அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை 
    அடைத்திடத் தொட்டனை ஏழுமலை 
    பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய் 
    புகல்ஜர கண்டியில் வாழயிலை
    துளசியை மென்றிட குறையிலை என்றிடும் 
    நிலைதர நின்றிடும் கோவிந்தா 
    அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
    வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    Share
  • திருமால் திருப்புகழ் (142)

    கிரேசி மோகன் 

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச(12) நாமத் துதி….

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..

    Gitacharya. Oil on canvas. #krishnafortoday - Keshav
    Gitacharya. Oil on canvas. #krishnafortoday – Keshav

    “களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
    கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
    உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
    பலமுற காட்டினை பாதையதை
    பொலபொல என்றுதி காலையை முந்திடும்
    பரவசக் கோதையின் பாசுரத்தால்
    அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
    கட்டிடக் கேட்டிடும் கேசவனே”….(1)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    Bhagavatha -- The Uddhava gita
    Bhagavatha — The Uddhava gita

    “சரியபி தாம்பரம் நழுவக தாயுதம்
    பிளிறும்க ஜேந்திரன் குரல்கேட்டு
    பறவைசு தாகரம் விரையவ னாந்திரம்
    எறியசு தர்சனம் விரல்விட்டு
    துரிதநி வாரண முனிகள்த போவனம்
    பறையும்க தாம்ருத காரணனே
    முரளிம னோகர கமலப தாம்புய
    அனந்தந ராயண பூரணனே”….(2)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    படங்களுக்கு நன்றி

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 14, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திரு. கிரேசி மோகன்  அவர்கள்

    கிரேசி மோகன்

    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” காலத்தில் இருந்து, ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழர்கள் நன்கறிந்த நகைச்சுவை எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் அவர்கள்.  வல்லமையில் “தாம்புக் கட்டு”  என்ற தலைப்பில் அவர் சென்ற வாரம் எழுதிய கதைக்காகவும், வெப்துனியா செய்தித்தளத்தில் அவர் எழுதிய திரைப்பட விமர்சனத்திற்காகவும் வல்லமையாளராகத் தெரிவு செய்யப்படுகிறார்.  வல்லமையாளர் விருதிற்கு அவரைப் பரிந்துரைத்து தேர்வுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் வாசகர் திரு. சு. ரவி அவர்கள்.

    “தாம்புக் கட்டு”  கதை மிகவும் வித்தியாசமான கோணத்தைக் கொண்டிருக்கிறது.  இந்தியாவில் பிறந்து வளர்ந்த யாவருமே மகாபாரதக் கதைகளையும், குறும்புகள் நிறைந்த கண்ணன் பிறந்து வளர்ந்த  நிகழ்வுகளையும், பின்நாளில்   அவன் பார்த்தனுக்கு தேரோட்டியாகப் பணியாற்றி கீதை உரைத்ததையும் பலமுறை படித்திருக்கிறோம்.  ஆனாலும் கிரேசி மோகன் வழங்கிய கோணம் முற்றிலும் புதுமையானது.

    “தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும்” என்ற வானில் தோன்றிய ஒலியினால் எச்சரிக்கை அடைந்த கம்சன்  தங்கை தேவகியையும், மைத்துனன் வாசுதேவனையும், சிறையிலடைத்து அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கொன்றுகொண்டே வருகிறான். ஏழு குழந்தைகள் இவ்வாறு உயிரிழக்க நேரிடுகிறது.  எட்டவதாகப்  பிறந்த கண்ணனை கோகுலத்தை ஆண்ட நந்தகோபனிடமும், யசோதையிடமும் சேர்ப்பித்து அவர்களை வளர்க்கச் செய்ய  வாசு மாமாவும்  (அப்படித்தான் அந்தக் கதையின் நாயகியான சிறுமி வாசுதேவனை  அழைக்கிறாள்) முடிவெடுக்கிறார்.  அவருக்கு உதவி செய்கிறாள்  ஆயர்பாடியில் வசிக்கும்  சிறுமி ஒருத்தி.

    கண்ணன் பிறந்த அந்த மழைநாளில் ஆயர்பாடியில் உள்ள நந்தகோபன் இல்லத்தில் குழந்தைகளை மாற்ற உதவிய அந்தச் சிறுமி யார்?  இந்த உதவியைச் செய்ய அவள் என்ன பிரதிபலன் எதிர்பார்த்து வாசு மாமாவிடம் சத்தியம்  பெற்ற பின்னர் உதவி செய்தாள்? அவள் விருப்பம் என்ன? யாரவள்?  இவள் இல்லாவிட்டால் மகாபாரதமே இல்லாமல் போயிருக்கும் ஆபத்து உண்டு.  இவள் யாரென்ற கேள்விக்கு விடையை வெள்ளித்திரையில் … மன்னிக்கவும்… வல்லமையில் இந்த சுட்டி வழி சென்று  காண்க.  படிக்கும் வாசகர்கள் கதையைப் பற்றித்  தனது தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் முடிவினைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இதற்கு உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

    “பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…”  

    “கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய் (சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா உருண்டையை…”

    கதையில் வரும் இந்த வர்ணனைகள்  கிரேசி மோகனின் “டச்”.  இக்கதை கிரேசி மோகனின் கற்பனைக்கு நல்லதொரு சான்று.  இது போன்ற மற்றொரு   வியக்கவைக்கும் கற்பனையை  மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி அவர் வழங்கிய “மீனாட்சி திருக்கல்யாணம்” என்ற  கவிதைத் தொகுப்பிலும் காணலாம் …

    அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் இங்கு… முழுக்கவிதையும் இந்த சுட்டியில் கிடைக்கும்..

    கன்னிகாதானம்
    ——————

    தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
    யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
    பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
    சேக்கிழார் சாமி சபைக்கு…

    பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
    நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
    அள்ளிவந்தார் சேலை அலைந்து…

    கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
    மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
    மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
    முடிந்தான் அரன்முடிச்சு மூன்று…

    கிரேசி மோகன் அவருக்கு  கைவந்த கலையான “குப்பாச்சுலு VS கோடபட்ரி” என்ற நகைச்சுவை நாடகம் ஒன்றையும் , அத்துடன் மற்றொரு கைவந்த கலையான ஓவியங்களையும் வல்லமை வாசகர்களுக்குத் தந்திருக்கிறார்.  ஆம்… கிரேசி மோகன் ஒரு சிறந்த ஓவியரும் கூட, வல்லமையில் வெளியான அவரது ஓவியங்கள் ஒரு சில இங்கே  உங்கள் பார்வைக்கு…

    சென்ற வார இறுதியில் (2014 ஜூலை 11 அன்று) வெளிவந்த இயக்குனர் ஞானராஜசேகரன் அவர்களின்  ராமானுஜன் திரைப்படத்திற்கு   கிரேசி மோகன் அவர்கள் எழுதிய விமர்சனம் இது …

    எனது பொக்கிஷம் ஞானராஜசேகரனின் ‘பாரதியார்’ டிவிடி…. 100 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன்….இனி பார்ப்பேனா தெரியாது….!

    ‘பாரதியாருக்கு’ப் போட்டியாக இவரே ‘ராமானுஜன்’ எடுத்துவிட்டார்…. ராமானுஜன் டிவிடிக்காகக் காத்திருக்கிறேன்…. கணக்கு வழக்கு இல்லாமல் நான் பார்க்கப் போகும் ‘ராமானுஜன்’ திரைப்படம் நேற்று பார்த்தேன்….

    ‘ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ’ என்று தன் மனைவி ஜானகிக்கு அவர் கடிதம் எழுதும் போது, ஏனோ தெரியவில்லை புனித மேதை பெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜரையும், கணித மேதை கும்பகோணம் ராமானுஜரையும் ஒப்பிட்டு அடியேன் மனக் கணக்கு போட ஆரம்பித்தேன்…. இருவருமே அந்த ‘சேடரின்’ விசேட அம்சமாக எனக்குத் தோன்றியது….

    பெரும்புதூர் மாமுனி ஆதிசேடன் அவதாரம்… தொல்(பழைய) COBRA…. கும்பகோணம் ராமானுஜர் அல்ஜீப்ரா…. அவர் த்ரிகுணம் கடந்த மூர்த்தி….இவர் ட்ரிக்னாமெட்ரி…. அவர் எளியவர்களுக்கும் நாராயணன் நாமமிட்டு தீட்டும் திருமேனி ஆக்கினார்…. இவர் Cos THETA plus தியரியை தீட்டினார்…. அவர் உடையவர்…. இவர் கணக்கின் விடையவர்…. பெரிய கடவுள் பாரதியாரைக் கவிதையால் தடுத்தாண்டு கொண்டார்…. இவரைக் கணக்கால் தடுத்தாண்டு கொண்டார்….

    படம் பார்க்கும் போது எனக்கு ராமானுஜத்தை விட அவரது LAURELS ஸை வெளிக்கொணர்ந்த HARDY பாத்திரம் மிகவும் பிடித்தது….

    அமரர் வாலியின் ‘ஓராயிரம் ஈறாயிரம்’ பாடலும் ரமேஷ் வினாயகத்தின் இசையும் சூப்பர்….

    ‘எழுத்தையும்’ (பாரதியார்) ‘எண்ணையும்’ (ராமானுஜன்) எடுத்த ஞானராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள்…. அடுத்ததாக ‘கண்ணெனத் தகும்’…. ‘பகவான் ஸ்ரீரமணரின்’ சரிதையை எடுங்கள் சார் ப்ளீஸ் ….

    தயாரித்தவர்களுக்கு ‘பல்லாண்டு பாடலாம்’….எனக்குப் பிடிச்ச கணக்கு….படத்துக்கு அடியேனின் மார்க் 100 / 100….

     

    அத்துடன் முத்தாய்ப்பாக,  படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களைப் பாராட்டி,  அவர் இசை அமைத்த   “ராமானுஜன்” பட இசை அவரை இசைபட வாழவைக்க வேண்டும் என்றுவாழ்த்துறைத்து  ஒரு  வெண்பாவும்   பாடியுள்ளார் ….

    “புனிதமே தையும், கணிதமே தையும்,
    மனிதமே தையுன் மியூஸிக், -இனிதாக,
    கேட்டிடும் காதுக்குள் கூட்ட, இனியுந்தன்,
    காட்ல மழைவினாய கம்”

    திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில்  தினமும் வெண்பாக்கள்  புனைந்து வரும் கிரேசி மோகன், இதுவரை அந்த வெண்பாக்களை (இதுவரை 140  வெண்பா பதிவுகள்) வல்லமை மின்னிதழ் வாசகர்களுடனும், வல்லமை கூகிள் குழுவிலும் பகிர்ந்து வருகிறார். இவ்வாறு வெண்பாக்களையே உயிர்மூச்சாய் கொண்ட அவரை வெண்பாபாடி வாழ்த்துவதுதான் முறையல்லவா …ஆதலால்…

    வெண்பா வடித்து வெகுமதியாய்  நாளுமொரு
    பண்பாடும் பாவல, நீவிர் திரையுலக
    எல்லை  கடந்திங்கே என்றும் புகழ்காணும்
    வல்லமை யாளர்தாம்  இன்று”   

    என்று வெண்பா சொல்லிப்  பாராட்டி …

    சிந்தனையைக் கவரும் கவிச்சுவை நிறைந்த வெண்பாக்ளையும், நகைச்சுவை நிறைந்த   நாடகம் மற்றும் கதைகளையும் பகிர்ந்துகொண்டு வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   கிரேசி மோகன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    நன்றி:
    வெப்துனியா –
    http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/crazy-mohan-on-ramanujan-movie-114071200014_1.html

    Share